Tuesday, June 9, 2020

திருவாரூரில்மேலும் 6 பேருக்கு கொரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

திருவாரூரில்  மேலும் 6 பேருக்கு கொரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 64 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

பதிவு: ஜூன் 09, 2020 05:04 AM

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 64 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று திருவாரூர் சிவம் நகரை சேர்ந்த 64 வயதுடைய ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

இதேபோல் திருவாரூர் புலிவலம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, வடுவூர் தென்பாதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவர், கூத்தாநல்லூர் தாலுகா வேர்குடியை சேர்ந்த 37 வயது வாலிபர், குடவாசல் செல்லூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 6 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. இதில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மேலும் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் 25 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...