Thursday, July 2, 2015

Sanskrit University in Tiruchi fake, says UGC

A Sanskrit ‘University’ functioning in Putur, Tiruchi, has been listed among the fake universities in the country by the University Grants Commission on its website.

The institution is among the 21 universities across the country listed as fake and not entitled to confer degrees.

According to a circular issued by the UGC on Wednesday, under the University Grants Commission Act, 1956 under section 22(1), only a university established by a Central, State/provincial Act or an institution deemed to be university under section 3 or an institution especially empowered by an Act of Parliament to confer UGC specified degrees under section 22 (3) of the Act can be called university.

The UGC, has, on its website cautioned that there are as many as 21 such fake universities across the country.

Wednesday, July 1, 2015

எந்த ஊர் நீங்க? உங்க ஊர் ஸ்நாக்ஸ் ஆன்லைனில்! (Sponsored Article)

னி உங்களுக்கு பிடித்த கார, இனிப்பு தின்பண்டங்களை பார்சல் பண்ண வேண்டியதோ, அவற்றை மிஸ் பண்ணவோ வேண்டாம். வந்துவிட்டதுwww.nativcrush.comதிருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு, மணப்பாறை முறுக்கு, செட்டிநாடு சீப்பு சீடை என அனைத்து ஊர்களின் ஸ்நாக்ஸ்களும் வரும் உங்கள் வீட்டு வாசலுக்கே,ஒரு க்ளிக்செய்தால்.
     
ஆம். நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்களை ஆன்லைனில்நேட்டிவ்க்ரஸ்.காம்மூலம் ஆர்டர் செய்தால் போதும் நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் உங்கள் வீடு தேடி வரும் தின்பண்டங்கள். வலைதளம் துவங்கிய நான்கே மாதங்களில் பல ஆர்டர்களை எடுத்து வெற்றிகரமாக டெலிவரி செய்துள்ளது.
நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்கு என்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது தான்Nativcrush.com

இவர்களிடம் வடாகம், அப்பளம், இட்லி பொடி என வீட்டில் உங்கள் ஊரின் பாரம்பரியத்துடன் தயார் செய்த மற்றும் பெட்டிக்கடை ஸ்நாக்ஸ் தேன் மிட்டாய், தேங்காய் பர்பி போன்றவையும் கிடைக்கும்.
ஸ்நாக்ஸ்களை ஆர்டர் செய்வதற்குNativcrush.comவலைதளம் சென்று விருப்பமான ஸ்நாக்ஸ் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இவர்களிடம் இரு வகை டெலிவரி உள்ளது. ஒன்று இலவசம், மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் கிடைக்கப்பெறும். மற்றொன்று சிறப்புக் கட்டணம் செலுத்தினால் தமிழ்நாடு, கேரளா மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மறுநாள் டெலிவரி செய்யப்படும். மற்ற மாநிலங்களுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் டெலிவரி செய்யப்படும். டெலிவரி முறையைத் தேர்வு செய்து பணத்தை ஆன்லைனில் செலுத்தினால் நம் ஊரின் சுவையை உணரலாம் எப்போது வேண்டுமானாலும்.

CLICK HERE...

கணக்கு, பிணக்கு, ஆமணக்கு!


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வெகுவேகமாக நாள்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் மாணவர்கள் புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் வாங்கி, ஆசிரியர்கள் பள்ளியில் கால அட்டவணை போட்டு, இந்த வகுப்பிற்கு இந்த ஆசிரியர் என்று பள்ளி ஓர் ஒழுங்குக்கு வர ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரைகூட ஆகும். அந்த ஒரு மாதம் மாணவர்கள் தங்களுக்குள் அறிமுகமாகி புது வகுப்பில் ஒன்றுவதற்கான கால அவகாசமாக அமையும்.
பாடம் தவிர்த்து பிற செய்திகள் பரிமாறவும், நட்பு பாராட்டவும் உள்ள கால இடைவெளி, குறிப்பாக ஆறாம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு. பெரும்பாலும் புதுச் சூழலில் சந்திக்க நேர்பவர்கள் இவர்கள்தான். இப்பொழுதெல்லாம் நிலைமை மாறிவிட்டது. சிறப்பு வகுப்புகள்கூட பள்ளித் திறக்கப்படும் ஜூன் முதல் தேதியே ஆரம்பமாகி விடுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வகுப்பிற்குப் போனவுடன் மாணவர்களுடன் சுய அறிமுகப் படலம் நடக்கும். பெயர், சொந்த ஊர், முன்பு படித்த பள்ளி, பிடித்த பாடங்கள் என மாணவர்களிடம் பேச்சுப் போகும்.
யார் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் என்றால் பெரும்பாலும், முதல் மதிப்பெண் வாங்கும் மாணவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள்தான் பதில் சொல்வார்கள். யார் ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெற மாட்டார்கள் என்ற கேள்விக்கும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள்தான் பதில் சொல்வார்கள்.
நன்றாகப் படிக்கும் மாணவர்களை எழுப்பி, நீ நல்லா படிப்பியாப்பா எனக் கேட்டால், கொஞ்சமாக உடம்பை முறுக்கிக் கொண்டு ம்ம்ம்... படிப்பேன் மிஸ், கணக்குத்தான் கொஞ்சம் வராது என்பார்கள். அவர்களின் உடம்பு பின்னி முறுக்குவதற்குக் காரணம், நான் கணக்கு ஆசிரியர் என்பதும், என்னிடம் கணக்கு வராது என்று சொல்வதில் உள்ள தயக்கமும்தான்.
ஒரு பாடத்தில், இரண்டு பாடத்தில், ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர்களை எழுப்பினாலும் கணக்குத்தான் வராது என்பார்கள். அப்புறம் ஏன் மீதமுள்ள நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண்கூட எடுக்க முடியவில்லை என்று கேட்டால், அதற்கும் இன்னொரு முறுக்கலே பதிலாக இருக்கும்.
கணக்கு ஆசிரியராக இருப்பதை போன்ற துயரமான பணி வேறொன்றுமில்லை. "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என ஒளவை சொல்லி வைத்துவிட்டுப் போயிருந்தாலும், மகாகவி பாரதியில் இருந்து, கணக்கை ஒரு பாடமாகக் கற்பித்துக் கொண்டிருக்கும் என்வரை கணக்கு பிணக்குதான், ஆமணக்குதான். கணக்குப் பாடத்தின் சுமையும், எண்கள் உருவாக்கும் பீதியும் மாணவர்களை கணக்குப் பாடத்திற்கு விரோதிகளாக்குகின்றன. கணித ஆசிரியர்களை வில்லி, வில்லன்களாக்குகின்றன.
கணித வகுப்புகளின் இறுக்கத்தை வார்த்தைகளில் விவரிப்பது முழுமையான செயலாக இருக்காது. எண்களாலும், குறிகளாலும் நிரப்பப்பட்டுள்ள புத்தகமும், அதைக் கால அவகாசத்திற்குள் முடித்தே தீர வேண்டிய அவசரமுள்ள ஆசிரியரும் மாணவர்களிடத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்குகிறார்கள்.
தமிழ் எழுத்துகளையாவது தட்டுத் தடுமாறி ஒன்றிரண்டு வகுப்புகளில் கற்றுக் கொள்கிறார்கள். எண்களின் அடிப்படை பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்பது வரை மட்டுமே. இவற்றை வைத்துக் கொண்டு எண்களின் தொடர் மதிப்புகளை மாணவர்களாலேயே உருவாக்க முடியும். ஆனாலும், எண்கள் தரும் மிரட்சி அதிகம்.
எண்களில்கூட பெரும்பாலும் பிள்ளைகள் தப்பிப் பிழைத்துவிடுவார்கள். எண்களின் அடிப்படைச் செயல்களுக்காகக் குறிகளை அறிமுகப்படுத்தும் பொழுதுதான் குழந்தைகளுக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடும்.
எளிமையாக சிறு வகுப்புகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று தனித்தனியாகச் சொல்லிக் கொடுத்தால்கூட ஆறாம் வகுப்பிற்குப் பின்னர் எல்லா குறிகளும் ஒரு கணக்குக்குள் ஒன்றாக வந்துவிட்டால், மாணவர்கள் திகைத்துப் போவதை நான் ஒவ்வொரு முறையும் அனுபவத்தில் காண்கிறேன். குறிப்பாக மைனஸ் குறி. மாணவர்களை மிரட்டுவதில் மைனஸ்க்கு நிகர் மைனஸ்தான்.
ஒரு பிளஸ்சும் ஒரு மைனசும் சேர்ந்து வந்தால் பல குழந்தைகள் பூமி உருண்டை தன் சுழற்சியை நிறுத்திவிட்டதைப்போல் திகைத்துப் போய் நிறுத்திவிடுவார்கள். மேற்கொண்டு அந்தக் கணக்கை நகர்த்துவது குழந்தைகளால் இயலாத காரியமாகி விடுகிறது. மைனசும் பிளஸ்சும் சேர்ந்தால் என்ன செய்வது என்ற குழப்பம் பலருக்கு எல்லா வயதிலும் வரும். இதற்கு நன்றாகப் படிக்கின்ற குழந்தைகளும் விதிவிலக்கல்லர். புதிதாக ஒரு கணக்கை தீர்க்கும்போது பிள்ளைகள் எதிரில் சரியான பதில் வரவில்லையென்றால், ஆசிரியருக்கும் இந்தத் திகைப்பு உண்டாகும்.
முழுக்க முழுக்க கேள்விகளால் நிறைந்த ஒரு புத்தகம் கணக்குப் புத்தகம் மட்டுமே. அவ்வளவு பெரிய கணக்குப் புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டுமென்பதே எடுத்தவுடன் மாணவர்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கி விடுகிறது.
ஆசிரியர் தீர்க்கும் கணக்குகளையாவது மாணவர்கள் ஓரளவிற்கு விரும்புவார்கள். மாணவர்களே தீர்க்க வேண்டிய கணக்குகள் குழந்தைகளின் கழுத்தை நெரிக்கும். பலநேரம் அவை மாதிரிக் கணக்குகளில் இருந்து வேறுபட்டே இருக்கும்.
வகுப்பறைகளில் கணக்கு கற்பிக்கும் ஆசிரியர் எண்கள், குறிகள், வாய்ப்பாடுகளின் செயல்பாடுகளைத் தவிர்த்து வேறொன்றையும் பேச நேரமிருக்காது. மிக எளிய செயலான 5 செ.மீ. நீளத்திற்கு ஒரு கோடு வரையுங்கள் என்பதுகூட இறுக்கமான அந்த வகுப்பறையில் பெரும் சவால் நிறைந்த செயல்பாடாக மாறிவிடும்.
உயர் கல்விக்கான தேவைகளோடு பத்தாம் வகுப்பில் கற்றுத் தரப்படும் பல கணிதப் பாடங்கள், மாணவர்களின் கற்பனை எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். மடக்கை விதிகளும், ஆல்ஃபா, பீட்டாக்களும் பல நேரங்களில் குழந்தைகளின் விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நகரவிடாமல் செய்துவிடும்.
முக்கோணம், நாற்கரம் போன்ற உருவங்கள் வரும்போதுகூட அவற்றைப் பற்றி ஓரளவிற்குப் புரிய வைத்துவிட முயலலாம். புள்ளிகளும், நேர்க்கோடுகளும், சாய்வுகளும், அவற்றின் சமன்பாடுகளும் உருவாக்கும் குழப்பங்கள் இருக்கே... ப்பா... மூச்சுத் திணறிப் போகும்... கற்பிப்பதற்கும்தான். கற்றல் நிகழ்ந்ததா என்பது 90% ஐயத்திற்குரிய விஷயமே.
சொல்லிக் கொடுக்கும் மாதிரிக் கணக்கை வைத்து நான்கைந்து முறை போட்டுப் பார்த்தும், பல தேர்வுகளில் எழுதி எழுதி மனப்பாடம் ஆகும் அளவிற்கு வந்த பிறகு, கணக்குப் போட பழகிக் கொள்வார்களே தவிர, அந்தக் கணக்கின் அடிப்படை நிச்சயம் புரிந்திருக்காது.
பிள்ளைகளுக்கு கணக்கு ஏன் இவ்வளவு அன்னியமானது என்று தெரியவில்லை. மிகப் பெரிய அவலம்தான், கணக்கிலிருந்து விலகிப் போவது. எங்கள் ஊரைப் போன்ற இடை நகரப் பிள்ளைகள் மட்டுமல்ல, சென்னை நகரப் பிள்ளைகளின் மனநிலையும் இதுதான்.
ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னையை மையமாகக் கொண்ட நல்ல பள்ளிகளில், நிறைய கட்டணம் கட்டிப் படிப்பதாக நம்பப்படுகிற பிள்ளைகளும் இதே கருத்தைத்தான் சொன்னார்கள்... கணக்குப் பிடிக்காது. ஏன் பிடிக்காது என்றதற்கு, புரியலை, அதனால பிடிக்கலை என தெளிவாக ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் பதில் சொன்னான்.
புரிந்து கொள்ள முடியாத, கடினமான ஒரு பொருளையா நம் முன்னோர்கள் கண்ணெனப் போற்றினார்கள் என யோசித்தால், இருக்காதே என்றுதான் பதில் தோன்றுகிறது.
என் அப்பா அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்புத்தான் படித்தார் (அன்றைக்கு அதுவே ஆசிரியர் ஆவதற்கான படிப்பு என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்). மிகக் கடினமான கணக்குகளுக்குக்கூட வினாடியில் பதில் சொல்லிவிடுவார். அவர் வாய்விட்டு கணக்கிடுவதைப் பார்க்க முடியாது. மனசுக்குள்ளேயே எண்களை எளிதாக கையாண்டு விடுவார். அப்பொழுதும் எனக்கு ஒரு தாளும் எழுதுகோலும் தேவைப்பட்டது. இன்றைக்கு கால்குலேட்டர். இந்த இடைவெளி எதனால் உண்டானது.
பாடத் திட்டத்தால் மாணவர்களுக்குச் சுமையும் மன நெருக்கடியும் ஏற்றப்படுவதில் அநேகமாக கணக்குப் பாடம் முதலிடத்தைப் பிடிக்கும். ஆண்டுக்கு ஆண்டு பத்தாம் வகுப்பில் கணக்குப் பாடத்தில் சதம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே என யோசித்தால், பெரும்பாலும் அவை தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கும்.
ஆனால், இன்றைய சூழலில் மாணவர்கள் பெரும்பாலும் வகுப்பறையை வெறுப்பதற்குக் காரணமாக அமைவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அமைவது ஆங்கிலமும் கணக்குப் பாடங்களும்தான்.
குறிப்பாக கிராமப்புறங்களில். ஒன்றிரண்டு பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் பெரும்பாலும் இவ்விரு பாடங்களில்தான் தோல்வியுறுகிறார்கள்.
ச்சீய்.. இந்தப் பழம் புளிக்கும் என அதோடு தூக்கியெறிந்துவிட்டு நாலு காசு சம்பாதிக்கப் போய் விடுகிறார்கள். பெண் பிள்ளைகள் திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கணக்குப் பாடம் வராத பிரிவுகளைத் தேர்வு செய்து கல்லூரிகளில் சேர்கிறார்கள்.
எழுத்துகள் உருவாக்கும் ரம்மியத்தையும், உணர்வெழுச்சியையும் எண்களாலும் உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்த முடியாமல் கணித வகுப்பறைகள் திணறுகின்றன. அதனாலேயே ஒரே ஒரு "மைனஸ் குறி' கனத்த தடியொன்றாக பிள்ளைகளை வகுப்பறைகளில் மிரட்டிக் கொண்டிருக்கிறது. எண்களைப் பேச வைக்கும் மந்திரத்தை எப்படிச் செய்வது?
நம் அணுகுமுறையில் உள்ள குறையோ, பாடத்திட்டமோ, கற்பிக்கும் முறையோ எல்லாம் சேர்ந்த குறைபாட்டாலோ மாணவர்கள் கணக்குப் பாடத்தில் இருந்து விலகிப் போகிறார்கள். ஆனால், மிக ஆழமாக யோசித்துப் பார்த்தால், கணக்கைப் போன்ற இனிமையான பாடமும், சுவாரஸ்யமான பாடமும் வேறொன்று இருக்க முடியாது.
எண்களைப் பின்தொடர்ந்து சென்றால் அவை விரித்துச் செல்லும் உலக மாயங்கள் நிரம்பியது. மாயங்கள் வழியாக உண்மையை, நிரூபணத்தை வெகு அருகில் பார்க்கும் வாய்ப்புத் தருவது கணக்கு என்ற அதிசயம் மட்டுமே.
பள்ளிகளில் பெறும் கல்வியறிவைப் பெற முடியாமல், பல குழந்தைகளுக்கு சவாலாக கணித வகுப்பறைகளே கனத்த கதவுகளுடன் நின்று கொண்டிருக்கும் நிலை என்று மாறுமோ?
பாடத் திட்டத்தால் மாணவர்களுக்குச் சுமையும் மன நெருக்கடியும் ஏற்றப்படுவதில் அநேகமாக கணக்குப் பாடம்தான் முதலிடத்தைப் பிடிக்கும். ஆண்டுக்கு ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் சதம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே என யோசித்தால், பெரும்பாலும் அவை தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் உரிய கல்லூரிகளில் சேர வியாழக்கிழமை (ஜூலை 2) கடைசி நாளாகும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் கட்டக் கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 2,939 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சேர்க்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட 2,939 மாணவர்களில் இதுவரை 2,795 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 144 மாணவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 2) வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் வியாழக்கிழமை (ஜூலை 2) மாலை 5 மணிக்குள் உரிய மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
பி.டி.எஸ். படிப்பிலிருந்து விலகி...கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்து பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 50 பேருக்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்று அனுமதிக் கடிதம் பெற்றுள்ளனர். இவ்வாறு பி.டி.எஸ். படிப்பிலிருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விதியின்படி தலா ரூ.5 லட்சத்தை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செலுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விதிமுறைகளும், அபராதங்களும்!

மது அருந்திவிட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு ரூ.500 அபராதம், பயணத்தில் இருந்து பாதியில் இறக்கி விடப்படுவர்.
மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான பொருள்களை எடுத்துச் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
ஆபத்தான பொருள்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் சொத்துகளில் போஸ்டர், எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்படும்.
பயணச் சீட்டு இல்லாமல் அத்துமீறி ரயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 250 அபராதம் விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
ஓடும் ரயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு பணியின்போது தொல்லை கொடுத்தால் 1 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
பாஸ் அல்லது பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் ரூ. 50-ம், பயணத்துக்கான பயணக் கட்டணமும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும்.
ரயிலில் உள்ள தொலைத் தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாக பயன்படுத்தினாலோ 1 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
போலி பயணச் சீட்டை உருவாக்கினால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
உணவுப் பொருள்களை அத்துமீறி விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ரயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளை தாக்கிய குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை (சட்ட விதிகளுக்கு உள்பட்டு) விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
பொய்யான புகார்கள், பொய்யான நிவாரணம் கோருபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும்.

Pvt med colleges may not hold NRI quota entrance


BHOPAL: Private medical and dental colleges in the state are out to ignore Medical Council of India (MCI) circular that would have, for the first time, ensured merit based selection for non-resident Indian (NRI) quota seats.

An entrance examination would have meant stopping misuse of NRI quota for giving out-of-turn admission in MBBS and BDS course. Activists like Dr Anand Rai who hailed MCI decision now allege foul play on part of directorate of medical education (DME) and association of private dental and medical colleges (APDMC)

"DME should take action against private medical and dental colleges and cancel their no-objection certificate (NoC). NRI seats are being used to fill candidates, who otherwise cannot qualify basic MCI norms to get admission to a medical college," Dr Rai said.

Earlier in April, acting on a MCI circular, MP directorate of medical education has asked medical and dental colleges to admit students under NRI quota based on merits through a common entrance test. NRI quota common entrance test from academic year 2015-2016 for government colleges has been conducted.

Action on DME letter to private medical and dental colleges depends on view taken by Madhya Pradesh admission and fees regulatory committee (MPAFRC) and association of private dental and medical colleges in the state (APDMC). When contacted, MPAFRC and APDMC officials did not respond.

Until now, NRI quota students did not have to appear for entrance exam and were admitted on basis of the Class 12 performance.

A complaint was recently lodged with MPAFRC alleging that several candidates admitted to medical colleges of the state under NRI quota do not meet mandatory eligibility norms for admission under NRI quota scheme. Several candidates scoring less than 50% marks in Class 12 were given admission. Many are not even NRIs and their admissions were against court rulings. They have neither appeared for MPPMT nor DMAT examination.

New centre eases process to apply for passports in Chennai

CHENNAI: The ministry of external affairs and CSC e-Governance Services India Ltd has launched a Common Services Centre (CSC) for passport application in the city.

The centre is at the regional passport office in Rayala Towers on Anna Salai. Passport applicants currently pay anywhere between Rs 300 and Rs 500 at typing and internet cafes to apply online. They can now apply for a passport at the CSC, where staff will help them fill the applications and offer other passport services for the nominal fee of Rs 100.

Regional passport officer K Balamurugan told TOI that the ministry has made it mandatory to complete the entire process online, including the filling of forms, fee payment and scheduling of appointments for passports.

"We have already begun the process but have not publicised it as yet," Balamurugan said. "We now receive around 10 applications per day at the CSC and around 2,550 passport applicants the state and Puducherrry."

The CSC allows applicants to fill and uploading passport application forms, pay the fee applicable with debit or credit cards and schedule appointments to visit the passport seva kendra.

The passport officer said according to the appointment schedule, an applicant will have to visit the passport seva kendra for completion of the application submission process which includes submission of digital photographs, biometric data and verification of supporting documents as well as approval.

He said the new centre will do away the menace of touts who charge applicants as much as Rs 500 to apply for passports online and generate the application reference numbers required.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...