Friday, October 13, 2017

ஆதார் உடன் தொலைபேசி எண் இணைக்க கொடுத்த விலை ரூ. 1.3 லட்சம்! 


By DIN  |   Published on : 12th October 2017 04:06 PM  

Hackers_-Reuters

 

நாடு முழுவதும் தனி நபரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மேலும், தனி நபருடைய தொலைபேசி, பான் கார்டு, வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்தும் அதார் உடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதார் எண் உடன் தனது தொலைபேசி எண் இணைப்பது தொடர்பான விவகாரத்தின் போது இளைஞரிடம் ரூ. 1.3 லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மும்பையைச் சேர்ந்தவர் சாஷ்வந்த் குப்தா, இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தனது ஆதார் எண் உடன் தொலைபேசி எண் இணைக்க முயற்சித்தார்.
அப்போது, குப்தாவின் நம்பருக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண் 121-க்கு சிம் கார்டு நம்பருடன் குறுஞ்செய்தி அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது ஆதார் மற்றும் தொலைபேசி எண் இணைப்பது தொடர்பான நடவடிக்கை என்று நினைத்த குப்தாவும் அதில் குறிப்பிட்டது போன்று செய்துள்ளார்.
அவ்வாறு குப்தா குறுஞ்செய்தி அனுப்பிய சில மணித்துளிகளில் அவரது தொலபேசி எண் செயலிழந்தது. அவருக்கு குறுஞ்செய்தி வந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அது செயல்பாட்டில் இல்லை.
இதற்குள்ளாக குப்தாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.3 லட்சம் திருடப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தொலைபேசியில் வரும் இதுபோன்ற அழைப்புகள் குறித்து காவல்துறையில் புகார் செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

    வழிமாறும் வழிபாடுகள்


    By சொ. அருணன்  |   Published on : 13th October 2017 02:35 AM  |
    மனிதன் தனக்குத் தேவையான சக்திகளைப் பெறுவதற்குரிய வேண்டுதல் புரியும் இடமாகத்தான் தொடக்க காலங்களில் கோயில்கள் விளங்கின. பின்னாள் தன் மனத்தில் நிறைந்திருந்த மாயைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கும் - அமைதி அடைவதற்கும் அது மனநல மருத்துவமனையாகவே மாறியது.
    வழிபடுதல் என்றால் முறையான பாதையில் பயணித்தல் என்பதுதான் உண்மைப் பொருள். முன்னோர் வகுத்த வழியில் பயணிக்கிறேன் என்பதுதான் வழிபடுதலாகிய ஆலயம் தொழுவதின் அடிப்படை நோக்கமே.
    இறையை இயற்கை வடிவாகக் கண்டு உணர்ந்து மனத்தின் உள்நிறுத்தி தானும் அதுவாக முழுமையாக ஆகிவிட முயற்சித்தலே வழிபாட்டின் இலக்கு. அதனால்தான் மனித்தப் பிறவியும் வேண்டும் என்கிறார்கள் ஞானிகள்.
    ஆலயத்தில் ஆன்மாவை இலயப்படுத்த பல வழிமுறைகள் உண்டு. முதலில் உடற்பயிற்சியிலிருந்து தொடங்குகிறது வழிபாடு. கூப்பி வணங்குதல் தொடங்கி கும்பிட்டு வீழ்தல் வரையிலும் யோகக் கலையின் அத்தனை முறைகளையும் ஆலயத்தில் முறையாகப் பின்பற்ற இயலும். 
    ஆலயம் நுழைவதற்கு முன்னரே நீர்நிலைகளில் தங்களது உடலைச் சுத்தம் செய்து கொள்வதோடு அந்தந்தத் தலங்களின் தீர்த்தத்தை அமுதம் என அள்ளிப் பருகிக் கொள்வது வழிபாட்டின் முதற்கடமை. 
    ஓங்கி உயர்ந்த கோபுர வாயில் ஒருவித காற்றுவடிப்பானா இருந்து உள்நுழைகிற நமக்கு உயிர்வளியை நெஞ்சமெல்லாம் நிரப்பித் தந்து விடுகிறது. அங்கேயே நமது உடலின் அலுப்பெல்லாம் தீர்ந்து விடுகிறது.
    அடுத்துக் கருங்கற் பாறைகளால் செப்பம் செய்யப்பட்ட கருவறைச் சுற்றுகளில் வலம் வருவது அடுத்த நடைப் பயிற்சி. ஆலயம் சுற்றி வந்த பின்னால் குளத்தங்கரையிலோ அல்லது மரத்தடியிலோ உயிர்வளியை நன்றாக அடிவயிறுவரை உள்ளிருத்துவதற்காக சம்மணமிட்டு அமர்வது அமைதி நிலைப்படுதல். இப்படியான பல பயிற்சிகள் உண்டு.
    இரு கை விரல்களால் இடவலம் மாற்றிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழுகிற தோப்புக் கரணப் பயிற்சி மூளைக்கும் உடலுக்கும் நல்ல பயிற்சி தருவதோடு குண்டலினிக்கும் காரணமாகிறது என்கிறது யோகக் கலை.
    ஆலயங்களில் வழங்கப்படும் உணவுகள் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டவை. பெருமாள் ஆலயங்களில் வழங்கப்படும் துளசி இலை, சிவன் ஆலயங்களில் தரும் வில்வ இலை, அருகம்புல் இவையெல்லாம் நோயையும் கிருமிகளையும் நீக்கும் வல்லமை கொண்டவை.
    பூக்கள் மருத்துவ குணம் கொண்டவை. அவை வெறும் பூசைக்கு மட்டும் உரியதன்று. பூக்களைக் கையால் தொடுவதாலும், அவற்றைப் பெண்கள் தலையில் சூடிக் கொள்வதாலும் பலவித நலன்கள் ஏற்படுகின்றன. நம்மைச் சுற்றிலும் நறுமணச் சூழலை ஏற்படுத்துகின்றன. 
    ஒரு காலத்தில் ஆண்களும் கழுத்தில் மாலைகளை அணிந்திருந்தனர். சிலர் தங்கள் காதுகளிலும் பூக்களைச் செருகியிருப்பர். இவை இப்போது நாகரிகக் குறைவாகக் கருதப்படுகிறது.
    இருப்பவர்கள் தங்கள் பொருள்களைப் படையலாக்கி இறைவனின் பெயரால் இல்லாதவர்களுக்கு வழங்கும் அறக்கூடமாகவும் ஆலயங்கள் விளங்கின. அங்கே மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் பலவும் உணவும் அன்பும் பெற்று நன்கு வாழ்ந்தன.
    இப்படியாக உடலுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்களிலிருந்து தொடங்கி மனத்திற்குள் புகுந்திருக்கும் மாயைத் துயரங்கள் வரைக்கும் எல்லாவற்றுக்கும் தீர்வு தந்து நலத்தை வழங்கும் ஆலயங்களை அணுகுவதும் அங்கு மேற்குறித்த பயிற்சிகளைப் பின்பற்றுவதும்தானே உண்மையான வழிபாடு.
    ஆனால் இன்றைய நிலையில் ஆலயங்கள் விற்பனை நிலையங்களாகவும் வணிகக் கூடங்களாகவும் மட்டுமே விளங்குகின்றன. பெரும்பாலான ஆலயங்கள் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட இன்றி நோயைப் பரப்பும் கழிவுகள் நிறைந்தனவாக உள்ளன. 
    பளபளக்கும் சலவைக் கற்களாலும் வண்ண வண்ண ஒளிவிளக்குகளாலும் காதைப் பிளக்கும் ஒலிபெருக்கிகளா
    லும் கூட்டம் நிரம்பி வழியும் செயற்கையான ஆலயங்களே இன்றைக்கு நிறைய உள்ளன.
    இதுபோன்ற ஆலயங்களுக்குச் செல்லும் மக்களும் வங்கிகளில் பணம் செலுத்தச் செல்வதைப் போலக் கடமைக்காக வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் எண்ணம் பக்தியில் ஈடுபடுவதில்லை. 
    எத்தனைதான் கைபேசியை ஆலயத்துக்குள் உபயோகப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினாலும் தவிர்க்க முடியாமலும் தவிர்க்க விரும்பாமலும் அதைப் பயன்படுத்துபவர்களே அதிகம்.
    சுற்றுலாத் தலங்களைப் போல ஆலயங்களைக் கருதிக்கொண்டு சுயபடம் எடுப்போரும் குழுப்படம் எடுப்போரும் கும்மாளக் கூச்சல் இடுகின்றனர். 
    ஆலயத்தில் விற்கப்படும் சிற்றுண்டிகளை வாங்கி நினைத்த இடத்தில் அமர்ந்து உண்டுவிட்டு கழிவுகளைக் காற்றில் பறக்க விடும் அவலம். அங்கு ஈக்கள் தொடங்கி அழுக்குகளால் உருவாகும் கொசுக்கள் வரைக்கும் பெருகி வாழ்கின்றன.
    கூட்டம் அதிகமாக இருக்கும் ஆலயங்கள் இவ்வாறென்றால், ஆளரவமற்ற ஆலயங்கள் நிலையோ துயரம் நிறைந்தவை. வெளவால்களும் கோட்டான்களும் குடியேறியிருக்கும் அங்கே ஒட்டடைகளுக்கும் பஞ்சமில்லை. 
    அந்த ஆலயங்களுக்குள்ளே அரிய கல்வெட்டுகள் தமிழக வரலாற்றைச் சுமந்து கொண்டிருக்கின்றன. அதன்மீது வரலாற்றின் பெருமை அறியாத சிலர் தங்களது பெயர்களைக் கரிக்கோட்டில் கிறுக்கி வைப்பதை என்னென்பது?
    அறக்கூடங்களாகவும் கலைக்கூடங்களாக விளங்கிய ஆலயங்கள் இன்றைய சூழலில் ஒருபுறம் வணிகத்தலமாகவும் மற்றொருபுறம் பாழடைந்தும் சீரழிந்தும் வருவது காலக் கொடுமையல்லாமல் வேறென்ன?

    தாய்லாந்து சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!



    By RKV  |   Published on : 12th October 2017 03:50 PM  |  
    thailand_beaches


    தாய்லாந்தின் பிரிஸ்டைன் பீச்சுக்குப் போய் விடுமுறைகளில் குதூகலிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லாமல் போகும்? கடற்கரைகளும், தென்னை மரங்களும், வெண்ணெயில் வடித்தெடுத்த சிற்பங்கள் போன்ற அழகுப் பெண்களும், குழந்தைகளுமாக சொர்க்கபூமியாயிற்றே தாய்லாந்து. ஆனால், இனி தாய்லாந்துக்குச் செல்வதென்றால், புறப்படுவதற்கு முன்பு நீங்கள் சில விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகே அங்கே செல்ல வேண்டும். அதிலும் கடற்கரைச் சந்தோசங்களுக்காக மட்டுமே தாய்லாந்து செல்லும் ஆசை கொண்டவர்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு.
    தாய்லாந்தின் கடற்கரைப் பகுதிகளில், சுற்றுலாப் பயணிகள் புகைத்து விட்டு வீசிச் சென்ற எண்ணற்ற சிகரெட் துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போன தாய்லாந்து அரசு, தற்போது, தாய்லாந்து கடற்கரையில் புகை பிடிக்கத் தடை விதித்திருக்கிறது. தடையை மீறி யாரேனும் சட்டத்தை மதிக்காமல் கடற்கரைகளில் புகை பிடிப்பார்களானால் அவர்களுக்கு கேள்வியே இன்றி ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து மெரைன் மற்றும் கோஸ்டல் மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. கோஸ்டல் துறையின் தலைவரான ஜதுபன் புருபாத், அடுத்த மாதத்திற்குள் தாய்லாந்தின் 20 க்கும் மேற்பட்ட கடற்கரைகளில் இந்தத் தடை நீட்டிக்கப் படவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தாய்லாந்தின் இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சரான ஜெனரல் சுரஸக் காஞ்சனரத்துடன் கலந்தாலோசித்து விட்டே இம்முடிவை எடுத்திருப்பதாக ஜதுபன் தெரிவித்துள்ளார்.
    அதன் அடிப்படையில் தற்போது மா பிம், லாம் சிங், பாங் சேன், சா அம், காயோ தகியப், போ புத், ஹாத் சாஇ ரீ, பதாங், பட்டாயா, ஜோம்தியோன், கோ ஹாய் நாக், கோ ஹாய் நா உள்ளிட்ட 20 கடற்கரைகளில் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
    பதாங் கடற்கரைப்பகுதியில் 2.5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் சுமார் 63,000 முதல் 1,38,000 வரையிலான சிகரெட் துண்டுகள் தாய்லாந்து மெரைன் மற்றும் கடல்வளத்துறை மூலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சர்வே அந்தமான் கோஸ்டல் ரிசர்ச் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கண்காணிப்பின் கீழ் நடத்தி முடிக்கப் பட்டுள்ளதாம். எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிகளில் எல்லாம் தடையை மீறி எவரேனும் புகைபிடித்தால் தாய்லாந்து போலீஸ் வண்டு அள்ளிக் கொண்டு போகும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓர் ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது 1 பாட்( 3000 டாலர்கள்) தண்டமோ வசூலிக்கப்படுமாம்.
    அதற்காக சுற்றுலாப் பயணிகள் தங்களது புகைக்கும் சுதந்திரத்தில் நாங்கள் தலையிடுவதாக நினைத்து விடக்கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்கு புகைப்பதற்கென்றே தனியான இடங்கள் கடற்கரைப்பகுதிகளில் ஒதுக்கப்படும். அவர்கள் அந்த இடங்களில் மட்டும் புகைக்க எந்த விதத் தடைகளும் இல்லை. ஆனால் புகைத்துக் கொண்டே கடலில் கால் நனைக்க ஆசைப்பட்டால் அதற்கு மட்டும் அனுமதி இல்லை. கூடிய விரைவில் தாய்லாந்தில் உள்ள அனைத்துக் கடற்கரைப் பகுதிகளிலும் இந்த தடையை அமுல்படுத்தும் திட்டம் எங்களிடம் இருக்கிறது. என்றும் ஜதுபன் தெரிவித்தார்.
    எனவே விடுமுறைகளில் தாய்லாந்து சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள் இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு உஷாராகப் புறப்பட்டீர்கள் என்றால் நல்லது!
    Image Courtesy: Financial Express.


      தீபாவளிக்கு சென்னையிலிருந்து பேருந்துகள் புறப்படும் இடங்கள்
      By DIN | Published on : 13th October 2017 04:39 AM


      தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் பேருந்துகள் புறப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

      தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அக்.15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 11, 645 சிறப்புப் பேருந்துகள் கீழ்கண்ட நான்கு பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளன.

      கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தின் வெளிப்பகுதி, பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:

       வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்பத்தூர், எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பேருந்துகள்.

      அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:

       ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும்.

      பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்: 

      ஆர்க்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்.

      தாம்பரம் சானட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் 
      பேருந்துகள்: 

      திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைத் தாண்டிச் செல்லும் பேருந்துகள்.

      சைதாப்பேட்டை மாநகரப் பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் 
      பேருந்துகள்:

       கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

      கட்டுப்படுத்தி அனுப்பும் இடங்கள்: 

      கீழ்க்கண்ட ஆறு இடங்களில் பேருந்துகளை நிறுத்தி கட்டுப்படுத்தி, சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      ஜீரோ பாயிண்ட், இரும்புலியூர், மதுரவாயல் டோல் பிளாசா, பி.எச் ரோடு, கார்த்திகேயன் நகர், எம்.ஜி. ஆர். யுனிவர்சிட்டி, நெற்குன்றம், தூர்சன்பவர் சிஸ்டம். அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகளை கோயம்பேடு மலர் வணிக வளாகத்தில் உள்ள திறந்தவெளி இடத்திலும், லாரிகள் நிறுத்தும் இடத்திலும், பருப்பு மார்க்கெட்டிலும் நிறுத்திவைத்து, அங்கிருந்து போக்குவரத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

      ஆம்னி பேருந்துகள்: ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு சந்தை "உ' சாலையில் உள்ள நிறுத்தத்திலிருந்து, "ஆ' சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்லவேண்டிய ஊர்களுக்கு செல்லலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

      கனரக மற்றும் சரக்கு வாகனங்கள்...தீபாவளி பண்டிகை போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு, வரும் 15, 16, 17 மற்றும் 23 ஆகிய நான்கு நாள்களிலும், பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மார்க்கங்களிலிருந்து சென்னை வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மேற்கண்ட வாகனங்கள் மாதவரம் ஜி.என்.டி சாலை, மாதவரம், பாடியநல்லூர் டோல்கேட் அருகில், திருவள்ளூர் சாலை, கள்ளிகுப்பம் டோல்கேட் , மதுரவாயல் டோல்கேட், வெளிவட்ட சாலை நசரத்பேட்டை, ஜி.எஸ்.டி ரோடு, செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், வண்டலூர் பாலம் வழியாக இயக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      சைதாப்பேட்டையிலிருந்து அண்ணாசாலை வழியாகவும், அடையாறிலிருந்து சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை வழியாகவும் பெருங்களத்தூர் வரை செல்லும் வாகனங்களை கான்கார்டு சந்திப்பில் வேளச்சேரி பிரதான சாலை வழியாக பெரும்பாக்கம், அகரம்தென் சாலை, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வழியாக மாற்றுப் பாதையில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக... 100 அடி சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் சிப்பெட் கம்பெனி அருகிலிருந்து கிண்டி நோக்கி கத்திப்பாரா மேம்பாலம் வந்து, சின்னமனை, தாலுகா அலுவலக ரோடு , கான்கார்டு சந்திப்பு, வேளச்சேரி மெயின்ரோடு, பெரும்பாக்கம், அகரம் தென் ரோடு, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது.
      100 அடி சாலை, பாடியிலிருந்து கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச். சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. 

      பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-ஆவது அவென்யு, 2-ஆவது நிழற்சாலை, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு , மாந்தோப்பு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

      கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் மதுரவாயல் நோக்கிச் செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13-ஆவது பிரதான சாலை, 2-ஆவது நிழற்சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

      வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே. நகர் சந்திப்பு , ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாகச் செல்ல வேண்டும். பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டால், வண்டலூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், பெருங்களத்தூர் சந்திப்பிலிருந்து காந்தி ரோடு, நெடுங்குன்றம், ஆலபாக்கம், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் திருப்பிவிடப்படும்.

      தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள்...பண்டிகைக் காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் உள்ளதால், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் வாகன ஓட்டுநர்கள் இ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

      ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிச.31-க்குள் இடைத் தேர்தல்

      By DIN | Published on : 13th October 2017 05:19 AM


      சென்னைஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்தார்.

      தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டப் பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

      இதையடுத்து, அத்தொகுதியில் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, நிகழாண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.

      இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் பணக் கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் ஏப்ரல் 9-ஆம் தேதி அறிவித்தது. மேலும், உகந்த சூழல் வரும் போது இத்தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஆறு மாதங்களாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.

      இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதியை தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி வியாழக்கிழமை அறிவித்தார். அப்போது, சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, "இது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும்' என்றார்.

      ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலை விரைந்து நடத்தக் கோரி அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று நம்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

      சுற்றுலா பயணியருக்கு பிரான்ஸ் அழைப்பு




      சென்னை: ''பிரான்ஸ் செல்லும், இந்திய சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை, அதிகரிக்க செய்யும் வகையில், தற்போது, 48 மணி நேரத்தில், 'விசா' வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, பிரான்ஸ் சுற்றுலா மேம்பாட்டு நிறுவன இயக்குனர், ஷீட்டல் முன்ஷா கூறினார்.

      சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: இந்தியர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், சுற்றுலா அனுபவங்களை வழங்குவதில், பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது. இதனால், பிரான்ஸ் நாட்டிற்கு, சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2016ல், ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் வந்துள்ளனர். இது, 2014ஐ காட்டிலும், 53 சதவீதம் உயர்வு.பிரான்சில், ஏராளமான சுற்றுலா இடங்கள், தலைசிறந்த சின்னங்கள், வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள் உள்ளன. 2024ல், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள், பிரான்சில் நடக்க உள்ளன. எனவே, இந்தியர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில், 48 மணி நேரத்தில், 'விசா' வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை - பாரீஸ் இடையே, தினசரி விமான சேவையும் துவக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
      விடுதலை!

      ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதி...சந்தேகத்தின் பலனை அளிப்பதாக ஐகோர்ட் தீர்ப்பு

      அலகாபாத்: டில்லியை அடுத்துள்ள உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாணவி, ஆருஷி தல்வார், 14, கொலை வழக்கில் அவரது பெற்றோரும், பல் டாக்டர் களுமான, ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வாரை விடுதலை செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.



      டில்லியை அடுத்துள்ள, உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த, பல் டாக்டர்கள், ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வார் தம்பதியின் ஒரே மகளான, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த, 14 வயதான ஆருஷி தல்வார், 2008ல், தன் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்த, ஹேம்ராஜ், 45, மீது, போலீசார் சந்தேகப் பட்டனர். இதற்கிடையே, மறுநாள் காலையில், வீட்டின் மொட்டைமாடியில், ஹேம்ராஜ் கழுத்தறுபட்ட நிலையில், சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

      அவரது தலையிலும் காயங்கள் இருந்தன. இதையடுத்து, ஆருஷியின் தந்தை, ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். ஹேம்ராஜ் - ஆருஷி இடையே உறவு இருந்ததாகவும், இதனால், இருவரையும், ராஜேஷ் தல்வார் கொலை செய்ததாகவும் புகார் எழுந்தது. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை, சி.பி.ஐ.,க்கு மாறியது. ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் உட்பட சிலரை, சி.பி.ஐ., கைது செய்தது. போதிய சாட்சியம் ஏதுமில்லை என, சி.பி.ஐ., நீதிமன்றம், ராஜேஷ் தல்வாரை விடுதலை செய்தது.

      இதற்கிடையே, இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக, சி.பி.ஐ., கூறியது. 'கொலை செய்தது ராஜேஷ் தல்வார் தான்; ஆனால், அதை நிரூபிக்க, போதிய சாட்சியங்கள் இல்லை' என, சி.பி.ஐ., கூறியது. காஜியாபாத், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், தல்வார் தம்பதிகள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கை தொடரும்படி உத்தரவிட்டது.

      கொலை செய்தது, சாட்சியங்களை கலைத்தது, சதி செய்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆருஷி, ஹேம்ராஜ் இடையே தகாத உறவு இருந்தது. இதை நேரில் பார்த்ததால், இருவரையும் தல்வார் தம்பதி கொலை செய்துள்ளனர்' என, சி.பி.ஐ., தரப்பில் வாதிடப்பட்டது.

      மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில், 2013, நவ., 26ல், ராஜேஷ் தல்வார் மற்றும் நுாபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.அதை எதிர்த்து, இருவரும்தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், நேற்று தீர்ப்பு அளித்தது. 'யூகங்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும், இருவரும் குற்றவாளிகள் என்பதை தீர்மானிக்க முடியாது. சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு அளிக்க வேண்டும். அதன்படி, இருவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

      இதையடுத்து, 2013ல் இருந்து, தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வார், இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனாலும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த, ஆருஷியின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் அகலவில்லை.

      கண்ணீர் விட்டனர்

      விடுதலை தீர்ப்பு தெரிய வந்ததும், ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார், கண்ணீர் விட்டு அழுததாக, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆருஷி கொலை வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும்,அதன் விபரங்கள் ராஜேஷ் தல்வாருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, 'சிறை அதிகாரிகளை கட்டிப் பிடித்து, அவர் கண்ணீர் விட்டு அழுதார்' என, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நுபுர் தல்வார் அமைதியாக இருந்தார். ஆனால், கண்ணீர் விட்டு அழுதார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக தீர்ப்பு நாளான நேற்று காலையில், இருவரும் நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

      ஆருஷி கொலை வழக்கு கடந்து வந்த பாதை

      மே 16, 2008: டாக்டர்களான, ராஜேஷ் --- நுாபுர் தல்வார் தம்பதியின், 14வயது மகள் ஆருஷி, படுக்கை அறையில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டு வேலைக்காரர், ஹேம்ராஜ் குற்றவாளியாக இருக்கலாம் என சந்தேகம்

      மே 17: ஹேம்ராஜும், பிணமான நிலையில், தல்வார் தம்பதியின் வீட்டு மாடியில் கண்டெடுப்பு

      மே 18: ஆப்பரேஷன் செய்பவர்கள் தான், இக்கொலையை செய்துள்ளனர் என, போலீஸ் சந்தேகம்

      மே 23: ராஜேஷ் தல்வார் கைது

      மே 31: வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைப்புஜூன் 13: ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் கிருஷ்ணா கைது

      ஜன., 5, 2010: ராஜேஷ் தல்வார் தம்பதிக்கு, 'உண்மை கண்டறியும் சோதனை' நடத்தப் பட்டது

      டிச., 29: 'ராஜேஷ் தல்வார் முக்கிய குற்றவாளி; ஆனால் போதுமான ஆதாரம் இல்லை' என, சி.பி.ஐ., மனு தாக்கல்

      ஜன., 25, 2011: காஜியாபாத் கோர்ட்டில், ராஜேஷ் தல்வார் தாக்கப்பட்டார்
      பிப்., 9: வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய, சி.பி.ஐ.,க்கு, காஜியாபாத் நீதிமன்றம் கண்டிப்பு. மேலும், ராஜேஷ் மற்றும் நுாபுர் தல்வார் குற்றவாளி என்றும், சாட்சியங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்றும் உத்தரவு; சி.பி.ஐ., வழக்கை தொடர்ந்தது.

      ஏப்., 11: நுாபுர் தல்வாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கும்படி, சி.பி.ஐ., வாதம்

      ஏப்., 18: நுாபுர் தல்வார், ஏப்., 30க்குள் கோர்ட்டில் ஆஜராகும்படி, காஜியாபாத் நீதிமன்றம் உத்தரவு

      ஏப்., 30: ஆஜராகாததால் நுபுல் தல்வார் கைது

      செப்., 25: சுப்ரீம் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, நுபுல் தல்வாருக்கு ஜாமின்
      ஏப்ரல், 2013: ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகிய இருவரையும் கொலை செய்தது, தல்வார் தம்பதி தான் என, சி.பி.ஐ., வாதம்

      நவ., 26: தல்வார் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து, காஜியாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

      செப்., 5, 2016: நுாபுர் தல்வார் மூன்று வார பரோலில் வெளியே வந்தார்

      அக்., 12, 2017: தல்வார் தம்பதியின் மேல் முறையீட்டு வழக்கில், அவர்களை விடுதலை செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

      தொலைபேசி, 'சரண்டர்' அதிகரிப்பு : தடுக்க பி.எஸ்.என்.எல்., புது உத்தி

      தரைவழி தொலைபேசி இணைப்புகளை, திருப்பி தரும் வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்த, புதிய உத்தியை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் கையாள துவங்கி உள்ளது. அதற்கு, நல்ல பலனும் கிடைத்துள்ளது. தமிழகத்தில், தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், பி.எஸ்.என்.எல்., தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும், மொபைல் போன்கள் பெருக்கத்தால், தரைவழி தொலைபேசிகளை, 'சரண்டர்' செய்வோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க, புதிய உத்தியை, பி.எஸ்.என்.எல்., கையாள துவங்கி உள்ளது. 

      இது குறித்து, தமிழ்நாடு தொலை தொடர்பு வட்ட விற்பனை பிரிவு பொது மேலாளர், கருணாநிதி கூறியதாவது: தமிழக தொலை தொடர்பு வட்டத்தில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட, தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்ததால், தொலைபேசி வாடிக்கையாளர்கள், இணைப்பை திருப்பித் தருவது அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில், 7,000பேர் திருப்பித் தருகின்றனர்.அந்த எண்ணிக்கையை குறைக்க, தற்போது, இணைப்பை சரண்டர் செய்ய வருவோரை அழைத்து பேசுகிறோம்.
      அவர்களிடம், இணைப்பை ரத்து செய்வதற்கான காரணங்களை கேட்கிறோம். அவர்கள் கூறும் குறைகளை, உடனடியாக சரி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறோம். அதனால், தரைவழி இணைப்பை தொடர, பலர் சம்மதித்து உள்ளனர். தற்போது, ஒரு மாதத்திற்கு, 7,000 பேர், புதிய இணைப்பு பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

      ஏழாவது சம்பள கமிஷனில் ஏமாற்றம் : அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பேட்டி


      மதுரை: மதுரையில் அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறியதாவது:
      தமிழக அரசின் ஆறாவது சம்பள கமிஷனில் அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றோம். அதற்கு அரசு இன்னும் தீர்வு காணவில்லை. மத்திய அரசு டாக்டர்கள் 4 ஆண்டிற்குள் பதவி, சம்பள உயர்வு பெற்று விடுவர். அதே பதவி, சம்பள உயர்வு பெற நாங்கள் 11 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

      இதனால் சம்பளத்தில் 75 ஆயிரம் ரூபாயை இழக்கிறோம். அரசு கல்லுாரி, பல்கலை பேராசிரியருக்கு பல்கலை மானியக்குழு அறிவித்த சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களை விட குறைவான சம்பளத்தைத்தான் அரசு டாக்டர்கள் பெறுகின்றனர். இது போன்று பிரச்னைக்கு தீர்வு காணாமல், ஏழாவது சம்பள கமிஷன் மூலம் உயர்வு அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது.

      இந்த அறிவிப்பை கூட 2016 ஜனவரியில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் 21 மாத கால தாமதத்திற்கு பின் அரசு அறிவித்துள்ளது. தற்போது டெங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை தரும் பணியில் உள்ளோம். டெங்கு பிரச்னை இல்லாமல் இருந்திருந்தால் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போம். டெங்கு கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் திறம்பட செயல்படவில்லை, என்றார்.

      அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

      சென்னை: அரசு ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வை தொடர்ந்து, ௩ சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, ஜூலை, 1 முதல், முன்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

      தமிழக அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, நேற்று முன்தினம், 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அகவிலைப்படியை, ௩ சதவீதம் உயர்த்தியும், நிலுவைத்தொகையை, ஜூலை, 1 முதல் முன்தேதியிட்டு வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

      மத்திய சம்பள ஆணையம் பரிந்துரைத்த ஊதிய விகிதத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, ௩ சதவீதம் அகவிலைப்படி உயர்வை, முன் தேதியிட்டு வழங்கியதை தொடர்ந்து, தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

      இதன்படி, ஜூலை முதல் செப்., வரையிலான காலத்திற்கு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, உடனடியாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு, பகுதி நேர அலுவலர்களுக்கு பொருந்தாது என, தமிழக அரசு தெளிவு
      படுத்தி உள்ளது.
      ஆம்பூர் பிரியாணி சாப்பிட்ட சசிகலா

      ஆம்பூர்: பரோல் முடிந்து பெங்களூரு சிறைக்கு சசிகலா காரில் சென்றதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

      அவரின் கணவர் நடராஜனுக்கு உடல் நிலை சரியில்லாததால் ஐந்து நாள் பரோலில் வெளியில் வந்தார். நேற்று பரோல் முடிந்ததால் நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு வேலுார் வழியாக காரில் சென்றார்.வேலுார் மாவட்டம் வாலாஜாபேட்டை டோல்கேட்டுக்கு காலை 11:30 மணிக்கு வந்த சசிகலாவை ஆதரவாளர்கள் வரவேற்றனர். 

      ஆம்பூரில் இருந்து மின்னுார் வரை இரண்டு கி.மீக்கு நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் ஆதரவாளர்கள் நின்றனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.முன்னதாக வாலாஜாபேட்டை டோல்கேட் அருகே உள்ள குத்துாஸ் கடையில் சசிகலா டீ சாப்பிட்டார். ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டார்.
      வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

      வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு
      தீபாவளியன்று வங்க கடலில் புதிய புயல் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை வரும் 18ல் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு தீபாவளி நாளில் வங்க கடலில் 'கியாண்ட்' என்ற புயல் உருவாகி தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க 
      மாநிலங்களை மிரட்டியது. அதேபோல் இந்த ஆண்டும் தீபாவளி அன்று வங்க கடலில் புதிய புயல் உருவாவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளன. அரபி கடலில் இருந்து, கிழக்கு நோக்கி 
      நகரும் மேக கூட்டங்கள், வங்க கடலில் வேகமாக நுழைந்து வருகின்றன. இந்த மேக கூட்டங்கள் ஒன்று கூடுவதால் அக்., 15௫ல் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

      இதுகுறித்து சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட தகவலில் 'இன்னும் நான்கு நாட்களில் கிழக்கு மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்' என 
      கூறப்பட்டுள்ளது.இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலக அறிவிப்பில் 'வங்க கடலில் அக்., 15ல் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய அதிக வாய்ப்புகள் உள்ளன' என கூறப்பட்டுள்ளது.எனவே காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின் 
      அக்., 18ல் தீபாவளி நாளில் புயலாகவும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அது 
      புயலாக மாறுமா என்பது 16ம் தேதி தான் உறுதிப்படுத்தப்படும்.புயலாக மாறினால் அது ஒடிசா அல்லது ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 
      புயலாக மாறாவிட்டால் 18ம் தேதிக்கு பின் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      - நமது நிருபர் -
      ஊதிய உயர்வு ஏமாற்ம்: நாளை ஜாக்டோ-ஜியோ அவசர ஆலோசனை

      ஊதிய உயர்வு ஏமாற்ம்: நாளை ஜாக்டோ-ஜியோ அவசர ஆலோசனை
      சென்னை; தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு குறித்து நாளை ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்துகிறது.
      தமிழக அரசு ஊழியர் சம்பளம், 10 முதல், 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று, சம்பள உயர்வு வழங்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் பிற்பகல் 2 மணிக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

      ஆருஷி வழக்கு: தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. அப்பீல் செய்ய முடிவு

      Advertisement
        ஆருஷி வழக்கு: தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. அப்பீல் செய்ய முடிவு

      அலகாபாத்: ஆருஷி கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

      2008-ம் ஆண்டு உ.பி. மாநிலம் நொய்டாவில் ஆருஷிதல்வார் என்ற 14 வயது சிறுமி, வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். நாட்டை அதிர வைத்த இந்த வழக்கில் பெற்றோர் ராஜேஷ்தல்வார் தம்பதியினருக்கு 2013-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் தல்வார் தம்பதியினர் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.இதில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். போதிய ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லை எனதீர்ப்பில் கூறப்பட்டது.
      இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல் முறையீடு செய்ய உள்ளது. சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கையில், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும். தீர்ப்பு வெளியான 90நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பதால் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் .இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
      மாவட்ட செய்திகள்

      குப்பைகள் அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் மெத்தனம் பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு



      சென்னையில் குப்பைகளை அள்ளுவதில் துப்புரவு பணியாளர்கள் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறார்கள். என்று சென்னை மாநகராட்சி மீது பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.

      அக்டோபர் 13, 2017, 05:30 AM

      சென்னை,

      பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி உணவு, தாவர, மர, நுகரப்பட்ட பிளாஸ்டிக், இரும்பு-உலோகங்கள், கந்தைகள்-துணிகள், காகிதங்கள், ரப்பர் மற்றும் தோல் பொருட்கள், கற்கூளங்கள் உள்ளிட்ட கழிவுகள் தினந்தோறும் துப்புரவு ஊழியர்களால் பெறப்படுவது வழக்கம்.

      தினசரி குப்பை மாற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவு 4 ஆயிரம் டன் ஆகும்.

      நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் என அனைத்தும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 751 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

      குற்றச்சாட்டு

      தினந்தோறும் காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையும் குப்பைகள் பெறப்படுகின்றன.

      கடந்த 2-ந்தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மட்டும் மக்காத குப்பைகளையும், பிற நாட்களில் மட்கும் குப்பைகளையும் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு மக்கள் வரவேற்பு இருப்பதாகவும், குறிப்பாக நேற்று முன்தினம் மட்டும் 1 லட்சத்து 87 ஆயிரத்து 219 கிலோ மக்காத குப்பைகள் பெறப்பட்டதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது. ஆனால் குப்பைகள் அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

      பணியாளர்கள் மெத்தனம்

      “கடந்த சில மாதங்களாகவே நகரின் பெரும்பாலான இடங்களில் தினசரி குப்பைகள் அகற்றப்படுவது கிடையாது. தினமும் குப்பை வண்டிகள் வரும் என்று, வீட்டு வாசலில் குப்பை கூடைகள் காத்திருக்கின்றன. ஆனால் குவிந்திருக்கும் குப்பைகளை தேடி கொசுக்கள் தான் வருகின்றதே தவிர, துப்புரவு பணியாளர்கள் வருவது கிடையாது. வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே காலையில் அதுவும் 8 மணிக்கு மேல் தான் குப்பை வண்டிகள் வருகிறார்கள். ‘விசில்’ அடித்து வருவதால் தான் குப்பை வண்டிகள் வருவதே தெரிகின்றது.

      அவர்களிடம் ‘ஏன் தினமும் வருவதில்லை?’, என்று கேட்டால் போதும், சண்டைக்கு வருகிறார்கள். சிலர், ‘போய் அதிகாரிகிட்ட புகார் சொல்லுங்க... வண்டி இருந்தாதான் வரமுடியும்... சும்மா பேசாதீங்க...’, என்று வெறுப்பாகவும், மெத்தனமாகவும் பதில் தருகிறார்கள். சில பெண் ஊழியர்கள் கோபத்தில் குப்பைகளை பெறாமலேயே வீம்புடன் சென்றுவிடுகிறார்கள்.

      வரி செலுத்துவது எதற்கு?

      தற்போது டெங்கு காய்ச்சல் விவகாரம் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் வளர விடக்கூடாது என்று விழிப்புணர்வு செய்து வரும் மாநகராட்சி, அக்கொசுக்கள் சேர காரணமாக இருக்கும் குப்பைகளை முறையாக பெறாதது ஏன்? என்று சிந்திப்பது கிடையாது. பல வீடுகளில் தென்னை மட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை தேக்கி வைக்கப்பட்டு உள்ளன. அதனை அகற்றவோ, அதன்மீது மருந்து தெளிக்கும் பணிகளோ நடப்பது இல்லை.

      எனவே முதலில் மூல ஆதாரமான குப்பைகளை சேகரிக்கும் பணிகளை முறைப்படுத்த வேண்டும். குப்பைகளை தினசரி அள்ள துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். அதேவேளையில் டெங்கு ஒழிப்பு பணிகளிலும் தீவிரம் காட்டி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அது இல்லாவிட்டால் மாநகராட்சி எதற்கு, இத்தனை காலம் வரி செலுத்துவதும் எதற்கு?”

      மேற்கண்டவாறு இல்லத்தரசிகள் கொந்தளிப்புடனே புகார் அளிக்கிறார்கள்.

      எதிர்பார்ப்பு

      சென்னையில் பெரும்பாலான இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும், கொசு பரவ காரணமான மூலப்பொருட்களை அகற்றும் பணிகளும் முறையாக நடக்கவில்லை. குறிப்பாக பெரம்பூர், புளியந்தோப்பு, அமைந்தகரை, திருமங்கலம் திருவல்லீஸ்வரர் நகர், எழும்பூர், புரசைவாக்கம், சூளைமேடு, அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி மற்றும் தண்டையார்ப்பேட்டை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் இதே புகார்கள் தான் எழுகின்றன.

      எனவே குப்பைகள் பெறும் பணிகளில் பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தும் பட்சத்தில் பொதுமக்களிடம் இருந்து கெட்டபெயர் வாங்கும் சூழ்நிலை மாநகராட்சிக்கு ஏற்படாது. இதில் மாநகராட்சி கமிஷனர் தனி கவனம் செலுத்தி அந்தந்த மண்டல அதிகாரி மற்றும் சுகாதார பிரிவு அதிகாரிகளை அறிவுறுத்தவேண்டும். எப்படி சொத்துவரி மற்றும் தொழில் வரி வசூலிப்பதில் அக்கறை செலுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதோ, அதுபோல இந்த விஷயத்திலும் மாநகராட்சி அக்கறை செலுத்தவேண்டும் என்பதே ஒட்டுமொத்த சென்னை நகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பு.
      தலையங்கம்

      அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு



      தமிழக அரசில் பணிபுரியும் 12 லட்சம் ஊழியர்களுக்கும், 7 லட்சம் மாத ஓய்வூதியதாரர்களுக்கும் ‘தீபாவளி’ பரிசாக சம்பள உயர்வை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொழிந்து இருக்கிறார்.

      அக்டோபர் 13 2017, 03:00 AM

      தமிழக அரசில் பணிபுரியும் 12 லட்சம் ஊழியர்களுக்கும், 7 லட்சம் மாத ஓய்வூதியதாரர்களுக்கும் ‘தீபாவளி’ பரிசாக சம்பள உயர்வை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொழிந்து இருக்கிறார். 2016–ம் ஆண்டு தேர்தலின்போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ‘மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதியவிகிதங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்திருந்தார். அந்த உறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய அரசாங்கம் 7–வது ஊதியகுழு பரிந்துரையை தன் ஊழியர்களுக்கு அமல்படுத்தியவுடன், மாநில அரசு ஊழியர்களுக்கும் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, இந்த பரிந்துரையை நிறைவேற்றும் வகையில், அதற்கான வழிமுறைகளை ஆராய நிதித்துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு தன் அறிக்கையை தந்தவுடன் நேற்று முன்தினம் அமைச்சரவைக்கூடி, அரசு ஊழியர்கள், மாத ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள, ஓய்வூதிய உயர்வு அளிக்க முடிவுசெய்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை அறிவிப்பாக வெளியிட்டார்.

      இதன்படி, அனைத்து ஊழியர்களுக்கும் ஒட்டுமொத்த சம்பளத்தில் 20 முதல் 25 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலக உதவியாளர் இப்போது 21 ஆயிரத்து 792 ரூபாய் சம்பளம் வாங்கினால், இனி 26 ஆயிரத்து 720 ரூபாய் சம்பளமாக பெறுவார். இளநிலை உதவியாளர் 9 ஆயிரத்து 549 ரூபாயும், செகண்டரி கிரேடு ஆசிரியர் 10 ஆயிரத்து 90 ரூபாயும், சத்துணவு அமைப்பாளர்கள் 2 ஆயிரத்து 910 ரூபாயும், சத்துணவு சமையலர் 2 ஆயிரத்து 118 ரூபாயும் சம்பள உயர்வு பெறுவார்கள். இதுமட்டுமல்லாமல், ஒரு அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரத்து 700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2.25 லட்சமாகவும் இருக்கும். பென்சனை பொறுத்தமட்டில், குறைந்தபட்சம் குடும்ப ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 ஆகவும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஆகவும் இருக்கும். இதுபோல, ஓய்வுபெறும்போது அளிக்கப்படும் பணிக்கொடை அதிகபட்சமாக ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14 ஆயிரத்து 719 கோடி கூடுதலாக செலவாகும்.

      ஏற்கனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.46 ஆயிரத்து 332 கோடியும், ஓய்வூதியத்திற்காக ரூ.20 ஆயிரத்து 577 கோடியும், ஆக மொத்தம் ரூ.66 ஆயிரத்து 909 கோடி சம்பளத்திற்காகவும், பென்சனுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய் செலவில் 38.17 சதவீதமாகும். இந்த ரூ.14 ஆயிரத்து 719 கோடி ஒரு ஆண்டுக்கு கூடுதல் செலவாகும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக ரூ.7 ஆயிரத்து 350 கோடி செலவாகும். அரசின் நிதிப்பற்றாக்குறை இன்னும் அதிகமாகும் நிலையில், இந்த 19 லட்சம் பேருக்கு கொடுக்கப்போகும் ஊதிய உயர்வுக்காக, தமிழ்நாட்டில் உள்ள 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை அரசு சுமத்திவிடக்கூடாது. ஏற்கனவே சரக்கு மற்றும் சேவைவரியால் தாங்க முடியாத சுமையினால் தவிக்கும் மக்களுக்கு, இனிமேலும் வரிவிதித்தால் நிச்சயமாக தாங்கமுடியாது. இந்த சம்பள உயர்வு அறிவித்த நாளிலேயே அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த நேரத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரமுடியுமா? என்பது சந்தேகமே. அரசு ஊழியர்களுக்கு தாராளமாக சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. இதன்காரணமாக இனிமேல் லஞ்ச ஊழலுக்கு எந்த அரசு ஊழியர்களுக்கு இடையேயும், எந்த துறைகளுக்கும் இடையேயும் இடமே இருக்கக்கூடாது. இதுபோல, அவர்களின் பணித்திறமையும் கண்டிப்பாக மேம்பட வேண்டும்.















      Thursday, October 12, 2017


      Reliance Jio Diwali offer

      ...................................................................................................
      Posted on : 12/Oct/2017 12:00:21





       
       
       
      Here is a new Diwali offer from Reliance Jio. On every recharge of Rs 399, customers get 100 percent cashback. Those who have already got an active data pack are also free to do the recharge to make use of for the next cycle.
       
      This offer will be valid between 12th and 18th October. Further, new range of plans will also be launched from 19th October. It will be made available only for Jio Prime members.


      Government to facilitate senior citizens in Aadhar linking

      ...................................................................................................
      Posted on : 12/Oct/2017 16:32:28





       
       
       
      Senior citizens find it tough to link the mobile number with Aadhar. Hence, as a move to help them, the government is trying different methods where they are likely to launch iris scanning instead of fingerprints. Home visits will be made to senior citizens for simplifying the entire process and make it hassle-free.
       
      The other method is proxy authorization where users can nominate another individual for verifying mobile Aadhar linkage, say reports.
       
      Speaking about this Aruna Sundarajaan, the telecom secretary said they are trying to make things simpler. Older customers to whom biometric verification is difficult are their target. They have come up with simple measures for easing their pain, he adds.
       
      This initiative follows reports that there are long queues seen outside mobile service providing outlets. This is making the process tough and challenging. The process is also complicated for all senior citizens.
       
      According to the Lokniti Foundation case order imposed by the Supreme Court in February 2017, the government is directed to equip linking SIM cards with Aadhar cards by February 2018. Mobile numbers that are not linked with Aadhar card will get deactivated.
       
      Further, the government is thinking of making use of online OTP to register mobile number with Aadhar based on Unique Identification Authority of India.

      18 வயதுக்குள் பெண்ணுக்குத் திருமணம்... உச்ச நீதிமன்ற அதிரடித் தீர்ப்புகுறித்த அலசல்!

      ரமணி மோகனகிருஷ்ணன்


      Chennai:

      இந்தியாவில் 18 வயதுக்குள் இருப்பவர்கள் அனைவரும் சட்டபூர்வமாக சிறுவர்கள்தாம். பெண்ணின் சட்ட பூர்வமான திருமண வயது 18. ஆனால், 15 வயதுக்கு உள்பட்ட சிறுமியைத் திருமணம்செய்து, கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது என்று இந்திய தண்டனைச் சட்டம் 375 சொல்லும் விநோதம் இருக்கிறது. எனவே, இந்தச் சட்டத்தைத் திருத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், '18 வயதுக்குட்பட்ட பெண்ணைத் திருமணம் செய்த கணவராக இருந்தாலும், உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து, குழந்தைகள் நல செயற்பாட்டாளர், பெண்கள் அமைப்பு, சமூக செயற்பாட்டாளர்களிடம் கருத்து கேட்டோம்.


      தேவநேயன், தோழமை அமைப்பு

      ''உலகப் பெண் குழந்தைகள் நாளில் இந்தத் தீர்ப்பு வந்திருப்பது வரவேற்கக்கூடியது. ஏற்கெனவே இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்த குளறுபடியை இந்தத் தீர்ப்பு தீர்த்துள்ளது. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், இன்றும் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையே இந்தத் தீர்ப்பு நிரூபிக்கிறது. இதற்கு மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் மிகவும் வலுவானது என்பதையும் தாண்டி, நடைமுறையில் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர், மாவட்டம்தோறும் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் மாவட்ட சமூகநல அலுவலர்தான் அந்த வேலையைப் பார்த்துக்கொள்கிறார். இதைச் சரிசெய்ய வேண்டும். பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 'குட் டச், பேட் டச்' சொல்லிக்கொடுப்பதால் மட்டும் எதுவும் மாறிவிடாது. இருபாலருக்குமான பாலியல் கல்வி அவசியம்.''

      உ.வாசுகி, ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்

      ''குழந்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி 18 வயதுக்குக் கீழே இருப்பவர் குழந்தையே. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டமும் 18 வயதிற்குட்பட்டவர்களை மைனராகவே சொல்கிறது. திருமணமானால் மட்டும் 15 வயதுக்கு மேலிருந்தால் பாலியல் வன்கொடுமை என்று இருந்தது தவறானது. இப்போதைய தீர்ப்பு, முரண்பாடுகளைக் களைந்துள்ளது. இந்தச் சட்டம் வந்தால், குழந்தைத் திருமணங்கள் குறையும். ஆனால், சில நேரங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் காதலிக்கும்போது, இருவரும் பரஸ்பரம் விரும்பி உடலுறவு வைத்துக்கொள்வார்கள். இது பெண்ணின் வீட்டுக்குத் தெரிய வரும்போது, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது புகாரை அளிக்கிறார்கள். 15 வயதுக்கு மேலிருக்கும் பெண்ணைத் திருமணம்செய்து, பெண்ணின் சம்மதம் இல்லாமல் உடலுறவுகொள்வது பாலியல் வன்கொடுமை என வைத்துவிடுங்கள். ஆனால், இருவரும் பரஸ்பரம் விரும்பி உடலுறவுகொள்வது குற்றம் என்று கருதப்படுவது தவறு. எனவே, சம்மதம் கொடுக்கப்பட்டதா என்பதைக் கொஞ்சம் விரிவாக ஆராயலாம். எடுத்த எடுப்பிலேயே அந்தப் பையனை பாலியல் வன்கொடுமைக் குற்றவாளியாகப் பார்க்க வேண்டாம் என ஏற்கெனவே எங்கள் அமைப்பின் சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்.''

      கே.சாந்தகுமாரி, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பு 


      “ ‘இன்டிபெண்டன்ட் திங்கிங்' என்கிற அமைப்பு தொடர்ந்த வழக்கில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி

      இருக்கிறது. ஆனால், 18 வயதுக்கு மேலே இருந்தாலும், பெண்ணின் விருப்பமில்லாமல் நடைபெறும் ஓர் உடலுறவு, பாலியல் வன்கொடுமையாகவே கருதப்பட வேண்டும். உலகின் பல நாடுகளில் திருமணத்துக்குப் பிறகான வல்லுறவுக்குஎதிராகச் சட்டங்கள் இருக்கின்றன. இந்தியாவிலோ திருமணமான கணவர், வல்லுறவு கொள்வதைக் குற்றமாகக் கருதும் சட்டங்கள் இல்லை. திருமண உறவில் நீதிமன்றம் தலையிடுவதை, ஒரு மூன்றாமவர் உள்நுழைவதாக இந்தியச் சமூகம் நினைக்கிறது. பெண்ணுரிமை அடுத்தகட்ட பாய்ச்சலைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், இது மாற வேண்டும். திருமணத்துக்குப் பிறகும் மனைவி மீது நிகழும் வல்லுறவுக்கு எதிரான வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும்.''

      Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

      Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...