Monday, October 10, 2016

பயணம் இனிதாகவும், பதற்றமில்லாமலும் அமைந்திட வாழ்த்துகள் !

தீபாவளி விடுமுறைக்கு ஊருக்குச் செல்பவர்களின் கவனத்துக்கு...
பண்டிகைக் காலம் வந்து விட்டாலே கொண்டாட்டம் என்பதோடு, அதற்கான பயணம் குறித்த பதற்றம் நம்மிடம் தொற்றிக் கொள்வது இயல்புதான்.

முன்பெல்லாம் ஒற்றை மாட்டு வண்டியும், இரட்டை மாட்டு வண்டியும், சாரட்களும்தான் பயணத்தில் துணைக்கு வந்தது. பின்னர், பயணம் 'ட்ராம்' பெட்டிகளாய் மாறியது. இப்போதோ, 'முன்பதிவு, நெரிசல், தட்கல், ரயில் ஆம்னி, பேருந்து' என்று பல "ஹாஸ்-டாக்குகள்" கண்முன் தெரிகிறது.


போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப் படுவது, தீபாவளி. அதற்கான (தீபாவளி-2016-) நெரிசலைத் தவிர்க்க 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அக்டோபர் 26,27,28- ஆகிய தேதிகளில், சென்னையில் பேருந்துகள் நிறுத்துமிடத்தை மாற்றம் செய்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.



இணைப்புப் பேருந்துகள் இயக்கப் படுகிறது

இந்த தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


பேருந்து நிறுத்துமிடங்களில் மாற்றம்

ஆந்திரா மார்க்க பயணத்துக்கு : சென்னை அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையம்.

புதுச்சேரி,கடலூர் மார்க்க பயணத்துக்கு : சென்னை கோயம்பேடு (மாநில தேர்தல் ஆணையம்) பேருந்து நிலையம்.

தஞ்சை, கும்பகோணம் மார்க்க பயணத்துக்கு : தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்.

வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கு பூவிருந்தவல்லி(பூந்தமல்லி) பேருந்து நிலையம்.

கோயம்பேட்டிலிருந்து எப்போதும் செல்லும் இந்தப் பட்டியலில் இடம் பெறாத இதர பேருந்துகள் வழக்கம் போல கோயம்பேட்டில் இருந்தே புறப்படும்.


750 சிறப்புப் பேருந்துகள்

தொடர்விடுமுறையை மனதில் கொண்டும், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்கு செல்வதாலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


கூடுதல் கட்டணம் வசூலித்தால்?

சிறப்பு பேருந்து சேவையை நேரில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத்துறை மந்திரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஏற்பாடுகள் குறித்து பயணிகளின் கருத்துகளைக் கேட்டார்.
ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகளில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், "அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.


ரயில்வேயிலும் ஏற்பாடுகள்

தீபாவளி பண்டிகைக்காக, கயா, வாரணாசி, அலகாபாத், டில்லி மற்றும் ஆக்ரா ஆகிய இடங்களுக்கு சென்று வரும் வகையில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில், பாரத தர்ஷன் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து வரும், 25ம் தேதி இந்த ரயில், புறப்படுகிறது. திண்டுக்கல், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படுகிறது.

கட்டணம் எவ்வளவு ?

மூன்றடுக்கு 'ஏசி' வகுப்புப் பயணத்துக்கு 13- ஆயிரத்து, 940 ரூபாய், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கு, 10 ஆயிரத்து, 35 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. தென்னிந்திய சைவ உணவு வசதியும், செய்யப் பட்டுள்ளது.


சாலை வழியாக சுற்றிப் பார்க்க, வாகன வசதியும் கூடுதலாக செய்யப் பட்டுள்ளது. 12 நாட்கள் பயணச் சுற்றுலாவான இதற்கு தென்னக ரயில்வே உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல், ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகத்தை, 044 - 6459 4959 தொலைபேசி எண்ணிலும், 90031 40681 என்ற அலைபேசி (செல்போன்) வழியிலும் தொடர்பு கொள்ளலாம்.

வேகம் அதிகரிக்கப் பட்ட ரயில்களின் விபரம்:

42 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் இதில் அதிகரிக்கப் பட்டுள்ளது. 20 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேகம் அதிகரிப்பு(1)
ரெயில் எண் (16181) எழும்பூர்-மன்னார்குடி, சிலம்பு எக்ஸ்பிரஸ், (16714) ராமேஸ்வரம்-எழும்பூர் எக்பிஸ்பிரஸ், 22614 ஹால்டியா-சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 12665 ஹவுரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 16128 குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிப்பு.
வேகம் அதிகரிப்பு(2)
16130 தூத்துக்குடி- எழும்பூர், 16184 தஞ்சாவூர்- எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், 16713 எழும்பூர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் , 16125 எழும்பூர்- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், 12693 எழும்பூர்- தூத்துக்குடி முத்துநகர்.
வேகம் அதிகரிப்பு (3)
22605 புருலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ், 16126 ஜோத்பூர்- எழும்பூர், 12663 ஹ‌வுரா- திருச்சி எக்ஸ்பிரஸ், 22603 கராக்பூர்-விழுப்புரம் எக்ஸ்பிரஸ், 12631 எழும்பூர்- நெல்லை எக்ஸ்பிரஸ்.
16127 எழும்பூர்-குருவாயூர், 16863- பகாத்-கி- கோதி- மன்னார் குடி எக்ஸ்பிரஸ், 16864 மன்னார்குடி-பகாத்- கி-கோதி எக்ஸ்பிரஸ், 12632 திருநெல்வேலி-எழும்பூர்- நெல்லை.
வேகம் அதிகரிப்பு (4)
16101 எழும்பூர்- ராமேஸ்வரம், 16177 எழும்பூர்- திருச்சி மலைக் கோட்டை, 16178 திருச்சி-எழும்பூர் மலைக் கோட்டை, 16183 எழும்பூர்-தஞ்சாவூர் உழவன், 16723 எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
வேகம் அதிகரிப்பு (5)
16616 கோவை-மன்னார்குடி, 12605 எழும்பூர்-கானக்குடி பல்லவன், 12635 எழும்பூர்- மதுரை வைகை, 16176 காரைக்கால்-எழும்பூர், 16186 வேளாங்கன்னி- எழும்பூர், 16307 ஆழப்புழா- கண்ணூர், 16313 எர்ணா குளம்-கண்ணூர், 12606 காரைக்குடி-எழும்பூர் பல்லவன்.
12633 எழும்பூர்- கன்னியாகுமரி, 12668- நாகர்கோவில்-எழும்பூர், 16182 மன்னார்குடி- எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ், 12662 செங்கோட்டை- எழும்பூர் பொதிகை.
வேகம் அதிகரிப்பு (6)
16724 திருவனந்தபுரம்-எழும்பூர் அனந்தபுரி, 16860 மங்களூர்- எழும்பூர், 16333 வெரவால்- திருவனந்தபுரம், 16337 ஒகா-எர்ணாகுளம், 16338 எர்ணாகுளம்-ஒகா எக்ஸ்பிரஸ்.
சூப்பர் பாஸ்ட் ரயில்கள்
மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சூப்பர் பாஸ்ட் ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
எழும்பூர்-ராமேஸ்வரம் (22661), ராமேஸ்வரன்- எழும்பூர், எழும்பூர்- ஜோத்பூர், ஜோத்பூர்-எழும்பூர்- சென்ட்ரல்-ஹபி, : ஹபி- சென்ட்ரல் உள்ளிட்ட 8 ரெயில் சூப்பர் பாஸ்ட் ஆக மாற்றம்.


பயணம் இனிதாகவும், பதற்றமில்லாமலும் அமைந்திட வாழ்த்துகள் !


ந.பா.சேதுராமன்
When will Rs 15 Lakh be deposited in every Indian’s account, PMO told to respond 
The Central Information Commission (CIC) has directed the Prime Minister’s Office to respond to queries made by a common man regarding the election promise of bringing back black money and depositing Rs 15 lakh in every Indian’s account, among other issues, within 15 days.

At the time of election, it was announced that black money will be brought back to India and Rs. 15 lakhs will be deposited in the account of each poor, what happened to that?

This was a query under the Right to Information Act made by Kanhaiya Lal from Rajasthan to the Prime Minister’s Office, to which the office did not respond. Disposing of his appeal, the CIC has now directed the PMO to respond to Kanhaiya, who has posed some other queries also. Those are: Whether 40% concession given by the UPA Government to senior citizens for rail travel will be withdrawn by the present government? It was announced during the election that corruption will be removed from the country, but it has increased to 90%. When will a new law be made to curb corruption?

The government is developing smart cities but there is no development in the villages of Rajasthan. When will proper roads be laid in villages, where conditions have gone from bad to worse?

Apart, from these queries, he also raised the issue of exploitation of the poor in Jhalawar (Rajasthan) by government officials. He said that the benefits of schemes announced by the government are only limited to the rich and capitalists and not for poor people.

Read more at: http://www.livelaw.in/will-rs-15-lakh-deposited-every-indians-account-pmo-told-respond/
DU Not At Fault For Denying Admission To Student Not Carrying Required Documents: Delhi HC
The Delhi High Court in Bhim Shankar Thakur vs Delhi University & Anr., rejected the writ petition wherein Bhim Shankar prayed that Delhi University (DU) should take on record his degree certificate and grant him admission to LLB course for academic session 2016-2017.

 The court, through Justice Sanjeev Sachdeva, heard the petitioner but decided against directing the writ of mandamus as prayed. Bhim Shanka appeared for the DU LLB entrance examination and secured rank 767 in the OBC category. As per his rank, he was called for counselling on 22.08.2016, but he could not submit the original degree of his qualifying examination as was required by the university. Bhim Shankar had passed the qualifying examination in 2012, but had not collected the degree from the university.

 After the DU administration refused him admission due to failure to submit the required original documents, Bhim Shankar collected the degree from the university concerned – Chaudhary Charan Singh University, Meerut, on 08.09.2016, and approached Delhi University to submit the same. But, DU did not accept the said degree. Bhim Shankar’s counsel contended that he was not in a position to produce any proof that the degree had not been issued by the university till the date of counselling.

 But he prayed that he should be granted admission according to his rank. The court relied on the judgment in a previous case of Delhi High Court in Rahul Kumar Singh versus University of Delhi & Ors, with identical circumstances wherein it was held that “Degree not collected cannot be equated with Degree not issued.” 

It was also held that it was mandatory for the candidates to report with the documents in original at the specified date and time for counseling, failing which they will forfeit their claim for admission.

 Agreeing that the decision of the judgment in the above mentioned case was applicable in the case concerned as well, the court said: “Since the petitioner failed to appear for counselling in terms of the notification with the original documents, the action of the respondent – university in denying admission to the petitioner and not entertaining the Degree produced at a subsequent date cannot be faulted.”

Read more at: http://www.livelaw.in/du-not-fault-denying-admission-student-not-carrying-required-documents-delhi-hc/
Court Stenographer’s Shorthand Note Book Not Public Record Under RTI: Delhi HC 

The High Court of Delhi on Friday held that the Court stenographer’s Shorthand note book is not a “record” held by a public authority and therefore cannot be sought under the Right to Information Act. 

The Court noted that neither are shorthand books retained, nor can they be equated with a judgment or an order. Justice Sanjeev Sachdeva hence observed, “Shorthand notebook can at best be treated as a memo of what is dictated to a steno to be later transcribed into a draft judgment or an order. When draft judgments and order do not form part of a ‘record’ held by a public authority, a shorthand note book which is memo of what is dictated and which would later be typed to become a draft judgment or an order can certainly not be held to be ‘record’ held by a public authority.”

The Petitioner, Mr. Tapan Choudhury had challenged an order passed by the Central Information Commission in March this year, refusing to provide him copies of the shorthand note book in which the Stenographer takes dictation of the Court. Mr. Choudhary had reportedly sought shorthand notes of the stenographer taken on May 27, 2013, claiming that the Court had passed an order of ex-parte injunction in a suit initiated by a American multinational technology company on the said date, without any party appearing before it. Deciding against the applicant, the Court relied on the decision in the case of Secretary General, Supreme Court of India v. Subhash Chandra Agarwal, AIR 2010 Delhi 159, wherein the Full Bench of the High Court had held that even notes taken by Judges while hearing a case cannot be treated as final views expressed by them on the case, and cannot be held to be a part of a record ‘held’ by the public authority.

Read more at: http://www.livelaw.in/court-stenographers-shorthand-note-book-not-public-record-rti-delhi-hc/

Fate of several foreign students in medical colleges uncertain after SC's ruling on NEET

NEW DELHI: Hundreds of foreign students who had enrolled this year for undergraduate programmes in private medical colleges in India now face an uncertain future due to a "tricky" domestic legislation regarding entrance examination for them.

Foreign students in India come to pursue MBBS or BDS courses either through an institutional quota system, like in government colleges, or by directly applying to private colleges.

But, due to the recent ruling of the Supreme Court on making the National Eligibility-cum-Entrance Test (NEET) mandatory for admission to private and deemed institutes, they are now facing uncertainty as they do not fall under the NEET criteria.

The NEET eligibility criteria says only Indian nationals or Overseas Citizens of India can take the exam. It does not have any mention of foreign nationals.

The colleges have allegedly asked foreign students to leave the campuses by "next week".

Tilak Silva, father of Shenali, who came from Colombo to pursue BDS at Manipal University, said, "My daughter and other foreign students are suffering now only because there is this tricky NEET procedure.

"First foreigners cannot write NEET exam and now these students are being compared with domestic ones. Where should we go now as we have been asked to leave the campus by October 14. The career of our children has been jeopardised."

Silva also alleged that after the apex court's ruling, the Medical Council of India (MCI) and Dental Council of India (DCI) have been "pressurising" colleges to "allow (admission to) only those students who have taken NEET".

"How can the decision be so blanket. I have already intimated the Sri Lankan High Commission in Delhi and the Foreign Office in Colombo about this situation. We also appeal to the authorities and the Indian Prime Minister to allow some stop-gap arrangements for this 2016-17 batch so that their year is not wasted," he said.

When contacted, DCI President Dr Dibyendu Mazumdar said, "It is the verdict of the Supreme Court, what can we do about it. Colleges have to abide by it."

The situation seems anomalous given India's international policy on education and government sources said that they are looking into the matter.

காதல் வழிச் சாலை 03: ‘நோ’ சொன்னால் ஏத்துக்கணும்!


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்பு குறித்து நான் எழுதியதைப் படித்த பலரும், “எல்லாமே ஈர்ப்பு என்றால் எது காதல்? ஈர்ப்பு காலப்போக்கில் காதலாக மாறாதா? ஈர்ப்பு வருவதே தவறா, நாங்கள் என்ன செய்வது?” என்று சரமாரியாகக் கேள்விக் கனைகளைத் தொடுத்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பதில்தான். ஈர்ப்பு என்பது ஒரு கட்டம்தான் என்பதை முதலில் உணர வேண்டும். காலப்போக்கில் அது காதலாக மாறலாம், மாறாமலும் போகலாம்.

அவசரக் காதல் வேண்டாமே

ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்த்ததும் காற்றில் மிதப்பதுபோல துள்ளலான உணர்வு தோன்றுவதற்குக் காரணம் மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்கள்தான். ‘டோப்பமைன்’ (Dopamine) என்ற ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்’ அவற்றில் முக்கியமானது. காதல் கெமிஸ்ட்ரியின் கேப்டன் இவர். இயல்பாக எழும் இந்த அழகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்த மெனக்கெட வேண்டாம். ஆரம்பகட்ட உணர்வுப் பிரவாகமான இந்த ஈர்ப்புதான் காதல் என்ற அவசர முடிவுக்கும் வர வேண்டாம்.

ஈர்ப்பின் மறுபக்கம்

அழகான ஈர்ப்பில் ஆபத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. எதிர் பாலினம் மீது ஏற்படும் முதல் கட்ட ஈர்ப்பு உணர்வை ‘க்ரஷ்’ (crush) என்றும் சொல்வார்கள். இந்த உணர்வின் ஆயுட்காலம் ஒன்றரை முதல் மூன்று ஆண்டுகள்வரைதான் என்கின்றன பல உளவியல் ஆய்வுகள். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உணர்வுகளின் வீச்சு குறையத் தொடங்கும். அதற்குப் பிறகு பார்ட்னரின் மறுபக்கம் தெரிய ஆரம்பிக்கும். பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கும்.

நம்மவரைப் பற்றிய எதிர்மறை விஷயங்களை ஈர்ப்பு கட்டத்தில் கவனித்திருக்க மாட்டோம். கவனிக்கவும் முடியாது. ஆனால் உணர்ச்சிகள் அடங்கும் நேரம் வந்தவுடன் உண்மைகள் மேலெழும்பத் தொடங்கும்.

இந்த ஈர்ப்பில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒருவர் மீது அதீத ஈர்ப்பில் இருக்கும்போது, அவரைத் தவிர இந்த உலகில் வேறெதுவுமே நம் கண்களுக்குத் தெரியாது. வீடு, நண்பர்கள், சமூகம் என்று எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்.

ஈர்ப்பில் விலகல் வந்துவிட்டால் உற்சாகம் வடிந்துபோகும். இந்த உலகமே நிறமிழந்துவிட்டதுபோலத் தோன்றும். யாரையும், எதையும் பிடிக்காது. ஓரளவு தெளிவுடன் இருந்தால் இவற்றையெல்லாம் கடந்து வந்துவிடலாம்.

மறுத்துவிட்டார் தோழி

பலர் தங்களுடைய மனக் குழப்பங்களை என்னிடம் மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒரு மின்னஞ்சலைப் படித்ததும் என்னால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதை உங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

“நான் பொறியியல் இறுதியாண்டு படிக்கிறேன். நெருங்கிப் பழகிய தோழி ஒருவரை மனதார நேசிக்கிறேன். சமீபத்தில் என் காதலைச் சொன்னேன். மறுத்துவிட்டார். நண்பன் என்ற எல்லைக்கு மேல் உன்னை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்கிறார். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. படிக்க முடியவில்லை. எதன் மீதும் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த மனச்சோர்விலிருந்து வெளியே வரவும் முடியவில்லை. எல்லோர்

மீதும் எரிந்து விழுகிறேன். சமயங்களில் உலகமே இருண்டு போனது போன்ற மன அழுத்தத்தை உணர்கிறேன். அவர் என் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு உதவுங்கள் ப்ளீஸ்….”

காதலுக்குத் தோல்வியில்லை

இந்த இளைஞர் மட்டுமல்ல, நம் சமூகத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சினை இது. நம்மில் பலருக்கும் நிராகரிப்புக்கும் தோல்விக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. காதலில் ஒருவரை ஒருவர் நிராகரிக்கலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது. காரணம் காதலுக்கு எப்போதும் தோல்வியில்லை.

சரி, இந்த இளைஞரின் விஷயத்துக்கு வருவோம். சகோதரா, ‘நான் உன் வாழ்க்கைத் துணை இல்லை’ என்று புரியவைத்ததற்காக உன் தோழிக்கு நன்றி சொல். காதல் என்பது இரு கை ஓசை. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது மட்டுமல்ல காதல். இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பதே காதல்.

உங்கள் மீது காதல் இல்லை என்று சொல்லும் பெண்ணின் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். கட்டாயப்படுத்தி மணம் புரிந்தாலும் அன்பு இல்லாமல் தொடங்கும் வாழ்க்கை நிச்சயம் இனிக்காது. ஒவ்வொரு தடங்கலுக்கு அப்பாலும் அதைவிட ஏதோவொன்று பெரிதாக, நல்லதாக நமக்காகக் காத்திருக்கிறது என்று நம்புங்கள்.

என் வலி எனக்குத்தான் புரியும் என்று நீங்கள் புலம்பலாம். மூளையில் நடக்கும் ரத்த ஓட்டம் போன்ற விஷயங்களைப் பதிவு செய்வதற்கு fMRI என்ற பரிசோதனை உதவுகிறது. உடல் வலியால் துடிப்பவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல் காதல் தோல்வியில் சிக்கி, நிராகரிப்பின் வலியில் இருப்பவர்களுக்கும் இதே சோதனை நடத்தப்பட்டது. முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. காரணம் உடல், மனம் இரண்டின் பாதிப்புக்கும் மூளை ஒரே விதமாகத்தான் செயல்பட்டிருக்கிறது. அதனால் மன வலி, உடல் வலியைவிட அதிகம் என்ற பிரமையை விட்டுவிடுங்கள்.

நதிபோல ஓடிக்கொண்டிரு

முதலில் கழிவிரக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள். அடுத்து என்ன, என்று நதிபோல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் திறமைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று உங்களைச் சுற்றி நல்ல விஷயங்கள் எத்தனையோ உண்டு. அதையெல்லாம் நினைத்து, நிராகரிப்பை மறந்துவிட்டு மனதை மடைமாற்றுங்கள்.

முடிந்தவரை உங்கள் தோழியைப் பார்ப்பதைத் தவிருங்கள். பார்க்க நேரிட்டாலும் கண்ணியமான இடைவெளியோடு பேசுங்கள். அவர் குறித்த நினைவுகளை உங்கள் மனதிலிருந்து நீக்க முற்படுங்கள். அனைத்துக்கும் மேலாக வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதை நோக்கிப் பயணப்படுங்கள். அந்தப் பாதையில் காதல் தானாகவே வந்து உங்கள் கைகளில் சேரும். வாழ்த்துகள்!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

உலக மனநல நாள் அக்டோபர் 10

# இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்.

# இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

# இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்துவருவது கவலையளிக்கிறது.

# பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர்.

# மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையைக் கொண்டிருக்கின் றனர். 17 சதவீதத்தினர் தற்கொலைக்கு முயற்சிக்கவும் செய்கிறார்கள்.

மன அழுத்தத்தால் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள்:



> பிரிட்டன் பெண் நாவலாசிரியை வர்ஜீனியா ஊல்ஃப்

> பாலிவுட் இயக்குநர் குரு தத்

> ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ்

> பாலிவுட் நடிகை ஜியா கான்

# இந்தியாவில் 2001-2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மன அழுத்தத்துக்கு எதிரான சிகிச்சை-மருந்து உள்ளிட்டவற்றின் சந்தை 528 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

# இந்தியாவில் இப்போது 3,500 உளவியல் நிபுணர்களே இருக்கிறார்கள். ஆனால், நம்முடைய மக்கள்தொகைக்கு 11,500 உளவியல் நிபுணர்கள் தேவை.

# இந்தியாவில் 2001-2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மன அழுத்தத்துக்கு எதிரான சிகிச்சை-மருந்து உள்ளிட்டவற்றின் சந்தை 528 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

# இந்தியாவில் இப்போது 3,500 உளவியல் நிபுணர்களே இருக்கிறார்கள். ஆனால், நம்முடைய மக்கள்தொகைக்கு 11,500 உளவியல் நிபுணர்கள் தேவை.



மன அழுத்தம் முக்கிய அறிகுறிகள்:

> எதைப் பார்த்தாலும் எதிர்மறை மனோபாவத்தை வெளிப்படுத்துவது

> சோக உணர்வில் மூழ்கிக் கிடப்பது

> எப்போதும் அதிக எரிச்சலுடன் இருப்பது

> எல்லாவற்றின் மீதும் திடீர் ஆர்வக் குறைவு

> மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடத்தை

> குழு, கூட்டமாக இருக்கும்போதும்கூடத் தனித்திருப்பதாக உணர்வது



மன அழுத்தம் – மூளைக்குள் என்ன நடக்கிறது?

மூளை பின்மேடு (Hippocampus)

மூளையின் இந்தப் பகுதிதான் உணர்ச்சிகள், மனநிலை, நினைவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த நோயாளிகளிடம் இந்தப் பகுதியின் அளவு சுருங்கியிருக்கிறது.



உச்சித்தலை (Parietal lobe)

உணர்வுகளையும் பார்வை தகவல்கள், மொழி, கணிதம் போன்றவற்றை இப்பகுதியே செயல்படுத்துகிறது. மன அழுத்தத்தால் வளர்சிதை மாற்றத்தின் அளவு குறைவதால், உணர்வுகளை உணர்ந்துகொள்ளும் திறன் பாதிக்கப்படும்.



நார்எபிநெப்ரின் (Norepinephrine)

இது ஒரு நரம்பு கடத்தி ஹார்மோன். இது அதிகமாக இருந்தால் சீஸோஃபிரெனியா (மனச்சிதைவு), குறைவாக இருந்தால் மன அழுத்தம் ஏற்படும்.



செரடோனின்

மன அழுத்தம் சம்பந்தப்பட்ட முக்கிய ஹார்மோன். இது மிகக் குறைவாக இருந்தால் – மன அழுத்தம், மனக்கலக்கக் கோளாறுகள் ஏற்படலாம்.



டோபமைன்

இதுவும் ஒரு நரம்பு கடத்தி (ஒரு நரம்பணுவில் இருந்து மற்றொரு நரம்பணுவுக்கு சமிக்ஞைகளைக் கடத்தும் வேதிப்பொருட்கள்). இது அதிகமானால் – மனச்சிதைவு. குறைந்தால் – மன அழுத்தம்.



முன்தலைப் பெருமூளை (Prefrontal cortex)

மூளையின் முன்பகுதியில் உள்ள இது கருத்து, திட்டமிடுதல், முடிவெடுத்தல் போன்றவற்றில் பங்களிக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது இயல்புக்கு மாறாக மிகவும் சோர்வடைந்துவிடுகிறது. முன்தலைப் பெருமூளையின் வலது பாதி, எதிர்மறை உணர்ச்சியை உருவாக்கக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்களிடம் இது மிகவும் பலவீனமாக இருக்கிறது.



அமிக்டாலா (Amygdala)

மூளையின் உணர்ச்சிக் கேந்திரமான இது, அளவுக்கு அதிகச் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.


பல்கலைகளுக்கு சர்வதேச அந்தஸ்து :அக்., 28க்குள் கருத்து தெரிவிக்கலாம்

அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு, சர்வதேச தர அந்தஸ்து வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரும், 28க்குள் கருத்துகளை அனுப்பலாம்.நாடு முழுவதும், 20 பல்கலைகளை முதலில் தேர்வு செய்து, அவற்றை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான செயல் வடிவ அறிக்கையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய, மாநில அரசுகளின் பல்கலைகள், ஐ.ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், 20 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அந்தஸ்து வழங்கப்படும் என்றும், அதற்காக, தனித்தனியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச அந்தஸ்து பெற கல்வி நிறுவனங்கள், சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், நுாலக வசதி கொண்டிருக்க வேண்டும். மேம்பட்ட உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி பிரிவுகள் இருக்க வேண்டும். உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி இதழ்களின் தொடர்பும், சர்வதேச அளவில் சிறந்த பேராசிரியர்களின் பயிற்சியும் இருக்க வேண்டும்.

செயல்வடிவ அறிக்கையில் உள்ள அம்சங்களை கல்வியாளர்கள், பொதுமக்கள், கல்வித்துறையினர் படித்து, wci-mhrd@oov.in என்ற இணையதள முகவரியில், வரும், 28க்குள் கருத்துகளை தெரிவிக்கலாம்.- நமது நிருபர் -
வயது, ஆண், பெண் பேதமின்றி குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்குபதிவு செய்யலாம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

புதுடெல்லி


வயது, ஆண், பெண் என்ற பேதங்கள் இன்றி, குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்கு பதிவு செய்வதற்கு ஏதுவாக சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

குடும்ப வன்முறை சட்டம்

பெண்களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் இருந்து 2 சிறுமிகள், ஒரு பெண், ஒரு சிறுவன் என 4 பேரை மும்பை ஐகோர்ட்டு விடுவித்து தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், அவர்கள் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் வருகிற ‘அடல்ட் மேல்’ (வயது வந்த ஆண்) என்ற வரையறைக்குள் வரவில்லை என்பதால் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட பெண், சுப்ரீம் கோர்ட்டில் மேல்–முறையீடு செய்தார். இந்த மேல்–முறையீட்டு வழக்கை நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.

2 வார்த்தைகள் நீக்கம்

விசாரணை முடிவில் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்கும் சட்டத்தின் பிரிவு 2 (கியூ)வில் இருந்து, ‘அடல்ட் மேல்’ (வயது வந்த ஆண்) என்ற வார்த்தைகளை நீக்கி உத்தரவிட்டனர்.

இதன் காரணமாக இனி ஆண், பெண் என்ற பாலின பேதங்களோ, வயது வந்தவர், வயதுக்கு வராதவர் என்ற வயது பேதங்களோ இன்றி யார் மீதும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வழி பிறந்துள்ளது.

தீர்ப்பின் சாராம்சம்

இது தொடர்பாக நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய சாராம்சம் வருமாறு:–

குறிப்பிட்ட சட்டப்பிரிவில் ‘அடல்ட் மேல் பெர்சன்’ (வயது வந்த ஆண்) என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பது, எந்த விதமான குடும்ப வன்முறையில் இருந்தும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துக்கு முரணாக அமைந்துள்ளது.

எனவே ‘அடல்ட் மேல் பெர்சன்’ என்றிருப்பதில் ‘அடல்ட் மேல்’ என்ற 2 வார்த்தைகளை நீக்குகிறோம். இந்த வார்த்தைகள் பாரபட்சம் காட்டுவதாக அமைந்துள்ளன. இதனால் எந்த நோக்கத்துக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதோ அதுவே பாதிப்புக்குள்ளாகிறது.

எனவே இந்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை ரத்து செய்கிறோம்.

‘அடல்ட் மேல்’ என்ற வார்த்தைகள் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14–உடன் ஒத்துப்போகவில்லை என்பதால் குடும்ப வன்முறை சட்டத்தின் பிரிவு 2 (கியூ)வில் இருந்து நீக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
தேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி


தேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் என டெல்லி ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தேனிலவு கசந்தால்?

திருமணமான எந்தவொரு தம்பதியருக்கும் தேனிலவு என்பது வாழ்வில் என்றைக்கும் நினைத்து நினைத்து, மனதில் இன்பம் அடைகிற சுகமான அனுபவமாக அமையும்.

ஆனால் அதுவே கசப்பான அனுபவமாக அமைந்தால்? அப்படித்தான் டெல்லியை சேர்ந்த அனுப் சர்மாவுக்கு (தம்பதியர் பெயர் மாற்றி தரப்பட்டுள்ளது.) மனைவி தீப்தியுடனான அனுபவம் அமைந்து விட்டது.

ஒத்துழைக்கவில்லை

இந்த தம்பதியருக்கு 2004–ம் ஆண்டு, ஜனவரி மாதம் திருமணமானது. திருமணமான மறுநாளே சிம்லாவுக்கு தேனிலவு சென்றார்கள். ஆனால் அந்த தேனிலவு அனுப் சர்மாவுக்கு இனிக்கவில்லை. காரணம், மனைவி அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவரை அவமதிக்கிற வகையில் மனைவி குற்றம் சாட்டி இருக்கிறார்.

தொடர்ந்து 3 மாத காலம் அவர்கள் இணைந்து வாழ்ந்தாலும்கூட, அது பிரச்சினைகளுடன்தான் நகர்ந்திருக்கிறது. 3 மாதங்கள் கழிந்த நிலையில், அந்த பெண், தனது கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து கணவர் மீதும், கணவர் குடும்பத்தினர் மீதும் போலீசில் புகார் செய்தார். ஆனால் கணவர், நல்லிணக்கம் ஏற்படுத்தி, மீண்டும் அவருடன் இணைந்து வாழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இப்படிப்பட்ட மனைவியோடு இனி வாழ்ந்து பயன் இல்லை என அவர் முடிவு செய்து, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் அந்த பெண் அதை எதிர்த்தார்.

விவாகரத்து

இறுதியில், அந்த பெண்ணிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதை எதிர்த்து அந்த பெண், டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பிரதீப் நந்திரஜாக், பிரதீபா ராணி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து, பாழான தேனிலவும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி மனதளவில் கொடுமை செய்துள்ளதும் அந்த பெண்ணிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் என்பதற்கு உகந்த காரணங்கள் ஆகி உள்ளன என தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பின் சாராம்சம்

அந்த தீர்ப்பின் சாராம்சம் வருமாறு:–

இந்த வழக்கு ஒரு விதிவிலக்கான வழக்கு.

30 வயது கடந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியரின் திருமண வாழ்க்கை, தொடங்கியதில் இருந்தே சரியாக அமையவில்லை. தேனிலவின்போது கணவர், திருமண வாழ்வின் பந்தத்தை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருந்தார். ஆனால் மனைவி எதிர்த்து நின்றிருக்கிறார். அதன்பின்னும் கணவருக்கு மனைவி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் மீதும், அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினர் மீதும் அவமதிப்பு ஏற்படுத்தத்தக்க குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

ஒரு பெண்ணின் அத்தகைய நடத்தை, சித்ரவதைதான். அதையெல்லாம் ஒரு மனிதர் தாங்கிக்கொள்வது சாத்தியம் இல்லை.

திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதற்காக விவாகரத்துக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, எத்தனையோ அவமதிப்புகளை தாங்கிக்கொண்டு கணவர், மிகவும் பொறுமை காட்டி உள்ளார்.

கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் அந்த பெண் சுமத்தியுள்ள வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இல்லை.

பாழான அனுபவங்கள்

பெற்றோரால் நிச்சயித்து நடக்கிற திருமணங்களில், அதுவும் திருமணங்களில் இணைகிற மணமக்களின் வயது 30–ஐ கடந்து விடுகிறபோது, கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள, புரிந்து கொள்ள ஏற்ற காலம், தேனிலவு காலம்தான். ஆனால் இந்த வழக்கு அதில் விதிவிலக்காக அமைந்துள்ளது. சிம்லாவுக்கு தேனிலவுக்கு சென்றவர்கள் கசப்பான நினைவுகளுடனும், பாழான தேனிலவு அனுபவங்களுடனும் திரும்பி உள்ளனர்.

எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கணவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday, October 9, 2016

Foreign students asked to leave India
By GEETA MOHAN | New Delhi | 9 October, 2016
Foreign nationals who had applied for MBBS and BDS courses in Indian private institutions for the academic year 2016 have been asked to leave. The Sunday Guardian spoke with some of the foreign nationals who find themselves in this predicament after the recent Supreme Court ruling of May this year which made NEET examinations mandatory for all students seeking medical admissions in private and deemed institutes.
Shenale Silva, a Sri Lankan national who had received her acceptance letter from Manipal University to pursue Bachelors in Dental Studies and started college on 16 September this year, said, “After getting my admissions done and starting classes for about a week they are asking us to leave because we haven’t taken the NEET. The thing is that we are foreign students and I am not eligible to write the NEET exam. My question is how am I supposed to clear NEET if I am not even eligible to take the examination?”
While the court ruling specifies that NEET needs to be cleared by all students, the NEET eligibility criteria say only Indian nationals and Overseas Citizens of India (OCI) can take the exam. It makes no mention of foreign nationals. Students who are citizens of various countries and have applied for MBBS and BDS (Bachelors in Dental Studies) courses in private institutions in India now may lose a year. The number of students admitted to MBBS/BDS courses under the foreign category for the academic year 2016-2107 in Manipal University is 22 and they come from Sri Lanka, Bangladesh, US, Canada, Australia and Nepal.
Distraught parents of these foreign students have been running from pillar to post seeking help. Shenali Silva’s father, Tilak Silva has flown down to New Delhi from Colombo. He met with the Sri Lankan High Commission officials who have said that they would be taking up the matter with the Indian Ministry of External Affairs. He said, “We respect India as a world university and they are closing the doors to foreign students. This is not nice. This is not correct. We are taking up the matter with the Government of India asking them to intervene. Please allow foreign students to come and be able to share knowledge.”
Manipal University on Friday informed the foreign students that the last day for admissions in BDS was Friday, 7 October and with no resolution in sight, the students would have to leave.
Devika Ganju, another affected student who hails from Canada, said, “I am absolutely devastated. To travel across the world and to be told to leave is extremely devastating. We had confirmed admission letters. Not once were we told about the exams or the need to write any exam”.
The Sunday Guardian got in touch with the Registrar of Manipal University Narayana  Sabhahit, who said, “We are actually helpless. We had to ask them to leave. We wrote to the HRD ministry questioning the policy. The government on the one hand, says students from abroad should come and study in India and on the other hand, NEET has to be cleared by everyone when there is no provision for foreign nationals to write the examination. We are in a fix.”
He added: “The students in our university are going through such trauma for the last 10 days. They are literally in tears. We tried our best to fight their case. The MCI should have included foreign nationals in the criteria of eligibility. The government will definitely have to change its policies. We will be taking up the matter with the government.”

எம்.ஜி.ஆரின் நான்காவது கால்! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு பகிர்வு


- ஜெ.பிரகாஷ்

அண்ணாமலை, முத்துக்குமார்,வாசன் என திரை உலகில் மின்னும்இளங்கவிஞர்களுக்கு மட்டும் காலன் சீக்கிரமே நாள் குறித்துவிடுகிறான் போல. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாய்ப் போய்ச் சேர்ந்தவர்தான் கவிஞர் கல்யாணசுந்தரம். அவருடைய நினைவுநாள் இன்று.

என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர் இந்த மக்கள் கவிஞர். தமிழ்த் திரையுலகில் பாடல் புனைந்தவர்கள் பலர். அதிலும் குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தவர்கள் சிலர். இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் கல்யாணசுந்தரம்.



நிருபரிடம் கூறிய வாழ்க்கை வரலாறு!

‘‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதவேண்டும்’’ என்று கேட்டநிருபர் ஒருவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... தன்கூட பயணித்த நிருபர், ‘‘கவிஞரே, வாழ்க்கை வரலாறு’’ என்று ஞாபகப்படுத்தியுள்ளார். அதற்கு, ‘‘முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?’’ என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச்சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர்.





இளம்வயதில் பாடல் எழுதியது எப்படி?

‘‘ஒருநாள் எங்கள் ஊரில் உள்ள வயலுக்குச் சென்றுவிட்டு ஏரிக்கரையில் இருந்த வேப்பமரத்துக்குக் கீழ்வந்து அமர்ந்தேன். நல்ல நிழலும், குளிர்ந்த தென்றலும் என்னைத் தழுவியிருந்த அந்த வேளையில், ஏரியைக் கண்டு ரசித்தேன். தண்ணீர் அலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள், ‘எம்மைப் பார்... எம் அழகைப் பார்’ என்று குலுங்கின. அந்தச் சமயத்தில், ஓர் இளங்கெண்டை மீன் பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் இருந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்திவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. இதைப் பார்த்த நான்,

‘ஓடிப்போ... ஓடிப்போ கெண்டைக் குஞ்சே!

கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே...

தூண்டில்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்

துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!’

- என்று தன்னுடைய 15-வது வயதில் கவிதை பாடிய அனுபவத்தை ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருக்கிறார் கல்யாணசுந்தரம்.



ஜீவா மூலம் பாடல் எழுதும் வாய்ப்பு!

பாடல் எழுதத் தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்ற தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கல்யாணசுந்தரம். பாரதிதாசன் தலைமையில்தான் அவருடைய திருமணம் நடந்தது. 1954-ம் ஆண்டு ஜீவாவுடன் நெருங்கிய நண்பராக இருந்த காலத்தில் விவசாய சங்க மாநாட்டுக்காக ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் தயாரிக்கப்பட்டது. அதில், பாடல் எழுதும் வாய்ப்பைத் தேடித்தந்தார் ஜீவா.

‘தேனாறு பாயுது...

செங்கதிரும் பாயுது...

ஆனாலும் மக்கள்

வயிறு காயுது!’ என்று அவர் எழுதிய அந்தப் பாடல்தான் பின்னர் திரைப்படத்தில் இடம்பெற்றது.

‘‘கல்யாணசுந்தரம், அவருடைய 29 வயதுக்குள் 17 வகையான தொழில்களைச் செய்திருக்கிறார்’’ என ஜீவா சொல்லியிருக்கிறார். ‘‘இதனால்தான் அவருடைய பாடல்களில் பன்முகங்களைக் காட்ட முடிந்தது’’ என்று சொல்பவர்கள் பலர்.பல்வேறு தொழில்களைச் செய்த அனுபவமே அவருக்குக் கைகொடுத்திருக்கிறது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. கல்யாணசுந்தரத்தின் பாடல்களில் பொதுவுடைமைக் கருத்துகள் நிறைந்திருந்தன. ‘‘கல்யாணசுந்தரத்தின் பாடல்களை 12 வகைகளாகப் பிரிக்கலாம்’’ என அவருடைய பாடல்களைத் தொகுத்த பாலகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார்.

பட அதிபருக்கு எழுதிய கவிதை!

கல்யாணசுந்தரம், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். திரைப்படம் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார்.ஆனால், பணம் கைக்கு வந்துசேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காகப் பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். ‘‘பணம் இன்னிக்கு இல்லே...நாளைக்கு வந்து பாருங்கோ’’ என்று பட அதிபர் பதில் சொல்ல... அதைக் கேட்ட கல்யாணசுந்தரமோ, பணம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’’ என்று பட அதிபர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். உடனே கல்யாணசுந்தரம்,சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.



‘தாயால் வளர்ந்தேன்...

தமிழால் அறிவு பெற்றேன்...

நாயே - நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்...

நீ யார் என்னை நில் என்று சொல்ல?’ என்று அதில் இருந்ததைப் பார்த்த பட அதிபர், அடுத்தநிமிடமே பணத்தைக் கொடுத்தனுப்பினார்.



சிவப்புக்கொடி!

சென்னையில் ஒருநாள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்கல்யாணசுந்தரம். அப்போது, வழியில் ஓர் இடத்தில் பள்ளம்தோண்டப்பட்டிருந்தது; அதோடு, பழுது பார்க்கும் வேலை நடப்பதாகச் சிவப்புக்கொடி ஒன்றும் நடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த கல்யாணசுந்தரம் தன்அருகிலிருந்தவரிடம், ‘‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்படவேண்டுமோ... அங்கே எல்லாம் சிவப்புக்கொடி பறந்துதான் அந்தப் பணிகள்நடக்க வேண்டும் போலும்’’ என்றார்.

‘நண்டு செய்த தொண்டு!’

கல்யாணசுந்தரம் வசித்த ஊரில் ஒரு மிராசுதார் இருந்தார். அவரிடம் ஒரு சிறுநிலத்தைக் குத்தகைக்கு விவசாயம் செய்துவந்தது கவிஞரின் குடும்பம். ஒருநாள் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றார். அப்போது மிராசுதார், ‘‘எங்க வயலுக்குஇப்பத்தான் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கோம். அது, முடிஞ்சப்புறம் உங்கவயலுக்குத் தண்ணி பாய்ச்சு’’ என்று சொல்ல... வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினார் கவிஞர். மிராசுதாருக்கு பலவேலி நிலம் என்பதால், அவை அனைத்துக்கும் தண்ணீர் பாய இரவாகிவிடும். ஆகையால், மறுநாள் காலையில் தான் நம் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியும் என்று நினைத்த கவிஞர், அப்படியே தூங்கிப்போனார். மறுநாள் காலைச்எழுந்ததும், வயலுக்குச்சென்றார் கவிஞர். அங்கே, அவருடைய நிலத்திலும் தண்ணீர் தேங்கியிருந்தது.நமது நிலத்துக்கு யார் தண்ணீர் பாய்ச்சியிருப்பார்கள் என்று யோசித்த அவர்,நண்டு போட்ட துளை வழியாக தண்ணீர் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார்.இதையே தான், ‘நண்டு செய்த தொண்டு’ என்று தலைப்பில் ஒரு கவிதையாக எழுதினார் கல்யாணசுந்தரம். அந்தக் கவிதை, ‘ஜனசக்தி’இதழில் வெளியானது.

மனைவிக்கு சன்மானம்!

‘ஆடை கட்டி வந்த நிலவோ...

கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ’ என்று

அவர் எழுதியதுகூட திருமணத்துக்கு முன் அவர் பார்த்தபெண்ணைவைத்து எழுதிய பாட்டுதான். ஒருநாள் அவருடைய அண்ணன் மனைவிக்கு வளைகாப்பு. அன்று அவர் மனைவி கவிஞரிடம், ‘‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் முகத்துல பொன் சிரிப்பு’’னு கிண்டலாகச் சொன்னாராம். இதைத்தான் அவர், ‘கல்யாணப் பரிசு’ படத்தில் பல்லவியாகப்போட்டு பாட்டு எழுதினார். ‘‘இது நீ எழுதிய பாட்டு. இந்தாப் பிடி சன்மானம்’’என்று அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பணத்தை அவர் மனைவி கையில் கொடுத்து அழகுபார்த்தவர் கல்யாணசுந்தரம்.



சமூக அவலங்களை மையப்படுத்திப் பல பாடல்களை எழுதினார். இறக்கும்காலம்வரை தன் புரட்சிகரமான பாடல்களை மக்களிடம் கொண்டுபோய்ச்சேர்த்தார் கல்யாணசுந்தரம்.

‘இரைபோடும் மனிதருக்கே

இரையாகும் வெள்ளாடே...- என்கிற பாடல் குறித்து,

‘‘எளிய சொற்கள், ஆழமான பொருள், நினைத்து இன்புறத்தக்க உவமை’’ என்று தன் கருத்தைப் பதிவுசெய்தார் குன்றக்குடிஅடிகளார். ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ளநல்லவரின் கூட்டாளி’’ என்றார் பட்டுக்கோட்டை ஜெயகாந்தன். இப்படி பலரின்புகழுரைகளுக்குக் காரணமாய் இருந்தவர் மக்கள் கவிஞர்.

‘மேலே போனா எவனும் வரமாட்டான்!’

அந்தக் காலத்தில், திரைப்படக் கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர். அதற்கு, கவிஞர் கண்ணதாசனும் பலியானார். ஒரு விழாவில் அந்தப் பத்திரிகை ஆசிரியரைக் கல்யாணசுந்தரம் சந்தித்தபோது (கண்ணதாசனைக் குறிப்பிட்டு), ‘‘கவிஞர்கள்என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்குக்கவிதையைப் பற்றி என்ன தெரியும்?’’ என்று கோபத்துடன் கேட்டாராம்.கவிஞர்கள் விஷயத்தில் யாரையும் விட்டுக்கொடுக்காத இந்த மக்கள் கவிஞர், 1959- ம் ஆண்டு காலமானார். அவர் மறைந்தபோது கவிஞர் கண்ணதாசன்,

வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்

வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்து வரும் நின்பெயரே! - என எழுதியிருந்தார்.



கவிஞர் கல்யாணசுந்தரம் தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு,

‘தானா எவனும் கெடமாட்டான்

தடுக்கி விடாம விழமாட்டான்

போனா எவனும் வரமாட்டான் - மேலே

போனா எவனும் வரமாட்டான் - இதப்

புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!’ - என்று எழுதியிருந்தார்.



ஆம் உண்மைதான். மேலே போனா எவனும் வரமாட்டான்!

'No discrimination between paid and free darshan anymore'


MADURAI: Administrators of the Sri Subramaniasamy temple in Thiruparankundramhave made arrangements to enable devotees who opt forfree darshan to worship all main deities at the temple, a government lawyer informed the Madurai bench of the Madras high court.

Arrangement have been made to allow devotees who go in the queue for free darshan and devotees who go in the queue for paid darshan, to merge at a point, from where they could worship all five deities. There would be no discrimination at the temple, he assured the court.

With this, the court completed a suo motu case, which was initiated based on a letter sent by Viswanathan from Madurai, who said that devotees were being discriminated at the temple.

Viswanathan said that while a devotee go to a temple for peace of mind, it was not in the case of the Subramaniasamy temple, which is one of the six abodes (Arupadai Veedu) of Lord Murugan. "The idols of five deities - Sri Murugan, Sri Vinayagar, Durgadevi, Shiva and Vishnu are in the main shrine. Of them, the first three deities are in a single row and idols of Shiva and Vishnu, which are on the two sides of the single row facing each other. A devotee who goes in the queue for free darshan is able to worship only three deities. But, those who go in the paid queue, is able to worship all the five. It is utter discrimination and against the Indian Constitution," he had said.

He further stated that if the judge visits the temple as an ordinary citizen and goes in the queue for free darshan, he could find out the situation prevailing there.

The letter prompted the Madurai bench to suo motu (on its own) take up the issue by treating it as a public interest litigation.

It then directed the Madurai collector and joint commissioner of the Hindu religious and charitable endowment department (HR&CE) to inspect the temple and file a report, which the officials did.
செல்போன் டவர் சந்தேகம் தீரவேண்டும்

தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் என்றாலும், நீதிபதிகள் என்றாலும் சரி, கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஓய்வுபெறும் நாளன்றுகூட, தங்கள் பணியை திறம்பட முடித்துவிட்டுத்தான் செல்வார்கள் என்ற நற்பெயர் இந்தியா முழுவதிலும் உண்டு. ஓய்வுபெற்ற தமிழக அரசு உணவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, மயிலாடுதுறையில் வருவாய்கோட்ட அதிகாரியாக பணியாற்றியபோது, ‘‘தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காட்டைச் சேர்ந்த எஸ்.ராமஜெயம் என்ற துணைகலெக்டர் ஓய்வுபெறும் நாளன்று இரவு 7 மணிவரை நெல் கொள்முதலுக்கான பணிகளில் அந்த மாவட்டம் முழுவதும் சுற்றி அலைந்தார். அவரது வழியனுப்பு விழாவே இரவில்தான் நடந்தது. ஒரு அதிகாரி எப்படி பணிபுரியவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்’’ என்று பெருமையாக பேசுவார். அதேபோலத்தான் உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி, கடந்த திங்கட்கிழமை ஓய்வுபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.நாகப்பனின் பணியும் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.நாகப்பன் மாவட்ட நீதிபதி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்று பணியாற்றி, கடந்த 3½ ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.

ஓய்வுபெறும் நாளன்று கடைசியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் சி.நாகப்பன், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் கொண்ட பெஞ்சு, மக்களுக்கு செல்போன் டவர் மீதுள்ள அச்சத்தை நீக்குவதற்கு ஒரு நல்ல வழியைக்காட்டி தீர்ப்பளித்துச்சென்றிருக்கிறது. இந்தத்தீர்ப்பின் முடிவு எதிர்காலத்தில், ‘செல்போன் டவர் மீது கொண்டுள்ள கதிர்வீச்சு அபாய அச்சம் சரியானதுதானா?, தேவையில்லையா?’ என்பதற்கு ஒரு சரியான விளக்கத்தைத்தரும். 1995–ம் ஆண்டு ஜூலை 31–ந் தேதி அன்று முதல் செல்போன் பயன்பாட்டை அப்போதைய மேற்குவங்காள முதல்–மந்திரி ஜோதிபாசு, மத்திய தகவல் தொடர்பு மந்திரியாக இருந்த சுக்ராமுடன் பேசி தொடங்கிவைத்தார். அப்போது ஒரு நிமிடத்திற்கு செல்போன் கட்டணம் ரூ.16 ஆக இருந்தது. அப்படியிருந்த செல்போன் இன்று பரம ஏழைகளுக்குக்கூட அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. இந்தியாவில் இப்போது 103 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் புழக்கத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடியே 13 லட்சத்து 42 ஆயிரத்து 122 செல்போன்கள் இருக்கிறது.

இந்த நேரத்தில், செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் மூளையில்கட்டி, நரம்புக்கோளாறுகள், மார்பக புற்றுநோய், கருச்சிதைவு, இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த கதிர்வீச்சின் பாதிப்பால்தான் சிட்டுக்குருவிகள், அணில் போன்ற சின்னஞ்சிறு பிராணிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்று ஒரு அபாயகரமான தகவல் நாடு முழுவதும் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்டும் வகையில், நீதிபதி சி.நாகப்பன் இடம்பெற்றுள்ள அந்த பெஞ்சு இந்தப்பிரச்சினை குறித்து மத்திய அரசாங்கம் வருகிற 17–ந் தேதி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அந்த அறிக்கையில், ‘செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளால் மனிதகுலத்திற்கோ, பறவைகளுக்கோ, அல்லது மற்ற பிராணிகளுக்கோ, ஏதாவது பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து அறிவியல் பூர்வ ஆய்வு எதுவும் நடத்தப்பட்டுள்ளதா?, அப்படி நடத்தப்பட்டுள்ளது என்றால், அந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் என்ன?, கதிர்வீச்சு இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று செல்போன் டவருக்கு, ஏதாவது அளவை மத்திய அரசாங்கம் வகுத்துள்ளதா?, மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுபார்க்கும்போது, இந்தியாவில் கதிர்வீச்சின் அளவு எந்தளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?, ஏதாவது அந்த அளவுமீறல் நடந்துள்ளதா?, அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, சாதாரண மனிதர்களுக்கு, தங்கள் வீட்டின் அருகிலுள்ள செல்போன் டவரில் கதிர்வீச்சு எந்தளவு இருக்கிறது?, நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருக்கிறதா? என்பதை கொஞ்சம் கட்டணம் செலுத்தியே அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதா?’ என்பதையெல்லாம் தெரிவிக்கவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆக, வரும் 17–ந் தேதி மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போகும் அறிக்கையில், செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் மக்களுக்கும், பறவைகளுக்கும் அபாயம் இருக்கிறதா?, இல்லையா? என்ற பெரிய கேள்விக்கு நிச்சயம் விடைக்கிடைத்துவிடும்.
மத வழக்கப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி சாவு விசாரணை நடத்த உத்தரவு

ஐதராபாத்,

மத வழக்கப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி இறந்தார். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

13 வயது சிறுமி

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஆராதனா (வயது 13). 8–ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தந்தை செகந்திராபாத் பாட்பஜார் பகுதியில் பிரபல நகைக்கடை நடத்தி வருகிறார்.

ஆராதனாவை அவருடைய பெற்றோர், உறவினர்கள், அப்பகுதி மக்கள் குழந்தை துறவியாக ஆராதித்து வந்தனர். ஜைன மத வழக்கப்படி அவரை உண்ணாவிரதம் இருக்க அவர்கள் ஊக்குவித்து உள்ளனர்.

பரிதாப சாவு

அதன்படி ‘சந்த்தாரா’ எனப்படும் உண்ணாவிரதத்தை ஆராதனா மேற்கொண்டார். 68 நாட்கள் உண்ணாவிரதத்தை 1–ந் தேதி முடித்தார். அதன் பிறகு 2 நாட்களுக்கு திரவ உணவை மட்டுமே உட்கொண்டார்.

இதனால் ரத்த அழுத்தம் குறைந்து அவருடைய உடல்நிலை மோசமானது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 3–ந் தேதி பரிதாபமாக இறந்தார். ஆராதனா அவருடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு உத்தரவு

சிறுமி சாவு குறித்து அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர். அதன்படி இது பற்றிய விசாரணைக்கு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் துணை கமிஷனர் சுமதி கூறுகையில், ஆராதனா இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை உண்ணாவிரதம் இருக்குமாறு உறவினர்கள் கட்டாயப்படுத்தி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூடுதலாக நிர்ணயம் செய்ததாக கூறி விஏஓக்களின் பென்ஷனில் பிடித்தம் கருவூல உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
dinakaran

மதுரை: கூடுதலாக நிர்ணயம் செய்ததாக கூறி ஓய்வு பெற்ற விஏஓக்களின் பென்ஷனில் பிடித்தம் செய்த கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.   சிவகங்கை மாவட்டம், ஆணையடியைச் சேர்ந்த முத்துராமன், செக்காலை கனகசபாபதி, கண்டதேவி ஜெயப்ரகாஷ் ஆகியோர் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றனர். இவர்கள், தேவகோட்டை துணைக்கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயித்தபோது கூடுதலாக நிர்ணயம் செய்துள்ளதாகக் கூறி, பென்ஷனில் முறையே ரூ.1,520, ரூ.1,404, ரூ.1,531, கடந்த ஏப்.1 முதல் பிடித்தம் செய்யப்பட்டது.

ஆனால், இதற்கான உத்தரவு ஜூலை 12ல்தான் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவிடுவதற்கு முன்பே ெபன்ஷனில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பென்ஷனில் பிடித்தம் செய்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இதைப் போன்ற வேறு வழக்கில் ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேவகோட்டை துணைக்கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.
மாத்திரைகள் ஏன்? எதற்கு? எப்படி?

dinakaran

சாப்பாட்டுக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரையை மறந்துவிட்டால், சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொள்ளலாமா? மாத்திரைகளின் பக்க
விளைவுகளைத் தவிர்ப்பது எப்படி? தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? வைட்டமின் மாத்திரைகளை நாமே எடுத்துக் கொள்ளலாமா? மாத்திரைகள் பற்றி இதுபோன்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் எழுவதுண்டு. நாளமில்லா சுரப்பிகள் மருத்துவரான பரத் இந்தக் குழப்பங்களுக்கு விளக்கமளிக்கிறார்.

சத்துக்குறைபாடு காரணமாகவோ, எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாகவோ உடலில் நோய் ஏற்படுகிறது. அந்த வேளையில் சில வேதிப்பொருட்களின் உதவியுடன் உடல்நிலையை சமன்படுத்துகிறோம். அதற்குப் பெயர்தான் மாத்திரை. வட்டம் அல்லது நீள்வட்டம், கேப்ஸ்யூல் என வடிவத்தைப் பொறுத்தவரை மாத்திரைகள் இருவிதமாக இருக்கின்றன. இதில் இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தால் நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் (Water soluble), கொழுப்பில் கரையக் கூடிய மாத்திரைகள் (Fat soluble) என்று இருவிதங்கள் உண்டு.

ஒருவேளைக் கான மாத்திரை தவறினால் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. அடுத்த வேளைக்கு சேர்த்து எடுத்துக் கொள்வதால் பலன் இல்லை... பக்கவிளைவுதான் உண்டு. கால்சியம் மாத்திரையை ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றைச் சேர்த்து எடுத்தாலும் அந்த இன்னொன்று கழிவுப்பொருள்தான். அதேபோல், சர்க்கரை நோயாளிகள் சிலர் காலையில் தவற விட்ட மாத்திரையை இரவில் சேர்த்து எடுப்பார்கள். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் அபாயம் ஏற்படலாம்.

ஆன்டிபயாடிக் வகை மாத்திரைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் எடுத்தால் போதும். ஹார்மோன் குறைபாடுகளுக்கான மாத்திரைகளை மட்டும் தொடர்ந்து எடுக்க வேண்டியிருக்கும். சில மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். காரணம், மாத்திரை உணவுக்குழாயில் தங்கிவிடாமல் சிறுகுடல் பகுதிக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான். இல்லாதபட்சத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 கிளாஸ் தண்ணீராவது பருக வேண்டும். உணவுக்குழாயில் மாத்திரை தேங்கிவிட்டால் புண் உண்டாகிவிடலாம்.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி மாத்தி ரைகளை நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் என்றும் வைட்டமின் ஏ, டி, ஈ, கே மாத்திரைகளை கொழுப்பில் கரையக்கூடிய மாத்திரைகள் என்றும் பிரிக்கலாம். நீரில் கரையக்கூடிய மாத்திரைகள் பக்கவிளைவுகள் அற்றவை. ஏனெனில், உடலிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் கழிவாக வெளியேறி விடும். ஆனால், கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் மாத்திரைகள் உடலில் இருக்கும் கொழுப்புப் பகுதியில் சென்று அப்படியே தங்கி விடும். அதனால்தான் வைட்டமின் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சில மாத்திரைகளை உணவுக்கு முன்னும், சில மாத்திரைகளை உணவுக்குப் பின்னும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். அதற்குக் காரணம் நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்தான். நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பும் வீரியமும் அதிகமாக இருக்கும். உணவு உண்டபின் அதன் வீரியம் குறைவாக இருக்கும். கால்சியம், இரும்புச்சத்து மாத்திரைகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் கரைந்தால்தான் பலன் தரும். அந்த வகை மாத்திரைகளை ஹைட்ரோகுளோரிக் அமிலம் வீரியமாக இருக்கும்போது, அதாவது, உணவுக்கு முன்பு எடுத்துக் கொண்டால்தான் பலன் கிடைக்கும். சில மாத்திரைகளின் வீரியத்தை ஹைட்ரோகுளோரிக் அமிலம் தடுத்துவிடும். அந்த வகை மாத்திரைகளை உணவுக்குப் பின் அதாவது, அமிலத்தன்மை குறைந்திருக்கும் போதுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘மருத்துவர்கள் நிறைய மாத்திரை எழுதிக் கொடுக்கிறார்கள். ஒருவேளை, இரண்டு வேளை சாப்பிட்டால் போதாதா’ என்று பலரும் நினைக்கிறார்கள். அதேபோல, நோயின் அறிகுறிகள் மறைந்த உடனே மாத்திரையையும் பலர் நிறுத்தி விடுகிறார்கள். இந்த இரண்டும் தவறானதே. ஒரு வாரத்துக்கான மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் பட்சத்தில் அந்தக் கால அளவு முழுவதும் எடுத்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் நோய்க்கிருமிகள் முழுமையாக நீங்கும். பாதியில் மாத்திரைகளை நிறுத்தும்போது பாதி நோய்க்கிருமிகளும் தப்பித்துவிடும். இதனால் நாம் ஏற்கெனவே உட்கொண்ட மருந்துகளின் சக்தியைத் தாண்டி புது எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடும்.

வைட்டமின் டி பற்றாக்குறைக்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பலரும் எடுக்கிறார்கள். வாரம் ஒருமுறை எடுக்க வேண்டிய மாத்திரையை தினமும் உட்கொள்கிறவர்களும் உண்டு. இதனால் கால்சியம் சத்து உடலில் அதிகமாகி சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது முதல் சிறுநீரகச் செயல் இழப்பு வரை பல்வேறு பாதிப்புகள் உண்டாகக் கூடும். வைட்டமின் ஏ மாத்திரைகளால் மூளையில் நீர் கோர்த்துக் கொள்வது, வாந்தி ஏற்படுவது, கண் பார்வை மங்குவது போன்ற பக்கவிளைவுகள் உண்டாகும். வைட்டமின் ஈ மாத்திரைகளால் இதயம் பாதிக்கும் என்பது பற்றிய ஆய்வுகளும் இருக்கிறது.

தொடர்ச்சியாக மாத்திரை சாப்பிடுகிறவர்களும் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரைச் சந்திப்பதே நல்லது. இதே மாத்திரைதானே மருத்துவர் எழுதிக் கொடுப்பார் என்று நாமே வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் கண்காணிப்பு இருக்கும்பட்சத்தில் அந்த மாத்திரையால் பக்கவிளைவுகள் வருகிறதா என்று ஆராய்ந்துதான் மீண்டும் அதே மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்.ரத்த அணுக்களின் எண்ணிக்கை, கல்லீரலின் செயல்பாடு, சிறுநீரகத்தின் ஆரோக்கியம் போன்றவற்றையும் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவுமுறையைப் பின்பற்றுவதும் அவசியம்.

சூரிய ஒளியும் காற்றும் பட்டுவிட்டால் சில மாத்திரைகளின் வீரியம் போய்விடும். எனவே, இந்த மாத்திரைகளை கவனமாகக் கையாள வேண்டும். சில்லறையாக அவ்வப்போது வாங்காமல் மொத்தமாக வாங்குவதே பலன் தரும். உதாரணம், தைராய்டு மாத்திரைகள். மாத்திரைகளை முறையாகப் பயன்படுத்தினாலே எந்த பக்கவிளைவுகளும் வராது. தலைவலியாக இருந்தாலும் என்ன காரணத்தால் தலைவலி வந்தது என்று மருத்துவரைச் சந்தித்து தெளிவு பெறுவதே சரியானது. மருத்துவர் பரிந்துரைக்காமல் எந்த மாத்திரையையும் நாம் பயன்படுத்தக் கூடாது. நமக்கு நாமே மருத்துவம் பார்க்கிற அளவுக்கு நாம் மருத்துவர் இல்லை என்பதையும் உணர வேண்டும்!

ஞானதேசிகன்
முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும்...

நன்றி குங்குமம் தோழி

கல்வி வேலை வழிகாட்டி

பொதுவாகவே பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிப் படிப்பு தொடங்கும்பொழுது சில பிரச்னைகளை மாணவர்கள் சமாளிக்க வேண்டிவரும். அதிலும், பொறியியல் போன்ற தொழிற்படிப்புக் கல்லூரிகள் என்றால், கூடுதல் பிரச்னைகள் எழும். தொடக்கத்தில் குழப்பத்தையும் மிரட்சியையும்கூட பொறியியல் கல்லூரிகள் ஏற்படுத்தக்கூடும். அந்தச் சூழலைச் சமாளிக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னென்ன பிரச்னைகள் வரும்? அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும்?

பள்ளியில் தமிழ் பயிற்றுமொழியில் படித்தவர்களும், ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருந்தும் தமிழிலேயே சிந்தித்தும், புரிந்து கொண்டும் பழகியவர்களும் பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்திலேயே பயில வேண்டியிருப்பது திடீர் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் (பொறியியல் டிப்ளமோ படித்து விட்டு இரண்டாம் ஆண்டில் சேருபவர்கள் இப்பிரச்னையை அதிகமாகவே உணர்வார்கள்). இச்சங்கடம் முதல் சில நாட்களுக்குத்தான் இருக்கும். நாளடைவில் சரியாகிவிடும். இந்த மாற்றத்தை வெறுக்காமல் மனமுவந்து ஏற்று, விரைவில் பழகிவிட வேண்டும். புதிதாக எதிர்கொள்ளும் ஆங்கிலக் கலைச்சொற்களையும் கிரகித்துப் பயன்படுத்திப் பழக வேண்டும்.

ஆசிரியர்கள் கற்பிக்கும் வேகமும், மாணவர்கள் கற்கும் வேகமும் பள்ளிப்படிப்பின் போது இருந்ததை விடவும் கல்லூரியில் அதிகமாக இருக்கும். மாதம் ஒரு டெஸ்ட்டும், 4 மாதங்களுக்கு ஒரு செமஸ்டர் தேர்வும் வருவதால் பாடங்களை விரைவாக நடத்துவார்கள். ஒவ்வொரு மாணவனின் பேரிலும் ஆசிரியர் தனிக்கவனம் செலுத்த இயலாது. மாணவனே தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டிவரும். அதனால், ஓய்வைக் குறைத்து உழைப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். வகுப்பில் பாடக்குறிப்பை ஒழுங்காக எழுதிக்கொண்டு, கொடுத்த ‘வீட்டுவேலை’யை முறையாகச் செய்து, சந்தேகங்களை வகுப்பில் எழுப்பி, தெளிவு பெறுங்கள். தொய்வு ஏற்பட்டால், வார இறுதி விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) அதைச் சரி செய்து விடுங்கள். பொறியியல் படிக்க அறிவுக் கூர்மையைவிட, தள்ளிப்போடாமையே சிறந்த பலன் தரும்.

கிராமப்புறங்களில் இருந்து வந்து படிப்பவர்கள் புதிய சூழ்நிலையால் அதிக தாக்கத்துக்கு உள்ளாகலாம். தாழ்வு மனப்பான்மையும் உருவாகலாம். வீட்டு நினைவுகளும் வந்து, ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றும். இது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான் என புரிந்துகொள்ள வேண்டும். ‘நாமாவது உள்நாட்டிலேயே இருக்கிறோம்... சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் படிக்கப் போகிறவர்கள் எப்படி இருப்பார்கள்?’ என்று நினைத்துப் பார்த்து சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். பழகப் பழக இதுவும் சரியாகி விடும்.

ராகிங், ஈவ்டீசிங் ஆகியவை கடுமையாகத் தடுக்கப்பட்டிருந்தாலும் பல கல்லூரிகளில் அவை லேசாகத் தலை தூக்கக்கூடும். இவற்றை நகைச்சுவையாகக் கையாள முடிந்தால் சரி. வரம்பு மீறுவதாக இருந்தால், உரிய கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிடுங்கள். நிர்வாகம் உங்களைப் பாதுகாக்கும். சொந்த ஊரில் வீட்டிலிருந்தே பள்ளிக்குச் சென்று வந்த மாணவர்கள், இப்போது ஹாஸ்டலில் படிக்க நேர்ந்தால் மிரளுவார்கள்.

ஒரே அறையில் வேறு சில மாணவர்களுடனும் தங்க வேண்டி வரும். வகுப்புத் தோழர்களும், விடுதித் தோழர்களும் வெவ்வேறாக இருக்கலாம். சீனியர்களுடன் ஒத்துப்போக வேண்டியிருக்கும். குடும்ப சூழ்நிலைகளும், மொழிகளும், இனங்களும், பொருளாதாரச் சூழலும் வேறுபடலாம். இவற்றால் விடுதி வாழ்க்கை பிடிக்காமல் போகலாம். ஆனால், இவை அனைத்தையும் ரசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டால் விடுதி வாழ்க்கை இனிக்கும். பொறுமை, சகிப்புத்தன்மை, ஆளுமைத்திறமை, கூட்டுப்பொறுப்பு, பரந்த மனப்பான்மை ஆகிய அரிய பண்புகளைப் பெற விடுதி வாழ்க்கையை ஒருவாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் +1, +2 படித்தபோது, +2 பொதுத்தேர்வுக்கான பாடப்பகுதிகளைத் தவிர, மற்ற பாடங்களையும் பகுதிகளையும் முறையாகப் படிக்காமல் ஒதுக்கிய கூட்டத்தைச் சேர்ந்தவரா? அப்படியானால், உங்கள் உயர்கல்வி என்ற கனவுக்கட்டிடம் உறுதியான அடித்தளமின்றி ஆட்டம் கண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. கணிதம், இயற்பியல் பாடங்களில் +1, +2 வகுப்புகளில் ஒதுக்கி வைத்த பகுதிகளை முறையாகப் பயிலுங்கள். அவற்றோடு சேர்த்து மொத்தப் பாடத்தையும் ‘மீள்பார்வை’ செய்தீர்களானால், பள்ளி, கல்லூரி கற்றலுக்கு இடையே தொய்வு விழாமல் சரளமாகக் கல்லூரிப் படிப்பைத் தொடரலாம். நான்காண்டு காலத்தை முறையாகச் செலவிடுங்கள்... பிறகு நாற்பதாண்டு பணிக்காலத்தில் நிறைவாக வாழ்ந்திடுங்கள்!

வெ.நீலகண்டன்
தீபாவளி சுற்றுலா ரயில் : ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, கயா, வாரணாசி, அலகாபாத், டில்லி மற்றும் ஆக்ரா சென்று வரும் வகையில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில், பாரத தர்ஷன் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், மதுரையிலிருந்து வரும், 25ம் தேதி புறப்படுகிறது; திண்டுக்கல், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படுகிறது. 'ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய, 13 ஆயிரத்து, 940 ரூபாய் கட்டணம்; இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கு, 10 ஆயிரத்து, 35 ரூபாய் கட்டணம். மேலும் தென்னிந்திய சைவ உணவும், சாலை வழியாக சுற்றிப் பார்க்க, வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலா, 12 நாட்கள் பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 044 - 6459 4959 என்ற தொலைபேசி எண்ணிலும், 90031 40681 என்ற மொபைல் போனிலும் தொடர்பு கொள்ளலாம்.

தனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: உச்சநீதிமன்றம்

டில்லி: தன் வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்க சம்மதிக்காமல் தனிக்குடித்தனம் செல்ல கோரும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பாக டில்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி அனில் ஆர் தவே வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: பெற்றோரால் வளர்க்கப்பட்ட மகனுக்கு, வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானம் உடைய பெற்றோரை பராமரிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இருக்கிறது. இது சட்டபூர்வமான கடமையாகவும் கருதப்படுகிறது. வெளிநாடுகளில் திருமணம் முடிந்ததும் அல்லது குறிப்பிட்ட வயது வந்ததும் பெற்றோருக்கும் மகனுக்கும் தொடர்பில்லாத கலாச்சாரம் நிலவி வருகிறது. ஆனால் இந்தியாவில் இந்து சமுகத்தில் பிறந்த ஆண், அவரது பெற்றோரை பிரிந்து வாழ்வது கலாச்சாரத்திற்கு எதிரானது. பணம் சம்பாதிக்க முடியாத அல்லது குறைவாக சம்பாதிக்கும் நிலையில் உள்ள பெற்றோர் அவர்களது மகனின் தயவில் வாழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அவர்களை பிரிப்பது சரியான செயல் அல்ல. எனவே சரியான காரணமின்றி பெற்றோரிடம் இருந்து கணவனை பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும், இது போன்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் '' என கூறப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் மாமியார்-மருமகள் சண்டையால் பல கூட்டு குடும்பங்கள் சிதறி தனிக்குடித்தனமாக வாழும் குடும்பங்கள் அதிகமாகி வருகிறது. இது இந்தியாவின் எதிர்கால சந்ததியினருக்கு குடும்பங்கள் மற்றும் உறவுகள் மீதுள்ள பாசம் பற்றிய புரிதல் இல்லாமலேயே போய் விட கூடிய நிலை ஏற்படும் என பேச்சு அடிபட்டு வருகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பில் வெளியிட்டுள்ள கருத்து குடும்பநல ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Monday, October 3, 2016


Senior citizens assured of special treatment at GHs

SPECIAL CORRESPONDENT

The Madras High Court Bench here has closed a public interest litigation petition seeking a direction to the State government to open special wards for senior citizens in all district hospitals, constitute maintenance tribunals in every revenue sub division besides implementing all other welfare measures contemplated under the Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007.

A Division Bench of Justices S. Nagamuthu and M.V. Muralidaran closed the PIL petition, pending since 2013, after recording submissions made by the Health and Family Welfare Secretary listing outinstructions issued by him on February 27, 2012 directing Joint Directors of Health Services to scrupulously follow the guidelines with respect to treatment of senior citizens in government hospitals.

As per the guidelines, special attention should be given to senior citizens when they approach government hospitals for treatment, separate beds should be provided to them and a separate queue be formulated in the Out-Patient department for issuing OP chits. Such exclusive queues for the senior citizens should be formed even at the laboratories and at the counters where the drugs would be handed over to the patients.

PIL petition seeking a direction to the State Government to open special wards for senior citizens was closed


PIL seeking direction to take over management of college dismissed

SPECIAL CORRESPONDENT

Universities have nothing to do with allegations of collection of excess fees by affiliated colleges and hence reports submitted by committees appointed by the varsities could not be relied upon to initiate action against the institutions concerned, the Madras High Court Bench here has said.

A Division Bench of Justices S. Nagamuthu and M.V. Muralidaran made the observation while dismissing a public interest litigation petition filed in 2013 to remove Srikumaran Nair from the post of principal of Pasumpon Muthuramalinga Thevar College at Melaneelathanallur in Tirunelveli District.

The petitioner had sought a direction to Director of Collegiate Education and Registrar of Manonmaniam Sundaranar University in Tirunelveli to take over the management of the college and appoint a Special Officer to administer it since a committee constituted by the university had confirmed allegation of collections of excess fee. Rejecting both his prayers, the Division Bench said that the first relief could not be granted since Mr. Nair had retired from service before the PIL petition could be taken up for final hearing so that plea had become infructuous.

In so far as the second prayer was concerned, the judges said: “In our considered view, the university has got nothing to do with the fee structure and fee collected from the students. It is for the educational authorities to consider the same. Therefore, no weightage could be given to the report of the fact finding body appointed by the Registrar of the University as it is beyond the scope of the university. This writ petition has been pending from the year 2013. At this length of time, even, if any direction is issued to the authorities to hold enquiry into these allegations, the result would not be fruitful.

“Though the learned counsel for the petitioner seeks for a direction to the authorities to hold enquiry, we are not inclined to issue any such direction at this length of time. The writ petition is dismissed.”
Return to frontpage

Annamalai varsity not a government institution, can fix its own fees: HC

DENNIS S. JESUDASAN

Upholding a single judge’s order, a Division Bench of the Madras High Court has held that Annamalai University near Chidambaram, which came under the control of the State government by an Act in 2013, is “not a government university” and would not come under the purview of the Fee Fixation Committee.

Dismissing a batch of appeals filed by medical students challenging collection of higher fees for various courses than what was collected in other State-run medical colleges, the Bench comprising Justices Huluvadi G. Ramesh and M.V. Muralidharan said the Capitation Fee Act, 1992 would not apply to the university and it was also empowered to fix the fees as prescribed by the Syndicate.

When the university was about to be closed due to its financial condition during 2012-13, the government took charge “in order to keep it alive”. The said act of the government “will not make the university a government university. Therefore, it cannot be said that the university is a State-run university,” the judges held.

The batch of pleas was filed by students contending that since the university was under the control of the government, they were required to pay the fees prescribed in the prospectus, which was determined by the Senate, and not as prescribed by the government.

However, the judges observed, “In a situation where the university is under deficit financing, the question of profiteering or commercialising the education by the university will not arise.” They also pointed out that the university or its constituent colleges were not included in the Government Order constituting the Fee Fixation Committee and it showed that the university was “not profiteering or commercialising the education”.

Since the committee never ventured out to fix the fees for the courses run by the university, the judges held that the question of invocation of Capitation Fee Act, 1992 did not arise.

The bench further held that the students, who have accepted the offer made in prospectus, namely the terms and conditions and the fee fixed by the Senate and joined the course, “cannot now turn around the same and contend that charging and demanding the fee prescribed in the prospectus is arbitrary, on the ground that the university is now a State-run university”.

Though it took over the control of Annamalai University, the stand of the government is that the university had not fixed the fee with the object of profiteering and it was only for the purpose of compensating the expenditure involved in running the institutions.

‘Not covered by Act’

When the deemed universities in Tamil Nadu were not covered by Capitation Fee Act, 1992 and were kept out of the purview of the Fee Fixation Committee, Annamalai University “should also be kept out of the purview of the Fee Fixation Committee, since it would inflict double jeopardy upon the government,” the bench held.

Says since the varstiy is under deficit financing, question of commercialising education does not arise

அதிக சப்தம் ஆபத்து

By இரா. இராஜாராம் | Last Updated on : 03rd October 2016 01:56 AM | அ+அ அ- |


மனித உடல் வியக்கத்தக்க ஒன்றாகும். ஐம்புலன்களில் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை படைத்தது. நவீன கருவிகளை உயர்வாக எண்ணி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்குக்கூட அற்புதமான இயற்கையான உயிர் ஆற்றல் உடைய உடலை அதன் இடைவிடாத இயக்கத்தை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.
உடல் உறுப்புகள் பாதிப்படைந்தபின்பே அதன் அருமையையும், தேவையையும் உணர்ந்து பார்க்கின்றோம். சரிசெய்ய மருத்துவத்தின் மூலம் முயல்கிறோம். என்னதான் நவீன மருத்துவம் இருந்தாலும், இயற்கையாய் உள்ள அதன் செயல்பாடுகளை மீண்டும் முழுமையாக உண்டு பண்ணி விட முடியாது.
எத்தனையோ நூற்றாண்டுகளாக மனித சமுதாயம், இப்போதுள்ள நவீன கருவிகள் எதுவுமின்றி மனிதசக்தியால் இயங்கிடும் கருவிகளை மட்டுமே பயன்படுத்திச் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்புமின்றி இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வை வாழ்ந்திருக்கிறான்.
இன்று அறிவியலில் எவ்வளவோ வளர்ச்சியுற்றுப் பல்வகையான நவீன கருவிகள், போக்குவரத்து வசதிகள், நவீன மருத்துவம், போர்க்கருவிகள், சில நொடிகளில் உலகையே அழிக்கவல்ல அணு ஆயுதங்கள் எனப் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்திட்டாலும் அதோடு சேர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், அதனால் உடலுக்கும், உள்ளத்திற்கும் பாதிப்புகளும் அதிகரித்தே வருகின்றன.
இதற்குச் சரியான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை. மாசுபாடுகளைக் குறைக்க எவ்வளவோ முயற்சிகளை மத்திய } மாநில அரசுகள் எடுத்திட்டாலும் அதற்கு மக்களின் ஆதரவு அவசியம் தேவை.
சாலைகள் விரிவாக்கத்தின்போது அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டநிலையில், மரக்கன்றுகளை அதிக அளவில் ஆங்காங்கு நட்டு வளர்த்துப்பெரிதாக்கினால் காற்று மாசைக் குறைப்பது மட்டுமின்றி, ஒலிமாசையும் அவை கட்டுப்படுத்தும்.
சமீப காலமாக ஒலிமாசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பித்தன்னை அடையாளப்படுத்தி வருகின்றன.
மனிதனும் அப்படி இருந்தவன்தான். நவீன கருவிகளின் வருகைக்குப் பின்பு இயல்பான ஒலி அளவைப் பன்மடங்கு பெருக்கி அதுவே பேரிரைச்சலாக மாறிவிட்டது.
தொழிற்சாலைகளிலிருந்து வரும் மிகையான ஒலி, வாகனங்கள் ஏற்படுத்தும் பேரிரைச்சல், ஒலிபெருக்கி பெட்டிகளின் அதிரடி ஓசை, விழா நாட்களில் வெடிகளை வெடித்துக் காற்றை மாசுபடுத்துவது, பேருந்துகளிலும், சிற்றுந்துகளிலும் அதிக ஓசையுடன் ஒலிபரப்பப்படும் பாடல்கள், வீட்டில் அதிக ஒலியுடன் வைத்துப்பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திருமண மண்டபங்களில் அதிரவைக்கும் பாட்டுக் கச்சேரிகள், திரை அரங்குகளில் அதிரடி ஓசை என ஒலி மாசை உண்டு பண்ணும் காரணிகள் அதிகரித்து வருவது மனிதனின் நுட்பமான செவிப் புலனுக்குச் செய்யும் துரோகமாகும்.
ஒலி அளவு என்பது அதிகபட்சம் 50-லிருந்து 60 டெசிபெல் வரை இருக்கலாம், இந்த ஒலி அளவு வரை செவிகளுக்குக் கேடில்லை.
ஆனால் சாதாரண நாட்களிலேயே நகரங்களில் 90 - 95 டெசிபெல் ஒலிஅளவும், பொதுக்கூட்டங்கள், திருமணம், கோவில் திருவிழா போன்ற நேரங்களில் 110 - 120 டெசிபெல் என்ற ஒலி அளவும், தீபாவளி போன்ற விழாக்களின் போது அதிகளவில் பட்டாசுகளை வெடித்து காற்றையும் மாசுபடுத்தி, ஒலிமாசையும் உண்டுபண்ணும் அந்த ஒலிஅளவு 140 டெசிபெல்லையும் தாண்டி விடுகிறது.
இத்தகைய மிகை ஒலியெல்லாம் செவிப்பறையைத் தாக்கி அதிலிருந்து மூளைக்குச் செல்லும் அதிநுட்பமான ஒலி உணர்நரம்புகளைப் பாதித்துப் படிப்படியாக ஒலி உணர்திறன் குறைவது மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, நரம்புத்தளர்ச்சி போன்ற உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திடும் ஒலிமாசைக் கட்டுப்படுத்திட சட்டங்கள் இருந்திடினும் அவை வெறும் பெயரளவுக்கே என்றாகிவிட்டன.
மக்களும் ஒலிமாசை உணர்ந்து குறைப்பதாகத் தெரியவில்லை. கடுமையான சட்டங்களை அரசு தீவிரமாகச் செயல்படுத்தினால் அன்றி இதனைக்கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை.
அதிக ஒலி அளவைக் கேட்டுப் பழகியவர்களுக்கு மிகமெல்லிய நுட்பமான ஒலிகளைக் கேட்கும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. மிகை ஒலி ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே காதுக்காப்பானை வழங்கி ஒலிமாசிலிருந்து அவர்களைக் காத்திட வேண்டும்.
விமானநிலையங்கள், ரயில்வே பாதைகள், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் ஒலிஅளவு மிக அதிகமாக இருக்கும். அதற்கருகில் மக்கள் குடியிருப்புகள் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அப்பகுதிகளில் அதிகளவில் மரங்களை நட்டுவளர்க்கலாம். அப்பகுதியில் குடியிருப்பதை மக்கள் தவிர்க்கவேண்டும். காடுகளில் வாழும் உயிரினங்கள் செயற்கையான ஒலியை முற்றிலும் வெறுக்கின்றன. அவை மிகநுட்பமான ஒலியையும், அதிர்வுகளையும் உணரும் ஆற்றல் படைத்தவை. சுனாமி ஏற்படுவதற்குச் சற்று முன்பாகவே அதனை உணர்ந்து அவை பாதுகாப்பான இடங்களுக்குச்சென்று விட்டன.
ஆனால் அதனை முன்னதாகவே உணர்த்திட எந்த நவீன கருவியும் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சுனாமியால் மடிந்தனர். இயற்கையில் மிகையொலி என்பது இடியோசை மட்டும் தான். அதுவும் சில வினாடிகள் மட்டுமே நிகழ்வது.
பரபரப்பான இயந்திர உலகத்தில் வாழும் மனிதன், தன் நலன் கருதியாவது மாசுகளை உண்டுபண்ணும் எச்செயலிலும் ஈடுபடாமல், இயற்கையில் தான் பெற்ற உடல் என்னும் ஒப்பற்ற, உயிருள்ள கருவியை அலட்சியப்படுத்தாமல், மாசுகளிலிருந்து காத்து ஆரோக்கியமுடன் வாழ்வதே மிகச் சிறந்த செல்வமாகும், அறிவார்ந்த செயலுமாகும்.

ஒருதலை காதலா? தறுதலை காதலா?

By மருத்துவர் ச. இராமதாசு | Last Updated on : 03rd October 2016 01:55 AM | அ+அ அ- |


கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ்ச் சமூகம் பல்வேறு களங்களிலும் பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கி விட்டது. அதிலும் குறிப்பாக வணிகமயமாகிவிட்ட கல்வி, வேலையில்லாத் திண்டாட்டம், திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்றவற்றை மையமாகக் கொண்டு இயங்குகின்ற பொழுதுபோக்கு மனப்பான்மை, தொழில்துறையிலும், வேளாண்மையிலும் அக்கறையே காட்டாத தொலைநோக்குப் பார்வை ஏதுமற்ற அரசுகள் போன்றவை நமது இன்றைய வீழ்ச்சி நிலைக்கான காரணங்களாக அமைந்தன. மிகவும் குறிப்பாக நமது தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பெருங் காரணமாக அமைந்தது கட்டற்ற மது வணிகம்.
இளைஞர்களுக்கு மது போதையூட்ட தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. காதல் போதையூட்டுவதற்கு திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் பெண்களைக் கேலி செய்து பகடிப் பாடல்களைப் பாடுவதற்கு, பாடல்கள் எழுதிப் பதிவு செய்யப்பட்டு சந்து பொந்துகளில் எல்லாம் கூட அவை பெரும் இரைச்சலோடு ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பொறுக்கியாகவே, போக்கிரியாகவோ இருந்து கொண்டு வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்ற எவன் ஒருவனும் அவன் பார்க்க நேருகின்ற எந்தப் பெண்ணையும் துரத்தித் துரத்திக் காதலிக்கலாம் என்கிற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு வகையான சுய முன்னேற்றச் சிந்தனைகளை மனதிற் கொண்டே நமது தமிழ்நாட்டின் பெண் பிள்ளைகள் மிகவும் குறிப்பாக கிராம, பேரூர், நகரப் பகுதிகளின் பெண் பிள்ளைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிய வண்ண வண்ணக் கனவுகளோடு தான், பெற்றோர்களும் அவர்களைக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் ஒருதலைக்காதல் என்ற முகமூடியோடு அத்தகைய பெண்களைச் சுற்றிச் சுற்றி வருகின்ற தறுதலைகளுக்கு, சம்பந்தப்பட்ட மாணவிகளின் லட்சியங்களும், அந்த மாணவிகளைப் பெற்றவர்கள், தங்களது மகளைக் குறித்துக் காண்கின்ற எதிர்காலக் கனவுகளும் ஒரு பொருட்டாகத் தெரிவதேயில்லை.
தறுதலைக் காதலர்களின் நோக்கம் முழுவதும் காமக் குரூரமாகவும், காதல் என்ற பெயரில் பணம் பறிக்கிற கபடத்திட்டமாகவும் இருப்பதால் எத்தகைய இழிவான எல்லைக்கும் அவர்கள் செல்லத் துணிகிறார்கள், மிகவும் கொடூரமான வன்முறைகளால் அவர்கள் அடைய விரும்பிய பெண்களை கொலை செய்கிறார்கள்.
கொஞ்சமும் ஈவு இரக்கமின்றிப் பெண்பிள்ளைகளின் உயிர்களைப் பறிக்கின்ற இத்தகைய போக்கு, ஒட்டுமொத்தச் சமூகத்தையும் நிலைக்குலைய வைத்திருக்கிறது. மிகவும் குறிப்பாகப் பெண்களையும், அதிலும் குறிப்பாக படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் முன் வருகின்ற இளம் பெண்களையும் அச்சுறுத்தி நடுங்க வைப்பதாக மாறியிருக்கிறது.
இதன் விளைவாக நிகழ்காலத்தில் இளம் தலைமுறைப் பெண்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே தங்களை முடக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறுகின்றனர்.
இளம்பெண்கள், ஒருதலைக் காதல் தறுதலைகளால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக நேரும்போது, அதை அவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்ப உறவுகளிடம் தெரிவிக்காமல் மனதுக்குள்ளேயே நினைத்து நினைத்துக் குமைந்து கொண்டு கிடக்கின்றனர்.
அப்படித் தெரிவித்தால் தங்களது படிப்பும், பணி வாய்ப்பும் துண்டிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேரிடும் என்று அவர்கள் எண்ணுவதே அதற்குக் காரணமாகும்.
எந்த நேரமும் தன்னையே பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கின்ற ஒரு தறுதலையை, ஒரு பெண் நிராகரித்தால் அந்த நிராகரிப்பை அந்தத் தறுதலையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் அந்தப் பெண்ணைக் கொலை செய்து விடுகிறான்.
ஓர் ஆணும் பெண்ணும் பழக ஆரம்பித்த பின், அந்த ஆண் ஒரு கேடு கெட்ட தறுதலையாக இருப்பதை உணர்ந்துவிடுகின்ற அந்தப் பெண் அவன் வேண்டாம் என்று நிராகரிக்கும்போதும் அந்த பெண்ணை அவன் கொலை செய்து விடுகிறான். அதிலும் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு பையனைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டது தெரிந்துவிட்டால் அந்தப் பெண் அவளது பழைய தறுதலையால் உடனடியாகக் கொலை செய்யப்பட்டு விடுகிறாள்.
தன்னை எப்போதும் ஒருவன் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் காவல் நிலையத்திலோ தனது உறவுக்காரர்களிடமோ புகார் செய்தால், அப்போது அந்தத் தறுதலையின் கோபம் மேலும் அதிகமாகி விடுகிறது.
அந்தப் பெண் மீதும் தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, பல்வேறு வகையான கேள்விகளுக்கும், அறிவுரைகளுக்கும், அவமானங்களுக்கும் அவள் ஆளாக்கப்படுகிறாள். தான் நம்பிய ஒரு தறுதலை தன்னை ஏமாற்றிச் சுகங்கண்டு விட்டு விலகிப் போகும்போதும் அந்த அவமானம் தாங்காமல் தன்னையே மாய்த்துக் கொண்டு அந்தப் பெண் இறந்து போகிறாள்.
ஆக தறுதலைக் காதலாக இருந்தாலும், இருதலைக் காதலாக இருந்தாலும் அதன் பொருட்டு பாதிக்கப்படுவோரும், கொலை செய்யப்படுவோரும் இளம் பெண்களே ஆவர்.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டிப்பாளையத்தில் நவீனா என்ற 15 வயது பெண்ணை 30 வயது குடிகாரன் ஒருவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தான். அவன் கடைந்தெடுத்த ஒரு போக்கிரி என்பது அவனது ஊராரும், காவல்துறை வட்டாரங்களும் அறிந்த உண்மை.
ஒருமுறை குடிபோதையில் அவன் ரயில் தண்டவாளத்தில் விழுந்துவிட ரயில் சக்கரங்களில் சிதைந்து அவனது வலது கையும், வலது காலும் துண்டிக்கப்பட்டு விட்டன. மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு அவன் வெளியே வந்தவுடன் அவனைச் சுற்றி வளைத்த ஒரு குழுவினர், அவன் காதலித்த பெண்ணின் சாதிக்காரர்கள் அந்தக் காதலனின் கையையும், காலையும் வெட்டி விட்டதாகக் கதைக் கட்டி அந்தக் கதையை ஊடகங்களுக்குக் கொடுத்து விட்டு காவல் நிலையத்திலும் அதையே புகாராகக் கொடுத்தனர்.
இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு தொலைக்காட்சியின் விவாத அரங்கில் அந்தக் காதலனை ஒரு கை ஒரு காலோடு அமர வைத்து சமூக ஆர்வலர்களையும் உடன் அமர வைத்துக் கொண்டு விவாத அரங்கை நடத்தினர்.
அந்த நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் அடடா இது என்ன கொடுமை இப்படியா சாதி வெறி பிடித்து காதலர்களைப் பிரிப்பது என்றெல்லாம் அநியாயத்துக்கு வருத்தப்பட்டார்கள். ஆனால் அந்த தொலைக்காட்சி நாடகத்திற்குப் பிறகான காவல்துறை விசாரணையிலும், மருத்துவ ஆவணங்களிலும், உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலும் அவன் குடித்துவிட்டு ரயிலில் விழுந்து தான் தன் கை, காலை இழந்தான் என்பது வெட்ட வெளிச்சமானது.
உண்மை என்னவென்று வெட்ட வெளிச்சமானபின், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள், தாங்கள் நடத்திய அந்த நயவஞ்சக நாடகத்திற்கு மெல்லிய குரலில் வருத்தப்பட்டுக் கொண்டு அமைதியாகி விட்டனர். பல காதல் ஆதரவு நாடகங்களில் இப்படியெல்லாம் பொய்களும் புரட்டுகளும் கரைபுரண்டு ஓடியுள்ளன.
நீ எனக்கு வேண்டும். நான் உன்னை அடைந்தே தீருவேன். என்னைத் தவிர வேறு யாரும் உன்னை அடைய முடியாது என்றெல்லாம் ஒரு பெண்ணிடம் தொடர்ந்து வம்பு செய்து வருகின்ற ஒரு போக்கிரி, ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணைக் கொலையும் செய்து விடுகிறான்.
ஒரு பெண் தனக்குப் பிடிக்காதவனை நிராகரிக்கும் உரிமையற்றவளாகி உயிரை இழக்கிறாள் என்றால், இது சாதிப் பிரச்னையோ, காதல் பிரச்னையோ, ஒருதலைக் காதல் பிரச்னையோ, ஆண் - பெண் காதல் உரிமை பிரச்னையோ அல்ல.
இது முழுக்க முழுக்க ஒரு சமூகப் பிரச்னை. மகளிர் பாதுகாப்பினை கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்குகின்ற பிரச்னை. மகளிருக்கான கல்வி உரிமைகளையும், வேலை செய்யும் உரிமைகளையும் மறைமுகமாக அச்சுறுத்துகிற பிரச்னை.
இத்தகைய புரிதல்கள் ஏதும் இல்லாமல் போக்கிரிக் கும்பல்களை காதலன்களாகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிப் போகிறவர்களாகவும் சித்திரித்து அவர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசுவது என்பது நாகரிக சமூகத்துக்கும், பெண் இனத்துக்கும் செய்யப்படுகின்ற இழிவானதொரு இரண்டகமாகும்.
இத்தகைய இரண்டகர்களை முறியடித்து அம்பலப்படுத்த வேண்டியது மனச்சாட்சியுள்ள, பெண்களின் மேன்மையை விரும்புகின்ற அனைவரது உரிமையும் கடமையும் ஆகும்.
என்னை நிராகரிப்பவள், எனக்கு கிடைக்காமல் வேறு எவனுக்கோ கிடைக்கப் போகிறவள், இந்த உலகில் வாழவே கூடாது என்றெண்ணிக் கொலை செய்கின்ற, காதல் எனும் பெயரில் பெண்களை கடத்துகின்ற, காதல் கட்டப் பஞ்சாயத்துகளில் பணம் பறிக்கின்ற கும்பல்களுக்கு எப்படிப் பாடம் புகட்டப் போகிறீர்கள் என்று இளம்பெண்களின் கல்லறைகளில் இருந்து கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும்
இருக்கிறது.

Sunday, October 2, 2016

HC rejects plea to ban private practice of government doctors

  • SPECIAL CORRESPONDENT
THE HINDU
Petitioner has not mentioned where there is a legal bar on their pratice in private hospitals’

The Madras High Court Bench here has dismissed a public interest litigation petition seeking a direction to the State government and Tamil Nadu Medical Council to ban private practice of government doctors in all cadres in order to help them concentrate more on treating patients at government hospitals.

A Division Bench of Justices S. Nagamuthu and M.V. Muralidaran rejected the plea on the ground that the petitioner had not mentioned any specific instance of a government doctor involved in private practice of medicine and where there was any legal bar for government doctors to practice in private hospitals and nursing homes.

V Aarthi of North Gandhi Gramam near Karur district had filed the PIL petition in 2012 on the ground that it was not appropriate to permit government doctors alone to take up private practice when all other government servants including the policemen were regulated by a code of conduct which prohibited them from engaging in private businesses for profit.


“All government servants including doctors should be treated alike without any partiality,” she said and claimed that private practice by government doctors was banned in many States including Jammu and Kashmir.

Stating that a government woman doctor was hacked to death in her clinic in Thoothukudi in 2012 by the husband of a pregnant woman who died, the petitioner claimed that the doctor had to face such a serious consequence because of her failure to concentrate on treating the patient due to overwork.

“Government doctors should render their full service to the patients coming to the government hospitals but they unfortunately tended to focus on private practice and hence it should be immediately banned,” she said.



×

Saturday, October 1, 2016

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!


மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று காலை புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணித்தனர்.

மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான்.

அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.



மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.



மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.

மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன.

1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும்

2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம்.

3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும்

4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும்.

6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும்.

7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.

8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும்.

9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும்.

10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும்.

11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும்.

12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும்.

13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும்.

14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும்.

15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.



இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

-ரா.வளன் படம்: உ.பாண்டி

NEWS TODAY 25.09.2024