Tuesday, June 9, 2020

அரசுப் போக்குவரத்து கழகத்தில் ரூ.1624.78 கோடி பணப்பலன் பாக்கி: ஓராண்டாக காத்திருக்கும் 6221 தொழிலாளர்கள்


அரசுப் போக்குவரத்து கழகத்தில் ரூ.1624.78 கோடி பணப்பலன் பாக்கி: ஓராண்டாக காத்திருக்கும் 6221 தொழிலாளர்கள் 


தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓராண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ரூ.1624.78 கோடி பணப்பலன்கள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் 6221 தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2019 ஏப்ரல் மாதம் முதல் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் பணிக்காலத்தில் இறந்த தொழிலாளர்கள் என 6221 பேருக்குரிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு பணம் மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு பணம் ஆகியன ஓய்வு பெற்று கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், அரசு போக்குவரத்து கழகம் மதுரை, சேலம், விழுப்புரம், கும்பகோணம், நெல்லை, கோவை கோட்டங்களில் வருங்கால வைப்பு நிதி ரூ.447.70 கோடி, பணிக்கொடை ரூ.491.23 கோடி, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ரூ.401.79 கோடி, விடுப்பு ஊதியம் ரூ.284.06 கோடி என மொத்தம் ரூ.1624.78 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வுகால பணப்பலன்களை தொழிலாளர்களுக்க உடனடியாக வழங்க நடவடிககை எடுக்குமாறு தொமுச பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.சண்முகம், தமிழக போக்குவரத்துறை முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து தொமுச பொருளாளர் நடராஜன் கூறுகையில், கரோனா ஊரடங்கால் ஓய்வூதியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு சேர வேண்டிய அனைத்து ஓய்வூதிய பணப்பலன்களையும் தமிழக அரசும், போக்குவரத்து கழகங்களும் தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரசுப் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம்மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ்.சம்பத் கூறுகையில், வருங்கால வைப்பு நிதி சட்டம் மற்றும் பணிக்கொடை பட்டுவாடாச் சட்டத்தின் கீழ் பணி ஓய்வு / தன்விருப்ப ஓய்வு / இறப்பு போன்ற காரணங்களால் பணிமுடிவடையும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெற்றதிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் பணி முடிவு பலன்களை வழங்க வேண்டும்.

அதன்படி ஏப்ரல் 2019 முதல் ஏப்ரல் 2020 வரையிலான நிலுவைகளை தீர்வு செய்ய அரசும் கழக நிர்வாகங்களும் முன்வரவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...