Wednesday, January 16, 2019


பொங்கல் பரிசு : கூடுதல் அவகாசம்

Added : ஜன 15, 2019 23:48 |

சென்னை: பொங்கல் பரிசு வாங்காதோருக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும், பரிசு பொருள் மற்றும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அட்டைக்கும், தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் உடைய, பரிசு தொகுப்பு ஜன.,7ல் முதல் வழங்கப்படுகிறது. இதற்கு, ஜன.,14 கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்தது. வாங்காமல் விடுபட்டவர்களுக்கு 18ம் தேதி வழங்கப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024