Sunday, April 29, 2018

தி.மலை கோவிலில் போலீஸ் குவிப்பு

Added : ஏப் 29, 2018 06:09 |

  திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, இன்று காலை, 6:58 மணி முதல் நாளை காலை, 7:57 வரை, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர்.சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களின் பாதுகாப்புக்கு, கோவில் வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட போலீசார், சுழற்சி முறையில் பணியில் ஈடுபட உள்ளனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும், நேற்று மதியம், போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.மேலும், கிரிவலப்பாதை, தற்காலிக பஸ் பஸ் ஸ்டாண்ட், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

No comments:

Post a Comment

NEWS DIGEST

NEWS DIGEST  SC : Can bar overqualified person from job Sometimes overqualification becomes a disqualification. At a time when highly qualif...