Friday, January 19, 2018

ஸ்பெயின் நாட்டு பெண்ணை மணந்த விருத்தாசல இளைஞர்

Added : ஜன 19, 2018 06:11



விருத்தாசலம்: விருத்தாசலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, ஸ்பெயின் நாட்டு பெண்ணை காதலித்து, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர், வசந்தராஜ், 29; பொறியியல் பட்டதாரி. இவர், ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், எம்.பி.ஏ., படித்தார். பின், அங்கேயே தங்கி, நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.மாட்ரிட் நகரைச் சேர்ந்த பியத்திரிஸ், 29, விமான பைலட்டாக பணி புரிந்து வருகிறார். பியத்திரிசும், வசந்தராஜும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, விருத்தாசலத்தில், இந்து முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. மேளம், நாதஸ்வரம் முழங்க, மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள், மண மக்களை வாழ்த்தினர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...