Thursday, December 13, 2018

More seats in medical courses likely

CHENNAI, DECEMBER 13, 2018 00:00 IST

The State government expects to add more seats to postgraduate and undergraduate medical courses next academic year.

As many as 60 seats in various specialities across MD/MS and at least two new self-financing colleges, with an intake of 150 students each in MBBS, could be added, said S. Geethalakshmi, vice-chancellor, Tamil Nadu Dr. MGR Medical University.

Speaking on the sidelines of the inauguration of an Ayush Wellness Centre on Wednesday, she said the Kovai Medical Centre and the Panimalar group of institutions had applied for setting up medical colleges.

While the former’s application had gone to the governing body of the Medical Council for approval, the university was in the process of completing formalities for the latter, before sending it for approval to the Council. “We will then give a letter of consent for affiliation. After the Medical Council gives permission, we will send an inspection team,” Ms. Geethalakshmi, said.

The university has also noticed a better performance by first year students. “Usually 93% of students pass in the first year. This year it has gone up to 95%,” she said.

Wellness centre

Earlier, Health Minister C. Vijaya Baskar commissioned a wellness centre. The 5,000 sq.ft centre, set up at an estimated cost of Rs. 1.66 crore, includes dedicated rooms for OPD treatment for yoga, Ayurveda, naturopathy and siddha systems of medicine.

Equipment worth Rs. 20 lakh has been installed. The facility will not only help the public but also medical students of the university, the Minister said.
SC commutes death sentence of rape and murder convict to life

TIMES NEWS NETWORK

New Delhi:13.12.2018

The Supreme Court on Wednesday commuted the death sentence to life in prison for a convict who had raped and murdered a threeyear old girl in Amravati in Maharashtra.

A bench of Justices Madan B Lokur, S Abdul Nazeer and Deepak Gupta said the trial court and Bombay high court had not taken into consideration the probability of reformation, rehabilitation and social re-integration of the convict into society and set aside their orders awarding death sentence. It said even in cases where there is no chance of reformation, the long duration of imprisonment beyond 14 years could be awarded instead of death sentence.

“We should not forget that the criminal, however ruthless he might be, is nevertheless a human being and is entitled to a life of dignity, notwithstanding his crime. Therefore, it is for the prosecution and the courts to determine whether such a person, notwithstanding his crime, can be reformed and rehabilitated. To obtain and analyze this information is certainly not an easy task but must nevertheless be undertaken,” the bench said.

The court was hearing a plea of the convict who was awarded death sentence by a trial court in Amravati in September 2008 for raping and murdering a 3-year-old girl in 2007. The lower court’s verdict was upheld by the high court in 2009.

The court said there is no conclusive study on deterrent impact of death sentence and that it has a chilling effect.



Even in cases where there is no chance of reformation, the long duration of imprisonment beyond 14 years could be awarded instead of death sentence

SUPREME COURT
On reducing death sentence

Wednesday, December 12, 2018

Ambani daughters marriage

`
‘ஆசியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த திருமணம்’ - சாதனை படைத்த அம்பானி மகள் திருமணம்

விகடன் 11.12.2018

ஆசியாவின் மிக விலை உயர்ந்த திருமணம்' என்ற சாதனையைப் படைத்துள்ளது, அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம். 

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும், நாளை மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, 8 முதல் 10-ம் தேதி வரை ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன. இதில் உலகப் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். 

இஷாவின் திருமணத்துக்காக அடிக்கப்பட்ட அழைப்பிதழின் விலையே ரூ.3 லட்சம். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் அம்பானியின் விருந்தினர்களுக்காக உதய்பூரில் உள்ள மொத்த நட்சத்திர ஹோட்டல்களும் மூன்று நாள்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. உதய்பூர் விமான நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. ஒரு நாளைக்கு 19 லேண்டிங் மற்றும் டேக் ஆஃப்தான் உண்டு. அம்பானி மகள் திருமணத்துக்காக 100 தனியார் விமானங்கள் புக் செய்யப்பட்டிருந்தன. மேலும் ஜாகுவார், பி.எம். டபிள்யூ, மெர்ஸிடெஸ் பென்ஸ், ஆடி கார்கள் மட்டும் 1000 கார்கள் உதய்பூர் நகரங்களில் வலம் வந்தன. மூன்று நாள் கொண்டாட்டத்தில், சுமார் 5,100 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு, மூன்று நாளும் மூன்று வேளைக்கு பல வகையான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விருந்தினர்களைக் கவர 108 விலைமதிப்பு மிக்க பாரம்பர்ய ஓவியங்களும் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இஷா அம்பானியின் திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 37 வருடங்களுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணத்துக்கு 110 மில்லியன் டாலர் (தற்போதைய மதிப்பு) செலவிடப்பட்டுள்ளது. தற்போது, அந்த மதிப்பை இஷா அம்பானி திருமணம் நெருங்கியுள்ளது. இதனால், ஆசியாவிலேயே விலையுயர்ந்த திருமணம் எனப் பெயர் பெற்றுள்ளது இஷா அம்பானியின்  திருமணம்.

வெற்றிகரமான தோல்வி: தமிழிசை

Added : டிச 11, 2018 23:19






சென்னை: ''பா.ஜ., வெற்றி பெற்ற போதெல்லாம், இயந்திரத்திற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ், மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்தார்.அவர் நேற்று அளித்த பேட்டி:எந்த தோல்வியும், எங்களை துவளச் செய்யாது. மிகப்பெரிய வெற்றியை, லோக்சபா தேர்தலில் பெறுவோம். ஐந்து மாநில தேர்தல், எந்த விதத்திலும் தோல்வி அல்ல. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில், வெற்றிகரமான தோல்வி என்று, எடுத்துக் கொள்ளலாம். சத்தீஸ்கரில், 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால் அதிருப்தி.தெலுங்கானாவில், எதிர்க்கட்சி கூட்டணி தோல்வி அடைந்துஉள்ளது. பா.ஜ., வெற்றி பெற்றால், 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு' என, குற்றம் சாட்டுவர். பா.ஜ., வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறாமல், இயந்திரத்திற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ், மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில், அதே ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தான், அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.மாநில தீர்ப்புகள், அந்தந்த மாநிலங்களின் பிரதிபலிப்பு; லோக்சபா தேர்தல் பிரதிபலிப்பு அல்ல. பா.ஜ., மோசமான தோல்வியை அடையவில்லை. காங்கிரசுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தி உள்ளோம்.மோடி அலையை ஓய வைக்கவே முடியாது. லோக்சபா தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். இந்த தோல்வியிலும், எங்களுக்கே அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. அகில இந்திய நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர்கள் கூட்டம், நாளை டில்லியில் நடக்க உள்ளது. இதில், லோக்சபா தேர்தல் வெற்றி குறித்து ஆலோசிப்போம்.இவ்வாறு, தமிழிசை கூறினார்.
சாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி! - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்

எஸ்.மகேஷ்





கடன் பிரச்னையால், சென்னையில் உள்ள விடுதியில் தொழிலதிபர் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல் (50). சென்னை, ஷெனாய்நகர் வெங்கடாசலபதி தெருவில் குடியிருந்தார். இவரின் மனைவி உமா (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சென்னையை அடுத்த மணலியில் அலுமினிய நிறுவனம் நடத்திவந்தார். தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக வங்கியில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், கிருஷ்ணவேல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், குடும்பத்தினருடன் சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜில் தங்கினார். அப்போது, வீட்டில் கட்டடப்பணிகள் நடப்பதால், விடுதியில் தங்குவதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய விடுதி ஊழியர்கள் அறை கொடுத்துள்ளனர். குடும்பத்தினருடன் 206-ம் நம்பர் அறையில் தங்கியுள்ளார்.



இன்று அதிகாலை, கிருஷ்ணவேலின் மகள் அழுதுகொண்டே தங்கும் விடுதியின் வரவேற்பு அறைக்கு ஓடிவந்தார். அவரிடம் விடுதி ஊழியர்கள் விசாரித்தபோது, அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது கிருஷ்ணவேல், உமா ஆகியோர் விஷம் அருந்தி இறந்துகிடந்தனர். தகவல் அறிந்ததும் எழும்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். குழந்தைகள் இருவருக்கும் மயக்க மருந்து கொடுத்து, அவர்கள் தூங்கிய பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. கிருஷ்ணவேல் எழுதிய மூன்று பக்கக் கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், வாங்கிய கடனுக்காக சொந்தமான இடத்தை உறவினர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்து பறித்துக்கொண்ட தகவல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ள தொழிலதிபர் கிருஷ்ணவேல், அவரின் மனைவி உமா ஆகியோர் முடிவுசெய்துள்ளனர். அப்போது குழந்தைகளைச் சாகடிக்க அவர்களுக்கு மனமில்லை. இதனால் தற்கொலை செய்வதற்கு முன் அவர்கள், குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். குழந்தைகள் மயங்கியபிறகு, இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துள்ளனர் என்ற தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



காலையில் மயக்கம் தெளித்த கிருஷ்ணவேலின் மகள், அப்பா, அம்மா இருவரும் வாயில் நுரைதள்ளியபடி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாகத் தனது சகோதரனை எழுப்ப முயற்சிசெய்துள்ளார். ஆனால், மயக்கம் காரணமாக அவர் கண்விழிக்கவில்லை. அதனால்தான் விடுதியின் வரவேற்பு அறைக்கு அவர் ஓடியுள்ளார். அங்கு தகவல் தெரிவித்தவுடன், இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். படுக்கையில் மயங்கிக்கிடந்த தொழிலதிபர் கிருஷ்ணவேலின் மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டது. அதன்பிறகே அவருக்கு மயக்கம் தெளிந்துள்ளது. அப்பாவும் அம்மாவும் இப்படி பண்ணிவிட்டார்களே என்று அவர் மருத்துவமனையில் கதறி அழுதார்.

ஒரே நேரத்தில் அம்மாவும் அப்பாவும் இறந்ததால், அவர்களின் மகனும் மகளும் கதறி அழுதச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய அப்பா, அம்மாவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
நள்ளிரவில் வீட்டில் புகுந்த நாகப் பாம்பு; முதல்வர் நாராயணசாமிக்குச் சென்ற போன் கால்

ஜெ.முருகன்

அ.குரூஸ் தனம்


நள்ளிரவில் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டது என்று போன் செய்த குடும்பத்துக்கு முதல்வர் நாராயணசாமி உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜா. நேற்று முன்தினம் இரவு பணி காரணமாக ராஜா வெளியூருக்குச் சென்றிருந்த நேரம் வீட்டில் அவரின் மனைவி விஜயா, மகன், மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்கள் உருளும் சத்தம்கேட்டதால் பயந்துபோன விஜயா விளக்கைப் போட்டுப் பார்த்திருக்கிறார்.

அப்போது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்து சீறிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்துபோன அவர் தன் பிள்ளைகளை எழுப்பி விட்டார். அந்த நேரத்தில் அக்கம் பக்கத்து வீட்டினரையும் உதவிக்கு அழைக்க முடியாததால் அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார் விஜயா. ஆனால், அங்கு வனத்துறையின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து பேசச் சொல்லியிருக்கிறார்கள்.



ஆனால் பலமுறை போன் செய்தும் அங்கு யாரும் போனை எடுக்கவில்லை. அதனால், வேறு வழியின்றி அரசு டைரியில் இருந்த முதல்வர் நாராயணசாமியின் செல்போன் எண்ணுக்கு போன் செய்தார். அப்போது தூங்கிக்கொண்டிருந்த முதல்வர் நாராயணசாமி அவசர அழைப்பாக இருக்கும் என்று போனை எடுத்துப் பேசினார். எதிர்முனையில் பேசிய விஜயா போலீஸுக்கும் வனத்துறைக்கும் போன் செய்தும் பயனில்லை. அதனால் உங்களுக்குப் போன் செய்தேன் என்று சொன்னதோடு எங்களைக் காப்பாற்றுங்கள் என்றும் தெரிவித்தார்.



உடனே விஜயாவுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், விடுமுறையில் இருந்த கோபி, தாமரைச்செல்வன் இரண்டு ஊழியர்களை உடனே அனுப்பி பாம்பைப் பிடிக்கும்படி உத்தரவிட்டார். அதன் பிறகு விஜயா வீட்டிற்குச் சென்ற அவர்கள் அந்த விஷப் பாம்பை அங்கிருந்து பிடித்துச் சென்றனர். முதல்வர் நாராயணசாமியின் இந்த நடவடிக்கையை மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
வெளியிடப்பட்ட நேரம்:16:41 (10/12/2018)

கடைசி தொடர்பு:16:41 (10/12/2018)

அம்பானி வீட்டுத் திருமணம்: மும்பை விமான நிலையம் புதிய சாதனை!



பா. முகிலன்


மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்திலிருந்து முக்கிய விருந்தினர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் சிறப்பு விமானங்கள் மூலம் உதய்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.




மும்பை விமான நிலையம், அம்பானி இல்லத் திருமணத்தை முன்னிட்டு, ஒரே நாளில் 1,004 விமான சேவைகளைக் கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரே நாளில் 1,003 விமான சேவைகளை (புறப்பாடு மற்றும் வருகை) கையாண்டது சாதனையாக இருந்து வந்தது.



பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மும்பையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அஜே பிரமல் மகன் ஆனந்த் பிரமல் ஆகிய இருவருக்கும் டிசம்பர் 12-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ரூபாய் திருமணப் பத்திரிகை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஆகியவற்றில் இந்தத் திருமணப் பத்திரிகைகளை வைத்து முகேஷ் அம்பானி சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த வார இறுதியில் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் திருமணக் கொண்டாட்டங்கள் தொடங்கின. திருமணத்துக்கு முன்பாக 8 மற்றும் 9-ம் தேதிகளில் உதய்பூர் நகரில் பிரமாண்டவகையில், திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றன. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுதேசி பஜாரில் 108 பாரம்பர்ய இந்திய கைவினைப் பொருள்கள் அடங்கிய மிகப்பெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அளவிலுள்ள சிறந்த கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இதற்காக உதய்பூர் நகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. உறவினர்களும், நண்பர்களும் உதய்பூர் நகர் செல்வதற்காக சுமார் 50-க்கும் அதிகமான தனியார் விமானங்கள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தன.


இந்த விமானங்கள், வெள்ளிக்கிழமை முதலே இயக்கப்பட்டன. முக்கிய விருந்தினர்கள்,பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும், மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் உதய்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மீண்டும் அழைத்து வரப்பட்டனர். இதனால், சனிக்கிழமையன்று அதாவது டிசம்பர் 8-ம் தேதியன்று மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில், விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை அதிகரித்தது.

அன்றைய தினம் மட்டும் 1,004 சேவைகளை மும்பை விமான நிலையம் கையாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 903 விமான சேவைகள் வழக்கமாக இயக்கப்படும் சேவைகளாகவும், 59 விமான சேவைகள் வழக்கமான அட்டவணையில் இடம்பெறாத சேவைகளாகவும் இருந்தன. மேலும் 8 சார்ட்டர் விமானங்கள், 31 சரக்கு விமானங்கள் மற்றும் 3 ராணுவ விமானங்கள் ஆகியவையும் அன்றைய தினம் இயக்கப்பட்டதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.



அம்பானி இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது, உலகமெங்கிலுமிருந்து, அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை சர்வதேச விமான நிலையம், இரண்டு ஓடுதளங்களைக் (runways) கொண்டுள்ளது. இதில், பிரதான ஓடுதளத்தில் மணிக்கு 48 சேவைகளையும் ( வருகை மற்றும் புறப்பாடு), இரண்டாவது ஓடுதளத்தில் மணிக்கு 35 சேவைகளையும் கையாள முடியும்.

மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2017-18-ம் நிதியாண்டில் மும்பை விமான நிலையம் 48.49 மில்லியன் பயணிகள் சேவைகளைக் கையாண்டுள்ளது. 2016-17-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 7.4 சதவிகித வளர்ச்சி ஆகும்.

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...