Tuesday, August 7, 2018

HC: Return original certificates withheld for discontinuing PG

TNN | Aug 6, 2018, 12.49 AM IST


 

MADURAI: The Madurai bench of the Madras high court has directed the dean of the Government Madurai Medical College to return the original certificates of a doctor which was withheld after she discontinued the post-graduate course at the college owing to personal reasons. 

The college had demanded Dr M Aarthy to Rs 10 lakh in accordance with the agreement bond and refused to part with the certificates.

Arathy had joined PG course in anatomy in 2016 and discontinued owing to personal reasons. When she asked for her certificates- class 10, 12, MBBS degree certificate, MBBS marksheet, house surgeon completion certificate, Medical Council registration and community certificate, the authorities rejected her application in a letter dated April 17, 2017.

Justice M S Ramesh noted that there exists an agreement bond which states that if a candidate discontinues the course any time before completion, he/she has to repay the amount received as stipend and pay appropriate discontinuation fee.

“There is no clause through which the petitioner has agreed that her original certificates could be retained till the amount is paid. In the absence of such a clause, the college is not justified in withholding the certificates,” the court observed, adding that it is unfortunate that the authorities chose to retain the documents for non-payment of penalty.

The court also refused to agree with the government pleader that the authorities have the right by citing a clause in the prospectus. “The said clause is an unilateral clause as the petitioner has no other option to join a PG course without purchasing the prospectus,” the court pointed out.

Holding that the authorities have no legal right to withhold the documents, Justice Ramesh directed the dean of the college to handover Arathy’s original certificates and also made it clear that it has not expressed views with regard to the authorities’ right to claim penalty or discontinuation fee.
பிரியாணி அரசியல்

Published : 03 Aug 2018 09:04 IST

 

அரசியல் என்பது தொண்டாக இருந்த காலம் போய் தொழிலாக மாறிப்போனதன் விளைவுதான், சென்னையில் அரங்கேறிய பிரியாணி கலாட்டா சம்பவம். கட்சியின் பெயர் சொல்லி பிரியாணி கேட்டு, கடை ஊழியர்களைக் கட்சி ஊழியர்கள் தாக்கும் அந்தக் காட்சிகள் அரசியல் மீதான மதிப்பை மேலும் குலைக்கவே வழிவகுக்கின்றன.

அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு மதிப்பு குறையவும், வெறுப்புணர்வு உருவானதற்கும் சிறிதும் பெரிதுமாகப் பல காரணங்கள் உண்டு. பல கட்சிகளில், தங்களிடம் உறுப்பினராக இருப்பவர்களின் செயல்பாடுகளைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. சொல்லப்போனால், குற்றச் செயல்களில் ஈடுபட்டுப் பணம் ஈட்டுவதற்காக அரசியல் பின்னணி தேடுபவர்களுக்கும், கட்டப்பஞ்சாயத்து செய்து வணிகர்களையும், தொழிலதிபர்களையும் மிரட்டுபவர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்க்கின்ற கட்சிகளும் உண்டு.


இதன் விளைவுகளை மக்கள் ஒவ்வொரு நாளும் கண்கூடாகப் பார்க்கின்றனர். அதனால்தான், அரசியல் என்பது தொண்டு என்ற எண்ணமெல்லாம் மறைந்து, அது ஒரு கொள்ளை லாபத் தொழில் என்பதுபோல ஆகிக்கொண்டிருக்கிறது.

சென்னையின் கடை ஒன்றில், கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த பிரியாணி அடாவடி சம்பவத்தை இன்று உலகம் முழுக்க சமூக ஊடகங்களில் அந்தக் கட்சியின் எதிரிகளும் அதிருப்தியாளர்களும் உற்சாகமாகப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த அவமானச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கட்சியும், நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பிரியாணி கேட்டு அடிதடி நடத்தியவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது. அக்கட்சியின் செயல் தலைவர் நேரடியாகவே பாதிக்கப்பட்ட உணவகத்தினரைச் சந்தித்துப் பேசிவந்திருக்கிறார்.

இது ஏதோ அந்த ஒரு கட்சி மட்டுமே தொடர்புடைய விஷயம் அல்ல. கட்சிப் பொதுக் கூட்டத்துக்கும், மாநாட்டுக்கும் நிதி கொடுக்கச் சொல்லி, வேறு சில கட்சிக்காரர்கள் கடைக்காரர்களை மிரட்டிய காட்சிகளும் இதேபோல் சமூக ஊடகங்களில் பரவியது உண்டு. ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவருடைய தகுதி பற்றி குறைந்தபட்ச விசாரணையாவது செய்ய வேண்டும் என்ற பொறுப்பு கட்சிகளுக்கு இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே அது நடைமுறையில் இருக்கிறது.

கூட்டம் சேர்த்துக் காட்டினால் போதும் என்ற வெறியில், ‘யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சியில் இணையலாம்’ என்றும், ‘அலைபேசி வாயிலாக ஒரு மிஸ்டுகால் கொடுத்தாலே போதும், உறுப்பினர் ஆக்கிவிடுகிறோம்’ என்றும் துரத்தித் துரத்தி ஆள் பிடிப்பவர்களுக்கு இந்த பிரியாணி சம்பவம் சமீபத்து எச்சரிக்கை. இதில் இன்னொரு கொடுமை, ஒரே நபர் எத்தனை கட்சிகளில் வேண்டுமானாலும் உறுப்பினர் அட்டை வைத்திருக்க முடியும். இதற்கும் கண்காணிப்பு, கட்டுப்பாடெல்லாம் கிடையாது என்பதாகும்.

இது கணினியின் காலம். தாங்கள் நடத்துவது அரசியல் தொண்டுதானே தவிர, தொழில் அல்ல என்று உறுதியாக நிரூபிக்க விரும்பும் கட்சிகள் - தங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களோடு, ஒவ்வொரு உறுப்பினரின் விவரங்களையும்கூட மக்கள் பார்வைக்கு வெளியிட முடியும். அதில், குற்றச்செயல் புரிந்தவர்கள் பற்றி ஆதாரத்தோடு யாரிடமாவது தகவல் இருந்தால், அதைக் கட்சியின் பார்வைக்கு மக்கள் கொண்டுவரவும் வழிவகை செய்ய முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு குற்றத்தன்மையிலிருந்து ஒவ்வொரு கட்சியும் தன்னை அந்நியமாக வைத்திருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவே இனி அது மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறும்.

- தங்கர் பச்சான், திரைப்பட இயக்குநர், தொடர்புக்கு: thankarbachan5@gmail.com
காற்றில் கரையாத நினைவுகள் 22: ஊருக்குப் போவது

Published : 31 Jul 2018 09:35 IST


வெ. இறையன்பு





முன்பெல்லாம் பிறந்த கிராமத்தைவிட்டு வெளியே வராமல், தங்களுடைய வாழ்வையே முடித்துக் கொண்டவர்கள் உண்டு. அதிகபட்சம் சம்பந்தி வீட்டுக்குச் சென்றிருப்பார்கள். சொந்தத்திலேயே பெண் கொடுப்பது அன்றைய வழக்கம். அதிகத் தொலைவில் இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்.

இன்று வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் என்ன பணி செய்தாலும் கவலைப் படாமல் பெண் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. பெண் கொடுத்து, பெண் வாங்குவதும் நடைமுறையில் இருந்தது. மருமகளும், மருமகனும் ஒரே வீட்டில். பெரிய நகரங்களைப் பலர் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பார்கள். பட்டணம் போவது என்று சென்னைக்கு வருவதையே சிலாகித்துச் சொல்வது வழக்கம்.

கால்களே வாகனம்

நாங்கள் மும்பை சென்றிருந்தபோது என் நண்பர் ஒருவர், ‘எங்கள் பாட்டியை இங்கே கொண்டுவந்து விட்டால் திரும்பி வரவே தெரியாது’ என்று சொன்னார். அந்தக் காட்சி நினைத்துப் பார்க்கும்போதே கொடூரமாக இருந்தது.

அடிக்கடி வெளியில் சாப்பிடுவது கவுரவக் குறைச்சலாக இருந்த காலம் அது. ‘வாங்கித் தின்னானாம், வீங்கிச் செத்தானாம்’ என்று எங்கள் பக்கம் ஒரு சொலவடையே உண்டு. வெளியில் சாப்பிட்டு கட்டுப்படியாகாது என்பதே அதன் பொருள்.

பெரும்பாலும் நடையே வாகனம். எவ்வளவு நடக்க முடியுமோ அவ்வளவு தூரம்தான் செல்வார்கள். பணத்துக்காக உறவுகளிடம் தனி மதிப்பு இல்லாத காலம். குழந்தைகளுக்கு அத்தை, மாமா என்று பிடிப்பு ஏற்பட காலாண்டு, அரையாண்டு, முழுப்பரீட்சை விடுமுறைகளில் உறவினர் வீட்டுக்குப் பயணப் படுவது வழக்கம்.

புதிய சூழல் புதிய தெளிவுபுது ஊரில் புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய சூழல். நிறைய விளையாட்டு. அப்பா, அம்மாவின் சகல நேரக் கண்காணிப்பில் இருந்து விடுதலை. சில சிறுவர்கள் தாத்தா, பாட்டி வீட்டிலேயே வளர்வது உண்டு. அவர்கள் அதிக சுதந்திரத்தோடு இருப்பார்கள். எதையும் அருகில் இருந்து பார்ப்பதைவிட தொலைவில் இருந்து பார்க்கும்போது தெளிவு கூடுதலாக இருக்கும். பாட்டி வீட்டில் வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் சுயசிந்தனையோடு இருப்பதும் உண்டு.

சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போவது என்றால் சின்னத் துணிப் பையில் இரண்டு சட்டை, இரண்டு காற்சட்டை, இரண்டு உள்ளாடைகள் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும். ஒன்று கொடியில், ஒன்று மடியில், மற்றொன்று இடையில். அவ்வளவுதான் மொத்த உருப்படிகள். படுக்கிற இடமோ பகிர்கிற உணவோ முக்கியமில்லை. உணர்வுக்கு முன் உணவு எம்மாத்திரம்!

அங்கு புதிதுபுதிதாய்க் கண்டறியும் அனுபவத்தில் ஆனந்தம் மேலிடும். ஒருநாளும் பெற்றோரை நினைத்து பிள்ளைகள் ஏங்காது. இன்று ஊருக்கு அனுப்பினால் பிள்ளைகள் சுவரில் அடித்த பந்துபோல திரும்பி வந்துவிடுகின்றனர்.

பள்ளிச் சிற்றுலா...

முன்பெல்லாம் பள்ளியில் அரிதாகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். எங்கள் பகுதியில் இருந்த தென்னிந்திய கண்ணாடித் தொழிற்சாலைக்கு ஒரு

முறை எங்கள் பள்ளியில் இருந்து கூட்டிச் சென்றார்கள். அதுவே பேரனுபவமாக இருந்தது.

அதற்குப் பிறகு வேலைநிறுத்தம் காரணமாக அந்தத் தொழிற்சாலை யையே இழுத்து மூடினார்கள். அங்கு பணியாற்றியவர்கள் வறுமையுற்று ஏற்கெனவே கொடுத்ததைவிட குறைவா கக் கொடுத்தால்கூட ஏற்றுக்கொள் கிறோம் என மன்றாடியதாகச் சொல்வார்கள். பலர் சோற்றுக்கே வழியின்றி சோர்ந்து இறந்ததை நானறிவேன்.

பள்ளியில் ஒருமுறை மேட்டூர் அணைக்கு அழைத்துச் சென்றார்கள். உயர்நிலைப் பள்ளியில் சாத்தனூர், செஞ்சிக்கோட்டை போன்றவற்றுக்கு சுற்றுலா அறிவித்தார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் மூத்தவர்களுக்கே முன்னுரிமை. ஒருமுறை என் சகோதரி கன்னியாகுமரி சுற்றுலாவுக்குச் சென்று, வீட்டுக்கு என்ன வாங்குவது எனத் தெரியாமல், அங்கு விற்ற விதவிதமான வண்ண மண்களை வாங்கிகொண்டு வந்தார். அதை வைத்து என்ன செய்வது என்று வீட்டுக்குள் பெரிய விவாதமே நடந்தது.

10 நாட்கள் முகாம்

நாங்கள் மிதிவண்டி எடுத்துக்கொண்டு சேலம் அம்மாபாளையத்திள் இருக்கிற மாமாங்கத்துக்குச் செல்வோம். அங்கு ஒரு குளத்தில் வற்றாத நீர். ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய ராமன் விட்ட அம்பால் ஏற்பட்ட நீர்நிலை அது என்பது ஐதீகம். அதில் நீந்திக் குளிப்போம். அதேபோல சித்தர் கோயிலுக்கு சைக்கிளில் செல்வோம். அங்கு வற்றாத கிணறுகள் உண்டு. அதில் திருப்தி வரும் வரை குளியல் போடுவோம்.

நான் தேசிய மாணவர் படைக்காக சங்ககிரிக்கு பத்து நாட்கள் முகாம் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு நாள் சாலை போடுகிற பணியில் ஈடுபட்டோம். திரும்பி வரும்போது வேலைநிறுத்தப் போராட்டம் (ஹர்த்தால்) காரணமாக சரக்குந்தில் திரும்பி வந்தோம்.

சேலத்தில் நடக்கும் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆசிரியர் அழைத்துச்செல்வது உண்டு. ஒரு ரூபாய் கட்டணம்.

ஒருமுறை கண்காட்சியில் அனைத்தையும் கண்டுகளித்த பிறகு வகுப்பாசிரி யர் கவலையோடு காணப்பட்டார். ஒரு மாணவன் பணமே கொடுக்காமல் கண்காட்சிக்கு வந்துவிட்டான். பிறகு கணக்கைப் பார்த்து கண்டு பிடித்தார். யாரெனத் தெரிந்ததும் அவனை அழைத்து விசாரித்தாரே தவிர, வெகுண்டெழ வில்லை. அந்த மாணவன் அதற்குப் பிறகு பள்ளிக்கு வரவேயில்லை.

பெரியம்மாவும் சிறுகிழங்கும்

சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வரும்போது கிடைத்ததையோ, முடிந்த தையோ வாங்கி வருவார்கள். அதற்கும் அவர்களுக்குத் தருகிற உபசரிப்புக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. எங்கள் பெரியம்மா ஒருவர் தீபாவளி நேரத்தில் சிறுகிழங்கு கொண்டு வரு வார். இன்னோர் உறவினர் பனைவெல்லம் கொண்டு வருவார்.

ஊருக்குச் சென்றால் திரும்பி வரும் வரை சேதி எதுவும் தெரியாது. அது பற்றி வீட்டினர் கவலைப்பட்டதும் கிடையாது. அன்று இன்றிருப்பதைப் போல தொலைபேசியோ, அலைபேசியோ இல்லை. இப்போதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று நேர்முக வர்ணனை நடக்கிறது. அவர்கள் சொன்ன இடத்துக்குத்தான் சென்றிருக்கிறார்களா என்று பார்க்கும் வசதியும் வந்துவிட்டது.

கல்லூரியில் படிக்கும் சமயத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றபோது, சில மாணவர்கள் முதன்முறையாக கடலைப் பார்த்தனர். அதைவிட்டு வரவே அவர்களுக்கு மனம் வரவில்லை. ஒகேனக்கல்லை முதன்முறையாக அதிசயமாய்ப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினோம். அதில் குளித்துக் கொண்டிருந்தவர்களை பேருந்துக்கு அழைத்து வருவது பெரும் பாடாய் இருந்தது.

வேளாங்கண்ணி, திருப்பதி, நாகூர்

இன்றைய சிறுவர்களோ நயாகரா அருவியையே காணொலியில் பார்த்துவிடுவதால் அவர்களுக்கு அந்த அருவிகள் வியக்கும் வீழ்ச்சிகளாய் இருப்பதில்லை. பார்க்கிற பழக்கம், அதிசயிக்கும் குழந்தை இயல்பை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது.

அன்றைய நாளில் மொத்தக் குடும்பமும் ஊருக்குப் போவது அபூர்வம். அப்படிச் செல்வது பெரும்பாலும் கோயில்களுக்காகத்தான் இருக்கும். அப்படிச் செல்வது கூட அநேகமாக திருப்பதி, பழநி, வேளாங்கண்ணி, நாகூராகத்தான் இருக்கும்.

ஒரு மாதம் முன்பிருந்தே அதுபற்றிக் கற்பனையில் பேசிக் களித்திருப்பார்கள். இரண்டு காசு, மூன்று காசு என மிச்சமாகிற சில்லறையை அங்கிருக்கும் யாசகர்களுக்குப் போட முடிந்து வைப்பார்கள். எங்கு காலை உணவை சாப்பிடுவது என்பது தொடங்கி சிந்தனை விரியும். சென்று வந்ததற்கு அடையாளமாக சில வீடுகளில் மொட் டைத் தலைகள் பளபளக்கும்.

கட்டுச்சோற்றுப் பயணம்

இப்போதெல்லாம் குழந்தைகள் மொட்டை அடித்துக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. அப்பாக்கள்தான் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். அப்போதெல்லாம் யாராவது காசிக்கு யாத்திரை சென்று வந்தால், அவர்களுடைய காலில் விழுந்து வணங்குவதை புண்ணியம் என்று கருதினார்கள்.

எளிய குடும்பங்கள் கட்டுச்சோறோடு பயணம் செய்யும். மூன்று வேளையும் புளிச் சோறு. டெல்லியில் இருந்து தொடர்வண்டியில் வருகிறபோது எளியவர் ஒருவர் அத்தனை வேளையும் பொட்டலம் கட்டியிருந்த பூரிக் கிழங்கை உண்பதைப் பார்த்தேன்.

அன்று விமானப் பயணம் மாபெரும் கனவு. இன்று வெளிநாடு சகஜம். இன்றைய நாளில் தண்ணீர் குடிப்பதைப் போல சர்வ சாதாரணமாக கோடை விடுமுறையில் மலைவாழ் தலங்களுக்கு மக்கள் செல்கின்றனர். அதற்காகவே சீட்டுப் போடுகின்றனர். ஆண்டுக்கொரு ஊர் என கண்டுகளிக்கின்றனர். வார இறுதிகளில் அருகில் இருக்கும் இடங்களுக்கு சிற்றுலா சென்று வரு கின்றனர்.

எத்தனையோ இடங்களுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் தங்கள் சொந்த ஊரையும் சிலர் தூக்கிக் கொண்டு செல்வதுதான் வியப்பாக இருக்கிறது!

- நினைவுகள் படரும்...
இளமை .நெட்: சமூக ஊடகத்துக்கு ஒரு மாதம் லீவு!

Published : 03 Aug 2018 10:51 IST


சைபர் சிம்மன்

 



சமூக ஊடகச் சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்துக்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட்டிவிட வேண்டும் எனக் கேட்க வேண்டாம். இப்படி நிலைத்தகவல் வெளியிடுவதையும் ஒளிப்படங்களைப் பகிர்வதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் சவாலே!

ஆம், இப்படி ஓர் அழைப்பை விடுத்திருக்கிறது இங்கிலாந்தின் சுகாதார அமைப்பு ஒன்று. அந்நாட்டின் ‘ராயல் பப்ளிக் ஹெல்த் சொசைட்டி’, ஒரு மாத காலம் சமூக ஊடகச் செயல்பாடுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக செப்டம்பர் மாதத்தை ‘ஸ்கிரால் ஃப்ரீ’ மாதமாக அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது.

இன்று இணையத்தில் புழங்குபவர்களில் பெரும்பாலோர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என ஏதாவது ஒரு சமூக ஊடக சேவையையே தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர். நாட்டு நடப்பு நிகழ்வுகள், தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் என எல்லாவற்றையும், நிலைத்தகவலாகவோ ஒளிப்பட மாகவோ மீம் வடிவிலோ பகிர்ந்து கொள்வது இயல்பாகி இருக்கிறது.

இப்படிப் பலரும் சமூக ஊடகத்துக்கு அடிமையாகிவிடும் நிலை ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் சமூக ஊடகமே கதி என இருப்பது அவர்களது மனநலம், உடல்நலம் என இரண்டையும் பாதிக்கும் விஷயமாக இருக்கிறது. கடந்த ஆண்டு, பிரிட்டனில் ‘யங் ஹெல்த் மூவ்மெண்ட்’ எனும் இளைஞர் நல அமைப்புடன் இணைந்து பொது சுகாதாரக் கழகம் நடத்திய ஆய்வு முடிவும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

‘ஸ்டேட்டஸ் ஆஃப் மைண்ட்’ (#StatusOfMind) எனும் பெயரிலான இந்த அறிக்கை, சமூக ஊடகப் பயன்பாட்டால் கவலை, மனச்சோர்வு, உடல் தொடர்பான எதிர்மறைப் பிம்பங்களை வளர்ப்பது, இணையச் சீண்டல், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகளை உண்டாக்குவதாகத் தெரிவிக்கிறது. இவை தவிர, ‘ஃபோமோ’ (FOMO) எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படும் எதையும் தவற விட்டுவிடுவோமோ எனும் பதற்றத்தையும் உண்டாக்குகிறது.

சமூக ஊடகத் தளத்தைப் பார்த்துக்கொண்டே இருக்காவிட்டால், ஏதேனும் முக்கிய நிகழ்வு, நிலைத்தகவலைத் தவற விட்டு விடுவோம் எனும் எண்ணமே இப்படிக் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ‘ஃபியர் ஆப் மிஸ்ஸிங் அவுட்’ என்கின்றனர். ‘நோட்டிஃபிகேஷன்’ ஒலிக்குப் பழகிவிட்ட பலருக்கு இந்தப் பாதிப்பு இருக்கலாம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு, சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக, சமூக ஊடகத்துக்கு ஒரு மாதம் விடை கொடுக்கலாம் எனும் யோசனையை முன்வைத்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இதைச் சாத்தியமாக்குவதற்காக, ‘ஸ்கிரால் ஃப்ரீ’ செப்டம்பர் எனும் கோஷத்தோடு, இங்கிலாந்து அமைப்பு தனது இணையதளம் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாடு, உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தவும் இது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு மாத காலம் சமூக ஊடகத்துக்கு விடை கொடுக்க நீங்கள் தயாரா? இங்கிலாந்தில் உள்ளவர்கள்தாம் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை.

சமூக ஊடகப் பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என நினைக்கும் யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம். சமூக ஊடகம் இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியாது என நினைப்பவர்கள், பகுதி அளவேனும் இதற்கான முயற்சியில் ஈடுபடலாம். மாலை ஆறு மணிக்கு மேல் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தவிர்ப்பது, இரவுப் படுக்கையறையில் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றலாம்.

‘ஸ்கிரால் ஃப்ரீ செப்டம்பர்’ பற்றி மேலும் தகவல்களுக்கு: https://bit.ly/2vaJdA5
எல்லா நலமும் பெற: தோட்டத்தால் குறையும் மன அழுத்தம்!

Published : 04 Aug 2018 10:58 IST

தொகுப்பு: ஷங்கர்




மூட்டுவலிக்கு இயற்கையான தீர்வு இருக்கிறதா?

மூட்டுவலியைத் தணிக்கும் களிம்பு களைவிடக் கூடுதலான நிவாரணத்தை மஞ்சள் தருவதாகத் தெரிவிக்கும் ஆய்வுகள் உள்ளன. தினசரி மஞ்சளை உட்கொண்டால் அதன் பலன் எட்டு வாரங்களில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. உட்கொள்ளும் மஞ்சளுடன் சிறிதளவு மிளகும் கலந்திருக்க வேண்டும்.

ஒரே இடத்தில் உட்காராமல் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?

கணவருடனோ மனைவியுடனோ நடைப்பயிற்சி செல்லுங்கள். குழந்தைகள், செல்லப் பிராணியுடனும் காலையிலோ மாலையிலோ ‘வாக்’ போகலாம். படி ஏறும் இறங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் லிஃப்டைப் பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள். நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டால் நடந்துகொண்டே பேசும் இடங்களைத் தேர்ந்தெடுங்கள்.

கார்கள், இரு சக்கர வாகனங்களுக்குப் பதிலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். தினசரி அலுவலகத்துக்குப் போகும்போதோ வீடு திரும்பும்போதோ இரண்டு நிறுத்தங்களுக்கு முன்னால் இறங்கி நடந்து பாருங்கள். தொலைக்காட்சியில் சேனல் மாற்றும்போது, ரிமோட்டைப் பயன்படுத்தாமல் எழுந்து சென்று டி.வி.யில் சேனலை மாற்றுங்கள்.

மன அழுத்தத்தைச் சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் உண்டா?

தோட்ட வேலை செய்வதால் மன அழுத்தம் குறைந்து, நிறைவும் களிப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்துக்கு ஆறு மணி நேரமாவது தோட்டத்தில் செலவழிக்கிறவர்களுக்கு மன அழுத்தத்தின் தாக்கம் குறைவாக உள்ளது.

கோக் பானம் ஒரு கிளாஸ், ஆரஞ்சு பழச்சாறு ஒரு கிளாஸ். எது ரத்தத்தில் சர்க்கரையைக் கூடுதலாக அதிகரிக்கும்?

இரண்டுமே ஒரே அளவில்தான் சர்க்கரையை அதிகரிக்கும். ‘ஃப்ருக்டோஸ்’ அளவு இரண்டிலும் சமமாகவே உள்ளது. ஒருவகையில் ஆரஞ்சு பழச்சாற்றில் உள்ள கலோரிகள் கோக்கைவிட அதிகம்.

பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற பொரித்த உணவுகள் நல்லவையா?

கார்போஹைட்ரேட் உணவை எண்ணெய்யில் பொரிக்கும்போது, நரம்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருளான அக்ரிலமைட் உற்பத்தியாகிறது. சிகரெட் புகையிலும் இந்த அக்ரிலமைட் உள்ளது. சிறுநீரகம், மார்பு, கருப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அக்ரிலமைட் உள்ளது.

இனிப்பு தேசம் 17: விளையாடுவது தவமே!

Published : 04 Aug 2018 10:59 IST


மருத்துவர் கு. சிவராமன்

 




‘கொஞ்ச நாளாவே எதுக்கெடுத்தாலும் ‘வள்வள்’ளுன்னு விழுறாரு சார்’ என வருத்தமாக வரும் தம்பதியிடம் ‘சுகர் சரியா இருக்கான்னு பார்த்தீங்களா?’ எனக் கேட்க வேண்டியதாக உள்ளது. ஆமாம்! இனிப்பு நோய், நிறைய நேரம் ‘கார’ நோயாகவும் உருவெடுக்கும்.

தேவையற்ற கோபம், எல்லோரிடமும் எரிந்துவிழுவது, கணக்கில்லாமல் கடுஞ்சொல் பேசுவது இது எல்லாம் நீரழிவு நோயாளிகளிடம் ரத்தச் சர்க்கரை கூடும்போதும் குறையும்போதும் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்கள். உலகம் முழுக்கவே இதை அலசி ஆராய்ந்து தள்ளி, ‘கட்டுப்பாடில்லாத இனிப்பு, வாழ்வில் இனிப்பைக் கொஞ்சம் குறைத்து, கசப்பைக் கூட்டுகிறது’ எனச் சத்தமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ‘Hangry’ (hungry+angry) என்ற புது ஆங்கிலச் சொல்லையும்கூட மருத்துவ உலகம் இதற்குப் படைத்துவிட்டது.

அதீத சர்க்கரையிலும் (hyperglycemia), தாழ்சர்க்கரையிலும் (hypoglycemia) இரண்டிலுமே, இனிப்பு நோயர்களுக்கு இந்த கோபமும் எரிச்சலும் குடியேறும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாலையில் வன்முறையில் ஈடுபடுவோரிடமிருந்து, ஆஸ்பத்திரியில் நர்ஸிடம் சண்டை கட்டுவோர்வரை உள்ள நபர்களில், ‘இனிப்பர்கள்’ கொஞ்சம் அதிகமாம். ரத்த இனிப்பு அளவுக்கும், ரத்த இன்சுலின் அளவுக்கும் மூளையின் பணிகளுக்கும் எக்கச்சக்க தொடர்பு உள்ளது.

சுயக்கட்டுப்பாட்டுக்கு… தலாமஸ்!

மூளையின் தலாமஸ் எனும் பகுதிதான், பசியை நமக்கு உணர்த்தும் விஷயம். பசி அகோரப் பசியாக மாறுவது, பசி நேரத்தில் ‘இது நமக்கு நல்லதல்ல. சுகரைக் கூட்டிடும், வேண்டாம்!’ எனும் சுயக்கட்டுப்பாட்டைத் தருவது எல்லாம் தலாமஸ்தான். ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடில்லாதவர்கள், பசியோடு வீட்டுக்குள் நுழையும்போது டைனிங் டேபிளில் கையில் கிடைக்கும் வஸ்துவையெல்லாம் வாரிச்சுருட்டி வாயில் அடக்கிக்கொண்டு, அதனால் வீட்டம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதற்குக் காரணம் தலாமஸைச் சர்க்கரைக் கொஞ்சம் பாடாய்ப்படுத்துவதால்தான் என்கிறது நவீனஅறிவியல்.

மூளையின் தலாமஸ்தான் சுயக் கட்டுப்பாட்டை (self-control) ஒருவருக்குத் தரும். தான் பார்த்த, கேட்ட, தொட்ட, முகர்ந்த என அத்தனை உணர்வுத் தகவல்களையும் நரம்பு மூலமாகப் பெற்று சீராகக் கையாள்வதும், அதனால் மனத்திலும் உணர்விலும் எழுச்சியை ஏற்படுத்துவதும் தலாமஸ்தான். அந்த தலாமஸைத் தடுமாறச்செய்வது சர்க்கரையின் ஏற்றத்தாழ்வு.

ஒருவர் உணவு இடைவேளையில் சாப்பாட்டுக்குச் செல்ல ஏதாவது காரணத்தால் நேரமாகும்போது, கன்னாபின்னாவெனக் கோபப்படுகிறார் என்றாலோ, அப்போது அவசர அவசரமாய் எழுதும்போது ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்’ ஏகத்துக்கும் வருகிறது என்றாலோ, அந்த நேரத்தில் எதிர்ப்படும் ஊழியரைக் கடித்துத் துப்புகிறார் என்றாலோ, தயவுசெய்து அடுத்த நாள் ரத்த சர்க்கரை அளவை வெறும் வயிற்றில் பார்க்கச் சொல்வதும், மூன்று மாத சராசரி சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்வதும் மிக மிக முக்கியம்.

கோபம் குறைக்கும் நடை

பேசும்போது சரியான சொற்களுக்குத் தடுமாறுவது, மன அழுத்தம், வேலை ஏதும் செய்யாமலே, உடற்சோர்வாயிருப்பது, மனத்தை ஒருநிலைப்படுத்த இயலாது தயங்குவது, எரிச்சல், பரபரப்பு இவை எல்லாமே சர்க்கரை, ரத்தத்தில் அதிகரித்ததன் காரணமாக இருக்கும். தடாலடியாக இதை உளவியல் சிக்கலாய்க் கருதி உளவியல் மருந்துப் பக்கம் ஓட வேண்டியதில்லை. மாறாக, தினசரி 10 ரவுண்டு ஓடினாலோ நடந்தாலோ போதும். அனைத்தும் மாறிவிடும்.

தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இனிப்பர்கள் கோபம் கொள்வதில்லை. மாறாக, காதலும் கரிசனமும் கொள்கிறார்கள். அவர்களின் ஞாபகசக்தி, முடிவெடுக்கும் திறன், கற்பனை வளம் அத்தனையும் கூடுகிறது. நடை, சர்க்கரையைப் பதமாய்க் கையாண்டு, மூளையின் தலாமஸைத் தடவிக் கொடுத்துத் தட்டிக் கொடுப்பதாலேயே இத்தனை மாற்றமும்.

நீரழிவு நோயாளிகள் தன் உடலுழைப்பால், உடற்பயிற்சியால் ரத்தத்தில் உள்ள இன்சுலினை, செல்லுக்குள் தள்ளிவிடாமல் இருந்தால், அது மூளைக்குள்ளேயே சுற்றித் திரியும். அது சிலருக்கு நுண் நாளப் பாதிப்பை (micro vascular damage) ஏற்படுத்துவதுபோல, வேறு சிலருக்கோ அதுவே ஒருவகைத் திட்டுக்களாகின்றன (amyloid protein buildups / brain plaques). இந்தத் திட்டுக்கள் மூளையில் சேரச்சேர, பின்னாளில் ஞாபகத் திறன் குறையும். பல நோய்கள் வரிசையாய் வந்து சேரும்.

மைதானமே கோயில்

சர்க்கரையைச் சரியாக வைக்காவிடில், ஒரு சமூகத்தில் விவாகரத்து முதல் வன்முறைவரை பல பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. மனத்தை எளிதாக்க முதலில் நடைப்பயிற்சி, அப்புறம் கொஞ்சம் தியானப் பயிற்சி ஆகியவை கண்டிப்பாக ஒவ்வோர் இனிப்பரும் செய்ய வேண்டிய விஷயம்.

விளையாட்டு மிக அழகான, எளிதான தியானப் பயிற்சி என்பது பலருக்கும் தெரியாது. அதில் பந்துதான் கடவுள். மைதானம்தான் கோயில். கூட விளையாடும் அத்தனை பேரும் குருமார்கள். தனி அறையில் கடவுளை நோக்கி மனதை ஒருமுகப்படுத்த தியானிக்கும் போதுதான் ஈ.எம்.ஐ.பிரச்சினை, கொடுங்கோல் பாஸின் குரூர முகம் போன்றவை எல்லாம் அநியாயத்துக்கு வந்து நிற்கும். ஆனால், அதுவே விளையாட்டில், பந்தைத் தவிர வேறெதிலும் நாம் கவனம் செலுத்த மாட்டோம். ஆதலால் விளையாட்டும் உடற்பயிற்சியோடு கூடிய ஒரு தவமே!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
2022-ல் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும்; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published : 06 Aug 2018 14:07 IST


பிடிஐ புதுடெல்லி,

 


கோப்புப்படம்

2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும் என்பதால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

மாநிலங்களவையில் இன்று கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரத்தில் பாஜக எம்.பி. அசோக் பாஜ்வாய் எழுந்து பேசுகையில், ‘‘இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி உலக அளவில் அதிக மக்கள் தொகை உள்ள நாடாகமாறிவிடும். 2050-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 166 கோடியாக அதிகரிக்கும்.

நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம்தான், ஆனால், உலகமக்கள் தொகையில் இந்தியா 17.5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

கடவுள் பெயரைக் கூறி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை’’ என்று வலியுறுத்திப் பேசினார். இவருக்கு ஆதரவாக பாஜக எம்.பி. விஜய்பால் சிங் தோமரும் பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.பி. ஜாவித் அலி கான், ‘‘உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு நகரங்களில் செயல்படும் சிறுபான்மையினருக்கான கல்வி அமைப்புகளில் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.சிறுபான்மையினர் கல்விக்காக போதுமான நிதியும் ஒதுக்கப்படவில்லை

தேசிய சிறுபான்மை ஆணையத்துக்கான ஆணையர், உறுப்பினர்கள் கடந்த 4 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல், இருக்கிறது. இதுவரை 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையிலும் யாரும் நியமிக்கப்படாமல், பாரபட்சம் காட்டப்படுகிறது‘‘ என்று தெரிவித்தார்.

இதேப்போன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் குப்தா, சமாஜ்வாதி எம்.பி. ரவி பிரகாஷ் வெர்மா, அனில் பலுனி, காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்தய்யா, மோதிலால் வோரா, ஹூசைன் தல்வாய் ஆகியோரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

NEWS TODAY 27.06.2026