Wednesday, November 1, 2017

Govt. plans to sell Air India, AI Express together

Separate bidders likely for regional airline Alliance Air; process to be concluded by June 2018

The National Democratic Alliance (NDA) government is working to conclude the sale of national carrier Air India by June 2018 and is keen on selling its core airline operations, together with its low-cost international airline, Air India Express.
As per a decision taken by the Air India-specific Alternative Mechanism — a group of Ministers led by Finance Minister Arun Jaitley to decide on the modalities of stake sale in the national carrier — the Centre will look to sell AI’s regional airline Alliance Air to a separate universe of bidders while Air India and Air India Express will likely go together.
At a meeting of the ministerial group on September 21, the view was that a separate universe of bidders or prospective buyers be invited for Air India’s ground handling subsidiary — Air India Air Transport Service Limited (AIATSL) — and its maintenance, repair and overhaul (MRO) unit — Air India Engineering Services Limited (AIESL) — top government sources said.
Talks with buyers
“The rationale is that we can find prospective buyers from international airlines if we call bids for Air India and Air India Express together. Since Alliance Air operates flights mainly on regional domestic routes, it makes more sense to sell it off separately,” a source added.
The decision was taken after the government held several rounds of backchannel talks with prospective buyers of Air India and its subsidiaries.
Sources said the government met companies involved in MRO, ground handling and airline operations to examine whether all the subsidiaries should be sold off together or calling for separate set of bidders would increase Air India’s valuation.

நாட்டுக்கு நல்லது!

பதிவு செய்த நாள்

30அக்
2015 
00:00
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், ரஷ்யா மற்றும் இதர நாடுகளில், தனது குழுவின ருடன் கலைப்பயணம் செய்துவிட்டு தமிழகம் திரும்பினார்.
விமான நிலையத் தில் நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். அதில் ஒருவர், ''கலைப் பயணம் செய்ததில் உங்களுக்கு வருமானம். இதனால் தமிழகத்திற்கு பயன் ஏதும் உண்டா?'' எனக் கேட்டார்.
கேள்வி கேட்ட நிருபரும், இதர நபர்களும் கலைவாணர் என்ன சொல்லப் போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்தனர். ஏனெனில், இதற்கான கட்டணமும் ஏதுமில்லை; வரியும் இல்லை.
''ஆம் தமிழ்நாட்டிற்கு லாபம் தான். எங்கள் குழுவில் மொத்தம் முப்பதுபேர். நாங்கள் ஒரு மாதமாக ஊரில் இல்லை. எனவே, எங்களின் குடும்ப அட்டைக்கான அரிசி, எண்ணெய் உட்பட பல பொருட்கள் வழங்கப் படவில்லை. அந்தப் பொருட்களினால், அரசுக்கு மிச்சம்தானே. அதுவும் நாட்டிற்கு ஒரு பயன்தானே!'' என்றார் கலைவாணர்.

WhatsApp officially rolls out 'Delete for Everyone' feature


By IANS | Published: 31st October 2017 09:10 PM |



You can now delete WhatsApp messages for everyone or just for yourself.

SAN FRANCISCO: WhatsApp on Tuesday announced it has officially rolled out its most anticipated feature 'Delete for Everyone' that allows its over one billion users revoke their messages in case they sent those to a wrong person or a group.

"Starting today you can now delete messages you sent by mistake a" whether to one person or an entire group," WhatsApp said in a statement.

Here's how it works.

Tap and hold on the message, choose "Delete," and then "Delete for everyone."

You have seven minutes to delete the message after it's sent.

This feature is rolling out for users around the world on the latest versions of iPhone, Android, Windows Phone as well as desktop.

"Both you and the message recipient must be using the latest version of WhatsApp for the message to be successfully deleted," WhatsApp said.

WhatsApp was working on this feature for almost a year.

You can now delete messages for everyone or just for yourself.

"Deleting messages for everyone allows you to delete specific messages you have sent to either a group or an individual chat. This is particularly useful if you sent a message to the wrong chat or if the message you sent contains a mistake," WhatsApp said in its FAQ.

Messages you successfully delete for everyone will be replaced with "This message was deleted" in your recipients' chats.

Similarly, if you see "This message was deleted" in a chat, it means that the sender deleted their message for everyone.

WhatsApp has over 200 million monthly active users in India and 1.2 billion users worldwide.

ரயில்வே கால அட்டவணை வெளியீடு: சென்னைக்கு புதிய மின்சார ரயில் சேவை

By DIN  |   Published on : 01st November 2017 02:16 AM   
எதிர்வரும் ஆண்டுக்கு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணையில் சென்னை புறநகருக்கு புதிய மின்சார ரயில் சேவைகள் புதன்கிழமை (நவ.1) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின்சார ரயில் சேவைகள்
செங்கல்பட்டு - திருமால்புரம்: ரயில் எண் 40901/40902: செங்கல்பட்டில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு திருமால்புரத்துக்கு காலை 6.45 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில், திருமால்புரத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டுக்கு இரவு 10 மணிக்கு வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் - ஆவடி: ரயில் எண் 66061/66052: சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்பட்டு ஆவடிக்குப் பிற்பகல் 2.45 மணிக்குச் சென்றடையும். மறு மார்க்கத்தில், ஆவடியில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 3.35 மணிக்கு வந்தடையும்.
சென்னை கடற்கரை - திருவள்ளூர்: ரயில் எண் 66053/66012: சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.40 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூருக்கு மாலை 6.10 மணிக்குச் சென்றடையும். மறு மார்க்கத்தில், திருவள்ளூரில் இருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு 7.50 மணிக்கு வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் - ஆவடி புறநகர் ரயில் திருவள்ளூர் வரை நீட்டிப்பு: ரயில் எண் 66001: சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூருக்கு இரவு 10 மணிக்குச் சென்றடையும்.
சென்னை மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி , மூர்மார்க்கெட் - திருவள்ளூர், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான சில மின்சார ரயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும், வந்தடையும் விரைவு ரயில்களின் நேர மாற்றம் 

 தெற்கு ரயில்வேயின் 2017 - 2018 ஆம் ஆண்டுக்கான புதிய ரயில்வே கால அட்டவணையின்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும், வந்தடையும் விரைவு ரயில்களின் நேரம் புதன்கிழமை முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நடிகை கார் வாங்கிய விவகாரம் : புதுச்சேரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கிரண் பேடி ஆய்வு

kiranbed

நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆளுநர் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அமலாபால் ரூ.1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதேபோல, புதுவையில் போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார்களுக்கு குறைந்த சாலை வரியைச் செலுத்தி பலர் மோசடி செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி போக்குவரத்து செயலருக்கும், காவல்துறை முதுநிலை எஸ்.பி.க்கும் கிரண் பேடி உத்தரவிட்டார். 
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்ற கிரண் பேடி அங்கு அதிரடியாக ஆய்வு செய்தார். அலுவலகத்தில் வாகனங்கள் பதிவு செய்யும் பிரிவு, உரிமம் தரும் பிரிவு, கணினியில் பதிவாகியுள்ள விவரங்கள், பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார். 
இது தொடர்பாக கிரண் பேடி கூறியதாவது:
இந்தப் புகார் உண்மையானதாக உள்ளது. வாகனப் பதிவுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வரை வசதி படைத்தவர்கள் அரசுக்கு சாலை வரியை செலுத்தாமல் ஏமாற்றும் நிலை நீடிக்கும். சிறிய மாநிலமான புதுவையில் நிதிச் சிக்கல் உள்ள நிலையில், இதுபோன்ற வரி ஏய்ப்புகளால் மேலும் பாதிப்புதான் உண்டாகும். புதுச்சேரி நிர்வாகத்தில் பெரியளவில் சீரமைப்பு தேவைப்படுகிறது. அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற வேண்டியுள்ளது. சிரமத்தில் உள்ள நாம் செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. இது சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட மோசடியாகும். இந்த மோசடி தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்.
சிறிய யூனியன் பிரதேசமான புதுவையில் மதுவின் மூலம் கிடைக்கும் பாவப்பட்ட பணத்தை நாம் வருவாயாகப் பெறுகிறோம். வெளி மாநிலங்களைச் சேர்ந்த வசதி படைத்தவர்களால் விலை உயர்ந்த கார்கள் வாங்கி மோசடியாகப் பதிவு செய்வதால் கடும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன என்றார் கிரண் பேடி.
ஆய்வின் போது துணை போக்குவரத்து ஆணையர் ரத்னகோஷ் சாரு, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ரகுநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
'தவறு நடைபெறவில்லை': இது தொடர்பாக புதுவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்துத் துறை சட்டவிதிகள்படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு செய்ய, வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, கடவுச்சீட்டு, பள்ளிச் சான்று, பிறப்புச் சான்று, பிரமாண பத்திரம் ஆகியவற்றை ஆதாரங்களாக தாக்கல் செய்யலாம். இவை இருப்பிடத்தை உறுதி செய்யும். 
அமலாபால் தனது கையெழுத்துடன் கூடிய பத்திரத்தை தாக்கல் செய்தார். புதுச்சேரி திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்றை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசி நகலையும் இந்த முகவரியிலிருந்து தந்துள்ளார் என்றார் அவர். 

'ஒரு நகரம் ஒரே டிக்கெட்': ரயில், பேருந்து எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு டிக்கெட்டா? 

By DIN  |   Published on : 31st October 2017 03:11 PM  | 
ticket_counter


மும்பை: ஒரு நகரம், ஒரு டிக்கெட் என்ற திட்டம், இந்தியாவில் முதல் முறையாக மும்பை மாநகரில் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், அலுவலகத்துக்கோ அல்லது பிற பயணங்களின் போதோ, ஒவ்வொரு போக்குவரத்து சேவைக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்காமல், ரயில் மற்றும் பேருந்துக்கு அல்லது பேருந்து மற்றும் டாக்ஸிக்கு ஒரே ஒரு ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால் போதும் என்கிறார்கள் அதிகாரிகள்.
ரயிலில் போக ஸ்டேஷனில் டிக்கெட் எடுத்தாலே குளறுபடி செய்கிறார்களே இது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்களுக்காக இதோ முழு விவரம்..
பல்வேறு கட்டப் பணிகள் முடிந்து ஒரு வழியாக மும்பை மாநகரம், அனைத்து விதமான போக்குவரத்துக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட டிக்கெட் வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து மும்பை மாநகர  மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் கூறுகையில், மும்பைக்கான சிறப்பு திட்டம் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என்றனர்.
மும்பை மாநகர் பகுதிக்கான திட்டத்தை வடிவமைக்கும் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பல்வேறு நாடுகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒரே டிக்கெட் முறையை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து, மும்பைக்கான திட்டத்தைக் கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தில், புறநகர் ரயில் சேவை, பிரிஹன் மும்பை எலக்ட்ரிக் சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்ட்-ன்(BEST) பேருந்து சேவை,செம்புர் - வடாலா - ஜேகோப் சர்கிள் மோனோ ரயில் சேவை ஆகியவை இணைக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயணிகள் ஸ்மார்ட் கார்டு வசதியுடன் அனைத்து போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த திட்டத்தின் படி, அனைத்து மெட்ரோ சேவையையும் முதலில் ஒன்றிணைக்கப் போகிறோம். இந்த சேவையில் ஏற்கனவே தானியங்கி கதவுகள் இருப்பது திட்டத்தை செயல்படுத்த வசதியாகியுள்ளது.
அனைத்து மெட்ரோ சேவைகளையும் ஒன்றிணைத்த பிறகு, அதனுடன் பேருந்து சேவை இணைக்கப்படும். அதற்காக தற்போது பேருந்து டிக்கெட் முறையில் புதிய தொழில்நுட்பத்தை மாற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகுதான் ரயில் சேவையை இணைக்க முடியும். ஏன் என்றால் அதிகப்படியான உள்கட்டமைப்புகளை இதற்காக மாற்ற வேண்டும். தானியங்கி கதவு கொண்ட ரயில் நிலையங்கள், ரயில்களைக் கொண்டு வருவது போன்றவை இந்த திட்டத்தின் இறுதி கட்டத்தில் செய்து முடிக்கப்படும்.
டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘செண்பகமே... செண்பகமே’  பாடல் புகழ் நிஷாந்தி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?!


By சரோஜினி  |   Published on : 31st October 2017 05:45 PM  
000000000_nishanthi
Ads by Kiosked

தமிழ் ரசிகர்களுக்குப் பானுப்ரியாவை ஞாபகமிருக்கக் கூடும். பானுப்ரியாவுக்கு சாந்திப்ரியா @ நிஷாந்தி என்ற பெயரில் ஒரு தங்கை இருந்தாரே அவரை நினைவிருக்கிறதா? அவர் உங்கள்நினைவிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட அவர் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற நினைவை விட்டு நீங்காத சில சாகாவரம் பெற்ற பாடல்கள் ராஜாவின் இசை உள்ள வரை நம் எல்லோருக்குமே
எப்போதும் நினைவிலிருக்கும். யோசித்துப் பாருங்கள்...
எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் ராஜா இசையில், ஆஷா போஸ்லே பாடிய செண்பகமே, செண்பகமே பாடல் யாருக்காவது மறக்குமா என்ன? அதே... அதே!
நிஷாந்தி தமிழில் சில திரைப்படங்களில் நடித்தார், பிறகு டோலிவுட் பக்கம் சென்றவர் அப்படியே பாலிவுட்டுக்குப் பிளைட் பிடித்து சென்று செட்டிலானவர் தான் பிறகு தமிழ் பக்கம் வரவே இல்லை.
பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த போது பிரபல பாலிவுட் பட அதிபர், தயாரிப்பாளர் கம் நடிகரான வி.சாந்தாராமின் பேரனான சித்தார்த்ராயைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு இரு மகன்களைப் பெற்றெடுத்தார் சாந்திப்ரியா @ நிஷாந்தி. வாழ்க்கை அப்படியே சென்று கொண்டிருந்தால் ஒரு தெளிந்த நீரோடையாகத்தான் இருந்திருக்கக் கூடும். ஆனால் வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாக மட்டுமே இருந்து விடுவதில்லையே! நிஷாந்தியின் வாழ்விலும் அப்படியோர் சோதனை வந்தது. தனது கணவர் சித்தார்த் ராயை 2004 ஆம் ஆண்டில் ஒரு ஹார்ட் அட்டாக்கில் பறிகொடுத்தார். இப்போது தன் இரு மகன்களுடன் மும்பையில் வசிக்கும் நிஷாந்தி தனது கணவரது குடும்பத்துக்குச் சொந்தமான ‘ராஜ்கமல்’ ஸ்டுடியோவின் நிர்வாக வேலையில் பங்கெடுத்துக் கொண்டு வருவதாக டோலிவுட் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, இந்தி எந்த மொழியானாலும் சரி நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் தற்போது அதை ஏற்றுக் கொண்டு செய்ய தனக்கு நிறைய அவகாசம் இருப்பதால் நடிப்பதிலும் ஆர்வம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அக்கா பானுப்ரியா போலவே நிஷாந்தியும் இப்போது அம்மா, அக்கா, அண்ணி, அல்லது சிறப்பு குணச்சித்திர வேடங்கள் என எதில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்... அவருக்கான கதாபாத்திரம் வெறுமே திரையில் வந்து செட் பிராப்பர்ட்டி போல நின்று விட்டுச் செல்வதாக இருக்கக் கூடாது. நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்புள்ள வேடங்கள் எனில் இளம் இயக்குனர்கள் நிஷாந்தியை அணுகலாம். அவர் நடிக்கத் தயார். என நிஷாந்தியே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...