Saturday, April 23, 2016

சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...DINAMANI

சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...DINAMANI

By விமலா அண்ணாதுரை

நீங்கள் யாரையாவது கடந்த ஆண்டு எத்தனை படம் பார்த்தீர்கள் என்று கேட்டால், அதற்கு பெரும்பான்மையானோர் பல எண்களைக் கூறுவார்கள். ஆனால், நீங்கள் கடந்த ஆண்டு எத்தனை புத்தகம் வாசித்தீர்கள் என்று கேட்டால் பலரிடம் பூஜியம் கூட பதிலாக வரும். நம்மிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்துக் கொண்டே வருகிறது.
எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் அம்பேத்கர். விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக் கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது எனப் பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.
இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும், மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக்காட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் களைந்துவிட்டன; புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன எனலாம். ஆனால், புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நின்று சுவையும், இன்பமும், ரசனையும தரவல்லது. புத்தகம் படிக்காமல் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது. மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே என 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
நான்கு மாதக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நாம் தொலைக்காட்சி முன் அமர்ந்தால் அந்த சிசு கண்ணிமைக்காமல் தொலைக்காட்சித் திரையைப் பார்க்க ஆரம்பிக்கின்றது. குழந்தையின் வாசிப்புத்திறன் குறைவதற்கு அடிக்கல் நாட்டு விழா இங்கேதான் ஆரம்பம்.
வாசிப்புத் திறன் இருக்கும் குழந்தைகள் பேச்சில் தெளிவும்,ஞாபக சக்தியும்,கருத்தாழமும்,சொல்வதைக் கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும், பொதுஅறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பது ஆய்வாளர்களின் கூற்று.
வாசிப்புத்திறன் இல்லாத மாணவன் பள்ளியில் மட்டுமன்றி, சமூகத்திலும் சிறப்பு நிலை அடைவதென்பது மிகவும் கஷ்டமே.
யுனெஸ்கோ (UNESCO) என்ற உலக கல்வி நிறுவன அமைப்பு, மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிகப் புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 1995 முதல் ஏப்ரல் 23, உலக புத்தக தினம் என்று அறிவித்துள்ளது.
அது முதல் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்டபோது, லண்டனில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் குழந்தை புத்தகங்கள் வாங்கலாம்.
நாமும் கூட அதைப் போல குறைந்த விலையில் குழந்தைகளுக்காக புத்தகம் அச்சிட்டு,குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் இந்நாளில் புத்தகத்தையும், அவற்றை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர்.
உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். முக்கியமாக, உலகின் தலைசிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட், ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்தது மட்டுமல்ல உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23-இல் தான்.
காஞ்சி பல்கலைக்கழகம், நாலந்தா பல்கலைக்கழக நூலகங்களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இருந்துள்ளன. அன்னிய நாட்டில் இருந்து வந்த மதவெறியர்கள் அந்த நூலகத்தைக் கொளுத்தியபோது தொடர்ந்து ஆறு மாதங்கள் எரிந்து கொண்டே இருந்தனவாம். அதில் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நமக்குத் தந்த அனுபவ அறிவு அனைத்தும் அழிந்து போயின.
தமிழ்நாட்டு நூலக வரலாற்றில் பிதாமகன் இராமாமிர்தம் ரங்கநாதன். இவர்தான் சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை என்று அழைக்கப்பட்டு, மரியாதை செய்யப்படுபவர். 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது.
1931-இல், அக்டோபர் 21-ஆம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேலவாசலில், நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கப்பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டன. இதில் 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல், மக்களுக்குக் கொடுத்து, திரும்பப் பெறப்பட்டன. ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம் இல்லாத நிலைமை..
1990}களில் இந்தியா முழுவதும் அறிவொளி இயக்கம் என்ற மாபெரும் கல்வி இயக்கம் வந்தது. அதன் தொடர்பாக, கிராமத்து மக்களைப் படிக்க வைக்க, அறிவொளித் தொண்டர்கள் மாட்டு வண்டிகளிலும், சைக்கிளிலும் ஊர், ஊராக புத்தகம் எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். ஊர்க் கூட்டம் போட்டு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தனர்.
இப்போதும்கூட, அறிவியல் இயக்க உறுப்பினர்கள் உலகப் புத்தக வாரத்தின்போது, ஊர் ஊராகச் சைக்கிளில், தெருமுனைகளில் புத்தகம் எடுத்துச் சென்று புத்தக விற்பனை செய்கின்றனர். வாசிப்பின் நேசிப்பை உணர, ஊர்களில் வாசிப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து, புத்தக வாசிப்பும் செய்கின்றனர்


நூல் வாசிப்பு என்பது சிந்தனையைத் தூண்டும் யோகா போன்றது; ஒரு தியான நிலையைப் போன்றது; ஒரு உளவியல் தெரபியைப் போன்றது. வரலாறு படைக்க விரும்புவோர் முதலில் வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தினமும் புத்தக வாசிப்புப் பழக்கமே முதல் தகுதி என்று ஐரோப்பாவை தனது போர் வியூகத்தினால் ஆண்ட மாவீரன் நெப்போலியன் சொல்லியிருக்கிறார்.
இவருக்கு 1,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழ் மன்னர் தஞ்சையை ஆண்ட இராஜராஜசோழன் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். இவர் தம் இளம் வயதில் சுமாராக ஆயிரம் ஓலைச்சுவடிகளை வாசித்தவர். அதில் ஒன்றுதான் நாம் விரும்பும் சித்தரை நேரில் சந்திக்கும் ஓலைச்சுவடி. இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறையைப் பின்பற்றி ஏழே நாள்களில் தாம் விரும்பும் சித்தரைத் தரிசித்திருக்கிறார்.
மேலும் மாதம் ஒருமுறை அவரைச் சந்தித்து தமது ஆத்ம பலத்தை அதிகரித்திருக்கிறார். அதனால்தான் உலகின் பெரும்பகுதியை அவரால் ஆட்சி செய்ய முடிந்தது. ஓதுவது ஒழியேல், நூல் பல கல் என்ற ஒளவையின் ஆத்திசூடி தொடர்களும் பலவகை நூல்களைக் கற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
இதே கருத்தை, கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்னும் பழமொழியும் உணர்த்துகிறது. அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அண்ணாவிற்கு நன்கு தெரியும்.


இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக் கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல் நூல் அறிவு. மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக் கொண்டிருந்தார். அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான் படித்தார். ஜவாஹர்லால் நேருவிற்கு நூல்கள் படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது. காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின் காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது நூல் அறிவு.
தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர். ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது.
மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள். குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்களைப் பரிசளியுங்கள். உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்.
புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...



ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்.

கட்டுரையாளர்:
முனைவர்.

பதின் பருவம் புதிர் பருவமா?- 28 | இணைய அடிமைத்தனம்: மீண்டு வர என்ன வழி?

டாக்டர் ஆ.காட்சன்
வெறும் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் என்று அறிவிப்பு வந்த இரண்டு நாளில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டில் பதிவு செய்ததால், அந்த நிறுவனம் பதிவையே நிறுத்திக்கொண்டுவிட்டது. ஒரு பொருள் மீது நம் மக்கள் கொள்ளும் மோகம் தொடர்பான வேகத்துக்கான ஒரே ஒரு சான்று இது. எல்லாம் டிஜிட்டல் மயமாவது பல சௌகரியங்களைத் தந்தாலும், வழக்கம்போல அவற்றில் உள்ள பிரச்சினைகளை நம் அதிகார வர்க்கம் உணர்ந்ததுபோலத் தெரியவில்லை.
உலகிலேயே வலைதள அடிமைத்தனத்தை முக்கிய சமூகநலப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு பல தடைச்சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் மனநலப் பாதிப்பு ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாகச் சீனாவும் தென்கொரியாவும் செயல்பட்டுவருகின்றன. அதே மாதிரியைப் பின்பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
வெளிவர வழி உண்டா?
நம் நாட்டில் இணையதளம், சமூக வலைதளம் ஆகியவற்றுக்கு அடிமையாகும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது கவலை தரும் விஷயம். இணைய அடிமைத்தனத்தால் படிப்பு, மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதே என்று பல பெற்றோர்கள் புலம்புவதை அடிக்கடி பார்க்கிறோம். ஒருவேளை நம்முடைய ரத்தஉறவுகளும் இப்படி அடிமையாகிவிட்டால் என்ன செய்வது?
இணைய அடிமைத்தனத்துக்கு என்றே மனநலச் சிகிச்சைகள், ஆலோசனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், மீண்டும் அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுப்பதையே முக்கிய நோக்கமாகக்கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் இணையதளம், வலைதளம், மொபைல்ஃபோன் பயன்பாட்டை அப்படி முற்றிலும் தடை செய்ய முடியாது. எனவே, இவற்றை மிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்த வழிசெய்வதே சிறந்தது.
இணைய டைரி
இணையப் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள் எந்த மாதிரி மனநிலையில் இருக்கும்போது, கட்டுக்கடங்காமல் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க டைரி முறை பயன்படும். இந்த டைரியில் ஒருவர் இணையத்தை ஒவ்வொருமுறை பயன்படுத்தும்போதும் எத்தனை மணி நேரம் பயன்படுத்துகிறார், எத்தகைய வலைதளங்களைப் பார்க்கிறார், அதைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் உள்ள மனநிலை, ஒவ்வொரு முறை பயன்படுத்துவதால் தடைபடும் அன்றாட மற்றும் முக்கிய வேலைகள், ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றைக் குறித்துக்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் அவர் எவ்வளவு நேரம் விரயம் செய்கிறார், எந்த மனநிலை அதிகம் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது, எத்தனை வேலைகளை அது பாதிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும்.
(அடுத்த வாரம்: பயன் தரும் ஆரம்பம்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர். தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

எம்ஜிஆர் 100 | 50 - எம்ஜிஆரின் அபார நினைவாற்றல்! தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

நிகழ்ச்சி ஒன்றில் சோ பேசுவதை எம்.ஜி.ஆர். ரசிக்கிறார்.

M.G.R. வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில், தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமியும் ஒருவர்.
எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட ‘சோ ஒரு அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல் பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.
‘அடிமைப் பெண்’, ‘ஒளிவிளக்கு’, ‘என் அண்ணன்’ உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை மும்பைக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, ‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு’’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதை யும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’
‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’
எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடை யாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப் பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும் தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும்? எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை’’ என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
‘அடிமைப் பெண்’ படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து ‘‘உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்’’என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.
சோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை சந்தித் தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, ‘‘இவர் என்னுடைய நண்பர்’’ என்று கூறினார்.
‘‘இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன்’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.
இரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. ‘அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும்? இன்றுதானே அவர் சென்னை வந்தார்’ என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.
‘‘இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா? போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதும் சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு அபார மான நினைவாற்றல் எம்.ஜி.ஆருக்கு.
‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன் மனோ கரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, ‘‘வேங்கையனிடம் சொல்லிவிடுவேன்’’ என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...
‘‘தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. தலைவன் என்றால் இவரல்லவோ தலைவன்’’
- தொடரும்...

எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படம் 1976-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வெளியானது. கிளைமாக்ஸில் எம்.ஜி.ஆரும் மும்பையைச் சேர்ந்த பிரபல சண்டைக் கலைஞர் ஷெட்டியும் மோதும் காட்சி பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் நாடெங்கும் நெருக்கடி நிலை அமலில் இருந்தது. அதனால், சண்டைக் காட்சிகளில் தணிக்கை கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

Friday, April 22, 2016

குறள் இனிது: பின் சீட்டிலிருந்து கார் ஓட்டலாமா?


என் உறவினரின் திருமண ஏற்பாடுகளுக்காக குடும்பத்துடன் காரைக்குடி சென்று இருந்தோம். நல்ல செட்டிநாட்டுச் சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு, பலரும் சிபாரிசு செய்த கருப்பாயி அக்காவை சமையலுக்கு அமர்த்தியிருந்தார்கள். அவர்களது கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பு, வாழைத்தண்டு கூட்டு , வெள்ளைப் பணியாரம்,ரெங்கோன் புட்டு எல்லாம் மிகப்பிரசித்தம். ஆனால் கல்யாண வேலைக்கு உதவிக்கு வந்த அவர்களது உறவினர் ஆச்சி ஒருவரும் அருமையாக சமைக்கக் கூடியவர் என்பதால் சமையல் மேற்பார்வை அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆச்சியோ இன்னது சமைக்க வேண்டும் என்று சொல்வதுடன் நிற்காமல், கருப்பாயி அக்காள் பின்னாடியே நின்று கொண்டு இப்படி நறுக்கனும் அப்படித் தாளிக்கனும் என்றெல்லாம் நச்சரித்ததால் என்ன நடந்தது என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரியும்!

விளம்பர உலகின் தந்தையான டேவிட் ஒகில்வியும் கூட 'உங்களைவிடக் கெட்டிக்காரர்களை வேலைக்கு எடுங்கள்; பின்னர் அவர்களை வேலை செய்ய விட்டுவிடுங்கள் ' என்று சொல்லி இருக்கிறாரே!

எனது மற்றொரு நண்பர் மிகவும் அலசிப் பார்த்து, திறமையும் 20 ஆண்டுகள் விபத்தேயின்றி கார் ஓட்டிய அனுபவமும் கொண்ட ஓட்டுநர் ஒருவரை பணியமர்த்தினார்.ஆனால் நம் நண்பர் காரில் பயணிக்கும் பொழுது, பின் சீட்டில் அமர்ந்து கொள்வார். `மெதுவாய் ஓட்டு,இது அபாயகரமான வளைவு முந்தாதே, சைக்கிள்காரன் எதிரில் வருகிறான்' என்று விடாமல் ஏதாவது சொல்லிக்கொண்டே வருவார். பாவம் அந்த ஓட்டுநர்.ஒரு நாள் நண்பர் செய்த ஆர்ப்பாட்டத்தில் குழம்பி,பதறி வண்டியைப் பள்ளத்தில் இறக்கி விட்டார்!

வண்டி வேகமாய்ச் செல்லும் சமயம் மனிதன் சாலையைப் பார்ப்பாரா, வாகனங்களைக் கவனிப்பாரா அல்லது முதலாளி சொல்வதைக் கேட்பாரா?

அமெரிக்க ராணுவ தளபதி ஜார்ஜ் பாட்டன் கூறியது சிந்திக்கத்தக்கது.

' பணியாளர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்லுங்கள்; எப்படிச் செய்ய வேண்டுமென்பதை அல்ல.அவர்களின் வெற்றிகள் உங்களை வியப்பிலாழ்த்தும்!'

அலுவலகங்களில் பார்த்திருப்பீர்கள்.சில மேலதிகாரிகள் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்த பின்னரும் அவரை வேலை செய்யவிடாமல் சும்மா நைநை என்று ஏதாவது யோசனைகள், விமர்சனங்கள், சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வேறு சில மகானுபாவன்களோ தினமும் மாலையில் என்னிடம் வந்து என்னென்ன செய்தாய் என்பதைச் சொல்லிவிடு' என்பார்கள். ஐயா, ஒருவரிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் முதலில் அவரை அந்த வேலையைச் செய்யவிட வேண்டுமில்லையா? பாதி வேலை நடந்துகொண்டிருக்கும் பொழுதே தலையிட்டால் எப்படி? இதற்குக் காரணம் அவரது திறமையிலோ நாணயத்திலோ சந்தேகம் வருவது தானே? நம்பிக் கொடுத்தபின் நம்பிக்கை இழக்கலாமா? இதனால் வேலை செய்பவருக்கு மனத்தாங்கல். வேலையைக் கொடுத்தவருக்கும் நிம்மதியில்லை. வேலையும் ஒழுங்காய் முடியாது.

கொடுத்த பணி சரியாய் நடந்ததா என ஆய்வு செய்ய (monitoring) வேண்டியது அவசியமே.ஆனால் எப்பொழுது? வேலைக்கு இடைஞ்சலாகவா?

ஒருவரை ஆராயாமல் பணியமர்த்துவதும், தேர்ந்தெடுத்து பணியமர்த்தியவர் மேல் சந்தேகம் கொள்வதும் தீராத தொல்லையைத் தரும் என்கிறார் வள்ளுவர்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும் (குறள் 510)

சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா? - உங்களுக்கு சிரிக்கத் தெரியுமா?


சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி “பேஸ்புக் என் உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வதுபோல உணர்ந்தேன், அதனால் என் கணக்கை டெலிட் செய்து, அதிலிருந்து விலகிவிட்டேன்” எனப் பகிரங்கமாகப் பேசியதை மிகுந்த ஆச்சரியம் ஏற்படுத்திய சம்பவமாகச் சொல்லலாம். அவர் சொல்வதைத்தான், இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சி முடிவுகளும் சொல்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி, சமூக வலைதளங்களின் பாதிப்புகளைக் குறித்து விளம்பரத் தூதராக நடித்தால், மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

யார் உங்கள் ஆசிரியர்?

இணையதளம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள பயன்பாடுகள் அதிகரித்த பின்னர் ‘ஆசிரியர் - மாணவர் உற'வில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுவருவதாக, சமீபத்தில் ஒரு கூட்டத்தில் நான் சந்தித்த பல கல்லூரிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர். கேள்வி கேட்டவுடன் இணையத்தில் தேடிப் பதிலைச் சொல்வது, வலைதளங்களில் உள்ள கருத்துகளைக் கூறி ஆசிரியர்களை மட்டம் தட்டுவது, வகுப்பு நேரத்தில் எந்தக் கவலையும் இன்றி சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது உட்பட பல எடுத்துக்காட்டுகளை இதற்குக் கூறலாம்.

சமீபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர், பேராசிரியை ஒருவர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போதே மொபைலில் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் உலாவ விட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கல்லூரி நிர்வாகம், இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என அந்த ஆசிரியையிடம் நிர்ப்பந்தித்ததுதான்.

அறிவா? தகவலா?

‘எல்லாம்தான் இணையதளத்தில் கிடைக்கிறதே, எதற்கு வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்?’ என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் பரவலாகி இருக்கிறது. சமூக வலைதளங்களின் மூலமாகத் தற்போது எல்லாரும் எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், எல்லா நேரத்திலும் அது அறிவுசார்ந்த (Knowledge) விஷயமாக இருக்க முடியாது. மாறாகத் தகவல் சார்ந்த (Information) விஷயமாக மட்டும் இருந்தால், பல சமூகச் சிக்கல்கள் ஏற்படும்.

உதாரணமாக ‘மெட்பார்மின்’ என்ற நீரிழிவு நோய்க்கான மாத்திரையை எடுத்துக்கொள்வோம். அது நீரிழிவு நோய்க்கான மாத்திரை என்பதை வலைதளங்களின் மூலமாக அறிந்துகொண்டால், அது ஒரு தகவல் சார்ந்த விஷயம். அதே மாத்திரை மருத்துவத் துறையில் உடல் பருமனைக் குறைக்கவும், கருத்தரிப்பின்மை பிரச்சினை (PCOD) உட்பட இன்னும் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பது பற்றி பலருக்கும் தெரியாது. இது அறிவுசார்ந்த விஷயம்.

இதைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு நோயாளி, குழந்தையின்மைக்கு டாக்டர் சுகர் மாத்திரையைத் தவறாகக் கொடுத்துவிட்டார் என்ற செய்தியைப் பரப்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தவறான அணுகுமுறை மருத்துவத் துறையை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மை. இப்படி வலைதளத்தைத் தேடிப் பார்த்து, தங்கள் நோய் அறிகுறிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதே மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான்.

புதைக்கப்படும் உணர்ச்சிகள்

விதம்விதமாக ஸ்மைலி பயன்படுத்தும் பலருடைய முகங்களில் உண்மையான புன்முறுவலைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. சமூகம் உருவாவதே ஒவ்வொரு தனிமனிதரிடமும் இருந்துதான். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக்கொள்வது, முகபாவங்கள், உடல் பாவனைகள் மூலம் நாம் சொல்லவருவதைப் பிறருக்கு உணர்த்துவது, பதிலுக்குப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்வதுதான் சமூகப் பழக்கவழக்கத்தின் அடிப்படை.

ஆனால் நமது சந்தோஷங்கள், துக்கங்களின் வெளிப்பாட்டை ‘OMG', ‘LOL', ‘RIP' என்று சுருக்கிவிட்ட இந்தக் குறுஞ்செய்தி உலகத்துக்குச் சமூக வலைதளம் என்று பெயர் வைத்தது மிகப் பெரிய நகைமுரண்! அதிலேயே புழங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் சமூகப் பழக்கவழக்கங்கள் மாறிவருவதாகவும், பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை மழுங்கி வருவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

படிப்பிலும் பாதிப்பு

இணையதளத்தில் இருக்கும் நேரத்தைக் கட்டுப்பாட்டோடு வைக்க முடியாததால்தான், வளர்இளம் பருவத்தினரின் படிப்பு பாதிக்கப்பட ஆரம்பிக்கிறது. படிக்க வேண்டிய நேரத்தை இணையதளம் மற்றும் மொபைல்போன் தின்றுவிடுவதால் சில முறை முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்கூடத் தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். எப்போதும் கடந்தகால வாட்ஸ்அப், பேஸ்புக் பதிவுகளைக் குறித்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றிக் கவனச்சிதறலை ஏற்படுத்துவது, படிப்பை மேலும் பாதிக்கும். தொடர்ந்து இணையதளத்தைப் பயன்படுத்தும் மாணவர்களின் ஞாபகத்திறன் குறைய வாய்ப்புள்ளதாக (Digital Dementia), சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



இணைய அடிமைத்தனம் என்ன காரணம்?

வளர்இளம் பருவத்தில் “நீ படிப்பதற்கு மட்டும் நேர்ந்துவிடப்பட்டிருக்கிறாய்” என்கிற அளவுக்குப் பெற்றோரின் கனவுகள் குழந்தைகளின்மீது திணிக்கப்படும்போது, அதை ஆரோக்கியமாகக் கையாளத் தெரிந்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் மற்றும் தோல்வியால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு வலைதள உலகம் சிவப்புக் கம்பளம் விரித்த கனவு உலகம் போலக் காட்சியளிப்பதற்குப் பின்வரும் காரணங்கள் உண்டு:

# வளர்இளம் பருவத்தினருக்குத் தங்களுடைய மன அழுத்தம் மற்றும் கவலைகளை மறக்க உதவும் மருந்தாக இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் மாறிவிடுகிறது.

# அதிக எதிர்பார்ப்பைத் திணிக்கும் நிஜ உலகத்திலிருந்தும் தோல்விகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள ஒரு வழியாக இணையதளம் பயன்படுகிறது.

# முகம் பார்த்துப் பேசத் தேவையில்லாத இணையதள உலகத்தில், அவர்களுடைய கூச்ச உணர்வை மீறி எல்லோரிடமும் சகஜமாகக் குறுந்தகவல்கள் மூலம் எல்லாக் கருத்துகளையும் பரிமாறும் மேடையாகிறது.

# நிஜ உலகத்தில் கவனிக்கப்படாத ஒரு நபர், இணையதள உலகத்தில் முக்கிய நபராக மாறிவிட வாய்ப்புள்ளது. பலரின் லைக்குகளையும் பாராட்டையும் அள்ளலாம்.

(அடுத்த வாரம்: ஆன்லைன் ஆபத்து)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

அரசு மருத்துவமனைகளை காட்டிலும் 50% குறைந்த கட்டணத்தில் ஸ்கேன்: மதுரை தனியார் மருத்துவரின் மருத்துவ சேவை


தனியார் மருத்துவமனை மருத்து வர்கள் என்றாலே லாபநோக்கில் செயல்படுகிறவர்கள் என்ற தவறான அடையாளத்தை உடைத்துள்ளார் மதுரை அரசரடியை சேர்ந்த தேவகி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை மருத்துவர் டாக்டர் நாகேந் திரன். மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு அருகில் செயல்படும் இவரது சேவா ஸ்கேன் சென்டரில், அரசு மருத்துவமனைகளை காட்டி லும் குறைந்த கட்டணத்தில் ஏழை நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுத்து கொடுக்கப்படுகிறது.

அருகில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் ரூ.750, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 முதல் ரூ.3,500 கட்டணம் பெறப் படுகிறது. ஆனால், இவரது ஸ்கேன் சென்டரில் சிடி ஸ்கேன் எடுக்க ரூ.550, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.1,500 மட்டுமே பெறுகிறார். அரசு மருத்துவமனை யில் ஸ்கேன் எடுக்க வரிசை அடிப் படையில் நோயாளிகள் காத்தி ருக்க வேண்டும். அதனால், ஸ்கேன் எடுக்க, ரிப்போர்ட் வர குறைந்த பட்சம் 5 முதல் 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். அதனால், ஏழை நோயாளிகள் தனியார் மருத் துவமனையில் ஸ்கேன் எடுக்க பணமில்லாமலும், அரசு மருத்துவ மனையில் உடனுக்குடன் ஸ்கேன் எடுக்க முடியாமலும் தனக்கு என்ன நோய் என்றே தெரியாமலேயே தொடர்ந்து தற்காலிக சிகிச்சை பெறும் அவலம் ஏற்படுகிறது. ஆனால், டாக்டர் நாகேந்திரனின் சேவா ஸ்கேன் சென்டரில் உடனுக் குடன் ஸ்கேன் எடுத்து அதற் கான ரிப்போர்ட்டும் வழங்கப்படு கிறது. இந்த குறைந்த கட்டணத் தில் எந்த இடத்திலும் ஸ்கேன் எடுக்கப்படுவதில்லை என்பதால், இவரது சேவையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவர் நாகேந் திரன் கூறியதாவது: எம்பிபிஎஸ் முடித்ததும், கை நிறைய சம்பா திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், லண்டன் சென்று படித்து அங்கு 4 ஆண்டுகள் பணிபுரிந்தேன். என் னுடைய தந்தை ஆசிரியர் என்ப தால், அவருக்கு நான் வெளிநாட்டில் தங்கி பணிபுரிவது பிடிக்கவில்லை. அவர் என்னை அழைத்து நமது ஊரிலேயே வந்து மருத்துவர் தொழில் பாருப்பா என்றார்.

அவரது விருப்பப்படி மதுரை அரசரடியில் சிறிய அளவில் மருத் துவமனையைத் தொடங்கினேன். நோயாளிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்தேன். இதனால் என்னிடம் ஏழை நோயாளி கள்தான் அதிகளவில் சிகிச்சைக்கு வந்தனர். ஸ்கேன் எடுக்க எழுதிக் கொடுத்தால் அவர்களில் பலர் ஸ்கேன் எடுக்க பணமில்லாமல் என்ன நோய் என்றே தெரியாமல் இறந்ததை பார்த்து மிகவும் வருந் தினேன்.

அதனால், 1998-ம் ஆண்டு பிளாக் அன்ட் ஒயிட் ஸ்கேன் மையம் தொடங் கினேன். ஏழை நோயாளிகளுக்கு சலுகை விலையில் ஸ்கேன் எடுத் துக் கொடுத்தேன். கடந்த 2005-ம் ஆண்டு ஏழை நோயாளிகள் சலுகை விலையில் அல்ட்ரா, சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காகவே அரசு மருத்துவமனை அருகே தனி யாக சேவா ஸ்கேன் மையத்தை சேவை அடிப்படையில் தொடங்கி னேன். தற்போது இங்கே வந்தால் எந்த நோயையும் கண்டறியக்கூடிய வசதிகள் உள்ளன.

எனது மருத்துவமனை வரு வாயில் வரும் ரூ. 10 லட்சத்தை, இந்த சேவா ஸ்கேன் சேவைக்கு பயன்படுத்துகிறேன். இந்த ஸ்கேன் மையத்தில் 4 மருத் துவர்கள், மருத்துவப் பணியாளர் கள் உள்பட தினமும் 24 மணி நேரமும் இந்த சேவா ஸ்கேன் சென்டர் செயல்படுகிறது என்றார்.

அப்துல் கலாமின் விருப்பம் நிறைவேற்றம்

மருத்துவர் நாகேந்திரன் மேலும் கூறியதாவது: புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியபோது, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை வைத்து திறக்க திட்டமிட்டோம். ஆனால், அவரை அணுகியபோது தனியார் மருத்துவமனை என்பதால் எங்களை பார்க்கவே மறுத்துவிட்டார். எனது சேவையை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன்பிறகு அவர் ஒரு குழுவை அனுப்பி மதுரையில் விசாரித்துள்ளார். உண்மைதான் என்பது தெரிந்தபிறகு அப்துல் கலாம் எங்களது புற்றுநோய் மருத்துவமனையைத் திறக்க வந்தார். அப்போது, இது மட்டும் நீங்கள் செய்தால் போதாது என்றவரிடம், இரு கிராமங்களை தத்தெடுக்கிறோம் என்றோம். கலாம் விரும்பியபடி, மதுரை அருகே அச்சம்பத்து, பண்ணைக்குடி கிராமங்களை தத்தெடுத்து இலவச மருத்துவ சிகிச்சை, கழிப்பறை கட்ட, சுகாதார வசதிகளை ஏற்படுத்த உதவிகளை செய்கிறோம். தற்போது அந்த கிராமங்கள் சுகாதாரத்தில் இந்தியாவுக்கே முன் உதாரணமான கிராமங்களாக இருக்கின்றன என்றார்.

எம்ஜிஆர் 100 | 49 - ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!


M.G.R. படங்களை ரசிகர்கள் அவருக்காக மட்டுமே பார்க்கக் கூடியவர்கள். என்றாலும், அவரது ரசிகர்களிடமும் சரி; பொதுமக்களிடமும் சரி. எம்.ஜி.ஆருக்கேற்ற பொருத்தமான ஜோடியாக கருதப்பட்டவர்களில் நடிகை சரோஜா தேவிக்கு தனி இடம் உண்டு.

‘கன்னடத்துப் பைங்கிளி’ என்று புகழப்பட்ட சரோஜா தேவி, சில கன்னடப் படங்களில் நடித்திருந்தா லும் தமிழிலும் நடிக்க ஆசைப்பட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்துக் கொண்டிருந்போது, கருத்து வேறுபாடு காரணமாக கதாநாயகியாக நடித்த பானுமதி பாதியில் விலகிக் கொண்டார். ஏற்கெனவே இதுபற்றி குறிப் பிட்டுள்ளோம். பின்னர், கதை மாற்றப் பட்டு சரோஜா தேவி நாயகியானார்.

‘நாடோடி மன்னன்’ படத்தை தானே தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங் களில் நடித்ததோடு, படத்தில் இன்னொரு புதுமையையும் எம்.ஜி.ஆர். செய்தார். இடைவேளைக்குப் பின், கதைப்படி சரோஜா தேவி இருக்கும் தீவில் நடப்ப தாக காட்டப்படும் காட்சிகளில் இருந்து படம் வண்ணத்தில் இருக்கும். பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் என்ற சிறப் பும் ‘நாடோடி மன்னன்’ படத்துக்கு உண்டு. எம்.ஜி.ஆருடன் நடிக்க ‘திருடாதே’ படத்துக்காகத்தான் முதலில் சரோஜா தேவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், ‘நாடோடி மன்னன்’ படம்தான் முன்னதாக வெளியானது.

‘திருடாதே’ படத்தில் நடித்துக் கொண் டிருந்த சமயத்தில் சீர்காழியில் நாடகத் தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டது. ‘திருடாதே’ படத்தை முதலில் பழம்பெரும் காங்கிரஸ்காரர் சின்ன அண்ணாமலை தயாரித்தார். தன் னால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்துக்கு இங்கே ஒரு உதாரணம்.

கால் முறிவு காரணமாக எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம். சின்ன அண்ணாமலையை அழைத்தார். ‘‘எனக்கு எப்போது கால் குணமாகி மீண்டும் நடிக்க வருவேன் என்று தெரி யாது. அதுவரை காத்திருந்தால் படத்துக் காக நீங்கள் வாங்கியிருக்கும் கடனுக்கு வட்டியும் ஏறிவிடும். எனவே, படத்தை ஏ.எல். சீனிவாசனுக்கு விற்றுவிடுங்கள். உங்களுக்கு லாபமாக நல்ல தொகை யைத் தரச் சொல்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

கவியரசு கண்ணதாசனின் சகோ தரர் ஏ.எல்.சீனிவாசன். பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். எம்.ஜி.ஆர். கூறியபடி ஏ.எல்.சீனிவாசனிடம் ‘திருடாதே’ படத்தை நல்ல விலைக்கு சின்ன அண்ணாமலை விற்றுவிட்டார். ஏ.எல்.எஸ். பேனரில் படம் வெளி யாகி வெற்றி பெற்றது. சின்ன அண்ணா மலையும் கடன் சுமையில் சிக்காமல் தப்பினார். இப்படி எல்லா விஷயங் களிலும் மற்றவர்கள் நலனை முன்னிறுத் தியே எம்.ஜி.ஆர். சிந்திப்பார்.

‘திருடாதே’ படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை நேரடி யாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு சரோஜா தேவிக்கு கிடைத்தது. படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கண்ணாடித் துண்டுகள் சரோஜா தேவியின் பாதத்தை குத்திக் கிழித்துவிட்டன. வலி தாங்காமல் சரோஜா தேவி துடித்தார்.

அவரது பாதத்தில் குத்தியிருந்த கண்ணாடித் துண்டுகளை அகற்றி தன் கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து கட்டுப்போட்டு முதல் உதவி செய்தார் எம்.ஜி.ஆர்.! அப்போது முதலே எம்.ஜி.ஆர். மீது சரோஜா தேவிக்கு மதிப்பு, மரியாதை மட்டுமல்ல; பக்தியே உண்டு. எப்போது பேட்டியளித்தாலும், நிகழ்ச்சிகளில் பேசினாலும் எம்.ஜி.ஆரைப் பற்றி குறிப்பிடும்போது தனது கொஞ்சு தமிழில் ‘‘என் த(தெ)ய்வம்’’ என்று கூறுவார்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் எம்.ஜி.ஆர். வசித்த ராமாவரம் தோட் டத்திலும் வெள்ள நீர் புகுந்தது. அவர் பயன்படுத்திய சில பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. அது குறித்து வேதனைப்பட்டு பேட்டியளித்த சரோஜா தேவி, ‘‘எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு அவர் வாழ்ந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். பின்னர், முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி எம்.ஜி.ஆர். வீடு இப்போது புதுப்பிக்கப் பட்டுள்ளது.

முன்பெல்லாம் ‘கெமிஸ்ட்ரி’ என்றால் அறிவியல் பாடத்தின் ஒருபகுதியான வேதியியல் என்றுதான் தெரியும். இப்போது, ‘கெமிஸ்ட்ரி’ என்பதற்கு புதிய அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. அதன்படி பார்த்தால், படங்களில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜா தேவிக்கும் ‘கெமிஸ்ட்ரி’ அற்புதமாக பொருந்தியிருக் கும். ‘படகோட்டி’ படத்தில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட, ‘தொட்டால் பூ மலரும்...’ பாடல் அதற்கு ஒரு உதாரணம்.

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜா தேவி. சிம்லாவில் படப்பிடிப்பு. அப்போது நடந்த பயங்கர சம்ப வத்தை சரோஜா தேவியே பின்னர் கூறியிருந்தார்.

சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர். எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய் விழுந்தார். படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர். ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’ என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, அவர் களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல் வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.

அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்தபோதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே தோன் றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…

‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’

எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!

- தொடரும்...

ஆங்கிலம் அறிவோமே - 106: ஊறுகாய் நல்லா இருக்கா?

ஜி.எஸ்.எஸ்

the hindu tamil
“ஒரு மனிதர் அண்ணனாகவும், தம்பியாகவும் இருக்க முடியாதா என்ன? பரதன் ராமனுக்குத் தம்பி. என்றாலும் சத்ருக்னனுக்கு அண்ணன்தானே!’’.

எதற்காக இந்த விளக்கம் என்று குழம்ப வேண்டாம். வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உடனடியாகத் தோன்றிய counterதான் அது.

“ஒரே வார்த்தை adjective ஆகவும், adverb ஆகவும் இருக்க முடியுமா?!!!!’’. இதுதான் அந்தக் கேள்வி. ‘முடியாதே’ என்று அவர் கருதுவதைத்தான் அந்த ஆச்சரியக் குறிகள் உணர்த்துகின்றன. ஆனால் இதற்கான பதில் அவருக்கு வியப்பை வாரி வழங்கும்.

Fast என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். Fast speech என்பதில் fast என்பது adjective ஆக (அதாவது speech என்ற noun-ஐ விவரிக்கும் வார்த்தையாக) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் Run fast எனும்போது fast என்ற வார்த்தை adverb ஆக (அதாவது run என்ற verb-ஐ விவரிக்கும் வார்த்தையாக) பயன்படுத்தப்படுகிறது.

Hard என்ற வார்த்தையும் இப்படித்தான். Hard work என்பதில் adjective ஆகவும், Think hard என்பதில் adverb ஆகவும் உள்ளது.

  

“கேம்ப்ரிட்ஜில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருக்கலாம். அதற்காக கேம்ப்ரிட்ஜில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இருக்காதா என்ன?’’

(அமெரிக்காவிலுள்ள கேம்ப்ரிட்ஜ் என்ற பகுதியில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருக்கிறது. இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் என்ற இடத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே?).

மேலே உள்ளபடி என்னைக் கேட்கத் தூண்டியது வேறொரு வாசகரின் கேள்வி. “ஊறுகாய் கெடாமலிருக்க conservatives சேர்க்கப்படுகிறது என்கிறார்களே! Conservatives என்றால் கருமித்தனமானவர்கள்தானே! பின் எப்படி?’’

இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்துதான் எனக்கு பல்கலைக்கழக உவமானம் தோன்றியது.

கொஞ்சம் எச்சரிக்கையுடன் கூடிய என்கிற அர்த்தம் கொண்ட சொல் conservative. ஒரு பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டால் “பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்” என்று போகிற போக்கில் விறுவிறுப்புக்காகக் குறிப்பிட்டால் அது conservative estimate அல்ல. (அந்தப் பல்கலைக்கழகம் இருக்கும் நகரின் மக்கள் தொகையே அவ்வளவு இருக்காது!).

என்றாலும் நடைமுறையில் conservative என்பது ‘குறைவான’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

“கலவரத்தில் எட்டு பேர் செத்துட்டாங்களா?’’.

“நிச்சயம். சொல்லப்போனால் நான் சொன்னது conservative எண்ணிக்கை. அதிகமாகவே செத்திருப்பாங்க”.

Preservative என்ற அர்த்தத்திலும் conservative பயன்படுத்தப்படுகிறது (ஊறுகாய் பாட்டில்).

  

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுதான் சரி. ஆனால் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று தவறாகக் கூறினாலும் அதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறதே!

வேறொரு வாசகர் எழுப்பிய கேள்வி தொடர்பாகத்தான் எனது மேற்படி வியாக்கியானம் என்பதை நீங்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

“பல இளஞ்சிறார் பள்ளிகளுக்கான பெயர்ப் பலகைகளில் Kindergarten என்று தப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்களே” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாயக் கல்வி தொடங்கும். அதற்கு முந்தைய காலகட்டத்தில் குழந்தைகளைச் சேர்க்கக்கூடிய playschool-களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்கள். Kindergarten என்பது சரியான வார்த்தைதான். இந்த வார்த்தை ஜெர்மன் மொழியிலிருந்து வந்தது. அந்த மொழியில் kinder என்றால் குழந்தைகளுடைய என்று அர்த்தம். அப்படிப் பார்த்தால் Kindergarden என்ற வார்த்தையும் குழந்தைகளின் நந்தவனம் என்கிற அர்த்தத்தில் சுகமாகத்தான் இருக்கிறது.

  



Biography என்றால் வாழ்க்கை வரலாறு. Autobiography என்றால் சுயசரிதை. Hagiography என்றால் என்ன தெரியுமா?

முனிவர்கள், தீவிர பக்தர்கள், இறையருள் பெற்றவர்கள் போன்றோரின் வரலாற்றைக் கூறுவது hagiography. இதில் அவர்கள் நடத்திய அற்புதங்களும் விவரிக்கப்படும்.

  

Bridge on the river? Bridge over the river? எது சரி என்றார் ஒரு நண்பர்.

Bridge on the river Kwai என்ற ஒரு பிரபல படம் உண்டு. இரண்டாம் உலகப் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. Bridge over the river Kwai என்ற புதினம்தான் அந்தப் பெயரில் படமானது!

பெரும்பாலும் ‘on’ என்ற prepositionதான் இது போன்ற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. Bridge across the river என்பதும் வழக்கில் இருக்கிறது.

இந்தப் பதிலை அளிக்கும்போதே வேறொரு கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.

Rebus என்றால் என்ன தெரியுமா? வார்த்தைகளைப் படங்கள் மூலமாகவோ, குறியீடுகள் மூலமாகவோ வித்தியாசமான விதத்தில் அளிப்பதைத்தான் rebus என்கிறார்கள். கீழே சில எடுத்துக்காட்டுகள்.

BRIDGE

RIVER

மேலே உள்ளபடி காணப்படுவதை Bridge on river என்று படிக்க வேண்டும். ஏனென்றால் நதி என்ற வார்த்தைக்கு மேலே பாலம் என்ற வார்த்தை இருக்கிறது. (துன்பம் என்ற வார்த்தையை அதிலுள்ள எழுத்துகளுக்கு நடுவே கொஞ்சம்கூட இடைவெளி கொடுக்காமல் நெருக்கமாக எழுதினால் அந்த rebus-ன் விடை “இடைவிடாத துன்பம்” என்பதாகும்.).

SAM HE HARI

மேலே உள்ள rebus-ஐ விடுவியுங்கள் பார்க்கலாம்.

இதன் விடை HE IS BETWEEN SAM AND HARI.

இந்த வகைப் (rebus) புதிர்கள் இரண்டைக் கொடுத்திருக்கிறேன். உங்கள் விடைகளை உடனே எழுதி மின்னஞ்சலில் அனுப்புங்கள். (மறக்காமல் நீங்கள் வசிக்கும் ஊரையும் குறிப்பிடுங்கள்).

(1) t = T

(2) NOONGOOD

சிப்ஸ்

# Film என்பதற்கும், movie என்பதற்கும் என்ன வித்தியாசம்?

பிரிட்டிஷ்காரர்களுக்கு film. அமெரிக்கர்களுக்கு movie.

# t20 என்பதில் ‘t’ என்பது எதைக் குறிக்கிறது?

Twenty twenty என்பதைத்தான் t20 என்கிறோம். ஒவ்வொரு அணிக்கும் 20 ஓவர்கள்.

# ஒரு விஷயம் குறித்துப் பேசும்போது Your guess is as good as mine என்று ஒருவர் கூறினால் அதற்கு என்ன பொருள்?

அந்த விஷயம் தொடர்பாக அவருக்கு எந்தத் தெளிவான அல்லது அதிகப்படியான கருத்தும் இல்லை என்பதைத்தான் உணர்த்துகிறார். ‘உங்களுக்குத் தெரிந்ததுதான் எனக்கும்’

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

பொழுதுபோக்கும் கல்விதான் .ம.சுசித்ரா



பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் அடியெடுத்துவைக்கக் காத்திருக்கும் பல இளைஞர்களின் மனதில் ‘‘எப்போதும் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வேண்டுமா, நமது விருப்பத்திற்கேற்றதைப் படிக்க முடியாதா?’’ என்ற கேள்வி ஓடிக்கொண்டிருக்கும். மருத்துவம், பொறியியல், வணிகவியல், வழக்கமான அறிவியல் படிப்புகள் தவிர எத்தனையோ புதிய படிப்புகள் வந்திருப்பது நமக்கெல்லாம் தெரியும். இப்போது நாம் பேசவிருப்பது அவற்றைப் பற்றி அல்ல. நாம் இதுவரை கற்பனை செய்தேபார்க்காத வித்தியாசமான படிப்புகளும், அதற்கான சிறப்பான வேலை வாய்ப்புகளும் ஏராளமாக இன்று நம் முன் உள்ளன.

“இது வெறும் பொழுதுபோக்கு, வேலைக்கு ஆகாது” எனக் காலங்காலமாக சொல்லப்பட்ட பல துறைகளைப் பற்றி முறையாகக் கற்பிக்கப் பல கல்வி நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. கல்வித் திட்டம் என்று ஒன்று இருந்தால் அதற்கான வேலைவாய்ப்புகளும் நிச்சயமாக இருக்கும் அல்லவா? ஆக, இதுவரை எல்லாரும் சென்ற பாதையில்தான் நாமும் பயணிக்க வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை. நம் படைப்பாற்றல், தனித்திறன், விருப்பம், பொழுதுபோக்குக்கு ஏற்ற படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் நவீன உலகில் அணி வகுத்து நிற்கின்றன. கற்றல் என்பதற்கே புதிய விளக்கம் கொடுக்கும் அளவுக்கு நம்மை வியக்க வைக்கும் படிப்புகள் உள்ளன. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்!

நல்லா ஊர் சுத்தலாம், நல்லா சம்பாதிக்கலாம்

“எப்ப பார்த்தாலும் ஊர் சுத்திக்கிட்டே இருக்கியே…எப்படித்தான் உருப்படப் போறியோ?” எனப் பெற்றோரைக் கவலைப்படச் செய்யும் பயணங்களில் விருப்பமுள்ள பிள்ளையாக இருந்தால், நீங்கள் படிக்க வேண்டியது ‘மவுண்டனேரிங்’ (Mountaineering) கோர்ஸ். மலையேற்றம், பாறை ஏற்றம், நெடுந்தூரப் பயணங்கள் ஆகியவை இதில் பாடமாகவே கற்பிக்கப்படுகிறது. ஆசியாவிலேயே மலையேற்றப் படிப்புக்காகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் உள்ள நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டனேரிங் ஆகும். இது போல இன்னும் பல நிறுவனங்கள் இளைஞர்களிடமுள்ள ஊர் சுற்றும் திறனை மெருகேற்றி அவர்களை உலகம் சுற்றும் வாலிபராக மாற்றக் காத்திருக்கின்றன.

சைபர் படைத் தளபதி

இணையத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுக் கணினியில் புகுந்து விளையாடும் உங்களுக்கு வழக்கமான கணிப்பொறி படிப்புகள் அல்லாமல் சாகசம் செய்வதற்கு ஆசையா?

இன்று தொழில்நுட்ப உலகை மிரட்டும் ஒரு சொல் ‘ஹேக்கிங்’. நமது கணினிக்குள்ளும், இணையத்தளங்களுக்குள்ளும், அன்னியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புகுந்து தகவல்களைப் பறித்து, பெரும் ராணுவங்களின், வல்லரசு நாடுகளின் இணையத்தளங்களையே ஸ்தம்பிக்கச் செய்வதுதான் ஹாக்கிங். இது தமிழில் ‘கொந்துதல்' என்றழைக்கப்படுகிறது. இந்த ஹாக்கிங்கை திறம்பட எதிர்கொள்ளக் கற்றுத்தருவதுதான் ‘எத்திக்கல் ஹேக்கிங்’(ethical hacking).

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங் நிறுவனமானது தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அத்தனை பாதுகாப்புச் சிக்கல்களையும் கையாள்வதன் உத்திகளைச் சொல்லித்தருகிறது. புனேவில் இருக்கும் அரிஸோனா இன்ஃபோடெக்கில் 15 நாட்கள் பயிற்சிப்படிப்பாகவும் இது கற்றுத் தரப்படுகிறது. இதைப் படிப்பவர்கள், சைபர் உலகப் பாதுகாப்பு படை தளபதிபோல வலம் வரலாம். உலகம் முழுவதும் ‘எத்திகல் ஹாக்கர்களுக்கு' வேலைவாய்ப்புகளும் மரியாதையும் உண்டு.

சாப்பாட்டு ராமனின் ராஜ்ஜியம்

குழம்பின் வாசத்தை நுகர்ந்தே உப்பு அதிகமா இல்லை குறைவா எனச் சொல்லும் அளவுக்கு நீங்கள் சாப்பாட்டுப் பிரியரா? கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் தவிரவும் வித்தியாசமான படிப்புகள் உங்கள் கைமணத்தை நிரூபிக்கக் காத்திருக்கின்றன.

உணவுப் பண்டங்களில் புதிய வாசனைகளை ஆராய்ந்து அறிமுகப்படுத்தும் ‘ஃபுட் ஃபிளேவரிஸ்ட்’(food flavourist) பட்டப்படிப்பை மும்பையில் உள்ள தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி அண்ட் மேனேஜ்மெண்ட் அளிக்கிறது. இதில் ரசாயன மணங்கள், தாவர எண்ணை வகைகள், மூலிகைத் திரவியம் என வாசனைத் தொடர்பான அத்தனை அம்சங்களும் கற்றுத் தரப்படுகின்றது.

சாப்பாட்டு ராமன் என்று பெயர் பெற்றவராக இருந்தால், ‘ஃபுட் டெக்னாலஜி’ படிப்பை பஞ்சாப்பில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகம், மைசூரில் இருக்கும் சென்ட்ரல் ஃபுட் டெக்னலாஜிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கலாம். இங்கு உணவை வேதியியல், இயற்பியல், நுண் உயிரியல் அடிப்படையில் தயாரித்து, பதப்படுத்தி, சேமித்து, விற்பனைப் பண்டமாக மாற்றுவதுவரை அனைத்துத் தொழில்நுட்பங்களும் சொல்லித்தரப்படுகின்றன. உணவுத் தொழில்நுட்பத்தில் (food technology) முதுகலை பட்டம் பெற்றால் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில், உணவு ஆய்வுக்கூடங்களில், உணவகங்களில், குளிர்பானத் தொழிற்சாலைகளில், உணவு தரநிர்ணயம் செய்யும் நிறுவனங்களில், நீர் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

மனம் எதை விரும்புகிறதோ அதையே நமது பணியாகவும் வருவாயாகவும் மாற்றலாம். அதற்குக் கொஞ்சம் தேடலும், படைப்பாற்றலும் தான் தேவை. நம்மைச் சுற்றி வித்தியாசமான படிப்புகளும் அதற்கேற்ற வேலை வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கண்டறிய நாமும் கொஞ்சம் சுற்றத் தயாராக இருக்க வேண்டும் அவ்வளவுதான். தொடர்ந்து தேடலாம்!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் கடும் வறட்சியால் இறுதிச் சடங்குகள் பாதிப்பு ... ஷரத் வியாஸ்

வறண்டு போன கோதாவரி ஆற்றங்கரையில் மரண இறுதிச் சடங்கு நிறைவேற்ற வருவோர் தண்ணீரின்றி அவதியுறுகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தனது உறவினரை இழந்த பீமாராவ் அகார்கர், கோதாவரி அருகே நின்று கொண்டு தனது உறவினர் இறுதிச் சடங்குக்கு ஆன செலவை கணக்கிட்டுக் கொண்டிருந்த போது 3,000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,600 கொடுத்ததை நினைத்துக் கொண்டிருந்தார்.

மரண இறுதிச் சடங்கு நிறைவேற்றுவோருக்கான புனித இடம்தான் பீட். இங்கு 42 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தி வருகிறது, கோதாவரி நதி சுத்தமாக வறண்டு காணப்படுவதால் இறுதிச் சடங்குக்கு வருவோருக்கு தண்ணீர் ஏற்பாடு செய்ய கடும் அவதி ஏற்பட்டுள்ளது.

சுமார் 300 உறவினர்களுடன் இறுதிச் சடங்கு நிறைவேற்ற வருவோருக்கு சாப்பாடு, குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. குடிநீருக்கு மினரல் வாட்டர் வாங்க முடிகிறது, ஆனால் சடங்குக்கு தேவைப்படும் தண்ணீர், அனைவரும் குளிக்க தேவைப்படும் தண்ணீர் ஆகியவற்றை வெளியிலிருந்து லாரியில்தான் வரவழைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் பருவ மழை பொய்த்துப் போனது. இதனால் புனிதத் தல நதி வறண்டு போயுள்ளது. இதனால் இறுதிச் சடங்கு தொடர்பாக நடைபெறும் சிறுசிறு வியாபாரங்கள் பாதிப்படைந்து அவர்களும் வாழ்வாதாரத்திற்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளின் போது தலைக்கு மொட்டை அடிக்கும் நாவிதரின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது. நாளொன்றுக்கு 25 பேருக்கு மொட்டை அடிக்கும் நாவிதர் அசோக் வாக்மரே தற்போது 5 பேர் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிறார்.

டேங்கர் லாரியில் தண்ணீர் வரவழைப்பதில் உள்ள சிக்கல் என்னவெனில் அதனைப் பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு அனைவரும் வசதி படைத்தவர்கள் என்று கூற முடியாது.

இங்கு மட்டுமல்ல பீட் நகரின் பல தாலுக்காக்களும் டேங்கர் லாரியையே தண்ணீருக்காக நம்பியிருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

நிர்வாகமும் இயற்கையும் தங்களை வாட்டி வதைப்பதாக பீட் வாசிகள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மனசு போல வாழ்க்கை- 21: வெற்றியை உருவாக்கும் எண்ணங்கள்

THE HINDU TAMIL

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள் நிறைய தோல்விகளையும் தடைகளையும் சந்திப்பது இயல்பு.

ஒரு முறை தோல்வி வந்ததும் நம்மால் முடியாது என்று விலகிச் செல்பவர்கள் ஏராளம்.

நம்மைச் சுற்றிப் பார்த்தாலே சொந்தத் தொழில் பரிசோதனையைச் செய்து பார்த்துவிட்டு வந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். தங்களின் தோல்விகள் பற்றி அவர்கள் சொல்லும்போதே அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ளலாம்.

வலிமையான எண்ணங்கள்

“அந்தத் தொழில் மோசமான தொழில், தெரியாம மாட்டிக்கிட்டேன்”, “ கூட்டாளிகளை நம்பி ஏமாந்தேன்!”,

“ நம்ம குணத்துக்கு அந்தத் தொழில் ஆகாது”, “நிலையான வருமானம் இல்லாட்டி ரொம்பக் கஷ்டம்”, “நம்ம குடும்பத்துக்கெல்லாம் பிஸினஸ் ஆகாது”, “இந்த தொழில்னாலே வேறெங்கும் நகர முடியாது. எதுவும் செய்ய முடியாது. இதே கதின்னு கிடக்கணும்!”

நீங்கள் எதை நினைத்தாலும் அதுதான் சரி என்று உணர்த்துவது போல உங்கள் வாழ்க்கையில் அனுபவங்கள் கிடைக்கும். உங்கள் எண்ணத்தைக் கவர்ந்துவரும் மனிதர்களும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நிரூபிப்பார்கள். அதுதான் எண்ணங்களின் வலிமை.

அனுபவத்தால் எண்ணங்கள் தோன்றுவதில்லை. எண்ணத்தால் அனுபவங்கள் தோன்றுகின்றன. தொழிலில் தோற்பவர்கள் 95 சதவீதம். ஜெயிப்பவர்கள் 5 சதவீதம்தான். காரணம் அவர்களின் எண்ணங்கள். அதனால் எடுக்கும் முடிவுகள். அந்த முடிவுகள் தூண்டும் செயல்பாடுகள். அந்தச் செயல்பாட்டின் மூலம் வலிமை பெறும் நேர்மறையான எண்ணங்கள். இந்தச் சுழற்சிதான் வெற்றியை தீர்மானிக்கிறது.

தொழில் செய்வதை, பிடித்த விளையாட்டை விளையாடுவது போல அணுகுபவர்கள் அதை ரசித்துச் செய்வார்கள். விளையாட்டில் வெற்றி தோல்வி எப்படி என்பதை விட, விளையாட்டை விளையாட்டுக்காகவே எப்படி ரசிக்கிறோமோ அப்படித் தொழிலை ரசிக்க வேண்டும். அதுதான் நம்மை அந்தத் தொழிலில் நிலைக்க வைக்கும்.

தோல்வியால் கற்கும் பாடங்கள் நமது தொழில் திறனைக் கூர்மையாக்கும் என்று நம்ப வேண்டும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதைவிட எப்படி ஜெயிப்பது என்பதைத் தோல்வியில்தான் ஆராய்ந்து கற்க முடியும். பிறரின் தோல்விகளிலிருந்து பாடம் கற்பவர்கள் புத்திசாலிகள்.

தோல்விக் கதைகள்

வெற்றி பெற்றவர்களைப் பார்த்து ஆசை மட்டும் படுவதுதான் இங்கு பிரச்சினையே. அவர்களின் தொழில் திறனைப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் வெற்றியின் பளபளப்பில் மயங்கிப் போவது. அவர்கள் செய்யும் தொழிலைச் செய்தாலே அதே வெற்றியைப் பெற முடியும் என்று நம்புவது.

“ஒரு ஆன்லைன் சைட் வைத்தே 5 ஆயிரம் கோடி சம்பாதிச்சிட்டாங்க!”, “கோழி முட்டை வியாபாரத்துல இன்னிக்கு ஒரு பன்னாட்டு கம்பெனி மாதிரி வளந்துட்டாங்க!”, “ஒரே படம் எடுத்தாங்க; எங்கேயோ போயிட்டாங்க!”, “சும்மா ஆரம்பிச்சாங்க இந்த பியூட்டி பிஸினஸ. இன்னிக்கு முன்னணி நடிகைங்க எல்லா பிராண்டுகளுக்கும் அம்பாசடர் ஆகும் அளவு வளர்ந்துட்டாங்க!” ,“ஒரே ஒரு ஆப் டெவலப் பண்ணி இன்னிக்கு கம்பனில பெரிய பெரிய முதலீட்டாளர்களைக் கொண்டாந்துட்டாங்க!”...

இதெல்லாம் பனிக்கட்டியின் நுனி போல. ஒவ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னும் நூறு மடங்கு தோல்விக் கதைகள் உள்ளன. அவை வெளியே தெரியாது. வெற்றியாளர்கள் பின்னும் ஏராளமான தோல்விக் கதைகள் உண்டு. ஆனால் அதைவிட அவர்கள் வெற்றியின் பிரகாசம் நம் கண்களை மறைக்கும்.

இதுவே ஆதாரம்

தோல்விகளையும் பார்த்து, அதன் பாடங்களைக் கற்று, அதன் பின்னும் அந்த தொழிலை ரசித்துச் செய்ய முடியுமா? அப்படி என்றால் நீங்கள் இந்த தொழிலுக்குத் தயார். தொழில் செய்ய வேண்டும், அதில் தொடர்ந்து பணம் பண்ண வேண்டும், எது வந்தாலும் கற்று மேலே போக வேண்டும் என்ற எண்ணங்கள் கொண்டவர்கள்தான் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள்.

நேரம், சூழ்நிலை, பிறர் ஆதரவு எல்லாம் தொழிலை பாதிக்கும்தான். உண்மைதான். ஆனால் தொழிலில் நிலைக்க ஆதாரமானது தொழில் பற்றிய எண்ணங்கள்தான்.

அரைக்காசு அரசு வேலை

ஒரு மார்வாடி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: “இந்தத் தொழில் நிலையில்லாதது. பேசாமல் படித்து வேலைக்குப் போகலாம்னு அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார்: ‘ஒரு வேலைக்காரனா இருந்தா யார் உனக்கு பொண்ணு தருவா? சின்னதா இருந்தாலும் உனக்க்குன்னு எப்பவும் ஒரு தொழில் இருக்கணும்!”.

நான் நினைத்துப் பார்த்தேன். ‘அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகம்’ என்பதைக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். தெரிந்தவர்கள் எவ்வளவு பெரிய தொழில் பண்ணினாலும், “ஏதோ பிஸினஸ் பிஸினஸ்னு சொல்றாங்க..என்ன வருதோ தெரியலை” என்பார்கள்.

தொழில் பற்றிய நம் எண்ணங்கள் தான் படிப்பு, திருமணம், வாழ்க்கை பற்றிய எண்ணங்களைத் தீர்மானிக்கும். கடனை நிர்வாகம் செய்வது, தொழிலாளிகளை நிர்வாகம் பண்ணுவது, சந்தையை எடை போடுவது, விலையை நிர்ணயம் செய்வது என அனைத்துக்கும் நம் எண்ணங்கள்தான் விதைகள்.

‘வீடு, குடும்பம் எதையும் கவனிக்க நேரமில்லை, எப்பவும் பிஸினஸ் தான்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். வீடு, குடும்பம் மட்டுமல்ல, பிடித்த எல்லாவற்றையும் செய்ய முடிகிறது இந்த பிசினஸ் வெற்றிகளால் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No clarity on NEET, CBSE all set for pre-medical test


No clarity on NEET, CBSE all set for pre-medical test

Aditi Tandon

Tribune News Service

New Delhi, April 21

With the government still unclear about whether it can hold the National Eligibility cum Entrance Test (NEET) for undergraduate medical admissions this year, the CBSE is geared up to hold the scheduled the All-India Pre-Medical Test on May 1.

A government source today said although the Health Ministry is keen on holding NEET-UG 2016, challenges of infrastructure and logistics were standing in the way.

“We are keen to conduct NEET-UG 2016 but the possibilities are remote,” the source said, adding the ministry was still in discussions with the CBSE on whether the central admission test, as directed by the Supreme Court, could be held this year.

The CBSE, meanwhile, is learnt to have considered its options and apprised the Health Ministry of the issues involved in going ahead with NEET-UG 2016.

To begin with, HRD Ministry sources handling CBSE affairs said the time at the disposal of the board to hold an all-India test was too little as 29 states were involved. Also, if NEET was to be held, question papers had to be made available in vernacular languages to enable all students to take the test. Accordingly, answer key assessors had to be arranged.

As of date, we are geared up for the May 1 AIPMT for which all preparations have been made. We have given a written undertaking to the Supreme Court that AIPMT results would be declared by June 5. AIPMT admit cards have been uploaded on the website for download,” an official said.

Another hindrance for NEET-UG 2016 is — many state governments have either concluded their medical entrance exam processes or are in the process of conducting them.

“To cancel these exams and call fresh applications is a huge issue. Also, every student who has taken these exams has paid application fee. Refund is an issue. Moreover, AIPMT is only nine days away now and 6.6 lakh students have applied. As of now, we are going ahead with AIPMT on May 1,” a CBSE official said.

Health Ministry officials, however, spoke in contradictory terms. “We are keen on conducting NEET-UG 2016 and are discussing with the CBSE as to whether it can be done although chances look slim,” a source said.

On how the government would hold NEET-UG if AIPMT was held as per schedule on May 1, the source said: “There are ways.”

Infra, logistical hurdles

While the Health Ministry is keen on holding National Eligibility-cum-Entrance Test (NEET-UG) 2016, challenges of infrastructure and logistics are coming in the way

Sources say they have little time to conduct the test involving 29 states. Question papers will have to be prepared in vernacular languages besides arranging answer key assessors

Also, many state governments have either concluded their medical entrance exam processes or are in the process of conducting them

Thursday, April 21, 2016

எம்ஜிஆர் 100 | 48 - அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்!


M.G.R. திரைப்படத் துறையில் இருந்தபோதும் சரி, ஆட்சியில் இருந்தபோதும் சரி, தனக்கு உள்ள செல்வாக்கை தனது குடும்பத்தார் தவறாகப் பயன்படுத்த அனுமதித்தது இல்லை. அரசு நிர்வாகத்தில் அவர்களது குறுக்கீட்டை விரும்பியதும் இல்லை. தனது உதவியாளர்கள் தவறு செய்தபோதும் அதற்கு பரிகாரம் கண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு நாள் கோட்டைக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவிக்கவும் மனு கொடுக்கவும் அவரது ராமாவரம் தோட்ட வீட்டில் எப்போ தும் கூட்டம் இருக்கும். காரில் எம்.ஜி.ஆர். ஏறும் சமயத்தில், கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென ஓடிவந்து அவரது காலில் விழுந்தார். பதற்றமடைந்த உதவியாளர்கள் அந்த நபரை தூக்கிப் பிடித்தனர். அவரை விட்டுவிடும்படி கூறிய எம்.ஜி.ஆர். அந்த நபரைப் பார்த்து, ‘‘என்ன விஷயம்?’’ என்றார்.

‘‘நான் ஈரோட்டைச் சேர்ந்தவன். உங்களைப் பார்த்து என் குறையை சொல்ல வந்தேன்’’ என்றார் அந்த நபர். ‘‘என்ன குறை?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

அங்கே நின்றுகொண்டிருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘‘இந்த ஆளு என்னை 45 ஆயிரம் ரூபாய் ஏமாத்தி விட்டாருங்க’’ என்று அந்த நபர் விசும்பலுடன் சொன்னார்.

எம்.ஜி.ஆர். சற்று நம்ப முடியாமல் கேட்டார்… ‘‘யாரு?’’

‘‘இதோ இங்கே நிக் கிறாரே, இவர்தாங்க’’ என்று மீண்டும் அந்த உதவியாளரை காண் பித்து சொன்னார் வந்த வர். தொடர்ந்து, ‘‘இன் ஜினீயரிங் காலேஜ்லே சீட் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு 45 ஆயிரம் ரூபாயை வாங்கிட்டு ஏமாத் திட்டாருங்க’’ என்றார்.

கோபத்தில் ரத்த நிற மாக மாறிய முகத்துடன் உதவியாளரை எம்.ஜி.ஆர். பார்த்தார். கருப்புக் கண்ணாடியையும் மீறி அவரது கண்கள் தகிப்பது தெரிந்தது. உண்மையை மறுக்க முடியாததோடு, எம்.ஜி.ஆரின் கோபமும் சேர, உதவியாளர் சப்தநாடியும் ஒடுங்கி சிலை போல நின்றார்.

புகார் சொன்னவரை பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘சொன்ன மாதிரி சீட் கிடைச்சிருந்தால் என்கிட்ட வருவீங்களா? இல்லை, பணம் கொடுக்கும் போது என்னைக் கேட்டுவிட்டு கொடுத்தீங் களா?’’ என்று கோபம் அடங்காமல் கேட்டார். பதிலளிக்க முடியாமல் வந்த வர் மவுனமானார். ‘‘உங்க அட்ரஸை கொடுத்துவிட்டு போங்க’’ என்று அவரை அனுப்பிவைத்தார். பொது மக்கள் எல்லாரும் சென்றபிறகு அந்த உதவியாளரை எம்.ஜி.ஆர். அழைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டார். ‘‘ஏன் இப்படி செஞ்சே? உன்னாலே எனக்கில்லே கெட்ட பேரு. நீ பண்ணின காரியத்தாலே என்னை இல்லே வந்து கேட்கிறான்’’ என்று சத்தம்போட்டு அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டார்.

அப்போது, சட்டப்பேரவை நடந்து கொண் டிருந்த சமயம். எதிர்க்கட்சித் தலைவர் கருணா நிதி. அவருக்கு இந்த விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டது. மறுநாளே இந்தப் பிரச் சினையை சட்டப்பேரவையில் எழுப்பினார். ‘‘முதல்வரின் உதவியாளர் ஒருவர், இன்ஜினீ யரிங் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ஒருவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தாராமே?’’ என்று கேட்டார்.

முதல்வர் எம்.ஜி.ஆர். எழுந்தார். எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதியைப் பார்த்து, ‘‘நீங்கள் கூறுவது உண்மைதான். சம்பந்தப் பட்ட உதவியாளரை நேற்றே பதவியில் இருந்து நீக்கிவிட்டேன். பணத்தை இழந்தவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தாகிவிட்டது.’’ என்று கூறினார்.

தனது வீட்டில் நடந்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டதே என்று எம்.ஜி.ஆர். நினைக்கவில்லை. குற்றச்சாட்டை மறுக் கவோ, சப்பைக்கட்டு கட்டவோ இல்லை. நடந்த விஷயத்தையும் அதற்கு பரிகாரம் காணப்பட்டதையும் தெளிவாக சொல்லி விட்டார்.

தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையில், தனது அண்ணன் சக்ரபாணி நடிகராக இருந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சக்ரபாணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரையும் அவர் வற்புறுத்தியதில்லை. தயாரிப்பாளர்கள் தாங்களாக விரும்பினால் எம்.ஜி.ஆரின் அண்ணனாகவோ, தந்தையாகவோ நடிக்க சக்ரபாணியை ஒப்பந்தம் செய்வார்களே தவிர, எம்.ஜி.ஆர். கட்டாயப்படுத்தியதில்லை.

சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் சில படங்களில் நடித்தார். அவரையும் கூட, தனது செல்வாக்கை பயன்படுத்தி திரையுலகில் முன்னேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததில்லை.

உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவரது குடும்பத்தினர் சிலர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனே, ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும் குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந் தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ரா யத்தை அறிந்து நடக்க வேண்டும்’ என்று 13-6-86 தேதியிட்டு முக்கிய அறிவிப்பை முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

அந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளிவந் தது. தன் குடும்பத்தார் அரசு நிர்வாகத்தை பயன் படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வதை எம்.ஜி.ஆர். ஒருபோதும் அனுமதித்த தில்லை. பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் இப்போதைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு 2014-ல் அறி வித்தது. பிரதமர் மோடி, டெல்லியில் தெருவை சுத்தம் செய்தார். இதை ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்திலேயே எம்.ஜி.ஆர். கூறியிருப்பார். சேரிப் பகுதியில் வசிக்கும் எம்.ஜி.ஆர்., சுகாதாரத்தையும் தூய்மையை யும் வலியுறுத்தி அந்தப் பகுதியில் தெருவை கூட்டி சுத்தம் செய்வார். அப்போது, ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ பாடல் இடம் பெறும். அந்தப் பாடலில் வரும் அர்த்தம் நிறைந்த வரிகள் இவை…

‘தெருத் தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு

ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட் டத்தை அமல்படுத்தினார். மீனவர்களுக்கும் நெசவாளர் களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தார்.

SC asks NAAC to hear grievances of deemed varsities


The Supreme Court on Tuesday directed the National Assessment and Accreditation Council (NAAC) to consider afresh grievances of deemed universities graded in the ‘B’ and ‘C categories.

“We direct the NAAC to dispose of the pleas of deemed universities within 12 weeks,” a Bench led by Justice Dipak Misra said.

The NAAC, in pursuance of the apex court order, has already assessed and accredited 38 deemed universities and granted grade ‘A’ to 17, ‘B’ to 20 and grade ‘C’ to one.

Representing petitioner Viplav Sharma, who filed a PIL petition against lack of educational and infrastructural standards in deemed universities, senior advocate Sanjay Hegde said these universities should always identify themselves as deemed and should not be allowed to run off-campus centres. The Bench agreed to hear the case further on July 12.

The apex court had asked the NAAC to put in public domain the gradation list of all 38 deemed universities. The NAAC gradation came after detailed scrutiny of various aspects and consideration of self-appraisal reports of these universities.








Previously, the court had rapped the University Grants Commission over lack of physical verification of infrastructure and faculty strength of deemed universities which were blacklisted by a government-appointed committee.

SC nod to deemed varsities to move NAAC for up-gradation


New Delhi, Apr 19 (PTI) In a fresh ray of hope for deemed varsities graded 'B' and 'C' categories, the Supreme Court today granted them liberty to seek upgradation by moving the National Assessment and Accreditation Council (NAAC) afresh.

A bench comprising Justices Dipak Misra and Shiva Kirti Singh said it will not go into the grievances of the deemed universities with regard to their gradation and they will have to move NAAC itself afresh.

"We direct the National Assessment and Accreditation Council to dispose off the pleas of deemed universities within 12 weeks on the issue," the court said.

Institutions graded A, B and C are considered very good, good and satisfactory respectively, and are accredited as deemed universities with the UGC. Grade 'D' is an unsatisfactory rating and is not accredited.

NAAC, in pursuance of the apex court order, has assessed and accredited 38 deemed universities across the country and granted grade 'A' to 17, 'B' to 20 and grade 'C' to one.

During the hearing, the bench, on being intimated by the authorities, clarified that the D Y Patil Education Society which also runs a medical college in Pune has been graded 'A' by NAAC.

It also recorded the submission of senior advocate Sanjay Hegde, appearing for Viplav Sharma who had filed the PIL in 2006 on the issue of deemed universities, that such varsities will have to always mention that they are "deemed".

Hegde also said they cannot be allowed to run off-campus centres. The submission was objected to by senior advocate Rajeev Dhavan, who appeared for a deemed university.

The court posted the PIL for further hearing on July 12.

Earlier, the apex court had asked NAAC to put in the public domain the gradation list of all 38 deemed universities.

NAAC has considered various aspects including self- appraisal report of these universities before putting the information regarding their gradation on the website.

Prior to this, the court had rapped the UGC over the physical verification of infrastructure and faculty strength of deemed universities which were black-listed by a government-appointed committee.

எம்ஜிஆர் 100 | 47 - உண்பது, உறங்குவது போல கொடுப்பதும் அவரது இயல்பு!


M.G.R. பிறருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் கையில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. உண்பது, உறங்குவது போல, கொடுப்பதும் அவருக்கு இயல்பானது.

‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.

அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.

‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக் கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.

‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.

காஷ்மீரில் இன்னொரு சுவையான, ஜில்லென்ற சம்பவம். எம்.ஜி.ஆர். தங்கியிருந்த அதே ஓட்டலில் இன்னொரு பகுதியில் அவரது உதவியாளர்களும் தங்கியிருந்தனர். அந்த ஓட்டலில் உணவு வகைகள் மட்டுமின்றி ஐஸ்கிரீமும் தனிச்சுவையுடன் இருக்கும். ஒரு நாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும் ஓட்டல் பணியாளரிடம் ஐஸ்கிரீம் பற்றி எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் விசாரித் தனர். விதவிதமான ஐஸ்கிரீம்கள் பட்டி யலை சொல்லிய பணியாளர் அதன் விலைகளையும் சொன்னவுடன் எம்.ஜி.ஆரின் உதவியாளர்களுக்கு ஐஸ் கிரீம் மீதான ஆசையே போய்விட்டது.

மறுநாள் படப்பிடிப்பு முடிந்து இரவு உணவுக்குப் பின் தங்கள் அறையில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் படுத்திருந்தபோது, அழைப்பு மணி ஒலியை கேட்டு கதவைத் திறந்தனர். பெரிய தட்டில் வகை வகையான ஐஸ்கிரீம் களோடு வந்த பணியாளர் ஒருவர், உள்ளே வைத்துவிட்டுச் சென்றார். நாம் ஆர்டர் கொடுக்காத நிலையில் யாருடைய அறைக்கோ செல்ல வேண்டிய ஐஸ்கிரீம்கள் தங்களுக்கு வந்ததாக நினைத்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள், ‘வந்தவரையில் லாபம்’ என்று சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம்களை காலி செய்தனர்.

மறுநாள் காலை படப்பிடிப்பில் உதவியாளர்களை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, ‘‘என்ன, நேற்றிரவு ஐஸ்கிரீம் அனுப்பினேனே, சாப்பிட்டீர்களா?’’

உதவியாளர்களுக்கு அதிர்ச்சி...குழப்பம். “வந்தது... நன்றாக இருந்தது” என்று ஒருவர் தட்டுத் தடுமாறி ஒருவழியாகக் கூறிவிட்டார்.

‘‘வேறு யாருடைய அறைக்கோ செல்ல வேண்டியது, உங்களுக்கு வந்துவிட்டது என்று நினைத்தீர்களா?’’ என்று அடுத்த ஏவுகணையை கேள்வியாக எம்.ஜி.ஆர். வீசினார்.

உதவியாளர்களின் உடல் இரவில் சாப்பிட்ட ஐஸ்கிரீமை விட ஜில்லிட்டது. ‘‘இல்லை...’’ என்று மென்று விழுங்கினர். தனக்கே உரிய புன்னகையுடன் எம்.ஜி.ஆர். போய்விட்டார்.

விஷயம் என்னவென்றால், ஓட்டல் பணியாளர்களை எம்.ஜி.ஆர். அழைத்து தன்னுடன் வந்திருக்கும் எல்லோரும் என்ன வேண்டுமென்று கேட்டனர் என்று விசாரித்து, அவரவர்கள் கேட்ட உணவு வகைகளை தன் செலவில் அனுப்பச் சொல்லியிருக்கிறார்.

இதை அறியாத எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியும் மற்றவர்களும், ‘‘இந்த அதிசய மனிதருக்கு எப்படித்தான் பிறர் மனதில் உள்ளது தெரிகிறதோ?’’ என்று சொல்லிச் சொல்லி வியந்தனர்.

ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ‘ரகசிய போலீஸ் 115’. எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பில் பாடல், சண்டைக் காட்சிகள் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவுக்கு தங்க வளையலை எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அது அவரது கைக்கு சரியாக பொருந்தும். ‘அளவு சரியாக இருக்கிறதே?’ என்று ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆச்சரியப்படுவார்.

அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்கும் பதிலை கவனித்துக் கேட்டால்தான் புரியும். ஏனென்றால், ரசிகர்களின் கைதட்டலாலும் ஆரவாரத்தாலும் தியேட்டரே இடிந்து விழுவது போலிருக்கும். எம்.ஜி.ஆர். கூறுவார்...

‘‘நான் எப்பவுமே, யாரையுமே சரியா அளவெடுத்து வெச்சிருப்பேன்!’’

எம்.ஜி.ஆர். ராணுவ அதிகாரி யாக ‘கேப்டன் சரவணன்’ என்ற பாத்திரத்தில் நடித்த படம் ‘கன்னித்தாய்’. சென்னையில் ஆங்கில படங்களே திரையிடப்பட்டு வந்த சபையர் திரையரங்கில் முதன்முதலில் ஆறு வாரங்கள் மட்டுமே என்ற விளம்பரத்துடன் வெளியான தமிழ் படம் ‘கன்னித்தாய்’.

Sunday, April 17, 2016



M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.

அ ந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.

அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.

பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.

கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை.

தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.

‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.

அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.

எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ‘‘இதை ஏன் முதலிலேயே தெரிவிக்கவில்லை?’' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.

அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில் தனக்கு தெரி விக்காமல் சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.

தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .

கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது, உண்மையும் கூட. அவர் சொன்னார்... ‘‘கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.’’

எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே....’, ‘ அரசிளங் குமரி' படத்தில் ‘சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா...’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!

- தொடரும்...

போராட்டக் களங்களாக மாறக் கூடாது!


Dinamani


By உதயை மு. வீரையன்

First Published : 11 February 2016 01:23 AM IST


ஓர் அரசாங்கத்தின் நோக்கமே தங்கள் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும். மக்கள் நல அரசாக இருப்பதுதான் மக்களாட்சிக்கு மரியாதை செய்வதாகும். மக்களுக்கான சுகாதாரத்தையும், கல்வியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். நமது அரசியல் சட்டம் கூறுவதும் அதுதான்.
14 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். நாடு விடுதலைப் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் எல்லா உறுதி மொழிகளும் எழுத்திலேயே இருக்கின்றன.
எங்கும் கல்வி பற்றியே பேச்சு, இப்போது கல்விக் கூடங்களைப் பற்றியும் பேச்சாகிவிட்டது. கல்வியே வணிகமயமாகி விட்டதால் அதன் புனிதமெல்லாம் போன இடம் தெரியவில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் ஊடுருவியுள்ள ஊழல், அரசின் முன்னேற்றப் பணிகளையெல்லாம் முடக்கிப் போட்டுவிட்டது.
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் சரிபாதியாக இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், இந்த இளைஞர்கள் நாட்டு நலனுக்குப் பயன்படுத்தப்படுகிறார்களா என்றால், இல்லையென்பதை வெட்கத்தோடும் வேதனையோடும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
ஆரம்பக் கல்வியில் இடைநிற்றல் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. உயர்கல்வி இளைஞர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. படித்த மாணவர்களின் கல்விக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறதா? வேலை தேடி வெளிநாட்டுக்குச் செல்லும் நிலைமை தடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லையே!
அமைதியாகச் செயல்பட வேண்டிய கல்விக் கூடங்கள் போராட்டக் களங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வேமுலா தற்கொலையால் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.
கல்விக்கு எல்லையே இல்லை என்று கூறுவார்கள். கல்வி வணிகத்துக்கும் எல்லையில்லாமல் போய்விட்டது. அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசும் திணறுகிறது. பெற்றோரும் பிள்ளைகளும் அலறுகிறார்கள். இந்த அலறல் யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லையே!
விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரியில் பயின்று வந்த 3 மாணவிகள் அங்குள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்தத் தற்கொலை நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அக்கல்லூரி மாணவ-மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் மாணவர் இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க ஆணையிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
எஸ்.வி.எஸ். யோகா கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் கல்லூரி தொடங்கவும் ஆண்டுதோறும் 50 மாணவர்களைச் சேர்க்கவும் 2008 ஏப்ரல் 3 அன்று அப்போதைய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் 2009 மே 26 அன்று இக்கல்லூரிக்கு 2008-2009 ஆண்டுக்கான தாற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து 2009 - 2010 ஆண்டு முதல் தொடர் தாற்காலிக அனுமதி 2014-2015 ஆண்டுவரை வழங்கி வந்துள்ளது.
இதே அறக்கட்டளைக்கு 50 மாணவர்களுடன் ஒரு ஹோமியோ பட்டப்படிப்பு கல்லூரி தொடங்குவதற்கும் முதற்கட்டமாக 2011-ஆம் ஆண்டு அப்போதைய அரசால் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் கல்லூரியின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது.
என்றாலும், அந்த அறக்கட்டளை உயர்நீதிமன்றம் சென்று தொடர்ந்த வழக்குகளால் 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உயர்நீதிமன்ற ஆணைகளின்படி 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், இந்திய மருத்துவக் கழகம் இந்தக் கல்லூரிக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என்று மருத்துவக் கழகத் தலைவர் டாக்டர் வனிதா முரளிகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவக் கழகம் இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இந்திய மருத்துவக் கழக அங்கீகாரம் பெற்று 350 ஆயுர்வேதக் கல்லூரிகளும், 10 சித்தா கல்லூரிகளும், 43 யுனானி கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்பட 9 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மாணவிகள் இறந்த சம்பவத்தில் இந்திய மருத்துவக் கழகம் அந்தக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்ததாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கழகம் அங்கீகாரம் அளிப்பதில்லை என்றும் அதன் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்காக கவுன்சில் இதுவரை தொடங்கப்படவில்லை என்றும், இதற்காக டாஸ்போஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தி டாக்டர் எச்.ஆர். நாகேந்திரா தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்தியாவில் 18 யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 ஆயிரம் பேர் யோகா இயற்கை மருத்துவர்களாக இருக்கின்றனர். இதனை ஒழுங்குபடுத்த யோகா மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனியாக கவுன்சில் அமைப்பது அல்லது மத்திய வாரியம் உருவாக்குவது எனக் கடந்த ஆண்டு செப்டம்பரில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் கிராமத்தில்தான் இந்தக் கல்லூரி செயல்பட்டு வந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனை உறுதி செய்யாமல் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவக் கல்லூரியில் சேர பல லட்சங்கள் செலுத்தி, பல கனவுகளோடு போன மாணவ - மாணவிகள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டுள்ளனர். படிப்பதைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் செய்ததாக அவர்கள் கண்ணீரோடு கூறியுள்ளனர். எந்த அடிப்படை வசதியும் இல்லை என்பதை இதன்மூலம் அறியலாம்.
பலமுறை போராடியும், தோல்வியினால் விரக்தியடைந்து போனார்கள்.
ஒரு முறை மாணவர்கள் நஞ்சினைக் குடித்தும், மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். அப்போதும்கூட மாவட்ட நிர்வாகம் மருத்துவக் கல்லூரிக்குச் சாதகமாக நடந்து கொண்டதே தவிர, மாணவ - மாணவியர் பிரச்னைக்குத் தீர்வு காண முயலவில்லை என்பதே உச்சக்கட்ட கொடுமையாகும்.
இந்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 3 மாணவிகள் கல்லூரி அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்பட்டது. ஆனால், மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர்களைக் கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாகவும் அவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
இத்தனைக்கும் பிறகு ஓர் ஆறுதலான செய்தி: அங்கு பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதியும், அவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கிலும் அவர்களை அரசுக் கல்லூரிக்கு மாற்றம் செய்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
8 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மருத்துவ மாணவர்களுக்கு இப்போதுதான் வழி பிறந்திருக்கிறது. மூன்று மாணவிகளின் மரணத்துக்குப் பிறகுதான் ஒரு முடிவு கிடைக்கும் என்றால் இந்த நாட்டை யார் காப்பாற்றுவது?
லட்சம் லட்சமாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு பாடம் கற்றுக் கொண்டவர்கள் மாணவர்கள் அல்ல, அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள். இது தேவைதானா? பணத்தைச் சேர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கும்போது கல்வியைத்தானா தேர்வு செய்ய வேண்டும்?
இழந்த பணத்தை எடுத்துக் கொண்டு விடலாம், இழந்த உயிர்களை மீட்டுத்தர முடியுமா?
கல்விச் சாலை ஒன்று திறப்பவன் சிறைச்சாலை ஒன்றை மூடுகிறான் என்றார் அறிஞர் விக்டர் ஹியூகோ. இங்கே கல்விச்சாலைகளே சிறைச்சாலைகளாக இருக்கின்றன. கல்விக் கூடங்கள் கலைக்கூடங்களாக இருக்க வேண்டும், கொலைக் கூடங்களாக மாறக் கூடாது.
படித்த மாணவர்களின் கல்விக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறதா? வேலை தேடி வெளிநாட்டுக்குச் செல்லும் நிலைமை தடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லையே! அமைதியாக செயல்பட வேண்டிய கல்விக் கூடங்கள் போராட்டக் களங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.

மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர்

மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர்

Return to frontpage


‘மகாதேவி’ படத்தில்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள ஒத்தப்பட்டி கிராமம்தான் ஒ.ஏ.கே. தேவரின் பூர்வீகம். பெற்றோர் இட்ட பெயர் கருப்புத் தேவர். பள்ளிக்கூடத்தில் மற்றொரு கருப்பு இருந்ததால் ‘ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர்’ என்பதைச் சுருக்கி ஆசிரியர் வைத்த பெயர்தான் ஓ.ஏ.கே. தேவர். மதிய உணவு இடைவேளையில் நாடகப் பாடல்களைப் பாடுவதிலும் நீளமான வசனங்களைக் கணீர்க் குரலில் பேசுவதிலும் சிறந்து விளங்கினார்.

இதைக் கருப்புத் தேவரின் தந்தையிடம் பள்ளி வாத்தியார் பெருமையாகச் சொல்லிவிட்டுப்போக, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் ஐயத் தேவர். “இவனை இப்படியே விட்டா கூத்தாடிப் பயலா போயிடுவான். நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது” என்று கூறி, பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊர் வழக்கப்படி மகனை ராணுவத்தில் சேர்த்துவிட்டார் ஐயத் தேவர்.

தந்தையின் சொல்லை மதித்து 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கேயும் பாட்டுப் பாடி, நடித்துக்காட்டி சக ராணுவ வீரர்களைச் சந்தோஷப்படுத்த, ஓ.ஏ.கே. வேலை செய்த சவுத் பட்டாலியன் முழுவதும் பிரபலமானார். நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறந்த செய்தி தந்தியாக வர, அப்போது ஊருக்கு வந்தவர், திரும்பவும் தனது முகாமுக்குத் திரும்பவில்லை. நாடகம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டது.

சக்தி நாடக சபாவின் மாணவர்

திருச்சியில் முகாமிட்டிருந்த ‘சக்தி நாடக சபா'வின்’ ‘கவியின் கனவு’ நாடகத்துக்குச் சென்றார் தேவர். நாடகம் முடிந்ததும், சபாவின் முதலாளி, சீர்திருத்த நாடகங்களின் சிற்பியாகக் கொண்டாடப்பட்ட ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமியைச் சந்தித்தார்.

‘கவியின் கனவு’ நாடகத்தை தேவர் பார்ப்பது இது முதல்முறையல்ல; 25-வது முறை. சர்வாதிகாரியை எதிர்த்துக் கதையின் நாயகன் பேசும் வசனங்களை, கிருஷ்ணசாமியின் முன்னால் அட்சரம் பிசகாமல் கணீர்க் குரலில் தேவர் பேசிக்காட்ட, “ உன் ரத்தத்தில் நடிப்பு ஓடுகிறதடா!” என்று கிருஷ்ணசாமியிடமே பாராட்டு பெற்றார். கையோடு தனது சபாவிலும் சேர்த்துக்கொண்டார். எந்த நாடகத்தை நேசித்தாரோ அதே நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் தேவர். அப்படிப்பட்ட சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்ட பலர் நடிகர்களாக இருந்தனர்.

‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.

நாடக சபாவிலிருந்து மாடர்ன் தியேட்டர்

சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.

நண்பரைப் பிரிந்த தேவர், சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார்.

இதனால் தேவருக்குக் கடற்கரையில் நண்பர்கள் கிடைத்தார்கள். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியே வந்தார் தேவர்.

மீண்டும் சென்னைக்கு வந்தவரை அரவணைத்துக்கொண்டார் உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் கதவெண் 10-ல், ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒர் அறையை எடுத்துத் தங்கிக்கொண்டு, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருடனும் மூன்றாவதாக இதே அறையில் வந்து சேர்ந்தார் ஓவியர் ராமச்சந்திரன்.

ரோஷத்துடன் மார்டன் தியேட்டரை விட்டு, வந்துவிட்டாலும் உடனடியாகத் துணை நடிகர் வாய்ப்பு கூட கிடைக்காத நிலை. பட்டுக்கோட்டைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடினார்கள். தேர்ந்த ஓவியரான ராமச்சந்திரன், சினிமா செட் வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அவர் வாங்கிவரும் வாரக் கூலிதான் நடிகரையும் கவிஞரையும் காப்பாற்றிவந்தது. ஒரு சூழ்நிலையில் ஓவியருக்கும் சம்பள பாக்கி விழ, பல நாட்கள் பட்டினியாகவே ஓடியிருக்கின்றன.

பசி தாள முடியாத நண்பர்கள், வீட்டு உரிமையாளரின் துணைவியாரிடம் சட்டைக்குக் கஞ்சி போட வேண்டும் என்று கூறி அரிசிச் சோறு வடித்த கஞ்சியை வாங்கிவந்து உப்பு போட்டுப் பருகிப் பசி தீர்த்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலை ஓவியர் ராமச்சந்திரன் மூலம் கலைவாணருக்குத் தெரிய, தேவரை உடனே அழைத்துவரும்படி ஆள் அனுப்பினார்.

கைகொடுத்த கலைவாணர்

திறமையானவர்களைக் கைதூக்கிவிடுவதிலும் கையில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பதிலும் பெயர் பெற்ற வள்ளலாக விளங்கிய கலைவாணர், அப்போது பிரபல எடிட்டர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓ.ஏ.கே. தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார். வீராசாமி என்ற அடியாளாக நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் பளிச்சென்று அடையாளம் கிடைத்தது தேவருக்கு.

அந்தப் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் காரணமாக தேவருக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களே அமைய, மறுபடியும் கலைவாணரிடம் வந்து நின்றார் தேவர். அப்போது ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லி ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தை தேவருக்கு வாங்கிக் கொடுத்தார் கலைவாணர். திருமலை மன்னராக வெண்கலக் குரலில் தேவர் பேசி நடிக்க, மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பும் உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து இடம்பெறத் தொடங்கியதும் சிவாஜி நடிக்கும் படங்களுக்கும் அழைப்புகள் குவிந்தன. இருபெரும் கதாநாயகர்களின் படங்களில் மாறி நடிக்க ஆரம்பித்த தேவரின் நடிப்பு சிவாஜிக்குப் பிடித்துப்போக, தனது சொந்த நாடக மன்றமான சிவாஜி நாடக மன்றத்தில் மிகப் பெரிய இடம்கொடுத்தார் சிவாஜி. சிவாஜியுடன் திரையில் நடிக்கும் அதேநேரம் நாடகமேடையிலும் வெளுத்துக்கட்டினார் தேவர்.

அன்று இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எம். என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.எஸ். பாலைய்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். அதை மாற்றிக்காட்டியது 1957-ல் வெளியான ‘மகாதேவி’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து நடித்தார்.

“வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற தேவர் பேசிய வசனமும் அவரது நவரச நடிப்பும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார் ஓ.ஏ.கே.தேவர். அவரது அடையாளம் வில்லன் நடிப்பு மட்டும்தானா? அவரது திரையுலகப் பயணத்தின் சுவடுகள் நிறைவுப் பகுதியாக அடுத்த வாரம்.

ரயில், பேருந்துகளில் ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே’ பயன்படுத்தினால் வெகுமதி

TAMIL MURASU SINGAPORE

ரயில், பேருந்து பயணத்தின்போது ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே’ அட்டையைப் பயன்படுத்துவோருக்கு வெகுமதி வழங்கும் இயக்கத்தை ‘நெட்ஸ்’ நேற்று அறிமுகப்படுத்தியது. டிரான்சிட்லிங்க் டிக்கெட் அலுவலகங்களிலும் எம்ஆர்டி ரயில் நிலைய வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் ஏப்ரல், மே மாதங்களில் விற்கப்படும் குறிப்பிட்ட அளவே உள்ள ‘எங்கிரி பர்ட் மூவி ஃப்ளாஷ்பே’ அட்டைகளும் இந்த இயக்கத்தில் அடங்கும் என நெட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எம்ஆர்டி நிலையங்களில் உள்ள மதிப்புக் கூட்டு டிக்கெட் சாதனங்களில் ஒரு வெள்ளி கழிவை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.

ஜூன் 5 முதல் ஞாயிறுதோறும் ரயில் சேவை 13 நிலையங்களில் தாமதமாக தொடங்கும்

Home

வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு- மேற்கு ரயில் பாதைகளில் உள்ள 13 நிலையங்களில் வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமதமாக தொடங் கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு=மேற்கு பாதையில் ஜூக்கூன் நிலையம் முதல் குவீன்ஸ்டவுன் நிலையம் வரை யிலும் வடக்கு=தெற்கு பாதையில் புக்கிட் கோம்பாக் நிலையம் முதல் ஜூரோங் ஈஸ்ட் நிலையம் வரை யிலும் ரயில் சேவை காலை 7 மணிக்குத் தொடங்கும் என எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரி வித்தது. ஜூன் 5ல் தொடங்கும் இந்த மாற்றம் பொது விடுமுறை தவிர்த்து மற்ற நாட்களில் டிசம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும்.

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...