Sunday, April 26, 2015

விதிமுறையும் நடைமுறையும்!

Dinamani

பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தார்மிக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், செயல்பாடுகளையும், சட்டம் போட்டும், உத்தரவு பிறப்பித்தும், விதிமுறைகளை உருவாக்கியும் உறுதிப்படுத்துவது என்பது எந்த அளவுக்கு நமது நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது என்பதைத்தான் அடையாளப்படுத்துகிறது. மாநில ஆளுநர்களும், இந்தியக் குடிமை, காவல், வெளியுறவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளும் அவர்களாகவே கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அரசு உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்த முற்பட்டிருப்பதை வரவேற்பதா, துரதிர்ஷ்டம் என்று வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.

மாநில ஆளுநர்களுக்குப் புதிதாகப் பதினெட்டு அம்ச சட்ட திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, மாநில ஆளுநர்கள் விருப்பப்படி சொந்த மாநிலத்துக்கு அடிக்கடி சென்றுவிட முடியாது. ஆண்டொன்றுக்கு 73 நாள்கள், அதாவது 20% நாள்கள் மட்டுமே, பதவி வகிக்கும் மாநிலத்தை விட்டு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள முடியும் என்கிற கட்டுப்பாட்டை ஆளுநர்களுக்கு விதித்திருக்கிறது நரேந்திர மோடி அரசு.

தங்களது தனிப்பட்ட அலுவல், குடும்ப நிகழ்வுகளைக்கூட அரசுமுறைப் பயணமாக்கிச் சொந்த மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஆளுநர்கள் அடிக்கடி பயணிக்கும் போக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இனிமேல், மாநில ஆளுநர்களும், துணைநிலை ஆளுநர்களும் உள்நாட்டுப் பயணமாக இருந்தால் ஒரு வாரம் முன்பாகவும், வெளிநாட்டுப் பயணமாக இருந்தால் ஆறு வாரங்களுக்கு முன்பாகவும் குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற்றாக வேண்டும். அவசர நிமித்தம் உள்நாட்டுப் பயணம் மேற்கொண்டால், பயணம் செய்த பிறகு அல்லது புறப்படும் முன்பு குடியரசுத் தலைவரிடம் அறிவித்தால் போதும். வெளிநாட்டுப் பயணமாக இருந்தால் இதுவும் அனுமதிக்கப்படவில்லை.

முந்தைய மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அகற்றப்பட்டு, மோடி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் ஆளுநர்களாக இருக்கும் நிலையில், இதற்குப் பின்னால் அரசியல் பழிவாங்குதல் இருக்கிறது என்று யாரும் குற்றம்சாட்ட முடியாது. மூதறிஞர் ராஜாஜி குறிப்பிட்டதுபோல, ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. அதற்கு அன்றாடத் தேவை இல்லாவிட்டாலும், திடீர் அவசியம் நேரும்போது தயாராக இருத்தல் வேண்டும். ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு, நரேந்திர மோடி அரசின் பாராட்டுதற்குரிய நிர்வாக முடிவுகளில் ஒன்று.

அடுத்ததாக, இந்திய குடிமைப் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் ரூ. 5,000-க்கும் அதிக மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து ரூ.25,000-க்கு அதிகமான பரிசுப் பொருள்களைப் பெற்றால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ரூ.5,000 மதிப்புள்ள பரிசுப் பொருள் மட்டுமல்ல, இலவச கார் அல்லது வாகனத்தைப் பயன்படுத்துதல், விமான டிக்கெட் பெறுதல் அல்லது தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குதல், அவர்கள் செலவில் 5 நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடுதல் போன்றவையும் அடங்கும்.

இந்த நடைமுறை புதியதல்ல. இதுநாள் வரை இதே நிபந்தனையானது, பரிசுப் பொருளுக்கு ரூ.1,000 ஆகவும், உறவினர்களிடமிருந்து பெற்றால் தெரிவிக்க வேண்டிய பரிசுப் பொருள் மதிப்பு ரூ.5,000 ஆகவும் இருந்தது. தற்போது இதன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வளவுதான். ஆனால், இந்த நிபந்தனையை மீறியவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? யாராவது தண்டிக்கப்பட்டார்களா என்றால், இல்லை.

2014-15ஆம் நிதியாண்டுக்கான அசையாச் சொத்து விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசின் குரூப் ஏ, பி, சி பிரிவு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையும் புதிதல்ல. ஆனாலும், பலரும் இதைத் தாக்கல் செய்வதே இல்லை. இதற்காக எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

1991-ஆம் ஆண்டு முதலாக இதுநாள் வரை 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஆனால், இவர்களில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இவர்களில் சிலர் ஓய்வு பெற்று சென்றுவிட்டார்கள். இவர்களில் பலர் மீது வழக்குத் தொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தும் வழக்குகள் முடிவுறவில்லை.

அரசியல்வாதிகள் ஊழல் செய்தால், அடுத்த தேர்தலில் அவர்களைத் தண்டிக்கும் வாய்ப்பு மக்களாட்சியில் குடிமகனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு அதிகாரியோ, நீதித் துறையில் இருப்பவர்களோ எந்தவிதக் கேள்வி கேட்புக்கும் உள்பட்டவர்களாக இல்லை. அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் ஆகியோரின் நடவடிக்கையைக் கண்காணிக்க ஏதாவது அமைப்பு இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.

ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி விடலாம். அரசு அதிகாரிகளை இதுபோன்ற உத்தரவுகள் கட்டுப்படுத்துமா, அவர்கள் அதைப் பின்பற்றுவார்களா என்பது சந்தேகம்தான். உத்தரவைக் காட்டி பயமுறுத்தவாவது முற்பட்டிருக்கிறார்களே, அதுவரைக்கும் மகிழ்ச்சி!

ஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை ராமானுஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு..



கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில் தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட பொழுது அவருக்கு வயது பத்துக்குள்



அவருக்கு கணிதத்தின் மீது ஈடிலா ஆர்வம் வருவதற்கு ஒரு எளிய சம்பவம் காரணம் .,அவரின் நண்பன் சாரங்கபாணி நாற்பத்தி ஐந்துக்கு நாற்பத்தி மூன்று வாங்கியிருந்தார் .இவர் ஒரு மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்தார் ,அதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டு கணிதத்தில் கல்லூரி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார் .லோனியின் மட்ட திரிகோணவியல் ஒரு நூல் ;இன்னொன்று காரின் சினாப்சிஸ் .இந்த நூலின் சிக்கல் இது கல்லூரி மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய அல்லது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சூத்திரங்கள்,தேற்றங்களை குறிப்பிட்டு இருக்கும் .எப்படி வந்தது என விளக்கம் இருக்காது . அதைப்படித்து தான் ராமானுஜன் தன் கணித தாகத்தை தணித்துக்கொண்டார் .அவரே அது எப்படி வந்தது என கண்டறிந்தார் .பேப்பர் வாங்க காசில்லாததால் ஸ்லேட்டில் கணக்குகளை போட்டு பார்த்து விட்டு முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதினார் .குமபகோணம் அரசு கல்லூரியில் மூன்று முறை முயன்றும் ஆங்கிலத்தில் தேற முடியாமல் பட்டம் வாங்க முடியாமல்,பச்சையப்பா கல்லூரி போனார் .


அங்கே சிங்கார முதலியாரின் அறிமுகம் கிடைத்தது .இவரின் சூத்திரங்கள் அவரை கவர்ந்தன .எண்ணற்ற நூல்களை படித்தார் .சென்னை துறைமுகத்தில் எழுத்தராக சேர்ந்தார் ;இந்தியாவில் வந்த கணித இதழில் எண்ணற்ற கணக்குகளை வெளியிட்டு கொண்டிருந்த இந்திய கணிதக் குழுவை நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர் கண்ணில் இவரின் கணக்குகள் பட்டன ;கூடவே கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற துறைமுக தலைவர் ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் கண்ணில் பட்டது .அவர் கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் தந்தார் ,அவர்கள் இவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு கடிதம் எழுத சொன்னார்கள் .

எண்ணற்ற நபர்களுக்கு இவரின் சூத்திரங்கள் போய் சென்றன.பலர் குப்பையில் போட்டார்கள் பயின்ற காட்பிரே ஹரால்ட் ர்டிக்கு கடிதம் போனது .அதில் இருந்த வரிகள் இவை “எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிகஅரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்”

ஜனவரி பதினாறு அன்று 1913 இல் அக்கடிதம் ஹார்டியின் கைக்கு போனது; எதோ கிறுக்கல் என நினைத்து முதலில் எடுத்து வைத்த ஹார்டி இரவு படிக்கும் பொழுது மெய்சிலிர்த்து போனார்; இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து ஒரு இணையற்ற கணித மேதையை கண்டுவிட்டதற்கு பூரித்தார். உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.

அங்கே ஓயாமல் பல்வேறு எண் கோட்பாடுகளில்,செறிவெண் சார்ந்தும் அவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை ;அவரின் தேற்றங்கள் கண்டுபிடிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் அளவுக்கு எளிமையானவை இல்லை .அவரின் பல கணித தேற்றங்கள் இன்றைக்கு [Computer Algorithmsல் பயன்பட்டு சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன..எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறியவை இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.

அத்தோடு அவரின் எல்லையற்ற திறமையை கண்டு வியந்து அவருக்கு இன்றைய முனைவர் பட்டத்துக்கு இணையான பட்டத்தை ட்ரினிட்டி கல்லூரி வழங்கியது .ராயல் சொஸைட்டியில் அவரை பெல்லோவாக சேர்த்துக்கொண்டார்கள் . ராமானுஜத்தை தொடர்ந்து கொண்டாடிய ஹார்டியின் வரிகளில் “எனக்கு 25 மதிப்பெண்ணும், தலைசிறந்த ஜெர்மன் கணித வல்லுநர் டேவிட் ஹில்பெர்ட்டுக்கு 80 மதிப்பெண்ணும், சந்தேகமே இல்லாமல் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் வழங்குவேன் “என்றார்.

அவரின் பல்வேறு படைப்புகள் பல நோட் புத்தகங்களில் இருந்தன .அவற்றை கண்டு பிடித்து எடிட் செய்யும் வேலையை ர்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் எனும் இரண்டு அறிஞர்கள் செய்து வருகிறார்கள் .ப்ரூஸ் பெர்ண்ட் என்ன சொல்கிறார் என்றால் ,”கிட்டத்தட்ட இரண்டாயிரம் முடிவுகளை இதுவரை அவரின் நோட்களில் கண்டு இருக்கிறோம் .இதில் தொன்னூறு சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது .இவ்வளவு வெற்றி விகிதம் எந்த கணித மேதைக்கும் இல்லாதது !”என்கிறார் “அவரின் கணித முடிவுகள் ஆய்லர்,ஜகோபி போன்ற கணித மாமேதைகளுக்கு இணையாக ஒப்பிடும் தரத்தில் இருந்தது” “என்றும் ஹார்டி கூறியுள்ளார்.

ராமானுஜம் காசநோயால் முப்பத்தி மூன்று வயதில் மரணம் அடைந்தார் .அப்பொழுது அவருக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை . கடல் கடந்து போனதற்காக அவரை ஜாதி விலக்கு செய்திருந்தார்கள் . அவர் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள். காலங்கள் கடந்தாலும் மேதைகளுக்கு இதுதான் நிலைமை போலும்

ஆங்கிலத்தில் தேறாமல் இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவு வெளிச்சத்தால் கணித உலகின் துருவ நட்சத்திரமாக திகழும் ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று.

- பூ.கொ.சரவணன்

குவைத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை 8 லட்சம்: வீட்டு வேலை செய்வோர் அதிகம்

குவைத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள விவரம்: குவைத்தில் அதிகம் வாழும் வெளிநாட்டினர் என்ற சிறப்பை இந்திய சமூகம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் எகிப்து நாட்டவர் உள்ளனர். குவைத்தில், விசா காலாவதியான பிறகும், சட்டப்புறம்பாக தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 25 ஆயிரமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் எவ்வளவு?

செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவில் குவைத் வாழ் இந்தியர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குவைத்தில், இந்தியர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 5 முதல் 6 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது, இங்கு இந்தியாவைச் சேர்ந்த, 6 லட்சம் ஆண்களும், 2 லட்சம் பெண்களும் உள்ளனர். இவர்களில், 2.80 லட்சம் பேர் வீட்டு வேலை செய்கின்றனர். அதில், 1.90 லட்சம் பேர் ஆண்கள்; 90 ஆயிரம் பேர் பெண்கள். வீட்டு வேலை, தோட்ட வேலை, ஓட்டுனர், சமையல், துப்புரவு உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், வீட்டு வேலை செய்வோருக்கு, 2,500 டாலர் வங்கி உத்தரவாதம் அளிக்கும் திட்டம் அறிமுகமானது. இதன் காரணமாக, குவைத்தில், வீட்டு வேலை செய்யும் இந்தியர்கள் அதிகரித்துள்ளனர். பெரும்பாலான இந்தியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள், கட்டுமானம், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், பட்டய கணக்கு தணிக்கையாளர்களாகவும், ஐ.டி., வல்லுனர்களாகவும் உள்ளனர்.

கல்வி மையங்களில்...:


இவர்களை சார்ந்து, மனைவி, குழந்தைகள் என, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். 42 ஆயிரம் மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட இந்திய கல்வி மையங்களில் படிக்கின்றனர். குவைத்தில், இந்தியருக்கு, பல்கலை., மட்டத்திலான கல்வி வசதி கிடையாது. சென்ற ஆண்டு, குவைத்தில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிவில் கட்டுமான பணிகள் வழங்கப்பட்டன. இதனால், தனியார் துறை நிறுவனங்களில், இந்தியர்களின் பங்களிப்பு, 8 சதவீதம் அதிகரித்தது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குவைத் அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய எண்ணெய் நிறுவனங்களில், 24 ஆயிரம் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் செவிலியர்களாகவும், பொறியாளர்களாகவும் உள்ளனர். மிகச் சிறிய அளவில் இந்திய விஞ்ஞானிகளும், குவைத்தில் உள்ளனர். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஹவுஸ்புல்': ரயில், பஸ்களில் ஜூன் 10ம் தேதி வரை டிக்கெட் இல்லை: கோடை விடுமுறைக்கு செல்லும் பயணிகள் திணறல்

பள்ளித் தேர்வுகள் முடிந்துள்ளதால், கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில்களில் முன்பதிவு, 'ஹவுஸ்புல்' என்ற நிலையை தாண்டி, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுள்ளது. நெடுந்தூர அரசு விரைவு பஸ்களிலும் ஜூன் மாதம், 10ம் தேதி வரை, பெரும்பாலான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்கு, சென்னை, கோவை, சேலம், மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆன்மிக சுற்றுலா, கோவில் திருவிழா, உறவினர் வீட்டிற்கு செல்வது, ஊட்டி, கொடைக்கானல் என, கோடை வாசஸ்தலங்களுக்கும், விடுமுறைக்கு செல்வோர் அதிகம். இதனால், ரயில் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பிளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்ததை அடுத்து, கடந்த, இரண்டு வாரங்களாக ரயில்களில் முன்பதிவு சூடுபிடித்தது.

காத்திருப்போர் பட்டியல்:

தற்போது முன்பதிவு உச்சத்தை அடைந்துள்ளது. இதன் தாக்கமாக, ஜூன், 10ம் தேதி வரை, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும், குருவாயூர், திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், அனந்தபுரி, நெல்லை, பாண்டியன், பொதிகை என, அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று உள்ளது. சேலம், கோவை மார்க்கமாக செல்லும் நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் என்ற நிலையே நீடிக்கிறது. தஞ்சை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் முன்பதிவு முடிந்துள்ளது. ரயில் முன்பதிவு முடிந்துள்ளதால், அடுத்தகட்ட முயற்சியாக, அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், முக்கிய வழித்தடங்களில் சில சிறப்பு பஸ்களை களம் இறக்கி உள்ளது. இந்த சிறப்பு பஸ்களிலும், உடனுக்குடன் முன்பதிவு முடிவுக்கு வந்து விடுகிறது. வசதியின் அடிப்படையில் பெரும்பாலான பயணிகள் ஆம்னி பஸ்களில் பயணிப்பதால், ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இப்படி, ரயில், பஸ்களில் முன்பதிவு முடிவுக்கு வந்து உள்ளது.

சிறப்பு ரயில்கள்:

தற்போது, நெல்லை, மதுரைக்கு மட்டும் சில சிறப்பு ரயில்களை, ஓரிரு நாட்களுக்கு தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இது, பயணிகளுக்கு பெரியளவில் உதவவில்லை. தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மார்க்கங்களில் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட வேண்டும். தற்போது, ஆறு முதல் எட்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், இம்மாதத்துடன், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு தேர்வுகளும் முடிகின்றன. இதனால், மே மாதம் முழுவதும் ரயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு, பயணிகள் அதிகளவில் படையெடுப்பர். தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில், வாரத்திற்கு குறைந்தபட்சம், மூன்று நாட்களுக்கு என்ற அடிப்படையில், சிறப்பு ரயில்கள் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள்?

கோடை விடுமுறையின் போது, ஊட்டி, கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கிவிடும். மேலும், சுட்டெரிக்கும் வெயில் சூழலில் இருந்து தப்பிக்க, இந்த இடங்களுக்கு செல்வோர் அதிகம். இதனால், முக்கிய நகரங்களில் இருந்து, ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிகளவில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என, பயணிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

HC confirms no pension for those who quit govt. jobs

The Madras High Court Bench here has refused to direct Commercial Taxes Department and the Accountant General (Accounts and Entitlements) to grant monthly pension along with arrears to a Junior Assistant who had resigned from service way back in 1978.

Dismissing the writ petition filed by the former employee K.R. Krishnamoorthy, Justice S. Vaidyanathan said such a direction could not be issued since the Tamil Nadu Pension Rules, 1978 do not contemplate grant of pension to government servants who had resigned from service on their volition.

“From a reading of the rules, it is very clear that those who had resigned from service entails forfeiture of past service. In the present case, since the petitioner had resigned from service, he is not entitled to the relief sought for in this writ petition,” the judge observed.

In his affidavit, the writ petitioner had claimed to have joined the Commercial Taxes Department as a Lower Division Clerk in 1967 and to have completed probation in the cadre of Junior Assistant in 1974 before resigning the job, due to family problems, in 1978.

Thereafter, he made several representations to the government authorities seeking grant of monthly pension but his efforts did not fructify and hence he had filed the present writ petition in 2013 with a plea to order grant of pension as well as the arrears.








Opposing the plea, the Accountant General stated that pension would not be granted to employees who had resigned from the job irrespective of the number of years they had served the government. The benefit was only for those attain the age of superannuation, die in harness or retire voluntarily.

Kumbakonam Junction to be Mahamaham-ready by December

Of the Rs. 4-cr. worth proposals sent to Railway Board, Rs.1 cr. sanctioned already

All works related to railway facility improvement in Kumbakonam will be completed by December, well ahead of the Mahamaham slated for February next, according to Southern Railway General Manager Ashok Kumar Aggarwal.

Speaking to the media after inspecting the development works at Kumbakonam Junction on Friday, Mr.Aggarwal said proposals worth Rs. 4 crore have been forwarded to the Railway Board for improving facilities in the junction and meeting the needs of devotees during the Mahamaham.

The Railway Ministry has so far released Rs.1 crore following which some of the important works have been taken up, he said. They included platform extension to accommodate 24 coaches, overbridge for Platform Three, additional sanitation and drinking water amenities, among other things. The railways has already remitted Rs. 16 lakh as fee to the Kumbakonam Municipality to connect the drainage lines to the main underground drainage system.

In the run up to the Mahamaham, special train services would be operated for 20 days and 50 temporary toilets and bathing sheds would be installed on the junction premises.

Mr.Aggarwal assured that all development works in Kumbakonam junction would be completed by December to meet the Mahamaham rush in February. All stations in the Thanjavur-Mayiladuthurai section would get a facelift ahead of the festival, he said. On the track doubling work apace in the Tiruchi Division, Mr.Aggarwal said while the Golden Rock-Thanjavur section work would take another two years to be completed, survey on the Kumbakonam-Villupuram stretch has been completed at a cost of Rs. 2 crore and has been forwarded to the Railway Ministry for approval.

Divisional Railway Manager, Tiruchi, Atul Kumar Aggarwal, Senior Divisional Operations Manager Rathi Priya, Senior Divisional Commercial Manager Padmadoss, and other railway officials were present.

King Institute may house National Institute of Ageing

About eight acres of the King Institute of Preventive Medicine’s campus may soon house the National Institute of Ageing.

A five-member Central government team, which is in the State to examine sites for the establishment of an All India Institute of Medical Sciences (AIIMS), arrived in Guindy on Saturday morning to take a look at the campus.

Speaking to the press, Dharitri Panda, joint secretary, ministry of health and family welfare, said the team has noted there are many trees on the Guindy campus, and have asked for a mapping of the trees in order to minimise damage during construction of the institute.

“The institute will be a 200-bed specialist geriatric facility linked to Madras Medical College (MMC). We can increase the number of beds later, if necessary. Research, training and producing specialists are among its aims.

There will be 15 postgraduate seats in geriatric medicine at the institute,” she said.

The Rs. 150-crore project has been approved in the 12{+t}{+h}Five Year Plan, she said. Among other facilities, the institute will have a Frail Elderly Clinic, an Aids and Appliances Clinic, and an Implants and Cosmetic Clinic.

The institute will be one of only two in the country, with the other at AIIMS in Delhi. “We decided to locate the institute in Chennai partly due to MMC’s contribution to this field,” she said.

GGH Block

Rajiv Gandhi Government General Hospital (GGH) is set to get a new tower block for outpatients.

The hospital will also get a block for the urology and nephrology departments as well as a separate rheumatology block, said J. Radhakrishnan, State health secretary, at the golden jubilee celebrations of the urology department on Friday.

S. Geethalakshmi, director of medical education, said the kidney transplants performed by the department had helped a number of patients. She also highlighted the importance of starting fellowship courses for specific surgeries as well as holding live workshops.

R. Vimala, hospital dean, said a postgraduate students’ hostel is also coming up.





4th medical college in city unlikely before September

CHENNAI: The grand opening of Government Medical College and Hospital at Government Omandurar Estate, Chennai's fourth medical college, is likely to be put off till September. On Friday, the government announced sale of MBBS/BDS forms for 19 medical colleges from May 11, which account for 2,555 seats, but was silent on inaugurating the new college.

This comes close on the heels of the Global Investors Meet being deferred due to the impending verdict on an appeal by AIADMK chief J Jayalalithaa in the disproportionate wealth case. The construction of college and hostel/staff quarter blocks is almost complete and hospital blocks would be ready soon. "The Medical Council of India has given an in-principle approval for admitting 100 students, but it is unlikely to be opened before the Karnataka High Court verdict in the wealth case," said a government source. The final approval from MCI is expected any time now.

The 206-crore seven-tower block on Wallajah Road in Triplicane was originally designed to accommodate secretaries and their departments. The massive medical institution is coming up on an 8.7 lakh sqft plinth area. While the main complex was converted into a multi-specialty hospital after waging a prolonged legal battle, the tower blocks were altered to accommodate a medical college and hospital.

The city has Madras Medical College (founded in 1850), Stanley Medical College (1938) and Kilpauk Medical College (1960). According to sources, the MCI team recently made a couple of visits to the Omandurar college to assess the institution.

நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் வீடுகள், சுற்றுலா தலங்கள் இடிந்து தரைமட்டம் பூமி அதிர்ச்சிக்கு 1,500 பேர் பலி இந்தியாவின் வடமாநிலங்களில் 45 பேர் சாவு

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 1,500 பேர் பலியானார்கள். 

காட்மாண்டு
இமயமலை நாடு என்று அழைக்கப்படுகிற நேபாளத்துக்கு நேற்று ஒரு கருப்பு நாளாக அமைந்து விட்டது.

சக்தி வாய்ந்த நில நடுக்கம்

அழகான அந்த நாட்டை நில நடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்தியது.

ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம், தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. வடமேற்கில் அமைந்துள்ள லாம்ஜங்கில் மையம் கொண்டிருந்தது. அது, காலை 11.56 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11.41 மணி) தாக்கியது. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 10–க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவுகோலில் 4.5 மற்றும் அதற்கு அதிகமான புள்ளிகளாக பதிவாகின.

கட்டிடங்கள் தரைமட்டம்
இந்த நில நடுக்கம் தலைநகர் காட்மாண்டு தொடங்கி போக்ரா, லாம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி விட்டது. கட்டிடங்கள் குலுங்கியபோது, ‘நில நடுக்கம்தான் ஏற்பட்டிருக்கிறது’ என்று மக்கள் உணர்ந்து, அவற்றில் இருந்து வெளியேறுவதற்கு முன் அது தன் கோர முகத்தை காட்டியது. எங்கு பார்த்தாலும் வீடுகளும், அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும், கோவில்களும் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தன. அவற்றில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். நாடு முழுவதும் தகவல் தொடர்பு சாதனங்கள் செயல் இழந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பொதுமக்கள் வீடுகளை விட்டும், அலுவலகங்களை விட்டும், பிற கட்டிடங்களை விட்டும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். எங்கு பார்த்தாலும் பதற்றமும், பரிதவிப்பும், அழுகையும், மரண ஓலமும்தான் காணப்பட்டது.
மக்களுக்கு எச்சரிக்கை
நில நடுக்கம் ஏற்பட்டதும், மக்களுக்கு அந்த நாட்டு ரேடியோ எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அவசர அவசரமாக வெளியிட்டது.
அதில் நில நடுக்கத்தை தொடர்ந்து, மேலும் அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகள் உள்ளிட்ட எல்லாவிதமான கட்டிடங்களில் இருந்தும் வெளியேறி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அடையாள சின்னம் தகர்ப்பு
நில நடுக்கத்தால் மக்கள் நெருக்கம் மிகுந்த காட்மாண்டு பள்ளத்தாக்கு பகுதி உருக்குலைந்து விட்டது. அங்கு பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அங்கு மட்டுமே பல நூறு பேர் பலியானதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்தததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறின.
காட்மாண்டுவின் அடையாளச் சின்னமாக கம்பீரமாக வீற்றிருந்து, அந்த நகருக்கே அழகு சேர்த்த 183 ஆண்டு கால பழமையான ‘தாரஹரா கோபுரம்’ (‘பீம்சென் கோபுரம்’) நில நடுக்கத்தின் கோரப்பிடியில் சிக்கி, தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி 400–க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அவற்றில் இருந்து 180 உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

திறந்தவெளியில் சிகிச்சை

இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் கை, கால்கள் என உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில், காட்மாண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயம் அடைந்தவர்களுக்கு டாக்டர்கள், வீதிகளிலேயே திறந்தவெளி மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.
பனிப்பாறை சரிவுகள்

நில நடுக்கத்தை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்பாறை சரிவுகள் ஏற்பட்டதாக அந்தப் பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் புமோரி என்ற இடத்தில் இருந்து அலெக்ஸ் காவன் என்பவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டார்.
நில நடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் பலரும் மலை ஏறிக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறி உள்ளார். அங்கு 10–க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்திய தூதரகம் பாதிப்பு

காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகமும் நில நடுக்கத்தால் சேதம் அடைந்தது.
இதுதொடர்பாக அதன் செய்தித்தொடர்பாளர் அபய்குமார் கூறுகையில், ‘‘தூதரக கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து விழுந்தன. தூதரகத்தின் சார்பில் ஹெல்ப் லைன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

920 பேர் பலி

நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக தெரிய வரவில்லை. இருப்பினும் 920 பேர் பலியாகி விட்டதாகவும், 500–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வீதிகளுக்கு வந்து விட்டதாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என நேபாள அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
நேபாளத்தில் இதற்கு முன்பாக 1934–ம் ஆண்டு, ஜனவரி மாதம் 15–ந் தேதி ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவாகி இருந்ததும், 10 ஆயிரத்து 600 பேரை பலி கொண்டதும் நினைவுகூரத்தகுந்தது.

பிரதமர் மோடி உறுதி

நேபாள நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ராலா, தாய்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். நில நடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும் அவர் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
அவருடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நில நடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இந்தியாவில் 36 பேர் சாவு

நேற்றைய நேபாள நில நடுக்கத்தின் தாக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. பீகார் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் அகப்பட்டு, 36 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கம், இந்தியாவில் மட்டுமல்லாது பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Saturday, April 25, 2015

சிறைச்சாலைக்குள் பசுஞ்சோலை!

கைதிகளின் கலக்கல் விவசாயம்

சிறைச்சாலை என்றாலே... ஓங்கி உயர்ந்த மதில்சுவர், பெரிய கதவு, பறக்கும் தேசியக்கொடி, விரைப்பான காக்கிச் சட்டை அணிந்த துப்பாக்கியுடன் கூடிய காவலர்கள், சீருடையில் கைதிகள்... இதெல்லாம்தான் நினைவுக்கு வரும். இப்படி பரபரப்பாக இருக்கும் சிறைச்சாலைகளில் விவசாயமும் நடந்து வருவது ஆச்சர்யமான விஷயம்தானே. எப்போதும் பரபரப்பாக இருக்கும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் காய்கறிகள், தானியங்கள் எனப் பலவித பயிர்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்கள், கைதிகள்.

கண்காணிப்பு வீடியோ திரையைப் பார்வையிட்டுக் கொண்டே... வாக்கி டாக்கியிலும், இ்ன்டர்காமிலும் துறை அதிகாரிகளை அழைத்து ‘அங்கே என்ன கூட்டமா இருக்குறாங்க?’, ‘கைதிகளுக்குச் சாப்பாடு ரெடியாச்சா?’, ‘பரோல் கைதிகள் கிளம்பிட்டாங்களா?’ என நிமிடத்துக்கு ஒரு முறை தகவல்களைக் கேட்டுக்கொண்டு பணியில் மும்முரமாக இருந்த சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணனைச் சந்தித்தோம். பணிகளைப் பார்த்துக்கொண்டே சிறையில் பூத்த விவசாய சிந்தனை பற்றி நம்மிடம் விளக்க ஆரம்பித்தார், கருப்பண்ணன்.


வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறைச்சாலை!

‘‘1867-ம் ஆண்டு, 153 ஏக்கரில் இந்தச் சிறைச்சாலை துவங்கப்பட்டது. இங்கு, முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் பிரதமர் வி.வி.கிரி, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை என முக்கிய தலைவர்கள் பலரும் அரசியல் கைதிகளாக இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டாவது பெரிய சிறைச்சாலை இது. நானூறுக்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் இங்கு இருக்கிறார்கள்” என வரலாறு சொன்னவர், தொடர்ந்தார்.

இது தண்டனைக்கூடம் அல்ல...

மனம் திருந்துவதற்கான இடம்!

‘‘சிறைச்சாலை என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கும் தண்டனைக்கூடம் அல்ல. மனம் திருந்தி வாழ்வதற்கான இடம். இங்கு இருக்கும் அனைத்து கைதிகளும் ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை உண்டாக்குவதற்கும், சமுதாயத்துக்கு உதவும் வகையிலும் காவல்துறை அலுவலர்களுக்குத் தேவையான பூட்ஸ் தயாரித்துக் கொடுப்பது, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தேவையான நாடா கோப்புகள் தயாரித்துக் கொடுப்பது, கோர்ட் தீர்ப்பு நகல்களை பைண்டிங் செய்து கொடுப்பது, அயர்னிங் கடை நடத்துவது, முடி திருத்தகம் நடத்துவது மாதிரியான தொழில்களுடன் விவசாயத்தையும் கைதிகள் செய்கின்றனர். எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பது மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கும் பணிகளும் உண்டு” என்ற கருப்பண்ணன், விவசாயம் பற்றி விளக்க ஆரம்பித்தார்.
3

0 ஏக்கரில் முத்தான விவசாயம்!

‘‘பல ஆண்டுகளாக கைதிகள் இந்த சிறைச்சாலையில் விவசாயம் செய்தாலும், சிறப்பாக நடப்பது கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத்தான். கைதிகளின் விவசாயத்தை விரிவுபடுத்த எங்களுக்கு இருந்த எண்ணத்தை செயல் வடிவம் கொடுப்பதற்கு ஏற்றார் போல... அன்றைய தமிழக முதல்வர், சிறைத்துறை இயக்குநர் மூலம் ‘சிறைச்சாலையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான அங்காடிகளை ஆரம்பிக்க உத்தரவிட்டார். அது கைதிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்வதற்கு வசதியாக அமைந்தது.

விவசாயத்தில் ஆர்வம் இருக்கும் நன்னடத்தைக் கைதிகள் 45 பேரைத் தேர்வு செய்து, 30 ஏக்கரில் பல பயிர்களை சாகுபடி செய்கிறோம். நான், சிறைத்துறையில் வேலை பார்த்தாலும் எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். தினம் காலையில் சிறைச்சாலைக்கு வந்ததும் தோட்டத்தைப் பார்வையிட்டு, அந்த சந்தோஷத்தை அனுபவித்து விட்டுத்தான் அலுவலகத்துக்கே வருவேன். இது எனக்கு நாள் முழுவதும் சந்தோஷமான மனநிலையில் வேலை பார்க்கத் தேவையான ஊக்கத்தைக் கொடுக்கிறது.

11 மாதங்களில் `19 லட்சம் வருமானம்!

இங்கு 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை உள்ள 11 மாதங்களில் 19 லட்சத்து, 45 ஆயிரத்து, 337 ரூபாய் விவசாயம் மூலமாக வருமானமாகக் கிடைத்திருக்கிறது. செலவு போக 8 லட்சத்து, 60 ஆயிரத்து, 658 ரூபாய் நிகர லாபம். இந்த லாபத்தில் 20 சதவிகித தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டும். 20 சதவிகித தொகையை பணியாளர் நிதிக்கும், 40 சதவிகித தொகையை விவசாயச் செலவினங்களுக்கும், 20 சதவிகித தொகையை, கைதிகளுக்கு ஊக்கத்தொகையாகவும் வழங்குகிறோம். அடுத்த கட்டமாக ஆடு, மாடு, மீன் வளர்ப்புக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்” என்ற கருப்பண்ணன் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

சிறைச்சாலை வளாகத்தில் தக்காளி வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த சிறைச்சாலை விவசாயிகளைச் சந்தித்தோம். அனைவரின் சார்பாக பேசிய துரைராஜ், ‘‘எனக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஹள்ளி. ஒரு கொலை வழக்குல ஆயுள் தண்டனை கைதியா சிறையில இருக்கேன். ஆரம்பத்துல ‘பூட்ஸ்’ தயாரிக்குற பிரிவுல வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகுதான் விவசாயத்துக்கு வந்தேன். எங்க அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். விவசாயம் பார்க்கணுங்குற ஆர்வத்துல இந்தக் குழுவுல சேர்ந்துக்கிட்டேன். சிறைச்சாலை வளாகத்துல இருக்குற இந்த இடமெல்லாம் காடா இருந்தது. கண்காணிப்பாளர் ஐயாதான் அரசாங்கத்துக்கிட்ட சொல்லி சுத்தம் செய்துகொடுத்தார். பல வருஷமா சும்மா கிடந்த மண்ணுங்குறதால மண் வளமா இருக்கு.



இதுல, 5 ஏக்கர்ல கத்திரி, வெண்டை, முள்ளங்கி, தக்காளி, முருங்கை, கொத்தவரை, கீரை, பாகல், பீர்க்கன், புடலை, காய்கறியும், 25 ஏக்கர்ல இறவையிலும், மானாவாரியிலும் கடலை, எள், துவரை, காராமணி, பாசிப்பயறுனு பல வகையான தானியங்களையும் உற்பத்தி செய்றோம். நாங்க உற்பத்தி செய்யுற காய்கறிகள், தானியங்களை சிறையில பயன்படுத்திக்கிறோம். மீதியை, சிறைச்சாலைக்கு வெளியில இருக்குற அங்காடி மூலம் விற்பனை செய்றோம். அதுல இருந்து கிடைக்குற வருமானத்துல 20 சதவிகித தொகையை எங்களுக்கே ஊக்கத்தொகையா கொடுக்குறாங்க” என்றார்.

சமுதாயப் பங்களிப்பு!

அடுத்து பேசிய சந்திரன், ‘‘நாங்க சாகுபடி செய்ற எல்லா பயிருக்கும் இயற்கை உரத்தை மட்டும்தான் பயன்படுத்துறோம். சிறைச்சாலையைச் சுற்றி 5 கிலோ மீட்டருக்கு விவசாயம் இல்லாததால சில சமயம் பூச்சித்தாக்குதல் அதிகமா இருக்கும். அப்போ மட்டும் பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம். அதிகளவுல விஷமில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்து கொடுக்குறது மூலமா சமுதாயத்துக்கும் உபயோகமா இருக்கோம். எங்களோட காய்கறிகள் கலெக்டர்,எஸ்.பி, நீதிபதினு முக்கியமான அதிகாரிகள் வீடுகளுக்குப் போகுது. விவசாயம் பார்க்குறது மூலமா எங்களோட நன்னடத்தை பற்றி அதிகாரிகளுக்குத் தெரியுது. சிறையில இருந்து விடுதலையாகிப் போனாலும், எங்களுக்குனு ஒரு தொழில் இருக்கும். இந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு நன்றி” என்றார்.

சிறையில் தயார் ஆகும் இயற்கை உரம்!

இயற்கை உரங்கள் தயாரிப்பு பற்றிப் பேசிய விஜயன், ‘‘கைதிகள்ல 15 பேர் சேர்ந்து இயற்கை உரங்களைத் தயாரிக்கிறோம். சிறை முழுக்க கிடைக்கிற குப்பைகளை மட்க வைத்து உரமா மாத்துறோம். அந்த உரத்துக்கு மேல காய்கறிச் செடிகளை நட்டு வளர்க்கிறோம். முழுசா நாலு மாசம் ஆன பிறகு பிரிச்சு எடுக்கிறோம். சலிச்சு சுத்தம் செஞ்சு, இயற்கை உரத்தை கிலோ 10 ரூபாய்னு விற்பனை செய்றோம். கடந்த ஒரு வருஷத்துல மொத்தம் 16 டன் இயற்கை உரத்தைவிற்பனை செய்திருக்கிறோம். இந்த உரத்தை பெங்களூர்ல இருக்குற ஆராய்ச்சி மையத்துக்கு சோதனைக்கு அனுப்பி இருக்கோம்” என்றார்.

சிறை அங்காடி!

சிறை அங்காடியில் காய்கறிகள் வாங்க வந்திருந்த வேலூர், பாகாயம் பகுதியைச் சேர்ந்த சுஜாதாவிடம் பேசியபோது, ‘‘தினம் எங்களோட வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இங்க வந்து வாங்கிக்கிட்டுப் போறேன். இங்க விற்பனை செய்யுற காய்கறிகள் பசுமையா இருக்குறதோட சுவையாவும் இருக்கு. அதோட கைதிகள் விளைவிக்குற காய்கறிகளை வாங்கிட்டுப் போனா அவங்களும் சந்தோஷப்படுறாங்க. உழவர் சந்தையில விற்பனை செய்யுற விலைக்கே இங்க காய்கள் கிடைக்குது” என்று தானும் சந்தோஷப்பட்டுச் சொன்னார்.
 காசி.வேம்பையன்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மலையேற்ற வீரர்களா?

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் படும்பாடு சொல்லி மாளாது. வயோதிகம், தனிமை, நோய்களால் பாதிப்பு, நடமாட்டமே குறைந்துவிட்ட நிலைமை, உற்றவர்களாலும் நண்பர் களாலும் கைவிடப்பட்ட நிலை என்று வெளியில் சொல்ல முடியாத வேதனை களோடு வாழ்கின்றனர். அவர்களை ஆண்டுக்கு ஒருமுறை அழைத்து, ‘உயி ரோடு இருக்கிறீர்களா’ (மஸ்டரிங்) என்று நேரில் பார்க்கும் நடைமுறையை மாநில அரசு பாசத்தோடு கடைப்பிடிக்கிறது. அரசு நிர்வாகத்துக்கான இந்த நடை முறையைத் தவறு என்று கூறமுடியாது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்நாளில் அரசின் நடைமுறை விதிகளையும் சற்றே தளர்த்தினால் அது ஓய்வூதியர்களின் அலைக் கழிப்பைப் பெரிதும் குறைக்கும்.

ஓய்வுபெற்றவர்களில் பெரும் பாலானவர்கள் உடல்நலக் குறைவால் அவதிப்படுவதை அரசும் அறியும். பக்கவாதம், மூட்டுத் தேய்வு, நரம்புத் தளர்ச்சி, கை கால் எலும்பு முறிவு, நினைவிழத்தல் என்று பல் வேறு விதமான நோய்களால் பீடிக்கப் பட்டு நடமாட்டம் இல்லாமல் வாழ்பவர் கள் ஏராளம். அடிக்கடி சிறுநீர் கழிப் பது, வயிற்றுப் பொருமல் போன்ற தொல்லைகளும் அதிகம். இப்படிப்பட்ட வர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கருவூலத் துக்கோ, சார்நிலைக் கருவூலத் துக்கோ வருவதற்குக்கூட யாருடைய உதவியையாவது நாட வேண்டியிருக் கிறது. உதவும் நிலையில் மகனோ, மகளோ அருகில் இல்லாதவர்கள் மற்ற வர்களைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது. ஆட்டோ, கால்டாக்ஸிக்கு செலவழிக் கும் அளவுக்கு அவர்களில் பெரும்பாலானவர்களிடம் நிதி வசதி இருப்பதில்லை.

இந்த நிலையில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சான்று அளிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, ஓய்வூதியர்களின் வீடுகளுக்கு அருகில் குடியிருக்கும் அரசு அலுவலர்கள், அரசு பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்கள் உயிரோடு இருப்பதைத் தக்க விதத்தில் சான்று அளிக்கலாம் என்று விதிகளைத் தளர்த்தினாலே போதும். எல்லோராலும் இந்த உயிர்வாழ்வுச் சான்றிதழை எளிதாகத் தந்துவிட முடியும். தன்னுடைய ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அரசு நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு ஊழியரான தபால்காரரைக்கூட சான்று அளிக்கச் சொல்லலாம். இதனால் ஓய்வூதியர்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு அலுவலகங்களுக்கு வந்தே தீர வேண்டும் என்ற கட்டாயச் சுமை குறையும். நேரில் வருவது கட்டாயம் இல்லை என்று அரசு கூறினாலும் பல முதியவர்கள் மாற்று வழிமுறைகளைக் கேட்பதில்லை. ஓய்வூதியம் நின்றுவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள்.

ஆவடி சார்நிலைக் கருவூலம்

சென்னைக்கும் திருவள்ளூருக்கும் இடையில் உள்ள ஆவடி சார்நிலைக் கருவூலம் மாடியில் செயல்படுகிறது. ஆயுதங்களுடன் வந்து கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டதால் தரைதளத்தில் இருப்பது பாதுகாப்பாக இருக்காது என்று மாநில அரசு கருதியிருக்கலாம். உச்சபட்ச பாதுகாப்புக்காக சார் நிலைக் கருவூலத்தைச் சுற்றி அகழி கட்டி, சூலங்களை நட்டு, சில முதலைகளைக்கூட விட்டுவைக்கலாம் இன்னும் பலத்த பாதுகாப்பாக இருக்கும்.

நம் கவலை அதைப்பற்றியது அல்ல. நடமாடவே முடியாத முதியவர்கள், கை கால் எலும்பு முறிந்தவர்கள், எப்போது வேண்டுமானாலும் முறியக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தக்காரர்கள். நீரிழிவு நோயாளிகள் என்று பலதரப்பட்டவர்கள்தான் ஓய்வூதியர்கள். சுமார் 20 படிகளைக் கடந்து மாடிக்கு வந்ததால், ‘கணினியின் வலைப்பின்னல் வேலை செய்யவில்லை. 3 மாதம் அவகாசம் இருக்கிறது. போய்விட்டு திங்கள்கிழமை வாருங்கள்” என்று வெள்ளிக்கிழமை சென்றவர்களிடம் தெரிவித்தார்கள்.

முதியவர்கள் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள் பலவற்றை ‘தாயுள்ளத்தோடு’ இப்படி எத்தனை இடங்களில் முதல் மாடி, இரண்டாவது மாடி என்று வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. சொந்தக் கட்டிடமாக இருந்தாலும் வாடகைக்காக இருந் தாலும் தரைதளமாக இருந்தால் நல்லது. மாற்றுத் திறனாளிகள் எளிதில் சக்கர நாற்காலியில் வந்துபோகும் வகையில் அரசு அலுவலகங்கள், பொது கட்டிடங்களில் சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்களும் பலமுறை அறிவுறுத்தி விட்டன. அதை எப்போது முழுமையாக அமல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. இதில் அரசுதானே முன்மாதிரியாக இருக்க வேண்டும்?

இத்தனை படிகள் கடந்து வந்துவிட்ட முதியவர்களை அப்படியே திருப்பி அனுப்பாமல் அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களையும் படிவத்தையும் சரிபார்த்து அனுப்பிவைத்துவிட்டு, கணினியின் கோளாறு நீங்கிய பிறகு பதிவு செய்துகொள்ளக்கூடிய நடைமுறைகளையும் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இன்றைய அரசு ஊழியர்கள் நாளைய ஓய்வூதியர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

முதியவர்களிடம் மரியாதையையும் குழந்தைகளிடம் பாசத்தையும் பொழியும் சமுதாயம்தான் உண்மையான நாகரிகச் சமுதாயம். தமிழகம் இனி இதிலும் முன்னோடியாக மாற வேண்டும். கருவூலங்களும் சார்நிலைக் கருவூலங்களும் ஓய்வூதியர்களின் ‘அம்மா’ கருவூலங்களாக மாறும் நாள் எந்நாளோ?

Nod for medical degrees obtained from off-campus centres

Students with medical degrees obtained through off-campus centres of a West Indies-based health sciences university before 2010 will be allowed to enrol provisionally as medical interns and doctors in Tamil Nadu.

The Tamil Nadu Medical Council (TNMC) has agreed to register provisionally students who had pursued medical courses of the International University of Health Sciences, based in the West Indies, at its off-campus study centres in Cochin, Pune, Mumbai and Dubai before April 2010 and allow them to take up Compulsory Rotatory Residential Internship (CRRI) in the State.

TNMC counsel Veera Kathiravan made the submission before Justice S. Vaidyanathan during the hearing of a writ petition filed by a candidate before the Madras High Court Bench here.

The judge recorded the submission and directed the TNMC to consider registering the candidate permanently also after she completes the CRRI and complies with other mandatory requirements.

According to Mr. Kathiravan, the Medical Council of India had initially refused to register such candidates by citing its Screening Test Regulations, 2002, which state that candidates who had pursued medical courses in institutions located abroad should have undergone the entire duration of the course directly in those institutions and not in their off-campus study centres located elsewhere.

The rejection was challenged by about 20 students before the High Court of Kerala in 2011. A single judge of the High Court allowed their writ petitions on October 1, 2012 and ordered that all of them should be registered since they had completed their course before the introduction of the regulation, relied upon by the MCI to deny registration, on April 16, 2010.

Further pointing out that the International University of Health Sciences was located in the Federation of St. Christopher and Nevis, the judge said the MCI had not produced any material to prove that under the regulations in force in that island nation, an accredited institution in its territory could not award degrees to students who had undergone studies in its off-campus centres.

The single judge’s order was confirmed by a Division Bench of the Kerala High Court on August 29, 2014. Thereafter, the MCI decided against taking the matter on appeal to the Supreme Court and issued a circular on February 11, 2015 asking the medical councils in all the States to register such candidates besides permitting them to take up internship in hospitals within their jurisdiction.

“Accordingly, the application of the present petitioner is being processed by the Tamil Nadu Medical Council for grant of provisional affiliation,” the counsel added.

Sudden showers cool Chennai, more expected today

CHENNAI: After the blazing heat earlier in the week, a sudden downpour brought down the temperature in the city on Friday. The Met department has forecast rain for the entire state on Saturday.

The city recorded 5.4mm of rainfall, while the suburbs experienced 0.6mm though the downpour began only around 7pm. Traffic slowed down in many areas and at the airport flights from Singapore, Kolkata, Mumbai and Coimbatore came in late, while a Chennai-Delhi flight took off more than half an hour after the scheduled time.

The minimum temperature dipped by 6 degrees Celsius from 29 degrees C on Thursday. The weather turned pleasant in the afternoon as the sky was cloudy.

A Regional Meteorological Centre (RMC) official said a trough of low pressure over the Indian Ocean was causing the rain. "It is located near the equator right in south of Indian peninsula. And it is moving north," said a duty officer. While the state's southern regions can expect up to 6cm of rain, the northern parts, including Chennai, may get up to 3cm. "Rain will be widespread, accompanied by thundershowers," he added. A trough is a region of low atmospheric pressure that usually brings in clouds and rain.

For Chennaiites suffering due to the high temperatures in the last few days, Friday's rain was a blessing. "Living along the coast gets really difficult at times. Clothes stick our bodies and the humidity makes the summer worse than what it is already," said Mandaveli resident K Suresh. Weather experts say rain in the southern parts of Tamil Nadu increases humidity across the state, making it uncomfortable for everyone during non-rainy days.

Rain in April is unusual for Chennai. It received no rain in April in 2009, 2010 and 2014 and in 2007 received only 0.1mm. On April 15 this year, Chennai witnessed one of its biggest downpours for the month with Meenambakkam recording 103.2mm. Nungambakkam recorded only 2.6mm.

On April 12, 1951, the city received 100.3mm of rainfall, highest on a single day in its history. In April 1909, the city recorded 191mm for the whole month - highest for the month.

Between March 1 and April 24 this year, Tamil Nadu received 99mm of rain, 102% more than the normal of 49.1mm. In this period, apart from Nilgiris which got 254.4mm, Kanyakumari got the highest rainfall. While Against the normal of 119.9mm, Kanyakumari received 205.3mm.

Ration shop worker alleges harassment by seniors, ends life

CHENNAI: A 50-year-old employee of a ration shop committed suicide at his residence on Mint Street in Washermenpet on Thursday evening.

V Elangovan's relatives claimed that he took the extreme step as he was unable to bear the pressure from the senior officials. However, the staff at the ration shop said Elangovan, who engaged in the packaging work at the shop in J J Nagar, had been pulled up for mismanagement of funds and was placed under suspension for two days after a raid at the shop.

He was reportedly questioned for mismanagement of 15,000 in the accounts.

Elangovan went inside his room at 2pm saying that he was going to sleep for a while but did not come out for a long time. Around 5.30pm, his brother went to check on him and found him hanging. He immediately informed the Washermenpet police who moved the body to Stanley Medical College and Hospital for postmortem.

His relatives handed over a suicide note to the police, reportedly written by the victim. The note, written on April 22, mentioned the names of the joint registrar and deputy registrar and said that they harassing him. "I have never faced such humiliation in my 32 years of service in the department," wrote the victim in his suicide note.

The members of the ration shop staged a sit-in for a sometime on Friday evening in Washermanpet demanding justice.

Police are trying to verify whether the suicide note was written by Elangovan.

Staff, however, said that Elangovan had been suspended for mismanagement of 15,000 in the accounts.

பி.இ.: 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம்

பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

ஜூன் இறுதியில் கலந்தாய்வு: நிகழ் கல்வியாண்டில் (2015-16) பி.இ. கலந்தாய்வு ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற உள்ளன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது:-

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள், மே மாதம் 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களைப் பெற மே 27-ஆம் தேதி கடைசி நாள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

விடுமுறை நாள்களில் கிடையாது: ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

ஆன்-லைனில் பதிவிறக்கம்: பி.இ. விண்ணப்பத்தை www.annauniv.edutnea என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கலந்தாய்வு தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள் நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இடங்களை விட கூடுதலாக 50 ஒதுக்கப்பட்டு 100 ஆக அதிகரித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் செவிலியருக்கான தேவையும், பணிவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இதற்காக சிறந்த முறையில் செவிலியர் பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 23 செவிலியர் பயிற்சி பள்ளிகள் மருத்துவமனை வளாகங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு வரையில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் சேர்க்கப்பட்டு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன. இதில், மருத்துவக்கல்லூரி செயல்படும் மாவட்டங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் செவிலியர் பயிற்சி பெற இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

அதேபோல், மற்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பயிற்சி பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய செவிலியர் கவுன்சில் விதிமுறைப்படி ஒவ்வொரு பயிற்சி பள்ளியிலும் 100 மாணவிகள் இருக்க வேண்டும். அதை செயல்படுத்தும் வகையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், திண்டுக்கல், கன்னியாகுமரி, ஊட்டி, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற 18 மாவட்டங்களில் 50 இடங்களாக இருந்ததை, 50 இடங்கள் உயர்த்தி 100 பேர் வரையில் சேர்ப்பதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் பயிற்சி பள்ளியின் முதல்வர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.

இதுவரையில் விருதுநகர் மாவட்ட செவிலியர் பயிற்சி பள்ளியில் 50 ஆக இருந்த இடங்கள், நிகழாண்டு முதல் 100 ஆக உயர்துள்ளதால் இப்பணியில் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்னதான் நடக்கிறது யேமனில்?

அரேபியா என்றாலே அதன் எண்ணெய் வளமும், செல்வச் செழிப்பும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் கண்டத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு ஒன்று உண்டென்றால், அது யேமன்தான். இருந்தாலும், அந்த நாடுதான் அண்மைக் காலமாக சர்வதேசச் செய்திகளில் முதன்மை இடம் பெற்றுள்ளது. அப்படி என்னதான் நடக்கிறது யேமனில்?

அங்கு நடைபெறும் சண்டையில் யார், யாருடன், எதற்காக மோதிக் கொள்கின்றனர்? அந்த மோதலில் சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் என்ன வேலை?

1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டதையடுத்து, கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் ஒன்றுபட்டதைப் போலவே, வடக்கு யேமனையும், தெற்கு யேமனையும் ஒன்றிணைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.

பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வடக்குப் பகுதித் தலைவர் அலி அப்துல்லா சலேவை அதிபராகவும், தெற்குப் பகுதித் தலைவர் அலி சலீம் அல்-பெய்தை துணை அதிபராகவும் கொண்ட கூட்டணி ஆட்சி 1990-இல் ஏற்பட்டது.

எனினும், "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' எனக் கூறி அல்-பெய்த் 1993-ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

சீற்றமடைந்த அதிபர் அப்துல்லா சலே, அல்-பெய்தையும், அவரது ஆதரவாளர்களையும் அரசிலிருந்து அதிரடியாக நீக்கினார். அதிரடிக்குப் பதிலடியாக, தெற்கு யேமனை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தார் அல்}பெய்த்.

அவ்வளவுதான்! மூண்டது உள்நாட்டுச் சண்டை. இந்தச் சண்டையின் முடிவில், வடக்கு யேமனிடம் தெற்குப் படைகள் தோல்வியடைந்து அல்}பெய்த் உள்ளிட்ட பல தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து, யேமனை ஏகபோகமாக ஆட்சி செய்யத் தொடங்கினார் அப்துல்லா சலே.

எனினும், அரபு துணைக் கண்டத்தை 2011}ஆம் ஆண்டு புரட்டியெடுத்த "அரபு வசந்தம்' என்ற புரட்சி அலை, சலேவின் 33 ஆண்டு கால ஆட்சியையும் கவிழ்த்தது.

அதிலிருந்துதான் தொடங்குகிறது அண்மைக் கால யேமன் பிரச்னை.

இந்தப் பிரச்னையில் களம் நிற்பவர்கள் யார் யார்?

ஹூதி கிளர்ச்சியாளர்கள்: அப்துல்லா சலே ஆட்சியின்போது, தங்களது கலாசாரத்தைக் காப்பதற்காக உருவான ஷியா பிரிவு கிளர்ச்சி அமைப்பு இது. 2011}இல் சலேவுக்கு எதிரான புரட்சியின்போது மற்ற தேசியவாத இயக்கங்களுடன் கைகோத்து செயல்பட்ட இவர்களுக்கு ஆதரவு பெருகியது.

வடக்குப் பகுதியில் பலம் வாய்ந்த இவர்கள், தலைநகர் சனாவை எதிர்ப்பின்றி கைப்பற்றினர். மேலும், தெற்குப் பகுதியையும் கைப்பற்றப் போராடி வருகின்றனர்.

அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவுப் படையினர்: மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள யேமன் அதிபர் மன்சூர் ஹாதியின் விசுவாசிகள். தற்போது ஏடனைக் காக்க ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர்.

முன்னாள் அதிபர் அப்துல்லா சலே ஆதரவுப் படையினர்: 33 ஆண்டு காலம் அதிபராக இருந்த சலேவுக்கு யேமன் ராணுவத்தின் ஒரு பிரிவினர் இன்னும் ஆதரவு அளித்து வருகின்றனர். தற்போதைய சண்டையில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அப்துல்லா சலே ஆதரவு அளித்து வருகிறார்.

அரேபிய தீபகற்பத்துக்கான அல்}காய்தா (ஏ.க்யூ.ஏ.பி.): அல்}காய்தா பிரிவுகளிலேயே மிகவும் கொடூரமானது என அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்ட அமைப்பு இது.

"யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அரேபியத் தீபகற்பத்திலிருந்து அழித்தொழிப்பது' உள்ளிட்ட வழக்கமான பயங்கரவாதக் கொள்கைப் பிடிப்புடன் யேமனில் 13 ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மன்சூர் ஹாதி, ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்பினருமே இந்த அமைப்பின் எதிரிகள்.

சவூதி அரேபியா: யேமன் பிரச்னையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நாடு.

சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த நாடு, வளைகுடாவைச் சேர்ந்த ஜோர்டான், மொராக்கோ, சூடான் ஆகிய நாடுகளையும் கூட்டு சேர்த்துக்கொண்டு ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது கடந்த மார்ச் மாதம் முதல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

காரணம், சன்னி இன உணர்வு என மேலோட்டமாகத் தோன்றினாலும், "சிறுபான்மை ஹூதிக்களுக்கு எதிராக உருவாகும் பெரும்பான்மை சன்னிப் பிரிவு இனப் பயங்கரவாதம், அருகிலுள்ள சவூதி அரேபியாவை நிச்சயம் பாதிக்கும்.

அரேபியக் கண்டத்திலேயே மிகவும் ஏழை நாடான யேமனும், மிகப் பெரிய பணக்கார நாடான சவூதி அரேபியாவும் 1,600 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன' என்கின்றனர் பார்வையாளர்கள்.

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.): எந்தப் பயங்கரவாத இயக்கமும் எளிதில் துளிர்த்து வேரூன்றி விடும் தன்மை கொண்ட யேமன் மண்ணில் உருவான ஐ.எஸ். அமைப்பின் கிளை.

ஷியா பிரிவு ஹூதிக்கள் இவர்களுக்கு எதிரிகள் என்றால், சன்னி பிரிவு அல்}காய்தா இவர்களுக்கு கடும் போட்டியாளர்கள். ஷியாக்களை அழிக்கும் போட்டியில் அல்}காய்தாவை விஞ்ச கடந்த மாதம் இவர்கள் நிகழ்த்திய இரட்டை மசூதித் தாக்குதலில் பலியானோர் 142 பேர்!

ஈரான்: ஹூதி கிளர்ச்சியாளர்களை "ஈரானின் கைப்பொம்மைகள்' என அதிபர் ஹாதி வர்ணித்தாலும், யேமன் பிரச்னையில் ஈரானின் பங்கை அரசுத் தரப்பு ஊதிப் பெரிதுபடுத்துவதாகக் கருதப்படுகிறது. காரணம் ஹூதிக்களுக்கு ஈரான் உதவியளிப்பது குறித்து இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

அமெரிக்கா: யேமனில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஆதரவுடன் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. தற்போது ஹூதிக்களின் முன்னேற்றத்தால் அந்த நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளன.

இதனால், யேமனில் சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களுக்கு பல்வேறு உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்துக்காக யேமன் பிரச்னையை அணுகுவதால், பிரச்னை மேலும் தீவிரமடையும். அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் அமைதிக்கான ஒரே வழி என்கிறார்கள் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.

பி.இ.: மே 6-இல் விண்ணப்பம்: 11-இல் எம்.பி.பி.எஸ்.

தமிழகத்தில் பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 6-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க, மே 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான 6-ஆம் தேதி முதல், பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ளது.

பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை https://www.annauniv.edu/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

விண்ணப்பத்தைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கவும் மே 29-ஆம் தேதி கடைசி நாளாகும். பி.இ. ஒற்றைச்சாளர கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்க உள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்களை, சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், மே 11-ஆம் தேதி முதல் பெறலாம்.

விண்ணப்ப விநியோகம் மே 28-ஆம் தேதி வரை நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர வேண்டும்.

ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்: விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, April 24, 2015

சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்

குழந்தையைக் காப்பாற்றும் சண்முகநாதன் : படம் வீடியோ பதிவிலிருந்து

சிங்கப்பூரில் பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி நாயகர்களாக மாறியுள்ளனர் தமிழர்கள் இருவர். இந்த சம்பவத்தை படம்பிடித்து யூடியூபில் பதிவேற்றி உள்ளார் சிங்கப்பூர்வாசி ஒருவர்.

சிங்கப்பூரில் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில், கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் கழுத்து, கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் இருவர் குழந்தையின் அலறலைக் கேட்டு அங்கு வந்தனர். உடனடியாக இருவரும் இரண்டாவது மாடிக்கு ஏறி, அந்தக் குழந்தையை கம்பியின் பிடியிலிருந்து விடுவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே குழந்தை காப்பாற்றப்பட்டது. ஏணியின் உதவியுடன் குழந்தை கீழே அழைத்து வரப்பட்டது. குழந்தை எப்படி அங்கு சென்று சிக்கிக் கொண்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

காப்பாற்றியவர்களில் ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்து வரும் சண்முகநாதன் என்று தெரியவந்துள்ளது. குழந்தையைக் காப்பாற்றிய இருவரையும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, 'உத்வேக மக்கள் விருது' வழங்கி கவுரவிக்கும் என்று தெரிகிறது.

லிட்டில் இந்தியா பகுதி கலவரத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உள்ளூர் வாசிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது இந்த சம்பவத்தால் பதற்றம் தணிந்து மீண்டும் சுமுகம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மே 11 முதல் விண்ணப்பம்



எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு மே 11 முதல் மே 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை போன்று இந்தாண்டும் 500-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதற்காக 48,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் மருத்துக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் மே 29. விண்ணப்பங்களைwww.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

மருத்துவப் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 12-ம் தேதி வெளியிடப்படும்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடந்தன. 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகள், 42 ஆயிரம் தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.85 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

இந்த தேர்வு 2,377 மையங்களில் நடந்தது. எழுத்துத் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பே பிப்ரவரி 5 முதல் 24-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 18-ம் தேதி நிறைவடைந்தது. இந்தப் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி வெளியாகிறது.

இதனையொட்டி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மே 11 முதல் மே 28 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இடி-மின்னலுடன் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் இன்று இரவு திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று இரவு சுமார் 7.30 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இதில், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, கிண்டி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. அதேபோல், சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, பட்டினபாக்கம், முகப்பேரிலும் மிதமான மழை பெய்தது.

மேலும், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்குளத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், படப்பை மற்றும் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்தது.

பல்லாவரம் குடியிருப்பில் மின்னல் தாக்கி தென்னை மரம் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை வாழ் பொதுமக்கள், திடீர் மழை காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாஸ்வேர்டால் என்ன பயன்?


மு
தலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல்லை, என்ன பெரிய பாஸ்வேர்டு புடலங்காய் பாஸ்வேர்டு, அதனால் பத்து பைசா பயன் இல்லை என்று நினைக்கிறீர்களா?

உங்கள் பாஸ்வேர்டு பற்றி யோசித்து ஒரு பதிலை முடிவு செய்யுங்கள். ஒருவேளை பாஸ்வேர்டால் என்ன பயன் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் நீங்கள் ஐந்தில் ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இதற்காக நீங்கள் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியாது. மாறாக கவலைப்பட்டாக வேண்டும். ஏனெனில் சமீபத்தில் பாஸ்வேர்டு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒரு இணையப் பயனாளிகள் தங்கள் பாஸ்வேர்டால் சைபர் குற்றவாளிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கருதுவதாக தெரிய வந்துள்ளது.
இணையப் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கும் காஸ்பெர்ஸ்கி லேப் நிறுவனம் பி2பி இண்டர்நேஷனல் எனும் நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதி பேர் தான் தங்கள் பாஸ்வேர்டை முக்கியமாக கருதுவதாகவும் அது தப்பித்தவறி சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். மாறாக 21 சதவீதம் பேர், சைபர் குற்றவாளிகளுக்குத் தங்கள் பாஸ்வேர்டால் எந்தப் பயனும் இல்லை என்று கூறியுள்ளனர்.
அதாவது நாங்கள் என்ன இணையப் பிரபலங்களா இல்லை கோடீஸ்வரர்களா? எங்கள் பாஸ்வேர்டை எல்லாம் களவாடி என்ன செய்யப்போகிறார்கள் என்பது போல கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அப்பாவித்தனம் ஆபத்தில் முடியலாம் என்கின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள். பிரபலமோ இல்லையோ இணையத்தில் இருக்கும் எல்லோருக்கும் பாஸ்வேர்டு முக்கியமானது, மதிப்பு மிக்கது என்று சொல்கின்றனர். பாஸ்வேர்டால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். இணையத்தில் வைக்கப்படும் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்கத் தகவல்கள் மற்றும் பணம் (ஆன்லைன் வங்கிச் சேவை) ஆகியவற்றுக்கான பூட்டுச் சாவி போன்றது பாஸ்வேர்டுகள். அவை களவாடப்பட்டால் வில்லங்கம் தான் என்கின்றனர்.
நீங்கள் பிரபலமானவராகவோ அல்லது கோடீஸ்வரராகவோ இலலாவிட்டாலும் கூட உங்கள் பாஸ்வேர்டால் சைபர் குற்றவாளிகள் பலனடைய முடியும் என்கிறார் காஸ்பெர்ஸ்கி லேபின் அதிகாரி எலேனா கார்சென்கோவா. பாஸ்வேர்டு திருடப்படும்போது பயனாளி மட்டும் பாதிக்கப்படவில்லை, அவரது தொடர்புகளும் தான் என்றும் எச்சரிக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
உதாரணத்துக்கு, ஒருவரது இமெயில் பாஸ்வேர்டு, சைபர் குற்றவாளி கையில் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் மூலம் அவரது முகவரி பெட்டியில் உள்ள அனைத்து தொடர்புகளின் மெயிலுக்குள்ளும் குற்றவாளிகள் கைவரிசை காட்டுவதற்கான கதவு திறக்கப்படுவதாக வைத்துக்கொள்ளலாம். பேஸ்புக் போன்ற தளங்களுக்கும் இது பொருந்தும்.
இப்போது பாஸ்வேர்டின் முக்கியத்துவம் புரிகிறதா?
எனவே இனி பாஸ்வேர்ட் விஷயத்தில் விழிப்புடன் இருங்கள். தொடர்ந்து பாஸ்வேர்டு பாதுகாப்புக் குறிப்புகளை பார்க்கலாம்.
முதல் குறிப்பு, முதலில் தனித்தனி பாஸ்வேர்ட் தேவை என்பது. இமெயில், பேஸ்புக், இன்னும் பிற என எத்தனை இணையச் சேவைகளை பயன்படுத்தினாலும் சரி அவை ஒவ்வொன்றுக்கும் தனி பாஸ்வேர்டு அவசியம். இதன் பொருள் ஒருபோதும் எல்லாச் சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தக்கூடாது . ஏன் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு சேவையின் பாஸ்வேர்டு திருடு போனது என்றால் உங்கள் எல்லாச் சேவைகளுக்குமான கள்ளச்சாவி குற்றவாளி கையில் கிடைத்தாயிற்று என்று பொருள்!
ஆக , நீங்கள் பல இணையச் சேவைப் பயனாளி என்றால் முதலில் ஒவ்வொன்றுக்கும் தனி பாஸ்வேர்டு இருப்பதை உறுதி செய்யுங்கள்.

மாருதி 800-ம் மாறாத மனதும்!

ஹர்பால் சிங் | (கோப்புப்படம்)

பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருக்க முடியும் என்ற நிலை இருந்த காலகட்டத்தில் குடும்பத்துக்கு அடக்கமான மருமகள் போன்ற எளிமையுடன், கைக்கு அடக்கமான விலையில் இந்தியச் சாலைகளுக்கு வந்தவை மாருதி கார்கள். அதாவது மாருதி 800 கார்கள்.

புதுப் பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை பலரின் அபிமானத்தை மிக விரைவிலேயே பெற்று, பல வீடுகளின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே ஆகிவிட்ட வசந்த வாகனம் அது.

மொத்தம் 28 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாருதி 800 கார்கள் தயாரிக்கப் பட்டன. இவற்றில் 26 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் இந்தியாவிலேயே விற்பனை செய்யப்பட்டன. நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் இந்தக் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏன் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நடுத்தர வர்க்கத்து வீடுகளின் முன்னால், இந்திய நண்பனாக நின்றுகொண்டிருந்தது இந்தக் கார்.

1930-கள், 1940-களில் தங்கள் பணக்காரத் தாத்தாக்கள் வாங்கிய பழைய மாடல் கார்களைப் பார்வைக்கு வைத்துப் பரவசப் படும் நபர்கள் இன்றும் உண்டு. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகமாகி இந்தியச் சாலைகளிலிருந்து நம் கண்முன்னே விடைபெற்றுவிட்ட கார் இது.

அடுத்தடுத்து சந்தைக்கு வந்த ‘சொகுசு’ கார்கள், நகரத்துச் சாலைகளில் உற்சாகமாக உலவத் தொடங்கியதும் ஒதுங்கி ஓய்வெடுக்கத் தொடங்கின மாருதி 800 கார்கள். இக்கார்களின் தயாரிப்பு, கடந்த ஆண்டுடன் நிறுத்தப்பட்டும் விட்டது.

இன்று பல மாருதி கார்கள் எங்கோ புதர் மண்டிய பழைய காரேஜ்களில் மீளாத் துருவில் ஆழ்ந்திருக்கலாம். பல கார்களின் பாகங்கள் இரும்பாலைகளில் உருக்கப்பட்டு வெவ்வேறு வடிவங் களைப் பெற்றிருக்கலாம். ஆனால், நடுத்தர வர்க்க வாகனமாகத் திகழ்ந்த இந்தக் கார் பற்றிய நினைவு கள் பலருக்கும் பசுமையாக இருக்கும்.

அப்படி தனது வாழ்நாள் முழுதும் மாருதி 800-ஐ நேசித்தவர் டெல்லியைச் சேர்ந்த ஹர்பால் சிங். இந்தியன் ஏர்லைன்ஸில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர்தான் இந்தியாவில் முதன்முதலாக மாருதி 800-ஐ வாங்கிய அதிர்ஷ்டசாலி!

இந்திரா காந்தி கொடுத்த சாவி!

இப்போதெல்லாம் விருப்பமான வாகனத்தை ஷோரூமில் பார்த்து தேர்ந்தெடுத்தவுடன் எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக வாகனம் நம் கைக்கு வந்துவிடும். ஆனால், அப்போது நிலைமை அத்தனை எளிதாக இல்லை. அம்பாசிடர் கார், மோட்டார் சைக்கிள்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். மாருதி 800 கார் சந்தைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் அதை வாங்க ஏராளமானவர்கள் ஆர்டர் செய்திருந்தார்கள்.

எனவே, குலுக்கல் முறையில் தேர்வு செய் யப்படுபவருக்கு முதல் காரை வழங்க முடிவுசெய்யப்பட்டிருந் தது. அதிர்ஷ்டம் ஹர்பால் சிங்கின் பக்கம் இருந்தது. குலுக்கல் முறையில் அவர் தேர்வுசெய்யப்பட்ட பின்னர், 1983 டிசம்பர் 14-ல் இந்தியாவின் முதல் மாருதி 800 காரின் சாவியை அவருக்கு வழங்கினார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

பால் போன்ற வெண்மை நிற கார் அது. இந்தியன் ஏர்லைன்ஸில் ஹர்பால் சிங்குடன் பணிபுரிந்த ஒருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஹர்பால் சிங்கை வாழ்த்தினார். அவர் ராஜீவ் காந்தி!

‘பாதுகாக்க வேண்டும்’

கார் என்பதையும் தாண்டி தனது குடும்ப உறுப்பினராகவே அதைக் கருதிவந்தார் ஹர்பால் சிங். கடைசி வரை இந்தக் காரை விற்றுவிட்டு வேறு கார் வாங்கவில்லை. 2010-ல் அவர் காலமானார். 2 ஆண்டுகளில் அவரது மனைவியும் காலமானார். அதன் பிறகு டெல்லி கிரீன் பார்க்கில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே, எஜமானரைத் தொலைத்துவிட்ட வளர்ப்பு நாய் போல் இயக்கமற்று கிடக்கிறது அந்தக் கார். சிங் தம்பதியினரின் இரு மகள்களால் காரைப் பராமரிக்க முடியவில்லை.

“எங்களுக்குப் பணமே வேண்டாம். மாருதி நிறுவனம் இந்தக் காரைப் பெற்றுக்கொண்டு நல்ல முறையில் பராமரித்துப் பாதுகாத்தாலே போதும். மாருதி 800-ன் முதல் வாடிக்கையாளரான எனது மாமனாரின் பெயர் இதன் மூலம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்கிறார் ஹர்பால் சிங்கின் மருமகன்களில் ஒருவரான தேஜிந்தர் அலுவாலியா.


மாருதி நிறுவனத்தின் 25-வது ஆண்டு விழாவின்போது இந்தக் காரைப் பார்வைக்கு வைத்து பெருமிதப்பட்டுக்கொண்டது அந்நிறுவனம். எனினும் அதன் பின்னர், அதைக் கண்டுகொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் ஹர்பால் சிங் குடும்பத்தினர். ஊடகங்களில் இதுதொடர்பாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காரை வாங்கிக்கொள்ளப் பலரும் முன்வந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, “மாருதி 800-ன் முதல் வாடிக்கையாளர் எனும் முறையில் ஹர்பால் சிங் எங்கள் மரியாதைக்குரியவர். காரை மிகுந்த அக்கறையுடன் பராமரித்தவர் அவர். அவரது குடும்பம் விரும்பினால் அதை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தயார்” என்று மாருதி சுஸுகியின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

அந்தத் தகவலுக்காக, மேலுலகத்திலிருந்து மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பார் ஹர்பால் சிங்!

chandramohan.v@thehindutamil.co.in

Flight From Chicago Makes Emergency Landing After 3 Passengers Lose Consciousness

CHICAGO (CBS) — It was a flight they’ll never forget. Terrified passengers on a flight from Chicago to Connecticut took 28,000-foot nosedive on Wednesday, as their plane made an emergency landing after three people on the plane passed out.

SkyWest Flight 5622, operating as United Express, took off from O’Hare International airport at 9:20 a.m. Wednesday, bound for Hartford, Connecticut, but was diverted to Buffalo, New York, when a passenger lost consciousness. Although initial reports indicated only one passenger passed out, the airline later confirmed three passengers lost consciousness.

To make its emergency landing, the plane made a dramatic drop. In just three minutes, the jet carrying 84 passengers and crew descended from 38,000 feet to 10,000 feet.

“The scariest thing was really just the nosedive that happened. I mean, it was very obvious that we were descending as rapidly as we could at that point,” passenger Vanessa Bergmann said. “I can’t even remember if I was flying forward, or being pushed back.”

The plane landed safely at Buffalo Niagara International Airport at about 11:40 a.m., and passengers were evaluated by medical teams on the ground, and were released. No one was taken to a hospital.

SkyWest officials said the pilot feared passengers had lost consciousness due to pressurization problems, but that turned out not to be the case.

The standard response to a loss of cabin pressure is to descend to a lower altitude, to find more oxygen as quickly as possible.

“That is far greater than the rate of descent for this plane. Obviously the plane could withstand it. It’s beyond the envelope of what you need to do, so you know that these pilots knew they were in a very grave and very serious situation,” said aviation attorney Mary Schiavo.

It was unclear why the passengers lost consciousness, but the airline said it is investigating.

source document:http://chicago.cbslocal.com/2015/04/23/flight-from-chicago-makes-emergency-landing-after-3-passengers-lose-consciousness/

அரசு மருத்துவமனைகளில் 1,500 புது டாக்டர்கள் ஒரு வாரத்தில் மேலும் 1,000 பேர் சேர வாய்ப்பு

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டோரில், 1,500 டாக்டர்கள் புதிதாக அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், 1,000 பேர் ஒரு வாரத்தில் இணைகின்றனர்.குற்றச்சாட்டு :தமிழக அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லை; தேவைக்கேற்ப நியமிக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில், 2,167 உதவி டாக்டர்கள், 700 எம்.எஸ்., - எம்.டி., படித்த சிறப்பு பிரிவு டாக்டர்களும், அரசுப்பணியில் சேர்க்கப்படுவர் என, தமிழக அரசு அறிவித்தது.


உதவி டாக்டர்கள் பணியிடங்களுக்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, 2,167 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 'வாக் இன் இன்டர்வியூ' அடிப்படையில், 447 சிறப்பு பிரிவு டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டனர். நேர்காணல் :இவர்களுக்கான, நேர்காணல், சென்ற மாதம் நடந்தது. இவர்களில், 98 சதவீதம் பேர், இடங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு, உடனடியாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 'ஒரு மாதத்திற்குள், பணியில் சேர வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியது.


இந்த நிலையில், மருத்துவ கல்வி, பொது சுகாதாரத்துறை, மருத்துவ சேவை இயக்கங்களின் கீழ் செயல்படும், மருத்துவமனைகளில், 1,500க்கும் மேலான டாக்டர்கள்,

தங்களுக்கு ஒதுக்கிய பிரிவுகளில் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், 1,000 பேர் வரை, இம்மாதம், 30ம் தேதிக்குள் இணைவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், தொகுப்பூதிய அடிப்படையில், புதிதாக, 7,000 நர்ஸ்களை சேர்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது.- நமது நிருபர் -

எம்.பார்ம்., நுழைவு தேர்வு:மே 10க்கு ஒத்தி வைப்பு

சென்னை:அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, மே 10க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், சென்னை, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு, 64 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஏப்., 20ல் முடிந்தது; 400க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதற்கான நுழைவுத் தேர்வு, மே 3ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த தேர்வு, மே 10 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.'நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Will the hunt for AIIMS site end with Thanjavur?

  • Finding manpower will be easy as Thanjavur has a reputed medical college

  • When the team deputed by the Union Health Ministry scouting for a suitable location for establishing an All India Institute of Medical Sciences (AIIMS) in Tamil Nadu comes calling here on Friday, the district administration, backed by public interest groups, is eager to press the case of Thanjavur.

    With the city already on the medical tourist map of the region for several decades now, establishment of an AIIMS at Sengipatti could serve not just Thanjavur but also Tiruchi, Pudukkottai and a clutch of eastern and southern districts of the State.

    Sources in the administration indicate that the officials are just banking on the excellent logistics and land availability of the suggested 200-odd acres of centrally located land at Sengipatti accessible equally from Thanjavur, Tiruchi, and Pudukkottai but pressing the case of Thanjavur as the best bet what with the city already having the basic foundation for any grand super speciality medical research and outreach institution in the Thanjavur Medical College Hospital which has turned out hundreds of medical professionals to serve the public in the past 50 years.

    “Two important factors bolster the case of Thanjavur — it’s strategic location and abundance of medical facilities and support institutions for outreach and academic research activities essential for the growth of AIIMS-like institutions.

    Institutional support from several Union Government-sponsored entities such as BHEL, Oil and Natural Gas Corporation, OFT, and the NIT could be counted upon in Thanjavur,” said a couple of doctors in the city discussing the project.

    More importantly, qualified and experienced medical professionals might find it easier to base themselves in Thanjavur, where professional experience sharing could add to their advantage. Continuing medical education and virtual medical facilities have taken deep roots here and that would help in the vertical take off for a new AIIMS rather than a place where sub-zero spade work was essential, they point out.

    There is the upcoming SIDCO industrial estate near the Sengipatti site and the State government could easily create a pharma manufacturing cluster there adding to the advantage, the professionals say.

    PSG Pharmacy College to host international conference

    The PSG College of Pharmacy here will host a two-day international conference from Friday with support from the Central Government’s Department of Science and Technology. It will focus on the roles and responsibilities of pharmacist on chronic disease management, adverse drug reaction and therapeutic drug monitoring, according to a press release.

    Dr. Suphat Subongkot, Chair, Clinical Pharmacy Division, Khon Kaen University, Thailand is scheduled to address the conference, which will include interactive sessions and oral/poster presentations

    பிளஸ்-2 தேர்வு முடிவு மே 7-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 21-ந்தேதியும் வெளியாகிறது.

    சென்னை,

    பள்ளிக்கூட மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக பிளஸ்-2 தேர்வுகருதப்படுகிறது.

    பிளஸ்-2 தேர்வு

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

    பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 18-ந்தேதி முடிவடைந்தது. தற்போது டேட்டா சென்டரில் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் எஸ்.எஸ். எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 20&ந்தேதி தொடங்கியது.

    மே 7-ந்தேதி முடிவு

    இந்தநிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு மே 7-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 21-ந்தேதியும் வெளியாகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா
    உத்தரவின்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

    கடந்த மார்ச் 5-ந்தேதி முதல் மார்ச் 31&ந்தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் 7-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    மே 21-ல்எஸ்.எஸ்.எல்.சி. முடிவு

    கடந்த மார்ச் 19-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் 21-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    www.tnr-esults.nic.in
    www.dge1.tn.nic.in
    www.dge2.tn.nic.in
    www.dge3.tn.nic.in

    கலெக்டர் அலுவலகங்கள்

    மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
    பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு கு.தேவராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்வு முடிவு வெளியான பிறகு விரைவில் தற்காலிக சான்று (புரவிஷனல் சர்டிபிகேட்) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    இந்த ஆண்டில் பிளஸ்-2 தேர்வு முடிவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் கடந்த ஆண்டை விட 2 நாட்களுக்கு முன்னதாக வெளியாகின்றன.

    எளிமையான வருமானவரி வசூலிப்பு முறை

    வருமானவரி உள்பட எந்த வரியும் வசூலிக்கும்போது, அதற்கான முறைகள் செக்கில் போட்டு அரைக்கும் எள்போன்ற நிலையில் இருக்கக்கூடாது. மூதறிஞர் ராஜாஜி சொன்னதுபோல, மயில் இறகால் வருடும் நிலையில் துன்புறுத்தாமல் வசூலிக்கவேண்டும். அப்படிப்பட்ட இந்த தார்ப்பரியத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்று அச்சப்பட்ட நிலையில், நிதி மந்திரி அருண் ஜெட்லியின் அறிவிப்பு சற்று ஆறுதலாக இருக்கிறது. எந்த ஒரு அரசாங்கம் என்றாலும் சரி, அதன் வருவாய்க்கு நிச்சயமாக வரி வசூல் மூலமாக கிடைக்கும் வருவாய்தான் பெரிதும் கைகொடுக்கும். 120 கோடிக்குமேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஏறத்தாழ 3 கோடியே 50 லட்சம் பேர்தான் வருமானவரி கட்டுகிறார்கள். அதாவது 3 சதவீதம் பேர் மட்டுமே வருமானவரி கட்டுகிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. 30 கோடியே 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில், 13 கோடியே 80 லட்சம் பேர் அதாவது, 45 சதவீதம் பேர் வருமானவரி கட்டுகிறார்கள். இந்த 3½ கோடி மக்களில் 89 சதவீதம் பேர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்கள். 5.50 சதவீதம் பேர் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், 4.30 சதவீதம் பேர் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலும், மீதமுள்ளவர்கள் ரூ.20 லட்சத்துக்குமேல் வருமானம் பெறுகிறோம் என்று கணக்கு காட்டி, வருமான வரி கட்டுகிறார்கள். 42,800 பேர் மட்டும் அதாவது .1 சதவீதம் மட்டுமே ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறோம் என்று வருமானவரி கட்டுகிறார்கள். தற்போது வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டிவிட்டது எனவும் தகவல் வந்துள்ளது.

    ஆக, சமுதாய கடமையோடு வரிகட்டும் இந்த 3 சதவீத மக்களுக்காக வருமானவரியை கட்டும் முறைகள் எளிமையாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், வருமானவரி கணக்கை வருமான வரித்துறையில் தாக்கல் செய்வதற்கு இப்போது ஒரு பக்கத்தில் சரள் என்ற விண்ணப்ப படிவத்தில் தாக்கல் செய்வதற்கு பதிலாக, இனி 14 பக்கங்களில் நிறைய தகவல்களை தாக்கல் செய்யவேண்டும், அதில் எத்தனை வங்கிகளில் கணக்கு இருக்கிறது, வெளிநாட்டு பயணம் மேற்கொண்டீர்களா என்ற பல தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடிக்கடி வேலைமாறுதலுக்கு ஆளாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களெல்லாம் போகிற ஊர்களில் எல்லாம் வங்கிக்கணக்கை தொடங்குவது தவிர்க்க முடியாததாகும். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், வங்கிக் கணக்குகளெல்லாம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பான் கார்டு என்று சொல்லப்படும் நிரந்தர கணக்கு எண், ஆதார் எண் எல்லாமே பயன்பாட்டிலிருக்கும் போது, எல்லா விவரங்களையும் வருமான வரித்துறையே நேரடியாக பெற்றுக்கொள்ளலாமே, அப்படி இருக்கும்போது 14 பக்க விண்ணப்ப படிவம் என்றால் பலர் அதன் சிரமங்களால் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாத நிலை ஏற்படுமே என்று மக்களிடையே கிளம்பிய எதிர்ப்பு குரல், அமெரிக்காவில் உலக வங்கி கூட்டத்தில் கலந்துகொள்ளச்சென்ற மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின், காதுக்கு எட்டி உடனடியாக மறுபரிசீலனை செய்யச்சொல்லி உத்தரவிட்டது மிகவும் வரவேற்புக்குரியது. வருமானவரி கட்டாமல் வெளியே ஏய்த்துக்கொண்டு இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை கட்ட வைப்பதே பிரதான கடமையாக இருக்கவேண்டுமே தவிர, சட்டத்துக்கு உட்பட்டு வருமானவரி கட்டுபவர்களை சிரமப்படுத்தக்கூடாது.

    Thursday, April 23, 2015

    Attendance records, HoD sign forged

    In many earlier batches at GMCH, the majority of the 200 MBBS students have not completed the internships but managed to get the certificates by manipulating the college staff (the internship coordinator from the preventive and social medicine or PSM department and associated officials).

    Sources in GMCH say that the previous internship coordinator used to openly take a bribe to issue the certificates. But when this fact was brought to the notice of present dean Dr A Niswade, he appointed Dr Uday Narlawar from the PSM department as new coordinator for maintaining records of attendance and other documentation, and took upon himself the responsibility of monitoring the programme.

    However, Dr Niswade himself didn't take any action against the irregularities brought to his notice by the coordinator. Sources say that it was obstetric and gynaecology head Dr Shalini Fuse who brought to the coordinator's notice that none of the 30 students whose attendance record was brought to her for confirmation by the coordinator had actually attended the training. She also complained that her signatures had been forged on the attendance certificate.

    Later, two other heads, Dr Raj Gajbhiye of surgery and Dr Sajal Mitra of orthopaedics department, had also written to the coordinator that students in their departments had not attended the training and their signatures too were forged.

    Forging signatures is a big offence and should have actually been reported to the police. But the dean didn't take cognisance of these complaints and instead told the students to complete the remaining internship before June end to get the certificates, and took affidavits from them and parents who pressurized him. The dean also claimed that he was under extreme political pressure from the top echelons of the state government and about 30 MLAs.

    This year, only 25 students have completed their internships and got the certificates. But unfortunately, they couldn't clear the PG entrance examination. "Look at the irony. Those who work hard don't get admission and those who don't take the training and attend tuitions clear the exam," said a senior teacher.

    Now, UGC wants varsities to celebrate yoga day

    KOLHAPUR: The University Grants Commission (UGC) has asked all universities under its jurisdiction to celebrate June 21 as Yoga day on campus as well as across all affiliated colleges.

    UGC secretary Jaspal Sandhu issued an official letter on April 17, stating that the 69th session of the United Nations General Assembly had adopted a resolution to observe June 21 as International Yoga day, every year. The letter directed the universities and colleges to observe Yoga day. It advised that promotional films and other information and communication on Yoga be distributed on the day.

    "The idea to declare International day of Yoga was formally proposed at the United Nations by the Prime Minister of India, in his maiden address to UNGA. The government of India has decided to give practical effect to the resolution by ensuring that the first International Day of Yoga is commemorated in a befitting manner on June 21," the letter stated.

    A university official said that the initiative is a must and will be a great success. "Students in educational institutes celebrate Valentine's Day, friendship day, teachers' day and various other events but our heritage remains unknown to them. Celebrating International Yoga day might enlighten them of the true heritage of our country and will also benefit in stressing the importance of yoga among the youths," the official said.

    34 med PG students to lose seats

    NAGPUR: The directorate of medical education and research (DMER) has issued an order to cancel the post graduate (PG) admissions of all students admitted in the first round if they have failed to submit their internship completion certificate before April 20.

    This order will lead to cancellation of admissions of 34 students of Government Medical College and Hospital (GMCH), who got admissions at various colleges in the state or across the country. It includes one student from GMCH who got admission in the same college.

    This historic step is expected to put an end to the alleged practice of GMCH issuing internship completion certificates to all students (200 each year) for past three or more years (2012, 2013, and 2014) to safeguard the image of the college and save their skin and avoid any action against the college or students.

    Though the order is basically meant for Government Medical College and Hospital (GMCH) Nagpur, the competent authority and joint director of DMER (dental) Dr Mansingh Pawar, who issued the order late on Monday evening told TOI that it is a common and routine order for all 14 medical colleges issued every year.

    "I have not done anything extraordinary. It is all as per the Medical Council of India (MCI) norms, which say that the certificates should be submitted by March 31 every year. It is an administrative decision taken after consent of the DMER and the medical education and drugs department officials," said Dr Pawar.

    The letter reads that as per DMER and the PGM-CET 2015 brochure (8.13.3) those who have not completed their internships by March 31 and not submitted the certificates from the college till April 21, their PG admissions should be cancelled immediately and the colleges should inform about the action to the DMER by fax or e-mail immediately.

    "If the respective college doesn't respond in time then the related official would be responsible for it and the college will be held equally responsible," reads the letter.

    DMER director Dr Pravin Shingare admitted that the letter was part of routine procedure but it will surely set an example for future interns. "The only exception this year is that the for the first time any dean (GMCH dean) requested DMER to allow the college to issue certificates by April 20 instead of March 31, which we had agreed to and hence cancellation of any PG admissions is historical. But we had also clarified that the certificate should be issued in back date only and should not be dated April 20," said Dr Shingare.

    On Wednesday, a group of 25-30 interns met GMCH dean Dr A Niswade during the college council meeting. The dean told them to put their grievance before the department heads present there, who told them that they couldn't issue the certificates if the students hadn't completed their 365 days of training in 20 subjects.

    The GMCH interns who had just been following the three-year pattern were so casual in their approach that despite the dean allowing them an extension in internship till June they had still not begun attending the training, assuming that like earlier two batches they too will be issued the certificates by the internship coordinator from the PSM department. "This happens every where. We are unnecessarily being targeted," said a few students.

    Admission under NRI quota to MBBS, BDS courses by test

    BHOPAL: For the first time, students seeking admission to medical and dental colleges though non-resident Indian (NRI) quota will have to appear for a common entrance test from upcoming academic year 2015-2016.

    Acting on a Medical Council of India circular, MP directorate of medical education has asked medical and dental colleges to admit students under the NRI quota based on merits through a common entrance test.

    "It applies to both private and government medical colleges. Government colleges rules for admission for NRI quota has been submitted to government for approval. We intimated private colleges to adhere to MCI circular," said DME Dr S S Kushwah.

    Action on DME letter to private medical and dental colleges depends on view taken by Madhya Pradesh admission and fees regulatory committee (MPAFRC) and association of private dental and medical colleges in Madhya Pradesh (APDMC).

    Until now, NRI quota students did not have to appear for any entrance exam and were admitted on basis of the class XII performance. "Rules and regulations for NRI seats and their admission criteria await an approval from MPAFRC. MCI circular will be put forth before MPAFRC member during a scheduled committee meeting on April 27," said MPAFRC officer on special duty Dr Sunil Kumar. 15% seats in private colleges are reserved for NRI students and there are 28 NRI quota seats MBBS in government medical colleges.

    Activist Dr Anand Rai welcomed the MCI decision, citing without any entrance exam, students with bare minimum 45% marks in XII or equivalent were admitted to medical and dental colleges.

    NRI quota students pay about $10,000 per year (4.5 years MBBS course) along with a year's fees as security deposit. "For more than a decade, certain ineligible candidates have benefitted by seeking admission through NRI quota. Fees from NRI quota is a huge revenue source," he said.

    He cited a Supreme Court seven judges bench order of 2005 that stated 'amount of money in whatever form collected from NRI quota students, should be utilized for benefitting economically backward students and educational institute might admit on subsidized payment of their fee'.

    "As of today seldom has a medical colleges directed to use fees charged from NRI quota students to benefit economically backward students. SC directive too should be followed by medical colleges," said Dr Rai.

    NEWS TODAY 20.09.2024