Tuesday, April 7, 2015

இ காமர்ஸை மிஞ்சும் எம் காமர்ஸ்?


தொழில்நுட்பம் மாறுவதற்கு ஏற்ப வியாபார சூழ்நிலைகளும் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் பொருட்களின் பட்டியலைக் கொடுத்து வாங்கினோம். அதன் பிறகு நாமாக டிராலியை தள்ளிக்கொண்டு சூப்பர் மார்க்கெட், துணிக்கடை என்று வாங்கி வந்தோம். இப்போது இணையதளம் (இ காமர்ஸ்) மூலம் பொருட்களை வாங்கி வருகிறோம்.

இந்த வர்த்தகம் உயர்ந்துவரும் சூழ்நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் இ காமர்ஸின் வர்த்தகத்தை எம் காமர்ஸ் வர்த்தகம் (மொபைல் மூலமான பொருட்களை வாங்குவது) மிஞ்சும் என கேபிஎம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளதோடு அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

முதலாவதாக மொபைல் போன் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்வது. 2014-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் 17.3 கோடி வாடிக்கையாளர்கள் மொபைல் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்தினார்கள். இதனுடைய வளர்ச்சி நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.

வரும் 2019-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 21 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் வரும் 2019-ம் ஆண்டு 45.7 கோடி நபர்கள் மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவார்கள்.

தவிர செயலிகளை (ஆப்ஸ்) அதிகம் தரவிறக்கம் செய்வதில் நான்காவது இடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளில் 90 சதவீதம் செயலிகள் இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும் என்பதால் அதிக தரவிறக்கம் நடக்கிறது. அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து அதிக செயலிகளை தரவிறக்கம் செய்வது இந்தியர்கள்தான். மொத்த சந்தையில் 7 சதவீதம் இந்தியர்கள் வசம் உள்ளது.

கால் டாக்ஸி நிறுவனங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் செயலிகளைப் பயன்படுத்தும் போது இலவச பயணச் சலுகை அளிப்பதால், அது போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்துகொள்வது அதிகரித்துள்ளது. அதை தவிர மொபைல் போன் எப்போதும் கையில் இருப்பதால் தேவையானதை எப்போது வேண்டுமானலும் ஒரு சில கிளிக்குகளில் வாங்கிகொள்ள முடியும்.

இதற்கு உதாரணமாக ஸ்நாப்டீல் நிறுவனத்தின் விற்பனையை பார்க்கலாம். 18 மாதங்களுக்கு முன்பு வெறும் 5 சதவீதம் ஆர்டர்கள் மட்டுமே மொபைல் மூலமாக வந்தது. ஆனால் இப்போது 70 சதவீத வியாபாரம் மொபைல் மூலமாக வருகிறது என்று ஸ்நாப்டீல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இன்னும் ஒரு படி மேலேபோய் மிந்திரா நிறுவனத்துக்கு ஆர்டர் செய்பவர்களில் 90 சதவீதம் பேர் மொபைல் மூலமாகவே வருகிறார்கள் என மிந்திரா தெரிவித்திருக்கிறது. இதே போல ஜபாங் நிறுவனத்தின் வருமானத்திலும் 50 சதவீதம் மொபைலே ஆதிக்கம் செலுத்துகிறது. 2020ம் ஆண்டுக்கு பிறகு 70 சதவீத வர்த்தகத்தை மொபைல் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கடைக்குப் போய் பொருட்களை வாங்கும் போது தேவையானதை மட்டுமே வாங்கினோம், இணையம் மூலம் பொருட்கள் வாங்கும் போது கொஞ்சமாவது யோசிக்க நேரம் இருக்கும். ஆனால் மொபைல் மூலம் எப்போது வேண்டுமானாலும் பொருட்கள் வாங்க முடியும் என்பதால் யோசிக்க நேரமிருக்காது.

உங்களை நுகர்வு கலாசாரத்துக்கு இரையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களிடம் மட்டுமே இருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பார்ம் பட்டதாரிகளுக்கு விரிவுரையாளர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவத் துறை மற்றும் மருத்துவ கல்வித் துறையில் பணிபுரிந்துவருவோரில் எம்.பார்ம் முடித்தவர்களுக்குத்தான், அரசு மருத்துவ கல்லூரிகளில் மருந்தாளுநர் விரிவுரையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

மதுரையை சேர்ந்த எம்.முத்துராமலிங்கம், ஆர். ஜெயசு ரேஷ், ஆர். அன்பழகன், ஜி.சத்யபாலன், எஸ்.ஜஸ்டின் சுரேஷ், ஜி. மகுடேசுவரி, கே.நஞ்சப்பன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மருத்துவத் துறை, மருத்துவ கல்வித் துறையில் மருந்தாளுநராக பணியாற்றி வருபவர்களில் பி.பார்ம் முடித்தவர்கள் பதவி உயர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக நியமிக்க ப்படுகின்றனர்.

மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக பி.பார்ம் முடித்தவர்களை நியமனம் செய்வது சரியல்ல. அகில இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் விதிப்படி எம்.பார்ம் படித்தவர்களைத்தான் மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

எனவே, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்களில் மருத்துவத் துறை மற்றும் மருத்துவ கல்வித் துறையில் பணியில் உள்ள எம்.பார்ம் முடித்தவர்களை நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார். விசாரணைக்குப்பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விதிப்படி எம்.பார்ம் முடித்தவர் களைத்தான் மருந் தாளுநர் விரிவுரையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் 28 மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்கு எம்.பார்ம் முடி த்து மருத்துவத் துறை, மருத்துவக் கல்வித் துறையில் பணிபுரிந்து வருபவர்களை நியமிக்க, மாநில பணிமூப்பு பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநர் தயார் செய்து, ஒரு மாதத்தில் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலருக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பட்டியலுக்கு செயலர் ஒரு மாதத்தில் ஒப்புதல் வழங்கி, விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

28 மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மனசு போல வாழ்க்கை- 3: நல்ல எண்ணங்களைப் பயிலலாமே!....by டாக்டர். ஆர். கார்த்திகேயன்



நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.

ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது. ஆனால், அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.

ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது.

“உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது” என்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? ” என்று எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.

அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.

ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.

மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை தேடுவதும், இனப்பெருக்க உணர்வும்தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள் அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை. அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.

“உங்கள் குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா? உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா? உங்களுக்குக் கொஞ்சமாவது துப்பு இருக்குதா?” என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில் அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம் நமக்குச் சுலபமாக வரும்.

மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.

அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.

அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.

இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!

இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை உடனடி யாகச் செயல்படும். முன் மூளை சற்று நேர மெடுக்கும்.

நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம் செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.

உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம் குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, “ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..!”என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.

ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள் மனைவியின் பின் மூளையைத் தாக்க, “ எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?” என்று கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, “குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான் புதுசா என்ன?” என்று சமாதானமாகிறார்.

ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது.

அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதும் என்னென்ன கருத்துகள் வந்தன? “கோஹ்லி சரியில்லை. எல்லாம் அனுஷ்கா ஷர்மா ராசி”. “தோனியே சொதப்பிட்டார்” இப்படி வந்தவைதான் அதிகம். “அன்று ஆஸ்திரேலியா நம்மை விட நன்றாக விளையாடியது” என்று சொல்லியவர்கள் எத்தனை பேர்?

வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.

நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!

இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!

சிக்கல்களை தவிர்க்க‌ வங்கிகளில் ஆதார் எண்ணை பதிவு செய்வது அவசியம்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வங்கிகளில் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் ஆதார் எண்களை ஓய்வூதியப் பட்டுவாடா ஆணையத்திடம் பதிவு செய்தல் வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய ஓய்வூதியதாரர் உயிர் வாழ் சான்றிதழை, எந்தவித அசவுகரியங்களும் இல்லாமல் சமர்ப்பிக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

க‌டந்த ஆண்டு நவம்பர் மாதம், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட இணையம் வழி சமர்ப்பிக்கும் `ஜீவன் பிரமான்' எனும் டிஜிட்டல் ஓய்வூதியதாரர் உயிர் வாழ் சான்றிதழை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

இதன் காரணமாக, வயதான ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர் வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க நேரடியாக வங்கிக்கோ அல்லது ஓய்வூதிய பட்டுவாடா முகமைக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கள் வீடுகள் அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களில் இருந்து இணையம் வழியாகவே சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும், வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு எண் ஆகியவற்றை இணைக்கும் போது, ஆள்மாறாட்டத்தையும் தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் தற்சமயம் 50 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மணியார்டர் சேவை நிறுத்தமா?- தபால் துறையை வீழ்த்த தனியார் நிறுவனங்கள் அவதூறு பரப்புகின்றன- மத்திய தபால்துறை அதிகாரி சுற்றறிக்கை



சாமானிய மக்களும் அதிகளவில் பயன்படுத்தும் மணியார்டர் சேவை நிறுத்தப்படவில்லை. சில போட்டி தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புகின்றன என்று தபால் துறை விளக்கமளித்துள்ளது.

நாட்டின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் சாமானிய மக்களும் அவசர தேவைகளுக்காக எவ்வித சிரமமும் இன்றி பணம் அனுப்புவதற்கு தபால் துறையின் மணி ஆர்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், “மணியார்டர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது” என்று இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் ஷிவ் மதுர்குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அச்சேவையை பயன்படுத்திவரும் ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர். அது பற்றி தெரிந்துகொள்வதற்காக அருகில் உள்ள தபால் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தியா போஸ்ட் (தபால்கள்) பிரிவின் செயலாளர் அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுவதாக தகவல்கள் பரவிவருகின் றன. தமது சிறப்பான செயல்பாட்டால், இதே துறையில் ஈடுபட்டுள்ள பல தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தபால்துறை விளங்கிவருகிறது. அந்நிறுவனங்கள், சமீப காலமாக, செல்போன் மூலமாக பணம் அனுப்பும் சேவையிலும் ஈடுபட்டுள்ளன. அச்சேவைக்கு, தபால்துறையின் மணி ஆர்டர் சேவை போட்டியாக அமைந்துள்ளது. அதனால், பொய்யான தகவலை பரப்பிவருகின்றன.

இது தொடர்பாக அனைத்து அஞ்சலக வட்டாரத் தலைவர்களும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், உடனுக்குடன் பணம் அனுப்பும் ‘இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்’, ‘மொபைல் மணி ஆர்டர்’, ‘சர்வதேச மணி ஆர்டர்’ போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்டார தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

தபால் துறையின் மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. வழக்கமான மணி ஆர்டர், அதனையொத்த மின்னணு மணி ஆர்டர் (இ.எம்.ஓ.) ஆகியவை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. மணி ஆர்டர் (அட்டை) படிவத்துக்கு பதிலாக, கம்ப்யூட்டர் மூலமாக தலைமை தபால் அலுவலகங்களுக்கு சில விநாடிகளில் மணி ஆர்டர் பற்றிய தகவல்களை அனுப்பும் இ.எம்.ஓ.வும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, பணத்தை ஒரு கிளையில் செலுத்திவிட்டால், போய்ச் சேர வேண்டிய கிளைக்கு சில விநாடிகளில் தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து தபால்காரர்கள் மூலம் பணம் உரியவருக்கு உடனே போய் சேரும். தமிழகத்தில் கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் 3 கோடி மணி ஆர்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், 11 லட்சம் மணி ஆர்டர்கள், தமிழக அரசின் சமூகநலத் திட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டவையாகும்.

உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம்: திடீர் சோதனையில் சிக்கிய 326 அதிகாரிகள்

Return to frontpage

உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த போலீஸார் உட்பட 326 அதிகாரிகள் சிக்கினர். இங்குள்ள முராதாபாத் மற்றும் ஷாஜாஹாபூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடந்த அதிரடி சோதனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் வசூலானது.

டெல்லியில் இருந்து கிளம்பி உ.பி.யின் ஷாஜாஹாபாத் மற்றும் முராதாபாத் ரயில் நிலையங்களை கடந்து ரயில்கள் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ், கிசான் எக்ஸ்பிரஸ், முகல்சராய் எக்ஸ்பிரஸ் மற்றும் சியல்தா எக்ஸ்பிரஸ் ஆகியன பல்வேறு இடங்களுக்கு செல்லும்.

இந்த ரயில்களில் ஷாஜாஹாபாத் மற்றும் முராதாபாத் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே டெல்லி அதிகாரிகளின் சோதனைக் குழு திடீர் சோதனை நடத்தியது. இதில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 14 உ.பி. போலீஸார், வங்கி மேலாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார்கள் உட்பட 326 பேர் சிக்கினர். இவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

இதில், சிக்கியவர்கள் தம் செய்த தவறை எண்ணி வருந்துவதை விடுத்து சோதனை செய்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து மிரட்டி உள்ளனர். சிலர், தமக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் ரயில்வே துறை அதிகாரிகள் பணியில் இருப்பதாகக் கூறி தப்ப முயன்றுள்ளனர்.

இன்னும் சிலர் தமக்கு மத்திய அமைச்சர்களின் நெருக்கம் இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். எனினும், அவர்கள் மிரட்டலுக்கு பயப்படாத சோதனை அதிகாரிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்படுவர் என மிரட்டியுள்ளனர். இதனால், வேறு வழியின்றி மன்னிப்பு கேட்டதுடன் மற்ற பயணிகள் முன்னிலையில் அவமானப்படாமல் இருக்க வேண்டி அபராதம் செலுத்தி உள்ளனர்.

டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள உ.பி. ரயில் நிலையங்களில் இருந்து பணியின் நிமித்தமாக அன்றாடம் பயணம் செய்யும் பயணிகள் அதிகம். வழக்கமாக மாத சலுகைக்கான டிக்கெட்டுகள் பெற்று பயணம் செய்யும் பவர்களில் பலரும் அதைக் கூட வாங்காததுடன், எக்ஸ்பிரஸ் ரயில்களின் குளிர்சாதனப் பெட்டிகளிலும் பயணம் செய்து விடுவது உண்டு. இதற்காக, அப்பெட்டிகளின் டிக்கெட் பரிசோதகர்களை ‘கவனித்து’ விடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதுபோன்றவர்களிடம் தான், இன்று திடீர் சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று அன்று | 1927 ஏப்ரல் 6: ரத்தக்கண்ணீர் படைப்பாளியின் பிறந்த தினம்....by சரித்திரன்

பெரியாருடன் தங்கராசு.

அது ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் ஒன்று. தொழுநோய் பாதிப்பால் அடையாளமே தெரியாமல் உருக்குலைந்து போன உருவத்துடன் எதிர்ப்படும் எம்.ஆர். ராதாவைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, உணவு தருவதற்காக வீட்டுக்கு அழைத்துவருவார் எஸ்.எஸ்.ஆர். திண்ணையில் அமர்ந்திருக்கும் எம்.ஆர். ராதா அந்த நிலையிலும் படு நக்கலாகப் பேசுவார்.

ராதா: ஏம்ப்பா, சாப்பாடு போடுறதும் போடுற. கறிச்சோறா போடு தம்பி, சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி...

எஸ்.எஸ்.ஆர்: அடடே, நாங்க கறி சாப்பிடறதில்லையேப்பா…

ராதா: ஏன், வீட்ல பத்தியமா?

எஸ்.எஸ்.ஆர்: இல்ல, நாங்க ஜீவகாருண்ய கட்சில சேந்திருக்கிறோம்.

ராதா: அடிசக்க! திங்கறதுக்குக் கூட கட்சி வச்சிருக்காண்டா யப்பா… ஜீவகாருண்ய கட்சின்னா என்ன தம்பி அர்த்தம்?

எஸ்.எஸ்.ஆர்: அதாவது, உயிர்களைக் கொலை செய்யக் கூடாது.

ராதா: ஆஹாங்!? நீங்க உயிரக் கொல்ற தேயில்லையா?

எஸ்.எஸ்.ஆர்: இல்லையே.

ராதா: ராத்திரில மூட்டப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வீங்க?

எஸ்.எஸ்.ஆர்: ஒனக்கு உண்மையிலேயே திமிருதாண்டா…

இந்த வசனங்கள் எம்.ஆர். ராதாவின் பாத்திரம் எத்தகையது என்பதை உணர்த்திவிடும். முழுக்க முழுக்க அரசியல், சமூக விமர்சனங்கள், மூட நம்பிக்கைகளைப் பரிகசிக்கும் வசனங்கள் நிரம்பிய அந்தப் படம் வெளியானபோது, திரை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எனினும், பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம், சமூக நீதிக்கான போராட்டங்களின் தாக்கம் தமிழகத்தில் வெகுவாகப் பரவியிருந்த அந்தக் காலகட்டத்தில் ரத்தக்கண்ணீர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. முக்கியப் பாத்திரத்தில் நடித்த எம்.ஆர். ராதா, அநாயாசமான தனது நகைச்சுவையாலும், தொழுநோயாளியின் பாதிப்பின் அவஸ்தையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் தனது நடிப்பாலும் படத்தைத் தாங்கியிருப்பார். படத்தில் பேசப்பட்ட புரட்சிகரமான அந்த வசனங்கள் எம்.ஆர். ராதாவுடையவை என்று இன்றும்கூடப் பலரும் நினைக்கக் கூடும். ஆனால், அந்த வசனங் களை எழுதியவர் திருவாரூர் கே. தங்கராசு. படத்தின் கதை, திரைக்கதையும் அவர்தான்.

1927 ஏப்ரல் 6-ல் நாகப்பட்டினத்தில் பிறந்தவர் திருவாரூர் கே. தங்கராசு. அரசு ஊழியராகப் பணிபுரிந்த அவரது தந்தை குழந்தைவேலு, திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆனால், தங்கராசு அதற்கு நேரெதிராக இருந்தார். நெற்றியில் பட்டையுடன்தான் காட்சியளிப்பார். கோயில்களுக்குச் செல்வார். திருவாரூரில் பன்னீர் கம்பெனியில் வேலை பார்த்தபோது, கடையில் மாட்டப்பட்டிருக்கும் கடவுள் படங்களுக்குத் தீபாராதனை காட்டியது முதல் கோயில்களின் ஸ்தல புராணங்களைப் பாராயணம் செய்ததுவரை பக்திமான்களுக்குரிய எல்லாச் செயல்களையும் செய்தவர். பின்னாட்களில் பெரி யாரின் கருத்துகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியபோது, புராணங்களை விமர்சிக்க, மேற்சொன்ன தனது பக்திமான் பண்புகள் உதவிகரமாக இருந்ததாக தங்கராசுவே கூறியிருக்கிறார்.

ஆசிரியர்களே வியக்கும் வகையில் ஆழ்ந்த கல்வியறிவு கொண்டிருந்த தங்கராசு, வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. திருவாரூரில் கணக்குப் பிள்ளையாக வேலைபார்த்தபோது, அவரது அறிவுத்திறன் அவரது பதவி உயர்வுக்கும் சம்பள உயர்வுக்கும் உதவியது. எனினும், அரசியல் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டது அவரது முதலாளிகளின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொடுத்தது. இதனால், அவர் இரண்டு முறை வேலையை இழக்க நேரிட்டது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மேடையில் பேசிவந்தார். பின்னாட்களில், திருவாரூர் நகர திராவிடர் கழகத்தின் தலைவர் சிங்கராயருடனான நட்பு, திராவிடர் கழகத்தின் பக்கம் தங்கராசுவை இழுத்துவந்தது. பெரியாரின் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்லத் தொடங்கினார்.

எம்.ஆர். ராதாவின் நாடகங்களில் கதை, வசனம் எழுதிவந்த கலைஞர் கருணாநிதி ஏதோ காரணத்துக்காக, அவரது குழுவிலிருந்து விலகிவிட, சிங்கராயர் மூலம் அந்த வாய்ப்பு தங்க ராசுவுக்கு வந்தது. ராசிபுரத்தில் உள்ள பேருந்து உரிமையாளரின் விருந்தினர் விடுதியில் ஒரு அறையில் தங்கியிருந்தபோது ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை எழுதினார் தங்கராசு. 1949 ஜனவரி 14-ல் திருச்சியில் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் அரங்கேறியது. ஒவ்வொரு முறையும் நாடகத்தின் காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, நாடகம் மெருகேற்றப்பட்டது.

சிவாஜி கணேசன் எனும் மாபெரும் கலைஞரை அறிமுகம் செய்த ‘பராசக்தி’ படத்தின் தயாரிப் பாளரான ‘நேஷனல் பிக்சர்ஸ்’-ன் பி.ஏ. பெருமாள், ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முன் வந்தார். அந்தப் படத்துக்கு எம்.ஆர். ராதா வாங்கிய சம்பளம் ரூ. 1 லட்சம். தங்கராசுவுக்கும் கணிசமான தொகை சம்பளமாகக் கிடைத்தது.

அத்துடன், தனது வசனங்கள் மாற்றப்படக் கூடாது என்றும் உறுதியாக இருந்தார். இப்படிப் பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தின் பின்னணியில் உண்டு. ‘ரத்தக் கண்ணீர்’ படம் இன்று தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும் சேனல் மாற்றாமல் பார்க்கும் ரசிகர்கள் உண்டு. பல முறை மேடையேற்றப்பட்ட நாடகம் இது.

‘பெற்ற மனம்’, ‘தங்கதுரை’ஆகிய படங்களுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார் தங்கராசு. எனினும், தன்னை ‘சினிமாக்காரன்’ என்று சொல்லிக்கொள்ள அவர் விரும்பவில்லை. தனது கருத்துகளைப் பரப்பக்கூடிய வாகனம்தான் சினிமா என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவர். பெரியார் மீது பெரும் மதிப்பும், அவரது கொள்கைகளில் ஆழ்ந்த பற்றும் கொண்டவராகவே கடைசிவரை இருந்தார் தங்கராசு. அண்ணா, கருணாநிதி, எம்.ஆர். ராதா என்று பலருடன் நல்ல நட்பும், அதேசமயம் முரண்பட்ட கருத்துகளையும் கொண்டிருந்தார். தனது கருத்துகளை ஒளிவுமறைவில்லாமல் துணிச்சலாகப் பேசிய தங்கராசு, 2014 ஜனவரி 5-ல் தனது 87-வது வயதில் மறைந்தார்.

முதியோரைக் கைவிடுகிறோமா நாம்?



உலகின் எந்தப் பெருநகரமாக இருந்தாலும் சரி, போக்குவரத்து சிக்னலில் சில நிமிஷங்கள் நின்று சாலையைக் கடக்க முயற்சி செய்யுங்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் உடல் தகுதியுள்ள விளையாட்டு வீரர் அளவுக்கு நீங்களும் வலிமையும் சுறுசுறுப்பும் உள்ளவராக இருந்தால்தான் சாலையை பச்சை சிக்னல் எரிந்து முடிவதற்குள்ளான நேரத்தில் கடக்க முடியும். சில விநாடிகள் தாமதித்தாலும் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் பெருங்குரலெடுத்து உறுமத் தொடங்கிவிடும்.

வேகமாக நடக்க முடியாமல் உங்களுக்கு உடலில் கோளாறு இருந்தாலோ, மிக கனமான சூட்கேஸ் அல்லது பையை நீங்கள் வைத்திருந்தாலோ, வயதான வராக இருந்தாலோ பொறுமையில்லாத இந்த வாகன ஓட்டிகள் நம்மை இடித்துத் தள்ளிவிடுவார்களோ என்ற அச்சத்துடனும் மரண பயத்துடனும்தான் கடக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான உலக நாடுகளில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளின் வேகம் விநாடிக்கு 1.2 மீட்டர் என்று கணக்கிட்டு, சிக்னல்களில் விளக்குகள் எரியும் நேரத்தை நிர்ணயித்துள்ளனர். ஆனால், வயதானவர்களின் வேகம் விநாடிக்கு 0.7 மீட்டர் முதல் 0.9 மீட்டர் வரையில்தான்!

ஆரோக்கியத்துக்கு மட்டுமே அனுமதி

நகரங்களின் சாலை, போக்குவரத்து சிக்னல், நடை மேம்பாலங்கள், பாதையோர நடைமேடைகள், சுரங்கப் பாதைகள், ஒரு சிக்னலுக்கும் இன்னொரு சிக்னலுக்குமான இடைவெளி, சாலையின் நடுவே கடப்பதற்கான இடைவெளிகள் என்று எல்லாமும் நல்ல ஆரோக்கியமும் இளமையும் வலிமையும் உள்ள மனிதர்களை மட்டுமே மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. ஊன்றுகோலோ, சக்கர நாற்காலியோ தேவைப்படாத, மின்னல் வேகத்தில் சுற்றிவரக்கூடிய ஆரோக்கியமான மனிதர்கள் மட்டுமே நகரங்களில் வசிப்பார்கள் என்ற அடிப்படையில் எல்லாம் கட்டப்படுகின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன.

2030-வது ஆண்டில் உலக மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நகரங்களில் மட்டுமே அதுவும் அதிக வருவாய் உள்ள சமூகங்களுடன் சேர்ந்து வாழப் போகின்றனர். நகர மக்களில் கால்வாசிப் பேருக்கு 60-க்கும் மேல் வயதாகியிருக்கும்.

வெளியிடங்களுக்குச் செல்வது எளிதல்ல

வயதானவர்கள் தங்களுடைய குடும்பங்களிலும் வெளியிடங்களிலும் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க நினைப்பார்கள், அனைவருடனும் கலந்து பழக விரும்புவார்கள், எல்லா இடங்களுக்கும் செல்ல விரும்புவார்கள் என்ற எண்ணம் பொதுவாக நிலவுகிறது. ஆனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேருக்கு வீட்டைவிட்டு வெளியே செல்வது எளிதில்லை. அவர்களைப் பொறுத்தவரை நகரம் என்பது அவர்களுக்கு விரோதமான இடம். பொதுப் போக்குவரத்து அனைத்துமே முதியோரால் எளிதில் பயன்படுத்த முடியாத வகையில் இருக்கின்றன. பேருந்து அல்லது ரயில்களில் - அவை புறப்படுவதற்குள் ஏறுவது, உட்கார இடம் பிடிப்பது, மற்றவர்களால் இடிக்கப்படாமல், தள்ளப்படாமல், மிதிக்கப்படாமல் பயணிப்பது போன்றவை பெரிய சவால்கள். வீதியில் இறங்கி நடக்கலாம் என்றால் மேடு பள்ளமான நடைமேடைகள், கரடுமுரடான சாலைகள், இரவில் போதிய விளக்கொளி இல்லாமல் மங்கிய பகுதிகள், தெளிவாகத் தெரியாத அடையாள போர்டுகள், இடித்துத் தள்ளிவிடுவதைப் போல வரும் வாகனங்கள், முகப்பு விளக்கினால் கண்களைக் கூசச் செய்யும் வாகன ஓட்டிகள், பின்னால் வரும் வாகனங்களின் ஒலியைக் கேட்க முடியாதவாறு வீதி இரைச்சல்கள், சாலைத் தடைகள், வேகத் தடைகள், குப்பைக் கூளங்கள், அசுத்தங்கள், மூடிகள் கழன்ற பாதாளச் சாக்கடைத் திறப்புகள், இருட்டில் காத்திருக்கும் நாய், மாடுகள், கழுதைகள் போன்ற பிராணிகள்தான் பெரும்பாலும் வரவேற்கின்றன.

பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் வந்து நிறுத்தாத நகர பேருந்துகள், கால் வைத்து ஏற முடியாத உயரத்தில் பேருந்து படிகள், அப்படியே சமாளித்து ஏறினாலும் உள்ளே வந்து பாதுகாப்பாக நிற்கவோ, உட்காரவோ விடாமல் உடனே வேகம் எடுக்கும் டிரைவர்கள் என்று இந்த அவதிகளைச் சில முறை அனுபவித்த பிறகு, வீட்டிலேயே அடைபட்டுவிடத் தீர்மானிக்கிறார்கள் முதியவர்கள். இதனால், தனிமையும் விரக்தியுமே அவர்களை அதிகம் ஆட்கொள்கிறது என்கிறார், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூக முதியோரியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் கிறிஸ் பிலிப்சன்.

நகர மையங்களில் இளைஞர்கள் ஆதிக்கம்

ஏழை, நடுத்தரக் குடும்பத்து முதியோர் இப்படி வீதிகளுக்கே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால், நகரின் மையப் பகுதிகளில் இளைஞர்களை மட்டுமே அதிகம் பார்க்க முடிகிறது. மற்றபடி பணம், பதவி, செல்வாக்கு உள்ள முதியவர் களை மட்டுமே நகரங்களில் அடிக்கடி காண முடிகிறது.

வசதியும் இளமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே நகரின் முக்கியப் பகுதிகள், முதியவர்களுக்கு அல்ல என்பது புதுவிதமான சமூக அநீதி. இப்போது நம் சமூகத்தில் இது நிரந்தரமாகிவிட்டது. ஏழைகளும் முதியவர்களும் செல்ல முடியாத (ஷாப்பிங் மால் போன்ற) பகுதிகளும் நகரங்களுக்குள் உருவாகி வருகின்றன. இது மிகவும் ஆபத்தானது, சில சமுதாயங்களை வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வழி செய்கிறோம் என்கிறார் பிலிப்சன்.

உலக சுகாதார அமைப்பு இதைத்தான் 2006-ல், ‘முதியவர்களுக்கு உகந்த நகரங்கள்’ என்ற திட்டம் மூலம் அமல்படுத்த விரும்பியது. இதில் உலகம் முழுக்க 258 நகரங்களும் சமூகங்களும் இணைந்தன. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரம் முதலாவதாக இணைந்தது. வடக்கு லண்டனில் உள்ள ஐலிங்டன் சமுதாயத்தையும் இணைக்க விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. நகரக் கட்டமைப்புகளில் முதியவர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே இம்முயற்சியின் நோக்கம்.

வீடுகள், அடுக்ககங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என்று ஒவ்வொரு இடமும் எல்லாவித வயதினரும் பயன்படுத்த எளிதான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். எல்லாத் திட்டமிடல்களிலும் முதியவர்களின் உடல் நிலைமைகளையும் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், அரசும் பெருநிறுவனங்களும் இதில் அக்கறை காட்டுவதில்லை.

மான்செஸ்டர் நகரின் ஒரு பகுதியில் உள்ள கடைகளில், கடைகளுக்கு முன்பாக ஓரிரு இருக்கை களைப் போட ஆரம்பித்திருக்கின்றனர். வயதானவர்கள் நீண்ட நேரம் நின்று எதையும் பார்த்து வாங்கச் சிரமப் படுவார்கள் என்பதால் வந்ததும் உட்கார இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் வெயில், மழையிலிருந்து காக்க மேற்கூரைகளும் வயதானவர்கள் அமர இருக்கைகளும் போடப்படுகின்றன.

பிற நாடுகளிலும் முதியவர்களுக்கு எப்படியெல்லாம் பொது இடங்களில் வசதிகள் செய்து தரலாம் என்று சிந்திக்கின்றனர். அடேக், கைசர் என்ற சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் ஜெர்மனியில் முதியோர் களுக்காகவே அகலமான ஜன்னல்கள், வழுக்காத தரைகள், உயரக் குறைவான ஷெல்ஃபுகள், பிரகாசமான விளக்குகள், பெரிய எழுத்தில் அச்சிடப்பட்ட லேபிள்கள் என்று வசதி செய்துள்ளன. எழுத்துகளைப் பெரிதாக்கிப் படிக்க உதவும் பூதக் கண்ணாடிகளையும் கயிறு கட்டி ஆங்காங்கே தொங்கவிட்டுள்ளன.

ரசிப்பதற்கான வசதிகள்

தனியார்களுக்குச் சொந்தமான இடங்களில் முதியவர்கள் தங்கி சிறிது நேரம் இளைப்பாறவும், நண்பர்களுடன் பேசி மகிழவும், வேடிக்கை பார்க்கவும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டிட வடிவமைப்பாளர்கள், முதியோருக்கு இயன் முறை மருத்துவம் செய்வோர், குடியிருப்போர் சங்கத்தவர் சேர்ந்து இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தெரு விளக்குகளின் கீழேயே வசதி யாக உட்கார்ந்துகொள்ளவும், நடைமேடைகளில் சிறிதுநேரம் அமரவும் சாய்வான இருக்கைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. ஒரு குடியிருப்புக்கும் அடுத்த குடியிருப்புக்கும் இடையிலான வேலிகூட முதியோரை வருத்தாத வகையிலும் அவர்கள் விரும்பினால் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு நடக்கவும் ஏற்றபடி வடிவமைக்கப்படுகின்றன. இதன் வாயிலாக நகரங்களில் முதியவர்களை வீட்டுக்குள் விரட்டி அடிப்பதற்குப் பதிலாக அவர்களையும் நம்மோடு சேர்த்து எல்லாவற்றையும் ரசிக்க அனுமதிக்க முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை அரசு, தனியார் துறை, சமுதாயம் என்று அனைத்துத் தரப்பும் இணைந்து தொடர வேண்டும்.

© ‘தி கார்டியன்’, | தமிழில் சுருக்கமாக: சாரி |

இந்தப் 'பாவம்' செய்யாதவர்கள் கை உயர்த்துக!

தன்னுடைய பால்ய காலத்தில் கிடைக்காத ஒன்றை தன் பிள்ளைகளுக்கு அளிப்பது அன்பின், பிரியத்தின் ஒருவகையென்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அப்படியான பொருட்கள் அந்தக் குழந்தைகளை ஒருவிதத்தில் மகிழ்ச்சியூட்டினாலும், விதவிதமான பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்க்கவும் தவறுவதில்லை.

கிட்டத்தட்ட கோடை விடுமுறை துவங்கிவிட்டது. குடியிருப்பு பகுதிகளின் வீதிகளிலிருந்து பத்து பனிரெண்டு வயதுப் பிள்ளைகள் ஹோண்டா ஆக்டிவா (அ) ஹீரோ ப்ளெஸ்ரை வண்டிகளில் சாலைகளில் வந்து நுழைகின்றன. சாலையில் நிதானமாய்ச் செல்லவேண்டும், இடது பக்கம் செல்ல வேண்டும், பின்பக்கக் கண்ணாடி பார்க்க வேண்டும், திருப்பங்களில் ஒலியெழுப்ப வேண்டும், திரும்பும்போது பகல் நேரங்களில் கை காட்ட வேண்டும் எனும் எந்தவிதத் தெளிவும், அறிவும் இல்லாத அந்தப் பிள்ளைகள் வளைந்து நெளிந்து பட்டாம்பூச்சி போலச் செல்வதையெல்லாம் ரசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. குப்பென அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது. அவர்களில் பலர் தரையின் இரண்டு பக்கமும் கால் ஊன்றும் அளவுக்குக்கூட உயரமாக இருப்பதில்லை.

அதே சாலைகளில்தான், இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கப் போட்டவாறு எவ்வித பேலன்ஸும் இல்லாமல், தடுமாறியபடி ஏதோ ஒரு நிதானத்தில், புதிதாக வண்டி ஓட்டும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் சென்று கொண்டிருக்கின்றனர். நம்ம ஊர் சாலை அமைப்புகளுக்கு எவ்விதமும் பொருந்தாத எருமைக்கிடாய் அளவும், சிறுத்தையின் பாய்ச்சலும் கொண்ட பெரிய பைக்குகளில், ஒல்லியாய் ஒரு தலைமுறை எதையோ நோக்கி 'விர்..விர்'ரென சீறலோடு பாய்ந்து கொண்டிருக்கிறது. சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்பது மறைந்து, பைக் கேப்பில் மினிடோர் என ஆம்புலன்ஸ்க்கு நிகரான அவசரத்தில் மினிடோர்காரர்கள் பறக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் ஒலிப்பான்களில் அகிலமே அதிர்கிறது.

இந்த ஆக்டிவா, ப்ளெஸ்ஸர் பிள்ளைகளின் அப்பா / அம்மாவையோ, தாத்தா/ பாட்டியையோ சந்திக்கையில் "எங்க அஸ்வினு / சுவாதி இப்பவே வண்டில என்ன போடு போடுது தெரியும்ங்ளா!?" எனச் சொல்லும்போது அவர்களிடம் வழிந்தோடும் பெருமையை நொய்யல் ஆற்றில் திருப்பிவிட்டால் அத்தனை கழிவுகளையும் கடலுக்கே அடித்துச் சென்றுவிடும்.

வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் சார்பாக, அவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்... எல்லாப் பாய்ச்சல்களும், பெருமைப் பீற்றல்களும் எந்தவொரு தீங்கும் நடக்காதவரைதான்... ஒற்றைச் சிறு கவனப்பிசகில், எல்லா ஒளியும் பொய்த்து இருள் சூழும் கொடுங்கணத்தில்... பெருமையாகவும், பொறாமையாகவும் பார்த்த அத்தனை உறவும் நட்பும் ஒத்த குரலில், "விரலுக்கு தவுந்த வீக்கம் வேணும்.... இந்த வயசுல இந்தப் புள்ளைக்கு எதுக்கு வண்டி" எனச் சொல்லும். அந்நிலையில் அவர்கள் அப்படிச் சொல்வது சரியா தவறா என நீதிபரிபாலனை செய்யும் மனநிலையில் நீங்க இருக்கச் சாத்தியமில்லை. காரணம், சூன்யமான வாழ்வின் மிகக் கசப்பான காலகட்டத்தில் இருப்பீர்கள்.

தேவைக்கும், தகுதிக்கும் மீறிய ஒரு பொருளை பெருமையென வாங்கிக் கொடுப்பது அல்லது இயக்கக் கொடுப்பது பாசம், பிரியம், கௌரவம், அந்தஸ்து என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் உலகில் வேறெதுவும் இல்லை. அப்படி அளிக்கும் ஒன்றின் மூலம் உருவாகும் தீங்கின் அத்தனை பாவமும் கொடுத்தவர்களையே சாரும்!

ஈரோடு கதிர் - எழுத்தாளர், அவரது வலைதளம் http://maaruthal.blogspot.in/

This two-wheeler won’t budge without helmet

LUCKNOW: His innovation has power to save lives. On Monday, Himanshu Garg, a student from Agra, received cash prize of Rs 5 lakh from Chief Minister Akhilesh Yadav for developing a technology that ensures a motorcycle cannot start until the rider straps on a helmet.

For Himanshu, it is not his first experiment with practical science. His most recent innovation involves a bike that not does start unless the rider wears a helmet. More over, the engine's power will be cut off if the helmet is removed during the ride.

The electronic fuse can be charged with a solar panel or mobile phone chargers. The price of the helmet, once the prototype is finalised and ready for commercial use, will be higher than of regular ones. Garg also said on Monday he had earlier developed a technology that could prevent train collisions by bringing a train to a halt at a 300 meter distance of each other if they were on the same track. He also said he was felicitated by former Railway minister Mamata Banerjee for his feat.

On Monday, the wiz kid demonstrated the technique in the presence of Akhilesh at the latter's official residence. Lauding his efforts, the CM recommended that industry bodies like ASSOCHAM help commercialise the product. Announcing the award to facilitate more innovations by Garg, Akhilesh also said his government will set up an Innovation Fund to encourage scientific temper among students.

Monday, April 6, 2015

Want reservation details? Pay Rs 2.4 cr, railways tell Mumbai RTI activist - See more at: http://www.mid-day.com/articles/want-reservation-details-pay-rs-24-cr-railways-tell-mumbai-rti-activist/16114160#sthash.oqaaUscf.dpuf

mid-day
If you are thinking about filing a Right to Information (RTI) application for some information from Central Railway (CR), be prepared to cough up a lot of money. CR has told an RTI activist from Juhu, who was seeking information on reservation charts, to pay Rs 2.4 crore for the details.

On February 16, 2015, Manoranjan Roy, an RTI activist from Juhu, filed an RTI application asking CR for reservation details for rail journeys originating from Mumbai between February 11 and February 15. Roy received the shock of his life when he received the reply in March.

CR wanted Roy to pay Rs 2,39,14,702 (including service charge of 12.36 per cent) for the details of reservation charts during the specified period. “This was a shock for me as I regularly file queries under RTI and get information. But this time I was asked to pay Rs 2.4 crore for getting the copies of details I have asked for.
The RTI reply
The RTI reply

They have also added service tax to the amount,” said Roy. According to the RTI reply received by Roy, as per existing CR rules, a fee of Rs 1,000 per page plus 12.36 per cent service tax is collected for providing a reservation chart to any person.

The reservation chart details that Roy had called for spilled over to 21,284 pages. He was therefore asked to pay Rs 2,39,14,702 (Rs 2.4 crore) by way of demand draft or cheque issued in favour of Account Officer, CR, Mumbai. “The letter says that on payment of the amount specified, the copies of details asked in the RTI will be furnished immediately.

I am unable to understand that when the charge for getting copy of the details is between Rs 2 to Rs 5 per page. Why are they asking for crores of rupees for my information?” asked Roy. He added that it was the first time he was being asked to pay such a huge amount.

“It looks like they (CR) don’t want to furnish the details, hence they are charging so much. They know that nobody will pay in crores to get RTI details,” said Roy. Normally, when RTI replies spill over to a large number of pages, the information is provided in a digitised form in a CD, which costs only Rs 60. Roy is now in the process of filing an appeal for getting his information.

CR’s Chief Public Relations Officer Narendra Patil told mid-day that the charges for reservation charts were “very high” and he would confirm the same in a couple of days. “If the RTI activist who filed the query is not satisfied with the reply, he can always file an appeal,” said Patil.

Hindi teachers checking maths papers in UP Board exams'...TIMES OF INDIA

AGRA: Answer sheets of class 10 and 12 of Uttar Pradesh Board are being corrected by teachers having no knowledge of those subjects, alleged teachers who are on a collision course with the state government.

In a letter shot off to Board authorities, RP Mishra, state president of Uttar Pradesh Madhyamik Shiksha Sangh, mentioned around a dozen cases in the state capital where teachers were evaluating copies of the subjects they have never taught. Similar cases have also been reported from Mainpuri and Firozabad, he alleged.

"Hindi teachers are checking mathematics copies. And if the Board has allotted wrong subjects to nine teachers in just one school (in Lucknow), one can easily know the scenario across the state. I have also found students' photographs pasted on teachers' ID cards in many cases and have reported the same to the Board authorities, but no action has been taken," Mishra told TOI.

More than 45,000 teachers have boycotted the evaluation work for the past six days over their three-point demands, including payment of outstanding dues of previous years evaluation work, fixing a minimum wage for teachers of unaided schools and start of a pension scheme for teachers of government-aided schools. Around 1.40 crore copies are to be evaluated within next two weeks. At least 1.05 lakh teachers were deployed for the purpose by UP Board, out of which majority have boycotted the work.

Even as principal's union too came out in support of teachers on the boycott, police were deployed at evaluation centres to stop teachers boycotting the evaluation of answer-sheets of class X and XII of UP Board from entering the premises on Saturday after secondary education department decided to act tough against them.

Board secretary Amarnath Verma denied Mishra's allegations, saying no such incident has come to his knowledge. However, he added if there were such cases, school authorities should report the matter to DIOS who will take corrective measures.

"It is the responsibility of district inspectors of schools (DIOS) to ensure that examinations and evaluations commence smoothly. The DIOS forward us the sanction latter for the teachers who can evaluate the answer sheets and the Board can allot subjects to the respective teachers accordingly. In case there are cases in which wrong copies have been given to teachers, the school authorities should report the matter to the DIOS," Verma added.

Echoing Verma's views, Mainpuri DIOS RP Yadav said that the evaluation centre superintendents where such irregularities have been found can get the teacher to fill a form in which they have to mention their correct subjects and the one allotted by the Board. "Following this, the teacher will be given the copies of the subject they have specialized in," he said.

Ajay Sharma, district head of UP Board Teachers' Association in Agra, blamed the mess on private schools. "In most private schools, teachers are not well-qualified. Any graduate can be hired. Since UP Board has no control on private schools, there is no measure to stop the practice of poor evaluations as well," Sharma said.

It is noteworthy here that out of 20,945 schools affiliated with the Board across the state, 65 percent are private ones.

Sunday, April 5, 2015

'வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவேன்'- ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரின் லட்சியப் பயணம்

தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்

இன்னும் பத்து ஆண்டுக்குள் இந்த ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைந்தது ஐம்பது அரசு ஊழியர்களையும் உருவாக்கிவிட்டுத்தான் ஓய்வு பெறுவேன்” என்று உறுதிபடச் சொல்கிறார் தாமரைச்செல்வன்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது சித்தாதிக்காடு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன். 15 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் பள்ளிக் குழந்தைகளைப் போல இந்தப் பள்ளிக் குழந்தைகளையும் சீருடை, டை அணிந்து மிடுக்காக நடக்கவைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை தந்தவர்.

பொதுவாக கிராமத்துக் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட பெற்றோருக்கு நேரமும் இருக்காது; ஞாபகமும் வராது. இதனால் தனது பள்ளிக் குழந்தை களின் பிறந்த நாளுக்கு தனது செலவிலேயே கேக் வாங்கி வந்து குழந்தைகள் மத்தியில் அதை வெட்டவைத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார் தாமரைச்செல்வன். இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா - இதெல்லாம் இந்தக் காலத்து பள்ளிக் குழந்தைகளுக்கு கனவாகிவிட்ட நிலையில் தாமரைச்செல்வனின் செலவில் இந்தப் பள்ளிக் குழந்தைகள் ஆண்டு தவறாமல் சுற்றுலா போகிறார்கள்.

“இங்க படிக்கிற பிள்ளைங்க எல்லாருமே வறுமைக் கோட்டுல இருப்பவங்க. பெத்தவங்கள கேட்டால் ‘ஆடி மாசம் பொறந்தான்’னு தான் சொல்லுவாங்க. இந்த நிலைமையை மாத்தி, பிள்ளைகளின் பிறந்த நாளை அனைத்துப் பெற்றோருக்கும் தெரியவெச்சேன். ஒருவாரம் முன்னாடியே பிறந்த நாள் தேதியை பெத்தவங்களுக்கு தெரிவிச்சிருவோம். ஆரம்பத்துல கேக் மாத்திரமில்லாமல் புத்தாடையும் நானே எடுத்துக் குடுத்தேன். இப்ப, ஒன்றிரண்டு பேர் தவிர மத்தவங்க புத்தாடை எடுத்துடுறாங்க. கேக், சாக்லேட் மட்டும்தான் நம்ம செலவு. பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்து மேல நாட்டம் வந்தாதான் படிப்புல ஆர்வம் காட்டுவாங்க. அதுக்காகத்தான் இப்படிச் சின்னச் சின்ன வேலைகளை செய்யுறோம். வீட்டில் நம்ம பிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட மாட்டோமா? அப்படித்தான் நினைச்சுக்குவேன்.

வறுமையில இருந்தாலும் சில குடும்பங்களை குடி சீரழிக்குது. அதனாலேயே பிள்ளைகளை மேல்படிப்பு படிக்க வெக்க முடியாம திண்டாடுறாங்க. இன்னும் சிலருக்கு இயல்பாகவே வறுமை காரணமா படிப்பை தொடர முடியாம போயிடுது. அப்படி பாதியில் படிப்பை நிறுத்த வேண்டாம். மேலே படிக்க நான் உதவி செய்யுறேன்னு தைரியம் கொடுத்து பல பிள்ளைகளை கல்லூரி வரைக்கும் கொண்டு வந்துட்டேன்.

மது அருந்தும் தகப்பன்களிடம், ‘நீ குடியை விடுறதா இருந்தா உன் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்’ என்று சொல்லி அவங்கள குடியிலிருந்தும் மீட்க முயற்சிக் கிறேன். எனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைச் சிருக்கு. இப்ப இந்த ஊருல மொத்தம் 187 பட்டதாரிகள் இருக்காங்க. ஆனா அரசு ஊழியர் ஒருத்தர்கூட இல்லை.

எஞ்சி இருக்கிற எனது பத்தாண்டு பணிக் காலத்துக் குள்ள இந்த ஊருல வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைஞ்சது 50 அரசு ஊழியர்களையும் உருவாக்கிக் காட்டுவேன். அதுக்காக விரைவில் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுறதுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம்னு இருக்கேன்” என்கிறார் தாமரைச்செல்வன்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் காலியாக இருக்கும் வீடுகள்: தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய காரணம்


சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன. இதனால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்போரையும், வீடு தேடி வருபவர்களையும் அனுசரித்து நடக்கத் தொடங்கியுள்ளனர்.

வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் பல நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். தண்ணீரை குறைவாகத்தான் செலவிட வேண்டும், மின்சார கட்டணத்தை கூடுதலாக தரவேண்டும் என்றெல்லாம் வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகளால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் திணறி வந்தனர். இதற்காகவே கடன்பட்டு வீடு வாங்கிச் சென்றவர்கள் ஏராளம்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருப்பதால் சென்னையில் சுமார் 30 ஆயிரம் அடுக்குமாடி வீடுகள் காலியாக உள்ளன. வங்கிக் கடனில் வீடு வாங்கியவர்கள் அதனை வாடகைக்கு விடும்போது அவர் மாதந்தோறும் கட்டும் கடன் தவணைத் தொகையைவிட வாடகை குறைவாக இருக்கிறது. அதனால் தன் கையில் இருந்து பணத்தைப் போட்டு மாத தவணை கட்டும் நிலையில் வீட்டு உரிமையாளர்கள் பலர் உள்ளனர். மேலும் வீட்டில் குடியிருப்பவர்கள் காலி செய்தால் மாத பட்ஜெட்டில் துண்டு விழுமே என்ற பயத்தால் குடியிருப்போரை அனுசரித்துப் போகத் தொடங்கியுள்ளனர்.

“கடந்த 10 ஆண்டுகளில் சொத்து வரியும், தண்ணீர் வரியும் 40 சதவீதம் அதிகரித்திருப்பதால் வீட்டுக்கான பராமரிப்பு செலவு அதிகமாகியிருக்கிறது. இருந்தாலும், வீட்டு வாடகையை அதிகரிக்க முடியவில்லை. அப்படி அதிகரித்தால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வீட்டை காலிசெய்துவிடுகிறார்கள். புதியவர்கள் வராமல் நான்கைந்து மாதங்கள் வீடு காலியாக இருக்கிறது. அந்த காலத்தில் ஏற்படும் நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு சற்று குறைந்த வாடகைக்கு வீடு கொடுத்துள்ளேன்” என்கிறார் பெரம்பூரைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ராஜேஷ்.

தனியார் வீடுகளுக்கு மட்டுமின்றி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டிக்கொடுக்கும் வீடுகளிலும் இதே நிலைதான். சோழிங்கநல்லூரில் சுயநிதித் திட்டத்தில் கட்டிக் கொடுத்த 900 அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 100 வீடுகள் வரை வாடகைக்குப் போகாமல் இருக்கின்றன. சென்னையில் பரவலாக வீடுகளில் ‘டூ லெட்’ போர்டு தொங்குவதைப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பலரும் இடமாறிச் செல்வதால் வீடுகளில் ‘டூ லெட்’ போர்டு தொங்கும். சில நாட்களிலேயே வீடு வாடகைக்கு விடப்பட்டுவிடும். ஆனால், இப்போது சென்னையின் மையப் பகுதியில்கூட ஒரு மாதம் வரை வீடு காலியாகவே கிடக்கிறது. இதற்கு தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நகரில் சென்னைக் குடிநீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் மட்டுமே வீடுகள் வாடகைக்கு போகிறது. மற்ற பகுதிகளில் உள்ள வீட்டு உரிமை யாளர்கள் நிலை திண்டாட்டம்தான்.

இதனால் வாடகை வீடு கேட்டு வருபவர்கள், வீட்டு உரிமையாளரிடம் நிபந்தனையின்றி வீடு வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் - பிஎச்.டி. முடித்திருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம்



தகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.9.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இக்காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2012-ம் ஆண்டுக்குரியவை ஆகும்.

2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. முடித்திருந்தால் மட்டும் தகுதித்தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த விதிமுறையைத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம் செய்து அதன்படியே, உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களைப் பெற்றது.

ஆசிரியர் பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, தமிழ், ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு இறுதி தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, உளவியல், சமூகவியல், சமஸ்கிருதம், இந்திய கலாசாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 25-ம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு மார்ச் 31-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வுப்பட்டியல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, உதவி பேராசிரியர் பணிக்கு, பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களில், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பிஎச்டி பட்டதாரிகளும் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம்.

எனவே, ‘ஸ்லெட்’, ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடங்கிய புதிய தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்படுமா? அல்லது முதலில் பணிக்கு அனுமதித்து குறிப்பிட்ட காலத்துக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற கால அவகாசம் அளிக்கப்படுமா? என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சொல்லத் தோணுது 28: உதிர்ந்த இலைகள்

Return to frontpage

தொலைக்காட்சிப்பெட்டி ஒன்றுதான் இன்று மனிதர்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாமல் போனால் இந்த ‘பெருசுகளிடம்’ பேசுவதற்கு யார்தான் துணையிருக்கிறார்கள்?

வீட்டிலுள்ளப் பெரியவர்கள் பேசுவதை எவரும் விரும்புவதில்லை. பேசினாலும் சுருக்கமாகப் பேசச்சொல்லி கண்டிக்கிறார்கள். நான் நண்பர்களின் வீட்டிற்கோ, விருந்தினர் வீட்டிற்கோ சென்றால் முதலில் பார்க்க விரும்புவது அந்த வீட்டிலுள்ள முதியவர்களைத்தான். பேச்சுத் துணைக்கும், நலன் விசாரிப்புக்கும் ஏங்குகின்ற அவர்களை பெரும்பாலான வீடுகளில் கட்டிவைத்திருக்காத நாய்கள் போலவே நடத்துவதை கண்டுகொண்டேதான் வருகிறேன். விருந்தினர்களும், நண்பர்களும் வீட்டிற்கு வரும்போது எத்தனைபேர் தங்களின் வயதான உறவுகளை நாம் கேட்காமலேயே அறிமுகப்படுத்துகிறார்கள்!

வெளியூர் சென்றிருந்தபொழுது என் படைப்புகள் மேல் பற்றுகொண்ட ஒருவர் பலமுறை வற்புறுத்தி அழைத்ததினால் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பெரிய விருந்து என்றே சொல்லலாம். விடைபெற்றுத் திரும்பும்போது எனது கைப்பேசியை மறந்து அங்கேயே வைத்துவிட்டு வந்து விட்டதால் மீண்டும் நினைவுக்கு வந்து அதனை எடுப்பதற்காக கொஞ்ச நேரத்திலேயே திரும்பிப் போனேன். அழைப்புமணி அடித்தும்கூட யாரும் வரவேயில்லை. வீடு திறந்திருந்ததால் நானே உள்ளே சென்றேன்.யாரும் கண்ணில் படவில்லை. ஆனால் மேலே மாடியின் அறைக்குள்ளிருந்து யாரையோ அடிக்கின்ற சத்தமும், அடியை வாங்குபவர் அலறுவதும் கேட்டது. அவரின் மனைவியும் சேர்ந்து திட்டிக்கொண்டிருந்தார். அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி அடி வாங்குபவர் என்னைப் பார்க்க முயன்றதற்காக சண்டை மூண்டிருந்தது. மீண்டும் நண்பர் அவரைத் தாக்குவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நானே மாடிக்குப் போனேன். அனைவருமே அதிர்ந்து போனார்கள்.அடி வாங்கிய அப்பா என்னைக்கண்டதும் அழுகையை மறைத்துக்கொண்டார். அதன்பின் அந்த நபர் என்னை பார்ப்பதையேத் தவிர்த்தார்.

சில ஆண்டுகளுக்குப்பின் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த நபரின் அப்பாதான் முதியோர் இல்லத்திலிருந்து எழுதியிருந்தார். “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தாராம். அவரால் என்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கவில்லையாம். ஒருமுறை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு அதிகப்படியான எழுத்துப் பிழைகளோடு எழுதியிருந்த அந்தக் கடிதத்தை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

இரண்டு மாதங்களுக்கு முன் அந்த ஊர் போயிருந்ததால் அவரின் நினைவு வந்து முதியோர் இல்லத்துக்குச் சென்றேன். பக்கவாதத்தால் ஒரு காலும் கையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. தன் மனதில் இவ்வளவுகாலம் தேக்கி வைத்திருந்ததையெல்லாம் கொட்டினார். அப்பொழுதும் அவரின் மகன் மீது குற்றம் சொல்லவேயில்லை. இறுதிவரை தச்சுத் தொழில் செய்து வந்த படிக்காத அவர் அவருக்கென எந்த சேமிப்பையும் வைத்துக்கொள்ளவில்லை. அடிக்கடி ஏற்படும் சண்டையைத் தவிர்க்க வெறுப்பிலிருந்து மீள முடியாமல் திடீரென ஒரு இரவு யாருக்கும் சொல்லாமல் அந்த இல்லத்தில் வந்து சேர்ந்துவிட்டாராம். பொங்கலன்று மகனும் மருமகளும் வந்து பார்த்தார்களாம். மகன்தான் கொஞ்ச காலமாக பணம் செலுத்துகிறாராம். அங்கிருந்து என்னால் மீண்டு வரவேமுடியவில்லை. அங்கிருந்த ஒவ்வொரு தாய் தகப்பன்களுக்கும் ஒரு கதை இருக்கிறது. திரும்பி வரும்போது அவர்களின் வாழ்கைப்பற்றி ஒரு படமெடுக்கச்சொல்லி கெஞ்சினார்கள்.

என்றைக்கு தொலைக்காட்சிப்பெட்டி வந்ததோ, ஒவ்வொருவரின் கைகளுக்கும் கைப்பேசிக் கருவி வந்ததோ, அன்றிலிருந்தே மனிதனோடு மனிதன் நேரில் பேசிக்கொள்வது நின்றுவிட்டது. முதியவர்களுக்கு வீட்டு விலங்குள் போலவே வேளாவேளைக்கு உணவு மட்டும் கிடைக்கிறது. கண்களில் தேங்கியுள்ள ஏக்கத்தோடு தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கையிலிருந்த பிள்ளைகள் எங்கோ போய்விட்டன. பெட்டியை இயக்கும் கருவி மட்டும் ஒவ்வொரு தாய் தகப்பன் கைகளில் இருக்கிறது.

கிராமங்களிலாவது பேச்சுத்துணைக்கு இவர்கள் போலவே முதியவர்கள் இருக்கிறார்கள். நகரங்களில் எங்கே போவது. மாதச் சம்பளத்தில் பணிபுரிந்தவர்களாவது எதிர்காலம் குறித்து சிந்தித்து சேமிப்பை உருவாக்கிக்கொண்டார்கள். மற்றவர்களுக்கு கையில் எதுவும் இல்லை. அரசாங்கத்தைவிட்டால் ஏது வழி!

இந்தக் கொடுமைகளை களையத்தான் இந்திய அரசாங்கம் தங்களை உருவாக்கியப் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை எனச் சொல்லி புதிய சட்டத்தை உருவாக்கியது. பெற்றோர்கள் நினைத்தால் தங்களைத் தவிக்கவிடும் பிள்ளைகள் மீது காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். அவர்களின்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனையும் கிடைக்கும். பிள்ளைகளை தண்டிக்கச் சொல்லி வழக்குத் தொடுக்கும் அளவுக்கு இன்னும் பெற்றோர்களின் மனது கல்லாக மாறவில்லை.

கடந்த முப்பதாண்டுகளுக்குப் பின்தான் இந்த மணமுறிவுகளும், முதியோர் இல்லங்களும் இந்த மண்ணில் உருவானது. இடம்பெயர்வினாலும், பொருள் தேடலினாலும்,தன்னலத்தாலும் கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. ஆளாளுக்கு தனித்தனியாக சம்பாதித்து கையில் பணத்தைப் பார்த்ததினால்தான் இந்தப்பற்றின்மை.

தன்னை உருவாக்கியவர்களை கைவிடக்கூடாது என ஒவ்வொரு பிள்ளைகளும் நினைத்தாலும் வாழ்வு அனைவருக்கும் வசதியாக வாய்த்து விடுவதில்லை. நகரத்து வாழ்வில் தொலைந்து போய்விட்ட கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு அவர்கள் வாழ்வதற்கே இங்கு ஒரு அறைக்கு உத்திரவாதமில்லை. வீடு இருப்பவர்கள் வீட்டுக்குமேல் வீடு வாங்கி குவித்துக்கொண்டேப் போகிறார்கள். அப்பா, அம்மாவுக்கு ஒரு அறை தந்து அவர்களை மகிழ்ச்சியாக தங்களுடன் வைத்துக்கொள்ள நினைத்தாலும் பொருளாதாரம் இடம் தருவதில்லை.

தங்கள் பிள்ளைகள் தங்களின் தாய் தகப்பன்களின் கைகளில்தான் வளர வேண்டும் அதுதான் சிறந்த வாழ்வு என நினைத்தாலும் அது கனவாகவே பலருக்கு முடிந்துவிடுகிறது.

மெத்தப்படித்த தேர்ந்த மருத்துவர் ஒருவர் எனக்கு நெருக்கமான நண்பனாக இருக்கிறார். கிராமத்தில் ஏழு பேரோடு பிறந்தவர். சுவற்றில் மாட்டியிருக்கும் தன் தாய் தந்தையரின் படத்தையும், தங்களின் மகன்கள் இருவரின் படத்தையும் கணினியில் பார்த்த படியும் உட்கார்ந்திருக்கிறார். முதுமை அவரை முடக்கிவிட்டது. அமெரிக்காவில் ஒருவரும், லண்டனில் ஒருவரும் குழந்தைகளோடு வாழ்கிறார்கள். மாடிப்படி ஏறி இறங்க முடியவில்லை. தங்களை கவனித்துக்கொள்ளத் துணைக்கு ஆட்களும் இல்லை. ‘‘தங்களால் இனி தமிழ்நாட்டில் வந்து வாழமுடியாது. இருப்பதிலேயே சிறந்த முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறோம். அவர்கள் சிறப்பாக கவனித்துக்கொள்வார்கள். நிம்மதியாக வாழலாம். பணத்தை நாங்கள் இருவருமே பகிர்ந்துகொள்கிறோம்’’ என மகன்கள் சொல்லிவிட்டார்களாம். என் வீட்டிற்கும், அவர் வீட்டிற்கும் தொலைவு என்றாலும் அடிக்கடி அவரைச் சென்று பார்த்தும், தொலைபேசியில் பேசிக்கொண்டும் வருகிறேன்.

இன்று கட்டிடக்கலை எனும் படிப்பை கரைத்துக் குடித்த பிள்ளைகள் இப்படிப்பட்ட முதியோர்கள் ஒரே இடத்தில் வாழும்படி முதியோர் இல்லங்களை அவரவர்களுக்கு சொந்தமாகவே கட்டித்தர தொடங்கிவிட்டார்கள். அங்கே நீங்கள் கேட்கின்ற எல்லாமும் இருக்கும்.. நீங்கள் பெற்று வளர்த்தப்பிள்ளைகள் தவிர! கோயம்புத்தூர் மாவட்டத்தில்தான் இதுபோன்ற வீடுகள் அதிகமாக கட்டி முடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.இறுதிச்சடங்கிற்கு மட்டும் பிள்ளைகள் வந்தால் போதும்.ஒருவேளை வராமல்போகிறவர்களுக்கு வீடியோவில் அவர்களே படமெடுத்தும் அனுப்பி வைப்பார்களாம்.

கூடிய விரைவில் அரசின் நிதிநிலை அறிக்கைகளில் அரசாங்கமே முதியோர் இல்லத்துக்கான நிதியை ஒதுக்கி அறிவிக்கப்போகும் நாட்கள் வரத்தான் பொகிறது.
- சொல்லத் தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

சி.பி.ஐ. விசாரணையை தவிர்ப்பதற்கே கைது... சந்தேகப்படும் இளங்கோவன்!

சென்னை: சி.பி.ஐ. விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ? என்கிற சந்தேகம் வலுக்கிறது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருநெல்வேலி மாவட்ட விவசாய பொறியியல் துறையின் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமார சாமி தற்கொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு நடை பெற்ற உடனே இது தற்கொலை அல்ல, இதில் விவசாயத்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டு இருக்கிறார் என்று முதல் முதலாக குரல் எழுப்பினேன்.

தொடக்கத்தில் ஊடகங்களின் ஆதரவு இல்லாத நிலையில், தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்தேன். முத்துக் குமாரசாமி இறப்பதற்கு முன்பு, அவர் கடந்த 3 மாதங்களில் யார் யாரோடு பேசினார் என்கிற தொலைபேசி, அலைபேசி எண்கள் அடங்கிய பட்டியலை ஆதாரமாக வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பதவி, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பின்பு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரித்தன. நேற்றிரவு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ? என்கிற சந்தேகம் வலுக்கிறது.

அதனால் இந்த வழக்கில் தமிழக அமைச்சரே சம்பந்தப்பட்டிருப்பதால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தால் தான் முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும். ஏனெனில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இறுதியாக குற்றவாகளிகள் தப்பித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, நான் ஏற்கனவே கோரியிருந்த மத்திய புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைப்பதன் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என்று கூறி உள்ளார்.

அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது கண்துடைப்பு நாடகமே... ஆவேசப்படும் ராமதாஸ்!

சென்னை: முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது வெறும் கண்துடைப்பு நாடகமே என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. நிருவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கில் வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது காலம் கடந்து எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.

முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்த வேண்டும், விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக அவரை பதவி நீக்க வேண்டும் என அப்போதே நான் வலியுறுத்தினேன். ஆனால், முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பான ஆதாரங்களை அழிக்கவும், செய்திகள் வெளிவராமல் தடுக்கவும் தான் அரசு முயன்றதே தவிர, உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒருகட்டத்தில் நிலைமை கைமீறி போனபோது தான் மார்ச் மாதம் 7 ஆம் தேதி அமைச்சர் பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். அப்போதும் இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்& அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.

அதுமட்டுமின்றி, அதிகாரி முத்துக்குமாரசாமியை வருமானவரித்துறை விசாரணைக்கு அழைத்து இருந்ததாகவும், அதற்கு பயந்து கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் ஊடகங்களின் மூலம் காவல்துறை வதந்தி பரப்பியது. மேலும், முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி காரணமில்லை என்று மறுக்கும்படி அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாலும், இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்ததாலும் தான் தாங்கள் இவ்வழக்கை நியாயமாக நடத்துவதாகக் காட்டும் நோக்குடன் முன்னாள் அமைச்சரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒரு கண்துடைப்பே தவிர, இதனால் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது. உண்மையில் இது அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உயர்ந்த இடத்தில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சி ஆகும். அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஊழல் மூலம் சேர்த்த பணத்தை அவரே வைத்துக் கொள்ளவில்லை. அனைத்து அமைச்சர்களும் ஊழல் மூலம் ஈட்டும் பணத்தை தங்களின் மேலிடத்தில் ஒப்படைத்து விட்டு அவர்கள் தரும் குறிப்பிட்ட விழுக்காடு கமிஷனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம் என்று அதிமுகவினரே கூறுகின்றனர்.

இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டால் ஊழல் மூலம் கிருஷ்ணமூர்த்தி சேர்த்த பணம் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்ற உண்மைகள் எல்லாம் தோண்டி எடுக்கப்படும். இதைத் தடுக்கும் நோக்குடன் தான் இப்போது கிருஷ்ணமூர்த்தி கைது என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இது போதுமானதல்ல. இவ்வழக்கில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர சி.பி.ஐ.யால் மட்டுமே முடியும் என்பதால் இவ்வழக்கை அந்த அமைப்பிடம் ஒப்படைக்கவேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சென்னை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை பொறியாளர் செந்தில் ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை வேளாண் துறை பொறியாளர் செந்தில் ஆகிய இருவரையும் இன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு முழுவதும் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று காலை 5.00 மணியளவில் அவரை கைது செய்து, நெல்லைக்கு அழைத்து சென்றனர்.
அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்றனர். அங்கும், இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணைக்கு பின் அவர்களை நெல்லை 3வது ஜுடிஷியல் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை பொறியாளர் செந்தில் ஆகிய இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். பின்னர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி வழக்கறிஞர், அவருக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதனை பரிசீலித்த நீதிபதி அவருக்கு மருத்துவ பரிசோதனை அளிக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து இருவரரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் சிறைச்சாலை மருத்துவமனையில் அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால், நாளையே இருவரையும் போலீஸ் காவலில் எடுக்கும் மனு சி.பி.சி.ஐ.டி. சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

Why do pilots hide mental disorders?

An intense focus on the role of the co-pilot's mental illness in the Germanwings jetliner crash has raised concerns that it risks unfairly stigmatizing millions of people with mental disorders and making it less likely they will seek treatment.That, in turn, could make it even harder to identify people working in high-risk professions who pose a threat to public safety.

The co-pilot, Andreas Lubitz, would not be the first aviator to hide the fact that he had psychiatric problems or that he'd received mental health treatment.

The reluctance to come forward means that airlines, health professionals and regulators must strike a delicate balance, trying to decrease stigma to encourage pilots to be honest about their problems, while drawing a firm line beyond which pilots are grounded to protect the public's safety .

Such issues surrounding mental health are familiar territory in the US, where a series of mass shootings, riveted the public's attention on responsibilities of therapists treating the mentally ill. After the Newtown massacre in 2012, several states changed their laws, broadening the circumstances under which mental health professionals can report a potentially violent patient without fear of legal repercussions. Under the New York law, they are required to report to local health officials those who are “likely to engage in conduct that would result in serious harm to themselves or others.“

But those laws remain controversial. And mental health experts say the tendency to link mass violence and mental disorders has a negative effect, discouraging people from seeking treatment. “These kind of stories reinforce the anxiety , doubts, concerns people have that `I have to keep my symptoms concealed at all costs,' and that doesn't benefit anyone,“ said Ron Honberg, director at the National Alliance on Mental Illness.

There is little question that in the field of aviation, as in many other professions, acknowledging having a mental illness is a dicey business. “The stigma is enormous,“ said Dr William Hurt Sledge, a professor of psychiatry at Yale. “And of course, none of them wants that to be known, nor do they want to confess it or believe that they have it.“

Pilots' fears about the consequences of being honest about their mental health was one reason the Federal Aviation Administration in 2010 loosened its policy , allowing them to take certain antidepressants and still fly if the illness was mild. Before the policy changed, some pilots received mental health treatment and antidepressants from private doctors but concealed that information from airlines and regulators, said doctors.

If the rate of antidepressant use in the general population is any indication, some pilots may still be concealing their use of the medica tions: Government surveys have found that 1 in 10 American adults takes an antidepressant, but only a small number of pilots are currently taking the drugs with the agency's approval, according to the Air Line Pilots Association. Any pilot who takes such medications and continues to fly must follow a rigorous treatment plan that includes regular evaluations and often therapy .

Even if laws were changed, screening procedures tightened and stigma lessened, people who are bent on suicide or mass murder might still go undetected.

Depression is among the most common of mental disorders. But, Dr Paul Summergrad, president of the American Psychiatric Association said the vast majority of them “neither commit suicide or pose a risk to others.“ And no screening process or psychological test can infallibly detect those who will.“It's usually extremely difficult to predict suicide,“ said David Clark, a professor of psychiatry at the Medical College of Wisconsin.“There are those patients who are very unguarded and explicit about not only their suicidal thoughts but how compelling they are. And for every one of those are those who are very concealing about what's going through their minds.“

Much remains unknown about Lubitz's condition and what his motivation might have been. Prosecutors have said that he had a mental health diagnosis and had talked to a psychotherapist about suicide before applying for a pilot's license. But the precise diagnosis has not been made public.And although the authorities said antidepressants were found in his apartment in Germany , the drugs can be prescribed for a variety of illnesses other than depression.“The little bit of information leaking out right now makes people slap their heads and say , `Someone should have known,'“ Dr Clark said. “But based on the information we have so far, it isn't clear that it was a slam dunk to put the pieces of the puzzle together.“

M.Pharm. MPT ADMISSION NOTIFICATION 2015-16 BY DME CHENNAI


VINAYAKA MISSIONS UNIVERSITY ADMISSION NOTIFICATION 2015-16


114 PG medical seats vacant in Gujarat University


AHMEDABAD: After the first round of counselling in the post graduate medical and dental courses, around 114 seats seats in medical and 21 seats in PG dental have fallen vacant. This would be for the first time the seats in PG medcial and dental courses have fallen vacant.

The Gujarat University had on Friday declared the final merit list of 224 PG medical and 66 PG dental applicants for the 308 PG medical seats and 89 PG dental seats. Following the apex court directive that the first round of the admission to post graduate medical courses has to be completed by April 5 and hence the GU decided to conduct the admission on Saturday.

In January, GU had conducted entrance tests for postgraduate medical and dental courses. The paper was tough and not many qualified. Realizing that the seats will fall vacant, GU decided to give 40 grace marks instead of 10. With the grace marks, over 400 students were clearing the medical entrance and 150 the dental entrance. But the matter was challenged in the high court. The court after hearing the petition, stated GU action of giving 40 grace marks is not proper as it was not a matter of policy.

Officials said that on Saturday of the 224 students who were in the merit list were called and only 182 took admission while 24 did not secure the admission as they did not get the branch of their choice. Similarly in Dental also around 27 students who were called for admission refused admission.

The officials said that Orthopedic, Radiology, Medicine, Skin and pediatric was the most sought after branches. Officials said that around 44 seats in BJ medical college, 51 seats in NHL and 19 seats in AMC medical colleges had remained vacant.

The officials said that the after the second round of admission by the all India entrance, the GU will go in for the second round in the last week of April and the third round will be in May end.

Saturday, April 4, 2015

உத்தரப் பிரதேசத்தில் தேர்வைக் கண்காணிக்க வந்த பறக்கும் படையினரை நாய்களை ஏவி விரட்டிய கல்லூரி நிர்வாகம்

உத்தரப்பிரதேசத்தில் கல்லூரித் தேர்வைக் கண்காணிக்க வந்த பறக்கும் படையினர் நாய்களை ஏவி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

பிஹார் மாநில பள்ளிப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெற்றோர்களும் உறவினர்களும் கட்டிடத்தில் ஏறி விடையெழுதிய துண்டுச் சீட்டுகளை (பிட்) கொடுக்கும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத் தியது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பெரோஸாபாத் சிர்ஸாகஞ் சில் ஒரு கல்லூரியில் நடந்த தேர்வைக் கண்காணிக்க வந்த பறக்கும் படை யினர் நாய்களை ஏவி விரட்டியடிக் கப்பட்டுள்ளனர்.

ஆக்ரா அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் கீழ் இயக்கும் யதுநாத் சிங் மகா வித்யாலயா கல்லூரியில் தேர்வுகள் நடந்து வருகின்றன. இத்தேர்வைக் கண்காணிக்க கடந்த திங்கள்கிழமை பறக்கும்படையினர் சென்றுள்ளனர். அவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட நாய்கள் ஏவப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக பறக்கும் படைக்கு தலைமை வகித்த பேராசிரியர் ராஜேந்திர சர்மா ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அக்கல்லூரிக்குச் சென்றபோது, செல்லும் வழியில் உள்ள குறுகலான பாதைகளில் இருசக்கர வாகனங் களை குறுக்காக நிறுத்தி தாமதப் படுத்தினர். கல்லூரிக்குச் சென்ற போது, பிரதான வாயில் உட்பக்க மாகப் பூட்டப்பட்டிருந்தது. அதைத் திறக்க அரை மணி நேரம் தாமதம் செய்தனர். பிறகு உள்ளே நுழைந்த பறக்கும்படையினர் மீது 20-க்கும் மேற்பட்ட நாய்கள் ஏவி விடப்பட்டன.

இதனால், அங்கிருந்து பறக்கும் படையினர் அலறியடித்து ஓடிவந் துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடைத்தாள்களைச் சோதனை செய்து பார்த்தபோது, பெரும் பாலானவை ஓர் எழுத்துகூட மாறாமல் ஒன்றுபோலவே அனைத்தும் இருந் துள்ளன. தேர்வு கண்காணிப்பாளர் களே விடைகளை உரக்கப் படித்துள் ளனர். அதனைக் கேட்டு மாணவர்கள் எழுதியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அக் கல்லூரியின் அனைத்துத் தேர்வுகளை யும் ரத்து செய்ய உத்தரவிடப்பட் டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப் படவில்லை. அக்கல்லூரி மீது அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்து எழுத ரூ.50 கோடி

உத்தரப்பிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பார்த்து எழுதுவதற்கு பணம் வாங்கிக் கொண்டு உதவுவதற்காக அலிகர் பகுதியில் ஒரு கும்பலே இயங்கி வருகிறது.

இந்த மாபியாக்களிடம் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தி விட்டால், கேள்விக்கான விடையைத் தயார் செய்து கொடுப்பது முதல், திடீர் சோதனைகளில் இருந்து தப்பிக்கச் செய்வது வரை அனைத்தையும் அக்கும்பல் கவனித்துக் கொள்ளும்.

அத்ரோலி தாலுகாவில் மட்டும் மாணவர்கள் விடையைப் பார்த்து எழுத உதவுவதற்காக ரூ.50 கோடி கைமாறியதாக கடந்த 2013-ம் ஆண்டு உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

அத்ரோலி பகுதி பள்ளிகளில் சேர்க்கை கிடைத்தால் போதும், தேர்ச்சி பெறுவது ஒரு விஷயமே இல்லை என்பதால், பணம் கொடுத்து தேர்ச்சி பெறுவதற்காக கோவா, மகாராஷ் டிரம், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் அத்ரோலி பள்ளிகளில் சேர்கின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டு இக்லாஸ் தாலுகாவில் லட்சுமா வித்யா நிகேதன் இன்டர் காலேஜுக்கு வெளியே, பார்த்து எழுத உதவும் இரு கும்பல் துப்பாக்கிகளுடன் மோதிக் கொண் டன. அதனைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர் தேஜ்வீர்சிங் துப்பாக்கியால் சுடப் பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இணையதள முன்பதிவு டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் 100 சதவீதம் உயர்வு: ரயில் பயணிகள் கடும் அதிருப்தி

ரயில்களில் பயணம் செய்ய இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் ‘இ’ மற்றும் ‘ஐ’ டிக்கெட்களுக்கான சேவைக் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ரயில்களில் பயணம் செய்வதற்கு வழக்கமாக ரயில் நிலையங்களில் உள்ள கணினி முன்பதிவு மையங்களுக்கு சென்று முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பயணிகளின் வசதிக்காகவும் கணினி மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, ஐஆர்சிடிசி இணையதளம் மூலம், இ-டிக்கெட் (எலக்ட்ரானிக் டிக்கெட்), ஐ-டிக்கெட் (இன்டெர்நெட் டிக்கெட்) என 2 வகையான டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.

ஐ-டிக்கெட் எடுத்தால் நம் வீட்டுக்கே வந்து சேரும். ஆனால், பயணம் செய்வதற்கு குறைந்தது 4 நாட்களுக்கு முன்பு இந்த டிக்கெட்டை எடுக்க வேண்டும். இ-டிக்கெட் எடுத்தால் அது நமது மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செல்போனுக்கு குறுந்தகவலாகவோ வந்துவிடும். இந்த வசதிகளால், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது.

இந்நிலையில், இணையதளம் மூலம் எடுக்கப்படும் டிக்கெட்களுக்கான சேவைக் கட்டணம் நூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, இரண்டாம் வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட இ-டிக்கெட்களுக்கு சேவைக் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.20-ல் இருந்து ரூ.40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரண்டாம் வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட ஐ-டிக்கெட்களுக்கு சேவைக் கட்டணம் ரூ.40-ல் இருந்து ரூ.80 ஆகவும் ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக் கட்டணத்தில் 10 சதவீத அளவுக்கு மேல் சேவை வரியாக செலுத்த வேண்டும். உதாரணமாக, இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.20 சேவைக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.2.47 சேவை வரியாக வசூலிக்கப்படுகிறது. மேலும், எந்த வங்கியின் கணக்கை பயன்படுத்தி கட்டணத் தொகை செலுத்துகிறோமோ, அந்த வங்கிக்கு ஒரு பரிவர்த்தனைக்கு சுமார் ரூ.10 சேவைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

எனவே, ஆன்லைன் வசதி மூலம் இரண்டாம் வகுப்பு இ-டிக்கெட் எடுக்கும்போது ரூ.33-க்கு மேல் கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. சேவைக் கட்டண உயர்வு, பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Varsities can recruit solely on the basis of interviews: HC

Government universities can recruit employees solely on the basis of interviews, without giving weightage to marks obtained in qualifying examinations or conducting written tests, if their statutes provide for such a procedure, the Madras High Court Bench here has said.

Justice V.M. Velumani made the observation while dismissing a writ petition filed by Bharathidasan University Backward Class and Most Backward Class Employees Association to restrain the varsity from regularising the services of 16 non-teaching staff recruited on consolidated pay.

The Association alleged that it had become common practice for the university to recruit drivers, junior assistants and lab assistants on consolidated pay and then regularise their services after a few years for extraneous considerations by flouting the rules related to direct recruitment.

Denying the allegations, Special Government Pleader V.R. Shanmuganathan contended that the statute governing the recruitment procedures in Bharathidasan University states that direct recruitment should be made by calling for names from the Employment Exchange concerned.

If the employment exchange could not sponsor the names of eligible candidates, then the university could call for applications by issuing advertisements in newspapers. Such applicants could be recruited only on the basis of interviews since the statute does not prescribe any other mode.

All the 16 staff, whose regularisation of service had been challenged in the present writ petition, were appointed after newspaper publication and hence there was no irregularity in their recruitment as alleged by the petitioner association, the SGP claimed.

Accepting his submissions, the judge pointed out that even the State government had dropped further proceedings in the matter on June 11, 2013 after an in-house enquiry found allegations of the appointments having been made for extraneous considerations to be false.

Ms. Justice Velumani also said that the petitioner association cannot maintain a writ petition on behalf of its members since the latter could not be termed as “poor, disabled or disadvantaged” to approach the court individually.

Rape is a crime, not medical diagnosis: HC

Rape is a crime and not medical diagnosis. Therefore, doctors entrusted with the responsibility of examining victims do not have the right to conclude whether an individual had been raped or not, the Madras High Court Bench here has said.

A Division Bench of Justices A. Selvam and T. Mathivanan made the observation while confirming the conviction and punishment of 12-year rigorous imprisonment imposed on a youngster for having raped an eight-year-old schoolgirl in Tiruchi on October 28, 2013.

The judges expressed surprise over a woman doctor, who subjected the victim to medical examination at the request of police, having made a written statement that there was no evidence to suggest sexual intercourse just because the girl’s hymen was intact and there were no external injuries.

Authoring the judgement, Mr. Justice Mathivanan said: “To constitute the offence of rape under criminal law, it is not necessary that there should be complete penetration of the penis with the emission of semen and rupture of hymen.

“Partial penetration within the labia majora or the vulva or pudenda, with or without the emission of semen, or even an attempt at penetration is quite sufficient for the purpose of law. It is therefore quite possible to commit the offence of rape without producing any injury to the genitals or leaving any seminal stains.”

He went on to state: “We would like to point out that… the only statement that can be made by the medical officer, who examines a rape victim, is whether there is evidence of recent sexual activity or not. Whether the rape has occurred or not is a legal conclusion and not a medical one.”

Rejecting the convict’s contention that the rape case had been foisted against him by the child’s parents, the judges said such an argument was nothing but an “illogical imagination” since no parent would use their eight-year-old child to take vengeance on their enemy.

Further stressing the need for courts to decide such cases with utmost sensitivity, the Bench quoted the Supreme Court to have said: “What is lost by a rape victim is face. The victim loses value as a person…. A murderer destroys the physical body of his victim but a rapist degrades the very soul of a helpless female.”

“Doctors entrusted with the responsibility of examining victims do not have the right to conclude whether an individual had been raped or not”

No minutes of MCI ethics panel's meets since May 2013

NEW DELHI: The missing minutes of ethics committee meetings of the Medical Council of India (MCI) is an enduring mystery. No minutes of meetings held since May 2013 have been uploaded for reasons the council chooses not to explain. Even right to information (RTI) applications for making public the minutes have been met with total silence. The ethics committee meetings are where important disciplinary action is decided against errant doctors and cases of medical negligence are taken up.

The website has minutes of the meetings of every other committee, executive committee, post graduate committee, board of governors and general body meetings. It also has minutes of ethics committee meetings up to May 2013. Repeated mails to the MCI president, Dr Jayashree Mehta regarding making public the ethics committee meeting minutes have elicited no response. However, she responds to queries about many other issues reinforcing the notion that it's a deliberate decision to not respond on the issue of ethics committee meeting minutes.

However, the MCI suddenly uploaded the minutes of the ethics committee meeting of July 2014 in which the case of nine diagnostic centres in Delhi being caught paying commissions to doctors was taken up. As soon as queries were sent to the MCI president asking why these minutes were selectively uploaded, she did not respond but the July meeting minutes were soon taken off the website. 

Dr Sudhir Thakur had filed a case of medical negligence in the death of his brother in a Kolkata hospital. His case was taken up in the June 28-29, 2013, ethics committee meeting. He filed an RTI query in the MCI seeking the minutes of the meeting. But the MCI claimed that the minutes of the June 2013 ethics committee meeting was put up in the board of governors' (BoG) meeting of October 2013 and that the BoG had raised objection to items 11 and 27 in the minutes. However, this appears to be a false statement made by the MCI as a look at the minutes of the BoG meeting available on the MCI website shows that the minutes did not come up for consideration during the October BoG meeting.

The MCI's RTI reply also claimed the new ethics committee (of the current MCI dispensation) reconsidered the two items and also item number 23 (which was not mentioned as being asked for review by BoG) and placed it for further decision in the next meeting. But since no minutes of any further ethics committee meets have been uploaded no one knows what happened in the meetings to reconsider these issues.

Dr Thakur, when informed by the MCI that the June ethics committee meeting had exonerated all the accused doctors, filed a case in the high court against this decision. On November 26, 2011, the high court ordered the MCI to produce the minutes of the ethics committee meetings of June 2013 and January 2014. But the minutes are yet to come up in the public domain on the MCI website.

செல்லிடப்பேசி - பெருகும் தொல்லைகள்

Dinamani

தகவல் தொழில்நுட்பத்தின் உன்னத கண்டுபிடிப்பான செல்லிடப்பேசிகள் இப்போது தொல்லைபேசிகளாக மாறிவருகின்றன.

1990-களில் தரைவழித் தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்து நீண்ட காலம் காத்திருக்கும் நிலை இருந்தது. அதன்பின் செல்லிடப்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது செல்லிடப்பேசியில் இருந்து அழைக்கப்படும் அழைப்புகளுக்கும் உள்வரும் அழைப்புகளுக்கும் அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதன்பின் போட்டி அதிகமானதால், இப்போது சமுதாயத்தின் கடைசி நிலையில் உள்ளவர்களிடம் கூட செல்லிடப்பேசிகள், அதுவும் அதிநவீன செல்லிடப்பேசிகள் இருக்கும் சூழ்நிலை உள்ளது.

செல்லிடப்பேசியில் இப்போது பல்வேறு வகையான வசதிகளை செல்லிடப்பேசி நிறுவனங்கள் வழங்குகின்றன.

முகம் பார்த்துப் பேசுதல், விடியோ படங்கள் பதிவிறக்கம், குறுந்தகவல்கள் பரிமாற்றம், இணையதள சேவை, திரைப்படம், வர்த்தகம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வசதிகளால் செல்லிடப்பேசியால் உலகம் கை அளவு சுருங்கி விட்டதை இதைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், வசதிகள் உள்ளதற்கேற்ப அதே அளவுக்கு ஆபத்துகளும் செல்லிடப்பேசிகள் மூலம் நமக்கு அழைப்பு விடுப்பதை மறுப்பதற்கில்லை.

தனக்குப் பிடிக்காத பெண்கள்/ஆண்களின் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்டுத் தங்கள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் மனநோயாளிக் கயவர்கள் செய்யும் செயலால் எத்தனை குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மன அமைதியைக் குலைத்தவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டுள்ளது?

பெண்ணுடன் இருக்கும் காட்சியை செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அவர்களில் பலர், சம்பந்தப்பட்ட பெண்ணை மிரட்டவும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

பலர் பழுதுநீக்குவதற்காகக் கடைக்குக் கொண்டு செல்லும்போது குறிப்பிட்ட செல்லிடப்பேசியில் பதிவாகியுள்ள விடியோ அல்லது புகைப்படப் பதிவுகளை சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் பார்த்து விலைபேசி விற்கும் அவலச் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இவ்வாறு வெளிவரும் தகவல்களால் தற்கொலைச் சம்பவங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

இப்போதைய சூழ்நிலையில், செல்லிடப்பேசியைப் பயன்படுத்தாத பள்ளி மாணவ, மாணவியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சேவை தரும் செல்லிடப்பேசி நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு விதமான விளம்பரச் செய்திகளை செல்லிடப்பேசிகளுக்கு அனுப்புகின்றன.

டேட்டிங், பேசக் காத்திருக்கும் பெண்கள் என பல்வேறு விதமான தலைப்புகளுடன் கவரும் வார்த்தைகளுடன் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் பள்ளி மாணவ, மாணவியர் வைத்திருக்கும் செல்லிடப்பேசிகளுக்கும் வருகின்றன.

இதில் தெரியாத்தனமாக ஒரு மாணவர் அல்லது மாணவி ஒருமுறை பேசிவிட்டால் மீண்டும் மீண்டும் பேசத் தூண்டும் வகையில்தான் எதிர் முனையில் இருப்பவர் பேசுகிறாராம். இதைத் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ஏன் தடை செய்யக் கூடாது?

குறுந்தகவல்களை அனுப்ப வேண்டாம் என்றாலும், விடாப்பிடியாகத் தொடர்ந்து அனுப்பி அனைவரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்கும் செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அனுப்புவதில் நாட்டின் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். உள்பட தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.

செல்லிடப்பேசி இணைப்புப் பெறுவதற்கு போலி முகவரியைக் கொடுத்துள்ளவர்கள் மீதும் பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

முகவரியைச் சோதனையிடாமல் இணைப்புத் தந்த சம்பந்தப்பட்ட முகவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கு யார் பொறுப்பேற்பது?

இப்போதைய சூழ்நிலையில் செல்லிடப்பேசி இல்லாவிட்டால் ஒருவருக்கும் ஒரு வேலையும் ஓடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தகவல் தொடர்புக்காக மட்டுமே என்பதைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.

இப்போதைய இளைஞர்கள் தங்கள் செல்லிடப்பேசியில் உள்ள கேமராக்களில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதில் காட்டும் அக்கறையைத் தங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் மீது காட்டுவதில்லை என்பது வேதனை தரும் உண்மை.

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே சென்ற பலர் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது, மாடியில் இருந்து தவறி விழுந்து இறப்பது போன்ற சம்பவங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

வாகனங்களில் செல்லும்போதும், நடந்துசெல்லும்போதும் பேச்சு மும்முரத்தில் நம்மைச் சுற்றிலும் நடப்பதை மறந்து தங்கள் உயிரை இனி மேலும் இழப்பதைத் தடுக்க வேண்டும்.

செல்லிடப்பேசி மூலம் குற்றங்கள் புரிந்தது நிரூபிக்கப்பட்டால், கடும் தண்டனைகளை வழங்க வேண்டும். இதேபோல, செல்லிடப்பேசி நிறுவனங்கள் அனுப்பும் விளம்பரக் குறுஞ்செய்திகளையும் தணிக்கை செய்து அனுப்ப வேண்டும்.

அந்தச் செய்திகள் சிறுவர்களுக்கோ, சிறுமியருக்கோ செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் மீறிச் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

Friday, April 3, 2015

Revised Rates effective from 01.01.2015 – Fake Order/ Instructions – Clarification issued by Finance Ministry

Payment of Dearness Allowance to Central Government Employees – Revised Rates effective from 01.01.2015 – Fake Order/ Instructions – Clarification issued by Finance Ministry

No.1/2/2014-E.II(B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure

North Block, New Delhi,
Dated the 1st April 2015.

OFFICE MEMORANDUM

Subject:- Payment of Dearness Allowance to Central Government Employees – Revised Rates effective from 01.01.2015 – Fake Order/Instructions – Clarification regarding.

It has come to the notice of the Department of Expenditure, Ministry of Finance that Office Memorandum bearing F. No. 1/2/2015-E.II(B) dated 30th March, 2015 under the signature of Shri A. Bhattacharya, Under Secretary, Department of Expenditure, regarding Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 01.01.2015, is being circulated amongst Government Departments/Offices.

2. It is clarified that the O.M. dated 30.03.2015, purportedly issued by the Ministry of Finance, is a fake and that no such instructions have been issued by the Department of Expenditure, Ministry of Finance. Accordingly, all Ministries/Departments and Central Government offices are hereby advised not to take cognisance of these fake instructions being circulated in Government offices.


sd/-
(Subhash Chand)
Director
Source: www.finmin.gov.in


இண்டர்நெட்டில் தேடுபவர் அறிவாளியா?


இணையத்தில் தேடலில் ஈடுபடுவதால் தகவல் கள் கிடைக்கலாம் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் இணைய தேடல் கொஞ்சம் தலைக் கனத்தையும் உண்டாக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இணைய தேடல் தொடர்பான சமீபத்திய ஆய்வு இந்த தகவலைத்தான் சொல் கிறது.

இணையத்தில் தேடும் பழக்கம் கொண்டவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைத்துக்கொள் வதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் ஒன் றும் தவறில்லைதான். ஆனால் இணையவாசிகள் தங்கள் அறிவுத் தகுதியை விட கூடுதலான அறி வை கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்ள வைக்கிறது என்பதுதான் ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயம்.

அதாவது இணையவாசிகள் தங்களது இயல்பான அறிவை விட கூடுதலான அறிவு தங்களுக்கு இருப்பதாக கற்பிதம் செய்துகொள்வதாக இந்த ஆய்வை முன்னின்று நடத்திய யேல் பலகலைக்கழக ஆய்வாளர் மேத்யூ பிஷர் சொல்கிறார்.

இணையத்தில் ஒரு விஷயத்தை தேடும்போது உலகின் ஒட்டுமொத்த அறிவாற்றலும் விரல் நுனியில் கிடைக்கிறது. இது தகவல்கள் எல்லாம் இணையத்தில் இருக்கிறது என்று நினைக்க வைப்பதற்கு மாறாக தங்கள் தலைக்குள்தான் இருப்பதாக இணையவாசிகளை நினைக்க வைப்பதாக பிஷர் சொல்கிறார். நம் முடைய சொந்த அறிவை, வெளியே இருக்கும் அறிவுடன் குழப்பிக்கொண்டு ஒருவர் தன்னை தானே மிகுந்த அறிவாளியாக நினைத்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது என்கிறார் பிஷர்.



பிஷர் இதை சும்மா சொல்லவில்லை. இணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் மத்தியில் சோதனை நடத்தி அந்த ஆய்வின் அடிப்படையில் இதை உறுதியாக சொல்கிறார். இந்த ஆய்வின் முடிவு அமெரிக்க உளவியல் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வின்போது பயனாளிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டுள்ளனர். ஒரு பிரிவு இணைய தேடலில் ஈடுபடுபவர்களை கொண்டது. இணைய பிரிவு சாதாரணமானவர்களை கொண் டது. இந்த கேள்விக்கான இணைய இணைப்பையும் முதல் பிரிவிடம் கொடுத்துவிட்டு அதன் பிறகு தொடர் பே இல்லாத கேள்விகளை கேட்டுள்ளனர். அப்போதும் தேடலில் ஈடுபடும் பிரிவினர் தங்களுக்கு அதிக விஷயம் தெரியும் என்பது போல கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் இணைய தேடலில் ஈடுபடுபவர்கள் இணையத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களை தங்களது மூளையில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவலாக நினைத்துக்கொண்டு ஓவர் அறிவாளிகளாக நினைத் துக்கொண்டு விடுகின்றனர். இதுதான் ஆய்வின் மூலம் தெரிய வரும் செய்தி.



ஆனால் இப்படி ஒரு சோதனையை மட்டும் வைத்துக்கொண்டு இணையவாசிகள் பற்றி முடிவுக்கு வரமுடி யுமா? என்ன? அதுதான் பிஷர் குழு மேலும் 8 விதமான சோதனைகளை நடத்தியிருக்கிறது. மூளையின் செயல்பாடு பற்றிய புகைப்படத்தை தேர்வு செய்ய சொல்வது உள்ளிட்ட சோதனைகளை நடத்தியுள்ளனர். ஒரு சோதனையில் சரியான முடிவுகளே இல்லாத வகையில் தேடலை அமைத்து கேள்வி கேட்டபோதும் தேடல் பிரிவு தாங்கள் அறிவாளிகள் என கூறியுள்ளது.



மாறாக சுயசரிதை சார்ந்த கேள்விகள் கேட்டபோது இரு தரப்பினருமே ஒரே மாதிரி பதில் அளித்துள்ளனர். இவை எல்லாவற்றையும் வைத்து ஆய்வு செய்துதான், பிஷர் இணைய தேடல் ஒருவரை அவருக்கு இருப் பதைவிட மேலும் அறிவாளியாக நினைத்துக்கொள்ள வைப்பதாக பிஷர் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு தெரிந்தது மற்றும் உங்களுக்கு தெரிந்ததாக நினைப்பது, இரண்டுக்குமான இடைவெளி இணை யம் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என்கிறார் அவர். பிஷர் சொல்வது சரியா? உங்கள் அனுபவத்தின் படி கேட்டுப்பாருங்கள்!

- சைபர்சிம்மன்

அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில், மாணவர்களுக்குத் தேவையான பொருள்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கீழ்ஒட்டிவாக்கம், முசரவாக்கம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 390 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் ஊர் கூடி குழந்தைத் திருவிழா நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. இந்த விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் அவரவர் சக்திக்கு தகுந்தார் போல், பள்ளிக்கு உதவிகளை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது, சாக்பீஸ் பெட்டி, கரும்பலகை அளிப்பான், பேப்பர், விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட 25 வகையான பொருள்கள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதை ஏற்ற பெற்றோர், பொதுமக்கள் தங்களது வருமானத்துக்குத் தக்கவாறு பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுக்க முன்வந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஊர் கூடி குழந்தைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பெற்றோர், பொதுமக்கள் சார்பில் கல்வி சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டு முசரவாக்கம் திரெüபதி அம்மன் கோயிலில் இருந்து தாம்பலத் தட்டுகளில் பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.

மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியா சென்ற இந்த ஊர்வலம் பள்ளியில் முடிவடைந்தது. அங்கு, பெற்றோர்கள் வழங்கிய பொருள்களை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் கூறியதாவது:

மாணவர்களின் கல்விக்காக தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. இருந்த போதிலும் சில தேவைகளை நிறைவேற்ற பெற்றோர்களும் முன்வர வேண்டும். அப்போதுதான் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். மேலும், பள்ளி மீது கிராம பொதுமக்களுக்கு தனி ஈடுபாடு ஏற்படும்.

இதைத் தொடர்ந்து, ஊர்கூடி குழந்தைத் திருவிழா நடத்த திட்டமிட்டோம். பெற்றோர், பொதுமக்கள் அவரவர் வசதிக்கு ஏற்ற பொருள்களை வாங்கித் தருமாறு ஒரு பட்டியலை வழங்கினோம். கட்டாயம் வழங்க வேண்டும் என்பது கிடையாது. விழாவில் கலந்து கொண்டால் போதும் என்றோம். ஆனால், பெற்றோர் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சாதாரண ஏழை கூலித் தொழிலாளர்கள் முதல் அவரவர் வருமானத்துக்கு ஏற்ப பள்ளிக்கு பொருள்களை வாங்கிக் கொடுத்தனர். இவற்றை முறையாக பயன்படுத்தி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சிவக்குமார், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Medical council to cancel exprincipal’s registration

Medical council to cancel exprincipal’s registration  RG KAR MED COLLEGE RAPE AND MURDER Sumati.Yengkhom@timesgroup.com  Kolkata : The West ...