Wednesday, December 21, 2016

Ragging may derail Medical Council of India's approval for Manjeri Medical College

DECCAN CHRONICLE.
PublishedDec 21, 2016, 2:26 am I
MALAPPURAM: The ragging incident at the Manjeri Medical College, in which 21 senior students were suspended, may cast a shadow over the Medical Council of India's (MCI) approval for the institution if serious lapses are found on the part of the college administration in tackling the issue. The incident came just a month after the MCI expert panel's inspection of the college and its facilities for the approval of admissions. It was for the first time that ragging was reported in the institution since its establishment in 2013.

However, the college authorities have ruled out any action from the MCI and termed the incident as inconsequential. "The college administration has taken the issue seriously and preliminary actions were taken against the students. The anti-ragging cell at the college is active in making students aware of the repercussions and curbing the menace," said Dr. P.S. Sanjay, the in-charge of the men's hostel where the alleged the ragging took place. The three-member committee of teachers headed by Dr. P.J. Babu, which probes 43 complaints of ragging, would submit the inquiry report on Wednesday.

The anti-ragging committee of the college consisting of police and lawyers would also meet on Wednesday to discuss the probe outcome and decide further action. The incident came to light after a few first-year students were caught sleeping during the class hours a few days ago. The students disclosed to the teachers that the senior students had taken them out of rooms late in the night and forced them to do several activities like singing and some were made to drink water from toilet taps.

"The authorities have swung into action immediately after the issue was divulged. Forty-three students have complained of such minor issues and the college management committee decided to suspend them pending inquiry," Dr. Sanjay said. The Principal had sought an explanation from the parents of the 21 students on Monday. All the suspended students have been directed to stay away from the hostel and college campus until further orders.
'

சசிகலா சோனியா ஆக வேண்டாம்!

By மாலன்  |   Published on : 21st December 2016 02:07 AM 


தாயே தலைமை ஏற்க வருவாயே' என்று வருந்தி அழைத்துக் கொண்டிருந்தன சுவரொட்டிகள். இந்த அழைப்பை ஏற்பாரா? ஏற்பது தகுமா? முறையா? இது தர்மம்தானா என இரவுப் பொழுதுகளில் தொலைக்காட்சிகள் உரக்க விவாதித்துக் கொண்டிருக்கின்றன.
ஏற்றாலும் மறுத்தாலும் என்ன பெரிய மாற்றம் இங்கு நேர்ந்து விடப் போகிறது? ஆட்கள் மாறுவார்கள், அதிகாரங்கள் கை மாறும். ஆனால் அடிப்படைகள் மாறப்போவதில்லை, அதே கூழைக்கும்பிடுகள், ஜாதியையும் பணத்தையும் முன்னிறுத்திய அதே அரசியல், அதே ஆடம்பரப் பதாகைகள், ஒப்புக்கு ஓர் உட்கட்சி ஜனநாயகம்,இதுவரை இருந்த இன்ன பிற லட்சணங்களோடு பயணம் தொடரப் போகிறது என்ற எள்ளலோடு சாதாரண மக்கள் அந்தச் சுவரொட்டிகளையும் விவாதங்களையும் கடந்து போகிறார்கள்.
ஆனால் வரலாறு சிரிக்கிறது. வாய் விட்டல்ல. "இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என எனக்குத் தெரியாதா' என இதழ்க் கடையில் ஓர் இளநகையை ஒளித்துக் கொண்டு அது ஒதுங்கி நிற்கிறது வேடிக்கை பார்க்க.
பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த காட்சிகள் படங்களாக அதன் முன் விரிகின்றன. இதே போல் ஒரு டிசம்பர். ஆண்டு 1997. அரசியலுக்கு வரப்போவதில்லை என கணவர் மறைவின்போது அறிவித்திருந்த சோனியா காந்தி, ஆறு ஆண்டு மௌனத்தைக் கலைத்து, அடுத்த ஆண்டு அதாவது 1998 மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்யவிருப்பதாக அறிவிக்கிறார்.
அப்படி அறிவிக்கும்போது அவர் கட்சித் தலைவராகிவிடவில்லை. அப்போது கட்சியின் தலைவர் சீதாராம் கேசரி. கட்சி உறுப்பினர்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்.
அவராகப் பதவி விலகினால் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் ஏதும் புரட்சி செய்து அவரைக் கவிழ்த்து அந்தப் பதவிக்கு வர விரும்பவில்லை என்று சோனியா தன்னைத் தலைமை ஏற்கக் கோருகிறவர்களிடம் சொல்லி விடுகிறார்.
முதலில் கேசரியின் செல்லப் பிள்ளைகள் அகமது படேலும், குலாம் நபி ஆசாத்தும் மெல்ல அவரிடம் விஷயத்தைச் சொல்லி விலகிவிடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். "அடப் போங்கப்பா அந்த அம்மா என்னைப் பதவி விலகச் சொல்லியிருக்காது. இதெல்லாம் அர்ஜுன் சிங் வேலை. நீங்கள் எல்லாம் அர்ஜுன் சிங் சொல்லித்தான் என்னிடம் வந்து பேசுகிறீர்கள் என எனக்குத் தெரியாதா' என்று சிரித்துக் கொண்டே மறுக்கிறார்.
இது வேலைக்காகாது என்றதும் சீனியர்கள் களம் இறங்குகிறார்கள். பிராணப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி, ஜிதேந்திர பிரசாத் மூவரும் "கௌரவமா இறங்கிடுங்க, என்னத்துக்குப் பொல்லாப்பு' என்று கோடிகாட்டிப் பேசுகிறார்கள்.
கேசரி அசைந்து கொடுக்கவில்லை. சோனியா ஆதரவாளர்கள் புரட்சியைத் தொடங்குகிறார்கள். பிரணாப், அந்தோணி, பிரசாத் இவர்களோடு சரத் பவாரும் சேர்ந்து கொள்ள, நால்வரும் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.
அதிரடியாக நடவடிக்கை எடுத்து விடலாம் என்ற ஜிதேந்திர பிரசாத், சரத் பவார் யோசனைக்கு பிரணாப் முகர்ஜியும், அந்தோணியும் இணங்கவில்லை. கொஞ்சம் அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். களத்தில் இறங்கி ஆதரவு திரட்டும் பொறுப்பு அர்ஜுன் சிங்கிடமும் செயலர் வின்சென்ட் ஜார்ஜிடமும் ஒப்படைக்கப்படுகிறது
கேசரியின் ஆதரவாளர்களும் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் தலைமையில் களம் இறங்குகிறார்கள்.
கட்சியின் செயற்குழுவைக் (காங்கிரஸில் அதற்குப் பெயர் காரியக் கமிட்டி) கூட்டுமாறு சீனியர்கள் கேசரியை நெருக்குகிறார்கள். "அப்படி ஏதும் செய்துவிடாதீர்கள், கூட்டினால் அங்கு தீர்மானம் நிறைவேற்றி உங்களைப் பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள்' என்று தாரிக் அன்வர் கோஷ்டி கேசரியை எச்சரிக்கிறது. செயற்குழுவைக் கூட்டாமல் காலம் கடத்தி வருகிறார் கேசரி. ஆனால் தள்ளிப்போட முடியாத சூழல் ஏற்படுகிறது.
1998-ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைகிறது. அது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக, கேசரி மார்ச் 5, 1998 அன்று செயற்குழுவைக் கூட்டுகிறார். செயற்குழுவில் காங்கிரஸின் நாடாளுமன்றப் பிரிவுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தடுக்க வேண்டும் என்ற யோசனை முன் மொழியப்படுகிறது (அப்போது அந்தப் பதவியிலும் கேசரிதான் இருந்தார்).
"நாடாளுமன்றப் பிரிவுத் தலைவராக தான் வர வேண்டும் என்பதற்காக பவார் செய்யும் சூழ்ச்சி இது, சோனியா கட்சித் தலைவராக ஆனால் அவரே நாடாளுமன்றப் பிரிவின் தலைவராகவும் ஆக முயற்சிப்பார் என்பது தெரியாமல் பவார் இதைச் செய்கிறார், ஏமாந்து போவார்' என்று தாரிக் அன்வரிடம் கேசரி சொல்கிறார். அதெப்படி முடியும், சோனியா எம்.பி. ஆக இல்லையே என்று தாரிக் குழம்புகிறார்.
ஆனால் கேசரி சொன்னதே நடந்தது. எம்.பி. ஆக இல்லாமலேயே சோனியா நாடாளுமன்றப் பிரிவின் தலைவராக ஆனார். அதற்காக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டன.
திரைமறைவு வேலைகளின் அழுத்தம் அதிகரித்து நெருக்கடி முற்றியபோது, சோனியாவை சந்திக்கிறார் சீதாராம் கேசரி. "நானே ராஜிநாமா செய்து விடுகிறேன்' என்ற முடிவை அவர் தெரிவித்தபோது சோனியா கேட்ட ஒரே கேள்வி: "எப்போது?'
செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அதில் தான் ராஜிநாமா செய்யும் விருப்பத்தை அறிவிக்கிறார் கேசரி.
ஆனால் ஒரு நிபந்தனையும் விதிக்கிறார். "நான் அதிகாரபூர்வமாக எனது ராஜிநாமாவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (இதுதான் காங்கிரஸின் பொதுக்குழு) கூட்டத்தில்தான் அறிவிப்பேன்.
அவர்கள் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களிடம் நான் ராஜிநாமாவைக் கொடுப்பதுதான் முறை' என்கிறார். இது காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பாராத திருப்பம். அதிர்ச்சி.
ஒன்பது நாள்களுக்குப் பின் மார்ச் 14 அன்று மறுபடியும் செயற்குழு கூடுகிறது. 11 மணிக்கு கூட்டம். கூட்டம் தொடங்க சிலமணி நேரத்திற்கு முன் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் பிரணாப் முகர்ஜி வீட்டில் கூடி இரு அறிக்கைகளில் கையெழுத்து இடுகிறார்கள்.
ஒன்று காலதாமதம் செய்யாமல், கேசரி பதவி விலக வேண்டும். இரண்டு, கேசரி விலகுவதால் காலியாகும் கட்சித் தலைவர் பதவிக்கு சோனியா வர வேண்டும்
செயற்குழு கூட்டம் தொடங்கியதும், பிரணாப் முகர்ஜி, சீதாராம் கேசரி ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் உரையைப் படிக்கிறார். "என்ன நடக்கிறது இங்கே? இப்போது எதற்கு இது?' என்கிறார் கேசரி. "காங்கிரஸ் கட்சியின் விதி எண் 19, உட்பிரிவு ஜெ படி எடுக்கப்பட்ட முடிவு' என்கிறார் பிரணாப்.
விசேஷமான தருணங்களில் செயற்குழு அதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அப்பாலும் முடிவெடுக்கலாம். ஆனால் அந்த முடிவுகளுக்கு ஆறு மாதங்களுக்குள் பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கிறது விதி.
"விதி வலிது' என விரக்தியும் கோபமுமாக கேசரி கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார். உள்ளே "எங்கள் புதிய தலைவர் சோனியா வாழ்க' என்று கோஷங்கள் எழுகின்றன.
இவ்வளவு அமர்க்களத்திற்கு நடுவே கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்த சோனியா, 2004-இல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். தியாகி என்ற ஒளிவட்டம் தலைக்குப் பின் சுழன்றது.
அவர் பதவி ஏற்காததற்கான காரணங்கள் பல. அதையடுத்து எழுந்த விமர்சனங்கள் பல. அந்த விமர்சனங்களில் கவனிக்கத்தக்கது இந்தக் கேள்வி: ஆட்சியில் இருந்தால் அதன் செயல்களுக்கு பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லாமல் அதிகாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பிருக்கும்போது ஏன் போய் பதவியில் உட்கார்ந்து கொண்டு அல்லல்பட வேண்டும்?
அ.தி.மு.க. காங்கிரஸ் அல்ல. ஆனால் காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.விற்கும், ஏன் தனி ஒருவரை நம்பி நடத்தப்படுகிற எந்தக் கட்சிக்கும், சில ஒற்றுமைகள் உண்டு.
அவற்றில் ஒன்று, ஒப்புக்கு உட்கட்சி ஜனநாயகம் என்ற நடைமுறை. கட்சி அமைப்புகளின் பதவிக்கு முறையான தேர்தல் மூலம் அல்லாமல் தலைமையின் விருப்பு வெறுப்பின் பேரில் நியமனங்கள் செய்வது.
இரண்டு, அந்தக் கட்சிகள் அடித்தளத்தில் உள்ள தங்களது அமைப்பு பலத்தாலும், தங்கள் வேட்பாளர்களின் சொந்த பணம், தனிப்பட்ட செல்வாக்கு, பலம் ஆகியவற்றாலும், மாறி மாறி வீசுகிறஅரசியல் அலைகளின் காரணத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெற்றால்கூட அந்த வெற்றி, கட்சித் தலைவர் என்ற தனிநபரால் கிடைத்த வெற்றி என்ற பிரமையைக் கட்சிக்காரர்களிடம் உருவாக்குவது.
தலைவர்தான் நம்பர் ஒன், மற்றவர்கள் எல்லாம் பூஜ்ஜியங்கள். அந்த ஒன்றின் பின் அணிவகுத்தால்தான் அவர்களுக்கு மதிப்பு என்ற பிம்பத்தைக் கட்டமைத்து அவர்களைத் தன்னம்பிக்கை இழக்கச் செய்வது. அதன் மூலமாக அந்தத் தலைமைக்கு எதிராக மன எழுட்சி கொள்ளாமல் அவர்களை மழுங்கிப்போகச் செய்வது.
இது 90-கள் அல்ல. தொண்ணூறுகளின் இறுதியில் காய் நகர்த்தல்கள் மூலம் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு சோனியா வந்தார் என்றால் தொண்ணூறுகள் தொடங்குவதற்குச் சற்றுமுன் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜெயலலிதாவும் போராடித்தான் அடைய முடிந்தது. இன்று அந்த நிலை இரண்டு கட்சிகளிலும் இல்லை. உட்காரச் சொன்னால் மண்டியிடத் தயார் நிலையில்தான் கட்சி அமைப்பு இருக்கிறது
அன்றைய சோனியா போல், கட்சிப் பொறுப்பு ஆட்சிப் பொறுப்பு இவற்றிற்கான அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் இப்போது அமைதி காத்து வருகிறார் சசிகலா.
இன்று சசிகலா சோனியா அல்ல. ஆனால் நாளை அவர் சோனியா போல, ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்காமல், கட்சியின் தலைமைப் பொறுப்பின் வழி அதிகாரத்தை அடைவது, அனுபவிப்பது, தக்க வைத்துக் கொள்வது என்ற வழியைத் தேர்வு செய்வாரோ?
அப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்தால், அது சாமானியனுக்கு அபாயகரமானதாக இருக்கும். இரட்டை அதிகார மையங்கள் உருவாகும் என்பதல்ல கவலை. சோனியாவின் வழிகாட்டலில் மன்மோகன் சிங் ஆண்ட ஆண்டுகளில்தான் ஊழல் உச்சம் பெற்றது.
சசிகலா மக்களைச் சந்தித்து வாக்குகள் பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமரட்டும். ஜெயலலிதாவைப் போல கட்சித் தலைமைப் பொறுப்பிலும் தொடரட்டும்.
ஆனால், இறைவா, அவர் இன்னொரு சோனியாவாக ஆக வேண்டாம்.

Tuesday, December 20, 2016

ஏர் ஏசியா வழங்கும் கோலாலம்பூர் டூர் பேக்கேஜ்: டோண்ட் மிஸ் இட்! By கார்த்திகா வாசுதேவன் | Published on : 15th December 2016 01:50 PM

malasiya_tour

வந்தாச்சு டிசம்பர், நமக்கே நமக்கான புத்தம் புது வருஷத்தைக் கலக்கலாக கொண்டாட, எல்லாருக்குமே ஏதாவதொரு திட்டம் இருக்கும் தானே?!

யோசிச்சுப் பாருங்க, இந்த வருடத்தின் கடைசி நாளுக்கு திருப்தியாக பை, பை சொல்லி வழியனுப்பி விட்டு; வரப்போகும் ஃபிரெஷ்ஷான புது வருஷத்தை மலேசியாவுக்குப் போய் கொண்டாடினால் எப்படி இருக்குமென்று?. சூப்பராக இருக்கும் தானே!

வாழ்க்கைன்னா அப்பப்போ ஒரு மாற்றம் இருக்கணும். அந்த மாற்றத்தை இந்த வருஷம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தொடங்கத் திட்டமிடலாமா?!

எதுக்கு கோலாலம்பூரை யோசிக்கணும்? புது வருடக் கொண்டாட்டத்துக்கு வேறு நாடே இல்லையான்னு கூடத் தோணலாம். நாடுகள் நிறைய இருக்கலாம். ஆனால் அங்கே சென்று விடுமுறையைக் கொண்டாடுவதற்கான பயணச் செலவுகளும் நிறையவே ஆகுமே! அதனால் தான் பல ஆண்டுகளாக இந்தியர்களின் விடுமுறைக் கொண்டாட்டத்துக்கான முதல் தேர்வாக மலேசியாவே இருந்து வருகிறது.



உலகெங்கும் இருந்து மலேசியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் என்றென்றும் ஒரு சொர்க்கபூமி. அங்கே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய எல்லா விசயங்களுமே நமக்கு கிடைக்கும். மலேசியர்கள் பல நாட்டுக் கலாச்சாரங்களில் ஊறித் திளைத்த பண்பட்ட மனிதர்கள், அவர்களின் விருந்தோம்பல் ஒரு முறை அங்கு சென்றவர்களை மீண்டும், மீண்டும் அங்கே செல்லத் தூண்டும் படியிருக்கும். விடுமுறையில் கொண்டாடித் திளைக்கத் தோதான சாகஸங்கள் நிறைந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள், பரவசப்படுத்தும் சுவையுடன் கூடிய அற்புதமான உணவுகள், இவை அனைத்துமே சிக்கனமான பயணச் செலவில் நமக்குக் கிடைத்தால் யார் தான் மலேசியாவை விரும்ப மாட்டார்கள்! அதுசரி... இப்போது உங்களுக்கும் மலேசியாவுக்குப் போகும் ஆசை வந்து விட்டதா? அடடா இன்னும் டிக்கட் புக் பண்ணவில்லையே என்று வருந்துகிறீர்களா?

கவலையை விடுங்கள்; உங்களுக்காகத் தான் ‘ஏர் ஏசியாக்காரர்கள்’ ராயல் சிட்டி ஹைதராபாத்திலிருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமானச் சேவை தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போதும் உங்களுக்கு விடுமுறைக் கொண்டாட்டத்துக்கென கோலாலம்பூரைத் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது குழப்பமிருக்கிறதா? அப்படியானால் இங்கே கீழே பட்டியலிடப் பட்டிருக்கும் கோலாலம்பூரின் அற்புதங்கள் உங்களுக்காகத் தான். படித்து விட்டு உடனே ‘ஏர் ஏசியாவில்’ கோலாலம்பூர் செல்ல டிக்கெட் புக் பண்ணி விட வேண்டியது தானே!.

அப்படி என்ன தான் இருக்கிறது கோலாலம்பூரில்? இதோ லிஸ்ட்;



1. பெட்ரோனாஸ் கோபுரம் பாருங்கள்...

கோலாலம்பூருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது சுற்றுலாப் பயணத்தின் முதலடியை இங்கிருந்து தான் எடுத்து வைக்க வேண்டும். அமெரிக்க டுவின் டவர்களுக்கு இணையாக மற்றுமொரு இரட்டைக் கோபுரம். இப்போதும் இதன் கட்டுமான அமைப்பு உலக அரங்கில் கட்டடவியலாளர்கள் பலராலும் வியந்து போற்றப் பட்டுக் கொண்டிருப்பது தான் இதன் சிறப்பு. இது மொத்தம் 88 மாடி கொண்டது, அதில் இரண்டு வகையான பார்வை தளங்கள் உள்ளன. ஒன்று 41வது மாடியிலும், இரண்டாவது 86வது தளத்திலும் உள்ளது. உள்ளே செல்வதற்கு டிக்கெட் விலை குறைவு தான். மலேசியாவின் எந்த நகரத்திலிருந்தும் இந்த இரட்டைக் கோபுரங்களைக் காணலாம் என்றாலும் கோலாலம்பூரின் மாநாட்டு மையப் பூங்காவிலிருந்து இதைக் கண்டு களிப்பது தான் சாலச் சிறந்தது. இது பகற்பொழுதில் ஒரு விதமான தோற்றம் தரும், ஆனால் இரவுப் பொழுதே இந்த இரட்டைக் கோபுரத்தைக் காணப் மிகப் பொருத்தமான நேரம்.

2. ஜலன் அலரில் சாப்பிடலாம்...

சென்னையின் கையேந்தி பவன்களுக்கு ஈடாக மலேசியாவில் ஜலன் அலர் என்றொரு இடம் இருக்கிறது. இங்கே கிடைக்காத உணவு வகைகளே கிடையாது. மணக்க, மணக்க, கார, சாரமாக, நாவுக்கு ருசியாக தினுசு, தினுசாக தெருவோர உணவுகளை வயிற்றுக்கும், பர்சுக்கும் பழுதில்லாமல் ஒரு கை பார்க்கலாம். இங்கு தயாராகும் உணவுகள் அனைத்தும் மலேசிய அரசின் ‘சுத்தம் மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு’ உட்பட்டே தயாராகின்றன என்பதால் மக்கள் விரும்பி உண்கிறார்கள். அதனால் இந்தத் தெருக்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. விதம் விதமான சட்னிகளுக்கு ரசிகர்கள் எனில் உங்களது கோலாலம்பூர் பயணத்தில் நீங்களும் அந்தக் கூட்டத்தில் ஒருவராகி விடுவீர்கள். அங்கு கிடைக்கும் உணவு வகைகள் அனைத்துமே கூட்ட நெரிசலானாலும் காத்திருந்தாவது உண்ணலாம் எனும்படியான அபாரமான சுவை கொண்டவை.

3. உலகின் உயரமான கோபுரத்திலிருக்கிறோம் எனும் உணர்வைத் தரும் மெனாரா கோபுரம்:

உலகின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்று. மெனாரா அல்லது கே.எல் கோபுரம் என அழைக்கப்படும் இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து நீங்கள் மலேசியா நாட்டை முழுவதுமாகக் கண்டு களிக்கலாம். இந்த கோபுரத்தின் கடைசித் தளத்தில் பில்ட் ஆடியோ வசதியுடன் பொருத்தப் பட்டிருக்கும் தொலைநோக்கியால் நீங்கள் மலேசியாவைக் காணும் போது மொத்த மலேசியாவுக்கும் கோபுர உச்சியிலிருந்தவாறே ‘விர்ச்சுவல் சுற்றுலா’ சென்று வந்த உனர்வைப் பெற முடியும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய வகையிலான இத்தகைய தொழில் நுட்ப வசதிகள் மலேசியாவில் பல இடங்களிலும் நமக்குக் காணக் கிடைக்கின்றன. இந்தக் கோபுரத்தைப் பற்றிய இன்னொரு சிறப்பான விசயம் என்னவென்றால் ‘புனித ரமதான் மாதங்களில் இதன் உச்சியிலிருந்து பிறை பார்ப்பதை’ இஸ்லாமியர்கள் சிறப்பு மிக்கதாகக் கருதுகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த மெனாரா கோபுர உச்சியிலிருந்து உலகைக் காண்பது ஏர் ஏசியா விமானத்தில் பறந்தவாறு இந்த உலகைக் காண்பதற்கு ஈடானது.



4. உலகின் மிகப்பெரிய பறவைகள் பூங்கா...

கோலாலம்பூர் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் சென்று வரக் கூடிய மற்றொரு இடம் இந்த கே எல் பறவைகள் பூங்கா! சுமார் 3000 க்கும் அதிகமான பறவை இனங்களை இங்கே காண முடிகிறது.உலகில் பறவை ரசிகர்களை மிக அதிகமாக ஈர்க்கக் கூடிய வகையில் திறந்த வெளி பறவைகள் பூங்காவாக இது வடிவமைக்கப் பட்டிருப்பதால் உங்களுக்கு மிக அருகே பறவைகள் சிறகு உரசிப் பறந்து செல்வதை நீங்கள் மனப்பூர்வமாக உணர்ந்து அதன் இனிமையை அனுபவிக்கலாம். உள்ளூர் பறவை இனங்கள் மட்டுமல்ல பல வெளி நாட்டு பறவை இனங்களும் இறக்குமதி செய்யப் பட்டு உலக பறவை ஆர்வலர்களைக் கவரும் விதத்தில் இந்தப் பூங்கா உருவாக்கப் பட்டுள்ளது.

5. மலேசியாவைப் பற்றி புதிதாகத் தெரிந்து கொள்ள உதவும் ‘மலேசிய தேசிய அருங்காட்சியகம்’...

மலேசியக் கலாச்சாரத்தையும், வரலாற்றையும், அதன் பண்பாட்டையும் பற்றி நீங்கள் புதிதாகவோ அல்லது அதிகமாகவோ தெரிந்து கொள்ள விரும்பினால் உங்களது சிறப்பான தேர்வாக இருக்கப் போவது அதன் தேசிய அருங்காட்சியகமே! லேக் பூங்காவின் அருகில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் பாரம்பரியம் மிக்க இஸ்லாமியக் கலைகளின் நுட்பமான விவரங்கள் முதல் இன்றைய நவீன இஸ்லாமியக் கலைப் பொருட்கள் வரை காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இது தவிர இங்கே ரயில் அருங்காட்சியகமும் கூட உண்டு. அங்கே இந்நகர் உருவானது முதல் இங்கே மிகச் சிறப்பான முறையில் கட்டமைக்கப் பட்ட ரயில்வே நிர்வாக அமைப்பையும் அதன் வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

6. ஷாப்பிங் பிரியர்களுக்கென்றே உருவான சூரியா கே எல் சி சி சிட்டி செண்டர் மால்கள்...

ஷாப்பிங் செய்வதில் அதீத ஆர்வமா உங்களுக்கு? அப்படியானால் நீங்கள் நிச்சயம் ‘சூரியா கே எல் சி சி மால்களைத்’ தவற விடவே வாய்ப்பில்லை. இந்த 6 அடுக்கு ஷாப்பிங் மாலில் நீங்கள் வாங்க முடியாத பொருள் என்று ஒன்று இல்லவே இல்லை. சொந்த அம்மா, அப்பாவைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே இங்கே விலைக்கு வாங்கலாம். அத்தனை பொருட்களையுமே டியூட்டி ஃபிரீ கட்டணச் சலுகையில் பெறலாம் என்பதால் இந்த மால்களில் எப்போதும் கூட்ட நெரிசலுக்குக் குறைவே இருப்பதில்லை. இங்கே நீங்கள் பொருட்கள் வாங்குகிறீர்களோ இல்லையோ, இந்தியாவுக்கு விமானம் ஏறும் முன் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த ஷாப்பிங் மாலும் ஒன்று. ஏனெனில் இங்கு குவிக்கப் பட்டுள்ள பொருட்களை நீங்கள் வேறெங்கும் இப்படி மொத்தமாகக் காண்பதென்பது அரிதே!



7.சைனா டவுனுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள்...

மலேசியாவுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கிருக்கும் மக்கள் தொகையில் சீனர்களும் அதிகமிருப்பதை நாம் உணர முடியும். மலேசியத் தெருக்களில் சரிபாதி சீனர்கள் உலவுகிறார்கள். அங்கே குட்டி சைனாவுக்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வைத் தரும் இடத்தைத் தான் மலேசிய மக்கள் ‘மினி சைனா’ என்றழைக்கிறார்கள். இங்கே சென்றோமெனில் சைனாவுக்கே போய் விட்ட உணர்வு தான். சீனர்களின் பாரம்பரிய உணவு நிலையங்கள், சீனக் கோயில்கள், சைனா பஜார்கள் என அந்த இடம் முழுக்கவே ஒரே சீன மயம். கோலாலம்பூர் செல்பவர்கள் தவற விடாது காண வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

8. பட்ஜெட் ஷாப்பிங் செய்ய புகெட் பிண்டங் ஷாப்பிங்...

கே எல் மோனோ ரயில் நிலையத்திலிருந்து எளிதாகச் செல்லும் தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த புகெட் ஷாப்பிங் மையம். நாம் வாங்க நினைக்கும் அத்தனை பொருட்களும் தெருவோரங்களில் குவித்து வைக்கப் பட்டு அவற்றை நாம் பேரம் பேசி வாங்க முடியும் என்பது எத்தனை அருமையான விசயம். பலருக்கு பேரம் பேசி ஷாப்பிங் முடித்தால் தான் பொருள் வாங்கிய திருப்தியே கிடைக்கும். அப்படியானவர்கள் நிச்சயம் இந்த ஷாப்பிங் மையத்தை தங்களது மலேசிய சுற்றுலாவில் தவற விட்டு விடவே கூடாது. குறைந்த பட்சம் ஏர் ஏசியா சுற்றுலாப் பயணிகளின் பேக்கேஜ் அலவன்ஸுகளுக்காக அளிக்கும் முன்னுரிமைகளுக்காகவாவது நீங்கள் நிச்சயம் இங்கு ஏதாவது ஷாப்பிங் செய்வீர்கள்!

9. வண்ண மயமான ‘கே எல் பட்டர் ஃபிளை பூங்கா’...

தங்களது கோலாலம்பூர் பயணத்தில் இதுவரை யாருமே தவற விடாத மற்றோர் இடம். 120 வகையான பட்டர் ஃபிளை இனங்களுடன், வண்ண, வண்ணப் பூக்களும், பசுந்தளிர் செடி கொடிகளுமாக பார்க்கவே அந்த இடம் ஒரு மினி காட்டுக்குள் நுழைந்தாற் போன்ற உணர்வைத் தரக்கூடியது. அங்கிருக்கும் பட்டர் ஃபிளை வல்லுனர்கள் அவ்விடத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு பட்டர் ஃபிளை லைஃப் சைக்கிள், அவற்றின் இனப்பெருக்க முறை, உணவு சேகரிப்பு உள்ளிட்ட விவரங்களை எல்லாம் தெளிவாக விவரிக்கிறார்கள். மக்களுக்கு இந்த அபூர்வ உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி போதிக்க நினைக்கும் அவர்களது முயற்சி பாராட்டப் பட வேண்டிய ஒன்று.





10.கோலாலம்பூர் பத்து மலை குகைக் கோயில்...

கோலாலம்பூரை அடுத்து மிகக் குறுகிய தூரம் பயணித்தால் மலை உச்சியில் உள்ள பத்துமலை முருகன் கோயிலை அடையலாம். இது இந்துக்களின் குறிப்பாக மலேசியத் தமிழர்களின் புனிதத் தலமாகக் கொண்டாடப் படுகிறது. இங்கு எங்கு நோக்கினாலும் இந்து பக்தர்கள் கூட்டத்தையும், குட்டி, குட்டியாக இந்துக் கோயில்கலையும் காணலாம். பண்டிகைக் காலங்களில் மலேசியத் தமிழர்களில் பெரும்பான்மையோரை இங்கே தரிசிக்கலாம். மலை மேல் ஏற வெவ்வேறு இடங்களில் இருந்து 150 வழிகள் இருக்கின்றன. வழியெங்கும் குரங்குகளின் வழித் துணையுடன் பத்து மலை குகை காண மலை மேல் ஏறும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, பிறகெப்போதும் அது ஓர் இனிய அனுபவமாக மனதில் நிலைத்து விடும். அதைக் காட்டிலும் மலையேறி அலுப்புடன் இறங்கும் போது ஏர் ஏசியாவின் விருந்தோம்பல் உங்களை ஒவ்வொரு முறையும் பத்து மலை குகை காண ஏக்கம் கொள்ள வைத்து விடக் கூடும்.

11.அபூர்வ நீர் வாழ் உயிரிகளின் கண்காட்சியான கே எல் சி சி அக்குவேரியம்...

கோலாலம்பூர் தேசிய அருங்காட்சியகத்தின் மையத்தில் அமைந்துள்ள இதை தனித்த மீன் அருங்காட்சியகம் என்று மட்டுமே சொல்லி விட முடியாது. 5000 விதமான நீர் வாழ் உயிரினங்கள் இங்கே காட்சிப் படுத்தப் பட்டு பராமரிக்கப் படுகின்றன. இதன் பரப்பளவு சுமார் 60,000 சதுர அடிகள். இங்கு தான் தரைப் பகுதியில் இருந்து 100 அடி ஆழத்தில் அமைந்த 300 அடி நீள மீன் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு நீருக்கு அடியிலிருந்து கண்ணாடிக் குகைக்குள் இவற்றைக் கண்டு களிப்பது மிக அருமையான அனுவபமாயிருக்கும்.

12. மலேசிய அரச மாளிகையான இஸ்தானா நெஹாரா...

2011 ல் மலேசிய அரசருக்காக புது அரண்மனை கட்டப் படும் வரை அரச குடும்பத்தினரின் அரண்மனையாக இருந்தது இஸ்தானா நெஹாரா. புது அரண்மனைக்கு அரசர் இடம் பெயர்ந்ததும் இஸ்தானா அரசு ஹெரிடேஜ் அருங்காட்சியகமாகி விட்டது. இங்கே ஒவ்வொரு நாளும் காவலர்களின் பணி நேரம் முடிந்து அவர்கள் பணிமாற்றம் செய்யும் முறை ஒரு சடங்காக பார்வையாளர் முன்னிலையில் நடைபெறுகிறது. அது சுற்றுலாப் பயணிகளுக்கு காணக் கண் கொள்ளாக் காட்சி. அது மட்டுமல்ல மலேசியாவில் அரசு பண்டிகை நாட்களின் போதெல்லாம் இஸ்தானா நெஹாரா முழு விளக்கு அலங்காரத்தில் மின்னும் போது அதைப் பார்க்க தேவலோக மாளிகை போலிருக்கும். அரண்மனைக்குள்ளிருக்கும் சில தனிப்பட்ட அறைகளைப் பார்வையிடும் உரிமையைக் கூட சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியுள்ளது மலேசிய அரசு.



13.கே எல் சி சி பூங்காவில் செலவிடத் தகுந்த மாலை நேரங்கள்...

கல்லெறியும் தூரத்தில் மெனாரா கோபுரம், மற்றும் தேசிய மாநாட்டுப் பூங்கா இருக்க கோலாலம்பூரில் மாலை நேரங்கள் அனைத்தையும் பிரியமான நண்பர்களுடனும், உறவினர்களுடனும் செலவிடத் தக்க இடம் எனில் அதற்கு உகந்த இடம் கே எல் சி சி பூங்கா தான். அமர்ந்து பேசவும், காலாற நடந்து கொண்டே இளைப்பாற மிகச் சிறந்த இடமிது.

14.கலை நயமிக்க தெருவோர சுவரோவியம் காண ஜாமெக் மசூதிக்குச் செல்லலாம்...

கோலாலம்பூரில் கிழாங் மற்றும் கோம்பெக் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஜாமெக் மஸூதி அந்நாட்டிலுள்ள மிகப் பழமையான இடங்களில் ஒன்று. மூரிஷ் கட்டடக் கலைக்கு சான்றாக அங்குள்ள மசூதியக் கொண்டாடுகிறார்கள். மசூதியச் சுற்றியுள்ள சுவர்களில் வரையப் பட்டுள்ள சுவரோவியங்கள் மிகப் பழமையானவை என்பதோடு அழகானவையும் கூட. சுற்றுலாப் பயணிகள் தவற விடக் கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.

15.சலிப்படைய வாய்ப்பே தராத சன்வே பீச் காயல் தீம் பார்க்...

நீங்கள் குடும்பத்துடன் கோலாலம்பூர் சென்றிருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இந்த இடத்தைத் தவற விடவே கூடாது. சாகஸ நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பிடித்தமான கடற்கரை விளையாட்டுகள், நீர் விளையாட்டுகள், மிருகக் காட்சி சாலை, உணவகங்கள் என்று அந்த இடமே ஒட்டுமொத்த பொழுதுபோக்கு திடலாகக் காட்சியளிக்கும். குழந்தைகள் மிக விரும்பி ரசிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. உங்களது மொத்த கோலாலம்பூர் பயணத் திட்டத்தையும் நிறைவு செய்வதாக இந்த இடத்தை தேர்வு செய்து கொண்டால் முழுத் திருப்தியுடன் நீங்கள் உங்கள் சுற்றுலாவையும் முடித்துக் கொண்டு மன நிறைவுடன் உங்களது ஏர் ஏசியா கோலாலம்பூர் சுற்றுலாப் பயணத் திட்டத்தையும் நிறைவு செய்யலாம்.

ஏர் ஏசியா மனமுவந்த விருந்தோம்பலுடன் உங்களுக்கு அளிக்கும் அற்புதமான வாய்ப்புகளில் ஒன்று இந்த மலேசியச் சுற்றுப் பயணம். டிசம்பர் தொடங்கி நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன...உடனே உங்களுக்கான டிக்கெட்டுகளை புக் செய்து புத்தாண்டில் உங்கள் உன்னதமான மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் பெறுங்கள்.

பயணங்கள் சிறக்கட்டும்!

அன்புடன் ஏர் ஏசியா விமான சேவை!

'தமிழ் தெரிஞ்ச பொண்ணையே போடுங்க, கற்பழிக்கிறேன்'

By கார்த்திகேயன் வெங்கட்ராமன்
goundamani
நகைச்சுவை நடிப்பில் தனித்தன்மை வேண்டும் என்கிறார் கவுண்டமணி. நகைச்சுவை வசனங்களில் தங்கவேல். குரலின் விஷேசத்தன்மை எம்.ஆர்.ராதா. கோணங்கி சேஷ்டையில் சந்திர பாபு. இவங்க இந்த மாதிரி தனித்தன்மையிலதான் பிரபலமானங்க. காமெடி கலந்த நல்ல கேரக்டரும், பண்ணனும் என்பது இவரது விருப்பம்.

நகைச்சுவை நடிகரான இவரையே சிரிக்க வைத்த அனுபவங்கள் உண்டு. அவரே கூறுகிறார்.

‘கல்லுக்குள் ஈரம்’ படப்பிடிப்பின் போது நான் குடிச்சிட்டு வீட்டுக்கு வரேன். என் மகளாக நடித்த அருணா நான் குடிச்சிட்டு வந்ததைக்க கண்டுபிடிச்சு , உடனே யார் துட்டு குடுத்தாங்கன்னு கேக்க, 'பாரதிராஜா' ன்னு சொன்னவன், அடப்பாவி எனக்கு குடிக்க காசு கொடுத்திருக்காரேன்னு அவரோடயே சன்டை போட கிளம்புறேன்.

அந்த சமயத்தில் அருணா கதவ சாத்திட்டு 'எங்கேயும் போகாத, இங்கேயே உக்காரு' ன்னு என்னை பாத்து கத்தனும். உணர்ச்சி வேகத்தில தன்னுடைய தாய்மொழியான தெலுங்கிலேயே 'எங்கட போவுன்னு..இக்கட கூசு' ன்னு கத்த எனக்கு ஒரே சிரிப்பு. ஒரு வழியா அந்த காட்சிய படமாக்கி முடிச்சதும் பாரதிராஜா உட்பட எங்க எல்லாருக்குமே ஒரே சிரிப்பு.

'பெண்ணின் வாழ்க்கை' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் நான் அருணாவை கற்பழிக்கிற சீன். அவரைக் கட்டிப்பிடித்தவுடன் உணர்ச்சி வேகத்தில் தமிழில் கத்த வேண்டியவர் தெலுங்கிலேயே வசனம் பேச ஆரம்பிக்க, எனக்கு மூட் அவுட் ஆகி விட்டது. டைரக்டர் விஜயனிடம் உடனே, 'சார், தமிழ் தெரிஞ்ச பொண்ணையே போடுங்க, கற்பழிக்கிறேன்' ன்னு சொல்ல செட்டிலேயே ஒரே சிரிப்புதான்.

தமிழ் சினிமா உலகில் அண்மைக்காலமாக நிறைய பேர் படங்களை தயாரிக்கிறேன் என்று வந்திருப்பதும், நிறைய பேர் நான் நடிக்கிறேன் என்று வந்திருப்பதும் கவுண்டமணியால் வரவேற்க முடியாத விஷயங்கள்.

இந்த அபரிமிதமான வளர்ச்சி தேவையில்லை விஷயம் தெரிந்த அனுபவசாலிகள் உறுதியான திட்டமிட்ட குறிக்கோளுடன் செயல்பட்டால்தான் பட உலகம் முன்னேற முடியும் என்பது இவருடைய அபிப்பிராயம்.



(சினிமா எக்ஸ்பிரஸ் 15.01.83 இதழ்)

சசிகலாவுக்கு கேள்வி எழுப்பும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.!?

vikatan.com

திருச்சி : "அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது?. ஜெயலலிதாவுக்கு பிறகு ஜனநாயகப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, கொள்ளைபுறமாக ஒருவரை தேர்ந்தெடுக்கக்கூடாது," என திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் தெரிவித்தார்.

தலைமை ஏற்கச்சொல்லி சசிகலாவை அ.தி.மு.க.வினர் கூட்டம் கூட்டமாக சென்று வரவேற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் சின்னம்மா என்ற அடைமொழியுடன் சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் சசிகலா தான் கட்சித்தலைமையை ஏற்க வேண்டும் என அழைப்பது போல ஒரு உணர்வு தமிழகத்தில் வியாபத்திருக்கிறது. ஆனால் சசிகலாவுக்கு எதிர்ப்புகளும் கட்சியில் இருக்கத்தான் செய்கின்றன.

இதனை பிரதிபலிக்கும் வகையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது என கேள்வி எழுப்பி இருகிறார் திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கே.சவுந்திரராஜன். 1977ம் ஆண்டு துவங்கி 1984ம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தொடர்ச்சியாக இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், இன்று வரை அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார்.

அவரிடம் பேசினோம். "அம்மாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. இவற்றை தீர்க்க வேண்டியது அவசியமான ஒன்று. அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது வரை நடந்தவை குறித்தும், அவருக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட வேண்டும். இது குறித்து உடனே தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும்.

அம்மாவுக்கு பிறகு சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள். இவர்களுக்கு கட்சி மீது அக்கறையில்லை. பதவி கிடைத்துவிட்டது அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அதைவைத்து கொள்ளையடிக்க வேண்டும். அதற்காக அம்மாவுக்கு பிறகு சசிகலா என்கிறார்கள்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதியிருக்கிறது. அம்மா வீட்டில் வேலை செய்தவர்களை எல்லாம் கட்சியின் தலைவராக்கிவிடுவது ஜனநாயகமுள்ள கட்சிக்கு அழகா?. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க.வை சசிகலா வழிநடத்துவது எந்தவிதத்தில் சரி?.

அவர்கள் அடித்த கொள்ளை நாட்டுக்கே தெரியும். அப்படிப்பட்டவரை கட்சி தலைவராக்கினால், தமிழகம் தாங்காது. மக்கள் அம்மாவை நம்பிதான் ஓட்டுப்போட்டார்கள். இப்போது அவருக்கு பிறகு ஜனநாயகப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, கொள்ளைபுறமாக ஒருவரை தேர்ந்தெடுக்கக்கூடாது.

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவதை எம்.ஜி.ஆரின் விசுவாசிகளும், உண்மையான தொண்டர்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனால் அ.தி.மு.க.வை மக்கள் கைப்பற்றும் நிலை வரக்கூடும்.

இந்தக் கொள்ளை கும்பலுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரவாயில்லை. ஜனநாயகப்படி நல்ல தலைமையை தேர்த்தெடுக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. சசிகலா தான் கட்சியை தலைமையேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் கூடி முக்கிய முடிவெடுப்பார்கள்," என்றார்.

- சி. ய.ஆனந்தகுமார்,

5 ஆண்டுகளுக்கு முன் விரட்டப்பட்ட சசிகலா குடும்பத்தினர்... இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?



'vikatan.com

கட்சியில் உதவி செய்ய வைத்திருந்தவர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் உச்சபட்ச அதிகாரத்தை செலுத்துவதா?' என சீறித்தான் சசிகலாவுடன் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 13 பேரை, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் வெளியேற்றினார் ஜெயலலிதா. கட்சியை விட்டு நீக்கியதுடன், சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தார். இன்று வரையில் சசிகலாவைத்தவிர மற்றவர்கள் யாரும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இன்றோடு 5 ஆண்டுகள் கடந்து விட்டது. போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்று போயஸ் தோட்டம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. அன்று ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை என்ன என்பதைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.



ம.நடராஜன் (சசிகலாவின் கணவர்)

ஜெயலலிதா அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையை, எண்ணத்தை அவரிடம் விதைத்ததே இவர்தான் என சொல்லப்படுவதுண்டு. ஆரம்ப காலத்தில் சசிகலாவுடன் கார்டனில் ஆளுமையோடு வலம் வந்தவர் நடராஜன். பின்னர் கார்டனை விட்டு வெளியேறினாலும், தனக்கென ஒரு லாபியை உருவாக்கி இயங்க ஆரம்பித்தார். இது ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போக, அவரை விலக்கி வைக்க ஆரம்பித்தார். ஆட்சி அதிகாரத்தில் எல்லை மீறுவதை அறிந்த ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் உள்ளிட்டோரை வெளியேற்றினார். சசிகலாவை மீண்டும் சேர்த்துக்கொண்ட போதும், நடராஜன் மீது கோபத்துடனே இருந்தார். ஆள் கடத்தல், நில அபகரிப்பு வழக்குகள் நடராஜன் மீது பாய்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அதிகாரம் செலுத்தத் துவங்கியிருக்கிறார். போயஸ் கார்டனில் இப்போது இல்லை என்றாலும், சசிகலாவுக்கு ஆலோசனை சொல்வது நடராஜன்தானாம். நடராஜனின் மூவ்தான் சசிகலாவின் மூவ் என்கிறார்கள்.

மன்னார்குடி திவாகரன் (சசிகலாவின் தம்பி)

மன்னார்குடி சந்தரகோட்டையில் வசிக்கிறார் திவாகரன். டெல்டா பகுதியில் 'பாஸ்' என்றுதான் இவரை அழைக்கிறார்கள். மன்னார்குடியில் கிளைமேட் சோடா கம்பெனி நடத்தி வந்தவர், இப்போது கல்லூரியை நடத்தி வருகிறார். ஆள் கடத்தல், கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் இவர் மீது ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சர்வ அதிகாரத்துடன் வலம் வருகிறார். தனது சம்பந்தியான ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனை உளவுப்பிரிவு அதிகாரியாக நியமித்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் இவருக்குதான் முதல் மரியாதை. அரசியலில் மீண்டும் வலம் வரத்துவங்கி விட்டார்.

வி.என். சுதாகரன்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன்தான் சுதாகரன். சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவிக்கும் அளவுக்கு சுதாகரன் மேல் ஜெயலலிதாவுக்கு பிரியம் இருந்தது. வளர்ப்பு மகன் திருமணமும், சசிகலாவுடனான நட்புமே 1996 தேர்தலில் தோல்விக்கு காரணமாக அமைய... சசிகலாவோடு சுதாகரனும் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சுதாகரனை ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக வந்தபோதுகூட சுதாகரனை ஜெயலலிதா திரும்பிக்கூட பார்த்ததில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு சுதாகரன் வந்திருந்தார். இவருக்கு மிக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், அதிகாரத்தை செலுத்துவார் என்றே சொல்லப்படுகிறது.



டி.டி.வி. தினகரன்

வனிதாமணியின் மூத்த மகன் டி.டி.வி. தினகரன். ஒருகாலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளை இவர்தான் கவனித்து வந்தார். 1999ல் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர், அதன் பின்னர் தேனிக்கே குடியேறிவிட்டார். அப்போது அறிமுகமான ஓ.பன்னீர்செல்வம், தினகரனிடம் காட்டி பவ்யத்தால்தான், 2001ல் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். கட்சியில் ஓரங்கப்பட்டதால் யார் கண்ணிலும் படாமல் புதுச்சேரியில் குடியேறிய தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இப்போது மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறாது.

வி.பாஸ்கரன்

வனிதாமணியின் இரண்டாவது மகன். ஆரம்பத்தில் இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருந்தார். ஆங்கில சேனல்களுக்கு இணையாக தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தினார். ஆரம்பத்திலிருந்தே கல்குவாரி பிசினஸ் செய்து வந்தவர். சினிமாவில் ஆர்வம் காட்டினார். சினிமாவெல்லாம் வேண்டாம் என சசிகலா எச்சரிக்கை விடுக்க... அதையும் புறந்தள்ளி, 'தலைவன்' என்ற படத்தில் நடித்தார். மீடியாக்களில் இவர் கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்த... இவர் மீது வழக்குகள் பாய்ந்தன. சிறையில் தள்ளப்பட்டார். தற்போது கல்குவாரி பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார் பாஸ்கரன். மீண்டும் கார்டன் பக்கம் தலை காட்டக்கூடும் என்கிறார்கள்.

டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை கவனித்து வந்தார். ஜெயலலிதா, இவர் திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாநிலச் செயலாளராக ஆக்கப்பட்டார். தனக்கு எதிராக சதி செய்தார் என சொல்லப்பட்டு கட்டம் கட்டப்பட்டவர்களில் வெங்கடேஷும் ஒருவர். இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்த ஜெயலலிதா, சிறையில் தள்ளினார். அதன் பிறகு தனக்கு சொந்தமான ஸ்கேன் சென்டரை கவனிப்பது, கோல்ப் விளையாடுவது என 'தான் உண்டு தன் வேலை உண்டு' என இருந்தவர், ஜெ மறைவிற்கு பிறகு மீண்டும் ஆக்டிவ்வாக செயல்படத்துவங்கி இருக்கிறார். சசிகலா மீதான அதிருப்தியாளர்களை சரிசெய்ய இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இராவணன்

சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். மிடாஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர், மெல்ல மெல்ல கார்டனுக்குள் நுழைந்து, மேற்கு மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்டம் போட்டார். ஜெயலலிதாவுக்கும் மேலே சென்று ஆட்டம் போட்டவர் என சொல்லப்பட்ட ராவணன், பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தலை காட்டத்துவங்கி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு தன் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்தவர், மீண்டும் மேற்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கிறார்.

ராமச்சந்திரன்

நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனுக்கு தொண்டர்கள் தரும் மனுவை பரிசீலிக்கும் பொறுப்புதான் முன்னர் வழங்கப்பட்டது. கட்சியை விட்டு நீக்கியபிறகு அண்ணன் நடராஜன்தான் எல்லாம். நடராஜன் ஆலோசனைப்படிதான் இயங்குவார். அவர் எதிரில் உட்கார கூட மாட்டார். அந்தளவு மரியாதை. இப்போது சென்னை போயஸ் கார்டனில் இருந்து வரும் உத்தரவுகளை அண்ணன் நடராஜனுக்கு கொண்டு சேர்ப்பது இவர்தான். விரைவில் கட்சியிலும் அதிகாரம் செலுத்துவார் என்கிறார்கள்.

மகாதேவன்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரத்தோடு வலம் வந்தவர். ஜெ பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்தார். கட்சியை விட்டு விரட்டப்பட்ட பின்னர், வழக்குகள் பாய்ந்தன. எல்லாவற்றையும் சமாளித்து மருத்துவமனை, பேருந்து போக்குவரத்து தொழிலை நடத்தி வந்தவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகாரம் செலுத்த துவங்கினார். ஜெயலலிதா மறைந்த அன்று, ஜெயலலிதாவின் உடலுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தார். சசிகலா பொதுச்செயலாளராக ஆக வேண்டுமென தஞ்சை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், மகாதேவன் படமும் இடம்பெறும் அளவுக்கு, அதிகாரத்துடம் வலம் வரத்துவங்கி விட்டார்.

கலியபெருமாள்

சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்திதான் கலியபெருமாள். திருச்சி. கே.கே. நகரில் வசிக்கும் இவரின் கட்டுப்பாட்டில்தான் மத்திய மண்டல அ.தி.மு.க. இயங்கியது. தனக்கு வேண்டிய உளவுத்துறை அதிகாரி மூலம் கட்சி ஆட்களை உளவு பார்ப்பது இவரது முக்கிய வேலை. இப்போது அமைதியாகவே இருக்கிறார். மீண்டும் மத்திய மண்டல பொறுப்பாளராக வலம் வருவார் என்கிறார்கள்.

பழனிவேலு

நடராஜனின் சகோதரர் பழனிவேலு. நீக்கப்பட்டவர்களில் இவருடைய பெயர் 4வது இடத்தை பிடித்தது. இவர் போலீஸ்துறையில் பணியாற்றியதால், இவரை ஜெயலலிதா தனது பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துக்கொண்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கார்டனுக்குள் செல்வதும் வருவதுமாக இருந்தவர். தற்போது அண்ணன் நடராஜன் கிழித்த கோட்டை தாண்டுவதில்லை. விரைவில் நடராஜனின் ஆதரவோடு, அதிகாரத்துடன் வலம் வருவார் என சொல்லப்படுகிறது.

தங்கமணி

மகாதேவனின் தம்பி தங்கமணி. கட்சி விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார் என்றாலும், தன்னிடம் வரும் சிபாரிசுகளை செய்து கொடுக்க மட்டும் அதிகாரத்தை பயன்படுத்துவார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். சசிகலா ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, இவர் சீனுக்கு வரலாம் என்கிறார்கள்.

- ஏ. ராம்

நெட் ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார்.. சவால் கொடுக்குமா அமேசான் ப்ரைம் வீடியோ! 

#PlusMinus


ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசான், அமேசான் ப்ரைம் தனது புதிய சேவையை துவங்கியுள்ளது. இந்த சேவை மூலம் திரைப்படங்களை ஹச்.டி தொழில்நுட்பத்தில் ஆன்லைனிலும், ஆஃப் லைனிலும் பார்க்க முடியும் என்கிறது அமேசான். அமேசான் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தை கடந்த புதன்கிழமை துவங்கியது. இதற்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியாவில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெட் ப்ளிக்ஸ் ஹாட் ஸ்டார் இணையதளங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அளித்து வருகின்றன. ஹாட் ஸ்டார் மற்றும் நெட் ப்ளிக்ஸின் சேவைக்கட்டணம் மாதம் 99 ரூபாயிலிருந்து துவங்குகிறது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 1200 ரூபாயிலிருந்து சேவைக்கடணம் துவங்குகின்றன. ஆனால் அமேசான் ப்ரை அதிரடியாக வருடத்திற்கு 499 ரூபாய் என்ற ஆஃபரில் வழங்குகிறது. அதுமட்டுமில்லாது முதல் மாதம் இலவச சேவையை வழங்கியுள்ளது. இதற்கு தேவை ஒருவருக்கு அமேசான் தளத்தில் கணக்கு இருந்தாலே போதுமானது,

இந்தியாவில் என்ன சிறப்பு:

அமேசானின் இந்த புதிய சேவையில் இந்தியாவில் பாலிவுட், அமெரிக்க சீரியல்கள், மண்டல மொழி படங்கள் மற்றும் கேம்கள் என சேவையை வழங்கியுள்ளது. 142 நாடுகளில் அமேசான் ப்ரைம் சேவை லைவ்வில் உள்ளது. இதில் இந்தியாவில் சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் ஆபாசமான காட்சிகள் சென்சார் செய்யப்பட்டு மங்களாக காட்டப்படும். இதனை எந்த வித கோரிக்கையும் இன்றி தானாகவே முன்வந்து அமேசான் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களை நாங்கள் மதிக்கிறோம் அதனால் தான் சென்சார் செய்து வெளியிடுகிறோம் என்கிறது அமேசான். மேலும் குழந்தைகளுக்கான டிவி ஷோக்களையும் வழங்குகிறது. இது தவிர அமேசானின் சொந்த வீடியோக்களையும் வழங்குகிறது.



எதில் பார்க்க முடியும்?

இந்த சேவையை ஆண்ட்ராய்டு , ஐ-ஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப்களில் பெற முடியும். இந்த தளங்களில் லாக் இன் செய்து இந்த சேவையை பெறலாம். க்ரோம்காஸ்டில் இந்த சேவையை பெற முடியவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் கூகுள் க்ரோம்காஸ்ட் செட்டப்பை க்ரோம்காஸ்டில் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் இந்த‌ சேவையை பெற முடியும்.

விலையில் என்ன மாற்றம்:

அமேசான் ப்ரைம் வீடியோ தற்போது முதற்கட்டமாக வருடத்திற்கு 499 ரூபாய் என்ற அளவிலும், பின்பு வருடத்திற்கு 999 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் நெட்ப்ளிக்ஸ் பேசிக், ஸ்டாண்டர்டு,ப்ரீமியம் சேவைகளை முறையே ரூ 500, ரூ 650, ரூ 800 ஆகிய விலைகளில் வழங்குகிறது ஆனால் நெட் ப்ளிக்ஸின் கட்டணங்கள் அனைத்தும் மாதத்துக்கான கட்டணங்கள். ப்ரைமின் கட்டணம் வருடத்திற்கான கட்டணமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



தமிழில் என்ன இருக்கிறது?

தமிழின் சமீபத்திய ஹிட்களான கபாலி மற்றும் தெறி தான் அமேசான் ப்ரைமில் தமிழ் ரசிகள்களுக்கான ஸ்பெஷல் வருகைகள். இது தவிர மேலும் பல படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களை கவரும் விதத்தில் இந்த படங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மைனஸ் என்ன?

அதிரடி விலை சலுகையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையில் விலை மட்டுமே கவர்ச்சிகரமானதாக உள்ளது சேவைகளில் வழங்கப்படும் வீடியோக்களின் கலெக்ஷன் சரிவர திருப்திகரமானதாக இல்லை. இணைய வேகம் குறைவாக இருந்தால் போதும் என கூறியுள்ளது ஆனால் இது 4ஜி சேவைகளிலும் கூட நேரம் எடுத்து கொள்வது போன்ற ஆரம்ப சிக்கல்கள் உள்ளன. இவற்றை விரைவில் சரி செய்தால் ஹாட் ஸ்டார், நெட் ப்ளிக்ஸுக்கு டஃப் கொடுக்கலாம்.

அமேசானில் பொருள் வாங்கி கொண்டிருந்த அனைவரும் இந்த சேவையின் இலவச சோதனைக்கு தயார் ஆகி வருகின்றனர். ஒரு மாதம் கட்டாயம் இலவசம் என்பதால் வேகமாக இந்த சேவை பரவி வருகிறது. இந்தியாவில் ப்ரைம் டெலிவரியில் ஏற்கெனவே 7 லசம் வாடிக்கையாளர்கள் இருப்பது இதன் ப்ளஸ். இந்தியா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட சேவைகளின் வருகை திரையரங்குகளுக்கு சற்று ஆபத்து தான் என்றால் என்டர்டெயிண்மன்ட் துறையின் வளர்ச்சியாக தான் இதனை அணுக வேண்டும். ப்ரைம் கட்டாயம் இந்த துறையில் பெரிய சாவலை அளிக்கும் என்கிறனர் வாடிக்கையாளர்கள். நிச்சயம் மற்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களும் உத்திகளை மாற்றியமைக்கும் என நம்பலாம்.

ச.ஸ்ரீராம்

பசுவதைக்கும், ஜல்லிக்கட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.. எதிர்ப்பாளர்களை சாடும் ஜல்லிக்கட்டு ஆர்வலர் நர்மதா

க.சே. ரமணி பிரபா தேவி

தலைப்பாகை, இடுப்பில் துண்டு, வேட்டி அணிந்து விவசாயி போன்ற தோன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்ட நர்மதா போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகிறது.

ஜல்லிக்கட்டுக்கு பலரும் பலவிதமான போராட்டத்தை நடத்தினாலும் இந்தப் பெண்ணின் போராட்டம் அதிகம் கவனம் ஈர்ப்பதாக இருந்தது.

யார் இந்த நர்மதா என்ற தேடலின்போது நிறைய தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

ராஜபாளையத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் நர்மதா. சென்னையில் வளர்ந்துள்ளார், எம்.ஏ., எம்.பில். முடித்துப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அப்பா மதுப்பழக்கத்தின் பாதிப்பால் இறந்தவர் என்பதால் மதுவுக்கு எதிரான செயற்பாட்டாளராகவும் இருக்கிறார்.

காவிரிப் பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அம்பத்தூர் தொகுதியில் சுயேட்சையாக நின்று தேர்தலிலும் களம் கண்டிருக்கிறார். கணவர் நந்தகுமார் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இரு குழந்தைகள், குடும்பம் என கூட்டுக்குள் சுருங்கிவிடாமல், போராட்டக் களத்தில் இறங்கி சிறகு விரித்திருக்கிறார்.

இதுகுறித்து நர்மதாவிடம் நம்மிடம் கூறியதாவது:

சென்னையிலேயே பிறந்து வளர்ந்தாலும், என் பூர்வீகத்தின் மீது அலாதிப் பிரியம் எனக்கு. அதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்சனை ஏற்பட்டபோது, போராட ஆரம்பித்தேன். சொக்கலிங்கபுரம், மீனாட்சிபுரம் கிராமங்களில் தொடங்கிய பணி, இன்று காவிரிப் பிரச்சனைக்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும் டெல்லிப் பயணம் வரை நீண்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான போராட்டத்தை எப்படித் தொடங்கினீர்கள்?

அடிப்படையிலேயே எனக்கு இலக்கியங்கள் மீது ஈடுபாடு அதிகம். காடும், காடு சார்ந்த பகுதியுமான முல்லை நிலத்தில் ஆயர்கள் வாழ்ந்தார்கள். அவர்களிடம் ஆநிரைகள் (கால்நடைகள்) இருந்தன. அவற்றைப் பாதுகாக்க வீரம்மிக்க காளைகள் வளர்க்கப்பட்டன. அவற்றைப் பாதுகாக்கும் வலிமை கொண்ட ஆண்களை, காளைகளை அடக்கியவர்களை முல்லை நிலப் பெண்கள் மணந்தார்கள். கலித்தொகையில் இதற்கான பாடல்கள் அமையப் பெற்றுள்ளன.

சங்க இலக்கியங்களில் வெட்சிப்போர் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதையும், கரந்தைப் போர் அவற்றை மீட்டு வருவதையும் பேசுகிறது. இவை அனைத்தும் ஆதித்தமிழ்க் கலாச்சாரம்.

ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரத்தில் பிண்ணிப் பிணைந்திருக்கிறது. ஆனால், நீதிபதிகளோ கணினியில் ஜல்லிக்கட்டை விளையாடச் சொல்கிறார்கள்.

இம்முறை ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்புள்ளதா?

நடைபெறுமா என்ற அச்சத்தை விட, நடைபெற வேண்டும் என்ற உறுதிதான் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமை இல்லாததால் இந்த நிலையில் இருக்கிறோம். அவர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், விளைவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். தற்போது அதிமுகவில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால், திமுக ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

மாநில அரசு, எந்த வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

தற்போது உத்தரப் பிரதேச தேர்தலில் மட்டுமே மத்திய அரசு குறியாக இருக்கிறது. அங்கு வெற்றி பெறவேண்டும் என்பதைக் கவுரவப் பிரச்சினையாகப் பார்க்கிறது. உத்தரப் பிரதேச தேர்தல் மேலுள்ள அவர்களின் கவனத்தை நம்மீது திருப்பினால் மட்டுமே இது நடக்கும்.

நான் உச்ச நீதிமன்ற தடை உத்தரவை மீறச்சொல்லவில்லை. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டமியற்றலாமே? அதை அரசு செய்ய முக்கியமான தலைவர்கள் வலியுறுத்த வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் குரல் கொடுக்கவேண்டும்.

அதுதவிர விஷால், த்ரிஷா உள்ளிட்டோர், ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். தமிழ்ப்படங்களில் நடித்து சம்பாதித்துக்கொண்டே, தமிழ்க்கலாச்சாரத்தை எதிர்க்கும் நடிகர்களின் படங்களைப் பார்க்கக்கூடாது என்று தமிழ் மக்கள் உறுதியேற்க வேண்டும்.

மாடுகள் வளர்க்கும் ஆசை உண்டா?

(சிரிக்கிறார்... ) நான் சாணி அள்ளி, மாட்டைக் குளிப்பாட்டிவிட்டுத்தான் கல்லூரிக்கே செல்வேன். சென்னை அண்ணா நகரில் நிறைய நாட்கள் மாடு மேய்த்திருக்கிறேன்.

விவசாயிகளிடம் பேசினீர்களா?

ஆம், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் நீதிமன்ற உத்தரவு காரணமாக பயப்படுகிறார்கள். ஆனாலும் சிலர் எனக்கு முழுமையாக ஆதரவு அளிக்கின்றனர்.

பீட்டா அமைப்பு குறித்து?

உள்நாட்டு உருவாக்கங்களுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பு அது. அசைவப் பழக்கத்தை தடை செய்யச்சொல்ல பீட்டாவால் முடியுமா? நாயை வீட்டில் கட்டிப்போட்டு, பறவைகள், கிளிகளை கூண்டில் அடைப்பதை வதைப்பதாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏன் விவசாயிகள் மீது மட்டும் இந்த துவேஷம் என்று புரியவில்லை.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து சில ஆண்டுகள் முன்னர் வரை நாம் காளை மாடுகளை விவசாயத்துக்குப் பயன்படுத்தினோம். எனில் விவசாயிகள் பசுவதை செய்தார்கள் என்று அந்த அமைப்பு சொல்கிறதா? பசுவதைக்கும், ஜல்லிக்கட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்தான் பெரிய பெரிய அமைப்புகளில், பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

சில சக்திகள் ஜல்லிக்கட்டை ஒழித்து, தமிழர்களின் வீர உணர்வைக் குலைக்க எண்ணுகின்றன.



அதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்க ஆசைப்பட்டேன். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பாலமேடு வாடிவாசலுக்கு மாட்டு வண்டியில் வந்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தேன். அதற்கான ஏற்பாடுகளுடன் தலைப்பாகை, இடுப்பில் துண்டு, வேட்டி அணிந்துகொண்டு விவசாயி போன்ற தோன்றத்தில் கிளம்பினேன். இதற்கு முன்னால் மாட்டு வண்டி ஓட்டிப் பழக்கம் இல்லையென்றாலும் துணிந்து இறங்கினேன்.. ஆனால் அதற்குள் போலீசாருக்குத் தகவல் தெரிந்துவிட்டது. அவர்கள் என்னைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட இலவசங்களை மறுத்துவிட்டீர்களாமே?

ஆம், இலவசங்களின் மீது எனக்கு விருப்பமில்லை. அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதியை கிராமங்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தலாம் அல்லவா..

மது விற்ற காசைக் கொண்டு இலவசங்கள் அளிக்கின்றனர். என்னுடைய உறவினர்களில் பலர் இன்று குடிகாரர்களாக இருக்கின்றனர். என்னுடைய அப்பா குடிப்பழக்கத்தால்தான் அவர் உயிரை விட்டார். அந்தப் பணத்தில் இருந்து வழங்கும் இலவசங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இன்றுவரை ஆட்டுரலில் தான் அரைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஜல்லிக்கட்டு விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரையில் எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்கிறார் வீரத் தமிழச்சி நர்மதா.


சந்தேகம் சரியா 14: மாரடைப்பைத் தடுக்குமா `ஸ்டாடின்’ மாத்திரை?)

டாக்டர் கு. கணேசன்

எனக்கு வயது 50. என் அப்பாவுக்கு மாரடைப்பு வந்து `பை பாஸ்’ ஆபரேஷன் நடைபெற்றது. மாரடைப்பு பரம்பரையாக வரும் என்று படித்திருக்கிறேன். அதனால் எனக்கும் மாரடைப்பு வந்துவிடுமோ எனப் பயப்படுகிறேன். ‘ஸ்டாடின்’ மாத்திரை சாப்பிட்டால், மாரடைப்பு வராது எனக் கேள்விப்பட்டேன். இது சரியா?

இது சரியல்ல!

மாரடைப்பு வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது பரம்பரை வழியிலும் வருகிறது என்பது உண்மை. குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பிரச்சினை இருந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆண் 55 வயதுக்குக் குறைவாகவும், பெண் 65 வயதுக்குக் குறைவாகவும் இருந்து மாரடைப்பு வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். இது பொதுவான கருத்து.

பரம்பரை மட்டுமல்ல

உங்கள் அப்பாவுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது என்பதை மட்டும் வைத்துக்கொண்டு உங்களுக்கும் மாரடைப்பு வரும் என்று முடிவு செய்யக் கூடாது. பொதுவாக, ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிகக் கொலஸ்ட்ரால், புகைப் பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாத சோம்பல் வாழ்க்கை, பரம்பரை ஆகிய காரணிகள் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

இவற்றில் ஏதாவது இரண்டு காரணி கள் உங்களுக்கு இருக்குமானால், உடனடியாக இதய நிபுணரிடம் சென்று, இதய நோய் தொடர்பான முழு உடல் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். அதில் உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு தெரிந்தால், டாக்டர் ஆலோசனைப்படி ஸ்டாடின் மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டாடின் மாத்திரை மாரடைப்பை வர விடாமல் தடுக்கும் நல்லதொரு மருந்துதான். ஆனால், சரியான காரணம் இல்லாமலும் தேவையில்லாமலும், டாக்டர் பரிந்துரைக்காமலும் அதை எடுத்துக் கொள்ளக் கூடாது.

மாத்திரை போதாது

மாரடைப்புக் காரணமாகும் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை ஸ்டாடின் மாத்திரை 35 சதவீதம் மட்டுமே குறைக்கிறது. கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் ரத்தத்தில் அதிகரிக்கிறது.

கல்லீரல் HMG CoA Reductase எனும் என்சைமின் துணையோடு சுயமாகக் கொலஸ்ட்ராலைத் தயாரித்து ரத்தத்துக்கு அனுப்புவது ஒரு வழி. நாம் சாப்பிடும் உணவிலிருந்து ரத்தத்துக்கு நேரடியாகக் கொலஸ்ட்ரால் கிடைப்பது மற்றொரு வழி. ஸ்டாடின் மாத்திரை HMG CoA Reductase எனும் என்சைமைச் செயலிழக்கச் செய்வதால், கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது; ரத்தக் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. அதே நேரம், உணவிலி ருந்து கிடைக்கும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கத்தான் செய்யும். எனவே, ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்க ஸ்டாடின் மாத்திரை மட்டுமே போதாது. ஸ்டாடின் மாத்திரையோடு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும் தேவை.

கட்டுப்பாடு அவசியம்

எல்.டி.எல். கொலஸ்ட்ராலை நேரடியாக அதிகரிக்கும் செரிவுற்ற கொழுப்பு (Saturated fats) உணவுகளான பாமாயில், நெய், வெண்ணெய், வனஸ்பதி, பால் பொருட்கள், இறைச்சி, தேங்காய் எண்ணெய், பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இதயத்துக்கு ஆபத்து தருகிற டிரான்ஸ் கொழுப்பை அதிகரிக்கும் நொறுக்கு தீனிகளை நெருங்கக் கூடாது. துரித உணவையும் மென்பானங்களையும் ஓரங்கட்ட வேண்டும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன் உணவைச் சாப்பிட வேண்டும். வெள்ளைப் பூண்டு சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவை ரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைத்து, ஹெச்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்து மாரடைப்பைத் தடுக்கும்.

இவை தவிர, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோயை நெருங்கவிடக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மன அழுத்தம் ஆகாது. இப்படிப் பல விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியுமே தவிர, ஸ்டாடின் மாத்திரையை மட்டும் நம்புவது நல்லதல்ல!

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது

பிடிஐ

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வருமான வரித்துறை, பெட்ரோலிய அமைச்சகத்துடன் விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் பெயர், பான் எண், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும். இதன்மூலம், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு தானாகவே சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் தாமாக முன்வந்து காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் வெகுசிலரே தாமாக முன்வந்து விட்டுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, December 19, 2016

வெல்வதற்காகத் தான் போராட்டங்கள்; போராடினேன்... வென்றேன்: டாக்டர் ராஜலட்சுமி!

By ரவிவர்மா  |   Published on : 01st December 2016 11:35 AM  |   அ+அ அ-   |  

"ராஜ


dr

லட்சுமி சுந்தரம்' என்ற பெயரில் எழுத்தாளராக விளங்கும் டாக்டர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் சிவாஜி கணேசனின் குடும்ப மருத்துவர். இவரின் கணவர் கே.எம். ராதாகிருஷ்ணனும் பிரபல மருத்துவர். சிவாஜியின் அம்மா ராஜாமணி அம்மாள், சிவாஜி, ராம்குமார், பிரபு, அவர்களின் வாரிசுகள் என நாற்பது ஆண்டுகளாக, நான்கு தலைமுறைகளாக பணிகளைத் தொடர்ந்துகொண்டிருப்பவர். கடந்த 2012இல், வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர், ஏறத்தாழ நான்கு ஆண்டுகாலம் புற்றுநோயுடன் போராடியிருக்கிறார். பழுதான தாடை எலும்புகள், மேலண்ணம், பற்கள் எல்லாவற்றையும் இழந்ததில் அழகிய முகத்தோற்றம் மாறியது; குரலும் மாறியது. ஆனாலும், தளராத தன் மன உறுதியாலும், மன எழுச்சியாலும், நோயை வென்று மீண்டு வந்து, தன் மருத்துவப் பணியையும், எழுத்துப்பணியையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார். 75வயது நிரம்பிய அவரை சென்னை, தியாகராயநகரில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்தபோது, பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்:
"என் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம். தந்தை சுந்தரம் கால்நடை மருத்துவராக இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு அப்பா ஆந்திராவில் பணியாற்றி வந்ததால் நான் ஆரம்பக்கல்வியை அங்கே பயின்றேன். சுதந்திரத்திற்குப் பிறகு, என் தந்தை, தன் குழந்தைகளுக்கு நுண்கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு விருப்ப மாற்றம் பெற்றார். என் தாயார் பாக்யலட்சுமி ஆங்கில வழி கல்வி கற்றவர். அவர், புகழ்பெற்ற ஆங்கில நாவல்களை எனக்கு அறிமுகம் செய்தார். நான்கு பெண் குழந்தைகளில் நான்தான் மூத்தவள். நாலும் பெண்மக்களாகப் போய்விட்டதே என்று யாராவது அப்பாவிடம் வருத்தமாகப் பேசினால், அப்பா அதை மறுப்பார். "பெண் என்றால் பொன்' என்று மகிழ்ச்சியோடு கூறுவார். யாரிடமும் எங்களை விட்டுக்கொடுக்க மாட்டார். எங்கள் இளம் வயதிலேயே "கண்ணன்' என்கிற குழந்தைகள் பத்திரிகையை வாங்கிவருவார். சிறுவயதில் ஒரு காகிதத்தில் "சின்ட்ரெல்லா' கதையை நாடகமாக எழுதிக்கொண்டிருந்தேன். என் எழுத்தார்வத்தைக் கண்ட என் தந்தை ஓடிச்சென்று ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கிவந்து கொடுத்து, "இந்தா... இதில் எழுது..!' என்று ஊக்குவித்தார்.
என் பதிமூன்றாம் வயதில் என் தந்தை இறந்தபோது, குடும்பத்தின் மூத்தபெண் சம்பாத்தியம் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றது மத்திய தர குடும்பத்தின் வாய்ப்பாடு. ஆசிரியை அல்லது மருத்துவர் இரண்டில் ஒரு முடிவை எடுக்கவேண்டும். இறைவனின் ஆசீர்வாதத்தால் இரண்டுமே நிறைவேறியது. மருத்துவத்துறையில் எம்.டி பட்டம் பெற்று மருத்துவராகி, பின்பு மருத்துவத் துறையிலேயே பேராசிரியராகவும் பணியாற்றினேன்.
அம்மாவுக்கு ஆறு மொழிகள் பேச, எழுத, படிக்கத் தெரியும். அவர், இசை, நாட்டியம் அனைத்தையும் கற்றுத்தந்தார். அம்மாவின் உதவியால் ஸ்ரீநாராயண குருவின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன்.
மருத்துவ நிபுணர் கே.எம்.ராதாகிருஷ்ணனை மணந்தேன். நானும் அவரும் சிவாஜியின் குடும்ப மருத்துவராக இருந்ததால், நாங்கள் இருவரும் இணைந்தே சிவாஜி குடும்பத்தினருக்கு சிகிச்சையளித்து வந்தோம். ஒரு கட்டத்தில் என் கணவரைவிட நானே அதிகம் பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் அம்மா ராஜாமணி அம்மாவில் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் குடும்பத்துடன் எங்கள் பணி தொடர்கிறது.
டிசம்பர் -1 உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஒருமுறை சிவாஜியிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும் என்று கூறினேன். அவர் சம்மதித்து "கான்செப்ட்' என்ன என்று கேட்டார். கூறினேன், உடனே அவர் நானே இக்குறும்படத்தை தயாரிக்கிறேன் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேபோன்று அவரே தயாரிப்பு செலவை ஏற்று நடித்தும் கொடுத்தார். அநேகமாக சிவாஜி நடித்த ஒரே குறும்படம் இதுவாகத்தான் இருக்கும்.
என்னுடைய எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் அமரர் சாண்டில்யன். அவர் ஆசிரியராக இருந்த சுதேசமித்திரன் இதழில் பன்னாரி மாரியம்மன் குறித்த என் முதல் சிறுகதை வெளிவந்தது. அதைத் தொடர்ந்து சுதேசமித்திரன் ஆசிரியரான மா.ராசமாணிக்கனாரின் புதல்வர் மா.ரா.இளங்கோவன் என் எழுத்துக்களைச் செப்பனிட்டார். 1977 இல் அமுதசுரபி மாத இதழின் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து மருத்துவக் கட்டுரைகளை அமுதசுரபியில் எழுதுமாறு ஆசிரியர் விக்கிரமன் பணித்தார். இதனால், பல மருத்துவ மேதைகளைப் பேட்டி கண்டேன். இந்த அனுபவங்கள், "என் மருத்துவமும் எழுத்தார்வமும் இயைந்து வெற்றி கண்ட அற்புதக் களம்' ஆகும்.
கவிஞர் சுப்பு ஆறுமுகத்துடன் இணைந்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரங்களை பல ஊர்களில் நடத்தினோம். கவியரங்குகளில் கவிதை பாடவும், பட்டிமன்றங்களில் உரையாற்றவும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. மத்திய அரசின் சார்பில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பயிற்சிக்காக ஆறுமாதம் லண்டனில் இருந்தபோது சந்தித்த அனுபவங்களை வைத்து, எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கதைகளை எழுதினேன். நான் மார்ச்சுவரியில் பணியாற்றிய அனுபவங்களை வைத்து பெரிய நூலே எழுதலாம்.
அமரர் ஏ.நடராஜன் சென்னை வானொலியின் இயக்குநராக இருந்தபோது, "மானுடம் வென்றது', "முத்து முத்து மழைத்துளி' உள்ளிட்ட அறிவியல் தொடர்களை எழுத வாய்ப்பளித்தார்.
தொழுநோயாளிகளின் பிரச்னைகளைப் பேசும், "நெஞ்சகத்தின் அன்பலைகள்' என்ற நாவலை எழுதினேன். இது, மருத்துவர்களாலும், வாசகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அமரர் விக்கிரமன் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றிய பெருமையும் எனக்குக் கிடைத்தது.
என் ஒரே மகள் பவானியும், மருமகன் பாலகுமாரும் பல் மருத்துவ பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். பேரன் சாயி பிரகலாத். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூன்று சகோதரிகளும், 80-வயதிலும் ஓய்வெடுக்காமல் காமாட்சி மருத்துவமனையில் பணியாற்றிவரும் என் அன்பான கணவரும் நான் சாய்ந்துகொள்ள தூணாய் நிற்பவர்கள். புற்றுநோய் குறித்த ஆய்வுகளில் கையெழுத்திட்டு வந்த எனக்கு நான்காண்டுகளுக்கு முன்பு... வாய்ப்புற்று நோய் வந்தபோது.... அதிர்ச்சிதான்... சமாளித்தேன். தேறினேன்.
இனி என் செவிகளும் கைகளும்தான் நன்கு இயங்கும்... பேசுவது சற்று சிரமம்தான். எனவே, இலக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை.
ஆனால், என் உயிர் மூச்சாக விளங்கும் இலக்கிய உலகத்தில் எழுத்துக்கள் மூலம் நான் இயங்கிக்கொண்டிருப்பேன்! தற்போது, சிறுகதைகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அனைத்து முயற்சிகளும் என் அன்னைக்கே காணிக்கை. வரவிருக்கும் நூலின் முகப்பிற்காக நான் எழுதிய ஒரு கவிதை:
பத்துத் திங்கள் எனைச் சுமந்து
பனி நீர் கொடியால் உறவு பிணைத்து
சத்தும் நீரும் நாபிக் காலவாய்
வழியே தந்து ஊணுயிர் வளர்த்து
முத்துப் பெட்டக கருவறை திறந்து
முழங்காலருகே வீழ்ந்த போது
முத்தமிழ் பாலைச் சேர்த்து ஊட்டிய
அன்னையே உனக்கென் முதல் வணக்கம்!''

Medical education:

Easy entry for ‘foreign’ MBBS riles doctors

DECCAN CHRONICLE.

THIRUVANANTHAPURAM: Widespread resentment prevails among doctors and medical associations over the Centre’s move to cancel the Foreign Medical Graduates Examination (FMGE), the qualifying test for Indian students who have done their MBBS abroad. The proposed move will do away with the qualifying tests for those who did their MBBS from countries like China, Russia, Nepal, South East Asia and Eastern European countries. At present, they have to clear the FMGE before practising in India. The health ministry sent a proposal in this regard to the Medical Council of India based on a plea that it could plug the shortage of doctors in the country.

IMA state president Dr Jayakrishnan said screening test was being done away with in the name of removing deficiency of doctors in rural areas. “However, the basic problem was that the training in most foreign countries from where these students do MBBS was not on par with facilities available in India,” he said and added, “The doctors trained outside might not be able to practice in rural areas.” The IMA believes that many of them who go abroad for studies may not prefer to work in rural and backward areas especially Bihar, Odisha, Chhattisgarh or Jharkhand. The IMA suggested that in order to meet the shortage of doctors in rural areas, the government should allot medical colleges after taking state-wide medical manpower assessment.

Another alternative could be to establish a central medical service cadre to deploy doctors wherever they are needed. “It is strange that on the one hand the government was planning to start Licentiate examination for doctors in the country and on the other hand doing away with screening exams for foreign students,” Dr Jayakrishnan said. KGMOA state secretary Dr Raoof K.A. criticised the Centre’s move to do away with the qualification exams. He said there should be uniformity in norms for registration.

“Giving relaxation to MBBS students from foreign institutions will amount to discrimination. The government should not go ahead with the decision,” he said. A section of doctors said the students of private medical colleges could be better in objective theory examinations, but when it came to practical experience there was nothing like a government set up. Most doctors especially those in the north India are hesitant to work in rural and remote areas because of lack of basic infrastructure facilities. “I think the government should concentrate on providing better facilities in rural areas and upgrading medical care services,” he added.

RAC seats increase in all classes; side lower berths to go south

By B Anbuselvan | Express News Service | Published: 18th December 2016 04:11 AM |

Last Updated: 18th December 2016 04:11 AM | A+A A- |



For representational purpose | EPS


VELLORE : Want to travel long distance, but stuck with the dreaded RAC ticket? Fret not, as the Indian Railways has decided to reduce sleeper berths across all classes to accommodate more RAC ticket holders from January 16 next year. This plan aims at accommodating more passengers in the waiting list.

Presently, five side lower sleeper berths are earmarked per coach in the Sleeper Class. This arrangement accommodates 10 RAC ticket holders.

When the new rules will come into force, 14 RAC ticket holders will be benefited, as two additional side lower berths will be earmarked for them.

Similarly, the number of RAC seats earmarked in AC 3-tier class will be increased from four to eight at the expense of two side berths.

Similarly, RAC seats in II class AC will rise from four to six at the expense of a side berth.

Quoting the recent railway board order, official sources from the Southern Railway told Express that the revised allocation of seats would increase the chances of waitlisted passengers to get RAC seats.

“More than 50 per cent of trains operated in the Southern Railway region run with 24 coaches (maximum permitted number). Each train has 13 to 15 sleeper coaches.

The revised allocation would add a minimum of 35 to 40 passengers in all the classes,” added an officer.
The Southern Railway covers Tamil Nadu and Kerala, with six head divisions at Chennai, Madurai, Salem, Tiruchy, Thiruvananathapuram and Palakkad.

According to officials, this new arrangement would mainly benefit a few highly-congested sections, including Chennai-Howrah, Chennai-New Delhi, Chennai-Madurai, Chennai-Thriuvananthapuram and Katpadi-Howrah.

Officials said berths, which remain vacant in the intermediate stations on several long distance routes, including Mangaluru, Mumbai and Hyderabad, even after catering to all the RAC passengers, will get filled under the new arrangement.

However, the flip side of the move is that it would reduce the chances of senior citizens and pregnant women getting side lower berths. T Mohammed Mubeen, member of Divisional Rail Users Consultative Committee (DRUCC), Chennai, said, “Many senior citizens prefer walking into reservation counters over online booking to get lower berths. If two persons occupy the side berths, elders and pregnant women will have to negotiate with the passengers for lower berths,” he added.

The board directed the railway zones to implement the changes, with effect January 16, 2017, on trains that do not run with LHB coaches.




ESIC hosp in a fix as MCI declines renewal permission

By Ram M Sundaram | Express News Service | Published: 18th December 2016 01:50 AM |

Last Updated: 18th December 2016 04:46 AM | A+A A- |


CHENNAI: The ESIC Medical College Hospital, Chennai, is in troubled waters again after the Medical Council of India declined renewal of MBBS admissions for the forthcoming academic year.

The apex medical regulating body has cited unhygienic student hostel rooms, underqualified staff and shortage of essential facilities as reasons for rejecting the proposal to renew permission for fifth batch.

It all began in March last when the Employees’ State Insurance Corporation under the Union Labour Ministry signalled its intention to withdraw from the field of medical education. As this raised questions about future of hundreds of students studying in 11 institutes under the corporation, including the one in Chennai, the college located in K K Nagar witnessed a series of protests by students and staff condemning the corporation’s move.

After much struggle, it finally took the State government’s intervention to restore calm after it took over the operation of the institute under an agreement with the Centre.

Amid all this chaos, the MCI denied permission to admit students pointing out a series of deficiencies for the 2016-17 batch (4th batch). This was repealed after the ESIC authorities submitted compliance report.
However, the same problem has seemed to have surfaced again this year. The executive committee of MCI which met on October 10 declined permission to admit students for MBBS course in the forthcoming year.
The committee members who inspected the college in the previous week cited as many as 25 reasons to deny permission, including 15.97 per cent deficiency in faculty and 27.94 per cent shortage of resident doctors.

Their report also mentioned that the college’s medical superintendent Sowmya Sampath possessed only eight years of administrative experience against requirement of 10 years and hence was not qualified to hold the post. When Express contacted her, she refused to comment.
“Apart from leaky roofs in the central library, the exam hall, students’ hostel were under construction and there was no internet connection,” government sources said.

Responding to this, a senior ESIC administrator said that they have rectified these deficiencies within the stipulated deadline (30 days) and have sent a compliance report to the MCI. The college is awaiting fresh inspection from the committee members before May.


புயல் கற்றுத் தந்த பாடம்

ராஜலஷ்மி நிர்மல்

கடந்த வார வார்தா புயல் நம்மை கிட்டத்தட்ட அபாயத்தின் உச்சிக்கு அழைத்து சென்றுவிட்டது. இதுபோன்ற ஒரு புயல் காற்றை சென்னை சந்திக்கவில்லை என்று சொல்கின்றனர். புயல் ஓய்ந்த பின்னரே எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பதை பார்க்கமுடிந்தது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடந்தன. அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களும் மிகப் பெரிய அளவுக்கு சேதமடைந்தன. வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பு 6,500 கோடி ரூபாய் இருக்கும் என அசோசேம் மதிப்பிட்டுள்ளது. இது ஒரு தனி நிகழ்வு அல்ல. இந்தியா முழுவதும் வருடந்தோறும் புயலால் மிகப் பெரிய பொருளாதார இழப்பு நேரிடுகிறது என்பதே உண்மை.

பொதுவாக புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது தனிநபர்களின் பொருட்கள், வாகனங்கள், வீடு ஆகியவைதான் மிகப்பெரிய அளவு பாதிப்புக்கு உள்ளாகும். இவற்றிக்கு காப்பீடு எடுத்திருந்தால் இழப்பை ஈடுகட்டிருக்காலமே என்று நமக்கு தோன்றும். சிலர் காப்பீடு எடுத்திருப்பார்கள் ஆனால் இழப்பீடு கோரும் பொழுது இவை உங்கள் பாலிசியின் கீழ் வரவில்லை என இழப்பீடு மறுக்கப்படும். ஆகவே காப்பீடு எடுக்கும்போது கவனமாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது. கார் மற்றும் வீடுகளுக்கான காப்பீடு எடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வாகன காப்பீடு

பொதுவாக இருவகையான வாகன காப்பீடுகள் உள்ளன. ஒன்று தானாக பாதிப்பு ஏற்படுவதற்கான காப்பீடு.மற்றொன்று மூன்றாவது நபரால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீடு. புயல் மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பு மூன்றாவது நபரால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீட்டின் கீழ் வரும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தில் நிறைய கார்கள் பாதிப்புக்கு உள்ளாயின. காப்பீடு செய்து வைத்திருந்தவர்கள் பாதிப் படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கோரினர். ஆனால் பலருக்கு இழப்பீடு விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன. தண்ணீர் தேங்கியிருந்த பகுதியில் தொடர்ந்து இருந்ததால் ஏற்பட்ட தொடர்ச்சியான அழிவு என்று மறுத்தனர். தொடர்ச்சியான அழிவு வாகன காப்பீட்டின் கீழ் வருவதில்லை என்று ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்தை சார்ந்த சஞ்சய் தத்தா கூறுகிறார்.

புயல் போன்ற இயற்கை பேரிடர் களுக்கு அப்படி இல்லை. மரத்தின் கீழ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு சூறாவளி காற்றினால் மரம் சாய்ந்து வாகனத்திற்கு இழப்பீடு ஏற்படுமாயின் அது வாகன காப்பீட்டின் கீழ் வரும் என்கிறார் எஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டு பிரிவின் தலைவர் பங்கஜ் வர்மா.

காரில் உள்ள மியூசிக் பிளேயர், ஸ்டீரியோ சிஸ்டம்ஸ், பார்க்கிங் கேமரா ஆகியவை சாதரணமான வாகன காப்பீட்டில் வராது. காரில் ரப்பர், பிளாஸ்டிக், நைலான் பகுதிகள், டயர், டியூப், பேட்டரி ஆகியவற்றில் 50 சதவீதம் தேய்மானமாக கருதப்படும். கண்ணாடி பாகங்களுக்கு 30 சதவீதம் தேய்மானமாக கருதப்படும்.

நீங்கள் எடுக்கும் பாலிசியோடு கூடு தலாக பிரீமியம் தொகை செலுத்தினால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க் கலாம். இன்ஜினுக்கென்று உங்கள் பாலிசி தொகையோடு சேர்த்து பிரீமியம் செலுத்த முடியும். விலையுயர்ந்த பொருட்களுக்கும் கூடுதல் பிரீமியம் செலுத்த முடியும்.

வீடுகளுக்கான காப்பீடு

கடந்த வாரம் ஏற்பட்ட புயலால் கட்டிடங்கள் மட்டுமல்ல கட்டிடத்தின் உள்ளே இருந்த ஏசி, கதவுகள், கண்ணாடி கதவுகள், பர்னிச்சர் பொருட்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற சேதங்களை தவிர்க்க வீடுகளுக்கு காப்பீடு எடுப்பதும் அவசியமாகிறது.

வீடுகளுக்கான காப்பீட்டில் தீயால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீடு மற்றும் பூகம்பம், தீ, வெள்ளம், புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்களுக்கான விரிவான காப்பீடு என இருவகைகள் உள்ளன. தீயினால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீட்டில் தொடர்ச்சியான இழப்புகள் இதன் கீழ் வராது. ஆனால் நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனம் தீயினால் ஏற்படும் இழப்புக்கான காப்பீட்டில் மின்சார ஷார்ட் சர்க்யூட்டால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குகிறது.

அதேபோல் வீடு முழுவதும் சேதமடைந்தலோ அல்லது ஒரு பகுதி இடிந்து விழுந்தாலோ அதற்காக தனி காப்பீடு வசதி இருக்கிறது. சில தேய்மானங்களை தவிர மீதமுள்ள இழப்பீடு தொகையை வழங்குகின்றன. எலெட்க்ரிக்கல் அல்லது மெக்கானிக்கலாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கென்றும் தனியான காப்பீடு இருக்கிறது.

இப்படி வாகன காப்பீடு மற்றும் வீடுகளுக்கான காப்பீடு எடுக்கும் போது நாம் எதற்காக காப்பீடு எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். காப்பீடு எடுத்துவிட்டோம் இனி கவலையில்லை என்று நினைக்காதீர்கள். நம் பாலிசியில் என்னவெல்லாம் வருகிறது என்பதை பாருங்கள். நம் தேவை இதுதானா என்பதை புரிந்து கொண்டு காப்பீடுகளை எடுத்துவிட்டால் எவ்வளவு பெரிய இழப்பையும் தவிர்க்கலாம்.

தொடர்புக்கு: rajalakshmi.nirmal@thehindu.co.in

அரசியல் நாகரிகம் முளைக்கிறதா, மீண்டும் தழைக்கிறதா?

ஆர்.முத்துக்குமார்

திமுக, அதிமுக தலைவர்களிடம் தென்படும் மாற்றம் கவனிக்க வைக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுகவின் முன்னணித் தலைவர்களான தம்பிதுரையும் ஜெயக்குமாரும் நேரில் சென்று நலன் விசாரித்த செய்தி இன்றைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் அரும்பத் தொடங்கியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவன்று.

அடிப்படையில் ராஜாஜியும் பெரியாரும் இருவேறு துருவங்கள். ஆத்திகம்தான் ராஜாஜியின் சுவாசம்; பெரியாருக்கோ பகுத்தறிவுதான் பிரதானம். ஆனால், சித்தாந்தப் பின்புலங்களைத் தாண்டி இருவருமே அணுக்க நண்பர்கள். தன்னுடைய தனி வாழ்க்கை தொடர்பான அதிமுக்கிய முடிவான மணியம்மையை மணம் செய்துகொள்ளும் முடிவு குறித்து ராஜாஜியிடம் கலந்து பேசியவர் பெரியார். அப்போது தான் கொடுத்த யோசனை என்ன என்பதைக் கடைசி வரை ராஜாஜி பகிரங்கப்படுத்தவில்லை. அவர்களுக்கு இடையிலான நட்பு அந்த அளவுக்கு நாகரிகம் தோய்ந்தது. கொள்கை எதிரியாக இருந்தபோதும் ராஜாஜி மறைந்தபோது, அவரது இறுதிப் பயணத்தில் வாய்விட்டு அழுதபடியே சென்றார் பெரியார்.

ஆரோக்கிய அரசியல்

திமுக ஆட்சியின்போது இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார் முதல்வர் அண்ணா. அப்போது திமுகவின் பிரதான அரசியல் எதிரி காங்கிரஸ். ஆனாலும், அந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் மூவருக்கும் தரப்பட்ட மரியாதையும் கெளரவமும் ஆரோக்கிய அரசியலின் அடையாளங்கள். மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியவர் காமராஜர்; மாநாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட கம்பரின் சிலையைத் திறந்தவர் பக்தவத்சலம்; மாநாட்டின் கலைப் பொருட்காட்சியைத் திறந்தவர் ராஜாஜி.

முதல்வர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலின் திருமணத்துக்கு வருமாறு காமராஜருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது காமராஜருக்கு உடல்நிலை சரியில்லை. ஆனாலும், காமராஜரின் வருகை அவசியம் என்று கருதிய கருணாநிதி, அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண அரங்கில், மணமக்கள் அமரும் மேடை வரைக்கும் கார் வருவதற்குத் தோதாகச் சிறப்புவழி ஏற்பாடு செய்தார். அதனை ஏற்று, காரிலேயே மேடைவரை வந்து மணமக்களை வாழ்த்திப் பேசினார் காமராஜர்.

அணுக்க நண்பர்களாக இருந்து அரசியல் எதிரிகளாக மாறிய எம்ஜிஆரும் கருணாநிதியும்கூட அரசியல் நாகரிகம் பேணுவதில் ஆர்வம் செலுத்தியவர்களே. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, தனது மகள் டாக்டர் தமிழிசையின் திருமண விழாவில் பங்கேற்க எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவருக்கும் அழைப்புவிடுத்தார் குமரி அனந்தன். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, இருவரும் ஒரே மேடையில் நின்று, மணமக்களை வாழ்த்திப் பேசினர். அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பிறகும்கூட கருணாநிதியும் எம்ஜிஆரும் சட்டமன்றத்தில் அருகருகே அமர்ந்து பேசியதுண்டு. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காமராஜரின் படம் வைக்கப்பட்டது. அந்தப் படத்துக்குக் கீழே எந்தப் பொன்மொழி இடம்பெற வேண்டும் என்பதை கருணாநிதியிடம் கேட்டார் எம்ஜிஆர். அவரது ஆலோசனைக்கேற்ப ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழியைப் பொறித்தார் முதல்வர் எம்ஜிஆர்.

கருணாநிதியின் கடிதம்

எண்பதுகளின் மத்தியில் எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த தருணத்தில், “நானும் பிரார்த்தனை செய்கிறேன்” என்ற தலைப்பில் கருணாநிதி எழுதிய உருக்கமான கடிதம் முக்கியமானது. மேடைகளில் அதிமுகவும் திமுகவும் அமிலம் சுரக்கும் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில், எம்ஜிஆரின் உடல்நிலை பற்றி திமுகவினர் யாரும் மேடைகளில் பேசக் கூடாது என்று கருணாநிதி உத்தரவிட்டிருக்கிறார். எம்ஜிஆர் மரணம் அடைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தனது சுற்றுப்பயணத்தைப் பாதியில் ரத்துசெய்துவிட்டு வந்தார் கருணாநிதி. அப்போது திமுக சார்பில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு வார காலத்துக்கு ரத்துசெய்யப்பட்டன.

மேற்கண்ட நிகழ்வுகளின் பொருள், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் அன்பின் வடிவமாக, ஒரு தாய் மக்களாக, அரசியல் நாகரிகத்தின் நாடு போற்றும் அடையாளங்களாக மட்டுமே இருந்தனர் என்பதல்ல. அரசியல் விமர்சனங்கள் இருக்கவே செய்தன. கண்டனக் கணைகளைப் பரஸ்பரம் பொழிந்துகொள்ளவே செய்தனர். ஆனாலும், அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவுகளில் பெரிய சிக்கல்களையோ, உரசல்களையோ ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

ஆனால், எண்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டு அரசியல் களம் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமாக மாறியபோது, மேற்கண்ட அடிப்படைகள் ஆட்டம் காணத் தொடங்கின. அரசியல் எதிரிகளாக இருக்க வேண்டியவர்கள் தனிப்பட்ட எதிரிகளாக இயங்க ஆரம்பித்தனர். பொதுவான விழாக்களிலோ, தனிப்பட்ட நிகழ்வுகளிலோ கருணாநிதியும் ஜெயலலிதாவும் பரஸ்பரம் பங்கேற்பதோ, சந்தித்துக்கொள்வதோ கிடையாது. பொது நிகழ்ச்சியில் சந்திப்பதுகூட அந்தத் தலைவர்களின் பிரத்யேக விருப்பம், தனி உரிமை என்று தவிர்த்துவிடலாம்.

ஆனால், கட்டாயம் பங்கேற்க வேண்டிய சட்டமன்றத்தில் கூட ஜெயலலிதாவும் கருணாநிதியும் சந்தித்துக்கொள்வதை இருவருமே தவிர்த்துவிட்டார்கள். விதிவிலக்காக, திமுக சார்பில் சுனாமி நிவாரண நிதியைத் தருவதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை ஸ்டாலின் நேரில் சந்தித்ததையும் அப்போது கருணாநிதியின் உடல்நலன் குறித்து ஜெயலலிதா விசாரித்ததையும் சொல்லலாம். மற்றபடி, தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக, அதிமுக - திமுக தலைவர்கள் மத்தியில் பரஸ்பர உறவு நாகரிகம் பலவீனமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

மாறும் சூழல்

என்றாலும், சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரு தரப்பிலும் சிறுசிறு மாற்றங்கள் தென்படுகின்றன. பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் முதல்வர் வெளியிட்ட அறிக்கை, எதிரிக் கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று ஸ்டாலின் சொன்னது ஆகியன வெகுவாக வரவேற்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ‘அவர்மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி வெளியிட்டதும், அதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரித்ததும் அடுத்தடுத்து நடந்தன. உச்சபட்சமாக, முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஸ்டாலின் பங்கேற்றார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை அதிமுக தலைவர்கள் சந்தித்ததும் நலன் விசாரித்து வாழ்த்து சொன்னதும் நடந்தேறியிருக்கின்றன.

ஆக, தமிழகத்தில் மீண்டும் பழைய அரசியல் நாகரிகம் தழைக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால், இப்போதுதான் அப்படியொரு நாகரிகம் தொடங்குகிறது என்பது போன்ற பேச்சு உண்மையானதல்ல. இந்தக் கலாச்சாரம் மேன்மேலும் தழைத்தோங்குவது அரசியலை மேலும் மேன்மையானதாக்கும் என்பதோடு மாநிலத்தின் நலனுக்கும் வழிவகுக்கும்!

- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.

‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

வேலை.. திருமணம்.. குழந்தை.. - இளம் பெண்களை வாட்டும் வாழ்வியல் பிரச்சினைகள்


தேடல் நிறைந்த பருவம், இளமை. இன்றைய இளம் பருவத்தினர் இனிமையை தேடுவதைவிட, சுமைகள் மிகுந்து காணப்படும் வாழ்வில் தீர்வு களைத் தேடி அலைபவர்களாக மாறிவருகிறார்கள். குறிப்பாக இருபது-முப்பது வயதுப் பெண்களை, நிரந்தர வேலை, திருமணம், குழந்தைப் பாக்கியம், உடல் பருமன், முதுமையின் தொடக்கம் என எண்ணற்ற பிரச்சினைகள் ஆட்டிப் படைக் கின்றன.

நீங்களும் அதே ரகம் என்றால், ஆய்வாளர்கள் இதில் இருந்து மீள்வதற்கு சொல்லும் வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்.

வேலை:

கல்லூரியை கடந்து, வயது இருபதைத் தாண்டினால், வாழ்க்கை கேள்விகள் நிறைந்ததாகிவிடுகிறது. ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வியை சமூகம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஏனெனில் பலருக்கும் எதிர்பார்த்த மாதிரியான வேலை உடனே அமைந்துவிடுவதில்லை. விரும்பும் வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கவோ, அலையவோ வேண்டியிருக்கிறது.

25 வயது வரை அதில் நிச்சயமற்ற நிலை நீடித்தால், மனம் மேலும் படபடக்கும். ஒரு பக்கம் பெற்றோர் திருமண ஏற்பாட் டில் மும்முரமாக இருப்பார்கள். அந்த பெண்ணின் மன நிலையோ படித்த படிப்பிற்கான வேலை சரியாக அமையவில்லையே என்ற ஏக்கத்தை எதிரொலித்துக்கொண்டிருக்கும். ஆனால் கிடைத்திருக்கும் வேலையை விட்டுவிட்டு, அதைவிட சிறந்த வேலையை தேடவும் மனம் தயங்கும். இதுபோன்ற பிரச்சினை தனி நபர் சார்ந்தது அல்ல. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பொதுவானவை.

அமெரிக்காவில், ‘இளம் பெண்களின் வேலை திருப்தி’ பற்றி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. முப்பது வயதுக்குட்பட்ட பணியாளர்களில் 80 சதவீதம் பேர், ‘தாங்களுக்கு கிடைத் திருக்கும் வேலையில் திருப்தியில்லை’ என்று கூறியிருக் கிறார்கள். அதனால் அந்த பணியில் இருந்து வேறு பணிக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், ‘இருக்கிற வேலையை விட்டுவிட்டால் உள்ளதும் போச்சே என்ற நிலை ஆகிவிடக்கூடாது என்ற பயத்துடன் இருப்பதாகவும்’ கூறியிருக்கிறார்கள். ‘வேறு வேலை கிடைக்காமல் போய்விடக்கூடாதே!’ என்ற பயத்திலே கிடைத்திருக்கிற வேலையில் திருப்தியில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

‘இதுபோன்ற அச்சம் தேவையில்லை’ என்கிறார் யோகா ஆசிரியை மேகா. பதிப்புத் துறை சார்ந்த பணியில் இருந்த அவருக்கு அந்த பணியில் திருப்தி இல்லை. ராஜினாமா செய்துவிட்டு தான் கற்ற யோகா கலையை சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இப்போது மேகாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது யோகா.

“அலுவலக வாழ்க்கை என்னுடைய கனவுகளை சிதைப்பதாக உணர்ந்தேன். இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன்” என்று பூரிக்கிறார் அவர்.

இப்படி வேலையில் திருப்தியில்லாமல் திணறுகிறவர்களுக்கு மனநல நிபுணர்கள் தரும் தீர்வு என்ன?

“குறிப்பிட்ட துறை உங்களுக்கு ஏற்றது என நினைத்து அதில் வேலை பார்க்கத் தொடங்கியபின் அந்த துறை திருப்தியாக இல்லை என்று உணர்ந்தால் அந்த வேலையை மறுபரி சீலனை செய்வது நல்லதுதான். மனதுக்குப் பிடித்த ஒன்றுதான் மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் உண்டாக்கும். அதே நேரத்தில் அந்த பணியில் இருந்துகொண்டே பிடித்த அடுத்த வேலையை தேடிக்கொள்வது அவசியம். அந்த மாதிரியான நேரங் களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவேண்டும். துணிச்சலை வரவழைத்துக்கொள்ள வேண்டும். என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உங்கள் மனம் நிலைகுலையாத அளவுக்கு பார்த்துக் கொள்ளவேண்டும்” என்கிறார்கள்.

திருமணம் :

இளம் பெண்கள் ஒருவழியாக கிடைத்த வேலையில் மனதை திருப்திபடுத்திக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கையில், ‘இத்தனை வயதாகிவிட்டதே! எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறாய்?’ என்ற நெருடலான கேள்வி எழுப்பப்படும். நாம் மரபுகளில் ஆழப் பதிந்தவர்கள் என்பதால் சமூகத்தின் இந்தக் கேள்வியை தடுக்க முடியாதுதான். உறவுகளும், தோழிகளும்கூட சமயத்தில் இந்த கேள்விகளை கேட்கும்போது மனதில் லேசாக வலி தோன்றத்தான் செய்யும். தன் மீதான அக்கறையில்தான் அந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பது தெரிந்தாலும் மனம் கலக்கமடைவதை தடுக்க முடியாது.

இதை எப்படி எதிர்கொள்வது? என்று சொல்கிறார் உளவியல் ஆய்வாளர்.

“அது என் தனிப்பட்ட விருப்பம் என்று முகத்தை முறிக்கும் வகையில் எல்லோரிடமும் பதில் கூற முடியாதுதான். ‘திருமணம்- குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ள இன்னும் கூடுதல் பக்குவம் தேவை என்று நினைக்கிறேன். அதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் அக்கறை எனக்கு அதற்கு துணை வரட்டும்’ என்று நாசூக்காக கூறிவிடலாம்.

நிஜமாகவே திருமண வாழ்க்கைக்கு தேவையான தகுதிகளை இளம் பெண்கள் வளர்த்துக்கொள்ளவேண்டியதிருக்கிறது. திருமண வாழ்க்கையின் பொறுப்புகளையும் அவர்கள் உணரவேண் டியதிருக்கிறது. அதற்கு மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக வேண்டியதிருக்கிறது. மணவாழ்க்கையில் அவசரத்தைவிட நிதானமே சிறந்தது.

குழந்தையின்மை:

ஒருவழியாக திருமணம் முடிந்து, ஒன்றிரண்டு வருடங்கள் ஆகிவிட்டால், ‘இன்னும் தொட்டில் ஆடவில்லையே?’ என்ற கேள்வி இளம்பெண்களை நோக்கி எழும்பும். இந்த கேள்வி, திருமணம் செய்த பெண்ணின் வீட்டிற்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் வரும். இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு பழக்கப்பட்ட குடும்பங்களில் இருந்துதான் நாம் பிறந்து வளர்ந்திருக்கிறோம். அதனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள பெண்கள் தயங்கக்கூடாது. அதே நேரத்தில் குழந்தையின்மையை பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் அவசியம் இருக்கவேண்டும்.

‘குழந்தையின்மையை நினைத்து பெண்கள் வருந்தவேண்டியதில்லை. இன்றைய நவீன கால மருத்துவத்தில் குழந்தையின்மைக்கும்- வயதுக்கும் தொடர்பில்லை. இளம் வயதை கடந்த பின்பும் நவீன மருத்துவத்தின் மூலம் தாய்மையடையலாம். அதனால் குழந்தையின்மையை பற்றிய பயத்தில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும்’ என்று கூறுகிறார், மகப்பேறு நிபுணர்.

‘குழந்தையின்மையை பற்றிய கேள்விகள் எழுப்பப்படும்போது இளம் பெண்கள் தடுமாறாமல் நிதானமாக பதிலளிக்க வேண்டும். ‘தாய்மையடைதலை இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் தள்ளிவைத்திருக்கிறோம்’ என்றோ, ‘தாய்மையடைய தயாராகிக்கொண்டிருக்கிறேன்’ என்றோ, ‘நாங்களும் உங்களைப்போல ஆவலோடு காத்திருக்கிறோம்’ என்றோ சொல்லுங்கள்.

அழகுக் குறைபாடு:

இளம் பெண்கள் தங்கள் தலையில் ஒற்றை நரை முடியையோ, முகத்தில் லேசான சுருக்கத்தையோ முதன் முதலாக காணும்போது மிரண்டு போகிறார்கள். அதனை மறைக்க கையில் கிடைத்த அழகு சாதன பொருட்களை எல்லாம் பயன்படுத்த தொடங்கிவிடு கிறார்கள். இளநரை, தோல் சுருக்கம், குதிகால் வெடிப்பு, உடல் பருமன் போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அந்தந்த துறையில் முறையாக கற்று, சிகிச்சை அளிப்பவர்களை கண்டறிந்து ஆலோசனை பெறுங்கள்.

‘TN opposed to NEET, Medical Council Bill’

State Health Minister C. Vijaya Baskar reiterated Tamil Nadu’s stated position of opposition to the National Eligibility cum Entrance Test (NEET) and also said that the State had objected to the proposed National Medical Commission Bill.

Mr. Vijaya Baskar was speaking at the installation ceremony of the State president of the Indian Medical Association, Tamil Nadu State, held on Sunday.

‘Sensitise other States’

Health Secretary J. Radhakrishnan, who also participated, requested the Association to also sensitise other States about the proposed Bill.

Outgoing State president S. Damodaran said the IMA, Tamil Nadu had 30,000 members across 158 branches. T.N. Ravishankar was installed as the new State president.

Issues such as the importance of the doctor-patient relationship were also highlighted. S. Geethalakshmi, vice chancellor, TN Dr. MGR Medical University and K. Prakasam, national vice president elect were also among those who participated.

No Indian test for students with foreign MBBS degrees

DECCAN CHRONICLE. | KANIZA GARARIPublishedDec 14, 2016, 3:00 am IST
Dr G. Srinivas, president of Telangana Junior Doctors’ Association thinks the new measure is unfair. (Representational image)
Hyderabad: Indian medical students who are getting their MBBS degrees from foreign universities will now have an opportunity to work in India without giving their exams here according to a proposal sent by the Union health ministry to the Medical Council of India.

The government says that this is to overcome the shortage of six lakh doctors in the country. Doctors who graduate from China, Russia, Nepal, South East Asian and Eastern European countries have to write the Foreign Medical Graduates Examination, and if they pass they can register and practise in India.

Data from the Medical Council of India shows that since 2002, 29,968 students have appeared for the foreign medical examination and only 3,610 have passed.
Dr G. Srinivas, president of Telangana Junior Doctors’ Association thinks the new measure is unfair.

“The medical education and bedside experience of foreign doctors are minimal. The teaching standards are different and they are not on par with Indian standards. On one side the government wants us to write exams after passing our MBBS and on the other side they want to recruit foreign doctors without exams, which is not fair. We are going to strongly protest against it,” he said.

It’s the ridiculous division of seats in private medical colleges that forces many students to study abroad. A junior doctor on condition of anonymity explained, “In private medical colleges, 50 per cent of seats are reserved for the government, 20 per cent is in the management quota and the remaining are paid seats which are very expensive. These seats cost allegedly Rs 1.5 core. That is one of the major reasons that many students opt for seats outside India.”

Telangana Medical Council chairman Dr Ravinder Reddy says, “As of today, writing a medical exam for the foreign medical graduate is as per the MCI act and it is being followed.”

But when there is a shortage of doctors, why are trained doctors not being allowed to practise in India? Why must people in rural areas go to RMPs?

A senior doctor on condition of anonymity explained, “The problem is that none of the Indian doctors who are trained in India or abroad want to practise in rural areas. Hence, there will be a growing competition in urban and semi-urban areas only. A foreign doctor will come with a different set of expertise. Also, the name that he is foreign-returned will attract a lot of patients and this is what many are scared about.”

At present, several Indian doctors who got their degrees abroad and were rejected in India are practising in the countries they passed out from. According to sources in the Medical Council of India, many of them have got employment in the Middle East and South East Asian countries where the patient load is manageable.

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...