Sunday, April 12, 2015

பள்ளிக் கல்விக்கு பாடம் சொல்லும் மாணவர் கொண்டாட்டம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. கடைசி தேர்வின் அறையை விட்டு வெளியேறியதும் மாணவர்கள் மத்தியில் அப்படி ஒரு கொண்டாட்டம். சுதந்திரம் அடைந்துவிட்டதைப் போன்ற ஆனந்தத் தாண்டவம்.

பள்ளி வாழ்க்கையில் இருந்து விடுபடுவது வரம் என்ற நினைப்புதான் இந்தக் கொண்டாட்டங்களுக்குக் காரணமா? அல்லது இயல்பான மகிழ்ச்சி தானா? மனப்பாடத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் மன அழுத்தம் தரும் கல்வி முறையில் இருந்து மீள்வதன் வெளிப்பாடா? பள்ளி ஆசிரியர் சூழ் உலகில் இருந்து விடுபடும் நினைப்பா? என்று பள்ளிக் கல்வி சார்ந்தவர்களிடம் கேட்டேன்.

ரா.தாமோதரன், பள்ளி ஆசிரியர், தஞ்சை:

"நீங்கள் குறிப்பிட்ட அனைத்துமே இவற்றுக்குக் காரணம்தான். மாணவர்களின் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணமே வெறுப்பின் வெளிப்பாடுதான். சில பள்ளிகளில் தேர்வு முடிந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி முடிக்கும் வரை ஆசிரியர்களிடையே ஒருவிதமான பதற்றம் நீடித்தது. அத்தகைய பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கல்வி முறை, பாடத்திட்டங்கள் சார்ந்தும் மதிப்பெண்கள் சார்ந்தும் மாறிப்போய் விட்டது. எப்படியாவது படித்துத் தேர்ச்சி அடைய வேண்டுமென்ற நிர்பந்தம். மாலையில் வகுப்பு முடிந்ததும் சிறப்பு வகுப்புகள், வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்றால் அறிவுரை, வீட்டில் இருந்து பெற்றோர்களை அழைத்து வரச் சொல்வது போன்றவை மாணவரை, படிப்பின் மீதே ஒரு வித அழுத்தத்தை ஏற்படச் செய்கின்றன. இதற்கு மாற்று என்றால், மதிப்பெண் முறையை விடுத்து, தரநிலை மதிப்பீட்டு முறையை கொண்டுவரலாம்.

அடிப்படைக் கல்வித் திட்டம், தேர்ச்சி முறைக் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. சரியான விடையை எழுதியவர்களுக்கும், எழுதாதவர்களுக்கும் ஒரே வித்தியாசம்தான். புத்திசாலித்தனம் அங்கேதான் நிர்ணயிக்கப்படுகிறது. கல்வி என்பது ஒன்றை அறிவது; புரிந்துகொள்வது. மனப்பாடம் செய்து ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை.

ஆசிரியர்கள் திலீப், விஜயலட்சுமி, தாமோதரன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஒரு மாணவர், கல்வியின் பின்புலத்தை அறிந்துகொள்ள வேண்டும். சாலைப் போக்குவரத்து குறித்துப் படிக்கிறோம் என்றால், அதை வாழ்வியலில் பயன்படுத்த வேண்டும். மொத்தத்தில் வாழ்க்கையை தைரியமாய் எதிர்கொள்ள வேண்டிய திறன்களை வளர்க்கும் விதமான மாற்றுக் கல்வித் திட்டம் அவசியமாகிறது.

டி.விஜயலட்சுமி, ஆசிரியை, கண்ணமங்கலம்:

"மாணவர்களின் கொண்டாட்டத்தில் எந்தத் தவறும் இல்லை. தேர்வு குறித்த அச்சங்கள் நீங்கிய மாணவர்களின் இயல்பான கொண்டாட்டங்களாகத்தான் இதைப் பார்க்கிறேன். அம்மாக்கள் சமையல் அறையில் வேலை முடிந்தவுடன் ஆசுவாசம் அடைவது போலத்தான் இதுவும். காலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும், படிக்க வேண்டும், மாலையில்தான் விளையாட முடியும் என்ற அன்றாட நிர்பந்தங்களில் இருந்து விடுபட்டு நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் செய்ய முடிகிற நிலை வரும்போது மாணவர்கள் குதூகலமடைகின்றனர்.

இன்றைய சமுதாயம் பொருளாதார அளவில் பெரும் மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் சந்தித்து வருகிறது. எதற்கெடுத்தாலும் ட்ரீட் என்னும் கலாச்சாரம் பரவி வருகிறது. சிறு விஷயங்களைக் கூடப் பெரிதாய்க் கொண்டாடுகிறோம். இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றாற்போல இப்போதைய மாணவர்களும் பொதுத் தேர்வுகள் முடிவதைக் கொண்டாடுகிறார்கள்."

ஸ்ரீதிலீப், பள்ளி ஆசிரியர், சத்தியமங்கலம்

"இந்த வயதிலேயே இதுமாதிரியாக கொண்டாட்டங்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் மீதும், மதிப்பெண்கள் மீதும் வைக்கப்படுகின்ற அழுத்தங்கள்தான் மாணவர்களை நெருக்குதலுக்கு ஆளாக்குகிறது. இவற்றுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மற்ற எல்லாத் தேர்வுகளுக்கும் கொடுத்தால் மாணவர்கள் தேவையில்லாத பதற்றத்துக்கு ஆளாகமாட்டார்கள்.

மாணவர்கள், இது தேர்வு மட்டுமே என்ற மனநிலையோடு அணுக வேண்டும். தேர்வையே சுகமாக எழுதினால், தேர்வு முடியும்போது கொண்டாட்ட மனநிலை ஏற்படாது. மாறாக, அற்புதமான பள்ளி நினைவுகளைச் சுமந்துகொண்டு, பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரியாவிடை தருவார்கள்."

பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்:

"இது உண்மையான, மகிழ்ச்சிகரமான கொண்டாட்டமே இல்லை. ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்குப் போகும் நிரந்தமில்லாத ஒரு விஷயத்தைக் கொண்டாடுகிறார்கள். நமது கல்வி முறையில் எதற்காக, எப்படி மகிழ்வது என்று கூடச் சொல்லித் தரவில்லை. அடக்குமுறையில் இருந்து விடுதலை அடைவதாகத்தான் இது மாணவர்களால் பார்க்கப்படுகிறது. தேர்வுகள், நிறைவு கொடுக்கக் கூடியவையாக இருந்தால், அடுத்தத் தேர்வு குறித்த தேடல் இருக்கும்.

'விடுதலை அடையும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியை உணர்வதுதான் தேர்வு' என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மதிப்பெண்கள் குறித்த மிரட்டலில் கட்டுண்டு கிடக்கும் மாணவர்கள், வெளியே வரும் சுகமாகத்தான் தேர்வைப் பார்க்கிறார்கள். சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைகள் எவற்றையும் மாணவர்கள் உணரவில்லை. உணரும் விதமாகக் கல்வி அமைப்பு இல்லை. நமது கல்வி, சகோதரத்துவத்தை, ஜனநாயகத்தை, மெய்யான கல்வியைக் கற்றுத் தரவேண்டும்."

Colleges can expel drunk students, says Madras HC

A college student who was found drunk in a gurukul-style campus that puts a premium on discipline is set to lose an academic year, as the Madras high court has upheld the decision of Vivekanantha College in Thiruvedagam, Madurai district, to either expel the student or debar him from its campus for one year.

Justice S Vaidyanathan, highlighting every youth's duty towards the nation, cited the Supreme Court rulings and said: “If a student does not behave properly , and should there be any act of indiscipline, which is not conducive to the interests of the institution, the schoolcollege authorities have every right to send that student out of the college.“

The matter relates to a third year BA economics student Thennarasu who was disallowed from writing his final semester examination along with two arrear papers as he was found drunk while returning to hostel on March 15. His father had been summoned and inquiries held. At the end of the exercise, there were only two options before him: One, he could move out of the college by taking transfer certificate (TC) and join some other; Two, skip the course for one year.

In a writ petition, Thennarasu said he had already paid fee for his final semester examination, and that his debar , ment at this stage would adversely affect his prospects.

The college management said that ever since its incep, tion in 1971, the college had been following the `Guruku lam pattern' of education and discipline is primarily inculcated. Noting that misconduct committed by students cannot be tolerated, it said even at the time of admission, each student and parent are informed that consuming alcohol will lead to dismissal. Denying any discrimination, it said the same punishment is usually given for such misconduct. Justice Vaidyanathan agreed with the management's stand, and said: “The conten tion of the college principal that if the rules and regula tions are relaxed and diluted to suit the convenience of an in dividual student, then the fu ture of the Gurukula institute will be at peril, cannot be , brushed aside.“

Dismissing the petition as being devoid of merits, the ; judge said he was refraining from imposing an exemplary costs on the student only because of the fact that his par ent would have to bear the costs for the misconduct com mitted by him.

No higher allowances for varsity staff holding additional posts: HC

The Madras High Court has ruled that full time employees of Tamil Nadu Dr. MGR Medical University are not entitled to higher allowances for holding additional charge of posts such as Registrar and Controller of Examinations.

Justice K.K. Sasidharan passed the order while dismissing a writ petition filed by an Assistant Professor of the university, seeking payment of ‘additional charge allowance’ given to Group A and B officers in State Government service.

According to the petitioner, the university had asked her to hold charge, in addition to her regular duties, of the posts of Deputy Controller of Examinations, Controller of Examinations and Registrar for different tenures between August 2010 and May 2013.

However, when she claimed payment of monetary allowances for having held additional charge of the three posts, the Registrar of the University declined to make any such payment by citing the university statute and hence the present writ petition.

Concurring with the rejection order passed by the Registrar, the judge said that the university had framed its own statute, notwithstanding the Government Orders passed for paying additional charge allowance, and that statute does not provide for any such allowance.

Further, stating that the petitioner had not challenged the validity of the statute, Mr. Justice Sasidharan said that an employee governed by the statute of a university could not claim allowances by relying upon Fundamental Rules applicable to government servants.

He also pointed out that it was not the case of the petitioner that the appointment order issued to her contained an undertaking by the university to pay her extra allowances for holding additional charge.

Saturday, April 11, 2015

நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து

உங்கள் “பராசக்தி” வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன். உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன்.

‘மனோகரா’ பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து சங்கிலிக்குப் பதிலாக தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு புளிய மரத்தைப் புருஷோத்தமனாக்கி என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா...?

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா?

உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
இந்திய சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதி முக்கிய பங்கிருக்கிறது.
நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள் உலகத் தரம்பெற்றன!

பத்மினி - 1. எல்லாம் இன்பமயம்!


அழகு, ஆற்றல், இளமை, ஈடுபாடு, உழைப்பு, உற்சாகம், ஊக்கம், எளிமை, ஏற்றம், ஓய்வறியா அர்ப்பணிப்பு, ஓங்கு புகழ் போன்ற தமிழ்ச் சொற்களின் ஒரே உருவம் பத்மினி. தாய்நாட்டின் விடுதலையோடு வேர் விடத் தொடங்கிய, நர்த்தன நந்தவனம்.

திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட முடியாது

மேடைகளில் கொண்ட பற்று காரணமாக பாடசாலைகளைத் துரிதமாகத் துறந்தவர் பத்மினி. பால்யத்தில் சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் நீடித்த அவரது தொடர் பங்களிப்பு உன்னதமானது. நடித்த அத்தனை படங்களிலும் சொந்தக் குரலில் பேசியது அன்றைக்கு அபூர்வம். அவரது சாதனைகளின் பிள்ளையார் சுழி அது!

அதனாலேயே, தமிழில் பத்மினி நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால், அவர் ஏற்று ஜொலித்த பாத்திரங்கள் தந்த மன நிறைவில், யாரும் அதை உணர்ந்ததே கிடையாது. அவரது படப் பட்டியலை சற்றே எண்ணிப் பார்த்தபோது வியப்பு தோன்றியது. ஆண்டுக்கு நான்கு ஐந்து படங்களில் நடித்திருந்தார். 1970-களில் அவர் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்குக் குடும்பம் நடத்தச் சென்றார். அப்போது, ஏறக்குறைய எட்டுப் படங்கள் (1971-ல்) பத்மினி நடிப்பில் ஒரு சேரத் தமிழில் வெளிவந்தன. அவற்றில் அன்னை வேளாங்கன்னி, ஆதிபராசக்தி போன்ற பக்திச் சித்திரங்களும் அடங்கும்

வண்ணத்திரையில் பத்மினியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கும் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டியது இருவருக்கு மட்டுமே. முதலாமவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இரண்டாமவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைவாணர் வற்புறுத்தி பத்மினியை நாயகியாக்கியவர். கணேசனோ, பத்மினியின் பரவசமூட்டும் நடிப்புக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.

தமிழில் பத்மினி பங்கேற்ற நூற்றுச் சொச்சம் படங்களில், அவர் கணேசனோடு நடித்ததே அதிகம். பணம் படத்தில் தொடங்கி லட்சுமி வந்தாச்சு (சூப்பர் டைட்டில் பொருத்தம் இயல்பாகவே அமைந்துவிட்டது. திரையில் அவர்களது முதலுக்கும் நிறைவுக்கும்) கடந்தும், கடைசி வரையில் நட்போடு நீடித்தது அவர்களின் மிக நீண்ட கலைப்பயணம், தோழமை யாவும்.

85 ஆண்டு காலத் தமிழ் சினிமா சரித்திரத்தில், இட்லியும் சாம்பாருமாக இணை சேர்ந்த ஒப்பற்ற ஜோடி அவர்கள். நிஜ வாழ்வில் (1960-களில்) தாலி கட்டி முடித்ததும், கால் கட்டு போட்டதும், தமிழர்களின் கல்யாணங்களில் சிவாஜி - பத்மினிபோல் சேர்ந்து வாழ திருமண வீட்டார் வாழ்த்தியது காலத்தின் கல்வெட்டு.

திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் குரு கோபிநாத். அவரிடம் நாலு வயது பத்மினியும் (பப்பி) அக்கா லலிதாவும் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். கடைக்குட்டி ராகினி அப்போது குழந்தை. பப்பியின் எட்டு வயசுக்கெல்லாம் அரங்கேற்றம் ஆனது. ஒன்பது கெஜம் சேலையில் பாலகி பத்மினி ஆடிய ஆட்டத்துக்கு, சிறப்பு விருந்தினர் ஜோத்பூர் மகாராஜா ஜோராகக் கை தட்டினார்.

அக்கா லலிதாவோடு ஏழு வயது பத்மினி இணைந்து தர்பார் நாட்டியங்களில் பங்கேற்றார். அன்றைக்குப் 'பாரிஜாத புஷ்பகரணம்' நாடகம். அதில், பத்மினிக்கு நாரதர் வேடம். தலைமை கலைவாணர்.

'தேவலோகத்தில் எல்லாரும் அழகாக இருப்பாங்கன்னு இப்பத்தான் தெரியுது. நாரதர்கூட ரொம்ப அழகாக இருக்கிறார்'. என்.எஸ்.கே.யின் பாராட்டில் த்வனித்த கிண்டலுக்கும் கேலிக்கும் எல்லாரும் சிரித்தார்கள். ஆனால் பப்பிக்கோ, வெட்கச் சிறகுகள் முளைத்தன. தம்பூராவால் தன் தாழம்பூ முகத்தை மூடிக்கொண்டார்.

பரம்பரையான கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல லலிதாவும் பத்மினியும். அவர்களுக்குள் அந்த ஆசை விதையை ஆழமாக ஊன்றியவர் மிஸஸ் பிள்ளை. பப்பியின் அம்மாவுக்கு அக்கா. பெரியம்மாவுக்கு, ஆறுமுகங்கள்போல் அத்தனையும் ஆண் பிள்ளைகள். எனவே, தங்கை மகள்களின் மீது தனிப் பிரியம்! பெரியம்மாவுக்கு, மலேசியாவில் நாலாயிரம் ஏக்கரில் ரப்பர் எஸ்டேட் இருந்தது. வசதியான வாழ்க்கை. பணம் லட்சியமில்லை. தங்கை பெற்ற செல்வங்களுக்குத் தங்கத்தில் உருத்திராட்சம் கட்டிப் போட்டார்.
பப்பியின் மாமா, பம்பாயில் கடற்படையில் கமாண்டர். உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் உதயசங்கரின் பக்கத்து வீட்டுக்காரர். விடுமுறைக்கு வந்திருந்த சகோதரியின் பெண்களை அவரிடம் அறிமுகப்படுத்தினார். சலங்கைகள் பேசின. இளம் தளிர்களின் அங்க அசைவுகளில், ஜதிக்குப் பதில் சொல்லும் நயண பாஷைகளில், நான்கு பாதங்களின் அதிவேகப் பாய்ச்சலில், கலா மேதை கண் கலங்கினார். ஏற்கெனவே திருவிடைமருதூர் மகாலிங்கம் பிள்ளையிடம் தேர்ச்சி பெற்றவர்களை சினிமாவில் ஆட அழைத்தார்.

'ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆதரவில் கல்பனா என்ற பெயரில் முழுநீள நாட்டியச் சித்திரம் தயாரிக்கப்போகிறேன். அதில் நீங்களும் ஆடுகிறீர்களா' என்றார். நிஜத்தில் மெய்சிலிர்த்துப் போனது இருமலர்களுக்கும். கலைச் சமூகத்தின் மேட்டுக்குடிகளிடம் வாசம் பரப்ப வந்திருக்கும் வசந்த அழைப்பைத் தவறவிடலாமா? எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்பா அது!

அரண்மனை அந்தப்புரங்களில் ஆடியவர்கள், சினிமா ஸ்டுடியோவில் தடம் பதித்தார்கள். சந்திரலேகா ஷூட்டிங்கும், கல்பனாவுக்கான நடனப் பயிற்சிகளும் வருடங்களை விழுங்கியபடி நடந்தன. ராஜ வம்சத்து யவன ராணிகளை, வாசனின் ஊழியர்கள் பிரியத்தோடு கவனித்தார்கள். அவர்களில் நல்ல பெர்சனாலிடியும் சுறுசுறுப்பும் உடையவராக, பத்மினியின் கண்களுக்குத் தட்டுப்பட்டவர் ஜெமினி கணேசன்!

கல்பனா ரிலீஸுக்கு பிறகு காலத்தை விரயம் செய்யாமல் 'டான்ஸ் ஆஃப் இந்தியா'வைத் தொடங்கினார்கள். எட்டுப் பேர் கொண்ட சொந்தக் குழு அமைந்தது. பாம்பாட்டி நடனம், சிவாபார்வதி, ராதாகிருஷ்ணன் போன்றச் சின்னச் சின்ன அயிட்டங்களைத் தாங்களே உருவாக்கி ஆடினர்.

சென்னைக்கு வந்தால், பட அதிபர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் கவனத்தில் நின்றவை, லலிதா - பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி விளம்பரங்கள். ஒரு நாள் எழும்பூர் மியூசியம் தியேட்டரில் அவர்களது நடனத்தைப் பார்த்தார்.

'ஆஹா, எவ்வளவு களையான முகம் இருவருக்கும். அவர்கள் தன் சொந்த மண்ணான காரைக்குடியில் வந்து ஆடமாட்டார்களா. வேதாள உலகத்தில் நடிக்கவைத்தால் வசூல் கூடுதலாக இருக்குமே...' இதய வீணை மீட்டிய இனிய ராகத்துக்கு விடை தேடிப் புறப்பட்டார்.

'நாங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டியம் மட்டுமே ஆடுவோம். படங்களில் நடிக்கமாட்டோம்'. கலை உலகம் தேடிச் சென்று கேட்டபோதெல்லாம் ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்பினார்கள் ஆடல் அரசிகள் இருவரும்.

சொல் புதிது. பொருள் புதிது என்று புதுமை விரும்பியாக வாழ்ந்தவர் மெய்யப்பன். நினைத்ததை முடிக்கும் திறமைசாலி. பலமுறை தீர யோசித்துத் தொண்டைக்குழிக்குள் ஒத்திகை பார்க்காமல் ஒரு வார்த்தை பேசமாட்டார்.

'உங்களுக்கு இஷ்டம் இல்லையென்றால் நீங்கள் கேரக்டர் ரோலில் நடிக்க வேண்டாம். ஆடினால் போதும்'. உடனடியாக, நான்கு நடனங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு ஊருக்குத் திரும்பினார் செட்டியார்.

வேதாள உலகம், 1948 ஆகஸ்டு 11-ல் வெளியானது. லலிதா - பத்மினி ஆடிய பவளக்கொடி, பாம்பாட்டி நடனக் காட்சிகளுக்கு தடபுடலாகப் பிரமாதமாக விளம்பரம் செய்திருந்தார் ஏவிஎம். ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் பார்வையும் பத்மினி மீது பதிந்தது. விளைவு, திருவிதாங்கூர் சகோதரிகளின் பங்களிப்பு இல்லாமல் எந்தப் படமும் போணி ஆகாது என்ற நிலை விரைவில் வந்தது. சுமார் நூற்றைம்பது சினிமாக்களில் வெறும் நடனம் மாத்திரம் ஆடினர்

எல்லோரையும் போலவா கிருஷ்ணன். குடும்ப நண்பர் ஆயிற்றே! தேவதைகளின் தாயாரை நேரடியாகவே அணுகினார், நாயகி வாய்ப்போடு.


மணமகள்னு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கிறேன். அதில் ஹீரோயின்களா உங்க பொண்ணுங்க நடிக்கணும்'.

சரஸ்வதி அம்மாளுக்குச் சந்தேகம். பப்பிக்குள் அந்தத் திறமையெல்லாம் அடங்குமா? டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, அஞ்சலி, வசுந்தராபோல் நடிப்பதெல்லாம் அவளுக்குச் சாத்தியமா? தகுதி இருக்கட்டும். அதற்கான பக்குவம் இன்னமும் வரவில்லையே. இந்தக் கார்த்திகை போனால்தானே பதினாறும்கூடப் பூர்த்தி ஆகும். (பத்மினி பிறந்த தேதி டிசம்பர் 13).

'சினிமால நடிக்கிறதுன்னா கதையை காட்சியைப் புரிஞ்சிக்கிட்டு செய்யணுமே. அவ சின்னவ. இன்னும் விவரம் போதாது' அன்னை சிந்தித்தார். அவரது தயக்கத்தின் நொடிகளில், கலைவாணர் தாயம் போட்டார்.

'நல்லா நடனம் ஆடறவங்களால நல்லா நடிக்கவும் முடியும். நீங்க சம்மதம் சொல்லுங்க. உங்க பப்பியை ஸ்டார் ஆக்கிக் காட்டறேன்'.

கிருஷ்ணன் சொன்னது அதுவரையில் நிரூபிக்கப்படாத ஒன்று. ஏவிஎம்மின் வாழ்க்கை படம் மூலம் வைஜெயந்திமாலா அறிமுகமாகிய நேரம். குமாரி கமலா, குசலகுமாரி, சாய் சுப்புலட்சுமி போன்றோர் நாட்டியத் தாரகைகளாக ஒளி வீசிய அளவு, நடிப்பில் அரிச்சுவடி வகுப்பைக்கூடத் தாண்டாமல் போனார்கள்.

தண்டவாளத்தின் இரு பக்கங்கள்போல் நடனம், நடிப்பு இரண்டிலும் எடுத்த எடுப்பில் எழிலரசி பத்மினிபோல் புகழின் தொடர்வண்டியை ஓட்டி, சிகரம் தொட்டவர் இன்றுவரை எவரும் கிடையாது.

சரஸ்வதி அம்மாளுக்குக் கண்டிப்பு ஜீவ நாடி. அவரது விழி அசைவுகளுக்குள் பத்மினியின் கால்ஷீட் கடைசிவரையில் கட்டுண்டு நின்றது. ரசத்துக்குப் பெருங்காயம் போடுவதில் சந்தேகம் வந்தாலும், நியூஜெர்ஸியில் இருந்து ட்ரங்க்கால் போட்டு அம்மாவிடம் கேட்பார் திருமதி பத்மினி ராமச்சந்திரன்.

டி.ஏ.மதுரம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டைரக்டர் கே.சுப்ரமணியம் போன்ற கலை மேதைகள் மிக வேண்டியவர்களாக இருந்ததால், சரஸ்வதி அம்மாள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கே.சுப்ரமணியம், கதகளி ஆடிக்கொண்டிருந்த சகோதரிகளுக்கு, பரதநாட்டியத்தையும் கட்டாயமாகக் கற்றுத் தரச் சொன்னப் பிதாமகன். 1944-ல் பத்மினியின் குடும்பம் சென்னைக்குக் குடி வந்தபோது, தன் வீட்டில் தங்க இடம் தந்து ஆதரவு அளித்தவர்.

1950-ம் ஆண்டின் மிகச் சிறந்த காவியம், ஏழை படும் பாடு. கே.ராம்நாத் என்ற மாபெரும் திரைச்சிற்பி இயக்கியது. அதில், வி.கோபாலகிருஷ்ணனுடன் கனவுக் காட்சியில் பத்மினி தோன்ற வேண்டும்.

'பப்பி அப்படி நடிக்கமாட்டாள்' என, தயாரிப்பாளரைத் தவிக்க வைத்தார் தாயார். இயக்குநர் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில், தங்கை ராகினிக்கு ஆண் வேடம் போடப்பட்டது. இளைய சகோதரியுடன் தன் முதல் காதல் பாடலைப் பாடி நடித்தார் பத்மினி.

மணமகள் தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங்கில், வியர்வைக் குளத்தில் நீராடினார் பத்மினி. தமிழை கொச்சையாகப் பேச மட்டும் தெரிந்த அவரிடம், மு.கருணாநிதியின் வசனத்தைக் கொடுத்தார்கள். அடுத்து, புடைவையை நீட்டி கட்டிக்குங்க என்றார் காஸ்ட்யூமர். சேலை, இடுப்பை விட்டு நழுவிற்று. நாயகியின் தவிப்பைப் புரிந்துகொண்டார் மதுரம். 'போய் ரெடிமேட் ஸாரியை வாங்கிட்டு வாங்க என்றார் தயாரிப்பு நிர்வாகியிடம்.

பத்மினி அணிந்துகொண்டு நடிக்க, தன் சொந்த நகைகளைப் பூரிப்போடு வாரி வழங்கினார் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மற்றொரு சங்கீதவாணி எம்.எல்.வசந்தகுமாரி, பத்மினிக்காகத் திரையில் பாடினார். எல்லாம் இன்பமயம் எனத் தொடங்கி, 65 ஆண்டுகளாக வசீகரிக்கிறது அந்த அற்புத கீதம்.

மணமகளில் பத்மினிக்குக் காதலன் யார் தெரியுமா? பிரபல குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம். பாவம் பத்மினி. சிவாஜி கணேசனின் இணையற்ற ஜோடியாகப் புகழ்பெறும் வரையில், அவருக்கு நாயகனாக வாய்த்தவர்கள் அவரைவிட வயதில் மூத்த டி.எஸ்.பாலையா, கே.ஆர்.ராமசாமி, நாகையா, எஸ்.வி.சுப்பையா எனப் பட்டியல் நீள்கிறது.

மணமகள் மகத்தான வெற்றியைப் பெற்றது. கலைவாணர், பப்பியை விடுவதாக இல்லை. தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். அவரது பணம், சிவாஜி கணேசனின் இரண்டாவது படமாக வெளியானது. அதைத் தயாரித்தபோதும் பத்மினியை மறக்கவில்லை.

கணேசனுக்குப் பத்மினியோடு நடிப்பது கனவுபோல் இருந்தது. பராசக்தி எப்போது ரிலீஸாகும் என்று தெரியாத நிலை. பப்பி ஏற்கெனவே புகழ் பெற்ற நட்சத்திரம். இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்பது போன்ற அற்புதமான முகத்தோற்றம்! அழகின் ஆலயத்துடன் நடிக்கும் ஆனந்தத்தில், இளமை கரை புரண்டு ஓடியது புதுமுகத்துக்கு.

அவர்கள் இருவரும் நடித்த முதல் காட்சி, மங்களகரமாக ஆரம்பித்தது. அன்றைய இரவு, தன்னுடைய நிஜ திருமணத்துக்காக சுவாமிமலைக்குச் செல்ல வேண்டியவர் கணேசன். காலையில், மணமகள் பத்மினியின் கழுத்தில் சினிமா தாலியைக் கட்டி அவரை மாமியார் வீட்டுக்கு அழைத்து வருவதாகப் படம் பிடித்தார்கள். பிற்பாடு சந்தித்த வேளைகளில் சிரித்துச் சிரித்து மகிழ, சிவாஜிக்கும் பத்மினிக்கும் கிடைத்த இனிப்பு அவல், அந்தத் தித்திப்பான முதல் சம்பவம்.

பணம் படத்தைத் தொடர்ந்து அன்பு, இல்லற ஜோதி எனத் தொடர்ந்தது சிவாஜி - பத்மினி ஜோடி. இரண்டிலும் ஒரு விசேஷம். படங்களுக்கு நடுவில் ஓரங்க நாடகம். ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவாக கணேசனும், டெஸ்டிமோனாவாக பத்மினியும், அன்பில் வாழ்ந்து காட்டினார்கள்.

கண்ணதாசன் வசனம் எழுதிய மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான இல்லற ஜோதியில் சலீம் - அனார்கலியாக சிவாஜி - பத்மினியைச் சந்தித்தார்கள் ரசிகர்கள். ஓரங்க நாடகத்துக்கு மட்டும் காதல் வசனம் எழுதியவர் கலைஞர்!

தினம் ஓயாமல் ஒலித்த சலங்கை ஒலிகளுக்கு நடுவே, பத்மினி கேமரா முன்பு தோன்றினார் என்றே சொல்ல வேண்டும். தூக்கம் தொலைத்த இரவுகளில், பத்மினியின் பஞ்சுப் பாதங்கள் ஓய்வுக்காக ஏங்கும். கடிகாரங்கள்கூட சாவி கொடுத்தால்தான் ஓடும். திருவிதாங்கூர் சகோதரிகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ராத்திரி பகல் பார்க்காமல், பதத்துக்கு ஆடினார்கள். ராமாயணம், கண்ணகி, தசாவாதாரம், வள்ளித் திருமணம் என நீண்ட நெடிய நாட்டிய நாடகங்கள். கலைத் தாகமா... புகழ் மோகமா எனப் பட்டிமன்றம் நடத்தலாம். வெகு சீக்கிரத்தில், சென்னை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த 12 பங்களாக்கள் அவர்களுக்குச் சொந்தமானது.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் தேதியை பாரதப் பிரதமருக்காக ஒதுக்கினார்கள். பத்மினி குழுவினரின் 'கீதோபதேசம்', நேருவுக்கு மிகவும் பிடிக்கும். பாதி ஆட்டத்தில் தன்னை மறந்து அபாரம் அபாரம் என்று கைகளைத் தட்டுவார் ஜவஹர். இந்தியர்களின் ரசிப்புத்தன்மைக்கு நேற்றைய உதாரண புருஷர். உலகின் ஒப்பற்ற தலைவரின் முன், அவரது பிறந்த நாள் தோறும் ஆடும் பாக்கியம், இந்தியாவில் எத்தனை நடன மணிகளுக்குக் கிடைக்கும்!
பத்மினி நாயகியாக அறிமுகமானபோது, தென் இந்தியா முழுவதும் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம்.

1. உணர்ச்சி மிகுந்த நடிப்புக்கும், தெளிவாக வசனம் பேசுவதற்கும் கண்ணாம்பா...

2. நளினமாக நடிக்கவும் இளமையாகப் பாடவும் பானுமதி...

3. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு முத்தம் கொடுத்து நடித்து கவர்ச்சிக் கன்னியாக அரங்கேறிய அஞ்சலிதேவி...

4. அழகான தோற்றத்துக்கும் வசீகரமான குரலுக்கும் எஸ்.வரலட்சுமி...

5. மனத்தை உருக்கும் நடிப்புக்கு ஜி.வரலட்சுமி

ஆகியோர் போதாது என்று புதுமுகங்களாக வந்த சௌகார் ஜானகி, கிரிஜா, மாலதி, சாவித்ரி போன்றோர், ரசிகப் பெருமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். ஏறக்குறைய நவரத்தினங்கள் மாதிரி அவர்கள் அனைவரும் தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சேர ஒளிவீசினார்கள்.

அத்தகைய போட்டி மிகுந்த சந்தர்ப்பத்தில், கேரளத்தில் இருந்து முதன் முதலில் தடம் பதித்து, தமிழர்களின் அபிமான நடிகை ஆனவர் பத்மினி. எழுத்தாளர் லஷ்மியின் காஞ்சனையின் கனவு, ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. அதில், லலிதாவும் பத்மினியும்தான் நடிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டின் தாய்க்குலங்கள் அபிப்பிராயம் சொன்னார்கள். தட்டாமல் அதை நிறைவேற்றினார், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, லஷ்மியின் படைப்பு காஞ்சனா என்ற பெயரில் வெளியாகி வசூலைக் குவித்தது.

திரையில் பத்மினியை ரசிகர்கள் ஏனோ அதிகம் சிரிக்க விடவில்லை. அவர் அழும்போதும் அழகாக இருந்தார். இறைவனின் வரப்பிரசாதம். அதுவே போதும் என திருப்தி அடைந்தார்கள். புகழின் சமுத்திரத்தில் உற்சாக அலைகளில், தமிழ் சினிமா உலகம் பப்பியைக் கொண்டாடியது.

பத்மினியின் பெயரில் தன் புது சினிமா கம்பெனியை ஆரம்பித்தார் பி.ஆர்.பந்தலு. அதில் முதல் தயாரிப்பு காமெடியாக வளர்ந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிற டைட்டிலில் 100 நாள்கள் ஓடியது. ஆரம்ப நாள்களில், கணேசனைவிட பத்மினிக்கு ஊதியம் மிகவும் கூடுதல். உச்ச நட்சத்திரம் அல்லவா.

தூக்குதூக்கியும் கூண்டுக்கிளியும், 22 ஆகஸ்டு 1954-ல் ஒரே நாளில் வெளியாகின. முதலும் கடைசியுமாக சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளியை, வசூலில் தூர வீசி எறிந்த மகத்தான வெற்றிச்சித்திரம் தூக்குதூக்கி. திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்த முதல் படம். சிவாஜி - பத்மினி ஜோடியின் நகைச்சுவை நடிப்பும், இனிய பாடல்களுமாகச் சிகரம் தொட்டது. கூண்டுக்கிளியின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது, பத்மினி அதில் நாயகி இல்லை என்பது.

1954. சிவாஜிக்கும் பத்மினிக்கும் மறக்க முடியாத மன்மத ஆண்டு. வருடக் கடைசியில் வெளியான எதிர்பாராதது, நிஜத்திலும் அப்படியே. தமிழ் சினிமாவின் முதல் மாறுபட்ட காதல் சித்திரம். ஸ்ரீதர் எழுதியது. அன்றைய கல்லூரிகளில் பாடத்தைவிட அதிகம் ஒப்பிக்கப்பட்டவை ஸ்ரீதரின் வசனங்கள். சுமதியாக பத்மினியும் சுந்தராக கணேசனும் பேசியதில் இருந்து சில வரிகள்

சுந்தர் - சுமதி! உன் பாட்டிலே நான் அப்படியே மெய்மறந்து...

சுமதி - தூங்கிட்டீங்களா!

சுந்தர் - இல்லை சுமதி. நீ பாடியது வெறும் பாட்டல்ல! என் இதய நரம்புகளை ஒவ்வொன்றாக மீட்டி...

சுமதி - அடடே, வர்ணனை பண்ணக்கூடத் தெரியுமா?

சுந்தர் - இதென்ன பிரமாதம்! இன்னும் கேள். அந்தரங்கத்தில் அரங்கம் நிர்மாணித்து... அ... அ...

சுமதி - என்ன அ'னாவிலே வரணும்னு தேடறீங்களா?

சுந்தர் - ஆமா... இரு இரு. ஆழ்கடலின் நீளத்தைச் சுவராக நிறுத்தி, தவழ்ந்து செல்லும் காற்றைத் தரையாக்கி, வண்ணமலர் இதழ்களை வகையாக அதில் பரப்பி, அந்த இனிய மாளிகையில் இதய ராணியான உன்னோடு இரவும் பகலும் இன்பத்தின் எல்லையில் மிதக்கத் துடிக்கிறேன் சுமதி!

சுமதி - ஒன்ஸ்மோர்!

சுந்தர் - நான் என்ன சொன்னேன்னு எனக்கே புரியல்லை. ஒன்ஸ்மோராம்லே ஒன்ஸ்மோர்!


அதன் உச்சகட்டக் காட்சியில், நடிப்பு என்பதை மறந்து கணேசனைக் கன்னத்தில் அறைந்தார் பத்மினி. அந்த நிகழ்வு, பப்பியின் வார்த்தைகளில்..

'சிவாஜியின் காதலியான நான், விதி வசத்தால் அவருக்குச் சித்தி ஆகிறேன். கணேசனுக்கோ பார்வை பறி போய்விடுகிறது. அப்பா நாகையாவின் இளம் மனைவியான என்னிடம், பழைய ஞாபகத்தில் சிவாஜி பழகுவதாக நினைக்கிறேன். மனம் பதறி அதைத் தவிர்க்க அவரை அறைவதாக சீன்.

டைரக்டர் சி.எச்.நாராயணமூர்த்தி என்னிடம், 'ரியலிஸ்டிக்கா இருக்கணும். கணேசனை நீ நிஜமாகவே அடிக்கணும்' என்றார். சிவாஜியும், 'பரவாயில்ல தைரியமா விடு ஒரு அறை. சீன் பிரமாதமா வரணும்' எனத் தூண்டினார். இருவருக்குமே அப்படி ஒரு ரிசல்ட் கிடைக்கும் என்று தெரியாது.

ஒரு ஆவேசத்தில், பளார் பளாரென்று சிவாஜியை அடித்து வெளுத்து வாங்கிவிட்டேன். சிவாஜியின் கன்னமெல்லாம் வீங்கிவிட்டது. உடம்பு சரி இல்லாமல் ரெண்டு மூன்று நாள்கள் செட்டுக்கே வரவில்லை.

'பார்க்க சின்னப் பெண்ணாக இருக்கிறாய். உனக்கு எப்படி இவ்வளவு பலம் இருந்தது...?' என்று திகைப்புடன் கேட்டார்.

'நான் பரத நாட்டியம் ஆடி ஆடி, கை விரல்களுக்கு அதிகம் பயிற்சி கொடுத்திருக்கேன் சார். உடல் பலம் எப்படியோ. கைகளின் வலுவுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்றேன்.

சிவாஜிக்கு என்னால் நேர்ந்த கதியை நினைத்து வருத்தப்பட்டேன். சிவாஜி அதை சட்டை செய்யவில்லை. 'ரொம்ப இயற்கையாக நடித்தாய். அடியால் வலி இருந்தாலும், உன் நடிப்புத் திறமையை நினைத்து சந்தோஷமாகவே இருந்தது பப்பி' என மிகவும் பெருந்தன்மையோடு சொன்னார்.

எதிர்பாராதது படத்தின் இமாலய வெற்றி, சிவாஜி - பத்மினி ஜோடியைத் திரையில் நிரந்தரமாக்கியது.

CENTRAL GOVERNMENT EMPLOYEES REVISED RATES OF DA ORDER WEF 1.1.2015


Source document: http://finmin.nic.in/the_ministry/dept_expenditure/notification/da/da01012015.pdf

Tough Biology Paper Dampens Med Hopes

COIMBATORE: In what could be bad news for students aspiring to get into medical colleges, it has been revealed that their performance in the zoology part of the Biology paper in the recently held plus two exams is poor.

But the fact remains that Biology paper, this year, was very tough.

“This year, Biology question paper was very tough. There were lots of unexpected questions. They have asked four questions from just one chapter of Zoology, which normally is not the case,” said a Biology teacher who is part of the evaluation process at a centre in the city. I have not seen such a tough question paper in my 35 years of teaching experience, she added.

A Biology teacher, on condition of anonymity said, “In the last four days of evaluating Biology answer sheets, only one student has scored 75 out of 75 in Botany and Zoology - both parts of the Biology subject. Many students who have secured 75 out of 75 in Botany have managed to score just 40-50 marks in the Zoology part. This will definitely affect their dream of joining a medical college.”

For instance, one of the students, who has scored 66 marks in Botany has managed to score just eight marks in Zoology, she explained.

In the last three years, 620 (2012), 682 (2013) and 652 (2014) students had scored centum in Biology.

Admission for medical and dental courses is done based on marks secured in Biology (100 marks), Physics and Chemistry (50 marks each).

As students, who failed to make it to either a medical or a dental college by a whisker, last year, would be applying this year, the current batch of students are at a disadvantage on account of their below-average performance.

The Plus Two public examination was held between March 5 and 31. The examination for the Biology subject was held on March 31, which was attended by around five lakh students.

Anna University Seeks Alumni Aid to Build Auditorium

CHENNAI: Anna University has been granted clearance to construct a `45 crore 5000-seater indoor auditorium-cum-stadium on its campus, by the State Government. Speaking to City Express, university officials said that the huge auditorium was of vital importance as the institute was struggling to accomodate people into its current 800-seater auditorium.

“During last year’s convocation held for PhD scholars, over 1100 scholars were conferred degrees and we couldn’t accomodate all students,” said a university official.

“Year on year, the number of students, faculty, visitors and others who turn out for events held by us touch 3000 regularly. So this auditorium will help accomodate them all,” another official said.

Sources said that the land identified for the building to come up is located near the Mechanical Engineering workshop. “This includes the land transferred to us from the Highways Department a few years back,” an official said.

Registrar Dr S Ganesan, who during the Madras Institute of Technology Alumni meet held on Tuesday, made an appeal to the University alumni to come forward and donate to help with the construction of the auditorium/stadium at the College of Engineering campus.

“While the state government will likely allot funds, it cannot be all of it. The rest will have to be secured by the University. That is the reason we are approaching the alumni,” he said.

University sources said that the move to approach alumni for funding was taken up after the State Government’s Finance Committee mooted the idea. “We will soon be setting up a committee to draw out plans on how best to reach out to our alumni many of whom are in a financial position from where they can donate,” an official said.

The university’s sports board deputy chairman and MIT Alumni Association’s vice-president M Veerabadran said that when the auditorium was not being used for events, it will double up as an indoor stadium which will allow students to utilise for indoor sports activities. “It will be used for a variety of sports including badminton, tennis and even basketball,” he said.

நகைகள் வைக்க பீரோ வாங்கியாச்சு....அட்சய திரிதியை அமர்க்களம்

cinema.vikatan.com

ட்டுமொத்த ஆண்கள் சமுதாயமும் பயந்ததுபோலவே இதோ அட்சயதிரிதியை வந்தேவிட்டது. தங்க நகைக் கடைகளுக்குள் எக்கச்சக்க விளம்பரப் போட்டி. கொஞ்சம் புதுமை சேர்த்தால் வியாபாரம் களைகட்டும். நாமளும் யோசனை சொல்வோம்ல!

கடந்த ஆண்டுகளில் உங்கள் கடையில் தங்கம் வாங்கியதால் பெற்ற பலன்கள் என்ற வகையில் சிலரை பேசவைப்பது போல ஏற்பாடு பண்ணலாம். அப்போது, 'இங்கே அட்சயதிரிதியை அன்று நாலு பவுனில் ஒரு தங்க செயின் வாங்கினேன். அன்றிலிருந்து அந்த செயின் வளரத் தொடங்கி, தற்போது எட்டு பவுன் தங்க செயினாக மாறி விட்டது' னு சொல்லச் சொல்லலாம்! 

கடந்த ஆண்டு இங்கே தங்கம் வாங்குவதற்கு முன் குடிசையில் வசித்து வந்தேன் என்றும், தங்கம் வாங்கியதுமே செல்வம் பெருகி ஒரே ஆண்டில் பெரிய அபார்ட்மென்ட்டுக்கே சொந்தக்காரனாகி விட்டேன் என்றும் சொல்ல வைக்கலாம். 

அதேபோல, 'நான் அந்தக் கடையில் அட்சயதிரிதியை அன்று ஒரு கிராம் தங்கம் வாங்கிய பிறகுதான் எங்க வீட்டில் மாதாமாதம் ஒரு தங்க செயின் வாங்குற அளவுக்கு வசதி வந்தது. இப்போ எங்க வீட்டில் தங்க செயின்களை மட்டுமே பூட்டி வைப்பதற்காக ஒரு பெரிய பீரோவே வாங்கியாச்சு' என்று அளந்துவிட வைக்கலாம்.

அட்சயதிரிதியை அன்று உங்கள் கடையில் நகை வாங்கி அணிந்தால் காந்தப் படுக்கை மாதிரி, தங்கத்தின் கதிர்வீச்சினால் பல காலமாக தீராத மூட்டு வலி, சர்க்கரை வியாதி உள்ளிட்ட பத்து வகை வியாதிகள் தானாகவே சரியாவதாக டாக்டர் கோட் மாட்டிய ஒருவரை வைத்து விளம்பரப்படுத்துங்கள். மூலிகை பெட்ரோல் மாதிரி மூலிகை தங்க நகைக்கடை என்று ஃபேமஸாகுங்கள்!
அட்சயதிரிதியை அன்று வழங்கும் தங்க நாணயங்களில் சென்டிமென்டாக சாமி படம் பிரின்ட் செய்வ தற்குப் பதிலாக பவர் ஸ்டாரின் உருவத்தை பிரிண்ட் செய்யலாம். அதன் பின்னர், கூட்ட நெருக்கடியைச் சமாளிக்க காவல் துறை உதவி தேவைப்படலாம்!

அட்சயதிரிதியை அன்று உங்கள் கடையில் நகை வாங்கும் குடும்பத்தினரின் குழந்தைக்கோ, பேரக் குழந் தைக்கோ, அந்த நகைக்கடைக் காரர்களே நடத்தும் பள்ளியில் படிப்பதற்கு அட்மிஷன் இலவசமாக வாங்கித் தரப்படும் என்று அறிவிப்பு விடுங்கள். அப்புறம் பாருங்கள்  கூட்டத்தை. 

பக்கத்து வீட்டுக் குழந்தைகளை அழைத்து வருபவர்களுக்கு இந்தச் சலுகை கிடை யாது என்பதை மறக்காமல் தெரிவிக்க வேண்டும்!

ரெண்டு நாள் முன்பாக, ஏதாவதொரு ஊரில் முருங்கை மரம் சாய்ந்து விட்டதென்றும், அப்படி சாய்ந்தால் வீட்டிலிருக்கும் ஆண் மகனுக்கு ஆபத்து என்றும் வதந்தி கிளப்புங்கள். அதற்குப் பரிகாரமாக சகோதரிகளுக்கு தங்க நாணயமோ, நகையோ அட்சய திரிதியை அன்று வாங்கித் தர வேண்டுமென பரிகாரமும் சொல்லுங்கள். 

மறக்காமல் அந்த நகைகளை உங்கள் கடையில் மட்டுமே வாங்க வேண்டுமென அழுத்தந்திருத்தமாகச் சொல்லுங்கள்!

அட்சயதிரிதியை அன்று உங்கள் கடையில் நகை வாங்கினால் வழுக்கைத் தலையில் முடி வளருமென்று அடித்துவிடுங்கள். எதைத் தின்றால் முடி வளருமென்று ஒரு கூட்டமே திரிகிறார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக உங்கள் கடைப்பக்கம் திருப்பிவிடலாம்!

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

சி.பி.சி.ஐ.டி. மீது நம்பிக்கை

இப்போதெல்லாம் எந்த கொலையோ, கொள்ளையோ நடந்தாலும், உடனடியாக மக்கள் சி.பி.ஐ. விசாரணைவேண்டும் என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது. பொதுவாக ஒரு குற்றம் நடந்தால், மாநில போலீசார்தான் விசாரிப்பார்கள். சற்று கொந்தளிப்பை ஏற்படுத்திய குற்றம் என்றால், உடனடியாக மாநில அரசு நாங்கள் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடுகிறோம் என்று கூறுவது வழக்கம். சில நேரங்களில் அதிலும் மக்கள் திருப்தியடையாமல், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படி உணர்வு ஏற்படுவது நல்லதல்ல.

ஆனால், சி.பி.சி.ஐ.டி.யும் எல்லா வழக்குகளையும் புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்தில் சமூகஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சி.பி.சி.ஐ.டி.யில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற கேள்விகளை குறிப்பிட்டு, அதோடு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் பல முக்கியமான வழக்குகளைப்பற்றியும் கேட்டிருந்தார். ஆனால், சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஒரேவரியில், தகவல்களை அளிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி முடித்துவிட்டார்கள். பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் வழக்குகளுக்குள் செல்லாமல் பொதுவான விவரங்களை அளிக்க ஒரு கட்டாயம் இருக்கவேண்டும். இதற்கு அடுத்தநாள், ஐகோர்ட்டு மதுரை கிளையில் வந்த ஒரு வழக்குத்தான், எல்லோரையும் மனக்குறைக்கு ஆளாக்கியுள்ளது.

விருதுநகரில் 2005–ம் ஆண்டு நடந்த ஓய்வுபெற்ற வருமானவரித்துறை ஆணையர் எபநேசர் பால், அவர் மனைவி ஷீலா கொலை வழக்கில் குற்றவாளிகளின் கைரேகை கிடைத்தபிறகும், 9 அதிகாரிகள் புலன்விசாரணை செய்த நிலையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியாமல் கைவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சி.பி.ஐ. விசாரணைக்கோரி வழக்கு போடப்பட்டு இருந்தது. நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி.யின் பணி அளவை கருத்தில்கொண்டால், மேலும் பல அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள் என்று சூப்பிரண்டு அன்பு தெரிவித்த கருத்தும், தொடர்ந்து நீதிபதி அளித்த தீர்ப்பும் நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியதாகும்.

சி.பி.சி.ஐ.டி. முதன்மையான புலன்விசாரணை அமைப்பாகும். மக்கள் சி.பி.சி.ஐ.டி. மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வேகமான புலன்விசாரணை முடிந்து, நீதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், அவர்களாலேயே குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தங்கள் குறைகளை தீர்க்க மக்கள் எங்கே போவார்கள்? என்றுதான் எனக்கு தெரியவில்லை. சமீபகாலமாக பல வழக்குகளில், பொதுமக்கள் சி.பி.ஐ. விசாரணைவேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த உணர்வு இப்படி வளர்வது தமிழக போலீசுக்கு நல்லதல்ல என்று கூறிய நீதிபதி எஸ்.நாகமுத்து, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து இந்த வழக்கை மீண்டும் விரைவாக புலன்விசாரணை செய்யவேண்டும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளார். ஆக, இந்த நிலையில், உடனடியாக சி.பி.சி.ஐ.டி.யின் உள்கட்டமைப்பு வசதிகளும், திறமைவாய்ந்த அதிகாரிகள், போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, இந்த படையை வலுப்படுத்தவேண்டும். இதுபோல, ஐகோர்ட்டு நீதிபதி குறைகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு இல்லாமல், தமிழக காவல்துறையும், தமிழக அரசும் இனி எந்த வழக்கும் புலன்விசாரணை செய்யமுடியாமல், குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியாமல் கைவிடப்பட்டது என்ற நிலையை உருவாக்கிவிடாமல், ஒவ்வொரு வழக்கும் எவ்வளவு நாட்களுக்குள் கண்டுபிடிக்கவேண்டும் என்ற காலக்கெடுவை நிர்ணயிக்கவேண்டும். தமிழக போலீசார், ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் என்ற பெயரை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Friday, April 10, 2015

1960களின் அற்புதங்கள்: சிரிப்புக்குப் பஞ்சமில்லை

’காதலிக்க நேரமில்லை’ படத்தில்

அப்போதெல்லாம் திரைப்படக் கொட்டகைக்கு வரும் ரசிகர்கள், கதாநாயகன், கதாநாயகிக்குப் பிறகு படத்தில் ‘டமாஷ்’ நடிகர் யார் என்றுதான் துழாவுவார்கள். அவர்களை ஏமாற்ற விரும்பாமல் நகைச்சுவை நடிகர் - இடமிருந்தால் - நடிகையும் சுவரொட்டியில் இடம்பெறுவார்கள். டைட்டில் போடும்போது கதாநாயகனுக்கு விசிலும் கைதட்டலும் பறக்கும். அதில் பத்தில் ஒரு பங்கு நகைச்சுவை நடிகருக்கும் உண்டு. கதாநாயகிக்குக்கூட சீட்டியோ கைதட்டலோ அதிகம் இருந்ததில்லை. (அந்தக் காலத்திலேயே அவ்வளவு ஆணாதிக்கம், ஹூம்..)

பாலய்யா, எம்.ஆர். ராதா, எஸ்.வி. சகஸ்ரநாமம் போன்ற குணச்சித்திர நடிகர்களுடன் தங்கவேலு, நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, வி,கே. ராமசாமி, சச்சு போன்றவர்கள் இணைந்து சிரிக்கவைத்த வழங்கிய காலம் 1960கள். நாகேஷின் ஆக்கிரமிப்பு இருந்த பத்தாண்டு இது. நகைச்சுவைக் காட்சிகளைத் தனியாகத் தயாரித்து இணைக்கும் என்.எஸ். கிருஷ்ணன் பாணி சற்றே ஓய்வெடுத்துக்கொண்ட காலம் .

நினைத்து நினைத்துச் சிரிக்க

அடுத்த வீட்டுப் பெண் (1960-61) அறுபதுகளின் நகைச்சுவைப் போக்கைத் தொடங்கிவைத்த படம் என்று சொல்லலாம். கதாநாயகன் ராமாராவ், நாயகி அஞ்சலி தேவி. அடுத்த வீட்டுப் பெண்ணான அஞ்சலி தேவியைக் காதலிக்கவும் கைப்பிடிக்கவும் அவருக்கு உதவுகிறார்கள் ‘காரியம் கைகூடும் சங்கம்’ (‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்கு முன்னோடி!) அமைப்பைச் சேர்ந்த தங்கவேலு, கருணாநிதி, பிரண்ட் ராமசாமி உள்ளிட்ட நால்வர் அணி. இந்தப் படத்தில் பாட்டு வாத்தியார் புலவர் பூவரசன்தான் காமெடி வில்லன். இன்றைக்கும் பார்த்தும் நினைத்தும் சிரிக்க முடிகிற படம்.

தெய்வப் பிறவி திரைப்படத்தின் தங்கவேலு நகைச்சுவை தனி இசைத்தட்டாக வெளிவந்து சக்கைபோடு போட்டது. நாள் முழுக்க நண்பர்களுடன் சீட்டாடுவது, மனைவி பக்கத்து வீட்டுப் பெண்களுடன் ஊர் வம்பு பேசுவது என்று குடும்பம் சீரழிய அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் அம்மா, அப்பா விளையாட்டாகவே அதை நடிப்பதை சிரிக்கச் சிரிக்கச் சொன்னார் தங்கவேலு. ஆபாச வசனங்களைப் பேசாத அற்புதக் கலைஞர் தங்கவேலு. அவருடைய குரலின் ஏற்ற இறக்கமே காட்சிக்கும் வசனத்துக்கும் தனி பலத்தைத் தந்துவிடும்.

முழுமையான நகைச்சுவை

காதலிக்க நேரமில்லை. எவ்வளவுதான் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சி ஒரு நகைச்சுவைப் படத்தை எடுத்துவிட முடியுமா என்று சவால்விடும் நகைச்சுவைக் காவியம். கதை எங்க கிடைக்கும்? அட ஹாலிவுட்டிலோ பாலிவுட்டிலோகூடக் கிடைத்துவிடும். பாலய்யா, நாகேஷுக்கு எங்க சார் போவீங்க? தன்னால் உதாசீனப்படுத்தப்பட்ட அசோகன் என்னும் இளைஞன் பணக்கார வீட்டுப் பிள்ளை என்று தெரிந்ததும், ‘அசோகர் உங்க மகரா?’ என்று புதிய சொல்லாட்சியையே படைத்துவிட்டாரே பாலய்யா!

‘டேய் செல்லப்பா, உன் படத்துடைய கதையைக் கொஞ்சம் சொல்லு பாப்பம்’ என்று வம்பில் போய் மாட்டிக்கொள்ளும்போதும் சரி, பீதியில் ஆழ்ந்து கதை போதும் என்று சொல்லி நிறுத்திய பிறகு பணமும் கிடையாது ஒண்ணும் கிடையாது என்று இயல்பு நிலைக்கு வரும்போதும் சரி, எங்கேயோ கொண்டுபோய்விடுகிறாரே?

‘என் கதை என்னோட மடியட்டும்’ என்று செல்லப்பா (நாகேஷ்) சொன்னபோது சிரித்துத் தொலைத்தோமே, அதனால்தான் இன்னொரு கா.நே. நமக்குக் கிடைக்கவில்லை.

நாயக நடிகர்களின் நகைச்சுவை

நாயகனே நகைச்சுவையிலும் வெளுத்துக் கட்டுவது அப்போது தோன்றிய பழக்கம்தான். சிவாஜி கணேசன் அப்படிப் பல படங்களில் நடித்திருக்கிறார். பலே பாண்டியா அதில் ஒன்று. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பும் வில்லனின் கண்ணில் படுகிறான் அப்பாவி பாண்டியன்.

30 நாள் மட்டுமே வாழ்ந்துவிட்டுச் செத்துப்போவதாக வாக்குறுதி கொடுக்கும் அப்பாவி, பணக்காரக் காதலி கிடைத்ததும் வாக்குறுதி தவறுகிறான். வில்லனைப் போலவே தோற்றம் கொண்டவர்தான் காதலியின் தந்தை என்று தெரியாமல் அவர் வீட்டுக்குப் போய், ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்று பாடத் தொடங்கி முத்தாய்ப்பாக முகத்தைப் பார்த்து ஓடும் காட்சியை இருக்கையில் உட்கார்ந்து பார்க்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?

எங்கும் பரவிய நகைச்சுவை வாசம்

முழு நகைச்சுவைப் படங்கள் ஒருபுறம் வந்தவண்ணம் இருக்க, வேறு வகையான படங்களிலும் அங்கத ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. 1964-ல் வெளியான நவராத்திரி, சிவாஜியின் நவரச நடிப்பாற்றலையும் சாவித்திரி ஒரு நடிகையர் திலகம் என்பதையும் வெளிப்படுத்தியது.

திருவிளையாடல் படத்தில் தருமிக்குப் பொற்கிழி கொடுக்கவும், ஹேமநாத பாகவதரை மதுரையை விட்டுக் கிளப்பவும் சிவன் செய்த திரு விளையாடல்களை நகைச்சுவை கலந்து சொன்னார் ஏ.பி. நாகராஜன். தருமி – சிவன் உரையாடல் அற்புதமான தமிழ் விருந்து. சுறா மீனை சிவன் வதம் செய்யும் காட்சியும் அதற்குப் பிறகு கடற்கரை மணலில் அவர் டஜிங் டஜிங் என்று நடப்பதும் - எதில்தான் நகைச்சுவை இல்லை போங்கள்!

தேன் நிலவு - ஸ்ரீதரின் அற்புதமான கதை, இயக்கத்தில் உருவான மெலிதான நகைச்சுவைப் படம். நாகேஷும் சோவும் சேர்ந்து நகைச்சுவையை மழையாகப் பெய்த படம்.

ஊட்டிவரை உறவு திரைப்படம் காதல், நகைச்சுவை, குடும்பக்கதை என்று எல்லாமும் சரிவிகித கலவையில் கலந்த படம்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை நகைச்சுவைப் படமாக வகைப்படுத்த முடியாது. ஆனால் தரமான கைச்சுவைக்கு உதாரணமான படம். பாலய்யா, சாரங்கபாணி, நாகேஷ், மனோரமா, ராமாராவ், தங்கவேலு, மனோரமா எல்லோரும் ஒரு படத்தில் இருந்தால் வேறு எப்படி இருக்கும்.

நீலகிரி எக்ஸ்பிரஸ் திகிலான நகைச்சுவைப்படம். சோ ஜெய்சங்கருடன் சேர்ந்து கலக்கியிருப்பார்.

அப்படியே விட்டுவிடுங்கள்

இது ரீமேக் யுகம். பல படங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் திரும்ப எடுக்கிறார்கள். குறைந்த பட்சம் தலைப்புகளையாவது தூக்கிவிடுகிறார்கள். ஆனால் அறுபதுகளின் மாசற்ற நகைச்சுவையை இப்போது மீண்டும் திரையில் கட்டமைக்க முடியாது. காரணம், சமூகக் கட்டமைப்பு அடியோடு மாறிவிட்டது.

பாட்டிலைத் திறக்காமல், வாட்ஸ்அப்பில் கடலை போடாமல், யாரையும் கேவலமாகத் திட்டாமல் சிரிக்கவைக்க முடியாது என்று ஆகிவிட்ட காலம் இது. எனவே, அறுபதுகளின் நகைச்சுவைச் சித்திரங்களின் அசல் வடிவங்களையே பார்ப்பதுதான் நல்லது. இதன் மூலம் அந்தக் காலம் எப்படியிருந்தது என்றும் புரிந்துகொள்ளலாம்.

புதிய திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு அன்பு வேண்டுகோள்: துளியும் முகம் சுளிக்காமல் இன்றும் சிரிக்கவைக்கும் இந்தப் படங்களைப் போல் படம் எடுக்கச் சொந்தமாக முயற்சிசெய்து பாருங்கள். இந்தப் படங்களை அப்படியே விட்டுவிடுங்கள். அதுவே தமிழ்த் திரையுலகுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.

சித்திரை மலரில் (2015) வெளியாகியிருக்கும் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்

கமிஷன் தொகையை உயர்த்த கோரி போராட்டம் பெட்ரோல் பங்க்குகள் நாளை, பகலில் மட்டுமே இயங்கும் டீலர்கள் சங்கம் அறிவிப்பு



பெட்ரோல்–டீசல் கமிஷன் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நாளை(சனிக்கிழமை) பகலில் மட்டும் இயங்கும் என்று விற்பனை டீலர்கள் அறிவித்துள்ளனர்.

கமிஷன் தொகை

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள்(டீலர்கள்) சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

கடந்த 2010–ம் ஆண்டு அபூர்வா சந்திரா கமிட்டி குழு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.50–ம், டீசலுக்கு ரூ.2–ம் கமிஷன் தொகையாக பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு வழங்க பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2–ம், டீசலுக்கு ரூ.1.20–ம் கமிஷனாக வழங்கி வருகிறது.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த காலக்கெடு கடந்த மார்ச் 31–ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே உடனடியாக பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு நியாயமான விளிம்புத் தொகையை வழங்கிட வேண்டும்.

புதிய பங்க்குகள்

நாட்டில் 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்தநிலையில் எண்ணெய் நிறுவனங்கள் புதிதாக 33 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளை திறக்க விளம்பரம் செய்துள்ளனர். இது தேசிய அளவிலான பெட்ரோலிய பொருட்களின் விற்பனை வளர்ச்சிக்கும், புதிய விற்பனை நிலையங்களின் அறிவிப்புக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை. எனவே புதிய பெட்ரோல் பங்க்குகள் நிறுவுவதை நெறிமுறைப்படுத்திட வேண்டும்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் கொடுத்துள்ள குத்தகை நிலத்தை திரும்ப பெறுவதற்கான கொள்கை வரைவினை எளிதாக்க வேண்டும்.

விற்பனை நிலையங்களில் பெட்ரோல்–டீசல் எண்ணெய் நிறுவன லாரிகளில் இருந்து பெறப்படும்போது, அதன் அளவினை கண்காணித்திட ரசீதுடன் கூடிய அளவீட்டு கருவியை எண்ணெய் நிறுவனங்கள் நிறுவிட வேண்டும்.

கொள்முதல் நிறுத்தம்

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை மாறும் தேதி குறித்து, முன் அட்டவணையின்படி கால நிர்ணயம் செய்திட வேண்டும். சில்லறை விற்பனை நிலைய உரிமையாளர்களின் குடும்ப உறுப்பினருக்கு விற்பனை நிலையத்தின் உரிமத்தினை மாற்றிடும்போது, புதிய கட்டணம் வசூலிப்பதில் விலக்களித்திட வேண்டும்.

பெட்ரோல்–டீசல் இரண்டு பொருட்களை வெவ்வேறு இடங்களில் ஒரே உரிமத்தில் விற்பனை செய்து வருபவர்களை, அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரே இடத்தில் விற்பனை நிலையத்தினை அமைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முதற் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்கில் 10–ந்தேதி(நாளை) ஒரு நாள் பெட்ரோல்–டீசல் கொள்முதலை நிறுத்தப்படும்.

ரூ.1,025 கோடி இழப்பு

மேலும் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் பங்குகள் செயல்படும். பெட்ரோல்–டீசல் கொள்முதலை நிறுத்துவதன் மூலம் ரூ.300 கோடியும், பகுதி நேரமாக பெட்ரோல் பங்க்கை இயக்குவதன் மூலம் ரூ.725 கோடியும் இழப்பு ஏற்படும். தமிழ்நாடு–புதுச்சேரியில் உள்ள 4 ஆயிரத்து 500 பங்க்குகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

லோக் ஆயுக்தாதான் நிரந்தர தீர்வு

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜோ பிடன், தொடர்ந்து இருமுறையாக ஒபாமாவுடன் ஒன்றாக பணியாற்றுபவர். ஊழலுக்கு எதிரான கொள்கையுடையவர். ஊழலை எதிர்ப்பது சிறந்த நிர்வாகம் மட்டுமல்ல, அது சுய பாதுகாப்பு; அது நாட்டுப்பற்று என்பது அவர் உதிர்த்த பிரகடனம். தமிழ்நாட்டில் அதை கடைப்பிடித்து தன்னுயிர் ஈத்த ஒரு அதிகாரியின் மரணத்துக்கு இப்போது பரிகார நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. திருநெல்வேலியில் வேளாண்மைத்துறையில் உதவி செயற்பொறியாளராக வேலைபார்த்தவர் முத்துக்குமாரசாமி. பதவியில் இருந்து ஓய்வுபெற 8 மாதங்களே இருந்த முத்துக்குமாரசாமி, தன் பணிக்காலம் முழுவதுமே எந்த புகாருக்கும் இடமில்லாமல் வாழ்ந்தவர். அப்படிப்பட்ட அதிகாரி தன்னுடைய துறையில் 7 டிரைவர்களை நியமிக்கவேண்டிய நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து சீனியாரிட்டி லிஸ்ட் பெற்று, அதன்அடிப்படையில் தகுதியானவர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவின்பேரில், உத்தரவையும் அனுப்பிவிட்டார்.

அவ்வளவுதான் சென்னையில் இருந்து அவருக்கு தொல்லைக்குமேல் தொல்லை, மிரட்டலுக்குமேல் மிரட்டல் அலை அலையாய் செல்போன் மூலம் வந்தது. ஒரு டிரைவருக்கு 1.75 லட்ச ரூபாயை வசூலித்துத்தா என்ற அச்சுறுத்தலைத்தாங்க முடியாமல், ரெயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்தது, எல்லோரையும் சோகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. இதற்காக உடனடியாக போர்க்குரல் தொடுத்த அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் வீட்டில் ஒருவருக்கு நடந்த சம்பவம்போல இதை கருதி செயல்பட்டது. இதில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், அவரது உதவியாளர்களும், உயர் அதிகாரியும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் கிடைத்தவுடன், அவரை முதலில் கட்சி பதவியில் இருந்து நீக்கிய அ.தி.மு.க. தலைமை, அடுத்து அமைச்சர் பதவியில் இருந்தும் தூக்கிஎறிந்தது. அந்த துறையின் தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகளின் மத்தியிலும் ஒரு அச்சம் பிறந்துவிட்டது. செந்திலின் வாக்குமூலம் முத்துக்குமாரசாமியின் மரணத்துக்கு காரணமாக வெளிவந்த செய்திகளையெல்லாம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற திருச்சி அரசு மருத்துவமனை உள்ளுறை மருத்துவர் டாக்டர் நேரு, அரசியல்வாதிகளின் தொல்லையால்தான் இந்த முடிவை எடுத்தேன் என்றது இந்த பரபரப்பின் வேகத்தை கூட்டியுள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்களின் நியமனத்திலும், இடமாறுதல்களிலும், பதவி உயர்வுகளிலும் நடக்கும் ஊழல்தான் அரசு நிர்வாகத்தில் ஊழலை பெருக்கெடுத்து ஓடச்செய்துவிடுகிறது. தாங்கள் கொடுத்த பணத்தை எப்படியும் மீட்டே தீரவேண்டும் என்ற வெறியில் முதலில் பணம் வாங்கத்தொடங்கும் அரசு ஊழியர்கள், பிறகு ருசிகண்ட பூனைகளாக மாறி ஊழலிலேயே திளைத்துவிடுகிறார்கள். இதையெல்லாம் தடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாதான் லோக்பால் மசோதா. ஆண்டாண்டுகாலமாக சொல்லப்பட்டு வந்தாலும், அன்னா ஹசாரே போராட்டத்துக்குப் பிறகுதான், பியூன் முதல் பிரதமர் வரை யார் மீதும் ஊழல் புகார் கொடுப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் வகைசெய்யும் லோக் பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பும் ஏற்படுத்தப்படவேண்டும். அப்படி ஒரு அமைப்பு இருந்தால் முத்துக்குமாரசாமி போன்றவர்கள் இப்படி தற்கொலை செய்யவேண்டியது இல்லை. அங்குபோய் புகார் கொடுத்து இருக்கலாம். எனவே, ஒரு அமைச்சரையே கைது செய்த தமிழக அரசு, உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பையும் அமைத்து, ஊழலை ஒழிக்க அசுர வேகம் எடுக்கவேண்டும். இனியும் யாரும் இப்படி முத்துக்குமாரசாமி போல தற்கொலை செய்துகொள்ள இடமளிக்காமல், என்னுடைய மனக்குறையை சொல்வதற்கு ஒரு அமைப்பு இருக்கிறது, அங்குபோய் நான் புகார் செய்வேன், எனக்கு நீதி கிடைக்கும் என்ற நிலையை அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்த லோக் ஆயுக்தாதான் சிறந்த வழி.

சமுதாய அக்கறையும் வேண்டும்

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு விடுக்கும் சிறிய வேண்டுகோள் என்னவெனில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது சிறிதளவாவது சமுதாய அக்கறையும் இருக்க வேண்டும் என்பதே.

இன்றைய நகர இளைஞர்களில் 100-க்கு 99 சதவீதத்தினர், ஏன்... 100-க்கு 100 சதவீதத்தினரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று எந்த அயல் நாட்டில் இருந்தாலும் "ஸ்கைப்' தொழில்நுட்பம் மூலம் நேருக்குநேர் பேசிக்கொள்கின்றனர்.

முகநூல் (பேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), சுட்டுரை (டுவிட்டர்) என இன்றைய இளைஞர் சமுதாயம் புகுந்து விளையாடுகிறது. இதன் மூலம், தங்களது கருத்துகளை எளிதில் தெரிவித்து விடுகின்றனர்.

கிராமப்புற இளைஞர்களும் இந்த சமூக வளைதளங்களின் வலைவீச்சுக்குத் தப்பவில்லை. அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் நமது இளைஞர்களை வளைத்துப் போட்டுவிட்டன.

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் செய்தித்தாள்களும், அதை விட்டால் வானொலிப் பெட்டியும் மட்டுமே காண முடியும். ஆனால், இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

கையில் ஆண்ட்ராய்டு எனப்படும் அதிநவீன வசதிகளைக் கொண்ட செல்லிடப்பேசி இல்லாத கிராமத்து இளைஞரைக் காண முடியாது.

ஆனால், அப்படிப்பட்ட அந்த இளைஞர் சமுதாயம் இதுபோன்ற சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்துகிறதா என்றால் அங்கு நிச்சயமாக ஒரு கேள்விக்குறி விழத்தான் செய்கிறது. காரணம், சமூக வலைதளங்கள் அந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆபாசப் படங்களை அனுப்புவது, அடுத்தவர் மனம் புண்படும்படியாகக் கருத்துகளை வெளியிடுவது, பிரபலங்களை விமர்சனம் செய்வது, அரசியல்வாதிகளை அநியாயத்துக்கு காலை வாருவது என சமூக வலைதள பிரியர்களின் விமர்சனங்களுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய் விட்டது.

இன்னும் சிலர், திரைப்படத்தைப் பார்க்காமலேயே நண்பர்கள் சொல்வதைக் கேட்டோ அல்லது தனக்குப் பிடிக்காத நடிகராக இருந்தாலோ அந்தத் திரைப்படம் மொக்கை, கடி, சுமார் ரகம் என "ஸ்டேட்டஸ்' போடுகின்றனர்.

உண்மையிலேயே அது நல்ல படமாக இருந்தாலும், இவர்களின் விமர்சனத்தால் அந்தப் படம் தோல்வியடைந்து விடுகிறது. இதனால், கோடிகளைக் கொட்டி அந்தத் திரைப்படத்தை எடுத்தவர் தெருக் கோடிக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

அதேபோல, கிரிக்கெட்டில் ஒரு வீரர் சரியாக விளையாடாவிட்டால், அதற்குக் காரணம் அவரது காதலிதான் என்று தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சனம் செய்கின்றனர். இதனால், அந்த வீரர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார் என்பதைப் பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை.

இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் பணியை அறப் பணியாகக் கொண்ட ஆசிரியர்களும், கண்ணியமிக்க காவல் துறையில் பணிபுரிபவர்களும்கூட இந்த சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தேர்வறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஓர் ஆசிரியர், பிளஸ் 2 கணித வினாத்தாளை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சல் மூலம் பிற ஆசிரியர்களுக்குப் பரப்புகிறார்.

சென்னை காவல் துறையில் உயர் அதிகாரி ஒருவர் பெண் காவலரிடம் பேசியதைப் பதிவு செய்து கட்செவி அஞ்சல் மூலம் பரப்புகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால்தான் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நீதிமன்றம் கடிவாளம் போட்டது. அதாவது, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது அத்துமீறி செயல்படக் கூடாது; அடுத்தவர் மனம் நோகும்படி, தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யக் கூடாது; எதற்கும் ஒரு வரையறை உண்டு என்ற ரீதியில் சமூக வலைதளப் பிரியர்களின் கையைக் கட்டிப்போட்டது நீதிமன்றம்.

13 வயதுச் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2013 மார்ச் 24-ஆம் தேதியே தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. இதனால், சமூக வலைதளப் பிரியர்களின் கொட்டம் கொஞ்சம் அடங்கத்தான் செய்தது.

இந்த நிலையில்தான், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கான கட்டுப்பாடுகளை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைப் பொருத்தவரை இது ஒருபுறம் வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், அதன் முழு பலனும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணம், நோக்கம், சிந்தனை ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது.

குறிப்பாக, சிலர் இதுபோன்ற சமூக வலைதளங்களை பல நன்மைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். அதாவது, விபத்தில் சிக்கியவருக்கு ரத்த தானம் செய்யக் கோருவது, உடலுறுப்பு மாற்றம் தேவைப்படுபவர்களுக்கு உதவக் கோருவது என நல்ல பல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக, சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தாமோதரன்- சுந்தரி தம்பதியரின் மகன் சிவமணி (23), தனது 7 வயதில் பெற்றோரைத் தொலைத்தார்.

16 ஆண்டுகள் கடந்த நிலையில், தனது பெற்றோரைக் கண்டறிய விரும்பிய அவர், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் தகவல் கொடுத்தார். விளைவு நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பெற்றோருடன் இணைந்து விட்டார்.

எந்த ஒரு விஷயமானாலும், அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அன்னப் பறவை எப்படி பாலில் உள்ள தண்ணீரை விட்டுவிடுகிறதோ அதுபோல நாமும் சமூக வலைதளங்களில் தவறான செயல்பாடுகளைக் கைவிட்டு நல்லவற்றுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

AICTE cracks whip, denies approval for 588 colleges

The All India Council for Technical Education (AICTE) has denied 588 technical institutions across the country approval to run various programmes. Bad infrastructure, shortage of faculty and poor academic performance are the main reasons, people involved in the approval process said. Thirty-one of these institutions are in Tamil Nadu.
Technical institutions across the country , including engineering, polytechnic, management and pharmacy colleges, have to apply for approval from the AICTE every year. The colleges have to upload the details on a portal, which are verified by the apex body . The approval is mandatory for technical institutions to commence a new academic year.
When technical institutions sought approval for their courses for the academic year 2015-16, the AICTE found that 588 institutions did not satisfy the norms. “This is a routine process and every institution is expected to upload relevant documents while applying for approval. If documents pertaining to any norm are not available or not satisfactory , the application is rejected,“ an AICTE official said.
Asked about the reasons, the official said most institutions did not satisfy the infrastructure norms or were short on faculty . “From 2011-12 to 2014-15, many institutions have applied for an increase in intake. We have found problems like shortage of faculty and lack of enough classrooms and laboratories in many of the colleges,“ the official said.
Uttar Pradesh tops the list with 107 institutions being denied approval, followed by Maharashtra with 88. Tamil Nadu, the state with the high est number of technical institutions in the country , has 31 institutions that have been denied approval.
Principal of one of these colleges in Tamil Nadu said, “The demand for the course was depleting, and last year we had applied to reduce the intake. This year we have asked the AICTE to scrap the department itself.“
While there are some top institutions on the list, experts say it is because one of their courses has been denied approval. Educational consult ant J P Gandhi said, “It is not only the college infrastructure and faculty shortage that matter. Performance of faculty , recruitment of fresh faculty , implementation of biometric attendance system for faculty and research activities are also considered. Some institutions think if they have the required number of teachers it is enough. But, AICTE now looks at yearly performance too.“
Experts say this is an indication of AICTE's attempts to improve quality in engineering education.

Thursday, April 9, 2015

MUHS told to accept exam forms

PUNE: The Bombay high court has directed the Maharashtra University of Health Sciences (MUHS) to accept the examination forms of as many as 45 postgraduate Masters in Dental Surgery (MDS) students, who were admitted against minority quota seats by the M A Rangoonwala Dental College here in 2014-15 on the basis of an institutional level common entrance test (CET) held on February 9, 2014.

In an ad-interim relief granted on April 1, the bench of Justices Anoop Mohta and K R Shriram directed the MUHS to approve the title and synopsis and accept the thesis of the 45 admitted students.

It also directed the university to accept their examination forms, issue them hall tickets, allow them to appear for exams, declare their results and issue them mark lists to enable them to pursue further studies.

On February 10, the Pravesh Niyantran Samiti (PNS) had expressed its inability to approve admissions of these students and on March 23, the MUHS had refused to accept their exam forms. Incidentally, the admissions were effected on the basis of the PG-CET that was allowed by the high court through an interim order passed on February 4, 2014.

Since 2013-14, the Rangoonwala College run by the Maharashtra Cosmopolitan Education Society, a Muslim minority institution headed by educationist P A Inamdar, is engaged in a legal dispute with the PNS on whether there is any provision for a separate entrance test for minority institutions in view of the Supreme Court judgment in 2003 in the Islamic Academy of Education vs State of Karnataka.

The apex court, in that case, had dealt with the rights of minority institutions.

In November 2013, the PNS had refused permission to the college to conduct the PG-CET on the grounds that such a separate CET was against the SC orders and that the 231 other minority institutions in the state would make similar demands. The college then moved the high court against the PNS order by pointing out that it was conducting the CET with the Samiti's clearance since 2007. This petition is pending final disposal.

After the PNS rejected its application for approval of the 2014-15 MDS admissions, Inamdar moved a civil application as part of the petition pending before the court. The lawyers appearing for PNS argued on April 1 that the Samiti was not concerned with checking, controlling or approving admission of such students.

The bench, however, observed that the college had conducted the PG-CET and admissions based on the court's order. "There is no reason at this stage to hamper the students' career for the controversy so raised and specifically when considering that submissions raised by the PNS based upon the SC judgment in Islamic Academy and the earlier orders passed by this court as well as SC, this court has only granted limited prayers."

The bench pointed out that considering the arguments of the PNS vis-a-vis SC orders, it had granted only limited prayers to the extent of conduct of CET and admissions. The larger issues are still kept open. "The aspect of grant of orders passed by this court was totally overlooked. There is nothing on record to show that the PNS has no authority to admit such students. The petitioners as well as students cannot be at the eleventh hour confronted with such a situation where all are helpless in spite of the fact that this court has granted permission to petitioners to conduct the course based upon the earlier orders passed by this court."

The Domino effect of official suicides in TN..TIMES OF INDIA CHENNAI EDITION

It was around 9 pm when the doctor got a call from a young IAS officer serv ing in a central district in Tamil Nadu seeking an appointment. At the bureaucrat's residence, his officer's wife, visibly upset, started complaining about the deteriorating health of her husband. "They (politicians) are neither allowing him to work, nor letting him in peace,'' she told the doctor who prescribed a few pills and suggested some de-stressing practices. A few months after the incident, the bureaucrat sought for a transfer and went to the Central service. This incident happened a few years ago. But government officers say that there could be dozens of similar episodes before and after that.

While the image of the average babu - a pen pusher given to indolence and the cause of much of the problems plaguing India - continues to ring true, the ones that tend to do honest work are increasingly under pressure in Tamil Nadu. While the flexible and the weak-kneed succumb to the pressures the upright ones take on the powers that be. But honest officers caught in between like S Muthukumarasamy go through a nightmare unable to take the pressure from their political bosses to violate rules to favour their acolytes.

Those unable to withstand the pressure resort to suicide like Muthukumarsamy . This year there have been at least three other well publicised complaints of political interference taking a toll on government officials.

Psychiatrists say suicides can have a domino effect."When people suffering from prolonged severe depression read about suicides, they will start assuming that suicides are the solution to escape from their problems,'' said K Sasikala, another psychiatrist.

Political intervention in transfers, promotions and appointments has reached its peak in the state,'' says All India State Government Employees' Confederation general secretary K Balasubramanian. Those failing to follow politicians' di to bend rules suffer transfers, punishment postings and humiliation."You will not be left alone if you are honest,'' says a senior bureaucrat. This of ficer learnt it the hard way when even his subordinates refused to obey him after he started turning down orders from a certain minister to bend rules. Proposals mooted by the officer were turned down or put in the backburner. State president of Tamil Nadu State Revenue Officials Association B K Sivakumar says political meddling is rampant in transport, revenue, police and education departments though prevalent in other departments too."There are mediators in every district. The moment an officer gets ready to fill vacancies in his department, someone identifying himself as minister's PA will telephone you. Subsequently , the officer will receive a list of names written in a paper. It will not be a letterhead nor will it have a signature to trace the origin,'' Sivakumar said.

If the officer fails to accommodate the list, he will receive calls from people associating themselves to the powerful. "Those not falling in line would face transfers,'' Sivakumar said.

A revenue officer in his 50s said he was abused with swear words in his office by a person close to a political bigwig for refusing to entertain a request during his stint in Madurai. "The police did not register a case based on my complaint. Worse I was humiliated by the police. Even staff in my department sidelined me,'' he said. He was later forced to withdraw the complaint.

"Right from preparing a list of beneficiaries for old age pension scheme to awarding contracts, one would face pressure. But when things go wrong and the public get angry , the politicians will blame the officer and punish him,'' he said.

Officials point out that when the government changes there was additional pressure on the staff to cancel appointments and contracts approved by the previous government. An officer claimed that there were attempts to order a vigilance raid in his house, after he took on a powerful politician.

Government staff say they could sense depression and stress rising among employees. However, they are pessimistic that much can be done to end political intervention."All we can do is stage protests. A change of mind among politicians is the only solution,'' says Tamil Nadu Government Employees' Union State president Ku Paul Pandian.

மாணவர் எதிர்காலம் யார் கையில்?



தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. இது உண்மையா? உண்மை போன்ற தோற்றமா? எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வை சுமார் 8.43 லட்சம் பேர் எழுதினர். 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் முறைகேடுகளைக் கண்காணிக்க பறக்கும் படைகள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்கள் துண்டுச்சீட்டு வைத்திருத்தல், பார்த்து எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை தேர்வு எழுத முடியாது. இதுதவிர, ஆள் மாறாட்டத்தைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

"கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா?' என்பார்கள். அதுபோல எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி தவறுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவரை கண்டும் காணாமலும் நடந்தவையெல்லாம் இப்போது கண் எதிரிலேயே நடக்க ஆரம்பித்து விட்டன.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில பெரிய தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை உருவாக்கி கல்வி வணிகத்தைச் சிறப்பாகச் செய்து வருவதன் ரகசியம் இப்போது அம்பலமாகியிருக்கிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் தரும் பணத்துக்கும், தங்கக் காசுகளுக்கும் கல்வித் துறையும், ஆசிரிய சமுதாயமும் சோரம் போவது பெரும் சோகமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் "பிளஸ் 2' கணிதத் தேர்வின்போது செல்லிடப்பேசி மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) சக ஆசிரியர்களுக்கு அனுப்பி விடையைப் பெற்று மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்களைப் பறக்கும் படையினர் கையும், களவுமாகப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண், 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது வழக்கம். இதற்காக சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு முறைகேடாக உதவுவதாக பரவலாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அதே பள்ளி ஆசிரியரைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது, தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தடை என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இவ்வளவு விதிகளும் இந்தப் பள்ளியில் மீறப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஓர் ஆசிரியை உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டக் கல்வி அலுவலர் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது கல்வித் துறைக்கும், ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாபெரும் இழுக்காகும்.

இதேபோன்ற புகார் கடந்த ஆண்டும் எழுந்தது. சில அரசுப் பள்ளி ஆசிரியர்களும், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் புகார் எழுந்தபோது கல்வி அலுவலர் மறுத்தார்.

இந்நிகழ்வு மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது. மேலும், வினாத்தாள் வெளியானதால் பிளஸ் 2 கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மற்றப் பாடத் தேர்வுகள் மட்டும் ஒழுங்காக நடந்திருக்குமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 1,500 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒசூர் கல்வி மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் அளித்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இப்போது புகார் கூறப்பட்டுள்ள 2 ஆசிரியர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

அப்படியிருக்கும்போது அவர்கள் எவ்வாறு தேர்வுக் கண்காணிப்புப் பணியில் இடம்பெற்றார்கள் என்பது பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். இதுபற்றி விசாரணை செய்து கல்வித் துறைக்குச் சமர்ப்பித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Dinamani

By உதயை மு. வீரையன்

மாவட்டக் கல்வி அலுவலக ஆணை ஏதும் இல்லாமல் ஆசிரியர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் எப்படி ஈடுபட முடியும்? அதே பள்ளியின் கணித ஆசிரியர், பள்ளி நிர்வாகம், கல்வித் துறையின் அனுமதியின்றி தேர்வுப் பணியைக் கண்காணிக்க முடியுமா? அப்படியே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டாலும் இப்படிப்பட்ட மாபெரும் தவறுகள் செய்யக் காரணம் வேண்டுமல்லவா?

அரசுப் பள்ளி ஆசிரியர்களில் சிலர் இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் தேர்வுக் கண்காணிப்பாளர்களாகச் செல்ல ஆர்வம் காட்டுவதாகவும், இதற்காக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ள சிலரது ஆதரவுடன் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்குப் பணியாற்ற ஆணை பெறுவதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக இந்த ஆசிரியர்களுக்குப் பெருந்தொகை அன்பளிப்பாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய ஒசூர் தனியார் பள்ளி, பொதுத் தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இடம் பிடித்து வருகிறது. இதனால், பெற்றோர் கூடுதல் பணம் கொடுத்து அப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால், மற்ற தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளால் கல்வி வணிகமாகிப் போனதால் தொழில் போட்டிகளும் பெருகிவிட்டன. மாணவர்கள் வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இதற்கு உழைப்பு மட்டுமே போதாது என்பதால் குறுக்கு வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கல்விச் சந்தை சீரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு ஆங்காங்குள்ள கல்வித் துறையினரும் விலை பேசப்பட்டு துணை போகின்றனர்.

இதனால், மாநிலம் முழுவதிலும் இருந்து, பணம் படைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவம், பொறியியல் கனவுகளோடு இப் பள்ளிகளில் சேர்க்க படை எடுக்கின்றனர். அதற்காக அந்த ஊர்களில் வீடுகள் எடுத்துத் தங்கியிருக்கும் வெளியூர் பெற்றோர்களைக் காணலாம்.

இந்தப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துவிட்டால் எப்படியாவது உயர் கல்விக்குத் தேவையான மதிப்பெண்களைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை வளர்ந்துவிட்டது.

உண்மை, ஒழுக்கம், பண்பாடு எல்லாவற்றையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது எப்படியாவது மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும்; உயர் கல்வி பயின்று மருத்துவராகவும், பொறியாளராகவும் வெளிவர வேண்டும்.

சமச்சீர்க் கல்வி யாருக்கு வேண்டும்? அண்மைப் பள்ளி, பொதுப் பள்ளி பற்றிக் கவலையில்லை. போட்டிகள் மிகுந்த இந்தச் சமுதாயத்தில் எப்படியாவது வெற்றி பெறுவதே பெரும்பாலான பெற்றோரின் நோக்கமாக இருக்கிறது.

இந்த முடிவில்லாத ஓட்டத்தை யாரால் தடுக்க முடியும்? இந்தத் தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் வேண்டுமட்டும் பெருந்தொகை பெற்றுக் கொண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் எவ்வளவு முயன்றாலும் இவர்களோடு போட்டி போட முடியுமா?

இரவு, பகலாகக் கடுமையாக உழைத்துப் படித்து நேர்மையுடன் தேர்வு எழுதும் அந்த மாணவர்கள் இதுபோன்ற மோசடிகளால் அடைவது ஏமாற்றம்தான். இளம் வயதில் ஏற்படும் இந்த ஏமாற்றம் அவர்களை எங்கே கொண்டு போய்விடும் என்பதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வின்போது இந்தச் சர்ச்சை தொடர்கிறது. சில ஆசிரியர்களும், சில கல்வித் துறை அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையே, ஏன்? பணம் பாதாளம் வரை பாய்கிறதா?

கல்வியின் நோக்கமே மனிதர்களை உருவாக்குவதுதான். ஆனால், இப்போது மதிப்பெண்களை உருவாக்குவது என்று ஆகிவிட்டது. இந்தத் தேர்வு முறையினை மாற்றியமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் காலம் காலமாக கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். யார் செவியிலும் விழவில்லை. இந்தப் பூனைக்கு மணிகட்டுவது யார்?

இந்த மனப்பாடக் கல்வி நல்ல மனிதர்களை உருவாக்காமல் நகல் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. சிந்திக்கும் அறிவையே மழுங்கடித்து விடுகிறது. இவர்கள் படைப்பாளிகளாக மாறாமல் படிப்பாளிகளாகவே மாறிவிட்டனர்.

இதனால்தான் நம் மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். நம் நாட்டில் உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்கள் உருவாகாமல் போனதற்குக் காரணமும் இதுதான்.

"சிந்தனை செய்ய ஆரம்பிப்பது மிகவும் சுலபமான காரியம் அல்ல; ஆனால் மனிதன் ஒருமுறை சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், பிறகு அவன் சிந்திக்கும் பழக்கத்தைக் கைவிடமாட்டான்; மாணவன் உலகத்தையும், இயற்கையையும், பூமியின் மேல் உள்ள பல பொருள்களையும் ஊடுருவிப் பார்த்துக் கவனித்து பிறகு தனக்குத் தானே சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்...'' என்று கல்வியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் ரூசோ கூறுகிறார்.

மனிதர்களை மட்டுமல்ல, மாணவர்களையும், சிந்திக்கவிடாமல் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளைத் திணிக்கும் போக்கே எங்கும் தொடர்கிறது. இதனைக் கல்வியாளர்களும், உளவியல் வல்லுநர்களும் எதிர்க்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பாடங்களைக் கற்கும் போதுதான் அவர்களைச் சிந்திக்கச் செய்ய முடியும் என்பது அவர்கள் கருத்து.

"நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் முடிவு செய்யப்படுகிறது...'' என்று கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இந்த மாணவர்களின் தலைவிதி எங்கே, யாரால் முடிவு செய்யப்படுகிறது என்பதுதான் தெரிய வேண்டும்.

ஒன்பதை வெட்டினால் ஒன்றையாவது நடு! By இடைமருதூர் கி.மஞ்சுளா



நம் முன்னோர் மொழிந்த "ஒன்றைப் பிடுங்கினால் ஒன்பதை நடு' என்கிற வாசகத்தை நாமெல்லாம் மறந்துவிட்ட காரணத்தால்தான் உலகம் இன்றைக்கு வெப்ப மிகுதியால் தாக்கப்பட்டு, ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் வெப்பத்தால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

காரணம், ஒன்பதைப் பிடுங்கினோம்; அதற்கு மேலும் பிடுங்கிக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், ஒன்றைக்கூட நம்மால் நட முடியவில்லை. அதை நடுவதற்கு இன்றைக்கு நமக்கு இடமுமில்லை; எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகிக் கொண்டிருப்பதனால்...

உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டிருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்களை மட்டும் குறிப்பிடலாம்.

முதல் காரணம், காடுகளில் உள்ள மரங்களை அழித்து, மழை பொழிய விடாமல் தடுப்பது; இரண்டாவது, சாலை, தொழிற்சாலை, கட்டடங்கள் போன்றவற்றைப் புதிது புதிதாக அமைக்கிறோம், குடியிருப்புகளை உருவாக்குகிறோம் என்கிற பெயரில் நாட்டில் உள்ள மரங்களையும் வயல்களையும் அழித்து வருவது.

சங்க காலம் தொட்டு இன்றுவரை மரங்களை தெய்வமாக வழிபடும் மரபு தமிழருடையது. வேம்பு, அரசு, ஆல் எனப் பலவகை மரங்களை, அவை தரும் பலன்களைக் கருத்தில் கொண்டு பூஜித்து, வழிபட்டு வருகின்ற மரபு நம்முடையது.

சில தெய்வீக மரங்கள்தான் இத்தமிழ் மண்ணுக்குப் பல மகான்களை - ஞானிகளை அடையாளம் காட்டி, சமயங்களையும் மதங்களையும் தழைத்தோங்கச் செய்து, அவர்களுக்கு ஞானம் போதித்து, ஞானம் தரும் மரங்களாக இருந்துள்ளன.

சைவ சமயத்தின் தலையாய குறிக்கோளான அன்பையும், அறிவையும் உணர்த்துவதற்காக அவதாரம் செய்த வாதவூரடிகளுக்கு, திருப்பெருந்துறை என்ற தலத்தில் உள்ள "குருந்த மர'த்தடியில் ஞானம் கிடைத்தபோதுதான் அவர் "மாணிக்கவாசகர்' ஆனார்; பெளத்த மதம் சிறந்தோங்க அவதரித்த சித்தார்த்த கெளதமர் என்பருக்கு பிகாரில் உள்ள "கயை' என்ற இடத்தில் இருந்த "போதி' மரத்தடியில் ஞானம் கிடைத்தபோதுதான் அவர் "புத்தர்' ஆனார்.

சமண மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய வர்த்தமானருக்கு "சாலா' என்ற மரத்தடியில் ஞானம் கிடைத்த போதுதான் மாபெரும் ஜைனத் துறவியான "மகாவீரர்' எனப் போற்றப்பட்டார்.

இப்படி மணிவாசகருக்கு "குருந்த' மரமும், புத்தருக்கு "போதி' மரமும், மகாவீரருக்கு "சாலா' மரமும்தான் ஞானம் தரும் மரங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. அதனால்தான் இன்றைக்கும் அவை போற்றப்படுகின்றன.

காற்றில் இருக்கும் வெப்பத்தையும் அசுத்தக் காற்றையும் தாம் வாங்கிக்கொண்டு, உலகை ஒருசேர குளிர்விக்கும் ஒரே குளிரூட்டி இயந்திரம் மரங்கள்தாம். இன்றைக்கு நமக்குப் பயன் தரும் பலவகை மரங்களை நம் முன்னோர் நட்டிருக்காவிட்டால், நாம் நிழலின் அருமையையும் அதன் தண்மையையும் உணர்ந்திருக்கவே முடியாது.

சமீபத்தில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 8,000 வீடுகள் மட்டுமே உள்ள ஒரு சிறிய கிராமமான, "பிபிலாந்திரி'யில் நிகழ்ந்துள்ளது. அக்கிராமத்தின் தலைவரான ஷியாம் சுந்தர் பலிவாலின் மகள் இளம் வயதில் இறந்துவிட்டதால், அவள் நினைவாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி ஒரு குழுவை (கமிட்டி) அமைத்துள்ளார்.

Dinamani

அதன்படி, அந்தக் கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்கள் நடப்படுகின்றன. ஓராண்டில் 60 பெண் குழந்தைகள் பிறந்தால், 6,660 பயன்தரும் மரங்கள் நடப்படுகின்றன.

அந்த மரங்களை பெண்களே பராமரிக்கும் வாய்ப்பையும் தந்து, அதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் இக்குழுவினர் ஏற்படுத்தித் தருகின்றனர்.

அது மட்டுமல்ல, அந்தப் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அந்தக் குழுவின் சார்பில் அந்தப் பெண் குழந்தைகளுக்கு ரூ.21 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் தாய்-தந்தையரின் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து அப்பெண் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் சேமித்துவிட வேண்டுமாம்.

அந்தப் பெண் 20 வயதாகும்போது மரம் வளர்வது போல இந்தத் தொகையும் வளர்ந்து அந்தப் பெண்ணின் கல்விக்கும், திருமணத்துக்கும் உதவுகிறது.

இந்த நடைமுறைகளை ஒவ்வொரு கிராமமும் பின்பற்றினால் என்ன?

சங்கப் புலவர் ஒருவர், மரத்தோடு தொடர்புடைய மிக நுட்பமான செய்தி ஒன்றை நற்றிணையில் (பா.172) பாடியுள்ளார். தலைவன்-தலைவி இருவரும் ஒரு பூஞ்சோலைக்குள் நுழைகின்றனர். அங்கே ஒரு புன்னை மரம் இருக்கிறது. அதன் அடர்ந்த கிளைகளின் நிழலில் அமர்ந்து காதல் மொழிகள் பேச ஆசைப்படுகிறான் தலைவன். ஆனால், "இந்த இடத்தில் வேண்டாம்' எனத் தலைவி வெட்கப்பட்டு மறுக்கிறாள்.

"என்ன காரணம்?' என்று கேட்கிறான் தலைவன். "இந்தப் புன்னை மரம் எனக்கு தமக்கை உறவாகும்' என்கிறாள். "மங்கைக்கு மரம் சகோதரியா?' என அவன் கேட்க நினைப்பதற்குள் அவளே சொல்கிறாள்:

"என் தாய் இளம் வயதில் இச்சோலையில் வந்து விளையாடுவாளாம். அப்போது கேட்பாரற்றுக் கிடந்த ஒரு புன்னை விதையை இந்த மண்ணில் ஊன்றி வைத்திருக்கிறாள். அவள் கன்னிப் பருவம் எய்தியபோது இந்த மரமும் வளர்ந்துள்ளது. என் அன்னை வளர்த்ததால் இந்த மரம் எனக்கு சகோதரி உறவு ஆனது. அதனால், என் சகோதரியின் முன்பு உன்னோடு காதல் கதை பேசுவது எவ்வாறு? எனக்கு நாணம் உண்டாகாதா?'' என்கிறாள்.

இப்படி அஃறிணையைக்கூட உயர்திணையாக்கிக் காட்டி, மரங்களுக்குப் பெருமை சேர்த்து மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

ஆகவே, நாம் ஒன்பதைப் பிடுங்கினால் ஒன்றையாவது நட்டு, நம் சந்ததியினரை உலக வெப்ப மிகுதிக்கு ஆளாக்காமல் பாதுகாப்போம் - நாமும் பயன் பெறுவோம்.

புது அரசு மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு : வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை?

அரசு ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.,யின் குழு, நேற்று திடீர் ஆய்வு நடத்தியது. முறையான அனுமதி பெற்று, திட்டமிட்டபடி, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவங்கும் என தெரிகிறது.சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, பிரமாண்டமாக, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, 2014 பிப்., 22 முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு, 'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 100 மாணவர்களை சேர்க்கும் வகையில், புதிய மருத்துவக்கல்லூரி துவக்கப்படும்' என, அரசு அறிவித்தது. 200 கோடி ரூபாயில், ஏழு அடுக்கு மாடி கட்டடங்களின் கட்டுமானப் பணி நடந்தது.இந்தப்பணிகள் முடிந்து, செயல்படத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன், மருத்துவக்கல்லூரி தயாராக உள்ளது.மூன்று பேர் கொண்ட, எம்.சி.ஐ., குழு, நேற்று ஆய்வுக்கு வந்தது.புதிய மருத்துவ கல்லூரியில் உள்ள வசதிகள்; இதற்காக உருவாக்கப்பட்ட, கஸ்தூரி பா அரசு பொது மருத்துவமனையில், நோயாளிகள் வருகை, சிகிச்சை வசதிகள், பணியாளர் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தியது.மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, கல்லூரி முதல்வர் சாந்திமலர் உள்ளிட்டோர், பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஆய்வுப்பணி நேற்றுடன் முடிந்தது.இந்த குழுவினர் தரும் அறிக்கை அடிப்படையில், எம்.சி.ஐ., முறையான அனுமதி அளிக்கும் என தெரிகிறது.மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''கல்லூரி, செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. எம்.சி.ஐ., ஆய்வு முடிந்துள்ளது. திருப்திகரமாக அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால், நிச்சயம் செயல்பாட்டு அனுமதி கிடைக்கும். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த, அனைத்து முயற்சிகளையும், அரசு எடுத்து வருகிறது,'' என்றார்.- நமது நிருபர் -

விண்ணப்பங்கள் குவிந்ததால் குலுக்கல் முறையில் ‘எச் 1 பி’ விசா அமெரிக்கா முடிவு

logo

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலை நிமித்தமாக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து 3–வது ஆண்டாக இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக குவிந்து விட்டன. அதுவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட 5 நாட்களுக்குள் குவிந்து விட்டன.

இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போன்றே 65 ஆயிரம் ‘எச் 1 பி’ விசா வழங்கப்பட உள்ளது.

மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும்.

தற்போது மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதை அடுத்து, இரு பிரிவிலும் கணினிவழி லாட்டரி குலுக்கல் நடத்தி விசா வழங்கப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு பணிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

சிவப்பு ரத்தம் குடித்த செம்மரக்கட்டை

கடலில் மட்டுமல்ல, காடுகளில் எல்லைத்தாண்டி போனாலும், உயிருக்கு ஆபத்து என்பதை நிரூபிக்கும் ஒரு கொடூர சம்பவம் ஆந்திரா வனப்பகுதிகளில் அரங்கேறியிருக்கிறது. செம்மரக்கட்டைகளை வெட்டிக்கொள்ளையடித்ததாக தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்கள், ஆந்திர மாநில போலீசைச் சேர்ந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களில் எங்கும் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 20 பேர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள சிலருக்கு மரம் வெட்டுவதில் உள்ள லாவகம் வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பார்கள். சாதாரண ரம்பத்தை பயன்படுத்தியே மரங்களை வெட்டி, பட்டையை உரித்து, லாரிகளில் ஏற்றும் வலிமை கொண்டவர்கள் என்பதால், ஆந்திராவில் உள்ள வனப்பகுதிகளில் செம்மரத்தை வெட்டி கடத்தும் தொழிலுக்கு இவர்களைத் தேடிப்பிடித்து கடத்தல்காரர்கள் இந்த வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள். இது உயிருக்கு ஆபத்தான வேலை என்றாலும், ஒருநாள் காட்டுக்குள் சென்று செம்மரத்தை வெட்டிக் கொடுத்தால் பலமுள்ளவன் ரூ.20 ஆயிரத்தை சம்பாதித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நப்பாசையில், உயிரை பணயம் வைத்து இந்த தொழிலுக்கு செல்கிறார்கள்.

இதுவரையில் பலர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் மே மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர்களும், ஜூன் மாதத்தில் ஒருவரும், ஜூலை மாதத்தில் 2 பேர்களும், ஆகஸ்டு மாதத்தில் 2 பேர்களும் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் ஆந்திர போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், இப்போதும் ஆந்திரா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் கைது செய்யப்பட்ட 1,121 தமிழக மக்கள் கடப்பா, கர்னூல், நெல்லூர், சித்தூர் மாவட்ட சிறைகளில் கைதிகளாக இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் காட்டுக்குள் போய் செம்மரம் வெட்டப் போனால் பிடித்து ஜெயிலில் போடுவார்கள், துப்பாக்கியால் சுடுவார்கள் என்ற பயமில்லாமல் இப்படி போய் மாட்டிக் கொண்டு உயிரிழந்து இருக்கிறார்கள்.

ஆந்திர அரசாங்கம் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக்கட்டைகளை ஏலம் போட்டே கடந்த டிசம்பர் மாதத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு பக்கம் தொடர்ந்து இவ்வாறு செம்மரம் வெட்டப்பட்டுக் கொண்டே இருந்தால், தமிழக காடுகளில் சந்தன மரங்களை வெட்டிச் சாய்த்த நிலை செம்மரங்களுக்கும் வந்துவிடும், அரசுக்கு வரவேண்டிய வருமானம் களவாடப்படுவது மட்டுமல்லாமல், காடுகளும் அழிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுபவர்களை சுட்டுத் தள்ள போலீசுக்கு, ஆந்திர அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அப்படி இருந்தும் சட்ட விரோதமாக மரம் வெட்டச் சென்று உயிரை இழந்துவிட்டனர். இனி மேலும் இப்படி யாரும் செம்மரம் வெட்டவரக் கூடாது, வந்தால் இதுதான் நிலை என்று காட்டுவதற்காக இந்த துப்பாக்கி சூடு நடந்தது போல தெரிகிறது. இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தி உயிரை பறித்தற்கு பதிலாக கைது செய்து இருக்கலாம், முட்டுக்குகீழ் சுட்டு இருக்கலாம், அதைத்தவிர்த்து இப்படி செய்தது மனித உரிமை மீறிய செயல், இது போலி என்கவுண்டர், சி.பி.ஐ. விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இனியும் ஜவ்வாது மலையில் இருந்து யாரும் இந்த செம்மர கடத்தல் தொழிலுக்கு செல்லாத வகையில், அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தை வழங்க பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்கள், மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்களை மத்திய அரசாங்கமும், மாநில அரசும் நிறைவேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

Wednesday, April 8, 2015

NRI couple barred from taking a flight from China to Chennai

CHENNAI: Lack of communication about the lifting of a travel ban led to officials of an airline barring a woman from the city and her husband, both US nationals, from taking a flight from Kunming, China, to Chennai, where they intended to visit the woman's mother.

The woman and her husband had to return directly to the US from China.

The Bureau of Immigration was apparently the villain of the piece, having failed to convey to airlines that the country had lifted a rule barring foreign nationals from travelling to India on a tourist visa more than once within a two-month period.

Amiya Kesavan, the woman's mother, told TOI that her daughter Kamala Kesavan Witowsky and her husband James Witowsky, both US nationals, arrived in Chennai from the US on February 25. After spending a few days in her mother's house in Chennai, Kamala and her husband took a flight to Kunming, in southwest China's Yunnan Province, where they planned to visit friends.

Trouble was waiting for the couple in Kunming airport, from where they had tickets to fly to Chennai via Kolkata on March 11, with airline staff informing them that they could not allow them to board the aircraft because of the ban on foreign nationals visiting India a second time within two months.

After missing their flight, the Wittowskys contacted officials at the Indian mission in China, who informed them that the Centre had enforced the ban in view of the Mumbai terror attack. They said the government had lifted the ban and, anyway, it had only been applicable only to citizens of Afghanistan, Iran, Pakistan, Iraq, Sudan, Bangladesh and China, and stateless persons.

Immigration officials failed to communicate to airlines that the government had revoked the ban, so officials did not allow her daughter and son-in-law to return to India, Kesavan said.

"They were stuck in China for three days before they decided to return to the US directly from China," she said. "Kamala and her husband attempted in vain to contact immigration officials in both New Delhi and Chennai. Nobody answered their calls."

As a result, she said, they could not use or cancel the tickets they booked for the flight from Kunming to Chennai via Kolkata, causing them both distress and unnecessary financial loss.

Immigration officials were not available for comment.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு 50 லட்சம் பேர் பயன் அடைவார்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல், 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு 7 சதவீதம் உயர்த்தி அறிவித்தது.

இந்த உயர்வு 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் 1–ந் தேதி அமலுக்கு வரும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி சதவீதம் 107 ஆக உயர்ந்தது.

6 சதவீதம் அதிகரிப்பு

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. 6 சதவீத அளவிற்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதன் காரணமாக தற்போது மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்ந்தது.

இந்த உயர்வு 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

50 லட்சம் பேர் பயனடைவார்கள்

இந்த உயர்வின் காரணமாக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 20 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் எனவும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிவாரண சலுகையின் கீழ் அடிப்படை சம்பளத்தில் இது 113 சதவீதமாக உயரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவகழகம் அங்கீகாரம் கல்லூரி முதல்வர் தகவல்

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

மருத்துவகழகத்தின் அங்கீகாரம்

மருத்துவகல்லூரிகளை நடத்துவதற்கு இந்திய மருத்துவகழகத்தின் அங்கீகாரம் அவசியம். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவகல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகள் இந்திய மருத்துவகழகம் தொடர்ந்து ஆய்வு நடத்தி ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. திருவாரூர் மருத்துவகல்லூரியிலும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மருத்துவ கழகம் ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கியது. இந்த ஆண்டு தொடர்ந்து 5–வது முறையாக அங்கீகாரம் வழங்குவது குறித்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடத்தியது.

மருத்துவகழகத்தின் சார்பில் மேற்குவங்காளம், அரியானா மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர்கள் தத்தா, ஷாம்சிங்க்லா, பிரிசில்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் திருவாரூர் மருத்துவ கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி, 17–ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு பணி முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு தற்போது அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக திருவாரூர் மருத்துவகல்லூரியின் முதல்வர் மீனாட்சிசுந்தரம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல் ஆய்வு

திருவாரூர் மருத்துவகல்லூரியில் தொடர்ந்து 5–வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மருத்துவகழகம் ஆய்வு நடத்தியது. ஆய்வு குழுவினருக்கு எனது தலைமையிலான மருத்துவர்கள் மருத்துவகல்லூரி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பற்றி விவரித்தோம். உள்கட்டமைப்பு வசதிகளில் திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவகழகம் திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வின்போது மருத்துவகழகம் சில வசதிகளை செய்ய வேண்டும் என சுட்டி காட்டியது. அந்த வசதிகளை செய்த பின்னர் 2–வது கட்டமாக ஆய்வு நடத்தி அதன் பின்னர் தான் மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கியது. ஆனால் இந்த ஆண்டு முதல் கட்ட ஆய்வின் முடிவிலேயே மருத்துவ கழகம் திருப்தி அடைந்து திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி விட்டது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அடுத்ததாக 2020–ம் ஆண்டு தான் மருத்துவகழகம் ஆய்வு நடத்தும்.

நன்றி

இந்த சாதனையை எட்டுவதற்கு உதவி புரிந்த உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர், மருத்துவ கல்லூரி இயக்குனர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காலை குறி வைத்திருக்கலாமே?

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள சேஷாசலம் வனப் பகுதியில் சட்ட விரோதமாகச் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கொண்டிருந்த இருபது தொழிலாளர்கள், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பவர்கள் அனைவருமே தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்குப் பஞ்சம் பிழைக்கப் போன அப்பாவி ஆதிவாசி மரம் வெட்டிகள்.

செம்மரக் கட்டைகள் கடத்தல் தடுப்புக்கான சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் என்று பரவலாக அறியப்படும் சிவப்பு சந்தன மரங்களை சட்ட விரோதமாக வெட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. அதற்காக அவர்கள் ஈவிரக்கமோ, மனிதாபிமானமோ இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமா என்று கேட்டால், சிறப்புக் காவல் படையினரின் மனசாட்சியேகூட அதை ஏற்றுக் கொள்ளாது!

செம்மரங்களை வெட்டுபவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்கள் கடத்தல்காரர்கள் அல்லர். வெளிநாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களைக் கடத்துபவர்களையும், இந்தியாவிலிருந்து நட்சத்திர ஆமைகள், தந்தங்கள், கடவுள் சிலைகள், சந்தனக் கட்டைகள் போன்றவற்றைக் கடத்துபவர்களையும் போன்றவர்கள் அல்ல இவர்கள். இவர்கள் கைது செய்யப்படலாம், தடுப்புக் காவல் படையினரால் தாக்கப்படலாம், ஆனால், நாயைச் சுட்டுக் கொல்வதுபோலச் சுட்டுக் கொல்லப்படுவது என்பது நினைத்துப் பார்க்கவே கொடூரமானதாக இருக்கிறது.

சேஷாசலம் வனப் பகுதியில் திருட்டுத்தனமாக செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தபோது அவர்களைச் சுற்றிவளைத்து சரணடையச் சொன்ன காவல் படையினரை, அரிவாளாலும், கோடாரியாலும் அந்தக் கும்பல் தாக்க முற்பட்டதாகவும், அதற்காகத் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதாகவும் காவல் துறையினர் கூறுவது உண்மையாகவே இருக்கலாம். கூலிக்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த அப்பாவிகளை ஏவி, காவல் படையினரைத் தாக்கச் சொல்லிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிப் போயிருக்கக் கூடும். காவல் துறையினர் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் தவறில்லை. ஆனால், அந்தத் துப்பாக்கிகள் காலுக்குக் குறி வைக்காமல் உயிருக்கு உலை வைத்திருக்கிறதே அதுதான் கொடூரம்!

ஆந்திர மாநிலத்தில் கடப்பா, சித்தூர், கர்நூல், நெல்லூர் மாவட்டங்களில் பரவலாக சிவப்பு சந்தன மரங்கள் வளர்கின்றன. ஏறத்தாழ 4.67 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச ஒப்பந்தப்புள்ளி மூலம் ஆண்டுதோறும் நடைபெறும் ஏலத்தில் ஆந்திர அரசுக்கு இந்த செம்மரக் கட்டைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் ரூ.1,000 கோடிக்கும் அதிகம்.

கடந்த ஆண்டு மே மாதம் இதே சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கடத்தல்காரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான செம்மரக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2013-இல் மட்டும் 2,025 டன் செம்மரக் கட்டைகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. கடந்த சில வருடங்களாக செம்மரக் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக் கட்டைகள் கடந்த டிசம்பர் மாதம் ஏலம் விடப்பட்டன.

செம்மரக் கட்டைக் கடத்தல்காரர்களுக்கும், தடுப்புக் காவல் படையினருக்கும் இடையே மோதல் நடப்பதும், காவல் துறை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதும் புதிதொன்றுமல்ல. அப்பாவி மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை கடத்தல்காரர்கள் சமயோசிதமாகப் பயன்படுத்தித் தங்களைப் பிடிக்க முற்படும் காவல் துறையினரைத் தாக்குவதும் புதிதல்ல.

2013 டிசம்பர் 15-ஆம் தேதி கடத்தல்காரர்களுக்கும் தடுப்புக் காவல் படையினருக்கும் இடையே நடந்த கடும் சண்டையின்போது, காவல் படையினரின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. இரண்டு மூத்த வனத் துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களால் கல்லால் தாக்கப்பட்டு இறந்தனர். காவல் படையினர் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். இன்னும் மூன்று பேர் தப்பி ஓடினர். அதுமுதலே, கடத்தல்காரர்களைப் பழிவாங்க வேண்டும் என்கிற வெறி தடுப்புக் காவல் படைக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

செம்மரக் கடத்தல் தடுக்கப்பட வேண்டும் என்பதிலும், கடத்தல்காரர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியாக வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து யாருக்குமே இருக்க முடியாது. அதற்காக, கடத்தல்காரர்களின் கூலிகளாக மரம் வெட்டிப் பிழைப்பு நடத்தும் ஏழை ஆதிவாசிகள் சுட்டுக் கொல்லப்படுவதா என்கிற கேள்விக்கு, இருதயத்தின் ஓரத்தில் ஈரம் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்கூட ஆமோதித்து பதிலளிக்க இயலாது.

சட்டப்படி, தற்காப்புக்காக நடத்தப்படும் என்கவுன்ட்டராகவே இருந்தாலும், இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ் சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, அவர்கள் தற்காப்புக்காகத்தான் அதிரடித் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். இந்தச் சட்டப்படியான நடவடிக்கையை, இந்தியா முழுவதுமே காவல் துறையினர் கடைப்பிடிப்பதில்லை. இந்த முறையாவது, சட்டம் முறையாகத் தனது கடமையைச் செய்யட்டும்!

பண பலமும், அரசியல் பின்புலமும் உள்ள செம்மரக் கடத்தல்காரர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்காகக் கோடாரியைக் கையிலெடுத்து மரம் வெட்டிய ஏழை ஆதிவாசிகள் கொல்லப்படுகிறார்கள். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?

Tuesday, April 7, 2015

குறள் இனிது: யாமிருக்க பயமேன்?...by சோம.வீரப்பன்



அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தீர்களா? தி.நகர் உஸ்மான் சாலையில் ஓர் பெரிய கடையில் மகேசும், அஞ்சலியும் வேலை பார்ப்பார்கள். அவர்களது மேற்பார்வையாளர் அவர்களை நேரத்திற்கு சாப்பிட விடமாட்டார், தூங்க விடமாட்டார், ஏன் பேசக்கூட விடாமல் பாடாய் படுத்துவார்.

தங்குமிடமெங்கும் குப்பை, வேர்வை, நெருக்கடி. கீழ்நிலைப் பணியாளர்களின் அவல நிலையை அப்படம் தெளிவாகப் பிரதிபலித்தது.

அடுத்து இதையும் செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள். சண்டீகரில் பெரிய வங்கியின் முதன்மை மேலாளர் அவரது உயரதிகாரிகள் தகுதி இல்லாத ஒருவருக்குக் கடன் கொடுக்கச் சொல்லி செய்த சித்ரவதை காரணமாக ரயில் முன் விழுந்து தற்கொலையே செய்து கொண்டு விட்டார்!

அட, போங்கப்பா! கடைநிலை, இடைநிலை என்றில்லை. மேல்நிலை அதிகாரிகளுக்கும் அலுவலகத்தில் ஏகப் பிரச்சனைகள் உண்டு. இன்போஸிஸ் நிறுவனத்தின் ஓர் உயர்பதவியில் இருந்த பல்கேரிய-அமெரிக்கப் பெண் அதிகாரி தனக்குப் பாலியல் தொல்லை தரப்படுவதாகப் புகார் செய்தார்.

இன்போஸிஸ் நிறுவனத்தின் இன்னுமொரு மூர்த்தி என்று புகழப்பட்ட பனீஷ்மூர்த்தி மீது தான் அந்தக் குற்றச்சாட்டு! அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருப்பது இந்த மாதிரியான தொல்லைகள்தான்!

அரசாங்கம் சட்டம் தான் இயற்ற முடியும். ஒவ்வொரு அலுவலகத்திற்குள்ளும் காவல் நிலையமா வைக்க முடியும்? பணியிடத்தில் இத்தவறுகள் நடக்க வாய்ப்பில்லாத சூழ்நிலை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத் தலைவருடையது தானே?

முறைமையோடு ஆட்சிசெய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன் அம்மக்களுக்கு இறைவனைப்போல போற்றப்படுவான் என்கிறது குறள்! இன்றைய சூழலில் நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளை பண்டைய அரசர்களுடன் ஒப்பிட்டு குறளின் பலன் பெறலாம்.

தற்காலத்தில் நிறுவனத்தில் சீரிய கொள்கை கோட்பாடுகளை வகுத்தல், அவற்றை நிறுவனமெங்கும் கொண்டு செலுத்துதல், அவை குறித்த புகார்கள் வந்தால் நெறி படுத்துதல் ஆகிய மூன்று அதிகாரங்களும் கடமைகளும் அதன் தலைவர்களுக்கே உள்ளன!

தப்பு நடக்காத, நடக்க முடியாத அமைப்பை ஏற்படுத்துவது முதல் கடமை! அமெரிக்காவில் மிராண்டா விதியின்படி ஓர் கைதியிடம் கூட “உங்களுக்கு மௌனம் சாதிக்கும் உரிமை உண்டு” என்று சொல்லிவிட்டுத்தான் விசாரிக்க வேண்டும்! அனாவசியமாகத் தொல்லை கொடுக்கும் அதிகாரிகளையும், சும்மா எரிச்சல் மூட்டி பணியாளர்களின் ஊக்கத்தைக் குறைக்கும் மேலாளர்களையும், அதிகார வரம்பை மீறும் உயரதிகாரிகளையும் கட்டுபடுத்தாவிட்டால் தினம்தினம் பிரச்சினைதான்.

வேலை வாங்குவதிலும் ஒரு தரம், தராதரம் வேண்டுமில்லையா? பணியாளர்கள் தம் குறைகள் கீழ்நிலையில் தீர்க்கப்படாவிட்டால் மேலதிகாரிகளைத் தயங்காமல் அணுகும் முறை வேண்டுமில்லையா? தப்பு செய்தவனை தப்பிக்கவிடுவது பெரும் தப்பாயிற்றே! இன்றைய உலகில் ஓர் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமாக உடனுக்குடன் எல்லோரையும் அடைந்து விடலாமே!

இங்கு தவறு நடக்காது, தலைவர் நடக்கவிட மாட்டார். மீறி நடந்து விட்டால் நீதி செய்வார் என்று பணியாளர் எண்ணும்படி நடந்து கொள்ள வேண்டியது தலைவரின் தலையாய கடமை! நல்முறை சொல்லும் திருமறை இதோ.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...