Saturday, September 26, 2015

தியாகத் திருநாள் சோகம்!


Dinamani

By ஆசிரியர்

First Published : 26 September 2015 03:09 AM IST


உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அன்பர்களுக்கு மட்டுமன்றி, அனைத்துத் தரப்பினரையும் ஆழ்ந்த வேதனைக்குள்ளாகியது மெக்கா அருகே நெரிசலில் சிக்கி, 719 பேர் உயிரிழந்திருக்கும் கோரச் சம்பவம். இந்த மரணங்களுக்குக் காரணம் இயற்கை இடர்பாடு அல்ல; மனிதத் தவறுகளே என்பதும், இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பதும் அனைவர் மனதிலும் வேதனையைக் கடந்த அறச்சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு வாரங்களுக்குள் நேர்ந்திருக்கும் இரண்டாவது துயரச் சம்பவம் இது. ஒரு கட்டுமான மின்தூக்கி சாய்ந்ததில் 109 பேர் இறந்தனர். அந்தத் துயரத்தின் வடு ஆறும் முன்பாகவே மேலும் ஒரு சம்பவம் 719 பேரை பலி கொண்டது. 800-க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தியுள்ளது.
மெக்காவில் 1987 முதலாக ஒவ்வொரு மூன்று ஆண்டு இடைவெளியில் ஒரு விபத்து நடப்பதும் அதில் சில நூறு உயிர்கள் மடிவதும் தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. 1997-ஆம் ஆண்டு தீ விபத்தில் 343 பேர் இறந்த சம்பவத்துக்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்துத்தான், 2006-ஆம் ஆண்டில் நடந்த விபத்தில் 364 பேர் இறந்தனர். அதுவும் இதே மினா பகுதியில், சாத்தான் மீது கல்லெறிதல் நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசலில்தான்.
"எங்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது' என்று மட்டுமே சவூதி அரசு சொல்கிறது. ஆனால், அண்டை நாடுகளும், பிற இஸ்லாமிய நாடுகளும் சவூதி அரசு இத்தனை மரணங்களுக்கும் பொறுப்பு என்று கண்டித்துள்ளன. அவர்களது பெருந்திரள் மேலாண்மைக் குறைபாடுதான் இந்த மரணங்களுக்குக் காரணம் என்கின்றனர்.
மெக்காவிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து வந்து, சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் பங்கேற்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டோர், பல சாலைகள் வழியாக ஒழுங்குபடுத்தி அனுப்பப்பட்டு, முக்கிய இடமான ஜமாரத் அருகே சாத்தான் மீது கல்லெறிதல் முடிந்ததும் அவர்களை மாற்று வழியாக மீண்டும் மெக்கா திரும்பும் வகையில் ஒருவழிப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே வெயில் கடுமையாக இருந்தது. 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதால், ஒவ்வொரு புனிதப் பயணியும் எவ்வளவு சீக்கிரத்தில் இந்தச் சடங்கை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்து ஓய்வெடுக்க வேண்டும் என்ற மனநிலையில், வேகமாக நகர்ந்துள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் அந்த வேகம் தடைபட்டபோது, பின்னால் அதே வேகத்தில் வந்த கூட்டம் நெருக்கியடித்தது.
ஆனால், ஏன் இப் புனிதப் பயணிகளின் வேகம் தடைப்பட்டது, அவர்களைத் தடுத்தது எது? என்பது குறித்து சவூதி அரேபிய அரசு மௌனம் காக்கிறது. உருது பத்திரிகை, ஊடகங்களின் கட்டுரைகளை, பேட்டிகளை முகநூலில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இவற்றில் ஒரு பதிவு, இந்த விபத்துக்குக் காரணம், சவூதி அரேபியாவின் இளவரசர் இந்தக் கூட்டத்தைக் கடந்து செல்வதற்காகக் கூட்டத்தைத் திசைமாறிச் செல்லச் செய்ததும், கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுமே இந்த நெரிசல் ஏற்படக் காரணம் என்று சுட்டிக் காட்டுகின்றன.
இதைப்போன்று, சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானாவில், புஷ்கரணியிலும் நெரிசல் ஏற்பட்டது. மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நதியில் நீராடி வெளியேறும் வரை, அலைமோதிய கூட்டத்தைக் காவல் துறை தடுத்து வைத்தது. இவர்கள் தங்கள் சடங்குகளை முடிக்கும்போது காவல் துறை தடுத்து நிறுத்தி வைத்த கூட்டத்தின் அளவு பன்மடங்கானது. அமைச்சர்கள் வெளியேறியவுடன், பொதுமக்களைப் போய்க்கொள்ளுங்கள் என்று ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டை விலக்கியபோது மிகப்பெரிய தள்ளுமுள்ளும், நெரிசலும், மிதிபடலும் நேர்ந்தது. பலர் இறந்துபோனார்கள். அதிகார மையங்களுக்கு வழி ஏற்படுத்தும்போதுதான் மக்கள் நெரிசலில் சிக்கிச் சாகிறார்கள் போலும்.
ஹஜ் புனித யாத்திரை ஒவ்வோர் இஸ்லாமியருக்கும் விதிக்கப்பட்ட ஐந்து கடமைகளில் ஒன்று. உலகம் முழுவதிலுமிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் வருவோர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. சவூதி அரசுக்கு இதன் மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி பல ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள். ஆனாலும், மெக்கா வரும் ஒவ்வொருவரையும் தம் மக்களாகக் கருதிப் பாதுகாக்கத் தவறிவிட்டது சவூதி அரசு.
இனி, ஹஜ் புனிதப் பயணம் பாதுகாப்பானதாக மாற வேண்டும் என்றால், சவூதி அரேபிய அரசினால் மட்டுமே இதைச் செய்ய முடியாது. அவர்கள் தற்போது நடைமுறைப்படுத்தும் பெருந்திரள் மேலாண்மை குறைபாடானது என்பதையே தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக நேர்ந்து வரும் விபத்துகள், நெரிசல் மரணங்கள் வெளிப்படுத்துகின்றன.
இத்தகைய பெருந்திரள் மேலாண்மையில் அனுபவம் உள்ளவர்கள், புதிய யோசனைகளைச் சொல்லக்கூடிய அறிவாளர்கள், அவ்வப்போது உருவாகும் சிக்கலைத் தீர்க்கும் நுழைமாண் நுண்புலம் கொண்டோரை பல நாடுகளிலிருந்தும் வரவழைத்து அத்தகைய குழுவைக் கொண்டு, புனிதப் பயணிகளை வழிநடத்தினால், இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்பது உறுதி.
பெருந்திரள் மேலாண்மை செய்ய எங்களால் இயலவில்லை என்று ஒப்புக்கொள்ளும் நேர்மைதான், எதிர்கால ஹஜ் புனிதப் பயணிகளின் அச்சத்தைப் போக்கும். உலகிலுள்ள முக்கியமான இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல் குழுவை சவூதி அரேபிய அரசே தனது தலைமையில் ஏற்படுத்த முற்படுமானால், அதைவிடச் சிறப்பு வேறொன்றுமில்லை!

Merely a family is being disturbed cannot be valid reason for setting aside a transfer order: Karnataka HC P Vasanth Kumar,TNN | Sep 25, 2015, 09.01 PM IST

BENGALURU: The Karnataka high court has said that a child studying in a kindergarten or wife in a non-transferable job and the family being getting disturbed by the same cannot be valid grounds for interfering with the transfer order of an employee.

"Merely because petitioner's child is studying in kindergarten, and merely because his wife cannot be transferred to Shivamogga, even these two grounds, much as they adversely affect the harmony of the family, cannot be valid grounds for interfering with the transfer order. The disturbances caused to a family by a transfer is but part of life. But, merely a family is being disturbed cannot be valid reason for setting aside the transfer order," Justice Raghvendra S Chauhan has observed while dismissing a petition filed by Dr Mahesh S Akashi, Assistant professor, Department of Surgery and Radiology, Canine Research and Information Centre, Timmapura,Mudhol taluk Bagalakote district.

"The transfer orders can be interfered only on the ground if they are malafides, arbitrary or at the behest of a politician or if there is any violation of the transfer policy dealing with the transfer of an employee within two years of his retirement. It is only in these limited areas the court is permitted to interfere with a transfer order." the Judge has further observed.

The petitioner, who was earlier working in Shivamogga, was transferred to Timmapura on December 4,2013. He joined the services at Timmapura on December 23, 2013. However, on June 25, 2015, he was transferred back to Shivamogga, which he challenged before the court.

UGC: Encourage admission of SC ST students Ishita Bhatia,TNN | Sep 25, 2015, 06.07 PM IST

TIMES OF INDIA

MEERUT: With 2015 being earmarked as the year of 125th birth anniversary of Dr BR Ambedkar - who gave India its constitution - the secretary of University Grants Commission (UGC) in its recent circular directed all the varsities to encourage admission of students belonging to scheduled castes and scheduled tribes. It also directed that Constitution Day be celebrated on November 26 so as to bring awareness about the Indian Constitution framed by Dr BR Ambedkar. The instructions should be followed by October 15 and UGC be informed about the same.

"To celebrate the 125th birth anniversary of Bharat Ratna, Dr BR Ambedkar, a national committee was constituted under the chairmanship of Prime Minister Narendra Modi, which has recommended that certain activities be undertaken in all the varsities under UGC," read the circular issued by Jaspal S Sandhu, secretary, UGC.

The circular stated that seminars should be organized in educational institutions, on the preamble of the Indian Constitution so as to increase the awareness of students.

"Admission of students belonging to SC/ST in private universities may be encouraged. To increase awareness about the Constitution amongst citizens, particularly children, November 26 be celebrated as 'Constitution Day' every year, as it was on this day, that the Constitution of India was adopted by the Constituent Assembly. On this day, the preamble to the Constitution may be read in schools and colleges," read the circular by Sandhu.

The national committee headed by PM Modi, includes senior ministers like Rajnath Singh, Arun Jaitley, Sushma Swaraj, M Venkaiah Naidu, Smriti Irani, Sadanand Gowda, Ram Vilas Paswan and Suresh Prabhu. As the 125th birth anniversary of Dr BR Ambedkar is being celebrated, the committee will be involved in conducting 16 major activities being undertaken by the ministry of social justice and empowerment to promote Ambedkar's ideology and philosophy. These initiatives included setting up of Ambedkar International Centre at 15, Janpath at a cost of Rs 197 crore.

The circular further stated that the universities and the colleges affiliated with them should ensure that action is taken in this regard and sent to UGC on ambedkar.ugc@gmail.com by October 15.

Friday, September 25, 2015

Mystery over Ketan Desai’s licence to practise

TIMES OF INDIA 

Rema Nagarajan,TNN | Sep 23, 2015, 04.14 AM IST

The status of the suspension of the medical licence of Dr Ketan Desai, former president of the Medical Council of India, remains a mystery with the current dispensation in the council refusing to answer queries on the subject. IMA secretary general Dr K K Aggarwal claims he attended a meeting of the council's ethics committee in January 2014 when it was decided that the suspension should be revoked.

Dr Desai's medical licence was suspended in October 2010 by the MCI, which was then being run by a government-appointed board of governors that had taken over after the council was disbanded following the arrest of its president (Dr Desai) on corruption charges. All of the corruption cases filed against Dr Desai have been closed, barring one in Patiala House court in Delhi.

Dr Aggarwal was an 'invited member' to the MCI when it was reconstituted in November 2013 (though no provision exists in the Indian Medical Council Act for 'invited members) and also a part of ethics committee meetings. While Dr Aggarwal said the suspension was revoked, he admitted he did not have the minutes of the ethics committee meeting in which this decision was taken.

There have been several meetings of the ethics committee since the reconstituted MCI took over in 2013 with Dr Jayshree Mehta as the president. However the minutes of none of these meetings have been put up on the MCI website. MCI refuses to provide the minutes even to RTI applicants, though they are supposed to be in the public domain like the minutes of all other meetings. The minutes of all other committees, like the post-graduate committee and the executive committee have been put up on the website. The ethics committee meetings section alone has not been updated beyond October 2013.

According to many council members, the very first ethics committee meeting of the newly constituted MCI held in December 2013 revoked the suspension of Dr Desai. "If they put up ethics committee meeting minutes, they have to start with the first meeting. As they are wary of admitting in public that one of the first things they did after taking over was to revoke the suspension of Dr Desai, they are shying away from uploading the minutes of all subsequent meetings," explained a council member.

Dr Aggarwal argued that since Dr Desai was registered with the Gujarat Medical Council (GMC), the MCI could only ask GMC to carry out its decision to suspend his licence, and that the GMC had refused to do so. Since the GMC's decision was never challenged, Dr Desai continued to have his medical licence, said Dr Aggarwal. However, he was unable to explain why the MCI's ethics committee then needed to revoke a suspension that he says never happened.

While Dr Mehta has answered queries sent by the TOI on many issues such as permission to carry out live surgeries or on eligibility certificates for foreign graduates, she has maintained a studied silence on repeated queries on Dr Desai's suspension or on why the minutes of the ethics committee meetings are being made public.

‘OCI cardholders using Indian passports a concern’

Return to frontpage

Alarmed over the increasing instances of OCI (Overseas Citizen of India) cardholders using Indian passports, despite possessing a passport obtained from other foreign countries, the Ministry of External Affairs (MEA) has lodged complaints with the State police over the issue.

“Despite having passports from other countries, where they have obtained dual citizenship, some were still found to be using Indian passports. We have made complaints to Chennai Police Commissioner,” Regional Passport Officer K. Balamurugan said.

An Indian passport is valid only till the time the passport holder is a citizen of the country and OCIs are to surrender the passport to MEA authorities. “In some cases, they are ignorant of the rule that they cannot use Indian passport after getting dual citizenship from other countries,” he said.

A majority of such cases involved persons from the Union territory of Puducherry (including Karaikal), who obtain dual citizenship from France. “Even after going there, some of them, out of ignorance, come to India using Indian passports,” he said.

Those intending to submit the passports can approach any of the three Passport Seva Kendras (PSKs) and surrender their passports.

According to the Overseas Indian Affairs, a total of 16,91,058 persons have been registered as OCIs as on January 19 this year.

The Overseas Citizenship of India (OCI) Scheme was launched in August 2005 by amending the Citizenship Act, 1955, and become operational in January 2006.


The scheme, presently operated by Home Ministry, provides for registration as OCIs of all persons of Indian origin (PIOs), who were Indian citizens from January 26, 1950 or were eligible to become Indian citizens on that date and who are citizens of other countries, except Pakistan and Bangladesh.

கச்சத்தீவை மீட்கும் முரசு

logo

இப்போதெல்லாம் தமிழக கடலில் போய் மீன்பிடிக்கவே முடியவில்லை. எப்போதுமே மீனவர்களுக்கு மீன் எங்கே இருக்கிறது, எங்கே வலையைப்போடலாம் என்ற ஆர்வத்தைவிட, தூரத்தில் ஒரு விசைப்படகு தெரிகிறதே, இலங்கை கடற்படை படகாக இருக்குமோ, நம்மை தாக்குவார்களோ, பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக்கொண்டு இருப்பதே வேலையாகப்போய்விட்டது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை பிடித்துக்கொண்டு போய்விட்ட செய்தி கிடைத்ததும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி அவர்களை விடுவிப்பது வாடிக்கையாகிவிட்டது.

இப்போது நாகப்பட்டினம் கடல்பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்த 15 மீனவர்களை கடந்த திங்கட்கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டுசென்றுவிட்டனர். இதுதொடர்பாக உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள ஜெயலலிதா முக்கியமாக, நீண்டநாட்கள் நிலுவையில் உள்ள கச்சத்தீவு பிரச்சினை குறித்து தீவிர அழுத்தத்தை கொடுத்துள்ளார். ‘‘கச்சத்தீவுக்கு அருகில் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இவ்வாறு கைது செய்வது மீனவ சமூகத்தினரிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் அரசியல் சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட இந்திய–இலங்கை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை விரைவில் திரும்பப்பெறவேண்டும். இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லை பிரச்சினையை ஒரு முடிந்துபோன பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த விவகாரம் இந்திய உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. நான் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. நான் தொடர்ந்துள்ள வழக்கின் முக்கிய சாராம்சம் ‘‘கச்சத்தீவை திரும்பப்பெறும் வகையில் அரசியல் சாசனத்தில் உரிய திருத்தம் செய்வதற்கான வழிவகை இல்லாத காரணத்தால், 1974, 1976–ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 1976–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை செயல்படுத்தாமல் ரத்து செய்யப்படவேண்டும்’’ என்பதேயாகும். கச்சத்தீவு இந்தியாவின் ஒருபகுதி என்பதே உங்களின் நிலைப்பாடும் ஆகும். புவியியல் ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், இந்தியாவின் ஒருபகுதியாகவும் உள்ள கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும்’’ என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்புவரை கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்திருக்கிறது. அதன்பிறகுதான் இந்திய நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதற்கு சரித்திர சான்றுகள் ஏராளம் இருக்கிறது. கச்சத்தீவை மீட்போம் என்ற குரல் இதுவரையில் எல்லோராலும் எழுப்பப்பட்டாலும், இப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள இந்த கடிதம் போர் முரசு அடித்ததுபோல இருக்கிறது. இனி ஒரு புதிய வேகத்தோடு ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாக இணைந்து இந்த கோரிக்கையை மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் பல முடிவுகள் பா.ஜ.க. அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவை தாரைவார்த்தது தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்தான். 1974–லிலேயே பாராளுமன்றத்தில் ஜனசங்க தலைவராக இருந்த வாஜ்பாய், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கையெழுத்தாகி இருப்பது ஒப்பந்தம் அல்ல, சரணாகதி என்றார். அந்த கட்சியைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் அந்த ஒப்பந்த பிரதியைக் கிழித்தெறிந்தார். வாஜ்பாயின் கனவுகளையெல்லாம் நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, வாஜ்பாயின் எதிர்ப்பான கச்சத்தீவை தாரைவார்த்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீட்க இந்த போர்ப்படைக்கு தலைமை தாங்கவேண்டும்.

கைகொடுக்கும் "கட்டுச்சோறு'

Dinamani


By ஜீவி. சொர்க்கநாதன்

First Published : 25 September 2015 01:07 AM IST


அந்தத் தொலைதூர விரைவுப் பேருந்து, பயண வழி உணவகம் ஒன்றில் மதிய உணவுக்காக நின்றது. பேருந்திலிருந்து இறங்கிய சில பயணிகள் பசியாற உணவகத்துக்குள் புகுந்த சிறிது நேரத்தில் கூச்சல். உணவக உரிமையாளருடன் சிலர் கடும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
பிரச்னை வழக்கமானதுதான், உண்ணத் தகுதியற்ற அந்த உணவுக்கு இரு மடங்கு விலையாம். அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என கொதித்தனர். அதை லட்சியம் செய்யாத உணவக உரிமையாளர், காசைக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் புகார் செய் என்றார்.
கட்டாயத் தேவை, மாற்று வழியின்மை என்ற பயணிகளின் பலவீனமான நிலையே பயண வழி உணவகங்களின் பலமாக மாறிவிட்டிருக்கிறது.
இன்று பெரும்பாலான பிரயாணங்கள் இதுபோன்ற பயண வழி உணவுகளை நம்பியே தொடங்கி சிரமத்தில் முடிகின்றன. அதேவேளையில், அந்த உணவுகளால் அதிக விலையில், வயிற்று உபாதை, மன உளைச்சல் நிச்சயம்.
ஆனால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரயாணங்கள் சுவையான உணவுடன் கூடிய ஒரு சுகானுபவமாக இருந்தது. பிரயாணம் என்றாலே உற்சாகம்தான். காரணம் - கட்டுச்சோறு.
இந்தக் கட்டுச்சோறு இடையில் வந்ததல்ல. பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த முறை அது. சங்க காலத்திலேயே கட்டுச்சோறு பழக்கம் இருந்திருக்க வேண்டும். சிந்தாமணி நிகண்டில் கூட "தோட்கோப்பு' எனும் சொல் கட்டுச்சோறு என்ற அர்த்தத்தில் கையாளப்பட்டுள்ளது.
கட்டமுது, கட்டுச்சாதம், வழிநடை உணவு, வழிச்சோறு, பொதிச்சோறு போன்ற பெயர்களும் இதற்குண்டு. ஆரம்பத்தில் காட்டில் வேட்டையாடுவோர், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்வோர் பசியாற கட்டுச்சோறு கொண்டுச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். நாளடைவில் பிரயாணங்களில் இந்த உணவு பிரதான இடம் பிடித்தது.
நெல்சோறு புழக்கத்துக்கு வரும் வரை கேழ்வரகு, தினை, கம்பு போன்ற சிறுதானிய உணவுகளை பக்குவப்படுத்தி ஈரத் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி, பிரயாணங்களின்போது தோளில் சுமந்து செல்லப்பட்டது.
நெல்சோறு தாராளப் புழக்கத்துக்கு வந்தபிறகு, கட்டுச்சோறு உணவுகளில் முதலிடம் புளிச்சோறுக்குத்தான். இடிப்பு மசாலா மற்றும் பெருங்காயம் கலந்த புளிக் கரைசலைக் காய்ச்சி சுடுச் சோற்றில் ஊற்றிக் கிளறி, நல்லெண்ணெய்யில் தாளிக்கும் இந்த உணவு, குறைந்த பட்சம் இரு நாளுக்குக் கெடாது.
கட்டுச்சோற்றுக்கு தொட்டுக்கொள்ள காய்கறி பிரட்டல், எள்ளுப்பொடி, துவையல் என ஏதாவதொன்று இருக்கும்.
காடு, கழனி, ஆறு, மலை கடந்து செல்லும் பிரயாணமாக இருந்தால், கட்டுச்சோற்றை தீய ஆவிகள் தீண்டாமல் இருக்க, வாசனையை உள்ளிழுத்துக் கொள்ளும் அடுப்புக் கரித்துண்டையும் அதிலிட்டு கொண்டு செல்வதுண்டு. நடை களைப்பில், நீர் நிலையோரம் மரம் தரும் குளிர் நிழலில் அமர்ந்து உண்ணும் கட்டுச்சோறுக்கு அமுதமும் இணையில்லைதான்.
அதன்பிறகு துணி மூட்டையிலிருந்து பாத்திரங்களுக்கு கட்டுச்சோறு இடம் பெயர்ந்தது. குடும்பத்தினரோடு கோயில் திருவிழா, வெளியூர் பிரயாணம் என்றால் சிறிய அண்டா அல்லது குத்துசட்டியிலிட்டு கட்டுச்சோறு கொண்டு செல்லும் பழக்கம் வழக்கத்துக்கு வந்தது.
கூட்டத்தில் கட்டுச்சோற்றை அவிழ்க்காதே என்று சிலர் சிலேடை மொழியில் சொல்லக் கேட்கலாம். ஆனால், அன்றைய கட்டுச்சோறு கமகமக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் வீட்டுச் சமையல்கூட கமகமதான்.
ஆனால், இன்று பெரும்பாலான வீடுகளில் சமையல் சுவையை நிர்ணயிப்பது மசாலா நிறுவனங்களாக இருப்பதால், கைப்பக்குவம் என்ற சொல், தானாகவே அர்த்தம் இழக்கத் துவங்கியிருக்கிறது.
பிரயாணத்தின் போது, ஆரோக்கியமான உணவுச் செüகரியங்கள் இராது என்பதால் மட்டுமல்ல, செலவுச் சிக்கனம் கருதியும் கட்டுச்சோறு முறை கடைபிடித்து வந்தனர்.
எனினும், மாட்டு வண்டி, பொட்டி வண்டி, குதிரை வண்டிகளிலிருந்து பேருந்து, ரயில் போன்ற இயந்திர வாகனங்களுக்கு பிரயாணங்கள் இன்று மாறிவிட்டாலும், அதே உணவு அசெüகரியங்கள் தொடர்கின்றன.
பிரயாண வழியில், நியாயமான விலைக்கு ஆரோக்கியமான - தரமான உணவு சாத்தியமில்லை; உடலுக்கு ஊறு செய்யும் என்பது தெரிந்தும், அதுபோன்ற உணவுகளை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை, பலரும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
கட்டுச்சோறு உணவைப் பிரயாணங்களில் கொண்டு செல்வதில் பலரிடம் ஒருவித தயக்கம் இருக்கிறது. சிலர் அதனைக் கெüரவக் குறைவாகவும் கருதுகின்றனர். மேலும், ஓரிரு பொழுது உணவுதானே, சமாளித்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய எண்ணமும் ஒரு காரணம்.
கட்டுச்சோறு என்பது பொட்டலமாகக் கட்டப்படும் புளிச்சோறு, எலுமிச்சைச் சோறு, தயிர்ச்சோறு மட்டுமே ஆகாது. வீட்டில் அக்கறையுடன் தயாரித்து கட்டிக்கொண்டு அல்லது எடுத்துக் கொண்டு செல்லும் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, கொறிக்கும் உணவுகள் உள்ளிட்ட எல்லா உணவுகளுமே கட்டுச்சோறு வகையறாதான். இதுபோன்ற உணவுகளை பிரயாண பொழுதுகளுக்கேற்றபடி தயாரித்துக் கொண்டு செல்லலாம்.
குழந்தைகளுடன் பயணிப்போருக்கு இது உகந்ததாக இருக்கும். பிரயாணப் பொழுதில் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோருக்கு கட்டுச்சோறுதான் சாலச்சிறந்தது.

இது காலக் கட்டாயம்!


Dinamani


By ஆசிரியர்

First Published : 24 September 2015 01:19 AM IST


ஒவ்வொரு தொழிலாளிக்கும், கடைக்கும் வார விடுமுறை கட்டாயமாக உண்டு. அதேபோல, மகிழுந்துகளுக்கும் (கார்) ஒரு நாள் வார விடுமுறை விடுத்தால் என்ன என்ற எண்ணம் இலேசாகத் தோன்றி, அழுத்தமாகப் பரவியதன் விளைவாக, ஹரியாணா மாநிலத்தில் குர்கான் நகரில் செப்டம்பர் 22-ஆம் தேதி மகிழுந்து ஓய்வு நாள் (CAR FREE DAY) அனுசரிக்கப்பட்டது.
முதலில் இது வெற்றி பெறுமா என்ற அவநம்பிக்கை இருந்தாலும், கடந்த செவ்வாயன்று விடுக்கப்பட்ட அழைப்புக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. பல லட்சம் மகிழுந்துகள் புழங்கிய சாலைகளில் அன்றைய தினம் மொத்தம் சுமார் 10,000 மகிழுந்துகள் மட்டுமே காணப்பட்டன. குர்கான் நகரின் காற்று மாசு அளவு, அன்றைய தினம் வழக்கத்தைவிட 21% குறைவாக இருந்தது. பேருந்துகளில் வழக்கத்தைவிட ஒன்றரை மடங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், கூடுதல் பேருந்துகள் விடப்பட்டன. ரயில்களில் வழக்கத்தைவிட 10% பயணிகள் அதிகமாக இருந்தனர்.
மகிழுந்துகளின் நெரிசல் சாலைகள் முற்றிலும் இல்லாமல் இருந்தது என்பது மட்டுமன்றி, பல்வேறு வணிக வளாகங்களின் தரைத்தளத்தில் நிறுத்தப்படும் மகிழுந்துகளின் எண்ணிக்கை மிகச் சிலவாகவே இருந்தன. வழக்கமாக 1,500 மகிழுந்துகள் நிறுத்தப்படும் முக்கிய நகர்ப் பகுதியில், அன்றைய தினம் மகிழுந்துகளே இல்லாமல் வெற்றிடமாக இருந்தது.
அதுமட்டுமல்ல, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பெட்ரோல், டீசலை நிரப்பின. மகிழுந்துகள் மிகமிக அரிதாகவே இருந்தன. இதனால், பெட்ரோல் விற்பனை பாதியாகக் குறைந்தது. இது விற்பனை நிலையத்துக்கு தனிப்பட்ட இழப்பாக இருப்பினும், தேசத்துக்கு மிகப் பெரிய லாபம்தான்.
கணினி நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் குர்கானில் பல லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவோரும்கூட பேருந்து, மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தினர். பலர் சைக்கிளில் பயணம் செய்தனர். நகரின் காவல் துறை ஆணையர் நவதீப் சிங், போக்குவரத்துக் காவல் ஆணையர் பாரதி அரோரா ஆகியோருடன் காவலர்களும்கூட சைக்கிளில் அலுவலகம் வந்தனர்.
மகிழுந்து ஓய்வு நாள் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, குர்கானில் அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மகிழுந்து ஓய்வு நாளாக அனுசரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தில்லியில் அடுத்த மாதம் அக்டோபர் 22-ஆம் தேதி இதேபோன்று மகிழுந்துகளுக்கு ஓய்வு நாள் அனுசரிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, வேறு நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வோர் ஊரிலும் வாரத்தில் ஒரு நாள், பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்படுவது பல காலமாக தொடர்ந்து வரும் வழக்கம். அத்தகைய நாள்களில் மிகச் சில கடைகளே திறந்திருக்கும். சில ஊர்களில் இந்த வார விடுமுறை தொழிலுக்கு ஏற்றபடி மாறியிருப்பதும் உண்டு. தங்க நகைக் கடைகள் இருக்கும் பகுதிகளுக்கு ஒரு நாளாகவும், வெல்ல மண்டி, அரிசி மண்டி, வெங்காய மண்டி ஆகியவற்றுக்கு வேறொரு நாளும் வார விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுவது உண்டு. இதெல்லாம் அந்தந்த ஊரின் பழக்க வழக்கம், அப்பகுதியின் வாரச் சந்தையைப் பொருத்து அமையும். சில ஊர்களில் சரக்கு லாரிகள் நிறுத்த இடமில்லாததால் ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் ஒரு நாள் விடுப்பு என வணிகர்கள் அவர்களுக்குள்ளாகவே தீர்மானித்துக்கொள்வது உண்டு. இதுபோன்ற நடைமுறைதான் தற்போது மகிழுந்துகளுக்கு ஓய்வு நாள் அனுசரிக்கும் திட்டமும்.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையில் 7.95 லட்சம் வீடுகளில் மகிழுந்துகள் இருக்கின்றன. தற்போது இந்த எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கக் கூடும். இவை தவிர, சென்னைக்கு வெளியூர்களிலிருந்து நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மகிழுந்துகள் வந்து செல்கின்றன. வாரத்தில் ஒருநாள் சென்னையில் மகிழுந்து ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டால், வெளியூர்களிலிருந்து வரும் மகிழுந்துகள் மற்றும் உள்ளூரில் இன்றியமையாத் தேவைக்காக இயங்கும் மகிழுந்துகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருக்கும். பத்தில் ஒரு பங்காக மகிழுந்துகளின் எண்ணிக்கை குறையும்போது சென்னை சாலைகளில் நெரிசல் நிச்சயமாகக் குறைந்திருக்கும்.
இவ்வாறு மகிழுந்து ஓய்வு நாள் அனுசரிக்கும்போது, காரில் செüகரியமாகச் சென்று பழக்கப்பட்ட வசதி படைத்தோரும், உயர் அதிகாரிகளும் நெரிசல் இல்லாத பொதுப் போக்குவரத்தையே விரும்புவர். மகிழுந்து ஓய்வு நாளில் அதிக எண்ணிக்கையில் கூடுதலான பேருந்துகளை இயக்கி, பொதுப் பயணத்தை இலகுவாக்குவதன் மூலமும், புறநகர் ரயில் போக்குவரத்தில் கூடுதல் பெட்டிகளை, குறிப்பாக, முதல் வகுப்புப் பெட்டிகளைக் கூடுதல் எண்ணிக்கையில் இணைப்பதன் மூலமும் பலரையும் பொதுப் போக்குவரத்துப் பயணத்துக்கு ஈர்க்க முடியும்.
மகிழுந்துகளுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தால், சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் புத்துணர்வை ஏற்படுத்த முடியும். அதேநேரத்தில், இந்த முயற்சி வெற்றி பெற்று, மக்கள் பெருமளவில் பொதுப் போக்குவரத்தை நாடும்படி செய்வதற்குப் பேருந்துகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, வசதிகளும் அதிகரித்தாக வேண்டும். பேருந்துகளின் காலம் மேலைநாடுகளில் அநேகமாக முடிந்துவிட்டது. சொகுசு சிற்றுந்துகள்தான் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. மகிழுந்துகளில் பயணிக்கும் வசதியுடனான சொகுசு சிற்றுந்துகளும், மெட்ரோ, புறநகர் ரயில்களும் அதிக அளவில், சற்று அதிகமாகவே இருந்தாலும்கூட, இயக்கப்பட்டால்தான் போக்குவரத்து நெரிசலும் குறையும். சுற்றுச்சூழல் மாசும் கட்டுக்குள் இருக்கும்.

Thursday, September 24, 2015

இன்பாக்ஸ் பாதுகாப்பு

Return to frontpage

சைபர்சிம்மன்


‘உங்கள் இ-மெயிலை இங்கே சமர்ப்பிக்கவும்’- இணைய சேவை அல்லது செயலிகளைப் பயன்படுத்த முயலும்போது வரவேற்கும் இந்த வாசகம். இ-மெயில் முகவரியைச் சமர்ப்பிக்கலாமா, வேண்டாமா? தேவையில்லாத குப்பை மெயில்கள் (ஸ்பேம்) இன்பாக்ஸுக்கு வந்துவிடுமோ-என்றெல்லாம் தோன்றும்.

இந்த இணைய எச்சரிக்கை தேவையானதுதான். ஆனால் இதற்குத் தீர்வாகத் தற்காலிக மெயில் சேவைகள் இருக்கின்றன. அதாவது ஒருமுறை பயன்படுத்திய பிறகு மறந்துவிடக்கூடிய இ-மெயில் சேவைகள். கொரில்லா மெயில், 10 மினிட் மெயில் என்று பல சேவைகள் இருக்கும் இந்தப் பிரிவில் மெயில்டிராப் புது வரவு.

இணையவாசிகள் தங்களது சொந்த இ-மெயில் முகவரியைச் சமர்ப்பிக்க வேண்டாம் என நினைக்கும் இடங்களில் எல்லாம் மெயில்டிராப் முகவரியை மாற்று மெயில் முகவரியாகப் பயன்படுத்தலாம்.

இதில் புதிய முகவரியை உருவாக்கிக் கொள்வது மிகவும் சுலபம். மனதில் தோன்றிய ஒரு பெயரை இதில் சமர்ப்பித்துத் தற்காலிக மெயில் முகவரியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-மெயில் முகவரியை எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் தைரியமாக சமர்ப்பிக்கலாம். அதே நேரத்தில் அந்த இணையதளத்தின் அறிவிப்பைப் பார்க்க வேண்டும் என்றால் மெயில்டிராப் தளத்தில் நுழைந்து உங்கள் இ-மெயில் கணக்கை இயக்கிக்கொள்ளலாம். பதிவு செய்வது, பாஸ்வேர்டு உருவாக்குவது என எந்தத் தொல்லையும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய தற்காலிக மெயில் சேவை இது.

இணையதள முகவரி: http://maildrop.cc/

Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015


Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015

No.1/2/2015-E-II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 23rd September, 2015.
OFFICE MEMORANDUM

Subject: Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2015

The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.1/2/2015-E-II (B) dated 18th September, 2015 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 113% to 119% with effect from 1st July, 2015.

2. The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M. No. 1(3)/2008-E-II(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.

3. The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.

4. These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees, separate orders will be issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.

5. In so far as the employees working in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued with the concurrence of the Comptroller and Auditor General of India.

Sd/-
(A. Bhattacharya)
Under Secretary to the Government of India

Authority: www.finmin.nic.in

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 2,495 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தற்காலிக தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்



தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற் காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டு களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக் கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன.

2010-ம் ஆண்டுமுதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டு களுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறி ஞர் தொழில் செய்வதை தற்காலிக மாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

20-3-2015 அன்று சில வழக்கறி ஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி.மணிகண்டன், ஆர்.மதன்குமார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் தர வேண்டும்: மத்திய அரசு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



இருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களே வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தியது தொடர்பான அறிக் கையை அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், ஹெல்மெட் அணியாததால் ஜூன் மாதம் 582 பேர், ஜூலை மாதம் 498 பேர், ஆகஸ்ட் மாதம் 571 பேர், செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை 289 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, ஜூலை மாதம் மட்டும் ஹெல்மெட் கட்டாய உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவ்வாறு அமல்படுத்தப் படவில்லை என்று தெரிகிறது.

நகரங்கள், சிறிய நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர். கிராமப்புறங்களில் ஹெல்மெட் கட்டாய உத்தரவு சரிவர அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் கட்டாய உத்தரவை மாநிலம் முழுவதும் அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் வடிவமைப்பு, தயாரிப்பு தொடர்பாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 138 (எப்)-ன்படி இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து ஹெல்மெட் தரவேண்டும். பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால், இந்திய தர நிர்ணய அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்துடன் கூடிய 2 ஹெல்மெட்டுகளை வாகனத்துடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இதன்மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தரமற்ற ஹெல்மெட் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். ஹெல்மெட்டை வைத்து பூட்டுவதற்கான வசதியுடனேயே இருசக்கர வாகனங்களை தயாரிக்கவும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் விபத் தில் சிக்கி அரசு மருத்துவமனை களுக்கு கொண்டுவரப்பட்டு இறந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க உத்தரவிடும்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் வேணுகோபால் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கண்ட தகவல்களை தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

முன்னதாக விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன், ‘‘ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்பு தொடர்பான வீடியோ காட்சிகளை ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது காண்பிக்கலாம். ஹெல்மெட் விழிப்புணர்வு முயற்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஹெல்மெட் கட்டாயம் என்பதை மக்கள் இயக்கமாகவே மாற்ற வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்தார்.

கல்விக் கடன் செலுத்தாதவரை பணியிலிருந்து நீக்க முடியுமா? - பயனாளி - வங்கிக்கிளை மோதல்

Return to frontpage

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின் ஊழியரான குப்புசாமி, தன் மகளுக்கு வாங்கிய கல்விக் கடனை செலுத்தாததால், மகளை வேலையைவிட்டு நீக்க வங்கி அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

புகார் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “என் மகள் மீராவின் பல் மருத்துவப் படிப்புக்காக மன்னார்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் 2006-ல் கல்விக் கடன் பெற்றேன். 2 தவணைகளில் ரூ.1.98 லட்சம் வழங்கினர். என் பெயரில் தனிச் செலவுக் கடன் (Personal Loan) இருப்பதாகச் சொல்லி 3-வது தவணையை தர மறுத்துவிட்டனர். அந்த பாக்கியைச் செலுத்தியதும், 26.05.2010-ல் ரூ.2.47 லட்சத்தை ஒரே தவணையாக வழங்கினர்.

இந்நிலையில், 09.10.2014-ல் ரூ.9,98,850 கல்விக் கடன் பாக்கி இருப்பதாக தகவல் வந்தது. ரூ.4.45 லட்சம் வாங்கியதற்கு இவ்வளவு பெரிய தொகையை சொல்கிறீர்களே? என்று கேட்டதும் முரண்பட்ட கணக்குகளைச் சொல்லி, பின்னர் ரூ.7,59,467 பாக்கி இருப்பதாக 24.08.2015-ல் ஒரு கடிதம் அனுப்பினர்.

இதற்கிடையில், அதே வங்கி யில் எனக்கிருந்த நகைக் கடன் பாக்கியைச் செலுத்திவிட்டு நகையைத் திருப்ப முயன்றபோது, கல்விக் கடன் நிலுவையில் இருப்பதால், தவணையை வரவு வைக்க உள்ளதாகக் கூறி நகையை ஏலம் விட்டனர்.

இதுவரை, 4-5 தவணைகளாக ரூ.39,000 வரை கட்டியுள்ளேன். ஆனால், மாதம் ரூ.30,000, ரூ.40,000 கட்டுங்கள் என்கின்றனர். மின்வாரியத்தில் காசாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாலும், என் மகள் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராகப் பணிபுரிவதாலும், வங்கி கூறும் தொகையைக் கட்ட இயலவில்லை. எனினும், இருதய நோயாளியான எனக்கு வங்கி அதிகாரிகள் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்ததால் நியாயம் கேட்டு, ரிசர்வ் வங்கி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பி னேன். அதற்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இப்போது முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியில் இருக்கும் என் மகளை வேலையை விட்டு நீக்கும்படி மருத்துவத் துறையினரை வங்கி அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர்” என்றார்.

கொடுத்தது ரூ.5,49,600

இதுகுறித்து மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளை மேலாளர் ஆர்.தியாகராஜனிடம் கேட்டபோது, “நான், 2013-ல் இங்கு மேலாளராகப் பொறுப்பேற்றேன். வங்கியில் உள்ள பதிவேடுகளின்படி மீராவுக்காக, அவர் படித்த கல்லூரி பெயருக்கு, குப்புசாமியிடம் மொத் தம் ரூ.5,49,600 கல்விக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்று, 10 ஆண்டுகளாகியும், அவர் மாதத் தவணையை கட்டாததால், வட்டி சேர்ந்து விட்டது. முறையாக கடன் தவணை செலுத்தியிருந்தால் இந்த அளவுக்கு வட்டி உயர்ந்திருக்காது.

அரசு அளித்த வட்டி தள்ளு படியும் கிடைத்திருக்கும். அதனால் தான், கூடுதலாக கட்டும்படி கூறினோம். மாதாந்திர கடன் தொகை, அதற்கான பட்டியல் அனைத்தையும் குப்புசாமி பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்ட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எங்கள் தரப்பில், அவருக்கு எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் கடன் தொகையை கட்டக் கூடாது என்பதற்காக, பல் வேறு குறுக்கு வழிகளை கையாள் கிறார்.

தனிச் செலவுக் கடனுக்காக, கல்விக் கடன் தவணை 6 மாதங் கள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. அடமானம் வைத்து மூன்றாண்டு களுக்கு மேலாகிவிட்டால் நகை களை ஏலம் விடுவதுதான் வங்கி நடைமுறை. கல்விக் கடன் தொடர் பாக மக்கள் நீதிமன்றத்துக்கு குப்புசாமியை அழைத்து, ‘அசலை மட்டுமாவது ஒரே தவணையில் செலுத்துங்கள்’என்றோம். ஆனால், அவர் அசலையும் குறைக்க வேண்டும் என்கிறார். இதெப்படி முடியும்? அவருடைய மகள் கல்விக் கடன் பெற்றிருப்பது குறித்து மருத்துவத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். வேலையை விட்டு நீக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கவில்லை” என்றார்.

வங்கிகள் செய்யும் 26 தவறுகள்

இப்பிரச்சினை தொடர்பாக பேசிய கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.ராஜ்குமார், “தனிச் செலவு கடன் பாக்கிக்காக கல்விக் கடன் தவணையை நிறுத்தி வைக்கவோ, கடன் வாங்கியவரின் மகளை வேலையைவிட்டு நீக்கச் சொல்லவோ வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை. கல்விக் கடன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் வங்கிகள் செய்யும் 26 வகையான தவறுகளைச் சரிசெய்யுங்கள் என்று மனிதவள மேம் பாட்டு அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு சில வங்கி களைக் குறிப்பிட்டு 27.05.2015-ல் கடிதம் எழுதியுள்ளது” என்றார்.

தவணை விவரத்தை தெரிவிக்கவில்லை

பல் மருத்துவர் கு.மீரா கூறியபோது, “கல்விக் கடன் வாங்கும்போது, படித்து முடித்த பின்னர், மாதம் ரூ.8,000 கட்ட வேண்டும் என்றனர். எத்தனை மாதம் கடன் கட்ட வேண்டும், அதற்கான மாதாந்திர கடன் நிலுவைப் பட்டியல், மாதத் தவணைத் தொகை எவ்வளவு என்பது போன்ற எந்த விவரத்தையும் வங்கி தெரிவிக்கவில்லை” என்றார்.

சினிமா எடுத்துப் பார் 27- எம்.ஜி.ஆர் வீட்டு சிக்கன் நெய் ரோஸ்ட்! எஸ்பி.முத்துராமன்

Return to frontpage

கடந்த வார கட்டு ரையை ‘எம்.ஜி.ஆரை வைத்து நான் ஏன் படம் இயக்கவில்லை’ என்று கேட்டு முடித்திருந்தேன். நடிப்பு துறையில் இருந்து அரசியல் துறைக்கு வந்து முதலமைச்சராக ஆனதும் அவர் நடிக்கவில்லை. அதனால் அவரை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது இல்லை. அதைப் போல எனக்கு எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அது நிறைவேறாத ஆசையாகவே ஆகிவிட்டது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் ஒருமுறை படம் பார்க்க ஏவி.எம் ஸ்டுடி யோவுக்கு வந்தார். இந்தத் தகவல் ஸ்டுடி யோவில் இருந்த எல்லோருக்கும் தெரிய வர, எல்லோரும் தியேட்டர் வாசலுக்குப் போய் நின்றுவிட்டோம். படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர் எங்களை எல்லாம் பார்த்ததும் ரொம்பவும் சந் தோஷப்பட்டார். என்னைப் பார்த்தார். அவரை நான் இரு கைக் கூப்பி வணங்கி னேன். என் அருகில் வந்து, ‘‘உனக்கு என்ன வேணும்?’’னு கேட்டார். எதுவும் புரியாத வனாக நின்றேன். மீண்டும் ஒருமுறை, ‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றார். ‘‘உங்க வீட்டுல செய்ற சிக்கன் நெய் ரோஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். அது வேணும்’’னு கேட்டேன்.

ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ‘‘யாரெல்லாமோ, என் னென்னமோ கேட்குறாங்க… நீ போயி!’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அடுத்த நாள் மதிய சாப்பாட்டு நேரம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து வந்த ஓர் ஆள், ‘‘உங்களுக்கு எம்.ஜி.ஆர் சிக்கன் நெய் ரோஸ்ட் கொடுக்க சொன்னார்’’ என்று சொல்லி ஒரு கேரிய ரைக் கொடுத்தார். வியந்து போனேன். எம்.ஜி.ஆர் இருக் கும் பிஸியில் ஓர் உதவி இயக்குநர் கேட்டதை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி. எம்.ஜி.ஆர் எனக்கு ‘கலைமாமணி’ விருது கொடுத்து கவுரவித்தார் என்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதை திரை யுலகம் ஒன்றுசேர்ந்து கொண்டாடியது. கலைக் கல்லூரி எதிரில் ஒரு பெரிய மேடை அமைத்து, அதில் எம்.ஜி.ஆர் நிற்க, திரையுலகினர் அனைவரும் ஊர்வலமாக வந்து அவரை வாழ்த் தினர். பெரிய விழாவாக அது கொண் டாடப்பட்டது. அந்த விழாவில் ஏவி.எம். சரவணன் சார் எல்லோருடைய சார்பிலும் வெள்ளி கோப்பை ஒன்றை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ் திரையுலகமே பாராட்டுகிற காட்சியாக அந்த விழா அமைந்தது.

எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது உல கமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். எம்.ஜி.ஆருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் எம்.ஜி.ஆர் அவர்கள் குணமாகி சென்னை வந்தார்கள். இங்கு வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் டாக்டர் எலி ப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளிலும் சரவணன் சார் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று சரவணன் சார் கேட்டார். அப்போது அவர், ‘‘ ‘அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றார். வெளி நாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பெயர் பெற்றிருந் தார். அவரது விருப்பத்தை சரவணன் சார் நிறைவேற்றினார். மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!

எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தலையீடு அதிகமாக இருக்கும் என்று அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ‘அன்பே வா’ படத்தில் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகு எந்தவிதத்திலும் அவர் தலையிடவில்லை. இந்த சந்தேகத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்ற ஒரு யோசனை தோன்றியது. எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ராஜேந்திரன் நாடக கம்பெனியில் இருந்து வந்தவர். நகைச்சுவையாக பேசக் கூடியவர். சாதரணமாக எம்.ஜி.ஆரிடம் பேசுவார். அவர் கேட்டால்தான் சரியா இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் அவரை அனுப்பினோம். அவர், எம்.ஜி.ஆரிடம் ‘‘நீங்க படப்பிடிப்பில் எல்லா விஷயத் திலும் தலையிடுவீங்கனு கேள்விப்பட் டோம். இங்கே எதிலுமே தலையிடவில் லையே?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அப்படி ஒரு பேச்சு இருக்கா?’’ என்று கேட்டவர், அங்கே இருந்த எங்கள் எல்லோரையும் அருகே அழைத்தார்.

‘‘நான் நடிகன் மட்டுமல்ல. டெக்னீஷியனும்கூட. ஒரு வேலையைத் தப்பா செய்யும்போது அதைப் பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாதே. முகத்தில் குத்து விழுவதுபோல காட்சி எடுக்கும்போது கேமராவை சரியான கோணத்தில் வைத்து எடுத்தால்தான் ரியலாக முகத் தில் குத்து விழுவதுபோல இருக் கும். கேமரா கோணத்தைத் தவறாக வைத்தால் காட்சி சரியாக அமையாது. அதனால் கேமராவை சரியான கோணத் தில் வைக்குமாறு கூறுவேன். எப்போதும் தவறைத்தான் சுட்டிக் காட்டுவேனே தவிர, மற்றபடி தேவையில்லாமல் தலையிடு வதில்லை. ‘அன்பே வா’ படத்தை பொறுத்தவரை திறமையான இயக்கு நர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழு வினர் எல்லாவற்றையும் சரியாக செய்கிறார்கள். அதனால் நான் தவறை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

மெய்யப்ப செட்டியாரின் கடைசி மகன் பாலசுப்ரமணியன் அவர்களுக் குத் திருமணம் நடந்தது. அப்போது செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மை யாரும் 21 தொழிலாளர்களுக்கு திருமணங்களை செய்து வைத்தார்கள். அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் திருமணம் நடந்த 21 தொழிலாளர்களுக்கும் பணமும், பரிசும் கொடுத்தார். அந்த அளவுக்கு தொழிலாளர்களின் மீது அன்பு வைத்திருந்தார் அவர்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் வெள்ளி விழா. அந்தப் படம் வெளியாகும் வரை ‘பட்ஜெட்’ இயக்குநர் என்ற பெயரை நான் பெற்றிருந்தேன். அந்த நேரத்தில் விசு அவர்கள் குறைவான நாட்களில், குறைந்த செலவில் பட்ஜெட் போட்டு அந்தப் படத்தை எடுத்து எனக்கு சவால்விட்டார். இதனை இன் றைய இயக்குநர்கள் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் துண்டு விழாது. தயாரிப் பாளர்களுக்கு நஷ்டம் வராது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இந்திய அரசின் தங்க பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப் படம். அந்தப் படத்தின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளைப் பாராட்டி கேடயம் வழங்கினார்.

அந்தக் கேடயம் 3 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நினைவுக் கேடயம். ‘‘முக்கியமானவர்களுக்கு நீங்கள் கொடுங்கள். மற்றவர்களுக்கு நாகி ரெட்டியாரைக் கொடுக்கச் சொல்கிறேன்’’ என்று சரவணன் சார் கூறினார். எம்.ஜி.ஆர், ‘‘எல்லா கலைஞர்களுக்கும் நானே வழங்குகிறேன். பெரிய டெக்னீஷி யனுக்கு மட்டும் நான் கொடுத்தால், மற்றவர்கள் என் கையால் வாங்கவில் லையே என்று வருத்தப்படுவார்கள்’’ என்று களைப்பையும் பொருட்படுத்தாது எல்லோருக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இவ்வளவு பேரும், புகழும் பெற்ற எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இணையாக புகழ் பெற்றவரைப் பற்றி அடுத்த வாரம் எழுத இருக்கிறேன். யார் அவர்?

- இன்னும் படம் பார்ப்போம்…

Monday, September 21, 2015

இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்

Return to frontpage

இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள் ளது. இந்த புதியமுறை, இன்று முதல் அமலாகிறது.

“கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அதிகாலை 12.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் முன்பதிவு செய்யும் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாலை, 12.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை இனி முன்பதிவு செய்ய முடியும். இந்த புதிய முறை 20-ம் தேதி முதல் உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

பெண் எனும் பகடைக்காய்: குழந்தைப் பராமரிப்பில் ஆண்களுக்குப் பங்கில்லையா?



‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி. ஊர்வசி அவசரம் அவசரமாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருப்பார். குழந்தை அழுதுகொண்டிருக்கும். அதைச் சமாதானப்படுத்திவிட்டு, டிபன் பாக்ஸில் மதிய சாப்பாட்டை அடைத்துக்கொண்டு, குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கணவரிடம்(!?) ஒப்படைத்துவிட்டு, பஸ்ஸைப் பிடிக்க ஓடுவார். ஆனாலும் குழந்தையின் நினைவு மனசுக்குள் வந்து வந்து போகும்.

பெண் வேலைக்குப் போக, கணவன் என்ற ஆண் வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்வது எந்தளவு சாத்தியம்? படத்தில் சம்பந்தப்பட்ட அந்தக் கணவன் கதாபாத்திரம், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், குடும்பப் பொருளாதாரச் சுமையை மனைவி ஏற்றுக்கொள்ள, அவர் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார்.

இனிதான் நம் கேள்வி எழுகிறது. கணவன் வேலைக்குப் போகிறவராக இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தையை வீட்டிலிருந்து பார்த்துக்கொள்பவர் யார்? வீட்டில் பெரியவர்கள் யாராவது இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் குழந்தையை ஏதாவது காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு மனைவி வேலைக்குப் போய் வர வேண்டும். அதுவும் முடியாத நிலை என்றால்? பெண் பேசாமல் வேலையைப் புறக்கணித்து விட்டு வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். குழந்தை வளர்ப்பு பெண்ணுக்கானது என்பது இங்கு எழுதப்படாத சட்டம்.

கூட்டுக் குடும்பங்கள் உடைந்து சிதறிய பின், பணிபுரியும் பெண்களுக்குக் குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் பெரும் சுமையாகத்தான் இருக்கின்றன. ‘கொடிக்குக் காய் பாரமா?’ என்ற கேள்வியெல்லாம் இங்கு கதைக்கு உதவாது. கருவுற்றதிலிருந்தே அதற்கான முன் தயாரிப்புகளைப் பெண் எதிர்கொள்ளும் சூழ்நிலைதான் இங்கே நிலவுகிறது.

அரசுப் பணியாளரின் அருமருந்து

மகப்பேறு விடுப்பு என்பது பெண்ணைப் பொறுத்தவரை மிகப் பெரும் வரப்பிரசாதம். 1961-ல் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மூன்று மாத விடுப்பை அனுமதித்தது. அதன் பின் அதையே ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது. இப்போது வரையிலும் அதுவே நடைமுறையில் உள்ளது. பெரும்பாலும் அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். மத்திய அரசுப் பணியில் மேலும் சில சலுகைகள் சமீப ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. குழந்தைகளுக்கு 18 வயது ஆகும்வரை எப்போது வேண்டுமானாலும், தொடர்ச்சியாக என்றில்லை, தேவைப்படும்போதெல்லாம் இரண்டு ஆண்டு காலத்துக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் என்றால் மூன்று மாதங்கள் முடிந்ததும் கைப்பையும் உணவு டப்பாவும் மட்டுமல்லாமல் குழந்தையின் நினைவையும் சுமந்துகொண்டு பஸ்ஸோ, ரயிலோ பிடித்து அலுவலகத்துக்கு ஓட வேண்டும்.

வலியும் வாதையும்

விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும் காலம் என்பது ஒரு தாய்க்கு மிகவும் வலியைத் தரும் அனுபவம். மனதளவில் மட்டுமல்ல, உடல் ரீதியாகவும்தான். பால் கட்டிக்கொண்டு வலியால் துடிக்கும் பெண்கள், அதை வெளியே சொல்ல முடியாமல் கண்ணீரை மறைத்துக்கொண்டு நம் கண் முன் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் குழந்தையின் ஒரு வயதுவரை பாலூட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்களே, அதெல்லாம் தனியார் நிறுவனங்களின் காதில் விழுவதில்லை. நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொண்டல்லவா அதை நிறைவேற்ற வேண்டி யிருக்கிறது? பாலைப் பீய்ச்சிப் பத்திரப்படுத்த எல்லோருக்கும் வசதியிருப்பதில்லை. அப்படியே பத்திரப்படுத்தினாலும் அதை எடுத்துக் குழந்தைக்குப் புகட்டக் கண்டிப்பாக ஒரு ஆதரவும் துணையும் மிக மிக அவசியம் இல்லையா? அதனால்தான் நிறைய குழந்தைகள், பாட்டிமார்களின் கைகளில் அடைக்கலமாகிறார்கள்.

இரவு நேரப் பணிக்குச் செல்ல வேண்டிய சூழல் பற்றிச் சில தோழிகளுடன் விவாதித்தபோது, இரவுப் பணி என்பதே நிர்பந்திக்கப்பட்டவர்களான பி.பி.ஓ. பணியாளர்கள்கூட அதிலிருந்து விலக்கு பெற்றிருக்கிறார்கள். ஆனால் பெண் மருத்துவர்கள், செவிலியர், டெலிபோன் ஆபரேட்டர்கள் இந்தப் பிரச்சினையை இப்போதும் எதிர்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

இது ஒருபுறம் இருக்க, பிரசவ கால விடுப்பு அளிப்பதிலேயே இப்போது பல சிக்கல்கள் எழுகின்றன. அரசு நிறுவனங்களில் விடுப்பில் செல்பவர்களின் பணியைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள், குறிப்பாக ஆண்கள், பேறு கால விடுப்பில் செல்லும் பெண்ணை ஒரு விரோதி போலவே பார்க்கும் பார்வையும் உண்டு. தனியார் நிறுவனங்களில் கொஞ்சம் பெரிய நிறுவனங்கள் கருணை காட்டினாலும் சிறிய நிறுவனங்கள் சுணக்கம் காட்டுவதுதான் இப்போது நடைமுறை.

கருவுற்றதாலேயே வேலையை விட்டு விலகச் சொன்ன ‘மாபெரும்’ வரலாறுகளும், சம்பந்தப்பட்ட பெண் அதை எதிர்கொண்டு நீதிமன்றத்தின் உதவியுடன் முறியடித்த கதைகளும் இந்த நவீன காலத்தில் சமீபத்தில் நிகழ்ந்திருக்கின்றன. விடுமுறை அளித்தாலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் பதவி உயர்வு போன்றவை பெரும் கேள்விக்குறி. தகவல் தொழில்நுட்பத்தின் மாபெரும் வளர்ச்சி கண்ட நிறுவனங்களே இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கின்றன. படித்த பல பெண்கள் தங்கள் தொழில்வாழ்வைப் பணயம் வைத்துத்தான் பிள்ளைகளைப் பெற்று, வளர்க்க வேண்டிய நிலை. குழந்தைக்கு ஐந்து வயது ஆகும்வரை இவை ஒரு பெண்ணுக்கு நிர்பந்திக்கப்பட்டவை. விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு, மறுப்பதற்கில்லை. ஆனால் பெரும்பான்மை என்பது மேற்சொன்னவாறுதான்.

எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாமல் தங்கள் குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் ஒரு பிரிவாக ஒருங்கிணைக்கப்படாத, முறைப் படுத்தப்படாத வேலைகளில் பல பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் அரசின் உதவிகளும் சலுகைகளும் கிடைப்பது எப்போது?

தந்தைக்கும் பங்குண்டு

மீண்டும் ‘மகளிர் மட்டும்’ படத்துக்கு வருவோம். மாலையில் வேலை முடிந்து வீடு வந்து சேரும் ஊர்வசி, ‘ஆய்’ போன குழந்தையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும் கணவனைப் பார்த்துப் பதறிப் போவார். இதுதான் அச்சு அசலாகப் பெண்களின் குணம். இயல்பிலேயே அது ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. தான் கவனிக்க வேண்டிய பணிகளைக் கணவர் செய்கிறாரே என்ற பதைப்பு, ஒரு வித குற்ற உணர்வு. இது தேவையற்றது. தந்தையரும் குழந்தைகள் மீது உரிமை கொண்டவர்கள் இல்லையா? பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டியதற்கும் பாலூட்ட வேண்டியதற்குமான உடற்கூறு பெண்ணுக்கானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆணும் குழந்தையைப் பராமரிப்பது சாத்தியமே. அன்புடன் அரவணைக்கும் இரு கைகளால் சோறு அள்ளி ஊட்டவும் ‘ஆய்’ போன குழந்தைக்கு அலம்பிவிடவும் அவர்களாலும் முடியும்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

கொசுறு

மகப்பேறு தேதிக்கு ஒரு மாதம் முன்பு தொடங்கி எட்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நல அமைச்சருக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இதை அளிக்க வேண்டும் என்பதும் அவர் கோரிக்கை. சீக்கிரமா முடிவெடுங்க அமைச்சரே!

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிய புதிய இணையதள வசதி: உச்ச நீதிமன்றம் ஏற்பாடு

Return to frontpage

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை, வழக்குகளின் தற்போதைய நிலை, தீர்ப்பு விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள புதிய வசதியை உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது.

நீதிமன்ற வழக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் நவீனமயமாக்கும் முயற்சி 1990-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ecourts.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தேசிய நீதிமன்ற தகவல் தொகுப்பு (என்ஜேடிஜி) பகுதியில் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இந்த வசதியை உச்ச நீதிமன்ற நவீனமயமாக்கல் திட்ட தலைவர் நீதிபதி மதன் லோக்கூர் தொடங்கிவைத்துள்ளார். இதில், நாடு முழுவதும் மாவட்ட அளவில் உள்ள நீதிமன்றங்கள் வரை தாக்கலான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், முடித்து வைக்கப்பட்ட வழக்கு கள் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த விவரம் அன்றாடம் புதுப்பிக்கப்படுகிறது.

2.7 கோடி வழக்குகள்

நாடு முழுவதும் மொத்தம் 2.7 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், நேற்றைய நிலவரப்படி, ஒரு கோடியே 96 லட்சத்து 62 ஆயிரத்து 938 வழக்குகள் குறித்த விவரங்களை ‘என்ஜேடிஜி’ வெளியிட்டுள்ளது. இதில், 66 லட்சத்து 36 ஆயிரத்து 620 சிவில் வழக்குகள், ஒரு கோடியே 30 லட்சத்து 26 ஆயிரத்து 225 கிரிமினல் வழக்குகள் அடங்கும்.

நிலுவையில் உள்ள ஆண்டின் அடிப்படையிலும் வழக்குகள் விவரம் பிரித்து வெளியிடப் பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 20 லட்சம் (10.23 சதவீதம்). ஐந்து முதல் 10 ஆண்டுகள் நிலுவையில் உள்ளவை 35 லட்சம் (17.95 சதவீதம்). இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நிலுவையில் உள்ளவை 59 லட்சம் (30 சதவீதம்). இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக நிலுவையில் உள்ளவை 82 லட்சம் (41 சதவீதம்). மூத்த குடிமக்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 84 ஆயிரத்து 273 (2.97 சதவீதம்). பெண்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 18 லட்சத்து 90 ஆயிரத்து 763 (9.62 சதவீதம்). மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி மாநில நீதிமன்றங்கள் குறித்த விவரங்கள் தேசிய தகவல் தொகுப்புக்கு மாற்றப்பட்டு வருவதால் அந்த விவரங்கள் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

மரபு மருத்துவம்: தூக்கம் எங்கே போனது? மருத்துவர் வி. விக்ரம்குமார்



அசைந்தாடும் சோளக் கதிர்களின் ஆட்டம், அவ்வப்போதுக் களைப்பைப் போக்கப் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு, மதிய வெயிலில் புங்கை மரப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலர் படுக்கையில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மாலையில் வீசும் தூய்மையான தென்றல் காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் கோரைப் பாயில் மனிதன் நிம்மதியாகத் தூங்கிய காலம் ஒன்று இருந்தது!

கட்டுப்பாடின்றி விரைந்துகொண் டிருக்கும் வாகனங்களின் இரைச்சல் காதைத் துளைக்க, பகல் முழுதும் மூளை உழைப்பைச் செலுத்திவிட்டு, மதிய நேரத்தில் சிறிது நேரம் இளைப்பாற, ‘புஷ்-பேக்' இருக்கையிலேயே சாய்ந்து விட்டு, உடலும் மனமும் புழுங்க மாலை வேளையிலே மாசுபட்ட காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் மெதுமெதுவென்று இருக்கும் மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை தேட வேண்டிய நிலையே இன்றைக்குப் பலருக்கும் வாய்த்திருக்கிறது.

என்ன தீர்வு?

நிம்மதியான தூக்கத்தைத் தொலைப் பதால் ஏற்படும் விபரீதங்களும், தூக்கத்தை மீட்பதற்கான வழிமுறை களும்தான் என்ன?

கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள் போன்றவைதான் தூக்கம் பாதிக்கப் படுவதற்கு அடிப்படைக் காரணம். இரவு நேரங்களில் தூங்காமல் நைட் டியூட்டி பார்க்கும் பணியாளர்களுக்கும் வெகு விரைவில் தூக்கமின்மை பிரச்சினை வருவது உறுதி.

இரவின் கொடை ‘மெலடோனின்'

உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நம்முடைய தூக்கம், விழிப்பு நிலைகளை (Sleep-Wake cycle) கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அதேநேரம் தூக்கமின்மையால் ஏற்படும் உடலியல் மாறுபாடு காரணமாகத் தலைபாரம், உடல் வலி, சோம்பல், உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், மயக்கம், உடல் பருமன், தெளிவற்ற மனநிலை ஆகியவை உண்டாகின்றன.

நோய்களுக்கு வரவேற்பு

தூக்கம் பாதிக்கப்படும்போது, நமது உடலில் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ‘லெப்டின்’ (Leptin) ஹார்மோனின் அளவு குறைந்தும், பசியை அதிகமாகத் தூண்டும் ‘கெர்லின்’ (Ghrelin) எனும் ஹார்மோனின் அளவு அதிகரித்தும் உடல் பருமனை உண்டாக்குகிறது. மேலும் ‘குளுகோஸ்’ வளர்சிதை சக்கரம் பாதிக்கப்பட்டு, நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

தூக்கம் சார்ந்து இன்றைக்கு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள செய்திகளை, பல ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் எழுதிய ‘சித்திமய கஞ்செறியும் ஐம்புலத் தயக்கம்' எனும் வரிகள் நித்திரை பங்கத்தால் மயக்கமும் உடல் சோர்வும் ஏற்படும் என்று சொல்கின்றன.

வேண்டாம் பகல் உறக்கம்

பகலில் அதிக நேரம் உறங்குவதால், பல வகை வாத நோய்கள் வரலாம் என ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்னும் நூல் தெரிவிக்கிறது. பகல் உறக்கம் காரணமாக, மரபணுக்களில் மாற்றம் நிகழ்வதாகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக உறங்குவதால், இதய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் தேக அசதி, பசி மந்தம், மலக்கட்டு ஆகிய நோய்களும் உண்டாகலாம்.

சிகிச்சை

l அமுக்கரா கிழங்கு பொடி, ஜாதிக்காய் தூள் ஆகியவற்றைத் தனித்தனியே பாலு டன் கலந்து இரவு நேரத்தில் அருந்தலாம்.

l சிறிது கசகசாவைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

l பாலும் தேனும் அதிகமாக உட்கொள்ள லாம்.

l திராட்சை, தக்காளிப் பழங்களில் ஓரளவு ‘மெலடோனின்’ இருப்பதாலும், அன்னாசி, வாழைப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவை ‘மெலடோனின்’ உற்பத்தியைத் தூண்டுவதாலும், நல்ல தூக்கம் வர அதிகளவில் பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

l அசைவ உணவு வகைகளில் முட்டை, மீன் வகைகளைச் சாப்பிடலாம்.

l மருதாணிப் பூவைத் தலையணை அடியில் வைத்துத் தூங்கலாம்.

l எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.

l மனதை அமைதிப்படுத்தத் தியானப் பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில யோகா சனங்கள், நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

l மனதுக்கு இதமான இசையை ரசிக்கலாம்.

l தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே லேப்-டாப் மற்றும் தொலைக் காட்சியில் மூழ்குவதைத் தவிர்க்கலாம்.

அதி நித்திரையைத் தவிர்த்து, பகல் தூக்கத்தைத் தொலைத்து, குறை உறக்கத்தை வெறுத்து, வயதுக்குத் தகுந்த நேரம் மனஅமைதியுடன் மென்மையாக இமைகளை மூடுவோம். மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

குழந்தைகள் பத்து முதல் பதினைந்து மணி நேரமும், ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ளவர்கள் எட்டு முதல் பத்து மணி நேரமும், பதினாறு முதல் முப்பது வயதுவரை உள்ளவர்கள் ஏழு மணி நேரமும், முப்பது முதல் ஐம்பது வயதுவரை உள்ளவர்கள் ஆறு மணி நேரமும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எட்டு மணி நேரமும் அவசியம் தூங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்,

எல்லாம் ஞாபகம் இருக்கா?

Return to frontpage


டாக்டர் எம்.ஏ.அலீம்


உலக அல்செய்மர் நோய் நாள் செப். 21

மனக் கணக்கு போடுவதில் குழப்பம், சமையலில் உப்பு போட்டோமா - இல்லையா என்ற சந்தேகம், வீட்டைப் பூட்டிவிட்டு வந்தோமா என்ற குழப்பத்துடன் கூடிய சந்தேகம் போன்றவை எல்லாம் எப்போதாவது நடந்தால் பரவாயில்லை, பிரச்சினையும் இல்லை. இது போன்ற சின்ன சின்ன பிரச்சினைகள் ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது. அது அல்செய்மர் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

l டிமென்சியா எனப்படும் மூப்புமறதி நோய் 60 வயதுக்கு மேல் வரக்கூடிய நோய். இவர்களில் 60 -70 சதவீதம் பேர், அதன் வகைகளில் ஒன்றான அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

l வயதானவர்களுக்குத்தான் அல்செய்மர் நோய் ஏற்படுகிறது. மனித வாழ்நாள் அதிகரிப்பால், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் அல்செய்மர் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

l உலக அளவில் அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் ஒருவர் இந்தியர். இந்தியாவில் 50 லட்சம் அல்செய்மர் நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030-ல் இரு மடங்காகும் வாய்ப்பு உள்ளது.

l சின்ன சின்ன விஷயங்களில் ஞாபகம் தப்பிப்போவதுதான் இந்த நோய்க்கு ஆரம்ப அறிகுறி. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு மறந்துவிடுவார்கள். இந்த நோய்க்கான அறிகுறிகள் 60-க்கு வயதுக்கு மேல் தெரிய அதிக வாய்ப்பு உண்டு.

l அல்செய்மர் நோய் தீவிரமடையும் போது, பாதிக்கப்பட்டவர் ஓர் இடத்துக்குத் தனியாகப் போய்விட்டுத் திரும்பி வரமுடியாது. துணிகளைப் பீரோவில் வைப்பதற்குப் பதிலாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவார்கள். குளியலறைக்குச் செல்வதாக நினைத்துக்கொண்டு சமையலறைக்குப் போவார்கள். காலை, மாலை நேரம் குறித்த குழப்பம் ஏற்படும். திடீரென எந்த ஊரில் இருக்கிறோம், யாருடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுவார்கள். காலையில் என்ன சாப்பிட்டோம் என்று ஞாபகம் இருக்காது. உறவினர்களின் முகத்துக்குப் பதிலாகக் குரலை வைத்து அடையாளம் காண்பார்கள். பாதிப்புகளை இப்படிப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நோய் முற்றும்போது நெருங்கிய சொந்தங்களைக்கூட மறந்துவிடுவார்கள்.

l அல்செய்மர் நோய் யாருக்கு யாருக்கு வரும்? வயதானவர்களுக்கு வயது மூப்பால் வரும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள், வாத நோய் ஏற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

l ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, கொழுப்புச்சத்துள்ள உணவைத் தவிர்ப்பது, மதுப்பழக்கத்தைக் கைவிடுவது, தலையில் காயம் ஏற்படாமல் இருக்கத் தலைக்கவசம் அணிந்துகொள்வது போன்றவற்றைக் கடைப்பிடிப்பது முக்கியம்.

l உணவுப் பழக்கத்தில் மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம், அறிவைத் தூண்டக்கூடிய சுடோகு, புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவை மூலம் அல்செய்மர் நோய் வராமல் தடுக்கலாம்.

l சமூகத்தில் முதியவர்களுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முதியவர் களுக்கு ஏற்படும் அல்செய்மர் நோய் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. நோய் பற்றி விழிப்புணர்வைப் பரவலாக்கும் வகையில் செப்டம்பர் 21 உலக ஞாபகமறதி நோய் நாள் (World Alzheimer's Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையக்கருத்து ‘எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’.

கட்டுரையாளர், மூளை நரம்பியல் நிபுணர்



தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

Misleading ads: Jet Airways (India) moves SC against Rs 25-lakh fine

The Financial Express


Misleading ads: Jet Airways (India) moves SC against Rs 25-lakh fine

Jet Airways (India) on Friday moved the Supreme Court against the National Consumer Disputes Redressal Commission’s (NCDRC) order that asked it to deposit R25 lakh as penalty in the Consumer Welfare Fund for indulging in “unfair trade practices” by way of alleged misleading advertisements.

A bench headed by Justice Madan B Lokur asked the airline to place before it legible copies of the contentious advertisements within two weeks.

Senior counsel Shyam Divan and counsel Ujwal Rana, appearing for Jet Airways, argued that there was no intention of deceiving or misleading passengers and the advertisements did say that taxes and surcharges would be extra. “It was mentioned that basic fare is starting from R500 onwards and the advertisement mentioned that conditions apply,” the counsel said.

The NCDRC judgement had come on a complaint filed by Gujarat-based consumer organisation Jagrut Nagrik, an NGO, and a private individual. The complaint had pointed that no mention was made in the ads of the fuel surcharge, congestion charge, transaction fees, and other heads under which the passenger had to pay a whole lot more. The complainants had sought R10 crore as “punitive charges” from Jet Airways and the the now defunct Kingfisher Airlines.

“An ‘asterisk’ was prominently placed in the advertisement to draw the consumers’ attention to the phrase: (*conditions apply) and the conditions included the other charges and taxes as applicable from time to time in addition to the sum of R500 which was advertised (with the asterisk).The conditions also included the requirement of booking of ticket well in advance to avail the offer. Advertisements issued by the airline did not in any manner deceive or mislead any consumer. Further conditions include the requirement of advance booking of the ticket to avail of a lower fare and certain amounts as fuel surcharge etc. In addition to the base fare, the prospective passengers were required to pay fuel surcharge and congestion charge, being the additional expenses incurred by the airline due to steep increase in the price of ‘aviation turbine fuel’ (ATF),” the appeal filed by Jet Airways stated.

The Commission had noted in its August judgment that the two airlines had advertised airfares at ‘throwaway prices’ ranging from R 0 to R999, while in actual the passengers were charged much more. This, the NCDRC said, amounted to unfair trade practices. It held that advertisement disclosing only the minimum basic fare to potential consumers is misleading in the light of the fact that the other charges payable by a passenger far exceeded the said minimum basic fare.
First Published on September 19, 2015 12:25 am

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

2:26 PM | செப்டம்பர் 20, 2015

சென்னை, செப். 20–பாஸ்போர்ட் எடுப்பதற்கு எளிமையான விதிமுறைகளை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.பொதுமக்கள் சிரமமின்றி ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து மிக விரைவாக பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகத்தில் சென்னையில் 3 பாஸ்போர்ட் சேவை மையங்களும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை நகரங்களில் தலா ஒரு சேவை மையம் வீதம் மொத்தம் 8 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

 நகர்புறங்களை சேர்த்து மக்கள் படித்தவர்களாக இருப்பதால் ஆன்–லைன் மூலம் வீட்டில் இருந்த படியோ, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்றோ பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கிறார்கள்.ஆனால் கிராமப்புறங்களில் படிப்பு அறிவு இல்லாதவர்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க பெரும் சிரமமும், கஷ்டமும் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி தரகர்கள் பாஸ்போர்ட் எடுக்க ரூ.5000 முதல் ரூ.8000 வரை வசூலிக்கிறார்கள். கிராம மக்கள் எளிதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வழிவகை காண வேண்டும் என மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன.இதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரனுடன் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பாஸ்போர்ட் சேவையை கிராமப்புற மக்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படுகிறது.தமிழகம் முழுவதும் உள்ள 264 தாலுகா அலுவலகங்ளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இ–சேவை மையத்தில் ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாளை (21–ந்தேதி) முதல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட்டிற்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்குகிறது

.இதுதவிர தலைமை செயலகம், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை மற்றும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 285 இடங்களில் ஆன்–லைன் சேவை தொடங்குகிறது.ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு கட்டணமாக மொத்தம் ரூ.1655 ரொக்கமாக வசூலிக்கப்படும். இதில் ரூ.1500 பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் ரூ.100 அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கும் ரூ.55 ஸ்டேட் பாங்கிற்கும் கமிஷனாக பெறப்படுகிறது. இந்த இ–சேவை மையங்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நிறுவகித்து வருகிறது.இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலகுரு கூறியதாவது:–கிராமப்புற மக்களுக்காக பாஸ்போர்ட் இ–சேவை மையங்கள் நாளை முதல் செயல்படுகின்றன. அங்கு சரியான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் சென்றால் அதனை சரி பார்த்து ஆன்–லைன் மூலம் பதிவு செய்வார்.

 பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்து விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி (ஆன்– லைன் வழியாக) கொடுப்பார். இதற்கான கட்டணம் ரூ.1655 மட்டுமே. இதுபோக எவ்வித செலவும் இல்லை. புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களும், புதுப்பிக்க தவறியவர்களும், குறிப்பிட்ட காலம் முடிந்து மீண்டும் பாஸ்போர்ட் பெற விரும்புவர்களும் அங்கு விண்ணப்பிக்கலாம்.பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும். கிராமப்புற மக்கள் எவ்வித சிரமமின்றி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க அரசு இ–சேவை மையங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இடைத்தரகர்களுக்கு இனி வாய்ப்பு இல்லை. விண்ணப்பதாரர்களே நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

சமையலறையில் கருகும் மனிதவளம்

Return to frontpage


என்.கெளரி


பிரபல திருமண இணையதளம் ஒன்று, கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. திருமணத்துக்கு முன்பும் பின்பும் அவர்களுடைய வாழ்க்கை முன்னுரிமைகளை வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. திருமணத்துக்கு முன்பு ‘பணி வாழ்க்கை’யை முதல் முன்னுரிமையாக 53 சதவீதப் பெண்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். கிட்டத்தட்ட 51 சதவீதப் பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் வருங்காலக் கணவருக்கே முதல் முன்னுரிமை என்று சொல்லியிருந்தனர். அவர்கள் ‘பணி வாழ்க்கை’யை நான்காவது இடத்துக்குத் தள்ளியிருந்தனர். ஆனால், பல பெண்கள் திருமணத்துக்குப் பிறகு, பணி வாழ்க்கைக்கு இந்த நான்காவது இடத்தைக்கூட அளிக்க விரும்பவில்லை.

மனிதவள மேம்பாடு குறித்தும் அதைச் சிந்தாமல் சிதறாமல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது பற்றியும் இன்று நிறையவே பேசப்படுகிறது. பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகரான கல்வியும் அறிவும் பெற்றுள்ள நிலையில் அவர்கள் ஒட்டுமொத்த மனித வளத்தின் சரிபாதியாகக் கொள்ளப்பட வேண்டியவர்கள். அந்த வகையில், திருமணம் பெண்களின் மனிதவளத்தை அடியோடு முடக்கிப்போட்டுவிடுவதையே மேற்கண்ட ஆய்வு காட்டுகிறது.

கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புறங்களில் பிறந்து வளர்ந்து நன்றாகப் படித்து, நல்ல பணியில் இருக்கும் பெண்களே திருமணத்துக்குப் பிறகு தங்கள் மனித வளத்தைப் பயன்படுத்த முடியாமல் அதிகம் தவிக்கின்றனர்.

திறமையின் தேடல் திருமணம்வரை

பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது மாணவர்களைவிட மாணவிகளே அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைகின்றனர் என்பது தெரிந்த விஷயம். கல்லூரியில் சராசரி சதவீதத்துடன் தேர்ச்சியடையும் ஆண்களின் மனிதவளம் அவர்களின் பணி வாழ்கையின் மூலம் சமூகத்துக்குப் பயன்படுகிறது. ஆனால், எண்பது சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று வெளிவரும் பெண்களின் மனிதவளம்கூடக் குடும்ப வாழ்க்கையின் கோணல் சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போய்விடுகிறது. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கும் பயன்படாமல், சமூகத்துக்கும் பயன்படாமல் வீணாகிறது. தாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துக்குள் முடங்கிப்போகும் அவலம் பற்றிய மனவேதனையும் குற்றவுணர்வும் சில பெண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பெரும்பாலான பெண்கள் இதைத் திருமண வாழ்க்கையின் இயல்பான மாற்றமாக எடுத்துக்கொண்டாலும் எல்லோராலும் அப்படி விட்டுவிட முடியவில்லை.

மனநிறைவைப் பறித்த மண வாழ்க்கை

சுதாவுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்திற்கு முன் அவர் ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். திருமணத்துக்குப் பிறகு கணவர் குடும்பத்தினர் விரும்பாததால் வேலையை விட்டுவிட்டார். ஆனால் அது அவருக்கு வலி மிகுந்த முடிவு. “ஆசிரியர் பணி என்பது என் கனவு. திருமண வாழ்க்கைக்காக அதை சமரசம் செய்துகொண்டதை என்னால் இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணத்துக்கு முன்பு ஆசிரியராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் மனநிறைவுடன் கழிந்தது. இப்போது என்னுடைய ஒவ்வொரு நாளும் சமையலறையில் தொடங்கி சமையலறையில்தான் முடிகிறது. தினமும் கணவருக்கு ‘லஞ்ச்’ பேக் செய்வதிலும், மாமியார், மாமனாரை கவனித்துக்கொள்வதிலும், பூஜை செய்வதிலும்தான் நகர்கின்றன என் நாட்கள். ஒரு கட்டத்தில், என்னையே என்னால் எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டது. ஒரேயடியாக என் சுயத்தை இழந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். என் கணவர் குடும்பத்தினரிடம் எப்படியோ சம்மதம் வாங்கி இப்போது என் மேல்படிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால், மேல்படிப்பை முடித்தவுடன் என்னால் வேலைக்குச் செல்ல முடியாது. ஏனென்றால், திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் என் மாமனார், மாமியார் பேரக் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். இன்னும் எப்படியும் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் என்னால் வேலைக்குச் செல்ல முடியும். எப்படியாவது என் ஆசிரியர் பணிக்கு மீண்டும் சென்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன்” என்று சொல்கிறார் சுதா.

பலியாகும் பணி வாழ்க்கை

திருமணத்துக்குப் பிறகு, பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொள்ளும் நிலைமை எந்த ஆணுக்கும் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்களால் பணி வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்துத் தொடர முடிவதில்லை. அப்படியே முயற்சிசெய்து தொடர்ந்தாலும் குடும்ப வாழ்க்கையில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதே பல பெண்களின் அனுபவம்.

ஸ்வேதாவின் அனுபவமும் அப்படிப்பட்டதுதான். “பொறியியல் படித்து முடித்தவுடன் எனக்குப் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், என் பணி வாழ்க்கை ஆரம்பிப்பதற்குள் என் அப்பா யாருமே எதிர்பாராத விதமாக எனக்குத் திருமண ஏற்பாடு செய்துவிட்டார். அதனால், நான் முயற்சி செய்தும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. திருமணமான அடுத்த ஆண்டே எனக்குக் குழந்தை பிறந்தது. திடீரென்று என் கணவர் பொறுப்பில்லாமல் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டார். இந்தச் சமயத்தில், அதே நிறுவனத்தில் எனக்கு மறுபடியும் வேலைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. என் மாமனார், மாமியாருக்கு நான் வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லையென்றாலும் என்னைத் தடுக்க முடியவில்லை. குழந்தையை என் அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு மூன்று ஆண்டுகள் வேலைக்குச் சென்றேன். அந்த மூன்று ஆண்டுகளில் என் கணவர் வீட்டார் என்னை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்தினார்கள். நான் என்ன கருத்து சொன்னாலும் ‘எல்லாம் சம்பாதிக்கிற திமிர்’ என்று சொன்னார்கள். என் கணவரோ, அலுவலகத்தில் இருக்கும்போது அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லையென்றால்கூட என் நடத்தையை சந்தேகப்பட்டுப் பேசுவார். ஒரு கட்டத்தில், இவர்களுடைய பேச்சு தாங்க முடியாமல் வேலையை விட்டுவிட்டேன். அதற்குப் பிறகுதான் என் கணவரும், அவர் அம்மா, அப்பாவும் அமைதியானார்கள். இப்போது அவர் ஒரு சுமாரான வேலைக்குச் செல்கிறார். நான் என் எல்லாத் தேவைகளுக்கும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் சுயமரியாதை, என் அடையாளம் என எல்லாவற்றையும் இழந்துவிட்டுத்தான் என் திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஸ்வேதா.

பணி வாழ்க்கையா, குடும்ப வாழ்க்கையா?

சுதா, ஸ்வேதா இருவரும் திருமணத்துக்குப் பிறகு பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டார்கள். ஆனால், வினோதாவின் திருமணமே ‘திருமணமான பிறகு வேலைக்குப்போக மாட்டேன்’ என்று மாப்பிள்ளை வீட்டாருக்கு உறுதிமொழி அளித்து அதன்பேரில்தான் நடக்கவிருக்கிறது. “கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்பதற்காகப் பல சவால்களைக் கடந்து ‘எம். ஃபில்’ வரை படித்தேன். ஆனால், என் அம்மாவும், அப்பாவும், ‘நீ படிக்கிறேன், படிக்கிறேன் என்று சொல்லி இருபத்தியாறு வயதாகிவிட்டது. உனக்குப் பிறகு உன் தங்கைக்கும் திருமணம் செய்துகொடுக்க வேண்டும். அதனால், சீக்கிரமாகத் திருமணம் செய்துகொள்’ என்று என்னை மிகவும் வற்புறுத்தினார்கள். அதனால், வேறு வழியில்லாமல் நானும் திருமணத்துக்கு சம்மதித்தேன். ஆனால், நான் வாழ்க்கையில் மிக மோசமான சமரசத்தைச் செய்கிறேன் என்பது எனக்குப் புரிகிறது. குடும்பமா, பணி வாழ்க்கையா என்று வரும்போது, குடும்பத்தைத்தான் என்னால் தேர்வுசெய்ய முடிந்தது” என்று சொல்கிறார் வினோதா.

சிந்தனை மாற்றம் தேவை

சுதா, ஸ்வேதா, வினோதா...இவர்களைப் போல்தான் இந்தியாவில் பல பெண்கள் திருமண வாழ்க்கைக்காகப் பணி வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டு தங்கள் தனிப்பட்ட அடையாளங்களைத் தொலைத்து நிற்கிறார்கள். நம் சமூகம், இன்னும் பெண்களை மனிதவளமாகக்கூட கருதவில்லை. ஒரு பெண்ணுக்கு அவளது ஆற்றலைப் பறைசாற்றும் அடையாளங்கள் பல இருக்க இல்லத்தரசியாக இருப்பதை மட்டுமே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வரை பெண்களின் மனிதவளம் சமையலறையில் வீணாகிக்கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியாது.

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

Sunday, September 20, 2015

Hindi varsity urges MCI to allow Hindi for writing MBBS papers

Hindi varsity urges MCI to allow Hindi for writing MBBS papers

City-based Atal Bihari Vajpayee Hindi Vishwavidyalaya has demanded from the Medical Council of India (MCI) to avail students an option to write MBBS course papers in Hindi.

"We have asked the MCI to give an option to student pursuing MBBS degree course to write their exams in Hindi as long as it is not possible for it to have Hindi as another medium of instruction."
When candidates have an option to take Pre-Medical Test (PMT) in Hindi, they should also be given a similar facility in MBBS exams," university Vice-Chancellor Mohanlal Cheepa told PTI on Saturday.
Set up in 2011, the university has been batting for the issue of inclusion of Hindi as a medium of language in MBBS course at medical institutes and has discussed the matter with MCI in the recent past.
When asked why MCI was not permitting to conduct MBBS course in Hindi despite the Rajbhasha Samiti giving its nod on the issue way back in 1991, Cheepa said, MCI cites reason as paucity of medical books in Hindi.
"MCI states that they don't have relevant books in Hindi. Therefore, on the occasion of 10th World Hindi Sammelan (held here last week), we along with Hindi Granth Academy collected and displayed 250-300 books (in medical science) to prove that MBBS course can also be taught in Hindi," he said.
The VC said he had suggested to the MCI that it can teach MBBS in English as long as it is not possible in Hindi, but an option should be provided to candidates to write papers in Hindi.
Citing figures from a World Health Organisation (WHO) report, he said among students who passed out from prestigious All India Institute of Medical Sciences (AIIMS), 54 per cent go abroad for better future prospects and never return.
The report also stated that bright students from Hindi medium, who are selected for institutes like AIIMS, majority of them lag due to the language constraint while some even take extreme step of committing suicide for failing to cope with pressure due to the change in medium of instruction, he said.
To a query, he said that out of nearly 400 medical colleges in the country, 115 are located in the Hindi belt, and added that he is planning to hold a dialogue with vice chancellors on the issue.
He also said that beside MCI, the country has to also change its mindset on the issue that MBBS syllabus can only be taught in Hindi.

விஷ்ணு பிரியா விவகாரம்: கதை கட்டுகிறதா காவல்துறை?

vikatan.com

சென்னை: தற்கொலை செய்து கொண்ட விஷ்ணு பிரியா, போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதால் போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறது காவல்துறை வட்டாரம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றியவர் விஷ்ணு பிரியா. திருமணமாகதவர். இவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் பல சந்தேக ரேகைகள் படிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முன்னதாக இவர் எழுதியதாக சொல்லப்படும்  கடிதத்தில்,  "போலீஸ் பணி எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதற்கு நான் தகுதியற்றவர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் விஷ்ணுபிரியாவின் குடும்பமே போலீஸ் துறையுடன் நெருக்கமானதுதான் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 

இவரது தந்தை ரவி, ஏ.டி.எஸ்.பியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது தாய் கலைச்செல்வி வங்கி அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுவயதில் இருந்தே விஷ்ணு பிரியாவுக்கு போலீஸ் பணி என்பது லட்சியமாகவே இருந்துள்ளது. இதற்காக அவர் ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்தே தன்னை தயார் செய்து வந்துள்ளார். இதற்கு உறுதுணையாக அவரது தந்தையும் இருந்துள்ளார். பி.எஸ்சி கணிதம் முடித்து விட்டு அரசு தேர்வுகளை எழுதினார். தலைமை செயலகத்தில் வருவாய்துறையில் பணி கிடைத்தது. தொடர்ந்து அவர் தேர்வு எழுதி தன்னுடைய லட்சியமான டி.எஸ்.பி பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று திருப்பத்தூரில் பயிற்சி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். 7 மாதத்துக்குப் பிறகு திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பிப்ரவரி மாதத்தில் பணியமர்த்தப்பட்டார். விஷ்ணு பிரியாவின் இன்னொரு சகோதரியும் டி.எஸ்.பியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பமே போலீஸ் குடும்பம் என்பதால் அங்கு நிலவும் அனைத்தும் விஷ்ணு பிரியாவுக்கு சிறுவயது முதலே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். அவரது சாவுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டியது காவல்துறையின் கடமை.

-எஸ்.மகேஷ்

எது தெய்வீகக் காதல்?

Dinamani


எது தெய்வீகக் காதல்?


By இராம. பாரதி

First Published : 19 September 2015 01:39 AM IST


சங்க கால இலக்கியங்களில் தொடங்கி சமகால திரைப்படங்கள் வரை அனைத்திலும் பேசப்பட்டது, இனியும் பேசப்பட இருப்பது, பருவ வயதில் பலருக்கு பிடித்தமானது எல்லாமே ஒன்றுதான். அதுதான் காதல்.
காதல் என்றால் என்ன? எல்லோருக்கும் காதல் வருமா? அதை உணர்வது எப்படி? எல்லாவற்றுக்கும் மேலாக தெய்வீகக் காதல் என்றால் என்ன? இதுபோன்ற எண்ணிலடங்கா கேள்விகள் நம் முன்னே எழுகின்றன.
ஜாதி - மத வேறுபாடுகளையும், ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காமல் தோன்றுவதுதான் காதல் என்றும், காதலுக்கு கண்ணில்லை என்றும் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் மறுப்பதற்கில்லை. அதேவேளையில், பருவ வயதில் எதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்படுவதும், நம் மனதுக்குள் குறுகுறுப்பான எண்ணங்கள் தோன்றுவதும் இயல்பானதே. அது கண்டிப்பாக காதல் அல்ல.
என்றைக்கு நம் வாழ்க்கையை நாமே தீர்மானிக்கும் அளவுக்கு பக்குவம் அடைகிறோமோ அன்றைக்கு நம் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். அது என்ன பக்குவம்? அது எந்த வயதில் வரும்? என்ற கேள்விகள் எழலாம்.
ஒரு குடும்பத்தை வழிநடத்திச் செல்ல தந்தையும், தாயும் செய்யும் காரியங்களை என்றைக்கு நாம் சுயமாக செய்யத் தொடங்குகிறோமோ அன்றைக்கு நாம் பக்குவம் அடைந்திருப்பதை உணர முடியும். அது எந்த வயதினருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
அப்படியொரு தருணத்தில் நம் மனதுக்குள் காதல் தோன்றினால் நிச்சயம் ஒரு தெளிவான முடிவை எடுப்பவராக இருப்போம். நம் மனதைக் கவர்ந்த எதிர் பாலினத்தவர் நமக்கும், நமது குடும்ப வாழ்க்கைச் சூழலுக்கும் சரியான தேர்வாக அமைவார்களா என்பதை மனம் சிந்திக்கும்.
ஆம் எனில், நாயகன் அல்லது நாயகியை திருமணம் செய்வதில் ஜாதி, மத, பொருளாதார ரீதியாகத் தடை ஏற்படுமா? அப்படி இல்லாவிட்டாலும் யாரேனும் ஒருவரது குடும்பத்தில் தீவிர எதிர்ப்பு இருக்குமா? என்பதை நம் மனம் கணக்கீடு செய்துவிடும்.
அதன் பின்னர், பிரச்னைகள் எதுவும் வேண்டாம் என தொடக்கத்திலேயே ஒதுங்குவது அல்லது தடைகளைத் தாண்டி திருமணம் செய்வது என்ற தெளிவான முடிவை எடுப்பவராக நாம் இருப்போம். இரண்டில் எது நடப்பினும் நன்மையே.
ஆனால், இதுபோன்ற தெளிவான சிந்தனைகள் எதுவுமே இல்லாமல் நடை, உடை, பாவனை என அழகியலை மட்டுமே பார்த்து உருவாகும் குறுகுறுப்பான எண்ணம் வெறும் பாலின ஈர்ப்பாக மட்டுமே அமையும்.
ஆச்சரியம் என்னவெனில் இந்தக் காதலில்(?) ஒருவர் மீது ஒருவர் மிக இறுக்கமான அன்பு வைத்திருப்பதாக நம் மனம் நினைத்துக் கொள்ளும். ஆனால், கடற்கரை, பூங்கா, திரையரங்கு என சுற்றித் திரிந்து பாலின ஈர்ப்புக்கான தேவைகள் முடிந்தவுடன் இந்தக் காதல் காணாமல் போய்விடும்.
சில சமயங்களில், இதில் யாரேனும் ஒருவரின் காதல் உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குப் பிடித்தமான ஆணோ அல்லது பெண்ணோ தவறான தேர்வாக இருப்பார்கள்.
நான் ஓர் ஏழையைக் காதலிக்கிறேன் என்று கூறுவது ஒரு பெண்ணின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், வாழ்வில் எவ்வித இலக்குமின்றி ஊதாரியாய் சுற்றித் திரிபவரைக் காதலிக்கிறேன் என்று கூறினால் அதை சரியென ஏற்க முடியுமா?
இதேபோல், எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆண், குடும்பத்தை வழி நடத்தும் திறன் ஏதும் இல்லாமல் ஆடம்பர வாழ்வை விரும்பும் பெண்ணைக் காதலிக்கிறேன் என்று கூறுவதும் ஏற்புடையதாக இருக்காது.
இது எல்லாவற்றையும் மீறி இப்படியொரு வாழ்க்கைத் துணையின் (ஆண் / பெண்) கரம் பற்றும்போது அந்தத் திருமணம் கசப்பானதாக மாறுகிறது. ஏனெனில், காதலிக்கும்போது கண்ணே, மணியே, முத்தே என கொஞ்சியதைப் போல எதார்த்த வாழ்வு அமைவதில்லை.
எல்லாம் சரிதான், பக்குவம் அடைந்ததோ அல்லது துடிப்புமிக்கதோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காதல் என்பது தானாக இணைபவர்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறுவது சரிதானா? நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இணைபவர்கள் காதலிக்கும் வாய்ப்பை பெறாதவர்களா என்ன? கண்டிப்பாக அப்படியொன்றும் இல்லை.
காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எதுவாக இருப்பினும் ஓர் ஆணுடன், பெண் கைகோத்து குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும்போதுதான் உண்மைக் காதலுக்கான கதவுகள் திறக்கின்றன.
அப்படிப் பார்த்தால் திருமணத்துக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு என ஏதேனும் ஒரு சூழலில் அனைவருக்குமே காதலிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இதில் எத்தனை பேர் தெய்வீகக் காதலுடன் வாழுகின்றனர்? முதலில், தெய்வீகக் காதல் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண்பது அவசியம்.
ஆனால், கடலில் சங்கமிப்பது இயற்கையின் நியதிதானே தவிர நதிகளின் நோக்கம் அதுவல்ல. எத்தனை முறை வறட்சி ஏற்பட்டாலும் மீண்டும், மீண்டும் நீரை சுரக்கச் செய்து காடு, பள்ளம், மலை முகடுகளைத் தாண்டிச் சென்று மண்ணை வளமாக்குவதுதான் நதிகளின் நோக்கம்.
இதைப் போலவே, நம் வாழ்விலும் எத்தனை எத்தனை ஏற்றத் தாழ்வுகளை வேண்டுமானாலும் சந்திக்க நேரிடலாம். எண்ணற்ற சண்டை சச்சரவுகள் வரலாம். ஆனால், மீண்டும், மீண்டும் நம்மில் அன்பு சுரப்பதுடன், அது நதி நீரைப் போலவே தூய்மையானதாக இருக்குமென்றால் அந்த வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
நம் சதைகள் இளமையுடன் இருக்கும்போது கைகோத்து நடப்பதல்ல காதல். அறுபது, எழுபது வயதுகளைத் தாண்டி முதுமையை எட்டிய நிலையில், கைகோத்து நடந்து செல்ல நம் மனம் விரும்புமென்றால் அதுதான் தெய்வீகக் காதல்.
வாழ்வின் அனைத்து தருணத்திலும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வாழ்ந்தால் மட்டுமே எந்தவொரு தம்பதியும் தெய்வீகக் காதலை அடைவது சாத்தியம்.

Friday, September 18, 2015

மின் பொருள் கழிவுகள் - ஒரு சவால்


!Dinamani


By பூ. சேஷாத்ரி

First Published : 18 September 2015 01:04 AM IST


மின்சாரம், மனிதனோடு ஒன்றிவிட்ட உருவம் இல்லா ஒன்று. இன்று மின்சாரம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. வீடுதான் என்று இல்லை, மின்சாரம் இல்லை என்றால் இந்த நாடே இயங்காது என்ற நிலை தற்போது.
நமது முன்னோர்களில் சிலர் கூறுவர், அந்தக் காலத்தில் நாங்கள் அரிக்கேன் விளக்கில்தான் படித்தோம் என்று. ஆனால், இன்றைய தலைமுறையினர் சில நிமிடங்கள்கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்று புலம்புவதைக் கேட்கலாம்.
வளர்ந்து வரும் மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள், வீடுகள், நகரங்கள், அவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருள்கள் என அனைத்தும் அதிகரித்து வருவதால் மின்சாரத்தின் நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில மாநிலங்கள் தங்கள் மின் தேவையை அவர்களாகவே பல தரப்பட்ட மின் தயாரிப்பு முறைகள் மூலம் பூர்த்தி செய்துகொள்கின்றனர். சில மாநிலங்கள் அண்டை மாநிலங்களை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
மின்சாரம் இல்லாத நேரத்திலும் மின்சாதனப் பொருள்களை இயக்க, பேட்டரியுடன் கூடிய தடையில்லா மின்சார சாதனம் (யு.பி.எஸ்.), ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் என்று இன்றைய அறிவியல் உலகில் மனிதன் தனக்குத் தானே பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டான்.
மின்சாரம் என்பது நீர், காற்று, நிலக்கரி, அணு ஆகியவற்றில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது சூரிய மின்சாரமும் பிரபலமாகி வருகிறது. நகரங்களில் உள்ள வீடுகளின் கூரைகளின் மீது தகடுகள் மூலம் தற்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அது பேட்டரியில் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
சில மாநில அரசுகள் சூரிய மின்சாரம் மூலமும் அவர்களது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. சில மாநிலங்கள் அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் இறங்கியுள்ளன.
இன்று பருவநிலை மாற்றத்தினால், மழை பொய்த்துவிட்டது. மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டதால் வெப்பமானது அதிகரித்து வருகிறது. உடன் வாகனங்கள் பெருகிவிட்டதால், அவற்றிலிருந்து வெளியேறும் புகையால் இன்னும் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
தற்பொழுது மின்சாரத்தால் இயங்கும் பொருள்களின் அசுர வளர்ச்சியினால், வீட்டு உபயோகப் பொருள்கள் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்களையும் தாண்டி இன்று நான்கு சக்கர வாகனம், பேருந்து, விமானம் போன்றவைகூட மின்சாரத்தால் இயங்கும் அளவில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்துவிட்டன.
இது ஒருபுறம் ஆறுதலான விஷயமாகத்தான் இருக்கிறது. மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களால் மாசு இல்லை.
போக்குவரத்தை மின்மயமாக்குவது குறித்த "ஐடெக் இந்தியா 2015' என்ற மூன்று நாள் சர்வதேச மாநாடு அண்மையில் சென்னையில் நடந்தது.
இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் அனந்த் கங்காராம் கீதே, மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"மேலும், மத்திய அரசின் "ஃபேம் இந்தியா' செயல் திட்டத்தில், ஹைபிரிட் மின்சார வாகனங்களின் வளர்ச்சி, அவற்றைச் செயலாக்கம் செய்வது என்பது ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கரியமில வாயுவால் ஏற்படும் மாசுகள், எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்கலாம்.
உலக அளவில் எண்ணெய் வளம் தொடர்ந்து குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளை ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் தயாரித்து வருகின்றன. இந்த வகையான வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது.
எனவே, இந்தியாவில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக 30 சதவீத மானியத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லித்தியம் பேட்டரிகளை இந்தியாவில் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய சாலை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றும் அமைச்சர் அனந்த் கீதே கூறினார்.
பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு சில ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் புழக்கத்தில் வந்துவிட்டது என்றபோதிலும், அது மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துவிட்டது. அதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
பராமரிப்புச் செலவு என்னவோ குறைவுதான் என்றாலும், பேட்டரியின் ஆயுள்காலம், ஆயுள் காலம் முடிந்த பின்பு அதை மாற்றுவதற்கு ஆகும் செலவுகள், வாகனத்தின் இதர உதிரிபாகங்கள் சரிவர கிடைக்காதது போன்ற காரணங்கள்தான் அவை.
சில நாடுகளில் பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பேருந்து, விமானங்களின் மாதிரிகளில் சோதனை ஓட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
நாட்டில் மின் சாதனங்களில் பெரு வரவால் மின் பொருள் கழிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது இனி வரும் காலங்களில் இன்னும் எந்த அளவுக்கு உயரும் என்று கணிக்க இயலாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
பேட்டரியால் இயங்கும் யு.பி.எஸ். என்கிற தடையில்லா மின் சாதனம் பெருவாரியான இல்லங்களில் வந்துவிட்ட நிலையில், அதன் பேட்டரியானது தோராயமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது.
இரு சக்கர, நான்கு சக்கர, லாரி, பேருந்து, ரயில் என அனைத்து வாகனங்களிலும் பேட்டரியானது பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆயுள்காலம் முடிந்து தூக்கி ஏறியப்படும் பேட்டரிகளை மாசு விளைவிக்காத அளவுக்கு மறுசுழற்சிக்கான தொழில்நுட்பமோ, தொலைநோக்குச் சிந்தனையோ நம் நாட்டில் இல்லை.
ஏற்கெனவே, குப்பை, பிளாஸ்டிக் பொருள்களின் பெருக்கத்தால் மக்கள் வசிக்கும் பகுதிகள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன என்கிற வேதனையான சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மின்சாதனம், வாகனங்களை பேட்டரியால் இயக்கும் முயற்சி வெற்றி பெற்றாலும், இது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு நண்பனாக அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

NEWS TODAY 20.09.2024