Monday, April 16, 2018

மாநில செய்திகள்

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க மாணவிகளை கட்டாயப்படுத்திய பேராசிரியை ‘வாட்ஸ்-அப்’பில் ஆடியோ பரவியதால் பணியிடை நீக்கம்



அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்- அப்’பில் பரவியது. இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஏப்ரல் 16, 2018, 04:00 AM

அருப்புக்கோட்டை,

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்- அப்’பில் பரவியது. இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உரையாடல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் 4 மாணவிகளுடன் செல்போனில் பேசிய பேச்சு ‘வாட்ஸ்-அப்’பில் பரவி வருகிறது. மாணவிகள் 4 பேரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்துகொண்டு பேசும் அந்த பேராசிரியை, தான் சொல்லவரும் தகவல் ரகசியமாக இருக்கவேண்டியது என கூறுகிறார்.

தற்போதுதான் பல்கலைக் கழகத்தில் இருந்து வந்தேன். உயர் அதிகாரிகள் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்க்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் பண்ண முடியும். உங்கள் பெயர்கள் பட்டியலில் இடம்பெற நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரெகுலர் கிளாஸ் அட்டண்ட் பண்ணவேண்டாம். டி.என். பி.எஸ்.சி. தேர்வாக இருந்தால்கூட சரிதான். எல்லாவற்றுக் கும் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட் தேவைப்படுகிறது. நீங்கள் ஓசூருக்கு வந்துவிடுங்கள்.


20 நிமிடம்

என்னைப்போல 400 பேர் இருக்கிறார்கள். உங்களுக்கு டிகிரி வாங்கிக்கொடுப்பதில் நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் தண்டனை கொடுக்கமாட்டேன். உங்களை கைதூக்கிவிடவே அழைக்கிறேன். இந்தக்காலத்தில் இப்போது நான் பேசும் விஷயம் ரொம்ப சாதாரணம் என்பது உங்களுக்கும் தெரியும், உலகத்துக்கும் தெரியும். எனக்கும் தெரியும். இதை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறாக அந்த உரையாடல் உள்ளது.

மாணவிகள் இது வேண்டாம் என்று மறுத்தபோதும், அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, பொறுமையாக யோசித்து கூறுங்கள் எனவும் அந்த பேராசிரியை பேசியுள்ளார். சுமார் 20 நிமிடம் அந்த பேச்சு உள்ளது.

பணியிடை நீக்கம்

இந்த வாட்ஸ்-அப் உரையாடல் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பேராசிரியையை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...