Tuesday, January 16, 2018

Don’t allow wife to rob husband: Madras High Court 

DECCAN CHRONICLE.

Published Jan 16, 2018, 1:59 am IST


The petition was disposed of on July 29, 2011, granting monthly maintenance of Rs 5,000 to the wife and Rs 2,500 to the child.

Madras High Court

Chennai: The Madras high court directed family courts not to use the popular adage of ‘beg, borrow or steal’ to pay maintenance since begging and stealing are prohibited under law.

Justice RMT.Teeka Raman gave the directive while lifting the order of attachment of salary of the husband to the tune of Rs 1, 38, 750 passed by the family court in Coimbatore and remanded the matter back to the family court with a direction to redo and re-determine the balance of maintenance, if any, and pass orders within 12 weeks. The judge was allowing a petition from the husband, which challenged an order of the family court in Coimbatore, attaching his salary towards arrears of maintenance.

The couple wed in March 1991 and a girl was born to them. Due to some dispute resulting in misunderstanding between the couple, the wife filed a petition before the family court in Coimbatore for dissolution of marriage under the Hindu Marriage Act and after contest the marriage was dissolved by a judgment in January 2007 and Rs 5,000 ordered towards maintenance of the child. Thereafter, the wife filed a petition before the family court for maintenance under section 125 of Cr.P.C for herself and her minor daughter.

The petition was disposed of on July 29, 2011, granting monthly maintenance of Rs 5,000 to the wife and Rs 2,500 to the child. Subsequently, on a petition for arrears filed by her, the family court directed the husband to pay Rs 1, 38, 750 on or before a cut off date, failing which it ordered attachment of salary. Aggrieved, the husband filed the present petition.

The judge said that the claim of the wife before the family court was that she was entitled to both maintenance awards granted under two different provisions under two different acts. While dealing with the maintenance claim of the wife under various acts or laws, the court has to adjust the smaller maintenance awarded under one provision of law as against the higher maintenance award in the other, on the principle of same relief under different provisions/laws.

The judge also cautioned the family court not to compel the husband to commit the prohibited act of begging and stealing.
Cinemas still playing anthem in Chennai

By Express News Service | Published: 14th January 2018 02:15 AM |

CHENNAI: Though the Supreme Court has ordered that playing of national anthem before screening of movies at theatres is optional, cinema halls in Chennai continue with the practice. This means viewers have to stand up as a sign of respect, should the theatre management choose to play the anthem.

Abirami Ramanathan, president of Tamil Nadu Cinema Theatre Owners’ Federation, said there was no need to stop playing the anthem. “When we get the chance to spread patriotism, why not? Even people with disabilities try to stand up,” he said.

Managers at theatres added that the attitude toward the anthem too has changed over the last few months. “Earlier, many won’t stand up and we had to ask them to. Now, everybody shows deep respect,” said a manager at SPI Cinemas, who did not want to be named.

The court had on November 30, 2016, passed an order mandating all theatre owners to play the anthem before every movie. However, the law did not define how it should be respected. It did not specify the decorum that should be maintained while it was being played.

In a move to sort out these variables, the court has diluted the earlier order making it optional for the anthem to be played. A three-judge bench said it was examining the issue of respecting the anthem in depth and would come up with new rules within six months.
‘Don’t allow women to rob ex-hubbies in guise of maintenance’, says Madras HC

By Express News Service | Published: 16th January 2018 03:39 AM |

CHENNAI: The Madras High Court has advised family courts not to allow the wives to rob their ex-husbands under the guise of passing orders on maintenance cases. The judge was passing orders on a revision petition from a husband challenging the orders of a family court in Coimbatore.

“The family court shall not allow the wife to rob husband till the last penny under the guise of maintenance award under different provision of the various laws, as it is found in the instant case,” Justice Teekaa Raman said last week and set aside the maintenance order passed under section 125 of CrPC.

The judge also restrained the lower courts from using the words ‘beg, borrow, or steal’ while making husbands pay maintenance in matrimonial disputes.

When the plea came up for hearing, the judge noted that various Acts were, no doubt, enacted to enable the wife to seek maintenance from the husband. However, the same is not without checks and balances, depending on the income earned by the husband.

The courts are duty-bound to assess the situation of husband and know whether he is capable of paying the amount, before awarding such maintenance and shall not unreasonably and arbitrarily pass such awards.

Big ‘no’ to beg, steal, borrow

The Madras High Court restrained the lower courts from using the words ‘beg, borrow, or steal’ while making husbands pay maintenance in matrimonial disputes
அங்கமுத்து தற்கொலை கடிதம்: பெரியார் பல்கலை. ஊழல் பற்றி விசாரணை தேவை!

 


By DIN | Published on : 16th January 2018 07:36 PM |

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டவருமான அங்கமுத்து அவரது தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ள குற்றச்சாற்றுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அக்கடிதத்தின் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஊழலைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. இது மிகவும் கவலையளிக்கிறது.

முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவின் தற்கொலை கடிதத்தில் அவரது பணிக்காலத்தில் துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன் செய்த ஊழல்கள் குறித்தும், அதற்கு தாமும் உடந்தையாக இருந்தது குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் சுவாமிநாதன் பதவிக்காலத்தில் நிரப்பப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்பட்டுள்ளது; இணைப்புக் கல்லூரிகளில் புதிய பாடங்களுக்கு அனுமதி அளிக்க தலா ரூ.1 லட்சம் கையூட்டு வசூலிக்கப்பட்டுள்ளது; விடைத்தாள்கள் கொள்முதல் செய்வதற்கு மட்டும் மதுரை விமலா பேப்பர் நிறுவனத்திடமிருந்து ரூ.85 லட்சம் கையூட்டு பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, துணைவேந்தர் சுவாமிநாதனின் ஊழல்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக தமக்கு அவர் ரூ.10 கோடி கமிஷன் கொடுத்ததாகவும், ஊழல் குறித்த அனைத்து ஆவணங்களையும் சுவாமிநாதன் எடுத்துச் சென்று விட்டதாகவும் அங்கமுத்து கூறியுள்ளார்.

 அங்கமுத்து கூறியுள்ள குற்றச்சாற்றுகள் எதுவும் புதியதல்ல. இந்தக் குற்றச்சாற்றுகள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், நானும் பல தருணங்களில் அம்பலப் படுத்தியுள்ளோம். பா.ம.க. முன்வைத்த குற்றச்சாற்றுகளை அங்கமுத்துவின் தற்கொலைக் கடிதம் உறுதி செய்துள்ளது. அங்கமுத்துவின் தற்கொலைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்களில் ஒரு சிறு பகுதி மட்டும் தான். இதை விட பல மடங்கு ஊழல்கள் அங்கு நடந்துள்ளன. பல்கலைக்கழக பேராசிரியர்கள் செய்த தவறுகள் குறித்து தங்களுக்கு வேண்டியவர்கள் மீது புகார் கடிதங்களை அனுப்ப வைத்து, அதனடிப்படையில் பேராசிரியர்கள் மீது விசாரணைக்கு ஆணையிடுவது, விசாரணைக்கு ஆளாக்கப்படும் பேராசிரியர்களை குற்றச்சாற்றுகளில் விடுவிக்க தமது தரகர்கள் மூலம் பேரம் பேசி பணம் வசூலிப்பது என விதவிதமான ஊழல்களை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனும் அவரது குழுவினரும் செய்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

சுவாமிநாதன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகள் அனைத்தையும் நிரூபிக்க அங்கமுத்து தற்கொலை கடிதம் ஒன்றே போதுமானது. அங்கமுத்து இந்த ஊழல் வளையத்திற்கு வெளியில் இருந்தவர் அல்ல. அவரும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனின் ஊழல் கூட்டாளி தான். சுவாமிநாதனுக்கு பணம் வாங்கிக் கொடுத்து, அதற்கான தரகுத் தொகை வாங்கிக் கொள்ளும் தரகராகத் தான் அங்கமுத்து செயல்பட்டுள்ளார். தம்மை மாட்டி விட்டு, சுவாமிநாதன் தப்பித்துக் கொள்ள முயன்றதால் தான் வேறு வழியின்றி அங்கமுத்து தற்கொலை கொண்டார். அதனால் அங்கமுத்துவின் தற்கொலை கடிதத்தை அவரும், சுவாமிநாதனும் செய்த ஊழல்களுக்கான ஒப்புதல் வாக்குமூலமாகத் தான் கருத வேண்டும்.

சுவாமிநாதன் துணைவேந்தராக பணியில் இருந்த போதே அவர் மீது ஏராளமான ஊழல் புகார்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்தது. அவர் மீது விசாரணை நடத்த கையூட்டுத் தடுப்புப் பிரிவும் ஆயத்தமானது. ஆனால், அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பனும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் தான் அவரைக் காப்பாற்றினார்கள். இப்போது கூட பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக குழந்தைவேலு என்பவர் நியமிக்கப்பட்டதற்கு காரணம் ஊழல் குற்றச்சாற்றுகளில் இருந்து சுவாமிநாதனைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான். சுவாமிநாதன் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்றிய போது அவருக்கு துணையாக இருந்தவர் குழந்தைவேலு. அவரை பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்தால் சுவாமிநாதன் மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றுவார் என்பதற்காகவே ஆட்சியாளர்களின் ஆலோசனைப்படி அவருக்கு துணைவேந்தர் பதவி தரப்பட்டுள்ளது.

பேராசிரியர்கள் நியமனம், கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவற்றில் ஊழல் நடப்பது பெரியார் பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடக்கும் ஒன்றல்ல. தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இத்தகைய ஊழல் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் கல்விக்கூடங்கள் அனைத்தும் கொள்ளைக்கூடங்களாக மாறி விட்டன. பெரியார் பல்கலைக் கழகத்தில் சுவாமிநாதன் துணைவேந்தராக இருந்த போது நடைபெற்ற ஊழல்கள் குறித்தும், அவருக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள், உயர்கல்வித்துறை செயலாளர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களில் நடந்த இதேபோன்ற ஊழல்கள், துணைவேந்தர் நியமன ஊழல்கள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.
தை அமாவாசையில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

Published on : 16th January 2018 01:00 PM |



இன்று தை அமாவாசை. இந்த நன்னாளில் நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய நாள்.
 
ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியம்.

இன்றைய தினத்தில் செய்ய வேண்டியவை

தர்ப்பணம் செய்த பின் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்கலாம்.



வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாகப் பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுதல் கூடாது.


புத்தரிசியில் கொண்டாடுகிறோமா?

By ஆர். தங்கராஜு | Published on : 16th January 2018 01:06 AM |

உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல் உள்ளிட்ட தானியங்களை மார்கழியில் வீட்டுக்கு கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப் பொங்கல். 


உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்முடன் சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாகப் புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என, பொங்கல் வைக்க எல்லாமே புதிதாக வைத்து பொங்கல் விழாவைக் கொண்டாடி, பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகிறோம்.
நவீன விஞ்ஞான மற்றும் தொழில் வளர்ச்சியால் நமது பண்பாட்டுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் வகையில் பாரம்பரிய விழாக்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
வழக்கமாக ஜூன் மாதம் குறுவை தொடங்கி அதை முடித்து, பிறகு சம்பாவை தொடங்கி, ஜனவரி தொடக்கத்திலிருந்து அறுவடை செய்து, பொங்கலுக்குப் புது அரிசி, புதுப் பானை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு பண்டிகைக்குத் தயாராவோம்.


காலச் சூழலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் தொன்மையைப் பின்பற்றுவதிலிருந்து விலகுகிறோமா என்ற கேள்வி எழுகிறது.


காவிரிப் பிரச்னையால் தமிழக விவசாயிகள் வழக்கத்தைவிட கடந்த ஏழு ஆண்டுகளாக அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக குறுவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத நிலையில், முப்போகம் சாகுபடி இரு போகமாகி, பிறகு ஒரு போக சம்பா சாகுபடி என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலை கடந்த இரு ஆண்டுகள் மட்டுமே தொடர்ந்த நிலையில், நிகழாண்டு வழக்கமான குறுவை பொய்த்துப் போனது. ஒரு போக சம்பாவாவது நடைபெறும் என்ற நிலையில், அதுவும் கேள்விக்குறியானது.


பிறகு, கால தாமதமாக கிடைத்த குறைந்த அளவு காவிரி நீரைக் கொண்டு சம்பா பணியைத் தொடங்கினர் விவசாயிகள். பயிர் சற்றே வளரத் தொடங்கிய நிலையில், செப்டம்பர், அக்டோபரில் பெய்த மழையைத் தொடர்ந்து, முளைப்பு கண்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியது. எஞ்சிய பயிர்களை விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வளர்த்தனர்.
தற்போது, அந்தப் பயிரையும் பாதுகாக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, நிகழாண்டு சம்பாவும் பொய்த்துப் போனது என்றே கூறலாம்.
லட்சக்கணக்கான ஹெக்டேரில் குறுவை, சம்பா சாகுடி செய்த தமிழகத்தில் மிகமிக குறைந்த அளவில் ஆழ்குழாய் பாசனம் உள்ள பகுதிகளில் மட்டும் சாகுபடிக்கு சாத்தியப்பட்டுள்ளது.
ஆகவே, பாரம்பரியம், பண்பாட்டைச் சார்ந்திருக்கும் விவசாயத் தொழிலை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் பொங்கல் விழாவில், பழைய பாரம்பரியத்தை தொடர்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. 


புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என எல்லாம் புதிதாக வைத்து பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்து, கொஞ்சம் செய்திருந்த விவசாயமும் இன்னும் அறுவடைக்குத் தயாராகவில்லை என்பதே ஊரறிந்த உண்மை.
பொங்கல் விழாவை எப்படியேனும் கொண்டாடி விடுவோம், ஐயமில்லை! ஆனால், புத்தரிசியில் பொங்கல் கொண்டாடுகிறோமா என்றால் இல்லை என்று கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.


மண் பானைக்குப் பதில் குக்கர், புது அரிசிக்குப் பதில் பழைய அரிசியில் பொங்கல், கால்நடைகளுக்கு அணிவிக்கும் பிளாஸ்டிக் நெட்டி மாலைகள் என பாரம்பரியம், தொன்மை, வழக்கத்தின் தன்மைகள் மாறி வருகின்றன. 


தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் மேலும் செழித்து உயிரோட்டமாக இருக்க மரபு விழாக்களில் தொன்மையைப் பின்பற்ற வேண்டும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய வாழ்வியல் அமைந்திருப்பதால், விவசாயத்துக்குத் தேவையான நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டும். 


முன்னோடித் தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி, கடைசி சொட்டு நீரையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். ஏரி, குளங்களில் தண்ணீர் வரத்துக்கும், வெளியேற்றத்துக்கும் தனித்தனித் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தன. 


ஏரி, குளங்களில் தேங்கும் அதிமான நீர் தானாக தாழ்வான பகுதிக்கு ஊடுருவி, அடுத்தடுத்து ஏரி, குளங்களில் தண்ணீர் போய்ச் சேரும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
தற்போது, ஏரி, குளம், தண்ணீர் வரத்து வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இயற்கை வழிபாட்டு விழாவாகப் பொங்கலைக் கொண்டாடும் நிலையில், இயற்கையை அழித்து அதற்கு எதிர்மறையாக நடக்கும் நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்.
சடங்குக்காக, சந்தோஷத்துக்காக பொங்கலை கொண்டாடாமல், பாரம்பரியத்தைப் பின்பற்றவும், நீர்வளத்தைப் பெருக்க மரம் வளர்ப்பது, மாசுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் வருகை; கழிவறையில் அமர வைக்கப்பட்ட நோயாளி

Added : ஜன 16, 2018 01:35


 புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, சுகாதார அமைச்சர் வந்ததால், நோயாளியை கழிவறையில் அமர்த்திய மருத்துவமனை நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 20 நாட்களுக்கு முன், அறந்தாங்கியை சேர்ந்த பஷீர்அலி,48 அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உறவினர்கள் கைவிட்டதால், யார் ஆதரவுமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், பஷீர் அலிக்கு யாரும் இல்லாததால், அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த, மருத்துவமனை நிர்வாகம், ஐந்து நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்துள்ளது. இதையடுத்து செய்வது அறியாமல் தவித்த பஷீர் அலி, மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு நுழைவு வாயில் கதவு முன், இருந்துள்ளார். யார் ஆதரவுமின்றி தவித்த பஷீர் அலிக்கு, அதே மருத்துவமனையில், தன் மனைவியின் சிகிச்சைக்காக வந்திருந்த ஒருவர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சி.டி., ஸ்கேன் திறக்க, தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். அமைச்சர் வருகையால், மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு நுழைவாயில் கதவு முன் இருந்த பஷீர் அலியை, மருத்துவமனை நிர்வாகம் புறநோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறையில் அமர்த்தியுள்ளது. அவருக்கு உதவி செய்து வந்தவரும், மனைவிக்கு உடல்நலம் சரியானதால், நேற்று மருத்துவமனையிலிருந்து சென்று விட்டார்.

இந்நிலையில் யார் ஆதரவுமின்றி மருத்துவமனை கழிவறை அருகே, பஷீர்அலி மருத்துவ உதவியின்றி தவித்து வருகிறார். இந்த தகவல் வெளியே பரவியதால், அதிர்ச்சி அடைந்துள்ள சமூக ஆர்வலர்கள், மனிதநேயமற்ற மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்துள்ளனர்.

NEWS TODAY 11.06.2026