Friday, October 13, 2017

ஆருஷி வழக்கு: தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. அப்பீல் செய்ய முடிவு

Advertisement
  ஆருஷி வழக்கு: தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. அப்பீல் செய்ய முடிவு

அலகாபாத்: ஆருஷி கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2008-ம் ஆண்டு உ.பி. மாநிலம் நொய்டாவில் ஆருஷிதல்வார் என்ற 14 வயது சிறுமி, வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். நாட்டை அதிர வைத்த இந்த வழக்கில் பெற்றோர் ராஜேஷ்தல்வார் தம்பதியினருக்கு 2013-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் தல்வார் தம்பதியினர் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.இதில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். போதிய ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லை எனதீர்ப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல் முறையீடு செய்ய உள்ளது. சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கையில், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும். தீர்ப்பு வெளியான 90நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பதால் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் .இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2025