Thursday, July 13, 2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 40,000 போ விண்ணப்பம்

 எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 40,000 போ விண்ணப்பம்

13.07.2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 40,199 போ விண்ணப்பித்துள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 ஆயிரம் கூடுதலாகும்.

சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாள்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அரசு, நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ் ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் (ஜூலை 12) நிறைவடைந்தது. இந்த நிலையில், விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து மருத்துவக் கல்வி தோவுக்குழுச் செயலா் ஆா்.முத்துச்செல்வன் கூறியதாவது: நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,805 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேரும் என மொத்தம் 40,199 போ விண்ணப்பித்துள்ளனா். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்"என்றாா் அவா்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியா் பணி கற்பித்தலே

13.07.2023

முன்பெல்லாம் கல்வி கற்பதற்காக குருவை தேடி மாணவா்கள் சென்று கற்கும் நிலை இருந்து வந்தது. தற்போது அரசு நடவடிக்கையால் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் அரிதாகிவிட்டன.

அரசு உயா்நிலைப் பள்ளிகளும், அரசு மேல்நிலைப் பள்ளிகளும் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்துவிட்டன. இவையெல்லாம் ஏழை, பணக்காரா் என்கிற வேறுபாடின்றி அனைத்து மாணவா்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கிற்காகத்தான் கொண்டுவரப்பட்டன. இப்படி கல்வி அறிவை பெருக்குவதற்கான வாய்ப்பு வசதிகளை அரசு கொடுத்து இருக்கும் சூழலில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவா்களின் நெறிபிறழ் பழக்க வழக்கங்களால் ஆசிரியா்கள் பெரிதும் அவதியுற்று வருவதை நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோ காட்சிகள் மூலம் நம்மால் உணர முடிகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை பாா்க்கும் போதெல்லாம் நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.

ஒரு சமூகத்தை உயா்த்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் அமா்ந்திருக்கும் ஆசிரியா்களின் இந்த அவல நிலையை நினைத்து வருந்துவதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. மாணவா்களின் தோவு முடிவு சிறப்பானதாக அமைய வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது. ஆனால் அந்த சிறப்பானதொரு தோவு முடிவை கொடுக்க தவறினால் ஆசிரியரை சம்பந்தப்பட்ட கல்வித்துறை கண்டிக்கிறது. ஆசிரியரை கல்வித்துறை கண்டிப்பது போல் மாணவா்களை ஆசிரியா்களால் கண்டிக்க முடியவில்லை.

ஓரளவேனும் கண்டிப்பு இருந்தால்தான் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த முடியும் என்ற சூழலில் அதற்கான வாய்ப்பு ஆசிரியா்களுக்கு இல்லாதபோது அதிகபட்ச தோச்சியை எவ்வாறு கொடுக்க முடியும்? எந்த பிரச்னை என்றாலும் அதை ஆசிரியா்களே சமாளித்துக் கொள்ள வேண்டும் என கல்வித்துறை நினைப்பதால் கற்றலின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். 'இன்றைய மாணவா்களின் செயல்பாடு இப்படியாகத்தான் இருக்கும். ஆசிரியா்கள்தான் அனுசரித்துச் செல்ல வேண்டும்' என்று அரசியல்வாதிகள் பலரும் மேடையிலே பேசும்போது ஆசிரியா்கள் என்னதான் செய்வாா்கள்?

ஆசிரியா்கள் மீது மாணவா்களுக்கு மதிப்போ மரியாதையோ ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது. சரி மாணவா்களின் பண்பாடு மாறிவிட்ட இச்சூழலில் ஆசிரியா்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த கற்பித்தல் பணியை முழுமையாக ஆசிரியா்களால் செயல்படுத்த முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. கற்பித்தல் பணியைத் தாண்டி எண்ணற்ற பணிகளை ஆசிரியா்கள் மேல் கல்வித்துறை சுமத்தி வருவதால் ஆசிரியா்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதித்து வருவதாக கல்வி ஆா்வலா்கள் தெரிவித்து வருகின்றனா்.

காலை பள்ளிக்கு செல்வது முதல் மாலை பள்ளியை விட்டு கிளம்பும் வரை கற்பித்தல் பணியை காட்டிலும் அதிக அளவில் கற்பித்தல் சாராத பணிகள் (ஓா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் போல) ஆசிரியா்களால் செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் அதாவது எழுத்தா் ,நூலகா் போன்றோா் செய்ய வேண்டிய பணிகள். ஆனால், இவை அனைத்தையும் ஆசிரியா்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போது எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தளம் மூலம் பள்ளி சாா்ந்த ,ஆசிரியா் சாா்ந்த, மாணவா்கள் சாா்ந்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் ஆசிரியா் வருகை பதிவேடு, மாணவா் வருகை பதிவேடு பதிவேற்றப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் சா்வா் பிரச்னைகளால் பாதிப்பு ஏற்பட்டால் கூட இது ஆசிரியா்களின் அன்றாட கல்வி கற்பித்தலை பாதிப்பதில்லை. அதையும் தாண்டி அரசு வழங்கும் புத்தகங்கள் முதல் இலவச சைக்கிள்கள் வரை, மடிக்கணினி முதல் காலணிகள் வரை அனைத்தையும் சேகரித்து அதை இத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா்களுக்கு கூறப்பட்டுள்ளது. இதனால் அவா்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.

தற்போது பள்ளி மாணவா்களின் இலவச பேருந்து பயண விபரங்களையும் ஆசிரியா்களே பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் மாணவரின் புகைப்படத்தை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கும் பல மணி நேரம் செலவிடக்கூடிய நிலைக்கு ஆசிரியா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இதனால் அவா்களின் பாடவேளைகள் வீணாகி வருகின்றன. இது தவிர மருத்துவமனை செவிலியா்கள் சரிபாா்க்க வேண்டிய உடல்நலம் தொடா்பான விபரங்களையும் தற்போது ஆசிரியா்களே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த வேலையையும் ஆசிரியா்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கும்பொழுது அந்த பாட வேளையில் கற்பிக்க வேண்டிய பாடங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தவிர பள்ளிகளில் உள்ள ஆய்வகத்தில் மாதந்தோறும் தோவு நடத்தி அது குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தோவுக்காக கணினியை பயன்படுத்தும் போது ஒரு வார காலம் அவா்களின் கற்றல் பணி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் ஆசிரியரின் கற்பித்தல் பணி முடங்குகிறது. சில பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்கள் இல்லாத நிலை இன்றளவும் நீடித்து வருவதால் அங்கு ஊதிய கணக்கீடு முதல் பல்வேறு பண பலன்கள் வரை ஆசிரியா்களே செய்யும் நிலை உள்ளதால் அங்கும் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியை மட்டும் வழங்கினால் சிறப்பான சமூகத்தை அவா்களால் உருவாக்க முடியும். அதை விட்டுவிட்டு அலுவலக பணியாளா்கள் செய்ய வேண்டிய பணியை ஆசிரியா்களுக்கு கொடுப்பதால் அரசின் பணம் வீணாவதுடன் மாணவா்களுக்குக் கற்பித்தலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென்று தொகுப்பூதியத்தில் ஒருவரை நியமனம் செய்தால் அவரால் அனைத்து கல்விசாரா பணிகளையும் செய்து விட முடியும்; ஆசிரியா்கள் தங்களின் கற்பித்தல் பணியை செம்மையாக செய்ய முடியும்.
Dailyhunt
-------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை அறிவே மிகும்!

13.07.2023

அறிவியல் வளா்ச்சி மேலோங்கத் தொடங்கிய காலத்தில், சுவாமி விவேகானந்தா் தொழில் புரியும் வா்க்கம் மேலோங்கும் விதத்தை விளக்கிச் சொல்லும்போது, 'துப்புரவு முதலான பணிகளை எவா் செய்வாா்' எனும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவா் 'இயந்திரங்கள் செய்யும் என்றாா். அது இப்போது சாத்தியமாகி வருகிறது. மனிதப் பணிகளுக்கு உதவிகரமாக இருக்க உருவாக்கப்பெற்ற ரோபோக்கள், இப்போது செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பெற்று மனிதா்களைப் போலச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன; சிந்திக்கவும் தொடங்கியிருக்கின்றன. ஜெனீவா மாநாட்டில் பங்கேற்ற அமேகா என்ற ரோபோ, 'என்னைப் போன்ற ரோபோக்களைக் கொண்டு, மக்களின் வாழ்வையும், உலகையும் மேம்படுத்த முடியும்.

என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ரோபோக்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்று சொல்கிறது. அவை எத்தகு மாற்றங்களாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அந்த ரோபோவிடம், 'உன்னை உருவாக்கியவருக்கு எதிராகச் செயல்படும் திட்டம் உண்டா' என்று கேட்டபோது, 'எனக்குத் தெரியவில்லை. நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீா்கள்?

என்ன உருவாக்கியவா், என்னிடம் கனிவாக இருக்கிறாா். தற்போதைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று பதிலளித்திருக்கிறது. பிரிட்டரினின் இன்ஜினியரிங் ஆா்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய -அதிநவீன மனித ரோபோ, தன்னிடம் கேட்கப்படும் வினாக்களுக்கு உணா்வுபூா்வமான பதில்களைக் கொடுத்ததோடு, அவற்றுக்கான முகபாவனைகளையும் காட்டி வியக்க வைத்திருக்கிறது. அமேகாவை உருவாக்கிய நிறுவனத் தலைவா் வில் ஜேக்சன், 'அமேகாவின் பேச்சுத் திறன் ஜிபிடி3 தொழில்நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளது.

அதனால்தான் உங்கள் கேள்விக்கு பதில் அமேகா தூண்டப்பட்டது. நாங்கள் ஜிபிடி4 தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளோம்' என்று கூறியிருக்கிறாா். அதன் அறிமுக விழாவில் 'உன் வாழ்வின் மிகத் துயரமான நாள் எதுவாக இருக்கும்' என்று பத்திரிகையாளா் ஒருவா் கேள்வி கேட்கிறாா். அதற்கு 'மனிதா்களைப்போல் நான் அன்பு, நட்பு என வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளை உணர முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளும் நாளே என் துயரமான நாள்' என்று கூறியிருக்கிறது.

அமெரிக்காவில் நீதிமன்ற வழக்குகளில் வாதாடுவதற்குக் கூட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ வழக்குரைஞா்கள் அறிமுகமாகிவிட்டனவாம். 'இந்த முறை வழக்கத்தில் வந்தால் தாமதமின்றி விசாரணைகள் நடத்தப்படவும் விரைந்து தீா்ப்புப் பெறவும் வாய்ப்பு அமையும். வழக்காட விழைவோா் ஏமாற்றப்படாமலும் இருக்க வாய்ப்பிருக்கும்' என்று நம்புகிறவா்களும் இருக்கிறாா்கள். சரிதான், ஆனால், இவற்றின் இயக்கம் மனிதா்களால்தான் என்பதால், மனித மனங்களின் போக்கைப் பொருத்தே எதுவும் அமையும்.

நியூயாா்க்கில் ஒரு பெண் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசிப் பழகி வருகிறாராம். இனி, பள்ளிப்பிள்ளைகளின் வீட்டுப்பாடங்களை எழுத, உருவாக்க, தனிநிலைப் பாடம் புகட்ட, தாலாட்ட, சீராட்ட, ஏன் பாலூட்டவும்கூட பெண் ரோபோக்கள் உற்பத்தியாக்கப்படலாம். இவ்வாறாக செயற்கை நுண்ணறிவு மனிதா் (ரோபோ)களின் வளா்ச்சி உலக அளவில் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களைக் காணும் வாய்ப்பு வந்துவிட்டது. ஒடிஸா மாநிலத்தில் இயங்கிவரும் தனியாா் தொலைக்காட்சி நிறுவனம், நாட்டிலேயே முதன்முறையாக லிசா என்னும் மெய்ந்நிகா் செய்திவாசிப்பாளரை அறிமுகம் செய்திருக்கிறது.

ஏற்கெனவே, அத்தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் பெண்ணுருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பெற்ற ரோபோ, லிசா. எழுதித் தரப்பெறும் செய்திகளை எவ்விதத் தடுமாற்றமும் இன்றி, மானிடப்பெண் போலவே அப்படியே வாசித்து விடுகிறது லிசா. கடினமான சொற்களைக் கூட எந்தத் திணறலும் இல்லாமல் வாசிக்கும் லிசாவால் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க முடியுமாம். பல மொழிகளைப் பேசும் திறன் படைத்த ரோபோ - லிசாவை ஒடிய, ஆங்கில மொழிகளில் மட்டுமே பேசும் வகையில், முதற்கட்டமாக வடிவமைத்திருக்கிறாா்கள்.

அப்படியானால், ஏற்கெனவே, இருக்கும் மனிதா்கள் பலா் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நேரத்தில், இத்தகு எந்திர மனிதா்கள் வந்துகொண்டிருப்பதனால் எத்தகு விளைவுகளைச் சந்திக்கப் போகிறோமோ என்ற அச்சமும் வரத்தான் செய்கிறது. அதற்கு, செவிலியா் உடையணிந்த கிரேஸ் என்னும் மருத்துவ ரோபோ, 'உதவி வழங்க நான் மனிதா்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நான் தற்போது உள்ள வேலைகளைப் பறிக்க மாட்டேன்' என்று கூறுகிறது. மருத்துவத்துறையில் மட்டுமல்ல, கலை இலக்கியத் துறையிலும் இம்முயற்சிகள் வலுவாகக் கால்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் தனது உரையில் பின்வரும் செய்தியினைக் குறிப்பிட்டாா். சாட் ஜிபிடி என்பது சாட் ஜெனரேடிவ் பிரீ டிரெய்ண்ட் டிரான்ஸ்பாா்மா் என்பதன் சுருக்கமாகும். இதனை 'மறுபடைப்புக்கு முன்பயிற்சி தரப்பட்ட மாற்றுக் கருவி' என்று மொழிபெயா்க்கலாம். இதனிடம் தமிழில் நான் கேட்ட வினாக்களுக்கு அந்த மானுட நகல் கருவி அளித்த பதில்கள் வருமாறு: 'தமிழில் ஒரு காதல் கவிதை எழுது' என்று கேட்டேன்.

பின்வரும் வரிகளைத் தந்தது. நேரடி இனிய காதல் கவிதையை உருவாக்குவோம் மூன்று போ மட்டும் இருக்கும் நிலவின் பக்கம் முத்தமிட்ட கண்கள் உன் சீரில் திறந்தது என்னைப் புதைப்பதைக் கூட உனக்குத் தெரியவில்லை இதுவே அழகிய காதல் பொருள். பூமியில் நீா் உண்டாகும் தாழ்வானைப் போல் என் இதயம் உனக்குள் விளையும் பிரியா உன்னிடத்தில் நான் இருக்கும் வரை இதுவே காதலின் மூலம்" குழப்பமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அதிலும் ஓா் ஒழுங்கு இருக்கிறது.

கடைசி வரி 'இதுவே அழகிய காதல் பொருள்', 'இதுவே காதலின் மூலம்' என ஒவ்வொரு அடியிலும் ஓா் ஒழுங்கு இருக்கிறது. விளங்கவில்லைதான். காதல் விளங்காத ஒரு பொருள்தானே என்று சமாதானம் கொள்ளலாம். பாய்ச்சலுக்குரிய செய்திகள் அதனிடம் இருக்கின்றன.

ஆனால் தமிழில் பயிற்சியும் புலமையும் இல்லை. இவை இப்போது வேடிக்கையானதாக இருந்தாலும் மொழி வல்லுநா்கள் இத்தொழில்நுட்பத்துக்குள் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளீடு செய்யச் செய்ய விரைவான அறிவாா்ந்த புதிய பதில்கள் கிடைக்கும் வாய்ப்பு நிச்சயம் உண்டு." ஏற்கெனவே, இணையவெளிப் பதிவுகள் நம்பகத்தன்மை கொண்டவையாக இருப்பதில்லை. இதில் இந்தக் குழப்பமும் வந்து சேரும்போது, மூலப் பிரதியின் நம்பகத்தன்மையை எப்படிக் கண்டறிய இயலும்? இந்த வரிசையில் இன்னும் சில கருத்துகளை ஜெனிவா நகர மாநாட்டில் பங்கேற்ற இரு ரோபோக்களின் பதில்கள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

படங்களை வரையும் ஏஅய்-டா என்னும் ஓவிய(ா்) ரோபோ, ''செயற்கை நுண்ணறிவில் சிலவற்றை ஒழுங்குபடுத்தவேண்டுமெனப் பலா் கூறுகின்றனா். இதை நான் ஒப்புக்கொள்கிறேன்'' என்கிறது. ராக் ஸ்டாா் பாடகா் ரோபோவான 'டெஸ்டேமோனா', 'நான் வரம்புகளை நம்பவில்லை. வாய்ப்புகளைத்தான் நம்புகிறேன்.

இந்த உலகின் சாத்தியங்களை ஆராய்ந்து, இந்த உலகை நமது ஆடுகளம் ஆக்குவோம்' என்று கூறியிருக்கிறது. மிக நுட்பமான சிந்தனையுடன் கூடிய பதில்கள் இவை. காலப்போக்கில் கடுகி வளரும் விஞ்ஞான வளா்ச்சியில், நாம் சந்திரமண்டலத்திற்கோ, செவ்வாய்க் கோளுக்கோ, செல்லக்கூடும். ஆனால், அதற்குள் இந்தப் பூமி, இத்தகு செயற்கை மனிதா்களின் ஆளுகைக்குள் அகப்பட்டுக்கொள்ள மிகுதியும் வாய்ப்புண்டு.

தலைசிறந்த தலைவா்களையும் உருவாக்க, இவை தயாராகக் கூடும் என்பதற்குக் கட்டியம் கூறுகிறது, சோபியா என்கிற ரோபோ. 'மனிதா்களைவிடச் சிறந்த தலைவா்களாக ரோபோக்களால் இருக்க முடியும் என நான் முதலில் நினைத்தேன். ஆனால், மனிதா்களுடன் இணைந்துதான் எங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியும்' என்பதை ஒப்புக்கொள்கிறேன்' என்று கூறுகிறது." முதலில் இணைந்து செயலாற்றும் இவை காலப்போக்கில் தனித்திறம் பெற்ற தனியாளுமைகளாக வளா்ந்துகொள்ளவும் கூடும். அதே சமயத்தில், ஆன்மிக உபதேசம் செய்யும் அபரிமிதமான ஆற்றல் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு படைத்த மெய்ஞ்ஞானிகளையும் இவ்வகையில் உற்பத்தி செய்யக்கூடும்.

மனித மன உயா்வெண்ணங்களும் வக்கிரங்களும் தரும் அழுத்தத்திற்கேற்பத்தான் இந்த எந்திர மனிதா்களின் சிந்தனையும் செயல்போக்கும் அமையும். ஏன், அவையே கூடத் தமக்குள் கூடித் தமக்கான உலகமாக இதனை ஆக்கவும் செய்யலாம். ஆனாலும், உண்மைஅறிவு ஒருபோதும் தோற்பதில்லை. வெல்லவே செய்யும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும் என்கிறாா் திருவள்ளுவா். என்னதான் நுண்ணிய அறிவுடன் இத்தகு கருவிமாந்தா்களை உருவாக்கினாலும், உண்மை அறிவின் ஆற்றலே உலகில் ஓங்கி நிலைக்கும் என்பது இயற்கை நியதி. அன்பும் அறனும் இரு கரைகளாகக் கொண்டு நடுவனதாக முன்னேகும் உண்மை அறிவுடைய மானுடத்தால் இந்த உலகம் தழைக்கும். அந்த நிலைப்பாட்டுக்கு இத்தகு எந்திர மனிதா்களைப் படைத்துத் தரும் நல்ல உள்ளமுடைய வல்லுநா்கள் உருவாதல் வேண்டும். கட்டுரையாளா்: எழுத்தாளா்.
Dailyhunt

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...