Wednesday, January 16, 2019

Two Delhi govt officers forced to retire over graft

TNN | Jan 15, 2019, 11.56 PM IST


New Delhi: Two Delhi government officers have been given compulsory retirement after they were found to be involved in corruption and other illegal activities.

Krishna Mahli, former store purchase supervisor of health department, has been removed from service after the government proposed compulsory retirement from service on the serious charges of irregularities and misappropriation of government money. A press release from the office of chief secretary Vijay Dev said government money to the tune of Rs 46.6 lakh was misused during the purchase of consumable items for stores of hospitals.

After being found guilty of assisting illegal meetings of a prisoner with an outsider in one case, and also guilty of releasing a prisoner without proper release order of the competent court in another, deputy superintendent Jagdish Singh of of Central Jail, Tihar has also been removed from service.

“Singh was found guilty after an inquiry was conducted as per the procedure of law. In his case too, compulsory retirement from service was proposed,” the release said.

On line with the government’s zero tolerance for corruption and irregularities, the chief secretary has started cracking the whip on dishonest employees. “The chief secretary has emphasised that there will be zero tolerance policy towards corruption and misdemeanour,” the statement read.
Karnataka high court allows Canada-born minor girl to stay with her father

TNN | Jan 16, 2019, 06.35 AM IST


 

BENGALURU: Considering the consistent stand taken by a Canada-born Indian girl aged over 10, the high court has handed her custody to her father, an IT professional residing in Bengaluru.

Justice B Veerappa noted that the girl is capable of understanding about her welfare and had submitted both before the family court as well as the Karnataka high court that she would stay with her father.

Noting that the Guardian and Wards Act and the Hindu Minority and Guardianship Act make it clear that the paramount consideration is the minor child’s welfare and not statutory rights of parents, the judge said: “This court hopes that both the petitioner-father and the respondent-mother being highly educated and with a modern outlook would maintain cordial relations, conduct themselves decently and extend cooperation for the child.”

He said the problem has to be solved with a human touch. “In selecting a guardian, the court exercises parens patriae jurisdiction. It must give due weightage to the child’s ordinary comfort, contentment, health, education, intellectual development and favourable surroundings as well as physical comfort and moral values,” he added.
மூன்று தலைமுறையின் கூட்டு பொங்கல்: 27 குடும்பத்தினர் ஒன்று கூடி கொண்டாட்டம்

Added : ஜன 16, 2019 02:07

   மூன்று தலைமுறையின் கூட்டு பொங்கல்: 27 குடும்பத்தினர் ஒன்று கூடி கொண்டாட்டம்

திருப்புத்துார்: நாகரீக வாழ்க்கையில் கூட்டு குடும்ப விழாக்கள் கனவாகி வருகிறது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே நெற்குப்பையில் மூன்று தலைமுறையை சேர்ந்த 27 குடும்பத்தினர் பாரம்பரிய கூட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

ராம.சா.ராமநாதன் செட்டியாரின் நான்கு மகன் வாரிசுகள் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக அவரவர் வசித்த பகுதிகளிலேயே பொங்கல் கொண்டாடி வந்தனர். 'அனைவரும் ஒன்றாக சேர்ந்து பூர்வீக வீட்டில் கொண்டாட வேண்டும்,' என்பது ராமநாதனின் பேரன் மனைவி வசந்தா ஆச்சி 70,யின் நீண்டநாள் கனவாக இருந்தது. அதை நிறைவேற்று விதமாக அவரது மகன் சாத்தப்பன், மருமகள் நித்யா, 150 ஆண்டுகால பூர்வீக வீட்டில் 2 ஆண்டுகளாக பொங்கல் விழாவை நடத்தி வருகின்றனர்.

இதற்காக 3 மாதங்களுக்கு முன்பே, அளவு எடுத்து ஒரே வண்ணத்தில் பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு வேட்டி, சட்டை வாங்குகின்றனர். மூன்று நாட்களுக்கு முன், அனைவரும் ஊருக்கு வருகின்றனர். கோயில் தரிசனம், விளையாட்டு போட்டி என, விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். தலைமுறை, உறவுகளை புரிய வைக்கும் பேமிலி ட்ரீ' போன்ற விளையாட்டுகளை நடத்தி இளைய தலைமுறையினருக்கு பாரம்பரியத்தை நினைவுப்படுத்துகின்றனர்.

நேற்று காலை வேட்டி, சேலை அணிந்து வீட்டின் முற்றத்தில் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் என, இருபானைகளில் வைத்தனர். பொங்கல் வைத்ததும் தலைவாழை இலையில் படையலிட்டு, விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து மங்கலப்பொருட்களுடன் விளக்கை எடுத்து அவரவர் வைத்து கொண்டனர்.

சுப,பழனியப்பன் கூறுகையில், ''பல ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் ஊர்களில் 'காஸ்' அடுப்பில் பொங்கல் வைப்போம். 2 ஆண்டுகளாக சொந்தங்களோட கொண்டாடுவது மனதுக்கு உற்சாகத்தை தருகிறது,'' என்றார்.

செந்தில்நாதன் சேதுராமன் கூறுகையில்,''கடந்த ஆண்டு என்னால் வரமுடியவில்லை. விழாவை 'வாட்ஸ் ஆப்' ல் பார்த்ததும் இந்த ஆண்டு கண்டிப்பாக பங்கேற்பது என முடிவு செய்தேன். சித்தப்பா மக்கள், சின்ன அய்யா, பெரிய அய்யா மக்களை ஒன்று சேர பார்ப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது,'' என்கிறார்.

கைலாஷ் சுந்தரம் கூறுகையில், '' நான்கு தாத்தா குடும்பங்களோடு சேர்ந்து கொண்டாடுவது ஆச்சரியமாக உள்ளது. மனசு விட்டு அனைவருடன் பேச முடிந்தது. பெரியவர்கள் ஜெயிச்ச அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டாங்க. சொந்தங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
வெளியூர்களில் இருந்து 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

Added : ஜன 15, 2019 23:44

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் முடியும் நிலையில், நாளை முதல், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் நேற்று, பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்றும், நாளையும் மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கான அரசு விடுமுறை நாட்கள், நாளையுடன் முடிகிறது. அதனால், வெளியூர்களில் இருந்து, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்ப, நாளை முதல் சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு செல்வதற்கு மட்டும், நாளை முதல், 20ம் தேதி வரை, 3,776 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், சென்னை அல்லாத மற்ற பகுதிகளுக்கு செல்ல, 7,841 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர, தனியார் ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.பயணியரின் வழிகாட்டுதலுக்காக, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில், போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து, உதவி மையங்கள் அமைத்துள்ளனர்.

பொங்கல் பரிசு : கூடுதல் அவகாசம்

Added : ஜன 15, 2019 23:48 |

சென்னை: பொங்கல் பரிசு வாங்காதோருக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும், பரிசு பொருள் மற்றும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அட்டைக்கும், தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் உடைய, பரிசு தொகுப்பு ஜன.,7ல் முதல் வழங்கப்படுகிறது. இதற்கு, ஜன.,14 கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்தது. வாங்காமல் விடுபட்டவர்களுக்கு 18ம் தேதி வழங்கப்படும்.

பழநி தைப்பூசம் இரண்டாம் நாள்

Added : ஜன 15, 2019 22:01



சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி, மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். பழநி மலை ஏறி முருகனை தரிசித்தால் முழு நோயும் நீங்கும். 'அதிசயம் அநேகமுற்ற பழநி' என்று அருணகிரிநாதர் இதன் சிறப்பை போற்றுகிறார். ஒரு கோவிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை மூர்த்தம் (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகிய மூன்றாகும். பழநியில் சக்தி மிக்கதாக இருப்பது மூர்த்தம் என்னும் மூலவர் சிலை. பார்ப்பதற்கு சிலை வடிவில் தோன்றினாலும் நவ பாஷாணம் என்னும் ஒன்பது மருந்துகளால் ஆனதாகும். போகர் என்னும் சித்தர் இச்சிலையை உருவாக்கினார். சிவனின் அம்சமாகத் திகழும் இவருக்கு தினமும் பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறால் அபிஷேகம் நடக்கிறது. ஆண்டிக் கோலத்தில் காட்சி தரும் இவர் நம் உடல் நோயைப் தீர்ப்பதோடு பிறவிப்பணியையும் போக்குகிறார். இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் முத்துகுமாரசுவாமி சப்பரத்தில் பவனி........
பிரயாக்ராஜ் கும்பமேளா: லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்

Added : ஜன 15, 2019 22:39



பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாகராஜில், பிரசித்தி பெற்ற கும்பமேளா, நேற்று துவங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த, லட்சக்கணக்கான பக்தர்கள், புனித நீராடினர்.
அலகாபாத் என அழைக்கப்பட்ட பிரயாக்ராஜில், கும்பமேளா விழா நடக்கிறது. பிரயாக்ராஜில், கடைசியாக, 2013ல் கும்பமேளா நடந்தது. அப்போது, 12 கோடி பேர், புனித நீராடினர்.கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும், பிரயாக்ராஜில் உள்ள கும்ப நகரி பகுதியில், மகர சங்கராந்தியான, நேற்று, கும்பமேளா விழா துவங்கியது. சிவராத்தியான, மார்ச், 4ம் தேதி வரை, 50 நாட்களுக்கு, இந்த திரிவேணி சங்கமத்தில், பக்தர்கள் புனித நீராடுவர். இந்த ஆண்டு, 16 கோடி பேர் வருகைத் தருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மகர சங்கராந்தியான நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு, புனித நீராடும் நிகழ்ச்சி துவங்கியது. சைவ, வைஷ்ணவ, உதாசின மற்றும் சீக்கியர்களுக்கான, 13 மடங்களைச் சேர்ந்த, சாதுக்கள், முதலில் புனித நீராடினர். அதைத் தொடர்ந்து, பக்தர்களும், புனித நீராடினர்.கடும் பனிப்பொழிவில், ஐஸ் கட்டி போல் உறைந்திருந்த நதி நீரில், குளிரைப் பொருட்படுத்தாமல், பக்தர்கள் புனித நீராடினர். 'ஹர ஹர கங்கே' என்ற கோஷத்துடன், பக்தர்கள் புனித நீராடினர். உலகிலேயே, அதிகமானோர் கூடும், மத நிகழ்ச்சியாக, கும்பமேளா விளங்குகிறது.கடும் குளிர் நிலவியபோதும், ஆடைகள் இல்லாமல், உடலில் சாம்பலை பூசியபடி, நாக சாதுக்கள் ஊர்வலமாக, நடனமாடி வந்ததை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கும்பமேளா விழாவுக்காக, 3,200 ஹெக்டேர் நிலப் பரப்புள்ள, கும்ப நகரி பகுதியில், மாநில அரசு பல்வேறு வசதிகளை செய்திருந்தது. மத்திய ஜவுளித் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானியும், நேற்று புனித நீராடினார்.

NEWS TODAY 25.08.2026