Sunday, April 29, 2018

கோடைக்கு சிறப்புபஸ்கள்

Added : ஏப் 29, 2018 02:48

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், கோடை விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், ஏப்., 20ல் இருந்து, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள, சுற்றுலா இடங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில், இன்று முதல், ஜூன் 30ம் தேதி வரை, சிறப்பு பேருந்துகளை இயக்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அண்ணா சதுக்கம் வழியாக 50; கோவளத்துக்கு, 3; வண்டலுார் உயிரியல் பூங்கா வழியாக, 20; மாமல்லபுரத்துக்கு, 5; பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு, 8; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு, 10; சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு, 4 என, 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இந்த சிறப்பு பேருந்துகள், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் இயக்கப்படும்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...