Saturday, August 11, 2018

Action sought against private medical college 

Staff Reporter 

 
CHENNAI, August 11, 2018 00:00 IST


It had asked interns for additional fees

The Doctors’ Association for Social Equality (DASE) has urged the State government to take action against a private medical college in Kanniyakumari district for demanding additional hostel fees from interns.

In a press release issued on Friday, G. R. Ravindranath, general secretary, DASE, said there were complaints from students that the college was demanding additional fee for hostel from the interns. The college management has curbed use of mobile phones and did not allow students to wear their stethoscopes around their neck, he said.

Additional hostel fees

“The interns had already paid Rs. one lakh as hostel fees. The college management is demanding that they pay Rs. 50,000 more,” he said.

He urged the State government to intervene immediately and solve the problems faced by the students.

UGC to train senior staff for Vice Chancellor post 


Special Correspondent 

 
CHENNAI, August 11, 2018 00:00 IST

The initial candidates will be selected by the HRD Ministry

University Grants Commission is drafting a training programme for senior professors to be appointed as Vice Chancellors. The scheme looks to equip prospective candidates to administrate the university affairs. “The training is for the prospective educational leaders ,” said Dhirendra Pal Singh, chairman, UGC.

The UGC will invite for applications from potential candidates and will forwarded them to the Ministry of Human Resource Development for a final selection.

Foreign collaboration

“The training would be in India and abroad in some of the world’s best universities,” Mr. Singh said at an interaction with professors of the University of Madras on Friday. A similar proposal is being considered for existing V-Cs also, he added.

“We should identify our strengths. We want a collaborative programme where the experts from those countries will come here and our people would go there,” he said.

He spoke of the various initiatives the UGC to improve the quality of institutions. The country had 900 universities, over 3.64 crore students and 30 lakh teachers. Education has to be affordable for all, he maintained.

In the last two decades the number of private universities had risen but the quality of their teaching faculty would increase only if they paid the faculty well, he said.
Dental student, 20,ends life

  TNN | Aug 7, 2018, 12.53 PM IST
 


NAMAKKAL: A fourth year student of a dental college committed suicide by hanging near Tiruchengode in Namakkal district on Monday.

The deceased has been identified as S Dharini, 20, of Rameswaram in Ramanathapuram district. She was studying BDS in Vivekanandha Dental College for Women in Tiruchengode.

According to the Tiruchengode rural police, Dharini didn’t go to the college and stayed in her room in the hostel.

When her roommates returned on Monday evening, they found the main door of the room closed from inside. There was no response when they knocked the door for few minutes.

When they peeped through the door gap, they found Dharini hanging from the ceiling.

They immediately alerted their college management who in turn alerted the Tiruchengode rural police. Police broke opened the door and retrieved the body.

Police also seized a suicide note from the girl’s room. In the note, Dharini had mentioned that she joined BDS due to her parents’ compulsion.



Police have registered a case. The body was sent to the Salem government Mohan Kumaramangalam medical college for postmortem.


சென்னையின் சாலையோரக் கடைகளில் மட்டன், சிக்கன் பெயரில் பரிமாறப்படும் கன்றுக்குட்டி இறைச்சி: அதிகாரிகள் சோதனையில் அதிர்ச்சி தகவல்

Published : 10 Aug 2018 17:48 IST

 சென்னை

 

ஆய்வு நடத்தும் உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள்

சென்னையின் சாலையோரக் கடைகளில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி என்ற பெயரில் கன்றுக்குட்டியின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர்.

உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்குச் சமீபத்தில் புகார் ஒன்று வந்தது. அதில் கன்றுக்குட்டி இறைச்சி குறித்த வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட கடை சென்னை பெரிய மேடு, நேவல் ஹாஸ்பிட்டல் சாலையில் இருப்பதை அறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அந்தக் கடையில் மிகப்பெரிய ப்ரீசர் பெட்டியில் பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டதாகத் தெரிவித்த ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியையும், ஆட்டுக் கால்களையும் ஆய்வு செய்தனர். ஆய்வில் அவை ஆட்டிறைச்சியோ, கோழி இறைச்சியோ அல்ல இளம் கன்றுக்குட்டியின் இறைச்சி எனத் தெரியவந்தது.

மாட்டிறைச்சியை ஆட்டிறைச்சி போன்று காண்பிக்க சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்திருந்தனர். மேலும் அரவை இயந்திரத்தில் நன்கு அரைத்த நிலையிலும் இறைச்சி வைக்கப்பட்டிருந்தது. க

டை உரிமையாளர்களிடம் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.



ஆட்டிறைச்சி போல் காணப்படும் இளம் கன்றுக்குட்டிகளை வாணியம்பாடியிலிருந்து இறைச்சிக்காக வெட்டப்பட்டு அவை சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த இறைச்சி பேருந்துகள் அல்லது வேன் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ 150 ரூபாய்க்கு வாங்கி அவற்றை மேற்சொன்ன முறையில் சிறுதுண்டுகளாக ஆட்டிறைச்சிபோல் வெட்டி பின்னர், பாக்கெட்டுகளில் அடைத்து சாலையோரக் கடைகளுக்கு விற்கின்றனர்.

ஆட்டிறைச்சி கிலோ ரூ.600க்கு வாங்கினால் லாபமில்லை என்பதால் இதுபோன்ற கன்றுக்குட்டி இறைச்சியை ரூ.220க்கு வாங்கிச் செல்லும் சாலையோரக் கடைக்காரர்கள் அவற்றை பிரியாணியிலும், மற்ற அசைவ உணவுகளிலும் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்று தயார் செய்து விற்கின்றனர்.

இதையடுத்து, 300 கிலோ கன்றுக்குட்டி இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்றுக்குட்டி இறைச்சியை பெரியமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பல சாலையோரக் கடைகளுக்கு விற்க வைத்திருந்த இறைச்சிக் கடையின் உரிமையாளர் முகமது உமர், அவரது தந்தை ஸப்ருல்லா மீதும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் கண்முன் காணும் உணவு குறித்த புகார்களை 9444042322 என்ற உணவுப் பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கன்றுக்குட்டிகளை இறைச்சிக்கு வெட்டக் கூடாது, மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் அரசு ஒதுக்கிய இறைச்சிக் கூடங்களில் மட்டுமே ஆடு, மாடுகளை வெட்ட வேண்டும் என்பது சட்டமாகும். இவற்றை மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத ‘பேய்’ மழை; 26 பேர் பலி- சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை

Published : 10 Aug 2018 10:46 IST

  திருவனந்தபுரம்



கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 26 பேர் பலியாகி இருப்பதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 


கேரளாவில் நீரில் மூழ்கியுள்ள வீடுகள்


இதில் இடுக்கி மாவட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.



பாலக்காட்டில் வீடுகளில் நீர் சூழ்ந்ததால் உள்ளே சிக்கியவர்களை தூக்கி வரும் மீட்பு குழுவினர்

மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கண்ணூரில் 3 பேரும், வயநாடு மாவட்டத்தில் 2 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள போதிலும், அணைக்கு வரும் நீரின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இடுக்கி அணை

இதுபோலவே முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டால் அந்த நீரும் இடுக்கி அணைக்கு வரும் என்பதால் அங்கு உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரளாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வேண்டிய உதவிகள் செய்வதாகக் கூறியுள்ளார். நிலைமையைக் கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அப்போன்ஸ் கண்ணன்தானம் கூறுகையில் ‘‘கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ எனக் கூறினார்.


வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகள்



பாலக்காடு மாவட்டத்தில் கரைபுரண்டு ஓடும் பாரதப் புழா ஆறு - படம்: ஏஎன்ஐ

இளைஞர்களிடையே மாற்றம்


By வை. இராமச்சந்திரன் | Published on : 10th August 2018 11:00 AM



இளைஞர்கள் என்றாலே நாள் முழுவதும் முகநூல், கட்செவி அஞ்சலில் மூழ்கிக் கிடப்பவர்கள், சினிமா நடிகர்கள் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்பவர்கள், திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் மது குடித்துவிட்டு ஆட்டம் போடுபவர்கள் என்ற தவறான எண்ணம் யாருக்காவது இருக்குமானால், தயவுசெய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான இன்றைய இளைஞர்கள், அப்துல் கலாம் உள்ளிட்ட சிலரை ரோல் மாடலாக வைத்து, சமூகப் பணியில் அக்கறை செலுத்துகின்றனர். வாரத்தில் ஆறு நாள் சொந்தப் பணி. ஒரு நாள் சமூகப் பணி என கருதி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணி செய்து வருகின்றனர்.

அதோடு இப்பணி, தங்களோடு நின்றுவிடக் கூடாது எனக் கருதி, வளர்ந்து வரும் மாணவர்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சமூகத்தில், இளைஞர்களிடையே மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

முன்பெல்லாம் ரத்த தானம் என்றாலே பலரும் ஓடி ஒளிவார்கள். ஆனால், தற்போது ரத்த தானம், உடல் தானம் போன்ற விழிப்புணர்வுகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. அதோடு இலவச கண் சிகிச்சை முகாம், ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவி புரிதல், டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் பணிகளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
முகநூல் மற்றும் கட்செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, சமூக நலன் கொண்ட இளைஞர்களை திரட்டி, சமூகப் பணிகளை செய்கின்றனர். இப்பணி திறம்பட நடைபெறவும், தொடரவும் வெளியூரில் பணியில் இருக்கும் அந்தந்த ஊர் இளைஞர்கள் பொருளாதார உதவிகளை செய்து ஊக்கப்படுத்துகின்றனர்.
மேலும், குளங்களை தூர்வாருதல், அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளுதல், நீர்நிலைகளில் சுகாதாரம் பேணுதல், வழிபாட்டுத் தலங்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதிகளின் தேவைக்கு ஏற்ப இளைஞர்கள் பணி செய்வதை சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் காண முடிகிறது. குறிப்பாக மரக்கன்று வைத்து பராமரிக்கும் பணி, குளத்துக் கரைகளில் பனங்கொட்டைகள் முளைக்க வைத்தல் போன்ற பணிகளை, ஏதோ கடமைக்கு என செய்யாமல், ஆத்மார்த்தமாக இன்றைய இளைஞர்கள் செய்கின்றனர்.

அதில் சிறு உதாரணமாக, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் பல்வேறு தொழில்கள் புரியும் சுமார் 20 இளைஞர்கள் இணைந்து, பசுமை இயக்கம்' எனும் பெயரில், கட்செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
மரக்கன்று வைத்து பராமரித்தலை முதன்மைப் பணியாக மேற்கொண்டாலும், நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்கும் வகையில் துப்புரவுப் பணி, நகர் பகுதியில் டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சலை தடுக்கும் வகையில் அனைத்து வார்டுகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரப் பணி உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

இவர்களின் பணியிலேயே மிகவும் உச்சமாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் நீர் நிலைகளில் துப்புரவுப் பணி, தற்போது நடைபெறும் திருவிழாவையொட்டி பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வும், தவிர்க்கமுடியாத பிளாஸ்டிக் பொருள்களை, பயன்படுத்தியபின் வனத்தில் வீசாமல் இருக்க குப்பைத் தொட்டிகள் உருவாக்கியும் பணி செய்தது பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது.

இதே போன்று, அருகே உள்ள குறிப்பன் குளம் என்னும் கிராமத்தில், சாலையோரம், குளத்துக் கரையோரம் என ஊரைச் சுற்றிலும், அப்பகுதியைச் சேர்ந்த இளந்தளிர்' என்னும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், சுமார் 610 மரக்கன்றுகளை நட்டு வைத்து, கடந்த 35 வாரங்களாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், நாம் நேரில் சென்று பார்க்கும்போது, நான்கு அல்லது ஐந்து இளைஞர்கள் வருகிறார்கள் என்றால், 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். கிரிக்கெட் மட்டைகளை தூக்கிச் செல்வதை தவிர்த்து இப்பணியில் அவர்கள் பங்கேற்பது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. அதுவும் காலை ஆறு மணிக்கெல்லாம் பணியைத் தொடங்கி, பிற்பகல் 2.30 மணி வரை பணியை தொடருகின்றனர்.
தற்போது ஆலங்குச்சிகளை சேகரித்து, நூற்றுக்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வரும் இந்த அமைப்பினர், ஆலங்குளம் பகுதியில் நாற்கரச் சாலையால் மரங்கள் வெட்டப்படும் பகுதிகளில், பின்னாளில் இந்த மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு ஏற்படும் செலவினங்களுக்கு வாரந்தோறும் யாராவது ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார். அப்பகுதியில் பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடும் சிலர் இவர்களின் ஒரு நாள் பணிக்கான செலவை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இதே போன்று, சுற்று வட்டாரத்தில் உள்ள பல ஊர்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருவது, சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

தமிழகத்தில் சாலைப் பணிகளுக்காக சாலையோரங்களில் உள்ள மரங்கள் முழுமையாக அகற்றப்படும் பட்சத்தில், அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் எழுந்து, குழுவாக சேர்ந்து இப்பணிகளை மேற்கொண்டால், இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தமிழக சாலையோரம் முழுதும் பசுமையாகிவிடும்.

இக்குழுக்களை புதிதாக உருவாக்குதல் கடினம் எனக் கருதினால், ஒவ்வொரு ஊரிலும் கிரிக்கெட், கபடி, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக் குழுக்கள் உள்ளன. அவர்களுக்கு சரியான வழிகாட்டும் நபர்கள் கிடைத்து விட்டால் போதும், இந்த பசுமைத் திட்டம் மிக எளிதாக அமைந்துவிடும்.
இந்த இளைஞர்களையும், பள்ளி மாணவர்களையும் ஒருங்கிணைக்க, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து முயற்சித்தால் நிச்சயம் வெற்றி காணலாம்.

ஏன் நஷ்டமடைந்தது ஏர் இந்தியா?


By என். முருகன் | Published on : 10th August 2018 01:15 AM

உலகப் புகழ்பெற்ற விமான நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா' நிறுவனம். நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனத்தைத் தனியார் மயமாக்கிவிடலாம் என்ற கொள்கை முடிவினை எடுத்தது மத்திய அரசு. அதை வாங்க முன்வரும் தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியது. ஆனால், ஏர் இந்தியாவை எந்தவொரு தனியார் அமைப்பும் வாங்க முன்வராதது மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ஏர் இந்தியா நிறுவனத் தொழிலாளர்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எவ்வளவு நஷ்டம் வந்தாலும், தங்களுக்கு வரும் வருமானம் குறையப்போவதில்லை என்ற எண்ணம்தான் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். அந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்கத் தாங்கள்தான் காரணம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

நம் நாட்டில், 1950 மற்றும் 1960-ஆம் ஆண்டுகளில் ஏர் இந்தியா', இந்தியன் ஏர்லைன்ஸ்' என்று இரண்டு பிரிவுகளாக இயங்கிய தேசிய விமான நிறுவனம் நம் நாட்டின் பெருமைக்கு உகந்ததாக இருந்தது. உலகின் சிறந்த விமான நிறுவனங்களுக்கு ஈடாக நம் நாட்டின் இரண்டு விமான நிறுவனங்களும் இயங்கின.

ஏர் இந்தியாவில் பணிபுரிந்த அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளும் வளைகுடா நாடுகளும் தங்களது விமான நிறுவனங்களை உருவாக்கின. அப்படிப் புகழ் சேர்த்த காலம் போய், இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள், தில்லி, மும்பை போன்ற நம் நாட்டு விமான நிலையங்களில் காத்துக் கிடக்காமல், துபை விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை உருவாகிவிட்டது!

அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் கடன்களுக்கும், வியாபாரத் தோல்விக்கும் அடிப்படைக் காரணம், அது சரியாக நிர்வகிக்கப்படாததுதான். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியன் ஏர்லைன்ஸில் விமான ஓட்டியாக பணிபுரிந்தார். அவர் பிரதமரான பின், கனடாவின், வான்கூவர் நகரில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஏர் இந்தியாவின் ஜெட் விமானத்தில் பயணம் செய்தார். அம்மாநாட்டுக்கு ஜெட் விமானத்தில் வந்த மற்றொருவர் புரூனை நாட்டின் அதிபரான சுல்தான். அன்றிலிருந்து, இந்தியாவின் அரசியல் தலைவர்கள் பலரும் ஏர் இந்தியாவின் ஜெட் விமானங்களில் அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளும் பழக்கம் உருவானது. ஆனால், அந்த பயணங்களுக்காக செலுத்த வேண்டிய கட்டணங்களை அரசு செலுத்தாமல் விட்டதால் ஏர் இந்தியா கடன்சுமையை சுமக்க வேண்டிய கட்டாயம் உருவானது.

அடுத்ததாக, இந்திய நாட்டின் வான்வெளியில் வெளிநாட்டின் விமானங்கள் தங்கு தடையின்றி செல்லும் கொள்கையை நமது அரசு உருவாக்கியது. இதன் காரணமாக, இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், இந்த வருவாய்க் குறைவை கணக்கிலெடுக்காமல் தொடர்ந்து ஏராளமான விமானங்கள் வாங்கப்பட்டதால் கடன்கள்அதிகரித்தன. 2006-07-ஆம் ஆண்டில், இந்தியன் ஏர்லைன்ஸ் 40 ஏர் பஸ் எனும் உயர்ரக விமானங்களை வாங்க முடிவெடுத்தது. ஏர் இந்தியா 50 போயிங் விமானங்களை வாங்க முடிவெடுத்தது.

ஆனால், உயர்ரக விமானங்களை இயக்கத் தேவையான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும், தேவையான விமான நிறுத்த இடங்களை உருவாக்கவும் இல்லை. அரசு விமான நிறுவனங்களின் ஆய்வுக் கணக்கீட்டின்படி ஐந்து 777 போயிங் மற்றும் ஐந்து 737 போயிங் விமானங்கள் மூன்று ஆண்டுகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் 84 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த பறக்காத விமானங்களை இயக்க வேண்டும் என்பதற்காக, மிக அதிக சம்பளத்தை வழங்கி 150 வெளிநாட்டு பைலட்டுகளை பணியில் அமர்த்தின, நம் நாட்டின் அரசு விமான நிறுவனங்கள். நல்லவேளையாக, பி-787 ட்ரீம் லைனர்ஸ்' எனும் உயர்ரக விமானங்களை வாங்க உத்தரவிட்டும் அவை ஏர் இந்தியாவிற்கு வரவில்லை. வந்திருந்தால் அவையும் இயங்காமல் அதிக நஷ்டம் உருவாகியிருக்கும். இந்த விமானங்களை வாங்க ஏர் இந்தியா அளித்த முன்தொகைக்கு, குறிப்பிட்ட காலத்தில் விமானங்கள் வழங்கப்படாவிட்டால் முன்பணத்திற்கு வட்டி வசூலிக்கப்படும்' என்ற ஒப்பந்த விதியை ஏற்படுத்தாததால் நஷ்டம் உருவானது. அது போலவே, குறிப்பிட்ட நாளில் விமானங்கள் வழங்கப்படாவிட்டால் நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற விதியும் உருவாக்கப்படவில்லை.

விமான நிறுவன அதிகாரிகளின் கவனக் குறைவினால் இந்த விதிமுறைகள் உருவாக்கப்படவில்லையா, அல்லது உயர்விமானத் தயாரிப்பு கம்பெனிகளுக்கு சாதகமான வகையில் இந்த விதிமுறைகள் உருவாக்கப்படவில்லையா என்பது தெரியவில்லை.

2007-ஆம் ஆண்டில் தொடங்கி, 2011-ஆம் ஆண்டு நிறைவடைந்தது நமது நாட்டின் ஏர் இந்தியா- இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய இரு அரசு நிறுவனங்களின் இணைப்பு. இதற்கான காரணம் இதுவரை கூறப்படவில்லை. ஒரே மாதிரியான இரண்டு நிறுவனங்களிலும் பணி புரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நினைத்திருக்கலாம். அதாவது, பயணிகளின் பயணச்சீட்டு மற்றும் பைகளை சரிபார்த்து, அவர்களை விமானத்தில் ஏற்ற 20 பேர் வீதம் இரண்டு விமான நிறுவனங்களுக்கு 40 பேர் இருந்தால், இந்த இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்பட்டபின், 20 பணியாளர்களே போதும்.
ஆனால், அது நடக்கவில்லை. அதற்குக் காரணம் தொழிலாளர் சங்கங்கள் என்று கூறப்படுகிறது. இன்றும், நமது விமான நிலையங்களில் ஏர் இந்தியா (உள்நாட்டுப் பயணம்) பணியாளர் எனவும், ஏர் இந்தியா (வெளிநாட்டுப் பயணம்) பணியாளர் எனவும் இருப்பதைக் காணலாம்.

இணைப்பின்போது, அரசின் பணம் ரூபாய் 25,000 கோடி, ஏர் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. இதன் பின்னரும், ஏர் இந்தியாவின் நிகர மதிப்பீடு ரூபாய் 25,000 கோடி என்றும், அதன் கடன்தொகை ரூபாய் 52,000 கோடி என்பதும் கவனிக்கத்தக்கது.

1932-ஆம் ஆண்டு டாடா ஏர் மெயில்' என்ற விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே அது குறைந்த லாபம் ஈட்டியது. நம் நாடு சுதந்திரமடைந்த பின், 1952-இல் இந்த விமான நிறுவனம் நாட்டுடைமையாக்கப்பட்டு, ஏர் இந்தியாவாக மாறியது. அரசு அதிகாரிகள் இந்த நிறுவன விமானங்களில்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது.

மற்ற விமான நிறுவனங்களின் விதிகளின்படி, பயணிப்பவர் 15 கிலோ எடையுள்ள பயணப் பைகளைத்தான் எடுத்துச் செல்லலாம். ஆனால், ஏர் இந்தியா பயணியோ 25 கிலோ பைகளை எடுத்துச் செல்லலாம். பயணக் கட்டணங்களும், மற்ற விமான நிறுவனங்களை விடவும் ஏர் இந்தியாவில் குறைவு. ஏர் இந்தியா விமானங்கள் தரமானவை. இந்த எல்லா அம்சங்களும் இருந்த போதிலும், ஏர் இந்தியாவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இதற்குக் காரணம் சரியான நிர்வாகம் இல்லாமையே. அரசு அதிகாரிகள் அதிகம் பயணிக்கும் விடுமுறை கால பயண சலுகைகள் (எல்.டி.சி) அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் விடுப்பு எடுத்து குறைந்த கட்டணத்தில் ஏர் இந்தியா விமானத்தில் தில்லியிலிருந்து அந்தமானுக்கு ஏராளமான அதிகாரிகள் செல்வர். இந்த பயணத்திற்காக பல மாதங்களுக்கு முன்னரே பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்படும்.

இந்த வழித்தடத்தில் தரமான விமானங்களை இயக்கினால் இந்தியன் ஏர்லைன்ஸின் லாபம் அதிகரிக்கும். ஆனால், மிகவும் சிறிய, பழைய விமானங்களே இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இவை, டிசம்பர்- ஜனவரி மாதங்களில் அடிக்கும் பலமான சூறைக்காற்று காரணமாக அடிக்கடி ரத்து செய்யப்படும். இதனால், ஏர் இந்தியாவின் மீது பயணிகள் நம்பிக்கை இழக்கின்றனர்.

நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், 2015-ஆம் ஆண்டில் ஏர் இந்தியா தனது அலுவலகக் கட்டடத்தை அதிக வாடகைக்கு விட திட்டமிட்டது. மும்பையின் மத்திய பகுதியான, நரிமண் பாயிண்ட்' எனும் இடத்திலிருந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தின் வாடகை ஒரு சதுர அடிக்கு ரூபாய் 300 என அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு தளத்தின் வாடகையும் பல கோடி என கணக்கிடப்பட்டது. நிறைய பேர் அதிக வாடகை கொடுத்து அந்த கட்டடத்தில் அலுவலகங்கள் அமைக்க முன்வந்தனர். ஆனால், அந்த நடவடிக்கைகளை உடனே செய்யாமல் காலம் தாழ்த்தியதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

ஊழியர்களும் அதிகாரிகளும் பணிக்கு வராததால் விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பப்படுவது வழக்கமானது. ஒரு விமானத்திற்கு சராசரியாக 234 பணியாளர்கள் என்ற விகிதத்தில் இயங்குகிறது ஏர் இந்தியா. ஆனால், மற்ற தனியார் விமான நிறுவனங்களில் ஒரு விமானத்திற்கு சராசரியாக 121 பணியாளர்கள்தான் உள்ளனர். ஏர் இந்தியாவின் பணியாளர்களை குறைக்க முடியாது என்பதாலும், அந்த அதிகாரிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலைமையில், அந்த நிறுவனத்தின் நஷ்டத்தை சரிசெய்து லாபம் ஈட்ட முடியாது என்பதால், அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்க எவரும் முன்வரவில்லை.

அரசினால் தொடங்கப்பட்டு, பின் சரியாக நடத்த முடியாத நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, மிகச்சிறந்த விமான நிறுவனங்களாக இயங்கும் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ்', ஜெர்மனியின் லூஃப்தான்சா', இத்தாலியின் அலிடாலியா' போன்றவை நமது கவனத்தை ஈர்க்கின்றன. நமது நாட்டின் வாக்கு வங்கி அரசியலால் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க முடியவில்லை.

இந்த நிலையில், மிக அதிக தொகை இழப்பீடாகக் கொடுத்து ஊழியர்களையும், அதிகாரிகளையும் பணிவிலகச் செய்து, எல்லா விமானங்களையும், பழைய விமான விலைக்கே விற்பனை செய்துவிட்டு, எல்லா கட்டட சொத்துகளையும் விற்றுவிட்டு, ஏர் இந்தியா' நிறுவனத்தை மூடிவிடுவதே புத்திசாலித்தனமான செயலாக இருக்கும். கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

NEWS TODAY 27.06.2026