Friday, February 22, 2019

New suburban exp to Nellore flagged off

Thiruvottiyur Stn Gets Foot Over-bridge, Ticketing Centre
TIMES NEWS NETWORK

Chennai:22.02.2019

To facilitate the movement of suburban and long-distance passengers in north Chennai and Tiruvallur district, Southern Railway on Thursday inaugurated three major facilities in presence of Vice-President M Venkaiah Naidu. One is a Chennai-Nellore Express MEMU, which will help commuters come to Chennai for work in the morning. Another is a two-storey passenger reservation centre in Thiruvottiyur with eight counters, akin to Chennai Central and Egmore. The third is a foot over-bridge at the same station which is a longpending demand of passengers in light of safety issues.

The Express MEMU Service, Nellore-Chennai Moore Market Complex-Nellore (66056/66055), will be a boon to commuters travelling between Chennai and Nellore and for those using the northeastern line of the Chennai suburban corridor, Southern Railway said in a statement. While the regular service from Chennai Moore Market Complex began on Thursday, the Nellore-Chennai Moore Market Complex service will commence from Nellore on Friday.

Train 66056 is scheduled to leave Nellore at 5.45am every day and arrive at Chennai Moore Market Complex at 9.05am, halting at Vedayapalem (5.55/56), Venkatachellam

(6.00/01) Gudur (6.25/26), Nayudupeta (6.50/51), Sullurpeta (7.10/11), Tada (7.22/23), Gummindipundi

(7.40/41) and Ponneri (7.54/55).

In the return direction, train 66055 will leave Chennai Moore Market Complex at 4.30pm and reach Nellore at 8:20pm, stopping at Ponneri (5:14/15), Gummindipundi

(5.34/35),Tada (6.09/10), Sulllurpeta

(6.23/24), Nayudupeta (6.49), Gudur

(7.29/30), Venkatachellam (7.49/50) and Vedayapalem (7.57/58).

The passenger reservation system centre at Thiruvottiyur, built at₹40 lakh considering the station’s status as an important rail head in North Chennai, will have five counters on the ground floor and three on the first floor, rivalling the number of counters at Chennai Central. Considering that the station receives heavy passenger inflow from the eastern and western sides, a foot over-bridge connecting the sides has been built as part of the Korukkupet-Thiruvottiyur fourth line at ₹1.42 crore.

A new booking office with a toilet for staff was inaugurated at Akkampet Railway Station, between Sullurupeta and Tada in Andhra Pradesh’s Nellore, which gets a number of passengers for its proximity to Tirupati railway station. A limited use subway, built in lieu of LC 34 at Gummidipundi yard at ₹2.13 crore was also inaugurated.



ADDING TO EASE: The newly built foot over-bridge and a two-storey passenger reservation centre at Tiruvottiyur railway station
UGC forbids deemed univs from fixing fees

Pushpa.Narayan@timesgroup.com

Chennai:22.02.2019

Deemed universities, including those offering engineering and medical courses, can no longer jack up fees or prescribe fees on their own. The University Grants Commission (Institutions Deemed to be Universities) Regulations, 2019, released on Wednesday say no deemed university can collect fee more than what has been prescribed by the committee constituted as per the new regulations.

For a long time, students, parents and activists have been urging the state, Centre and other government agencies to ensure deemed medical universities don’t arbitrarily fix and increase tuition fees. Now, states are mandated to set up UGC mentioned fee-fixation committees. Two years ago, the Supreme Court permitted deemed universities to retain their present fee structure until fee fixation committees come out with a new one.

On an average, the annual fee for engineering course in a deemed university is ₹6 lakh to ₹8 lakh, and for an MBBS seat, it is ₹23 lakh. The latest regulation reiterates the ban on capitation fee under any name. In a relief for students opting out of courses, the new rules also bar universities from retaining original certificates of candidates.

UGC tightens rules for deemed univ status

They should, after verifying originals, retain only copies attested by candidates for their records.

The Directorate General of Health Services allots seats under the all India quota in government colleges and deemed universities, but by the time seats are allloted, many join engineering colleges and say universities harass them before returning originals.

The UGC has also tightened rules for those seeking deemed university status. First, no new institution can apply for such status. New rules mandate 20 years of existence, National Assessment and Accreditation Council tag with a continuous grade point average of at least 3.26 for three consecutive cycles. For technical institutions, two-thirds of the eligible programmes should have National Board of Accreditation nod. They must also figure among the top 50 ranks in any specific category or top 100 of overall National Institute Ranking Framework list. The rules say deemed universities have to be unitary in nature but cannot affiliate constituent institutions.

Category I and II deemed universities or those ranked 1-50 among “universities” on current NIRF list can start new off-campus centres. UGC promises to monitor number of students getting jobs, the number pursuing high education, research papers published by varsity, level of credit based applications and compulsory NIRF participation.

Thursday, February 21, 2019

நவீன O T P திருடர்கள் ஜாக்கிரதை!

நவீனகால திருடர்கள்  தெளிவு இல்லாத மக்களை
எவ்வாறு ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் அதற்கு நாம் எந்த வகையிலும் பலியாகிவிடக்கூடாது

சமீபகாலமாக பலருக்கு போன் கால் வருகிறது அதில் அரசாங்கத்தின் நல திட்டங்கள் சிலவற்றை கூறி இதில் நீங்கள் இருக்கிறீர்களா      கேட்கின்றார்கள்
அதில் உங்களை சேர்க்க உங்களுடைய ஆதார் நம்பரை கூறுங்கள் என கேட்பார்கள்

அவ்வாறு நீங்கள்  உங்களது ஆதார் கார்டு நம்பரை கூறினால் ஆக்டிவேசன் ஆக உங்கள்  மொபைலில் ஒரு O T P நம்பர் வரும் அதனை கூறுங்கள் என்று சொல்வார்கள்.

அந்த  O T P நாம் கூறிய சில நிமிடங்களில் நமது அக்கவுண்டில் இருந்து பணம் முற்றிலும் திருடப்பட்டுவிடும்

ஆகையால் எப்போதும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.

மேலும் எந்த வங்கியிலும் யாரும் உங்களுக்கு போன் செய்யமாட்டார்கள்.
மேலும் உங்களிடம் ஒடிபி கேட்கமாட்டார்கள்.

அதேபோன்று எந்த அரசு அதிகாரிகளும் உங்களுக்கு போன் செய்து ஆதார் நம்பர் கேட்கமாட்டார்கள்

உங்கள் தனிப்பட்ட விவரம் கேட்டு யார் போன் செய்தாலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  அந்த நபர் மீது சந்தேகம் கொள்ளவேண்டும்.

நாம்  கொடுத்த மனுவில் தான் ஆதார்கார்டு ஜெராக்ஸ் வைத்து குடுத்தோம் என்று நினைக்கவேண்டாமா

ஒருவேளை உங்களுக்கு அதுபோல் போன்கால்கள் வந்தால் நீங்கள் இருக்கும் அட்ரஸை கூறுங்கள் நான் நேரிலேயே வந்து சமர்ப்பிக்கிறேன் என்று கூறிவிடுங்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்போம்
 

NEET PG-2019: Delhi HC Issues Notice On Plea Seeking Re-valuation And Revision of Results

NEET PG-2019: Delhi HC Issues Notice On Plea Seeking Re-valuation And Revision of Results: In an encouraging step for systemic accountability, the Delhi High Court has, while issuing notice to the National Board of Examinations (NBE) and Ministry of Health

ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு டெலிவரி: ஸ்விக்கி ஊழியரின் அர்ப்பணிப்பைக் கலாய்த்த நெட்டிசன்கள்

Published : 20 Feb 2019 11:10 IST





ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு உணவு டெலிவரி செய்ய முயன்ற ஸ்விக்கி ஊழியரின் அர்ப்பணிப்பை நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.

மாறிவரும் இணைய உலகில், ஆன்லைன் வர்த்தகம் இன்றியமையாததாக மாறிவிட்டது. தலைக்கு ஷாம்பு முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன. உணவும் இதில் விதிவிலக்கில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து ஆர்டர் செய்தால், வீடு தேடி பொருட்கள் வருவது இன்றைய தலைமுறையை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இதனால் ஆன்லைன் சந்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்துவருகிறது.

பிரபல உணவகங்கள், தங்களின் உணவுகளை ஆன்லைனில் விற்பனை செய்தாலும், அனைத்து உணவகங்களின் உணவுகளையும் ஆன்லைனில் விற்பனை செய்யும் ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் மற்றும் ஃபுட்பாண்டா ஆகிய விற்பனை நிறுவனங்கள் அபார வளர்ச்சியடைந்துள்ளன.

இதில் முன்னணியில் திகழும் ஸ்விக்கி ஊழியர் செய்த கலாட்டா, சமூக வலைதளங்களில் வைரலானது. பார்கவ் ராஜன் என்னும் பெங்களூருவாசி, அங்குள்ள உணவகம் ஒன்றில் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்துள்ளார்.

அதேபெயரில் ராஜஸ்தானில் உள்ள உணவகம் ஒன்றில் தவறுதலாக ஆர்டர் பதிவாகியுள்ளது. ஆர்டரை ரத்து செய்ய முயன்ற பார்கவ், ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு ஸிவிக்கி டெலிவரி பாய் வருவதாக மேப் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். பிரபாகரன் என்பவர் உணவை டெலிவரி செய்வார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தார் பார்கவ். ''வாவ் ஸ்விக்கி, என்ன அற்புதமாய் வண்டி ஓட்டுகிறீர்கள்?'' என்று ட்விட்டரில் பதிவிட்டார். இந்தப் பதிவைப் பகிர்ந்த நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கினர்.

இதற்கு பதிலளித்த ஸ்விக்கி, ''இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்க்கப்படும். தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி'' எனத் தெரிவித்துள்ளது.

நாங்கல்லாம் அப்பவே அப்படி! ஆனால் இப்போ? மறந்தே போன மால்கள்!!

By ENS  |   Published on : 20th February 2019 06:16 PM  
plazas

மிகப்பெரிய மால்களும், கண்ணைக் கவரும் பொழுதுபோக்கு அம்சங்களும் தற்போது நகரங்களின் அடிப்படை அம்சங்களாக மாறி நிற்கின்றன.
பொழுதுபோக்குக்காக பூங்காக்களை நாடும் பொது ஜனங்களுக்கு இணையாக, மால்களை நாடும் ஐ.டி. குடும்பங்களும் தற்போது அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் கூட இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு மால்களால் நிரப்பப்படுகிறது.
பரந்துவிரிந்த இடம், ஒரு சில மாடிகள், ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என கட்டணக் கொள்ளையடிக்கும் வாகனப் பார்க்கிங் வசதி, எந்தப் பொருளைத் தொட்டாலும் விரலைச் சுட்டுவிடும் விலை, கையில் பணத்தை எடுத்துச் சென்று செலவிட முடியாத ஒரு கலாசாரம் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னிய அடாவடித்தனத்தை ஒருங்கேக் கொண்டிருப்பதுதான் மால்கள். இது மால்களைப் பற்றி சாமானிய மனிதன் சொல்லும் கருத்து.
தற்போது புதிது புதிதாக மால்கள் திறக்கப்பட்டு கலைகட்டத் தொடங்கிவிட்டது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற மால்கள் திறக்கப்பட்டு, அதுவும் கன்னா பின்னாவென்று புகழ் அடைந்து, நாளடைவில் பழையதாகி, பிறகு மங்கி, மக்களின் மனதில் இருந்து மறைந்தே போன சில ஓய்வுபெற்ற மால்களைப் பற்றி இங்கேப் பார்க்கலாம்.
அல்சா மால்
எழும்பூரில் உள்ள அல்சா மாலைப் பற்றி பேசியதுமே, சென்னைவாசிகளுக்கு அங்கிருக்கும் சான்ட்விட்ச் கடைதான் நினைவுக்கு வருகிறது. 1980ம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது அல்சா மால். ஸ்பென்சர் ப்ளாஸாவுடன் தொடங்கப்பட்டு, மங்கி வரும் மால்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. அருகே இருக்கும் பல கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சந்திக்கும் இடமாக தற்போதும் அல்சா மால் உள்ளது.
அங்கே கடை வைத்திருக்கும் ஸகிர் என்பவர், இங்கே பல கடைகள் காலியாகி, அலுவலகமாக மாற்றப்பட்டுவிட்டது. கணிசமான வாடகை, நமக்கென்று இருக்கும் சில கஸ்டமர்களுக்காக இங்கே 20 ஆண்டுகளாகக் கடை வைத்திருக்கிறோம். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது என்கிறார்.
தற்போது ஆசிரியராக இருக்கும் பூர்ணிமா கூறுகையில், ஒன்றாவது படித்துக் கொண்டிருக்கும் போது உயர்தர பொருட்களை ஒரே இடத்தில்  தேடி வாங்க அல்சா மால்தான் சிறந்த இடமாக இருந்தது. ஆனால் இப்போது இதுபோன்ற பெரிய பெரிய மால்கள் வந்துவிட்டன என்கிறார் பழைய நினைவுகளோடு.
மாயாஸ் பிளாஸா
பாண்டிபஜாரில் அமைந்திருக்கும் மாயாஸ் பிளாஸா.. முக்கியமான மாலாக இருந்தது. தற்போது மறந்தே போன மால்களில் ஒன்றாக மாறியுள்ளது.
1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மாலில் 89 கடைகள் உள்ளன. 25 வருடங்களுக்கு முன்பு பட்னி பிளாசாவைப் பார்த்த ஸ்ரீசந்த் என்பவர், அதன் மீது ஈர்க்கப்பட்டு இந்த இடத்தை வாங்கி இந்தக் கட்டடத்தைக் கட்டத் தொடங்கினார். அப்போது துரதிருஷ்டவசமாக அவரது மனைவி மாயா மறைந்துவிட்டார். அவரது நினைவால், இந்த கட்டடத்துக்கு மாயாஸ் பிளாஸா என்று பெயரிட்டார். 
இன்னமும் இங்குக் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும், திரைத்துறைக்கு பல்க் ஆர்டர்கள் கிடைப்பதை வைத்தே லாபம் பார்த்து வருகிறார்கள். பல புதிய மால்கள் வந்துவிட்டதால் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகைக் குறைந்திருப்பது உண்மைதான். ஆனால் முக்கியமான சில வாடிக்கையாளர்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் கடை முதலாளிகள்.
ஃபௌண்டெயின் பிளாஸா
பாந்தியன் சாலையில் 1976ல் துவக்கப்பட்ட ஃபௌண்டெயின் பிளாஸாதான் நகரில் அமைந்த முதல் மால் என்ற பெருமையை பெருகிறது. தற்போது வணிகமே முற்றிலும் மாறிவிட்டது. பலரும் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இங்கு வணிகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் எங்களுக்கு என்று சில வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள் வணிகர்கள்.
1980களில் இங்கு வரும் தினமும் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரமாக இருந்தது. இது தற்போது வெறும் 2 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
1980ம் ஆண்டு காலம் என்பது பொன்னான நாட்கள். இதுபோன்றதொரு மால் சென்னையிலேயே இங்குதான் இருந்தது என்பதால் ஏராளமான மக்கள் இங்கு வர விரும்புவார்கள். இங்கு பெண்களுக்கான பொருட்கள் அதிகம் விற்பனையாகும் என்பதால் பெண் வாடிக்கையாளர்களை அதிகம் கொண்டிருந்தது என்று கூறுகிறார் 50 ஆண்டுகளாக இங்கு தையலகம் நடத்தி வரும் ஜெயந்தி லால்.
இங்கு ஏராளமான திரைப்படக் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை திரையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறார் இந்த மாலின் சங்கத் தலைவர் சுரேஷ் குமார்.
மாவட்ட செய்திகள்

தண்டச்சோறு என்று மருமகள் திட்டியதால்வீட்டை விட்டு வெளியேறிய முதியவர்மாணவர்கள் உதவியால் போலீசார் மகன்களிடம் ஒப்படைப்பு



தண்டச்சோறு என்று மருமகள் திட்டியதால், வருத்தத்துடன் வீட்டை விட்டு வெளியேறி, தெருவில் சுற்றித்திரிந்த 80 வயது முதியவரை மாணவர்கள் உதவியால், போலீசார் மீண்டும் அவரை மகன்களிடம் ஒப்படைத்தனர்.
பதிவு: பிப்ரவரி 21, 2019 04:30 AM
சென்னை,

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் விவசாயியான கணேசன் (வயது 80). இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவரது 2 மகன்களில் ஒருவர் ஆட்டோ டிரைவர். இன்னொருவர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

கணேசன், தனியார் கம்பெனியில் வேலை செய்யும் மகனோடு தங்கி சாப்பிட்டு வந்தார். அவரை தினமும் தண்டச்சோறு சாப்பிட்டுவிட்டு, கிழவன் ஜாலியாக இருக்கிறான், என்று மருமகள் திட்டி இருக்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறினார்

உழைத்து வாழ்ந்த கணேசனுக்கு மருமகள் திட்டியது நெஞ்சில் முள்ளாக குத்தி வேதனையை தந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர், சென்னைக்கு வந்தார். சென்னை வேப்பேரி பகுதியில் அனாதையாக சாப்பாட்டுக்கு வழி இன்றி தெருவில் சுற்றித்திரிந்தார். இதைப்பார்த்த அந்த பகுதி பள்ளி மாணவர்கள் இருவர், கணேசனோடு அன்பாக பழகி, அவரது சோக கதையை கேட்டார்கள்.

பின்னர் கணேசனை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கணேசனின் சோக கதையை சொல்லி, வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரக்குமாரிடம் அவரை ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் வீரக்குமார் கணேசனுக்கு உணவு வாங்கி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒரு நாள் தங்கவைத்தார்.

மகன்களிடம் ஒப்படைப்பு

கணேசனின் மகன்கள் மற்றும் மருமகள்களை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கண்டித்தார். கணேசனை இனிமேல் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முதியோர் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

தனது மருமகள் மீது வழக்கு எதுவும் போட வேண்டாம், என்று கணேசன் கேட்டுக்கொண்டார். இதனால் நெகிழ்ந்து போன மருமகள், இனிமேல் தனது மாமனார் கணேசனை திட்டாமல், நன்றாக கவனித்துக்கொள்வதாக போலீசாரிடம் உறுதிபட கூறினார். பின்னர் கணேசன் அவரது மகன்களுடன் சந்தோஷமாக புறப்பட்டு சென்றார்.

NEWS TODAY 15,16.06.2026