Sunday, April 29, 2018

மாவட்ட செய்திகள்

அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க செல்போனில் புகார் தெரிவிக்கலாம், ராஜபாளையம் எம்.எல்.ஏ. வேண்டுகோள்






அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க பொதுமக்கள் செல்போனில் புகார் தெரிவிக்கலாம் என்று ராஜபாளையம் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 28, 2018, 03:30 AM ராஜபாளையம்,

ராஜபாளையம் எம்.எல்.ஏ. விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-ராஜபாளையம் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகளான தண்ணீர் பிரச்சினை, குடிநீர் மோட்டார் பழுது, தாமிரபரணி தண்ணீர் கிராமப்பகுதிகளுக்கு முறையான வினியோகம் செய்வது தொடர்பாகவும்,

மேலும் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பிரச்சினை குறித்தும், தெரு விளக்கு பிரச்சினை, குப்பைகள், வாருகால் சுத்தம் செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இந்த குறைபாடுகள் தொடர்ந்து இருந்தால் 9364544107, 9543184412, 8940272294 என்ற எனது செல்போன் எண் அல்லது வாட்ஸ்-அப்பில் புகார்களை தெரிவிக்கலாம். இந்த தகவல் செல்போனில் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...