Monday, September 21, 2015

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிய புதிய இணையதள வசதி: உச்ச நீதிமன்றம் ஏற்பாடு

Return to frontpage

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை, வழக்குகளின் தற்போதைய நிலை, தீர்ப்பு விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள புதிய வசதியை உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது.

நீதிமன்ற வழக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் நவீனமயமாக்கும் முயற்சி 1990-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ecourts.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தேசிய நீதிமன்ற தகவல் தொகுப்பு (என்ஜேடிஜி) பகுதியில் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இந்த வசதியை உச்ச நீதிமன்ற நவீனமயமாக்கல் திட்ட தலைவர் நீதிபதி மதன் லோக்கூர் தொடங்கிவைத்துள்ளார். இதில், நாடு முழுவதும் மாவட்ட அளவில் உள்ள நீதிமன்றங்கள் வரை தாக்கலான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், முடித்து வைக்கப்பட்ட வழக்கு கள் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த விவரம் அன்றாடம் புதுப்பிக்கப்படுகிறது.

2.7 கோடி வழக்குகள்

நாடு முழுவதும் மொத்தம் 2.7 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், நேற்றைய நிலவரப்படி, ஒரு கோடியே 96 லட்சத்து 62 ஆயிரத்து 938 வழக்குகள் குறித்த விவரங்களை ‘என்ஜேடிஜி’ வெளியிட்டுள்ளது. இதில், 66 லட்சத்து 36 ஆயிரத்து 620 சிவில் வழக்குகள், ஒரு கோடியே 30 லட்சத்து 26 ஆயிரத்து 225 கிரிமினல் வழக்குகள் அடங்கும்.

நிலுவையில் உள்ள ஆண்டின் அடிப்படையிலும் வழக்குகள் விவரம் பிரித்து வெளியிடப் பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 20 லட்சம் (10.23 சதவீதம்). ஐந்து முதல் 10 ஆண்டுகள் நிலுவையில் உள்ளவை 35 லட்சம் (17.95 சதவீதம்). இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நிலுவையில் உள்ளவை 59 லட்சம் (30 சதவீதம்). இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக நிலுவையில் உள்ளவை 82 லட்சம் (41 சதவீதம்). மூத்த குடிமக்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 84 ஆயிரத்து 273 (2.97 சதவீதம்). பெண்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 18 லட்சத்து 90 ஆயிரத்து 763 (9.62 சதவீதம்). மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி மாநில நீதிமன்றங்கள் குறித்த விவரங்கள் தேசிய தகவல் தொகுப்புக்கு மாற்றப்பட்டு வருவதால் அந்த விவரங்கள் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

மரபு மருத்துவம்: தூக்கம் எங்கே போனது? மருத்துவர் வி. விக்ரம்குமார்



அசைந்தாடும் சோளக் கதிர்களின் ஆட்டம், அவ்வப்போதுக் களைப்பைப் போக்கப் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு, மதிய வெயிலில் புங்கை மரப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலர் படுக்கையில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மாலையில் வீசும் தூய்மையான தென்றல் காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் கோரைப் பாயில் மனிதன் நிம்மதியாகத் தூங்கிய காலம் ஒன்று இருந்தது!

கட்டுப்பாடின்றி விரைந்துகொண் டிருக்கும் வாகனங்களின் இரைச்சல் காதைத் துளைக்க, பகல் முழுதும் மூளை உழைப்பைச் செலுத்திவிட்டு, மதிய நேரத்தில் சிறிது நேரம் இளைப்பாற, ‘புஷ்-பேக்' இருக்கையிலேயே சாய்ந்து விட்டு, உடலும் மனமும் புழுங்க மாலை வேளையிலே மாசுபட்ட காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் மெதுமெதுவென்று இருக்கும் மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை தேட வேண்டிய நிலையே இன்றைக்குப் பலருக்கும் வாய்த்திருக்கிறது.

என்ன தீர்வு?

நிம்மதியான தூக்கத்தைத் தொலைப் பதால் ஏற்படும் விபரீதங்களும், தூக்கத்தை மீட்பதற்கான வழிமுறை களும்தான் என்ன?

கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள் போன்றவைதான் தூக்கம் பாதிக்கப் படுவதற்கு அடிப்படைக் காரணம். இரவு நேரங்களில் தூங்காமல் நைட் டியூட்டி பார்க்கும் பணியாளர்களுக்கும் வெகு விரைவில் தூக்கமின்மை பிரச்சினை வருவது உறுதி.

இரவின் கொடை ‘மெலடோனின்'

உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நம்முடைய தூக்கம், விழிப்பு நிலைகளை (Sleep-Wake cycle) கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அதேநேரம் தூக்கமின்மையால் ஏற்படும் உடலியல் மாறுபாடு காரணமாகத் தலைபாரம், உடல் வலி, சோம்பல், உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், மயக்கம், உடல் பருமன், தெளிவற்ற மனநிலை ஆகியவை உண்டாகின்றன.

நோய்களுக்கு வரவேற்பு

தூக்கம் பாதிக்கப்படும்போது, நமது உடலில் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ‘லெப்டின்’ (Leptin) ஹார்மோனின் அளவு குறைந்தும், பசியை அதிகமாகத் தூண்டும் ‘கெர்லின்’ (Ghrelin) எனும் ஹார்மோனின் அளவு அதிகரித்தும் உடல் பருமனை உண்டாக்குகிறது. மேலும் ‘குளுகோஸ்’ வளர்சிதை சக்கரம் பாதிக்கப்பட்டு, நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

தூக்கம் சார்ந்து இன்றைக்கு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள செய்திகளை, பல ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் எழுதிய ‘சித்திமய கஞ்செறியும் ஐம்புலத் தயக்கம்' எனும் வரிகள் நித்திரை பங்கத்தால் மயக்கமும் உடல் சோர்வும் ஏற்படும் என்று சொல்கின்றன.

வேண்டாம் பகல் உறக்கம்

பகலில் அதிக நேரம் உறங்குவதால், பல வகை வாத நோய்கள் வரலாம் என ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்னும் நூல் தெரிவிக்கிறது. பகல் உறக்கம் காரணமாக, மரபணுக்களில் மாற்றம் நிகழ்வதாகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக உறங்குவதால், இதய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் தேக அசதி, பசி மந்தம், மலக்கட்டு ஆகிய நோய்களும் உண்டாகலாம்.

சிகிச்சை

l அமுக்கரா கிழங்கு பொடி, ஜாதிக்காய் தூள் ஆகியவற்றைத் தனித்தனியே பாலு டன் கலந்து இரவு நேரத்தில் அருந்தலாம்.

l சிறிது கசகசாவைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

l பாலும் தேனும் அதிகமாக உட்கொள்ள லாம்.

l திராட்சை, தக்காளிப் பழங்களில் ஓரளவு ‘மெலடோனின்’ இருப்பதாலும், அன்னாசி, வாழைப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவை ‘மெலடோனின்’ உற்பத்தியைத் தூண்டுவதாலும், நல்ல தூக்கம் வர அதிகளவில் பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

l அசைவ உணவு வகைகளில் முட்டை, மீன் வகைகளைச் சாப்பிடலாம்.

l மருதாணிப் பூவைத் தலையணை அடியில் வைத்துத் தூங்கலாம்.

l எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.

l மனதை அமைதிப்படுத்தத் தியானப் பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில யோகா சனங்கள், நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

l மனதுக்கு இதமான இசையை ரசிக்கலாம்.

l தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே லேப்-டாப் மற்றும் தொலைக் காட்சியில் மூழ்குவதைத் தவிர்க்கலாம்.

அதி நித்திரையைத் தவிர்த்து, பகல் தூக்கத்தைத் தொலைத்து, குறை உறக்கத்தை வெறுத்து, வயதுக்குத் தகுந்த நேரம் மனஅமைதியுடன் மென்மையாக இமைகளை மூடுவோம். மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

குழந்தைகள் பத்து முதல் பதினைந்து மணி நேரமும், ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ளவர்கள் எட்டு முதல் பத்து மணி நேரமும், பதினாறு முதல் முப்பது வயதுவரை உள்ளவர்கள் ஏழு மணி நேரமும், முப்பது முதல் ஐம்பது வயதுவரை உள்ளவர்கள் ஆறு மணி நேரமும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எட்டு மணி நேரமும் அவசியம் தூங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்,

எல்லாம் ஞாபகம் இருக்கா?

Return to frontpage


டாக்டர் எம்.ஏ.அலீம்


உலக அல்செய்மர் நோய் நாள் செப். 21

மனக் கணக்கு போடுவதில் குழப்பம், சமையலில் உப்பு போட்டோமா - இல்லையா என்ற சந்தேகம், வீட்டைப் பூட்டிவிட்டு வந்தோமா என்ற குழப்பத்துடன் கூடிய சந்தேகம் போன்றவை எல்லாம் எப்போதாவது நடந்தால் பரவாயில்லை, பிரச்சினையும் இல்லை. இது போன்ற சின்ன சின்ன பிரச்சினைகள் ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது. அது அல்செய்மர் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

l டிமென்சியா எனப்படும் மூப்புமறதி நோய் 60 வயதுக்கு மேல் வரக்கூடிய நோய். இவர்களில் 60 -70 சதவீதம் பேர், அதன் வகைகளில் ஒன்றான அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

l வயதானவர்களுக்குத்தான் அல்செய்மர் நோய் ஏற்படுகிறது. மனித வாழ்நாள் அதிகரிப்பால், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் அல்செய்மர் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

l உலக அளவில் அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் ஒருவர் இந்தியர். இந்தியாவில் 50 லட்சம் அல்செய்மர் நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030-ல் இரு மடங்காகும் வாய்ப்பு உள்ளது.

l சின்ன சின்ன விஷயங்களில் ஞாபகம் தப்பிப்போவதுதான் இந்த நோய்க்கு ஆரம்ப அறிகுறி. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு மறந்துவிடுவார்கள். இந்த நோய்க்கான அறிகுறிகள் 60-க்கு வயதுக்கு மேல் தெரிய அதிக வாய்ப்பு உண்டு.

l அல்செய்மர் நோய் தீவிரமடையும் போது, பாதிக்கப்பட்டவர் ஓர் இடத்துக்குத் தனியாகப் போய்விட்டுத் திரும்பி வரமுடியாது. துணிகளைப் பீரோவில் வைப்பதற்குப் பதிலாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவார்கள். குளியலறைக்குச் செல்வதாக நினைத்துக்கொண்டு சமையலறைக்குப் போவார்கள். காலை, மாலை நேரம் குறித்த குழப்பம் ஏற்படும். திடீரென எந்த ஊரில் இருக்கிறோம், யாருடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுவார்கள். காலையில் என்ன சாப்பிட்டோம் என்று ஞாபகம் இருக்காது. உறவினர்களின் முகத்துக்குப் பதிலாகக் குரலை வைத்து அடையாளம் காண்பார்கள். பாதிப்புகளை இப்படிப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நோய் முற்றும்போது நெருங்கிய சொந்தங்களைக்கூட மறந்துவிடுவார்கள்.

l அல்செய்மர் நோய் யாருக்கு யாருக்கு வரும்? வயதானவர்களுக்கு வயது மூப்பால் வரும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள், வாத நோய் ஏற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

l ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, கொழுப்புச்சத்துள்ள உணவைத் தவிர்ப்பது, மதுப்பழக்கத்தைக் கைவிடுவது, தலையில் காயம் ஏற்படாமல் இருக்கத் தலைக்கவசம் அணிந்துகொள்வது போன்றவற்றைக் கடைப்பிடிப்பது முக்கியம்.

l உணவுப் பழக்கத்தில் மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம், அறிவைத் தூண்டக்கூடிய சுடோகு, புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவை மூலம் அல்செய்மர் நோய் வராமல் தடுக்கலாம்.

l சமூகத்தில் முதியவர்களுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முதியவர் களுக்கு ஏற்படும் அல்செய்மர் நோய் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. நோய் பற்றி விழிப்புணர்வைப் பரவலாக்கும் வகையில் செப்டம்பர் 21 உலக ஞாபகமறதி நோய் நாள் (World Alzheimer's Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையக்கருத்து ‘எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’.

கட்டுரையாளர், மூளை நரம்பியல் நிபுணர்



தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

Misleading ads: Jet Airways (India) moves SC against Rs 25-lakh fine

The Financial Express


Misleading ads: Jet Airways (India) moves SC against Rs 25-lakh fine

Jet Airways (India) on Friday moved the Supreme Court against the National Consumer Disputes Redressal Commission’s (NCDRC) order that asked it to deposit R25 lakh as penalty in the Consumer Welfare Fund for indulging in “unfair trade practices” by way of alleged misleading advertisements.

A bench headed by Justice Madan B Lokur asked the airline to place before it legible copies of the contentious advertisements within two weeks.

Senior counsel Shyam Divan and counsel Ujwal Rana, appearing for Jet Airways, argued that there was no intention of deceiving or misleading passengers and the advertisements did say that taxes and surcharges would be extra. “It was mentioned that basic fare is starting from R500 onwards and the advertisement mentioned that conditions apply,” the counsel said.

The NCDRC judgement had come on a complaint filed by Gujarat-based consumer organisation Jagrut Nagrik, an NGO, and a private individual. The complaint had pointed that no mention was made in the ads of the fuel surcharge, congestion charge, transaction fees, and other heads under which the passenger had to pay a whole lot more. The complainants had sought R10 crore as “punitive charges” from Jet Airways and the the now defunct Kingfisher Airlines.

“An ‘asterisk’ was prominently placed in the advertisement to draw the consumers’ attention to the phrase: (*conditions apply) and the conditions included the other charges and taxes as applicable from time to time in addition to the sum of R500 which was advertised (with the asterisk).The conditions also included the requirement of booking of ticket well in advance to avail the offer. Advertisements issued by the airline did not in any manner deceive or mislead any consumer. Further conditions include the requirement of advance booking of the ticket to avail of a lower fare and certain amounts as fuel surcharge etc. In addition to the base fare, the prospective passengers were required to pay fuel surcharge and congestion charge, being the additional expenses incurred by the airline due to steep increase in the price of ‘aviation turbine fuel’ (ATF),” the appeal filed by Jet Airways stated.

The Commission had noted in its August judgment that the two airlines had advertised airfares at ‘throwaway prices’ ranging from R 0 to R999, while in actual the passengers were charged much more. This, the NCDRC said, amounted to unfair trade practices. It held that advertisement disclosing only the minimum basic fare to potential consumers is misleading in the light of the fact that the other charges payable by a passenger far exceeded the said minimum basic fare.
First Published on September 19, 2015 12:25 am

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

2:26 PM | செப்டம்பர் 20, 2015

சென்னை, செப். 20–பாஸ்போர்ட் எடுப்பதற்கு எளிமையான விதிமுறைகளை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.பொதுமக்கள் சிரமமின்றி ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து மிக விரைவாக பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகத்தில் சென்னையில் 3 பாஸ்போர்ட் சேவை மையங்களும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை நகரங்களில் தலா ஒரு சேவை மையம் வீதம் மொத்தம் 8 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

 நகர்புறங்களை சேர்த்து மக்கள் படித்தவர்களாக இருப்பதால் ஆன்–லைன் மூலம் வீட்டில் இருந்த படியோ, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்றோ பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கிறார்கள்.ஆனால் கிராமப்புறங்களில் படிப்பு அறிவு இல்லாதவர்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க பெரும் சிரமமும், கஷ்டமும் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி தரகர்கள் பாஸ்போர்ட் எடுக்க ரூ.5000 முதல் ரூ.8000 வரை வசூலிக்கிறார்கள். கிராம மக்கள் எளிதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வழிவகை காண வேண்டும் என மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன.இதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரனுடன் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பாஸ்போர்ட் சேவையை கிராமப்புற மக்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படுகிறது.தமிழகம் முழுவதும் உள்ள 264 தாலுகா அலுவலகங்ளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இ–சேவை மையத்தில் ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாளை (21–ந்தேதி) முதல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட்டிற்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்குகிறது

.இதுதவிர தலைமை செயலகம், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை மற்றும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 285 இடங்களில் ஆன்–லைன் சேவை தொடங்குகிறது.ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு கட்டணமாக மொத்தம் ரூ.1655 ரொக்கமாக வசூலிக்கப்படும். இதில் ரூ.1500 பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் ரூ.100 அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கும் ரூ.55 ஸ்டேட் பாங்கிற்கும் கமிஷனாக பெறப்படுகிறது. இந்த இ–சேவை மையங்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நிறுவகித்து வருகிறது.இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலகுரு கூறியதாவது:–கிராமப்புற மக்களுக்காக பாஸ்போர்ட் இ–சேவை மையங்கள் நாளை முதல் செயல்படுகின்றன. அங்கு சரியான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் சென்றால் அதனை சரி பார்த்து ஆன்–லைன் மூலம் பதிவு செய்வார்.

 பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்து விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி (ஆன்– லைன் வழியாக) கொடுப்பார். இதற்கான கட்டணம் ரூ.1655 மட்டுமே. இதுபோக எவ்வித செலவும் இல்லை. புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களும், புதுப்பிக்க தவறியவர்களும், குறிப்பிட்ட காலம் முடிந்து மீண்டும் பாஸ்போர்ட் பெற விரும்புவர்களும் அங்கு விண்ணப்பிக்கலாம்.பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும். கிராமப்புற மக்கள் எவ்வித சிரமமின்றி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க அரசு இ–சேவை மையங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இடைத்தரகர்களுக்கு இனி வாய்ப்பு இல்லை. விண்ணப்பதாரர்களே நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

சமையலறையில் கருகும் மனிதவளம்

Return to frontpage


என்.கெளரி


பிரபல திருமண இணையதளம் ஒன்று, கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. திருமணத்துக்கு முன்பும் பின்பும் அவர்களுடைய வாழ்க்கை முன்னுரிமைகளை வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. திருமணத்துக்கு முன்பு ‘பணி வாழ்க்கை’யை முதல் முன்னுரிமையாக 53 சதவீதப் பெண்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். கிட்டத்தட்ட 51 சதவீதப் பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் வருங்காலக் கணவருக்கே முதல் முன்னுரிமை என்று சொல்லியிருந்தனர். அவர்கள் ‘பணி வாழ்க்கை’யை நான்காவது இடத்துக்குத் தள்ளியிருந்தனர். ஆனால், பல பெண்கள் திருமணத்துக்குப் பிறகு, பணி வாழ்க்கைக்கு இந்த நான்காவது இடத்தைக்கூட அளிக்க விரும்பவில்லை.

மனிதவள மேம்பாடு குறித்தும் அதைச் சிந்தாமல் சிதறாமல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது பற்றியும் இன்று நிறையவே பேசப்படுகிறது. பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகரான கல்வியும் அறிவும் பெற்றுள்ள நிலையில் அவர்கள் ஒட்டுமொத்த மனித வளத்தின் சரிபாதியாகக் கொள்ளப்பட வேண்டியவர்கள். அந்த வகையில், திருமணம் பெண்களின் மனிதவளத்தை அடியோடு முடக்கிப்போட்டுவிடுவதையே மேற்கண்ட ஆய்வு காட்டுகிறது.

கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புறங்களில் பிறந்து வளர்ந்து நன்றாகப் படித்து, நல்ல பணியில் இருக்கும் பெண்களே திருமணத்துக்குப் பிறகு தங்கள் மனித வளத்தைப் பயன்படுத்த முடியாமல் அதிகம் தவிக்கின்றனர்.

திறமையின் தேடல் திருமணம்வரை

பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது மாணவர்களைவிட மாணவிகளே அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைகின்றனர் என்பது தெரிந்த விஷயம். கல்லூரியில் சராசரி சதவீதத்துடன் தேர்ச்சியடையும் ஆண்களின் மனிதவளம் அவர்களின் பணி வாழ்கையின் மூலம் சமூகத்துக்குப் பயன்படுகிறது. ஆனால், எண்பது சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று வெளிவரும் பெண்களின் மனிதவளம்கூடக் குடும்ப வாழ்க்கையின் கோணல் சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போய்விடுகிறது. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கும் பயன்படாமல், சமூகத்துக்கும் பயன்படாமல் வீணாகிறது. தாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துக்குள் முடங்கிப்போகும் அவலம் பற்றிய மனவேதனையும் குற்றவுணர்வும் சில பெண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பெரும்பாலான பெண்கள் இதைத் திருமண வாழ்க்கையின் இயல்பான மாற்றமாக எடுத்துக்கொண்டாலும் எல்லோராலும் அப்படி விட்டுவிட முடியவில்லை.

மனநிறைவைப் பறித்த மண வாழ்க்கை

சுதாவுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்திற்கு முன் அவர் ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். திருமணத்துக்குப் பிறகு கணவர் குடும்பத்தினர் விரும்பாததால் வேலையை விட்டுவிட்டார். ஆனால் அது அவருக்கு வலி மிகுந்த முடிவு. “ஆசிரியர் பணி என்பது என் கனவு. திருமண வாழ்க்கைக்காக அதை சமரசம் செய்துகொண்டதை என்னால் இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணத்துக்கு முன்பு ஆசிரியராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் மனநிறைவுடன் கழிந்தது. இப்போது என்னுடைய ஒவ்வொரு நாளும் சமையலறையில் தொடங்கி சமையலறையில்தான் முடிகிறது. தினமும் கணவருக்கு ‘லஞ்ச்’ பேக் செய்வதிலும், மாமியார், மாமனாரை கவனித்துக்கொள்வதிலும், பூஜை செய்வதிலும்தான் நகர்கின்றன என் நாட்கள். ஒரு கட்டத்தில், என்னையே என்னால் எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டது. ஒரேயடியாக என் சுயத்தை இழந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். என் கணவர் குடும்பத்தினரிடம் எப்படியோ சம்மதம் வாங்கி இப்போது என் மேல்படிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால், மேல்படிப்பை முடித்தவுடன் என்னால் வேலைக்குச் செல்ல முடியாது. ஏனென்றால், திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் என் மாமனார், மாமியார் பேரக் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். இன்னும் எப்படியும் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் என்னால் வேலைக்குச் செல்ல முடியும். எப்படியாவது என் ஆசிரியர் பணிக்கு மீண்டும் சென்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன்” என்று சொல்கிறார் சுதா.

பலியாகும் பணி வாழ்க்கை

திருமணத்துக்குப் பிறகு, பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொள்ளும் நிலைமை எந்த ஆணுக்கும் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்களால் பணி வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்துத் தொடர முடிவதில்லை. அப்படியே முயற்சிசெய்து தொடர்ந்தாலும் குடும்ப வாழ்க்கையில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதே பல பெண்களின் அனுபவம்.

ஸ்வேதாவின் அனுபவமும் அப்படிப்பட்டதுதான். “பொறியியல் படித்து முடித்தவுடன் எனக்குப் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், என் பணி வாழ்க்கை ஆரம்பிப்பதற்குள் என் அப்பா யாருமே எதிர்பாராத விதமாக எனக்குத் திருமண ஏற்பாடு செய்துவிட்டார். அதனால், நான் முயற்சி செய்தும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. திருமணமான அடுத்த ஆண்டே எனக்குக் குழந்தை பிறந்தது. திடீரென்று என் கணவர் பொறுப்பில்லாமல் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டார். இந்தச் சமயத்தில், அதே நிறுவனத்தில் எனக்கு மறுபடியும் வேலைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. என் மாமனார், மாமியாருக்கு நான் வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லையென்றாலும் என்னைத் தடுக்க முடியவில்லை. குழந்தையை என் அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு மூன்று ஆண்டுகள் வேலைக்குச் சென்றேன். அந்த மூன்று ஆண்டுகளில் என் கணவர் வீட்டார் என்னை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்தினார்கள். நான் என்ன கருத்து சொன்னாலும் ‘எல்லாம் சம்பாதிக்கிற திமிர்’ என்று சொன்னார்கள். என் கணவரோ, அலுவலகத்தில் இருக்கும்போது அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லையென்றால்கூட என் நடத்தையை சந்தேகப்பட்டுப் பேசுவார். ஒரு கட்டத்தில், இவர்களுடைய பேச்சு தாங்க முடியாமல் வேலையை விட்டுவிட்டேன். அதற்குப் பிறகுதான் என் கணவரும், அவர் அம்மா, அப்பாவும் அமைதியானார்கள். இப்போது அவர் ஒரு சுமாரான வேலைக்குச் செல்கிறார். நான் என் எல்லாத் தேவைகளுக்கும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் சுயமரியாதை, என் அடையாளம் என எல்லாவற்றையும் இழந்துவிட்டுத்தான் என் திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஸ்வேதா.

பணி வாழ்க்கையா, குடும்ப வாழ்க்கையா?

சுதா, ஸ்வேதா இருவரும் திருமணத்துக்குப் பிறகு பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டார்கள். ஆனால், வினோதாவின் திருமணமே ‘திருமணமான பிறகு வேலைக்குப்போக மாட்டேன்’ என்று மாப்பிள்ளை வீட்டாருக்கு உறுதிமொழி அளித்து அதன்பேரில்தான் நடக்கவிருக்கிறது. “கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்பதற்காகப் பல சவால்களைக் கடந்து ‘எம். ஃபில்’ வரை படித்தேன். ஆனால், என் அம்மாவும், அப்பாவும், ‘நீ படிக்கிறேன், படிக்கிறேன் என்று சொல்லி இருபத்தியாறு வயதாகிவிட்டது. உனக்குப் பிறகு உன் தங்கைக்கும் திருமணம் செய்துகொடுக்க வேண்டும். அதனால், சீக்கிரமாகத் திருமணம் செய்துகொள்’ என்று என்னை மிகவும் வற்புறுத்தினார்கள். அதனால், வேறு வழியில்லாமல் நானும் திருமணத்துக்கு சம்மதித்தேன். ஆனால், நான் வாழ்க்கையில் மிக மோசமான சமரசத்தைச் செய்கிறேன் என்பது எனக்குப் புரிகிறது. குடும்பமா, பணி வாழ்க்கையா என்று வரும்போது, குடும்பத்தைத்தான் என்னால் தேர்வுசெய்ய முடிந்தது” என்று சொல்கிறார் வினோதா.

சிந்தனை மாற்றம் தேவை

சுதா, ஸ்வேதா, வினோதா...இவர்களைப் போல்தான் இந்தியாவில் பல பெண்கள் திருமண வாழ்க்கைக்காகப் பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டு தங்கள் தனிப்பட்ட அடையாளங்களைத் தொலைத்து நிற்கிறார்கள். நம் சமூகம், இன்னும் பெண்களை மனிதவளமாகக்கூட கருதவில்லை. ஒரு பெண்ணுக்கு அவளது ஆற்றலைப் பறைசாற்றும் அடையாளங்கள் பல இருக்க இல்லத்தரசியாக இருப்பதை மட்டுமே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வரை பெண்களின் மனிதவளம் சமையலறையில் வீணாகிக்கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியாது.

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

Sunday, September 20, 2015

Hindi varsity urges MCI to allow Hindi for writing MBBS papers

Hindi varsity urges MCI to allow Hindi for writing MBBS papers

City-based Atal Bihari Vajpayee Hindi Vishwavidyalaya has demanded from the Medical Council of India (MCI) to avail students an option to write MBBS course papers in Hindi.

"We have asked the MCI to give an option to student pursuing MBBS degree course to write their exams in Hindi as long as it is not possible for it to have Hindi as another medium of instruction."
When candidates have an option to take Pre-Medical Test (PMT) in Hindi, they should also be given a similar facility in MBBS exams," university Vice-Chancellor Mohanlal Cheepa told PTI on Saturday.
Set up in 2011, the university has been batting for the issue of inclusion of Hindi as a medium of language in MBBS course at medical institutes and has discussed the matter with MCI in the recent past.
When asked why MCI was not permitting to conduct MBBS course in Hindi despite the Rajbhasha Samiti giving its nod on the issue way back in 1991, Cheepa said, MCI cites reason as paucity of medical books in Hindi.
"MCI states that they don't have relevant books in Hindi. Therefore, on the occasion of 10th World Hindi Sammelan (held here last week), we along with Hindi Granth Academy collected and displayed 250-300 books (in medical science) to prove that MBBS course can also be taught in Hindi," he said.
The VC said he had suggested to the MCI that it can teach MBBS in English as long as it is not possible in Hindi, but an option should be provided to candidates to write papers in Hindi.
Citing figures from a World Health Organisation (WHO) report, he said among students who passed out from prestigious All India Institute of Medical Sciences (AIIMS), 54 per cent go abroad for better future prospects and never return.
The report also stated that bright students from Hindi medium, who are selected for institutes like AIIMS, majority of them lag due to the language constraint while some even take extreme step of committing suicide for failing to cope with pressure due to the change in medium of instruction, he said.
To a query, he said that out of nearly 400 medical colleges in the country, 115 are located in the Hindi belt, and added that he is planning to hold a dialogue with vice chancellors on the issue.
He also said that beside MCI, the country has to also change its mindset on the issue that MBBS syllabus can only be taught in Hindi.

விஷ்ணு பிரியா விவகாரம்: கதை கட்டுகிறதா காவல்துறை?

vikatan.com

சென்னை: தற்கொலை செய்து கொண்ட விஷ்ணு பிரியா, போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதால் போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறது காவல்துறை வட்டாரம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றியவர் விஷ்ணு பிரியா. திருமணமாகதவர். இவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் பல சந்தேக ரேகைகள் படிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முன்னதாக இவர் எழுதியதாக சொல்லப்படும்  கடிதத்தில்,  "போலீஸ் பணி எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதற்கு நான் தகுதியற்றவர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் விஷ்ணுபிரியாவின் குடும்பமே போலீஸ் துறையுடன் நெருக்கமானதுதான் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 

இவரது தந்தை ரவி, ஏ.டி.எஸ்.பியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது தாய் கலைச்செல்வி வங்கி அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுவயதில் இருந்தே விஷ்ணு பிரியாவுக்கு போலீஸ் பணி என்பது லட்சியமாகவே இருந்துள்ளது. இதற்காக அவர் ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்தே தன்னை தயார் செய்து வந்துள்ளார். இதற்கு உறுதுணையாக அவரது தந்தையும் இருந்துள்ளார். பி.எஸ்சி கணிதம் முடித்து விட்டு அரசு தேர்வுகளை எழுதினார். தலைமை செயலகத்தில் வருவாய்துறையில் பணி கிடைத்தது. தொடர்ந்து அவர் தேர்வு எழுதி தன்னுடைய லட்சியமான டி.எஸ்.பி பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று திருப்பத்தூரில் பயிற்சி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். 7 மாதத்துக்குப் பிறகு திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பிப்ரவரி மாதத்தில் பணியமர்த்தப்பட்டார். விஷ்ணு பிரியாவின் இன்னொரு சகோதரியும் டி.எஸ்.பியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பமே போலீஸ் குடும்பம் என்பதால் அங்கு நிலவும் அனைத்தும் விஷ்ணு பிரியாவுக்கு சிறுவயது முதலே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். அவரது சாவுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டியது காவல்துறையின் கடமை.

-எஸ்.மகேஷ்

எது தெய்வீகக் காதல்?

Dinamani


எது தெய்வீகக் காதல்?


By இராம. பாரதி

First Published : 19 September 2015 01:39 AM IST


சங்க கால இலக்கியங்களில் தொடங்கி சமகால திரைப்படங்கள் வரை அனைத்திலும் பேசப்பட்டது, இனியும் பேசப்பட இருப்பது, பருவ வயதில் பலருக்கு பிடித்தமானது எல்லாமே ஒன்றுதான். அதுதான் காதல்.
காதல் என்றால் என்ன? எல்லோருக்கும் காதல் வருமா? அதை உணர்வது எப்படி? எல்லாவற்றுக்கும் மேலாக தெய்வீகக் காதல் என்றால் என்ன? இதுபோன்ற எண்ணிலடங்கா கேள்விகள் நம் முன்னே எழுகின்றன.
ஜாதி - மத வேறுபாடுகளையும், ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காமல் தோன்றுவதுதான் காதல் என்றும், காதலுக்கு கண்ணில்லை என்றும் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் மறுப்பதற்கில்லை. அதேவேளையில், பருவ வயதில் எதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்படுவதும், நம் மனதுக்குள் குறுகுறுப்பான எண்ணங்கள் தோன்றுவதும் இயல்பானதே. அது கண்டிப்பாக காதல் அல்ல.
என்றைக்கு நம் வாழ்க்கையை நாமே தீர்மானிக்கும் அளவுக்கு பக்குவம் அடைகிறோமோ அன்றைக்கு நம் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். அது என்ன பக்குவம்? அது எந்த வயதில் வரும்? என்ற கேள்விகள் எழலாம்.
ஒரு குடும்பத்தை வழிநடத்திச் செல்ல தந்தையும், தாயும் செய்யும் காரியங்களை என்றைக்கு நாம் சுயமாக செய்யத் தொடங்குகிறோமோ அன்றைக்கு நாம் பக்குவம் அடைந்திருப்பதை உணர முடியும். அது எந்த வயதினருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
அப்படியொரு தருணத்தில் நம் மனதுக்குள் காதல் தோன்றினால் நிச்சயம் ஒரு தெளிவான முடிவை எடுப்பவராக இருப்போம். நம் மனதைக் கவர்ந்த எதிர் பாலினத்தவர் நமக்கும், நமது குடும்ப வாழ்க்கைச் சூழலுக்கும் சரியான தேர்வாக அமைவார்களா என்பதை மனம் சிந்திக்கும்.
ஆம் எனில், நாயகன் அல்லது நாயகியை திருமணம் செய்வதில் ஜாதி, மத, பொருளாதார ரீதியாகத் தடை ஏற்படுமா? அப்படி இல்லாவிட்டாலும் யாரேனும் ஒருவரது குடும்பத்தில் தீவிர எதிர்ப்பு இருக்குமா? என்பதை நம் மனம் கணக்கீடு செய்துவிடும்.
அதன் பின்னர், பிரச்னைகள் எதுவும் வேண்டாம் என தொடக்கத்திலேயே ஒதுங்குவது அல்லது தடைகளைத் தாண்டி திருமணம் செய்வது என்ற தெளிவான முடிவை எடுப்பவராக நாம் இருப்போம். இரண்டில் எது நடப்பினும் நன்மையே.
ஆனால், இதுபோன்ற தெளிவான சிந்தனைகள் எதுவுமே இல்லாமல் நடை, உடை, பாவனை என அழகியலை மட்டுமே பார்த்து உருவாகும் குறுகுறுப்பான எண்ணம் வெறும் பாலின ஈர்ப்பாக மட்டுமே அமையும்.
ஆச்சரியம் என்னவெனில் இந்தக் காதலில்(?) ஒருவர் மீது ஒருவர் மிக இறுக்கமான அன்பு வைத்திருப்பதாக நம் மனம் நினைத்துக் கொள்ளும். ஆனால், கடற்கரை, பூங்கா, திரையரங்கு என சுற்றித் திரிந்து பாலின ஈர்ப்புக்கான தேவைகள் முடிந்தவுடன் இந்தக் காதல் காணாமல் போய்விடும்.
சில சமயங்களில், இதில் யாரேனும் ஒருவரின் காதல் உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குப் பிடித்தமான ஆணோ அல்லது பெண்ணோ தவறான தேர்வாக இருப்பார்கள்.
நான் ஓர் ஏழையைக் காதலிக்கிறேன் என்று கூறுவது ஒரு பெண்ணின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், வாழ்வில் எவ்வித இலக்குமின்றி ஊதாரியாய் சுற்றித் திரிபவரைக் காதலிக்கிறேன் என்று கூறினால் அதை சரியென ஏற்க முடியுமா?
இதேபோல், எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆண், குடும்பத்தை வழி நடத்தும் திறன் ஏதும் இல்லாமல் ஆடம்பர வாழ்வை விரும்பும் பெண்ணைக் காதலிக்கிறேன் என்று கூறுவதும் ஏற்புடையதாக இருக்காது.
இது எல்லாவற்றையும் மீறி இப்படியொரு வாழ்க்கைத் துணையின் (ஆண் / பெண்) கரம் பற்றும்போது அந்தத் திருமணம் கசப்பானதாக மாறுகிறது. ஏனெனில், காதலிக்கும்போது கண்ணே, மணியே, முத்தே என கொஞ்சியதைப் போல எதார்த்த வாழ்வு அமைவதில்லை.
எல்லாம் சரிதான், பக்குவம் அடைந்ததோ அல்லது துடிப்புமிக்கதோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காதல் என்பது தானாக இணைபவர்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறுவது சரிதானா? நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இணைபவர்கள் காதலிக்கும் வாய்ப்பை பெறாதவர்களா என்ன? கண்டிப்பாக அப்படியொன்றும் இல்லை.
காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எதுவாக இருப்பினும் ஓர் ஆணுடன், பெண் கைகோத்து குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும்போதுதான் உண்மைக் காதலுக்கான கதவுகள் திறக்கின்றன.
அப்படிப் பார்த்தால் திருமணத்துக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு என ஏதேனும் ஒரு சூழலில் அனைவருக்குமே காதலிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இதில் எத்தனை பேர் தெய்வீகக் காதலுடன் வாழுகின்றனர்? முதலில், தெய்வீகக் காதல் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண்பது அவசியம்.
ஆனால், கடலில் சங்கமிப்பது இயற்கையின் நியதிதானே தவிர நதிகளின் நோக்கம் அதுவல்ல. எத்தனை முறை வறட்சி ஏற்பட்டாலும் மீண்டும், மீண்டும் நீரை சுரக்கச் செய்து காடு, பள்ளம், மலை முகடுகளைத் தாண்டிச் சென்று மண்ணை வளமாக்குவதுதான் நதிகளின் நோக்கம்.
இதைப் போலவே, நம் வாழ்விலும் எத்தனை எத்தனை ஏற்றத் தாழ்வுகளை வேண்டுமானாலும் சந்திக்க நேரிடலாம். எண்ணற்ற சண்டை சச்சரவுகள் வரலாம். ஆனால், மீண்டும், மீண்டும் நம்மில் அன்பு சுரப்பதுடன், அது நதி நீரைப் போலவே தூய்மையானதாக இருக்குமென்றால் அந்த வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
நம் சதைகள் இளமையுடன் இருக்கும்போது கைகோத்து நடப்பதல்ல காதல். அறுபது, எழுபது வயதுகளைத் தாண்டி முதுமையை எட்டிய நிலையில், கைகோத்து நடந்து செல்ல நம் மனம் விரும்புமென்றால் அதுதான் தெய்வீகக் காதல்.
வாழ்வின் அனைத்து தருணத்திலும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வாழ்ந்தால் மட்டுமே எந்தவொரு தம்பதியும் தெய்வீகக் காதலை அடைவது சாத்தியம்.

Friday, September 18, 2015

மின் பொருள் கழிவுகள் - ஒரு சவால்


!Dinamani


By பூ. சேஷாத்ரி

First Published : 18 September 2015 01:04 AM IST


மின்சாரம், மனிதனோடு ஒன்றிவிட்ட உருவம் இல்லா ஒன்று. இன்று மின்சாரம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. வீடுதான் என்று இல்லை, மின்சாரம் இல்லை என்றால் இந்த நாடே இயங்காது என்ற நிலை தற்போது.
நமது முன்னோர்களில் சிலர் கூறுவர், அந்தக் காலத்தில் நாங்கள் அரிக்கேன் விளக்கில்தான் படித்தோம் என்று. ஆனால், இன்றைய தலைமுறையினர் சில நிமிடங்கள்கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்று புலம்புவதைக் கேட்கலாம்.
வளர்ந்து வரும் மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள், வீடுகள், நகரங்கள், அவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருள்கள் என அனைத்தும் அதிகரித்து வருவதால் மின்சாரத்தின் நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில மாநிலங்கள் தங்கள் மின் தேவையை அவர்களாகவே பல தரப்பட்ட மின் தயாரிப்பு முறைகள் மூலம் பூர்த்தி செய்துகொள்கின்றனர். சில மாநிலங்கள் அண்டை மாநிலங்களை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
மின்சாரம் இல்லாத நேரத்திலும் மின்சாதனப் பொருள்களை இயக்க, பேட்டரியுடன் கூடிய தடையில்லா மின்சார சாதனம் (யு.பி.எஸ்.), ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் என்று இன்றைய அறிவியல் உலகில் மனிதன் தனக்குத் தானே பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டான்.
மின்சாரம் என்பது நீர், காற்று, நிலக்கரி, அணு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது சூரிய மின்சாரமும் பிரபலமாகி வருகிறது. நகரங்களில் உள்ள வீடுகளின் கூரைகளின் மீது தகடுகள் மூலம் தற்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அது பேட்டரியில் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
சில மாநில அரசுகள் சூரிய மின்சாரம் மூலமும் அவர்களது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. சில மாநிலங்கள் அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் இறங்கியுள்ளன.
இன்று பருவநிலை மாற்றத்தினால், மழை பொய்த்துவிட்டது. மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டதால் வெப்பமானது அதிகரித்து வருகிறது. உடன் வாகனங்கள் பெருகிவிட்டதால், அவற்றிலிருந்து வெளியேறும் புகையால் இன்னும் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
தற்பொழுது மின்சாரத்தால் இயங்கும் பொருள்களின் அசுர வளர்ச்சியினால், வீட்டு உபயோகப் பொருள்கள் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்களையும் தாண்டி இன்று நான்கு சக்கர வாகனம், பேருந்து, விமானம் போன்றவைகூட மின்சாரத்தால் இயங்கும் அளவில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்துவிட்டன.
இது ஒருபுறம் ஆறுதலான விஷயமாகத்தான் இருக்கிறது. மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களால் மாசு இல்லை.
போக்குவரத்தை மின்மயமாக்குவது குறித்த "ஐடெக் இந்தியா 2015' என்ற மூன்று நாள் சர்வதேச மாநாடு அண்மையில் சென்னையில் நடந்தது.
இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் அனந்த் கங்காராம் கீதே, மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"மேலும், மத்திய அரசின் "ஃபேம் இந்தியா' செயல் திட்டத்தில், ஹைபிரிட் மின்சார வாகனங்களின் வளர்ச்சி, அவற்றைச் செயலாக்கம் செய்வது என்பது ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கரியமில வாயுவால் ஏற்படும் மாசுகள், எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்கலாம்.
உலக அளவில் எண்ணெய் வளம் தொடர்ந்து குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளை ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் தயாரித்து வருகின்றன. இந்த வகையான வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது.
எனவே, இந்தியாவில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக 30 சதவீத மானியத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லித்தியம் பேட்டரிகளை இந்தியாவில் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய சாலை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றும் அமைச்சர் அனந்த் கீதே கூறினார்.
பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு சில ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் புழக்கத்தில் வந்துவிட்டது என்றபோதிலும், அது மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துவிட்டது. அதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
பராமரிப்புச் செலவு என்னவோ குறைவுதான் என்றாலும், பேட்டரியின் ஆயுள்காலம், ஆயுள் காலம் முடிந்த பின்பு அதை மாற்றுவதற்கு ஆகும் செலவுகள், வாகனத்தின் இதர உதிரிபாகங்கள் சரிவர கிடைக்காதது போன்ற காரணங்கள்தான் அவை.
சில நாடுகளில் பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பேருந்து, விமானங்களின் மாதிரிகளில் சோதனை ஓட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
நாட்டில் மின் சாதனங்களில் பெரு வரவால் மின் பொருள் கழிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது இனி வரும் காலங்களில் இன்னும் எந்த அளவுக்கு உயரும் என்று கணிக்க இயலாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
பேட்டரியால் இயங்கும் யு.பி.எஸ். என்கிற தடையில்லா மின் சாதனம் பெருவாரியான இல்லங்களில் வந்துவிட்ட நிலையில், அதன் பேட்டரியானது தோராயமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது.
இரு சக்கர, நான்கு சக்கர, லாரி, பேருந்து, ரயில் என அனைத்து வாகனங்களிலும் பேட்டரியானது பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆயுள்காலம் முடிந்து தூக்கி ஏறியப்படும் பேட்டரிகளை மாசு விளைவிக்காத அளவுக்கு மறுசுழற்சிக்கான தொழில்நுட்பமோ, தொலைநோக்குச் சிந்தனையோ நம் நாட்டில் இல்லை.
ஏற்கெனவே, குப்பை, பிளாஸ்டிக் பொருள்களின் பெருக்கத்தால் மக்கள் வசிக்கும் பகுதிகள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன என்கிற வேதனையான சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மின்சாதனம், வாகனங்களை பேட்டரியால் இயக்கும் முயற்சி வெற்றி பெற்றாலும், இது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு நண்பனாக அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீண்டும் டெங்கு!

Dinamani

By ஆசிரியர்

First Published : 18 September 2015 01:01 AM IST


தலைநகரில் எது நடந்தாலும் அது செய்திதான், தேசியப் பிரச்னைதான். தில்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100-க்கு அதிகமானால், மத்திய அரசு உடனடியாக வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது. வெங்காய ஏற்றுமதி விலையை உயர்த்தி நிர்ணயிக்கிறது. தில்லியில் ஒரு பெண் வல்லுறவுக் கொலைக்கு ஆளானால், மத்திய அரசு உடனே சட்டத்தையே திருத்தி எழுதுகிறது. அதேபோலவே, தில்லியில் டெங்கு காய்ச்சல் என்றாலும் மத்திய அரசு பதறுகிறது. களம் இறங்குகிறது.
தில்லியில் கடந்த மூன்று வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவலாக இருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக டெங்கு தீவிரம் கொண்டு, மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஏழு வயதுச் சிறுவன் அவினாஷ் டெங்கு காய்ச்சலால் இறந்தபோது, அந்தத் துயரத்தைத் தாங்க முடியாத பெற்றோர் தாங்கள் வசித்த 4-ஆவது மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை, தில்லியில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் பேசப்படும் விவகாரமாக மாற்றின ஊடகங்கள்.
இந்தச் சிறுவனின் மரணம், பெற்றோரின் துயரம் ஆகியவற்றோடு நின்றுவிடாமல், குழந்தை அவினாஷ் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது, மூன்று மருத்துவமனைகளால் சேர்த்துக்கொள்ள முடியாது எனத் திருப்பியனுப்பப்பட்ட விவகாரம், தில்லி மருத்துவமனைகளின் மீதான தீவிர எதிர்வினையைக் கிளப்பியது. சிறுவன் அவினாஷ் மட்டுமல்ல, அன்றாடம் பல நூறு பேர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்கிற உண்மையும் வெளிவந்தது. மக்கள் பெருந்திரள் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் களப் போராட்டம், அறிக்கைப் போராட்டம், பேட்டித் தாக்குதல் என பன்முனை எதிர்ப்புகள் தொடங்கின.
இதன்பிறகுதான் மத்திய அரசு தலையிட்டது. தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சலால் வரும் நோயாளிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு ரூ.600 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்தச் சோதனைகள் தில்லி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன. தில்லியில் அனைத்துப் படுக்கைகளும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. கூடுதலாக 1,000 படுக்கைகளை வாங்குவதற்கு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும்கூட, தனியார் மருத்துவமனைகளை நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகமாக நாடுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால், அத்தகைய மருத்துவமனைகளை நெருக்கடிநிலை நடவடிக்கையாக அரசே தாற்காலிகமாக ஏற்று நடத்தும் என்று கேஜரிவால் கூறியதால், இந்திய மருத்துவர்கள் கழகம் சார்பில் நோயாளிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "தற்போதைய டெங்கு காய்ச்சல் வைரஸ் 2013-ஆம் ஆண்டு வைரஸ் போல கொல்லும் கிருமி அல்ல. அச்சப்பட வேண்டாம். அதிகமான காய்ச்சல் இருந்தால் மட்டுமே அனுமதிக்கும் அவசியம் நேரும்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றமும்கூட பொதுநல வழக்கை ஏற்றுக் கொண்டு, டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசுக்கும், தில்லி முதல்வருக்கும் விளக்கம் கோரியுள்ளது.
இவை யாவும் ஒருபுறம் நடந்தபோதிலும், ஓர் உண்மையை மறுப்பதற்கில்லை. டெங்குக் காய்ச்சல் தில்லிக்குப் புதியதல்ல. காமன்வெல்த் விளையாட்டு நடந்த வேளையில், தில்லியில் டெங்கு காய்ச்சலால் எட்டு பேர் இறந்தனர். சுமார் 6,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் 2,000 பேர் தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது தொடர்கிறது. குறிப்பாக, அக்டோபர் மாதம் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
நிகழாண்டில் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை 15 பேர் இறந்துள்ளனர். சுமார் 1,800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில்தான், மத்திய அரசும், தில்லி அரசும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன.
டெங்கு காய்ச்சலைப் பொருத்தவரை, அரசுகளைவிட மக்களே பொறுப்பாளிகள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள், தூய்மையான நன்னீரில் மட்டுமே வளர்ந்து பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வீணாகக் கிடக்கும் சிறு பாத்திரங்கள், கலயங்கள், பயன்படாத டயர்கள், பூந்தொட்டிகள், பாத்திகளில் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொற்றுநோய் அல்ல. ஆகவே, நன்னீர் தேங்குவதைத் தவிர்த்தாலே பாதி பிரச்னையை எளிதில் சமாளிக்கலாம். நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருஞ்செலவு மிச்சமாகும்.
கொசு விரட்டி, கொசுக் கொல்லி ஆகியவற்றைத்தான் இன்று பயன்படுத்தி வருகிறோம். இவற்றைவிட கொசுக்களை மலடாக்கும் மருந்துகள் மிகவும் பயனுள்ளதாகவும், கொசு உற்பத்தியை வேகமாகக் கட்டுப்படுத்தவும் உதவுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அத்தகைய கொசு மலடுக்கான மருந்துகள் சந்தைக்கு வரவில்லை. அது ஏன் என்பது புரியவில்லை.
மக்களை நோயிலிருந்து காப்பாற்றுவது எப்படி அரசின் கடமையோ, அதேபோன்று நோய் உண்டாக்கும் கொசுக்களை உற்பத்தியாகாமல் தடுக்க உதவுவதும் மக்களின் கடமைதான் என்பதை நாம் உணர வேண்டும்.

Thursday, September 17, 2015

இறைச்சி உற்பத்தியில் இந்திய எழுச்சி


Dinamani


By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 17 September 2015 01:39 AM IST


இந்தியா என்றால் புலால் மறுப்பை வலியுறுத்திய வள்ளுவன், புத்தன், வள்ளலார், காந்தி உள்ளிட்ட எண்ணற்றோர் பிறந்த நாடு என்று பெருமைப்பட்டதெல்லாம் வீண். இறைச்சி உற்பத்தியிலும், நுகர்விலும் வரலாறு காணாத வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது.
÷சீனர்கள் பாம்பைத் தின்கிறார்கள், பூனை, எலி உண்கிறார்கள். புழு, பூச்சிகளையும் தின்கிறார்கள் என்று பழிப்பதுண்டு. ஆனால், தமிழர்களில் சில வகுப்பினர் பூனை, எலி உண்பதுண்டு. வட கிழக்கு இந்தியாவில் வாழ்வோர் சிலர் நாயைக்கூட விட்டு வைப்பதில்லையாம்.
÷மனிதனுக்குப் புரதப் பசியைவிட இறைச்சிப் பசியே அதிகம். ஒரு காலத்தில் கோழி இறைச்சி அதிக விலையிலும் ஆட்டிறைச்சி குறைந்த விலையிலும் விற்றது. ஆனால், நாமக்கல்லில் தோன்றிய கோழிப் புரட்சி நாட்டையே வென்றது. கோழி விலை மலிந்தது; தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி மாவட்டங்களில் கோழி வளர்ப்பு மிகவும் லாபகரமான தொழிலாக மாறி வருகிறது.
÷இறைச்சிக் கோழி என்றாலும் முட்டைக் கோழி என்றாலும் கோழி கோழிதான். இது தொடர்பான ஒரு விவசாயப் புள்ளிவிவரம் சிறப்பானது. கோழி, மாடு வளர்ப்பால் உயர்ந்தது இறைச்சி மட்டுமல்ல; மக்காச் சோள உற்பத்தியும்தான். இன்று தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக மக்காச் சோள உற்பத்தி இரண்டாம் நிலையில் உள்ளது.
÷இவ்வாறே, இந்தியாவிலும் நெல், கோதுமைக்குப் பின் மூன்றாம் இடத்தில் மக்காச் சோள உற்பத்தி உள்ளது. இறைச்சிக் கோழி, கசாப்பு மாடுகளுக்கான தீவனத் தேவை காரணமாக இந்தியாவில் மக்காச் சோள உற்பத்தி உயர்ந்துள்ளது.
÷நாமக்கல் கோழிப் புரட்சிக்குப் பின் கோழி விலை விழுந்தது. கோழி உணவு உயர்ந்தது. இந்த அன்னிய தேசத்து வெள்ளைக் கோழி வளர்க்கப்படும் தொழில்நுட்பத்தைக் கவனித்தால் அந்தத் தொழில்நுட்பம் ஆரோக்கியமற்றது என்று புரிந்து கொள்ளலாம்.
÷கூண்டுகளில் வளர்க்கப்படும் இந்தக் கோழிகள், தென்னம்பஞ்சுப் படுக்கை மீது நெருக்கமாக ஒன்றுமீது ஒன்று மோதும் அளவில் ஊட்டம் கொடுத்துக் குஞ்சுகளைக் கொழுக்க வைத்து விற்கிறார்கள். அவ்வாறு வளர்க்கும்போது கோழிகள் இறக்கும். தொற்றுநோய் பரவும். அவ்வாறு தொற்றுநோய் பரவாமல் இருக்க கோழிகள் மீது, தடை செய்யப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆக்சி டெட்ரா சைக்கிள், குளோர் டெட்ரா சைக்கிள், டாக்சி சைக்ளின், என்ரோ ஃப்ளோக்சாசின், சிப்ரோ ஃப்ளோக்சாசின் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
÷அப்படியும் நூற்றுக்கு 5 முதல் 10 கோழி இறக்கும். அவற்றை உண்ண இப்படிப்பட்ட கோழிப் பண்ணைகளில் நாய்கள் சுற்றித் திரியும். இந்தக் கோழிகள் அங்காடிக்கு வரும்போது அந்த இறைச்சிகளில் 10 முதல் 15 சதவீதம் ஆன்டிபயாட்டிக் எஞ்சியிருக்கும்.
÷தேன் விஷயத்திலும் இப்படித்தான். பெட்டிகளில் தேனீ வளர்ப்போர் தேனீக்கள் இறக்காமல் இருக்கத் தெளிக்கும் ஆன்டிபயாட்டிக் அத் தேனில் எஞ்சியிருக்கும்.
÷நீங்கள் கேட்கலாம். ஆன்டிபயாட்டிக்தானே. அது நல்லதுதானே. ஒரு டாக்டரிடம் கேட்டுப் பாருங்கள். அது ஆபத்தானது என்பார்கள். ஏனென்றால், நமது உடலில் உள்ள கிருமிகள் கோழிக்கறி, தேன் ஆகியவற்றில் எஞ்சியுள்ள ஆன்டிபயாட்டிக்கை எதிர்த்து வெல்லும் சக்தி பெற்று விடும். நமக்கு நோய் வரும்போது நம் உடலில் செலுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் வேலை செய்யாது. உண்மையில் இவற்றை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மாறி மாறிப் புதிது புதிதான மருந்துகள் உண்டுப் பக்க விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.
÷கூண்டுகளில் வளர்க்கப்படும் வெள்ளைக் கோழி இறைச்சி எப்படியெல்லாம் வறுபடுகிறது என்று பார்த்தால் சில்லி சிக்கன், சிக்கன் ரோல், பீசா, பர்கர் என்று ஏகப்பட்ட அவதாரத்தை எடுத்துவிட்டது. ஒரு காலத்தில் மீன், முட்டை எல்லாம் தாவர உணவு என்று பேசப்பட்டது. இன்று அந்தப் பட்டியலில் சிக்கனும் சேர்ந்துவிட்டது.
÷இந்தியாவில் உள்ள மேல்ஜாதி ஹிந்துக்கள் - குறிப்பாக பிராமணர்கள், ஜெயின் என்ற பட்டப் பெயருள்ள ஹிந்துக்கள், சைவப் பிள்ளைமார் புலால் உண்பதில்லை. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மென்தகடு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பொறியாளர் இளைஞர் - இளம்பெண்கள் கூட்டம் ராப் பகலாய் கணினிகள் முன் கடுந்தவம் புரிவோர்களில் வெஜிடேரியன் என்று கூறிக் கொள்ளும் மேலே குறிப்பிட்ட மேல்ஜாதி யுவ - யுவதிகள் அமெரிக்க அறிமுகமான சிக்கன் பர்கருக்கு அடிமையாகிவிட்டனர்.
÷இப்படிப்பட்ட சாஃப்ட்வேர் நிறுவன உணவகங்களில் ஜங்க் ஃபுட்டுடன் "சிக்கன் பர்கருக்கு' ஏக வரவேற்பு உண்டு. சிக்கன் மட்டுமல்ல; பீஃப் மட்டன், போர்க் பர்கர்களும் உண்டு. அதாவது கோழிகளுடன், மாடு, ஆடு, பன்றி இறைச்சிகள் மேல்நாட்டு பாணி உணவாக புதிய பாங்குடன் பர்கர் பாஸ்தா, பீஸ்தா என்று புதிய புதிய பெயர்களில் வழங்கப்படலாம்.
÷ஹைதராபாத் ஓர் அற்புத நகரம். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையின் எடுத்துக்காட்டு. ஒரு பக்கம் ஏழை இஸ்லாமியச் சிறுமிகள் அரபு நாடுகளுக்குக் கடத்தப்படுவதில் முதலிடம் என்பதை மறந்துவிட்டு சாஃப்ட்வேர் தொழில், புலால் உணவு பற்றி அறிவோம். ஹைதராபாதில் "ஹலீம்' என்ற புலால் உணவு விழா பாரம்பரியச் சிறப்பு மிக்கது. ஒரு விதமான கோதுமை மாவு ரொட்டியில் மாட்டுக் கறி, ஆட்டுக் கறியுடன் கடலைப் பருப்பு கலந்த பிண்ட உணவு. பன்னுக்குள் மசாலா சிக்கன், வகை வகையான "நான் வெஜ்' பிரியாணி விழாவில் உண்டு.
÷இந்திய மொழிகளில் கலந்துவிட்ட ஒரு புதிய சொல் "நான் வெஜ்'. விமானத்தில் பயணிக்கும்போது, உணவு வழங்கும் விமானப் பணிப்பெண் பயணிகளிடம் "வெஜிடேரியன்?' என்று வினவும்போது இறைச்சிப் பிரியர்கள் "நான் வெஜ்' என்று சொல்ல வேண்டும். "நான் வெஜிடேரியன்' என்று பொருள் கொள்ளக் கூடாது.
÷இந்த விஷயத்தில் ஆய்வு மேற்கொண்ட ஹைதராபாத் நகராட்சி ஆணையர் சோமேஷ் குமாரின் "நான் வெஜ்' புள்ளிவிவரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஹைதராபாதில் உள்ள 1.1 கோடி மக்களில் 78 லட்சம் மக்கள் "நான் வெஜ்' என்றும், ஹைதராபாதில் மட்டும் தினமும் 3 லட்சம் கோழிகள், 8,000 ஆடுகள், 2,500 மாடுகள், 50 பன்றிகள் கொல்லப்பட்டு உண்ணப்படுவதாகத் தெரிவித்தார். இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் என்றுமே "நான் வெஜ்'. ஆனால், இப்போது சுமார் 90 சதவீத ஹிந்துக்களும் "நான் வெஜ்' - குறிப்பாக சிக்கனுக்கு அடிமை.
÷புத்தனை வணங்கும் இந்தியர்களில் பலர் மாட்டுக் கறிக்கு அடிமை. உலகத்துக்குக் கொல்லாமையை போதித்த புத்த மதம் இலங்கை, சீனா, ஜப்பான் நாடுகளில் பரவியிருந்தாலும், உயிர்களைக் கொல்வதே வாழ்க்கை நெறியானது. இந்தியாவிலும் நமது பாரம்பரியக் கருத்துகள் தவிடுபொடியான நிகழ்வுகள் உண்டு. பசு மாடுகளை தெய்வமாகப் போற்றி வளர்க்கும் இந்தியாவில் பசுவதை கூடிவருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
÷மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறிவிட்டது. மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் நாம் ஆண்டுதோறும் பெறும் அன்னியச் செலாவணி மதிப்பு 5,000 கோடி டாலர். உள்ளூர் வர்த்தக மதிப்பு அளவிடற்கரியது. பல கோடி டாலர்கள்.
÷பரந்தாமனாகிய பாலகிருஷ்ணன் குழல் ஊதினால் பிருந்தாவனத்தில் ஆயர்பாடி மாடுகள் மதி மயங்குமாம். இன்றுள்ள சூழ்நிலையில் யமுனைக் கரையில் உள்ள தில்லி, மதுரா பகுதிகளில் பசு மாடுகள் குறைந்து எருமை எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. ஏனெனில், பசுவை விட எருமையே லாபம். மாட்டிறைச்சியில் எருமையின் பங்கு அதிகம். பசுவதைத் தடுப்பு இருப்பினும், பசு - காளை இறைச்சிகளும் எருமை இறைச்சி என்ற லேபிள் பெற்று ஏற்றுமதியாகிறது? மாடு வளர்த்துப் பால் மூலம் வருமானம் பெறும் விவசாயிகள் சினை பிடிக்காத வெற்று மாடுகளையும், காளைக் கன்றுக் குட்டிகளையும் கசாப்புக்கு அனுப்புவதால் பெறும் வருமானம் பால் உற்பத்தியில் பால் விலை சரியும்போது சற்று ஈடுகட்டுகிறது.
÷வடகிழக்கு இந்தியாவில் - அதாவது அஸ்ஸôம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் நாம் பசுக்களை வளர்ப்பதுபோல் பன்றிகளை வளர்க்கின்றனர். ஆட்டுப் பால், கழுதைப் பால் போல் பன்றிப் பாலை யாரும் அருந்துவதாகத் தெரியவில்லை. பன்றியிடம் பால் கறக்க முடியுமா என்பதும் புலிப்பால் கறந்த கதைதான்! முழுக்க முழுக்க இறைச்சிக்குத்தான். பொதுவாக இந்தியாவில் உள்ள ஆதிவாசிகள், ஷெட்யூல்டு வகுப்பினர் அனைவருமே நூறு சதவீதம் "நான் வெஜ்'.
÷இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர்கள் சைவ உணவையே அலகாகப் பயன்படுத்துகின்றனர்! கலோரி உணவு என்பது மனிதனை குண்டாக்கும் தத்துவமே. புரதச் சத்துக்குப் போதுமான பருப்பு விளைச்சல் இந்தியாவில் இல்லை. உலகிலேயே அதிகம் பருப்பு விளைவிக்கும் நாடான இந்தியாவில்தான் பருப்பு இறக்குமதியும் அதிகம். ஆகவே புரதச் சத்து வழங்கும் "நான் வெஜ்' இந்தியர்களின் தவிர்க்க முடியாத தேவை என்பது நடைமுறை.
÷எனினும், கசாப்புக் கடைகளில் ஆடுகளின் அழுகுரல் நெஞ்சைப் பரிதவிக்க வைக்கிறது. பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்றை நினைவுபடுத்தி அன்றாடம் இறக்கும் வாயில்லா ஜீவன்களுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்:
"இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கொண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே...
காலொடிந்த ஆட்டுக்காகக்
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல்போல் உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருந்த வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க-
ஆனா
கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி
வந்தாங்க'.
÷இதுதான் இந்திய எதார்த்தம்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

Tuesday, September 15, 2015

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: மறதியைத் தோற்கடித்த பெரியசாமி

Return to frontpage


ஆயிஷா இரா.நடராசன்


நமது கல்விமுறை நெகிழ்ச்சியில்லாமல் இறுக்கமான தன்மையோடு இருப்பதால், மாற்றங்களைக் கொண்டுவர அது பெருந்தடையாய் உள்ளது.

- இந்தியாவின் தேசிய கல்வித் திட்ட வடிவமைப்பு 2005.

ரயிலில் ஏறியதும் “டிக்கெட்டை வீட்டில் வைத்துவிட்டேனே” என்று பதறுபவர்கள், போலீஸாரிடம் பிடிபட்டபின் “லைசன்ஸ் கொண்டு வரல” என்று கையைப் பிசைபவர்கள். குடையிலிருந்து ஹெல்மட் வரை எதை எதையோ மறப்பவர்கள் இந்த நாட்டில் இல்லையா?

அவர்களைப் போலவே வகுப்பறைகளின் வாசலில் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். புத்தகம் எடுத்துவரவில்லை. பேனா கொண்டுவரவில்லை. வீட்டுப்பாடம் எழுதி வீட்டிலேயே வைத்துவிட்டார். அடையாள அட்டை இல்லை, எங்கோ வைத்து மறந்துவிட்டேன். பென்சில் இருக்கு. அழிக்கும் ரப்பர் இல்லை. பேனா இருக்கு. அதில் மை போடவில்லை என்று பலவிதமான மறதிகளைப் பேசிக்கொண்டே அந்தக்கூட்டம் நிற்கும்.

மறதி மனிதனோடு உடன் பிறந்தது. ஆனால், குழந்தைகளுக்கு மட்டும் ஏன் தண்டனையும் வசவும் வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கும் அவமதிப்பும்? இதற்கு மாற்று இருக்கிறது என்று எனக்குப் புரியவைத்த மாணவர்தான் பெரியசாமி.

எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் கறார் பேர்வழி. தனது வகுப்பில் பாடப் புத்தகம் கொண்டுவராதவர்களை வெளியே நிற்கவைத்து விடுவார். ஆனால், முதல் வரிசை மாணவர்களில் ஒருவரின் புத்தகத்தை (இரவல்) வாங்கி புத்தகத்தைத் திறந்தபடியே ‘‘போன வகுப்பில் எங்கே… விட்டோம்’’ என மாணவர்களேயே கேட்பார். அவர் ஏன் தன் புத்தகத்தை கொண்டுவரவில்லை என்று மாணவர்கள் கேட்பது கிடையாது. நமது கல்வி முறையில் அவருக்கு ‘இம்சை அரசன்’ காலத்து அதிகாரம் உள்ளது.

இந்த மாதிரியான கல்விமுறையை ‘வங்கி’ முறைக் கல்வி என்று பிரேசில் நாட்டில் பிறந்த மாற்றுக் கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ பிரையரே வர்ணித்தார். இந்தக் கல்வியில் ஆசிரியர், மாணவர், பாடப்பொருள் எனும் மூன்று பகுதிகள் உள்ளன. ஆசிரியர் அனைத்து அதிகாரமும் பெற்றவர். மாணவர் அடிபணிந்து போகவேண்டியவர். மாணவரின் தலையைத் திறந்து பாடப்பொருளை வங்கியில் பணம்போடுவதுபோல் நிரப்புவதே கல்வியாக இருக்கிறது. இதில் பேனா, புத்தகம், நோட்டு என்பதெல்லாம், வங்கிக்கு ‘உங்கள் பாஸ்புக்கை’ எடுத்துச்செல்லவேண்டும் என்பதுபோல முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தக் கணினி காலத்திலும் அதில் எதுவும் மாறவில்லை.



வன்முறையின் காரணி

பெரும்பாலும் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க இந்த சின்ன சின்ன மறதிகளே காரணங்களாக சொல்லப்படுகிறது. படிப்பதில் உள்ள ஈடுபாடு, தேர்வு மதிப்பெண்கள் உள்ளிட்ட கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகத் தண்டனை அளிப்பதைவிட பள்ளிக்கு ஏதாவது ஒன்றை எடுத்துவர மறந்ததுக்காக தண்டனைகள் அளிக்கப்படுவதே அதிகம் என்பார் ரஷ்ய கல்வியாளர் ஜேம்ஸ் பாஸ்டர் னாக்.

மிக அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு எடுத்து வராமல் மறப்பது பேனாவையோ அல்லது பென்சிலையோதான். சிலர் எளிதில் தொலைத்துவிடுவதும் அதைத்தான். இன்று பள்ளி அமைப்புக்கு வெளியே அதிகம் பயன்படாத ஒன்றாக பேனா மாறிவிட்டது. மின்னஞ்சலும் குறுஞ்செய்தியுமாக எல்லாம் இணைய மயமாய் ஆகியும் பள்ளிக்கல்வி இறுகிப்போய் பிடிவாதமாக இருக்கிறது.

விநோதமான பட்டப் பெயர்

நான் முன்பு பணிசெய்த அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்தார் பெரியசாமி. பேனா பெரியசாமி என்றால்தான் தெரியும். இப்படி ஒரு பட்டப் பெயர் அவருக்கு எப்படி வந்தது என ஆச்சரியப்பட்டேன். பேனா பெரியசாமி என்பது பட்டப் பெயர் அல்ல. காரணப்பெயர்தான் என்று தெரியவந்ததும் திகைத்துப் போனேன்.

ஒரு நாள் வகுப்பறையில் நுழையும்போது பேனா பெரியசாமி தனது வகுப்பு சகாக்களில் பலருக்கும் பேனா சப்ளை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். பெரியசாமிக்கு பேனா சேர்ப்பது ஒரு ஹாபியாம். விதவிதமாக சேர்த்து வைத்திருந்தார். அதற்காகவே இரண்டு டப்பாக்கள் வகுப்பில் இருந்தன. யார் பேனா கொண்டுவரவில்லை என்றாலும் உடனே இரவல் தருவார்.

ஆனால், பள்ளி முடிந்ததும் அவற்றைத் திரும்பப் பெறுவதிலும் கறார் பேர்வழி. சில சமயம் மற்ற வகுப்புகளிலிருந்து வந்து அவரிடம் பேனா வாங்குபவர்களும் உண்டு. பழைய பேனாக்கள்தான். சிலவற்றில் வேறு வண்ணங்களில் மூடிகளும் இருக்கும். சில ஒழுகுவதும் உண்டு. ஆனால், வகுப்பில் அது இல்லை என்றால் வாங்கும் தண்டனையைவிட, இது உடனடி நிவாரணம் அல்லவா? பெரியசாமி இருக்கும் வகுப்பறை அமைதியாக நடப்பதை உணர்ந்தேன்.

நம் நாட்டின் கல்வி முறைமையை வடிவமைக்கும் ‘கல்வித் திட்ட வடிவமைப்பு 2005’ ‘மாணவர்களின் பள்ளி அனுபவங்களால் உணரப்பட்டு உள்வாங்கி கல்வி கட்டமைக்கப்படுகிறது’ எனக் கூறுகிறது. ‘பள்ளியில் நடக்கும் அனைத்துமே கல்விதான். பாடப் புத்தகத்தைக் கடந்து வெளிப்பட்டு தோன்றும் அறிவின் அனைத்து அம்சங்களுமே போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும்’ என நம்மை அது தூண்டுகிறது.

ஒரு பேனா கொண்டுவரவில்லை என்பதற்காக அந்தப் பாடவேளை முழுவதையும் ஒரு மாணவரை நிற்கவைத்து அவருக்கு பாடம் புகட்ட கூச்சலிட வேண்டுமா? அதைவிட அந்த ஆசிரியரே ஒரு ‘பேனா’ பெரியசாமி ஆகி, ஒன்றிரண்டு பேனாக்களை (இப்போதெல்லாம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது) கூடுதலாய் வைத்திருந்து பேனா எடுத்து வராதவர்களுக்கு கொடுக்கலாமே? பிரச்சினையில்லாமல் கற்றல் தடைபடாமல் தொடரலாமே? எனும் புதிய சிந்தனையை அவர் எனக்கு போதனை செய்துவிட்டார்.

கடைசியாக அவரை நான் பார்த்தபோது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணம் பெறும் கவுண்டரில் காசாளராக இருந்தார். ‘‘சலான் நிரப்பிட்டீங்களா … பேனா இருக்கா” என்று ஒரு முகவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக்காக சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தமிழக இளைஞரை மீட்க நடவடிக்கை


    Return to frontpage


    ஆர்.செளந்தர்
    அ.சாதிக் பாட்சா
    ஆர்.சிவா

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக் குச் சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த சதாம் உசேனை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சதாம் உசேனின் தந்தை இமாம் ஷா, சதாம் உசேன் மனைவி ஜாஸ் மின்பானு, அவரது இரண்டரை வயது மகன் ஷர்கான் ஆகியோரு டன் தேனிக்கு வந்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம், எஸ்.பி. ஜெ.மகேஷ் ஆகியோரி டம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது:

எனது மகன் சதாம் உசேனை கும்பகோணம் அருகே உள்ள சோலைபுரத்தை சேர்ந்த காஜா மைதீன் என்பவர் குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்கு அனுப்புவதாக சொல்லி விசா எடுக்க ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் சென்று 40 நாட்கள் முடிந்து விட்டது. ஓட்டுநர் வேலைக்கு சென்ற அவரை ஓட்டுநர் பணி தராமல் கொத்தடிமையாக ஒட்டகம் மேய்க்க விட்டுள்ளனர். தகுந்த உணவோ, தங்க இடமோ கொடுக்காமல் அனாதையாக உள்ளார். அவர் அங்கு படும் கஷ்டங்களை வாட்ஸ் அப் மூலம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித் துள்ளார். அந்த ஆதாரங்களை இந்த கடிதத்துடன் (சிடி) இணைத் துள்ளேன். அவரது பாஸ்போர்ட் டையும் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கின்றனர். அவரை உடலள விலும், மனதளவிலும் கடுமை யாக துன்புறுத்துகின்றனர். இதனால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். எனவே தக்க நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் சதாம் உசேன் மனைவி ஜாஸ்மின் பானு கூறுகையில், வாட்ஸ்அப்பில் எனது கணவர் உதவி வேண்டி வீடியோ அனுப்பிய பின்னர் மறுநாள் (3நாட்கள் முன்பு) இன்டர்நெட் மூலம் எனது மாமனார் மற்றும் என்னிடம் பேசினார். அப்போது மிக வும் கஷ்டமாக உள்ளது என வேத னையுடன் கூறினார். இரண்டு நாட் கள் அரசு விடுமுறை என்பதால் இன்று(நேற்று) வந்து புகார் மனு கொடுத்துள்ளோம் என்றார்.

இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது இன்னும் ஓரிரூ நாட்களில் சதாம் உசேன் தமிழகம் வந்து விடுவார் என்றார்.

மேலும் பாதிக்கப்பட்டோர் பேட்டி

கம்பத்தைச் சேர்ந்த ஷேக் மைதீன் (இட்லி வியாபாரி) கூறிய தாவது: எனது மகன் காஜா மைதீன் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சி மற்றும் கம்பத்தைச் சேர்ந்த 2 பேர் ரூ. 80 ஆயிரம் வாங்கினர். ஆனால், கூறியபடி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பித் தரவில்லை. மேலும், இவர்கள் தாதப்பன்குளம் பகுதி யில் உள்ள 7 பேரிடம் ரூ. 12 லட் சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின்பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், நாங் கள் கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட் இதுவரை கிடைக்க வில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த அரசமணி (லாரி ஓட்டுநர்) என்பவர் கூறியது: கம்பம் மெட்டு காலனி நந்த கோபால் கோயில் அருகே, ஒரு நபரை ஓட்டுநர் வேலைக்கு அழைத் துச் சென்றனர். ஆனால், அவரை ஒட்டகம் மேய்க்க வைத்துள்ளனர். பின்னர், அவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். 4 மாதங்களுக்கு முன் வேறு ஒரு ஏஜென்சி மூலம், கத்தாரில் அவர் ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார்.

கம்பத்தை சேர்ந்த மணி (டெய்லர்) என்பவர் கூறியது: எனது மகனுக்கு சிங்கப்பூரில் பிட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், கம்பத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரூ. 2 லட்சம் கொடுத் தேன். தொழில் கற்றுக் கொடுத்து நல்ல வேலையும், நல்ல சம்பளமும் வாங்கித் தருவதாக அவர் கூறி னார். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு கூறியபடி வேலை வாங்கி தரவில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த வியாபாரி சம்சுதீன் கூறியது: எங்கள் பகுதி யைச் சேர்ந்த கேட்டரிங் முடித்த ஒரு இளைஞரை, குவைத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமை யல் வேலைக்காக அழைத்துச் சென்றனர். சமையல் சரியில்லை எனக் கூறி, அவரை பாத்திரம் கழுவ வைத்துள்ளனர்.

பேசியபடி சம்பளம் கொடுத்ததால், அங்கேயே பணிபுரிந்து வருகிறார். வெளி நாடு செல்லும் முன் நம்பகமான நிறுவனங்கள்தானா என தீவிர விசாரணை செய்ய வேண்டும். நிறு வனங்கள் குறித்து காவல்துறை யினரிடம் ஆலோசனை கேட்டு, அதன்பின் வேலைக்குச் செல்வதே சிறந்தது. இதேபோல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளியே சொல்லத் தயங்கி வருகின்றனர் என்றார்.

முறையாக வெளிநாடு செல்வது எப்படி?

வெளிநாடுகளில் வேலை செய்யும் மற்றும் வேலை தேடும் நபர்களுக்காக ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்' செயல்பட்டு வருகிறது. ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், முதல் மாடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், எண் - 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை - 600 020' என்ற முகவரியில் இது இயங்கி வருகிறது. தொலைபேசி எண்கள் 044 - 24464267, 24464268.

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்களது விவரங்களை இங்கு பதிவு செய்து கொண்டால் அவர்களின் பாதுகாப்பை குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்நிறுவனம் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ளும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களும் இதேபோல பதிவு செய்து கொண்டால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு தகவல் கொடுக்கப்படும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகள்:

தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் விலை ரூ.600 முதல் ரூ.1000 வரை மாறுபடும். விண்ணப்பங்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

அவசர உதவிகளுக்கான தொடர்பு எண்கள்:

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அவசர உதவிகளுக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சினைகளை தெரிவித்தால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரச்சினையில் சிக்கினால்..?

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தமிழர்கள் அங்கு சரியான வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படாமல் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் அதுகுறித்து அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார். மறுவாழ்வுத்துறை அலுவலக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கியிருக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு இந்த புகாரை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள்.

தூதரக அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி பிரச்சினையில் சிக்கியுள்ள நபரை மீட்டு அவர் வேலை பார்த்த நாட்களுக்குரிய சம்பளம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொடுத்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

நேரடியாக மறுவாழ்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தவிர, மத்திய அரசு நிறுவனமான புரொடெக்டர் ஆஃப் எமிக்ரண்ட்ஸ் (குடியேறியவர்களின் பாதுகாப்பு அலுவலர் சென்னையில் அசோக் நகரில் உள்ளது) எனும் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். இந்த அலுவலருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களை கவனிப்பதுடன் தனியார் ஏஜண்டுகளை கண்காணிக்கும் அதிகாரமும் உண்டு.

ஏழை இளைஞர்களை பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி வேலைக்கு அழைத்துச் செல்லும் தனியார் ஏஜண்டுகள் மீதும் இந்த துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், வெளிநாட்டில் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்திய பிரஜைகளையும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்க உதவி செய்வார்கள்.

ஏஜென்ஸி உண்மையானதா?

தாங்கள் அணுகும் ஏஜென்சி உண்மையானதா என்று அறிய அந்த ஏஜென்ஸியின் பெயர் www.moia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பெயர் இருந்தால் அந்த ஏஜென்ஸி மூலம் வேலைக்கு செல்லலாம். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

இளைய தலைமுறை ஹீரோ 'ஆப்பிள்'



ஸ்டீவ் ஜாப்ஸ் என்றொரு மனிதர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் கேட்ஜெட்ஸ் விரும்பிகளை பித்து பிடிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். ஒவ்வொன்றும் ஒரு விதம். இளந் தலைமுறையினரின் நாடி பிடித்து, அவர்களின் ரசனை அறிந்து வடிவமைப்பதில் இந்நிறுவனத்துக்கு நிகர் யாரும் இல்லை. ஆம் ஆப்பிள் என்ற சொல் உருவாக்கியுள்ள பிம்பம் அழகானது, தனித்துவமானது, நம்பிக்கையானது எல்லாவற்றையும் தாண்டி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தைத் தொடுவது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இளந்தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையுமே கவர்ந்து இழுக்கிறது.

நேர்த்தியான வடிவமைப்பும், போட்டி நிறுவனங்களை ஓரங்கட்டும் தொழில்நுட்பமும் சேர்ந்து ஆப்பிளை உலகின் முதல்தரமான தொழில்நுட்ப நிறுவனமாக வளர்த்துள்ளது.

இத்தனைக்கும் ஆப்பிள் புதிதாக எதையும் உருவாக்குவதில்லை. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளவற்றை தனது தொழில்நுட்பத்தால் மிக சிறப் புடையதாக்குகிறது.

இந்த நிறுவனத்திடம் அசைக்க முடியாத, எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த கணிப்பு உள்ளது. இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம் என்கின்றனர் தொழில்நுட்ப உலகினர். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்தி பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தங்களது மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு புதிதாக ஐந்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.

ஐ போன் 6 எஸ், ஐ போன் 6 எஸ் பிளஸ், ஐ-பாட் புரோ, ஆப்பிள் டிவி உள்ளிட்ட தயாரிப்புகளை வெளியிடுகிறது. இதற்கிடையே ஐ-பாட் புரோ-வுக்கு துணைக் கருவியாக ஆப்பிள் பென்சிலையும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் கணினி வரிசைகள் மற்றும் ஐ பாட் வரிசைகளைத் தாண்டி, அந்த நிறுவனம் பிற துறைகளில் மேற்கொண்டு வரும் தயாரிப்புகளும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகின்றன.

ஆப்பிள் வாட்ச் போன்றவை அந்த வகையில் வெற்றி பெற்றதுதான். அதுபோல தற்போது வெளியிட உள்ள ஆப்பிள் பென்சிலும் ஐ- பாட் மற்றும் ஐ-ஓஎஸ் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்கிறது தொழில்நுட்ப உலகம்.

புதிதாக வெளியிட உள்ள ஐ-பாட் புரோவின் சைஸ் சற்றே பெரியது. இதன் துணைக் கருவியாகத்தான் ஆப்பிள் பென்சில் வருகிறது. இந்த வெளியீடு மூலம் மைக்ரோசாப்ட் சர்பேஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி வரிசை விற்பனையில் ஆப்பிள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

தொழில் முறையிலான கலைஞர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்களுக்கு ஆப்பிள் பென்சில் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். கிட்டத்தட்ட புதிய வாசலை இது திறந்துள்ளது. தவிர வேலை திட்டங்களை எளிமையாக ஐ-பாடில் எழுதி சேமித்துக் கொள்ளவும் செய்யலாம். அதாவது காகிதத்தில் பென்சிலைக் கொண்டு எழுதுவது, வரைவது போல ஆப்பிள் பென்சில் கொண்டு ஐ பாடிலேயே வடிவமைப்பு வேலைகளைச் செய்து கொள்ளலாம்.

பெருவாரியான கலைஞர்கள் இப்போதே இந்த பென்சிலை வரவேற்கத் தொடங்கி விட்டனர். ஆப்பிள் தயாரிப்புகள் நம்பகமானவை மற்றும் தரமானவை என்கிற பார்வை மக்களுக்கு எப்போதும் இருக்கச் செய்கிறது. அதன் இதர தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பை போல ஆப்பிள் பென்சிலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

ஆப்பிள் பென்சில்

பாய்ண்டட் நிப் பென்சிலைப் போலவே வெள்ளை நிறத்தில் மிக நேர்த்தியாக இருக்கிறது ஆப்பிள் பென்சில். இதன் முனையிலுள்ள சென்சார்கள் மிகக் கூர்மையான வடிவில் உள்ளன. மெலிதான கோடுகள் அல்லது பட்டையான கோடுகளையும் இதன் மூலம் வரையலாம். ஆப்பிள் பென்சிலைப் பயன்படுத்துவது ஓவியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதுவரை விரல்களுக்குள் உலகத்தை அடக்கிய தொழில்நுட்பம், இனி அதற்கு எந்த வேலையுமில்லை என்பதை ஆப்பிள் பென்சில் மூலம் நிரூபிக்க தயாராகிறது.

ஒரு முறை சார்ஜர் ஏற்றினால் 12 மணி நேரம் பயன்படுத்தலாம். முக்கியமாக ஆப்பிள் பென்சில் 30 நிமிடங்கள் செயல்படுவதற்கான மின்சக்தியை 15 விநாடிகளில் எடுத்துக் கொள்கிறது. பென்சிலின் மேற்புறத்தில் சார்ஜர் கனெக்டர் உள்ளது. இது காந்த சக்தி மூடி மூலம் மூடப்பட்டுள்ளது. ஐபாட், மற்றும் ஐபாட் பிளஸ் மூலமாகவும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.

ஐபாட் பென்சிலை தற்போது ஐபாட் புரோவில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு விநாடிக்கு 240 முறை சிக்னல் பெறுகிறது. இது இரண்டும் ப்ளூடூத் மூலம் இணைகிறது.

ஐபாட் புரோ

தற்போது கொண்டுவர உள்ள ஐ-பாட் புரோ குறித்து தொழில்நுட்ப வாடிக்கையாளர்கள் குறிப்பிடும்போது; ஆப்பிள் மேக் புக் வடிவில் ஒரு ஐ-பாட் என்கின்றனர்.

32.8 செமீ திரை, 2732*2048 ரெசலூஷன் கொண்டுள்ளது. ஆப்பிள் 13 அங்குல மேக் புக்கைவிட 1 செமீ அளவே சிறியதாக உள்ளது. தவிர ஐ-பாட் புரோவை பார்த்த மாத்திரத்திலேயே இதர ஐபாட் மாடல்களிலிருந்து பிரித்து பார்த்துவிட முடியும்.

ஏற்கெனவே உள்ள மாடல்களில் உள்ளது போலவே டச் ஐடி ஹோம், பவர் மற்றும் இதர பட்டன்கள் இருந்தாலும், புரோ வை தனித்துக் காட்டுகிறது அதன் ஸ்பீக்கர்கள். இதர டேப்ெலட் கணினி தயாரிப்பாளர்கள் இதுவரை தவற விட்ட இடம் இது. இரண்டு பக்கமும் ஸ்பீக்கர்கள் உள்ளன. ஸ்பீக்கர்களை ஸ்வைப் செய்து கொள்ளலாம். ஹெட்போன் இல்லாமல் பாடல்களை கேட்கும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் மாடலை வெளியிட்டபோது அதன் உப கருவியாக சர்பேஸ் பேனாவையும் கொண்டு வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறவில்லை. விளம்பரம் மற்றும் வெளிப்படுத்தும் தன்மையில் மைக்ரோசாப்ட் கோட்டை விட்டது. மைக்ரோசாப்ட் செய்த தவறு சர்பேஸ் பேனா ஸ்கீரினில் பயன்படுத்த மட்டுமே என வெளிப்படுத்தியதுதான்.

இப்போது மீண்டும் நாம் அறிய வருவது இதுதான்: ஆப்பிள் புதிதாக எதையும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்வது. ஆப்பிள் பென்சில் மற்றும் ஐபாட் புரோ இணையர்கள் ஸ்டோர்களில் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளன. ஆப்பிளின் முயற்சிகள் எப்போதும் வெற்றிபெற்றே வந்திருக்கிறது. ஏனென்றால் அது இளைஞர்களை பிடித்தாட்டுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இளந்தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையுமே கவர்ந்து இழுக்கிறது.

நேர்த்தியான வடிவமைப்பும், போட்டி நிறுவனங்களை ஓரங்கட்டும் தொழில்நுட்பமும் சேர்ந்து ஆப்பிளை உலகின் முதல்தரமான தொழில்நுட்ப நிறுவனமாக வளர்த்துள்ளது.

மனசு போல வாழ்க்கை 26: உங்களுக்கு நன்றி


Return to frontpage


டாக்டர். ஆர். கார்த்திகேயன்


நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

கூடுதலாக செலுத்திய வரி 10 நாளில் திருப்பி வழங்கப்படும்: வருமான வரித்துறை நடவடிக்கை



கூடுதலாக செலுத்திய வரியை 7 முதல் 10 நாட்களுக்கு திருப்பி கொடுக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆதார் அட்டை அல்லது இதர வங்கி தகவல்கள் மூலம் சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டிருப்பதால் எளிதாக திருப்பி கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

முன்பெல்லாம் அதிகம் செலுத்திய வரியை திரும்ப வாங்குவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. அதற்கு நீண்ட காலம் ஆனது. சிலருக்கு சில மாதங்களில் திரும்ப கிடைத்தது. பலருக்கு சில வருடங்களுக்கு பிறகே கிடைத்தது.

எலெக்ட்ரானிக் முறையில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்பட்டிருப்பதால் திருப்பி கொடுப்பது எளிதாகி இருக்கிறது. கூடுதலாக பெறப்பட்ட வரி, குறைந்தபட்சம் ஒரு வாரமும், அதிகபட்சம் 10 நாட்களுக்குள்ளும் திருப்பிக்கொடுக்கப்படும். இந்திய வரி நிர்வாகத்தில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சமீபத்திய தகவல்களின் படி 2.06 கோடி வருமான வரித்தாக்கல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வந்திருக்கின்றன கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஆன்லைன் மூலம் வரிதாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 26 சதவிதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 1.63 கோடி வருமான வரி தாக்கல் மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

செப்டம்பர் 7 வரை 45.18 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 22.14 லட்சம் விண்ணப்பங்களுக்கு பணம் திருப்பி அனுப்பப்பட்டது.

பெரும் பாலான வரி செலுத்தியவர்களிடம் விசாரித்த போது 11 முதல் 13 நாட்களில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி திரும்ப கிடைத்தது என்று தெரிவித்தனர்.

புதிய தொழில்நுட்பம் மூலம் வரிசெலுத்துபவர்களுக்கான சேவையில் மனித தலையீடு இல்லாமல் நேரடியாக நடக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதன் மூலம் விண்ணப் பங்களை வேகமாக பரிசீலனை செய்யலாம்.

பணத்தையும் வேகமாக திருப்பி கொடுக்க முடியும் என்று வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்தார்.

எம்.எஸ்: தன்னைக் கரைக்கும் இசை by டாக்டர் ராமானுஜம்

Return to frontpage




இசையின் மூலம் தனது இருப்பின் அர்த்தத்தை உணர்ந்தவர்; உணர்த்தியவர்.

அது 1998-ம் ஆண்டு. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற நகரம். பிரபல கட்டுரையாளர் ராமச்சந்திர குஹா ‘தைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி நாளிதழின் பிலாஸ்பூர் பதிப்பைப் பார்க்கிறார். அதன் தலையங்கத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது வாங்கியதைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. கர்னாடக சங்கீதத்தையோ கச்சேரிகளையோ கேட்கும் வாய்ப்பே இல்லாத ஒரு பத்திரிகையாளர், சத்தீஸ்கரின் ஒரு இந்தி நாளிதழ் பதிப்பில் எம். எஸ்ஸைப் பற்றி எழுதிய புகழாரங்களைப் படிக்கும்போது, இந்தியாவை இணைப்பது பாலிவுட் சினிமா மற்றும் கிரிக்கெட் மட்டுமல்ல என்று தாம் உணர்ந்ததாக குஹா குறிப்பிடுகிறார்.

அதற்கு முந்தைய வருடம் பாரத ரத்னா விருது பெற்று, சமீபத்தில் காலமான அப்துல் கலாமைப் போன்றே எம்எஸ்ஸையும் இந்தியாவே கொண்டாடியது. அது அவரது திறமைக்காக மட்டுமல்ல; அவரைவிட இசைஞானம் கொண்ட கலைஞர்கள் இருந்தனர்; இருக்கின்றனர். ஆனால், கலாமைப் போன்றே எளிமையான பின்னணியில் பிறந்து தன்னுடைய நற்பண்புகள், எளிமை மற்றும் ஆத்மபலம் ஆகியவற்றாலேயே புகழ்வானில் மங்காத நட்சத்திரமாய் மின்னுகிறார் எம்.எஸ்.

சிகரம் தொட்ட குரல்

உயர் மட்டத்தில் இருப்பவர்களின் பிடியில் இருந்த கர்னாடக இசை, உலகில் சமூக உயர் அங்கீகாரம் இல்லாத இசை வேளாளர் குடும்பப் பின்புலத்தில் இருந்து வந்து, அதுவும் ஒரு பெண்ணாகச் சிகரத்தில் இடம்பிடித்தது அவரது மனப்பான்மையால்தான். (கர்னாடக சங்கீதத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான சங்கீத கலாநிதியைப் பெற்ற முதல் பெண் அவர்தான்.)

எம்.எஸ்ஸின் இசையில் அப்படி என்ன சிறப்பு? இசை என்பது ஒழுங்கமைக்கப்பட்ட ஓசைதான். ஆயினும் அதை உன்னதமாக்குவது அதன்பின்னே இருக்கும் உணர்வு. ஒரு வார்த்தைகூடப் புரியாவிட்டாலும் வார்த்தையே இல்லாவிட்டாலும் உள்ளத்தில் உணர்ச்சியைப் பொங்க வைப்பது இசை. எம் எஸ்ஸின் இசையின் தனித்தன்மை அதில் கலந்த உணர்வுதான். ராகம், தாளம், பாவம் ஆகிய மூன்றும் இசைக்கு மூன்று தூண்கள் என்றாலும் பாவமே சாதாரண இசையை உன்னதமாக்குகிறது.

கர்னாடக இசையில் ஒவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. ஜி.என். பாலசுப்பிரமணியன், மதுரை மணி போன்றவர்கள் யுவராஜ் சிங் சிக்சர்களாக அடிப்பதுபோல் வாண வேடிக்கை காட்டித் தமது திறமையைக் காட்டுவார்கள். செம்மங்குடி சீனிவாச அய்யருடையதோ ராணுவ ஒழுங்குபோல் கட்டுக்கோப்பாகப் பாடும் கறாரான பள்ளித் தலைமையாசிரியரின் அணுகுமுறை. எம்.டி. ராமநாதனோ குழந்தை ஐஸ்க்ரீமை ரசிப்பதுபோல் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் பாடுபவர். சில சமயம் மூக்கால்கூட குழந்தை ஐஸ்க்ரீமைச் சாப்பிட்டுச் சேட்டை செய்யும்.

இசை அர்ப்பணம்

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாணி அர்ப்பணிப்பு உணர்வுக்கே முதலிடம் கொடுப்பது. அவரைப் பொறுத்தவரை இசை என்பது ஒரு வேள்வி. அதில் தன்னுடைய ஆத்மாவைக் கரைத்துக்கொண்டு பாடுவதே அதன் லட்சியம். ஆங்கிலத்தில் ‘ஓஷியானிக் ஃபீலிங்’ (Oceanic feeling) என்றழைக்கப்படும் கடலில் கரைவது போன்ற உணர்வை அவரது இசை தரும். பாடும்போது அருமையான சங்கதிகள் வந்தால்கூட ஒரு பெருமிதமோ அளவுகடந்த மகிழ்ச்சியோ அவரிடம் வெளிப்படாது. கண்களை மூடி ஒரு கும்பிடு! அதில் ஒரு ஆன்மிகப் பரவச உணர்வே வெளிப்படும். எம்.எஸ். பழுத்த இறை நம்பிக்கையாளர். ஆயினும் இந்த உணர்வு கடவுள் நம்பிக்கை, மதங்களுக்கு அப்பாற் பட்டது. இதை நாத்திகர்களால்கூட உணர முடியும்.

உணர்ச்சிக்கே முதல் உரிமை கொடுத்ததால் இசை அறிவைப் பிரதானமாகக் காட்டும் சிக்கலான தாளக் கணக்குகள் போன்றவற்றின் பக்கம் அவர் போவதே இல்லை. மூளையால் பாடுவதைவிட இதயத்தால் பாடவே அவர் விரும்பினார். அதற்காக அவரது சங்கீத ஞானம் குறைவானது அல்ல. கம்பரின் ராமாயணத்தின் புகழ் வெளிச்சம் அவர் எழுதிய பிற நூல்களை மறைத்ததுபோல் சுப்ரபாதம், பஜகோவிந்தம் போன்ற சுலோகங்கள், பஜனைப் பாடல்கள் எம். எஸ்-ஸின் கர்னாடக இசைத் திறமைகளைச் சற்றுப் பின்னுக்குத் தள்ளின என்றுகூடக் கூறலாம்

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவரது குரல் வளம். சுருதிப் பெட்டியை விழுங்கிவிட்டாரோ என்று வியப்பு கலந்து நகைச்சுவையாகச் சொல்லும் அளவுக்கு மிகவும் சுருதி சுத்தமான குரல் அவருடையது. அக்கால நாடக நடிகர்களைப் போல் மிக அநாயாசமாக உச்ச ஸ்தாயியை எட்டும் குரல். அவரது முதல் ஒலிப்பதிவான ‘மரகத வடிவம்’ என்ற பாடல் இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது. பிற்காலத்தில் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டாலும் துளியும் பிசிறின்றி உச்ச ஸ்தாயியை அடைவது கேட்பவர்களுக்குப் பரவசமளிக்கக்கூடியது அவரது குரல். குறியீட்டுரீதியாக அவருக்கு உச்ச ஸ்தாயியில் கரைவது ஒரு ஆன்மிகச் சாதனையாக இருந்திருக்கக்கூடும். கடினமான ராகம் தானம் பல்லவி பாடுவது, எழுபத்தியிரண்டு மேளகர்த்தா ராகங்களால் ஆன ராகமாலிகையைப் பாடுவது போன்ற இசைத் திறமைகளை நிரூபிக்கும் முயற்சிகளையும் அவர் செய்யத்தான் செய்தார். ஆனால், அது தனக்கான தளமல்ல என்பதை உணர்ந்தவர்.

இணையொன்றும் இல்லை!

மிகவும் அற்புதமான உச்சரிப்பு அவருடையது. பாடல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உள்வாங்கிப் பலமுறை பயிற்சி செய்த பின்னே அரங்கேற்றுவார். அவர் எடுக்கும் பாடல்கள் சோடைபோவதே இல்லை. அதனால்தான் ‘குறையொன்றுமில்லை’ போன்ற பாடல்கள் அவரைத் தவிர வேறு யார் பாடினாலும் சாதாரணமாக ஒலிக்கிறது.

எளிய சூழலில் பிறந்து இசையை மேட்டிமைப்படுத்தும் கலாச்சாரத்தின் ஒரு கருவியாகத் தன்னை மாற்றிக்கொண்டார் என்று அவர் மீது குறைகள் சொல்பவர்களும் உண்டு. ஆயினும், அவரது இசை பண்டிதத் தன்மையற்றது; எளிமையானது. கற்பனா சக்தி குறைவானவர் என்று சங்கீத விமர்சகர்கள் சிலர் விமர்சித்துக்கூட உள்ளனர்.

அவரளவில் ‘செய்க தவம். தவமாவது இசை’ என்பதுபோல் இசையின் மூலம் தன் இருப்பின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டார். பணம், புகழ் போன்றவை எல்லாம் அவருக்குப் பொருட்டே இல்லை. அளவுக்கு அதிகமாக நிதியுதவிகளும் நன்கொடைகளும் அளித்தவர் அவர்.

தான் பிறந்த சூழலின் பின்னணியிலிருந்து தனி மனித உன்னத உயரத்தை அடைய அவர் தன்னைக் கரைத்துக்கொண்டு செய்த தவமே அவரது இசை. உடல் காற்றில் கரைந்தாலும் கரையாமல் காற்றினிலே வரும் கீதம் அவருடையது.

- டாக்டர் ராமானுஜம்,

'நோயர் விருப்பம்' நூலின் ஆசிரியர்,

தொடர்புக்கு: ramsych2@gmail.com

செப்டம்பர் 16 எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள்

தடுத்திருக்கலாம்! By ஆசிரியர்

Dinamani


மத்தியப் பிரதேசம், ஜாபுவா மாவட்டம், பெட்லவாட் நகரில் வெடிமருந்துக் குவியல் வெடித்ததில் 89 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை யாவும் கொந்தளிக்கும் மனநிலையை ஆற்றுப்படுத்தும் அறிவிப்புகள் மட்டுமே.
பெட்லவாட் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வணிகக் கட்டடத்தில், ஓர் உணவகம், பல்வேறு கடைகள் இடம்பெற்றிருந்த பகுதியில் ஜெலட்டின் வெடிமருந்துகளை ஒருவர் விற்க முடிகிறது என்பதே அப்பகுதியின் அரசு நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் பெருத்த அவமானம். அதிலும் குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக இவ்வாறு அக்கடையின் உரிமையாளர் ராஜேந்திர கசவா சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்று வந்திருக்கிறார் என்று அரசு அதிகாரிகள் கூறுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர கசவா சகோதரர் சிறு வெடி விபத்தில் இறந்தது மூடி மறைக்கப்பட்டதாக இப்போது வாய் திறக்கிறார்கள். அப்போதே அதிகாரிகள் இதைப் பற்றி பேசியிருந்தாலும், ஊடகத்துக்குத் தகவலைக் கசியச் செய்திருந்தாலும், இந்தச் சட்டவிரோத வியாபாரத்தை தடை செய்ய முடியாது போனாலும்கூட, குறைந்தபட்சம் வேறு இடத்துக்கு, பொதுமக்கள் கூடுகிற இடமல்லாத ஓர் இடத்துக்கு மாற்றவாகிலும் வழி பிறந்திருக்கும்.
பத்து ஆண்டுகளாக ராஜேந்திர கசவா இவ்வாறு சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்று வருகிறார் என்பது தெரிந்திருந்தும் அல்லது ஜெலட்டின் குச்சிகளை விவசாயக் கிணறு வெட்டும் பயன்பாட்டுக்கு விற்பனை செய்ய அவர் அனுமதி பெற்றிருந்தாலும்கூட, அளவுக்கு அதிகமான வெடிமருந்தை இருப்பில் வைத்திருந்ததற்காக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்தான் உண்மையில் கொலைக் குற்றவாளிகள்.
கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், அந்தப் பள்ளிக்கு அனுமதி வழங்கிய, இடவசதியை சரிபார்க்கத் தவறிய அனைத்து அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டதைப்போலவே இந்த விபத்திலும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த வெடிமருந்து விற்பனையைத் தடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தலைமறைவான ராஜேந்திர கசவாவைக் கைது செய்யும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, இதற்குக் காரணமான அனைத்து அரசு அதிகாரிகளையும் இப்போது கைது செய்வதில் என்ன தடை இருக்க முடியும்?
இந்த வளாகத்தில் இருந்த உணவகத்தில்தான் முதலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும் அதன் பிறகே வெடிமருந்துகள் வெடிக்கத் தொடங்கின என்றும் பார்வையாளர்கள் சிலர் கூறியுள்ளனர். அருகருகே ஓர் உணவகத்தையும் ஒரு சட்டவிரோத வெடிமருந்து விற்பனைக் கடையையும் எவ்வாறு ஒரு நகர மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இதுகுறித்து யாருமே ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லையா? எதிர்க்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் எல்லாமும் மௌனமாக இருந்தனவா? மிக ஆச்சரியமாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் நமக்குப் பல்வேறு வசதிகளைச் செய்து தந்திருக்கிறது. தவறுகளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லை, முடியவில்லை என்றாலும், வெளிச்சம் போட்டுக்காட்டப் பல வழிமுறைகளை தகவல் தொழில்நுட்பம் தந்துவிட்டிருக்கிறது. முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்றவற்றின் மூலம் தவறுகள் வெளிச்சம் போடப்படுவது அதிகரித்து வருகிறது என்றாலும்கூட, இன்னும் சமுதாயத்தின் பொறுப்புணர்வு அதிகரிக்காததுதான் மிகப்பெரிய குறை.
தன்னார்வ அமைப்புகளும், விழிப்புணர்வுடன் கூடிய இளைய தலைமுறையினரும் முனைப்புடன் தவறுகளைத் தட்டிக்கேட்க முற்படுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. அவர்களுக்கு இருக்கும் அதே முனைப்பும், துடிப்பும் கூடுதல் பொறுப்புள்ள உயர் பதவியில் இருப்போருக்கும், நடுத்தர வயதினருக்கும்கூட உண்டு. அவர்களும் சற்று பொதுநலச் சிந்தனையுடன் செயல்பட்டால், இதுபோன்ற தவறுகளைக் கணிசமாகக் குறைத்துவிட முடியும்.
பள்ளி, கோயிலுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு கொடுப்பதைப் போல, இத்தகைய அனுமதி பெற்ற அல்லது அனுமதி பெறாத ஜெலட்டின் விற்பனைக் கடையை உணவகத்துக்கு அருகிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட அந்நகர மக்கள் முன்வைக்கவில்லை என்றால், இந்தக் கோர விபத்தை அவர்களாகவே தேடிக் கொண்டனர் என்றுதான் பொருள்.
தீபாவளி நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்காக பட்டாசுகள் வாங்கும் பெற்றோர் அவற்றைப் பேருந்தில், ரயிலில் எடுத்துச் சென்றால் வெடிமருந்துத் தடைச் சட்டம் பாயும். பெற்றோர் தம் வீட்டுக்கு நடந்தா செல்ல முடியும்? அதிகாரிகளுக்கு கவலையில்லை. சாதாரண மக்களிடம் கறாராகச் சீறும் அதிகாரிகள், நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத பட்டாசு வியாபாரிகளிடம் "பெட்டி'ப் பாம்பாக அடங்கிவிடுகிறார்கள்.
கிணறு வெட்ட ஜெலட்டின் கொண்டு செல்லும் விவசாயிகள் மீது சட்டம் பாயும். அனுமதி வாங்கினாயா என்று கேட்கும். ஆனால், ஜெலட்டின் பதுக்கி வைத்திருப்போரிடம் எதையும் கேட்காது. ஏனென்றால், அவர்கள் "கொடுத்து' வைத்தவர்கள்.
இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி, தவறுகளை வெளிச்சம்போட்டுக் காட்ட நாம் தயாராக வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். சட்டத்தையும், சட்டம் நமக்குத் தரும் உரிமைகளையும் பயன்படுத்த வேண்டும். பெட்லவாட் வெடி விபத்து தவிர்த்திருக்க முடியாதது அல்ல, தடுக்கப்படாதது!

திரையில் ஒளிர்ந்த தெய்வீகம்!

Return to frontpage





By வினுபவித்ரா

எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு தொடக்கம் செப்டம்பர் 16

வாய்க்குள் வீணையை வைத்திருப்பவள் என்று போற்றப்பட்ட அந்தச் சிறுமியின் தொண்டையைத் தடவி ஹெலன் கெல்லர் சொல்லிய வார்த்தைகள் இவை. “நீ தேவதையைப் போல பாடுகிறாய்”. அந்தச் சிறுமியின் குரல்தான் எழுபது ஆண்டுகளாக நான்கு தலைமுறைகளைக் கடந்து இன்றும் நம்மை மயக்கத்தில் வைத்திருக்கிறது. அதுதான் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் குரல் நிகழ்த்திய மாயம். காதலும் பக்தியும் குழைந்து உறைந்திருக்கும் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது.

மக்கள் நினைவில் நீங்காத பாடகர், தேசபக்தர், தேசிய அடையாளம் என எல்லாவற்றையும் தாண்டி அவர் விரும்பி அணியும் பட்டுப் புடவையின் ஊதா நிறத்துக்கே ‘எம்.எஸ் ப்ளூ’ என்று பெயர் வரும் அளவுக்கு மக்கள் நினைவுகளில் ஓவியமாய்ப் பதிந்த வர். பாரம்பரிய இசையுலகுக்கு எம்.எஸ். வழங்கிச் சென்றிருக்கும் பங்களிப்பு காலத்தால் கரைக்க முடியாத பொக்கிஷம்.

திரையுலகுக்கு மிகக் குறைந்த பங்களிப்பே செய்திருந்தாலும் சில படங்களின் மூலமே தனிப்பெரும் நட்சத்திரமாக ஆகி தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையும் வசீகரித்தார். திரைப்படங்களில் நடித்து அவற்றில் அவர் பாடிய பாடல்கள், இசையில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் பிரியமான பிம்பமாக எம்.எஸ்-ஸை உயர்த்திப் பிடித்தன.

வசீகரமான பெரிய கண்கள், குங்குமத் திலகம், மினுங்கும் வைரத்தோடு, மூக்கின் இருபுறமும் துலங்கும் மூக்குத்திகள், தலையில் எப்போதும் தவழும் ஜாதி மல்லிப்பூ என வாழ்நாள் முழுவதும் ஒரு இலச்சினையைப் போல வலம் வந்தவர்.

11 வயதில் தனது முதல் மேடை நிகழ்ச்சியில் பாடத் தொடங்கி, புகழைத் தன்னை நோக்கி ஈர்த்த சுப்புலட்சுமி தனது 21 வயதில் தமிழ் சினிமாவின் தந்தை கே. சுப்ரமணியத்தால் ‘சேவாசதனம்’ தேசபக்தி திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால், சுப்புலட்சுமியின் திரைப் புகழை உலகறியச் செய்தவர்கள் இருவர். ஒருவர் அவரது கணவர் டி.சதாசிவம். இன்னொருவர் அவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்த எல்லிஸ் ஆர். டங்கன். அவர் ஹாலிவுட்டிலிருந்து ஒளிப்பதிவில் பயிற்சி பெற்று, 1935-ல் தனது நண்பர் மணிலால் டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். மணிலால் டாண்டனுக்கு உதவியாகப் பணிபுரிந்த படம் நின்றுபோனது. அடுத்து, தமிழிலும் இந்தியிலும் வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்த டங்கன் தமிழிலும் இந்தியிலும் 17 திரைப்படங்களை இயக்கினார்.

‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்குவதற்கான நிதி உதவிக்காக எம்.எஸ் ஏற்கெனவே ‘சாவித்ரி’ திரைப்படத்தில் கணவர் சதாசிவத்தின் வலியுறுத்தலால் நாயகியாக நடித்திருந்தார். டங்கனும் ஆனந்த விகடனில் தொடராக வந்திருந்த சதி லீலாவதியைத் தமிழில் எடுத்துத் தனது திரைப் பயணத்தைத் தமிழில் தொடங்கியிருந்தார். விகடன் பத்திரிகை வழியாக சதாசிவத்தை சந்தித்த எல்லீஸ் ஆர்.டங்கன், ‘சகுந்தலை’ மற்றும் மீரா’ ஆகிய திரைப்படங்களில் எம்.எஸ்-ஐ ஒப்பந்தம் செய்தார். சகுந்தலையும் மீராவும்தான் அவருக்கு பக்திப் பாடகர் என்ற தெய்வீக பிம்பத்தை நிலைப்படுத்திய படங்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீக அழகை அடையாளம் கண்டு திரையில் சரியாக வெளிப் படுத்திய பெருமை டங்கனையே சேரும். எம்.எஸ்-ன் முகத்துக்கு பிளாஸ்டர் வார்ப்பெடுத்து, நுட்பமாக அவதானித்து அவர் முகத்துக்கு வெவ்வேறு கோணங்களில் பொருத்தமான ஒளி யமைப்பை உருவாக்கியவர் அவர்.

1940-ல் எடுக்கப்பட்ட சகுந்தலை படத்தின் 70% காட்சிகள் வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை. தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் பவன் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியாக இருக்கும் இடத்தில்தான் அக்காலகட்டத்தில் நியூடோன் ஸ்டுடியோ இருந்தது. அதன் பின்புறம்தான் மீராவும் சகுந்தலையும் படம்பிடிக்கப்பட்டன என்கிறார் மோகன் வி.ராமன்.

மீராவில் எம்.எஸ் ஏற்ற கதாபாத்திரம் தனித்தன்மையும் உறுதியும் கொண்ட ஆளுமையாக வெளிப்பட்டிருப்பதைப் படம்பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்கிறார் திரைப்படத் திறனாய்வாளரான கே.ஹரிஹரன்.

தமிழ் சினிமாவில் அர்த்த பூர்வமான ‘க்ளோஸ் அப்’ காட்சிகளை அறிமுகப்படுத்திய எல்லிஸ் ஆர். டங்கனின் சிறந்த படம் மீரா என்கிறார்கள் விமர்சகர்கள். மீராவின் படப்பிடிப்பில் நடந்த அரிய நிகழ்வுகளில் ஒன்றைத் தனது சுயசரிதையில் பதிவுசெய்துள்ளார் எல்லிஸ் ஆர்.டங்கன்.

“மீரா படத்தின் ஒரு காட்சி குறித்து எனக்கு இப்போதும் பெருமிதம் உண்டு. எம்.எஸ்-ஸுக்கு அழகிய பெரிய கண்கள். அவர் பங்கேற்கும் பாடல் ஒன்றில் அந்த அழகிய கண்களை மட்டும் படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்திருந்த சிறப்பு ஒளிச்சாதனத்தைப் பயன்படுத்தி அவரது கண்களைப் படம் பிடித்தேன். கண்களுக்கு மேலும் கீழும் டிப்ஃயூசன் திரையை அமைத்துப் படம்பிடித்தேன். ஃபைனல் கட்டில் அவரது கண்களின் க்ளோசப் மட்டுமே தெரியும். அது திரையை நிறைப்பதாக இருக்கும். அற்புதமான ஓவியம் போன்ற விளைவு அது” என்கிறார்.

மீரா படப்பிடிப்பின் ஆரம்பத்தில் ஆங்கிலம் பேசத் திணறிய எம்.எஸ், மீரா படப்பிடிப்பின் முடிவில் சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டுவிட்டார் என்பதைக் குறிப்பிடும் எல்லிஸ் ஆர்.டங்கன், ஒரு முழுமையான திரைநட்சத்திரமாக தன் திறன்களை பரிபூரணமாக்கிக்கொண்டவர் எம்.எஸ் என்கிறார்.

மீரா திரைப்படத்தில் கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களையும் எம்.எஸ்தான் பாடினார். அவற்றில் ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் இன்றைக்குக் கேட்பவர்களையும் உறைய வைத்துவிடும் அனுபவமாக இருக்கிறது. மீராவில் அவர் பாடிய பாடல்கள்தான் ‘இந்தியாவின் குயில்’ என்ற பட்டத்தை சரோஜினி நாயுடுவிடம் அவருக்குப் பெற்றுத்தந்தது.

அற்புதமான இசைத்திறன், பேரழகு, புகழ் ஏறாத தெய்வீக ஆளுமை என எல்லாப் பொக்கிஷங்களும் இணைந்த எம்.எஸ்ஸை அவர் வாழ்ந்த காலத்தில் புகழாதவர்கள் குறைவு எனலாம். பாரத் ரத்னாவாக அங்கீகரிக்கப்பட்ட எம்.எஸ்-ஸுக்கு ஆந்திர மாநிலத்தின் கோயில் நகரமான திருப்பதியின் மையப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் சிலையும் மும்பை சண்முகாநந்தா சபாவில் அவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் சிலையும் எல்லைகளைக் கடந்த இசைச் சொரூபம் எம். எஸ். சுப்புலட்சுமி என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...