Friday, January 19, 2018


Exicse officials collected Rs 1.63 lakh bribe in one day from bars operating with expired licenses

| TNN | Jan 18, 2018, 23:46 IST



Chennai: Bribes collected from Tasmac bars run with expired licenses may run up to Rs 1.6 lakh per day, if a recent case booked by DVAC is any indication. 

Officials of Directorate of Vigilance and Anti-corruption (DVAC) have busted a modus operandi of some officials in the excise department in Coimbatore where they were collecting Rs 5,000 each from Tasmac bars which were operating despite expiry of licenses.


Jeyachitra, divisional excise officer and M Senthilkumararajan, revenue inspector (excise) of the Coimbatore North area, were nabbed after a surprise check by DVAC officials based on a complaint by district inspection cell officer PN Prabhakaran.

During the check on January 5, officials discovered that a silver colour Tata Indica had been hired along with a driver to collect bribes. A total of Rs 95,940 was found on Jeyachitra, of which Rs 55,500 was found in a leather bag and Rs 35,000 was in a cover. A total of Rs 56,000 was the collection from 10 bars visited prior to the one where the surprise check was conducted, officials said. The driver of the car was given Rs 500, DVAC said in the FIR. The licenses for the bars had expired on December 31.


The officials had collected Rs 1.63 lakh in a single day through these bribes, the FIR stated. The bribes collected meticulously noted down in a 72-page note which was collected as evidence from the excise officials.


Jeyachitra had allegedly kept aside Rs 35,000 in a cover to be given to Senthilkumararajan while the remaining Rs 1.28 lakh meant for herself was kept in an almirah in the corner of the first floor of her house, DVAC said in the FIR.

A case was registered by DVAC inspector G Arumugam under Section 13(2) of the Prevention of Corruption Act, 1988 read with 13(1)(d) on January 5. The sections pertain to criminal misconduct by public servant and obtaining a pecuniary advantage by corrupt or illegal means.
More GST relief: Rates cut on 29 goods & 53 services
Govt Signals Move Towards 1-Stage Filing


TIMES NEWS NETWORK

New Delhi: The Centre and states on Thursday decided to reduce goods and services tax rates on over 80 items, while deciding to start the move towards a single-stage filing instead of the current threestage form, in what is seen as the biggest process overhaul

since the new regime kicked in last July. TOI had reported on January 16 that such a move was likely.

The list included 29 goods and 53 services, finance minister Arun Jaitley told reporters after a meeting of the GST Council, which has all state finance ministers as members. There was relief for those selling second-hand vehicles or buying diamonds and precious stones in addition to tickets for theme parks, ballets and dance performances as well as contributions to services provided by RWAs to their members.

Theatre performance in Indian language and entry to planetariums that cost less than Rs 500 will be exempted from GST, against Rs 250 now. There is also a move to reduce tax on small housekeeing service providers hired through e-commerce platforms from 18% to 5%. The new rates will kick in from January 25.

In addition, rates will be reviewed for 42 handicrafts, including products such as hand-made paper.


College entrance tests won’t incur GST

All exams conducted by educational institutions and services related to them will be exempted from GST. This means, college entrance exams will be outside the ambit of GST. Further, vehicles used to transport students, faculty and staff schools have been exempted.

Unlike the November meeting, which saw massive rate restructuring involving over 200 items, this one was a limited exercise, which is expected to leave a Rs 1,000-1,200 crore annual dent on the exchequer.

This time, the focus was on simplifying the filing process, which has come in for severe criticism. While it has been decided in principle to scrap the three stage process, the alternate mechanism is a work in progress but sources said the idea is to move to a single form. At the meeting, Bihar deputy chief minister Sushil Modi and GST Network chairman A B Pandey suggested various options based on discussions undertaken by groups headed by them, with Infosys chairman Nandan Nilekani joining the discussions too.

The Council discussed the possibility of retaining only GSTR-3B or the initial sales return, while asking sellers to upload their invoices. This will help tax authorities match the two and in case a difference is spotted, the taxpayer can be asked to explain and pay up, Jaitley said.

“It was finally culminating into filing 3B returns and supplier invoice, which would be adequate,” he said, adding that the structure will be finalised soon and the GST Council will decide on it at its next meeting. Asked if filing only one return is the way forward, he said “that seems to be the course”.

Officials were more forthcoming, suggesting that over a period of next few months, GSTR-3B returns will be done away with and only invoices will be the way forward to unshackle businesses from what they are claiming is a big burden. “Our analysis of 1.5 crore returns filed so far shows that 92% of the taxpayers file 50 invoices a month, which is less than two a day. So it’s not so much of a burden as people are making it out to be,” said an official.

Tax experts, however, wanted more clarity on the issue. “It appears that the onus of ensuring that appropriate input tax credits on a monthly basis will largely shift to the taxpayers and possibly a periodic audit process to ensure the same will be put in force, however we need to await the decision in the next meeting,” said M S Mani, partner at Deloitte India.

There were suggestions to make the system more robust to avoid inconvenience. “While simplification and merging multiple monthly returns into a single return would be good in concept, it needs to be ensured that invoice level details are made available to the buyers on a real time basis so that remedial action can be taken without waiting for assessment or audit,” said Pratik Jain, partner at PwC.
Pass or fail? Day after CA results, students in a fix
Many Complaints About Discrepancy In Score Lists 


Hemali.Chhapia@timesgroup.com

Mumbai: Hundreds of students whose CA results were declared on Wednesday saw something miraculous happen on Thursday. Many of them who had failed to clear the exam accessed score lists showing them as passed.

Ankita Mulani did not clear the CA final exam as per her score card on the ICAI website. But on rank lists available on the Internet, she found she had passed the gruelling exam in her very first attempt.

She is not the only one. Mahavir Gundecha who scored 194 has been declared pass in the lists available on the Internet whereas his scorecard shows him as failed.

There were similar complaints from other states. Across India, students buzzed on social media and on chat groups about the discrepancy in the result.

Snehal Lodha tweeted, “The CA Final result declared on 17/1 as per the ICAI website showing my result as Fail seems incorrect as I have passed as per the database.”

The ICAI clarified, “Some mismatches had occurred in the file attached to the branches. Realizing this mismatch, the department had immediately sent the corrected version to branches and regional councils.”

Exam head B Muralidharan said, “It was brought to our notice that this internal communication has been inadvertently shared outside which has created confusion in the student fraternity.”

Students were anxious about their exact status as their score cards and result list did not match.

“At least 50-60 students I know are facing this problem,” said Rajesh Sahijwani, whose daughter took the final exam in November.

According to some, candidates with scores of over 190 have all faced the same problem. Examinees are concerned whether the result database was hacked.

“The result was delayed by a few hours and that is when they seem to have downgraded our scores,” claimed a student.

The internet had several lists with details of tens of thousands of candidates who took the CA final exam. “Such details are not possible from any external agency. This is a list that has got leaked from the ICAI database,” alleged a candidate. Many are applying for revaluation. Some others are planning to file a writ petition. Others are organising a protest.

This year, the CA final exam was taken by 30,084 students and 6,841 cleared at least one group taking the pass percentage to 22.76.

The ICAI stated that 9,479 candidates had qualified as chartered accountants.
பெண் டாக்டருக்கு அதிர்ச்சியளித்த ஊழியர்கள்! சிசிடிவி-யால் குட்டு வெளிப்பட்டது!

சகாயராஜ் மு




சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், பயிற்சி டாக்டரிடம் முகமூடி அணிந்து கொள்ளையடித்த மூன்று ஊழியர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர். உள்நோயாளிகளாகப் பலரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களும் அதிக அளவில் பணியாற்றிவருகின்றனர். இந்த மருத்துவமனையில், பவித்ரா என்பவர் பயிற்சி டாக்டராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் பவித்ராவின் செல்போன், லேப் டாப் இருந்த பை திருடு போனது. இதுகுறித்து அவர், காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மருத்துவமனையில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது, பவித்ராவின் பையை முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மூன்று பேர் யார் என்று பார்த்தபோது, மருத்துவமனை ஊழியர்கள் சரத்குமார், சசிகுமார், அபினேஷ் எனத் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் கைதுசெய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

டாக்டரிடமே மருத்துவமனை ஊழியர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அங்குள்ள மற்ற டாக்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இரக்கமுள்ள மனசுக்காரர்.. ஏழைக்கெல்லாம் சொந்தக்காரர்..

Published : 17 Jan 2018 11:14 IST

ஒய்.ஆண்டனி செல்வராஜ்



தாயுடன் சேர்ந்து உணவுகளை பார்சல் செய்கிறார். - படங்கள்: ஜி.மூர்த்தி



வாசுதேவன் - The Hindu

தூங்காநகரமான மதுரையின் நடைபாதைகளில், யாரோ ஒருவரை எதிர்பார்த்து வயிற்றுப் பசியோடு காத்திருக்கின்றனர் சிலர். ஒரு ஆட்டோ விரைந்து வருகிறது. அதில் பல பார்சல்கள். ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த பார்சலை பெற்றுக் கொள்கின்றனர். அப்போதே வயிறு நிரம்பிய மகிழ்ச்சியில் கைகூப்புகின்றனர். அடுத்த இடம் நோக்கி பார்சலுடன் பறக்கிறது ஆட்டோ.

ஒருவேளை உணவுக்குகூட வழியின்றி நடைபாதைகளிலும், சாலையோரங்களிலும் பசியால் துடிப்பவர்கள், உடல் வற்றிப்போய் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகம். மற்றொரு புறம், ஹோட்டல்கள், வசதிபடைத்தவர்களின் வீடுகள், திருமண மண்டபங்களில் தட்டுத் தட்டாக உணவுகள் வீணாகி, குப்பைத் தொட்டிக்குப் போகின்றன. இவ்வாறு யாருக்கும் பயனின்றி வீணாகும் உணவுகளைச் சேகரித்து சாலையோரவாசிகளின் பசியாற்றுகிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் டி.ஆர்.வாசுதேவன் (31).

மதுரை காமராஜர் சாலை பகத்சிங் தெருவில் வசிக்கும் இவர், பகல் முழுவதும் ஆட்டோ ஓட்டிவிட்டு, இரவில் வீடு திரும்புகிறார். அன்றைய பொழுதை முழுமையடையச் செய்யும் அவரது சேவை, அதற்குப் பிறகுதான் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். ஹோட்டல்களுக்குச் சென்று, மீதமாகும் உணவுகளை சேகரித்துக்கொண்டு, வீட்டுக்கு வருகிறார். அங்கு தனது தாயுடன் சேர்ந்து, உணவை தனித்தனியே பார்சல் செய்கிறார். ஆதரவற்றவர்களின் இருப்பிடங்கள் நோக்கிச் செல்கிறார். சிறிது நேரத்தில், பசித்தவர்களின் வயிறு போல, வாசுதேவனின் மனமும் நிறைகிறது.

இந்த சேவை பற்றி வாசுதேவன் கூறியதாவது:

‘‘ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பம். மதியம் பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிடுவேன். இரவு அப்பா காசு கொண்டுவந்தாதான் சாப்பாடு. பசி வயிற் றைக் குடையும். எங்கேயாச்சும் கல்யாணம், காதுகுத்து நடக்குதான்னு, அம்மாவுக்குத் தெரியாம மண்டபம், மண்டபமா சுத்துவேன். 6-ம் வகுப்புக்கு மேல படிக்கல. ஆட்டோ ஓட்டுறேன். அதனால, சாப்பாட்டுக்கு பிரச்சினை இல்லை. ஆனா, சின்ன வயசுல நான் அனுபவிச்ச பசியின் கொடுமை இன்னமும் மனசைவிட்டு நீங்கல. அதனாலதான், பசிக்கிறவங்களுக்கு சோறு போடறத ஒரு கடமையா செய் றேன்.

2005-ல் ஒரு கேட்ரிங் சர்வீஸ் சாப்பாட்டு பார்சலை மண்டபத்துக்கு சவாரி ஏத்திட்டுப் போனேன். அங்கு நிறைய சாப்பாடு மீதமாகிடிச்சு. அதை எடுத்துட்டுப்போய், ராத்திரி ரோட்டுல தூங்கிட்டிருந்த ஆதரவற்றவங்களை தட்டி எழுப்பிக் கொடுத்தேன். அன்னிக்கு தொடங்கின உதவி, இப்போ வரை தொடருது.

என்னோட இந்த சேவையைப் பார்த்த சில ஹோட்டல்காரங்க தினமும் இரவு மீதமாகும் சாப்பாட்டைக் கொடுப்பாங்க. ஹோட்டலில் சாப்பாடு கிடைக்காத நாட்கள்ல, மண்டபங்கள்ல விசேஷம் எதுவும் நடக்குதான்னு பார்ப்பேன். மீதமாகுற உணவைத் தரமுடியுமான்னு கேட்பேன். கொடுத்தா, அதையும் பயன்படுத்திக்குவேன்.

பிரியாணி, மீன், மட்டன், சப்பாத்தி, புரோட்டா என நான் தினமும் விதவிதமா கொண்டு போவேன். அதனால, என்னை எதிர்பார்த்து காத்திருப்பாங்க. சின்ன வயசுல, நானும் அம்மாவும் இரவு சாப்பாட்டுக்காக அப்பாவை எதிர்பார்த்து காத்திருந்ததுதான் ஞாபகம் வரும்..’’ என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் வாசுதேவன்.

‘‘விரைவில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து இந்த சேவையைத் தொடரப் போறேன். இப்படி செஞ்சா, இன்னும் நிறைய பேரின் பசியைத் தீர்க்க முடியுமே!’’ - கருணையோடு நம்பிக்கையும் மிளிர சொல்கிறார் வாசுதேவன்.

படங்கள்: ஜி.மூர்த்தி
மகளிர் திருவிழா: மாங்கனி நகரில் மகத்தான கொண்டாட்டம்

Published : 14 Jan 2018 11:01 IST

கி.பார்த்திபன்
வி.சீனிவாசன்































மாங்கனி நகரமான சேலத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் மகளிர் திருவிழா கடந்த ஜனவரி 7 அன்று சேலம் ஜெய்ராம் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. அலை அலையாக வந்த பெண்களின் கூட்டத்தில் ஒட்டுமொத்த அரங்கமும் கலகலப்பில் நிறைந்தது.

சேலம் அரசு இசைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் கண்களுக்குக் கலை விருந்து அளித்தது என்றால் துரோணா குத்துசண்டைப் பயிற்சி மையத்தினரின் தற்காப்பு நிகழ்ச்சி பெண்களின் வீரத்தைப் பறைசாற்றியது. ‘சமையல் பெண்களுக்கானதா இல்லையா?’ என்ற பேச்சரங்கம் சிந்திக்கவைத்தது. சென்னை ‘மேட்’ அகாடமியின் பறையாட்டத்துடன் சிலம்பாட்டமும் இணைந்துகொள்ள, அரங்கம் அதிர்ந்தது.



மீரா - TAMIL பெண் என்பதே பெருமிதம்

விழாவின் மூன்று முத்துக்களாய் முத்திரை பதித்துப் பேசிய சிறப்பு விருந்தினர்களால் செவி முழுக்கக் கருத்துத் தேன் பாய்ந்தது. முதலில் பேசிய அரசுப் பொது மருத்துவர் எஸ்.எஸ். மீரா, “பெண்களால் நிறைந்த அரங்கத்தைக் கண்டதும் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியதைப் புதியதாகச் சொல்ல வேண்டுமானால் மெர்சலாயிட்டேன்” என்றதும், கரவொலி அடங்க வெகுநேரமானது. கவிதை நடையிலான தேனினும் இனிய உரையை அவர் தொடர்ந்தார்: ‘‘பெண் என்று கேட்டு எதிலும் முன்னுரிமை பெறாதீர்கள். நமக்குக் கிடைத்ததை வைத்து முன்னேற வேண்டும். இந்த வாழ்வில் என்ன சுகத்தைக் கண்டேன்; எனக்கு மட்டும் ஏன் இப்படி என்பது போன்ற சலிப்பு வார்த்தைகள் இனியும் வேண்டாம்.

பெண்ணாகப் பிறக்க மாதவம் செய்தவர்கள் நாம் என்பதை உணர்வோம். பருவ வயதுப் பெண்களை மயக்கும் ஆண்களின் அலங்கார வார்த்தைகளான, ‘உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன், நீயின்றி நான் இல்லை, நீதான் என்னுயிர்’ போன்றவற்றை நம்பி ஏமாந்துவிடாத அளவுக்குப் பெண்களை வளர்க்க வேண்டும்.

உங்களுக்குக் கிடைக்காத விஷயத்தை நினைத்துப் புலம்புவதைவிட இருப்பதைக் கொண்டு மனம் நிறையும் பெண்மை குணம் கொள்பவரை எங்கும் கொண்டாடுவார்கள்’’ எனப் பேசினார். பெண்கள் தங்கள் உடல் நலனில் காட்ட வேண்டிய அக்கறை குறித்துப் பேசியதோடு அந்தரங்க நோய்கள் விஷயத்தில் பெண்கள் அசட்டையாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.



சண்முகபிரியா - TAMIL சட்டம்தான் கேடயம்

அடுத்ததாக நீதித்துறை நடுவர் ஏ. சண்முகப்பிரியா, “தாய் வயிற்றில் சிசுவாய் உருவெடுக்கும் காலம் தொடங்கி மூதாட்டிப் பருவம்வரை திறம்பட வகுக்கப்பட்ட சட்டம் பெண்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. ஆனாலும் பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை, வரதட்சிணைக் கொடுமை, விவாகரத்து எனப் பெண்களைச் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

இவை அனைத்துக்கும் ஆண் வர்க்கத்தை மட்டுமே குற்றம் சாட்ட முடியாது. இதன் பின்புலத்தில் பெண்கள் இயங்குவதையும் மறுக்க முடியாது. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் போன்ற விஷயங்களைக் கற்பிப்பது பெற்றோரின் கடமை. பெண்கள் பாதுகாப்புச் சட்டம் அவர்களுக்கான கேடயமே தவிர, அதை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது’’ என்றார்.

விழிப்புணர்வு அவசியம்

சேலம் மாநகரக் காவல் துணை ஆணையர் ஜி. சுப்புலட்சுமியின் பேச்சு ஆரம்பம் முதல் கடைசிவரை களைகட்டியது. ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசை உள்ளது என்று அவர் சொல்ல, வாசகி ஒருவர் எழுந்து, “எனக்குத் தலையில் சைடு ரோஸ் வைக்க ஆசை” என்றார். அதைக் கேட்ட துணை ஆணையர், “கூட்டம் முடிவதற்குள் உங்கள் ஆசையை நிறைவேற்றிவைக்கிறேன்” என்றார்.

காவல்துறை அதிகாரிகள் என்றாலே நெருங்கவும் அச்சப்படக்கூடிய வகையில் இருப்பார்கள் என்ற நினைப்பைத் தன் இயல்பான பேச்சாலும் அணுகுமுறையாலும் மாற்றிவிட்டார் சுப்புலட்சுமி. அந்த வாசகிக்கு உடனடியாக ரோஜாப்பூ கொடுக்கப்பட, அதை அவரது ஆசைப்படியே தலையில் சூடிக்கொள்ள அரங்கம் முழுவதும் மகிழ்ச்சி பரவியது.


சுப்புலட்சுமி - TAMIL

“அம்மாவாக, மாமியாராக நாமேதான் இருக்கிறோம். ஆனால், வரதட்சிணை வழக்கில் முதல் குற்றவாளியாக மகன், இரண்டாவது குற்றவாளியாக அம்மா, நாம் என்ன சொன்னாலும் கேட்கும் அப்பா மூன்றாவது குற்றவாளியாக இருக்கிறார். ஏன் இந்த நிலை?

குழந்தைகளுக்கு நம் வேதனையைத் தெரிவித்து வளர்க்க வேண்டும். அதுதான் சரியான வளர்ப்பு. தற்போது செல்ஃபி மோகம் அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் முகப்புப் படம் வைக்கும்போது எடிட் செய்யப்பட்ட படங்களை வைக்க வேண்டும்” என்று பெண்கள் செல்போன் பயன்பாட்டில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுப்புலட்சுமி விளக்கினார்.

கைநிறைய பரிசுகள்

மதிய உணவுக்குப் பிறகு போட்டிகளால் விழா களைகட்டியது. மதிய நிகழ்வுகளைச் சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார். பந்து பாஸ் செய்தல், பொட்டு ஒட்டுதல், மைம், தலையில் ஸ்டிரா சொருகுதல், பலூன் உடைத்தல் என விறுவிறுப்பான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி மாணவிகள் முதல் எழுபது வயதைக் கடந்த அனுபவசாலிகள்வரை பலரும் பங்கேற்று மகிழ்ந்ததோடு, அந்த மகிழ்ச்சியை அரங்கம் முழுவதிலும் பரவச் செய்தனர்.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளுக்கு இடையே சேலத்தின் சிறப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுச் சரியான பதிலைச் சொன்ன வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

‘பெண் இன்று’ இணைப்பிதழ் தொடர்பான திடீர் கேள்விகளுக்குப் பதிலளித்த வாசகியரும் பரிசுகள் பெற்றனர். இவை தவிர பையில் புத்தகம் வைத்திருந்தவர்கள், கையில் மருதாணி வைத்தவர்கள், குறிப்பிட்ட நிறங்களில் புடவை அணிந்தவர்கள் எனப் பல வாசகிகளுக்கும் ஆச்சரியப் பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த தேனம்மை, சேலத்தைச் சேர்ந்த சரஸ்வதி இருவருக்கும் பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன.


தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து விழா அரங்குக்கு முதல் ஆளாக வந்த வாசகி அருணாவுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாசகிகள் அனைவருக்கும் நிச்சயப் பரிசுகள் வழங்கப்பட, மனம் நிறைய மகிழ்வுடனும் கைநிறையப் பரிசுகளோடும் சென்றனர்.

‘தி இந்து’வுடன் இணைந்து தி சென்னை சில்க்ஸ், லலிதா ஜுவல்லரி, அணில் ஃபுட்ஸ் ஆகியோர் செலிபரேஷன் பார்ட்னராகவும், ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப பார்ட்னராகவும் பங்கேற்றனர். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு முதல் பரிசை கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ், அன்னை டேட்ஸ் நிறுவனத்தினர் வழங்கினர்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ் நிறுவனமும் ஆறுதல் பரிசை குமரப்பா சிலக்ஸ், உடுப்பி ருச்சி, லாலாஸ் மசாலா, ப்ருத்வி இன்னர் வியர்ஸ் நிறுவனங்கள் வழங்கின. மதிய உணவை ஸ்ரீசரவணபவன் குரூப்ஸ் வழங்கியது.



விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சக்திமசாலா, அணில் ஃபுட்ஸ், அம்மு இட்லி, கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ், அதிபன் அப்பளம், கோகுல் சாண்டல், கிரிஸ்பி க்ரீம் பிரெட்ஸ் நிறுவனங்கள் வழங்கின. சேனல் பார்டனராக சிடிஎன் மற்றும் சிட்டி டிவி நிறுவனங்களும் ஹாஸ்பிட்டாலிட்டி பார்டனராக ஜிஆர்டி வைப், நிகழ்விட பங்குதாரராக ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரி ஆகிய நிறுவனங்கள் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.
விவாதக் களம்: ஆண்கள் திருந்தும் நாளே பெண்ணுக்குத் திருநாள்

Published : 14 Jan 2018 11:03 IST



கடந்த வாரம் வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுத்தளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய, ‘பெண்களைத் துரத்தும் நெருப்பு’ கட்டுரையையொட்டி, பெண்களைப் பார்த்ததுமே விழித்துக்கொள்கிற ஆண் மனம் குறித்துக் கேட்டிருந்தோம். பெண்களை எப்போதும் துரத்தும் இந்த நெருப்பில் இருந்து பெண்கள் எப்படி மீள்வது என்றும் கேட்டிருந்தோம். ஆண்களாகத் திருந்தினால்தான் உண்டு எனப் பலரும் சொல்லியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு...

பல நேரங்களில் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை என்பதே வேதனையான உண்மை. ஆண் எப்படி விரும்பினாலும் இசைந்து போக வேண்டும் எனத் தமது மகளுக்கு அறிவுரை சொல்லும் தாய்மார்களே இன்றும் நம் சமூகத்தில் நிறைந்திருக்கிறார்கள். பெண்களுக்குரிய இடம் அவர்களுக்கு இன்னமும் முழுதாகத் தரப்படவில்லை. பெண்களின் விருப்பத்தை அறிந்து அணுகுவதே ஆண்மைக்கு அழகு என்பதை ஆண்கள் உணர வேண்டும். ஒரு பெண்ணுக்குத் தன் விருப்பத்தை மீறி ஆட்கொள்ளப்படுவது போன்ற கொடுமை வேறில்லை. திரையரங்கின் இருளில் இடுப்பில் தடவிய கைகளால் அருவருப்பு கொண்டு வீட்டுக்கு வந்த கையோடு குளித்துப் பல நாட்கள் மன உளைச்சலோடு அலைந்த தோழியின் நினைவு இன்றும் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

- இரா.பொன்னரசி, வேலூர்.

ஆணின் காமம் ஒரு பெண்ணின் மீது முதலில் பார்வையின் வழியே பாய்கிறது. வக்கிர எண்ணம் கொண்ட ஆணின் கண்களாலேயே பெண் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதும் உண்டு. ஒரு பெண்ணைப் பார்க்கும்போது காமம் மறைந்து சகோதரியாகவும் தாயாகவும் பார்க்கும் நிலை என்று வருகிறதோ அன்றுதான் பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படும். சுதந்திரமாக வெளியே வரும் பெண் எதற்கும் துணிந்து சம்மதிப்பாள் எனும் எண்ணம் கொண்டிருக்கும் ஆண்களே இங்கு அதிகம். திருமணப் பந்தத்தில் இணைந்து வாழும் ஆண், பெண்ணின் காமம் வரைமுறையுடன் இருக்கும்வரை பிரச்சினையில்லை. எல்லையற்ற காமமே அப்பாவிப் பெண்களை விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.

ஆண்களின் பாலியல் உணர்வைத் தூண்ட உதவும் வலைத்தளங்கள் இங்கு ஏராளம். இவற்றை மீறி ஒரு ஆண் வளர்க்கப்படும் முறையே அவனைப் பெண்களைப் புரிந்துகொள்ள வைக்கிறது.

பெற்றோர் பெரும்பாலான நேரத்தைத் தங்கள் மகனுடன் கழிக்க வேண்டும். பார்க்கும் பெண்களின் மீதான மதிப்பை அதிகரிக்க அவர்களைத் தங்கள் தாயின் இடத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் மகனுக்கு நல்ல வழிகாட்டியாகவும் பெண்ணின் வலிகளை உணர்த்தி நல்ல ஆசானாகவும் மாற வேண்டும். பொதுவெளிகளில் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டுப் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஆண்களைத் தகுந்த தண்டனைகள் மூலம் எச்சரிக்கலாம்.

- சுபா, சேலம்.

பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இரவு, பகல், நேரம், காலம் போன்றவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எப்போது ஓர் ஆண் ஒரு பெண்ணால் தன்னை எதிர்க்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறானோ அப்போதுதான் அவன் இந்த வக்கிரத்தைச் செய்யத் துணிகிறான். பெண்ணைப் போகப் பொருளாக நினைப்பது, அவளைப் பலவீனமானவளாக எண்ணுவது ஆகியவற்றின் விளைவுதான் இது. அதனால் பெண்கள் உடலளவிலும் பலமானவர்கள் என்று புரியவைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சில ஆண்டுகளுக்கு முன் என் நெருங்கிய தோழி ஒருவர் இரவு எட்டு மணியளவில் ஒன்றிரண்டு ஆட்கள் மட்டுமே இருந்த பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவன் ஒரு ஐநூறு ரூபாய்த்தாளை தோழியிடம் நீட்டி தவறாகப் பேசியிருக்கிறான். அவ்வளவுதான். என் தோழி பதறிப்போய் அருகில் நின்றிருந்த ஆட்டோவில் தாவி ஏறி, கை கால்கள் நடுங்க வீட்டுக்குப் போயிருக்கிறார். பல நாட்கள் காய்ச்சலுக்குப் பிறகு உடம்பு தேறினாலும் மனம் தேறப் பல மாதங்கள் பிடித்தன. எத்தனையோ பேர் அங்கு நின்றிருக்கத் தன்னிடம் அவன் அப்படிக் கேட்டதால் தன்னிடம்தான் ஏதோ குறை உள்ளதைப் போல் அவர் குமைந்ததைத்தான் தாங்கவே முடியவில்லை. குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதையும் அப்பாவிகள் அவதிப்படுவதையும் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. பெண்ணின் உடல் வலிமையைப் புரியவைப்பதுடன் ஊடகங்களும் தைரியமான பெண்களை அடிக்கடி வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் நிலை வந்தால் இத்தகைய கொடூரங்கள் குறையக்கூடும்.

- ஜே.லூர்து, மதுரை.

தலை குனிந்து நட, அதுதான் பெண்ணுக்கு அழகு என்று சொல்லிச் சொல்லியே பெண்ணினத்துக்குத் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டோம். அதனால்தான் பிரச்சினையெனும் வெயிலைத் தாங்க முடியாத முதுகெலும்பற்ற புழுவாகப் பெண் துடித்துப்போகிறாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அனைத்தும் புனைகதைகளுக்கு மட்டுமே சாத்தியப்படும். எதையும் எதிர்த்து நிற்கச் சொல்லிப் பெண்களைத் துணிச்சலோடு வளர்க்க வேண்டும்.

- எஸ். சரோஜா சங்கரலிங்கம், காமாட்சிபுரம்.

பெண்களைத் தகாத வார்த்தைகளால் புண்படுத்தும் கூட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தி சொன்ன காலத்துக்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ? ஆண் குழந்தைகளை நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.

- ப. பீர் இலாஹி, உத்தமபாளையம்.

பெண்கள் எந்த அளவுக்குத் துணிச்சலோடு எதிர்க்கிறார்களோ அப்போதுதான் அந்த நெருப்பு விலகி மட்டுமல்லே விட்டே ஓடிவிடும். சட்டப் பாதுகாப்பைவிட சுய பாதுகாப்பும் சில வேளைகளில் அவசியம்.


- பொன்.கருணாநிதி, கோட்டூர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒவ்வொரு வீட்டிலும் இருந்துதான் தொடங்க வேண்டும். பெண்ணுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்து வளர்க்கும் சமூகம், ஆண்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதில்லை. எப்போதும் பெண்களின் கட்டுப்பாடு குறித்தும் சுய பாதுகாப்பு குறித்தும் பேசும் நாம், ஆண்களிடம் இருக்க வேண்டிய நல்லொழுக்கம் குறித்து வாயே திறப்பதில்லை. ஆணின் தேவைக்காகப் பிறந்தவள் அல்ல பெண் என்பது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் புரிகிற நாளில்தான் இந்த நெருப்பு அணையும்.

- பிரதீபா.

ஆண், பெண் உறவு இன்று எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனால், சில ஆண்கள் பெண்கள் மீது நடத்தும் அருவருக்கத்தக்கச் செயல்பாடுகளை மன்னிக்கவே முடியாது. கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் உறவுசார் ஆலோசனைகள் வழங்கலாம். வளர்ந்தவர்களுக்கு மனநல ஆலோசனைகள் அளிக்கலாம்.

- மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

தாய்வழிச் சமூக அமைப்பு உடையாமல் இருக்கிற இடங்களில் பெண்ணுக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ராகுல சாங்கிருத்யாயன் போன்றோரின் எழுத்துகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன. உடையிலும் பெயரிலும்கூட ஆண், பெண் வேறுபாடு இருக்கக் கூடாதெனப் பெரியார் சொன்னார். இதெல்லாம் நடக்கிற நாள்தான் பெண்களுக்கான திருநாளாக அமையும்.

- சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.

பெண் சமூகத்தையே எரிக்கும் நெருப்பாக ஆண் மனம் செயல்பட ஊடகங்களும் தொலைக்காட்சியும் காரணமாக இருக்கின்றன. போதுமான புரிதல் இல்லாமல் விதைக்கப்படுகிற சிறுபொறிதான் நாளடைவில் பெருந்தீயாகக் கொழுந்துவிட்டு எரிகிறது.

- உஷா முத்துராமன், திருநகர்.

வாய்ப்பு கிடைக்கும்வரை எல்லா ஆண்களும் ராமன்தான் என்ற சொலவடை, ஆண்களின் மனோபாவத்துக்குச் சான்று. இந்தப் பழமொழி ஆண்களுக்கு அவமானமாக இல்லையா? தன் ரத்த உறவுகளைப் பார்த்து விழித்துக்கொள்ளாத ஆண் மனம், பிற பெண்களைப் பார்த்ததும் விழித்துக்கொள்ளுமா? பெண்களைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும் மனோபாவத்தை யார் மாற்ற வேண்டும்?

பெண்ணை உடலாக, சதையாக மட்டுமே நினைக்கும் கேவலமான மனப்போக்கை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். கணவன் என்ற ஒரே காரணத்துக்காக வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மனோபாவத்தைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட பெண்களைத் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லாமல் இந்தச் சமுதாயம் திருந்த வேண்டும். பெண் இரண்டாம் பாலினம் என்ற கருத்து மாற வேண்டும். பாலியல் சார்ந்த ஆரோக்கியமான விவாதங்கள் ஊடகங்களில் நடத்தப்பட வேண்டும். இதைக் கேலிச்சிரிப்புடன் பார்க்காமல் அறிவுபூர்வமாக அணுகித் தீர்வு காண வேண்டும்.

சிறுவயது முதலே பெண் என்பவள் சக உயிர், என்ற உணர்வை உணவோடு ஊட்டி ஆண்களை வளர்க்க வேண்டும். குடும்பத்திலுள்ள பெண்களை ஓர் ஆண் எவ்வாறு நடத்துகிறான் என்பதைப் பார்த்துத்தான் அந்த வீட்டு ஆண் குழந்தை கற்றுக்கொள்கிறான். முதலில் குடும்பத்தைச் சீர்திருத்துவோம். மெல்ல மெல்லச் சமுதாய மாற்றம் தானே நிகழும்.

- தேஜஸ், கோவை.

ஆண், பெண் இருவரும் மனிதப் பிறவி என்றாலும் ஆண், பெண்ணைச் சீண்டுவதையும் தீண்டுவதையுமே விரும்புகிறான். மனைவி என்றாலும் மனம் விரும்பிய போதெல்லாம் அவளை இச்சைக்கு ஆட்படுத்திக்கொள்கிறான். வெளியில் பிற பெண்களைக் கண்டாலும் அவன் சபலப்படாமல் இருப்பதில்லை. பேச வாய்ப்பில்லாத பெண்களை உரசிப் பார்க்க முயல்கிறான். பேச வாய்ப்புள்ள பெண்களிடம் உரையாடலிலேயே உறவாடிவிடுகிறான். பெண்கள் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது.

- பொன். குமார், சேலம்.

பெண்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது இயல்பானது. பாலியல் ஈர்ப்பின் தன்மை ஆணுக்கு ஆண் வேறுபடுகிறது. அது வரம்பைத் தாண்டும்போது தவறான செயல்களில் ஈடுபடவைக்கிறது. எல்லா ஆண்களையும் நல்லவர்களாகப் பார்ப்பதைத் தவிர்த்து ஆண்களின் இயல்பு அறிந்து எச்சரிக்கை உணர்வுடன் கையாள்வதே புத்திசாலித்தனம்.

- கே.ராமனாதன், மதுரை.

எல்லா ஆண்களிடமும் அந்த நெருப்பு இல்லை. சில ஆண்கள் பொதுவெளியில் கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள். இன்னும் மிகச் சொற்பமான ஆண்கள் பெண்ணோடு தனித்திருக்கும்போதும் பண்பாடு தவறுவதில்லை. ஆனால், பெரும்பாலான ஆண்களின் காமப்பார்வையும் ஆக்டோபஸ் கரங்களும் பெண்ணைச் சுற்றுகின்றன. எத்தனை வயதானாலும் ஆணின் கீழ்த்தர வக்கிரம் குறைவதே இல்லை. இந்தப் பிரச்சினையைச் சட்டம் சார்ந்து பார்க்காமல் உளவியல்ரீதியாகப் பார்த்தால் இணை தேடும் மிருக உணர்வின் நீட்சி எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், கல்வியாலும் வளர்ப்பாலும் போதனையாலும் இந்த உணர்வைக் கட்டுக்குள் வைக்கவும் கண்ணியம் காக்கவும் முடியும். பாதிப்புக்குள்ளாகும் பெண்ணின் மௌனமே அத்துமீறும் ஆண்களுக்கு வசதியாகிவிடுகிறது. முதல் தொடுதலின்போதே எச்சரிப்பது அல்லது பெற்றோரிடமோ உரிய இடத்திலோ புகார் செய்வது பாதுகாப்பு.

திரைப்படங்கள் காலம் காலமாகப் பெண்ணைக் கிண்டல் செய்வதே காதலுக்கு அடித்தளம் என்று காட்சிப்படுத்தி இளைஞர்களின் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டன. பெண்களைக் கிண்டல் செய்தல், பின்தொடர்தல் இவற்றுக்கெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், கடுந்தண்டனையும் உண்டு. ஆண்களின் வக்கிரப் போக்கு மாறாதவரை, மாற்றப்படாதவரை இதுவே தீர்வு.

- ஜி. அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

அடக்கிவைக்கப்பட்ட காமம் ஒரு சிலரிடம் அடங்காமல் போய்விடுகிறது. பார்த்தவுடன் காமம் என்று சொல்வதைவிட அதை அப்போதே அடைய வேண்டும் என்ற வெறிதான் சில ஆண்களிடம் கூடவே பிறந்துவிடுகிறது. அதுதான் இதுபோன்ற செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. பெண் எதிர்த்துப் பேசமாட்டாள் என்ற தைரியம்தான் இவர்களுக்கான முதலீடு. இந்த நெருப்பைப் பகிரங்கமாகப் பொதுத்தளங்களில் போட்டுடைத்துச் சீர் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. பெண்கள் துணிய வேண்டும்.

- பி.கே. ஜீவன், கும்பகோணம்.
டிஜிட்டல் போதை 17: சூது ஒரு மனக்கோளாறு!

Published : 13 Jan 2018 09:39 IST

வினோத் ஆறுமுகம்



சூதாட்டம் ஆடுவது வெறும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டதல்ல. சட்டவிரோதமானது என்று தடை செய்யப்பட்டிருக்கும் இந்த விளையாட்டை ஆடி, சொத்தை அழித்துக்கொண்டவர்களும் உயிரை இழந்தவர்களும் அதிகம். அந்த ஆபத்தெல்லாம் தெரிந்தும் ஏன் ஒருவர் சூதாடுகிறார்?

1986-ல் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, மனநலக் கோளாறு காரணமாகத்தான் ஒருவர் மிக அதிகமாக சூதாட்டம் ஆடுகிறார் என சர்வதேச மனநலக் கழகம் அறிவித்தது. அந்த சூதாட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அப்படிச் சேர்ப்பது சரியா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மனநலக் கோளாறுக்கான அறிகுறிகள்

ஒருவர் சூதாட ஆரம்பித்து, ஓர் ஆண்டுக்குள் கீழ்க்காணும் அறிகுறிகள் அவரிடம் தென்பட்டால், அதிக அளவில் சூதாடும் மனநலக் கோளாறால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தலாம்.

சூதாட்டம் ஆடுவதை நிறுத்தச் சொன்னால் எரிச்சலடைவார்கள், கோபப்படுவார்கள்.

சூதாட்டத்தை நிறுத்த முயன்று பலமுறை தோற்றிருப்பார்கள்.

சூதாட்டம் சம்பந்தமாகவே பேசுவார்கள், யோசிப்பார்கள்.

சோகமானாலோ மனச்சோர்விலிருந்தாலோ சூதாட்டம் விளையாடுவார்கள்.

சூதாட்டத்தில் எவ்வளவு பணம் தோற்றாலும், ‘மீண்டும் பணத்தை வென்று காட்டுகிறேன் பார்’ என்று மீண்டும் மீண்டும் விளையாடுவார்கள்.

சூதாட்டம் பற்றிக் கேட்டால் பொய் சொல்வார்கள்.

குடும்ப உறவுகள், நண்பர்கள், வேலை என எல்லாவற்றையும் இழந்தாலும் சூதாட்டத்தைத் தொடர்வார்கள்.

மிகவும் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் இருப்பார்கள். எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருக்கத் தொடங்குவார்கள்.

இவற்றில் ஏதேனும் நான்கு அறிகுறிகள் தெரிந்தாலும் ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையாகிவிட்டார் என உறுதியாகச் சொல்லலாம்.

ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரை இதே அளவுகோல்களைப் பின்பற்றலாம் என இதைப் பற்றி ஆராய்ந்துவரும் நிபுணர் கிம்பர்லி யூங் குறிப்பிடுகிறார்.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய பொது சூதாட்டத் தடைச் சட்டம் 1867-ன்படி, இந்தியாவில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் எல்லா வகையான சூதாட்டங்களும் தடைசெய்யப்பட்டுவிட்டன. சிக்கிமும் கோவாவும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்ப்பதற்காகத்தான் சூதாட்டத்துக்கு அனுமதி வாங்கியுள்ளன. ஆனால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எப்படிக் கடிவாளம் போடுவது என்று தெரியாமல் திணறுகிறது அரசு. இதுகுறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை.

அமெரிக்காவில் இருப்பது போன்ற இணைய சூதாட்டத் தடைச் சட்டம் இங்கு இல்லை. அந்தச் சட்டத்தின் மூலம் இணைய சேவை புரியும் நிறுவனங்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட வலைத்தளங்களைத் தடைசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை அவ்வளவு சீக்கிரம் தடைசெய்ய முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்தை கிரெடிட் கார்ட், ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்டவை மூலமாக விளையாடலாம். வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைச் சட்டப்படி இந்த விளையாட்டுகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன. எப்போது வேண்டுமானாலும் சட்டப்படி பணம் முடக்கப்படலாம் என்பது கொஞ்சம் ரிஸ்க்தான். எனினும், அப்படியான நிகழ்வுகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. தொலைக்காட்சிகளில் பகிரங்கமாக ஆன்லைன் சீட்டாட்டம் பற்றிய விளம்பரங்கள் வரும்போது, சட்டத்தால் என்ன செய்ய முடியும்?

(அடுத்த வாரம்: வீடியோ கேம்… நன்மைகளும் உண்டு!)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com
நலம்தரும் நான்கெழுத்து 17: உடலே மந்திரம்... இணையம் தந்திரம்!

Published : 13 Jan 2018 09:40 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்



‘பெரும்பாலான நேரம் நாம் பயப்படுவதைவிட மிகக் குறைவாகவே பாதிப்படைந்திருப்போம். நிஜத்தைவிடக் கற்பனையே மனிதனை அதிகம் வதைக்கிறது’

- லூயி செனெகா, ரோமானியத் தத்துவ ஞானி

உடல்நலனைப் பற்றி அக்கறையே இல்லாமல் இருப்பது ஒரு துருவம் என்றால் அளவுக்கு அதிகமாக உடலைப் பற்றிக் கவலைப்படுவதும் ஒரு நோய்தான். இல்லாத நோய்களெல்லாம் நமக்கு இருக்கின்றனவோ எனக் கவலைப்படுவதும் ஒரு நோயே. இதை ‘ஹைப்போகோண்டிரியாசிஸ்’ என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

சிலர், நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளைக்கூடப் பார்க்காமல் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை முதலில் வரிவிடாமல் படிப்பார்கள். நல்ல விஷயம்தான். ஆனால், அந்தக் கட்டுரைகளில் இருக்கும் நோய்கள் எல்லாம் தனக்கும் இருப்பதாகப் பயப்படுவார்கள். ‘இடது கையில் வலியா? இதய நோயாக இருக்கலாம்!’ எனப் படித்தவுடன் எங்கேயாவது இடித்துக்கொண்டு இடதுகை வலித்தாலும்கூட மாரடைப்புதான் வந்திருக்கிறது எனப் பதைபதைப்பார்கள். அடிக்கடி நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் எனச் சொல்லி தெரு முனையிலேயே ஆட்டோக்களோடு ஒரு ஆம்புலன்ஸையும் நிரந்தரமாக நிற்க வைத்துவிடுவார்கள்.

இணையம், டாக்டர் அல்ல..!

பதற்றப்படும்போது நமது உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கை நடுங்கும். மூச்சு முட்டும். இவற்றையெல்லாம் கவனிக்க ஆரம்பித்துவிட்டால், அவை இன்னும் பல மடங்கு அதிகமாகும்.

அதிலும் இணைய வசதிகள் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் இணையத்தில் மருத்துவம் தொடர்பான தகவல்களை மிக எளிதில் பெற முடிகிறது. மருத்துவத் தகவல்கள் பரவலாக அனைவரையும் சென்று சேர்ந்தால்தான் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் சிகிச்சை முறைகளையும் பக்க விளைவுகளையும் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். ஒரு காலத்தில் மருத்துவர்கள் மட்டுமே அறியக்கூடிய தகவல்கள் பலவற்றை, இப்போது ஸ்மார்ட்ஃபோன் உள்ள யார் வேண்டுமானாலும் அறிய முடியும். இது விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்ற வகையில் வரவேற்கத்தக்கதே.

மருத்துவர்கள்கூட நகைச்சுவையாகச் சொல்வதுண்டு ‘எல்லா நோயாளிகளும் முதலில் டாக்டர் கூகுளிடம் காட்டிவிட்டுப் பின் இரண்டாவது ஆலோசனை கேட்கத்தான் மருத்துவர்களிடம் வருகிறார்கள்’ என. ஏனென்றால், ‘டாக்டர் கூகுள்’ நம்மைக் காக்க வைப்பதில்லை. அதைவிட மிக முக்கியம் நம்மிடம் ஃபீஸ் வாங்குவதில்லை.

இருப்பதைக் கொண்டு திருப்தி

சிலருக்கு இதுவே தொந்தரவு கொடுப்பதாக அமைந்துவிடுகிறது. இணையதளங்களில் தரமான மருத்துவப் பக்கங்கள் உள்ளன. ஆனால், பல தளங்கள் ‘அவசியம் பகிர்ந்துகொள்ளுங்கள்’, ‘மானமுள்ள தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணுங்கள்’ என நமக்கு வாட்ஸ் அப்பில் வருவது போன்ற தகவல்களைத் தரும் தளங்களாகவே இருக்கின்றன. விளைவு? மருத்துவப் புத்தகங்களில் மட்டுமே இருக்கக்கூடிய அபூர்வமான நோய்களெல்லாம் தமக்கு இருப்பதாகப் பலரும் கற்பனை செய்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த வகை இணைய நோயர்களுக்கு ‘சைபர்கோண்டிரியாக்’ என்று பெயர்.

இன்னும் சிலருக்கு வேறு வகையான தொந்தரவு இருக்கும். தங்கள் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்வார்கள். மூக்கு வளைந்திருக்கிறது, முகம் கோணலாக இருக்கிறது என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு பிளாஸ்டிக் சர்ஜன்களிடம் சென்று தங்கள் உடல் உறுப்பைத் திருத்தி அமைக்குமாறு சொல்வார்கள். அதற்கு உலகப் புகழ்பெற்ற உதாரணம்... மைக்கேல் ஜாக்சன்! ‘அனாரக்ஸியா’ என்ற பாதிப்புக்கு உள்ளாகும் சிலர் ஒல்லியாக இருந்தும் உடல் எடை அதிகமாக இருக்கிறது என சைஸ் ஜீரோவை நோக்கிக் கடும் தவமிருந்து விரதமிருப்பார்கள். இப்படிப் பல உதாரணங்களை அடுக்கலாம்.

குட்டையான கால்கள் உள்ள ஒருவரிடம் நண்பர் ஒருவர் கிண்டலாகக் கேட்டாராம் “ஒரு மனிதனின் கால்கள் சராசரியாக எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?” என. அதற்கு அவர் நிதானமாகப் பதிலளித்தாராம் “தரையைத் தொடுமளவுக்கு நீளமாக இருந்தால்போதும்” என. இதுபோல் நமக்குக் கிடைத்துள்ள உடலமைப்பைத் திருப்தியுடன் ஏற்காததன் விளைவே, இதுபோன்ற மனச்சிக்கல்கள்.

உடலைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதற்கும் அளவுக்கு மீறிக் கவனித்துப் பதற்றப்படுவதற்கும் இடையேயான சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
வாட்ஸ் அப்பில் இனி யூ டியூப் வீடியோக்களை பார்க்கலாம்: ஐ போன் பயனாளர்களுக்கு புது வசதி

Published : 18 Jan 2018 16:10 IST

ஐஏஎன்எஸ்




ஐ போன் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியிடன் யூ டியூப் ஒருங்கிணைப்பு வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி, ஐ போன் பயனாளர்கள், வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிக் கொண்டே யூ டியூப் வீடியோக்களை காண முடியும்.

வாட்ஸ் அப் நிறுவனம் முன்னதாகவே ஐபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியுடன் யூடியூப்பை ஒருங்கிணைக்கும் வசதி விரைவில் செய்து தரப்படும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வசதியை ஐ போன் வாசகர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி மூலம் வாட்ஸ் அப்பின் ஒரு ஓரத்தில் யூ டியூப் பாடல்களை நீங்கள் தொடர்ந்து கேட்டு மகிழலாம்.இந்த புதிய வாட்ஸ் அப் வசதியை 2.18.11 என்ற பதிப்பில் அப்டேட் செய்தால் மட்டும் போதுமானது.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு இவ்வசதி வழங்கப்படவில்லை. வருங்காலங்களில் இவ்வசதி ஆண்ட்ராய்டு போன்களுக்கும் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாதாளத்தில் மர்மக் கட்டுமானப் பணிகள்: போலீஸார் அதிர்ச்சி

Published : 18 Jan 2018 20:35 IST

வாரணாசி



வாரனாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் நுழைவாயில். - படம். | ஆர்.வி.மூர்த்தி.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே பழைய கட்டிடங்களுக்கு கீழே பாதாளத்தில் சட்ட விரோதமாக கட்டுமானப் பணிகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

வாரணாசியில் உள்ள இந்துக்களின் புனித தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதை மீறி கோயிலுக்கு அருகிலேயே பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள டல்மாண்டி பகுதியில் பழைய கட்டிடங்களுக்கு கீழே பாதாளத்தில் வணிக வளாக கட்டுமானப் பணிகள் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் அதிகாரி ஆர்.கே. பரத்வாஜ் கடந்த செவ்வாய்கிழமை இரவு விஸ்வநாதர் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தின் கீழ் தளத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பரத்வாஜூம் அவருடன் சென்ற போலீஸாரும் அதிர்ச்சி அடைந்தனர். பழைய கட்டிடத்தின் கீழ் பகுதியில் சட்ட விரோதமாக கட்டுமானப் பணிகள் நடந்து வருவது தெரிந்தது.

பரத்வாஜ் கூறுகையில், ‘‘பழைய கட்டிடங்களுக்கு கீழே சட்ட விரோதமாக 8 ஆயிரம் சதுர அடியில் வணிக வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருவது ரோந்துப் பணியின்போது தெரியவந்தது. அந்த இடத்துக்கு செல்ல நீண்ட பாதை அமைக்கப்பட்டிருந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி வழிகாட்டியபடி அந்தப் பாதை வழியாக சென்றேன். ரகசியமாக பாதாளத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளது. கோயில் வளாகத்துக்கு அருகிலேயே இதுபோன்று ரகசிய கட்டிடம் கட்டுவதற்கான காரணம் குறித்து விசாரணையில் முக்கிய கவனம் செலுத்தப்படும்’’ என்றார்.

இதனிடையே, ரகசிய கட்டுமானத்துக்கும் அந்த பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற கட்டிடங்களுக்கும் வாரணாசி வளர்ச்சி ஆணையம் சீல் வைத்தது. மேலும், ஆணையத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய 3 இன்ஜினீயர்களை இடைநீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், போலீஸார், சட்ட விரோத கட்டிடங்கள் கட்டிய கிரிமினல் கும்பல் இவர்களுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றியும், இதில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயில் அருகிலேயே பாதாளத்தில் சட்ட விரோதமாக ரகசிய கட்டிடம் கட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைவாசிகளே.. இந்த கோடையில் குடிநீர் பஞ்சம் வராது! நம்பலாம்!!

By DIN | Published on : 18th January 2018 06:19 PM |

சென்னை: 2016ம் ஆண்டைப் போலவே 2017ம் ஆண்டும் தமிழகத்தை வடகிழக்குப் பருவ மழை ஏமாற்றினாலும், இப்போதிருக்கும் குடிநீரைக் கொண்டு கோடைக்காலத்தை சமாளித்து விடலாம் என்கிறது புள்ளி விவரம்.

நெல்லை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களைத் தவிர, 2017ம் ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனது. ஒரு சில மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக அதன் அக்கம் பக்கத்து மாவட்ட ஏரிகளும், நீர் ஆதாரங்களும் நிரம்பி, மக்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கைத் தந்தன.

இந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள நீர் ஆதாரங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீர், எத்தனை மாதங்கள் தாக்கு பிடிக்கும் என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முருகேஷ் என்ற சமூக ஆர்வலர் கேட்டிருந்தார்.

அதற்கு, சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் பதிலில், சென்னை மாநகராட்சிக்கு பூண்டி, சோழவரம், புழலேரி, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஆதாரங்களில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது.

குடிதண்ணீர் நீர்நிலை இருப்பு விவரம்
(மில்லியன் கன அடியில்)
பூண்டி 1070.00
சோழவரம் 495.00
புழலேரி 1522.00
செம்பரம்பாக்கம் 1810.00
வீராணம் 564.40

இந்த ஏரிகளில் தற்போதிருக்கும் நீர் இருப்பு 30.09.2018ம் தேதி வரை சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னையில் இந்த ஆண்டு கோடைக் காலத்தை குடிநீர் பஞ்சம் இல்லாமல் சந்திக்கலாம் என்கிறது இந்த தகவல். இதனால் மழை இல்லையே.. இந்த ஆண்டு கோடையை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று வருந்தியவர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடையலாம்.

இன்றைய நிலவரப்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 1,110 மில்லியன் லிட்டர் நல்ல தண்ணீர் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


ரயில் டிக்கெட்டை முன்னதாக பதிவு செய்பவர்களுக்கு கட்டணச் சலுகை: பரிந்துரை ஏற்பு

By DIN | Published on : 19th January 2018 12:55 AM |

 விமானத்தில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தால் குறைந்த விலையில் கிடைப்பதுபோல, ரயில் டிக்கெட் முன்பதிவிலும் இதே திட்டம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. ரயில்வே கட்டண சீராய்வுக் குழு அளித்த இந்தப் பரிந்துரையை ரயில்வே வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, பதிவு செய்யப்படாமல் இருக்கும் இருக்கைகளுக்கு ஏற்ப 20 முதல் 50 சதவீதம் வரை கட்டணச் சலுகை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்தால் கூட, அப்போது அதிக அளவு இருக்கைகள் முன்பதிவு செய்யப்படாமல் இருந்தாலும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், கீழ்நிலை படுக்கை வசதி (லோயர் பெர்த்) டிக்கெட்டை முன்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதுதவிர, ரயில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரிக்கும்போது கட்டணத்தை உயர்த்தவும், தேவை குறைவாக இருக்கும்போது கட்டணத்தைக் குறைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகளை அந்தந்த ரயில்வே வாரியங்களே எடுக்கலாம். பயணிகள் அதிகம் ரயிலைப் பயன்படுத்தும் பண்டிகை காலங்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, அதிகம் பயன்படுத்தாக காலகட்டத்தில் கட்டணத்தை குறைக்கலாம்.

பயணிகளுக்கு வசதியான நேரத்தில் இயங்கும் ரயில்களுக்கு, உதாரணமாக இரவில் புறப்பட்டு காலையில் குறிப்பிட்ட ஊரைச் சென்றடையும் ரயில்களுக்கு சற்று கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளையும் ரயில்வே கட்டண சீராய்வுக் குழு அளித்துள்ளது.

30 பைசா குறைவுக்கு நடத்துனர் பணி நீக்கம் செல்லாது : தொழிலாளர் நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட மறுப்பு

Added : ஜன 19, 2018 00:44

சென்னை: 'நடத்துனரின் பணப் பையில், 30 காசு குறைவாக இருந்ததற்காக, பணி நீக்கம் செய்தது செல்லாது' என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில், நடத்துனராக, தனஞ்செயன் என்பவர் பணியாற்றினார். பணியில் இருக்கும் போது, திடீர் சோதனை நடத்தப்பட்டதில், டிக்கெட் வழங்கியதில் குறைபாடுகள், சரக்குகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இருந்தது ஆகியவற்றுக்காக, தனஞ்செயன் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின், விசாரணை நடத்தப்பட்டது. விளக்கம் திருப்தி அளிக்காததால், பணி நீக்கம் செய்து, 1995ல், நிர்வாகம் உத்தரவிட்டது.

2002ல் உத்தரவு : இதையடுத்து, தொழிலாளர் நீதிமன்றத்தில், தனஞ்செயன் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, பணியில் அமர்த்தும்படி, 2002ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழக நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: தொழிலாளர் நல நீதிமன்ற உத்தரவை பார்க்கும் போது, ஒவ்வொரு பிரச்னையையும் பரிசீலித்திருப்பது தெரிகிறது.

போக்குவரத்து கழகத்தின் நிலை உத்தரவுப்படி, ௨௦ ரூபாய் வரை குறைவாக இருந்தால், அது அனுமதிக்க கூடியது தான் என்றும், இந்த வழக்கைப் பொறுத்தவரை, ௩௦ பைசா மட்டுமே குறைவாக இருந்தது என்றும், தொழிலாளர் நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.

இரண்டு சரக்குகளுக்கு டிக்கெட் வழங்காததற்கு, நிர்வாகமே நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது. எனவே, 30 பைசா குறைவை நியாயப்படுத்தி, தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதற்கான முடிவுக்கும், உரிய ஆதாரங்கள் உள்ளன.

போக்குவரத்து கழக நிலை உத்தரவுப்படி, 20 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் கூட, அந்த ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க தேவையில்லை. நடத்துனரை பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது என, தொழிலாளர் நீதிமன்றம் முடிவுக்கு வந்ததில், நியாயம் உள்ளது.
அதனால், அந்த உத்தரவில், குற்றம் காண முடியாது; அதில், குறுக்கிட தேவையில்லை.

போக்குவரத்து கழக நிர்வாகத்தின் மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, 68 ஆயிரம் ரூபாயை, நிர்வாகம், டிபாசிட் செய்துள்ளது.

50 சதவீத சம்பளம் : தற்போது, தனஞ்செயன், பணி ஓய்வு பெற்று விட்டதால், மீண்டும் பணியில் சேர்க்கும் கேள்வி எழவில்லை. தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இருந்து, பணி ஓய்வு பெறும் நாள் வரை, 50 சதவீத சம்பளம் பெற உரிமை உள்ளது. மேலும், டிபாசிட் தொகையையும் பெற்று கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டு பெண்ணை மணந்த விருத்தாசல இளைஞர்

Added : ஜன 19, 2018 06:11



விருத்தாசலம்: விருத்தாசலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, ஸ்பெயின் நாட்டு பெண்ணை காதலித்து, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர், வசந்தராஜ், 29; பொறியியல் பட்டதாரி. இவர், ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், எம்.பி.ஏ., படித்தார். பின், அங்கேயே தங்கி, நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.மாட்ரிட் நகரைச் சேர்ந்த பியத்திரிஸ், 29, விமான பைலட்டாக பணி புரிந்து வருகிறார். பியத்திரிசும், வசந்தராஜும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, விருத்தாசலத்தில், இந்து முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. மேளம், நாதஸ்வரம் முழங்க, மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள், மண மக்களை வாழ்த்தினர்.
நவஜோதிர்லிங்கங்களை தரிசிக்க சிறப்பு ரயில் : அழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : ஜன 19, 2018 00:58

கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத்தில் உள்ள நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு செல் வதற்காக, பிப்., 3ம் தேதி, ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது.

ஆன்மிக தலங்கள் : இத்திட்டத்தின் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு, சிறப்பு ரயில் களில் சென்றுவர முடியும்.அந்த வகையில், வரும் பிப்., 3ல், மதுரையில்இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மூலம், ஆந்திராவில் ஸ்ரீசைலம், மஹாராஷ்டிராவில் பார்லி வைத்யநாத், குருஷ்னேஷ்வர்... பீம்சங்கர், திரையம்பகேஷ்வர், குஜராத்தில் சோம்நாத், மத்தியபிரதேசத்தில் மஹாகாலேஷ்வர் மற்றும் ஓம்காரேஷ்வர் உள்ளிட்ட, நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வரலாம். கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறப்படுவோர், ஈரோட்டில் இருந்து ரயிலில் செல்லலாம். 13 நாள் கொண்ட யாத்திரைக்கு, நபருக்கு, 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகன வசதி : இதில், 'ஸ்லீப்பர்' ரயில் கட்டணம், உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி அனைத்தும் அடங்கும். மேலும் விபரம், முன்பதிவுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 9003140655 என்ற மொபைல் போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதே நாளில் அன்று

Added : ஜன 18, 2018 19:15 |





1933 ஜனவரி 19

சீர்காழி கோவிந்தராஜன், நாகை மாவட்டம், சீர்காழியில், சிவசிதம்பரம் - அவையாம்பாள் தம்பதிக்கு, 1933 ஜன., 19ல், மகனாக பிறந்தார். சென்னை தமிழ் இசை கல்லுாரியில் பயின்ற இவர், 1949ல், இசைமாமணி பட்டமும், 1951ல், சங்கீத வித்வான் பட்டமும் பெற்றார். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் பெற்றவர். 1983ல், சென்னை பல்கலைக் கழகம், அவருக்கு, முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழிசை கல்லுாரியின் முதல்வராக பணியாற்றியவர்.திரைப்படத் துறையில், நடிகராகவும், பின்னணி இசை பாடகராகவும் திகழ்ந்தார். தெய்வத் திருமணங்கள் உள்ளிட்ட சில படங்களில், அகத்தியர் வேடத்தில் நடித்து உள்ளார். ஏராளமான பக்தி பாடல்கள் பாடி உள்ளார். 1988 மார்ச், 24ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.
வைரமுத்து சொன்ன பொய்: ஆதாரப்பூர்வமாக அம்பலம்

Updated : ஜன 18, 2018 15:54 | Added : ஜன 18, 2018 13:55 



சென்னை: ''ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர்'' என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை பொதுமேடையில் வைத்த வைரமுத்துவின் கருத்துக்கு, ஆதாரப்பூர்வமான மறுப்பு கிடைத்துள்ளது. அவர் கூறியது மாபெரும் பொய் என்பதும் அம்பலமாகி உள்ளது.

ஜன.,7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் வைரமுத்து பேசும் போது, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராக கொண்டு வெளியிட்ட, indian movement: some aspects of dissent, protest and reform என்ற ஆய்வு நுாலில், ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருக்கிறது. Andal was herself a devadasi who lived and died in srirangam temple என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆய்வே இல்லை:

ஆனால், அவர் குறிப்பிட்ட எஸ்.சி.மாலிக் புத்தகத்தை தேடும்போது இண்டியானா பல்லைக்கழகம் அப்படி ஒரு ஆய்வை நடத்தவேயில்லை என்பது தெரிய வந்தது. 1975ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26 கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.

அந்த கட்டுரைகளை தொகுத்தவர் தான் எஸ்.சி.மாலிக்; எழுதியவர் அல்ல. அவரோ, இண்டியானா பல்கலையோ ஆண்டாள் பற்றிய ஆய்வை நடத்தவில்லை. அந்த புத்தகத்தில் ஆண்டாள் பற்றி, bhakti movements in south india என்ற கட்டுரையில் தான் ஆண்டாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதியவர்கள் இந்தியாவை சேர்ந்த பேராசிரியர்கள் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். அதில் தான், Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்கு, History of sri vaisnavas என்ற பெயரிலான டி.ஏ. கோபிநாத் ராவ் என்பவரின் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் இதற்கான ஆதாரம் இருப்பதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், ஆண்டாளின் முழு கதையும் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் கனவில் கடவுள் தோன்றி ஆண்டாளை மணக்க சம்மதித்தாகவும், அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படி ஆணையிட்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் தனியே ஸ்ரீவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தில் தேவதாசி என்ற வார்த்தையே இல்லை. பிறகு எப்படி ஆண்டாளை தேவதாசி என்று நாராயணன் குறிப்பிட்டார் என்று அவரிடம் தந்தி டிவி நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அளித்த பேட்டி:
கே: அந்த கட்டுரையில் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்த ஒரு தேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ளதே? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

நாராயணன்: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான பிரத்யேக குறிப்புகள் இல்லை.

கே: உங்களுடைய ஆய்வில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா?

நாராயணன்: இல்லை. அது போன்று குறிப்பிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லை.
கே: ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் ஆவணங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா?
நாராயணன்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்து தான் பார்க்க வேண்டி உள்ளது. எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை.

கே: நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒரு புரிதலில் அந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என சொல்லலாமா?

நாராயணன்: இது ஒரு அனுமானம் தான்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

வைரமுத்துவின் பதில் என்ன:

ஆண்டாள் தேவதாசி என்று சொல்லப்படுவதற்கு நேரடி ஆதாரம் இல்லை. அது அனுமானத்தின் பேரில் தான் என்பது தான் வைரமுத்து குறிப்பிட்ட கட்டுரையின் ஆசிரியர் தரும் விளக்கம்.

இது குறித்து ஒரு வைணவ அறிஞர் கூறும்போது, ‛‛எந்த ஆதாரமும் இல்லாத ஒரு தகவலை, ஆதாரப்பூர்வ தகவலைப் போன்று வைரமுத்து பேசி உள்ளார். அதுவும், நடக்காத ஒரு ஆய்வை, நடத்தாத ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயருடன் அவர் எவ்வாறு குறிப்பிட்டார்.
அக்கட்டுரையை எழுதிய நாராயணன் என்பவரே, ஆண்டாள் பற்றிய செவி வழி செய்தியை மட்டுமே குறிப்பிட்டதாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட, ஆதாரமற்ற ஒரு தகவலை வைரமுத்து ஏன் பரப்பினார். இதன் மூலம் வேண்டுமென்றே ஆண்டாளை வைரமுத்து அசிங்கப்படுத்தி உள்ளார் என்பது புலனாகிறது. அவரது உள்நோக்கமும் புரிகிறது. கடவுளாக வணங்கும் ஒருவரைப் பற்றி, மாபெரும் பொய்யை பேசிய வைரமுத்து, இனிமேலாவது பொய் சொன்னேன் என ஒப்புக்கொள்வாரா. பகிரங்க மன்னிப்பு கேட்பாரா'' என்று கூறினார்.


Thursday, January 18, 2018


தொடர் கதையாகும் மாணவர் மரணங்கள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்!?

NARESH B




டெல்லியில் தொடரும் மாணவர்களின் மரணங்களில் இவ்வளவு ஒற்றுமை இருக்கமுடியுமா? அந்த ஒற்றுமை நமக்குச் சொல்ல வரும் செய்திகள் என்னென்ன? இந்த மரணங்களைச் சுற்றி இவ்வளவு சர்ச்சை எதற்காக...?

2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி, டெல்லி எய்ம்ஸில் படித்துக்கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர், மர்மமான முறையில் மரணமடைந்தார். “எனது மகனின் மரணம் மர்மம் அல்ல. அவனை விஷ ஊசி போட்டுக் கொன்றுவிட்டனர். எங்கள் குமுறல்களைக் கண்டுகொள்ளாமல் சரவணனின் மரணத்தைத் தற்கொலை என்று கூறி வழக்கை முடிக்கப் பார்க்கிறது டெல்லி காவல்துறை. நாங்கள் சரவணன் மரணம்குறித்து வழக்குத் தொடுத்துள்ளோம்” என்றார் அவரின் தந்தை.

2018 ஜனவரி 17-ம் தேதியன்று டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவ அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர், மர்மமான முறையில் மரணமடைந்தார். “சரத் பிரபுவின் அறையில் சில மருந்துகள் மற்றும் ஊசி போடப்பட்டதற்கான காலியான நீடில் (syringe) கிடைத்திருக்கிறது. அதுகுறித்துத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதுகுறித்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே கூறமுடியும்” என்று தெரிவித்துள்ளது டெல்லி காவல்துறை. `இந்த மரணத்தையும் தற்கொலை என்று கூறி வழக்கை முடித்துவிட வாய்ப்புள்ளது' என்று சரவணின் தந்தை, சரத் பிரபுவின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

சரத் பிரபுவின் உறவினர் நவநீத கிருஷ்ணன் அளித்த பேட்டியில், "சரத் பிரபு நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளக்கூடியவர் அல்ல. அவர், எப்போதும் அதுபோன்ற மன நிலைக்குச் செல்லாதவர்” என்று கூறியுள்ளார்.

சரவணன், சரத் பிரபு இருவரின் மரணங்களுமே ஒரே மாதிரியான 'மர்ம மரணங்கள்' எனலாம். இருவருமே மருத்துவக் கல்லூரி மாணவர்கள். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த, சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர், அவரின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம்குறித்து முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், "என் மகன் என்னுடன் மரணமடைவதற்கு முந்தையநாள் வழக்கம்போல தொலைபேசியில் பேசினான். தற்கொலை செய்யும் அளவுக்கு எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தளவுக்கு அவன் கோழையும் கிடையாது'' என்றார்.

மரணமடைந்த மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வந்து மர்மமான முறையில் இறந்த அல்லது தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பட்டியல் இன்னும் நீளக்கூடும். ரோஹித் வெமுலாவையும் சேர்த்துதான் சொல்கிறேன். `இந்த மரணங்களை எல்லாம், ஒன்று தற்கொலை என்று குறிப்பிட்டு வழக்கை முடிப்பது அல்லது மர்மமான மரணம் என்று அறிவிப்பது' என்பது சிக்கலான காலகட்டங்களில் காவல்துறை கடைப்பிடிக்கும் போக்கு. ஆனால், டெல்லியில் தொடர்ந்து நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கும், இதுபோன்ற போக்கைக் கடைப்பிடிப்பது ஆபத்தானதாக அமையும்.

“தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் மரணம்குறித்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டுப் பிரச்னைக்கான உண்மையான காரணம் என்னவென்று விசாரிக்க வேண்டும்" என்று சரவணின் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் என்ன தெரியுமா?

“தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் அரசிடம் பதிவு செய்துவிட்டுச் செல்லவேண்டும். பதிவு செய்யாமல் செல்வதால்தான், இவ்வளவு குழப்பமும் ஏற்படுகிறது. ஆயினும் வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்பதுதான்.

`டெல்லியில் நடக்கும் மரணங்களைத் தடுக்க, அரசாங்கத்திடம் பதிவு செய்துவிட்டுப் போனால் போதும் என்பதுதான் தீர்வு' என்பதை, பிள்ளைகளை இழந்து அழுதுகொண்டிருக்கும் அந்தப் பெற்றோர்களிடம் எப்படிச் சொல்ல முடியும்?

தமிழக மாணவர்களின் இறப்புகள், மர்மமான மரணங்களா? கொலைகளா அல்லது தற்கொலைகளா? என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால், 'அந்த இடத்தில் மாணவர்களுக்கான இயல்புநிலை இல்லை' என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பிரச்னையின் வேர் என்பது அரசாங்கப் பதிவேடுகளிலோ, கல்லூரிப் பதிவேடுகளிலோ இல்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநிலையிலேயே உள்ளது. அங்குள்ள கல்விக்கூடங்களின் அரசியலில் உள்ளது. 'பாகுபாடுகளும், பிரிவினைகளும் ஏகபோகத்துக்கு கல்விக்கூடங்களில் மலிந்துகிடக்கின்றன' என்பதை முத்துக்கிருஷ்ணனும், ரோகித் வெமுலாவும் வெளிப்படையாகவே எழுதி விட்டுத்தான் இறந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற மாணவர்களுக்கான உடனடிப் பாதுகாப்பு என்பது கல்வி-அரசியல் விடுதலையும், அதற்கான விசாரணைகளும், நீதியும்தான். இவற்றைத் தனிப்பட்ட மரணங்களின் விசாரணையாகக் கருதமுடியாது. ஏனெனில் இந்த மரணங்களின் பின்னணியில் உள்ள ஒற்றுமை நமக்கு உரைக்கும் செய்தி, 'இது தனிப்பட்ட பிரச்னை அல்ல; ஒற்றுமையாக, ஒட்டுமொத்தமாக கல்விக்கூடங்களில் நிகழ்த்தப்படவேண்டிய மாற்றங்கள் என்பதுதான்.

Cashing in: Junked notes turn files, pads at Puzhal prison

| TNN | Updated: Jan 18, 2018, 07:26 IST

Notes are shredded 
Notes are shredded
 
CHENNAI: The office files and pads being supplied to many government offices in the state are made of pulp from an unusual source - junked currency notes.
Following the demonetisation of Rs 500 and Rs 1000 notes in November 2016, the RBI has despatched shredded notes valued at more than Rs 100 crore to the city's Puzhal prison where they are being recycled into customised stationery.

A prison officer said, "We are engaging at least 30 inmates in the stationery making industry. We have received orders from many state government departments and the industry is running round the clock."

Used in government offices, a file pad is a type of semi-corrugated, hard pad with corners embellished with coloured cloth. At least 1,000 office pads are made every day at the stationery making unit in Puzhal using demonetised notes.

Each inmate makes around 50 pads daily and is paid a salary of Rs 18 or Rs 25 per hour depending on whether he is a skilled or semi-skilled worker.

"Puzhal prison inmates have so far prepared stationery items using at least nine tons of shredded demonetised currency notes," said the deputy inspector-general of prisons (in charge) A Murugesan.

Narrating the process, a prison officer said, "The shredded currency notes are pulverised and mixed with glue powder and powdered coconut fibres. The mixture is converted into sheets which are kept in the sun for drying. The sheets are then cut with a machine into the right size to hold A-4 paper. A sheet of wrapper is pasted on the pad. Subsequently, cloth in different colours is pasted in the corners."

Though six other jails in Tamil Nadu including those in Vellore, Salem and Madurai make file pads, Puzhal is the only centre to make such stationery using demonetised currency.

5% rise in leprosy cases worries TN health department

| TNN | Updated: Jan 18, 2018, 08:24 IST

Representative image

CHENNAI: In spite of effective and cheap treatment, prevalence of leprosy in Tamil Nadu has been steadily increasing since 2012, even as the national average recorded a decline. 

With a 5% increase in prevalence per 1,00,000 in five years, TN recorded 4,939 new cases in 2016-17 compared to 3,550 cases in 2012-13, according to the annual National Leprosy Elimination Programme report. The prevalence dropped from 7 per lakh in 2012-13 to 6 per lakh in 2016-17 across India, while rising from 3 per lakh to 4 per lakh in TN. Almost simultaneously, the state recorded an increase in the percentage of cases among children and women, along with the number of those crippled by the disease.

Ahead of World Leprosy Day on January 28, at least one in 20 patients in TN has grade I deformities and one in 25 has grade II deformities. In 2016-17, of the 5,573 people in the country with grade I deformity, 283 were in TN, and of the 5,245 people in India with grade II deformity, 199 were in TN.


LEPROSY

The increasing incidence among women, who constitute 42.8% of all leprosy patients, and children (17.64%), has particularly worried public health experts.

Directorate of public health officials say the increase in TN is due to intensive screening. "We were seeing a drastic decline until a few years now but we have increased screening. All children are screened across schools and ICDS centres," said director of public health Dr K Kolandaswamy.

But activists say the increase in incidence began after leprosy prevention programme was integrated with general healthcare schemes too early. Leprosy inspectors were re-designated health inspectors and nonmedical supervisors became block health officials.

"The health officers are too busy as they have to deal with many programmes. No one goes into the field to do a check among adults," said senior officer who did not want to be named.


Sasikala brother: Jayalalithaa died on December 4, hospital delayed news by a dayTNN | Updated: Jan 18, 2018, 06:49 IST




 

TRICHY/CHENNAI: V Divaharan, brother of jailed AIADMK leader V K Sasikala, dropped a bombshell on Wednesday when he said that former chief minister J Jayalalithaa had passed away on December 4, 2016. 

The administration of Apollo Hospitals, where she was treated, had announced her death only the following day fearing for the safety of the hospital, he alleged at a public meeting at Mannargudi in Tiruvarur.

Divaharan, who was speaking at a public meeting organised as part of the birth centenary celebrations of AIADMK founder MG Ramachandran claimed that 'Amma' had passed away exactly at 5.15pm on December 4, 2016 and that he reached the hospital the same night after receiving the information. "Even then, Amma was kept on ventilator. When I inquired with Reddy, he asked me to ensure the safety and security of the hospital. Only then could he declare (her death)", Divaharan said.

Minutes later Apollo Hospitals issued a statement denying Divaharan's claims. "It is unfortunate that unnecessary confusion is being created based on certain misinformation about the date and time of the demise of our former chief minister Selvi J Jayalalithaa, who had expired on December 5, 2016," the four-paragraph statement said.

Jayalalithaa, who was admitted to the hospital on September 22, 2016, suffered a cardiac arrest on December 4.

TTV distances himself from uncle's comment

For more than 24hours, Apollo Hospitals and the government said she was on extracorporeal membrane oxygenation (ECMO) and life support systems. She was declared dead on December 5 at 11.30pm.

"During the course of treatment, all clinical protocols and norms were followed. The unfortunate declaration of death was done as per standard clinical protocols," the statement said. Distortion of facts would be unjust to all care-givers and experts, both from India and abroad, it added. "There is a process of inquiry which is being conducted by an eminent body to go through all the facts leading to her demise. We would like the matter to be clarified at the earliest in the interest of truth and justice.".

Rebel AIADMK leader T T V Dhinakaran has distanced himself from the statement of his uncle V Dhivakaran that Jayalalithaa died on December 4, a day before she was officially declared dead. Talking to reporters in Coimbatore on Wednesday, Dhinakaran said, "I don't know about it. Apollo should clarify it,'' Dhinakaran said in a cryptic reply to a query on Dhivakaran's claim.
Chiyaan Vikram felt disappointed when Sachin Tendulkar didn’t recognise him

THE ASIAN AGE 


Published : Jan 17, 2018, 8:14 pm IST

The actor revealed a fanboy encounter with cricket legend Sachin Tendulkar.

Actor Vikram and Sachin Tendulkar.

Mumbai: Actor Vikram was in Kochi recently to promote his latest film 'Sketch'. While talking to a news channel, the actor revealed a fanboy encounter with cricket legend Sachin Tendulkar.

When Vikram took Chennai bound flight from Mumbai, his co-passenger was none other than Master Blaster. But Vikram felt embarrassed when Sachin didn’t recognise him. Being a prominent star in the South Indian film industry, and having won a National Award, it’s only fair Vikram felt awkward when Sachin didn’t recognise him.

“Then someone walked up to me and sat near me. It was Sachin! I was wonderstruck and just uttered ‘Oh my god’. He turned to me and said ‘hi’. All I could say was ‘sorry sir’. I was embarrassed. I was also disappointed that he did not recognize me,” the actor told Manorama News.

Vikram said that he told he was sad that he didn’t know of him. "I asked him why he was not aware of my existence. He said he did not watch Indian movies. He watches foreign movies once in a while,” revealed Vikram.

During the two-hour flight, Vikram said he and Sachin talked mostly about their sons.

Aadhaar is an 'electronic leash' on citizens: Senior lawyer Shyam Divan tells Supreme Court

By PTI  |   Published: 17th January 2018 06:04 PM  |  


NEW DELHI: Terming Aadhaar as "an electronic leash", a senior lawyer today told the Supreme Court that the government could completely destroy an individual by "switching off" the 12-digit unique identifier number.

The argument was made before a five-judge Constititution bench headed by Chief Justice Dipak Misra which commenced hearing on a batch of petitions challenging the constitutional validity of the government's flagship Aadhaar programme and its enabling Act of 2016.

However, the bench, also comprising Justices A K Sikri, A M Khanwilkar, D Y Chandrachud and Ashok Bhushan, countered senior advocate Shyam Divan, asking whether the state "cannot say that it has every right to find out the number of schools, children or the real beneficiaries of a welfare scheme and verify the real beneficiaries of huge funds which it is spending, it needs Aadhaar number. This is a valid argument." It posed whether the government does not have the right to say that it was spending crores of rupees on welfare schemes and needed to verify whether benefits reached the needy and the leakages or pilferages of resources stopped.

The bench also asked what will happen to the biometric data collected before the Aadhaar Act, 2016 -- whether they will be destroyed if the petitioners challenging the validity of the Aadhaar programme succeeded.

Divan, who opened arguments on behalf of petitioners, said that through a succession of "marketing stratagems" and by employing "smoke and mirrors", the government has rolled out a "little understood" programme that seeks to "tether every resident of India to an electronic leash".

"This leash is connected to a central database that is designed to track transactions across the life of the citizen. This record will enable the State to profile citizens, track their movements, assess their habits and silently influence their behaviour. Over time, the profiling enables the State to stifle dissent and influence political decision making," he argued.

Divan said "the State is empowered with a 'switch' by which it can cause the civil death of an individual. Where every basic facility is linked to Aadhaar and one cannot live in society without an Aadhaar number, the switching off of Aadhaar completely destroys the individual." He said the petitioners are certain that if the Aadhaar Act and the programme were allowed to operate "unimpeded", it would "hollow out" the Constitution, particularly the great rights and liberties it has assured to its citizens.
Divan is representing several petitioners like former Karnataka High Court judge Justice K S Puttaswamy, several activists Aruna Roy, Shantha Sinha and veteran CPI(M) leader V S Achuthanandan.

Divan, who argued through the day and would continue his submissions tomorrow, said "a person cannot avail the facility of a welfare scheme, if the finger prints do not match the templates set by UIDAI," he said, adding that for seven years, biometric data of individuals were collected without any legal framework but only on executive orders.

Moreover, over three crore citizens have not been able to register their biometric data, he said and asked how can the government exclude such a big part of the population who could not be registered without any fault on their part, from availing benefits.
Divan contended that at its core, Aadhaar alters the relationship between the citizen and the State and diminishes the status of the citizen.

Observing that the case at hand was unique as the programme was itself without any precedent, the senior lawyer said "no democratic society has adopted a programme that is similar in its command and sweep. There are few judicial precedents to guide us.

"The closest foreign cases have all been decided in favour of the citizens, repelling the invasive programmes by the State." He said this case was about a new technology that the government has sought to deploy and a new architecture of governance has been built on this technology.

A people's Constitution will transform into a State Constitution, Divan said and asked whether the Constitution allowed the State to embrace this new programme or whether the key document repudiates "the giant electronic mesh that Aadhaar was creating." He also expressed concern over extending the Aadhaar platform to private corporations, the degree of tracking and extent of profiling will "exponentially increase".

"Rights freely exercised, liberties freely enjoyed, entitlements granted by the Constitution and laws are all made conditional. Conditional on a compulsory barter. The barter compels the citizen to give up her biometrics 'voluntarily', allow her biometrics and demographic information to be stored by the State and private operators and then used for a process termed as 'authentication'," he said.

Divan said the Constitution balances rights of an individual against the State interest and "Aadhaar completely upsets this balance and skews the relationship between the citizen and the State...".
"The Constitution is not a charter of servitude. Aadhaar, if allowed to roll out unimpeded reduces citizens to servitude," Divan said.
At the fag end of the hearing, he said if Aadhaar Act is upheld, then in the alternative, no citizen should be deprived of any right or benefit for lack of an Aadhaar card.

The apex court had on December 15 last year extended till March 31 the deadline for mandatory linking of Aadhaar with various services and welfare schemes of all ministries and departments of the Centre, states and union territories.

A nine-judge constitution bench of the apex court had last year, held that Right to Privacy was a Fundamental Right under the Constitution. Several petitioners challenging the validity of Aadhaar had claimed it violated privacy rights.

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...