Monday, April 16, 2018

திருமலை காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு பொங்கலுடன் சட்னி

Added : ஏப் 16, 2018 05:12

திருப்பதி: திருமலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில், பொங்கல் மற்றும் உப்புமா உள்ளிட்ட சிற்றுண்டிகளுடன், சட்னி வழங்கும் நடைமுறையை, தேவஸ்தானம் துவங்கி உள்ளது.திருப்பதி, திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம், 24 மணிநேரமும் அன்னதானம், சிற்றுண்டி, டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. காத்திருப்பு அறைகளிலும், பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளிலும், அன்னதானம், சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல், ரவை, சேமியா உப்புமா உள்ளிட்டவை வழங்கும் போது, அதற்கு இணையாக சட்னியும் வழங்க வேண்டும்' என, மாதந்தோறும், குறைகேட்பு நிகழ்ச்சியில், பக்தர்கள் தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதையேற்று, தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பொங்கல் மற்றும் உப்புமா சிற்றுண்டிகளுடன், வேர்கடலை சட்னி வழங்கும் நடைமுறையை துவங்கி உள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.தற்போது, தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், தமிழ் புத்தாண்டு முதல் திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.அதனால், இதற்கு முன் தர்ம தரிசனத்தில், 3 மணிமுதல், 4 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வந்த பக்தர்கள், தற்போது, 15 மணிநேரம் காத்திருக்கின்றனர்.எனவே தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களின் காத்திருப்பு சிரமத்தை குறைக்க, தர்ம தரிசன பக்தர்களுக்கு, விரைவில், நேர ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
அரசு பெண் ஊழியர்கள் வெளிநாடு செல்ல சலுகை

Added : ஏப் 16, 2018 04:30

புதுடில்லி: 'மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், சி.சி.எல்., எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுப்பில், வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்' என, பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

அனுமதி : மத்திய அரசு பணியாளர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை விபரம்:மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு, அவர்களது குழந்தைகளுக்கு, 18 வயது ஆகும் வரை, சி.சி.எல்., எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுப்பு அளிக்கப்படுகிறது. தங்கள் பணிக்காலத்தில், 730 நாட்கள், சி.சி.எல்.,லாக, அவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.இந்த விடுப்பில் செல்வோர், வெளிநாட்டு பயணம் செல்லவும், தற்போது அனுமதி அளிக்கப்பட உள்ளது. சி.சி.எல்., விடுப்பு காலத்தில், எல்.டி.சி., எனப்படும், சுற்றுலா விடுப்பு சலுகையையும், அரசு ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.விடுமுறைஎல்.டி.சி.,யில், சுற்றுலா பயணம் செல்லவும், திரும்பி வரவும் ஆகும் செலவு தொகையை பெற்றுக் கொள்ளலாம்; சுற்றுலா பயண நாட்கள் விடுமுறை நாட்களாக கருதப்படும். சி.சி.எல்.,லில் வெளிநாட்டு பயணம் செல்ல, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், முன் அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


திணறல்!

ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் ஆந்திர அரசு...
நிதி பற்றாக்குறை, மென்பொருள் பிரச்னையால் சிக்கல் 

dinamalar 16.04.2018

அமராவதி : ஆந்திர அரசில் நிலவும் நிதிப் பற்றாக்குறை மற்றும் மென்பொருள் கோளாறால், ஒரு மாதத்துக்கும் மேல், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பில்களுக்கு, பணம் செலுத்தும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; ஆந்திர அரசில் பணியாற்றும், 7.9 லட்சம் ஊழியர்களில், 22 ஆயிரம் பேர், மார்ச் மாத சம்பளத்தை, இன்னும் பெற முடியாமல் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.





ஆந்திராவில், தெலுங்கு தேசத் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிந்ததை அடுத்து, அமராவதியில் புதிய தலைநகரை நிர்மாணிக்கும் பணியில், முதல்வர், சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். இம்மாநிலத்தில், போலாவரம் நீர் பாசன திட்டம் உள்ளிட்ட மேலும் பல பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி வந்து சேராததால், ஆந்திர அரசு, கடும் நிதி பற்றாக்குறையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆந்திர அரசின் நிதித்துறை தொடர்பான மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பில்களுக்கு, குறித்த நாளில் பணம் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில், 7.9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாத முடிவில் சம்பளம் அல்லது ஓய்வூதியம், அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும். ஆனால், ஆந்திர அரசில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி மற்றும் மென்பொருள் பிரச்னையால், கடந்த மாதம், குறித்த நாளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழக்கமான நாளில் சம்பளம் தரப்படவில்லை.

தீவிர முயற்சி :

மென்பொருள் கோளாறால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களில் பெரும்பாலானோருக்கு, இம்மாதம், 7ம் தேதி தான் சம்பளம் தரப்பட்டுள்ளது. அதிலும், 22 ஆயிரம் அரசு ஊழியர்கள் இன்னும் சம்பளம் கிடைக்காமல் சிரமப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. மென்பொருளில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய, நிதித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, ஆந்திர நிதித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிற்பட்ட மாவட்டங்கள் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், போலாவரம் திட்டத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து, 3,000 கோடி ரூபாய் வர வேண்டும். மத்திய அரசு தரவேண்டிய நிதியுதவி தாமதமாகி வருவதால், ஆந்திர அரசின் நிதி இருப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 8,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு, பல்வேறு காரணங்களை கூறி நிறுத்தி வைத்துள்ளது.

மாநில அரசு, சமீபத்தில், விரிவான நிதி மேலாண்மை தொழில்நுட்ப நடைமுறையை அமல்படுத்தியது. இத்திட்டம், ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா கட்டமைப்பை உருவாக்கும்.

பாதிப்பு :

இருப்பினும், இந்த மென்பொருள் கட்டமைப்பை பயன்படுத்த, ஆந்திர அரசு ஊழியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படவில்லை. பழைய மென் பொருளில் இருந்து, புதிய மென்பொருளுக்கு மாறுவதில் சில நடைமுறை பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன; அவை சரி செய்யப்பட வேண்டும். இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, சம்பளம் செலுத்தும் பணி முடங்கியது. ஆந்திர அரசின் பல திட்ட பணிகளுக்கான பணப் பட்டுவாடாவும், பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில், 175 சட்டசபை தொகுதிகளில், கலாசார நிகழ்ச்சிகள், அரசு சார்பில் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற கலைஞர்களுக்கு, இதுவரை சம்பளம் தரப்படவில்லை. அந்த கலைஞர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் கூட தர முடியாதது வருந்தத்தக்க விஷயம்.

கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு, ஆந்திர அரசு, மூன்று கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்து உள்ளது. சம்பளம் இன்றி வேலை செய்ய, பெரும்பாலான நடன ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். இதனால், குச்சுபுடி நடனத்தை மக்களிடம் சென்றடையச் செய்யும் மாநில அரசின் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மகிழ்ச்சியில் ஜெகன்; பீதியில் சந்திரபாபு :



ஆந்திர அரசு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலம் தழுவிய யாத்திரை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், அவரது யாத்திரை, விஜயவாடாவுக்கு வந்தபோது, ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டு, வரவேற்பு அளித்தனர். இதுவரை, 1,780 கி.மீ., யாத்திரையை நிறைவு செய்துள்ள ஜெகன், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், யாத்திரை செல்லும் வகையில், அதன் வழித்தடத்தை அமைத்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் பேசும்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்து விட்டதாக வலியுறுத்தி வருகிறார். அவரது பேச்சுக்கு, ஆந்திர மக்களிடையே, பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாலும், அவரைக் காண, ஏராளமான கூட்டம் கூடுவதாலும், சந்திரபாபு நாயுடு கலக்கம் அடைந்துள்ளார். இந்த பிரச்னையை சமாளிக்கும் வகையிலேயே, மத்திய அரசுக்கு எதிராக, 20ம் தேதி, உண்ணாவிரத போராட்டத்துக்கு, சந்திரபாபு ஏற்பாடு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாஜி,தலைமை செயலர்,ராவ்,மந்திரி,தங்கமணி,பாய்ச்சல்dinamalar 16.04.2018

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், பொய்யான தகவல்களை கூறியுள்ளார். சசிகலா குடும்ப துாண்டுதலால், அவர் தடம் மாறி பேசுகிறார். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க நாங்கள் வலியுறுத்தினோம்,'' என, தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்துள்ளார்.





ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், சமீபத்தில், இந்த கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, 'உடல் நலக்குறைவால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றார். 2016 செப்., 28ல்,

மருத்துவமனையில், காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை :

கூட்டத்தில், அப்போதைய அமைச்சர்கள், பன்னீர் செல்வம், பழனிசாமி, சீனிவாசன், விஜயபாஸ்கர் மற்றும் லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், அப்போதைய அரசு ஆலோசகர், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் பங்கேற்றனர்.

'அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவை, வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. 'ஆனால், அமைச்சர்கள் தடையாக இருந்தனர். ஜெ., இறந்த போது, அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்' என, ராவ் தெரிவித்ததாக, தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 'விசாரணை கமிஷனில், ராமமோகன ராவ், பொய்யான தகவல்களை கூறியுள்ளார்' என, மின் துறை அமைச்சர் தங்கமணி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, நாமக்கல்லில் நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். யாரையோ திருப்திப்படுத்த, தவறான தகவலை கூறுகிறார். ஜெயலலிதாவை, சிகிச்சைக்காக, வெளிநாடு அழைத்து செல்ல, நாங்கள் தடையாக இருந்ததாக, அவர் கூறுவது தவறானது.

உள்நோக்கம் :

சிகிச்சை அளிக்க, வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என, நாங்கள் வலியுறுத்தினோம்; அவர் தான், முடிவு எடுக்கவில்லை. ஜெயலலிதா இறந்த போது, நானும், அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் அங்கிருந்ததாக, ராமமோகன ராவ் கூறுவதும் தவறு. அப்போது, நான், அமைச்சர் சரோஜா, சுந்தரம், எம்.பி., ஆகியோர், நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பட்டி கோவில் விழா ஒன்றில், ஜெ., நலம் பெற யாகம் நடத்திக் கொண்டிருந்தோம். அமைச்சர் வேலுமணி, திருவனந்தபுரத்தில், அரசு தொடர்பான நிகழ்ச்சியில் இருந்தார்.

ஜெ., மரணம் அடைந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், ராமமோகன ராவ் இவ்வாறு கூறுவதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது. சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் துாண்டுதலில், அவர் தடம் மாறி பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

- நமது நிருபர் -

Related Tags மாஜி தலைமை செயலர் ராவ் மந்திரி தங்கமணி பாய்ச்சல்


மாவட்ட செய்திகள்

சேலம் ஜங்சன் வழியாக செல்லும் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்



சேலம் ஜங்சன் வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16, 2018, 04:15 AM
சூரமங்கலம்,

இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் ரெயில்நிலையம் அருகே உள்ள போடி நாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணாநகர் பகுதிகளை சேலம் நகரத்துடன் இணைக்கும் சிறிய நீர்வழிப்பாலத்தை மாற்றி, பெரிய தரை கீழ்பாலமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நீர்வழிப்பாதை மழைநீர் வடிகாலுக்கு அமைக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் அதை ரெயில் தடத்தை கீழே கடக்க பயன் படுத்தி வந்துள்ளனர்.

ஆனாலும், மழை காலத்தில் அங்கே பெருமளவு நீர் தேங்குவதால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், ரெயில்தடத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த சிறுபாலம் சேலம் ரெயில்நிலையத்தின் மிக அருகில் 1 கி.மீ. தூரத்தில் இருப்பதால், பெருமளவு ரெயில் இயக்கம் பாதிக்கப்படும் காரணத்தால், இதனை இடித்து அகலப்படுத்தும் அல்லது மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட இயலவில்லை.

போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணா நகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன் பெறும் வகையில், இந்த பகுதிகளை சேலம் நகரத்துடன் இணைக்கும் வகையிலும், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, பன்னீர்செல்வம் எம்.பி. ஒத்துழைப்புடன், தெற்கு ரெயில்வே தலைமையக அதிகாரி களுடன் கலந்தாலோசித்தார். பின்னர் அவர், அந்த இடத்தில் பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்கள் கூட வந்து செல்லும் அளவுக்கு ஒரு பெரிய தரை கீழ்பாலத்தை கட்ட பணிகளை இன்று (திங்கட் கிழமை) தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த பெரிய அளவிலான மெகா பிளாக் என்றழைக்கப்படும் பணிகளால், பயணிகள் ரெயில்களின் இயக்கம் இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாவதுடன், சரக்கு ரெயில்களின் இயக்கம் இன்று மற்றும் 20-ந் தேதி முழுமையாக நிறுத்தப்படும். இந்த காலக்கட்டத்தில் 26 கான்கிரீட் கூடுகள் செய்யப்பட்டு ரெயில்தடத்தின் கீழ் நிறுவப்பட உள்ளன.

இந்த பணிகள் நடைபெறுவதன் மூலம் சுமார் 50 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, அண்ணாநகர் பகுதி மக்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு, அப்பகுதியை சேலம் நகரத்துடன் இணைக்க உதவும். இந்த தரை கீழ்பாலப் பணிகள் ரூ.2.83 கோடி திட்ட மதிப்பீட்டில், பன்னீர்செல்வம் எம்.பி., வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் தமிழக அரசு, சேலம் மாநகராட்சியின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
மாநில செய்திகள்

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க மாணவிகளை கட்டாயப்படுத்திய பேராசிரியை ‘வாட்ஸ்-அப்’பில் ஆடியோ பரவியதால் பணியிடை நீக்கம்



அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்- அப்’பில் பரவியது. இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஏப்ரல் 16, 2018, 04:00 AM

அருப்புக்கோட்டை,

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்- அப்’பில் பரவியது. இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உரையாடல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் 4 மாணவிகளுடன் செல்போனில் பேசிய பேச்சு ‘வாட்ஸ்-அப்’பில் பரவி வருகிறது. மாணவிகள் 4 பேரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்துகொண்டு பேசும் அந்த பேராசிரியை, தான் சொல்லவரும் தகவல் ரகசியமாக இருக்கவேண்டியது என கூறுகிறார்.

தற்போதுதான் பல்கலைக் கழகத்தில் இருந்து வந்தேன். உயர் அதிகாரிகள் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்க்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் பண்ண முடியும். உங்கள் பெயர்கள் பட்டியலில் இடம்பெற நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரெகுலர் கிளாஸ் அட்டண்ட் பண்ணவேண்டாம். டி.என். பி.எஸ்.சி. தேர்வாக இருந்தால்கூட சரிதான். எல்லாவற்றுக் கும் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட் தேவைப்படுகிறது. நீங்கள் ஓசூருக்கு வந்துவிடுங்கள்.


20 நிமிடம்

என்னைப்போல 400 பேர் இருக்கிறார்கள். உங்களுக்கு டிகிரி வாங்கிக்கொடுப்பதில் நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் தண்டனை கொடுக்கமாட்டேன். உங்களை கைதூக்கிவிடவே அழைக்கிறேன். இந்தக்காலத்தில் இப்போது நான் பேசும் விஷயம் ரொம்ப சாதாரணம் என்பது உங்களுக்கும் தெரியும், உலகத்துக்கும் தெரியும். எனக்கும் தெரியும். இதை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறாக அந்த உரையாடல் உள்ளது.

மாணவிகள் இது வேண்டாம் என்று மறுத்தபோதும், அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, பொறுமையாக யோசித்து கூறுங்கள் எனவும் அந்த பேராசிரியை பேசியுள்ளார். சுமார் 20 நிமிடம் அந்த பேச்சு உள்ளது.

பணியிடை நீக்கம்

இந்த வாட்ஸ்-அப் உரையாடல் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பேராசிரியையை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Sunday, April 15, 2018


பெண் குழந்தைகள் மீதான வன்முறை... திகைக்க வைக்கும் எக்ஸ்பிரஸ் 'ஜாமீன்'!

ஜெ.பிரகாஷ்
Chennai: 

vikatan  15.04.2018

பனிபடர்ந்த காஷ்மீரில்... எப்போதும் குண்டுச் சத்தத்துக்காக மட்டும் குரல் கொடுத்துவந்த இந்த உலகம், இப்போது பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட எட்டு வயது காஷ்மீர் குழந்தைக்காகக் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்று சொல்லும் இந்த உலகில்தான், பெண் சிசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துகொண்டிருக்கின்றன.

சுதந்திரமாகக்கூடச் செல்ல முடியாத நிலை!

ஒருகாலத்தில் கள்ளிப்பாலுக்கு இரையான பெண் குழந்தைகள், அடுத்து தாயின் கருவறையிலேயே அழிக்கப்பட்டன. ஆனால், அதைவிடக் கொடுமை... இன்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் பலிகடாவாக்கப்படுகின்றன. இதையெல்லாம் தினம் பார்க்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு சாமான்யர், “பெண் குழந்தைகள் பிறப்பது தவறா அல்லது அவர்கள் இந்தச் சமுதாயத்தில் வளர்வது தவறா”என்று கேள்வி கேட்கிறார், வேதனையுடன். ஆம், அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. இன்றைய குழந்தைகளைப் பொறுத்தவரை ஏதோ ஒருவகையில் பெரும்பாலும் உடல், உணர்வு, பாலியல்ரீதியான தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர். பள்ளிக்கு, பக்கத்து வீட்டுக்கு என அவர்கள் சுதந்திரமாகக்கூடச் செல்ல முடியாத நிலையல்லவா இன்று உருவாகிவிட்டது. இல்லையில்லை, பாதுகாப்புடன் அல்லவா அழைத்துச் செல்லக்கூடிய நிலை வளர்ந்திருக்கிறது?



பெண்களையே மிரட்டுகிற உலகம்!

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய காலம்போய்... பெண் விடுதலைக்கு எதிராகப் போராடிய காலம்போய்... இன்று பெண் சிசுக்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகப் போராடும் காலம் வந்துவிட்டது. ஓடும் பேருந்தில் நிர்பயாவுக்கு ஏற்பட்ட கதியையே இன்னும் மறக்காமல் இருக்கும் நாம், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களால் இன்னும் பல நிர்பயாக்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதுதானே உண்மை. பாலியல் சீண்டல்களால் இன்னும் எத்தனையோ பெண்கள் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதும், அழிந்துகொண்டிருப்பதும் வெளியில் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லத் தயங்குவது ஒருபுறம் என்றால், அப்படிப் பாதிக்கப்பட்ட பெண்களையே மிரட்டுகிற உலகம் இன்னொருபுறம்.

ஓட்டைவிழும் சட்டங்கள்!

“இப்போதிருக்கும் சட்டங்களே போதும். அதுவே, கடுமையானவை” என்கிறார்கள் வழக்கறிஞர்கள். ஆனால், அதன்மூலம் நீதிபெறுவதற்குள் பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் எந்த அளவுக்குப் பாதிக்கிறார்கள் என்பதற்கு உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடந்திருக்கும் சம்பவமே ஓர் உதாரணம். சட்டங்கள் கடுமையாய் இருந்து என்ன பலன்? பல சட்டைகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறப்பதால்தானே சட்டங்களிலும் ஓட்டை விழுகிறது. அதன் விளைவுதான், இமயம்முதல் குமரிவரை நிர்பயாக்களும், ஹாசினிகளும் பலிகடாவாக்கப்படுகின்றனர்.



தப்பிவிடும் பாலியல் குற்றவாளிகள்!

வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, ‘இவன் ஒரு பாலியல் குற்றவாளி. உளவியல்ரீதியாகப் பாதிப்புடையவன். இவனிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்’ எனப் பொது இடங்களில் விளம்பரம் செய்வார்கள். இல்லையேல், அதுபோன்று தீங்கிழைத்தவனைப் பொதுஇடத்தில் கட்டிவைத்துக் கல்லால் அடித்துக் கொல்வார்கள். ஆனால், இங்கு பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் தண்டனையே பெறாமல் தப்பிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? உடனே விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்காததால்தானே? குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அளிக்கலாம். அதிகபட்சம் ஓராண்டுக்குள் வழக்கின் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிறது பாக்ஸோ. குற்றங்கள் மட்டுமே பெருகி நிற்கும் இந்தியாவில், குறைந்த அளவில்கூடப் பாலியல் வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதுதானே உண்மை. கடந்த 2015-ம் ஆண்டு, இந்தியாவில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 14,913-ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சிறுமிகளின் எண்ணிக்கை!

இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வழக்கில் குற்றவாளிக்கு 37 நாள்களில் ஜாமீன் கிடைத்துவிடுகிறது. ஏன், ஹாசினி வழக்கில் சம்பந்தப்பட்ட தஷ்வந்துக்குக்கூட விரைவாகவே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியிருந்தால், நீதி எப்படி நிலைநாட்டப்படும் என்பதே சாமான்யர்களின் கேள்வியாக இருக்கிறது. இதைவிடக் கொடுமை, பாதிக்கப்படும் சிறுமிகளின் குடும்பம் ஏழையாய் இருந்துவிட்டால் போதும், அவர்களின் கதி அதோ கதிதான். இந்த அவலநிலை இந்தியாவில் தவிர, வேறெங்கும் இல்லை. அதனால்தான், “இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் சிதைத்துக் கொல்லப்படும் சிறுமிகளின் எண்ணிக்கையைவிட, சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம்” என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.



“உரிய நீதி கிடைக்கும்!”

“பதவியில் இருப்போரும், பணத்திமிறில் இருப்போரும் இதுபோன்ற தவறுகளைச் செய்துவிட்டு, அவர்களைப் பயமுறுத்தி வைப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்” என்று அவர்கள் மேலும் விளக்கம் கொடுக்கின்றனர். “வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்வது ஒவ்வோர் இந்தியரின் கடமையாகும்”என்று கடந்த பிப்ரவரி மாதம், ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் உரையாற்றியிருந்தார் பிரதமர் மோடி. அவர் சொல்லி இரண்டு மாதங்கள்கூடக் கடக்காத நிலையில் அவருடைய கட்சி, ஆட்சி செலுத்தும் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில்தான்... அவர் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ-வாலேயே ஒரு பெண் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அவருடைய தந்தை சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இது ஒருபுறமிருக்க... மறுபுறம் காஷ்மீரில் அந்தக் குழந்தை சிதைக்கப்பட்டிருக்கிறாள். இதைக் கண்டு கொதித்தெழும் பெண்கள் அமைப்பினர், “பிரதமர் மோடி விரும்பும் டிஜிட்டல் இந்தியா இதுதானா” என்று கேள்வி எழுப்புகின்றனர். “பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள். நமது குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கும்” என்று அழுத்தமாய்ப் பதில் தருகிறார் மோடி. ஆனாலும், எல்லா வழக்குகளிலும்... விசாரணைகள் எப்போதும்போல் அலட்சியமாகவும்... ஆளும் அதிகாரத்துக்குச் சாதகமாகவுமே இருக்கின்றன.

இதுபோன்ற குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து பெருகுமானால், “பெண்கள் வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைவதால், விடுதலை வேட்கை பிறப்பது அரிது” என்ற தந்தை பெரியாரும், “பெண்மீது ஆண் திணித்திருக்கிற எல்லாக் கோட்பாடுகளையும் மீறாதவரை பெண்ணுக்கு விடுதலையே இல்லை” என்று எழுதிய அண்ணல் அம்பேத்கரும் மீண்டும் பிறக்க வேண்டிய காலம் வெகுதூரத்தில் இல்லை.


NEWS TODAY 27.06.2026