Saturday, January 6, 2018

முதுகலை மருத்துவம்: நாளை 'நீட்' தேர்வு : தயார் நிலையில் மையங்கள்

Added : ஜன 06, 2018 04:48


முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இளங்கலை, முதுகலை மருத்துவ இடங்கள், 'நீட்' தகுதி தேர்வு மூலம், ஒதுக்கப்படுகின்றன.


தேசிய அளவில், மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுகள், தேசிய தேர்வு வாரியம் சார்பில், நடத்தப்படுகின்றன.


இந்தாண்டு முதுகலை மருத்துவ இடங்களுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப வினியோகம், கடந்தாண்டு அக்., 31 முதல், நவ., 27 வரை நடந்தது.
மாணவர்கள் 'ஆன்லைன்' முறையில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.


இந்நிலையில், இதற்கான தேர்வு, நாளை நாடு முழுவதும் நடக்கிறது. இம்மாத இறுதிக்குள்,
முடிவுகள் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


நாடு முழுவதும், 129 மையங்களில் நாளை தேர்வுகள், நடத்தப்பட உள்ளன. இத்தேர்வில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.


தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய ஆறு நகரங்களில் தேர்வுகள் நடக்கின்றன.


தேர்வு மையங்களுக்குள்அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், தேர்வர்களுக்கான அனைத்து
வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -
 அரசு,பஸ்,ஓட்டிய,அந்தியூர்,MLA,எம்.எல்.ஏ.,ராஜாகிருஷ்ணன்

 அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

பவானி : போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்கால், டிரைவர் இல்லாததால், அந்தியூரில் இருந்து பவானிக்கு, அரசு பஸ்ஸை, எம்.எல்.ஏ., ஓட்டினார்.

அரசு போக்குவரத்து தொழிலாளர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு பஸ்கள், டிரைவர், கண்டக்டர் இல்லாமல், பணிமனையில் முடங்கியுள்ளன. பல இடங்களில் தற்காலிக ஊழியர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர்,அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன், நேற்று அரசு பஸ்சை இயக்கி ஆச்சர்யப்படுத்தினார். அந்தியூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ்சை, அந்தியூரில் இருந்து பவானிக்கு, நேற்று மதியம் இயக்கினார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ., கூறுகையில்,''என்னிடம், 'ஹெவி லைசென்ஸ்' உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் காட்டி, அனுமதி பெற்றே, அந்தியூரில் இருந்து பவானிக்கு பஸ் ஓட்டி வந்தேன். பஸ்சில், 50 பேர் இறங்கி, ஏறினர்,'' என்றார்.

எம்.எல்.ஏ., அரசு பஸ் ஓட்டிச் செல்லும் தகவல் பரவியது. இதனால், தொ.மு.ச.,வினர், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த, எம்.எல்.ஏ., பஸ்சை தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.
புதுமை!'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரயில்வே..
பயணியருக்கு முழு தொகை திரும்ப கிடைக்க வாய்ப்பு

புதுடில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவில், 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யில், 'மொபைல் ஆப்' மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியரில், அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு, டிக்கெட் கட்டணத்தில், 100 சதவீதம் திரும்ப தரும் திட்டத்தை, ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.





கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, 2016, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டன.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், டிஜிட்டல் பண பரிவர்த்தனை கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'பாரத் இன்டர்பேஸ் பார் மணி' எனப்படும், 'பீம்' மற்றும், 'யுனிபைடு பேமென்ட் இன்டர்பேஸ்' எனப்படும், 'யு.பி.ஐ.,' மொபைல் ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

தனியார், 'பேமென்ட் வாலட்'டுகளை விட, மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்த ஆப்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதால், மக்கள் இந்த ஆப்களை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவன இணையதளம் மூலம், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் போது, இந்த ஆப்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்வோரை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இது குறித்து, ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவில்,

டிஜிட்டல் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை மேலும் அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் சில திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பீம் மற்றும் யு.பி.ஐ., ஆப் மூலம் பண பரிவர்த்தனை செய்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு, அதிர்ஷ்ட பரிசு வழங்கும் திட்டம், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறையில், பண பரிவர்த்தனை செய்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணியரில், ஒவ்வொரு மாதமும், குலுக்கல் முறையில், ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் முன்பதிவு செய்த தொகை முழுவதும், திருப்பித் தரப்படும். அதாவது, அதிர்ஷ்டசாலிகள் ஐந்து பேருக்கு, 100 சதவீத டிக்கெட் தொகை பரிசாக கிடைக்கும்.

தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு, அவர்களின் மொபைல் எண் மற்றும் இ - மெயில் முகவரியில், தகவல் தெரிவிக்கப்படும். வரும் மார்ச் வரை சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பொதுமக்கள் வரவேற்பை பொறுத்து, மேலும் நீட்டிக்கப்படும். இது போன்ற மேலும் சில சிறப்பு திட்டங்களை செயல்படுத்தவும், ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

முக்கிய ரயில்களின் நேர மாற்றம், கால தாமதமாக வரும் ரயில்கள் பற்றிய அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து, பயணியரின் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது, அனைத்து ரயில் சேவைகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்கள் வரவேற்பு:

மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்படும் பீம் மற்றும் யு.பி.ஐ., மொபைல் ஆப்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்துள்ளது. 2017 நவம்பரில், யு.பி.ஐ., ஆப்பை பயன்படுத்தி, 10.5 கோடி பரிவர்த்தனைகள் நடந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த எண்ணிக்கை, 14 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆப்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

  கூடுதல் வருவாய் :

ரயில் டிக்கெட் புக்கிங்கில் அமல்படுத்தப்பட்ட, 'பிளக்சி பேர்' திட்டத்தால், ரயில்வேக்கு, 671 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து, ரயில்வே இணையமைச்சர் ராஜன் கொஹைன், லோக்சபாவில் கூறியதாவது: ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட ரயில்களில், 2016 செப்டம்பரில், பிளக்சி பேர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில்களில், ஒவ்வொரு, 10 சதவீத படுக்கை வசதி இருக்கைகள் காலியானதும், 10 முதல், 50 சதவீதம் வரை, அடிப்படை கட்டணம் உயரும். அந்த அடிப்படையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 2017 நவம்பரில், ரயில்வேக்கு, 671 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரயில் நிலையங்கள் மேம்பாடு:

'பயணியர் எண்ணிக்கை, வருவாய் அடிப்படையில், நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், ராஜ்யசபாவில் கூறியதாவது: பயணியர் எண்ணிக்கை, வருவாய் மற்றும் மேலும் பல அம்சங்களின் அடிப்படையில், பல ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். தேவைக்கேற்ப ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும். பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில், ரயில்வே அமைச்சகம் உறுதியாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 



ரூ.143 லட்சம் கோடி!

நாட்டின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நவ., 2016ல், 91 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட நிலையில், அக்., 2017ல், இந்த எண்ணிக்கை, 153 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 143 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

-அல்போன்ஸ், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,
708 அரங்குகள் அமைப்பு: சென்னை புத்தக கண்காட்சி 10-ந்தேதி தொடக்கம்


 
41-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 ஆயிரம் புதிய தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. 
 
சென்னை, 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) தலைவர் எஸ். வைரவன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ்.சீனிவாசன், துணை தலைவர்கள் பி.மயிலவேலன், ஏ.ஆர்.சிவராமன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாச்சலம் ஆகியோர் கூட்டாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

வாசகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 41-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 10-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. இதற்காக சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 708 புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டி மீடியா 22, பொது அரங்குகள் 24 அடங்கும்.

376 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் 236 தமிழ் பதிப்பாளர்களும், 102 ஆங்கில பதிப்பாளர்களும், 14 மல்டி மீடியா பதிப்பாளர்களும், 24 பொது பதிப்பாளர்களும் அடங்குவர்.

வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் தலைப்பிலான புதிய புத்தகங்கள் இந்த ஆண்டு கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

அமைச்சர் செங்கோட்டையன்

புத்தக கண்காட்சி தொடக்க விழா 10-ந்தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பபாசியின் புரவலரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்குகிறார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். மேலும் சிறந்த பதிப்பாளர், விற்பனையாளர், எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.

திருவள்ளுவர் சிலை திறப்பு

புத்தக கண்காட்சியை பிரபலப்படுத்தும் வகையில் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கில் 8-ந்தேதி நடக்கிறது. வாசகர்களை கவரும் வண்ணம் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை புத்தக கண்காட்சி வளாகத்தில் நிறுவப்பட உள்ளது.

சிலை திறப்பு விழா 11-ந்தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முனைவர் கோ.விஜயராகவன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

பெண்களை போற்றும் விதமாக 12-ந்தேதி பெண்கள் தினமாக புத்தக கண்காட்சியில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெ.இறையன்பு, எம்.ராஜாராம், என்.சுப்பையன், ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.திருநாவுக்கரசு, பேச்சாளர்கள் பழ.கருப்பையா, கு.ஞான சம்பந்தன், சுகி சிவம் பாரதி பாஸ்கர், திரைப்பட நடிகர் சமுத்திரகனி உள்பட பல்வேறு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

புத்தக கண்காட்சி நிறைவு விழா 22-ந் தேதி (திங்கட் கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவுக்கு, மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் தலைமை தாங்குகிறார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி பேசுகிறார். எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனர் எல்.மனோகரன் வாழ்த்துரை வழங்குகிறார்.

நுழைவு கட்டணம் ரூ.10

41-வது புத்தக கண்காட்சி மாணவர்களை மையப்படுத்தி நடக்கிறது. அதன்படி 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச அனுமதி நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இலவசம். 12 வயதை கடந்தவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி செயல்படும். கண்காட்சிக்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலவசமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை, ஆதார் கார்டு சேவை போன்றவற்றிற்கும் தனியாக அரங்குகள் உள்ளன.

கார்கள் நிறுத்துவதற்கு ரூ.30-ம், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு 10 லட்சம் பேர் வந்தனர். இந்த ஆண்டு 15 லட்சம் பேர் வருவார்கள் என்று நம்புகிறோம். இதன் மூலம் ரூ.13 கோடி வருவாய் கிடைக் கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மெட்ரோ ரெயில் பணி

சென்னை அமைந்தகரையில் நடந்து வந்த ‘மெட்ரோ ரெயில்’ பணியால் கடந்த சில ஆண்டுகளாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் சென்னை புத்தக கண்காட்சி நடந்து வந்தது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்ததையடுத்து சென்னை புத்தக கண்காட்சி மீண்டும் செயின்ட் ஜார்ஜ் ஆங்கில இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 தேசிய மருத்துவ ஆணையம்
 
 
1933–ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது இந்திய மருத்துவ கவுன்சில். மருத்துவக்கல்வி, மருத்துவசேவை, மருத்துவர்களை நெறிப்படுத்துதல் போன்றவற்றை தனது தலையாய பணிகளுக்கான நோக்கமாகக் கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் இயங்கி வருகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் பற்றி சமீப காலங்களாக நிறைய புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் என்னும் அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் மக்களவையில் மத்திய அரசாங்கம் தாக்கல் செய்தது.

இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகும். ஆனால், 25 பேர்கள் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் பெரும்பாலும் மத்திய அரசாங்கம் நியமிக்கும் தேர்வுக்குழுவால் நியமனம் பெறுபவர்கள் ஆவார்கள். ஆக, தேசிய மருத்துவ ஆணையம் சுயேச்சையாக இயங்காது. மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்கும் என்று ஒரு பெரிய குறை கூறப்படுகிறது. இதில் மருத்துவர்கள் பெரும்குறையாக சொல்வது ‘ஆயுஷ்’ என்று கூறப்படும் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படித்த மருத்துவர்கள் ‘பிரிட்ஜ்கோர்ஸ்’ என்று கூறப்படும் இணைப்பு படிப்பை சிறிதுகாலம் படித்தால் அவர்களும் எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் டாக்டர்கள் போல, அலோபதி மருந்தை எழுதிக்கொடுப்பதற்கு தகுதிபடைத்தவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற மருத்துவங்கள் அலோபதி மருத்துவத்திற்கு சளைத்தது அல்ல என்று இந்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் கருத்தாகும். ஆனால், அவர்களையே அலோபதி மருத்துவத்தையும் நீங்கள் செய்யலாம் என்று கூறினால், இந்த மருத்துவத்தின் தகுதியும், மேன்மையும் பற்றி அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறதா? என்பது அலோபதி மருத்துவர்களின் கேள்வியாக இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இந்த மசோதாவில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 40 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டில் 60 சதவீதமும் நிர்ணயிக்கும் வகையில், 40 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை மட்டும் அரசே நிர்ணயிக்கும் என்று கூறியுள்ளது. மீதி 60 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை கல்லூரிகளே நிர்ணயித்தால் மருத்துவக் கல்விகட்டணம் உயரும். ஏழை மாணவர்களால் இவ்வளவு உயர்ந்த கட்டணத்தில் படிக்கமுடியாது என்பது மற்றொரு கருத்தாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், 4½ ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்பை படித்து தேர்வு எழுதி தொடர்ந்து ஒரு ஆண்டு ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வெளியே வரும் டாக்டர்கள், தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் மற்றொரு தேர்வை எழுதியபிறகுதான் டாக்டர் தொழில் செய்யமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இப்போது இந்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். பாராளுமன்ற நிலைக்குழு டாக்டர்கள் கோரிக்கைகள் உள்பட அனைத்து பிரச்சினைகளையும் ஆழமாக ஆராய்ந்து விரைவில் அறிக்கை தரவேண்டும். அதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் விரிவாக விவாதித்து தகுந்த திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதுதான் அனைவருடைய நம்பிக்கையாக இருக்கிறது.
பொங்கல் பரிசு தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வழங்கினார் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்

பொங்கல் பரிசு தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வழங்கினார் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்
 
பொங்கல் பரிசு தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 
 
 
சென்னை,

பொங்கல் பரிசு தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இன்று (சனிக்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக ரூ.210 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 7 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கிவைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக்கொண்டார்.

சென்னையில் முதல்- அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் சனிக்கிழமை (இன்று) முதல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கார்டுகளை பிரித்து 3 நாட்கள் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. எந்த நாளில் யார்? யார்? பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என்ற விவரம் ரேஷன் கடைகளில் ஓட்டப்பட்டிருக்கும்.

41st book fair to begin on January 10toi | Updated: Jan 6, 2018, 00:41 IST

Chennai: The 41st Chennai Book Fair is set to be held at St George Anglo-Indian School on Poonamallee High Road for 13 days from January 10 to 22. School education minister S A Sengottaiyan will inaugurate the fair, which is being organised by the Booksellers & Publishers' Association of South India (BAPASI).

More than 700 stalls, including 428 Tamil book stalls, 234 English book stalls and 22 multimedia stalls, will be part of the fair. Books on various subjects, including environment, architecture, food, health, cinema and music, will be on exhibition for sale. Separate stalls have been set up to sell Braille books for the blind.

Participants of the fair include Sahitya Akademi, University of Madras, International Institute of Tamil Studies, National Book Trust, Tamil Nadu textbook corporation, Thanjavur Saraswathi Mahal Library and Gandhian Literature Society.

BAPASI president S Vairavan said, "Ahead of the book fair, city schoolchildren will conduct a musical performance at the venue on Monday." The musical event will be attended by publishers, including Biplob Bhaktha of Scholastic India and journalist A Kumaresan.

As an added attraction, a massive Thiruvalluvar statue at the fair will be inaugurated by minister for Tamil official language and Tamil culture K Pandiarajan.

Art and cultural competition will be conducted for schoolchildren. Elocution contest will be held for school and college students. Short films made by budding filmmakers will get a special screening at the venue. The screenings are open for the public and will be attended by eminent film directors and actors.



NEWS TODAY 10.06.2026