Friday, November 17, 2017

பட்டியலில் சிவகங்கை, தேவகோட்டை நீக்கம் : அரசு ஊழியர் வீட்டு வாடகைப்படி குறைப்பு

Added : நவ 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement





சிவகங்கை: சிவகங்கை, தேவகோட்டையை கிரேடு '2' நகராட்சிகளின் பட்டியலில் இருந்து நிதித்துறை நீக்கியதால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிபுரியும் இடங்களின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கிரேடு (1ஏ) ல் சென்னை உள்ளது. சென்னைக்கும், அதனை சுற்றி 32 கி.மீ., க்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கிரேடு (1பி) ல் கோவை, மதுரையும் உள்ளன. இந்த இரு மாநகராட்சிகளில் இருந்து 16 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரு மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
அதேபோல் கிரேடு '2' ல் இடம் பெற்றுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் இருந்து 8 கி.மீ., சுற்றளவுக்குள் ஏதேனும் ஊராட்சி ஒன்றியம் இருந்தால், அதற்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரேடு (3) ல் இடம்பெற்றுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட நகராட்சிகள் கிரேடு '2' ல் இடம் பெற்றிருந்தன. தற்போது எட்டாவது ஊதியக்குழு மாற்றத்தில் அந்த பட்டியலில் இருந்து இரு நகராட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜோசப்சேவியர் கூறுகையில், ''சிவகங்கை, தேவகோட்டை போன்று மாநிலம் முழுவதும் பல நகராட்சிகள் கிரேடு '2' ல் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் வீட்டுவாடகைப்படி 3,200 ல் இருந்து 2,400 ரூபாயாக குறைந்துள்ளது. இதில் சிவகங்கை மாவட்ட தலைநகராகவும் உள்ளது. இதனை சரிசெய்து அரசாணை வெளியிட வேண்டும்,'' என்றார்.

நீதிபதியை விமர்சித்தவர்கள், 'சஸ்பெண்ட்' : அதிர்ச்சியில் ஆசிரியர்கள் 

 
  நவ 16, 2017 22:16

நீதிபதியை விமர்சித்து கருத்து தெரிவித்ததாக, 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதனால், மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.


'நீட்' தேர்வு குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, செப்டம்பரில், நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இதுகுறித்து, நீதிபதி சில கருத்துகளை தெரிவித்து, 'மாணவர்கள் பாதிக்கும் வகையில், போராட்டத்தை நடத்தக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். இதை விமர்சித்து, ஆசிரியர்கள் பலர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட, சமூக வலைதளம், தங்களின் பிரத்யேக இணையதள, 'ப்ளாக்' பக்கங்களில் எழுதினர்.


சிலர், போராட்டங்களின் போது விமர்சித்து பேசினர். சில இடங்களில், துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்த நீதிபதி, மற்றொரு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவை விமர்சித்த ஆசிரியர்களை கண்டித்தார்.
இதையடுத்து, அரசின் உத்தரவுப்படி, நீதிபதியை விமர்சித்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியல், போலீஸ் வாயிலாக, அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதன்படி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை, 10 பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் பட்டியலை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ரகசியமாகவைத்துள்ளனர்.


இன்னும் பலர், சஸ்பெண்ட் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தங்களுக்கும், சஸ்பெண்ட் உத்தரவு வருமோ என, பல ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்

  நவ 16, 2017 22:10

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.
நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.
அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

- நமது நிருபர் -

Tuesday, November 14, 2017


HC mulls stringent dress code in colleges

tnn | Nov 14, 2017, 00:17 IST

Madurai: A deviant student's act of uploading his selfies with girls and other obscene visuals on social media platforms using his mobile phone, may invite a stricter dress code and restrictions on mobile phone, while on educational institution campuses. Madras high court is likely to frame a set of guidelines on this issue on November 20.

Justice R Mahadevan of Madras high court mulled the options, after a Karur district-based college administration furnished the visuals uploaded by one of their students on websites. The student had pornographic materials and photographs with girls in the institution, and he had uploaded them without their knowledge.

On coming to know of his deviant behaviour, the college punished him severely and refused to return his testimonials.

The issue came to light after the student dragged the college to court by filing a writ petition stating that when he wanted to join another college, the management refused to to give him his original Classes 10 and 12 educational certificates, community certificate and transfer certificate.

He took the matter to Anna University's knowledge by a complaint on July 11, asking it to direct the college to provide him his certificates, But, the university failed to act on the representation, he said, adding that the court should direct the university to take action against correspondent and principal of the college and to return his original certificates.

Responding to his allegations, counsel for the college furnished photographs pertaining to the behaviour of the student while in college.

Expressing concern at the trend, justice Mahadevan directed the student to appear before him on November 20, when he is expected to pass necessary orders. He disapproved of the student community's behaviour and said the court thought of bringing in a dress code and cell phone restriction on campuses.

நாளை முதல் மழை படிப்படியாக குறையும்


By  சென்னை,  |   Published on : 14th November 2017 02:55 AM  |
todayrain

தமிழகத்தில் புதன்கிழமை ( நவ. 15) முதல் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியது:
 கடந்த 10-ஆம் தேதி முதல் 4 நாள்களாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று வலுப்பெற்று, திங்கள்கிழமை தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழைப் பெய்துள்ளது. இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்து வரும் இரு தினங்களில் வடதிசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில முறை லேசான மழையும், சில நேரங்களில் சற்று பலத்த மழையும் இருக்கும். புதன்கிழமை முதல் மழை படிப்படியாக குறையும் என்றார் பாலச்சந்திரன்.
 எண்ணூரில் 110 மி.மீ. மழை: திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 110 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
 பிற இடங்களில் மழை அளவு (மி.மீ.ல்): திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சென்னை மாதவரம் தலா 70, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், அண்ணா பல்கலைக் கழகம், அரண்மனைப்புதூர், தாமரைப்பாக்கம் தலா 40, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றம், தரமணி தலா 30, திருவள்ளூர் 20.

குழந்தைகள் இயந்திரங்களா?


By  மன்னை. பாஸ்கர்  |   Published on : 14th November 2017 02:48 AM 
"உன் கூடத்தான படிக்கிறா அந்தப் பிரியா, அவ மட்டும் எப்புடி எல்லாப் பாடத்துலயும் முழு மார்க் வாங்குறா?' நீயும் இருக்கியே, ஏதாவது ஒரு தப்புப் பண்ணிட்டு 4 மார்க் குறைச்சு வாங்குறதே உனக்கு பொழப்பா போச்சு.
 "எப்பப் பாரு விளையாட்டுதான். ஒரு நாளாவது நீயா உட்கார்ந்து படிச்சிருக்கியா?' தெனமும் படி, படின்னு பாட்டு பாடனும். இல்ல.. அடிச்சாதான் படிக்கிறது. எப்பதான் திருந்தப் போறியோ..!
 இதுபோன்ற குரல்கள்தான் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீடுகளில் பெரும்பாலும் எதிரொலிக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் நடுத்தர மக்கள் வீடுகளில் இந்த வசவுகள் கொஞ்சம் அதிகமாகவே கேட்கும். தாய்-தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் கேட்கவே வேண்டாம்.
 ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு பெற்றோர் இடும் கட்டளைகளைக் கேட்டால் சிரிப்புதான் வரும். உனக்கு கிரிக்கெட் பேட் வேணுமா? வீடியோ கேம் வேணுமா? சைக்கிள் வேணுமா? இல்லை என்ன வேணுமோ கேள். உடனே வாங்கித் தருகிறோம்.
 ஆனால், எல்லா தேர்வுகளிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கி விட வேண்டும் என்பதுதான் பிள்ளைகளிடம் பெற்றோர் பேசும் பேரம்.
 கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்த பெற்றோர், அதை வைத்து விளையாட அனுமதிக்க மாட்டேன் என்கிறார்களே என்று பிள்ளைகளுக்குக் கோபம்.
 சில குழந்தைகள் நாம் சொல்வதையெல்லாம் எதிர்ப்பேச்சு பேசாமல் கேட்டுக் கொள்வார்கள். ஒரு சிலர் ஏதாவது ஒரு வழியில் கோபத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். ஒரு சிலர் முணு முணுத்துக் கொண்டே செய்வார்கள்.
 இதேபோல தொடர்ந்து முணு முணுக்கும் குழந்தைகள் காலப்போக்கில் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பது மனவியல் ஆய்வாளர்களின் கருத்து. அதிக கண்டிப்பும் ஆபத்து, அளவுக்கு மீறிய செல்லமும் ஆபத்துதான்.
 விளையாடக்கூட நேரம் இல்லையே என மனதுக்குள் புழுங்கும் குழந்தைகள் ஒரு புறம்; அவர்களை மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாற்றத் துடிக்கும் பெற்றோர் மறுபுறம். பிள்ளைகளுடன் செலவழிக்கக் கிடைக்கும் நேரத்தை எல்லாம் அவர்கள் மனத்தில் மதிப்பெண் வெறியை ஊட்டவே பயன்படுத்தும் பெற்றோர்.
 இவர்களில் மாற வேண்டியது யார்? விளையாட்டிலேயே குறியாக இருக்கும் குழந்தைகளா? இல்லை, மதிப்பெண்கள் வாங்கா விட்டால் எதிர்காலமே இல்லை என்ற எண்ணத்தை அழுத்தமாக மனத்தில் பதித்திருக்கும் பெற்றோர்களா?
 பொருளாதார ரீதியில் வாழ்க்கையின் உச்சியில் பிள்ளைகளை உட்கார வைக்க வேண்டும் என்று துடிக்கும் பெற்றோர், குழந்தைகளின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. அவர்களுக்கென்று ஆசைகளும் ,விருப்பு வெறுப்புகளும் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்ப்பதில்லை.
 குழந்தைகளின் உடல் மற்றும் மன ரீதியான அமைப்பு பற்றி யோசித்துக் கூட பார்ப்பதில்லை.
 எத்தனை பெற்றோர், இரவில் உறங்கச் செல்லும் முன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி தூங்க வைக்கிறார்கள்? பள்ளிக் கூடங்களில் இப்போதெல்லாம் நீதி போதனை வகுப்புகள் இல்லாததால் ஆசிரியர்களும் கூட கதை சொல்வதில்லை. கதைகள் வழி கிடைக்கும் நியாயமும் நல்லெண்ணமும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.
 இந்த உலகம் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டுமானது என்று நாமும் தவறாகப் புரிந்து கொண்டு, வளரும் தலைமுறையையும் தவறாக சிந்திக்க வைப்பது நியாயமா?
 இந்த உலகம் கடைசி மதிப்பெண் எடுப்பவனுக்கும் உரிமையானதுதான் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, அவனும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன என்ற எதார்த்தத்தையும் மறைக்கிறோம்.
 இந்த சமூகம் மெத்தப் படித்த மேதாவிகளையும் பார்த்திருக்கிறது, படிக்காத மேதைகளையும் பார்த்திருக்கிறது என்பதுதானே உண்மை.
 பொது வெளியில் இந்த உலகைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள், இளைஞர்களாகவும், இளம் பெண்களாகவும் இன்றைய நவீன உலகில் நுழையும் போது எதிர்கொள்ளும் எதார்த்தங்கள் அவர்களுக்கு மன அதிர்ச்சியையே ஏற்படுத்தும்.
 தனிமனிதனாக எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை அகற்றி அடுத்தவர்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தும். அன்பு, பாசம் ,உறவு, நட்பு போன்றவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் பணம் மட்டுமே அடி மனத்தின் சிந்தனையாக இருக்கும்.
 அளவுக்கு மீறிய அன்பு காரணமாக நம்முடைய விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது. நாம் வேண்டுமானால் குழந்தைகளைப் போல் இருக்கலாம், ஆனால், குழந்தைகள் நம்மைப் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு.
 பச்சிளம் தளிர்களை அதன் இயல்பான போக்கில் வளரவிட வேண்டும். இயன்றவரை குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தந்து, ஊக்குவிப்பதுதான் பெற்றோர்களின் தலையாய கடமை.
 இது போட்டிகள் நிறைந்த உலகம்தான் என்றாலும், போட்டி மனப்பான்மை கொண்ட பிம்பங்களாக மட் டுமே குழந்தைகளை வளர்த்தால் எதார்த்த வெளிச்சம் படும்போது கூச்சம் ஏற்பட்டு, கண்களை மூடிக் கொள்வார்கள்.
 நம் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்று முடிவு செய்வது நம் கையில்தான் இருக்கிறது.
 

ஏழை மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடன் திட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு  மனுவில் கூறியிருந்ததாவது:&

பெருமாநல்லூரை சேர்ந்த ஏ.ரவி என்பவர் தன் மகனுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது மகன், பிளஸ்&2&வில் 59 சதவீத மதிப்பெண்தான் எடுத்துள்ளார். ஆனால், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும். இதனால் அவரது மகனின் விண்ணப்பத்தை நிராகரித்தோம். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ரவியின் மகனுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று 2013&ம் ஆண்டு ஜூன் 20&ந் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:&
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் விதமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடனை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த கல்விக்கடன் என்பது இலவசமாக வழங்கப்படுவதில்லை. குறைந்த வட்டியில் திருப்பிச் செலுத்தும் விதமாக கடன் வழங்கப்படுகிறது. இது, சமுதாயத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் விதமாக செயல்படும் சமூக பொறுப்புள்ள திட்டமாகும்.

இந்த திட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு உதவும் விதமாக, நியாயமான கல்விக்கட்டணத் தொகையை கடனாக வங்கிகள் வழங்க வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டது.
கல்விக்கடன் எந்தெந்த மாணவர்களுக்கு வழங்கலாம் என்பது குறித்து 2012&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27&ந் தேதி மத்திய நிதி மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தகுதிகளை நிர்ணயம் செய்து, அந்த தகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளில், கல்விக்கடன் வாங்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, இவற்றின் அடிப்படையில், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு குறையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இந்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

எதிர்மனுதாரர் ஏ.ரவியின் மகனுக்கு 2 வாரத்துக்குள் கல்விக்கடன் வழங்கும்படி வங்கியின் மேலாளருக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

courtesy: document source thanks to kalviseithigal

Doctors shocked to find 1 kg mass of plastic and wood in Punjab boy's stomach

DECCAN CHRONICLE
PublishedNov 13, 2017, 5:33 pm IST


The boy was addicted to eating bits of plastic and lumps of wood due to a disorder called pica.


The boy complained of pain over a year back (Photo: YouTube)

Several people across the world are known to be plagued by addictions which can land them in a terrible situation. While children do have certain weird habits, some can prove to be severely damaging and even fatal.

Arjun Sah from Bhatinda in Punjab had an obsession with chewing on bits of plastic and lumps of wood. Doctors were unaware of Arjun’s condition until they inserted a camera in his stomach to find the cause of his pain and were shocked to discover a 1 kg mass of wood and plastic in the 16-year-old’s body.

The problem started with Arjun chewing on rubber and while his parents stopped him, he would start chewing on objects when they weren’t watching. His addiction is described as an eating disorder called pica which causes people to eat sand, talc, stones, paint and dirt.

The doctors were able to remove 300 grams of the material through surgery and Arjun will have to undergo three more operations to extract the rest. While his mother thanked doctors for saving her son’s life, Arjun will require counselling to cure his condition.

Arjun complained of pain over a year back and his suffering became worse as he would face breathlessness and stopped eating. He was eventually rushed to a hospital when he lost 15 kg in just seven days.

Feb 6 last date to link mobile with Aadhaar

DH News Service, New Delhi, Nov 13 2017, 23:34 IST


The DoT order dated November 13 came after the Supreme Court recently asked the government to mention the last date for linking bank accounts or mobile phone numbers with Aadhaar.

The Department of Telecom (DoT) has asked all telecom firms to mention February 6, 2018, as the last date for linking mobile number with Aadhaar while sending SMS or interactive voice call to subscribers.

"Any communications/voice messages/SMS, which is to be sent by licences to their mobile subscribers regarding re-verification of mobile connections through the Aadhaar-based E-KYC process, shall contain the last date for re-verification, ie, 06.02.2018," the Ministry of Communications said in a notification on Monday.

The DoT order dated November 13 came after the Supreme Court recently asked the government to mention the last date for linking bank accounts or mobile phone numbers with Aadhaar.

To simplify the linking of Aadhaar with the mobile number, the DoT recently allowed re-verification through iris-based biometric devices and at the doorsteps of those consumers unable to use one-time passwords or incapacitated and cannot go to retail stores.

Separately, the DoT is also working to finalise steps to make it easier for consumers to re-verify their mobile numbers through Aadhaar without visiting telecom firm's office, by using one-time password through SMS, interactive voice response system and through mobile apps.

Recently, Telecom Minister Manoj Sinha had said that the government would simplify linking of mobile number with Aadhaar. He had also assured that numbers won't be disconnected for failure to link with Aadhaar.

Lioness gives birth to stillborn cub in Chennai’s Vandalur zoo

P Oppili| TNN | Nov 13, 2017, 20:09 IST

(

CHENNAI: Mala, a six-year-old lioness in Arignar Anna Zoological Park (Vandalur zoo) in Chennai, gave birth to a stillborn male cub on Monday.

This is the first incident of a lioness giving birth to a stillborn cub in the Vandalur zoo, an official said.

The cub was buried after a postmortem.

According to zoo authorities, the lioness mated with a nine-year-old lion, Siva, 104 days ago. The gestation period of a lioness ranges between 105 and 110 days.

The zoo houses a total of 15 lions, including an eight-month-old male cub. Tamil Nadu chief minister Edappadi K Palaniswami named the cub Vishnu a month ago.

Generally, big cats that give births to cubs for the first time will not be able to provide proper parental care to the newborns. In an attempt to protect the cubs, they keep shifting them from one place to another. In this process, the mother sometimes kills the young ones.

A week ago, a tigress in the zoo killed four of her newborn cubs. Postmortem revealed that the tigress, which was a first-time mother, was unable to carry the cubs without inflicting injuries on them. The cubs suffered deep injuries and died.

Wildlife researchers say such incidents do happen in the wild too.

ஒரு நிமிடக் கட்டுரை: மைதா எனும் விபரீத ருசி!

Published : 13 Nov 2017 09:28 IST

ஜூரி





மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும், சாலையோரக் கடைகளிலும் இரவு நேரங்களில் அதிகம் விற்பனையாவது மைதா பரோட்டாதான். ‘மைதா மாவு உடல் நலனுக்கு ஏற்றதல்ல; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் மைதா மாவை உணவுப் பொருளாகப் பயன்படுத் தத் தடை’ என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால், மத்திய உணவுப் பொருள் தர நிர்ணயக் கழகமோ, இந்திய மருத்துவர்கள் சங்கமோ அப்படி எந்த எச்சரிக்கையையும் அதிகாரபூர்வமாக விடுக்கவில்லை.

கோதுமையைப் பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊறவைத்து, பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் இட்டு மைதா வைப் பிரிப்பார்கள். கோதுமையை மாவாக அரைத்தால் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். அந்த மஞ்சள் நிறம் மாறி தூய வெண்மையாக அத்துடன் பென்சாயில் பெராக்சைடு என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள். இந்த ரசாயனம் தலைக்குப் பூசும் சாயத்திலும் கலந்திருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அளவுக்கு அதிகமாக உடலில் சேர்ந்தால் நீரிழிவு ஏற்படும். மாவு மிருதுவாக இருக்க அலாக்சன் என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள்.

மைதாவில் குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைடு, அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரைட் ஆகியவை கலக்கப்படுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களிலும் இந்த ரசாயனங்கள் சிறிதளவில் இருக்கக்கூடும். ஆனால், நிறம், சுவை, நெகிழ்வுத்தன்மை, மிருது போன்ற பயன்பாட்டுக்காகவும் வாசனையூட்டவும் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கவும்தான் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மைதாவில் கார்போஹைட்ரேட் 78% என்பதும் வைட்டமின் அறவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோதுமையை அரைக்கும்போது உடைசலாகக் கிடைப்பது ரவை. ரவையை சூஜி என்பார்கள். இந்தியில் ‘ஆட்டா’ என்றால் மாவு என்று அர்த்தம். கோதுமையின் தோல் மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கப்படும் அதை இலைத் தவிடு என்பார்கள். அதுவும் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. மைதா என்பது முளை நீக்கப்பட்ட, நார்ச்சத்தும் இல்லாத மிருதுவான பொருள் என்பதால் சத்துக்குறைவாகிறது. மைதாவைப் பசை காய்ச்சவும் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம். மளிகைக் கடைகளுக்குள் இரவில் பிற பொருட்களை ருசி பார்க்கும் பெருச்சாளிகள் மைதா மாவைத் தொடவே தொடாதாம். ஆனால், நாம்?

சென்னைக்கு மித மழையா? கனமழையா?- தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

Published : 13 Nov 2017 20:31 IST

சென்னை

 மேகக்கூட்டங்கள் போக்கு காட்டுவதால் காற்றின் திசையை வைத்து தான் சென்னைக்கு மித மழையா? கனமழையா? என்பதை அறிய முடியும். இது குறித்து தற்போதைய நிலவரத்தை தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது முக நூல் பதிவு:
“வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பு
கனமழையா? அல்லது நின்று ‘விளையாடும்’ மழையா?
சென்னை நகர்புறப்பகுதி முழுவதையும் மேகக்கூட்டங்கள் பரவி நிதானமான மழையை பெய்ய இருக்கிறது. மிகவும் அடர்த்தியான, பெரிய மேகக்கூட்டம் சென்னைக்கு அருகே வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்பது அவசியம். ஒருவேளை வராவிட்டால், இந்த மிதமான மழை மட்டும் நமக்கு கிடைக்கும்.
சென்னைக்கு அருகே மிகவும் அடர்த்தியான, தீவிரமான மேகக்கூட்டங்கள் வந்துவிட்டன. காற்று இல்லாத, மிதமாகப் பெய்யும் மழை பெய்யும். இதற்கிடையே மழைக்கு சாதகமான வெப்பநிலை சென்னைக்கு அருகே உருவானால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிக்குள் சுழன்று கொண்டு இருந்த மேகக்கூட்டங்கள் சென்னைக்கு மேலே பரவி கனமழையை கொடுக்கும்.
ஒருவேளை அந்த மேகக்கூட்டம் சென்னையைவிட்டு விலகினால், நமக்கு மிதமான, மிதமான மழை மட்டுமே கிடைக்கும். என்னுடைய அடுத்த பதிவு என்பது மழை எப்படி பெய்யும்? என்பதைக் குறிப்பிட்டு இருக்கும்.
அதாவது, நமக்கு மிதமான மழை கிடைக்குமா?அல்லது, கனமழை இருக்குமா? என்பதை அடுத்த பதிவில் உறுதியாகக் கூறிவிடுவேன்”.
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சற்றுமுன் பதிவிட்டுள்ளார்.

மானாமதுரையில் குப்பையில் தீ வைப்பதால்அபாயம்: தொடரும் சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிப்பு

 நவ 14, 2017 02:00

மானாமதுரை;சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை வளர்ந்து வரும் நகரமாகும்.மானாமதுரை பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைதாயமங்கலம் ரோட்டில் மாங்குளம் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.அதற்கு முன்பு மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பை கிடங்கிலும்,அரசுகுளி மயானம் அருகே வைகை ஆற்றிலும் கொட்டப்பட்டன.இந்நிலையில் மாங்குளத்தில் குப்பைக்கிடங்கு செயல்பட துவங்கியதிலிருந்து மேற்கண்ட இடங்களில் குப்பையைகொட்டக்கூடாது என செயல் அலுவலர் ஜான்முகமது துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் ஒரு சில ஊழியர்கள் டிராக்டர்களில் அள்ளப்படும் குப்பையை மாங்குளத்திற்குகொண்டு செல்லாமல் மதுரை ரோட்டிலும்,வைகை ஆற்றிலும் கொட்டி விடுகின்றனர்.குப்பையில் கிடக்கும் பொருட்களை சேகரிப்பவர்கள் அதில் கிடக்கும் ஒயர்கள்,டயர்களில் இருக்கும் கம்பிகளைஎடுப்பதற்காக குப்பையில் அடிக்கடி தீ வைத்து விடுவதால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டுதுர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் அந்த வழியாகச் செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இது குறித்து பா.ஜ., நகர பொறுப்பாளர் சங்கரசுப்பிரமணியன் கூறியதாவது:மானாமதுரை பேரூராட்சிபகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் சிலர் மாங்குளத்தில் உள்ள குப்பைக்கிடங்கிற்குகொண்டு செல்லாமல் மதுரை ரோட்டிலும்,வைகை ஆற்றிலும் கொட்டி விடுகின்றனர்,இதில்குப்பையை பொறுக்குபவர்கள் அடிக்டி தீ வைத்து விடுவதால் அந்த பகுதி முழுவதும் புகை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது,மேலும் மழை காலங்களில் துர்நாற்றமும் ஏற்படுகிறது,என்றார்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரியிடம் கேட்ட போது:மேற்கண்ட இடங்களில்குப்பையை கொட்டக்கூடாது என பணியாளர்களுக்கு எச்சாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இனிமேலும் கொட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.




கவர்னர் மாளிகை தோட்ட அதிகாரி இடமாற்றம் : 'தினமலர்' செய்தியால் நடவடிக்கை

நவ 13, 2017 21:54

கவர்னர் மாளிகையில் நடைபெறும், முறைகேடுகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக, அங்கு பணியிலிருந்த, தோட்டக்கலை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக கவர்னர் மாளிகையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, புகார்கள் எழுந்தன.

போலி 'பில்' : பூந்தொட்டிகள் வாங்காமலே, வாங்கியதாக போலி, 'பில்' கொடுத்து, பணம் பெறப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகைக்கு வாங்கியதாகக் கூறி, செம்மண் உட்பட, தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டு, அங்குள்ள அதிகாரிகள் வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகின்றன என, ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து, சமீபத்தில், நமது நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், கவர்னர் விசாரணை மேற்கொண்டுள்ளார். புகாரை தொடர்ந்து, தோட்டக்கலை அதிகாரியை இடமாற்றம் செய்தால், உயர் அதிகாரிகளும் சிக்க வேண்டும் என்பதால், தோட்டக்கலை அதிகாரி, பாலசுப்ரமணியம், இடமாறுதல் கேட்டு தோட்டக்கலைத் துறை இயக்குனருக்கு விண்ணப்பித்தார்.
அதன் அடிப்படையில், சிட்லபாக்கம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனராக, அவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

பெண் நியமனம் : எனினும், அவர் கவர்னர் மாளிகையிலேயே தங்க, அதிகாரிகள் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தோட்டக்கலை அதிகாரியாக, யோகநாதன் நியமிக்கப்பட்டுஉள்ளார். அதேபோல, ராஜ்பவன் உதவி கணக்கு அலுவலர் சிவக்குமாரை இடமாற்றம் செய்து, பெண் ஒருவரை அப்பதவிக்கு நியமித்து, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை இயக்குனர் உத்தரவிட்டார். ஆனால், கவர்னர் மாளிகை உயர் அதிகாரிகளின் சிபாரிசால், அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இது, ராஜ்பவன் ஊழியர்களிடம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இங்கு நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, பல ஆண்டுகளாக, தொடர்ந்து கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என, கவர்னர் மாளிகை ஊழியர்கள், கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

80 லட்சம் பேருக்கு அரசு வேலை வேணுமாம்!

 நவ 13, 2017 22:05

சென்னை: தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 57 வயதுக்கு மேலான, 5,685 பேர் உட்பட, 79.69 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

இந்தாண்டு, அக்., 31 வரையிலான, பதிவு விபரங்களை அரசு, வெளியிட்டுள்ளது. இவர்களில், 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 22.35 லட்சம்; கல்லுாரி மாணவர்கள், 30.60 லட்சம் பேரும் உள்ளனர். 35 முதல், 56 வயதிற்கு உட்பட்டோர், 11.57 லட்சம்; 57 வயதிற்கு மேற்பட்ட, 5,685 பேரும் உள்ளனர். கலைப் பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றவர்கள், 4.56 லட்சம்; அறிவியலில் பட்டம் பெற்றவர்கள், 6.06 லட்சம்; வணிகவியலில் பட்டம் பெற்றவர்கள், 3.27 லட்சம்; இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், 3.90 லட்சம்; பொறியியல் பட்டம் பெற்றவர்கள், 2.44 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். மருத்துவம் படித்தோர், 3,680 பேர்; முதுகலை பட்டதாரிகள், 798; வேளாண்மை இளங்கலை பட்டதாரிகள், 5,683; முதுகலை பட்டதாரிகள், 595; இளங்கலை சட்டம் படித்தவர்கள், 1,287; முதுகலை சட்டம் படித்தவர்கள், 219; இளங்கலை கால்நடை மருத்துவம் படித்தோர், 1,287; முதுகலை முடித்தோர், 181 பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

'மொபைல்' செயலிழக்க கல்லூரிகளில் 'ஜாமர்'

 நவ 13, 2017 21:52

மதுரை: 'கல்லுாரி வளாகத்திற்குள், மொபைல் போனை செயலிழக்கச் செய்ய, 'ஜாமர்' கருவியை பொருத்தலாம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, ஒரு மாணவர் தாக்கல் செய்த மனு: கரூர் கருடம்பாளையம், வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரியில், 2016ல், பி.இ., - மெக்கானிக்கல் சேர்ந்தேன். விடுதியில் மொபைல் போன் பயன்படுத்தியதாகக் கூறி, என் மீது, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
என் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழை, கல்லுாரி நிர்வாகம் வழங்கவில்லை. சான்றிதழ்களை வழங்க, அண்ணா பல்கலை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர், மகேஸ்வரன் தாக்கல் செய்த பதில் மனு: மனுதாரர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். மொபைல் போனை, விடுதி வார்டன் கைப்பற்றினார். அதில், ஆபாச படங்கள் இருந்தன. கல்லுாரியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை, 'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பினார். மனுதாரர், கல்விச் சான்றிதழ்களை கோரவில்லை; நாங்கள் தர மறுக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் பின், நீதிபதி ஆர்.மகாதேவன் கூறியதாவது: கல்லுாரிகளில், மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த அனுமதிப்பதால், பல்வேறு தவறுகள் நடக்கின்றன. கல்லுாரி வளாகத்திற்குள் மொபைல் போனை செயலிழக்க, ஜாமர் கருவியை பொருத்தலாம்.
இது போன்ற விவகாரங்களில், மாணவர்கள், கல்லுாரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பற்றி, ஏதேனும் அரசாணைகள் உள்ளவனா என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நவ., 20ல், தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

சென்னை பல்கலை தேர்வுகளில் முறைகேடு?

நவ 13, 2017 23:53

சென்னை: தொலைநிலை கல்வியில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததால், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது.

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், சில தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பியடித்தல் போன்ற முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த, துணைவேந்தர், துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில், கடந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மையங்களில், பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்களை பார்த்தால், அவர்கள் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது.
தமிழக மாணவர்கள், வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்றது குறித்து, பல்கலையின் தேர்வுத் துறை விசாரித்ததில், சிலர் ஏஜன்டுகளாகசெயல்பட்டு, ஆள் மாறாட்டம் மற்றும் காப்பியடித்தல் முறைகேட்டில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து, விசாரணை முடிந்த பின், முழு விபரத்தை சிண்டிகேட் கூட்டத்தில் வைக்க, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது. அதேபோல், பல்கலையின் தேர்வுகள் மற்றும் தொலை நிலை கல்வி தேர்வுகளில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் குறித்து, துறை ரீதியாகவும் விசாரணை துவங்கியுள்ளது. இதில், தொலைநிலை கல்வி மையத்தில் உள்ள சிலர் மீதும், பல்கலை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில் போலீஸ் வழியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 துவங்கியது!  சசி கும்பல் விசாரணை...


வருமான வரி சோதனையில் சிக்கிய சசி கும்பலிடம், கிடுக்கிப்பிடி விசாரணை, நேற்று துவங்கியது. ஜெ., உதவியாளர், பூங்குன்றன், பெங்களூரு புகழேந்தி, 'மிடாஸ்' மதுபான ஆலை இயக்குனர், சிவக்குமார் மற்றும், 'ஜாஸ் சினிமாஸ்' தலைமை அதிகாரி, விவேக் ஆகியோர் அடுத்தடுத்து, நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.

ஐந்து நாட்கள் விடாமல் நடந்த தேடுதலில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், மூட்டை மூட்டையாக சிக்கிய, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை ஆவணங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், கல்லுாரி மாணவர்கள், வேலையாட்கள் பெயர்களில், கோடிக்கணக்கில் பணம், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர், 25 ஆண்டுகளாக, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.


போலி நிறுவனங்கள் துவங்கி, லஞ்சம் மற்றும் ஊழல் பணத்தை பதுக்கி, பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். அதற்கான ஆதாரங்களை சேகரித்த, வருமான வரித்துறையினர், நவ., 9 காலையில், சென்னை, மன்னார்குடி, திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, பெங்களூரு, புதுச்சேரி, ஐதராபாத் என, 187 இடங்களில், 'ஆபரேஷன் கிளீன் மணி' என்ற, அதிரடி சோதனையை துவக்கினர்.

ஆயிரம் ஊழியர்கள்:

அதில், வரலாறு காணாத வகையில், ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகள், ஒரே நேரத்தில் களமிறக்கப்பட்டனர்.சென்னையில், ஜெயா, 'டிவி' மற்றும் வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலில்' உள்ள ஜாஸ் திரையரங்கங்கள் மற்றும் அவற்றின் தலைமை அதிகாரி விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, அவரது சகோதரியும், இளவரசியின் மகளுமான கிருஷ்ணபிரியாவின் தி.நகர் வீடு, நமது எம்.ஜி.ஆர்., அலுவலகம், தினகரன் வீடு என, 111 இடங்களில் சோதனை நடந்தது.


அதேபோல, மன்னார்குடியில் திவாகரன் வீடு, தஞ்சையில் நடராஜன் வீடு, நாமக்கலில் வக்கீல் செந்தில் வீடு மற்றும் நீலகிரி மாவட்டம், கர்சன் எஸ்டேட் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.இதில், சில இடங்களில் நடந்த சோதனை, நான்கு நாள் நீடித்தது.

வைரம் சிக்கியது

ஆனால், விவேக் வீடு, கிருஷ்ணபிரியா வீடு, ஜெயா, 'டிவி', காஞ்சி மாவட்டம், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும், ஐந்தாவது நாளாக நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
இந்த சோதனையில், சில இடங்களில், தங்கம், வைரம் நகைகள் சிக்கின. எனினும், வருமான வரித்துறையினர், 'நாங்கள், போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்த பணம், அதன் வாயிலாக, சசி கும்பல், பினாமிகள் பெயரில் வாங்கிக் குவித்த சொத்துகள் மற்றும்முறைகேடான பணப் பரிவர்த்தனையை தான் முக்கியமாக விசாரிக்கிறோம்' என்றனர்.
அவர்கள் குறிவைத்த படியே, ஐந்து நாள் சோதனையில், ஏராளமான, போலி நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் வாங்கி குவித்த சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றினர். அவை அனைத்தும், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மதிப்பிடும் பணிகளில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவேக் உள்பட நால்வரிடம்...

இந்நிலையில், சோதனைக்கு உள்ளான, 20 முக்கிய நபர்களுக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதில், முதல் கட்டமாக, நேற்று மிடாஸ் ஆலை சிவகுமார், பெங்களூரு புகழேந்தி, ஜெ., உதவியாளர், பூங்குன்றன் ஆகியோர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி விசாரணைக்கு, அடுத்தடுத்து ஆஜராகினர்.
அவர்களை தொடர்ந்து, மாலை, 6:00 மணி அளவில், இளவரசி மகன் விவேக், வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.அப்போது, மீண்டும் சிவகுமார், பூங்குன்றன் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்களையும், விவேக்குடன் சேர்த்து வைத்து, ஒரே அறையில், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Advertisement


அதில், எந்தெந்த போலி நிறுவனங்கள் பெயரில், எங்கெங்கு யார் பெயரில் முதலீடுகள்
செய்யப்பட்டுள்ளன; போயஸ் இல்லத்தில் மிரட்டி எழுதி வாங்கப்பட்ட சொத்துகள் போன்றவற்றை விசாரித்தனர். இந்த சோதனை, இரவு, 10:00 மணி வரைநீடித்தது.

மாணவர்கள் கணக்கில்...

தற்கிடையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மன்னார்குடியில், செங்கமலத்தாயார் கல்லுாரியில் படித்த மாணவர்கள் கணக்கில், பல கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டதாக கிடைத்த தகவல் குறித்தும், திவாகரனிடம் விசாரிக்க உள்ளனர். இதேபோல், உதவியாளர்கள், வேலையாட்கள், டிரைவர்கள் பெயரில், கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது குறித்தும், விசாரணை துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, கிருஷ்ணபிரியா, கலியபெருமாள், பாஸ்கரன், பிரபா, அனுராதா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரிடம், இன்று விசாரணை நடக்கவுள்ளது. அதன்பின், முழு விபரங்கள் வெளியாகும்.

மிடாஸில் தொடரும் சோதனை

தமிழகம் முழுவதும் நடந்த வரித்துறை சோதனை முடிந்தாலும், மிடாஸ் மதுபான ஆலையில், நேற்று இரவுக்குப் பிறகும் சோதனை தொடர்ந்தது. ஜெயா, 'டிவி' அலுவலகத்திலும், நேற்றிரவு வரை சோதனை நீடித்தது. அங்கு, முக்கிய ஆவணங்கள் இருக்கக்கூடும் என்பதால், தொடர் விசாரணை நடைபெறுகிறது.

வாக்குமூலம் சரிபார்ப்பு

சென்னை, அலுவலகத்தில் ஆஜரான விவேக் உள்ளிட்ட நான்கு பேர், அவரவர் வீடுகளில் வாக்குமூலம் அளித்திருந்தனர். அதை, உயர் அதிகாரிகள், நேற்று சரிபார்த்தனர். வரி ஏய்ப்பு மற்றும் மோசடியின் மதிப்பை உறுதிப்படுத்தவே, இந்த குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வடிவேலு போல போஸ்


சென்னை, வரித்துறை அலுவலகத்தில், நேற்று ஆஜரான பூங்குன்றன், சிவகுமார் போன்றோர், முகம் காட்டாமல் வந்து சென்றனர். ஆனால், கர்நாடக சிறையில், ஜெ., மற்றும் சசிக்கு உதவி செய்த, பெங்களூரு புகழேந்தி, வடிவேலு பாணியில் போஸ் கொடுத்தார். சிரித்த முகத்துடன், 'என்னிடம் ஒன்றும் இல்லை' என, பேட்டி அளித்தார். மற்றவர்களிடம், அதிகமாக இருப்பதை சூசகமாக உணர்த்தி சென்றார்.

ஒரு நிறுவனம்: 10 வங்கி கணக்கு

வரித்துறையினர், சசி கும்பலின், 50 நிறுவனங்களில் நடந்த பரிவர்த்தனைகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில், சில நிறுவனங்களில் நடந்த பணப்புழக்கம், பெரும் புதிராக உள்ளது. ஒரு சில நிறுவனங்கள், 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வாயிலாக, பரிவர்த்தனை மேற்கொண்டி ருந்ததும் தெரிய வந்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

வெடிகுண்டு பற்றி பேசிய விமான பயணி கைது

 நவ 13, 2017 22:45

கொச்சி: கேரளாவில், தனியார் நிறுவன விமானம் புறப்படுவதற்கு முன், அதில் இருந்த பயணி ஒருவர், 'ஹேப்பி பாம்' என கூறியதால், சர்ச்சை ஏற்பட்டது. 

கொச்சி விமான நிலையத்திலிருந்து, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தது.
அப்போது, அதிலிருந்த பயணி ஒருவர், 'ஹேப்பி பாம்' என கூறியதை கேட்டு, விமான பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த நபரிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். மும்பையில் உள்ள தன் நண்பரிடம், விளையாட்டாக பேசியதாக அவர் கூறினார். அந்த நபரை, போலீசார் கைது செய்தனர். விமானத்தில் இருந்த பயணியர் இறக்கி விடப்பட்டு, அவர்களின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வெடிகுண்டு ஏதும் இல்லாதது உறுதி செய்யப்பட்ட பின், விமானம் புறப்பட்டு சென்றது.

பள்ளி தணிக்கை துறையில் 'வசூல் ராஜாக்கள்': அலறும் ஆசிரியர்கள்

 நவ 14, 2017 00:23

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். 'தொடக்க கல்வி துறையில் உள்ளது போல், உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் தணிக்கை துறையை மாற்றியமைக்க வேண்டும்,' என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நிர்ணயம், சம்பளம் உயர்வு, அரசு நிதி செலவிடல், ஆசிரியர் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன் ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட அனைத்து வகை வரவு செலவினங்களுக்கும் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து பள்ளி தணிக்கை துறை சார்பில் தணிக்கை செய்யப்படுகின்றன.

இதற்காக சென்னை, மதுரை, கோவையில் மண்டல கணக்கு அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 32 மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆடிட் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மண்டல கணக்கு அலுவலராக உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கீழ் கல்வித்துறையின் கண்காணிப்பாளர்கள் மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தணிக்கையின் போது பள்ளிகளில் வரவு செலவிற்கான உரிய ரசீது இல்லாதது, விதி மீறி ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கல், நிதி முறைகேடு இருந்தால் ஆட்சேபனை (அப்ஜெக்ஷன்) தெரிவிக்கப்படும். உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து அவை சரிசெய்யப்பட்டால் தான் எந்த பணப் பலனையும் ஆசிரியர், அலுவலர்கள் பெற முடியும்.

தற்போது வரை தமிழக பள்ளிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் நிலுவையில் உள்ளன. இவற்றை குறைக்க அவ்வப்போது கூட்டு அமர்வு கூட்டங்கள், சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே ஒவ்வொரு கண்காணிப்பாளர்களுக்கும் மாதத்தில் குறிப்பிட்ட பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படும். இங்கு தான் பல அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' கோலோச்சுகின்றனர் என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில் 'ஆடிட்' என்றால் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். ஆடிட் வருவோருக்கு லாட்ஜில் தங்குவது, சாப்பாடு, தணிக்கை முடிந்து செல்லும்போது 'கவர்' என சகலமும் பள்ளி சார்பில் 'கவனித்து' அனுப்பினால் தான் ஆட்சேபனைகளுக்கு விமோசனம் கிடைக்கும்.

ஆனால் 'கவனிப்பு' இல்லாவிட்டால் 'அது சரியில்லை... இது சரியில்லை...,' என ஏராளமான ஆட்சேபனைகள் தெரிவித்து எழுதிவிடுவர். இதனால் முடிந்தவரை 'கவனித்து' அனுப்பி விடுவோம். இதில் உதவி பெறும் பள்ளிகளில் இஷ்டத்திற்கும் வசூலிப்பு நடக்கும். இதுதவிர ஓய்வு பெறும் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதி பலன் கிடைக்க இத்துறையின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) அவசியம்.

அப்போதும் முடிந்த அளவு 'பணம் கறப்பு' நடக்கும்.பல்வேறு புகார்கள் தெரிவித்தும், இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை இல்லாததால் இத்துறைக்கு 'டிரான்ஸ்பர்' ஆவதில் கடும் போட்டி ஏற்படுகிறது. முறைகேடு புகாரில் சிக்கி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் கூட, அரசியல் சிபாரிசால் இத்துறைக்கே பணிக்கு திரும்பும் சம்பவங்களும் நடக்கிறது. இத்துறையை சீரமைத்து மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும், என்றனர்.

தொடக்க கல்விமுறை பின்பற்றப்படுமா

தொடக்கக் கல்வித்துறையில் பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகம். அங்கு அந்தந்த மாவட்டங்களில் தொடக்க கல்வி அலுவலர் கண்காணிப்பின் கீழ் உதவி தொடக்க கல்வி அலுவலர் பொறுப்பிலேயே தணிக்கை பணிகள் மேற்கொள்கின்றன. அதுபோல் உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் கண்காணிப்பாளர்களே தணிக்கை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கலாம். உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரிகளை அத்துறைக்கே திருப்பி அனுப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

- நமது நிருபர் -

சி.பி.எஸ்.இ., அவகாசம்

 நவ 14, 2017 01:39 | Added : நவ 13, 2017 23:58




மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.
இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.
- நமது நிருபர் -

டாக்டர்களின் சம்பள முரண்பாடு : அரசுடன் நாளை பேச்சுவார்த்தை

நவ 13, 2017 22:02


சேலம்: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், தமிழக அரசு டாக்டர் சங்கங்களுடன் நாளை பேச்சு நடத்துகிறார்.

இது குறித்து, தமிழ்நாடு அரசு பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க மாநில தலைவர், லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: மருத்துவ படிப்பை முடித்து, மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில், டாக்டர்களாக பணியில் இணைபவர்கள், முதல் நான்கு ஆண்டுகள் வரை, 56 ஆயிரத்து, 100 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் பணி செய்கின்றனர்.

அதன் பின்னரே, மத்திய, மாநில அரசு டாக்டர்களின் சம்பளத்தில், முரண்பாடு துவங்குகிறது.
ஐந்து முதல், 10வது ஆண்டு வரை, மாநில அரசு டாக்டர்களை விட, மத்திய அரசு டாக்டர்களின் சம்பளத்தில், மாதத்துக்கு, 5,000 ரூபாய் கூடுதல் என்ற வகையில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர். அதே பணியில், 13 முதல், 20 ஆண்டுகள் முடிக்கும் நிலையில், மாநில டாக்டர்களை விட மத்திய அரசு டாக்டர்கள், மாதத்துக்கு, 39 முதல், 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆண்டுக்கு ஐந்து முதல், ஏழு லட்சம் ரூபாய் வரை, கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ்., முடித்து, பணியில் உள்ள டாக்டர்களின் சம்பள முரண்பாடு இதுவென்றால், எம்.எஸ்., எம்.டி., உள்ளிட்ட உயர் படிப்பு டாக்டர்களின் சம்பள விகித முரண்பாடுகள் இதைவிட அதிகமாக உள்ளன. தமிழக அரசு டாக்டர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக, பிறப்பித்த அரசாணை எண், 354ல் உள்ள சில கருத்துக்களை முன் வைத்து, நாளை சென்னையில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், டாக்டர்கள் சங்கங்களை பேச்சுக்கு அழைத்துள்ளார். இதில், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், சலுகைகள் குறித்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கு விமான சுற்றுலா

 நவ 13, 2017 21:45

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மலேஷியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபிக்கு, விமான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. மலேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு, டிச., 9ல், ஏழு நாட்கள் விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கான கட்டணம், 62 ஆயிரம் ரூபாய். துபாய் மற்றும் அபுதாபிக்கு, ஐந்து நாட்கள் சுற்றுலா, 24ல் புறப்படுகிறது. இதில், ஒருவருக்கு கட்டணம், 53 ஆயிரத்து, 700 ரூபாய். மேலும், விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., சென்னை அலுவலகத்தை, 98409 02918 - 19; மதுரை அலுவலகத்தை, 98409 02915 என்ற, எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்து உள்ளது.
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் பெரும் அவதி



சென்னையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சாலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன.

நவம்பர் 14, 2017, 03:30 AM

சென்னை,


சென்னையில் மழை என்றாலே அடுத்தடுத்து வரக்கூடிய 2 முக்கிய பிரச்சினைகளில் ஒன்று பள்ளி விடுமுறை. மற்றொன்று போக்குவரத்து நெரிசல். சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்யலாம் என்பதால் சென்னையில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

அதேபோல் நேற்றும் வானில் கரும் மேகங்கள் சூழ்ந்து காலை முதல் பரவலாக மழை பெய்ததால் மாநகர் முழுவதுமே இதமான சூழ்நிலை நிலவியது. மாலை நேரத்தில் குளிரும் அதிகரித்தது.

மேலும் குளிர் நிலவியதால் பலருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் அலுவலகத்தில் இருந்து மாலை 5 மணிக்கே வீடு திரும்பத் தொடங்கினர். பொதுவாக வாரத்தின் முதல் வேலைநாள் என்பதால் திங்கட்கிழமை அன்று சென்னை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதுமட்டுமல்லாமல் நேற்று மாலையிலும் மழை கொட்டியது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

அண்ணா சாலை முதல் ஆலந்தூர் வரையிலான சாலைகள், எல்டாம்ஸ் சாலை, பாரதிதாசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கிரீம்ஸ் சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து மிக மந்தமாகவே காணப்பட்டது. கோடம்பாக்கம் ஹைரோடு முதல் வடக்கு உஸ்மான் சாலை வரையிலும், மகாலிங்கபுரம் சாலை, எம்.எம் சாலை, நுங்கம்பாக்கம் ஹைரோடு முதல் கோடம்பாக்கம் சாலை வரையிலும் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து சென்றன.

கதீட்ரல் சாலை, பல்லவன் சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, எழும்பூர் பாந்தியன் சாலை, அசோக் நகர் மெயின் ரோடு, பெசன்ட் நகர் பிரதான சாலை, தியாகராயநகர் உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

Monday, November 13, 2017

கடன் அட்டை இனி கடந்த காலம்?


By DIN  |   Published on : 13th November 2017 12:00 AM  | 
credit

கடன் அட்டை, பற்று அட்டை என்கிற கிரெடிட்-டெபிட் கார்டுகள் பயன்பாடு பரவலாகி வருகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் இந்த "அட்டை' முறை காணாமல் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
 இன்னும் நான்கு ஆண்டுகளில் டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான தேவை அதிக அளவில் இருக்காது என தெரிகிறது. மொபைல்போன் வாயிலாகவே நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு விடுவதால் இந்த நிலை விரைவில் ஏற்படவுள்ளதாக நீதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
 இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகளும், 88 கோடிக்கும் மேலான டெபிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இதுதவிர, பொது, தனியார் துறை வங்கிகளுக்குச் சொந்தமாக 1 லட்சத்துக்கும் அதிகமான ஏடிஎம்கள் மக்களின் வசதிக்காக மாநகரங்களில் மட்டும் வீதிக்கு வீதி நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது ஆறாவது விரலாக அனைவரின் கைகளில் ஒட்டிக் கொண்டே இருப்பது மொபைல்போன். இதனை பயன்படுத்தி நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போக்கு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்தே அமிதாப் காந்த் இந்த கருத்தை கூறியிருக்கிறார் என்பது புலனாகிறது.
 அமெரிக்கா, ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்கும் கீழானவர்கள். 2040ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பாவில் பெரும்பான்மையான சதவீதத்தினர் மத்திய வயதைக் கடந்த இளம் வயோதிகர்கள்தான். இந்தநிலையில், இளம் தலைமுறையினர் அதிக அளவில் நம்முடன் இருப்பது பெரும் சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. உலக சராசரியுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில்தான் ஏராளமான மொபைல்போன் பயன்பாடும், வங்கி கணக்குகளும், கோடிக்கணக்கான பயோமெட்ரிக் பதிவுகளும் உள்ளன. இந்த நிலையில், அதிக நிதி பரிவர்த்தனைகளும் மொபைல்போன் மூலமாகவே செய்து முடிக்கும் பழக்கம் இளம் வயதினரிடையே கணிசமாக அதிகரித்து வருகிறது. இது, மேலும் விரிவடையும்பட்சத்தில், அடுத்த 3-4 ஆண்டுகளில் டெபிட், கிரெடிட், ஏடிஎம்களுக்கான தேவை சுருங்கிவிடும். அது முற்றிலும் வழக்கொழிந்து போக வாய்ப்புள்ளதா என்றால் அப்படியும் கூற முடியாது. அவற்றுக்கென ஒரு சில பயன்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஸ்மார்ட்போன் யுகத்தில் அட்டை, ஏடிஎம்கள் ஓரங்கட்டப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது!

யார் குற்றவாளி?


By ஆசிரியர்  |   Published on : 11th November 2017 03:49 AM  |   
கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி குருகிராம் ரயான் உறைவிடப் பள்ளியில் ஏழு வயது பிரத்யுமன் தாக்கூர் என்கிற சிறுவன் கழிப்பறையில் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது பாலியல் இச்சைக்கு உடன்படாத ஏழு வயது சிறுவனைப் பள்ளி வாகனத்தின் நடத்துநர் அசோக் குமார் படுகொலை செய்தார் என்று அன்று இரவே ஹரியாணா காவல்துறையினர் அறிவித்தனர்.
 இப்போது பிரத்யுமன் தாக்கூரின் படுகொலைக்குக் காரணம் அசோக் குமார் அல்ல என்றும், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவன் என்றும் மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையில் கண்டறிந்திருக்கிறது. பள்ளியில் நடக்க இருந்த தேர்வுகளையும், பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தையும் தள்ளிப்போட அந்த 11-ஆம் வகுப்பு மாணவன், ஏழு வயது பிரத்யுமன் தாக்கூரை கொலை செய்திருப்பது மத்திய புலனாய்வுத் துறையினரால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 மத்திய புலனாய்வுத் துறை, கண்காணிப்பு கேமராப் பதிவுகளை நுணுக்கமாக ஆய்வு செய்ததுடன் நின்றுவிடாமல், 125 ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் என்று பரவலாக விசாரணை செய்து பிரத்யுமன் தாக்கூரை படுகொலை செய்தது 11-ஆம் வகுப்பு மாணவன்தான் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது.
 அந்த மாணவன் உள்ளூரில் உள்ள கடையிலிருந்து கத்தியை வாங்கியது மட்டுமல்லாமல், அதை யாரும் அறியாமல் பள்ளிக்கு எடுத்து வந்திருக்கிறார். அந்த மாணவனின் தந்தை, பொதுவான நபர், பள்ளியின் பொதுநல அலுவலர் ஆகியோர் முன்னிலையில், பிரத்யுமன் தாக்கூரின் கழுத்தை அந்தச் சிறுவன் சற்றும் எதிர்பார்க்காமல் அறுத்துப் படுகொலை செய்ததுடன் அந்தக் கத்தியை கழிப்பறையிலேயே மறைத்து வைத்ததாக இப்போது அந்த மாணவன் வாக்கு மூலம் அளித்திருக்கிறான்.
 இதில், பல கேள்விகள் எழுகின்றன. நடத்துநர் அசோக் குமாரைக் கைது செய்தபோது அவர் கழிப்பறையிலிருந்து வெளியேறியது கண்காணிப்பு கேமராவில் கண்டறியப்பட்டதாக ஹரியாணா காவல்துறை கூறியிருந்தது. மேலும், வாகன நடத்துநர் பள்ளி வாகனத்திலிருந்த கத்தியைக் கழிப்பறையில் கழுவிக்கொண்டிருந்தபோது, ஏழு வயது பிரத்யுமன் தாக்கூர் உள்ளே நுழைந்ததாகவும், அந்தச் சிறுவன் தனது பாலியல் வெறிக்கு உட்படாததால் அவனை அசோக் குமார் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் காவல்துறை கூறியதெல்லாம் பொய்யான தகவலா? கழிப்பறையில் கத்தி கண்டெடுக்கப்பட்டது குறித்து குருகிராம் காவல்துறையினர் ஏன் தெரிவிக்காமல் இருந்தனர்.
 ரயான் உறைவிடப் பள்ளி கொலை வழக்கில் அவசர அவசரமாக விசாரணையை முடித்துக் குற்றவாளி நடத்துநர் அசோக் குமார்தான் என்று கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே அறிவித்த குருகிராம் காவல்துறையினரின் செயல்பாடு விசித்திரமாக இருக்கிறது. நடத்துநர் அசோக் குமார் துன்புறுத்தப்பட்டு வாக்குமூலம் தரக் கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பது விசாரிக்கப்பட வேண்டும். எந்த ஒரு மனிதரும் தன்னிச்சையாக தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை.
 இந்தப் பிரச்னையில் ஊடகங்களின் பங்கு குறித்தும் கூறாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, 24 மணிநேரத் தொலைக்காட்சி சேனல்கள் வந்த பிறகு, ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களைக்கூடப் பெரிதுபடுத்துவது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி ஊடகங்களுடன் போட்டிப் போட்டாக வேண்டிய கட்டாயத்தால் அச்சு ஊடகங்களும் தீர விசாரித்து உண்மையைப் பதிவு செய்வதற்கு காத்திருக்காமல், பரப்பரப்பு செய்தி ஆக்குகின்றன. போதாக்குறைக்கு சமூக வலைதளங்களான சுட்டுரையும், கட்செவி அஞ்சலும், முகநூலும் ஆதாரமில்லாத தகவல்களைக்கூடப் புயல் வேகத்தில் பொதுவெளியில் பரப்புகின்றன. இப்படிப்பட்ட சூழலில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் ஆத்திரமும் உருவாக்கப்படுகிறது.
 ஆட்சியாளர்களும் சரி, காவல்துறையினரும் சரி, ரயான் உறைவிடப் பள்ளி படுகொலை உள்ளிட்ட எல்லாப் பிரச்னைகளிலும் உண்மையைக் கண்டறிவதைவிட, ஊர் வாய்க்குப் பூட்டு போடுவதில் அக்கறை செலுத்துகின்றன. பரபரப்பாக்கப்பட்டுவிட்ட வழக்குக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதத்தில் விரைந்து விசாரணையை முடித்துக் குற்றவாளியை அடையாளம் காட்டி, வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று, தங்களது கடமையை முடித்துக்கொள்வதில் குறியாக இருக்கிறது அரசியல் தலைமையின் அழுத்தத்துக்கு ஆளாகும் காவல்துறை.
 நிரபராதியான அசோக் குமார் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கை விசாரிக்காமல் போயிருந்தால், ஒருவேளை தூக்குக் கயிற்றை முத்தமிட்டிருக்கலாம். இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஏறத்தாழ 4.20 லட்சம் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பலரும் நடத்துநர் அசோக் குமார் போல, காவல்துறையின் வற்புறுத்தலால் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிரபராதிகளாகக்கூட இருக்கலாம்.
 100 குற்றவாளிகள் தப்பித்தாலும்கூட ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் சட்டத்தின் நோக்கம். ஆனால், இங்கே 100 நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் ஒருசிலர் மட்டுமே பிடிபடுவதும் வாடிக்கையாக இருக்கிறதோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
 இதிர் யார் குற்றவாளி? பரபரப்பை ஏற்படுத்தும் ஊடகங்களா? ஊர்வாயை மூடுவதற்காக நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கும் காவல்துறையினரா?

கனமழை - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை




கனமழை பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு, 8:00 மணி முதல், ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.

மழை காரணமாக நகரின் பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரிலும் கனமழை கொட்டியது. இந்நிலையில் விடியவிடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.மேலும் தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

courtesy: thanks to kalviseithigal

I-T seizures hint at benami transactions

The assets not accounted for will be confiscated under the Benami Transactions (Prohibition) Amended Act, 2016, the officer said.
Dismissing as ‘baseless’ the reports of bank accounts of shell companies being frozen by the Income Tax department, the officer, who spoke on the condition of anonymity, said such action would be taken, if needed, after the conclusion of the operation. On the timing of the operation, particularly in the backdrop of Prime Minister Narendra Modi’s visit to Chennai last week, the official said the investigation wing had been working on the mission for quite some time now.
“We had specific inputs of [suspected] large scale benami transactions involving the family members [of Sasikala] over a period of time. Adequate homework was done before launching the operation, which is one of the biggest in recent times. A large volume of documents has been seized, and more may come out soon. A sizeable number of documents was seized from a house in T. Nagar. The market value of these assets could be several hundreds of crores [of Rupees],” the official said. When asked if there was any evidence of foreign investments, the officer said the suspects would be asked to declare their assets in India and abroad.
“If they don’t disclose [their assets] voluntarily, we will invoke the provisions under the Black Money (Undisclosed Foreign Income and Assets) and Imposition of Tax Act, 2015. If need be, experts from the Foreign Tax and Tax Research division would be roped in to assist us in the investigation,” he said.
Parrying questions on the seizures made in New Delhi and Bengaluru, another Income Tax officer said that the department would officially come out with details of property documents, gold and cash seized in the operation soon.
“Going by the quantum and value of the seizures, a clear case of prima facie offence has been established. Now, the law will take its own course,” he added.
Meanwhile, Income Tax officials raided the farm house of sidelined AIADMK deputy general secretary T.T.V Dhinakaran near Bommayarpalayam in Villupuram district.

Revised coach composition welcomed

It is the only day train on Chennai-Tiruchi Main Line

Train travellers in the delta region have overwhelmingly welcomed the revised coach composition of the Cholan Express, at present the only day-time train operating between Chennai and Tiruchi on the Main Line.
Heeding long time demand of passengers, the Railways has decided to classify 50% of the reserved sleeper class coaches, amounting to five coaches, as Second Class Chair Car Reserved coaches effective December 1.
The Chennai Egmore-Tiruchi-Chennai Egmore Cholan Express is the main day-time train for passengers travelling from Thanjavur, Kumbakonam and Mayiladuthurai regions to Chennai and had been enjoying immense patronage. Till 2003, it was operated with chair car coaches only.
The service has had its share of tribulations in the past. Despite its immense popularity between Tiruchi and Chennai on the Main Line connecting Thanjavur, Kumbakonam, Mayiladuthurai and Cuddalore for decades during the erstwhile metre gauge era, the train suffered a severe jolt when gauge conversion works forced short termination of the service at Kumbakonam for some years since 2003.
During the short termination period, the Cholan Express was involved in rake sharing arrangement with another train comprising sleeper class coaches while the Railways levied only second class sitting chair car fare.
After a protracted struggle by train users from the delta region, the Cholan Express service was restored in 2009 but was again forced to share rakes with Chennai Egmore-Mangalore Express service while the passengers were charged sleeper class fare. Many passengers even went to court against the ‘excess fare’ collection.
Thereafter, the Railways attached five sitting reserved and an equal number of unreserved coaches to the service but that arrangement inconvenienced the Mangalore travellers a lot for no fault of theirs forcing the Railways to recast the arrangement to two sitting reserved and three general compartments apart from other regular AC and reserved coaches.
With complaints from the delta region commuters gaining credence, the Railways again tinkered with the coach composition involving a share arrangement for Cholan Express with Pandyan/Rock Fort Express due to which the Cholan Express had a total of 22 coaches including two unreserved sitting and two general reserved compartments which was again objected to by the passengers.
“The Railways has finally seen merit in our demand and has decided to classify five sleeper class coaches as second class chair car reserved coaches. We welcome the decision. Since it is the only day train at present in the Main Line section, we want dedicated chair car coaches for the Cholan Express, on the lines of Mannargudi-Tirupati Bamani Express and Tiruchi-Tirunelveli Inter City Express,’’ says A. Giri, member, Divisional Rail Users Consultative Committee.

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...