Wednesday, April 15, 2015

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-வது வாரத்தில் தொடக்கம்: 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிப்பு



எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 383 இடங்கள் (15 சதவீதம்), அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (மத்திய அரசுக்கு) ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 2,172 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரில் 100 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு உள்ளன. இவை தவிர இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதியைப் பொறுத்து தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகள், தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளின் மூலமாக 1,000-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்க வாய்ப்புள்ளன. இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் மே முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 2-வது வாரத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை தொடங்க மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் கூறுகையில், “மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்தை மே 2-வது வாரத்தில் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்படும்” என்றார்.

புதிய கல்லூரிக்கு அனுமதி கிடைக்குமா?

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கேட்டு கடந்த ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்சிஐ) தமிழக அரசு விண்ணப்பித்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எம்சிஐ அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி மற்றும் கல்லூரிக்காக தற்காலிகமாக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரிசெய்யும்படி தெரிவித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து எம்சிஐ அதிகாரிகள் சொன்ன குறைபாடுகளை தமிழக அரசு சரிசெய்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கடந்த வாரம் கல்லூரி மற்றும் மருத்துவமனையை எம்சிஐ அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது எம்சிஐ அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.

மருத்துவக் கல்வி இயக்ககம் இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் கீதா லட்சுமி கூறுகையில், “ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். இந்த கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த கண்டிப்பாக ஒரு மாதத்தில் எம்சிஐ அனுமதி கொடுத்துவிடும். எம்சிஐ அனுமதி கிடைத்துவிட்டால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி களின் எண்ணிக்கை 20 ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 2,655 ஆகவும் அதிகரிக்கும்” என்றார்.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடி யாக பணப்பயன்கள் கிடைக்கும்.

தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் என 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணை யான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் மாதம் தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதே அளவு தொகையை அரசு தனது பங்காகச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவீதம் ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக் கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக அளிக்கப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில், பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎஃஎப்) ஊழியர்கள் தங்கள் தேவைக்கு முன்பணம் எடுக்கலாம். கடன் பெறலாம். ஆனால், இத்தகைய வசதிகள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (சிபிஎஃப்) கிடையாது.

புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 12 ஆண்டுகளில் ஏறத்தாழ 25 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், ஓய்வுபெற்றிருக்கிறார்கள்.

உயிரிழந்தவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியை ராஜினாமா செய்தவர்கள் ஆகியோரும் இந்தபட்டியலில் அடங் குவர். இதுவரையில் அவர் களுக்கு சிபிஃஎப் ஓய்வூதிய பயணப்பயன்கள் கிடைக்க வில்லை. மாதம்தோறும் சம்பளத்தி லிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை கூட கிடைக்கவில்லையே என்று அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக அரசு தகவல் தொகுப்பு விவர மைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்றவர்கள், உயிரிழந் தவர்கள் குறித்த பட்டியலை அரசு கேட்டிருக்கிறது.

எனவே, ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கும், உயிரிழந்த பணியா ளர்களின் குடும்பத்தி னருக்கும் சிபிஎஃப் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது” என்று தெரி வித்தனர்.

இதுகுறித்து நிதித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்கவுள்ளது.மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வாய்ப்பில்லை. இந்தியாவில், புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படாத இரண்டு மாநிலங்களில் (திரிபுரா, மேற்கு வங்காளம்) திரிபுரா கூட அகில இந்திய பணி ஊழியர் களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவந்துவிட்டது” என்றார்.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கும்பட்சத்தில், இந்த திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்கும். இதற்கிடையே, சிபிஎஃப் பணிகளை கருவூல கணக்குத்துறையிடம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாகவும் அரசு தகவல் தொகுப்பு மைய ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

துறை சீரமைப்பு என்கிற பெயரில் ஆட்குறைப்பு செய்யக்கூடாது, புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களை வேறு துறைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்று தகவல் தொகுப்பு விவர மைய ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எல்லாம் எண்ணத்தின் உருவாக்கமே!

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage

நேர்மறை எண்ணம் எது? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதே போல எதிர்மறை எண்ணம் வருகிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

மிக எளிய வழி ஒன்று உள்ளது. எண்ணத்தைக் கண்காணிப்பதைவிட உணர்ச்சியைக் கண்காணிப்பது சுலபம். நேர்மறை உணர்வுகள் நேர்மறை எண்ணங்களின் விளைவு. எதிர்மறை உணர்வுகள் எதிர்மறை எண்ணங்களின் விளைவு.

பதற்றமும் உற்சாகமும்

மேடைப் பேச்சுக்குத் தயார் செய்கிறார் ஓர் இளைஞர். அவர் மனம் படபடப்பாக இருக்கிறது. “என்னால் மேடையில் பேச முடியுமா? சொதப்பினா கேவலமாயிடும்” என்ற எண்ணம் பின்னணியில் படபடப்பை இயக்குகிறது.

அதே மேடைப் பேச்சுக்கு இன்னோர் இளைஞரும் தயார் செய்கிறார். அவர் மனம் உற்சாகமாக இருக்கிறது. “கடைசியில் அந்த ஜோக்கைச் சொல்லி ஒரு பெரிய அப்ளாஸ் வாங்கணும்” என்று எண்ணுகிறார். அந்த எண்ணம் அவருக்கு உற்சாகம் தருகிறது.

“ஏற்கெனவே ஒரு தோல்வியை அடைந்திருந்தால் எதிர்மறை எண்ணம் தானே வரும்? நிறைய ஜெயித்தால் நேர்மறை எண்ணம் தானாக வரும்” என்று நீங்கள் வாதிடலாம். அப்படியானால் எண்ணங்களும் உணர்வுகளும் நம் செயல்களின் விளைவுகளா?

இது பாதி நிஜம்.

எண்ணம் - உணர்வு - செயல்

எண்ணம் - உணர்வு - செயல் மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கக் கூடியவை. “என்னால் முடியாது” என்ற எண்ணம் பதற்றம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. பதற்றம் என்ற உணர்வு வாய் குழறுதல் என்ற செயலை நிகழ்த்துகிறது.

அதே போல வாய் குழறும் போது பதற்றம் வரும். பதற்றம் வந்தால் ‘நம்மால் முடியாது’ என்ற எண்ணம் வருகிறது.இதே போல நேர்மறையாகவும் நடக்கலாம். “என்னால் முடியும்” என்ற எண்ணம் நிதானம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. நிதானம் கணீரென்ற குரலில் பேச வைக்கும்.

அதே போலக் கணீரென்று பேசும் போது நிதானம் வரும். நிதானம் நம்மால் முடியும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இந்த எண்ணம் - உணர்வு - செயல் என ஒரு வளையம் போலச் சுற்றிச் சுற்றி வருவதுதான் நம் வாழ்க்கையில் அனைத்தையும் நிகழ்த்துகிறது.

உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் இந்த மூன்று விஷயங்களையும் அலசுங்கள். எது அதிகம் பாதித்தது என்று யோசியுங்கள். பெரும்பாலும் எண்ணம்தான் பிரதான காரணமாக இருக்கும்.

எண்ணத்தின் உருவாக்கமே

உலகில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் முதலில் யாரோ ஒருவர் தன் உள்ளத்தில் உருவாக்கியதே. நாடுகள், எல்லைகள், கட்சிகள், கட்டிடங்கள், கொள்கைகள், பதவிகள், சாதிகள், குற்றங்கள் என அனைத்தும் யார் எண்ணத்திலோ தோன்றியவை தான்.

நம் செயல்கள் அனைத்துக்கும் நம் எண்ணங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொள்வதில் நம்மில் பலருக்குச் சிக்கல் இருக்கிறது. நம் முடிவுகளும் செயல்களும் தானே வாழ்க்கை? அப்படியானால் நம் வாழ்க்கையைப் பெரிதும் நிர்ணயிப்பது நம் எண்ணங்கள் தானே?

“என் வாழ்க்கை இப்படி இருக்க என் எண்ணங்கள் தான் காரணமா?” என்று நம்ப முடியாமல் கேட்பவர்களுக்கு என் பதில்: ஆம்.

எந்த மனநிலை?

எண்ணம் போலத் தான் எல்லாம் நடக்கும் என்று பெரியவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி என்றால் தோல்வி அடைபவர்கள் தோல்வி வேண்டும் என்றா எண்ணுகிறார்கள்? அவர்கள் தோல்வி வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆனால் தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் தோல்வியின் விளைவுகள் பற்றி அதிகம் யோசித்திருப்பார்கள். வெற்றி பற்றி யோசிப்பதை விடத் தோல்வி அடையக்கூடாது என்று அதிகம் யோசித்திருப்பார்கள். நம் மனம் எந்த மன நிலையில் இருக்கிறதோ அதற்கேற்ற நிகழ்வுகள்தான் நம்மைத் தொடரும்.

அப்பாவும் மகனும்

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். அப்பாவுக்குத் தன் மகனின் திறமை மேல் நம்பிக்கை இல்லை. பொறுப்பில்லாதவன் என்ற எண்ணம். நண்பரிடம் குறைபடுகிறார். “ஒரு வேலையைக் கூடச் சரியா செய்ய மாட்டான்!” கடைக்குப் போகும் வேலை வருகிறது. “நீங்க வேணா பாருங்க, எப்படி சொதப்புவான்னு” என்று மகனின் முன்பாகவே சொல்லி நூறு ரூபாய் கொடுத்துச் சில பொருட்கள் வாங்கி வரச்சொல்கிறார்.

அப்பாவின் எண்ணமும் மனப்பான்மையும் மகனின் தன்னம் பிக்கையைக் குறைக்கிறது. பயம் வருகிறது. சொதப்பக்கூடாது என்ற எண்ணம் வலுவடைகிறது. எரிச்சலும் வருகிறது. பயந்தது போலவே மீதம் தரப்பட்ட சில்லறையில் ஒரு ரூபாயைக் குறைத்து வாங்கி வருகிறான். எண்ணிப்பார்த்த அப்பா தன் நண்பரிடம், “ நான் சொன்னேன்ல சொதப்புவான்னு. சரியாத்தானே சொன்னேன். பாருங்க ஒரு சில்லறையைக்கூட சரியா எண்ணி வாங்க முடியலை! இவன் எல்லாம் என்ன பண்ணப் போறானோ?”

இப்பொழுது அப்பாவுக்கு இருக்கிற தன் மகன் பற்றிய எண்ணம் சான்றோடு ஊர்ஜிதப்படுகிறது. மகனும் அதை மெல்ல நம்ப ஆரம்பிக்கிறான். “சரி தான். நான் மற்றவர்கள் போலச் சாமர்த்தியம் குறைவு தான்!”

பெரும் பிரச்சினை

முன்கூட்டியே தீர்மானிக்கும் எண்ணங்கள் நாம் நம்பும் விளைவுகளைத் தந்து அந்த எண்ணங்களை வலுப்படுத்தும். காலப்போக்கில் அந்த எண்ணங்கள் அனுபவத்தால் வந்தால் அபிப்பிராயங் களாய் மனம் பதிவு செய்து கொள்ளும். இது தான் மனம் செய்யும் தந்திரம்.

நம் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் இது தான் நடக்கிறது. ஆங்கிலத்தில் Self Fulfilling Prophecy என்று ஒன்று உண்டு. அதை விரிவாக விவாதிப்பதற்குள் உங்கள் வாழ்க்கையின் பெரும் பிரச்சினை எது என்று யோசியுங்கள் . அது பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். அவற்றில் ஏதாவது pattern (முறை) தெரிகிறதா என்று பாருங்கள்.

உங்கள் வாழ்வைத் திருப்பிப் போடும் விசையில் நீங்கள் கை வைத்து விட்டீர்கள்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

எல்லோருக்கும் நண்பராக முடியுமா?

Return to frontpage

ஷங்கர்பாபு


நல்ல டைப் என்று சொல்லத்தக்க ஒருவரிடம் கொஞ்ச காலம் வேலை செய்தேன். அதிர்ந்து பேச மாட்டார். கடிந்து பேச மாட்டார். மதிப்புக் குறைவாகப் பேச மாட்டார். பேச மாட்டார் என்றே சொல்லக்கூடாது. அது அவருக்கு தெரியவே தெரியாது. 24 மணி நேர ஏஸி மனிதர்.

அடுத்தவரைப் புண்படுத்துவதைத் தவமாகப் பயின்றவர்கள்தான் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களால் நிறையப் பேருக்கு வார்த்தைக் காயங்கள் கிடைக்கின்றன. அதனால்தான் வார்த்தை ஒத்தடங்கள் தருகிற மேலே சொன்ன நபரைப் போன்றவர்களை மக்கள் விரும்புகிறார்கள்.

வசையே மேல்

அவர் எல்லோருக்கும் நண்பர்.அவரது உலகில் எங்கெங்கு காணினும் நண்பர்களடா. ஆனால் இத்தகையவர்கள் உண்மையிலேயே நல்ல டைப்தானா? அவர்களது இன்சொற்கள் நமக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும்? இப்படித் தேன் தடவிய வார்த்தைகளை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள முடியுமா? தலைவா, பாஸ், ஜீ, தோழரே, மேடம், சார், அண்ணாச்சி போன்ற வார்த்தைகளில் தவறு இல்லை. ஆனால் அவை எல்லோரிடமும் சொல்லப்படுமானால் அவை பெரும்பாலும் பாசாங்கு வார்த்தைகளாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அவை ஆயத்த ஆடைகள்போல. உங்களுக்கானவை அல்ல.

சம்பிரதாயமான, உண்மையான அக்கறையில்லாமல் சொல்லப்படுகிற இனிமையான சொற்களைவிட உங்களுக்காகவே தயாரிக்கப்பட்ட வசைச் சொற்களான ‘கோமாளி, முட்டாளே’வில் நேர்மை இருக்கிறது அல்லவா?

எப்போதும் இன்சொற்களைப் பேசுவது நல்ல குணம்தானா? அடுத்தவரை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே பேசப்படும் வார்த்தைகள் ஆபத்தானவை அல்லவா? அவற்றைப் பேசுபவரும் ஆபத்தானவர் என்று சொல்லலாம் அல்லவா?.

எந்த முகம்?

ஆனால் துரதிருஷ்டம், அத்தகையோரின் வார்த்தை மஸாஜ்களைத்தான் பலரும் விரும்புகிறார்கள். அவர்கள் எல்லோரும் வில்லன்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்களில் பலரது சுபாவம் அவர்களது சொற்களைப் போலவே இருந்துவிடுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காரணம், எல்லா நேரங்களிலும் இன்முகம் காட்டி இன்சொல் பேசுவது இயற்கைக்கு முரணானது.

எதற்கு வம்பு? அவரை ஏன் கஷ்டப்படுத்தணும்? நம்முடைய நல்ல பெயர் போய்விடுமோ என்கிற தற்காப்பு பலரது இன்சொல்லின் அடிப்படையாக இருக்கக்கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஒருவர் எல்லோரையும் எப்படித் திருப்தி செய்ய முடியும்? கத்தியின் நண்பர்கள் கோழியின் கழுத்துக்கும் எப்படி நண்பராக முடியும்? எல்லோருக்கும் நண்பராய் இருப்பவருக்குச் சொந்த முகம் என்ற ஒன்று இருக்குமா? அதை யாராவது பார்த்திருக்கிறார்களா?

விலாங்கு மீன்கள்

அப்படியானால் ‘உலகையே உறவின’ராகத் தழுவும் கணியன் பூங்குன்றனார் மனதுக்காரர்கள் யாரும் இல்லையா? ‘எல்லோரும் இன்புற்றிருக்க’ எனப் பராபரத்தை இறைஞ்சும் ஆன்மிகர்கள்’ இல்லையா? சக மனிதன் சுரண்டப்படுவதை சகிக்காத ‘நீயும் என் தோழனே’ என்கிற பேரன்புக்காரர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர்?

தனக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இன்சொல் பொழிந்தவாறு நிறைய விலாங்கு மீன்கள்தான் நழுவிக்கொண்டிருக்கின்றன.

மனச்சாட்சியின் குரல்?

எனது நண்பர், அ.தி.மு.க.வினரிடம் “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. அடுத்தும் நீங்கதான்” என்பார். தி.மு.க.காரரிடம், “ஆட்சியா நடத்துறாங்க இவங்க” என்பார். பிரதமர் மோடியின் வேட்டி அணிந்து பாஜக பிரச்சாரம் செய்வார். பா.ம.க., த.மா.க., கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., தே.மு.தி.க. என எல்லோரையும் ஒரு ரவுண்டு திருப்தி செய்வார். கடைசியாக ஆம்ஆத்மிக்கும் “ஒரு வாய்ப்பு இருக்கு” என்பார்.

நாளை யார் வந்தாலும் “நான் அப்பவே சொன்னேனே?” என்பார். இவரிடம் வெளிப்பட்ட பல குரல்களில் எது மனச்சாட்சியின் குரல்?

எனக்கு மட்டும் ஏன்?

இத்தகைய இன்சொல் வேந்தர்கள் தங்கள் நல்லவன் இமேஜைத் தக்க வைக்க எதையும் செய்வார்கள். அதற்கு ஆபத்து வரும்போது அவர்களை நம்பி இருப்பவர்களில் உள்ளதிலேயே பலவீனமானவரைப் பலிபீடம் ஏற்றுவார்கள்.எம்.ஜி.ஆர். படத்தில் வருவதுபோலத்தான் வில்லன்கள் இருப்பார்கள் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என உணர்வதற்குள் தலை இழந்தவர்கள்தான் அதிகம்.

அப்போதுதான் எ.ம.ஏ.இ. ( எனக்கு மட்டும் ஏன் இப்படி ) நடக்குது ? என்று நாம் புலம்புவோம். நண்பர்களை நம்புங்கள். எல்லோருக்கும் நண்பர்களை நம்புவதைப் பற்றி நன்றாக யோசியுங்கள்.

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டம்



ஏழை மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கும் தமிழக அரசின் சிறந்த திட்டத்துக்கு பல கல்லூரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக ஏழை மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அரிய வாய்ப்பு மறுக்கப்படுவதாக பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வரும் 2015-16 கல்வியாண்டுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி முடிவடைந்துவிட்ட போதும், 40-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகள் இன்னும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மிகுந்த வசதி படைத்த மாணவர்கள் மேற்படிப்புகளை, வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதைப்போல, வசதி இல்லாத ஏழை மாணவ, மாணவிகள் வெளிநாடு சென்று படித்து வரும் வகையில் சிறந்த திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

அதாவது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் ஒரு பருவம் (6 மாதம்) பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழகங்களில் முழுவதும் அரசு செலவில் படிக்க வைக்கும் திட்டம்தான் இது. ஆண்டுக்கு 25 மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். இவர்களுடன் 5 பேராசிரியர்கள், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்படுகின்றனர்.

தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பொதுவாக மார்ச் மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்படும்.

கல்லூரிகள், படிப்பில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, விண்ணப்பங்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு முதுகலை பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் அவர்கள் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இவர்கள் முதல் கட்டமாக கல்லூரி அளவில் நடத்தப்படும் தேர்வில் தகுதி பெற வேண்டும். பின்னர் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித் திறன் தேர்வு (ஐஇஎல்டிஎஸ்), பேச்சுத் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள்தான் பிரட்டனுக்கு அனுப்பப்படுவர்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்கள் பிரிட்டனின் கலை, கலாசாரம், கல்வித் திட்டங்களை அறிந்து கொள்வதோடு, உலக அறிவையும் பெற முடிகிறது.

ஆனால், இந்தச் சிறந்த திட்டத்தின் மீது பல அரசு கல்லூரிகள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் இப்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர் கல்விமன்ற நிர்வாகிகள் கூறியது:

கடந்த 2013-14, 2014-15 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 ஏழை மாணவர்களும், 10 பேராசிரியர்களும் வெளிநாடு சென்று படித்து வந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 15 லட்சத்தை தமிழக அரசு செலவிடுகிறது.

இப்போது 2015-16 கல்வியாண்டுக்கு இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சியை தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான சுற்றறிக்கை 62 அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கடந்த மாதம் அனுப்பப்பட்டுவிட்டது.

கல்லூரிகள் மாணவர்களைத் தேர்வு செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 11 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடைசித் தேதி முடிந்துவிட்ட நிலையில் 20 கல்லூரிகளிலிருந்து 100 விண்ணப்பங்கள் வரை மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. மீதமுள்ள 42 கல்லூரிகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை.

அதோடு, இந்தத் திட்டம் குறித்து மாணவர்களிடம் போதிய விளம்பரமோ, கல்லூரி அறிவிப்புப் பலகையில் அறிவிப்போ இதுவரை செய்யவில்லை என சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகள் அடுத்த ஓரிரு நாள்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத கல்லூரிகள் குறித்து அரசிடம் புகார் அளிக்கப்படும் என்றனர்.

திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாண்டில் அரசுக் கல்லூரிகளிலிருந்து 250 விண்ணப்பங்களும், இரண்டாம் ஆண்டில் 400 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேவை சமநிலை இணைய சேவை!

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) இந்தியாவின் தனியார் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு 20 கேள்விகள் கொண்ட ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. இந்தக் கேள்விகளின் உள்ளடக்கம் இதுதான்: சமநிலை இணைய சேவை (நெட் நியூட்ராலிட்டி) குறித்த உங்கள் கருத்துகள், இதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இதற்கு தாங்கள் கருதும் தீர்வுகள் யாவை?

அலைக்கற்றை ஏலத்தை மார்ச் மாதம் நடத்தி முடித்து, இந்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் பெற்ற அடுத்த கணமே இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டதற்கு காரணம் உள்ளது. 2014ஆம் ஆண்டில் வெறும் ரூ.62,162 கோடி ஏலம் போன அலைக்கற்றை, தற்போது இரட்டிப்பு வருவாயைத் தந்திருப்பதால், ஏலம் எடுத்தவர்களுக்கு அரசும் பதிலுக்கு ஏதாவது நன்மை செய்தாக வேண்டும். ஆகவே, இத்தகைய கேள்விகளை டிராய் தானாகவே கேட்க முனைந்தது.

சமநிலை இணைய சேவை வேண்டும் என்பது உலகம் முழுவதிலும் இணையப் பயன்பாட்டில் இருப்போர் வலியுறுத்தும் கருத்து. இணையத்தைப் பயன்படுத்தும் நபர் எதை வேண்டுமானாலும் பார்க்க, எந்த இணைய சேவை நிறுவனத்தின் தகவல் களஞ்சியத்துக்குள்ளும் நுழைந்து பார்க்க, எந்தவோர் இணைய வணிக நிறுவனத்துடனும் இ-வர்த்தகம் செய்யத் தடையில்லாத நிலைமைதான் சமநிலை இணைய சேவை என்பது.

யூ டியூப்பில் படம் பார்க்கலாம், பதிவேற்றம் செய்யலாம், ஃபேஸ்புக், லிங்க்டுஇன் கணக்கு தொடங்கலாம், கூகுள், யாகூ எதில் வேண்டுமானாலும் எதையும் தேடலாம். ஃபிலிப்கார்ட், அமேசான் என எந்தவோர் இணைய வணிகர்களிடமும் பொருள் வாங்கலாம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யலாம். மின் கட்டணம் செலுத்தலாம், நெட் பேங்கிங் செய்யலாம், இவை அனைத்துக்கும் தேவை நீங்கள் இணையத்துக்கான இணைப்பு (நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக) பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

ஆனால், சேவைகளைக் கட்டுப்படுத்துதல், சேவைகளுக்குக் கட்டணம் விதித்தல், சேவைகளைத் தரவரிசைப்படுத்துதல், சில சேவைகளுக்கு அதிவேகம் நிர்ணயித்தல் ஆகிய உரிமைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோருகின்றன. இதில் எதை அனுமதித்தாலும் அது இணையப் பயன்பாட்டாளருக்கு எதிராகத்தான் முடியும். ஆகவேதான் சமநிலை இணைய சேவைக்கு மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. டிராய் அமைப்புக்கு இதுவரை சுமார் 3 லட்சம் பேர் மின்அஞ்சல் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இதே கோரிக்கை தொடர்பாக அமெரிக்காவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் (ஓபன் இன்டர்நெட் ஆர்டர்) இணையப் பயன்பாட்டாளருக்கு 1. எதையும் தடை செய்யக் கூடாது, 2. தரத்தைக் குலைக்கக் கூடாது, 3. கட்டணம் செலுத்துவோருக்கு முன்னுரிமை என்பதும் கூடாது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது.

தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களின் கழுகுப் பார்வையில் படுவது கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (ஃபேஸ்புக்) போன்ற சிறப்பு சேவையாளர்கள் (ஓவர் த டாப்) மீதுதான். வழக்கமான தொலைபேசி சேவை, குறுந்தகவல், எம்எம்எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், கட்செவி அஞ்சல், முகநூல், லைன், வைபர், வீசாட் போன்றவற்றின் மூலம் தகவல், விடியோ, புகைப்படம் பரிமாறிக்கொள்வதால் உலகம் முழுவதிலும் உள்ள தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 50 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம்.

இந்தியாவைப் பொருத்தவரை, தகவல் பரிமாற்றம் செய்வோரில் 52 சதவீத நபர்கள் சிறப்பு சேவை வழங்குவோர் மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். இந்தியாவில் கட்செவி அஞ்சல் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு அதிக அளவு தகவல் பரிமாற்றம் (42%) முகநூல் மூலமே நடைபெறுகிறது. 83% பேர் ஸ்மார்ட்போன் மூலம் இணைய சேவை பெறுகின்றனர். இதனால், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது. உண்மையில் பார்த்தால், இது இழப்பு அல்ல. மொத்த வருவாயில் 5% குறைவு, அவ்வளவே.

இந்தியாவில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை நமக்குத் தெரியாமலேயே பிடுங்கி விடுகின்றன. இழப்பு என்பதை மாற்று வகையில் ஈடு செய்துவிடுகின்றன. ஆனால் வெளியே சொல்வதில்லை. நுட்பமாகப் பார்த்தால், இணைய இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல நிலைகளில், நாள் எண்ணிக்கையில் வைத்து, கட்டணத்தை அதிகரிக்கவே செய்கின்றன. ஆரம்பத்தில் செல்லிடப்பேசி இணைய சேவைக்கான கட்டணம் 30 நாள்களுக்கு 1 ஜிபி பதிவிறக்கத்திற்கு ரூ.68 ஆக இருந்தது, இப்போது 3ஜி சேவைக்கு 28 நாள்களுக்கு ரூ.198 வசூலிக்கப்படுகிறது.

இது தவிர, லைப்ஸ்டைல் சேவை என்ற பெயரில், நாம் கோராமலேயே அளித்து, அதற்கும் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள். இந்த அநியாய கட்டணப் பிடிப்பை நாம் கவனித்துத் தட்டிக் கேட்டால் திரும்ப அளிக்கிறார்கள். கண்டுகொள்ளப்படாமல் எடுக்கப்படும் கட்டணம் இதுபோல எத்தனை ஆயிரம் கோடியோ, யாரறிவார்?

வழித்தட நெரிசல் காரணமாகத் தரமான சேவை வழங்க இயலவில்லை என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சொல்லுமேயானால், அவர்கள் இதுகாறும் சம்பாதித்த லாபத்தை முதலீடு செய்து, தங்கள் கருவிகளை மேம்படுத்துவதே நியாயமாக இருக்கும். ஆகவே, இன்றைய தேதியில், இந்தியாவைப் பொருத்தவரை, சமநிலை இணைய சேவை தொடர வேண்டும். தொடரத்தான் வேண்டும்!

ஏ.ஐ.சி.டி.இ., விதிகள் மீறலா? 593 கல்லூரிகளில் ஆய்வு!

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை நிறுத்தி வைக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில், 596 தனியார் சுயநிதி மற்றும் சிறுபான்மைப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு, ஆண்டுதோறும், ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின் படி, அண்ணா பல்கலையின் இணைப்பு புதுப்பிக்கப்படும்.

நிரந்தர இணைப்பு:

சில கல்லூரிகளுக்கு நிரந்தர இணைப்பு, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இணைப்பை புதுப்பிக்க, ஆண்தோறும் டிசம்பர் இறுதியில் கல்லூரிகள் விண்ணப்பம் அளிக்கும். நிரந்தர இணைப்பு இல்லாத கல்லூரிகள் தவிர, மற்ற கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலை அதிகாரிகள் சென்று, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை நேரடியாக சோதனை செய்வர். இந்த ஆண்டுக்கான ஆய்வை, அண்ணா பல்கலை அதிகாரிகள் சமீபத்தில் முடித்துள்ளனர். ஒவ்வொரு கல்லூரிக்கும், தனித்தனியாக ஆய்வறிக்கை தயாராகும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், விதிகளை பின்பற்றாத கல்லூரிகளின் பட்டியல், ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பப்படும். பின், ஏ.ஐ.சி.டி.இ., பரிந்துரையின்படி, விதிகளை பின்பற்றாத கல்லூரிகளுக்கு இணைப்பு மற்றும் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீக்கம்:

இணைப்பு புதுப்பிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில், மே 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். இணைப்பு ரத்தாகும் கல்லூரிகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த முடியாதபடி, அந்த கல்லூரிகள், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த ஆண்டு, மூன்று பொறியியல் கல்லூரிகளை மூட, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. இக்கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை மிக மோசமாக உள்ளதால் அவற்றை மூட, ஏ.ஐ.சி.டி.இ.,யும், அண்ணா பல்கலையும் ஒப்புதல் அளித்துள்ளன. இக்கல்லூரிகளில், புதிய மாணவர் சேர்க்கை நடத்தாமல், தற்போது படிக்கும் மாணவர்களின் படிப்பு முடியும் வரை, அதற்கான வகுப்புகளை நடத்த, அண்ணா பல்கலை உத்தரவிட்டு உள்ளது. இதேபோல், 31 கல்லூரிகளில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, தனியார் பொறியியல் கல்லூரிகள் முன்வந்துள்ளன. இவற்றுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அனுமதி அளித்து உள்ளன.

- நமது நிருபர் -

Tuesday, April 14, 2015

மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேர்வில் புதிய முறை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு

நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தேர்தெடுக்க புதிய விதிமுறைகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மனிதவள மேம் பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் சூரஜ் சிங் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், “புதிய முறைப்படி மத்திய பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்த ராக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் நபர், துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில் ஒருவராக இருத்தல் கூடாது. அப்படி இருந் தால் இனி அவர் தேர்வுக்குரிய தகுதியை இழந்து விடுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக மத்திய பல்கலைக்கழகங்கள் சிலவற்றில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் கொண்ட தேர்வுக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரின் பெயர், அடுத்த துணைவேந்தராக பரிந்துரைக்கப் பட்டு வந்துள்ளது.

தேர்வுக்குழுவில் ஒருவராக இருக்கும் துணைவேந்தர் தான் அந்தப் பதவியை மீண்டும் பெறும் வகையில் பரிந்துரையில் தனது பெயரை சேர்த்து விடுவதும் வழக்க மாக இருந்து வந்துள்ளது. இது போன்ற முறை சில மத்திய பல் கலைக்கழகங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்படுவது ஊழலுக்கு வழி வகுக்கும் என மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கருது கிறது. மத்திய பல்கலைக்கழகங் களின் துணைவேந்தருக்கு இருக் கும் மிக அதிகமான செல்வாக்கு இதற்கு காரணம் என்றும் கூறப் படுகிறது. இதையடுத்து இத்துறை யின் அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறப்படு கிறது. திருவாரூரில் மத்தியப் பல்க லைக்கழகம், சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் என தமிழ கத்தில் 2 பல்கலைக்கழகங்கள் உட்பட நாடு முழுவதிலும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் செலவுக்கு அதிக நிதி அளிக்கப்படுகிறது.

கடும் எதிர்ப்பையும் மீறி நடந்தது தாலி அகற்றும் நிகழ்ச்சி!

சென்னை: கடும் எதிர்ப்பையும் மீறி திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
 
திராவிடர் கழகம் சார்பில் நடக்கும் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த மனுவை விசாரித்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கியதோடு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறும் திராவிட கழகத்தினரை நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
 
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்நீ திமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்க விருந்த நிலையில் காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியை காலை 7 மணிக்கே திராவிடக்கழகம் தொடங்கி நடத்தி முடித்தது.
 
திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் தாலியை அகற்றினர். தாலி அகற்றிய பெண்கள் தங்கள் கணவன்கள், பிள்ளைகளோடு வந்திருந்தனர்.

'தயவு செய்து என்னை மறந்திடு!'

'cinema.vikatan.com


தயவு செய்து என்னை மறந்திடு..!'- இப்படி நாம் ஓட்டுப் போட்டு மந்திரியான அரசியல்வாதி, நம்மை பார்த்து சொல்லலாம், கடன் வாங்கியவர் சொல்லலாம், காதலர்களுக்கிடையே சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நம் மனமே நம்மை நோக்கி, 'சில பிரச்னைகளை மறந்திடு!' என்று சொன்னால் தயவு செய்து கட்டாயம் மறக்கத்தான் வேண்டும்.

அன்றாடம் செய்திகளில் தற்கொலை இல்லாமல் செய்திகள் வருவதில்லை. அதிலும் குற்றவாளிகள் நிம்மதியாக தூங்க, நேர்மையானவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதிக உடல், மன பலம் கொண்ட ராணுவ வீரர் கூட தற்கொலை செய்கின்றனர். அறிவில் சிறந்த மாணவர்கள் படிக்கும் ஐஐடி யில் படிப்பவர்கள் கூட, மனம் தளர்ந்து தற்கொலை செய்து கொள்வது கொடுமையின் உச்சம். பள்ளிக் கல்வியில் ஏற்படும் தோல்வியால் மனம் உடைந்து போவோரும் அதிகம்.

கடவுள் மனிதனுக்கு மூன்று வரம் கொடுத்துள்ளார் 1. தூக்கம் 2.மறதி 3. சிரிப்பு. இவை மூன்றும் குறையும் போது மனிதன் இயல்பு வாழ்க்கையை இழக்கின்றான் என்றால் மிகையாகாது.

உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் மண்ணோடு போராடும் உழைக்கும் வர்க்கமான உழவர்கள் மனம் ஒடிந்து தற்கொலை செய்து கொள்வது அதிகம் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தியாவிலேயே அதிகமான அளவு கேரளாவில் தற்கொலை நடக்கிறது. சமீபத்தில் காரைக்குடியில் ஒருவர் தனது குழந்தை, மனைவியோடு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது மன விரக்தியின் உச்சம்.

மன அழுத்தம் பல வழிகளில் நம்மைத் தாக்கும்.

.தன்னம்பிக்கை இல்லாமை, விரக்தி மனப்பான்மை வேலைப்பளு, குடும்ப பிரச்சனை, பேராசையால் ஏற்பட்ட நஷ்டம் , ,அடுத்தவர் நிலை போல மாற ஆசைப்படுதல் போன்றவையே முக்கிய காரணிகள்.
அதிலும் குறிப்பாக நம்மை சூழ்ந்துள்ள நண்பர்கள், உறவினர்கள் போல நாமும் பணக்காரனாக மாற வேண்டும் என கடன் வாங்கி காணாமல் போனவர்கள் அதிகம். நாம் நாமாக இருப்பதே நம் வாழ்விற்கு நல்லது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட …

1. உணர்ச்சியை உறங்க வை :

உணர்ச்சிக்கு அடிமையாகி கட்சித் தலைவர் சிறையில் இருந்தாலும் மனம் ஒடிந்து சாவை விரும்புபவர்கள் முட்டாள்கள் தான். சிறையில் இருக்கும் தலைவருக்கு பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பல கோடி சொத்துக்கள் இருக்கும். அப்பாவி இவர் செத்தால் குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்கும். உணர்ச்சியை உறங்க விடுவதே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட முதல் படி.

2. தன்னம்பிக்கை வளர்த்தல் :

எப்போதும் எந்த விஷயத்தையும் நேர்மறையாக பேசவும்,செய்ய முடியும் என தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். எதிர்மறை விவாதங்களை நம் மனதில் புகுத்த கூடாது.

3. வேலைப்பளு குறைப்பு :

வேலை நேரத்தில் வேலையை செய்து விட்டு மற்ற நேரங்களில் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேச வேண்டும். முடிந்தால் கோவில், சுற்றுலா செல்லலாம். நம் மனதிற்கு மகிழ்ச்சி ,ஓய்வு வேண்டும் என்றால் விடுமுறை கூட .எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

4.. பணம் :

நம் பணம் நமக்கு உபகாரமாக இருக்க வேண்டுமே தவிர நம் பணமே நமக்கு எதிரியாக மாறக்கூடாது. உதாரணமாக மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் வங்கியில் ரூ. 6000 ரூபாய் வீதம் மாதம் கடன் செலுத்தும் தகுதி பெறுகிறார். அவர் மேற்கொண்டு நகை,சொத்துக்களை அடமானம் வைத்து சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பது தவறல்ல....ஆனால் நிரந்தரமில்லாத முதலீடு செய்வது, அதிக வட்டியுடன் அல்லல்படும் போது அவர் பணம் அவருக்கே எதிரியாக மாறும்.நாம் மற்றவர் போல சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பதை விட நிம்மதியாக இருப்பதே மேல்.

5. தூக்கம், நகைச்சுவை உணர்வு:

சுமார் 6 மணி நேரத் தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல நம் மனதிற்கும் புத்துணர்வைத் தரும். கட்டாயம் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நகைசுவை உணர்வோடு பேசுவது நம் மனதிற்கு சக்தியூட்டும், பிரச்னைகளை மறக்கடிக்கும்.

6. ஆன்மிகம் :

நமது மனதை ஒழுங்குபடுத்தும் பக்திப்பாடல்கள் கேட்பது, இறைவன் நாமத்தை சொல்லுவது,தியானம் செய்வது நம் மனதை வலுவாக்கும்.

7. உடற்பயிற்சி, உணவுப்பழக்கம்:

தினமும் எளிய நடைப்பயிற்சி, யோகா செய்வது மனதை இதமாக்கும் மருந்து. நம் உணவே நம் மனதை நிர்ணயிக்கிறது வாழைப் பழத்தில் உள்ள "செரோடொனின்" என்னும் வேதிப் பொருள் நம் மனதை சந்தோஷமாக வைக்க உதவுகிறது. குடி, போதைக்கு அடிமையானவன் மூளையை மலடாக்கி , மன நோயாளியாக மாற்றுகிறது. அது போல நாம் வலிமை தரும் சைவ உணவுகளை உண்ணும் போது மனம் வலிமையாக இருக்கும்.

8. மறதி :

கட்டாயம் கெட்ட நினைவுகளை மறக்க வேண்டும். தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமே தவிர தோல்வியை மறக்க வேண்டும். சூழ்நிலையால் ஏற்பட்ட குடும்ப பிரச்னைகளை உடனுக்குடன் மறந்து இயல்பாக நடக்க வேண்டும்.




9. பழகும் விதம் :

அனைவரிடத்திலும் நிறை, குறைகள் இருக்கும். அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும். எல்லோரிடமும் நண்பர்களாக இருக்க முடியாவிட்டாலும் எதிரிகள் இல்லாமல் இருக்க வேண்டாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, நமது குழந்தைகள் நமது வயதான பெற்றோரை மதிக்க கற்றுக் கொடுப்பதும், நமக்காக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற தன் நம்பிக்கையை வளர்ப்பதும், புகை, குடி போதை இல்லாமல் இருப்பதும் மன அழுத்தத்தில் இருந்து வருங்கால சமுதாயத்தை பாதுகாக்கும்.

வெற்றியும், தோல்வியும் கடிகாரத்தின் பெரிய முள், சிறிய முள் போன்றவை, ஒன்றை ஒன்று விரட்டித் தான் வரும் என்பதை புரிந்து நடக்கச் சொல்ல வேண்டும். வெற்றிக்குத் தேவை உழைப்பு மட்டுமே என்பதை புரிய வைத்தால் தயவு செய்து பிரச்னைகளை மனமே மறந்திடு !!

- எஸ். அசோக்

தமிழகத்தில் தொடரும் அரசு ஊழியர்கள் தற்கொலை: அதிகாரி மிரட்டலால் நடந்த விபரீதம்!

ராமநாதபுரம்: அதிகாரியின் மிரட்டலுக்கு பயந்து சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளர் ஒருவர் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் சண்முகவேலு (57). ராமநாதபுரம் அரசு ஊழியர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் நேற்று திடீரென அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சக ஊழியர்கள் இது குறித்து காவல்துறையினர் புகார் செய்தனர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சண்முகவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சத்துணவு பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் மதிவாணன் என்பர்தான் சண்முகவேலு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என சண்முகவேலுவின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.

விடுமுறை தினமான கடந்த ஞாயிற்று கிழமை சண்முகவேலுவுக்கு போன் செய்த மதிவாணன், உடனடியாக நீ ஆபிஸுக்கு வரனும். அப்படி வரலைன்னா கலெக்டரிடம் கம்ப்ளைண்ட் செஞ்சு உன்னோட வேலையை காலி செஞ்சிருவேன்’’ என கூறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது பேரக்குழந்தைகளை வெளியூருக்கு அழைத்து சென்றிருந்ததால் சண்முகவேலு அலுவலகம் செல்லாத நிலையில் நேற்று காலை சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலைக்கு காரணமான மதிவாணனை கைது செய்ய சொல்லி சண்முகவேலுவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சண்முகவேலுவின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

-இரா.மோகன்

காணாமல் போன தியேட்டர்கள் ( மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 9) -தமிழ்மகன்


cinema.vikatan.com
சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயசங்கர், ரவிசந்திரன், கமல், ரஜினியின் ஆரம்ப காலங்கள் வரை இந்தத் திரையரங்குகள் படு பிஸியாக இருந்தவைதான். இதில் மேகலா, சரவணா, சித்ரா, வெலிங்டன், பிராட்வே திரையரங்குகள் எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் செய்யும். சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்கள் எப்போதும் சிவாஜி திரைப்படங்களை வெளியிடும். வெகு சில நேரங்களில் மட்டும்தான் இது மாறும்.இதில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கின்றன. 

நாங்கள் அப்போது ஓட்டேரி பகுதியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டைச் சுற்றி தியேட்டர்கள்தான். சரஸ்வதி (இ), மகாலட்சுமி, புவனேஸ்வரி (இ), வசந்தி (இ), ராக்ஸி (இ), மேகலா (இ), உமா (இ). இ என குறிப்பிடப்பட்டவை எதுவும் இப்போது இல்லை. அத்தனை இல்லைகள். பலவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகிவிட்டன. அயனாவரத்தில் இருந்த சயானி திரையரங்கும் அடுக்குமாடி குடியிருப்பாகிவிட்டது.

சென்னையை அலங்கரித்த இந்த கலைக் கூடங்களில் இப்போது 90 சதவிகித தியேட்டர்கள் உயிருடன் இல்லை. அவற்றுக்கு உயிர் இருந்தது என்று ரசிகன் நம்பினான். சென்னை புரசைவாக்கத்தில் இருந்த ராக்ஸி இப்போது சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை ஆகிவிட்டது. கே. பாலசந்தர் இயக்கிய படங்கள் அங்கே ரிலீஸ் ஆகும். மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என எல்லா படங்களும் அங்கே வெளியாகின. பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்கள் கடைசியாக சக்கை போடு போட்டன. ஏனோ அது இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் தந்த திரையரங்காகவே என்னுள் பதிந்திருக்கிறது.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலைக்குச் செல்வதற்குள் நாம் கடக்கும் திரையரங்குகள்... சபையர், புளூ டைமண்ட், எமரால்டு, ஆனந்த், லிட்டில் ஆனந்த், அலங்கார், வெலிங்க்டன், தேவி பாரடைஸ், சித்ரா, கெயிட்டி, காசினோ, பாரகன்... இந்த தியேட்டர்களில் எஞ்சி நிற்பது தேவி காம்ப்ளக்ஸ், காசினோ மட்டும்தான். சாந்தி தியேட்டருக்கும் நாள் குறித்துவிட்டார்கள்.

ப்ளூ டைமண்ட் தியேட்டரில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படத்தில் சென்று அமரலாம் என்ற சிஸ்டம் இருந்தது. படம் முடிய பத்து நிமிடம் இருக்கும்போதுகூட போய் அமரலாம். அடுத்த காட்சி ஆரம்பிக்கும்போது அப்படியே தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற படங்கள் அதில் எந்த நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் காட்சியில் உள்ளே போய் இரவுக் காட்சி முடிந்து வெளியே வருபவர்களும் உண்டு. அது ஒரு வித்தியாசமான சிஸ்டம்.

கெயிட்டி, சென்னையின் பழைய திரையரங்கம். 1930-களில் இருந்து இருக்கும் தியேட்டர். அந்த தியேட்டருக்கு என விசேஷமான ரசிகக் கூட்டம் உண்டு. கடைசி கால கட்டத்தில் செக்ஸ் பட தியேட்டர் ஆகி, அஞ்சரைக்குள்ள வண்டி, சாரி டீச்சர் போன்ற படங்களை வெளியிட்டு, ரகசிய ரசிகர்களை நம்பி காலத்தை ஓட்டினார்கள்.

ராயப்பேட்டையில் ஒடியன், உட்லண்ட்ஸ், லியோ, பைலட் தியேட்டர்களில் இப்போது ஊசலாட்டத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது உட்லண்ட்ஸ் தியேட்டர். மற்றவை மூடப்பட்டுவிட்டன. மயிலாப்பூரில் காமதேனு தியேட்டர் இருந்தது. தி.நகரில் ராஜகுமாரி, கிருஷ்ணவேணி திரையரங்குகள். நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் இந்த திரையரங்கம் இப்போது மெகா மார்ட் கடையாகிவிட்டது. நாகேஷ் திரையரங்கம் கல்யாண மண்டபமாகிவிட்டது. 

வட சென்னை பகுதியில், மின்ட் பகுதியில் இருந்து திருவொற்றியூர் வரை வரிசையாக 15 திரையரங்குகளுக்கு மேல் இருந்தன. ஶ்ரீ கிருஷ்ணா, கிரௌன் இரண்டும் மின்ட் பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்தன. சற்று தள்ளி முருகன் திரையரங்கம் இருந்தது. இதில் தியாகராஜ பாகவதர் படங்கள் எல்லாம் திரையிடப்பட்டன. இவை மூன்றும் இப்போது இல்லை. பாண்டியன், அகஸ்தியா, மகாராணி, தமிழ்நாடு, பத்மநாபா தியேட்டர்களில் பாதி இப்போது இல்லை. இந்தத் தியேட்டர்கள் எல்லாமே கடந்த 15 ஆண்டுகளுக்குள் காணாமல் போனவை.

15 ஆண்டுகளுக்குள் திரையரங்குகளுக்கு என்ன ஆனது? டி.வி-யின் வருகை பாதித்திருக்கலாம். திருட்டு விசிடி ஆபத்து நெருக்கி இருக்கலாம். சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு ஆபத்து அதற்குக் காரணமாகியிருக்கலாம்.


இது பின் குறிப்பு அல்ல... முன் குறிப்பு!
----------------------------------------------
இந்தத் திரையரங்குகளுக்கு எல்லாம் முன் சென்னையில் கட்டப்பட்ட திரையரங்கு எலெக்ட்ரிக் தியேட்டர். அந்த தியேட்டர் எங்கே இருக்கிறது தெரியுமா? சாந்தி தியேட்டர் எதிரில். சாந்தி தியேட்டர் எதிரில் இருக்கும் பழைய போஸ்ட் ஆபிஸ்தான். அந்த எலெக்ட்ரிக் தியேட்டர். திரையரங்கு இருந்ததற்கான அடையாளமாக இப்போதும் அங்கே ஒரு கவுன்டர் மட்டும் சாட்சியாக இருக்கிறது.

நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல்

cinema.vikatan.com'
யிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள்.
நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன்.

சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம்  இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே. தங்கம் வாங்காமல் இன்றைக்கு யாரும் இருப்பது கிடையாது. அந்தளவுக்கு தங்கம் நமக்கு தவிர்க்க முடியாத மிக முக்கியப் பொருளாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தங்கம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்துள்ளோம். 

பணக்காரர்கள் ஏமாந்தால் அது அவர்களுக்கு ஒரு விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், தினம் தினம் உழைத்து குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த பணத்தில் தங்கம் வாங்கும் ஏழைகள் ஏமாறுவது எந்த விதத்தில் நியாயம். இன்றைக்கு தினமும் அதுதான் நடந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். அதனால், இன்றைக்கு அதிகமான நகைக் கடைகள், தரமான நகை, அது இது என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. 

'ஹால்மார்க்' முத்திரையோடு விற்கிறோம் என்று சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி வாங்குகிறார்கள். உண்மையில் இன்றைக்கு விற்கப்படும் தங்கத்தில் சராசரியாக 100-க்கு 60 சதவிகிதம் மட்டுமே தங்கம் உள்ளது. 40 சதவிகிதம் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. கலப்படத்திலும் இன்றைக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்களை கலந்து விற்பனை செய்கிறார்கள் என்பது உச்சகட்ட கொடூரம். நாமும் இதெல்லாம் தெரியாமல் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவது வேதனையிலும் வேதனையான ஒன்று. 

எனவே, இதை முடிந்தவரை தடுத்து நிறுத்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கம் குறித்த போதிய விழிப்புணர்வை பெறவேண்டியது மிகமுக்கியம். அதற்காகத்தான் நாங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டோம். முடிந்தவரை தங்கம் வாங்குவதை தவிருங்கள். இப்போது அரசாங்கத்திடம் இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை கொடுக்க உள்ளோம். மும்பை போன்ற இடங்களில் தங்கம் விற்பனையில் பல கட்டுப்பாடுகள் இருப்பதுபோல், இங்கேயும் வந்தால் தங்கம் விஷயத்தில் இனியும் மக்கள் ஏமாறுவதை தடுக்கலாம்" என்றவர்,

''வரும் 21-ம் தேதி தங்கம் வாங்க உகந்த நாள் என்று சொல்லப்படும் அக்க்ஷய திரிதியை கொண்டாடப்படவிருக்கிறது. இதனால் தங்கம் விஷயத்தில் இன்னும் பலவித ஏமாற்றங்களும், மோசடிகளும் நடக்கக்கூடும். எனவே, மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.." என்று கோரிக்கை வைத்தவர்,  தங்கம் குறித்த இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களையும் பட்டியலிட்டார்.

-சா.வடிவரசு

SIA to operate charity flight for 300 disadvantaged people to celebrate SG50 -

SINGAPORE - Singapore Airlines (SIA) will be organising a special charity flight as part of its activities to mark Singapore's 50th birthday this year.

About 300 Community Chest beneficiaries, including children with special needs, adults with disabilities, as well as disadvantaged elderly and families, will get a three-hour return joy ride on the Airbus 380 superjumbo on May 29.

For many, it will be the first time on an aircraft, SIA said on Tuesday.

Apart from enjoying an in-flight meal service and entertainment system, beneficiaries will also be treated to special performances by SIA's cabin crew during the special flight.

Singapore to toughen laws against unruly air travellers

TROUBLEMAKERS on Singapore-bound flights will not be let off the hook in the future simply because of a lack of jurisdiction.

The Civil Aviation Authority of Singapore (CAAS) has told The Straits Times that they will face the music even if the offences are committed outside the Republic's air space.

As part of a global push to deal with the growing problem of unruly passengers, Singapore will amend its laws to give police and other legal bodies here the authority to charge and prosecute wrongdoers - a process expected to take about two years.

Under current international civil aviation laws - stipulated by the Tokyo Convention - Singapore is able to take action only if the culprit arrives on Singapore Airlines or other Singapore carriers.

As a result, troublemakers on foreign carriers usually escape unaffected.

The Montreal Protocol 2014, drafted by the global aviation community last year, aims to plug this gap.

Among the offences it lists is refusing to comply with safety instructions and physically or verbally abusing cabin crew.

A CAAS spokesman said that the new protocol will provide better protection for travellers and air crew.

She said: "The ability to take law enforcement action in such cases would be a strong deterrence against unruly behaviour on board aircraft arriving in Singapore. This would enhance Singapore's status as a safe and secure air hub."

The authority is working with government agencies to ratify the Montreal Protocol, which requires an amendment of current legislation through Parliament.

At least 22 states must ratify the protocol before the stricter laws can be enforced. So far, only Congo has done so.

Mr Tim Colehan, assistant director for member and external relations at the International Air Transport Association, said there has been a rise in unruly behaviour on aircraft in recent years.

In 2013, airlines reported more than 8,000 incidents, or one for every 1,370 flights.

From 2007 to 2013, the average was one per 1,600 flights.

SIA spokesman Nicholas Ionides confirmed an increasing number of such incidents but did not provide figures. He added that flight crew are trained to detect and deal with such cases.

"Some of these methods include politely declining to serve drinks if the crew discern that the passenger has had too much to drink," he said. "In extreme cases where passengers turn physically violent, our crew are also trained to handle them appropriately."

Mr Colehan said: "It is possible that the worsening situation simply reflects societal changes where antisocial behaviour is increasingly prevalent. However, what is deemed acceptable on the ground takes on a completely different complexion in the confined environment of an aircraft cabin at 35,000 feet."

If ratified by enough nations, the Montreal Protocol will also hold the culprit responsible for costs incurred if a plane needs to be diverted to an alternative airport, which could cost anything from US$6,000 (S$8,200) to US$200,000, Mr Colehan said.

He added: "In some cases, unruly behaviour can be detected at check-in or during screening, and this is where ground handlers and security personnel can assist by alerting the airline, so that it can make an informed decision on whether or not to accept the passenger for boarding."

karam@sph.com.sg

தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்த திராவிடர் கழகத்துக்கு அனுமதி

logo

தாலி அகற்றும் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் திராவிடர் கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, இந்த நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பினை போலீசார் வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தடையை நீக்க வேண்டும்

டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 14-ந்தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சியை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடத்த திட்டமிட்டோம்.

இதற்கிடையில், கடந்த 12-ந்தேதி நாங்கள் நடத்தும் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இந்த தடையை போலீசார் பிறப்பித்துள்ளனர். எனவே, அந்த தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தன்னிச்சை முடிவு

இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்பு நேற்று மாலை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவேண்டும் என்று சிறுபான்மையினர் அமைப்பை சேர்ந்தவரும், இந்து மகாசபா சார்பிலும் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் அரசு தரப்பில் அட்வகேட்ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் தியாகராஜன், டி.வீரசேகரன் உட்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள். அப்போது நடந்த விவாதம் பின்வருமாறு:-

மூத்த வக்கீல் தியாகராஜன்:- தாலி அகற்ற வேண்டும் என்ற எண்ணங்களை கொண்டவர்கள், இது தொடர்பான ஒத்த கருத்தை கொண்டவர்கள் கலந்து கொள்ளும் தனியார் நிகழ்ச்சியாகும். இது பொதுக்கூட்டம் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள யாருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள முடியும். பெண்கள் தாலியை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊர்வலம் எதுவும் நாங்கள் செல்லவில்லை. ஆனால், போலீசார் இந்த நிகழ்ச்சியை தவறாக புரிந்துக் கொண்டு, தன்னிச்சையான உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

சட்டஒழுங்கு முக்கியம்

அட்வகேட் ஜெனரல் சோமயாஜி:- சென்னை சிட்டி போலீஸ் சட்டத்தின்படி, தனியார் இடத்தில் நிகழ்ச்சி நடத்தினாலும், போலீஸ் அனுமதி தேவை. மேலும், போலீஸ் கமிஷனர் 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றுக்கு தடை விதித்து பொதுவாகத்தான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு மனுதாரர் அமைப்புக்கு மட்டும் பிறப்பிக்கவில்லை. உளவுப்பிரிவு அறிக்கையின் அடிப்படையில், சட்ட ஒழுங்கு பிரச்சினையை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களை பொருத்தவரை கருத்துச் சுதந்திரம் என்பதை விட, சட்டஒழுங்குத்தான் முக்கியமானது.

கருத்து சுதந்திரம் முக்கியம்

நீதிபதி:- என்னை பொருத்தவரை கருத்துச்சுதந்திரம்தான் முக்கியமானது. அதனால்தான் இந்த வழக்கை இரவு வரை விசாரிக்கின்றேன். இந்த மனுதாரர் மட்டுமல்ல, நாளை இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து மகாசபா நிர்வாகிகள், நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசுவதற்கும், காந்தியை விமர்சித்து பேசுவதற்கும் அனுமதிக் கேட்டால், அதற்கு அனுமதி வழங்கத்தான் செய்வேன். அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை வழங்கப்பட்டுள்ளது. சட்டஒழுங்குதான் முக்கியம் என்று சொல்கிறீர்கள். இந்த தாலி பிரச்சினையில், டி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடந்ததே, அதை போலீசாரால் தடுக்க முடிந்ததா? இந்த பிரச்சினையால், தாலி தொடர்பான நிகழ்ச்சி ஒளிப்பரப்பவே இல்லையே? தாலி அகற்றும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளதே?

மாட்டுக்கறி

சோமயாஜி:- அவர்கள் 1987 முதல் 1995-ம் ஆண்டு வரை நடத்தியதாக ஏதோ ஒரு போட்டோ, செய்தித்தாள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். ஆனால், அது போதுமான ஆதரமாக இல்லை. இந்த நிகழ்ச்சி மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியினால் சட்டஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று உளவுப்பிரிவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், நிகழ்ச்சி முடிவில் மாட்டுக்கறி வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.

நீதிபதி:- அதனால் யாரும் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்கிறீர்களா?

சோமயாஜி:- அப்படியில்லை. சட்டஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது. அதுதான் போலீசாரின் எண்ணம்.

இவ்வாறு விவாதம் நடந்தது. இந்த விவாதம் இரவு 7 மணி வரை நடந்தது.

உத்தரவு ரத்து

இதன்பின்னர் இரவு 9 மணிக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14-ந்தேதி (இன்று) நடத்திக்கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர் அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும் விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும் போலீசார் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

கடும் நடவடிக்கைதான் தடுக்க முடியும்


logo

ஆழ்குழாய் கிணறுகளில் மழலைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி நடந்து, அனைவரையும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது. கடந்த 2012 முதல் தொடர்ந்து 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களும், அதிர்ஷ்டவசமாக ஓரிருவர் மரணத்தின் வாயிலுக்கு சென்று உயிர்தப்பியதும் நடந்து இருக்கிறது. இப்போது மீண்டும் நெஞ்சை கசக்கிப்பிழியும் ஒரு சோக சம்பவம் வேலூர் மாவட்டம், கூராம்பாடி கிராமத்தில் ஒரு விவசாயியின் நிலத்தில் தண்ணீர் வராத ஆழ்குழாய் கிணற்றில் தவறிவிழுந்த 2½ வயது பச்சிளம் குழந்தை மரணத்தால் ஏற்பட்டுள்ளது. 300 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வராததால், அதில் இருந்த பிளாஸ்டிக் குழாயை எடுத்துவிட்டு, பலகாலமாக கல்லை வைத்து மூடிஇருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா? என்று பார்க்க அந்த கல்லை எடுத்து பார்த்துவிட்டு தண்ணீர் இல்லை என்றவுடன், மீண்டும் கல்லை வைத்து மூடாமல் சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில், அந்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் தவறிவிழுந்து பல மணி நேர போராட்டத்துக்குப்பிறகு அவனை மீட்டும் உயிரைக்காப்பாற்ற முடியவில்லை.

தமிழ்நாடு ஒரு விவசாய மாநிலம். இங்கு ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நிச்சயமாக நிறுத்தமுடியாது. ஆனால், ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக்கவேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சென்னை ஐகோர்ட்டு இதுபோன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்கவேண்டிய அதிகாரிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து வாக்குமூலம் தாக்கல் செய்யச்சொல்லியது. ஆகஸ்டு மாதம் 12–ந் தேதி தமிழக சட்டசபையில் இதுபோல ஆழ்குழாய் கிணறுகளை தோண்டுவதற்கும், தண்ணீர் இல்லாததால் கைவிடப்படும் ஆழ்குழாய்கிணறுகளை மூடுவதற்கும் தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேறியது. இந்த சட்டத்தின்கீழ் ஆழ்துளை கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் உரிமையாளர்கள் மற்றும் அத்தகைய கிணறுகளைத் தோண்டும் முகவாண்மைகளின் அக்கரையற்ற தன்மையினால், சிறு குழந்தைகளின் இறப்புக்குரிய விபத்துக்கள் மற்றும் இறப்புகள் நடக்கின்றன. இந்த சட்டத்தின் விதிகளுக்கு முரணாக இருப்பவர் யாராயினும் 3 ஆண்டுகளுக்கு குறையாத, ஆனால் 7 ஆண்டுகள்வரை நீடிக்கும் வகையிலான சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம்வரை அபராதம் விதிக்கமுடியும். உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தெளிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, ஆழ்குழாய் கிணறுகளை தோண்டவோ, பழுதுபார்க்கவோ விரும்பினால், 15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி அமைப்புகள், நிலத்தடிநீர் துறை, பொதுசுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் தரைமட்டம்வரை சரியாக நிரப்பப்பட்டு, அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறவேண்டும் என்பது உள்பட பல வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது.

அரசு ஏற்கனவே நிறைவேற்றிய சட்டத்தோடு, உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளையும் உடனடியாக நிறைவேற்றும் வகையில் சட்டதிருத்தமோ, விதிகளோ கொண்டுவரவேண்டும். நில உரிமையாளர்கள், தோண்டுபவர்களை மட்டுமல்லாமல், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். எந்த பழுதுபார்க்கும் பணிகள் என்றாலும், கைவிடப்பட்ட ஆழ்குழாய்கிணறுகளில் தண்ணீர் இருக்கிறதா? என்று மீண்டும் பார்க்க வேண்டுமென்றால், அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் பார்க்க வேண்டும் என்று விதிகள் வகுத்து நிறைவேற்றவேண்டும். உடனடியாக தமிழ்நாடு முழுவதும் எத்தனை ஆழ்குழாய் கிணறுகள் இருக்கின்றன?, எத்தனை கைவிடப்பட்டுள்ளன? என்ற பட்டியலை எடுத்து, அனைத்தையும் அரசின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

Monday, April 13, 2015

போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: பாமக மகளிர் அணி துணை தலைவி உட்பட 3 பேர் கைது- மேலும் பலருக்கு வலை

பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப் பட்டனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் தட்சிணாமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘‘வழக்கறிஞர்களாக பணி புரிவதற்கு பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக பலர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்தபோது, சென்னையை சேர்ந்த அருண் குமார் மற்றும் அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் போலியான எல்எல்பி சான்றிதழ்களை கொடுத்திருப்பது தெரிந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

புகாரின்பேரில் காவல் உதவி ஆணையர் கண்ணன், ஆய்வாளர் கீதா மற்றும் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

போலி சான்றிதழ் கொடுத்த 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசா ரணையில் அவர்கள் ஒரே நபரிட மிருந்து போலியான சான்றிதழ் களை பெற்றிருப்பது தெரிந்தது. ஒரு பத்திரிகையில் வந்த விளம் பரத்தை பார்த்து அதில் இருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, கோவை மாவட்டம் காந்திபுரம் 3-வது தெருவில் ‘ஹை மார்க்' என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் சண்முகசுந்தரி(32) என்பவர் பேசியிருக்கிறார். அவரை கோவைக்கே சென்று நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது சண்முகசுந்தரி, வகுப் புக்கே வர வேண்டாம். தேர்வு எழுத வேண்டாம். பணம் கொடுத் தால் எல்எல்பி படித்து முடித்ததற் கான சான்றிதழை வாங்கித் கொடுப்பதாக கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வரும் தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதை பெற்றுக்கொண்ட சண்முகசுந்தரி, உத்தரப்பிரதேச மாநிலம் பந்தல்கண்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து கொடுக்கப்பட்டது போல எல்எல்பி சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சண்முகசுந் தரியிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி துணைத் தலைவராக இருப்பது தெரிந்தது. இவர் தமிழ்நாடு முழு வதும் பல இடங்களில் கிளை களை வைத்து இதேபோல பல ருக்கு போலி சான்றிதழ்களை கொடுத்திருப்பதும் தெரியவந்தது. போலி சான்றிதழ்கள் தயாரிப்பதற் காக சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையை சேர்ந்த அருண் குமார்(36), சேலம் குரங்கு சாவடி நரசோதிபட்டி பகுதியை சேர்ந்த கணேஷ்பிரபு(28) ஆகி யோர் உதவி செய்திருப்பதும் தெரிந்தது.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து பலருக்கு போலியான சான்றிதழ் களை தயார் செய்து கொடுத்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித் துள்ளனர். சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர்.

அவர்களிடமிருந்து லக்னோ, டெல்லி, கான்பூர், மேகாலயா என பல இடங்களில் உள்ள பல்கலைக்கழக போலி சான் றிதழ்களும், அவற்றை தயா ரிப்பதற்கான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து சண்முக சுந்தரி, அருண்குமார், கணேஷ்பிரபு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துவிட்டோம்.

போலி சான்றிதழ்கள் தயா ரிப்பு மோசடியில் மேலும் பலருக்கு தொடர்புள்ளது. இவர் களிடம் போலி சான்றிதழ்கள் வாங்கியவர்கள் குறித்த தகவ லையும் திரட்டி வருகிறோம். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

தமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் விற்பனை அமோகம்: சிறிய ‘ஃபிரிட்ஜ்' விற்பனையும் சூடுபிடிக்கிறது


தமிழக தபால் நிலையங்களில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குறைந்த விலை செல்போன் விற்பனை திட்டத்துக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு சில வாரங்களிலேயே 5 ஆயிரம் செல்போன்கள் விற்பனை யாகியுள்ளன.

காலத்துக்கு ஏற்ப தபால் துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தபால் அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்யும் திட்டமும் அதில் ஒன்று. தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைமை தபால் நிலையங்கள், முக்கிய தபால் நிலையங்கள் என சுமார் 400 இடங்களில் கடந்த மாதம் 2-வது வாரத்திலிருந்து செல் போன் விற்பனையை தமிழக அஞ்சல்துறை தொடங்கியது. அதற்கு, பொது மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத் துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அஞ்சலக வட்ட தலைமையக உயரதிகாரிகள் கூறியதாவது:

தபால் நிலையங்களில் செல் போன் விற்பனை தொடங்கியது முதலே அவை விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. ஒரு மாதம் ஆவதற்குள்ளாகவே, 4,800-க்கும் அதிகமான செல்போன்கள் விற்பனையாகியுள்ளன. செல்போன் களை வாங்குவதற்காக ஏராளமானோர் வருகின்றனர். நாடு முழுவதும் பரவலாக இந்த செல்போன்களுக்கு நல்ல மவுசு இருப்பதால், அவற்றை சப்ளை செய்யும் நிறுவனத்தால் அதற்கேற்ப ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த செல்போன்களின் விலை குறைவு (ரூ.1999) என்பதாலும், அதில் 2 சிம்கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்பதாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ‘பிரீபெய்ட் சிம்’, 2 ஆயிரம் நிமிட இலவச ‘டாக்-டைம்’ உடன் தரப்படுவதாலும் அதை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.

இதுபோன்ற, தனியார் நிறு வனங்களின் தயாரிப்புகளை நாங்கள் விற்றுத் தருகிறோம். அதற்கான கமிஷன் தொகையை அந்நிறுவனங்கள் தருகின்றன. தரமான நிறுவனங்களின் தயாரிப்பு களை மட்டுமே நாங்கள் விற்பனை செய்கிறோம். விருப்பமுள்ளோர், அருகில் உள்ள தலைமை தபால் நிலையங்களை அணுகலாம்.

இன்வர்ட்டர் ‘ஃபிரிட்ஜ்’

இதேபோல, தபால் நிலையங்களில் விற்கப்படும் சிறிய (9 கிலோ) ‘சோட்டுக்கூல்‘ ஃபிரிட்ஜ்களின் விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது. பெட்டிக் கடைக்காரர்கள், ஒரே வீ்ட்டைப் பகிர்ந்து வசிக்கும் கல்லூரி மாணவ-மாணவியர், இளம் சாப்ட்வேர் துறையினர் போன்றோர் அதனை விரும்பி வாங்குகின்றனர். மேலும், இன்வர்ட்டர் மூலமாகவும் அதை இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இவை பல்வேறு வண்ணங்களில் ரூ.5300 முதல் ரூ.6,000 வரையிலான விலைகளில் கிடைக்கும். சூரியமின்சக்தி விளக்குகளும் ரூ.500 முதல் விற்கப்படுகின்றன.

கல்லூரி புத்தகங்கள்

இதுதவிர, அண்ணா பல்கலைக் கழகம், ஐஐடி, சென்னைப் பல் கலைக்கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அங்கு பயிலும் வெளியூர் மாண வர்களின் புத்தகங்களை ‘பேக்’ செய்து அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்காக, சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெறவுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

Medical Council wants accreditation power for colleges

NAGPUR: Medical Council of India (MCI) may be the apex and autonomous body to monitor medical education in the country, but unlike all other higher education regulatory bodies, it does not have an independent body of its own for accreditation of medical colleges. Hence, it has forwarded this demand for consideration by the government of India as a step towards improving the standard of medical education as per international norms.

The MCI general body has put this and some more such suggestions in the form of GB resolutions to the government recently. Speaking to reporters at 'Meet the Press' organized by Nagpur Union of Working Journalists, Academic Council chairman of MCI Dr Ved Prakash Mishra said like University Grants Commission (UGC) has National Assessment and Accreditation Council (NAAC), and All India Council for Technical Education (AICTE) has National Board for Accreditation (NBA), MCI too should have a similar independent body for accreditation of the colleges.

"But this is not possible without an amendment in the basic Indian Medical Council (IMC) Act. Hence, MCI passed a resolution demanding a National Accreditation Board for medical education and has sent it to the Centre through an amendment in IMC. It is high time MCI moved beyond 'recognition' to colleges," said Dr Mishra.

Besides, MCI has also raised issues of giving power to it to make its own notifications on various decisions taken by the council so that it doesn't have to wait for the 3-5 years gestation period the government otherwise takes for issuing notifications. The GB of MCI has also demanded a provision of financial support for development projects like the grants given by UGC to different universities on a five-yearly basis.

A big issue haunting MCI for long is the absence of any designated agency for fixing the salary and service norms for medical teachers. At present it is as per UGC system. But the council feels this needs a change and should be done by the council. There is no uniformity in even the retirement age in different states for teachers.

A big change being demanded by the council is a 'national development perspective plan' for medical education in the country for bringing uniformity in quality of education as well as various other issues like grant of permission for new medical colleges. Indian constitution expects uniform development in all states based in the socio-economic standard of the state or the area. But unfortunately most medical colleges are concentrated in southern states, including Maharashtra. The applications should be scrutinized to have even distribution in the geographical area.

"Another issue worrying MCI is that the government has withdrawn its hands from medical education which is not a good sign as it may restrict the privilege of medical education only for the rich," Dr Mishra lamented.

Fact file

India is the biggest manpower generator in medical field in world. It has the highest intake capacity of 56,000 students annually, 60,000 medical teachers, 28,000 PG seats, 401 medical colleges.

Exit test introduced to open avenues for those planning to practise or study in other states or abroad. But it's voluntary.

Like the University Grants Commission (UGC) which distributes development grants to various universities, MCI should also have access to such funds and the authority to distribute it to medical colleges.

There is no regulatory authority as yet for laying the service conditions and the pay scales of medical teachers.

There is no agency or body to regulate setting up of new medical colleges distributed evenly across the country in various states or in underdeveloped states.

Of the 220 new colleges started in last two decades, 183 are in private sector.

The National Entrance Eligibility cum Entrance Test (NEET) now to be applicable to even the NRI quota (NRI students need to clear the test).

Private colleges too to pay stipend as per the state or central government norms, what ever suits them to their post graduate students.

Every medical college to compulsorily have a research cell.

Every college should have the Students' Council head on the college council and be allowed to be a part of all decision making processes.

MCI has made it mandatory for state medical councils to resolve all ethical issues/cases within six months with a quantum of punishment which may vary from six months suspension to six months to two years or even two years or more.

Be careful while transferring money

When was the last time you went to a bank to transfer money? Today, 80-85% of NEFT and RTGS transactions happen through netbanking or apps. Online transfers are convenient, fast and cost nothing extra. All you have to do is register a person as a beneficiary by giving their account number and bank IFSC code and you can transfer money real time. But what if you accidentally send money to a wrong bank account?

To reduce the possibility of errors, customers have to key in the beneficiary account number twice. Also, if there is a mismatch between the account number and the IFSC code, the system will not accept the entry. Moreover, post adding a beneficiary, there is also a cooling period of 30 minutes during which you cannot transact.

During the cooling period, some banks send customers text notifications on their registered mobile numbers, confirming the account number of the beneficiary they have added. Customers can reconfirm the number at this stage. Some give you the option of adding the beneficiary's mobile number when you register so that they can be intimated via sms.

However, chances of errors still persist. If you accidentally put one digit wrong and it doesn't correspond to the account holder's name, the transaction can still go through.

It is also possible that you had the wrong account number to begin with. You can also mistakenly put an extra zero to the amount to be transferred.

According to the RBI, responsibility to provide correct inputs in the payment instructions, particularly the beneficiary account number information, rests with the remitter or originator. So, the onus of the mistake will solely be on you. Inform the bank immediately.

The turnaround time also depends on how quickly the customer alerts the bank, the banks involved and the stage at which the transaction is at. "If the remitter and beneficiary accounts are with the same bank, the process is quicker. If you alert the bank within an hour, the money could be reversed immediately," says Jairam Sridharan, President, Retail Lending and Payments, Axis Bank.

The beneficiary has to be intimidated as well. Without the beneficiary's permission, the bank cannot reverse the transaction. If the beneficiary refuses to cooperate, then you will have to take legal recourse.

The RBI clearly states that, "In cases where it is found that credit has been afforded to a wrong account, banks need to establish a robust, transparent and quick grievance redressal mechanism to reverse such credits and set right the mistake". However, this is not a regular procedure for banks. "Since the occurrences are pretty low, say two to three cases a quarter, most banks do not have a formal redressal process in place," says Sridharan. It is important that you take precautions. Checks like sending a smaller amount, copy-pasting rather than typing the account numbers will save you a lot of trouble later.

வேண்டாம் "முகமூடி' உறவு

By எம். சடகோபன்

உலகில் உறவுக்கு என்று ஒரு தனி அர்த்தம் உள்ளது. ஆனால், நவீன தொழில்நுட்பக் காலத்தில் உறவுகள் அனைத்தும் முகம் இல்லாமல் தொடர்கின்றன என்பதுதான் யதார்த்த உண்மை. மாயாஜால உலகில் எல்லாமே முகமூடி அணிந்த உறவுகளாகத் தொடர்வதுதான் அதைவிட வேதனை.

தாய்-தந்தை, அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, மாமனார்-மாமியார், சகோதரன்-சகோதரி, தாத்தா-பாட்டி, பேரன்-பேத்தி என்று உறவுகளின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.

மேலும், உற்ற நண்பன், உற்ற நண்பி என்று அலுவலகங்களிலும் நட்பு என்ற பெயரிலும் உறவுகள் தொடர்கின்றன. எல்லாமே பணம் என்று ஆகிவிட்ட இந்த உலகில் உறவுகள் அனைத்தும் முகமூடி அணியத் தொடங்கிவிட்டன.

தந்தை, தாயை ஏமாற்றும் பிள்ளை. பணத்துக்காக சகோதரனை வசைபாடும் சகோதரி. தன் சொந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மாமனார்-மாமியாரை உதறிவிடத் துடிக்கும் மருமகள். தன் ஆணவத்துக்கு அடங்காத மருமகளை விரட்டத் துடிக்கும் மாமியார். ஏதேதோ காரணங்களைக் கூறி, தாலி கட்டிய கணவனைக்கூட மறக்கத் துணியும் மனைவி.

இதேபோல், அலுவலகங்களில் நட்புடன் பழகுவதுபோல் காட்டிக் கொள்ளும் பலர், ஒருவரை ஒருவர் புறம் பேசி தான் மட்டும் முன்னேற்றம் காண முகமூடி அணிகிறார்கள். இவ்வாறு அனைவரும் முகமூடியுடன் உறவுகளைத் தொடர்கின்றனர்.

சகோதரி ஸ்தானத்தில் வைத்து பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, பலர் முன்னிலையில் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சித்துக் கேலிப் பொருளாக்குவது, பிற ஆண்களுடன் இணைத்துப் பேசுவது போன்றவற்றை தன் உடன் பிறந்த சகோதரிக்கும் செய்ய முனைவார்களா..? இல்லையே..!

உடன் பிறப்பின் மானத்தை மட்டும்தான் காப்பார்கள் - பிற பெண்களின் மானத்தைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா?

அண்ணன்-தம்பியுடன் பிறந்த பெண்கள் மற்ற ஆண்களுடன் இயல்பாகப் பேசுவதற்குத் தயங்கமாட்டார்கள். தங்களைவிட மூத்தவர்களை அண்ணன் என்றும், இளையவர்களை பெயர் சொல்லியோ, தம்பி என்றோ அழைப்பார்கள்.

ஆனால், கூடப் பிறந்தவர்கள் அனைவரும் பெண்களாக இருந்துவிட்டால் எளிதில் வெளி ஆண்களுடன் பழக மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

ஆனால், இந்தக் கலியுக காலத்தில் அப்படி இல்லையே..! பொதுவாக அண்ணனுடன் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால், மகளிடம் அம்மா சொல்வாள், அண்ணன்னு கூப்பிடு என்று. அப்படித்தான் நடக்கும்.

ஆனால், நாளடைவில் அண்ணனுடன் வந்தவர்களில் ஒருவரைக் காதலித்து கைப்பிடிக்கும் மகளின் அறியாமையை எண்ணி சொல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகும் ஏராளமான தாய்மார்களைக் காண்கிறோமே.

இது இப்படி இருக்கையில், உறவுகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பண்பு தெரிந்த ஒருவர் "முகமூடி' போட்டுக் கொள்ளாதவராகத்தான் இருப்பார். "தன்னைக் குறித்து யாரும், எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும்-கவலை இல்லை.

நான், நானாகத்தான் இருப்பேன்' என்று சொல்லிக் கொள்ளும் அவர், முகமூடி அணிந்து மனத்துக்குள் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் அவர் வித்தியாசமானவராகத்தான் இருப்பார்.

தாலி கட்டிய கணவனுடன் மனைவியும், மனைவியுடன் கணவனும் "முகமூடி' அணிந்து உறவைத் தொடரும் பலரை பார்க்கத்தான் செய்கிறோம்.

இது ஒருபுறம் இருக்க, தன் வீட்டாரின் செயலை நியாயப்படுத்த கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் முகமூடி அணிகிறார்கள். சாயம் வெளுத்தபிறகு உறவைக் கிழிக்கிறது "முகமூடி'.

சகோதர பாசம் சாதாரணமானது அல்ல. அண்ணனை தந்தை போன்றும், தம்பியை மகன் போன்றும் பாவிக்கிறவள் பெண். உடன் பிறந்தவர், அடுத்தவர் என்ற பேதம் சகோதர பாசத்துக்குக் கிடையாது.

அண்ணன் என்றால் அண்ணன்தான் - அதைத் தவிர்த்து வேறு எதையும் சிந்தித்துக்கூட பார்க்கமாட்டாள் ஒரு நல்ல பெண். ஒரு குழந்தைபோல விஷயங்களைப் பகிர்வதற்கும், சிக்கல் நிறைந்த பிரச்னை குறித்துச் சொல்வதற்கும் முதலில் பெண்கள் நாடுவது சகோதரனையே.

நட்புகளிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ள மிகவும் யோசிக்கும் பெண், "சகோதர பாசம் துரோகம் இழைக்காது' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், தன்னை சகோதரி என்று அழைக்கும் ஆணிடம் தயங்காமல் கூறிவிடுவாள்.

ஆனால், அதையே தனக்கோ, தனது மனைவிக்காகவோ சாதகமாக்கிக் கொண்டு ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். முகமூடி தெரிந்த பிறகு அப்பெண் சொல்வது "குட்பை' தானே.

உன்னத உறவு-சுயநலம் இல்லாதது. சகோதர உறவு-ஆதரவாகத் தோள்கொடுக்கும். இவை இரண்டும் அமையப்பெற்றவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான். ஆனால், இதே உறவை சிலர் தங்கள் விருப்பம் போலக் கையாளும்போதுதான் முகமூடி உறவாக மாறுகிறது.

இதன்மூலம், கிடைத்த நல்ல உறவை தக்கவைத்துக் கொள்ள பலர் தவறிவிடுகின்றனர்.

எதிர்பார்ப்பு எதுவும் இன்றி தன்னை நேசிக்கும் உன்னத உறவை ஈகோ, போட்டி, பொறாமை, சுயநலம், தற்பெருமை போன்றவற்றுக்காக இழந்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

"நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல ஆளுக்கொரு வேஷம் தரிக்கும் முகமூடி உறவுக்காரர்கள், "பிறரை மட்டும் அல்ல; தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்' என்பதுதான் உண்மையிலும் உண்மை...!

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசும் உறவுகளை

ஒவ்வொன்றாக

களைய முயன்றால்

அநாதையாகிவிடுவேன்

ஒருவருமின்றி..!

என்ற கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

Sunday, April 12, 2015

சாலையில் தறிகெட்டு வரும் தண்ணீர் லாரி எமன் ... கோடை கால உஷார்!

ண்ணீர் லாரி...தாகத்தால் தவிப்போருக்கு தண்ணீர் தந்து உயிர் காக்கும் தண்ணீர் லாரிகள் இப்போதெல்லாம் உயிர்பறிக்கும் சாலை எமனாக மாறி  அச்ச மூட்டுகின்றன.குடிநீர் சேவைக்கு வந்த லாரிகள், குடிமக்களின் உயிரெடுக்கும் கொடுமையை செய்வதால் சாலையில் பயணிப்போர் அன்றாடம் பயந்து பயந்து போகவேண்டிய அசாதாரண சூழல் நிச்சயம் தவிர்க்கப்படவேண்டும்.
   
நேற்று பல்லாவரம் வாரச் சந்தை..ஷாப்பிங் மால்களும், ஏ.சி. வைத்த பெரிய காய்கறி கடைகளும் நிறைந்த சென்னையில், கிராம மணம் மாறாமல் இன்றளவும் பல ஆண்டுகளாக வாரச் சந்தை நடக்கும் இடம். காய்கறி முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களும் வாங்கலாம் என்பதே வாடிக்கையாளர்கள் அறிந்த செய்தி. ஆனால் சந்தைக்குப் போனால் உயிரையும் இழக்க நேரிடும் என்பது புதிய பயம் தரும் செய்தி.
பல்லாவரம் வாரச் சந்தை நடக்கும் சாலையில், தவறாக வந்த கன்டோன்மென்ட் தண்ணீர் லாரி மோதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட, ஐந்து பேர் இறந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை நிரப்பியுள்ளது. இவ்விபத்துக்கு தண்ணீர் லாரியின் அதிவேகமே காரணம் என்று கூறப்படுகிறது.

பல்லாவரம் பழைய டிரங்க் சாலையில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. நேற்று காலை பொழிச்சலூர் பத்மநாப நகர்  மகேஷ் தனது மனைவி பிரீத்தி,அவர்களின்  இரண்டரை வயது மகள் தியா மற்றும் மகேஷின் தாய் சரோஜா ஆகிய நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றனர்.

சந்தை நடந்த சாலையில் கீழ்க்கட்டளை - பல்லாவரம் மேம்பாலம் இறங்கும் இடத்திற்கு அருகே சென்றபோது, சந்தையில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவிட்டு, கன்டோன்மென்ட் தண்ணீர் லாரி ஒன்று, தவறான பாதையில் எதிரே வேகமாக வந்துள்ளது. அந்த  லாரியை கன்டோன்மென்ட் பல்லாவரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையில்  திரும்பிய லாரி கட்டுப்பாட்டை இழந்து, பல்லாவரத்தை சேர்ந்த குகன் என்பவரின் கார் மீது லேசாக மோதிய லாரி, சாலையோரம் நின்றிருந்த குரோம்பேட்டையை சேர்ந்த விஜயகுமார்  என்ற பள்ளி மாணவர் மீதும், அதை தொடர்ந்து மகேஷின் வாகனம் மீதும் மோதிவிட்டு வேகமாகச்  சென்று நின்றது.
இந்த விபத்தில், மகேஷின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். பிரீத்தி உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஷும், மற்றொரு நபரும் குரோம்பேட்டை மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லும்  வழியில் இறந்தனர்.படுகாயமடைந்த குழந்தை தியாவும், அவரது பாட்டி சரோஜாவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.மாணவர் விஜயகுமார், நேற்று தான்  பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதி முடித்து விட்டு, சந்தையில் வாகன கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருத நிலையில் இறந்தார்.
இந்த விபத்து  பல்லாவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை உண்டாக்கிய  லாரி ஓட்டுனர் சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கன்டோன்மென்ட் லாரியை ஓட்டியவர் சுரேஷ். அவர் தற்காலிக ஊழியர் என்று கூறப்படுகிறது. வார சந்தை நடைபெறும்  வெள்ளிக்கிழமை தோறும், அந்த லாரி, சந்தையில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி விட்டு, தவறான பாதை வழியாகவே அலுவலகத்திற்கு வழக்கமாகச் செல்லும் .நேற்று காலையும் அதே பாணியில் ஓ ட்டுனர் தவறான பாதையில் சென்றது மட்டுமின்றி, அதிவேகத்திலும் சென்றிருக்கிறார். அது தான் இந்தக் கோர விபத்திற்குக்  காரணம்.


ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேரை பலி கொண்ட, லாரிநிறுவனத்தின் மீதும், ஓட்டுனர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி இதுபோன்ற கொடுமையான விபத்துக்கள் எங்கும் நடக்கவே கூடாது.இது கோடைகாலம்.தண்ணீர் பற்றாக்குறையால் சாலைகளில் அதிவேகமாக லாரிகள் செல்லும்.எனவே அதைக் கட்டுப்படுத்தவும்,கண்காணிக்கவும் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களையும், பைக் ரேஸ் ஓட்டுபவர்களையும் சாலைகளில் மடக்கிப் பிடித்து சட்ட ரீதியிலான நடவ டிக்கை  எடுக்கும் போக்குவரத்துக் காவல்துறையினர் தண்ணீர் லாரிகள் தறிகெட்டு ஓடுவதையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பல்லாவரத்தில் நடக்கும் சந்தைக்கு வருவோரின் வாகனங்களை  போக்குவரத்து போலீசார் கண்ட இடத்தில் நிறுத்த அனுமதிக்கின்றனர்.இதனால்  டிரங்க் சாலை ஜி.எஸ்.டி. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாரந்தோறும் நிலவும் இந்த பிரச்னையை தீர்க்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.


ஆனால் இது குறித்து போக்குவரத்து போலீசார், பழைய டிரங்க் சாலையில் வாகன வசதிக்காக கீழ்க்கட்டளை - பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து 250 மீ ,  திரிசூலம் ரயில்வே கேட்டில் இருந்து 250 மீ., இடைவெளி விட்டு  அதற்கு இடைப்பட்ட இடத்தில்  வார சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை மீறி, மேம்பாலம் ஏறும் இடம் வரை, கடைகள் போடப்படுகின்றன. இதுவே, அந்த சாலையில் கடும் நெரிசல் ஏற்பட காரணம்.மேலும், அந்த வழியாக, சந்தைக்குச்  செல்லாத வாகனங்களைக்  கூட வலுக்கட்டாயமாக மடக்கி  கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டணம் வசூலிக்க, சிறுவர்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். கன்டோன்மென்ட் நிர்வாகம் இதை கண்டுகொள்வதில்லை என்று புகார் கூறுகின்றனர்.

ஊர்மணம்- புதுக்கோட்டை: 17 ஆண்டுகளுக்குப் பிறகு!....by கே.சுரேஷ்


Return to frontpage


மால் திரையரங்காக மாறியிருக்கும் ‘வெஸ்ட்’

கைபேசியில்கூட இன்று முழு திரைப்படமொன்றைப் பார்த்துவிட முடிகிறது. இந்தத் தொழில்நுட்பத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறிய பல திரையரங்கங்கள் மூச்சை நிறுத்திக்கொண்டன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உருவான முதல் திரையரங்கம், 17 ஆண்டுகளுக்குப் பின் நவீனத் தொழில்நுட்பத்தோடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் கிழக்கு இரண்டாம் வீதியின் முக்கிய அடையாளமாக இருந்தது வெஸ்ட் திரையரங்கம். அதேபோல் வடக்கு ராஜவீதியில் ராஜா திரையரங்கம். இந்தத் திரையரங்குகளை ராயவரத்தைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் என்பவர் கடந்த 1930-ம் ஆண்டில் தொடங்கினார்.

இத்திரையரங்குகளில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி, பி.யூ. சின்னப்பா நடித்த ஜெகதலப் பிரதாபன் ஆகிய படங்கள் 125 வாரங்கள் ஓடிச் சாதனை படைத்தன. தொடர்ந்து, நாடோடி மன்னன், வீரபாண்டிய கட்டபொம்மன், சகலகலா வல்லவன், தர்மதுரை போன்ற படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடின.

ஆனாலும் சரியான ஆதரவு இல்லாததால் வெஸ்ட் திரையரங்கம் 1998-ல் மூடப்பட்டது. மூடப்பட்ட திரையரங்கம் கடந்த காலத்தின் நினைவுகளைச் சுமந்துகொண்டு கடந்து செல்லும் உள்ளூர்வாசிகளின் கண்களுக்கு ஒரு சோகச் சாட்சியாக நின்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட வணிக வளாகங்களுடன் கூடிய கட்டிடத்தில் கடந்த 2015 மார்ச் 22-ம் தேதி மீண்டும் வெஸ்ட் திரையரங்கம் நவீன வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட திரையரங்கில் பழமையை நினைத்துப் பார்க்கும் விதமாக எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தை முதலில் திரையிட்டபோது, ரசிகர்கள் திரண்டுவந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

கைபேசிக்குக் கட்டுப்படும் வீடு...by ரிஷி

Return to frontpage

வீடுகளின் உருவாக்கம் காலம்தோறும் பல மாறுதல்களைச் சந்தித்துவருகிறது. நவீனத் தொழில்நுட்பம் வளர வளர அதன் சாதகமான அம்சங்களை, வீடுகளின் உருவாக்கத்தில் பயன்படுத்த கட்டுமான நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. ஆட்டோமேஷன் எனும் தொழில்நுட்பம் பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் பயன்பட்டு வருகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியால் அனைத்துக் கருவிகளையும் உபகரணங்களையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இயலும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை தாங்கள் உருவாக்கும் புது வீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி நுகர்வோரைக் கட்டுமான நிறுவனங்கள் கவர்ந்திழுக்க விரும்புகின்றன. இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட வீடுகள் ஸ்மார்ட்டானவை என்பதால் அவை ஸ்மார்ட் ஹோம்கள். ஸ்வீட் ஹோம் என்பது ஸ்மார்ட்டாக மாறுவது இனிப்பான செய்திதானே.

அப்படியென்ன வழக்கமான வீடுகளில் இல்லாத சிறப்பான அம்சங்கள் இந்த ஸ்மார்ட் வீடுகளில் உள்ளன என்று தோன்றுகிறதா. பல சமயங்களில் வீட்டைப் பூட்டினோமா இல்லையா? வீட்டில் ஏசியை நிறுத்தினோமா இல்லையா எனும் சந்தேகம் அலுவலம் செல்லும் வழியில் ஏற்படும். அந்த நாள் முழுவதும் மனதில் ஒரு மூலையில் இந்த எண்ணம் அரித்துக்கொண்டேயிருக்கும்.

மாலையில் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தால் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கும். ஆனால் அந்த நாள் முழுவதையும் நாம் பதற்றத்துடனேயே கழித்திருப்போம். இது சாதாரணமாக வீடுகளில் நமக்கு ஏற்படும் அனுபவமே. இதுவே ஸ்மார்ட் ஹோமாக இருந்தால் இந்தச் சிக்கலே இல்லை. ஏனெனில் உங்கள் வீட்டை நீங்கள் உங்கள் மொபைலிலிருந்தே கட்டுப்படுத்த முடியும். வீட்டில் உள்ள மின்சார, மின்னணுச் சாதனங்களை ஸ்மார்ட் ஃபோனின் உதவியுடன் கட்டுப்படுத்திவிடலாம்.

அலுவல் காரணமாக வீட்டுக்கு வெளியே நாம் இருக்கும்போது வீடு தொடர்பாக நமக்கு ஏற்படும் பெரும்பாலான கவலையிலிருந்து நம்மை விடுவிக்கிறது இந்தத் தொழில்நுட்பம் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இதைப் போன்ற ஸ்மார்ட் ஹோம்கள் கொண்ட அடுக்குமாடி வீடுகள் பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் உருவாக்கப்பட்டுவருகின்றன.

நாம் இல்லாத நேரத்தில் நமது வீட்டுக்கு நெடு நாளைய நண்பர் ஒருவர் நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் வந்துவிட்டால் நாம் எங்கிருந்தாலும் உடனே வீட்டுக்குப் போக வேண்டிய நிலைமை இந்த ஸ்மார்ட் ஹோமில் இல்லவே இல்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயிருந்தபடியே உங்கள் நண்பரை உங்கள் வீட்டுக்குள் அனுப்பிவிடலாம்.

அது எப்படி முடியும்? வீடு பூட்டியிருக்குமே என நினைக்கிறீர்களா? அது பற்றிய கவலையே வேண்டாம். வீட்டின் கதவைப் பூட்டவும், திறக்கவுமான வசதிகள் உள்ளன. யார் வந்திருக்கிறாரே அந்த நண்பரைக் கண்காணிப்பு கேமரா வழியாக நாம் பார்த்துவிட்டு அவரை வீட்டுக்குள் அனுமதித்துவிடலாம்.

இது மட்டுமல்ல கோடை காலத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் வீட்டின் ஏசியை இயக்கிவிட்டு வீட்டுக்குச் செல்லலாம். வீட்டுக்குள் நுழையும்போதே நமது அறை குளுகுளுவென நம்மை வரவேற்கும். இந்த வசதிகளை எல்லாம் கேட்கும்போது இது ஏதோ தேவலோகத்தில் நடக்கும் கற்பனை என நினைக்கத் தோன்றுகிறதா?

ஆனால் இவை எல்லாமே நிஜத்தில் சாத்தியமாகிவருகிறது எனக் கட்டுமான நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையினர் இது போன்ற வீடுகளை அதிகம் விரும்புவதால் அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இத்தகைய வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் ஹோம்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது.

வசதிகள் எல்லாம் சரிதான். ஏற்கெனவே வீடு வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. இப்படியான வசதிகள் அதிகச் செலவை இழுத்துவைத்துவிடுமோ என்ற பயம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் ஒரு அடுக்குமாடி வீட்டின் மொத்த விலையில் 3-4 சதவீதம் வரை இதற்குச் செலவாகும் எனக் கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆனால் இதில் உள்ள ஒரே தொல்லை இணையத் தொடர்பின்மைதான். 24 மணி நேரமும் இணைய வசதி இருக்க வேண்டும். வலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் வீட்டுக்கும் நமது ஸ்மார்ட் ஃபோனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

லண்டன் வேலையை உதறிவிட்டு விவசாயத்தைக் காதலிக்கும் இளைஞர்



லண்டனில் எம்.எஸ் படித்துவிட்டு அங்கேயே கணினிப் பொறியாளராக வேலை பார்த்துவந்த விவசாயியின் மகன், சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வெள்ளரி சாகுபடியில் சாதித்து வருகிறார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது உடுக்கம்பாளையம் கிராமம். நகரத்து வாகனங்களின் இரைச்சல் இல்லாத இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகவேல். இவருடைய மூத்த மகன் எஸ். செல்வா பழனியில் பொறியியல் படித்துவிட்டு, லண்டனில் எம்.எஸ். படிப்பில் சேர்ந்தார்.

பிறகு அங்கேயே கணினிப் பொறியாளர் ஆனார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிறு வயது முதல் பார்த்துப் பார்த்து வளர்ந்த மண்ணின் மீது கொண்ட நேசம் காரணமாக வேலையை உதறிவிட்டுத் தாய்நாடு திரும்பினார். தற்போது உடுக்கம்பாளையத்தல் வெள்ளரி சாகுபடி செய்துவரும் அவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மண் பாசம்

"சில மாதங்களுக்கு முன் லண்டனில் இருந்து திரும்பி, விவசாயம் செய்ய விரும்பு கிறேன் எனப் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத் துள்ளது. விவசாயத்தைப் பற்றி உனக்குத் தெரியாது.

அதனால் விவசாயம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என்று சொன்னார்கள். குறைந்தபட்சம் திருமணம் வரையிலாவது வெளிநாட்டு வேலையில் இருக்குமாறு சொன்னார்கள். நான் என்னுடைய முடிவில் தீர்மானமாக இருந்தேன். அடுத்து என்ன விவசாயம் செய்வது என்று யோசித்தேன்.

அப்பாவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வேளாண் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தேன். அவர்களுடைய ஆலோசனைக்கு ஏற்பப் பசுங்குடில் அமைத்து வெள்ளரி விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். எங்களுடைய தென்னந் தோப்புக்குள் 25 சென்ட் பரப்பளவில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தி, நிலத்தைச் சமன் செய்தேன்.

அதில் ரூ. 10 லட்சம் செலவில், புற ஊதாக் கதிர்களைத் தாங்கி சமன் செய்யும் பாலி எத்திலீன் பொருளைக் கொண்டு 2,500 சதுர அடி பரப்பளவில் கூடாரம் அமைத்து, கலப்பின வெள்ளரி ரகம் சாகுபடி செய்துள்ளேன்.

மானியத்தில் மாற்றம்

இதில் 40 நாட்கள் தொடங்கி 120 நாட்கள்வரை 12 டன் விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். முழுவதும் ரசாயன உரமாக இல்லாமல், 50 சதவீதம் இயற்கை உரம் கலந்து பயன்படுத்தி யுள்ளேன். தோட்டக்கலைத் துறை மூலம் பசுங்குடில்களுக்கு 50 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது.

அதேநேரம் பசுங்குடிலைச் சொந்தச் செலவில் செய்து முடிக்க வேண்டும். முதல் அறுவடைக்குப் பின்புதான் மானியம் வழங்கப்படும் என்று தற்போதுள்ள நிலையை மாற்றி, ஒவ்வொரு கட்டமாக மானியத்தை அரசு வழங்கினால், என்னைப் போலவே பலரும் விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டுவார்கள்" என்கிறார் இளம் விவசாயி செல்வா.

எதிர்காலத்தில் அதே கூடாரத்தில் பலவேறு காய்கறி வகைகளைச் சாகுபடி செய்யவும், அவற்றை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

விவசாயி செல்வா தொடர்புக்கு: 9698443675

கொழுப்பு அதிகமாகிப் போச்சா?



‘உனக்குக் கொழுப்பு அதிகமா போச்சு!’ என்று நம்மைப் பார்த்து யாராவது சொன்னால் கோபம் வரும். ஆனால் அதையே மருத்துவர் சொன்னால் பயம் வரும், கவலை வரும்; அப்படித்தான் வர வேண்டும்.

நோயாளியின் உடலமைப்பைப் பார்த்தே பல விஷயங்களை மருத்துவர்கள் ஊகித்துவிடுவார்கள். மறைந்த டாக்டர் ரங்காச்சாரி இந்தத் திறமையை அதிகம் பெற்றிருந்தார் என்று சொல்வார்கள். நோயாளி தன்னை நோக்கி நடந்துவருகிற தினுசைப் பார்த்தே, அவருக்கு என்ன கோளாறுகள் என்று கண்டுபிடித்துவிடுவாராம். சென்னை அரசு பொது மருத்துவமனை வாயிலில் அவருக்குச் சிலை வைத்துப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள்.

எனது மருத்துவ நண்பருக்கு நோயாளியின் இடுப்பிலும் பிட்டத்திலும் கவனம் அதிகமாகப் பதியும். பெரிய தொப்பையும் மெலிந்த கால்களும் கொண்டவர்களை அவர் ‘பம்பரம்’ என்று குறிப்பிடுவார். இடுப்புவரை மெலிந்தும் அதற்குக் கீழே பிட்டங்களும் தொடைகளும் பெருத்திருப்பவர்களை ‘சுரைக்காய்’ என்று அழைப்பார்.

வயது, உயரம், எடை, உடல்நலம் போன்றவையெல்லாம் சமமாக உள்ளவர்களில், சுரைக்காய் மனிதர்களைவிட பம்பர வடிவ மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

நல்லதும் கெட்டதும்

பொதுவாக ஆண்களுக்கே பம்பர வடிவம் அதிகமாக அமைகிறது. பெரும்பாலான பெண்கள் சுரைக்காய் வடிவத்தில் இருக்கிறார்கள். ஆகவே, சராசரியாக ஆண்களைவிடப் பெண்கள் குறைவான உடல்நலக் குறைகளுடன் இருக்கிறார்கள்.

உடலில் கொழுப்புச்சத்து உபரியாகிறபோது, அது ஆண்களுக்குத் தொப்புளைச் சுற்றித் திரளும். இது மிகவும் ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களின் உடலில் உபரியாக உருவாகும் கொழுப்பு பிட்டங்களிலும் தொடைகளிலும் போய்ச் சேருகிறது.

இதயக் கோளாறுகள், ரத்தக் குழாய் அடைப்பு, நீரிழிவு போன்றவை தாக்கும் வாய்ப்புகளைக் கண்டறிய ஓர் எளிய உத்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேராக நின்றுகொண்டு தொப்புள் மட்டத்தில் இடுப்புச் சுற்றளவையும், பிட்டங்கள் பெருத்திருக்கிற இடத்தின் சுற்றளவையும் அளக்க வேண்டும்.

இடுப்புச் சுற்றளவைப் பிட்டச் சுற்றளவால் வகுத்தால் இடுப்பு-பிட்டத் தகவு என்ற எண் கிடைக்கும். ஆண்களுக்கு இது அதிகபட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்சவரம்புகளைவிடக் குறைவாயிருப்பதே நல்லது. உச்சவரம்பை மீறினால் உபத்திரவம்தான்.

கொழுப்பு ஆபத்து

ஆண்களுக்குத் தொப்புள் பகுதியில் கொழுப்பு சேருவது ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களுக்குப் பிட்டத்திலும் தொடையிலும் சேருவதால் பெரிய தீங்கேதும் ஏற்படாது. சில பேருக்குக் கால்களில் ரத்தக் குழாய்கள் பெருத்து முண்டும் முடிச்சுமாகத் தெரியலாம். மற்றவர்கள் அதைக் கவனிக்கும்போது கூச்சமாயிருக்கும். அதை எளிதாகச் சரி செய்துவிடலாம்.

பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும். ஆனால் ஆண்களின் தொப்பையில் கொழுப்பு அடி வயிற்றுப் புழையிலும் சிறுகுடல் பகுதியிலும் திரளும். தோலின் அடியில் திரளும் கொழுப்பு கொஞ்சம்தான். தொப்புளுக்கு அருகில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பயன்படுத்திக் கிள்ளிப் பார்க்கிறபோது ஒரு அங்குலத் தடிமனுக்கு மேல் சதை சிக்கினால் கொழுப்பு ஏறிவிட்டதாக அர்த்தம்.

வயிறு முழுக்க பெண்களுக்கு இடுப்பைச் சுற்றிக் கொழுப்பு சேர்ந்தாலும் அதேநேரம் பிட்டத்திலும் சேர்ந்து பிட்டம் பெருத்துவிடுவதால் இடுப்பு-பிட்டத் தகவு அதிகமாகாது. பெண்களின் தோலுக்கும் தசைச் சுவருக்கும் இடையில்தான் கொழுப்பு அதிகமாகச் சேரும்.

கிள்ளினால் மடிப்பு தடிமனாக இருக்கும். கொழுப்பு அடிவயிற்றுப் புழைக்கு வெளியில்தான் சேர்ந்திருக்கும். ஆண்களுக்கோ கொழுப்பு தசைச் சுவர்களுக்கு உள்ளேயும் பரவி, அடிவயிற்றுப் புழையில் குடல்களையும் மற்ற உறுப்புகளையும் மூடியிருக்கும்.

அவ்வாறானவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய நேரும் மருத்துவர்களுக்கு எரிச்சலாக வரும். வயிற்றைத் திறந்து பார்க்கிறபோது எல்லா உள்ளுறுப்புகளையும் மஞ்சள் நிறத்தில் கொழுப்புப் படலம் பாளம் பாளமாக மூடியிருக்கும். குடல் வாலையோ, பிற பகுதிகளையோ தொட்டுப் பார்க்க முடியாமல் இடைஞ்சல் செய்யும். அதை அறுப்பதும் கடினம், தைப்பதும் கடினம்.

இதய நோய்

குடல்களை மூடியவாறு பெரிடோனியம் என்ற சவ்வு உறை உள்ளது. அதில் பிரிஅடிபோசைட்டுகள் எனும் செல்கள் உள்ளன. அடிவயிற்றில் கொழுப்பு சேரும்போது அவற்றில் டிரைகிளிசரைடுகள் என்ற கொழுப்பு அமிலங்களும், கொலஸ்ட்ராலும் நிறைந்து பெரிடோனியம் ஆங்காங்கே வீங்கித் தடித்துவிடும். இவ்வாறு கொழுப்பேறிவிட்ட பின், அந்தச் செல்களின் சுறுசுறுப்பும் வீரியமும் அதிகமாகிவிடும். அவை கல்லீரலுக்குச் செல்கிற ரத்தக் குழாய்களுக்குள் புகுந்தால் ஆபத்து ஆரம்பமாகிறது.

கல்லீரலுக்குள் கூடுதலாகக் கொழுப்பு அமிலங்கள் வந்து சேரும்போது, அது குறைந்த அடர்த்தியுள்ள லிப்போ புரதங்களைக் கூடுதலாக உற்பத்தி செய்து ரத்தக் குழாய்கள் மூலம் இதயத்துக்கும் நுரையீரல்களுக்கும் அனுப்பும். லிப்போ புரதங்களில் ஒரு பகுதி கெட்ட கொலஸ்ட்ராலாக மாறி ரத்தக் குழாய்களின் உட்பரப்பில் படியும். அதன் காரணமாக ரத்தக் குழாய்கள் சேதமடைந்து இதய நோய்களுக்கு வழிகோலும்.

இடுப்பு-பிட்டத் தகவு அதிகமாயிருப்பவர்களுக்கு இவ்வாறான கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் அதிகம். உடல் எடையைக் குறைத்தால் அவை குறையும்.

தேவை கவனம்

பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும் தொடைகளும் இளைக்காது. அவ்விடங்களில் உள்ள கொழுப்பு செல்கள் விடாப்பிடியானவை. தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காகத் தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவும். சிசுக்களின் பாதுகாப்புக்காக இயற்கை, இம்மாதிரி ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது.

ஊட்டப் பற்றாக்குறை காரணமாகத் தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால் பிட்டங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடுசெய்கிறது.

எனவே, பெண்களைப் பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற பேராசிரியர்

விமான சக்கரத்தில் மறைந்து பயணம் செய்த இளைஞர்: இந்தோனேசியாவில் நூதன சம்பவம்



இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் விமானத்தின் முன் சக்கர பகுதியில் (லேண்டிங் கியர்) மறைந்து கொண்டு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சாகசம் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இருந்து தலைநகர் ஜகார்த் தாவுக்கு நேற்று சரக்கு விமானம் ஒன்று வந்தது. அது தரையிறங்கிய பிறகு அதன் முன் சக்கர பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வெளியே வந்தார். இதைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

அவரைப் பிடித்து விசாரித்த போது அவரது பெயர் மரியோ ஸ்டீவ் அப்ரிடா(21) என்பது தெரிய வந்தது. விமானம் சுமத்ராவில் கிளம்புவதற்கு முன்பு முன் சக்கர பகுதியில் சென்று மறைந்து கொண்டுள்ளார். விமானங்களில் பொதுவாக தரையிறக்கும்போது சக்கரம் வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இளைஞர் விமானத்தின் முன் சக்கரம் உள்பகுதியில் புகுந்து மறைந்திருந்துள்ளார்.

விமானம் சுமார் 2 மணி நேரம் வானத்தில் பறந்துள்ளது. மேலும் 34 ஆயிரம் அடி உயரம் வரை சென்றதால் அப்போது அவருக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதும் சிரமமாக இருந்திருக்கும். வெப்ப நிலை மைனஸில் இருந்ததால், கடும் குளிர் காரணமாகவும் அவர் மரணமடைந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தாக்குப் பிடித்து அந்த இளைஞர் உயிருடன் தரையிறங்கிவிட்டார்.

விமானத்தில் இருந்து இறங்கி யபோது அவரது காதில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை விபத்துக்குள் ளாக்க முயற்சித்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...