Saturday, February 28, 2015

ஜிமெயில், யாஹூ மெயிலுக்கு தடை: மத்திய அரசு அதிரடி!

Vikatan.com



புதுடெல்லி: மத்திய அரசு அலுவலகங்களில் கூகுளின் ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் வசதியை பயன்படுத்த தடைவிதிக்கப் பட்டுள்ளது.

தடையை மீறி பயன்படுத்தினால் பயன்பாட்டு தகவல்களை ரெக்கவர் செய்து ஈ-மெயில்களை அளிக்கவும் செய்ய மத்திய அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

கடந்த 18 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.

அதாவது, இந்திய அரசுக்கான ஈ-மெயில் பாலிசியும், தகவல் தொழில்நுட்ப வசதியை இந்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.


அதில் கூகுள், யாஹூ-வை பயன்படுத்தக்கூடாது என்றும், அரசு அலுவலங்களில் அதிகாரபூர்வ பணிகளுக்கு இந்திய அரசு பரிந்துரைத்துள்ள NIC மின்னஞ்சல் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். வெளிநாட்டு சர்வர்களான கூகுள், யாஹூவை பயன்படுத்துவதால் அமெரிக்க உளவு நிறுவனங்கள் ரகசிய தகவல்களை திருடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lawyers can't be punished for their opinion, says HC

Feb 28 2015 : The Times of India (Chennai)
Lawyers can't be punished for their opinion, says HC
Chennai
TIMES NEWS NETWORK


Legal opinion given by lawyers are advisory in nature, and hence a lawyer cannot be implicated in a case for the opinion, unless he has a role in the offence, the Madras high court has said, coming to the rescue of a lawyer cited as co-accused in a property case.

Justice P Devadas, granting anticipatory bail to Mohamed Anees on Friday , said: “A legal professional cannot be implicated for his honest and bona fide discharge of professional duty . But there is a rider. If he has participated in the commission of an offence, such as conspiracy , common intention and abetment, then he will lose the status of a lawyer, and will have another status ­ of accused. This principle applies to panel advocates, bank lawyers, chamber lawyers and court lawyers.“

The matter relates to a complaint filed by Ramasamy with an anti-land grabbing cell in Coimbatore, alleging that Anees had committed fraud and impersonation while dealing with property documents.

R Sankarasubbu, counsel for Anees, however, pointed out that the advocate had merely did documentation work. He examined the documents and discharged his professional duty. He could not be implicated in the case as an accused, Sankarasubbu said.

Concurring with the submissions, Justice Devadas said: “ Lawyers are acting as legal advisors. Their opinion is not binding, as it is advisory in nature. The client may accept it, may not accept it or he may go for further opinion to another lawyer.” The judge said, “there is no convincing incriminating material that he had active participation in the commission of the crime with requisite mens rea (criminal intent) along with the other accused persons.”

Couple looted in train of items worth Rs 15 lakh

Agra: A couple travelling on a Tamil Nadu bound train, on the Farah-Keetham route, were looted of valuables worth Rs 15 lakh at knife point by four masked assailants near the Mathura junction on Friday.

The incident took place in a first AC coach of the Tamil Nadu express, which had started from New Delhi.

According to the government railway police, Raj Kumar Garg (57) and his wife Saroj Garg (55) received several blows on their faces and heads while resisting the assailants.

The complaint lodged with the GRP said, "At around 1 am, four muscled men suddenly barged into our cabin and asked for our jewellery and cash. When we resisted, they attacked us with the butt of knife on our head and face, which led to profuse bleeding."

At the time of the incident, two armed railway protection force (RPF) personnel were on patrol in the moving train, but no security guard was present in the AC coach. Even the coach attendant was found missing during the incident which lasted for around 10 mins. After the incident, the assailants pull the chain of the train and ran into the surrounding jungle.

The victims were rushed to SN Medical College when the train reached Agra cantt station at around 2 am. The couple received several stitches. They later left for New Delhi in a bus.

According to sources in RPF, the assailants were probably tracking the couple ever since they boarded the train in New Delhi, as they quickly executed the act and did not leave any clues behind. They didn't attack two other girls and an old couple present in the same cabin.

"It might be possible that the coach attendant is also involved in the matter as he was missing at the time of the incident. He did not even inform the control room; it was the passengers who told RPF personnel about the incident," said the RPF personnel on the condition of anonymity.

Speaking on the incident, Sunil Sharma, divisional railway manager of Agra division,1 said, "We have set up a panel to enquire about the incident as the coach attendant did not respond in time. A security review would be done and the number of security personnel will also be increased in the trains, to provide more security to travelers."

In the last one year, four incidents of criminal activities in trains have been reported on the Farah Keetham route, including the case of a railway board official, Rakesh Srivastav, who along with his wife was looted of valuables.

SRI RAMACHANDRA UNIVERSITY 21ST CONVOCATION


மெட்ராஸ்... நம்ம மெட்ராஸ்!

சென்னைவாசிகள் சென்னை மாநகரத்தின் மீது வைத்திருக்கும் காதலை பேஸ்புக்கில் சென்னைக்காக ஆரம்பத்திருக்கும் பக்கங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். சென்னையின் பல வண்ண முகங்களை இந்தப் பக்கங்கள் பதிவுசெய்கின்றன. அப்படி ஒரு பக்கம்தான் ஐ அம் மெட்ராஸ் (I am Madras). இந்தப் பக்கத்தை நடத்துபவர் ரவுனக் என்னும் 24 வயது இளைஞர். “ஹுயூமன்ஸ் ஆஃப் நியூ யார்க்’ (Humans of New York) என்னும் பேஸ்புக் பக்கத்தின் தாக்கத்தால்தான் ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தை உருவாக்கினேன். சிறுவயதில் இருந்தே நான் ஒரு இன்ட்ரோவெர்ட்’. அவ்வளவு எளிதில் யாரிடமும் பேசமாட்டேன். ஆனால், சென்னையின் மீது எனக்கிருக்கும் அன்பை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் இந்த ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கம்” என்கிறார் ரவுனக்.

நியூயார்க் நகரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பதிவுகளை ‘ஹுயூமன்ஸ் ஆஃப் நியூயார்க்’ பேஸ்புக் பக்கத்தில் காணலாம். அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு, ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கம், சற்று விரிவாகச் சென்னையின் மக்களைப் பற்றிப் பேசுகிறது.

சென்னையின் வண்ணங்கள்

சென்னையின் பன்முகத்தன்மையை ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தில் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, எளிய மனிதர்களின் கதைகளை நிறையக் காண முடிகிறது. “அப்போதுதான் சென்னையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்துக்காக நானும் அவர்களுடைய பேச்சில் கலந்துகொண்டேன். பேசிமுடித்துச் செல்லும்போது, அவர்கள் டீ, வடை எல்லாம் கொடுத்து உபசரித்து அனுப்பினார்கள். அவர்களுடைய அன்பை மறக்கவே முடியாது” என்கிறார் ரவுனக்.

சென்னையின் டிரெண்டில் இருக்கும் விஷயங்களைத் தவறாமல் ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தில் பதிவு செய்துவிடுகிறார் இவர். அது மெட்ராஸ் தினக் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, ஐபிஎல் ஃபீவராக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிராக இருக்கும் மனநிலை குறித்த விமர்சனமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் இவருடைய பக்கத்தில் பார்க்கலாம். பெரும்பாலும் இவர் கடந்து செல்லும் சாமானியர்களைப் பற்றித்தான் பதிவிடுகிறார். “ஒரு முறை, ஒரு கேஸ் சிலிண்டர் எடுத்துச் செல்லும் நபரிடம் பேசினேன். அவரை நான் படம் எடுத்துக் காட்டியவுடன் அவருடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அதைப் பார்த்ததும் நான் செய்துகொண்டிருக்கும் இந்த வேலையைப் பெருமையாக உணர்ந்தேன்” என்கிறார் ரவுனக்.

அர்த்தமுள்ள வீக்எண்ட்

ரவுனக் தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அதனால் தன் வீக்எண்டை ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்துக்காகச் செலவிடுகிறார். “வீக்எண்ட்டில் மட்டும் பதிவிடுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், பணிச்சூழல் காரணமாக அதிக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறேன். என் நண்பர்களும் நிறைய ஆலோசனைகள் வழங்கி தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்” என்கிறார் ரவுனக்.

தற்கொலை தீர்வல்ல...



பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன.

இவ்வாறு மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொள்வதற்குப் பள்ளிகளில் தரப்படும் அழுத்தம் ஒரு காரணமென்றால், தங்கள் பிள்ளைகள் பொறியியல் படிப்புப் படித்து வெளிநாட்டுக்குப் போய் டாலர்களில் சம்பாதிக்க வேண்டுமென்ற பெற்றோரின் பேராசையும் ஒரு காரணம்.

தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கும், உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளிக்கும், மேல்நிலைப் பள்ளியில் இருந்து கல்லூரிக்கும், கல்லூரியில் இருந்து உயர் கல்வி கற்கச் செல்லும் மாணவர் எண்ணிக்கை ஒவ்வொரு நிலையிலும் கணிசமாகக் குறைகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள்.

பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் நம் கல்வி முறையில் மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஆற்றலைக் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியாவது உண்டா என்றால் சுத்தமாக இல்லை.

இந்த மாணவருக்கு இந்தப் பருவத்தில் இதைத்தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று யாரோ ஒருவர் முடிவு செய்ததைத்தான் இப்போதும் கற்றுத் தருகிறோம்.

மாணவர்களின் புரிதல் தொடர்பாக யாருக்கும் கவலையில்லை. இப்போதைய தேர்வு முறையில் மனப்பாடம் செய்யும் திறன்தான் முக்கியம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய மாணவி ஒருவர், தான் படித்த பள்ளியின் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட இடங்களிலும் கேள்விகளை ஒட்டிவிடுவார்கள் என்று கூறி வருத்தப்பட்டார்.

மதிப்பெண் பெறுவதுதான் வாழ்க்கை என்று நினைத்து, பல பள்ளிகள் பறக்கும் படை வந்தால் கூடக் கதவைத் திறக்கக் கால தாமதம் செய்கின்றன. உடனே யாராவது வந்துவிட்டால் உள்ளே நடப்பது தெரிந்து விடும் அல்லவா?

இப்படிப்பட்ட பள்ளியில் நம் பிள்ளைகள் படிக்க வேண்டுமா என்பதை பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும்.

பெற்றோரின் ஆசைதான் முதலில் பள்ளிகளில் சேர்ப்பதற்கும் பின் பணம் கொடுத்துக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கும் காரணமாகிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே என்று புரிந்தால் யாருக்கும் பிரச்னையில்லை. அதைவிடுத்துப் பெற்றோரின் ஆசைக்குப் பலியாகும் குழந்தைகள், மேல் வகுப்புக்குச் செல்லச் செல்ல ஆசிரியர்களின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்.

இதற்கு ஓர் உதாரணம், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஒரு மாணவியின் பரிதாபத் தற்கொலை. அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கே இந்த நிலையென்றால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் நிலை எப்படியிருக்கும்?

சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒரே மகன், மருத்துவத் துறையில் உயர் படிப்புப் படித்தபோது பேராசிரியர் திட்டினார் என்பதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்.

நாட்டிலுள்ள எத்தனையோ பேருக்குக் கிடைக்காத உயர் கல்வி வாய்ப்பு தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அந்த மாணவர் புரிந்து கொள்ளவில்லை. குடும்பத்தினரும் அந்த மாணவருக்கு உணர்த்தவில்லை.

இதற்குத்தானா 20 ஆண்டுகள் பாராட்டிச் சீராட்டிப் பெற்றோர் அவரை வளர்த்தனர்?

தனியார் பள்ளி நிர்வாகங்களின் பேராசைக்கு பல பிஞ்சுகள் உதிர்வதை நினைத்தால்தான் தாங்க முடியவில்லை. தங்கள் மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற வேண்டும் என்பதற்காக அவர்களுடைய மனநிலை சரிவரப் புரிந்து கொள்ளாமல் படிப்பொன்றே குறியாக இருக்குமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது.

பிளஸ் 2-வில் கணிதப் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த பலர் அண்ணா பல்கலைக்கழக கணிதத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெறக் கூட முடியவில்லை. இதற்கு யார் காரணம்?

தமிழகத்தின் சமச்சீர் கல்வி படித்த எத்தனை மாணவ, மாணவியர் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலச் சென்றுள்ளனர்?

தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் எல்லாமே தங்கள் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்றவற்றுக்கான கட்-ஆப் மதிப்பெண்களை வெளியிடுகின்றனரே தவிர, பிரபல உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தது தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடுவதில்லையே?

இந்த உலகில் பிறந்த மனிதர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை புதைந்துள்ளது. ஆனால், அந்தத் திறமையைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு அந்த மாணவரை உருவாக்குவதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதைவிடுத்து சாதாரணப் பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடத் தைரியமில்லாமல் தற்கொலைதான் தீர்வென்றால், இந்த உலகில் யாரும் உயிருடன் இருக்க முடியாது.

ஏனென்றால், உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னை உள்ளது. படிக்க வேண்டிய வயதில் தற்கொலை என்பதைவிடக் கொடிய விஷயம் வேறெதுவும் இல்லை.

மாணவப் பருவத்தில் தற்கொலைதான் தீர்வு என்பது கல்வி முறையில் கோளாறு இருப்பதையே காட்டுகிறது. அப்படியென்றால், அந்தக் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தேர்வு முடிவுகள் வரும்போதும் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுப்பதற்காக பல இடங்களில் மன நல மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

அதைப்போல, ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவ - மாணவியருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான் தற்கொலைகள் நிரந்தரமாக முடிவுக்கு வரும்.

Friday, February 27, 2015

பெண்கள் சிகரெட் பிடிக்கத் தடை: ரஷ்யாவில் அதிரடி!



ரஷ்யாவில் பிறக்கும் குழந்தைகள் உடல்நலக் கோளாறு காரணமாக எடை குறைவாகவும் நோய்வாய்ப்பட்டும் பிறப்பதைத் தடுக்க, அந்நாட்டு அரசு ஓர் அதிரடி முடிவை எடுக்கலாம் என்று தெரிகிறது. ரஷ்யாவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். எனவே, பெண்கள் சிகரெட் புகை பிடிப்பதைத் தடுத்து நிறுத்தினால், இதுபோன்ற சிக்கல்கள் வராது என்று முடிவெடுத்த ரஷ்ய அரசு, ‘இனிமேல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் புகை பிடிப்பதோ, புகையிலை சம்பந்தமான பொருட்கள் வாங்குவதோ கூடாது. மீறினால் 50 டாலர் அபராதமும் சிறைத் தண்டனை’ என்று ஓர் அறிவிப்பு விரைவில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் இருந்து வெளிவரும் என்கிறார்கள்.

இது மட்டுமில்லை, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் புகை பிடிக்க விரும்பினால், அவர்கள் வயதை நிரூபிக்க தங்கள் பாஸ்போர்ட்டைக் காண்பிக்க வேண்டும். மேலும், அதையும் மீறி பெண்களுக்குப் புகையிலை சம்பந்தமான பொருட்களை விற்கும் கடைகளுக்கு 5000 டாலர் வரை கடுமையான அபராதமும், தனி நபர் என்றால் 50 டாலர் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிக்கை சொல்கிறது.

‘‘பெண்களின் கருப்பை சிதைவதற்கும், குழந்தைகள் சத்து இன்றி ஊனமாகப் பிறப்பதற்கும் நிகோட்டின் நச்சுப்பொருள்தான் பெரும் காரணமாய் இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் 15 வயதிலேயே சர்க்கரை, தைராய்டு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே நிகோட்டின் நச்சுப் பொருள் கொண்ட புகையிலை மற்றும் சிகரெட்டுகளை பெண்களுக்கு விற்பதற்கு அரசு தடை செய்ய வேண்டும்’’ என்று ரஷ்ய மருத்துவ ஆய்விதழ் ஒன்று செய்தியை வெளியிட்டதன் தொடர்ச்சியாக, விளாடிமிர் புதின் அரசு மேற்படி அறிக்கையை வெளியிட இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

‘இதற்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்’ என்று எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யப் பெண்கள், இந்தத் தடை ஆண்களுக்குக் கிடையாது என்பதால் செம கடுப்புடனும் இருக்கின்றனராம்.

- தமிழ்

NEWS TODAY 14.06.2026