Sunday, November 15, 2015

முகப்பு » சினிமா » தினத்தந்தி 725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா'!

ஒரு தமிழ்ப்படத்தைத் தயாரிக்க ஆகும் மொத்த செலவு 2 லட்சம் ரூபாய் என்று இருந்த காலகட்டத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாய் ஒரு படத்தைத் தயாரிக்க ஜெமினி எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டார் என்றால் அவர் துணிச்சல் எப்படிப்பட்டதாக இருக்கும்.

படத்தை சிறப்பாக எடுத்தால், நிச்சயம் நன்றாக ஓடும் என்று அவர் உறுதியாக நம்பினார். தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்தார். அம்மாவின் நகைகளை எல்லாம் வாங்கி விற்றார். பலரிடம் கடன் வாங்கினார்.

பத்து படங்களை தயாரிக்கப் போதுமான பணத்தையும், காலத்தையும் சந்திரலேகாவுக்காக செலவிட்டார்.

அவருடைய நம்பிக்கையும், கடும் உழைப்பும், வீண் போகவில்லை. 1948-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி வெளிவந்த சந்திரலேகா மகத்தான வெற்றி பெற்றது.

அக்காலக்கட்டத்தில், தமிழ்ப்படங்கள் 15 அல்லது 20 பிரிண்ட்கள் தான் போடப்படும். அவ்வளவு ஊர்களில் தான் படம் 'ரிலீஸ்' ஆகும்.

சந்திரலேகாவுக்கு 120 பிரிண்ட்கள் போடப்பட்டு, 120 ஊர்களில் 'ரிலீஸ்' ஆகியது.

'ஆங்கிலப் படங்களுக்கு நிகரான படம்' என்று பத்திரிகைகள் பாராட்டின. ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தனர்.

ஆங்கிலப்படங்களில் 'பென்ஹர்' என்றால், பிரமாண்டமான ரதப் போட்டி நினைவுக்கு வரும். அதுபோல் சந்திரலேகா என்றால், அதில் வரும் முரசாட்டம் நம் கண்முன் தோன்றும்.

மேல்நாட்டில் சிசில்-பி-டெமிலிக்கு 'பத்துக்கட்டளைகள்' (டென் காமன் மெண்ட்ஸ்), ஜேம்ஸ் கேமரோனுக்கு 'டைட்டானிக்', ஸ்டீபன் ஸ்பெல்பர்க்குக்கு 'ஜூராசிக் பார்க்' என்பது போல், எஸ்.எஸ்.வாசனுக்கு 'சந்திரலேகா'.

'சந்திரலேகா'வில் நடனக்காட்சியில்  டி.ஆர்.ராஜகுமாரி.


அதிசயம்-அற்புதம்

சந்திரலேகாவைப் பார்க்காதவர்கள் தமிழ்நாட்டில் அநேகமாக இருக்க மாட்டார்கள்.

எம்.கே.ராதா, ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரி ஆகிய மூவரை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. எல்லோருமே நன்கு நடித்தனர். குறிப்பாக டி.ஆர்.ராஜகுமாரி அவர் வாழ்நாளில் இவ்வளவு சிறப்பாக வேறு எந்தப்படத்திலும் நடிக்கவில்லை.

சந்திரலேகாவில் அமைந்த அதிசயங்களும் அற்புதங்களும் அநேகம்.

* 'சந்திரலேகா' என்ற கனமான பாத்திரத்தை டி.ஆர்.ராஜகுமாரி தாங்கி சிறப்பாக நடித்திருந்தார். தவிர தன் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.

* பிரமாண்டமான இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சுமார் இருபது வயது நிரம்பிய இளைஞர் எஸ்.ஆர்.ராஜேஸ்வர ராவ்.

வாசன் குரல்

* இந்தப் படத்தின் சர்க்கஸ் காட்சியில் வாசன் தன் சொந்தக் குரலிலேயே சந்திரலேகாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

'...கூடாரத்திலே அறுபதடி உயரம் கொண்ட கம்பத்தின் உச்சியிலே அந்தரமாய்த் தொங்கும் கயிற்று ஊஞ்சலிலே உலகத்திலே முதல் தடவையாக ஒரு பெண் அநாயாசமாக தாவிப் பறந்து விளையாடுகிறாள். இந்த அற்புத சாகசத்தை செய்யப் போகிறவர் எங்களது புதுபெண் திலகம் சந்திரலேகா'.

இப்படி சர்க்கஸ் கூடாரத்தின் உள்அமைந்த ஒலிபெருக்கியில் கணீரென்றும் ஒலிக்கும் குரல் எஸ்.எஸ்.வாசன் அவர்களுடையதே.

* இப்படத்தில் நடிகை வி.என்.ஜானகி (பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி) ஒரு ஜிப்சி பெண்ணாக நடித்துள்ளார்.

* பின்னாளில் நகைச்சுவை நட்சத்திரமாக விளங்கிய 

டி.பி.முத்துலட்சுமி முதலில் தோன்றியது இந்தப்படத்தில்தான். முரசு நடன மாதுக்களில் ஒருவராக அவர் முரசு நடனக்காட்சியில் பங்கேற்றுள்ளார்.

'சந்திரலேகா'வில் 'ஜிப்சி' நடனம். நடுவில் இருப்பவர் வி.என்.ஜானகி.

பழம்பெரும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மறைவு

பழம்பெரும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மறைவு


சென்னை,
பழம்பெரும் சினிமா டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவருடைய இறுதி சடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
கற்பகம், குலமா குணமா, பணமா பாசமா, செல்வம், ஆயிரம் ரூபாய், ஆதி பராசக்தி, தேவியின் திருவிளையாடல், கை கொடுத்த தெய்வம், சித்தி உள்பட 45–க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்தவர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவை ‘கற்பகம்’ படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்தவர் இவர் தான். இவரது முதல் படம் சாரதா. கடைசியாக டைரக்டு செய்த படம் காவிய தலைவன்.
இவர் சென்னையை அடுத்த படப்பையில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் உடல்நலக்குறைவாக இருந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு அவருடைய நுரையீரலில் நீர்க்கோர்ப்பு உருவானது. அதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
மரணம்
சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை 6.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அவருடைய உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள மகன் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரை உலக பிரமுகர்களும், பொதுமக்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் இறுதிச்சடங்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது.
குடும்பம்
மரணமடைந்த டைரக்டர் கோபால கிருஷ்ணனுக்கு வயது 86. இவருடைய சொந்த ஊர் கும்பகோணம். மனைவி சுலோச்சனா ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இவர்களுக்கு கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், அசோக், குமார், ரவி, ராஜ்குமார், துரை என்ற 6 மகன்கள் இருக்கிறார்கள்.

ரெயில்களில் இன்று முதல் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்பு கட்டணம் 4.35...


ரெயில்களில் இன்று முதல் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்பு கட்டணம் 4.35...


புதுடெல்லி, 
ரெயில்களில் இன்று முதல், முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்பு கட்டணம் 4.35 சதவீதம் உயருகிறது.
சேவைவரி உயர்வு
தொலைபேசி கட்டணம், ஓட்டல்களில் சாப்பிடுவது மற்றும் தங்குவது போன்றவற்றுக்கு இதுவரை 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டது. இந்த சேவை வரி ½ சதவீதம் உயர்த்தப்படுவதாகவும், நவம்பர் 15–ந் தேதி முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வரும் என்றும் கடந்த 6–ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக ½ சதவீதம் சேவை வரி உயர்த்தப்படுவதாக அறிவித்தது.
சேவை வரியின் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வருமானம் கிடைக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டு உள்ளது.
ரெயில் கட்டணம் உயருகிறது
சேவை வரி உயர்வின் காரணமாக ரெயிலில் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்புகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4.35 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதாவது முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்வதற்கான மொத்த கட்டணத்தில் 30 சதவீத தொகையின் மீது 14½ சதவீதம் சேவை விதிக்கப்படும். இது மொத்த கட்டண தொகையில் 4.35 சதவீதமாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்து உள்ளது.
கூடுதல் தொகை
சேவை வரி உயர்வின் காரணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு இரண்டு அடுக்கு ஏ.சி. வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.140 அதிகரிக்கும்.

ரூ.10 லட்சம் வருமானமா? 'காஸ்' மானியம் 'கட்'டாகும்


ஐதராபாத்:''ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 'காஸ்' மானியத்தை ரத்து செய்வது பற்றி, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,'' என, பார்லி மென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.


மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தால், 3 கோடி போலி இணைப்பு கள் கண்டுபிடிக்கப்பட்டன; இதன் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, காஸ் மானியத்தை, நாடு முழுவதும், 46 லட்சம் பேர் விட்டுக் கொடுத்துள்ளனர். வசதி படைத்தவர்கள், காஸ் மானியத்தை, தாங்களாக விட்டுக் கொடுக்க வேண்டும். 'காஸ் மானியம் பெற, வருமான வரம்பு நிர்ணயிக்கலாமா' என, நிதியமைச்சகம் கேட்டுள்ளது; இது பற்றி பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.வங்கிக் கணக்கில், மானியத்தை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தில், மண்ணெண்ணெயையும் சேர்க்க, அரசு ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். 
இதற்கிடையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு கூறியதாவது:ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, காஸ் மானியத்தை ரத்து செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. இவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதற்கு மானியம்; இந்த மானியத்தை, ஏழைகளுக்கு கொடுக்கலாமே.இவ்வாறு அவர் கூறினார்.

முகப்பு » தமிழ்நாடு » தினகரன் இனி எல்லா ரயில்களிலும் தேவைக்கேற்ப கட்டணம் உயரும்



சென்னை: சுவிதா, பிரீமியம் உள்ளிட்ட அதிக கட்டண ரயில்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இனி எல்லா ரயில்களிலும்் வரவேற்புக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பானது என்பதால் மட்டுமின்றி, கட்டணத்தையும் கருத்தில் கொண்டுதான் ரயிலில் செல்ல பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். கட்டண உயர்வுக்கு பிறகு சில நேரங்களில் முதல் வகுப்பு ஏசியில் செல்ல ஆகும் கட்டணம் விமானக்கட்டணத்திற்கு சமமாகவும் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சரிவில் இருக்கும் ரயில்வேயை சீராக்க வருவாய் முக்கிய இலக்காகி போனது. அதன் ஒரு பகுதியாகதான் அதிக கட்டண சிறப்பு ரயில்(பிரீமியம்), பல மடங்கு கட்டண சிறப்பு ரயில்(சுவிதா) ஆகியவை அறிமுகமாகின. ஆரம்பத்தில் இந்த ரயி்ல்கள் அறிவித்த போது வரவேற்பில்லாமல் ரத்து செய்யப்பட்டன. ஆனால் விழாக்காலங்களில் வழக்கமான சிறப்பு ரயில்கள் அறிவிக்காததால் , வேறு வழியில்லாமல் போனதால் அந்த அதிக கட்டண சிறப்பு ரயில்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை.
வேறு வழியில்லாத சூழ்ந்ிலையில் அதிக கட்டண ரயில்களை மக்கள் பயன்படுத்துவதை பார்்த்த ரயில்வே வழக்கமான ரயில்களிலும் அதே முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி நாட்டில் எல்லா ரயில்களிலும், எல்லா வகுப்புகளுக்கும் ஏற்ற, இறக்கங்களுடன் கூடிய கட்டண முறையே அமல்படுத்தப்படும். ஒவ்வொரு ரயிலிலும் ஒவ்வொரு வகுப்பிற்கும் வரவேற்புக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்படும். வரவேற்பு இல்லாமல் இருந்தால் அதிக கட்டணம் குறைக்கப்படும். எப்படியிருந்தாலும் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாகதான் இருக்கும். இதனை முதற்கட்டமாக சென்னை - திருவனந்தபுரம், சென்னை - மதுரை போன்ற அதிக தேவை இருக்கும் வழித்தடங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வே வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்டணத்தை அதிகரிப்பதின் மூலம் பயணிகளிடம் முதலில் வரவேற்பு இல்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுவார்கள் என்று ரயில்வே எதிர்பார்க்கிறது.

ரயில் கட்டணம் பலமுறை உயர்த்தப்பட்ட பிறகு பயணிகளின் எண்ணிக்கை 2 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் சரிந்து வருகிறது. முதல்முறையாக 2013 டிசம்பரில் பயணிகளின் எண்ணிக்கை 2.4 சதவீதம் குறைந்தது. உதாரணமாக 2014-15ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இருந்த பயணிகளின் எண்ணிக்கையைவைிட நடப்பு நிதியாண்டான 2015-2016ல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 8 சதவீதத்திற்கும் மேல் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பயணிகள் போக்குவரத்தின் மூலமான கிடைத்த வருவாய் மட்டும் குறையவில்லை. இது கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் கிடைத்த வருவாயை விட 8.5 சதவீதம் அதிகம்.
பயணிகள் எண்ணிக்கை குறைந்தாலும் கட்டண உயர்வு மூலம் அதிக வருவாய் வருவதை பார்த்த ரயில்வே எல்லா ரயில்களிலும் ஏற்ற இறக்கத்துடன் கூடிய கட்டண முறையை அமல்படுத்துவதில் உறுதியாகவே உள்்ளது. இந்த உறுதி கட்டண உயர்வுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

மிக்ஸியில் பிளேடு இல்லை... மின்விசிறியில் றெக்கை இல்லை... கிரைண்டரில் கல்லே இல்லை!

vikatan.com
காயிலாங்கடைக்குப் போகும் விலையில்லா பொருட்கள்...

‘இலவசங்கள் மக்களை மானமற்றவர்களாக மாற்றும் யுக்தி. இவை, மக்களைச் சோம்பேறிகளாக்கும்’ என்ற எச்சரிக்கைக் குரல்கள் ஒரு பக்கம். ‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் அதிகம் உள்ள நாட்டில், மானியங்களும் இலவசங்களும் அவசியம்’ என்ற ஆதரவுக் கரங்கள் மறுபக்கம். இந்த விவாதங்களுக்கு இடையே, தேர்தல்களில் இலவசங்கள் முக்கியமான வாக்குறுதிகளாக இடம்பெற்று, அவை, தேர்தலின் போக்கை மாற்றியமைத்துள்ளன. இலவசப் பொருட்கள், பயனாளிகளுக்கு உண்மையில் பயனளித்ததா?
2011 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் இலவச ஆடு-மாடு, ‘மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி’ என 3 பொருட்கள் அடங்கிய பேக்கேஜ், மாணவர்களுக்கு இலவச ‘லேப்-டாப்’ ஆகியவை அ.தி.மு.க சார்பில் இலவசப் பொருட்களாக அறிவிக்கப்பட்டன. இதில், ஆடு மாடுகள் கதை தனி. ஆனால், மின் சாதனங்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறியின் நிலை என்ன?
வாங்குனா வாங்குங்க... இல்லைன்னா போங்க!
திருச்சி கிராப்பட்டி பகுதியில் மயில்வாகனன் தெருவில் வசிக்கும் பெண்களைச் சந்தித்தோம்.
“இந்தப் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தாங்க. மின்விசிறியில் றெக்கையே இல்லை; கிரைண்டரில் கல் உடைஞ்சு போயிருந்துச்சு; மிக்ஸியில் பிளேடு இல்லை. அதை வேண்டாம்னு சொன்னோம். அதுக்கு, ‘இதுதான் கவர்மென்ட்ல இருந்து வந்தது. இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது. வாங்குனா வாங்குங்க... இல்லைனா போங்க’னு சொல்லிட்டாங்க. நல்ல பொருளாக வாங்குனவங்களுக்கும், ரெண்டு மூணு வாரங்கள்கூட தாக்குப்பிடிக்கல. எல்லாம் வீணாப்போச்சு. தேவையில்லாம வீட்டை அடைச்சுக்கிட்டு இருக்குனுனு பலபேர் அதைக் காயிலாங்கடையில 200 ரூபாய்க்குப் போட்டுட்டாங்க. இப்படி சரியில்லாத இலவச மிக்ஸி, கிரைண்டர் சேர்ந்துட்டதால, இப்போ அவங்களும் வாங்குறது இல்ல” என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த தமிழக அரசின் விலையில்லா பொருட்களைக் கொண்டுவந்து வீதியில் போட்டார் சரோஜா.
“மாவுக்கல்லுல மாவாட்ட முடியாது!”
“இந்த கிரைண்டர்ல மூணு தடவை மாவாட்டுனேன். ஓடிக்கிட்டே இருந்த கிரைண்டர் திடீர்னு நின்னுபோச்சு. அதை எடுத்துக்கிட்டுப் போய் கடைக்காரங்கக்கிட்ட கொடுத்தேன். அதை சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரி விலைக்கு எடுத்துக்கங்கன்னு சொன்னா, 200 ரூபாய்க்குதான் போகும்னு சொல்லிட்டார். ‘இது மாவுக்கல். இதில் மாவாட்ட முடியாது’னு சொல்லிட்டாங்க.
வாங்குன மறுநாள் ஃபேனை போட்டேன். பட்டுனு சத்தம் வந்துச்சி. அப்படியே உடைஞ்சிபோய் தொங்குச்சி. பக்கத்து வீட்டுப் பொண்ணு மிக்ஸியில சட்னி அரைச்சுக்கிட்டு இருந்துச்சு. திடீர்னு பிளேடு உடைஞ்சி ஜார்ல இருந்து தண்ணி ஒழுகி புகையா வந்துச்சு. மிக்ஸி வெடிக்கப் போகுதுன்னு பயந்து, எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தாங்க. நாங்க போய்தான் அணைச்சோம். தரமான பொருளாகத் தரக்கூடாதா? இப்படி ஓட்டை உடைசலாகக் கொடுத்துட்டு, ‘நாங்க கொடுத்த மிக்ஸி, கிரைண்டரை மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துறாங்க’னு டி.வி-யில சொல்கிறாங்க. இதைச் சொல்லி ஓட்டுக்கேட்டு வரட்டும்... இந்த வீணாப்போன பொருட்களை அவங்க தலையில தூக்கி வெக்கிறோம்” என்றார் கவிதா.
இளைஞர் ஒருவர், இணையத்தில் வந்த விளம்பரம் ஒன்றை நம்மிடம் காண்பித்தார். அதில், “இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை ஆன்லைனில் விற்கலாம். மூன்று பொருட்கள் மூன்றாயிரம் ரூபாய்” என்று போடப்பட்டு இருந்தது.
திருச்சியில் பல இடங்களில் மூன்று பொருட்கள் 2,500 ரூபாய் என்று விற்பனை நடக்குது. புதுகார்டுக்கு, விடுபட்டவங்களுக்கு என்று சொல்லி இலவசப் பொருட்களை எடுத்துக்கொண்டு போய், ஆளும் கட்சிக்காரர்கள் ஆன்லைனில் பணம் பார்ப்பதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.
அலாவுதீன் விளக்குப் புகை போல...
மதுரை டி.ஆர்.ஓ காலனியில் வசிக்கும் பாண்டி என்பவர், அவருடைய வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார். விலையில்லா மிக்ஸியை ஆன் செய்தார். மிக்ஸியில் இருந்து வினோதமான சத்தத்துடன் புகை கிளம்பியது. அலாவுதீன் விளக்கிலிருந்து வரும் புகைபோல வீடெங்கும் பரவியது. பயந்துபோய் நாம் ஆஃப் பண்ணச் சொன்னோம்.
‘‘போன மாசம்தான் கொடுத்தாங்க. இதைத் தொடவே பயமாக இருக்கு. எங்க ஏரியா கட்சிக்காரங்கக்கிட்ட சொன்னேன். அடுத்து வர்றப்போ மாத்திக்கலாம்னு சொன்னாங்க. ஃபேனை போட்ட உடனே மூடி தனியாக, றெக்கை தனியாகப் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. கிரைண்டரில் கல்லு தனியா கழன்று வருது. எல்லாமே அட்டையில செஞ்ச மாதிரி இருக்கு. இதுக்கான சர்வீஸ் சென்டருக்கு எடுத்துட்டுப் போனேன். ‘எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. அடுத்த மாசம் வாங்க’னு சொல்லிட்டாங்க” என்று நொந்துபோய் பேசினார் பாண்டி. 
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி அருகே உள்ள சென்நெல் புதுக்குளம் மற்றும் அம்பேத்கார் காலனி பகுதியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது. தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. பொருட்களை வாங்கியவர்கள் வீட்டுக்குப் போய் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதிர்ந்துபோய்விட்டனர்.
மிக்ஸிகளில் பிளேடு உள்ளிட்ட உதிரி பாகங்கள் கழன்றும், கிரைண்டரில் அரவைக் கல், மின் விசிறியில் இறக்கைகளும் உடைந்து காணப்பட்டன. மேலும் சிலர் மிக்ஸி, கிரைண்டரை இயக்கி பார்த்தபோது அவை செயல்படாமல் நின்றுவிட்டன. உடனடியாக அதிகாரிகள் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஓட்டை உடைசல் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சமரசம் பேசிய அதிகாரிகள், பழுதான பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் கொடுக்க ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிவிட்டனர்.
“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!”
கொளத்தூர் விநாயகபுரம் மாதாகனி, “கடந்த மாதம் எங்கள் பகுதியில் இலவச  மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றைக் கொடுத்தார்கள். பொருட்களை வழங்குவதற்கு முன்பு டோக்கன் கொடுத்தனர். கால்கடுக்கக் காத்திருந்து டோக்கன் வாங்கினேன். இலவசப் பொருட்களை வழங்குவதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலையில் க்யூவில் நின்றவர்களுக்கு மாலையில்தான் பொருட்கள் வழங்கப்பட்டன. மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறியை சந்தோஷத்துடன் வீட்டுக்குக்கொண்டு வந்தேன். முதலில் மின்விசிறியை ஆன் செய்தேன். ஒருவித சப்தத்துடன் அது ஓடியது. அடுத்து கிரைண்டரை சோதனை செய்தபோது அது இயங்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. பொருட்கள் வாங்கிய 5-வது நாளில் திடீரென இரவு டமார் என்ற சப்தம் கேட்டது.
தூங்கிக்கொண்டு இருந்த நான் விழித்துப்பார்த்தபோது மின்விசிறியிலிருந்து புகை வந்தது. பயத்தில் இலவசப் பொருட்களை அப்படியே ஓரம் கட்டிவிட்டேன். அரசு கொடுத்த இலவசப் பொருட்களைப் பொறுத்தவரை எங்கள் குடும்பத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகிவிட்டது” என்றார்.
வடசென்னை எம்.கே.பி. நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் கூறுகையில், “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 37-வது வார்டில் இலவச கிரைண்டர்,  மிக்ஸி, மின்விசிறி ஆகியவற்றை கொடுத்தார்கள். 10 நாட்களாகக் கொடுக்கப்பட்டன. எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் காத்திருந்து பொருட்களை வாங்கினோம். வாங்கிப் பார்த்தால் பலரது கிரைண்டரில் அரைக்கும் இரண்டு கற்களுக்குப் பதில் ஒரு கல் மட்டுமே இருந்தது. அதை எப்படி பயன்படுத்த முடியும்? இன்னும் சிலருக்கு  மிக்ஸியும் மின்விசிறியும் ஓடவே இல்லை.
இப்படி எங்கள் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. இதுகுறித்து நாங்கள் அதிகாரிகளிடம் முறையிட்டவுடன் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும்படி சொன்னார்கள். உடனே அருகில் உள்ள அரசு சர்வீஸ் சென்டருக்குப் பயன்படாத அந்தப் பொருட்களைக்கொண்டு சென்றோம். எங்களின் விவரத்தை வாங்கிக்கொண்டு பொருட்களை சர்வீஸ் செய்து தருவதாக அவர்கள் சொன்னார்கள். ஆனால் ,இதுவரை எங்கள் கைக்கு பொருட்கள் வந்து சேரவில்லை. பழுதான பொருட்களை இலவசமாக கொடுப்பதால் யாருக்கு என்ன பயன்” என்றனர் ஆவேசத்துடன்.
சிண்டிகேட் கொள்ளை!
‘இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமானவையாக இல்லை. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது’ என எதிர்க் கட்சிகள் ஒரு பக்கம் புகார் கிளப்பத் தொடங்கி உள்ளன. உண்மையில் இலவச கிரைண்டர், மிக்ஸி தயாரிப்பில் என்னதான் பிரச்னை. கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்களிடம் விசாரித்தோம்.
“தமிழகம் முழுவதும் 1.85 கோடி கிரைண்டர்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஒரு கிரைண்டர் விலை 2,142 ரூபாய். மிக்ஸி, கிரைண்டருக்குக் குறைந்த எண்ணிக்கையிலான உதிரிபாகங்கள் போதுங்கறதால, 2,142 ரூபாய்ல கொஞ்சம் லாபம் வெச்சா தரமான கிரைண்டரை தயாரிக்கலாம். ஆனா, இதுல அப்படி நடக்கறதில்லை. சிண்டிகேட் போட்டு பெருமளவு கொள்ளை நடக்குறதால இதில் தரமான பொருளைத் தயாரிக்கறது சாத்தியமில்லை.
ஒரு கும்பல் சிண்டிகேட் அமைத்து, அதில் கிரைண்டர் ஆர்டர் வாங்குன தயாரிப்பு நிறுவனங்களையும் சேர்த்து பெருமளவில் கொள்ளையடிக்கிறாங்க. ரூ.2,142க்கு கொடுக்கப்படுற கிரைண்டர்ல 1,000 ரூபாய் வரைக்கும் இந்த சிண்டிகேட் கும்பலுக்குப் போகுது. தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழக்கமா கிடைக்குற லாபம்தான்.
ஆனா, இந்த கும்பலுக்குப் பெரிய அளவு பணம் போகுது. இந்த 4 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்துல கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாய் அப்படியே இந்தக் கும்பலுக்குப் போயிடுது. 1,200 ரூபாயில்தான் கிரைண்டர் தயாரிக்கப்படுது. அது எப்படி சரியா ஓடும்? அதனாலதான் இத்தனை பிரச்னையும்.
ஆனால், கிரைண்டர் தயாரிப்பாளர்களுக்கு இதுல பெரிய லாபமில்லை. கடந்த ஜூன் மாசத்துல இருந்து அரசுக்குத் தரப்பட்ட கிரைண்டர்களுக்கு இதுவரை பணம் வரவே இல்லை. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நிலுவையில இருக்கு. இது தவிர, தயார் நிலையில் இருக்குற 5 லட்சம் கிரைண்டரை எடுக்காம இருக்காங்க. இதுல நடக்குற மிகப் பெரிய சிண்டிகேட் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி இருந்தா, தரமான கிரைண்டர் கிடைச்சிருக்கும்” என்கிறார்கள் பெயர் வெளியிட விரும்பாத கிரைண்டர் தயாரிப்பாளர்கள் சிலர்.
அடுத்த இதழில்...

தண்ணீரில் மிதக்கும் சென்னை நகரம்: இடி-மின்னலுடன் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

logo




சென்னை,

சென்னையில் இடி-மின்னலுடன் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விடிய, விடிய மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 8, 9-ந் தேதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதன் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடி, மின்னலுடன் அடைமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் பெரும்பாலான சாலைகளிலும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இரவில் மழை பெய்தாலும், நேற்று பகலிலும் அந்த மழை நீர் வடிவதற்கு வழியின்றி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

வீடுகளுக்குள் வெள்ளம்

எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், வேப்பேரி, கோயம்பேடு, சேத்துப்பட்டு, வியாசர்பாடி, கிண்டி, சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, தியாகராயநகர், கோடம்பாக்கம், அயனாவரம், பெரம்பூர், கொளத்தூர், பாண்டி பஜார், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரி, வால்டாக்ஸ் சாலை உள்பட பல்வேறு இடங்களிலும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

புழல் வள்ளுவர் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அண்ணா நகர் ‘கோல்டன் ஜூப்ளி’ அடுக்குமாடி குடியிருப்பில் தரைதள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

சுரங்கப்பாதைகள் மூழ்கின

ஓட்டேரி பிரிக்ளின் சாலை, ஜமாலியா, வியாசர்பாடி பிரதான சாலை உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்தது. பெரம்பூர் சுரங்கப்பாதை, ஜீவா ரெயில்வே சுரங்கப்பாதை, பேசின்பிரிட்ஜ், சேத்துப்பட்டு சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள குடிசை பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

சாலை மறியல்

புரசைவாக்கம் திடீர் நகர், அம்பத்தூர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் விடுதி வளாகத்தின் உள்ளே செல்ல மாணவர்கள் திண்டாடினார்கள்.

திருமங்கலம் பாடிகுப்பம் சாலையில் உள்ள அன்னை அடுக்ககம், ‘பைவ் ஸ்டார் குடியிருப்பு’ மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தரை தளத்தில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து உள்ளே புகுந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் பாடிகுப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மின்வினியோகம் பாதிப்பு

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் உறிஞ்சும் எந்திரங்கள், மின் மோட்டார்கள் மூலமாக போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

வெள்ளத்தில் மிதக்கும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சார வினியோகமும் துண்டிக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது.

அமைச்சர்கள்-மேயர் ஆய்வு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, எஸ்.கோகுலஇந்திரா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலை, வடக்கு போக் சாலை, கோபாலபுரம், சாந்தோம் பிரதான சாலை, எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப்பாதை, புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.

அப்பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். சமூகநல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அமைச்சர்கள் மற்றும் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் உணவு பொட்டலங்களை வழங்கினர்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம்

மழை நீர் தேங்கியதால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆட்டோக்களில் வழக்கத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு ஆட்டோ டிரைவர்கள் செல்ல மறுத்தனர். கால்-டாக்சிகளுக்கும் நேற்று கடுமையான கிராக்கி நிலவியது. பெரும்பாலானவர்கள் நேற்று வீட்டை விட்டு வெளியே வராததால் பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

தண்ணீர் தேங்கியதால் ஜீவா மேம்பாலத்தில் ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறம் மோட்டார் சைக்கிள்களை மூன்று சக்கர சைக்கிளில் ஏற்றிச்செல்ல ரூ.50 பணம் வசூலிக்கப்பட்டது.

ஸ்தம்பித்த சென்னை

வடசென்னை பகுதியை சேர்ந்தவர்கள் நகரின் பல பகுதிகளுக்கு செல்லும் வழியெங்கும் மழை வெள்ளம், சாலைகள் போக்குவரத்துக்கு தடை என ஒவ்வொன்றையும் கடந்துசெல்வதில் பெரிதும் சிரமப்பட்டனர். விடிய, விடிய பெய்த கனமழை சென்னையை மிதக்கவிட்டு, ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

சேது சமுத்திர திட்டம் எப்போது?...daily thanthi

மிகவும் ரப்பராக இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு திட்டம் என்றால், அது சேது சமுத்திர திட்டம்தான். இந்துமகா சமுத்திரத்தில் பாக் ஜலசந்தியில் ஆழம் இல்லாமல் இருப்பதால், அரபிக்கடல் பகுதியில் இருந்து வரும் கப்பல்கள் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா போன்ற துறைமுகங்களுக்கு செல்ல இலங்கையைச் சுற்றித்தான் வரவேண்டும். இடையில் மணல் திட்டுகளும் இருக்கிறது. இந்த பகுதியில் கடலை ஆழப்படுத்தும் திட்டம்தான் ‘சேதுசமுத்திர திட்டம்’. தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் இந்த திட்டத்தில் மிகத்தீவிர ஆர்வம் காட்டிவந்தார். சேது சமுத்திர திட்டத்தை அவர் ‘தமிழன் கால்வாய்’ என்றே அழைத்தார். ‘தினத்தந்தி’யை அவர் தொடங்கிய அதே 1942–ம் ஆண்டில் ‘தமிழ்பேரரசு’ என்று ஒரு நூலை வெளியிட்டார். அதில் அவர், ‘சேது சமுத்திரத்தை ஆழப்படுத்தி, அதிலே கப்பல் போகிறபடி கால்வாயைத் தோண்ட வேண்டும் என்கிற ‘தமிழன் கால்வாய்த்திட்டம்’ தமிழ்நாட்டுக்கு முக்கியமானது. சேது சமுத்திரம் என்கிற கடல், தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே இருக்கிறது. இந்த கடலுக்கு மேற்கே ராமநாதபுரம் மாவட்டமும், கிழக்கே யாழ்ப்பாணமும் இருக்கின்றன. இந்த கடலில் ஆழம் மிகவும் குறைவு. ஆகையால் தற்போது அதன் வழியாக கப்பல் போகமுடியாத நிலையில் இருக்கிறது. இதை கொஞ்சம் ஆழப்படுத்தி கடலுக்கு உள்ளேயே சிறு கால்வாய்கள் வெட்டினால் கப்பல் போவதற்கு வசதி ஏற்படும். அவ்வாறு வசதிகள் ஏற்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிழக் கிந்திய நாடுகளுக்கு போகிற கப்பல்கள் எல்லாம் இதன் வழியாகத்தான் போய் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படும்’ என்று எழுதியிருக்கிறார்.

சேது சமுத்திர திட்டத்தைப்பற்றி அவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறார். இந்த திட்டத்தை உருவாக்க முதல் முயற்சி எடுத்தவர் ஆங்கிலேய இந்திய கடற்படையைச் சேர்ந்த கமாண்டர் டெய்லர் என்பவர்தான். 1860–ல் அவர் தான் முதலில் இதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கினார். அதிலிருந்து பல திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், 2005–ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அனைத்து கட்சித்தலைவர்களும் பங்கேற்க, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ரூ.2,400 கோடி செலவிலான மன்னார் வளைகுடாவையும், வங்காள விரிகுடாவையும் இணைத்து, ஆதம் பாலம் வழியாக 167 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல்வழி திட்டம் உருவாக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தபோதுதான் சேது சமுத்திர திட்டம் தொடக்கத்தைக்கண்டது. ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், கடலுக்குள் ராமர் கட்டிய பாலம் தகர்க்கப்படும், இதனால் இந்துமத மக்கள் மனம் புண்படும் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு இந்த திட்டம் கேள்விக்குரியது, பொருளாதார ரீதியாக சாத்தியம் இல்லாதது, பொதுமக்களின் நலனுக்கு ஏற்றதில்லை என்று தெரிவித்தது. இந்த வழக்கு முழுவதுமே ராமர் பாலத்தை சுற்றியே இருந்தது.

இந்த நிலையில், தற்போது பா.ஜ.க. அரசு ராமர் பாலம் அதாவது, ஆதம் பாலத்தை பாதிக்காமல் 5 மாற்று வழிகளைத் தயாரித்துள்ளது. இந்த வழிகள் தொடர்பாக பிரதமர் மோடி ஒப்புதல் கொடுத்தவுடன், மத்திய அரசாங்கம் அதை உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்துவிடும். எனவே, நிச்சயமாக சேது சமுத்திர திட்டத்துக்கு விரைவில் ஒரு விடிவுகாலம் வந்துவிடும் என தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

Saturday, November 14, 2015

Last-minute reservation receive thumbs up from rail users in Trichy TNN | Nov 14, 2015, 05.34 AM IST

TRICHY: The passengers and rail users' association members of the Trichy railway division have given a thumbs up to the new system of booking tickets 30 minutes prior to the departure of trains.

The system that came into effect from Thursday has received good response from among travelers. Rail users commented that the system will put an end to illegal ticketing activities.

Several passengers have begun checking at the counters for last-minute booking. Paradamanan N, a passenger booking the Uzhavan Express running from Thanjavur to Chennai Egmore, booked tickets after he found that seats were vacant. "The move by the Railways is welcome as all this time, the reservation charts were being released three hours before the journey, which was final and the passenger had to go to the ticket examiner to check for vacancies," he said.

According to A Giri, vice president of Thanjavur District Rail Users Association, "The change in the reservation system will cut the touts and the illegal ticketing activities that are currently prevailing in the railways."

Earlier, whenever a passenger boarded the train on a Waiting List or Reservation Against Cancellation ticket, the train ticket examiner (TTE) checked for the tickets and told the passenger if a vacancy was available. The TTE's word was final in allotting space to the passengers, with some of the passengers even bribing the TTE for seats.

Giri added that the technology has to be brought in for filling up vacancies by giving TTEs hand-held devices that can show the availability of seats in real time.

All the day trains that go from the city during weekdays usually run with high vacancy and the passengers can now opt for seats even at the last moment rather than take the chance of unreserved seats, said Jaganath P, secretary of Trichy Rail Air Passengers Association.

He also said that the recent move of the Railways to bring in more revenue by using the available resources should be welcomed.

வகுப்பறை வன்முறைகள்


Dinamani

By அ. கோவிந்தராஜூ

First Published : 10 November 2015 01:20 AM IST


நம் நாட்டில் இப்போது தவறு செய்யும் மாணவர்களைத் திட்டவோ கண்டிக்கவோ முடியாத நிலை உள்ளது. வெளி நாடுகளில் வகுப்பறைக்கு மாணவர்கள் துப்பாக்கியும் கையுமாக வருகிறார்கள். அது அவர்கள் வளர்ந்த சூழல், கலாசாரம் அப்படிப்பட்டதாக அமைந்திருக்கலாம். ஆனால், நம் நாட்டில் ஏனிப்படி? இந்தச் சூழலில் எந்த ஆசிரியருக்குத்தான் தப்பு செய்யும் மாணவர்களைத் தட்டிக்கேட்கும் துணிவு வரும்?
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்களின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் அருமையாகச் சொல்வார்.
இருப்பவர் முன் பணிவாக நின்று, இல்லாதவர் எப்படி யாசிப்பார்களோ அப்படிப் பணிவுடன் வகுப்பறையில் இருந்து ஆசிரியரிடம் மாணவர்கள் கற்க வேண்டும் என்பது குறள் கருத்தாகும். அப்படிக் கற்றாரே கற்றவர், மற்றவரெல்லாம் கடையர் என்று கூறுகிறார் வள்ளுவர்.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
என்பது குறள்பா. பாடப் பொருளை உணரும் ஆர்வத்தோடு கேட்க விரும்பும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது என்பது வளரும் நிலையில் உள்ள செடிகள் நிரம்பிய பாத்தியில் நீர் பாய்ச்சுவதற்குச் சமம் என்று மேலும் கூறுவார்.
இன்றைக்கு மேடைகளில் பேசவும் சில நூல்களை எழுதவும் என்னால் முடிந்தது என்றால் அதற்குக் காரணம் பேராசிரியர் தமிழண்ணல் போன்றோரின் வகுப்பறைகளில் அடங்கி ஒடுங்கிப் பாடம் கேட்டதே ஆகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பவணந்தி முனிவர் தான் இயற்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலில் ஒரு மாணவன் வகுப்பில் எப்படி பாடம் கேட்க வேண்டும் என்பதை ஒரு நூற்பாவில் விளக்கியுள்ளார்.
உரிய நேரத்தில் வகுப்பறையில் இருத்தல் வேண்டும். ஆசிரியர் வரும்போது எழுந்து பணிந்து நின்று வழிபட வேண்டும். அவர் அமரச் சொன்னதும் ஓவியர் வரைந்த பாவையைப் போல வகுப்பில் அமர வேண்டும்.
செவி இரண்டும் வாய்களாக மாறி ஆசிரியர் கூறுவதைத் தாகம் ஏற்படும்போது பருகும் ஆர்வத்தினர் ஆகிப் பருக வேண்டும். அவற்றைத் தவறாமல் தம் உள்ளத்தில் பதிய வேண்டும்.
இப்படிப் பாடம் கேட்பவனுக்கு இலக்கணம் வகுத்த நாடு நம் நாடு.
"ஆச்சார்ய தேவோ பவ!' -அதாவது ஆசிரியர் தெய்வமாக வணங்கத் தக்கவர் என்று சொன்ன நாடு நம் நாடு. திருவருளை விட குருவருள் சிறந்தது என உரைத்தது நம் நாடு.
குருவின் பெயரைச் சொல்லி, குருவைக் கண்டு, குருவின் சொல் கேட்டலே பாடப் பொருளில் தெளிவு பெறுவதற்குரிய வழியாகும் என்று உரைத்த திருமூலர் வாழ்ந்த நாடு நம் நாடு.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
என்பது திருமூலரின் திருமந்திரம் ஆகும்.
ஆனால், நமது நாட்டில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களால் அரங்கேற்றப்படும் வகுப்பறை வன்முறைகளுக்கு அளவே இல்லை. 2012-ஆம் ஆண்டு சென்னை செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை, வகுப்பறையில் ஓர் ஒன்பதாம் வகுப்பு மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட நிகழ்வு நம் மனத்தில் நீங்காத வடுவாக உள்ளது.
அதற்கு அடுத்த ஆண்டில், ஒரு கல்லூரிப் பேராசிரியர் வகுப்பறையில் மாணவனின் அமில வீச்சுக்கு ஆளானார். அண்மையில் ஓர் அரசுப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மது அருந்தி வகுப்பறைக்கு வந்து வம்பு வளர்த்த செய்தி நாளேட்டில் வந்ததும் நாம் அறிந்ததே.
வகுப்பறை வன்முறை என்பது அம்பு விடுவதில் தொடங்கி ஆளைக் கொல்வதில் முடிகிறது. ஆசிரியர்களுக்குச் சகிப்புத் தன்மை வேண்டும் என்று ஒரு தரப்பினர் உரக்கப் பேசுகிறார்கள். சகிப்புத் தன்மைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா?
கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாத சிலரால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் பணக்கார மாணவர்கள் என்பதால், கல்லூரி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை போலும். இந்த நிலை நீடித்தால் அறிவாற்றல் மிகுந்த எவரும் ஆசிரியப் பணிக்கு வரமாட்டார்கள். பிற பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள்.
ஓர் ஆசிரியருக்கு தான் பெறும் ஊதியத்தைவிட தன்மானம் மிக முக்கியமானதாகும். மாணவர்களிடமிருந்து ஆசிரியப் பெருமக்கள் மரியாதையைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை.
மாணவர்கள் இதை உணர வேண்டும் உணர்த்த வேண்டிய பொறுப்பில் இருப்போர் உணர்த்த வேண்டும்.

இது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல!


Dinamani

By வ.மு. முரளி

First Published : 12 November 2015 01:51 AM IST


வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள்; தோல்வி ஓர் அநாதை' என்ற பழமொழி உண்டு. பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை அடுத்து பாரதிய ஜனதா கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்திக் குரல்களைக் கேட்கும்போது இந்தப் பழமொழிதான் நினைவில் வருகிறது.

இந்தத் தோல்விக்கு தனிப்பட்ட யாரையும் குற்றம் கூற முடியாது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா ஆகியோரைக் காக்கவே இவ்வாறு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பா.ஜ.க. வெற்றி பெற்ற போதெல்லாம் அதற்கு மோடி- ஷா இணையே காரணம் என்று புகழ்ந்தவர்கள்தான் இவர்கள். தோல்வி ஓர் அநாதைதான்.

ஆனால், பா.ஜ.க. தன்னை மறுபரிசீலனை செய்துகொள்ள பிகார் தேர்தல் முடிவுகள் உதவ வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் விரும்புகின்றனர். அதற்கு, தோல்வியின் பின்புலத்தை பா.ஜ.க. தீர ஆலோசிக்க வேண்டும். அதற்கு மாறாக, அதிகாரத்தில் இருப்பவர்களைக் காப்பதற்காக பூசி மெழுகுவது அந்தக் கட்சிக்கு கண்டிப்பாக நன்மை விளைவிக்காது.

கடந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றபோது, அதற்கு முழுமையான காரணமாக இருந்தார் மோடி. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணா மாநிலத் தேர்தல்களிலும் பா.ஜ.க.வின் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. அந்த விஜயபவனிக்கு தில்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்பிறகு, தற்போது நடந்து முடிந்த பிகார் தேர்தல், நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க.வின் வெற்றியைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்திலும், அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் மகா கூட்டணி என்ற பெயரில் கைகோத்தன.

தவிர, பிகாரில் கடந்த பத்தாண்டுகளாக நடத்திய ஆட்சியால் நற்பெயர் பெற்றிருந்த நிதீஷ் குமாரையே முதல்வர் வேட்பாளராகவும் அந்தக் கூட்டணி அறிவித்தது. அப்போதே அந்தக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துவிட்டது.

எதிரணியில் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் திரண்ட நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வோ, பிரதமர் மோடி என்ற தனிநபரை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. மோடி மீதான அளவுக்கு அதிகமான நம்பிக்கையே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் எனில் மிகையில்லை. இதற்கு பிற தலைவர்களை அனுசரிக்காத அமித் ஷாவின் போக்கும் முக்கியக் காரணம்.

ஏற்கெனவே, தில்லி பேரவைத் தேர்தலில் மோடியை மட்டுமே நம்பி, பிற தலைவர்களைப் புறக்கணித்ததன் பலனையே அங்கு பா.ஜ.க. அறுவடை செய்தது. தில்லியில் ஹர்ஷ வர்த்தனை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. மறுத்ததே அங்கு பா.ஜ.க.வின் படுதோல்விக்குக் காரணமானது.

அதுபோலவே, பிகாரிலும் சுஷில்குமார் மோடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் பா.ஜ.க. தவறு செய்தது.

ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஒன்பது ஆண்டுகள் மாநிலத்தைச் சிறப்பாக ஆண்டதில் சுஷில்குமார் மோடிக்குப் பெரும் பங்குண்டு. அந்த மாநிலத்தில் நிதீஷ் குமாருக்கு இணையான நற்பெயர் பெற்றவர் சுஷில்குமார் மோடி. ஆனால், கட்சிக்குள் ஒத்த கருத்து உருவாகவில்லை என்று கூறி அவரைப் பின்னுக்குத் தள்ளியது பா.ஜ.க. தலைமை.

அவர் பிகார் பா.ஜ.க.வுக்கு தலைமை ஏற்றிருந்தால்கூட தோல்வியைத் தவிர்க்க முடியாது போயிருக்கலாம். ஆனால், பிரசாரத்தின் சுமையும் தோல்வியின் வலியும் பிரதமர் மோடியை இந்த அளவு பாதித்திருக்காது.

காங்கிரஸ் கோலோச்சிய காலத்திலேயே பா.ஜ.க.வின் நட்சத்திரப் பிரசாரகராக விளங்கியவர் பிகார் மண்ணின் மைந்தர் நடிகர் சத்ருகன் சின்ஹா. அவரை கடந்த இரண்டாண்டுகளாகவே பா.ஜ.க. புறக்கணித்து வந்திருக்கிறது. அவரது அதிகப் பிரசங்கித்தனமான சில கருத்துகள் கட்சிக்கு சங்கடம் ஏற்படுத்தியிருக்கலாம். அவ்வாறு அவரை வெளியில் புலம்புமாறு விட்டது கட்சியின் தவறல்லவா?

இதேபோலத்தான் பிகார் மக்களுக்கு நன்கு அறிமுகமான பா.ஜ.க. தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, ராஜீவ் பிரதாப் ரூடி, ஷாநவாஸ் உசேன் ஆகியோரும் கண்டு கொள்ளப்படவில்லை.

பா.ஜ.க.வின் பிரசாரம் முழுவதுமே அமித் ஷா ஏற்பாட்டில், மோடியை மையம் கொண்டதாகவே அமைந்தது. அதனால் பிரசார வியூகமே தவறாகியது.

இதன்விளைவே, எதிர்க்கட்சியினரின் சாதாரணக் குற்றச்சாட்டுகளுக்கும்கூட பிரதமரே பதில் சொல்லும் நிலையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, மூன்றாம்தர மேடைப் பேச்சாளர் போல சில சமயங்களில் பேச வழிவகுத்தது இந்த இக்கட்டான நிலைமைதான்.

இப்போது தேர்தலில் பா.ஜ.க. தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு எதிர்க்கட்சியினரின் கூட்டணி வலிமையே முதன்மைக் காரணம். ஆனால், எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி பெற பா.ஜ.க.வே உதவியிருக்கிறது என்பதும் உண்மையே.

வாஜ்பாய், அத்வானி காலத்தில் பா.ஜ.க.வில் பல இளம் தலைவர்கள் உருவாக அக்கட்சி கடைப்பிடித்த கூட்டுப்பொறுப்பு என்ற தன்மையே காரணம். அதிலிருந்துதான் நரேந்திர மோடி உருவானார் என்பதை மறந்துவிடக் கூடாது. இன்று அந்தப் பண்பிலிருந்து பா.ஜ.க. வெகுவாக விலகிச் சென்றுவிட்டது. தனிமனித வழிபாடும், அதிகார மயக்கமும் கட்சியின் வீழ்ச்சிக்கே வழிகோலும்.

பிகார் தேர்தல் தோல்விக்கு மோடியையும், ஷாவையும் குற்றம் சாட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் நிதின் கட்கரி கூறியிருப்பதைக் காணும்போது, அந்தக் கட்சி சுயபரிசோதனை செய்யத் தயாரில்லை என்ற தோற்றமே ஏற்படுகிறது. இது மோடிக்கு மட்டுமல்ல, பா.ஜ.க.வுக்கும் நல்லதல்ல.

பண்டித நேரு - நிறையும் குறையும்!

Dinamani
பண்டித நேரு - நிறையும் குறையும்!

By கே.எஸ். ராதாகிருஷ்ணன்

First Published : 14 November 2015 01:57 AM IST


ஆசியாவின் ஜோதி, மனிதர்களின் மாணிக்கம் என்று அழைக்கப்பட்ட பண்டிதர் நேரு பிறந்து 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர் மறைந்து 50 ஆண்டுகளும் கடந்துவிட்டன.
இதையொட்டி, அவரைப் பற்றிய பல நூல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நவீன இந்தியாவைப் படைக்க நேருவுடைய முயற்சிகள் ஏராளம். அவை பட்டியலில் அடங்காது. சோஷலிசம், மத நல்லிணக்கம், ஜாதிய மடமைகளுக்கு அப்பால் புதியதோர் சமுதாயம் படைக்க அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தான் இன்றைக்கு இந்தியாவின் அடித்தளமாக இருக்கின்றன.
1946-இல் மகாத்மா காந்தி, நேரு ஒரு தவிர்க்க முடியாத நபர் என்று குறிப்பிடுகின்றார். இந்தியா விடுதலை பெற்றவுடன் பெரும்பாலான மாநில காங்கிரஸ் கமிட்டிகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களும் சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராவதைத்தான் விரும்பினார்கள். ஆனால், காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் நேருவுக்கு ஆதரவாக இருந்தார். பிரிட்டிஷாருடன் இணக்கமான நட்புறவைத் தொடரும் இளைஞர் ஒருவர் பிரதமராக இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது என்று மகாத்மா காந்தி கருதியதுதான் அதற்குக் காரணம். பிரதமராக பொறுப்பேற்ற நேரு உள்துறை அமைச்சராக இருந்த படேலோடு பல பிரச்னைகளில் மாறுபட்டு இருவருக்கும் மத்தியில் தேவையற்ற கசப்புணர்வுகள் ஏற்பட்டதெல்லாம் வரலாற்றுச் செய்திகள்.
நேரு இந்திய-மேற்கத்திய கலாசாரங்களின் கலவையாக இருந்தார். ஆனால், சர்தார் படேலோ ஓர் இந்திய விவசாயியைப் போன்ற அணுகுமுறை கொண்டவர். காங்கிரஸுக்குள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும், நேருவுக்கும்கூட சரியான உறவு இருக்கவில்லை. நேதாஜி போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுகூட அந்தப் பொறுப்பில் தொடர முடியவில்லை. காந்தியடிகளுக்கும் நேதாஜி போஸுக்கும் இடையேயான மனக் கசப்புக்கு நேரு ஒரு முக்கியக் காரணம் என்று கூறுபவர்களும் உண்டு.
ஆனால், நேதாஜி தன்னுடைய உறவினருக்கு ஒரு தேவையின்போது நேருவிடம் கேளுங்கள் என்று வழிகாட்டியபோது, நேரு அதற்கு அக்கறை காட்டினார் என்று ஒரு செவிவழிச் செய்தி உண்டு. நேருவுக்கும், போஸுக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் இருந்தாலும், இருவரும் தங்களுக்குள் நட்பு கொண்டிருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் அமைச்சரவை அமைக்கும்போது, ஜெயப் பிரகாஷ் நாராயணனையும், அச்சுதபட்வர்த்தனையும் அமைச்சரவையில் சேரச் சொல்லி நேரு அழைத்தபோது, அவர்கள் மறுத்து மக்கள் பணி ஆற்றப்போகிறோம் என்று சர்வோதயம், பூமிதான இயக்கம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தினார்கள்.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் கூட தங்களில் அதிகாரம் படைத்தவர் யார் என்ற பனிப்போர் உருவானது. உச்சநீதிமன்றம் வரை இதற்காக கருத்தும் கேட்கப்பட்டது. இவர்கள் இருவருடைய உறவுகள் சீராக இல்லை என்றாலும், இருவரும் அடக்க ஒடுக்கமாகவே தங்கள் பனிப்போரை நடத்தினார்கள்.
அன்றைக்கு மாநில ரீதியாக காங்கிரஸ் கமிட்டி பிரதேச காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டு, அதன் தலைமைக்கு உரிய கெüரவமும் அதிகாரங்களும் வழங்கப்பட்டன. நேரு காலத்தில் மாகாண காங்கிரஸ் தலைவர்களான, தமிழகத்தில் காமராஜர், கேரளத்தில் சங்கர், ஆந்திரத்தில் நீலம் சஞ்சீவ ரெட்டி, கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா, மராட்டியத்தில் எஸ்.கே.பாட்டில், பிற மாகாணத் தலைவர்களான மொரார்ஜி தேசாய், அதுல்யா கோஸ், டாக்டர் பி.சி. ராய் எனப் பல தலைவர்கள் அந்தந்த மாகாணங்களில் காங்கிரûஸ வளர்த்தார்கள். நேரு, அவர்களுக்கு உரிய அதிகாரங்களை அளித்து, அவர்களும் சுயமாகத் தங்கள் முடிவுகளை எடுத்தனர்.
தட்சண பிரதேசம் என்று தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து தென் மாநிலங்களை ஒரு மாநிலத் தொகுப்பாக நேரு அமைக்கத் திட்டமிட்டபோது, பெருந்தலைவர் காமராஜர் அதைக் கடுமையாக எதிர்த்தார். ஆகவே, அத்திட்டத்தை நேருவும் கைவிட்டார். அவ்வளவு அதிகாரங்கள் மாகாண காங்கிரஸ் தலைவர்களுக்கு அன்றைக்கு இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் இந்த மாகாணத் தலைவர்கள் தஞ்சாவூர் பொம்மை போல மாற்றப்பட்டதால்தான் காங்கிரஸ் பல இடங்களில் படிப்படியாகத் தன் செல்வாக்கை இழந்தது.
நேரு, நாடாளுமன்ற ஜனநாயகம், மக்களின் அடிப்படைத் தேவைகள், கனரகத் தொழிற்சாலைகள், அணைகள், கட்டமைப்புப் பணிகள், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி, அணுசக்தி போன்ற முக்கிய விஷயங்களில் ஆர்வம் செலுத்தி, அதற்கான வளர்ச்சிக்கு வித்திட்டார்.÷இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளித்த நேருவின் மென்மையான போக்கை இன்றைக்கும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக நாடுகள் இரண்டு பக்கமாக பகைமை கொண்ட அணிகளாகப் பிரிந்தன. அமெரிக்கா தலைமையில் ஓர் அணியும், ரஷியா தலைமையில் மற்றோர் அணியும் உருவாகின. இதனால் உலகில் பதற்றமான நிலை மற்றும் அமைதியின்மை ஏற்பட்டது. இந்தியா இவ்விரண்டு அணிகளிலும் சேராமல் நடுநிலை நாடாக இருந்தது. இதன் விளைவாக உருவான நேருவின் அணிசாராக் கொள்கையின் மூலம் இந்தியா உலக அமைதியை நிலைநாட்டியது.
அமெரிக்கா, ரஷியா என்று உலகின் இரண்டு வல்லரசுகள் கோலோச்சிய காலத்தில் அணிசாரா நாடுகளை ஒன்றிணைத்து அணிசாரா இயக்கம் பெல்கிரேடில் உருவானது. ஜவாஹர்லால் நேருவோடு, யுகோசுலோவாக்கியாவின் அதிபர் யோசிப் பிரோசு டிட்டோ, எகிப்து அதிபர் நாசர், கானாவின் தலைவர் குவாமே நிக்ரூமா, இந்தோனேசியாவின் தலைவர் சுகர்ணோ ஆகியோரின் முயற்சியில் இந்த இயக்கம் துவங்கியது.
இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே, நடுநிலையில் வளரும் நாடுகள் உலக அமைதியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்தச் சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953-ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் வலியுறுத்தினார்.
எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ, எதிராகவோ அணிசாரா நாடுகளின் குழுமமான இந்த இயக்கத்தில் தற்போது 120 நாடுகள் உறுப்பினர்களாகவும், 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளன. நேருவின் முன்முயற்சியில் உருவான பஞ்சசீலக் கொள்கை உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தோனேசியாவின் பாண்டூங் நகரில் வடித்த அந்த ஐந்து கொள்கைகள், "எந்த நாடும் பிற நாட்டை தாக்கக்கூடாது; ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் தலையிடக்கூடாது; அனைத்து நாடுகளும் சமத்துவம் மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்; ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கியிருத்தல் வேண்டும்; ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும்' என்பவை. இவையே உலக ஒற்றுமைக்கும், உறவுக்கும் பாலபாடமாகும்.
இவ்வாறான உலக அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் குரல் கொடுத்த பண்டித நேருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மேலை நாடுகள் அவரை ஏனோ புறக்கணித்தன.
இந்தியா விடுதலை பெற்றவுடன் நாட்டின் தேவைகளையும், வளர்ச்சிகளையும் கவனத்தில்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை ஒருபுறமும், பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது அங்கிருந்து வந்த அகதிகளைப் பாதுகாக்கவும், ஏனைய பிரச்னைகளைக் கவனிக்கவும், அரசியலமைப்பு ரீதியாக நாட்டைத் திடப்படுத்தவும் எனப் பல பணிகளில் நேரு ஈடுபட்டதோடு, உலக அரங்கிலும் இந்தியாவின் கீர்த்தியை தன்னுடைய அணுகுமுறையினால் நிலைநிறுத்தினார். ஆனாலும், அவர் மீது இன்றைக்குவரை வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் பல உள்ளன.
காஷ்மீர் பிரச்னையை அவர் கையாண்ட விதமும், ஐ.நா. மத்தியஸ்தத்துக்கு ஒத்துக்கொண்டதும் தவறானது என்று இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. பாகிஸ்தானுக்கு அதிகமான சலுகைகளும், இடமும் நேரு அளித்துவிட்டார் என்றும், சீனாவுடைய எல்லை தாவாக்களில் இந்திய-சீன எல்லையை வரையறுக்கும் மக்மோகன் எல்லைக்கோடு பிரச்னையும், மணிப்பூரில் சில இடங்கள் அப்போது பர்மாவுக்கு விட்டுக்கொடுத்ததும், நாகாலாந்து பிரச்னையை சரியாகக் கையாளவில்லை போன்ற விவாதங்கள் தற்போதும் உள்ளன.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கும்போது, மாநில எல்லைகள் சரியாக வரையறுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு தமிழகத்தின் நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, தேவிகுளம் பீர்மேடு, பாலக்காடு அருகே சில கிராமங்கள் கேரளத்துக்கும், கொள்ளேகால் மற்றும் மாண்டியாவின் சில கிராமங்கள் கர்நாடகத்திற்கும், திருப்பதி, சித்தூர், நெல்லூர் பகுதிகள் ஆந்திரத்துக்கும், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி பிரித்துக் கொடுக்கப்பட்டதை நேரு கண்டுகொள்ளவில்லை என்ற குறைபாடுகள் இன்றைக்கும் உண்டு.
நாட்டில் சமஸ்டி அமைப்பு முறையினுடைய வீரியத்தைக் குறைத்து வலுவான மத்திய அரசு, நேரு என்ற ஆளுமை மாயையால் உருவாக்கப்பட்டது. அவரிடம் நிறைவும் உண்டு. அவருடைய பணிகள் மீதான விமர்சனங்களும் உண்டு.
தங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், காந்தியை தன்னுடைய வழிகாட்டியாகக் கருதினார். கிராமியப் பொருளாதாரம் என்ற அடிப்படையில் ராம ராஜ்ஜியம் காணவும், கிராமங்களிலே உண்மையான இந்தியா வாழ்கிறது என்றும் காந்தி நினைத்தார். ஆனால் நேருவோ, மேலைநாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் ஆளுமையை உலகளவில் நிலைநிறுத்த வேண்டுமென்ற கொள்கையில் முனைப்பாக இருந்தார்.
உலக வரலாற்றையும், இந்திய வரலாற்றையும் சுருக்கமாக அறிந்துகொள்ள, The Discovery of India, Glimpses of World History மற்றும் தன்னுடைய சுயசரிதையை நூல்களாக்கி நமக்குச் சீதனமாக விட்டுச் சென்றுள்ளார்.
இலக்கியத்திலும், ஆங்கிலப் புலமையிலும், நாட்டு நிர்வாகத்திலும், உலக அமைதிக்கு குரல் கொடுத்த உலகத் தலைவர் நமது முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு. அவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறைகள் அறிந்து கொள்வதோடு ஆய்வுகளும் மேற்கொள்ள வேண்டும்.

இன்று ஜவாஹர்லால் நேரு
125}ஆவது பிறந்தநாள்.

வரவேற்புக்குரிய அணுகுமுறை!

Dinamani


By ஆசிரியர்

First Published : 13 November 2015 01:20 AM IST


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பல்வேறு ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டிருப்பது உண்மை. குறிப்பாக, இணையதளம் மூலம் ஏலம் முறை அறிவிக்கப்பட்டது, இடைத்தரகர்களை அகற்றி நிறுத்தி இருக்கிறது. நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தியிருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரயில்வே துறை சீர்திருத்தம் குறித்த அதன் அணுகுமுறை.

ரயில்வே நிர்வாகம் எடுத்திருக்கும் சமீபத்திய முடிவு ஒன்று, பயணிகளால் பலத்த கரகோஷத்துடன் வரவேற்கப்படுவது உறுதி. ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பாக பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகும், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு வரையிலும்கூடப் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும் என்பதுதான் பாராட்டுக்குரிய அந்த அறிவிப்பு.

இந்தப் புதிய நடைமுறையால், பயண முகவர்கள் மற்றும் ரயில்வே முன்பதிவு அலுவலர்கள் இடையிலான மிகப்பெரிய, பல கோடி ரூபாய்க்கான ஊழலுக்கு வேகத்தடை போட்டுள்ளது ரயில்வே நிர்வாகம். நவம்பர் 12-ஆம் தேதிக்கு முன்பு வரையிலும், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரம் வரை, பயணத்தை ரத்து செய்தால் பயணத்தொகையில் 25% பிடித்தம் செய்யப்படும். இது பயண முகவர்கள் - ரயில் முன்பதிவு ஊழியர்கள் தங்கள் வியாபாரத்தை நடத்த வசதியாக அமைந்தது. இப்போது ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்துக்குள் பயணத்தை ரத்து செய்தால் மட்டுமே 25% தொகை பிடித்தம் செய்யப்படும் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரத்துக்குள் அல்லது ரயில் புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரம் வரை பயணத்தை ரத்து செய்தால் 50% தொகை திருப்பி வழங்கப்படும் என்ற விதிமுறையும் தற்போது மாற்றப்பட்டு, ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்துக்குள் இருந்து 4 மணி நேரத்துக்குள்ளாக (முதல் பயணிகள் பட்டியல் முதல் அட்டவணை தயாரிக்கப்படும் வரை) இனிமேல் 50% தொகையைத் திரும்பப் பெற முடியும்.

இந்த முன்பதிவு ரத்துக்கான நேரம் மாற்றமும், பயண ரத்துக்கான கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டிருப்பதும் நிச்சயமாக பயண முகவர்கள், ரயில்வே முன்பதிவில் உள்ள கருப்பாடுகளை மனதில் கொண்டு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வழக்கமாக, பயண முகவர்கள், அந்தந்த நாள்களின் தன்மைக்கு ஏற்ப, அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்துவிடுவார்கள். 6 மணி நேரத்துக்கு முன்புவரை தங்கள் பயணம் உறுதியாகவில்லை என்பதை அறிந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களில் பலர் ரத்து செய்துவிடுவார்கள். பயண முகவர்களோ, 25% இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் காத்திருப்பார்கள். அவர்களுக்குப் பயணிகள் கிடைக்கவே செய்வார்கள். இரட்டிப்புக் கட்டணம். இதில் ரயில் முன்பதிவு ஊழியர்களுக்கும் கணிசமான தொகை அவர்களது ஒத்துழைப்புக்குக் கையூட்டாகத் தரப்படுகிறது.

ஒவ்வொரு ரயில் சந்திப்பு நிலையத்திலும், பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்ட பிறகு மீதமுள்ள இருக்கைகள், அதன்பிறகு கடைசி நேரத்தில் ரத்தாகும் பயணச்சீட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்யத் தனி இடம் உள்ளது. இது பயணிகள் பலருக்கும் தெரியாது. அப்படியே விவரம் தெரிந்தவர்கள் அங்கேபோய் முன்பதிவு செய்ய முற்பட்டாலும் அதனால் அதிகம் பயனில்லை. மக்கள் வரிசையில் நின்று கேட்கும்போது இடமில்லை என்று சொல்லும் அதே ரயில்வே ஊழியர், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே கணினியில் பயணச்சீட்டை விற்றுக்கொண்டிருப்பார் - பயண முகவருக்கு!

இந்தப் புதிய நடைமுறையால் பயண முகவர் - ரயில் முன்பதிவு ஊழியர்கள் கூட்டணி முற்றிலுமாக உடைந்துவிடும் என்று கூறிவிட முடியாதுதான். அவர்கள் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்துக் கையாளக்கூடும். ஆனால், இந்த நேர மாற்றம் அவர்களுக்கு அதிக நட்டத்தைக் கொடுக்கும். ஆகவே, அவர்கள் கொஞ்சம் தயங்குவார்கள்.

இதேபோன்று, தட்கல் விவகாரத்திலும் ரயில்வே கடும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். தட்கல் பயண முன்பதிவை கணினியில் செய்யும்போது பயண முகவர்களே அனைத்தையும் அள்ளிச் சென்றுவிடும் அவலம் ஆரம்பத்தில் இருந்தது. அதன்பிறகு, முதல் ஒரு மணி நேரத்துக்கு முகவர்கள் கணினி முன்பதிவைச் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்டது. ஆனால், பயண முகவர்கள் போலியாக தனிநபர் இணைய முகவரியை உருவாக்கிக்கொண்டு தட்கல் பயண முன்பதிவைச் செய்தனர். அதைத் தடுப்பதற்கு ஒரு மாதத்தில் 10 முறைக்கு மேலாக முன்பதிவு செய்த இணைய முகவரிகளை தனித்துப் பிரித்து, அவற்றைச் செயல்படாமல் செய்தது ரயில்வே நிர்வாகம்.

இப்போது, அவர்கள் ரயில் நிலைய முன்பதிவு மையத்தில், பெயர்களைக் குறிப்பிடாமலேயே முன்பதிவு செய்கிறார்கள் என்றும், தங்களுக்கான பயணி வந்த பிறகு அந்தப் பெயரை, ரயில் முன்பதிவு ஊழியர் உதவியுடன் பூர்த்தி செய்கிறார்கள் என்றும், சில பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

முன்பதிவு ரத்து அல்லது உறுதியான பயணச்சீட்டு ரத்து அனைத்துமே இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு பெறுவோருக்கே சாதகமாக இருக்கிறது. 30 நிமிடத்துக்கு முன்பாக, பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும். நினைத்தால் உடனே ரத்து செய்யவும் முடியும். ஆனால், ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்தவர்கள் ரயில் நிலையத்துக்குப் போய்த்தான் ரத்து செய்தாக வேண்டும். ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளையும் தொலைபேசி வாயிலாக ரத்து செய்யும் நடைமுறை குறித்தும் ரயில்வே நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

மழை, மழை, அடைமழை!


Dinamani


By ஆசிரியர்

First Published : 12 November 2015 01:46 AM IST


தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் மழையினால் 42 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களைவிட, மழை ஓதம் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களே அதிகம். ஓரிருவர் மின் கம்பி அறுந்து விழுந்ததில் இறந்துள்ளனர்.

வானிலை மையத்தின் மழை அறிவிப்பு வெளியானவுடன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் மீட்புப் பணி மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து தீவிர கவனம் செலுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மழைச் சேதங்களுக்கான இழப்பீடுகளை உயர்த்தி அறிவித்திருந்தார். இறந்தவர் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத் தொகை அளவை இரட்டிப்பாக்கி ரூபாய் நான்கு லட்சமாக அறிவித்திருந்தார்.

இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்துக்கும் அரசு அறிவித்த ரூபாய் நான்கு லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, மழை வெள்ளத்தால், சுவர் இடிந்ததால், மின் கம்பியால் இறந்தவர்கள் நீங்கலாக, மழைக்கால காய்ச்சலால் இறந்தவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்து ரூபாய் நான்கு லட்சம் பணம் பார்த்துவிடத் துடிக்கும் சில சுயநலக் கூட்டம் கிளம்பியிருக்கிறது. மழை விபத்தினால் இறக்காத போதும், இறந்தவர்களை வைத்துப் பணம் பார்க்க இக்கூட்டம் துடிக்கிறது. இது குறித்து அரசு நிர்வாகம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

வழக்கமாக தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்போருக்கு சலிப்பு தரும் விதமாக லேசான மழை பல இடங்களில் காணப்படும். ஆனால், நிகழாண்டைப் போல இந்த அளவுக்கு கொட்டித் தீர்த்ததில்லை. தமிழகம் முழுவதிலும் மழை நீடிக்கும் என்றும், குறிப்பாக புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடலூரில் அதிகக் கவனம் தரப்பட்டிருந்தால் இந்த மரணங்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்திருக்க முடியும்.

இந்த மழையினால் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால், சாலைகள் அனைத்தும் பொத்தலாகிப் போயின என்பது நகர மக்களின் வேதனை. சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியதுதான் தார்ச் சாலைகள் பெயர்ந்து போகக் காரணம். மழை நீர் ஒரு மணி நேரத்தில் வடிகின்ற சாலைகளை அமைக்க இன்னமும் நம்மால் முடியவில்லை.

பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் சாலைகளை மட்டுமல்ல, சாலையோரச் சாக்கடைகளையும்கூட ஆக்கிரமிப்பு செய்து குறுக்கியாகிவிட்டது. அதனால், மழையின் அளவு அதிகரிக்கும்போது, இந்தக் குறுகிய சாக்கடைகளால் மழை நீரை வெளியேற்ற முடிவதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றும் தைரியம் அதிகாரிகளுக்கு இல்லை. சில அதிகாரிகள் தைரியமாக நடவடிக்கை எடுத்தாலும், நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடை பெற்று, நிரந்தரமாக வழக்கை நீட்டிக்கிறார்கள்.

பெரும்பாலான புதிய பேருந்து நிலையங்கள் ஏரிகளின் மீது உருவாக்கப்பட்டவைதான். ஏரிகள் இயல்பாகவே தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டவை. அங்கே பேருந்து நிலையங்கள் அமைத்துத் தண்ணீர் உள்ளே புகாதபடி அடைத்து, வேறு இடங்களுக்கு மழை வெள்ளத்தைத் திருப்பிவிடுவதால், புறம்போக்கு நிலங்களில் குடிசை கட்டியிருக்கும் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களை அமைக்கும்போது இதுகுறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

தாழ்வான பகுதிகளிலும், புறம்போக்கு இடங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போடுவோருக்கு அரசு வேறு இடம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் அங்கே குடி போவதில்லை. தொழில் செய்ய வசதியாக இருக்கிறது என்று பழைய இடத்திலேயே தொடர்ந்து வசிக்கிறார்கள். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவும் காரணம்.

தமிழகத்தின் எந்த நகரிலும், எந்தச் சாலையிலும் மழை நின்ற சில நிமிடங்களில் சாலையில் தண்ணீர் இல்லாத நிலைமையை உருவாக்கிட, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது இன்றியமையாதது. இதற்கு எந்த ஆளும் கட்சியும் தயாராகாது என்பதுதான் யதார்த்த உண்மை.

நகர்ப்புறங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நடமாடும் தள்ளுவண்டி உணவங்கள். இதுபோன்ற "கையேந்தி பவன்கள்' ஆங்காங்கே கொட்டுகின்ற மாமிசக் கழிவுகளும், எலும்புத் துண்டுகளும், தட்டின் மீது வைத்துக் கொடுக்கும் பிளாஸ்டிக் காகிதங்களும் ஓடைகளை அடைத்துக் கொள்கின்றன.

கூவத்தின் இருமருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை தயவுதாட்சண்யம் இல்லாமல் அகற்றினாலே போதும், சென்னையின் கழிவுநீர் பிரச்னை பாதி குறைந்துவிடும். மதுரையின் கிருதுமால் நதி இப்போது ஆறடி ஓடையாக மாறியிருப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக இல்லை. இதுதான் அனைத்து நகரங்களின் அவலமும். இதற்கு விடை காணாமல் மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்குவதையும், அதன் தொடர்விளைவாக சாலைகள் பழுதடைந்து மக்கள் வரிப்பணம் வீணாவதையும் தடுக்கவே முடியாது.

மழை ஓதம் காரணமாக மண் சுவர் இடிந்து விபத்து நடப்பது இயல்புதான். ஆனால், பள்ளிக்கூடங்களில் தரமற்ற ஒப்பந்தக்காரர்களால் தரமற்று கட்டப்பட்டுள்ள பள்ளிக் கூரைகள் பெயர்ந்து விழுந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கும்முன்பாக, ஒவ்வோர் அரசுப் பள்ளியையும் பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தரவும், பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதும் அவசியம். குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் இதைச் செய்தாக வேண்டும்.

ஃபேஸ்புக்கில் பவர்பாயிண்ட் .................. by சைபர்சிம்மன்



மாநாடு, கருத்தரங்கு, அலுவலகக் கூட்டங்கள் என்றால் பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் தானாக நினைவுக்கு வரும். அலுப்பூட்டக்கூடியது என்று சிலர் விமர்சித்தாலும் மணிக்கணக்காகப் பேச வேண்டிய விஷயங்களைக் கூட பவர்பாயிண்ட் காட்சி விளக்கமாக கச்சிதமாக முன்வைக்கலாம்.

இப்போது பவர்பாயிண்ட் சேவையை மேலும் சுவாரஸ்யமாக்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. மைரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்' எனும் பெயரில் ‘பிளக் இன்' வசதியாக இதை அறிமுகம் செய்துள்ளது.

சேவையின் பெயரைப் பார்த்ததுமே அதன் தன்மை புரிந்திருக்குமே. ஆம்! இந்தச் சேவை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக ஊடகச் சேவைகளில் பவர்பாயிண்ட் காட்சி விளக்கங்களைப் பகிர்ந்துகொள்ள வழிசெய்கிறது. தனி ஸ்லைடுகள் ஒளிப்படமாகப் பகிர்ந்துகொள்ளலாம். அல்லது மொத்தக் காட்சி விளக்கத்தையும் ஒளிப்பட ஆல்பமாகப் பகிரலாம். விரும்பினால் ஒருபடி மேலே போய் வீடியோ வடிவிலும் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த ஸ்லைடுகளைப் பார்த்து ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் பவர்பாயிண்ட் செயலியிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, காட்சி விளக்கங்களை நேரடியாக ‘ஒன்டிரை’வில் கோப்பாக சேமித்துக்கொள்ளலாம்.

பவர்பாயிண்ட்டுக்கு மிகவும் தேவையான அப்டேட்தான் இல்லையா?

புதிய திட்டங்களில் ஈடுபட மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ‘மைக்ரோசாஃப்ட் கராஜ்' திட்டத்தின் கீழ் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய குழுவில் நம்மவரான வித்யாராமன் சங்கரநாராயணனும் இடம்பெற்றுள்ளார்.

மாநாடு போன்றவற்றில் பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் அளிக்கும்போது ட்விட்டரில் அதைப் பகிர்ந்துகொண்டால் பார்வையாளர்கள் அதன் மீது கருத்து தெரிவிப்பது சாத்தியமாகலாம். அதற்கு கேள்வி பதில் நேரத்தின்போது அழகாக பதிலும் சொல்லலாம் என்கிறார் அவர்.

இணைய முகவரி: https://officesocialshare.azurewebsites.net/#

தளம் புதிது: படம் பார்க்க வாங்க! ................ சைபர்சிம்மன்

Return to frontpage

ஹாலிவுட் படங்களின் முன்னோட்டத்தை எல்லாம் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? ‘ஸ்க்ரீனா' இணையதளம் இதற்கு உதவுகிறது. இந்தத் தளத்தில் புதிதாக வெளியாக உள்ள ஹாலிவுட் படங்களின் முன்னோட்டங்களைப் பார்க்கலாம். அந்தப் படங்கள் தொடர்பான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் படத்தின் முன்னோட்டம் பிடித்திருக்கிறதா, அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, அப்படி எனில் அந்தப் படத்தை மறக்காமல் இருக்கவும் இந்தத் தளம் உதவி செய்கிறது.

முன்னோட்டத்தைப் பார்த்ததும், படத்தைப் பார்க்க விரும்புகிறேன் என தெரிவித்தால் (இதற்காக ஆம் மற்றும் இல்லை என இரண்டு கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன) அந்தப் படத்தை உடனே உங்கள் விருப்பப் பட்டியலுக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்தப் பட்டியல் மூலம் முன்னோட்டத்தில் பார்த்து ரசித்த படம் ரிலீசாகும்போது மறக்காமல் இருக்கலாம்.

முன்னோட்டத்தைப் பார்த்தோமே, அது என்ன படம், அடடா மறந்துவிட்டதே என குழம்ப வேண்டிய நிலை இனி இருக்காது என்கிறது இந்தப் புதிய இணையதளம்.

இணையதள முகவரி: http://www.screenah.com/

தொடர் கனமழை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை

சென்னை பெரம்பூரில் பெய்த கனமழை | படம்: எல்.சீனிவாசன்

தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று (வியாழக்கிழமை) சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

Updated: November 12, 2015 08:22 IST கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்க கூடுதலாக 2 ஆயிரம் ஊழியர்கள்: மின் வாரியம் நடவடிக்கை



கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று கடந்த 9-ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் அதிகளவில் பாதிக்கப்பட் டது. சூறைக்காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், கடலூர் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மின் வாரியம் போர்க்கால அடிப்படையில் இதர பகுதிகளில் இருந்து மின் பணியா ளர்களை கடலூருக்கு அனுப்பி, நிவார ணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்ட செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூரில் 2 ஆயிரம் மின் கம்பங்கள், 64 மின் மாற்றிகள், 226 கி.மீ. தொலை வுக்கு மின் வட கம்பிகள் சேதமடைந்துள் ளன. மின் விநியோகத்தை சீரமைக்க கரூர், திருச்சி, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, கோவை, தருமபுரி ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் 2,039 மின் பணியாளர்கள் மற்றும் 3 மேற்பார்வை பொறியாளர்கள் கடலூருக்கு சிறப்புப் பணிக்காக நியமிக் கப்பட்டுள்ளனர்.

தற்போது 5 நகராட்சிகள், 15 பேரூராட்சி கள், 700 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 275 கிராமங் களில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 143 கிராமங்களில் மழை நீர் வடிந்ததும் மின்சாரம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மு.சாய்குமார், பகிர்மானப் பிரிவு இயக்குநர் மு.பாண்டி ஆகியோர் கடலூரில் முகாமிட்டு மின் விநியோகத்தை சீரமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Updated: November 13, 2015 09:01 IST வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் கனமழை நீடிப்பு; அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை



அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மீண்டும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மழை அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி அருகே கடந்த 9-ம் தேதி இரவு கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்றைய நிலவரப்படி சராசரியாக 31 செ.மீ. மழை கிடைத்துள்ளது.

புதிய காற்றழுத்தம்

இந்நிலையில், லட்சத்தீவுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு, அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனுடன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் பாதிப்பால், தென்கிழக்கு வங்கக்கடலில் 14-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இதனால், நாளை முதல் வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட் டங்கள், புதுச்சேரியில் நாளை கனமழையும், நாளை மறுதினம் முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச மழை

வியாழக்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம்,  பெரும்புதூர் மற்றும் செய்யூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அரக்கோணம்-9, மதுராந்தகம்-8, சென்னை விமான நிலையம், திண்டுக்கல்-7, தாம்பரம், நுங்கம் பாக்கம்-6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Wednesday, November 11, 2015

வேலையை சுலபமாக்கும் கூகுள்

Return to frontpage

நிறுவனங்கள் கணிணி மயமாக்கப்பட்ட பிறகு அனைத்து பரிவர்த்தனைகளும் மெயிலிலே நடக்கின்றன. தகவலை தெளிவாக சொல்வது, எப்போது யாருக்கு அனுப்பினோம் என்பதை தெரிந்து கொள்ள முடிவது, ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்ப முடியும் என்பது உள்ள பல சாதகங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் வேலை செய் வதை விட மெயில்களுக்கு பதில் சொல்வதையே பல நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கு வேலையாக இருக் கிறது.

சமயங்களில் ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு வந்தால் அத்தனை மெயில்களையும் பார்த்து படித்து பதில் அனுப்புவதற்குள் விடிந்துவிடும். அவர்களை போன்றவர்களுக்காக கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை என்னும் செயலியை உருவாக்கி இருக்கிறது.

இரண்டே கிளிக்குகளில் பதில் அனுப்ப வேண்டும் என்பதுதான் கூகுளின் திட்டம். இந்த செயலி, உங்களுக்கு வரும் இமெயில்களை படித்து அதற்கு ஏற்ப, மூன்று விதமான பதில்களை உங்களுக்கு கொடுக்கும். அதில் எந்த பதிலை அனுப்ப நினைக்கிறீர்களோ அதை அனுப்பலாம். அல்லது அந்த வாய்ப்பில் சில திருத்தங்கள் செய்வதாக இருந்தால் அதை செய்து அனுப்பலாம்.

சிறிய பதில் அனுப்ப இந்த செயலியை பயன் படுத்திக் கொள்ள முடியும். மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸை பயன்படுத்தி வரும் மெயில் படிக்கப்படும். பொதுவாக அனுப் பப்படும் 20,000 பதில்களை ஆராய்ந்து மூன்று வாய்ப்புகளை ஸ்மார்ட் ரிப்ளை உங்களுக்கு கொடுக்கும்.

உதாரணத்துக்கு உங்கள் மேலதிகாரி உங்களிடம் ஒரு தகவல் கேட்கிறார் என்று வைத்துக்கொண்டால் இது போன்ற மூன்று விதமான பதில்கள் உங்களுக்கு வரும்.

1. அந்த தகவல் என்னிடம் இல்லை.

2.அதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

3. உடனடியாக அனுப்புகிறேன்.

மேலே உள்ள மூன்று பதில்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நேரடியாக அனுப்பலாம். அல்லது தேர்வு செய்த பதிலில் உங்களுக்கு ஏற்றவாறு திருத்தி அனுப்பலாம். இதன் மூலம் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு நேரம் மீதமாகும் என்று கூகுள் தெரி வித்திருக்கிறது.

ஒரு வருடத்துக்கு முன்பு இன்பாக்ஸ் (ஜிமெயிலின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இன்பாக்ஸ்) என்னும் செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியது. அந்த செயலியை பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட்கள் இந்த ஸ்மார்ட் ரிப்ளை செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் பிரிவில் கூகுள், ஆப்பிள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன.

இந்த செயலி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் இந்த செயலியை கூகுள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த செயலிக்கான ஐடியா மென்பொருள் வல்லுநரான பிலின்ட் மிகில்ஸ் உடையது.

வாட் நெக்ஸ்ட் கூகுள்?

முதல் பார்வை: தூங்காவனம் - துடிப்புக்குப் பின் சோர்வு! ...பாரஸ்ட்கம்பன்

Return to frontpage




பிற மொழிகளின் நல்ல இலக்கியப் படைப்புகளைத் தமிழில் தருவதற்கு இணையானது, பிற மொழி திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் தனித்துவ அனுபவத்தை நம் ரசிகர்களுக்குக் கடத்துவதும். அந்தப் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். மலையாளத்தின் 'த்ரிஷ்யம்' படத்தைத் தொடர்ந்து, பிரெஞ்சு படைப்பான 'ஸ்லீப்லெஸ் நைட்'-ஐ அதிகாரபூர்வமாகத் தழுவி 'தூங்காவனம்' தந்திருக்கிறது கமல் அண்ட் கோ.

கமல்ஹாசன் திரைக்கதையையும், சுகா வசனத்தையும் கவனிக்க, ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள 'தூங்காவனம்', போதைப்பொருள் கடத்தல் பின்னணியுடன் ஒரே கதைக்களத்தில் ஓர் இரவில் நிகழும் 'த்ரில்லர்' வகை சினிமா.

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் பல கோடி மதிப்புள்ள சரக்குகளை சட்டத்துக்குப் புறம்பாக அபகரிக்கிறார், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரியாக வரும் கமல்ஹாசன். சில சொதப்பல்கள், மகன் கடத்தல், மீட்கும் முயற்சியில் தடைகள் என அடுத்தடுத்து சிக்கல்கள். போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சக அதிகாரிகள், முன்பின் தெரியாதவர்கள் என பல தரப்பினர் தரும் பிரச்சினைகளைத் தாண்டி, எல்லாவற்றையும் எப்படி எதிர்கொண்டு 'முடிக்கிறார்' என்பதே எல்லாம்.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் படம் தொடங்கும்போதும் சரி, எந்த அலப்பறையும் இல்லாமல் கமல் அறிமுகமாகும் காட்சியிலும் சரி, 'இது வேற லெவல்' படம் என்பது ரசிகர்களுக்குப் புரிந்துவிடுகிறது. அடுத்தடுத்த விறுவிறு காட்சிகளும், தமிழ் சினிமா பில்டப் கொள்கைப்படி 'ட்விஸ்ட்'களை மதிக்காமல் அலட்சியமாக அரங்கேற்றுவதும் அபாரம்.

ஹாலிவுட் படங்களை இங்கு பார்க்கும்போது, கட்டாயத்தின் பேரில் ரசிகர்களை வெளியேற்றுவது போல் இடைவேளை இட்ட விதமும் ரசிகர்களுக்கு புத்தம் புதுசு.

ஆனால், ஒரே களத்தில் ஆடு புலி ஆட்டமாக இடைவேளை வரை பரபரவென நகரும் திரைக்கதை, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு அசதியை உண்டாக்குகிறது. அதை, உறுதுணைக் கதாபாத்திரங்கள், நகைச்சுவைத் திணிப்புகள் மூலம் நிரப்பும் யுக்தி ஓரளவு மட்டுமே கைகொடுக்கிறது.

கமல்ஹாசன்... மேக்கப்புக்கு மெனக்கெடாமல், கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி அப்படியே வந்திருப்பது சிறப்பு. எனினும், நடிப்பாற்றல் - உடல்மொழிகள் மூலம் தன்னை வழக்கம்போலவே தனித்துவமாக பதிவு செய்யவும் தவறவில்லை. தமிழ் சினிமாவின் மூத்த நடிகை த்ரிஷாவுக்கு ஆற்றலை வெளிப்படுத்த கிடைத்துள்ள மிகச் சில வாய்ப்புகளில் தூங்காவனமும் ஒன்று. ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னியெடுத்து, அண்டர்ப்ளே சீன்களிலும் முத்திரைப் பதிக்கிறார். கமல்ஹாசனுடன் மோதும் காட்சிகளில் தியேட்டரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விசில் பறந்ததும் கவனிக்கத்தக்கது.

பிரகாஷ் ராஜும், கிஷோரும் தங்கள் அதகளமான பங்களிப்பை தரும் அதேவேளையில், 'ஆரண்ய காண்டம்' ஷூட்டிங் இடைவெளியில் வந்துபோனது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார் சம்பத். யூகி சேது, ஆஷா சரத், மதுஷாலினி, சோமசுந்தரம், ஜெகன், சாம்ஸ், உமா ரியாஸ், சந்தான பாரதி... உறுதுணை நடிகர்களின் அணிவகுப்பு, ஒற்றைக் களத்தில் ரசிகர்களுக்கு அசதி ஏற்படாமல் இருக்க வகை செய்கிறது. ஆனால், கமல், த்ரிஷாவுக்குப் பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது என்னவோ, கமலின் மகனாக வரும் அந்த டீன் ஏஜுக்கு நுழைந்த குட்டிப் பையன் அமன் அப்துல்லாதான். தற்போதைய டிஜிட்டல் - வாட்ஸ்ஆப் காலத்துடன் தொடர்பில் இருக்கும் சிறார் உலகின் பிரதிநிதியாகவே அசத்துகிறான்.

ஒரு ஹைடெக் 'பப்'பும் பப் சார்ந்த இடங்களையும் கச்சிதமாக வடிவமைத்துள்ள கலை அமைப்பு கச்சிதம்.

ஒரு பப்-புக்குள் சுழன்று கொண்டிருந்தாலும், உறுத்தல் இல்லாமல், க்ளோசப் ஷாட்களுக்கு தேவையான அளவு முக்கியத்துவம் தந்து பதிவு செய்துள்ள சானு வர்கீஸின் ஒளிப்பதிவும் சிறப்பு.

திரைக்கதையாளர், இயக்குநரின் பங்களிப்புடன், பிற்பகுதிகளில் கச்சிதமாக சில டெலிட்டிங் ஒர்க் செய்திருந்தால், ஷான் முகமதின் எடிட்டிங் இன்னும் எடுபட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஓர் இறைச்சல் மிகுந்த பப் சூழலில் நிகழும் கதைக்கு, நெருடலை ஏற்படுத்ததாக பின்னணி இசையைத் தந்து, படத்துக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். கதை - கதைக்களத்தில் இருந்து இயல்பான பேச்சுகளின் வழியாக, குட்டி குட்டி சிரிப்பு வெடிகளைத் தெளிக்க முயற்சி செய்திருக்கிறது சுகாவின் வசனம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு அந்நியமான கதைக்களத்தை, கதையையும், கதாபாத்திரங்களையும், அந்த அந்நியத்தன்மையை உடைத்திடும் வகையில், ஒரு க்ரைம் த்ரில்லரை காட்சிப்படுத்திய விதத்தில், இயக்குநர் ராஜேஷ் எம். செல்வாவிடம் இருந்து அடுத்த படைப்பில் நிறைய எதிர்பார்க்கலாம் என்பது உறுதியாகிறது.

அதிரடி - த்ரில்லிங் சதுரங்க ஆட்டத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பதை ஆரம்பத்திலேயே ரசிகர்கள் யூகித்தாலும்கூட, அது எப்படி சாத்தியமாகிறது என்பதற்கு துணைபுரியும் திருப்பங்கள்தான் படத்துக்கு பலம் சேர்ப்பவை. ஒரு வழியாக எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்ட பிறகும் 'போராட்டம்' நீடிப்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் போராட்டமாகிவிடுகிறது.

போகிற போக்கில் தன்னைக் கடந்து செல்பவரிடம் எல்லாம் பட்ட இடத்திலேயே அடிவாங்கி ஹீரோயிசம் என்பதை தகர்த்தெறியப்பட்டு விட்டதே என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கமல் உரிய பதிலடிகள் மூலம் ஹீரோயிசத்தைத் தக்கவைத்தது இதுவும் அதே லெவல் படம்தான் போல என்பதை உணரவைத்தது.

ஒரு கட்டத்தில் படம் முடிந்த நிறைவில் இருக்கும்போது, கமல் - த்ரிஷாவின் அந்த பில்டப் காட்சிகள் மூலம் வழக்கமான பொழுதுபோக்கு தமிழ் சினிமாவைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தும் தேவையற்ற முயற்சியாகவே ரசிகர்கள் பலரும் பார்த்திருக்கக் கூடும். அதுவும், கடைசியில் டைட்டில் கார்டு போடும்போது ஒலிக்கும் பாடலுக்கும் ஒட்டுமொத்த கதாபாத்திரங்களும் டான்ஸ் ஆடுவது, இதுவரை பார்த்த ஒரு வகை த்ரில் அனுபவத்தைக் கரைக்கும்படியாகவே இருந்திருக்கும்.

இதுபோன்ற சில அம்சங்கள்தான், தூங்காவனத்தின் ஒரிஜினல் படத்தைப் பார்த்த மிகச் சிலருக்காக புகுத்தப்பட்ட பிரத்யேக காட்சிகளாக இருந்திருக்கக் கூடும்... 'ஸ்லீப்லெஸ் நைட்' படத்தின் பிரெஞ்ச் தலைப்பான Nuit Blanche-ஐ ஓபனிங் டைட்டில் கார்டில் 0.5 நொடியில் காட்டி கிரெடிட் கொடுத்தற்கான அர்த்தமும் புரிந்திருக்கும்!

வேதாளம் - படம் எப்படி?

cinema.vikatan.com
தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணன் இல்லை, "தங்கைக்காக எவனையும் செய்யும் அண்ணன்" தான் வேதாளம்.
லட்சுமி மேனனின் படிப்பிற்காக கொல்கத்தாவிற்கு தங்கையோடு வருகிறார் அஜித். லட்சுமி மேனனுக்கு ஓவியக் கல்லூரியில் சீட் கிடைக்க, அஜித்திற்கு டாக்ஸி ஓட்டுநராக வேலை கிடைக்கிறது. சாதாரண குடும்பமாக வாழ்ந்துவரும் அண்ணன் தங்கை வாழ்வில் புயல் வீச ஆரம்பிக்கிறது. 

டாக்ஸி டிரைவர்கள் அனைவரிடமும் போலீஸ் துறை ஒரு சட்டவிரோதக் கும்பலைப் பிடிக்க உதவுமாறும், நீங்கள் இந்தக் குற்றவாளிகளைக் கண்டால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள் எனவும் கூற, அஜித்தும் ஆர்வத்தால் ஒரு பெரிய போதை மருந்து கும்பல் பற்றியான தகவலை போலீஸிடன் கொடுத்துவிடுகிறார்.
போலீஸ் கூண்டோடு போதைக் கும்பலைப் பிடிக்க, வில்லன்கள் டார்கெட் நினைத்தது போல் அஜித் மேல் விழுகிறது. ஆட்டம் ஆரம்பம்.  அஜித்தை வில்லன்கள் தேடி பிடித்து தூக்கிக்கொண்டு போக,
“நீ என்னத் தூக்கிட்டு வந்தியா,  நான் தாண்டா உன்னைத் தேடி வந்துருக்கேன்” 
என அஜித்தின் இன்னொரு ஆக்‌ஷன் அவதாரம் அரங்கேறுகிறது.
அஜித் ஏன் அப்பாவியாகவும்,ஆக்ரோஷமாகவும் இருவாழ்க்கை வாழ்கிறார் என்பதற்கு மாஸ் ஃப்ளாஷ்பேக்காகவும், க்ளைமாக்ஸாகவும் விரிகிறது மீதிக் கதை..

படத்தின் இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களான அஜித், லட்சுமி மேனன். இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள்.
வெறித்தனமாக அடித்துக் கொண்டிருக்கையில் தங்கையை பார்த்த அடுத்த கணம் கீழே விழுந்து அடிவாங்குவது அடடே தருணம். எப்படி ஒரு முன்னணி நடிகை தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்றால் உண்மையில் படமே லட்சுமி மேனன் தான் என்பது படம் பார்த்தப் பிறகு தான் புலப்படுகிறது.
மருமகனாக சூரி, மாமியாராக கோவை சரளா இருந்துமே காமெடி காட்சிகள் எடுபடவில்லை என்றே சொல்லலாம்.
நாயகியான ஸ்ருதி ஹாசனுக்கு படத்தில் சொச்ச காட்சிகளே.  ஒரு நாயகியாக எத்தனையோ மொழிகளைக் கடந்து நடித்துவரும் நிலையில் தனக்கான ஸ்கோப்பை கேட்காமல் எப்படி ஸ்ருதி நடிக்க ஒப்புக்கொண்டார்.  இதில் பெரிய தவறாக படத்தின் இடைவேளைக்குப் பிறகு ஸ்ருதிக்கு வேறு யாரோ குரல் கொடுத்துள்ளனர். 

தம்பி ராமையா, ரத்னா காட்சிகள் சென்டிமெண்ட் மக்களுக்கு பந்தியில் வைக்கப்பட்ட இனிப்பு. எனினும் கொஞ்சம் நீளமான காட்சிகள். அதை சரி செய்திருக்கலாம்.
“போகட்டும் பொண்ணுங்க ஸ்கூலுக்கு, கலேஜூக்கு
அவங்கள நிம்மதியா போக விடுங்க”  என அஜித் பேசும் இடம் சமூக அக்கறை. 

“உன் வாழ்க்கையில மறக்க முடியாத ரெண்டு விஷயம்
ஒண்ணு உன்ன பெத்தவங்க  இன்னொன்னு நான்”
“அவங்க உனக்கு பிறப்பக் குடுத்தாங்க,
நான் உனக்கு இறப்பக் குடுக்கபோறவன்டா” 
“பணத்துக்காகவே பண்ணும் போது பாசத்துக்காகப் பண்ணமாட்டேனாடா என் வென்று”  இப்படி படம் முழுவதும் கைத்தட்டலுக்காகவே படபட பன்ச்கள் பறக்கின்றன.
ஆலுமா டோலுமா அஜித் ஸ்பெஷல், உயிர் நதி கலக்குதே எமோஷனல் ஸ்பெஷல் எனினும் பாடல்களில் கொஞ்சம் சறுக்கலே. ஆனால் பின்னணியில் தெறிக்கவிட்டிருக்கார் அனிருத். 

ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள், எல்லாவற்றிற்கும் மேல் இடைவேளை யாரும் எதிர்பாரா தருணமாக அஜித் மழையில் வெறியுடன் கத்துவது,  சிவாவின் டச்.

சண்டைக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வெற்றியின் ஒளிப்பதிவு கண்கட்டி வித்தை. எல்லாம் சரி தான் பாஸ் அந்த நீளம் சத்தியமா பொருத்துக்க முடியலை. முன் பாதி அப்படியே தொங்கி நிற்கிறது. அதைக் கொஞ்சம் செதுக்கினால் இன்னும் நன்று.
அதென்ன கும்பல் கும்பலாக பெண்களைத் தூக்கி வெளிநாட்டில் விற்பது. வேலாயுதம் முதல் வேதாளம் வரை தொடரும் அதே போரடிக்கும் வில்லன் காட்சி. ப்ளீஸ் மாத்துங்க. 
மியூசிக்கை போட்டுவிட்டு வெறித்தனமாக நடனம் ஆடி சண்டைப்போடுவதெல்லாம் அஜித் ரசிகர்களுக்கு அசத்தல் ட்ரீட். மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என கொஞ்சம் தனியாக பார்த்தவர்கள் தங்கள் குடும்பத்தோடு பார்க்க தேர்ந்தெடுக்க வேண்டிய சென்டிமெண்ட் படம் தான் வேதாளம்.

NEWS TODAY 20.09.2024