Saturday, July 7, 2018

தமிழகத்தில் நடத்துனரில்லா பேருந்து பயணம்... விளைவுகள் என்ன?


ஜெ.அன்பரசன்  vikatan 

ஒரு பேருந்தின் காலஓட்டம் என்பது சுமாராக 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் மட்டும்தான். அதன்பின்பு, அந்தப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கக் கூடாது



தமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஏற்படக்கூடிய பயம், வேறெந்த வாகனங்களில் செல்லும்போது ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் ஒன்றா... இரண்டா, சொல்வதற்கு? படிக்கட்டுகள் இருப்பதில்லை; அமர்வதற்கு சீட்கள் இருப்பதில்லை; மேற்கூரை காற்றில் பறக்கும் அவலம்; உடைந்து தொங்கும் கண்ணாடிகள்; மழை பெய்யும்போது பஸ்ஸுக்குள் குடைபிடிக்கும் நிலைமை; பேருந்துகளைச் சுத்தப்படுத்தாமை எனப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 60 சதவிகிதத்துக்கும் மேலான பேருந்துகள் காலாவதியானவை. அதாவது, தமிழ்நாட்டில் மொத்தம் 22,533 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், சென்னை மாநகரப் பேருந்துகள் (MTC) 3,688; நகரப் பேருந்துகள் (TOWN SERVICE) 6,916; புறநகர் சேவைப் பேருந்துகள் (MOFUSSIL SERVICE) 8,561: மலைவழிப் பேருந்துகள் (GHAT SERVICE) 528, மாவட்டங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (INSIDE STATE) 648; வெளிமாநிலங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (OUTSIDE STATE) 435; ஸ்பேர் பஸ்கள் (SPARE BUS) 1,757. இதில், காலாவதியான 60 சதவிகிதப் பேருந்துகள் என்பவை சுமாராக 14,000- க்கும் மேல். ``ஒரு பேருந்தின் காலஓட்டம் என்பது சுமாராக 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் மட்டும்தான். அதன்பின்பு, அந்தப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கக் கூடாது'' என்கின்றனர் பேருந்தை இயக்குபவர்கள். ஆனால், என்ன செய்வது? அரசு சொல்வதைத்தானே அவர்கள் கேட்டாக வேண்டும்.



இந்த நிலையில்தான் 134 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட 515 பேருந்துகளை முதற்கட்டமாக வாங்கியுள்ளது தமிழக அரசு. இந்தப் பேருந்துகள் அனைத்தையும் கடந்த 3- ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். சென்சார் தானியங்கி கதவுகள், தானியங்கி படிக்கட்டுகள், தாழ்தளப் படிக்கட்டுகள், பேருந்துக்கு முன்னேயும் பின்னேயும் வரும் வாகனங்களைத் துல்லியத் தன்மையுடன் அறிந்துகொள்ள சென்சார் கருவிகள், ஜி.பி.எஸ். கருவி, சி.சி.டி.வி கேமரா போன்ற சிறப்பம்சங்களுடன் இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 515 பேருந்துகளில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு (சென்னை) 40 பேருந்துகளும், விழுப்புரம் கழகத்துக்கு 60 பேருந்துகளும், சேலம் கழகத்துக்கு 78 பேருந்துகளும், கோவை கழகத்துக்கு 172 பேருந்துகளும், கும்பகோணம் கழகத்துக்கு 64 பேருந்துகளும், மதுரை கழகத்துக்கு 32 பேருந்துகளும், நெல்லை கழகத்துக்கு 69 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளில் 500 பேருந்துகளை நடத்துநர்கள் இல்லாமல் இயக்குவதுதான் தமிழக அரசின் திட்டம்.

  முதற்கட்டமாகச் சேலத்தில் 40 பேருந்துகள், கோவையில் 91 பேருந்துகள், விழுப்புரத்தில் 28 பேருந்துகள், கும்பகோணத்தில் 42 பேருந்துகள், மதுரையில் 10 பேருந்துகள், நெல்லையில் 20 பேருந்துகள் என மொத்தம் 231 பேருந்துகள் நடத்துநர்கள் இல்லாமல் இயக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமையைக் குறைப்பதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு நீண்டகாலமாகச் சிந்தித்து வருவதாகச் சொல்லிவந்தது. இதனையடுத்து, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டம்தான் நடத்துநர்களின் களையெடுப்புப் பணி. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ``நவீன வசதிகளுடன் கூடிய பேருந்துகள் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால், நடத்துநர்கள் இல்லாமல் பேருந்துகள் இயக்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தினை உருவாக்கும்'' என்கின்றனர் போக்குவரத்துக் கழகத்தினர்.

இதைப்பற்றி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். ``தமிழகத்தில் இருக்கும் 22,533 அரசுப் பேருந்துகளில் 14,000-க்கும் மேல் காலாவதியானவை. ஆனாலும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வேறுவழியில்லாமல் அந்தப் பேருந்துகளை இயக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால்தான் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தில் புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவே இல்லை. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு 5,000 புதிய பேருந்துகளை வாங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாகத் தற்போது 515 நவீன சொகுசுப் பேருந்துகள் இயக்கத்துக்கு விடப்பட்டுள்ளன. இது, படிப்படியாக உயர்ந்தால் காலாவதியான பேருந்துகள் அனைத்தும் பயன்பாட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும். இது, அனைவருக்குமே நல்ல விஷயம்தான். அதேவேளையில், நடத்துநர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தினை உருவாக்கும். காசை மிச்சப்படுத்த வேண்டும் என்று நடத்துநர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது என்பது, அப்பாவி மக்களை அபாயத்தில் தள்ளிவிடும்.



மேலை நாடுகளில் நடத்துநர்கள் இல்லாமல் ஓட்டுநர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலை நாடு என்பது இந்தியாவுக்கு முற்றிலும் வேறுபட்டது. மேலை நாடுகளில் எதிர்திசையில் வாகனங்கள் வருவதில்லை. அத்துடன், அங்கு வாகனப் பெருக்கமும் குறைவு. ஆனால், இந்தியாவில் வாகனப் பெருக்கம் அதிகம். முக்கியமாக மேலை நாடுகளில் சாலை விதிகளை மக்கள் பின்பற்றுவார்கள். ஆனால், இந்தியாவில் அப்படியா? ஒரு இக்கட்டான நேரத்தில் நடத்துநர் சிக்னல்தான் பேருந்துக்கு மிக அவசியம். நீண்டப்பயணங்களின்போது ஓட்டுநருக்குச் சலிப்பு ஏற்படாமல் இருக்க, நடத்துநர் பேச்சுக் கொடுத்துகொண்டும் இருப்பார். அதுமட்டுமல்லாமல், எதிரே வரும் வாகனங்களின் நெளிவு சுளிவுகளைக் குறித்து ஓட்டுநருக்கு, நடத்துநர் எச்சரிக்கை செய்வார். பேருந்தை ஓட்டுவது ஓட்டுநர் வேலை என்றால், அந்தப் பேருந்தை முழுவதும் கண்காணிப்பது நடத்துநரின் வேலை. இந்தியா போன்றதொரு நாட்டில் நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவது என்பது சாத்தியமற்றது. அதோடு, போக்குவரத்து ஊழியர்களும் பாதிப்படைவார்கள். இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக அனைத்துப் பேருந்துகளையும் நடத்துநர்கள் கொண்டு இயக்கப்பட வேண்டும். இதற்காகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடுவோம்" என்றார் மிகத் தெளிவாக.
HC: Docs need not provide contact details to patients

TNN | Jul 5, 2018, 12.09 AM IST


Thiruvananthapuram: A single bench of the high court on Wednesday stayed the Kerala State Consumer Disputes Redressal Commission order that doctors should provide their mobile numbers and contact details to the patients. The HC move came following a petition filed by the state branch of the Indian Medical Association (IMA). The commission had directed hospitals in the state to keep a register containing details of doctors working with them, like postal and email addresses and contact number, and share the same with their patients upon request.

IMA opposed the directive and moved the high court stating that the commission’s directive was an infringement on the privacy of the doctors.

The high court, in its order, said the doctors can share their contact details on their own and it cannot be made mandatory through an order or by law.

“The doctors are already stressed with work load and if the patients start calling them their work will become 24X7, which is humanly impossible. The specialist doctors work for 10 to 12 hours in a day. It will be difficult for them if the patients start contacting them,” said IMA state secretary Dr N Sulphi.

The IMA told the high court that only the duty doctors and hospital authorities should be allowed to contact the doctors in case of an emergency. “Hospitals are in possession of the contact details of all doctors working. Once doctors are out of the hospital after the duty hours, the duty doctors or other emergency staff can contact them at any time,” said Dr Sulphi.

The consumer disputes redressal commission had issued the order after observing the practice of private hospitals feigning ignorance about the whereabouts of doctors when complaints are registered against them by patients for alleged medical negligence. Several cases were pending before the forum since the hospitals claim to be ignorant about the whereabouts of the doctors whose service they had utilized in the past.

தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியீடு!


தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று  முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5-ம் தேதி அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் பிளாஸ்டிக் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வா் பழனிசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்டைகிறது.

 இதனால்  பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது. விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு பாதிப்படைகின்றன. எனவே தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நலன் கருதி வருகிற 2019 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பாரம்பரிய முறையான வாழையிலை, பாக்கு மட்டைகளினாலான தட்டு, தாழம்பூ இலை, துணிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
`தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா..?' - சி.பி.எஸ்.இயை லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்

அருண் சின்னதுரை

ஈ.ஜெ.நந்தகுமார்  vikatan 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ரெங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், ``நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும்" எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையில் சி.பி.எஸ்.இ சார்பாக வழக்கறிஞர் ஆஜராகினர். அவர் பேசுகையில் ``இந்த வழக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக யாரும் வழக்குத் தொடரவில்லை. பொது நலன் வழக்காக மட்டுமே வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்றார்.

அவர்களிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினார். நீங்கள் தவறாக கேள்வி கேட்பீர்கள் பின்னர் அது சரியென்று கூறுவீர்களா. சி.பி.எஸ்.இ சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறதா. தவறான கருத்துகளை சரியாக்க முயற்சி செய்ய வேண்டாம். இராகத்துக்கு நகம் என்றும், இடைநிலை என்பதற்குப் பதிலாக கடைநிலை என்றும், இரத்த நாளங்கள் என்பதற்குப் பதிலாக இரத்தம் நலன் என்றும் தவறாக கேட்கப்பட்டுள்ளது மிகவும் தெளிவாக தெரிகிறது. பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியதை விடத் தேர்ச்சி பெற்றவர்கள் எப்படி அதிகரிக்கப்பட்டது. கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாகத் தரவரிசை பட்டியல் வெளியிட்டது ஏன். இவ்வாறு நீங்கள் தவறு செய்தது தெளிவாகத் தெரிகிறது. இதுதான் ஜனநாயகமா. இல்லை சர்வாதிகாரமா செயல்படுவதா. தவறான கேள்விகள் இருக்கும்போது எப்படிச் சரியான பதிலை எதிர்பார்ப்பீர்கள். இதனால் தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா? மாணவர்கள் நலன் கருதி சி.பி.எஸ்.இ செயல்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். மொழி மாற்றம் எவ்வாறு செய்தீர்கள்? எந்த டிக்ஸ்னரி பயன்படுத்தப்பட்டது என்று கேள்வி கேட்டனர். பின்னர் இரு தரப்பு வாதங்களைக் கேட்டு பின் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
நன்னிலம், திருவெண்காடு, திருப்பாம்புரம்... போதைப் பழக்கங்களிலிருந்து மீள உதவும் கோயில்கள்!



மு.ஹரி காமராஜ்  vikatan 

போதை பழக்கத்தில் இருந்து விடுபட கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில ஆலயங்களைக் கூறும் கட்டுரை இது!




நாளுக்கு நாள் பெருகிவரும் போதைக் கலாசாரம் பெரும் கவலைக்கு உரிய விஷயமாகிவருகிறது. தமிழ்நாட்டில் மது அருந்துவோர், புகைபிடிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. மது மற்றும் புகையிலை உபயோகிப்போரின் சராசரி ஆயுட்காலமும் குறைந்து கொண்டே வருகிறது. 13 வயதில் புகைபிடிப்பதும், 15 வயதில் மது அருந்துவதும் இங்கு சர்வ சாதாரணமாகி வருகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரமும், கையில் புழங்கும் தாராளமான பணமும்தான் இதற்குக் காரணம். போதைப் பழக்கத்தால் நாடும் வீடும் சீரழிந்து வரும் இந்த வேளையில், கொடுமையான இந்தப் பழக்கத்தில் இருந்து மீள ஆன்மிகமும் தனக்குரிய பங்கினை அளித்தே வருகிறது. சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியும், பெரியவர் மீதான மரியாதையும், குருவின் நல்ல வழிகாட்டலும் உள்ளவர்கள் போதையின் பாதையில் விழுவதே இல்லை. நல்லவர்கள் தொடர்பே இல்லாதவர்கள்தான் இந்தப் பாழுங்குழியில் விழுந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். ஆரம்பத்திலேயே உங்கள் பிள்ளைகளை நன்னெறி சொல்லிக்கொடுத்து ஆன்மிகச் சூழலில் வளர்த்து வருவதே வருமுன் காப்பதாகும். இப்படி போதைக்கு அடிமையான பலர், அதிலிருந்து மீள ஆன்மிகரீதியான வழிமுறைகள் எதுவுமிருக்கிறதா என்று அறிய திருநள்ளாறு கோட்டீஸ்வர சிவாசார்யரைத் தொடர்புகொண்டோம்.



மனிதனை நல்வழிப்படுத்துவதுதான் ஆன்மிகம், ஆலய வழிபாடு எல்லாம். மனிதனை பக்குவப்படுத்தி தெய்வ நிலைக்கு உயர்த்தும் பணியையே ஆன்மிகம் செய்திருக்கிறது எனும்போது தீய பழக்கங்களை ஒழிப்பது என்பது எளிதான வேலையே. ஆண்டவனை நம்புபவர்கள் மன திடத்தோடு இருக்க வேண்டும். மனதை வென்றவர்கள் ஆண்டவனின் அருகிலேயே இருக்கிறார்கள் எனலாம். விரதம், சத்தியம் எல்லாம் நல்லவற்றைத் தொடரத்தான். சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் ஒரு மண்டலம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இருப்பதில்லையா? காரணம், ஆண்டவன் விஷயத்தில் ஒழுக்கத்தை மீறினால் பெரும் குற்றம் என்ற பயம். குடும்பத்துக்கு ஏதும் தீங்கு வருமோ என்ற அச்சம்தான் விரத காலங்களில் ஒருவனை போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறது என்றால் அந்த தெய்வ நம்பிக்கை நல்லதுதானே? மனதை உறுதியாக்கி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வழிப்படுத்தும் பூஜா முறைகள் எல்லாமே நன்மை தரும். பைரவர் போன்ற உக்கிரத் தெய்வங்களின் மீது சத்தியம் செய்பவர், தனது ஒழுக்கத்தை கடைபிடிப்பது வழிபட்டால் மட்டுமல்ல, உக்கிர தெய்வத்தின் மீது சத்தியம் செய்திருக்கிறோம் என்ற பயத்தினாலும்தான்.



செவ்வாய் உடலின் ரத்தத்துக்கு அதிபதி. அந்த ரத்தம் கெட்டுப்போக செவ்வாய் நீச்சமாவதும் காரணம். அதுபோல குருபகவான் நல்ல ஒழுக்கத்துக்கு காரணகர்த்தா. குருவருள் இல்லாவிட்டால் கெட்ட சேர்க்கை உண்டாகி தீய பழக்கங்கள் உருவாகும். அதைப்போலவே சந்திர பகவான் போகத்தின் கடவுள். இவர்கள் மூவரின் அருள் இருந்தால் ஒருவர் தீய பழக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்பது உண்மை. இதுவரை தவறு செய்தவர்கள் இறைவனருளால் விடுபட்டு நல்வாழ்வு பெற திருக்கோயில்களை சரணடைவது நல்லதே'' என்றார்.
  அமாவாசை, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாள்களில் பைரவருக்கு விளக்கிட்டு, அவருக்கான ஸ்தோத்திரங்கள் சொல்லி போதைப் பழக்கங்களில் இருந்து விடுபட்டவர்களை அநேக சிவாலயங்களில் பார்க்கலாம். தற்போது ஆங்காங்கே பெருகி வரும் நல்ல விஷயம் இது. தவற்றை உணர்ந்து கொள்வதே திருத்திக் கொள்வதின் முதல் படிதானே? இதைக் கடந்து அவரவர் ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி ஆலோசனை பெற்று, இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட சில கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில ஆலயங்களைப் பார்ப்போம்.



திருவெண்காடு: சிவபெருமானின் 64 வடிவங்களில் சிறப்பானவர் அகோர மூர்த்தி. இவர் ஈசனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றி தீயவர்களையும் தீமைகளையும் அழித்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. அகோர மூர்த்தி அருளும் திருத்தலம் திருவெண்காடு. போதைப் பழக்கத்தால் தவிக்கும் ஒவ்வொருவரும் வளர்பிறை திங்கட்கிழமையன்று திருவெண்காடு ஆலயத்துக்குச் சென்று திருக்குளத்தில் நீராடி அகோர மூர்த்தி சந்நிதியில் 108 நெய் விளக்கேற்றி வழிபட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபட விழிப்பு உணர்வு பெற்று ஜாதக ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் பெற்று மெள்ள மெள்ள போதையிலிருந்து மீள்வார்கள் என்கிறார்கள்.



திருப்பாம்புரம்: ராகுவும் கேதுவும் ஒரே உருவாக நின்று ஈசனை நெஞ்சில் நிறுத்தி வணங்கி அருள்பெற்ற தலம் இது. திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் பிரம்மராம்பிகை சமேத சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் தீய பழக்கங்களில் இருந்து விடுபட விசேஷமாகச் சொல்லப் படுகிறது. ஞாயிறுதோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 - 6.00) இங்கு வந்து ஈசனை வணங்கி அர்ச்சித்து 9 முறைகள் வலம் வந்து பலரும் தீய பழக்கங்களில் இருந்து விடுபடுகிறார்கள். போதைப் பழக்கத்தில் இருந்து மட்டுமல்ல, இங்கு வந்து வணங்கினால் 264 வகையான பாவங்களில் இருந்தும் விடுபடலாம் என்று தல புராணம் சொல்கிறது.

நன்னிலம்: கும்பகோணம்-திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் நன்னிலம் மதுவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விருத்திராசுரனை வெற்றி கொள்ள தேவர்கள் இந்தத் தலத்து ஈசனை வண்டு வடிவில் தேன் மழை பொழிந்து வழிபட்டார்கள். இதனால் ஈசன் மதுவனநாதர் எனப் பெயர் கொண்டார். இங்குள்ள மது தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் போதைப் பழக்கத்தில் இருந்து மீளலாம்.

திருக்களர்: திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் அமைந்த ஊர் திருக்களர். இங்கு வீற்றிருக்கும் அமிர்தவல்லி சமேத பாரிஜாதவனேஸ்வரர் சகல தீய பழக்கங்களில் இருந்தும் விடுபட அருள் செய்பவர். துர்வாச முனிவருக்கு பிரமதாண்டவ தரிசனம் அளித்து ஆசி வழங்கிய இந்த ஈசன் இன்பமே வடிவானவர். இவரைத் தரிசிப்பவர்கள் மற்ற போலியான மயக்க இன்பங்களைத் தவிர்த்து திருந்துவார்கள் என ஆன்றோர்கள் தெரிவிக்கிறார்கள்.

காணிப்பாக்கம்: விஹாரபுரி என்று அழைக்கப்பட்ட காணிப்பாக்கம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் சத்தியமே வடிவானவர். இவருக்கு முன்பாக சத்தியம் செய்துவிட்டு அதை மீறாதவர்களுக்கு அளப்பரிய நலன்களை வழங்குபவர். ஒவ்வொரு நாளும் இங்கு போதைப்பழக்கம் கொண்ட பலரும் வந்து, பிள்ளையாரை வணங்கி 'இனிமேல் குடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து பிள்ளையாரின் அருட்பிரசாதமான கிணற்றுத் தீர்த்தத்தை வாங்கி அருந்தி தீய பழக்கத்தில் இருந்து மீள்கிறார்கள். சொன்னபடி செய்யும் பக்தர்களை விநாயகப்பெருமானும் காத்து வருகிறார்.



மேலே சொன்ன ஆலயங்கள் மட்டுமின்றி ஜோதிடரீதியாக நல்ல சிந்தனையை அளித்து பலவீனங்களை ஒழிக்க குருபகவான் ஆலயங்களுக்கு சென்றும், செவ்வாய் அனுக்கிரகம் பெற திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோயில் சென்றும் தீய பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள். முன்ஜன்ம கர்ம வினைகளால் போதையில் விழுகிறவர்கள், சித்தர் சமாதிகளை வணங்கி விடுபடுகிறார்கள். நீர்த்தலமான திருவானைக்கா சென்றும் வழிபடுகிறார்கள். ஆலயங்கள், வழிபாடுகள் மட்டுமின்றி தீய பழக்கங்களில் இருந்து விடுபட தியானம், யோகா, கூட்டு வழிபாடு, பஜனை போன்ற ஆன்மிக விஷயங்களும் பெரிதும் பயன்படுகிறது. தினம்தோறும் சாய்பாபா கோயிலுக்கு சென்று தியானித்து போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள் அநேகம் என்று மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சொல்வதை நேரடியாகவே கேட்கலாம்.

வாழ்வைச் சீரழித்து வருங்காலத்தை நாசமாக்கும் போதைப் பழக்கத்தை இறையருளாலும், நல்லவர்களின் தொடர்பாலும் சீக்கிரமே விட்டுவிடுங்கள். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்...!
வதந்திகள் குறித்து வருத்தம் தெரிவிக்கும் வாட்ஸ்அப் நிறுவனம்!



மு.உதய சங்கர்

போலியான செய்திகளை, தவறான செய்திகளை, வதந்திகளை பரவ விடாமல் தடுக்கத் தேவையான வழிமுறைகளை யோசித்து வருகிறோம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.



இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை நம் வாழ்க்கைக்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. இவைகள் மூலம் ஏராளமான தகவல்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அதில் தவறான தகவல்களும் பரப்பப்படுவதும் உண்டு. தவறான வதந்திகள் பற்றி மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கடிதம் அனுப்பியிருந்தது. அதில், 'வாட்ஸ்அப் பொதுமக்களிடையே சட்டம், ஒழுங்கு, மத நல்லிணக்கம் குலைவதை அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான வழிமுறைகளை வாட்ஸ் அப் அமல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது. அதில், `வாட்ஸ்அப் மூலம் வதந்திகள், போலியான செய்திகள் பரவுவதை கேள்விப்பட்டு தங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வதந்திகளைக் கண்டறிய உரிய முறையில் திட்டமிடப்படும்.

போலியான செய்திகளை, தவறான செய்திகளை, வதந்திகளைப் பரவ விடாமல் தடுக்க தேவையான வழிமுறைகளை வாட்ஸ்அப் யோசித்து வருகிறது. அதில் முக்கியமானது ஒரு செய்தியை யார் பார்வர்ட் செய்கிறார் என்பதை கண்காணிப்பது. யாரிடமிருந்து அந்த செய்தி வந்தது என்ற விவரங்களை இதன் மூலம் அறிய முடியும். இது மிகப் பெரிய சவால். இதற்கு அரசாங்கம், பொதுமக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமீபத்தில் குரூப் சாட்டுகளில் தேவையில்லாத செய்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் போதிய மாற்றங்கள் செய்யப்பட்டன. குரூப்பை விட்டு வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாத வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல சில உத்திகளை அமல்படுத்தி வருகிறோம். இதெல்லாம் வதந்திகள், தவறான செய்திகள் பரவுவதை ஓரளவு தடுக்க உதவும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கியுள்ளது.
வதந்தியால் குழந்தையுடன் சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்...!



சி.வெற்றிவேல்

மங்களூரில் குழந்தையுடன் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்...

மங்களூரில் தனது சொந்தக் குழந்தையுடன் ஆட்டோவில் கடைக்குச் சென்றவரை, 'குழந்தையைக் கடத்திச் செல்கிறார்' என்று பரவிய வதந்தியால் பொதுமக்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



கர்நாடக மாநிலம் மங்களூரில் கலீத் என்பவர் தனது குழந்தையுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது குழந்தை எதையோ கேட்டு அடம்பிடிக்க கலீத் குழந்தையைத் திட்டி, அடித்திருக்கிறார். இதனால் குழந்தை அடம்பிடித்து அழுதிருக்கிறது. அப்போது இருசக்கரத்தில் சென்றவர்கள் ஆட்டோவை மறித்து நிறுத்தியிருக்கிறார்கள். அத்தோடு இல்லாமல் கலீத்தை ஆட்டோவை விட்டுக் கீழிறக்கி என்ன ஏதுவென்று கேட்காமல் கண்மூடித்தமாகத் அடித்து உதைத்துத் தாக்கியிருக்கிறார்கள்.

கலீத், ``இது என் குழந்தை. அடிக்காதீர்கள்" என்று கூறிக் கெஞ்சியிருக்கிறார். ஆனால், அவர் கூறியதைப் பொருட்படுத்தாத பொதுமக்கள் தொடர்ந்து தாக்க, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று மீட்ட அவலம் அரங்கேறியிருக்கிறது.

கலீத்தைத் தாக்கிய அனைவரையும் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். குழந்தையுடன் சென்ற தந்தையையே பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு ஊழியர்கள் வருமான வரி கட்டுவதில்லை:-வருமான வரி ஆணையர் சுற்றறிக்கை!


அரசு ஊழியர்கள் வருமான வரி கட்டுவதில்லை!

சென்னையில் உள்ள 50 சதவிகித அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை என அரசு அலுவலகங்களுக்கு வருமான வரி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை என்பதை வருமான வரி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத ஒவ்வொருவருக்கும், தாமதக் கட்டணம் வசூலிக்கும் வகையில், வருமானவரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மாத வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்கள், ஜூலை 31க்கு முன், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஊழியர்கள் பெறும் வீட்டு வாடகை, வட்டி வருவாய் உட்பட, அனைத்து வருவாய்களையும் வருமான வரி கணக்கு தாக்கலில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இதில் ஏதேனும் விடுபட்டது தெரியவந்தால், அதற்குத் தனி அபராதம் விதிக்கப்படும்.

கால வரம்பை மீறுபவர்களுக்கு, தாமதக் கட்டணமாக, 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். மேலும், அவர்களுக்கு மூன்று மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
New varsities to come up on Chennai outskirts 

R. Sujatha 

 
CHENNAI, July 07, 2018 00:00 IST

Permission comes with riders: official

The Shiv Nadar University, being set up as a private university by State legislation, will come up on a 230-acre site at Kalavakkam on the outskirts of Chennai, where the group’s SSN College of Engineering is located. The SSN Trust is expected to pump in at least Rs. 250 crore to set up the university.

“We are committed to creating a world class research institution,” an official associated with the proposed Shiv Nadar University said on condition of anonymity.

Separately, Kala Vijayakumar, president of SSN Institutions, said the university would come up on SSN’s 230-acre campus and would offer multi-disciplinary courses in fields, including engineering, commerce, arts and law.

As of now, there is no proposal to set up a medical college, Ms. Vijayakumar said.

The Sai Education, Medical, Research and Charitable Trust, administered by K.V. Ramani, chairman and managing director of Digital Holdings and a former director of ELCOT, will build the Sai University, on the outskirts of Chennai.
Students who opposed NEET now make the cut 

R. Sujatha 

 
CHENNAI, July 07, 2018 00:00 IST


Nirmal Haripriyan 


Both secured admission to government medical colleges

Two of the five students who went as representatives of the State government to the Supreme Court against introduction of the National Eligibility cum Entrance Test (NEET) last year, have secured seats in government medical colleges this year.

A. Gopi has been admitted to the Chengalpattu Medical College and Nirmal Haripriyan to the Government Mohan Kumaramangalam Medical College, Salem.

Mr. Gopi had score of 1,163 in class XII, and 136 in NEET. The first to enter college in his family, he said, “I got veterinary science and would have joined as the fee is much lower. But my father insisted that I take NEET again. It was difficult as I did not have enough money for the fees. But my father put me through a residential coaching programme in Salem. Now that I have got a seat there is some relief.” He scored 387 marks this time in NEET.

The son of a farmer, he hopes that in the second round of counselling, he will get a seat in Salem or Coimbatore medical college, where the hostel fee is lower.

“Else, I will go to my native Tiruvannamalai and be a day scholar,” he says. He plans to do an M.S. in orthopaedics or cardiology.

Mr. Haripriyan, the son of a retired sericulture inspector in Dharmapuri, had scored 134 in NEET last year and 1,166 in Class XII. “We thought NEET could be taken later and concentrated on Class XII scores,” he said. He went to a coaching centre run by a private school for a year. He scored 375 in NEET this year.

The students, who appeared for counselling on Wednesday, feel NEET should be deferred until the new syllabus is well understood by teachers and students. “I think NEET should be deferred for two years as the syllabus has not yet reached all staff and students,” says Mr. Gopi.

Mr. Haripriyan wants NEET deferred by five years. “With the new syllabus, students will get an orientation from 6th standard and would clear it in the first attempt. In a few years, they will qualify for AIIMS too,” he says. On Saturday, counselling for SC, SCA and ST aspirants will be held. On Monday, counselling for seats under management category will be held, officials said.
Seeking pay parity with central peers, doctors say they’ll stir

TNN | Jul 6, 2018, 12.22 AM IST

CHENNAI: Around 6,000 members of the Service Doctors’ and Post Graduate Doctors’ Association of Tamil Nadu have said they will strike work from Friday demanding pay parity with their counterparts in central government service. Three government doctors have been on indefinite fast since Monday to attract the government’s attention to the issue.

“We have been demanding pay parity since 1988. Ten years ago, the government assured us it will be done. It is yet to be implemented,” said Dr A Ramalingam of the association. The salary for doctors in state and central services is the same when they join duty, but doctors in central government services receive promotions in four, nine, 13 and 20 years, compared to eight, 15, 17 and 20 years in the state.

“The central government follows a dynamic assured career progression pattern. Here we get their fourth-year salary in our 15th year,” Ramalingam told reporters.

A doctor joining government medical service receives Rs 15,600 + Rs 5,400 basic salary when they join and net pay of close to Rs 40,000. After nearly 10 years of service and one promotion in eight years, a government doctor receives a salary of Rs 42,949 with a basic of Rs 17,930 + Rs 5,400.

The association submitted a petition to the health department eight months ago. “We are now told the file is still pending with the finance department,” he said.

One of the three doctors who had been on fast on the premises of Rajiv Gandhi Government Hospital was admitted to the hospital on Thursday after his condition deteriorated. R Karthikeyan, an assistant surgeon in Tiruvannamalai Government Hospital, declined food “But he is allowing us to treat him,” said a duty doctor. C Saminathan from Virudhachalam Government Hospital and Perumal Pillai S, an assistant professor at Institute of Child Health, continued the fast.
TN govt college teachers’ salary hiked

TNN | Jul 6, 2018, 08.17 PM IST



CHENNAI: After a gap of nearly 10 years, the Tamil Nadu government on Friday issued orders revising the pay of teachers in government colleges and universities.

Average monthly salaries of many teachers would be around Rs 1.5 lakh, according to the revised scale of pay based on the Seventh Pay Commission recommendations, as directed by University Grants Commission (UGC).

Revised pay of an entry-level teaching staff -- assistant professor -- would be around Rs 70,000 per month. It was around Rs 55,000 earlier.

Overall, the salaries of teaching staff have increased by 18% to 24%, read the order.

"The changes would be notional effect from January 1, 2016 and monetary effect from October 1, 2017". This means that the teachers would be losing arrears for 21 months on the lines of other state government employees who received their hikes earlier this year.

Tamil Nadu is the second state in the country to revise pays, after Arunachal Pradesh.

Though teacher unions anticipated a lesser hike since central government had earlier announced that their financial contribution would be reduced from 80 % to 50 %, the state government has issued orders bearing the additional financial burden.

A rationalisation index of 2.67 has been adopted while calculating the entry or basic pay for assistant and associate professors.

Accordingly, basic pay of assistant and associate professors is fixed at Rs 57,700-79,800 and Rs 1.31 lakh, respectively.

As far as professors are concerned, their basic pay has been fixed at Rs 1.4-1.8 per month.

Dearness, city compensation, house rent and medical allowances would be paid over and above this basic pay.

While DA would be 7% of the basic pay, other allowances vary based on the pay scale and the place of residence.
CBI charges ex-banker in Rs 15-crore fraud

TNN | Jul 7, 2018, 01.23 AM IST

Chennai: Central Bureau of Investigation (CBI), Chennai, on Wednesday booked a former senior manager of Bank of India’s Ooty branch, who was found to have given loans to the tune of Rs 15 crore to 58 accounts of people who had applied for floriculture activity. Some of the loans were sanctioned without submitting a collateral.

The FIR states that S Sivakumar, who was terminated from service in February 2017, had abused his official position and violated the bank’s procedures to provide 58 loans of Rs 24.75 lakh each and two other loans of Rs 10 lakh and Rs 16.5 lakh from July 2012 to April 2014 for cultivation of flowers, conniving with Rajan, owner of Growwin Flori tech. CBI said the borrowers had approached the bank’s Udhagamandalam branch through Rajan. The project reports were prepared by Growwin and submitted to the branch.

Sivakumar did not do cross check the documents and find out about Growwin’s track record, the FIR stated. Individual borrowers said they did not receive the money and no construction was made by Growwin. Rajan is absconding and was found to have cheated other banks in a similar manner, CBI said.

Officials cheat teachers of Rs 24 lakh PF

TNN | Jul 7, 2018, 01.28 AM IST
Chennai: When Munichikkama, a teacher in Krishnagiri, got an advance of Rs 8.5 lakh from her PF account for a family emergency in 2014, her superior and assistant elementary education officer C Balamurali, who cleared the file, said she had been wrongly credited Rs 2.5 lakh extra and she was eligible only for Rs 6 lakh.

He asked her to return the “excess amount” to his account and provided a forged challan to her. Balamurali’s senior, J P Premanand, another elementary education officer also colluded in this forgey, the Directorate of Vigilance and Anti-corruption (DVAC) has found.

Munichikkama later complained to Premanand’s successor officer who confirmed it was a fraud. DVAC officials said several teachers have been defrauded this way by the duo who made Rs 24 lakh over two years. A case of cheating, criminal conspiracy and corruption has been registered against them.

இவருக்கு 80 வயதாகிவிட்டதா? வியக்கும் ரசிகர்கள்! பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய பிரபல நகைச்சுவை நடிகர்!

By சினேகா | Published on : 06th July 2018 12:32 PM |

தம்ப்ப்ப்ப்றீறீ...பாப்பா......பப்..பப்.., புர்..ர்..! என்பதை எல்லாம் இவர் சொல்வதைப் போல வேறு யாராலும் சொல்ல முடியாது. சிலர் நடிக்க ஆரம்பித்தால் தான் சிரிப்பு வரும், ஆனால் இவர் திரையில் தோன்றினாலே அடுத்து இவர் என்ன சேஷ்டை செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்களுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அந்த அளவுக்கு உடல்மொழியிலும், குரலிலும் தனித்துவம் காண்பித்து அசத்தியவர். மிமிக்ரி ஆர்டிஸ்டுகளுக்கே சவால் விடும் குரல் இவருடையது. அவர்தான் பிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தில் 1965-ம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானவர். வக்கீல் படிப்பு படித்தும் மூர்த்திக்கு நடிப்பின் மீது தீராத ஆசை ஏற்படவே, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் திரையுலகம் பல காமெடியன்களைக் கண்டிருந்தாலும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் சில காமெடிகள் மறக்க முடியாதவை. சிவாஜி, கமல், ரஜினி, விஜய்காந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். காமெடி மட்டுமல்லாமல் குணசித்திர வேடத்திலும், சில படங்களில் வில்லனாகவும் கூட நடித்துள்ளார் மூர்த்தி. முள்ளும் மலரும், அழியாத கோலங்கள் ஆகிய படங்களில் இவர் செய்த வில்லத்தனமும், சீவலப்பேரி பாண்டி படத்தில் இவர் செய்யும் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது.



50 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நடிகை மணிமாலாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 80 வயது பூர்த்தியானது. எளிமையாக தனது பிறந்த நாளை மனைவியுடன் கொண்டாடி மகிழ்ந்தார். அவரது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பெரிய திரை மற்றும் சின்னத் திரையில் நடித்து வந்த வெண்ணிற ஆடை மூர்த்தி, தமிழ் படம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்களுக்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா உள்ளிட்ட பலருடன் ‘இட்லி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


எம்.பி.பி.எஸ்.: 62% இடங்களை பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்

By சென்னை, | Published on : 05th July 2018 01:03 AM |



எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் இதுவரை நிரம்பியுள்ள இடங்களில் 62 சதவீத இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) வரை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் அரசு கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,421 இடங்கள் நிரம்பின.

62 சதவீத இடங்கள்: இவற்றில் 892 இடங்களை மாநிலப் பாடத் திட்ட மாணவர்களும், 460 இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களும், பிற பாடத்திட்ட மாணவர்கள் 69 இடங்களையும் பெற்றுள்ளனர். அந்த அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்களில் 62.77 சதவீத இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களும், 32.37 சதவீத இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களும், 4.9 சதவீத இடங்களைப் பிற பாடத்திட்ட மாணவர்களும் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலை வெளியிடுகையில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கலந்தாய்வில் 70 சதவீத இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், 30 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிரம்பிய இடங்கள்: புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 490 எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் கல்லூரிகளில் 265 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 28 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 869 இடங்கள் நிரம்பின.

காலியிடங்கள் எத்தனை?: கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் 628, தனியார் கல்லூரிகளில் 537 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 55, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 24 இடங்கள் என மொத்தம் 1,244 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன. அதே போன்று அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 54, தனியார் கல்லூரிகளில் 963 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,017 பிடிஎஸ் காலியிடங்கள் உள்ளன.

இன்றைய கலந்தாய்வு: பொதுப்பிரிவினருக்கு தொடர்ந்து வியாழக்கிழமையும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசை எண் 2381-இலிருந்து 4312 வரை பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.

தர வரிசைப் பட்டியலில் 8 மாணவர்கள்: தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால் வெளிமாநிலத்தில் பிளஸ் 2 வரை படித்து, நீட் தேர்விலும் வெளிமாநிலத்தவர் என்று குறிப்பிட்டு தேர்வெழுதிய மாணவரில் ஒருவர், தனக்கு தமிழக மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க இடமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

வழக்கின் முடிவில் குறிப்பிட்ட மாணவரைக் கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த மாணவரின் பெயர் தமிழக இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இணைக்கப்பட்டது. அதன் காரணமாக அதே நிலையில் உள்ள பிற மாநிலத்திலிருந்து விண்ணப்பித்த தமிழகத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட 90 மாணவர்களின் பெயர்களை மருத்துவக் கல்வி இயக்ககமே புதிதாக தரவரிசைப் பட்டியலில் இணைத்தது. இதனைத் தொடர்ந்து அரசு இடங்களுக்கு விண்ணப்பித்த 8 மாணவர்களின் பெயரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த ஒரு மாணவரின் பெயரும் மீண்டும் தரவரிசைப் பட்டியலில் புதன்கிழமை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு


By DIN | Published on : 07th July 2018 04:32 AM |

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145) பிறப்பித்துள்ளது.

பேராசிரியர்களுக்கு 1-10-2017 முதல் புதிய ஊதிய உயர்வு பலன்கள் வழங்கப்படும்.

புதிய ஊதிய விகிதத்தின்படி, கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் முதல் நிலை (நிலை-10) உதவிப் பேராசிரியருக்கு ரூ.57,700, இரண்டாம் நிலை (நிலை-11) உதவிப் பேராசிரியருக்கு ரூ. 68,900 என்ற அளவிலும், மூன்றாம் நிலை (நிலை-12) உதவிப் பேராசிரியருக்கு ரூ. 79,800 என்ற அளவிலும் மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இணைப் பேராசிரியருக்கு ரூ. 1,13,400 என்ற அளவில் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பேராசிரியருக்கான ஊதியத்தைப் பொருத்தவரை முதல் நிலை (நிலை-14) பேராசிரியருக்கு ரூ. 1,44,200 என்ற அளவிலும், இரண்டாம் நிலை (நிலை-15) பேராசிரியருக்கு ரூ. 1,82,200 என்ற அளவிலும் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வருக்கு...புதிய ஊதிய விகிதத்தின்படி, இளநிலை பட்டப் படிப்புகளை மட்டும் கொண்டுள்ள கல்லூரி முதல்வருக்கு ரூ.1,31,400 மாத ஊதியத்துடன் சிறப்பு மாதப் படி ரூ. 2000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டப் படிப்புகளும் உள்ள கல்லூரி முதல்வருக்கு மாத ஊதியம் ரூ. 1,44,200 என்ற அளவிலும், சிறப்பு மாதப் படி ரூ. 3000 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தருக்கு ரூ. 2.1 லட்சம்: பல்கலைக்கழக துணைவேந்தருக்கான மாத ஊதியம் ரூ. 2.10 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் மாத சிறப்புப் படியாக ரூ. 5,000 வழங்கப்படும்.

ஓய்வு பெறும் வயதில் மாற்றமில்லை: பேராசிரியர்கள் ஓய்வுபெறும் வயதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே உள்ளதுபோல கல்லூரி ஆசிரியர்களுக்கு 58 வயதும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 60 வயதும் ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வயதுக்குப் பின்னர் மறுபணியமர்வு வழங்கப்படமாட்டாது.


நவஜோதிர்லிங்க யாத்திரைக்காக சிறப்பு சுற்றுலா ரயில்

By DIN | Published on : 04th July 2018 10:48 AM |



கோப்புப்படம்

ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்காக, நவஜோதிர்லிங்க யாத்திரைக்காக குளிர் சாதன வசதி கொண்ட சிறப்பு சுற்றுலா ரயிலை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் தனி யாத்திரை ரயில் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் யாத்திரைகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்தவகையில், நவ ஜோதிர்லிங்க தரிசனத்துக்காக ஜூலை 31-ஆம் தேதி குளிர்சாதன வசதிகொண்ட தனி யாத்திரை சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு, திருச்சி, சென்னை, எழும்பூர் வழியாக செல்கிறது. ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீசைலம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வர், மகாகாலேஸ்வர், குஜராத்தில் உள்ள சோம்நாத், மகாராஷ்டிராவில் உள்ள பீம்சங்கர், திரையம்பகேஸ்வர், குருஸ்ணேஸ்வர், அவுங்நாக்நாத், பார்லி வைத்யநாத் ஆகிய ஜோதிர்லிங்க ஸ்தலங்களுக்குச் சென்று, ஜோதி வடிவான இறைவனைத் தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

இந்த தனி முழு ஏசி யாத்திரை ரயிலில் டீலக்ஸ், ஸ்டேண்டர்டு, கம்பர்ட் என மூன்று விதமான வகுப்புகள் உள்ளன. மூன்று நபர் பகிர்மான அடிப்படையில் ஒரு நபருக்கு டீலக்ஸ் ரூ.60,900, கம்பர்ட் ரூ.42,150, ஸ்டேண்டர்டு ரூ.38,900 என்ற கட்டண விகிதத்திலும் மற்றும் ஒருவர், இருவர் பகிர்மான அடிப்படையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர்கள் மற்றும் பாதுகாவலர் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

இந்த யாத்திரை தொடர்பான விவரங்களுக்கு 98409 02919, 98409 02916, 90031 40681 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டும், www.irctctourism.com என்ற இணையதளத்தில் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

முதியோர் பாதுகாப்பு மசோதா!

By ஆசிரியர் | Published on : 04th July 2018 01:31 AM

 உலகிலேயே அகவை அறுபதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது இந்தியா. ஒருபுறம் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே மற்றொருபுறம் முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2050-இல் இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 20% முதியோர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல முதியோர்களுக்கான மருத்துவ வசதிகளையும் சமூகப் பாதுகாப்பையும் உருவாக்குவதற்கான முனைப்பில் நாம் ஈடுபட்டாக வேண்டும்.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு முதியோருக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்கிறது. அதேபோல மருத்துவமனைகள், முதியோர் சிறப்பு மருத்துவத் தேவைகள் என்று முதியோர் நலன் பேணலை மேலை நாடுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அதுபோன்ற திட்டமிட்ட முதியோர் நலன் பேணலுக்கான வளர்ச்சியில் இந்தியா இதுவரை முனைப்பும் காட்டவில்லை; முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.

இந்தியாவில், அறுபது வயதுக்கும் மேலான முதியோர்களில் ஏறத்தாழ 7% தனியாக வாழ்கிறார்கள். தங்கள் இணையருடன் வாழ்பவர்கள் 11%. குடும்பங்களுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 35%. இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் தங்களது பெற்றோர்களுக்காக கவலைப்பட போதுமான நேரமோ, அக்கறையோ இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வேதனை. அதிலும் குறிப்பாக, வேற்று இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பிள்ளைகள் வேலை தேடி இடம் பெயர்ந்து விடுவதால் மூத்த குடிமக்களில் பலரும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோடி அரசு மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக கொண்டுவர இருக்கும் சட்டத்திருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு பாகங்களில் முதியோர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு நாடுகள் அதைத் தடுக்கவும் முதியோர்களை புறக்கணிப்பது, கைவிடுவது போன்ற செயல்களை எதிர்கொள்ளவும் சட்டம் இயற்றி வருகின்றன. இந்தியாவில் 2007-இல் முந்தைய மன்மோகன் சிங் அரசு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தை இயற்றி இருந்தாலும், அதில் காணப்பட்ட பல்வேறு குறைகளால் அந்தச் சட்டம் நடைமுறையில் பலன் அளிக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது நரேந்திர மோடி அரசின் சமூக நீதி அமைச்சகம் மூத்த குடிமக்கள் மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர இருக்கிறது.
இந்தத் திருத்த மசோதா, வரும் மழைக்காலத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவிலுள்ள 20 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 32 சதவீத மூத்த குடிமக்கள் தங்களது பிள்ளைகளால் அவமரியாதைக்கும், கைவிடப்படலுக்கும் ஆளாகிறார்கள். 56 சதவீத நிகழ்வுகளில் மகன்களும், 23 சதவீத நிகழ்வுகளில் மருமகள்களும் அதற்குக் காரணமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. அவமரியாதைக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகியிருக்கும் மூத்த குடிமக்களில் 80%-கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப கெளரவத்திற்காக அதை வெளியில் தெரிவிக்காமல் சகித்துக்கொள்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத் திருத்த மசோதா 2018-இன்படி, இந்தியாவிலுள்ள மாவட்டங்களில் மட்டுமல்லாமல் அனைத்து வட்டங்களிலும் மூத்த குடிமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். போதுமான உணவு, இருப்பிடம், உடை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை தங்களது பிள்ளைகளிடமிருந்து கிடைக்காமல் போனால் மூத்த குடிமக்கள் அந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். அவர்களது குறைகளும் பிரச்னைகளும் ஆணையத்தால் 90 நாள்களில் தீர்வு காணப்பட வேண்டும்.

தங்களது சொந்த சேமிப்பிலும் வருமானத்திலும் பூர்விக சொத்திலும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாத மூத்த குடிமக்கள் இந்த ஆணையத்தை அணுகலாம். ஆணையம் அவர்களது பிள்ளைகள் அல்லது சட்டப்படியான வாரிசுகள் அதிகபட்சமாக ரூ.10,000 வரை வழங்க உத்தரவிட முடியும்.

தங்களது பெற்றோரை புறக்கணிக்கும் வாரிசுகளுக்கு மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை வழங்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. புதிய திருத்த மசோதா ஏற்கெனவே உள்ள சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. முதியோர்களின் பாதுகாப்புக்காகவும் தேவைக்காகவும் மருத்துவமனைகளையும், முதியோர் இல்லங்களையும் நிறுவ வழிகோலுகிறது. அதேபோல மூத்த குடிமக்களின் முழு அனுமதியில்லாமல் அவர்களின் பாதுகாப்பாளர்கள் அவர்களது சொத்துகளை விற்பது தடை செய்யப்படுகிறது. மூத்த குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை, தூரத்து உறவினர்களின் மீதும் இந்தத் திருத்த மசோதா சுமத்துகிறது.
இந்தத் திருத்த மசோதாவின்படி, மூத்த குடிமக்களுக்கான எல்லா வசதிகளும் கொண்ட பாதுகாப்பு மையங்களை நிறுவும் கடமையை மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த திருத்த மசோதா ஏற்படுத்துகிறது. அதேபோல தன்னார்வ அமைப்புகள், மூத்த குடிமக்களுக்கான மையங்களையும், முதியோர் இல்லங்களையும், மருத்துவ வசதி மையங்களையும் ஏற்படுத்துவதற்கு அரசு ஊக்கமும் உதவியும் தருவதை இந்த மசோதா உறுதிப்படுத்துகிறது.

இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்படுத்தப்பட்டால் மூத்த குடிமக்களின் கெளரவமும் நல்வாழ்வும் உறுதிப்படுத்தப்படும்.
திருமலையில் மீண்டும் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம்!

Published on : 06th July 2018 05:53 PM




திருப்பதி: திருமலையில் மீண்டும் இம்மாதம் மூத்த குடிமக்கள் மற்றும் 0-5 வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைகுழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவா்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. ஆனால் மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தா்களின் வருகை அதிகம் இருக்கும். அதனால் இந்த இரு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், மீண்டும் இம்மாதம் முதல் அந்த தரிசனத்தை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. அதன்படி வரும் 10ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒருநாளைக்கு 4 ஆயிரம் போ் என இருநாட்களில் 8 ஆயிரம் போ் இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கலாம்.

மேலும் அதேபோல் இம்மாதம் 11-ம் தேதி மற்றும் 25-ம் தேதி என இருநாட்களில் காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீட் தேர்வு முடிவில் அவசரம் ஏன் : சி.பி.எஸ்.இ.,க்கு கோர்ட் கேள்வி

Added : ஜூலை 07, 2018 01:59

மதுரை: 'நீட் தேர்வு குறித்து வழக்கு தாக்கலானதும் ஒருநாள் முன்கூட்டியே அவசரமாக முடிவை வெளியிட்டது ஏன்? பீஹாரில் 'நீட்' தேர்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது எப்படி' என உயர்நீதி மன்ற மதுரை கிளை நேற்று கேள்வி எழுப்பியது.மார்க்சிஸ்ட் எம்.பி.,-டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மே 6 ல் நீட் தேர்வு நடந்தது. 180 வினாக்கள் இடம்பெற்றன. 49 வினாக்களில் தமிழ் மொழி பெயர்ப்பில் தொழில்நுட்ப வார்த்தைகள் தவறாக இருந்தன. ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண் வீதம் 49 க்கு கருணை மதிப்பெண்ணாக 196 வழங்க வேண்டும். முடியாதபட்சத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் மனு செய்தார்.ஜூலை 2 ல் நீதிபதிகள்,'அறிவியல் பாடங்களுக்கு ஆங்கில வார்த்தைகளுக்கு இணையாக பொருள்கொள்ளும் வகையில் தமிழ் வார்த்தைகளை கண்டறிய சி.பி.எஸ்.இ.,முயற்சி மேற்கொண்டதா?,' என்பன உட்பட 4 கேள்விகளை சி.பி.எஸ்.இ.,க்கு எழுப்பினர்.நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு நேற்று விசாரித்தது.மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர்: மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பற்றி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ் வினா குழப்பமாக இருந்தால், அதற்கு எதிரே உள்ள ஆங்கில வினாவிற்கு விடையளிப்பதுதான் சரியானது என 'நீட்'டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே தெளிவுபடுத்தப்பட்டது. 'நீட்''கீ'பதில்கள் வெளியானபோது, எந்த ஒரு மாணவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.சி.பி.எஸ்.இ.,வழக்கறிஞர்: இந்திய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டப்படி வினாக்கள் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. மொழிமாற்றத்திற்கு மாநில அரசு நிபுணர்கள் பட்டியல் அளித்தது. அவர்கள் பரிந்துரைப்படி மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் யாரும் இந்நீதிமன்றத்தை நாடவில்லை. அனைத்து மாணவர்களும் சரியாக தேர்வு எழுதியுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் கூறியதாவது: மொழிமாற்றத்திற்கு மாநில அரசிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளீர்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய முடியாத மற்றும் அதற்கு சமமான வார்த்தைகள் உள்ளதா என்பதற்குரிய பட்டியலை மாநில அரசிடம் சி.பி.எஸ்.இ.,கோரியிருக்கலாமே? வினாக்கள் தெளிவின்றி இருப்பதற்கும், முழு தவறுக்கும் வேறுபாடு உள்ளது.இங்கு வழக்கு தாக்கலானதும் ஒருநாள் முன்கூட்டியே அவசரமாக 'நீட்' தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? வினாக்களில் குழப்பமின்றி, அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். பீஹாரில் 'நீட்' தேர்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது எப்படி. இங்கு ஏழை மாணவர்கள் பால் பாக்கெட், நாளிதழ் போடுதல் போன்ற பணிகளை செய்து சிரமப்பட்டு தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ., தகுந்த முடிவை எடுத்திருக்கலாம். பள்ளியில் படிக்காமல் தனிப்பயிற்சி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு எழுத வாய்ப்பு மறுப்பது சரியல்ல. இவ்விவகாரத்தை சி.பி.எஸ்.இ., ஜனநாயகப்பூர்வமாக கையாண்டிருக்கலாம். விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : ஜூலை 07, 2018 01:22

மதுரை: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தீர்ப்பை ஒத்திவைத்தது. மார்க்சிஸ்ட் எம்.பி., - டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, மே, 6 ல் நீட் தேர்வு நடந்தது. 180 வினாக்கள் இடம்பெற்றன; 49 வினாக்களில் தமிழ் மொழி பெயர்ப்பில் தொழில்நுட்ப வார்த்தைகள் தவறாக இருந்தன. ஒரு வினாவிற்கு, 4 மதிப்பெண் வீதம், 49 க்கு கருணை மதிப்பெண்ணாக, 196 வழங்க வேண்டும். முடியாதபட்சத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் மனு செய்தார். ஜூலை, 2 ல் நீதிபதிகள், 'அறிவியல் பாடங்களுக்கு ஆங்கில வார்த்தைகளுக்கு இணையாக பொருள்கொள்ளும் வகையில், தமிழ் வார்த்தைகளை கண்டறிய, சி.பி.எஸ்.இ.,முயற்சி மேற்கொண்டதா' என்பன உட்பட, நான்கு கேள்விகளை, சி.பி.எஸ்.இ.,க்கு எழுப்பினர்.நீதிபதிகள், சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு முன் இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர், தனது வாதத்தில் கூறியதாவது: மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பற்றி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க, அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ் வினா குழப்பமாக இருந்தால், அதற்கு எதிரே உள்ள ஆங்கில வினாவிற்கு விடையளிப்பதுதான் சரியானது என, நீட தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே தெளிவுபடுத்தப்பட்டது. நீட் தேர்வின், 'கீ' பதில்கள் வெளியானபோது, எந்த ஒரு மாணவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்., சி.பி.எஸ்.இ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்திய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டப்படி, வினாக்கள் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. மொழிமாற்றத்திற்கு, மாநில அரசு நிபுணர்கள் பட்டியல் அளித்தனர். அவர்கள் பரிந்துரைப்படி, மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் யாரும், இந்நீதிமன்றத்தை நாடவில்லை. அனைத்து மாணவர்களும் சரியாக தேர்வு எழுதியுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார். அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், கூறியதாவது: மொழிமாற்றத்திற்கு, மாநில அரசிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளீர்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய முடியாத மற்றும் அதற்கு சமமான வார்த்தைகள் உள்ளதா என்பதற்குரிய பட்டியலை, மாநில அரசிடம் சி.பி.எஸ்.இ.,கோரியிருக்கலாம். இங்கு வழக்கு தாக்கலானதும், ஒருநாள் முன்கூட்டியே, அவசரமாக, நீட் முடிவை வெளியிட்டது ஏன்? வினாக்களில் குழப்பமின்றி, அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்திருக்க வேண்டும். இவ்விவகாரத்தை சி.பி.எஸ்.இ., ஜனநாயகப் பூர்வமாக கையாண்டிருக்கலாம். விரைவில் தீர்ப்பு வழங்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
'பான்' கார்டு விண்ணப்பத்தில் தந்தை பெயர் கட்டாயமா?

Added : ஜூலை 07, 2018 01:02


புதுடில்லி : 'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில், தந்தையின் பெயரை எழுதாமல் விடுவதற்கான வாய்ப்பு அளிக்கும்படி, மத்திய நிதியமைச்சருக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், மேனகா, கடிதம் எழுதியுள்ளார்.

பான் கார்டுகள், அடையாள ஆவணமாகவும் பயன்படுகின்றன; இதில், எண் மற்றும் எழுத்துகளின் கலவையாக, 10 இலக்கங்கள் இடம் பெற்று இருக்கும். இது, வருமானவரித்துறையால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பான் கார்டுக்கான விண்ணப்பத்தில், தந்தையின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, பியுஷ் கோயலுக்கு, அமைச்சர் மேனகா எழுதியுள்ள கடித விபரம்: பல தனிப்பட்ட காரணங்களுக்காக, கணவரை பிரிந்து, ஏராளமான பெண்கள் தனியாக வாழ்கின்றனர். இவர்கள், தங்கள் முன்னாள் கணவரின் பெயரை, ஆவணங்களில் சேர்க்க விரும்புவதில்லை. எனவே, பான் கார்டுக்கான விண்ணப்பத்தில், தந்தையின் பெயரை எழுதாமல் விடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன், கணவரை பிரிந்து வாழும் பெண்கள், குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற, முன்னாள் கணவரின் கையெழுத்து மற்றும் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதியை எதிர்த்து, 2016ல், வெளியுறவுத்துறைக்கு, மேனகா கடிதம் எழுதியிருந்தார். அதை ஏற்று, பாஸ்போர்ட் விதிகளில், வெளியுறவு அமைச்சகம் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்திகள்

மகேந்திரா சிட்டியில் நிலநடுக்க பீதி பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் வெளியே ஓடினர்




சிங்கப்பெருமாள் கோவில் அருகே மகேந்திரா சிட்டியில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பதிவு: ஜூலை 07, 2018 04:15 AM

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டியில் 63 பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உள்ளன. அங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு நேற்று மாலை 5 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது போல ஒரு அதிர்வு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்து விட்டனர்.

வெளியே வந்த ஊழியர்கள்

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டபோது, “டமார் என்ற பயங்கர சத்ததத்துடன் ஒரு அதிர்வு ஏற்பட்டது. இதனால் நாங்கள் அனைவரும் எங்களது இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து விட்டோம். நிலநடுக்கம் ஏற்பட்டது போல அனைத்து பொருட்களும் ஒரே நேரத்தில் அதிர்ந்ததால் நாங்கள் பயந்து வெளியே வந்து விட்டோம்” என்று தெரிவித்தனர்.

போலீஸ் விளக்கம்

போலீஸ் தரப்பில், “மகேந்திரா சிட்டியை ஒட்டி காட்டுப்பகுதி உள்ளது. அதற்கு கிழக்கு திசையில் அதாவது மறைமலை நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட (அனுமந்தபுரம் காட்டுப்பகுதியில்) தமிழக போலீசாரின் துப்பாக்கி சூடு தளம் உள்ளது. அங்கு அடிக்கடி ராணுவ வீரர்கள் அதிக சக்திவாய்ந்த வெடி பொருட்களான வானத்தில் இரவு நேரத்தில் கலர் கலராக மிளிரும் பலுன்களை பறக்கவிட்டு அதனை குறி பார்த்து சுடுவதும், பீரங்கி குண்டுகளை வெடிக்க வைத்து பயிற்சி எடுப்பதும் வாடிக்கை. அதுபோல நேற்று மாலையும் ஒரு சக்திவாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று வெடித்ததால் இந்த அதிர்வு ஏற்பட்டது” என்று கூறினர்.

இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட பாரேரி கிராமத்தில் ஒரு சில வீடுகளில் இதுபோன்ற அதிர்வுகள் ஏற்பட்டதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

மது அருந்தியதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவிய விவகாரம்: பேரூராட்சி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம்





மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேரத்தில் ஊழியர்கள் மது அருந்துவதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவியதை தொடர்ந்து 3 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூலை 07, 2018 04:00 AM மாற்றம்: ஜூலை 07, 2018 04:35 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் செயல் அலுவலர் அறையில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 5 பேர் மது அருந்தினர். இதை அப்பகுதி மக்கள் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மது அருந்தியது உறுதியானது.

பணி இடைநீக்கம்

இது குறித்து பேரூராட்சி உதவி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், அலுவலக அறையில் மது அருந்தியதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவிய விவகாரத்தில் தொடர்புடைய பேரூராட்சி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய தற்காலிக பணியாளர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றனர்.
மாவட்ட செய்திகள்

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடும் சென்னை



சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 07, 2018 05:15 AM

சென்னை,

மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த நாடும், மாநிலமும் வளர்ச்சியடைந்த பாதையை நோக்கி செல்கின்றது என்று அர்த்தம். உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை என்றால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கவேண்டியது என்பது தவிர்க்கமுடியாதது. சென்னை நகரத்தில் பெருகிவரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை கட்டமைப்புகள் இல்லை என்பது கசப்பான உண்மை.

அரசு போக்குவரத்துத்துறை பதிவேடுகளின்படி கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 ஆகும். இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரத்து 210 ஆகும். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாகனங்களில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 82 சதவீதம் ஆகும்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தலைநகர் சென்னையில் பிரதான சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் நிரம்பி வழிவதை காணமுடிகிறது. நடைபாதைகளே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் ஒரு பக்கம். இதனால் ‘நடைபாதை நடப்பதற்கே’ என்ற நிலை மாறி ‘நடைபாதை ஆக்கிரமிப்பதற்கே’ என்று ஆகிவிட்டது. இதுதவிர ‘நோ பார்க்கிங்’ என்று போக்குவரத்து போலீசார் வரையறுத்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற காரணங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆமை வேகத்திலேயே வாகனங்கள் முன்னேறி செல்ல முடிகிறது. சரியான இடத்துக்கு, உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலிலேயே வாகனங் களை இயக்கும் நிலை உள்ளது.

பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எழும்பூர், பிராட்வே, புரசைவாக்கம், சென்னை சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் பசுமைவழிச்சாலை வழியாகவே வாகனங்களில் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அந்த சாலைகளை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் காலை நேரத்தில் பசுமை வழிச்சாலை சந்திப்பில் இருந்து அடையாறு பாலம் வரையிலும் வாகனங்கள் வரிசையாக நின்று செல்லவேண்டிய நிலை இருக்கிறது. பசுமை வழிச்சாலை சந்திப்பை கடந்து செல்வதற்கே சராசரியாக வாகன ஓட்டிகளுக்கு 10 முதல் 15 நிமிடம் வரையிலும் எடுத்துக் கொள்கிறது. இதனால் அலுவலகங்களுக்கு ஊழியர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகளும் கால தாமதமாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

சிக்னல் கடந்த சில நாட்களாகவே பழுதாகி கிடப்பதால், பசுமைவழிச்சாலை சந்திப்பில் சாலையை கடந்து செல்வதற்கு பொதுமக்கள், கல்லூரி மாணவிகள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் இடையூறு இல்லாமல் சாலையை கடந்து செல்வதற்கு ஆகாய நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் காலை மற்றும் மாலை நேரத்தில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்பதை தினசரி காணமுடியும். அந்த பகுதியில் உள்ள சிக்னலும், கண்காணிப்பு கேமராவும் பழுதாகி பல நாட்கள் ஆகிறது. ஆனால் அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

சிக்னல் பழுதாகி கிடப்பதால், மிக முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் வரும் நேரங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்திவருகின்றனர். மற்ற நேரங்களில் ஒழுங்குபடுத்தாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரும், போக்குவரத்து நெரிசல் மட்டும் தீர்ந்தபாடு இல்லை. இதேபோல நகரின் பல்வேறு இடங்களிலும் நெரிசல் நிலவி வருகிறது.

போக்குவரத்து நெரிசலால் சென்னை நகரமே திக்குமுக்காடி வருகிறது. சென்னை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை காட்டிலும் சுரங்கபாதைகள், மேம்பாலங்கள் கட்டுவதற்காகவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகவும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து உள் கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல அரசு பஸ் சேவைகள், மெட்ரோ ரெயில் மற்றும் மின்சார ரெயில் சேவை களை பல்வேறு அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தி, கட்டணத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு செய்து, பொதுத்துறை போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிப்பு செய்வதன் மூலம் தனிநபர் பயன்படுத்தும் வாகனங்களை கணிசமாக குறைக்கலாம் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 16-ந் தேதி நடக்கிறது




திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு 16-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

பதிவு: ஜூலை 07, 2018 05:00 AM

திருப்பதி,

அனைத்து கோவில்களிலும் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

அதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி ஆகஸ்டு 11-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது.

இதனையொட்டி ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அன்றைய நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனமும் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் 16-ந் தேதி காலை 10.16 மணியளவில் துலா லக்னத்தில் மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது. இந்த தகவலை தேவஸ்தான துணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமப்படுவதை தவிர்க்க அவர்கள் நேரடியாக அனுப்பப்பட்டு வந்தனர். பிரம்மோற்சவ நாட்களில் அவர்கள் வைகுண்டம் கியூகாம்ப்ளக்ஸ் அருகில் தனி கம்பார்ட்மெண்ட் அமைக்கப்பட்டு அதன் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Friday, July 6, 2018

Vehicles’ daytime lamps must not affect vision of other motorists: Madras HC 

DECCAN CHRONICLE.


Published Jul 6, 2018, 6:07 am IST


This affects the motorists of on-coming vehicles and virtually blinding their vision. 




Chennai: Madras high court has observed that daytime running lamps in vehicles, which was introduced recently, should not affect vision of motorists of on-coming vehicles.

When a PIL from K.K. Rajendran of Korattur, came up for hearing before Justices T.S. Sivagnanam and V. Bhavani Subbaroyan on Thursday, the bench observed that the modern vehicles are fitted with very powerful headlights and the mandatory black dot, which is otherwise known as ‘Bull’s Eye’, were not affixed. This affects the motorists of on-coming vehicles and virtually blinding their vision.

The bench said that it appears that there is a proposal to make it mandatory for all two-wheelers to have a ‘day light’, which automatically switches on as soon as the vehicle is started and it cannot be switched off. However, such ‘day light’ has certain prescriptions as per International Standards and it should not affect the on-coming traffic.

The bench said, “what we found recently was several two-wheelers have LED lights and those lights are left burning during the day time, which is a traffic hazard. This aspect has to be gone into by the authorities concerned, since steps are always taken to prevent motorists from using multi-colour lights in the vehicles.”

Later, the bench posted the matter for further hearing to July 27 and file report.

In the petition Rajendran sought for a direction to the Transport and police authorities to strictly enforce the rules of wearing helmets both by the rider and pillion riders of two-wheelers and seat-belts by the drivers and front seat occupiers of four-wheelers.

Rajendran said Section 129 of Motor Vehicle Act 1988 mandates every person driving two wheeler shall wear protective helmet. Further rule 138 (3) of Motor Vehicle rule 1989 requires seat-belts by the drivers and front seat occupiers of four-wheelers in the vehicle shall wear seat belts while the vehicle in motion.

Though enforcement agencies taking steps against the violators, the authorities had not implemented the rules effectively. On March 29, 2018, he sent representations to the authorities to enforce the rules strictly and enforce both the two-wheeler rider and pillion rider to wear helmet. He also sought to make drivers and front seat occupiers of four-wheelers in the vehicle to wear seat belts.

I-T department knocks civil supplies’ door as ICDS supplier probed

I-T department sources said the probe was related to evasion of tax by floating a large number of shell companies.
 
Published: 06th July 2018 04:55 AM | Last Updated: 06th July 2018 04:55 AM By Express News Service

CHENNAI: Tamil Nadu Civil Supplies Corporation Managing Director M Sudha Devi was quizzed by the Income Tax department on Thursday even as I-T sleuths conducted simultaneous searches on the premises of Tiruchengode-based Christy Friedgrams Industry (CFI), a food processing company closely associated with implementation of the Integrated Child Development Services (ICDS) scheme.

I-T department sources said the probe was related to evasion of tax by floating a large number of shell companies. The company supplies nutritious food to 563 anganwadis in the State. According to its website, it started operations a few years after the first ICDS scheme was announced in TN in 1982.A top income tax official said the Managing Director of the State civil supplies corporation was quizzed on any links to the tax evasion. “There were no raids at her premises in All India Service quarters located at Nerkundram. It was only investigation,” said the official.

Besides 53 premises of CFI, officials are also conducting searches at 17 premises belonging to Agni Estates as it was found that the real estate firm had common transactions with CFI and had floated shell companies.Overall 70 premises across the State belonging to CFI and Agni Estates were raided, of which 40 are located in Chennai. Raids were also conducted in Tiruchengode in Namakkal district, Coimbatore and Nammakal.

CHRISTY Friedgrams Industry, the Tiruchengode-based company, had been under the I-T scanner since 2016.Officials said that searches were also being done in three places in Karnataka, which include Nelamangala, Davangere and Gulbarga. The firm had courted controversy in 2012 over an agreement with Karnataka’s Women and Child department which was later cancelled for supply of substandard food to anganwadis under the ICDS scheme.
Tamil Nadu: Pandemonium on Day V of medical counselling

OC, BC seats fill up by noon; BDS seats in self-financing colleges left.
 
Published: 06th July 2018 05:25 AM | Last Updated: 06th July 2018 05:25 AM |


By Express News Service

CHENNAI : The announcement of the selection committee of the Directorate of Medical Education on Thursday that there were no vacancies in OC and BC categories in government medical colleges, self-financing colleges and Raja Muthiah Medical College and also government dental colleges has caused confusion among students and parents waiting outside the venue where counselling for MBBS and BDS courses are being held.

The seats in OC and BC category were filled up and only BDS seats in self-financing colleges were there around noon. The selection committee officials asked the candidates who were not willing to join BDS in self-financing colleges to leave. Over 1,500 candidates were called for the counselling. The candidates and parents who were disappointed after long hours of waiting entered into an argument. Later the officials clarified and asked them to get wait-listed and leave.

CLEAN CHIT TO TN 2ND RANK HOLDER


The selection committee on Thursday called R Raj Chendur Abhishek, second rank candidate in the State rank list, allegedly after the committee heard that the student had applied for medical seat in Andhra Pradesh also. Raj Chendur, native of Dharmapuri in TN, had studied class XI and XII in Andhra Pradesh. “We called him for second verification as we received news that the student has applied in Andhra Pradesh also. But, after verification, it was turned to be false,” said Dr G Selvarajan, secretary, selection committee. Raj Chendur secured 656 marks in NEET and got seat in Madras Medical College.

‘all cmc seats come under managenment quota’
The selection committee officials said that all 100 seats in Christian Medical College, Vellore would be filled under management quota. The college did not surrender any seats to the government. “They will take part in the first phase counselling itself. The first phase of counselling will end on Saturday,” said a senior official of the selection committee.
Diwali, online bookings make Pandiyan Express tickets dearer

The sleeper class waiting-list of the Pandiyan Express (Chennai-Madurai) touched 1,058, while the waiting list of the Cheran Express (Chennai-Coimbatore) reached 639.

 
Published: 06th July 2018 04:46 AM | Last Updated: 06th July 


2018 04:46 AM |
  By Express News Service

CHENNAI: Pandiyan Express, a flagship train of Madurai, has become one of the much sought-after trains for the Diwali festival this year, with the waiting list touching 1,058 for sleeper class reservation.


On Thursday, as soon as advance reservation commenced around 8 am for travelling for Deepavali festival on November 2, tickets sold out in less than five minutes. Train ticket demand for the Chennai-Madurai, Chennai-Tiruchy, Chennai-Coimbatore, Chennai-Tirupur and Chennai-Erode sections remained high.

The sleeper class waiting-list of the Pandiyan Express (Chennai-Madurai) touched 1,058, while the waiting list of the Cheran Express (Chennai-Coimbatore) reached 639. Similarly, the Chennai-Coimbatore Nilagiri Express, Chennai-Erode Yercaud Express, Chennai-Tiruchy Rockfort Express also remained most preferred trains among passengers.

The sleeper berth waiting lists for the Nilgiri Express, Yercaud Express and Rockfort Express closed at 365, 487 and 276 respectively.Each train has waiting list limits for sleeper class somewhere between 150 and 250. Once waiting lists exceeds, ticket bookings will automatically get blocked. However, due to festival demands, the IRCTC has increased the waiting list limit for many trains.


The unforeseen demand for the Pandiyan Express and other trains is attributed to upgraded IRCTC website and the provisions to forecast confirmation probability.

“The upgraded website has reduced the ticket booking time. It also has a provision to forecast the probability of getting confirmed tickets. For upto 200 and 250 sleeper waiting lists, the IRCTC predicted 45 to 60 per cent chances for RAC ticket. As for the Pandiyan Express, for 700 waiting lists the portal predicted confirmation chances at 40 per cent,” said S Balamurana, a travel agent in Chennai.Earlier, many passengers who booked their tickets through counters after spending several hours were disappointed as many they got wait-listed tickets.

கல்வி வளாகத்தில் அத்துமீறினால்... - உயர்கல்வித் துறை கொண்டுவரும் கடுமையான அரசாணை

ஞா. சக்திவேல் முருகன்

உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் அத்துமீறுபவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுத்திருக்கிறது உயர்கல்வித் துறை.




உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் அத்துமீறுபவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில், புதிய விதிமுறைகளை வகுத்திருக்கிறது உயர்கல்வித் துறை.

கடந்த ஏப்ரல் மாதத்தில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, இளநிலைப் பட்டப்படிப்பு மாணவிகளிடம் மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்காகப் பரிந்துபேசிய விவகாரம், உயர்கல்வி நிறுவனங்களை அதிரவைத்தது. இதையடுத்து, கல்வித்துறையில் இருப்பவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்கள், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் அல்லது இதர பணியாளர்களிடம் அத்துமீறினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அத்துமீறுபவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணையை, தமிழக உயர்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், `கல்வி வளாகங்களில் எந்தவிதமான பயமும் இல்லாமல் செயல்படவேண்டியது அவசியம். கல்வி வளாகத்தில் மற்றவர்களுக்குரிய மதிப்பும் மரியாதையும் வழங்க வேண்டும். எந்த வகையான அத்துமீறலும் இருக்கக் கூடாது. கல்வி வளாகங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவவும், பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு சட்டப்படியான தண்டனை வழங்கவும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய வரைமுறையை தமிழகப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தன்னாட்சிக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், பயிற்சி மையங்கள், படிப்பு மையங்கள், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும்.

அத்துமீறல்கள் என்னென்ன?

ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தவறான நடத்தைகள் அனைத்தையுமே அத்துமீறல்களாகவே எடுத்துக்கொள்ளப்படும். தரம் தாழ்த்தல், சிறுமைப்படுத்தல், அவமானப்படுத்தல், ஒருவரைத் தாக்கும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்தல் போன்றவையும் அத்துமீறல்களாகவே கருதப்படும். இவை தவிர மிரட்டல், வெளிப்படையான மற்றும் மறைமுக அச்சுறுத்தல்கள், உடல்ரீதியான துஷ்பிரயோகம், கடிதம், மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆட்சேபிக்கக்கூடிய வகையில் கருத்துகளைப் பரப்புதல் போன்ற செயல்களும் கண்டிக்கத்தவை.
 

உயர் அதிகாரிகளுக்கு அல்லது உயர் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களை அனுப்பத் தாமதப்படுத்துவது, அனுப்ப மறுப்பது, பணம் அல்லது இதர வகையான அன்பளிப்புகளை எதிர்பார்ப்பது, ஆராய்ச்சி (எம்.ஃபில்/பி.ஹெச்டி) படிப்புக்கு மாணவர்கள் பதிவுசெய்யும்போது ஆராய்ச்சி வழிகாட்டலுக்கும், தேர்வு மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை மதிப்பிடுதலுக்கும் பரிசுகள் மற்றும் வெகுமதிகளைப் பெறுவது, வாய்மொழித் தேர்வுக்காக வருபவருக்கு செலவுசெய்யச் சொல்வது, பயணச் செலவுகளை ஏற்றுக்கொள்ளச் சொல்வது, கல்விசாராத பணிகளைச் செய்யச்சொல்வது, பணிநேரம் அல்லாத சமயத்தில் வேலைசெய்யச் சொல்வது, விருப்பமில்லாமல் வேலைசெய்யச் சொல்வது, மாணவர்கள், இதர ஆசிரியர்கள், குறிப்பாகப் பெண் ஆசிரியர்கள், மாணவிகளைக் கட்டாயத்தின்பேரில் களப்பணி மற்றும் இதர விழாவுக்கு அழைத்துச்செல்வது போன்றவையுமே அத்துமீறல்கள்தான்.

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், திட்டப்பணியாளர்கள், பணியாளர்களுக்கு முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், ஒருவருக்கு சாதகமான வகையில் நடந்துகொள்ளுதலும், எதிர்காலத்தில் வளர்ச்சிக்குத் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதும், கௌரவத்தைப் பாதிக்கும் வகையில் பாலினம், சாதி போன்றவற்றைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரியதே!

எப்படி புகார் தெரிவிப்பது?

பாதிக்கப்படுபவர்கள், எழுத்துவடிவில் குற்றச்சாட்டைப் பதிவுசெய்ய வேண்டும். குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தையும் இணைக்க வேண்டும். இரண்டு மாதத்துக்குள் குற்றச்சாட்டைப் பதிவுசெய்ய வேண்டும். குற்றச்சாட்டைப் பதிவுசெய்தவுடன், அதற்கான ஒப்புதலை இரண்டு வாரத்துக்குள் சம்பந்தப்பட்டவரிடம் வழங்க வேண்டும். விசாரணையை ரகசியமாக நடத்தி, விசாரணை அறிக்கையைச் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் அல்லது இயக்குநர் அல்லது கல்லூரி முதல்வரிடம் வழங்க வேண்டும். விசாரணை அறிக்கையின்மீது இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குள், குற்றச்சாட்டின்மீது நடவடிக்கை எடுத்து முடித்திருக்க வேண்டும்' என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாரிடம் தெரிவிப்பது?

`அத்துமீறல்களை விசாரிக்க, ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழுவில், மூத்த பேராசிரியர் ஒருவர் குழுத் தலைவராகவும், மூத்த பேராசிரியர், இணை அல்லது துணை பேராசிரியர் ஒருவர், பேராசிரியை ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களில் ஒருவர் இந்தக் குழுவில் கண்காணிப்பாளராகச் செயல்பட வேண்டும்.

என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

குற்றச்சாட்டின்மீது நடவடிக்கையாக, அத்துமீறியவர்களை எச்சரிக்கைசெய்யவும், எம்.ஃபில் அல்லது பி.ஹெச்டி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை மற்ற பேராசிரியரிடம் வழிகாட்டுதல் பொறுப்பை ஒப்படைக்கவும், பேராசிரியரிடமிருந்து வழிகாட்டுதல் பொறுப்பைத் திரும்பப்பெறவும், சம்பள உயர்வை நிறுத்தம்செய்யவும், தலைமைப் பொறுப்பில் இருந்தால் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கவும், அத்துமீறலின் அளவைப் பொறுத்து வேலையிலிருந்து வெளியேற்றவும், தற்காலிகமாக நீக்கவும் பரிந்துரைசெய்யலாம். ஒருவேளை முகாந்திரம் இல்லாமல் குற்றம் சாட்டினால், அவர்கள்மீது விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறையின் அரசாணை ஏட்டில் மட்டும் இருக்காமல், அனைத்து வளாகங்களிலும் செயல்படுத்திட வேண்டும்!
தினமும் நெல்லிக்காய்ச் சாறு குடிக்கலாமா... மருத்துவம் சொல்வது என்ன? #AmlaJuiceAlert


மு.பிரசன்ன வெங்கடேஷ்


ஜெ.நிவேதா

தினமும் நெல்லிக்காய் சாறு குடிப்பது நல்லதா?




`ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்' என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த `ஒரு நாளைக்கு ஒன்று' பழக்கம் நெல்லிக்காய்க்கும் பொருந்தும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல் நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்'... ஆனால், எந்த உணவாக, காயாக, பழமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மீறி உட்கொள்ளக் கூடாது. `தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது நல்லதல்ல' என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளியிடம் கேட்டோம்...



``அளவுக்கு மீறி எதையுமே சாப்பிடக் கூடாது. நெல்லிக்காய்ச் சாறும் அப்படித்தான். இப்படிக் குறிப்பிட்டு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. வெறும் நெல்லிக்காய் என்றால், ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவோம். ஆனால், அதை ஜூஸாக்க வேண்டுமென்றால், நான்கு முதல் ஐந்து நெல்லிக்காய்களாவது தேவைப்படும். நான்கு, ஐந்து நெல்லிக்காயை ஒரே நேரத்தில் உட்கொள்வது, அதையும் தினமும் ஜூஸாக அருந்துவது பிரச்னைகளை ஏற்படுத்துவதில் ஆச்சர்யமில்லை. அப்படி என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? பார்க்கலாம்...

* நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்தது. பொதுவாகவே, வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், அதிகளவு உட்கொள்ளும்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். அசிடிட்டி பிரச்னை இருப்பவர்களுக்கு, இது மேலும் தொந்தரவை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்ப்பதே நல்லது.
  * இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும். என்றாலும், அளவுக்கதிகமாக உட்கொண்டால் மலம் கடினமாகி பிரச்னையை ஏற்படும். அதிலும், தண்ணீரைக் குறைவாகக் குடிப்பவர்களுக்குப் பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

* சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களும் நெல்லிக்காயை ஊறுகாயாகச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அதில் பதப்படுத்துவதற்கான உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த உப்பிலிருக்கும் சோடியம், பாதிப்பைத் தீவிரப்படுத்தும்.

* இதில் டையூரிடிக் (Diuretic) தன்மை இருக்கிறது. இது, தோலிலுள்ள ஈரத் தன்மையை வற்றச் செய்யும் தன்மைகொண்டது. அதிகளவு நெல்லிக்காயை ஜூஸாக அருந்தினால், உடல் வறட்சி ஏற்படலாம். சிலருக்கு இதனால் உடல் எடையும் குறையலாம்.



* நெல்லிக்கு உடல் சூட்டைக் குறைத்து, குளிர்ச்சி ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. இதை, பழம் அல்லது சாறு என எப்படி உட்கொண்டாலும் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்கள் தீவிரமடையும்.

* நெல்லிகாய் அதிகமாகச் சாப்பிடுபவர்கள், அதிகளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்துவது நல்லது. இல்லையென்றால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வு, முதிர்ச்சியான தோற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

* ஏதோ ஒரு நோய் பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருபவர்கள், நெல்லிக்காய் சாப்பிட்டால் அது எதிர்வினையை ஏற்படுத்தும். குறிப்பாக, இதயப் பிரச்னை இருப்பவர்கள், நெல்லிக்காயைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.



* நெல்லிக்காய், லேசான தலை சுற்றலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. எனினும், உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தாது. தொடர்ச்சியாக தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்துபவர்களுக்குத் தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம். எப்போதாவது நெல்லிக்காய் சாப்பிட்டு அதனால் தலைசுற்றல் ஏற்பட்டால் பிரச்னையில்லை. ஆனால், தினமும் அருந்தி, இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெற்று பிரச்னையை முதல்நிலையிலேயே சரிசெய்துவிட வேண்டும்.

ஆக, நெல்லிக்காயின் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென்றாலும், தொடர்ச்சியாக அதை அதிகமாகவோ, சாறாகவோ உட்கொள்ளக் கூடாது. எனவே, தொடர்ச்சியாக தினமும் நெல்லிச்சாறு அருந்துவதைத் தவிர்ப்பதே சிறந்தது’’ என்கிறார் அனிதா பாலமுரளி.
அதிக வேகத்தில் சென்றதால் அபராதம் கட்டிய கேரள ஆளுநர் சதாசிவம்...!


சி.வெற்றிவேல்

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் அதிக வேகத்தில் சென்றதால் கேரள ஆளுநர் சதாசிவம் அபராதம் கட்டியிருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு கேரளா கவர்னர் மாளிகைக்கு அருகில் இருக்கும் கவுடியார் சாலையில் கேரளா மாநில கவர்னர் சதாசிவத்தின் கார் சுமார் 80 கி.மீ வேகத்தில் சென்றது. அந்த சாலையின் உச்ச பட்ச வாகன வேகம் 55. கி.மீ மட்டுமே. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் கூடுதலான வேகத்தில் சென்றதால் ஆளுநரின் காருக்கு அங்கிருந்த போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அபராதம் விதிக்கப்பட்ட போது ஆளுநர் சதாசிவம் காரில் பயணிக்கவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.



இதுகுறித்து ஆளுநருக்குத் தெரியவந்த போது அபராதத் தொகையான 400 ரூபாயைச் செலுத்திவிட்டு ரசீது பெற்றுக்கொள்ளும்படி ஓட்டுநருக்கு ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆளுநரின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட தகவல் போக்குவரத்துத் துறையினர் மூலமாகவே கசிந்திருக்கிறது. சட்ட விதிகள் அனைவருக்கும் பொதுவானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துபடியாக அமைந்திருக்கிறது. ஆளுநரின் கார் என்றபோதும் தயக்கமில்லாமல் அபராதம் விதித்த போக்குவரத்து ஊழியருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

DGHS NOTICE 5.7.2018


MKU winds up course that was started with much fanfare 

Pon Vasanth B.A 

 
MADURAI, July 06, 2018 00:00 IST



Students of five-year M. Tech. anxious about their future



The five-year integrated M. Tech course which was being offered by the Centre for Film and Electronic Media Studies (CFEMS) in Madurai Kamaraj University is being wound up causing anxiety to students who are presently studying this course.

The M. Tech course, which had no precedence in the country was launched in 2012 under the initiative of the then Vice-Chancellor Kalyani Mathivanan.

More than Rs. ten crore worth equipment were procured. A preview theatre was built and Academy-award winning sound engineer Resul Pookutty came to inaugurate the recording studios.

After six years, two batches of students are yet to receive their degrees. Now the university has decided to stop offering the M. Tech. in Film and Electronic Studies course from this academic year, causing anxiety to the roughly 70 students presently studying in second to fifth year.

The university has decided to disband CFEMS and instead offer a two-year M. Sc. course in Film and Electronic Media through its School of Media Studies. However, admission to this course is unlikely to begin this year owing to delay in approvals, sources said.

Importantly, a proposal has been made to rent the expensive production and post-production infrastructure available at CFEMS to the film industry to generate revenue for the university, which has made the students even more agitated.

Speaking to The Hindu , a final year student said that it felt as if the university had abandoned them.

“It is an expensive course, costing us more than Rs. 50,000 a year. With the MKU itself in a confusion over whether the M. Tech. programme has proper recognition, we are worried about our future,” he said.

A fourth year student pointed out that the course was mentioned in the prospectus as a B. Tech. plus M. Tech programme.

“We were told that we can opt to leave the course after three years with just a B. Tech. degree. However, after joining, we realised that it was not the case,” he said.

Another final year student, showing pictures taken with his mobile phone, said that some expensive equipment, costing several lakhs, were infested with termites. “The equipment available here are suitable for professionally shooting a movie. But they are not maintained properly,” he said.

A senior faculty member said that by correcting the issues related to recognition of the M. Tech. programme and with state-of-the-art facilities available here, the course could be a unique opportunity for aspiring students from southern districts. “Some short films made by students have won awards at national level competitions,” he said. “If they are offering it as a two-year M. Sc programme, it will be more theory-oriented. Moreover, it will have a lot of similarities with the M. A and M. Sc programmes already offered by School of Media Studies,” he added.

When contacted, K. Karnamaharajan, Head of CFEMS, denied that there was any problem with recognition of the M. Tech course. “Two batches of students have not received their degrees because they did not apply for convocation. The students presently doing the course need not worry,” he said.

He said that the decision to stop the course was taken by MKU administration to bring uniformity in the courses it offered.

Denying that there was a proposal to ‘rent’ the available infrastructure, he said that it would instead be a ‘collaboration’ with the film industry to provide better exposure to students.
Fisheries varsity V-C contests complaint 

Special Correspondent 

 
CHENNAI, July 06, 2018 00:00 IST 


  S. Felix, Vice-Chancellor of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, has filed a writ petition in the Madras High Court challenging a government order issued by the Fisheries Department on May 9 appointing an enquiry officer to probe a “sexual harassment” complaint lodged against him by a faculty of the university.

Justice Satrughana Pujahari issued notice to the State government on the petition returnable by four weeks.

In his affidavit, the Vice-Chancellor claimed that the complaint lodged by the faculty concerned did not make out an allegation of sexual harassment and hence the appointment of the inquiry officer was completely unwarranted.

‘False complaint’

Stating that he was a stickler for work, who believed in making his subordinates perform their duties without any lapses, he said that a false complaint had been lodged against him at the instance of a former Registrar, against whom he had initiated action on the charge of having caused financial loss to the university.

He alleged that the government had refused to furnish a copy of the complaint lodged against him and it was only the inquiry officer Justice K. Venkataraman, a retired judge of the High Court, who was kind enough to provide him a copy.

Nevertheless, the government had erroneously ordered an inquiry under the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act of 2013, he said and urged the court to quash the G.O.

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...