Monday, November 19, 2018


நாளை மறுநாள் முதல் சென்னையில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்


By DIN | Published on : 18th November 2018 08:50 PM

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட வட தமிழக மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வானிலை நிலவரத்தை கணக்கிட்டு அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தற்போது வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக்கடல் பகுதியில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, நாளை மறுநாள் நவம்பர் 20 முதல் 22 ஆம் தேதி வரை கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரையிலான மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கஜா' புயலால் மழைநீர் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை மறுநாள் நவம்பர் 20 முதல் 22 வரை இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நல்ல மழைகிடைக்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (நவ.19,20) கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை தொடங்கும் மழை 20 ஆம் தேதி அதிகனமழையாகவும் மாற வாய்ப்புள்ளது. காற்றுக்கு வாய்ப்பில்லை.

சென்னையைப் பொறுத்தவரை 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அவ்வப்போது இடைவெளிவிட்டு மழை இருக்கும். குறைந்தபட்சம் இரு நாட்களுக்குச் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது.

இதனால் வடதமிழகத்தில் உறுதியாக நல்ல மிகச்சிறந்த மழையைக் கொடுக்கும். ஆனால், புயலாக உருவாகும் என்ற வந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

வருமுன் காப்போம்


By ந. செந்தில்குமார் | Published on : 19th November 2018 03:46 AM | 

மருத்துவ அறிவியல் வளர்ச்சி அதிகரித்திருக்கும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர் சுகாதாரமான காற்றை சுவாசித்தார்கள். சுத்தமான தண்ணீரைக் குடித்தார்கள். சத்தான உணவுகளை உண்டார்கள். அதனால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், நாமோ இன்று அசுத்தமான காற்றை சுவாசித்து, சுத்தமில்லாத தண்ணீரைக் குடித்து, சத்தற்ற உணவை உட்கொள்கிறோம். அதனால்தான் மருத்துவ அறிவியல் வளர்ந்தும் ஆரோக்கியமற்று வாழ்கிறோம்.
நோயற்ற வாழ்வு என்பது சொர்க்க வாழ்வாகும். அது ஒரு சிலருக்கே வாய்க்கிறது. பெரும்பாலானோர் ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகின்றனர்.
நாம் நெடுநாள் உயிர் வாழ முதலில் நம் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். உடலை வளர்ப்பதென்பது உயிரை வளர்ப்பதற்கு ஒப்பானது. இதைத்தான் திருமூலர், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறுகிறார். 
 
இன்றைய காலகட்டத்தில் உடல் நலத்தைப் பாதிக்கும் சில நோய்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம். சில நோய்களின் பாதிப்புக்கு நாம் உண்ணும் உணவு காரணமாகிறது. வேறு சில நோய்களுக்குக் காரணம் நமது முறையற்ற பழக்கங்களாகும்.

முந்தைய காலங்களில் மலேரியா, பெரியம்மை, காசநோய், போலியோ போன்ற நோய்கள் பரவலாக இருந்தது. இப்போது அவை அநேகமாக ஒழிக்கப்பட்டுவிட்டன.

தற்போது, சர்க்ரை நோய், இருதய நோய், கல்லீரல், நுரையீரல் பாதிப்புகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தொற்று நோய் காரணமாகவும் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, இந்தியாவில் "மலேரியா', "டெங்கு', "ஃபைலேரியா', "சிக்குன் குனியா' போன்ற கொசுக்கடி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். 
 
பருவ நிலை மாற்றம், அதிகரித்த கொசு உற்பத்தி போன்ற காரணங்களால் டெங்கு, வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றை தவிர, என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாத காய்ச்சளுக்கு "மர்மக் காய்ச்சல்' என்று பெயரிட்டு விடுகிறார்கள்.

இவ்வித நோய்கள் பெரும்பாலும் சிறுவர்களையும், முதியவர்களையுமே அதிக அளவில் தாக்குகின்றன. காரணம், அவர்கள் நோயின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய அளவுக்கு உடல் திறனோ, நோய் எதிர்ப்பு சக்தியோ உள்ளவர்களாக இருப்பதில்லை.

டெங்கு காய்ச்சல் "ஏடிஸ் எஜிப்டி' என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவின் மூலம் பரவுகிறது. 

டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத ஒருவரைக் கடிக்கும்போது அவருக்கு டெங்கு பரவும். மற்றபடி, தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல், தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது இல்லை. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவாது.
இந்நோய்க்குத் தடுப்பு ஊசியோ மருந்தோ எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே உயிர் இழப்பைத் தடுக்க முடியும்.
பன்றிக் காய்ச்சல் ஆரம்பத்தில் பன்றியில் இருந்து பன்றிக்கு பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பிறகு, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த காய்ச்சல் பரவுவதில்லை.
தற்போது, "எச்1 என்1 இன்ஃப்ளுயன்சா' வைரஸ் கிருமிகளால் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை உட்கொண்டால் இந்த காய்ச்சல் குணமாகிவிடும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாகும்.

நிகழாண்டு, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல்களின் தாக்கம் தொடங்கிவிட்டன. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தேசிய அளவில் சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமும், பொது சுகாதாரச் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமும் தமிழகம்தான். இருந்தபோதிலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

சுகாதாரத்தை நாம் வசிக்கும் இடத்திலிருந்து தொடங்க வேண்டும். சுகாதாரம், தூய்மை குறித்த விழிப்புணர்வு நம்மிடையே வளர்ந்துவிட்டால் நோய் வராமல் காத்துக்கொள்ளலாம். ஏனெனில், நோய் வந்த பின்பு சிகிச்சைக்கு செல்வதைவிட, முன்பே அதனைத் தடுப்பதே சிறந்தது.
மருத்துவத் துறையின் முக்கியப் பொறுப்பு தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது; மாறும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு வரக்கூடிய நோய்கள் வராமல் தடுப்பது; நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக வருமுன் காப்பது. 

சமச்சீரான உணவை உண்பது, உடற்பயிற்சியைத் தவறாமல் செய்வது, வாரம் ஒருநாள் முழுமையாக ஓய்வெடுப்பது, எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் இருப்பது போன்ற சில விதிகளை கடைப்பிடித்தால் நோயின்றி வாழலாம்.

'நீட்' நுழைவு தேர்வு பதிவுக்கு இன்னும் 10 நாளே அவகாசம்

Added : நவ 18, 2018 23:18

சென்னை: மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடிக்கும், மாணவ - மாணவியர், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிக்க முடியும். தனியார் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் கல்வி நிறுவனங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சிறப்பு பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசே பல லட்சம் ரூபாய் செலவு செய்து, சிறப்பு பயிற்சி வழங்குகிறது. அடுத்த ஆண்டு, மே, 5ல் நடக்க உள்ள, நீட் தேர்வுக்கு, நவ., 1ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், கடைசி நேர பிரச்னைகளை தவிர்க்க, பதிவுகளை விரைந்து முடிக்குமாறு, மாணவர்களை தேசிய தேர்வு முகமை வலியுறுத்தியுள்ளது.


வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

Added : நவ 18, 2018 12:52




சென்னை: தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், சற்று வலுப்பெறும். தொடர்ந்து, மேற்கு திசையில் நகர்ந்து, 20ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் கடலோர பகுதியில் நிலை கொள்ளக்கூடும். இதனால், 19ம் தேதி கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய துவங்கும். 20, 21 தேதிகளில் படிப்படியாக உள்மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த தாழ்வு பகுதி புயலாக மாறாது.

கனமழை

19ம் தேதி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 20ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தென் மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.எச்சரிக்கைமீனவர்கள் 18 ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். 19ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், 20,21ம் தேதிகளில் தென் மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கும் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

ஊதிய உயர்வு கோரி அரசு டாக்டர்கள் 22-ந்தேதி தர்ணா போராட்டம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பேட்டி



ஊதிய உயர்வு கோரி அரசு டாக்டர்கள் வருகிற 22-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பதிவு: நவம்பர் 19, 2018 03:45 AM
சேலம்,

ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கேசவன், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராஜசேகர் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 26 வகையான அலவன்ஸ் வழங்க வேண்டும், என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபடுவது என்ற தீர்மானமும் நிறைவேறியது.

இதில் மாவட்ட துணை தலைவர் சுரேஷ்பாபு, துணை செயலாளர் கீர்த்திவாசன் மற்றும் பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் 3 மாதமாக சம்பள உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனாலும் எந்தவிதமான சம்பள உயர்வும் கொடுக்கப்படவில்லை. பிற மாநிலங்களில் டாக்டர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு போல் வழங்க கோரி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

அதன்படி வருகிற 22-ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெறும். 26-ந்தேதி சென்னையில் ஆயிரம் டாக்டர்களுடன் போராட்டம் நடைபெறும். இன்று (திங்கட்கிழமை) முதல் கோரிக்கைகள் குறித்து டாக்டர்களிடம் கையெழுத்து பெற்று 29-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனுவாக கொடுக்க உள்ளோம். மேலும் அன்று அவசரமில்லா அறுவை சிகிச்சை தவிர்த்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். டாக்டர்களின் மாத சம்பளத்தில் ரூ.500 பிடித்தம் செய்து இளம்வயதில் இறக்கும் டாக்டர்களுக்கு ரூ.1½ கோடி வழங்க வேண்டும். மேலும் நேற்று எங்களுடைய கோரிக் கை குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்தோம். இந்த மனுவை பரிசீலனை செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, November 18, 2018

2,000 govt officials seek exemption from poll duty 

DECCAN CHRONICLE.


Published Nov 18, 2018, 1:41 am IST


Official further said that 2,000 polling officers have been doing rounds around the GHMC headquarters to exempt them from polling duties. 



 

A senior GHMC official said District Election Officer M Dana Kishore has already issued show cause notices to the absentees before initiating disciplinary actions.

Hyderabad: The polling officers (POs) have been making beeline at the Greater Hyderabad Municipal Corporation headquarters to exempt them from the polling duty on medical grounds. Out of a total 9,000 POs appointed, 2,000 were moving pillar to post to exempt them from election duties and 800 of them did not report to their duties for whom show cause notices have been served.

A senior GHMC official said District Election Officer M Dana Kishore has already issued show cause notices to the absentees before initiating disciplinary actions.

The official further said that 2,000 polling officers have been doing rounds around the GHMC headquarters to exempt them from polling duties claiming ill health, personal problems and other issues.

He added that 80 members have been exempted and the corporation would conduct medical tests to the remaining POs and if it gives negative results, disciplinary action would be initiated against them.
Colleges can’t retain original documents: Karnataka HC

The petitioner sought HC directions to the Vijayanagara Institute of Medical Sciences in Ballari to return her original documents submitted at the time of joining.

  Published: 14th November 2018 07:54 AM 


 

By Express News Service

BENGALURU: In a big relief to doctors, the Karnataka High Court has ruled that no college/university has the authority to retain original documents of any individual or students. These documents include mark sheets or degree certificates.

The petitioner, Dr T K Reshma from Hyderi Manzil in Ballari, sought High Court directions to the Vijayanagara Institute of Medical Sciences in Ballari to return her original documents submitted at the time of joining.

According to the petition, the institute retained some of Reshma’s documents on the grounds that she had given an undertaking to serve in rural areas after graduating. However, the institute has not pointed how it can retain her original documents nor has it cited any rule in the support of its actions. Taking note of it, the court said, “All the original documents relating to educational qualifications are very important to the petitioner/citizen to press his claim for employment or higher education or otherwise. To retain such documents, the authority of law is necessary and no such authority has been shown. Hence, this writ petition succeeds,” it said while issuing the direction to the institute to return the documents to petitioner.

NEWS TODAY 14.07.2026