Friday, October 20, 2017

கட்டணம் செலுத்தாத கல்லூரிகள் : அண்ணா பல்கலை கண்டனம்

'கட்டணம் செலுத்தாத கல்லுாரி மாணவர்கள், டிசம்பர் தேர்வில் பங்கேற்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது. அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை சார்பில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகளுக்கு, அந்தந்த கல்லுாரி நிர்வாகங்களே தேர்வு நடத்தி, திருத்தம் செய்கின்றன.

தேர்வு ஏற்பாடு : இந்நிலையில், 500க்கும் மேற்பட்ட, இணைப்பு இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு, டிசம்பரில், தேர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், கல்லுாரி விபரங்கள், அண்ணா பல்கலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை, கல்லுாரிகளே வசூலித்து, அண்ணா பல்கலையில் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பல கல்லுாரிகள், தங்கள் மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலித்தாலும், அதை செலுத்தாமல் உள்ளன. 

சுற்றறிக்கை : இந்நிலையில், அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது. அதில், 'மாணவர்களிடம் வசூலித்த தேர்வு கட்டணத்தை, அண்ணா பல்கலையில் செலுத்தும் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே, தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும்; மற்றவர்களுக்கு கிடைக்காது. 
'அதனால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதற்கு, கல்லுாரிகளே பொறுப்பு' என, எச்சரித்துள்ளது.

- நமது நிருபர் -
11,மாவட்டங்களுக்கு,புயல்,எச்சரிக்கை,வங்கக்கடல்,காற்றழுத்த,தாழ்வு,மண்டலம்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகம், புதுச்சேரியில், 11 மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம், புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில், துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



தென்மேற்கு பருவமழை, வடமாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது. தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், முடிவடையும் நிலையிலும், தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம், ஆந்திரா இடையே, ஒரு வாரத்திற்கு முன், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவானது. இது, வங்க கடலின் மத்திய பகுதியில் நுழைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது.

நகர்கிறது

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. நேற்று பிற்பகலில், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், ஒடிசாவின் சந்த்பாலிக்கு, தெற்கே, 390 கி.மீ., துாரத்திலும்; புரிக்கு தென் கிழக்கே, 280 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டிருந்தது. மணிக்கு, 16 கி.மீ., வேகத்தில் ஒடிசாவை நோக்கி நகர்கிறது.

இன்று அதிகாலை, புரிக்கும், சந்த்பாலிக்கும் இடையே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி, சென்னை, கடலுார், நாகை, துாத்துக்குடி உட்பட, தமிழகம், புதுச்சேரியில், 11 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, சென்னை,கடலுார், நாகை, புதுச்சேரி, பாம்பன், எண்ணுார், துாத்துக்குடி, காரைக்கால் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குளச்சல், ராமேஸ்வரம் துறைமுகங்களுக்கு புயல் குறித்த முன் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதியை நோக்கி, மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

துவங்குது பருவ மழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னமாக மாறி, பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம், தமிழகத்தில் நிலவியது. ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றாலும், தமிழக கடற்பகுதியை விட்டு நகர்ந்துள்ளதால், பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என, தெரிகிறது.எனினும், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், தமிழகம், புதுச்சேரியின்

பல இடங்களில், லேசானது முதல், கனமழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது, தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையை துவக்கி வைக்கும் வகையில் அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், நேற்று காலை, 8.30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், திருக்காட்டுப்பள்ளி, 2; துாத்துக்குடி, புள்ளம்பாடி மற்றும் பூதப்பாண்டியில், 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சம்பா சாகுபடி துவங்கி உள்ள நிலையில், 2016 போல் வறட்சி இல்லாமல், இந்த ஆண்டு பெரும் மழை கிடைக்கும் என, விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாம்பனில் 1ம் எண்புயல் கூண்டு

வங்கக் கடலில் உருவான புயலால், ராமேஸ்வரம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த அழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா சந்த்பாலி கடற்கரையில் இருந்து 440 கி.மீ., துாரமும், ஒடிசா பூரி கடற்கரையில் இருந்து தென் கிழக்கில் 340 கி.மீ.,துாரத்தில் மையம் கொண்டுள்ளது. 

இதனால் தொலைதுார புயல் எச்சரிக்கையாக நேற்று மாலை, பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடிக்கவும், பாம்பன் கடற் கரையில் பாதுகாப்பாக கப்பல், படகுகளை நிறுத்தி வைக்க மீன்துறையினர் அறிவுறுத்தினர்.

- நமது நிருபர் -
நிமிடத்துக்கு ஒரு ரூபாயில் பேசலாம்! ராணுவத்திற்கு மத்திய அரசு சலுகை

புதுடில்லி: எல்லையோரங்களிலும், அடர்ந்த பனிமலைப் பிரதேசங்களிலும் பணியாற்றும் பாதுகாப்பு படையினர், தங்கள் குடும்பத்தினருடன், 'சேட்டிலைட்' போனில் பேசுவதற்கு, மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. 

ஒரு நிமிடம் பேசுவதற்கு, ஐந்து ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது, ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், சேட்டிலைட் போனுக்கான மாத வாடகை கட்டணமும், ரத்து செய்யப்பட்டு உள்ளது.போதிய அடிப்படை வசதிகள், மொபைல் போன் சேவை இல்லாத தொலைதுார பகுதிகளில், எல்லை பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் பணியாற்றுகின்றனர்.

சேட்டிலைட் போன் வசதி : ஜம்மு - காஷ்மீர் போன்ற பனி பிரதேசங்களில், நம் ராணுவத்தினர், நாட்டுக்காக பணியாற்றுகின்றனர். இவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்காக, சேட்டிலைட் போன் வசதியை, மத்திய அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. 
இந்த சேட்டிலைட் போனுக்கான இணைப்பை பெற, மாதம், 500 ரூபாய் வாடகையாக செலுத்த வேண்டும். மேலும், போனில் பேசுவதற்கு, நிமிடத்துக்கு ஒரு ரூபாய், கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. தற்போது, 2,500 சேட்டிலைட் போன்கள் மட்டுமே, பயன்பாட்டில் உள்ளன. இதனால், பாதுகாப்பு படையினர், தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு அதிகம் சிரமப்படுவதுடன், அதிகம் செலவும் செய்ய வேண்டியுள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதிகமான இணைப்பு
இது குறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், மனோஜ் சின்ஹா கூறியதாவது:
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு, தீபாவளி பரிசாக, சேட்டிலைட் போன்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. 
இனி மேல், சேட்டிலைட் போனில் பேசுவதற்கு, நிமிடத்துக்கு, ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.மேலும், சேட்டிலைட் போனுக்கான இணைப்பை பெற்றவர்களிடமிருந்து, மாதந்தோறும், 500 ரூபாய் கட்டணமாக, தற்போது வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை, இனிமேல் செலுத்த வேண்டியது இல்லை.இதுவரை, சேட்டிலைட் போன் இணைப்பு வசதியை, டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் வழங்கியது. தற்போது, அரசு துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., இந்த வசதியை வழங்குகிறது. மேலும், அதிகமான சேட்டிலைட் போன் இணைப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நாகை விபத்து: முதல்வரிடம் அமைச்சர் விளக்கம்


நாகை: நாகை மாவட்டம் பொறையாரில் அரசு போக்குவரத்து பணிமனையின் ஓய்வறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, பலியான 8 பேரில் 7 பேர் டிரைவர்கள், ஒருவர் நடத்துனர். பலியானவர்களுக்கு நிவாரண நிதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார். போக்குவரத்து துறைக்காக புதிய கட்டடங்கள் விரைவில் கட்டப்படும் என்று அவர் கூறினார்.

சம்பளம் உயர்வு, சலுகை: குஜராத் அரசு தாராளம்


சம்பளம்,உயர்வு,சலுகை,குஜராத்,அரசு,தாராளம்
ஆமதாபாத்: விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள குஜராத்தில், ஆசிரியர்கள், ஊராட்சி ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் அறிவிப்புடன், குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதி பின் அறிவிக்கப்படும் என, தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆசிரியர்கள், ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து முதல்வர், விஜய் ரூபானி கூறியதாவது: தொகுப்பூதியம் பெறும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம், 16 ஆயிரத்து, 500 ரூபாயில் இருந்து, 26 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உதவி ஆசிரியர்களுக்கான சம்பளம், 10 ஆயிரத்து, 500 ரூபாயில் இருந்து, 16 ஆயிரத்து, 224 ரூபாயாகவும், நிர்வாக உதவியாளர்கள் சம்பளம், 11 ஆயிரத்து, 500 ரூபாயில் இருந்து, 19 ஆயிரத்து, 950 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிரது.

'மாவாத்சல்யா' எனப்படும், அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு, 1.50 லட்சம் ரூபாயில் இருந்து, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள, 162 ஊராட்சி அமைப்புகளில், 105 அமைப்புகள், ஆறாவது சம்பள கமிஷன் விகிதத்திலேயே சம்பளம் வழங்கி வருகின்றன; அவற்றில், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையின் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேஸ்புக்கில் புகைப்படங்கள் வெளியிடுவது இஸ்லாத்துக்கு விரோதம்'

பேஸ்புக்,புகைப்படங்கள்,வெளியிடுவது,இஸ்லாத்,விரோதம்
புதுடில்லி: 'சமூக வலைதளங்களில், முஸ்லிம்கள், தங்கள் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை வெளியிடுவது, இஸ்லாத்துக்கு விரோதம்' எனக்கூறி, அதற்கு, 'பத்வா' எனப்படும் தடை விதித்து, 'தாருல் உலுாம் தியோபந்த்' என்ற முஸ்லிம் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. 

டில்லியில் உள்ள, பதேபூர் மசூதியின் இமாம், முப்தி முகரம் கூறியதாவது: தேவையின்றி புகைப்படங்கள் எடுப்பது, இஸ்லாத்துக்கு விரோதமானது; ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற முக்கியமான ஆவணங்களுக்காக, புகைப்படங்கள் எடுப்பதில் தவறில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் வெளியிடுவது போன்ற தேவையற்ற விஷயங்களுக்காக, புகைப்படம் எடுப்பது தவறு. முஸ்லிம் பெண்கள், புருவத்தை, வெட்டுவதும், அழகு படுத்துவதும், இஸ்லாத்துக்கு விரோதமானது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

நிலவேம்பு குடிநீர் குடித்தால் மலட்டு தன்மை ஏற்படாது ராதாகிருஷ்ணன் பேட்டி


நிலவேம்பு குடிநீர் குடித்தால் மலட்டு தன்மை ஏற்படாது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
அக்டோபர் 20, 2017, 04:15 AM

சேலம்,

தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சேலம் வந்தார். மாலையில் அவர் சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரே உள்ள சொர்ணாம்பிகை தெரு, மேட்டு மாரியம்மன் கோவில் தெருக்களில் உள்ள வீடுகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, அதில் ஏதேனும் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். காலி இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து ராதாகிருஷ்ணன் திருமணிமுத்தாறு ஓடையை பார்வையிட்டார். அப்போது அங்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடந்தன. இதை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் இங்கே குப்பைகள் கொட்டாதவாறும், கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மலட்டு தன்மை ஏற்படாது

இதைத்தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு காய்ச்சல் வார்டுகளில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் படி டெங்கு காய்ச்சல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவேம்பை பொறுத்தவரை சித்த மருத்துவ பேராசிரியர்களின் மேற்பார்வையில் தான் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பின்னர் வழங்கி வருகிறோம். ஆராய்ச்சி நடத்தப்படவில்லை என்று கூறுவது தவறான கருத்து ஆகும். நிலவேம்பு குடிநீர் குடித்தால் மலட்டு தன்மை ஏற்படாது.

விளக்கம் அளிக்கப்படும்

சீனா, மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு மருந்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் நிலவேம்பு குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மேலும் இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிலவேம்பு சர்ச்சை குறித்து கருத்து கூறும் பிரபலங்களுக்கு சித்த மருத்துவ பேராசிரியர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி உள்ளிட்ட சில பகுதிகளிலும், மாநகராட்சியில் 2, 3, 6, 22, 50 உள்ளிட்ட சில வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். தனியார் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு அதிகம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார்.
மாநில செய்திகள்

நாகை அருகே அரசு போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து 8 பேர் உயிரிழந்தாக தகவல்



நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

அக்டோபர் 20, 2017, 06:21 AM
நாகை,

நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்துக்கழக கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் போக்குவரத்துக்கழக பணியாளகள் 8 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 பேர் காயங்களுடன் மீட்கபட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மீட்புபணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சம்பவம் 4.30 மணிக்கு நடந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துக்கழக கட்டடம் மேற்கூரை 100 ஆண்டுகளுக்கு பழமையான கட்டிடம் என கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் பெயர் பெரம்பூரை செர்ந்த முனியப்பன் வயது 40 என தெரியவந்துள்ளது.

இந்த கட்டிடம் விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பணிமுடிந்து அனைவரும் உறங்கிகொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை மது விற்பனை ரூ.244 கோடி



தீபாவளி பண்டிகைக்கு ரூ.244 கோடி மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.4 சதவீதம் குறைவு ஆகும்.

அக்டோபர் 20, 2017, 05:15 AM
சென்னை,

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் ‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் வார நாட்களில் ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரையிலும், விடுமுறை தினங்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலும் சராசரியாக மது விற்பனை இருந்து வருகிறது.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மதுபிரியர்கள் கூடுதல் உற்சாகம் அடைவதால், அப்போது மது விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.244 கோடி மது விற்பனை நடந்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் (17-ந் தேதி) ரூ.113 கோடிக்கும், தீபாவளி பண்டிகை அன்று (18-ந் தேதி) ரூ.131 கோடிக்கும் என 2 நாட்களில் ரூ.244 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.108 கோடிக்கும், தீபாவளி அன்று ரூ.135 கோடிக்கும் என 2 நாட்களுக்கு ரூ.243 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. தற்போது மது கடைகள் எண்ணிக்கை குறைவு, மது வகைகள் விலை உயர்வு ஆகியவற்றின் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விற்பனை 6.4 சதவீதம் குறைவு ஆகும்.

கடந்த 2016-17-ம் ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.29 ஆயிரத்து 680 கோடி வருவாய் கிடைத்தது. 2017-18-ம் ஆண்டு ரூ.29 ஆயிரத்து 175 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளி பண்டிகையையொட்டி மதுபிரியர்களை கவரும் வகையில் பெரும்பாலான ‘டாஸ்மாக்’ கடைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. எனினும் மது விற்பனை குறைந்துள்ளது டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொதுவாக பண்டிகை காலங்களில் ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது ‘டாஸ்மாக்’ மது வகைகள் விலை உயர்த்தப்பட்டதும், டெங்கு பாதிப்பும் மதுபிரியர்களின் உற்சாகத்துக்கு தடை போடும் வகையில் அமைந்துவிட்டது.

தீபாவளி பண்டிகை மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்ததற்கு இதுவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மது விற்பனை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியையும், அரசுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
தேசிய செய்திகள்

இந்து–முஸ்லிம் காதல் திருமணம் செல்லும் கேரள ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு



கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஒரு இந்து மத இளம்பெண், கடந்த மே 16–ந் தேதி, வீட்டை விட்டு வெளியேறி, தன் காதலரான முஸ்லிம் வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.

கொச்சி,

அப்பெண்ணின் பெற்றோரின் புகாரின்பேரில், இருவரையும் அரியானா மாநிலத்தில் போலீசார் பிடித்து அழைத்து வந்தனர். அப்பெண்ணை பெற்றோருடன் செல்ல கீழ்கோர்ட்டு அனுமதித்தது. மகளின் மனதை மாற்றுவதற்காக, அவரை ஒரு யோகா மையத்தில் பெற்றோர் சேர்த்தனர்.

முஸ்லிம் வாலிபர் தாக்கல் செய்த ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனுவின்பேரில், ஒரு தனி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அப்பெண், பெற்றோருடன் செல்வதாக கூறினார். ஆனால், 4 நாட்களில் அவர் ‘பல்டி’ அடித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.சிதம்பரேஷ், சதீஷ் நினான் ஆகியோர் அடங்கிய கேரள ஐகோர்ட்டு அமர்வு, இவர்களின் திருமணம் செல்லும் என்று நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–

தனது முடிவில் உறுதியாக நின்ற பெண்ணின் துணிச்சலை பாராட்டுகிறோம். திசை திருப்பும் மனுக்களால் நீதியை சீர்குலைக்க முயன்ற பெற்றோருக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். ஒருவர், தான் விரும்பிய மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது.

எனவே, இந்த திருமணம் செல்லும். திருமணம், பதிவு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்ளும்போதெல்லாம், அதற்கு மதச்சாயம் பூசி, மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது வேதனை அளிக்கிறது. எல்லா மதமாற்ற திருமணங்களையும் தவறாக பார்க்க தேவை இல்லை.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Thursday, October 19, 2017


வழக்கறிஞர்கள் முன்பாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 18 Oct 2017 07:50 IST

சென்னை

வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் வைத்து வழக்கறிஞர்களின் முன்னிலையில் நடைபெறும் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண் ஒருவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் வைத்து என்னிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். அதை வைத்து ஒருவருடன் எனக்கு பதிவுத்திருமணம் நடந்துள்ளதாகக் கூறி போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளனர். எனவே எனக்கும் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கும் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது வழக்குத் தொடர்ந்த அந்த பெண், ‘வழக்கறிஞர் அலுவலகத்தில் தனது விருப்பப்படி தான் அந்த நபருடன் திருமணம் நடந்தது’ என முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்தார்.
இதனால் அப்பெண் தொடர்ந்த வழக்கை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அப்பெண்ணின் கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்து திருமணச் சட்டத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் இந்து பாரம்பரியத்தின் அடிப்படையில் 2 நபர்களின் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் அது சட்டப்படி செல்லும். அந்த 2 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது வேறு சிலராக இருக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. அந்த வேறு சிலரில் வழக்கறிஞர்களும் அடக்கம். அப்படியிருக்கும்போது வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்கறிஞர் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் செல்லாது என மனுதாரர் கோர முடியாது’ என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து வழக்கறிஞர்கள் முன்னிலையில் மனுதாரருக்கும், எதிர் மனுதாரருக்கும் திருமணம் நடந்துள்ளது.
அதனடிப்படையில் பின்னர் அந்த திருமணம் சட்டப்படி பதிவும் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. திருமணம் நடந்ததாக வழக்கறிஞர் பதிவுத்துறை அலுவலகத்துக்கு கொடுத்த கடிதமும் சட்டப்படி செல்லும்’’ என உத்தரவிட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் முகப்பு தோற்றம்.   -  படம்: என்.ராஜேஷ்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 20-ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 25-ம் தேதி நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

அக்.20-ல் தொடக்கம்

இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நாளை மறுநாள் (20-ம் தேதி) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன.
காலை 6 மணிக்கு மேல் ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து, யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.

சூரசம்ஹாரம்

6-ம் நாள் விழாவான அக்டோபர் 25-ம் தேதி, அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் முன்புள்ள கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

திருக்கல்யாணம்

26-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு ஆகியவை நடைபெறும்.
மாலை 6.30 மணியளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம், இரவில் திருக்கல்யாணம் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் திருச்செந்தூரில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ ‘நீட்’ தேர்வு நடத்த சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி

Published : 18 Oct 2017 19:26 IST



மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ ‘நீட்’ தேர்வு நடத்த சட்டப்படி அதிகாரமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர், கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு “நீட்‘ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் சேர முடியும் என்பதற்கான மெடிக்கல் கவுன்சில் சட்டத்தில், ஒரு அவசர சட்டத் திருத்தமாக, 24 மே 2016இல் செக்சன் பிரிவு 10-D என்பது உள்ளே நுழைக்கப்பட்டது. அதோடு 33ஆவது பிரிவில் (ma) என்பதுடன் புதிதாக (mb) என்ற பிரிவும் கூடுதலாக நுழைக்கப்பட்டது.

இந்த சட்டத் திருத்தத்தால் ‘நீட்‘ தேர்வு என்பது இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் மருத்துவப் பல்கலைக்கழகங்களான எய்ம்ஸ், ஜிப்மர் (AIIMS, JIPMER) போன்ற மருத்துவக் கல்லூரி களுக்கு, நீட் தேர்வில் இருந்து, விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அவசரச் சட்டம் (Ordinance) 5.8.2016 இல் திருத்தச் சட்டமாக மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது.

இது சட்ட வலிமை பெற்ற சட்டத் திருத்தமா?

மத்திய அரசு இயற்றிய சட்டம், இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள வலிமையையும், அதிகாரத்தையும் பெற்ற ஒன்று அல்ல; (suffers from the vice of legislative competency). எனவே, இந்த சட்டப் பிரிவின் நுணுக்கங்களையும், அரசியல் சட்ட விதிகளுக்கு இது முர ணாக உள்ளது என்பதையும் நீதிமன்றங்களுக்குச் சென்று சரியான முறையில் எடுத்து வைத்து விளக்கி வாதாடினால், புதிதாக நுழைக்கப்பட்ட பிரிவுகளான 10D செக்ஷன் 33 இல் (mb) என்ற பிரிவு அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளதால், செல்லாது என்று தீர்ப்பளிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அந்த அடிப்படையில், பல்வேறு அரசியல் சட்டப் பிரிவுகளையும் எடுத்துக்காட்டி, இப்படி ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர, மத்திய அரசுக்கோ அல்லது மெடிக்கல் கவுன்சில், டெண்டல் (பல்) கவுன்சில் ஆகியவற்றுக்கோ தேர்வை நடத்த, அதிகாரம் இல்லை.

பல்கலைக் கழகத்திற்கே உள்ள தனி உரிமை!

மாணவர்கள் சேர்க்கை விதிகள் குறித்துத் தீர்மானிக்கும் மற்றும் தேர்வு நடத்திடும் உரிமை பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே உள்ள உரிமையாகும். அந்த உரிமையை மத்திய அரசோ அல்லது மருத்துவக் கவுன்சிலோ, பல் மருத்துவக் கவுன்சிலோ பறித்துக்கொள்வது அரசியல் சட்டத்தின் மற்ற பிரிவு களுக்கு முரணான, உரிமைப் பறிப்பு ஆகும். அதுவே, அரசியல் சட்ட விதிகளின்படி நுணுக்க விளக்கமாகும்.

எப்படியென்றால்,இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள அதிகாரப் பகுப்புப்படி,ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கும் (Incorporating/ Establishing) மற்றும் ஒழுங்குபடுத்தும் (Regulating) அதிகாரம், மாநிலங்களுக்குள்ள தனித்த அதிகாரமாகும். எனவே, அதில் மாண வர் சேர்க்கை எப்படி அமையவேண்டும்; எந்த அடிப்படையில் எத்தகைய தேர்வு நடத்தப்பட வேண் டும் என்று முடிவு செய்யும் கடமை, உரிமை, அதிகாரம், பல்கலைக் கழகங்களின் தனித்த உரிமையாகும்.மத்திய அரசுக்கு எந்தப் பல்கலைக் கழகத்தையும் நேரிடையாக நிறுவும் / ஒழுங்குப்படுத்தும், அதிகாரம் இல்லாததால் அது பல்கலைக் கழக அதிகாரங்களில் நுழைந்து பறிக்கும் உரிமையும் கிடையாது என்பதே இந்திய அரசியல் சட்டத்தின் நிலைப்பாடு.

ஒவ்வொரு பல்கலைக் கழகச் சட்டமும் குறிப்பிட்ட பட்டப் படிப்புகளை உருவாக்கி, மாணவர்களை எப் படிப்பட்ட தகுதிகளின்படி தேர்வு செய்வது என்பது பல்கலைக் கழகங்களின் தனி அதிகாரம் ஆகும்.

சட்டம் இயற்றும் உரிமை

அரசியல் சட்ட ஏழாவது அட்டவணையில் (VII Schedule) இரண்டாவது பட்டியலில் (List II) மாநிலப் பட்டியல் (State List) 32 ஆவது (Entry 32) பிரிவில்/எண்ணில் மாநிலங்களின் உரிமை எனக் கூறப்பட்டுள்ளது என்ன?

‘‘32. Incorporation, regulation and winding up of corporation other than those specified in List I and universities; unincorporated trading, literary, scientific, religious and other societies and associations; co-operative societies.’’

இதன் தமிழாக்கம்:

‘‘பட்டியல் 1இல் குறிப்பிடப்பட்டுள்ளவை நீங்க லான மற்ற வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களைப் பதிவு செய்வது, கட்டுப்பாடு செலுத் துவது, பதிவை ரத்து செய்வது மற்றும் கூட்டுறவு சங் கங்கள் உட்பட, வணிக, கல்வி, அறிவியல், மத மற்றும் இதர சங்கங்கள்’’ ஆகியவை மீது சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கானது என்பதாகும்.

அதாவது, அரசியலமைப்பில் மாநில பட்டியலில் எண் 32 இன்படி, பல்கலைக்கழகங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம் தரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தால் அது மாநில உரிமையில் தலையிடுவதாக அமையும்.

அதே ஏழாவது அட்டவணையில், மத்திய அரசின் தனித்த சட்டமியற்றும் அதிகாரம், பட்டியல் ஒன்றில் (List I) குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் 44ஆவது எண் (Entry 44) கீழ்க்கண்டவாறு உள்ளது.

“44. Incorporation, regulation and winding up of corporations, whether trading or not, with objects not confined to one State, but not including universities.”

இதன் தமிழாக்கம்:

‘‘பல்கலைக்கழகங்கள் நீங்கலான, ஒரு மாநிலத்திற் குள் மட்டுமே செயல்படும் நோக்கம் கொண்டிராத, வணிக நிறுவனம் அல்லது வேறு நிறுவனம் ஆகிய வற்றைப் பதிவு செய்வது, கட்டுப்படுத்துவது, பதிவை ரத்து செய்வது.’’

எனவே, மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த இரண்டு விதிகளும் (அதாவது மாநிலப் பட்டியலில் 32 ஆவது மற்றும் மத்தியப் பட்டியல் 44 ஆவது பதிவுகள்) தெளிவாகக் கூறுவது என்னவென்றால்,பல்கலைக் கழகங்களை உருவாக்குவதோ, அமைப் பதோ, ஒழுங்குபடுத்துவதோ, மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ள அதிகாரம்; (அதை மற்ற அமைப்புகள் பறிக்க முடியாது). பட்டியல் 1 இல் எண் 44 இல், அதா வது மத்தியப் பட்டியல் பல்கலைக் கழகங்களை அமைக்கும் அதிகாரம் விலக்கப்பட்டிருக்கிறது (specifically excluded)

நாம் மேலே சுட்டிக்காட்டியது, இந்தியாவின் இதர மாநிலங்களுக்குப் பொதுவாக உள்ள சட்ட நுணுக்கம்.

மேற்சொன்ன சட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்டு, உயர்நீதிமன்றங்களிலோ, உச்சநீதிமன்றத் திலோ வாதாடி ‘நீட்’ தேர்வு சட்டம் அரசியல் சட்ட விதிகளுக்குப் புறம்பாக உள்ளதால் செல்லாது என்று நீதிபதிகளுக்கு விளங்கும்படி வாதங்களை எடுத்து வைத்து வழக்குத் தொடுத்தால், சட்டப்படி, நியாயப்படி வழக்குத் தொடுப்பவர்கள் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.காரணம், சட்ட விதிகளின்படி ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டிய கடமை உயர்நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் உரியதல்லவா? பொதுவான சட்ட நிலைப்பாடு - சட்ட முரண்கள் - இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் - ‘நீட்’ தேர்வை எதிர்த்து இந்த நிலைப்பாட்டை - சட்ட நுணுக்கத்தை அடிப்படை வாதங்களாக வைத்து வாதாடலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்...

எது எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டின் நிலை வேறுபட்டதாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தால் 2007ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சியில், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேருவதற்கு தனித்த நுழைவுத் தேர்வு தேவையில்லை என்ற சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மத்திய அரசின் சட்டத்திற்கு ஒப்பானதாகும்.

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்பது மத்திய அரசின் அறிவிக்கை (Notification) கீழ்தான் வெளியிடப்பட்டுள்ளது. 2016 திருத்தச் சட்டத்தின் மூலம் அல்ல.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, தமிழ்நாடு அரசு சட்டமன்றம் 2007இல் கொள்கை முடிவாக எடுத்து இயற்றிய சட்டம், கடந்த 9 ஆண்டுகளாக நுழைவுத் தேர்வு முறைக்கு எதிரான அதன் வலிமை பறிக்கப்பட முடியாத ஒன்று.

மேற்கண்ட திருத்த சட்டத்தின் மூலம்,புதிதாக சேர்க்கப்பட்ட 10D பிரிவு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டங் களுக்கு முரணாக உள்ளது என்பது சட்டப்படி சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழ்நாடு M.G.R. பல்கலைக்கழக சட்ட மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான விதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அச்சட்டம் Entry 32, List II-இன் கீழ் இயற்றப்பட்டதாகும். அந்த அதிகாரம் மத்திய அரசுக்குத் தரப்படவில்லை.

சட்டப் போராட்டத்தை வலிமையுடன் நடத்தவேண்டும்!

“10D, There shall be conducted a uniform entrance examination to all medical educational institutions at the undergraduate level and post-graduate level through such designated authority in Hindi, English and such other languages and in such manner as may be prescribed and the designated authority shall ensure the conduct of uniform entrance examination in the aforesaid manner:” என்பதாகும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகங் களுடன் இணைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளில்(Affiliated Colleges) மாணவர்களின் சேர்க்கையானது அப்பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படியே இருக்க வேண்டும். அதனைக் கட்டுப்படுத்த (To regulate) மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

இன்னும்பலப்பலசட்டஅதிகாரங்களுக்குமுரண் பட்டே ‘நீட்’ தேர்வு முறை மாநிலங்கள் மீது திணிக்கப் பட்டிருப்பதால் இதனைப் பற்பல கோணங்களிலும் எடுத்து வைத்து முழுமையாக வாதாட வேண்டும்.

இதனை ஒத்தக் கருத்துள்ளவர்கள் நீதிமன்றங் களுக்குச் சென்று வழக்குகள் தொடுப்பதன்மூலம் நீதி கிடைக்கப் போராட வேண்டியது அவசரக் கடமை யாகும்!

இது அரசியல் சட்டப்படி மாநிலங்களுக்குள்ள உரிமையாகும். மத்திய அரசு விலக்குத் தருவது கருணையோ, சலுகையோ, பிச்சையோ ஆகாது.

எனவே, மாநில அரசுகள் குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை வலிமையுடன் திறமை மிக்க, மூத்த வழக்குரைஞர்கள் மூலம் வாதாட முன் வரவேண்டியது அவசர, அவசியமாகும்!

இவ்வாறு தன் அறிக்கையில் கூறியுள்ளார் கி.வீரமணி.

Jam-packed last year, Diwali markets wear a deserted look

In Old Delhi’s Meena Bazar, Imran khan, president of the traders’ association, said, “This market had a stampede-like situation for the entire week preceding Diwali. We could close our shops only around 12 in the night. Tomorrow is Diwali and you can see how deserted the roads are.”

Written by Abhinav Rajput | New Delhi | Updated: October 19, 2017 5:20 am
Markets on Ajmal Khan Road in Karol Bagh, known to be a hotspot for Diwali shopping, on Wednesday. Tashi Tobgyal
On the eve of Diwali last year, Old Delhi markets such as Sadar Bazar, Chandni Chowk, Jama Masjid, Dariba Kalan and Chawri Bazar, had people jostling for space. This year, people drove their sedans and SUVs comfortably in the same areas. While cracker markets were shut, shopkeepers in other areas of Delhi, too, said their Diwali sales saw a drop of 30-40%.
In Old Delhi’s Meena Bazar, Imran khan, president of the traders’ association, said, “This market had a stampede-like situation for the entire week preceding Diwali. We could close our shops only around 12 in the night. Tomorrow is Diwali and you can see how deserted the roads are.”
Most traders said business was already down after GST and following the cracker ban, demand for other items associated with the festival had also plummeted.
Divyansh Khanna, a trader at Sadar Bazar, which is Delhi’s largest wholesale market, said, “I sell fancy lights but my business was complemented by the sale of crackers as people who came to buy it often ended up purchasing this too. Last year, I earned more than Rs 10,000 on the day before Diwali but this year I have not even been able to sell goods worth Rs 4,000.”
Kailash Khandelwal, president of Sadar Bazar gold association, said, “On the day of dhanteras, it might have looked that there are a lot of people in the shop but the purchasing power has dried down. The sales were at least 35% less than what it was last year because the taxes have increased from 1% to 3% on gold.”
Pankaj Sandhu, secretary, Lajpat Nagar Central Market association who is also into eateries and gold business, said, “This is the most dull Diwali I have seen in years. If I had 1,000 customers last year, the number would have decreased to 600 this year.”
President of Sarojini Nagar mini market association Ashok Randhawa said, “This market is known for Diwali shopping. Yesterday, we had some people but today it is worse than a normal day.”
Jam-packed last year, Diwali markets wear a deserted look

In Old Delhi’s Meena Bazar, Imran khan, president of the traders’ association, said, “This market had a stampede-like situation for the entire week preceding Diwali. We could close our shops only around 12 in the night. Tomorrow is Diwali and you can see how deserted the roads are.”

Written by Abhinav Rajput | New Delhi | Updated: October 19, 2017 5:20 am

Markets on Ajmal Khan Road in Karol Bagh, known to be a hotspot for Diwali shopping, on Wednesday. Tashi Tobgyal

On the eve of Diwali last year, Old Delhi markets such as Sadar Bazar, Chandni Chowk, Jama Masjid, Dariba Kalan and Chawri Bazar, had people jostling for space. This year, people drove their sedans and SUVs comfortably in the same areas. While cracker markets were shut, shopkeepers in other areas of Delhi, too, said their Diwali sales saw a drop of 30-40%.

In Old Delhi’s Meena Bazar, Imran khan, president of the traders’ association, said, “This market had a stampede-like situation for the entire week preceding Diwali. We could close our shops only around 12 in the night. Tomorrow is Diwali and you can see how deserted the roads are.”

Most traders said business was already down after GST and following the cracker ban, demand for other items associated with the festival had also plummeted.

Divyansh Khanna, a trader at Sadar Bazar, which is Delhi’s largest wholesale market, said, “I sell fancy lights but my business was complemented by the sale of crackers as people who came to buy it often ended up purchasing this too. Last year, I earned more than Rs 10,000 on the day before Diwali but this year I have not even been able to sell goods worth Rs 4,000.”

Kailash Khandelwal, president of Sadar Bazar gold association, said, “On the day of dhanteras, it might have looked that there are a lot of people in the shop but the purchasing power has dried down. The sales were at least 35% less than what it was last year because the taxes have increased from 1% to 3% on gold.”

Pankaj Sandhu, secretary, Lajpat Nagar Central Market association who is also into eateries and gold business, said, “This is the most dull Diwali I have seen in years. If I had 1,000 customers last year, the number would have decreased to 600 this year.”

President of Sarojini Nagar mini market association Ashok Randhawa said, “This market is known for Diwali shopping. Yesterday, we had some people but today it is worse than a normal day.”


AT Dubai Airport, luggage of 24 passengers offloaded from flight due to overweight
“There has to be to complete balance of fueling and the luggage load in the aircraft. Due to overloading and overweight some of the luggage was then taken off from the aircraft,” said an official

By: Express News Service | Chandigarh | Published:October 19, 2017 4:16 am

Luggage belonging to at least 24 passengers had to be offloaded from an Indigo flight Monday due to overweight issues in the aircraft at the Dubai airport, officials said. The luggage has been sent to the address of the passengers. According to Indigo airline officials in Chandigarh, they had reports of 24 such PNR’s where the luggage was offloaded from the airline at the airport on Monday morning.

“There has to be to complete balance of fueling and the luggage load in the aircraft. Due to overloading and overweight some of the luggage was then taken off from the aircraft,” said an official. Sources said that the passenger were informed about the problem before the aircraft took-off from the Dubai airport, but it was not mentioned specifically whose luggage was offloaded.

Soon after the flight arrived at the Chandigarh International airport, passengers had to face a lot of inconvenience as they had to wait for long looking for their luggage. The Indigo airline officials claimed that the luggage has been now delivered to the passengers. “We had asked the passengers to fill a form and provide the details about the missing luggage. All the passengers filled the forms and then the luggage was sent to the addresses,” said another official from the airline.

On Tuesday, passengers traveling in an Indigo flight to New Delhi had to face inconvenience after the aircraft developed a technical snag at the airport. The passengers were accommodated in other airline by the Indigo management.

Jharkhand: Kin of 11-yr-old who ‘died of starvation’ had Aadhaar, says UIDAI
By: Express News Service | Updated: October 19, 2017 7:09 am

Reacting to reports about the death of an 11-year-old girl allegedly due to starvation, Unique Identification Authority of India (UIDAI) Chairman Ajay Bhushan Pandey has said that Santoshi Kumari’s family had got itself enrolled with Aadhaar in 2014 and stringent action should be taken against those who denied social welfare benefits to the family.

Activists have claimed that the girl’s family had been denied ration, which they are entitled to under the National Food Security Act, for six months as the family’s ration card was cancelled because it was not linked to Aadhaar.

Calling the incident unfortunate, Pandey was quoted by PTI as saying, “The Jharkhand government has ordered a probe into the matter to find out the facts behind the unfortunate incident. I expect that person responsible for denial of benefits, in spite of Aadhaar card, will be held accountable and necessary action will be taken against such people by the state so that it acts as a deterrent in future.” Also Read | Jharkhand girl ‘starvation’ death: Family stopped getting ration 8 months ago

Pointing to Section 7 of the Aadhaar Act, which lays down the grounds for authentication of identity for social welfare benefits, Pandey said the law was clear that even if a person does not have an Aadhaar, the person shall be offered alternate and viable means of identification for delivery of the subsidy, benefit or service.

He stressed that the death was not due to denial of benefits because of Aadhaar as the family was enrolled with the UIDAI in 2013. Also Read | Jharkhand Minister Saryu Roy questions his Govt on Aadhaar drive

Pandey also emphasised that all the field agencies should be extremely sensitive to “to the needs of the people” and ensure that such issues do not prevent benefits and subsidies from reaching the grassroots. He said whoever is guilty in the case should be held accountable and be punished.

BU split into 3 but no govt funds yet for new universities


DH News Service, Bengaluru, Oct 18 2017, 3:00 IST
The Kori committee which looked into the trifurcation of BU had recommended that the new universities be given Rs 150 crore, to begin with, the V-C said.  DH File Photo
The Kori committee which looked into the trifurcation of BU had recommended that the new universities be given Rs 150 crore, to begin with, the V-C said. DH File Photo

The state government trifurcated Bangalore University (BU) by a notification last July and laid the ground for it with a gazette notification in 2015 but it has not yet released any funds for the development of the new varsities.

Bengaluru North University (BNU), which will get a new campus at Amaravathi, Chikkaballapur district, is now functioning on a seed amount of just Rs 3 crore which it received from the parent BU. The government has decided that BU will provide Rs 15 crore to BNU but the transfer process has not begun yet.

Vice-Chancellor of BNU, Prof T D Kemparaju, said: “We have submitted a proposal of Rs 185 crore to the government for the 2018-19 academic year. It may come up for discussion in the winter session of the legislature and it has been indicated to us that it may be announced in the state budget in February.”

The Kori committee which looked into the trifurcation of BU had recommended that the new universities be given Rs 150 crore, to begin with, the V-C said. The university had also submitted a proposal for Rs 350 crore that will be required over five years.

Earlier, it was reported that Bengaluru Central University also did not receive funds from the government and was functioning on seed money from the BU.

Addressing a press conference on Tuesday, BNU V-C detailed the plans for the new varsity which has jurisdiction over the districts of Kolar, Chikkaballapur, and several Assembly constituencies in Bengaluru Urban and Rural districts.

“We got to know through the media that there are some villages in Chikkaballapur and Kolar where there is not a single degree holder. Karnataka is known as the hub of IT and higher education but it’s shocking that there are such villages even today,” Kemparaju said. The university intends to conduct a demographic and economic survey in identified areas with help from its Master of Social Work (MSW) students to understand the reason for the trend. “We are in touch with the district administration. We want to identify and adopt such villages. We will help students here to pursue higher education,” he added. 

In the 2018-19 academic year, the university will start eight postgraduate courses — MA in English, Journalism and Mass Communication and Political Science, MSc in Mathematics, Fashion and Apparel Technology, among others. Three bachelor’s degree programmes in Hospitality and Event Management, BBA in Civil Aviation and BSc in Electronic Media. “We are not starting any traditional BSc courses in the 2018-19 year for lack of labs. In 2019-20, we propose to start courses in Physics and the following year in Chemistry,” the V-C said.

DH News Service

Mersal movie review: For Vijay and his fans, Atlee has delivered a celebratory film

Post Theri, Vijay and director Atlee combo came in for much praise. Add to that, the phenomenal response Mersal’s posters, trailer and songs are received. Mersal looks to be a winner.

Updated: Oct 18, 2017 21:03 IST

Priyanka Sundar
Hindustan Times, New Delhi


Mersal stars Vijay in a triple roles.

Mersal
Director - Atlee
Cast - Vijay, Kajal Aggarwal, Samantha Akkineni
Rating - 3/5

There can be no doubt that Mersal is a story written for actor Vijay. Each frame, dialogue, action and reaction celebrates the actor, and what he does best. Vijay is better off when he spews dialogue with restraint. Not loud, but he levels off well with SJ Suryah, who is a theatrical foil.

Performing like this is something that Vijay excels at, and director Atlee has used this to the film’s advantage. From demonetisation, racism, to entry to politics, he’s stuffed it all into his film. As the plot unravels, there is so much happening on screen that one is engrossed, not with the story but with all the distracting elements.

The plot is not new, but the premise is. After the reveal prior to the interval, there is no surprise in terms of the story. Till then, the movie keeps you hooked with its non-linear narration. After that it is all about highly dramatic sequences. The flashback is the heart of the movie. The Alapporan song set in Punjab, Vetrimaaran and Aishwarya’s love story, and how it all took a tragic turn is what this part of the film is about.

Kajal Aggarwal (Anu Pallavi) and Samantha Akkineni’ s (Tara) are no more than love interests. Nithya Menon (Aishwarya Vetrimaaran), however, plays a pivotal role in the film. It’s a strong role that sets things in motion. Sathyaraj as the investigator behind a string of murders interests us initially more than SJ Suryah (Daniel), whose primary function seems to be to lose his temper. His performance is much better in the flashback scene. While Vadivelu plays a connection of sorts to the past and present, Kovai Sarala’s role is much too short.

Vijay plays a magician in the film and magic is surely one of the highlights, not only because the actor performed it himself, but for the beautiful way in which it is shot. In fact, the entire movie has stunning visuals. From the beautiful imagery of Neethane, to the shots of the magic show performed at a theatre in Paris, they are all beautiful to look at.

All of this combined with Atlee’s talent to tell a story high on emotion has made Mersal just what Vijay’s fans ordered. Adding the ‘tamizh’ emotion with MGR movies scene shots, Bharathiyar in the background and addressing foreign people in Tamil, the film does connect with you.

Mersal is not about the story. It’s about the way it is delivered. The revenge drama concentrates on cleaning up corruption in the medical system. Daniel, who plays the role of a doctor, is the head of the food chain that feeds off of black money from the health department. What he sows in the past, he reaps in the future. In fact, one of the popular dialogues in the film is about this sentiment. This sentiment is the crux of the story.

People who troll Vijay, people who request him to join politics, who criticize him, they all seem to find a place in the film. The final speech seems to be completely about Vijay’s stance on everything that is being discussed today. The team has combined the real and the reel, complete with humour.

The fight for land, the fight against corruption and capitalism has translated into a good popcorn entertainer that celebrates, Ilayathalapathy, now Thalapathy.

The one thing that could have been avoided was the stretchy second half and the manner in which Samantha’s character’s arc is resolved. This does make one wonder if the director tried to pack a little too much in the film than was needed.

NEWS TODAY