Friday, October 6, 2017

தினமும் 3 ஜிபி டேட்டா : இது ஏர்டெல் சலுகை

பதிவு செய்த நாள்

05அக்
2017 
16:02
புதுடில்லி : ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் அதிக டேட்டா சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் சமீபத்திய அறிவிப்பாக ரூ.799 க்கு பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு தினமம் 3 ஜிபி டேட்டா வழங்க உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அளவில்லாத எஸ்டிடி மற்றும் லோக்கல் கால்களை 28 நாட்களுக்கு வழங்க உள்ளது. இதே போன்று ரூ.549 சேவை திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டாக்களையும், ரூ.999 க்கு தினமம் 4 ஜிபி டேட்டாக்களையும் பெற முடியும். தினமம் 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதன் முதலில் பிஎஸ்என்எல் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்களுக்கு உதவுங்க: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

பதிவு செய்த நாள்

05அக்
2017 
23:53
புதுடில்லி : மூத்த குடி­மக்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் ஆகி­யோ­ருக்கு, வங்கி சேவை­களை செய்து தரும்­படி, அனைத்து வங்­கி­க­ளுக்­கும், ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்டு உள்­ளது.

சமீ­ப­கா­ல­மாக, மூத்த குடி­மக்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் ஆகி­யோ­ருக்கு, வங்கி சேவை முறை­யாக அளிக்­கப்­ப­ட­வில்லை என்­பது தொடர்­பாக, ரிசர்வ் வங்­கிக்கு ஏரா­ள­மான புகார்­கள் வந்­தன. இதை­ய­டுத்து, அனைத்து வங்­கி­க­ளுக்­கும், ரிசர்வ் வங்கி சுற்­ற­றிக்கை அனுப்பி உள்­ளது. 
அதில், ‘மூத்த குடி­மக்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் ஆகி­யோ­ருக்கு, வங்கி சேவை­களை, கட்­டா­யம் அளிக்க வேண்­டும்; அவர்­களை, புறக்­க­ணிக்­கக் கூடாது. மேலும், ‘டிஜிட்­டல்’ பரி­வர்த்­த­னை­களை, அவர்­கள் மேற்­கொள்ள, வங்­கி­கள் உதவ வேண்­டும். ‘வங்கி சேவை தொடர்­பான, அனைத்து பரி­வர்த்­த­னை­க­ளுக்­கும், தகுந்த உத­வி­ களை, வங்­கி­கள் செய்து தர வேண்­டும். இது குறித்த விரி­வான அறிக்கை, இம்­மாத இறு­திக்­குள் வெளி­யி­டப்­படும். ‘கூட்­டு­றவு வங்­கி­க­ளி­லும், நடப்பு கணக்கு துவக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது’ என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
 
'சென்னையிலிருந்து பதில் வரவில்லை': கர்நாடக சிறைத்துறை விளக்கம்
பதிவு செய்த நாள்06அக்
2017
03:41




பெங்களூரு: ''சசிகலா தாக்கல் செய்த, 'பரோல்' மனு தொடர்பாக, சென்னை நகர போலீஸ்கமிஷனரிடமிருந்து, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வரவில்லை,'' என, பெங்களூரு, பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர், சோமசேகர் தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சை :

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், சசிகலா. இவரின் கணவர் நடராஜன், கல்லீரல், சிறுநீரக செயலிழப்பால், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்காக, 15 நாட்கள், பரோல் கேட்டு, சசிகலா விண்ணப்பித்திருந்தார். போதிய ஆவணம் இல்லாததால், மனு நிராகரிக்கப்பட்டது.

சிறைத்துறை கேட்ட ஆவணங்களுடன், இரண்டாவது முறையாக, நேற்று முன்தினம், மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த சிறைத்துறை, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் கேட்டு, சென்னை போலீஸ் கமிஷனருக்கு நேற்று முன்தினம் இரவே கடிதம் எழுதியிருந்தது.

'சென்னை கமிஷனர் வழங்கும் பதிலை வைத்தே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர் சோமசேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சசிகலாமனு மீது, கர்நாடக சிறைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற தகவல் பரப்பப்பட்டது.

தகவல் :

இது தொடர்பாக,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, ''சென்னை போலீஸ் கமிஷனருக்கு, நேற்று முன்தினமே கடிதம் அனுப்பி விட்டோம். அவரது உதவியாளரும், அதை உறுதிப்படுத்தினார்; ஆனால், இதுவரை பதில் வரவில்லை,'' என்றார்.

இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாத்திடம் விசாரித்த போது, ''கவர்னர் தொடர்பான நிகழ்ச்சிகளில் இருப்பதால், பரோல் குறித்த தகவல் எதுவும் எனக்கு தெரியவில்லை; இது குறித்து, பின்னர் பேசுகிறேன்,'' என்றார்.

இதற்கிடையே, சசிகலா பரோலில் விடுவிக்கப்பட்டால், சென்னை, தி.நகரிலுள்ள வீட்டில் தங்கவுள்ளதாக, அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக, கர்நாடக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட செய்திகள்

இரவில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி



வேலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்தமழை காரணமாக சலவன்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
அக்டோபர் 05, 2017, 06:07 AM

வேலூர்,

வேலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்தமழை காரணமாக சலவன்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கொளுத்தியது. இரவில் பலத்தமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் திடீரென்று மழைபெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. சுமார் 45 நிமிடத்திற்கும் மேல் தொடர்ந்து மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தொடர்ந்து இரவில் லேசான மழைபெய்து கொண்டிருந்தது. இந்த மழை காரணமாக வேலப்பாடி ராமர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஆதிலட்சுமி என்பவருடைய வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது.அதேபோன்று வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. சுமார் 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிக்குள்ளானார்கள். தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் வீட்டக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று வேலூர் நகரின் பல்வேறு இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

வேலூர் –66.5, திருப்பத்தூர் –42.3, வாணியம்பாடி –34, காவேரிப்பாக்கம் –33.6, ஆற்காடு –33, ஆம்பூர் –28, மேலாலத்தூர் –20.2, அரக்கோணம் –18, ஆலங்காயம் –17.8, வாலாஜா –17, சோளிங்கர் –6.
மாவட்ட செய்திகள்
சேலத்தில் கனமழை: குமரகிரி ஏரி நிரம்பி 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது




சேலத்தில் பெய்த கனமழையால் குமரகிரி ஏரி நிரம்பி 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சூறைக்காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அக்டோபர் 06, 2017, 04:30 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாநகரில் நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அப்போது காற்று பலமாக வீசியதால் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் நின்ற ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் அஸ்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் முறிந்து சாலையில் விழுந்த தகவலை அறிந்த தீயணைப்பு மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அங்கு சென்று சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, அம்மாபேட்டை பகுதியில் பெய்த தொடர் மழையால் குமரகிரி ஏரி நிரம்பியது. இதனால் ஏரி தண்ணீர் அங்குள்ள மதகுகள் வழியாக வெளியேறி பச்சப்பட்டி பகுதியில் புகுந்தது. அங்குள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது.

இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் அவதிப்பட்டனர். பின்னர் அவர்கள், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை குடம் மற்றும் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். மின்சாரம் தடைபட்டதால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் சீக்கிரம் புறப்பட்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

கிச்சிபாளையம், களரம்பட்டி, அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அழகாபுரம், பெரமனூர், மெய்யனூர், மணக்காடு, ஜான்சன்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலையிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்திரம் பகுதியில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் கழிவுநீர் தேங்கி நின்றது. வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

பல இடங்களில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகினர். குறிப்பாக சங்ககிரி, வாழப்பாடி, தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஓமலூர் உள்பட பல இடங்களில் கனமழை பெய்தது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரையிலும் நீடித்தது. இதனால் வழக்கத்தை விட அங்கு குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காட்டில் பல மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வீரபாண்டி அருகே உள்ள வாழகுட்டப்பட்டியில் மழை பெய்தபோது அங்குள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி அருகே நீர் இடி விழுந்தது. இதனால் அந்த பகுதியில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் சீலநாயக்கன்பட்டி சுபாஷ் சந்திரபோஸ் நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் இவருடைய வீட்டின் சுவர் முழுவதும் நனைந்து, நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சுவர் அருகில் தான் நாகராஜூம், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன்கள் முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். ஆனால் சற்று தள்ளி சுவர் இடிந்து விழுந்ததால் இவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

சங்ககிரி-105.3, வாழப்பாடி-102.3, தம்மம்பட்டி-90.6, கெங்கவல்லி-90.4, ஓமலூர்-89, ஏற்காடு-87.4, எடப்பாடி-78.2, சேலம்-60, காடையாம்பட்டி-58.4, பெத்தநாயக்கன்பாளையம்-58, வீரகனூர்-52, ஆத்தூர்-46.6, மேட்டூர்-31.2, ஆனைமடுவு-30, கரியகோவில்-5.
மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது



பலத்தமழையால் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
அக்டோபர் 06, 2017, 05:00 AM
மதுரை,

மதுரை நகரிலும், மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வருகிறது. என்றாலும் பகலில் கடுமையாக வெயிலும் கொளுத்தி வருகிறது.

இந்த நிலையில் மதுரை நகரிலும் சுற்றுப்பகுதியிலும் நேற்று முன்தினம் மாலை இடி-மின்னலுடன் பலத்தமழை கொட்டியது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ்நிலையம், கீழவெளிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம் மற்றும் சிலஇடங்களில் ரோடுகளில் அதிகமாக தண்ணீர் தேங்கியது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பஸ்கள் பல ஆங்காங்கே பழுது ஏற்பட்டு நின்றன. எனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீர் வடிந்ததும் போக்குவரத்து சீரானது.

பொன்னகரம் ரெயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. எனவே அந்த பகுதியில் வாகனப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரைவீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து, மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.

இதனால் பழைய திருக்கல்யாணமண்டபம், வடக்காடிவீதி வழியாக சுவாமிசன்னதி கொடிக்கம்ப பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. தண்ணீர் புகுந்ததால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் திக்குமுக்காடி, தண்ணீரை கடந்து வெளியேறினார்கள்.

இதுகுறித்து கோவில் இணைகமிஷனர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் தேங்கியமழைநீரை அகற்ற இரவோ இரவாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கோவிலை சுற்றியுள்ள வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகள் அகற்றப்பட்டன. அதன்மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கோவிலின் உள்பகுதி முழுமையாக துப்புரவு பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மதுரை விமானநிலையத்தில் 64 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற பகுதிகளில் பதிவான மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:- மேட்டுப்பட்டி-55.6, விரகனூர்-38, இடையபட்டி-25.2, மேலூர்-25, பேரணை-17, மதுரைநகர், கள்ளந்திரி-தலா 16, புலிப்பட்டி-5.6, தணியாமங்கலம்-5.2.
மாநில செய்திகள்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியின்முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை



சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியின் முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அக்டோபர் 06, 2017, 04:15 AM
சென்னை,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ராஜூ சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் என் மனைவி பாக்கியாவை பிரசவத்துக்காக சேர்த்தேன். அங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லாததால் என் மனைவிக்கு சிகிச்சை அளிக்கவில்லை. முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதுடன், மற்ற டாக்டர்களையும் பணி செய்யவிடாமல் தடுப்பதும் தெரியவந்தது. வேறுவழியின்றி என் மனைவியை வேறொரு மருத்துவமனையில் சேர்த்தேன். நோயாளிகள் பாதிக்கப்படுவதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதுகலை மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

டாக்டர்களை கடவுளாக மக்கள் பார்க்கிறார்கள். கடவுளே போராட்டத்தில் ஈடுபடலாமா? முதுகலை மருத்துவ மாணவர்கள் ஏற்கனவே மருத்துவ படிப்பை முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். சாதாரண தொழிலாளர்களை போன்று டாக் டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல.

டாக்டர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராட பல்வேறு வழிகள் உள்ளன. டாக்டர்களின் போராட்டம் காரணமாக ஏழைகள் தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்கும் 211 பேரில் 151 பேர் அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக உள்ளனர்.

அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு மேற்படிப்பு படித்து வருகின்றனர். மற்ற 60 பேருக்கு அரசு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசிடம் இருந்து சம்பளம் மற்றும் உதவித்தொகையை பெற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கவோ, மற்ற டாக்டர்களை பணி செய்யவிடாமல் தடுக்கவோ முடியாது.

ஏதாவது ஒரு காரணத்தை கூறி இந்த புனிதமான பணியை மேற்கொள்ள மாட்டோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே, முதுகலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவும், மற்ற டாக்டர்கள், பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா பரோலில் இன்று வெளியே வருகிறார்?



பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா பரோலில் இன்று வெளியே வருவார் என்று தெரிகிறது.

அக்டோபர் 06, 2017, 05:00 AM
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கேட்டு சசிகலா சார்பில் சிறை அதிகாரிகளிடம் கடந்த 3-ந் தேதி மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரிசெய்து மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்யும்படியும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சசிகலாவின் வக்கீல்கள் நேற்று முன்தினம் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி மீண்டும் புதிய பரோல் மனுவை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். அந்த மனு சரியாக இருப்பதால் அதை ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சசிகலாவின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக சென்னை போலீசாரிடம் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கருத்து கேட்டு இருந்தனர்.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சசிகலாவுக்கு பரோல் வழங்குவது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் 3 கேள்விகளை எழுப்பி அதுபற்றி கருத்து கேட்டு இருப்பதாகவும், அதற்கான பதில்களை அவர்களுக்கு அனுப்பிவைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

சசிகலாவின் பரோல் தொடர்பான நடவடிக்கைகள் முடிந்துவிட்ட போதிலும், நேற்று கர்நாடகத்தில் அரசு விடுமுறை என்பதால், அவருக்கு பரோல் வழங்குவது தொடர்பான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதுபற்றி பரப்பன அக்ரஹாரா சிறையின் சூப்பிரண்டு சோமசேகர் கூறுகையில், சசிகலா பரோல் தொடர்பான உத்தரவு எதுவும் இன்று (அதாவது நேற்று) பிறப்பிக்கப்படவில்லை என்றார்.

எனவே பரோல் உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது. இதுபற்றி டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி கூறுகையில், பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்று வெளியே வருவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Wednesday, October 4, 2017

Trains cancelled, passengers stranded
By Venkatesan Parthasarathy | Express News Service | Published: 03rd October 2017 01:50 AM |

Last Updated: 03rd October 2017 07:36 AM

CHENNAI: The alleged failure of the Railways to inform about their train cancellation left around 30 passengers stranded at the Tambaram station on Monday. Blaming the Railways for the communication gap, passengers took up the issue with station officials. Arrangements had to be made for accommodating the affected in other trains.The Southern Railway on September 26 announced the operation of a special train between Tambaram and Sengottai on all days in October, except on Sundays and Tuesdays. It was to leave Tambaram at 6 am and reach its destination at 6 pm the same day. But on September 28,all 21 services were cancelled due to operational reasons. Instead, reservations were opened for a new train between the two places.

Senior railway officials told Express they had made a public announcement of the new train scheduled for departure at 5 am. It was to be operated on the same dates as the cancelled one.

Though the officials said all passengers on the original train were informed about its cancellation, a scene of confusion which prevailed on Monday morning suggested the otherwise.

Sources witness to the scene told Express that around 30 passengers, who had come to board the 6 am train, waited on platform No. 7 at the station. After waiting for some time, they approached the station officials. “They claimed not receiving any information about the cancellation of the original train and held Railways accountable for the mistake,” said the source, adding that a few were agitated.

A station official, on condition of anonymity, said they had to issue a clarification and pacify the passengers. Authorities were then alerted. “We ensured alternative accommodation for the affected passengers on Guruvayur Express and Cholan Express to enable them to reach their destinations,” the official said.

ICMR Chief Soumya Swaminathan Appointed WHO Deputy Director General

Dr Soumya Swaminathan will hold the newly created post

The World Health Organization (WHO) on Tuesday appointed Soumya Swaminathan one of two deputy directors general, the first time such a post has been ever created within the organisation. The position is also the highest post held by an Indian in the WHO. Dr. Swaminathan is currently the Director General of the Indian Council of Medical Research (ICMR).
Dr. Swaminathan has been appointed as Deputy Director General for Programmes and Ms. Jane Ellison, who was Special Parliamentary Adviser to the UK’s Chancellor of the Exchequer, has been appointed as a Deputy Director General for Corporate Operations (DDC).

Renowned for TB work

Dr. Swaminathan is a paediatrician and a globally-recognised researcher on tuberculosis and HIV, who has over 30 years of experience in clinical care and research. From 2009 to 2011, according to the WHO, she also served as Coordinator of the UNICEF/UNDP/World Bank/WHO Special Programme for Research and Training in Tropical Diseases (TDR) in Geneva.
She has been a member of several WHO and global advisory bodies, including the WHO Expert Panel to Review Global Strategy and Plan of Action on Public Health, Innovation and Intellectual Property, the Strategic and Technical Advisory Group of the Global TB Department at WHO. She was also the Co-Chair of the Lancet Commission on TB.
The announcement was made by WHO’s director general Tedros Adhanom Ghebreyesus. Representatives from 14 countries were chosen to be part of Ghebreyesus’ team and 60% of them are women, according to a statement from the organisation.
'சேமிப்புக்கு அதிக வட்டி தரும் சிறிய வங்கிகள்'

செ.சல்மான்


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் அவர்களுடன் போட்டிபோடும் தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கு, வைப்பு நிதிக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி வழங்கிக்கொண்டிருக்கும் சூழலில், புதிதாக வந்துள்ள பேமென்ட் வங்கிகள் அதிகமான வட்டி வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.

தேசிய வங்கிகளும், பெரிய தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு 4 சதவிகிதமே வட்டி வழங்குகின்றன. அதிலும் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. வைப்பு நிதிக்கு 6 முதல் 7 சதவிகிதத்துக்குள்தான் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வகை கணக்குகளை அவசரத்துக்கு முடித்துக்கொள்ள முடியாது. வைப்பு நிதியில் கடன் வாங்கினால், 12 சதவிகிதம் வட்டி வசூல் செய்கிறார்கள். மக்களின் சூழ்நிலையை அறிந்து அதிக வட்டி தருவதாகச் சில போலி நிதி நிறுவனங்கள் மொத்தமாகச் சுருட்டிக்கொண்டு ஓடுகின்றனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி அனுமதியுடன் புதிதாகச் செயல்படத்தொடங்கியுள்ள பேமென்ட் வங்கிகளான பந்தன் வங்கி, ஆர்.பி.எல் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு 6 சதவிகித வட்டி அளிக்கின்றன. கோடக், யெஸ் வங்கி போன்றவை தங்களுடைய பலவிதமான சேமிப்புக் கணக்குகளுக்கு 6 முதல் 7 சதவிகிதம் வரை வட்டி தருவதாக அறிவித்துள்ளன. சூரியோதை வங்கி, ஒரு லட்சம் வரை நிர்வகிக்கும் சேமிப்புக் கணக்குக்கு 6.25 சதவிகிதமும், அதற்கு மேலான சேமிப்புக் கணக்குகளுக்கு 7.25 சதவிகிதமும் தருகிறது. மற்ற வங்கிகள் டெபாசிட்டுகளுக்குத் தரும் வட்டியைவிட அதிகமாகச் சேமிப்புக் கணக்குகளுக்கு இந்தப் புதிய வங்கிகள் தருகின்றன. இதனால், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பேமென்ட் வங்கிகளில் கணக்குத் தொடங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக முதல்வரை கண்டுகொள்ளாத திருமலை தேவஸ்தானம்
பாலமுருகன். தெ

vikatan


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருமலைக்கு சாமி தரிசனம்செய்ய மனைவியோடு அக்டோபர் 2-ம் தேதி மாலை பத்மாவதி கெஸ்ட்ஹவுசில் தங்கினார். ஒரு மாநிலத்தின் முதல்வர் தரிசனத்துக்கு வருகிறார் என்றால், முன்கூட்டியே தகவல்கள் தெரிவிக்கப்படும். அப்படி இருக்கும்போது, தமிழகத்தின் முதல்வர் என்றுகூட பார்க்காமல், அவரை தேவஸ்தானத்தின் உயரதிகாரிகள் யாரும் உரிய மரியாதை செய்யாமல், கடைநிலை ஊழியரை விட்டு தரிசன மரியாதை செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது.

 விஜய் மல்லையா,டெண்டுல்கர், சினிமா பிரபலங்கள், சேகர்ரெட்டி போன்றவர்கள் எல்லாம் வந்தால், அவர்களை தேவஸ்தானத்தின் உயர் அதிகாரிகளான செயல்அலுவலர் அல்லது துணைச் செயல் அலுவலர் வரவேற்று, தரிசன ஏற்பாடுகள் செய்துகொடுக்கிறார்கள். ஆனால், சாமியை தரிசிக்க வந்த தமிழக முதல்வருக்கு ஜே.இ.ஓ கூட ஆலய மரியாதை வழங்காமல், தேவஸ்தானத்தின் மூன்றாம் நிலை ஊழியரை வைத்து ஆலய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், அதிகமான வருமானம் ஈட்டும் திருமலை ஆலயத்தின் உண்டியல் வருமானத்தில் 60 சதவிகிதம், தமிழக பக்தர்களின் காணிக்கை என்று தேவஸ்தானமே சொல்லியிருக்கிறது. இந்நிலையில், தமிழக மக்களின் பிரதிநிதியை தேவஸ்தானம் இவ்வாறு அவமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இதேபோல அக்டோபர் 1-ம் தேதி, தமிழக அரசின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருமலைக்கு வந்து தரிசனம் செய்தார். அப்போது அவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.

HC to hear plea challenging inquiry commission to day..DC

Sasikala’s parole rejected on technical grounds

It may be reconsidered if fresh application is made: Officials

Former AIADMK general secretary V.K. Sasikala’s parole plea was rejected by the Prisons Department officials of Karnataka as it was not complete and did not have adequate documents.
Ms. Sasikala had moved for parole for 15 days through her lawyers, as her husband M. Natarajan is critically ill in Chennai. Parole application had gone along with medical certificate stating that her husband is suffering from kidney and liver failure.
Jail officials, however, rejected the application late on Tuesday evening saying it was incomplete as a certificate from a local MLA or MLC or gazetted officer that states he is seriously ill is not part of the application. If a fresh application is filed with this certificate, it may be considered again, said the officials.
Even if it is an emergency parole application, where the prison superintendent has powers to allow it, rules mandate that the jail head will seek the opinion of the local police station in Chennai on whether it could be processed, keeping in mind security and sensitivity concerns. However, the police are yet to approach their Chennai counterparts in this regard, according to sources.
Ms. Sasikala has been in jail since February after the Supreme Court upheld her conviction in a disproportionate assets case. She is serving a four-year term at the Bengaluru Central Jail along with two of her relatives, Ilavarasi and Sudhakaran, in the same case. She has completed six months in prison, after which she becomes eligible to apply for parole.

Flight delayed on first day of operation

Due to bad weather conditions and poor visibility, the new direct flight form Chennai to Belagavi was delayed by around three hours on Tuesday. It was the first day of its operation.
The Spicejet flight was scheduled to arrive at 9.05 a.m. but could not land due to poor visibility.
It flew over the city two-three times, but could not descend.
Then, it flew to Bengaluru and returned to Belagavi only at 12.24 p.m.
It took off from here to Bengaluru a few minutes later.
It again returned to Belagavi in the evening and left for Chennai at 7.15 p.m.
Schoolchildren, members of some organisations and trade bodies welcomed the passengers and crew of the new aircraft, said a release from Rajesh Kumar Maurya, airport director.

Getting duplicate certificates made easy

University has simplified procedure

Madurai Kamaraj University has simplified the procedure for its graduates, postgraduates and other degree holders to obtain duplicate copies of degree certificates, mark statements and other certificates.
A statement issued by Vice-Chancellor P.P. Chellathurai on Tuesday said the university had earlier mandated submission of ‘non-traceable’ certificate obtained from the police regarding the lost certificates, a newspaper notification issued by the candidate on the loss and an affidavit for the application of duplicate copies of the certificates.
Now, application for duplicate copies could be made by paying the prescribed fee and submitting a valid photo identity proof like Aadhaar card, Elector’s Photo Identity Card or driving licence, the statement added.

Registration for nursing candidates

Candidates who have completed post basic B.Sc. (Nursing) course in Indira Gandhi National Open University from the following 5 study centres prior to 2012 are approved by the State Government, Tamil Nadu Nurses and Midwives Council and Indian Nursing Council to register with the TN Council.
The centres are: College of Nursing, Sri Ramakrishna Institute of Paramedical Sciences, Coimbatire; M.A. Chidambaram College of Nursing, Chennai; Sri Adhiparasakthi College of Nursing, Kancheepuram; Saveetha College of Nursing, Chennai and Madras Medical College, Chennai. The candidates are directed to approach the Tamil Nadu Nurses and Midwives Council in Mylapore. Now the registrations are being carried out, following a government order said S. Ani Grace Kalaimathi, registrar of the Council.

இனியும் சகித்துக் கொள்ள மாட்டேன்: அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது; லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் - வெளிப்படையாக ஆவேசம் காட்டிய கருணாஸ்

Published : 03 Oct 2017 09:50 IST

நீரை.மகேந்திரன்சென்னை


தமிழக அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது. அமைச்சர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. கடமை ஆற்ற வேண்டிய அதிகாரிகளும் லஞ்சத்தில் திளைக்கின்றனர் என்று திருவாடணை எம்எல்ஏ கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மறைந்த முதல்வர் அம்மாவின் ஆட்சி நடக்கிறது என்று தற்போதைய முதல்வரும் அமைச்சர்களும் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் சொல்வதில் கொஞ்சம்கூட உண்மையில்லை. இது அம்மாவுக்கு களங்கத்தை உருவாக்கும் ஆட்சி.
கல்விக் கொள்கை, சமூக நீதி திட்டங்கள், சிறுபான்மையினர் ஆதரவு, மாநில உரிமை எதிலும் அம்மாவின் கொள்கைகளை கடைபிடிக்கவில்லை. மத்திய அரசு சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துகிறார்கள். அமைச்சர்களும், அமைச்சர்களின் உறவினர்களும்தான் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த உருப்படியான திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. எல்லாவற்றுக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் சென்றால் யார் ஆள் என்பதை பொறுத்துதான் வேலை நடக்கிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரே வெளிப்படையாக லஞ்சம் கேட்கிறார். ஏழைப் பெண்கள், விதவைத் தாய்மார்களுக்கு அளிக்க வேண்டிய சத்துணவு ஆயா வேலைக்கு கூட 3 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். இதை இனிமேலும் சகித்துக் கொள்ள கூடாது என்பதால்தான் இப்போது வெளிப்படையாக சொல்ல வேண்டி இருக்கிறது.
இந்த ஆட்சி இனிமேலும் தொடர்வதில் சட்டப் பேரவை உறுப்பினரான எனக்கு விருப்பமில்லை. மக்களை சந்தித்து நேரடியாக விளக்கங்களை அளிக்க உள்ளேன். ஓபிஎஸ் அணியா, ஈபிஎஸ் அணியா, தினகரன் அணியா என்கிற அடையாளம் எல்லாம் இல்லை. இரட்டை இலை சின்னத்தில் நிற்க மறைந்த முதல்வர் அம்மா வாய்ப்பளித்தார். அதை உருவாக்கி தந்தவர் சின்னம்மா. அந்த விசுவாசம் உள்ளது.
ஊழலை ஒழிப்பேன் என்றுதான் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதை நம்பிய கோடிக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். ஆனால் தமிழ்நாட்டில் ஊழல் அரசாங்கத்துக்கு வெளிப்படையாக மத்திய அரசு துணை போவது நியாயமா என்கிற கேள்வியை சராசரி இளைஞனாக மட்டுமல்ல; குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்குறுதி கொண்ட உறுப்பினராகக் கேட்கிறேன்.
இந்த ஊழல் அரசு நிலைத்திருப்பது நியாயமா. வாக்களித்த தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் இது. முதலாவதாக, நான் இப்போது வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறேன். அடுத்ததாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக பேசத் தொடங்குவர்கள்.
இவ்வாறு கருணாஸ் கூறினார்.
திரை விமர்சனம்: கருப்பன்

Published : 03 Oct 2017 09:38 IST




ஜல்லிக்கட்டில் தனது முரட்டுக்காளையை அடக்கினால், தங்கையைத் திருமணம் செய்து தருவதாகச் சவால் விடுகிறார் செல்வந்தர் பசுபதி. காளையை அடக்கி, அவரது தங்கை தன்யாவை கரம்பிடிக்கிறார் முரட்டு இளைஞரான விஜய் சேதுபதி. தன்யாவின் மீது ஒருதலைக் காதல் கொண்டிருந்த முறைப்பையன் பாபி சிம்ஹா, அவரை அடையத் துடிக்கிறார். இதற்காக அவர் பின்னுகிற வன்மம் கலந்த சூழ்ச்சி வலையில் இருந்து விஜய்சேதுபதி, தன்யா, பசுபதி எப்படி மீள்கிறார்கள் என் பதுதான் கதை.

தமிழ் சினிமா பலமுறை துவைத்துக் காயப்போட்ட கதை தான் என்றாலும், தனது பாணியில் அதைப் புதிதாகக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்கு நர் பன்னீர்செல்வம், அதற்காக அண்ணன் – தங்கை பாசம், அம்மா - மகன் பாசம், தாய் மாமனின் மோகம், புதுமணத் தம்பதியின் உருக்கம், நெருக்கம் என கதாபாத்திரங்களை உணர்வுபூர்வமாக வார்த்த விதத்திலும், வசனங்களை எழு திய விதத்திலும் ஈர்த்துவிடுகிறார்.

சட்டையைக் கழற்றி உடம்பைக் காட்டி, ஏறுதழுவி அக்மார்க் கிராமத்து வாலிபராக என்ட்ரி கொடுக்கிறார் விஜய்சேதுபதி.

‘‘கருப்பனைப் பார்த்தா மாடு வாடிவாசலையே தாண்டாது.இந்த மாடு முட்டி செத்தா வாடிவாசல்ல சிலை வைக்கச் சொன்னேன்னு சொல்லு’’ என களத்தில் நின்று வசனம் பேசுவதிலும், உடல்மொழியிலும் ஜல்லிக்கட்டின் வீரத் தைக் கடத்துகிறார்.

மனவளர்ச்சி குன்றிய தாயை, தன் குழந்தையைப் போல நேசிப்பது, மனைவியின் சொல்லுக்கு மட்டுமே அடங்கிப்போவது,கெட்ட மனிதர்கள் மீது எந்தச் சூழ்நிலையிலும் கைநீட்டுவது என சராசரி கிராமத்து கதாபாத்திரமாகத் தன்னை வெளிப்படுத்தும் விஜய்சேதுபதி, சண்டை, பாடல் காட்சிகளில் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகனாக மாறிவிடுகிறார்.

விஜய்சேதுபதியைத் தூக்கிச் சாப்பிடுகிறது தன்யாவின் நடிப்பு. விஜய்சேதுபதியுடனான காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் அந் நியோன்யம் அருமை. விஜய் சேதுபதியின் மாமாவாக வரும் சிங்கம் புலியின் நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது. சொந்தமாக தொழில் தொடங்க முடிவு எடுக்கும் விஜய்சேதுபதியிடம் சிங்கம் புலி, ‘‘நீ வேண்ணா டாஸ்மாக் கடை போட்டுக்குறியா? வேணாம் வேணாம். அப்புறம் கவர்மென்ட் எப்படி குடும்பம் நடத்தும்?’’ என்று கூறும்போதும்,

‘‘விவசாயம் பண்ணு. இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம் பண்றவனைத்தான் இந்த உலகம் சாமியா கும்பிடப் போகுது’’ என்று கூறும்போதும் கைதட்டல்.

குடிகாரன், சண்டை போடுபவன் என்று விஜய்சேதுபதியைப் பற்றி ஊர்க்காரர்கள் சொல்லும்போது, ‘‘அவன் குடிப்பான். ஆனா, குடிகாரன் இல்லை. சண்டை போடுறதுதான் ஆம்பளைக்கு அழகு’’ என வசனம் பேசும் இடத்தில் இளைஞர்களை ஈர்க்கிறார் பசுபதி. கிளைமாக்ஸில் பாபி சிம்ஹாவின் நடிப்பு சிறப்பு.

இமானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஜல்லிக்கட்டு காட்சி, இறுதி சண்டை, கிராமத்து தெருக்களின் அழகு என போட்டி போட்டு காட்சிகளை மனதில் நிறைத்திருக்கிறது சக்திவேலின் ஒளிப்பதிவு.

அடுத்தடுத்து வரும் காட்சிகளை ஊகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்திருந்தால் கருப்பன் அனைவருக்குமே ‘விருப்பன்’ ஆகியிருப்பான்.

திரை விமர்சனம்: கருப்பன்

ஜல்லிக்கட்டில் தனது முரட்டுக்காளையை அடக்கினால், தங்கையைத் திருமணம் செய்து தருவதாகச் சவால் விடுகிறார் செல்வந்தர் பசுபதி. காளையை அடக்கி, அவரது தங்கை தன்யாவை கரம்பிடிக்கிறார் முரட்டு இளைஞரான விஜய் சேதுபதி. தன்யாவின் மீது ஒருதலைக் காதல் கொண்டிருந்த முறைப்பையன் பாபி சிம்ஹா, அவரை அடையத் துடிக்கிறார். இதற்காக அவர் பின்னுகிற வன்மம் கலந்த சூழ்ச்சி வலையில் இருந்து விஜய்சேதுபதி, தன்யா, பசுபதி எப்படி மீள்கிறார்கள் என் பதுதான் கதை.
தமிழ் சினிமா பலமுறை துவைத்துக் காயப்போட்ட கதை தான் என்றாலும், தனது பாணியில் அதைப் புதிதாகக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்கு நர் பன்னீர்செல்வம், அதற்காக அண்ணன் – தங்கை பாசம், அம்மா - மகன் பாசம், தாய் மாமனின் மோகம், புதுமணத் தம்பதியின் உருக்கம், நெருக்கம் என கதாபாத்திரங்களை உணர்வுபூர்வமாக வார்த்த விதத்திலும், வசனங்களை எழு திய விதத்திலும் ஈர்த்துவிடுகிறார்.
சட்டையைக் கழற்றி உடம்பைக் காட்டி, ஏறுதழுவி அக்மார்க் கிராமத்து வாலிபராக என்ட்ரி கொடுக்கிறார் விஜய்சேதுபதி.
‘‘கருப்பனைப் பார்த்தா மாடு வாடிவாசலையே தாண்டாது.இந்த மாடு முட்டி செத்தா வாடிவாசல்ல சிலை வைக்கச் சொன்னேன்னு சொல்லு’’ என களத்தில் நின்று வசனம் பேசுவதிலும், உடல்மொழியிலும் ஜல்லிக்கட்டின் வீரத் தைக் கடத்துகிறார்.
மனவளர்ச்சி குன்றிய தாயை, தன் குழந்தையைப் போல நேசிப்பது, மனைவியின் சொல்லுக்கு மட்டுமே அடங்கிப்போவது,கெட்ட மனிதர்கள் மீது எந்தச் சூழ்நிலையிலும் கைநீட்டுவது என சராசரி கிராமத்து கதாபாத்திரமாகத் தன்னை வெளிப்படுத்தும் விஜய்சேதுபதி, சண்டை, பாடல் காட்சிகளில் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகனாக மாறிவிடுகிறார்.
விஜய்சேதுபதியைத் தூக்கிச் சாப்பிடுகிறது தன்யாவின் நடிப்பு. விஜய்சேதுபதியுடனான காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் அந் நியோன்யம் அருமை. விஜய் சேதுபதியின் மாமாவாக வரும் சிங்கம் புலியின் நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது. சொந்தமாக தொழில் தொடங்க முடிவு எடுக்கும் விஜய்சேதுபதியிடம் சிங்கம் புலி, ‘‘நீ வேண்ணா டாஸ்மாக் கடை போட்டுக்குறியா? வேணாம் வேணாம். அப்புறம் கவர்மென்ட் எப்படி குடும்பம் நடத்தும்?’’ என்று கூறும்போதும்,
‘‘விவசாயம் பண்ணு. இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம் பண்றவனைத்தான் இந்த உலகம் சாமியா கும்பிடப் போகுது’’ என்று கூறும்போதும் கைதட்டல்.
குடிகாரன், சண்டை போடுபவன் என்று விஜய்சேதுபதியைப் பற்றி ஊர்க்காரர்கள் சொல்லும்போது, ‘‘அவன் குடிப்பான். ஆனா, குடிகாரன் இல்லை. சண்டை போடுறதுதான் ஆம்பளைக்கு அழகு’’ என வசனம் பேசும் இடத்தில் இளைஞர்களை ஈர்க்கிறார் பசுபதி. கிளைமாக்ஸில் பாபி சிம்ஹாவின் நடிப்பு சிறப்பு.
இமானின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஜல்லிக்கட்டு காட்சி, இறுதி சண்டை, கிராமத்து தெருக்களின் அழகு என போட்டி போட்டு காட்சிகளை மனதில் நிறைத்திருக்கிறது சக்திவேலின் ஒளிப்பதிவு.
அடுத்தடுத்து வரும் காட்சிகளை ஊகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்திருந்தால் கருப்பன் அனைவருக்குமே ‘விருப்பன்’ ஆகியிருப்பான்.
துணை மருத்துவ படிப்புகள் இன்று மீண்டும், 'கவுன்சிலிங்'

சென்னை: துணை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள, 2,772 இடங்களை நிரப்புவதற்கானகவுன்சிலிங், விடுமுறைக்கு பின், இன்று மீண்டும் துவங்குகிறது.
பி.எஸ்சி., நர்சிங்., - பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, 8,003 இடங்களில், 5,231 இடங்கள் நிரம்பின. மீதம், 2,772 இடங்கள் காலியாக உள்ளன.
ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. மீதமுள்ள, 2,772 இடங்களுக்கு, தரவரிசை பட்டியலில், 8,507 முதல், 12 ஆயிரத்து, 849 இடங்கள் பெற்றுள்ள, 4,342 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 
'வரும், 7 வரை, கவுன்சிலிங் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துஉள்ளது.

NewsToday 18.10.2024