Sunday, April 5, 2015

சி.பி.ஐ. விசாரணையை தவிர்ப்பதற்கே கைது... சந்தேகப்படும் இளங்கோவன்!

சென்னை: சி.பி.ஐ. விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ? என்கிற சந்தேகம் வலுக்கிறது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருநெல்வேலி மாவட்ட விவசாய பொறியியல் துறையின் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமார சாமி தற்கொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு நடை பெற்ற உடனே இது தற்கொலை அல்ல, இதில் விவசாயத்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டு இருக்கிறார் என்று முதல் முதலாக குரல் எழுப்பினேன்.

தொடக்கத்தில் ஊடகங்களின் ஆதரவு இல்லாத நிலையில், தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்தேன். முத்துக் குமாரசாமி இறப்பதற்கு முன்பு, அவர் கடந்த 3 மாதங்களில் யார் யாரோடு பேசினார் என்கிற தொலைபேசி, அலைபேசி எண்கள் அடங்கிய பட்டியலை ஆதாரமாக வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பதவி, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பின்பு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரித்தன. நேற்றிரவு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ? என்கிற சந்தேகம் வலுக்கிறது.

அதனால் இந்த வழக்கில் தமிழக அமைச்சரே சம்பந்தப்பட்டிருப்பதால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தால் தான் முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும். ஏனெனில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இறுதியாக குற்றவாகளிகள் தப்பித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, நான் ஏற்கனவே கோரியிருந்த மத்திய புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைப்பதன் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...