Sunday, August 12, 2018

தேசிய செய்திகள்

நிவாரண முகாம்களில் 54 ஆயிரம் பேர் : கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா



கனமழையால் கேரளாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்–மந்திரி பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

பதிவு: ஆகஸ்ட் 12, 2018 05:15 AM

திருவனந்தபுரம்,

54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

மழையினால் வீடு, வாசல்களை இழந்த 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பெரியாறு ஆற்றின் கரையோரம் வசித்து வரும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எர்ணாகுளம் மாவட்டம் பரவூர், ஆலுவா, கனயன்னூர், குன்னத்நாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து 5 மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் செருதோணி ஊருக்குள் புகுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள பாலம், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் ஆற்றின் கரையோரத்தில் இருந்த ஏராளமான கடைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இடுக்கி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், தற்போது மழை குறைந்துள்ளதாலும் இடுக்கி அணையின் நீர் மட்டம் சற்று குறைந்துள்ளது. ஆலுவாவில் பெரியாறு ஆற்றின் கரையோரம் உள்ள பிரபல சிவன் கோவிலின் பெரும் பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது. ஆற்றின் காரையோரம் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவம், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க 3 படகுகள், 20 உயிர்காக்கும் படகுகள், உயிர் காக்கும் ஆடை, சிறப்பு கயிறு பயன்படுத்தப்படுகிறது.




மாநிலத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 32 பேர் பலியாகி விட்டனர். இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாநில முதல்–மந்திரி பினராயி விஜயன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, வருவாய்த்துறை மந்திரி சந்திரசேகரன், மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், தலைமை போலீஸ் அதிகாரி லோக்நாத் பெஹாரா ஆகியோர் நேற்று ஒரே ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும் பினராயி விஜயன் நிவாரண முகாம்களுக்கு சென்றும் பார்வையிட்டார். அத்துடன் கலெக்டர் அலுவலகம் சென்று உயர் அதிகாரிகளுடன் பினராயி விஜயன் வெள்ள நிலவரம் குறித்து ஆய்வு நடத்தினார்.

மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொச்சி விமான நிலையத்தில் வழக்கம் போல் விமான சேவை தொடருவதாகவும், எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெய்துள்ள மழை, கேரளாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், சொத்துகளையும் இழந்துள்ளனர். எனவே ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும். இந்த வேதனையான தருணத்தில் எனது வேண்டுதல்களும், சிந்தனைகளும் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் குடும்பங்களைப் பற்றியே உள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இன்னொரு பதிவில், மாநில அரசுடன் மத்திய அரசு நிவாரண மற்றும் புனர்வாழ்வு பணிகளில் ஒத்துழைத்து செயல்படும் என்று நம்புகிறேன். வெள்ள நிவாரண பணிகளுக்காக கேரளாவுக்கு போதிய நிதி உதவியை பிரதமர் மோடி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேரளா வருகிறார்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மழை ஓய்ந்த பின்னர் மீண்டும் படகு சவாரி தொடங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே இன்னும் 4 நாட்களுக்கு கனத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
தேசிய செய்திகள்

ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது : ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு



ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை, அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரத்து செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 12, 2018 05:30 AM
புதுடெல்லி,

டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்தின் கீழ், ரெயில் விபத்தில் உயிரிழக்கும் பயணிகளின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது.

இதைப்போல ஊனமடையும் பயணிகளுக்கு ரூ.7½ லட்சமும், காயமடைந்தால் ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் உடலை எடுத்துச்செல்ல ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை கைவிட ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது என ரெயில்வேத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக இன்சூரன்ஸ் திட்டம் இனிமேல் விருப்ப தேர்வாக அமைகிறது. அதாவது இன்சூரன்ஸ் தேவை என்றால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அதை தேர்வு செய்ய வேண்டும்.

இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண விவரம் குறித்து இன்னும் சில நாட்களில் ரெயில்வேத்துறை அறிவிப்பு வெளியிடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக டெபிட் கார்டு மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, பதிவு கட்டணத்தை ரெயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.



Court orders on Grace Marks in MBBS

மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண் ரத்து செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள்: ஆக் 12,2018 01:57

சென்னை:மருத்துவ தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய, விதிகளில் திருத்தம் கொண்டு வர, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லுாரி மாணவர்கள், தோல்வியடைந்த பாடத்தில், தங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கவும், மருத்துவ படிப்பை முடிக்க அனுமதிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, ஐந்து மதிப்பெண்கள் வரை, கருணை அடிப்படையில் வழங்கலாம்; அதுவும், கருணை மதிப்பெண் வழங்குவது, பல்கலையின் தனிப்பட்ட உரிமை. அந்த மாணவன், ஒரு பாடத்தில் மட்டுமே தோல்வியடைந்து, மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு முறைக்கு மேல் தேர்வு எழுதுபவர்களுக்கு, கருணை மதிப்பெண் பெற உரிமை இல்லை.கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி, உரிமை கோர முடியாது. 

கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மருத்துவ மாணவனிடம், மதிப்பெண் வழங்கியவரின் குடும்பத்தினரை, சிகிச்சைக்கு செல்லும்படி கூற வேண்டும். மருத்துவ கவுன்சில் விதிமுறைகள், சட்டத்தை மீறியதாக இருந்தால் ஒழிய, அதில் மாற்றம் செய்ய முடியாது.எனவே, கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி, பல்கலையிடம், மாணவர்கள் உரிமை கோர முடியாது. செய்முறை தேர்வுக்கும், கருணை மதிப்பெண் வழங்க முடியாது. 

அதனால், கருணை மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்பது நியாயமற்றது.டாக்டர்கள், மருத்துவ மனைகள், காளான்கள் போல பெருகி வருகின்றன. உண்மையான டாக்டர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலை, நோயாளிகளுக்கு ஒரு நாள் ஏற்படும். எனவே, டாக்டர்களாக பதிவு செய்வதை, அவ்வப்போது, மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் மற்றும் இதர அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அப்போது தான், முறையான டாக்டர்கள் வருவர்.

கருணை மதிப்பெண் வழங்குவதை ரத்து செய்ய, விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. கருணை மதிப்பெண் வழங்குவது, பல்கலையின் தனிப்பட்ட உரிமை தான் என, விதிகளில் தெளிவாக கூறியிருந்தாலும், தனிப்பட்ட உரிமை என்ற வார்த்தையை, மாணவர்கள் தவறாக பயன்படுத்த முயற்சிப்பர்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

USA immigration

அமெரிக்காவில் படிப்பு காலம் முடிந்து தங்குவது... சட்டவிரோதம்! :  புதிய குடியேற்ற கொள்கையால் மாணவர்கள் அதிர்ச்சி

மாற்றம் செய்த நாள்: ஆக் 12,2018 00:00

மும்பை: வெளிநாட்டு மாணவர்களுக்கான, அமெரிக்க அரசின் குடியேற்றக் கொள்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. 'படிப்பு முடிந்தவுடன், மாணவர் அந்தஸ்து பறிக்கப்படும்; அதற்கு மேல் அமெரிக்காவில் இருந்தால், சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக கருதப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது; இது, இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இதில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில், இந்தியாவும் உள்ளன. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, 1.86லட்சம் இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் படிக்கின்றனர்.அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், 2016ல் பதவியேற்ற பின், அமெரிக்காவின் குடியேற்ற கொள்கை மற்றும் விசாவில், அதிக கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.

அனுமதி :

இதனால், இந்திய மாணவர்களும், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அமெரிக்க அரசின், வெளிநாட்டு மாணவர்களுக்கான, புதிய குடியேற்ற கொள்கை, ஆக., 9ல் வெளியானது. இது, இந்தியா உட்பட அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு, 'மாணவர் அந்தஸ்து' வழங்கப்படுகிறது. அத்துடன், அவர்களுக்கு, 
அமெரிக்காவில் தங்குவதற்கான, 'விசா'வும் வழங்கப்படுகிறது.படிப்பு முடிந்த பின், விசா காலம் முடியும் வரை, அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க, முந்தைய குடியேற்ற கொள்கையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.ஆனால், அமெரிக்க அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய குடியேற்ற கொள்கையில், பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அமெரிக்காவில் தங்குவதற்கான விசா காலம் இருந்தாலும், படிப்பு முடிந்தவுடனே, அந்த மாணவருக்கு வழங்கப்பட்ட மாணவர் அந்தஸ்து, ரத்து செய்யப்படுகிறது. அத்துடன், அவர், அமெரிக்காவில்தங்கிஇருப்பது, சட்ட விரோதமாக கருதப்படும்.அமெரிக்காவில், 180 நாட்களுக்கு மேல் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள், அதன்பின், அமெரிக்காவில் மீண்டும் நுழைய, 3 - 10 ஆண்டு வரை தடை விதிக்கப்படும் என, புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவில், ஒரு கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர், ஒரு வாரத்தில், குறிப்பிட்ட மணி நேரம், வகுப்புக்கு வந்திருக்க வேண்டும் என, விதி உள்ளது. அப்போது தான், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

குடியுரிமை :

கல்வி நிறுவனம் விதித்துள்ள, குறைந்தபட்ச வருகை நேரத்தை பூர்த்தி செய்யாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், படிப்பு முடிந்து விட்டால், அவர்களின், மாணவர் அந்தஸ்து பறிக்கப்பட்டு விடும். அதனால், அவர்களால், மீண்டும் தேர்வை எழுத முடியாமல் போய்விடும். எனினும், 'படிப்பு முடிந்து மாணவர் அந்தஸ்தை இழக்கும் மாணவர்கள், மீண்டும் அந்தஸ்து வழங்க கோரி, ஐந்து மாதத்துக்குள் மனு கொடுக்க வேண்டும். 'மனு மீதான விசாரணை முடியாவிட்டால், அவர்கள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்' என, அமெரிக்க குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே, விசா வழங்குவதில், அதிபர் டிரம்ப் காட்டும் கெடுபிடியால், அமெரிக்கா சென்று படிக்கும், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

குறைய வாய்ப்பு :

இந்தியாவிலிருந்து, 2016-ல், 65 ஆயிரத்து, 257 மாணவர்கள் அமெரிக்காவிற்கு படிக்க சென்றனர். ஆனால், 2017-ல், 47 ஆயிரத்து, 302 மாணவர்கள் மட்டுமே, அமெரிக்காவிற்கு சென்றனர்.அதேபோல், சீனாவிலிருந்து, 2016-ல், 1.52 லட்சம் மாணவர்கள், அமெரிக்கா சென்ற நிலையில், 2017-ல், 1.16 லட்சம் மாணவர்களே சென்றனர். தற்போது, அமெரிக்காவின் புதிய குடியேற்ற கொள்கையால், அமெரிக்கா சென்று படிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

'உரிமைகள் பறிபோகும்' :

அமெரிக்காவின் புதிய குடியேற்ற கொள்கை குறித்து, நியூயார்க்கில் செயல்படும், சட்ட நிறுவனம் ஒன்றின் நிர்வாக பங்குதாரர், டி.மேத்தா கூறியதாவது:கல்வி மையத்துக்கு மாணவர்கள் வரும் நேரத்தை கணக்கிட்டு பதிவிடுவதில், தவறுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது, மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவர். எப் - 1 விசாவின் படி, படிப்பு முடிந்து, 60 நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.பணி நேரம் கணக்கிடுவதில் ஏற்படும் தவறால், இவர்கள், ௬௦ நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, அவர்கள், சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவர். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும், அதன் மீதான விசாரணை முடிய, நீண்ட காலமாகும். இதனால், அமெரிக்காவுக்கு அவர்களால் மீண்டும் வர முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது, அவர்களின் வாழ்க்கையையே பாதித்துவிடும்.அமெரிக்காவின் புதிய கொள்கை, மாணவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, August 11, 2018

Single parenting a dangerous concept for society, says Madras high court

DECCAN CHRONICLE. | A ARUL PALANI

UpdatedAug 11, 2018, 3:01 am IST

The judge noted that the concept of family from joint to nuclear has now evolved to single parenting.


Madras high court

Chennai: Observing that single parenting is a dangerous concept for society, the Madras high court held that a child needs the affection of both its mother and father.

Justice N. Kirubakaran, before whom a contempt petition filed by Girija Raghavan of Chennai, seeking to punish the Union ministry of women and child development for not obeying the court order dated October 16, 2015, came up for hearing on Friday, said that one cannot compensate the other, and the lack of such affection and love might cause behavioural changes in the child, which could turn against the society.

The judge noted that the concept of family from joint to nuclear has now evolved to single parenting. Referring to a recent sexual abuse case in the city, justice Kirubakaran said, “What kind of parents are they to be unaware of what is happening to their child.”

The judge said, it is time Union ministry of women and child development is bifurcated to establish a dedicated ministry for child development alone. He also asked the Central government as to why there cannot be separate ministries for women development and child development at the Centre, since as of now, both ministries continued to function under the head of union ministry of women and child development.

The judge directed the assistant solicitor general to get instructions from the Union government regarding the separation. The judge has also asked the assistant solicitor general to get instructions from the ministry as to whether they have issued any guidelines to spend the Nirbhaya fund being allotted to the state governments, and posted the plea to August 17.

It may be noted that in an order dated October 16, 2015, the court suggested the ministry to consider ‘castration’ of child abusers, particularly, child rapists, as an additional punishment apart from other punishments under the Protection of Children from Sexual Offences (POCSO) Act, IPC and the Juvenile Justice Act. The court passed the order when an accused filed a criminal original petition challenging the trial in a lower court in a criminal case filed against him under the POCSO Act.

The accused allegedly attempted to have sexual intercourse with a 15-year old boy, in an unnatural way. Among other directions, Justice N Kirubakaran directed the Union government to incorporate columns in Indian visa forms issued to foreign nationals to provide details of their pending cases, and cases of conviction as provided in UK visa forms.The Centre was also asked to instruct all the state governments to conduct massive awareness programmes about crimes against children as provided under Pocso Act. The present contempt plea has been moved since Union failed to implement several directions.
Can’t release Rajiv killers as proposed by TN: Centre

AmitAnand.Choudhary@timesgroup.com

New Delhi:

The Centre has turned down the proposal of Tamil Nadu government for release of seven convicts in the Rajiv Gandhi assassination case and told the Supreme Court on Friday that freeing would set a very wrong precedent.

The Centre took the decision on the direction of the apex court which had in January asked it to take a call on the proposal submitted by Tamil Nadu in 2016. Placing the government’s decision before a bench of Justices Ranjan Gogoi, Navin Sinha and K M Joseph, additional solicitor general Pinky Anand and advocate Rajesh Ranjan said the Centre is not agreeable to the state government’s proposal.

Rajiv case convicts don’t deserve any leniency: Centre

With the Supreme Court ruling that the state government cannot remit the sentence of a convict in cases probed by a central agency, the Centre’s approval was mandatory for releasing the late PM’s killers as the case was probed by the CBI.

“The central government, in pursuance of section 435 of the Code of Criminal Procedure, does not concur to the proposal of Tamil Nadu government contained in the communication letter dated March 2, 2016 for grant of further remission of sentence to these seven convicts,” the government said in its report.

The seven convicts are, V Sriharan @Murgan, T Suthendreraja @Santhan, A G Perarivalan, Jayakumar, Robert Payas, Ravichandran and Nalini. All convicts are lodged in the Central Prison (Vellore) in Tamil Nadu.

Santhan, Murugan and Perarivalan were awarded the death sentence by a TADA court which was upheld by the apex court but on February 18, 2014 the same court commuted their death sentence to life imprisonment on the ground of 11 years’ delay in deciding their mercy pleas by the Centre. A day after the apex court order, the Tamil Nadu government decided to remit their sentences along with that of Nalini, Robert Pious, Jayakumar and Ravichandran to pave the way for them to get out of jail.

The Centre said in its reply that the convicts did not deserve any leniency as they committed an act of exceptional depravity and it was an “unparallel act in the annals of crimes committed in the country”.

The case involves the killing of a former Prime Minister who was brutally assassinated in pursuance of diabolical plot carefully conceived and executed by a foreign terrorist organization. The killing brought the Indian democratic process to a grinding halt as the Lok Sabha elections in some states had to be postponed, it said.



SOME RESPITE: The court had commuted the death sentence of the convicts in the Rajiv Gandhi assassination case to life imprisonment
State councils blame MCI for docs’ registry mess

Rema.Nagarajan@timesgroup.com 11.08.2018

Several State Medical Councils have expressed shock at the Medical Council of India (MCI) submitting outdated and wrong data to Parliament year after year. According to the office bearers of these councils, they have been sending updated lists to the MCI but do not see it reflected in the Indian Medical Register (IMR). Maintaining the IMR is one of the fundamental and statutory duties of the MCI.

While MCI had told TOI that the state councils were to blame for not regularly sending information on registered doctors to it, most state councils refuted this allegation.

In the case of Karnataka, for instance, the MCI data submitted to Parliament recently showed 1.04 lakh doctors registered. The data MCI gave TOI also said the state council had not submitted any data in 2015 or 2016. However, the state council insisted that it has been submitting data every quarter. The Karnataka Medical Council started the process of re-registration of doctors every five years in 2013 and after renewal had about 1,23,436 doctors in the registry as of March 2018, nearly 20,000 more than the MCI data shows.

“It is disrespect to Parliament to not make any effort whatsoever to give the latest data and not even explain to Parliament that the data being submitted has not been updated. A statutory body like the MCI is not expected to behave like this,” said KMC president, Dr H Veerbhadrappa.

Similarly, the Maharashtra Medical Council (MMC) has not only done the process of re-registration of doctors every five years, the entire list of 86,567 doctors registered with it is available on the council’s website.

NEWS TODAY 28.06.2026