Monday, October 23, 2017

Delhi HC directs admission of student with blood disorder to MBBS under the disability category


By PTI  |   Published: 21st October 2017 12:09 PM  |  

Court Hammer
For representational purposes
NEW DELHI: The Delhi High Court has directed the Indraprastha University here to admit a student suffering from thalassaemia in MBBS course under the disability category in any of its three colleges.
The court's order came on a plea by the student suffering from the blood disorder, which said thalassemia was one of the disabilities recognised under the statute and he cannot be denied admission under the persons with disabilities (PWD) category.
"The petitioner (student) is entitled to the relief prayed for. He be granted admission in the MBBS course by respondent no 1 (IP University) in any of the three colleges," Justice Indermeet Kaur said in a recent order.
The three medical colleges under the university are Vardhman Mahavir Medical College and Safdarjung Hospital, North Delhi Municipal Corporation Medical College and Hindu Rao Hospital and Dr Baba Saheb Ambedkar Medical College and Hospital.
The court said this was a case of a single candidate who alone was deprived of his right of admission in the PWD category for no fault of his.
It noted that the status of the youth was changed from general category to PWD on July 16, 2017 and he had participated in the two rounds of counselling on July 24 and August 12.
"The fact that he was under the bonafide impression that his case was being considered favourably after these rounds of counselling was his rightful expectation of the candidate that he was being considered in the PWD category," it noted.
The court said the submission of the Guru Gobind Singh Indraprastha University that there was no category of PWD at the time of second round of counselling was "incorrect" because if the reason was true, then why was the candidate allowed to participate in it.
Thalassaemia, an inherited blood disorder, falls under the category of benchmark disability subsequent to the new Rights of Persons with Disabilities Act, 2016. The new Act has also increased the reservation of persons with disability category from 3 to 5 per cent.
The student said in March this year, he had filled in the form for appearing in the National Eligibility-cum-Entrance Test, 2017 under the general category conducted at all-India level and the results were announced on June 23.
However, he came to know later about the new Act and filed an application before the authorities on July 5 to change his category from general to PWD which was accepted, the plea said, adding that his name however did not figure in the PWD category list.
The university told the court that though thalassaemia was now recognised as a disability under the new Act, its hands were tied in the absence of a go-ahead from the Medical Council of India (MCI) to treat a thalassaemia patient as being entitled for admission to the MBBS course.
The MCI told the court that timeline laid down by the Supreme Court for admission to MBBS course has to be followed, for which the last date was August 31 and no one can be admitted after that.
It said the university could not admit a person with a disability of thalassaemia as MCI regulations were yet to come into force.

Roof collapse exposes deeper rot

TNN | Updated: Oct 22, 2017, 08:47 IST


Bus conductors and drivers rest in a cramped hall at the Chennai Mofussil Bus Depot at Koyambedu

CHENNAI/MADURAI/TRICHY: A day after eight state transport corporation workers died after the roof of a resting hall at Porayur bus depot in Nagapattinam collapsed on Friday, TOI visited similar facilities for transport staff at the Koyambedu terminus - Asia's largest - and found the conditions were no different.

With all three resting halls full, long-distance drivers from other districts were forced to sleep on the floor.

Many beds in the rooms were broken and staffers used them for eating, sleeping and keeping baggage.

"We have no other choice but to take rest in these ill-maintained halls as we get only 6-8 hours of rest between our 24-36 hour shifts," said S Lakshmanan, who drives on Chennai-Tuticorin route for State Express Transport Corporation (SETC).

Most toilets attached to these halls don't have latches and water supply is intermittent, forcing the workers to use the public toilet. Some fans are dysfunctional and air-conditioners in one of the three buildings have remained non-operational for months.

The plight of other crew of buses plying along comparatively shorter routes (5-9 hours) was worse as they were denied access to these resting halls.

"Mostly they sleep in our buses. If the heat turns unbearable inside, they move to benches in platforms," said a Tamil Nadu State Transport Corporation (Salem) conductor requesting anonymity.

The situation, others say, is no different at bus depots in other districts.

In Madurai, most of the buildings are more than five decades old. With no proper maintenance, they are deteriorating fast, complain employees of TNSTC's Madurai division. Though the number of buses and crew strength have increased manifold over the years, there has been little infrastructure development.

Among the worst is the resting hall at K Pudur, where employees sleep on the terrace. The depot, which accommodates nearly 100 workers, is located in the heart of Madurai city, and the flow of of sewage in the adjacent canal makes the employees' lives even more miserable.

Madurai division general manager Raja Sundar said that a special committee had been formed to look into the issue. The buildings require minor repair work but none of them is unstable, he said.

Not just old buildings, even newly-constructed buildings in bus depots have started to deteriorate.

Inaugurated this May at 5 crore, structures (roofs and pillars) at Manaparrai bus stand in Trichy have already started to develop cracks. Concrete pieces have started to fall off, said CPI town secretary K Mohammed Hussain. Responding to this, commissioner of Manapparai municipality P Manoharan said, "They are not cracks but joints between two pillars. Some miscreants damaged the joints to blow this out of proportion."

Boosting infra for betterment of workers' welfare is likely to further strain the finances of the state transport corporation, which owes them 7,000 crore already.
‘Dark glasses don’t make one MGR’

tnn | Oct 23, 2017, 00:59 IST

Tirunelveli: "Anyone wearing a pair of black glasses cannot become MGR," said former AIADMK minister Nainar Nagendran, during his first formal interaction with media after he joined the BJP, here on Sunday.

He was criticising Stalin on his recent announcement to go on a second spell of the state-wide Namakku Naame (By Us, For Us) roadshow that he first took out in 2015. The former minister called the DMK working president's first Namakku Naame campaign a failure.

"The campaign will not bring any political change. His earlier attempt wearing black glasses, jeans and colourful shirts did not bring any change." Nagendran said that BJP alone will be able to bring the change awaited Tamil Nadu people. TNN

‘Govt has approached three inte’l labs to test nilavembu: Health secy

tnn | Updated: Oct 20, 2017, 00:53 IST

Dharmapuri/Salem: Refuting media reports that 'nilavembu kudineer' may induce infertility, Tamil Nadu health secretary Dr J Radhakrishnan on Thursday said that the state government had approached three international labs to test the Siddha medicine.

Speaking to media in Salem, Radhakrishnan said the state government has more than 40 test results to prove that nilavembu kudineer, a concoction of 9 herbs, does not create fertility issue.

Radhakrishnan inspected Salem government Mohan Kumaramangalam Medical College hospital in Salem and Dharmapuri government medical college hospital in Dharmapuri on Thursday. He also chaired meetings with the health department officials as well as the district collectors Rohini R Bhajibhakare (Salem) and K Vivekanandhan (Dharmapuri).

Radhakrishnan said dengue spreads only through Aedes mosquito. He said people used plastic drums to store water due to drought. "These drums have become breeding ground of Aedes mosquitoes as they were not cleaned often," he said. Assuring to give proper treatment for dengue patients in government hospitals, he appealed to the public not to get medicines from 'quacks'.

"People should inform the district collector or the health department officials if they see quacks," the health secretary said.

Radhakrishnan also appealed to people not to spread false information over 'nilavembu' through social media. "Nilavembu is an approved Indian medicine. Actor Kamal Hassan's statement on 'nilavembu' is wrong," he said.
Engineers line up at Chennai job fair for 10th pass hopefuls

Amrutha Varshinii| TNN | Updated: Oct 22, 2017, 10:34 IST

HIGHLIGHTS

TOI had recently reported an Aspiring Minds study which found TN had the fourth largest number of job vacancies in the country

The state also ranked third in the number of job vacancies in the IT sector


CHENNAI: A job fair targeting those who had passed Class X on Saturday attracted candidates with many more strings to their bow. Of the 876 candidates who registered at the event, hoping to take up jobs as BPO executives, salesmen and receptionists, 110 possessed BE/BTech degrees while a couple had completed MPhil.

"We did not expect such overqualified graduates to come for these jobs. We expected only diploma holders or school passouts to come for semi-skilled positions," said BA Selvam, mobiliser, Don Bosco Valikaatti, a placement and training agency that organised the day-long fair. For salaries ranging between `10,000 and `15,000, candidates from core disciplines like IT, mechanical and electrical engineering come from Chennai, Kancheepuram and Tiruvallur districts.

TOI had recently reported an Aspiring Minds study which found Tamil Nadu had the fourth largest number of job vacancies in the country across all sectors. The state also ranked third in the number of job vacancies in the IT sector.

Despite this, it has been a struggle for many candidates to land offers from core engineering companies. Alphonsa Sindhu, placement coordinator for Don Bosco, says this is because most core company vacancies are now being rerouted through other channels.

Student marked 'absent' in all papers turns out to be Mumbai University topper

Yogita Rao| TNN | Updated: Oct 23, 2017, 03:01 IST

HIGHLIGHTS

Parshva Bhankharia's aggregate score in the final year of LLB-including semesters V and VI-was 70.12%

Lakhs of students suffered this year after MU's implementation of online assessment led to unprecedented delays in the announcement of results

File Photo

MUMBAI: A law student from Government Law College, who was marked 'absent' in all four subjects in his sixth and final semester, has emerged as one of the toppers in Mumbai University. After his papers were traced and evaluated, Parshva Bhankharia's final semester score was 71.75%.

Earlier this month, TOI had reported that Bhankharia, a topper from GLC, had scored around 65% in his previous semesters, but was marked absent in all his final semester papers. After making several rounds of the university's examination house, he finally managed to get his marksheet a day before Diwali.

While results of the three-year LLB programme's final semester were out in August, Bhankharia and many like him are getting their marksheets in phases. His aggregate score in the final year of LLB-including semesters V and VI-was 70.12%.

Bhankharia said he was expecting a higher score in the final exam, but is overjoyed at crossing the 70%-mark. "From being marked absent to being the topper is good news for me," he said. After pursuing the matter with several university officials to get his results to avoid the loss of a year, he was happy to get the marksheet early this week. Since the schedule for LLM admissions was postponed after other students sought a stay, Bhankharia can now comfortably apply for his masters' programme too.

Lakhs of students suffered this year after MU's implementation of online assessment led to unprecedented delays in the announcement of results. Students whose answersheets were untraceable were marked absent in those subjects even as the university kept their results in reserve. While most of the students were marked absent in one or two subjects, Bhankharia was marked 'AA' in all four subjects.

Missing papers were traced manually and then assessed, leading to further delays. Around 3,700 answersheets, which were missing from the system, were finally given average of the marks scored in the remaining subjects, as decided by the Board of Examinations.

While the university claims to have announced all the 'reserved' results after the first semester ended, students' woes are far from over. After the pending results were announced after a delay of five months, many students have found themselves failing in one or two subjects and now have no option but to go in for revaluation. The revaluation process is likely to take another two to three weeks and they will not be able to appear for the repeaters' exam post Diwali. The university has received over 50,000 applications for revaluation.

You could soon opt to fly if Rajdhani ticket’s not confirmed

Saurabh Sinha| TNN | Oct 23, 2017, 03:32 IST


HIGHLIGHTS

Ashwani Lohani had planned the move last summer when he was AI chairman, but the rlys had not reacted to it positively.

Now the chairman of the Railway Board, Lohani has said he will clear the plan if AI puts it up again.
AC-II Rajdhani fares are more or less similar to air fares,” Lohani said.


NEW DELHI: Passengers with unconfirmed AC-I or AC-II tickets for Rajdhani Express may soon be able to fly to their destination instead by paying the difference, if any, in the price of the train and air tickets. Ashwani Lohani had planned the move last summer when he was Air India chairman, but the railways had not reacted to it positively. Now the chairman of the Railway Board, Lohani has said he will clear the plan if AI puts it up again.

"If AI approaches us with this proposal, we will accept it," Lohani told TOI.

A large number of people end up with unconfirmed AC-II Rajdhani tickets almost every day due to a severe demand-supply crunch in the railways. In a bid to boost AI's aircraft occupancy, "turnaround man" Lohani had planned that such people's contact details could be automatically shared with AI, which could then offer them seats on flights for the same destination at competitive rates.

"AC-II Rajdhani fares are more or less similar to air fares," Lohani said.

However, with the process to privatise or sell government-owned AI now in its final stages, it remains to be seen if the airline goes for such a proposal.

"A benefit of having a government-owned airline... (is that) railways can transfer its unconfirmed premium passengers to state-owned AI. Lohani's idea is very good. But can railways do the same with a private AI or any other private airline without facing charges of benefitting them?" asked an AI insider.

Senior IAS officer Rajiv Bansal, who was given additional charge as AI chairman for three months in August-end, when Lohani was moved to the Railway Board, said he would not be immediately able to comment on the proposal. "This is the first time I am hearing of such a thing. There is difference in train and air fares..." he said.

TOP COMMENTJust proves how inefficient our railways have become.Sainath Kalpathy

With the proposal, Lohani, a 1980-batch Indian Railway Service of Mechanical Engineers officer, had used his experience with the railways to rid AI of one of its most vexing problems: low aircraft occupancy. Around the same time that he came up with the train-air switch idea, AI had also decided to match Rajdhani AC-II fares on important metro routes like Delhi to Mumbai.

AI insiders said the airline's focus currently was to safely run its flights on time till a new owner is found.
ஜெர்மன் தம்பதியினருடன் லூக் நாய்
கடந்த ஜூலை மாதம் மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட செல்லப்பிராணி லூக் என்ற லாப்ரடார் வகை நாய் நூறு நாள் தேடலுக்குப் பின் கிடைத்துள்ளது. இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 8-ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் என்பவர் தனது மனைவி ஸ்டெஃபன் கஹேராவுடன் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். தங்களுடன் தங்களது செல்ல வளர்ப்பு நாயானா லாப்ரடார் வகையை சேர்ந்த கறுப்பு நிற லூக்கையும் அழைத்து வந்தனர்.
லூக் ஜெர்மன் தம்பதியினரின் செல்ல நாயாகும். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் லூக்கையும் தங்களுடனே அழைத்துச் செல்வார்கள். அண்டார்டிகா, அலாஸ்கா, அரேபியா என உலகம் முழுவதும் அவர்களுடன் லூக் சுற்றியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் தம்பதி பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றிப்பார்க்க வந்தனர். மெரினா கடற்கரையில் தாங்கள் வந்த காரில் அமர்ந்திருந்த அவர்கள், லூக்கை வெளியே காரில் கட்டி வைத்திருந்தபோது யாரோ மர்ம நபர் நாயை அவிழ்த்து திருடி சென்று விட்டார்.
லூக் நாய் காணாமல் போனது குறித்து ஜெர்மன் தம்பதியினர் மெரினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் லூக்கை தேடி வந்தனர். சென்னையில் தங்கியிருந்த வரை நாயை தேடுவதில் தீவிரம் காட்டிய ஜெர்மன் தம்பதிகள் கவலையுடன் ஜெர்மன் புறப்பட்டு சென்றனர்.
புறப்படும் முன் சமூக வலைதளத்தில் லூக்கின் புகைப்படத்தைப் பதிவு செய்த ஜெர்மன் தம்பதியினர் தங்களது நாயை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்தத் தகவல் வைரலாகப் பரவியது. பலரும் நாயைத் தேடினர்.
இந்நிலையில் லூக் காணாமல் போய் நூறு நாட்கள் கடந்த நிலையில் நாய் பற்றி தகவல் கொடுத்திருந்த விலங்கின ஆர்வலர் விஜயா நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை ஒரு நபர் போன் செய்துள்ளார். அதில் காணாமல் போன லூக் நாய் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களை பெசன்ட் நகர் வரச் சொன்ன விலங்கின ஆர்வலர் அவர்கள் கொண்டு வந்த நாயை விலங்கின மருத்துவர் உதவியுடன் சோதனை செய்துள்ளார்.
காணாமல் போன லூக்கின் கழுத்தில் அது பற்றிய விபரம் அடங்கிய சிப் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதை மருத்துவர் உதவியுடன் சோதித்தபோது அது காணாமல் போன ஜெர்மன் தம்பதியினரின் நாய் லூக்தான் என உறுதியானது. இதையடுத்து திருவான்மியூர் கால்நடை மருத்துவர்கள் வசம் நாய் ஒப்படைக்கப்பட்டது. நாய் கிடைத்தது பற்றி போலீஸார் ஜெர்மன் தம்பதிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் ஓரிரு நாளில் சென்னை வருகின்றனர்.
காணாமல் போன நாய் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி விசாரித்ததில் நாயை கண்டுபிடித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் மெரினா கடற்கரைக்கு தனது மனைவியுடன் வந்தபோது இளைஞர் ஒருவர் கறுப்பு நிற நாயுடன் நின்றிருந்ததைப் பார்த்து அது லூக் நாயாக இருக்கும் என்ற சந்தேகத்தில் விசாரித்தபோது அது காணாமல் போன லூக் தான் என தெரிய வந்ததாம்.
உடனடியாக அந்த இளைஞரிடம் பேசி நாயை தங்கள் வீட்டுக்கு கொண்டுவந்த அவர்கள் நாயை கண்டுபிடிக்க சன்மானம் அளிப்பதாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இருக்கும் போன் நம்பரை வைத்து பின்னர் விலங்கின ஆர்வலரிடம் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளனர்.

டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Published : 22 Oct 2017 20:53 IST

சென்னை

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் | கோப்புப் படம்: ம.பிரபு.
டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த வாரம் இருந்த பாதிப்பு இந்த வாரம் இல்லை. காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்தாமல், கவனக்குறைவாக இருக்காமல், தாமதப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் 5 நாளும், குழந்தைகள் 7 நாளும் சிகிச்சை பெற வேண்டும். அதன் பின்னரே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். போலி டாக்டர்களைக் கைது செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் யாரும் தானாக கடைக்குச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்.
பள்ளிகள் மூலமாக மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் முழுவீச்சில் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை - சிங்கப்பூர் விமானம்: தொழில் நுட்பக் கோளாறால் தாமதம்


By DIN  |   Published on : 23rd October 2017 04:05 AM  |
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். 
சென்னை விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூர் செல்வதற்காக 230 பயணிகள் தயாராக இருந்தனர். பல மணிநேரமாகியும் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து விமான நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர். 
மாலை 6.30 வரை பயணிகள் தங்குவதற்காக ஏர் இந்தியா நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. 
இதுகுறித்து ஏர் இந்தியா நிர்வாகத்தினர் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 250-க்கும் மேற்பட்டோர் தங்குவதற்காக விடுதிகள் ஏற்பாடு செய்வதில் சற்று சிரமம் ஏற்பட்டது. தற்போது பயணிகளுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திங்கள்கிழமை (அக். 23) காலை 9 மணிக்கு பயணிகள் சிங்கப்பூர் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

    கமலுக்கு உரிமை உண்டு!


    By ஆசிரியர்  |   Published on : 21st October 2017 01:59 AM  |
    தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் டெங்கு வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழைக்காலம் வரும்போதெல்லாம் இது போல வைரஸ் காய்ச்சலும், விஷக்காய்ச்சலும், மலேரியா, காலரா உள்ளிட்ட நோய்த் தொற்றுகளும் பரவுவது புதிதொன்றும் அல்ல. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த தரப்படும் மருந்து குறித்த விவாதம், இப்போது போல முன்னெப்போதும் எழுந்ததில்லை. 
    டெங்கு என்கிற வைரஸ் காய்ச்சலின் விளைவால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் (பிளேட்லட்ஸ்) எண்ணிக்கை குறையத் தொடங்குகின்றன. அவை மிக அதிகமாக குறைந்துவிடும்போது உடலில் பல பாகங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நோயாளி மரணத்தைத் தழுவ நேர்கிறது. 
    வைரஸ் காய்ச்சல் வந்தவுடன் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக ரத்தப் பரிசோதனையில் டெங்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வெள்ளை அணுக்களும் தட்டணுக்களும் குறையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மருத்துவர்களால் எடுக்கப்படுகிறது. அப்படியில்லாமல் போகும்போதுதான் டெங்கு மரணம் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் குணமடைகிறார்கள் என்றாலும்கூட, ஒரு சிலர் மரணமடைகிறார்கள் என்பதையும் வைரஸின் பாதிப்பால் சிலர் மூட்டு வலியுடன் சில காலம் தொடர்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. 
    டெங்கு வைரஸ் காய்ச்சலுக்கு அலோபதி மருத்துவத்தில் எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும்கூட, அது மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த முடியாதது அல்ல. அதேநேரத்தில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவமுறைகளில் இதற்குத் தீர்வாக நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறு போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. இவைதான் இப்போது பரவலான சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன.
    நிலவேம்பு என்பது சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த மூலிகை குறித்து நடத்தப்பட்ட தாவர வேதியியல் ஆய்வுகளின்படி இதில் உள்ள பிளோவோனாய்ட்ஸ், ஆன்ரோகிராபோலய்ட், பென்செனாய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருள்கள் ஒவ்வாமை, நுண்ணுயிரிகள், வைரஸ்கள் ஆகியவற்றை எதிர்த்து அழிக்கும் தன்மை கொண்டவை. நிலவேம்பில் உள்ள பிளோவோனாய்ட்ஸ் என்கிற வேதிப்பொருள் வைரஸ், தொற்றுநோய், ஒவ்வாமை, காய்ச்சல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது என்கிறது சீன மருத்துவம்.
    டெங்கு காய்ச்சலுக்குத் தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்பது இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தாலும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தாலும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நிலவேம்புக் குடிநீரில் கோரைக்கிழங்கு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனம், பற்படாகம், பேய்புடல், சுக்கு, மிளகு, நிலவேம்பு உள்ளிட்ட ஒன்பது மூலிகைகள் அடங்கியிருக்கின்றன. இந்த மூலிகைகள், மாற்று மருத்துவத்தினர் பரிந்துரைப்பதுபோல டெங்கு வைரûஸ குணப்படுத்தாமல் போனாலும்கூட, இவற்றால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.
    மாற்று மருத்துவ முறையில் வழங்கப்படும் மருத்துவத் தீர்வுகள், அலோபதி மருந்துகளைப்போல, பெரும்பாலும் பக்க விளைவுகளை உருவாக்குவதில்லை. இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இயற்கையின் அடிப்படையில் மிக உயர்ந்த மருத்துவ சிகிச்சை முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்து வந்திருப்பது வரலாற்று உண்மை. ஆனால், இந்த மாற்று மருத்துவ சிகிச்சைகள் குறித்து போதுமான அளவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் மருத்துவ குணங்கள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. ஐரோப்பியர்களின் படையெடுப்பால் காலனிகளாக மாற்றப்பட்ட காரணத்தால் ஆசியாவின் மேம்பட்ட மருத்துவ முறைகள் புறக்கணக்கப்பட்டுவிட்டன என்பதுதான் உண்மை. 
    கடந்த அரைநூற்றாண்டு காலமாகத்தான் இந்த மருத்துவ முறைகள் குறித்த மீள்பார்வைக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. பழைய ஓலைச்சுவடிகள், பாரம்பரிய செவிவழி மருத்துவ முறைகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு புத்துயிர் தரப்பட்டு வருகிறது. இவையெல்லாம் இன்னும் மேலை நாட்டவரின் அலோபதி மருத்துவ முறைக்கு இணையான அளவில் பெரும் பொருட்செலவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.
    மருந்தால் மட்டுமே நோய் குணமாவதில்லை. மருத்துவர் மீதான மற்றும் மருந்தின் மீதான நம்பிக்கையும் சிகிச்சையில் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால் ஒரேயடியாக டெங்கு காய்ச்சலுக்கு தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்கிற மாற்று மருத்துவ முறையின் பரிந்துரையை ஒதுக்கிவிட வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில், அதுமட்டுமே சிகிச்சை என்று கருதி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை அணுகாமல் இருப்பது என்பது பகுத்தறிவின் பாற்பட்டதாக தோன்றவில்லை.
    தனது ரசிகர்களை, பொதுமக்களுக்கு பரவலாக நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதில் எந்தவித தவறும் காண முடியவில்லை. ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை தனது ரசிகர்கள் பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டாம் என்று கூறும் உரிமை கமல்ஹாசனுக்கு இருக்கிறது. வேறொரு நடிகர், அரசியல் கட்சித் தலைவர் தனது ரசிகர்களையோ தொண்டர்களையோ நிலவேம்புக் குடிநீர் வழங்கும்படி கூறினால் அதை எப்படி குறைகாண முடியாதோ, அதேபோல கமல்ஹாசனின் கருத்தை விமர்சிப்பதும் தவறு!

    தண்ணீர் ஜாக்கிரதை


    By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்  |   Published on : 21st October 2017 02:03 AM  
    இயற்கைக்கு மாறான உயிரிழப்புகளில் 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் சாலை விபத்துகளால் 52.8%, நீரில் மூழ்கி 8.9%, தீ விபத்துகளில் 5.3%, மின்சாரம் தாக்கி 3% பேர் உயிரிழந்துள்ளனர். 
    இதில் நீரில் மூழ்கி உயிரை இழப்பது என்பது ஒருவர் தமக்குத் தாமே தேடிக் கொள்ளும் மரணமாகும். 
    அண்மைக் காலமாக கடல், குளங்கள், ஏரிகள், ஆறுகள் போற்றவற்றில் குளித்து மரணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
    இந்தியாவில் ஆண்டுதோறும் 29,000 பேரும், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 80 பேரும் நீரில் மூழ்கி உயிரிழப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 300 பேருக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
    குறிப்பாக, பெற்றோர்களின் பராமரிப்பின்றி வளரும் இளம் வயதினர், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தான் நீர்நிலைகளில் குளிக்கும் போது மரணமடைகின்றனர் என்றும், 2015-ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 3,60,000 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
    ஆறுகள், ஏரிகள், குளங்கள் சில குறிப்பிட்ட இடங்களில் அதிக ஆழம் கொண்டவையாகவும், சில இடங்கள் அதிக சுழற்சிக் கொண்டதாகவும் காணப்படும். 
    சுற்றுலா செல்லும் பயணிகள் அங்குள்ள ஏரி அல்லது குளத்தின் தன்மையை அறியாமல், அங்கு வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பற்றி சற்றும் கவலைப்படாமல் உற்சாக மிகுதியில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்குச் சென்று நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். 
    ஈரோடு மாநகர், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஏழு பேர் காவேரி ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போது, பவானி கட்டளை கதவணை நீர்மின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
    விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணி, அசோக், அன்புச் செல்வன் ஆகிய மூன்று சிறுவர்கள் அப்பகுதியில் ஏரியில் களிமண் எடுப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
    செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூர் அடுத்துள்ள முருகன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், பாண்டியன் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் அருகேயுள்ள குட்டையில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றுள்ளனர். 
    அப்போது சிறுவன் பாண்டியன் நீரிழ் மூழ்க, அவனைக் காப்பற்றச் சென்ற சிறுவன் சிலம்பரசனும் நீரில் குதித்துள்ளான். எனினும், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
    இதற்கு முன் நாள் தான் திருக்கோவிலூரை அடுத்துள்ள சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூவர், தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
    ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, கேளம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்யாண், உபேந்திரா ஆகிய இரு மாணவர்கள் மாமல்லபுரம் கடலில் குளித்த போது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 
    சென்னை அருகே சோழிங்கநல்லூரில் வீட்டின் அருகேயுள்ள குட்டையில் திடீரென விழுந்து ஆறு வயதான சிறுவன் பிரவீன் குமார் உயிரிழந்தான். கடலூர் மாவட்டம், திருவதிகை கெடிலம் ஆற்றில் குளித்த மூன்று மாணவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
    "இளம் கன்று பயமறியாது' என்ற சொலவடைக்கு ஏற்ப, பொதுவாக கடல், ஆறுகள், குளங்கள், அருவிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளித்து உயிரிழப்பவர்களில் 90 சதவீதத்தினர் 12 முதல் 24 வயதிற்குட்பட்ட இளம் வயதினர்தான். 
    இவர்கள் பெற்றோர் அனுமதியின்றி குளிக்கச் சென்று நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். காரணம் இவர்களிடையே காணப்படும் இளமைத் துடிப்பு மற்றும் அலட்சியம்தான். 
    பெற்றோரின் அறிவுரைகளையும் மீறி, கடலோர காவல் படை காவலர்களின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது கடலில் குளிப்பதால் இத்தகைய மரணங்கள் ஏற்படுகின்றன. 
    குறிப்பாக, கடலில் குளிக்கும்போது போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். அதிலும், திடீரென இராட்சத அலை எழும் போது நீச்சல் தெரிந்தவர்களே திணறும் போது, நீச்சல் தெரியாதவர்கள் அதிலும் சிறுவர்கள் சமாளிப்பது கடினம். 
    விழுப்புரம், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 
    தொடர் விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் தான் இத்தகைய நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக ஏற்
    படுகின்றன. 
    விடுமுறை தினங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் நீர்த்தேக்கங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் பலர் ஆழமான பகுதிகளுக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். 
    நீரில் மூழ்கும்போது ஏற்படும் குதூகலம், பின்னர் ஏற்படும் மூச்சு திணறலால் வெளியே வர முடியாமல், காப்பாற்றவும் ஆளில்லாமல் வாழ்க்கை சோகத்தில் முடிந்து விடுகிறது. 
    மனித உயிர் என்பது விலை மதிப்பற்றது. அதிலும் நீர்நிலைகளில் குளிக்கப் போய் உயிரை விடுவது என்பது பரிதாபத்திற்குரியது. அரிது, அரிது மானிடராய் பிறப்பது அரிது. எனவே, கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை தண்ணீரில் மூழ்கி இழந்துவிட வேண்டாமே.

    அரசு அலுவலகங்களுக்கு பூட்டு: அமைச்சர் தகவல்

    நாகப்பட்டினம்: ''தமிழகத்தில், 50 ஆண்டு பழமையான கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களில் பழுது இருந்தால், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, இழுத்து பூட்டப்படும்,'' என, கைத்தறி துறை அமைச்சர் மணியன் தெரிவித்தார்.

    நாகையில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 50 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்கள் எத்தனை என, கண்டறியப்பட்டு, அவற்றில் பழுதான கட்டடங்கள் எவை என தெரிய வருகிறதோ, அந்த அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் வெறியேற்றப்பட்டு, பழுதான கட்டடம் இழுத்து பூட்டப்படும். மாற்று ஏற்பாடாக, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.நாகை மாவட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் அதிகமுள்ளன. அந்த கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என தெரியவந்தால், இடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    கட்டடம் இடிப்பு : நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில், டிரைவர் மற்றும் கண்டக்டர், எட்டு பேர் உயிரிழந்தனர்; படுகாயம் அடைந்த மூவர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இடிந்து விழுந்த கட்டடத்தில் எஞ்சிய பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது. இப்பணி மூன்று மணி நேரம் நீடித்தது. முன்னதாக எஞ்சிய கட்டடத்தில் இருந்த பொருட்கள் மீட்கப்பட்டன.
    'ஆன் - லைன்' வில்லங்க சான்று  பதிவுத்துறைக்கு, 'குட்டு!'
    'ஆன் -- லைன் முறையில், வில்லங்க சான்று கேட்டு வரும் விண்ணப்பங்கள் குறித்த பதிவேடுகளை பராமரிக்க, சார் - பதிவாளர்களை அறிவுறுத்த வேண்டும்' என, பதிவுத்துறை தலைவருக்கு, தமிழக தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



    சொத்து விற்பனையில் ஈடுபடுவோர், வில்லங்க சான்றுகளை பெற, ஆன் - லைன் முறையில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதில், கட்டணம் செலுத்தி வில்லங்க சான்று களை பெற வேண்டும்.பின், இணையதளம் வாயிலாக, வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கும் வசதியை பதிவுத்துறை துவக்கியது. இருப்பினும், ஆன் - லைனில்

    கட்டணம் செலுத்தி, வில்லங்க சான்று பெறும் சேவை முறையாக செயல்படவில்லை என, கூறப்படுகிறது.

    இந்நிலையில், 'தஞ்சாவூர் இணைப்பு - 1' சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட, ஒரு நிலத்துக்கு, ஆன்- லைன் முறையில் கட்டணம் செலுத்தியும், வில்லங்க சான்று கிடைக்க  வில்லை என, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சுரேஷ் என்பவர் மனு செய்தார். உரிய பதில் கிடைக்காததால், தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.

    இந்த மனு, தலைமை தகவல் ஆணையர், கே.ராமானுஜம் முன்னிலையில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் நேரில் ஆஜராகி, 'ஆன் - லைன் முறையில் விண்ணப்பிப்போர் குறித்த விபரங்கள் எதுவும் பதிவேடாகபராமரிப்பதில்லை' என, தெரிவித்தார்.

    மேலும், கட்டணம் செலுத்தி, ஆன் - லைனில் வில்லங்க சான்று பெறுவது தொடர்பான கேள்வி களுக்கு, இணையதளத்தில் வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கும் வசதி தொடர்பானபதில்களை தெரிவித்ததால், சர்ச்சை எழுந்தது.

    இதன் பின், தலைமை தகவல் ஆணையர், ராமானுஜம் பிறப்பித்த உத்தரவு:வில்லங்க சான்று உள்ளிட்ட, ஆன் - லைன் சேவைகளில் விண்ணப்பிப்போருக்கு உரிய பதில் கிடைக்க, பதிவுத்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், இது தொடர்பான பதிவேடு களை பராமரிக்க, சார் - பதிவாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    - நமது நிருபர் -
    'டெங்கு' கொசுக்கள் உற்பத்தி : மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

    சேலம்: டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த சேலம், சண்முகா மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
    சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள், அஸ்தம்பட்டி மண்டலம், 13வது வார்டில் உள்ள சண்முகா மருத்துவமனையில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
    அங்குள்ள உணவகத்தில், டெங்கு கொசுக்களை பரப்பும்வகையில், கேன்கள் திறந்த நிலையில் இருந்தன. அவற்றில் தேங்கி இருந்த நீரில், டெங்கு கொசு புழுக்கள் அதிகஅளவில் காணப்பட்டது.குடிநீர் தொட்டியில், கொசு புழுக்களுடன், பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் செயல்பட்டது தெரிந்தது. இதனால், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், அபாய மருத்துவ கழிவை முறையாக அப்புறப்படுத்தாமல், அருகில் உள்ள மாநகர ஓடையில் கொட்டி அசுத்தம் செய்ததற்கு, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான நோட்டீஸ், மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வந்த, மூன்று குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.இது தவிர, மேலும் பல இடங்களில், டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த மருத்துவமனை, நுாற்பாலைகள்,தேநீர் விடுதிகளில் சோதனை நடத்தி, 14.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, 10 குடிநீர் இணைப்புகளை அதி
    காரிகள் துண்டித்தனர்.

    தட்டச்சு தேர்வு இன்று, 'ரிசல்ட்'



    சென்னை: ஆகஸ்டில் நடந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.
    தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், தொழில்நுட்ப தேர்வுகள், இந்தாண்டு, ஆகஸ்டில் நடத்தப்பட்டன. இதில், தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின், www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில், பகல், ௧:௦௦ மணிக்கு மேல், தெரிந்து கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.


    ஜெர்மன் தம்பதியரின் செல்ல நாய் மீட்பு?

    ஜெர்மன் தம்பதியரின் செல்ல நாய் மீட்பு?
    ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர், ஸ்டீபன் சுக்ராஹ். இவரது மனைவி ஸ்டெபன் சுஹேரா. இவர்கள், 'லாப்ரடார்' வகையைச் சேர்ந்த, 'லுாக்' என்ற நாயுடன், சென்னைக்கு சுற்றுலா வந்தனர்.

    கடந்த ஜூலையில், மெரினா கடற்கரையில், இவர்களது காரில் இருந்த நாய் லுாக், காணாமல் போனது. பல்வேறு இடங்களில் தேடியும், நாய் கிடைக்காததால், அவர்கள் ஜெர்மன் திரும்பிச் சென்றனர். தற்போது, 100 நாட்களுக்கு பின் அந்த நாய், மெரினா கடற்கரையில், இளைஞர் ஒருவரிடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

    அந்த நாய், லுாக் தானா என்பதை அறிய, ஜெர்மன் தம்பதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள், இன்று, சென்னை வந்து உறுதிப்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    -நமது நிருபர்-
    ராமேஸ்வரம் கோயிலில் 6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் : அக்.28ல்பூமி பூஜை

    ராமேஸ்வரம் கோயிலில்  6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் : அக்.28ல்பூமி பூஜை
    ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி 6 தீர்த்த கிணறுகள் இடமாற்றம் செய்து, ஆகம முறைப்படி புதிய கிணறு தோண்ட அக்.,28ல் பூமி பூஜை நடக்க உள்ளது.
    தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, 
    தரிசனம் செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி பக்தர்கள் அக்னி தீர்த்த கடல், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நீராட ஏராமான பக்தர்கள் வருவர். விழா, விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி சிரமப்படுகின்றனர்.இதனை தவிர்க்க கோயில் நிர்வாகம் 1 முதல் 6 தீர்த்த (மகாலட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் தீர்த்தங்கள்) கிணறுகளை மூடுகின்றனர். இதனால் 22 தீர்த்தத்தையும் நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    பூமி பூஜை : செப்.17ல் ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கிணறுகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள், '1 முதல் 6 தீர்த்தத்தை ஆகம முறைப்படி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர்'. அதன்படி கோயில் 2ம் பிரகாரம் வடக்கு பகுதியில் 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்ய கோயில் நிர்வாகம் முடிவுசெய்தது.

    இதற்கு சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள், இந்து அறநிலைதுறை ஆணையரும் அனுமதி அளித்தனர்.அதன்படி அக்.,28 ல் கோயில் 2ம் பிரகார வடக்கு பகுதியில் 6 தீர்த்தங்களை இடமாற்றம் செய்து புதிய தீர்த்த கிணறுகள் தோண்ட கோயில்ஆகம முறைப்படி பூமி பூஜை நடக்க உள்ளது.

    உலகளவில் சிறந்த உணவாக உருவெடுத்து வரும் இட்லி


     உலகளவில்,சிறந்த உணவாக, உருவெடுத்து,வரும்,இட்லி
    மும்பை:தமிழகம் உட்பட, தென் மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற உணவான, இட்லி, உலகம் முழுவதும் விரும்பப்படும் உணவாக உருவெடுத்து வருகிறது.

    தமிழகத்தில், பெரும்பாலான வீடுகளில், விரும்பி உண்ணப்படும் உணவாக, இட்லி திகழ்கிறது. இட்லியும், அதனுடன் சாம்பார், சட்னியும், பாதுகாப்பான, உடலுக்கு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது.இதுகுறித்து, சென்னை, தாஜ் கோரமண்டல் ஓட்டல், தலைமை சமையலர், சுஜன் முகர்ஜி கூறியதாவது:

    இட்லியின் பிறப்பிடம், தமிழகம் அல்லது கர்நாடகாவாக இருக்கலாம் என்றும், எட்டாம் நுாற்றாண்டிலேயே, இட்லி இருந்ததற்கான குறிப்புகள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
    ஆனால், இட்லி, இந்தோனேஷியாவில், சாப்பிடப்படும், வேக வைத்த ஒரு வகை உணவில் மாற்றம் செய்யப்பட்டு உருவானதாக, தகவல்கள் கூறுகின்றன. 

    இந்தோனேஷியாவின் சில பகுதிகளை ஆண்ட, ஹிந்து மன்னர்கள், இட்லி போன்ற உணவை கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.இட்லி, பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விரும்பி சாப்பிடப்படும் உணவாக உருவெடுத்து வருகிறது. அதனால், மேலும் பல தலைமுறைகளுக்கு, இட்லியின் ஆதிக்கம் இருக்கும் எனத் தெரிகிறது.

    காஞ்சிபுரம் இட்லி, ராமசேரி இட்லி, மல்லிப்பூ இட்லி, பொடி இட்லி, சாம்பார் இட்லி, இட்லி உப்புமா என, பல பெயர்களில் இட்லி தயாரிக்கப்படுகிறது. எல்லா வகை இட்லிகளும், வேகவைக்கும் முறையில் உருவாகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், மாதுங்கா பகுதியில் உள்ள, கபே மெட்ராஸ் உணவகத்தின் உரிமையாளர், தேவவ்ரத் காமத் கூறியதாவது:இட்லி மாவில், நல்ல பாக்டீரியாக்கள் உருவாவதால், சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனால், உடல் நலம் குன்றியவர்களுக்கு, இட்லியை உணவாக தரும்படி, உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எல்லாருக்கும், மிகவும் பாதுகாப்பான உணவு, இட்லி.இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவில், வைக்கம் நகரைச் சேர்ந்த இந்திரா நாயர் கூறுகையில், ''கேரளாவில், பலா இலைகளை வைத்து, வேகவைக்கப்படும் இட்லி தயாரிக்கப்படுகிறது. ''இந்த வகை இட்லி, பல நாட்களுக்கு கெடாது. சபரிமலை போன்ற கோவில்களுக்கு நீண்ட நாள் பயணமாக செல்பவர்கள், இந்த இட்லிகளை எடுத்து செல்வது வழக்கம்,'' என்றார்.


    ஒரிஜினல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்  வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
    புதுடில்லி: வாடிக்கையாளர்கள் அளித்த ஆவணங்களின் நகல்களை, சட்ட விரோத பணப்பரிமாற்றங்களை தடுக்கும் நோக்கில், ஒரிஜினல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு உறுதி செய்து, அதை பதிவு செய்யும் பணியில், வங்கிகள் ஈடுபட உள்ளன.




    குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக, பணப் பரிவர்த்தனை செய்பவர்கள், ஆவணங்களின் நகல்களை, வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் போலிகளை தடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும், வருவாய் துறை, சமீபத்தில், அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு, உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியது.சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் அனுப்பப் பட்ட அந்த கடிதத்தில், அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் நகல்களை, ஒரிஜினல் ஆவணங்களுடன் சரி பார்த்து, அதனை பதிவு செய்யும்படி கூறப்பட்டு உள்ளது.

    வங்கிகளில், கணக்கு துவங்கும் வாடிக்கையாள ரிடம், ஆதார் அடையாள எண், இருப்பிடச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகின்றன. அதேபோல், 50 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலாக பரிவர்த்தனை செய்பவர் களிடம், இத்தகைய ஆவணங்களின் நகல்கள் பெறப்படுகின்றன. இனி, இந்த ஆவண நகல்கள் அனைத்தையும், ஒரிஜினல் ஆவணங்களுடன், வங்கிகள், நிதி நிறுவனங்கள் சரிபார்க்கவேண்டும்.

    அதேபோன்று, 10 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக பணப்பரிவர்த்தனை செய்பவர்கள், சந்தேகத்திற் கிடமான பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை, எப்.ஐ.யு., - இண்ட் எனப்படும், இந்திய நிதி புலனாய்வு பிரிவிடம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் சமர்ப்பிக்கும்படி
    உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பங்குசந்தை தரகர்கள், சிட்பண்ட் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஆவணம் சமர்ப்பிக்கும் வாடிக்கையாளரிடம், சமீபத்திய முகவரி சான்று இல்லாத பட்சத்தில், மின் வாரிய பில், தொலைபேசி, 'மொபைல் போன் போஸ்ட் பெய்ட்' பில், குடிநீர் வாரிய பில் போன்றவற்றை ஆவணமாக காட்டலாம்.

    கழிப்பறை இல்லையா.. பெண் கிடைக்காது..


    கழிப்பறை,இல்லையா,பெண்,கிடைக்காது
    பாக்பத் : உத்தர பிரதேசத்திலுள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில், 'கழிப்பறை இல்லாத வீட்டாருக்கு, மகள்களை திருமணம் செய்து தர மாட்டோம்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    உ.பி., மாநிலம் பாக்பட் மாவட்டத்திலுள்ள பிக்வாடா கிராமத்தில், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை உருவாக்குவதில், மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, கழிப்பறை இல்லாத வீட்டாருக்கு, மகள்களை திருமணம் செய்து தர மாட்டோம் என, கிராம பஞ்சாயத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
    பஞ்., தலைவர், அரவிந்த் கூறுகையில், ''திறந்த வெளியில் மலம் கழித்தல், பெண்களின் கண்ணியத்தை குலைக்கும் செயல். வீட்டில் கழிப்பறை கட்ட, அரசு நிதியுதவி கிடைக்கிறது. எனவே, எங்கள் தீர்மானத்தை மீறி நடப்பவர்களை, ஊரை விட்டு ஒதுக்கி வைப்போம்,'' என்றார்.

    சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்

     சென்னையில்,இருந்து,சிங்கப்பூர்,செல்லும்,விமானம்,தாமதம்

    சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய பயணிகள் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 

    சென்னையில் இருந்து இன்று (அக்.,22) காலை 11.30 மணி அளவில் சிங்கப்பூருக்கு செல்ல பயணிகள் தயாராக இருந்தனர். தொடர்ந்து பல மணிநேரமாகியும் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கால தாமதம் ஏற்படுவதாக புகார் கூறினர். 

    விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏர் இந்தியா விமானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி விஜயராகவன் கூறுகையில் பயணிகளுக்கு தங்கும் இட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதாகவும், நாளை (அக்., 23 ) காலை 9 மணிக்கு பயணிகள் சிங்கப்பூர் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
    தலையங்கம்

    விஜய் அரசியலுக்கு வருகிறாரா?




    தமிழக அரசியலில் பரபரப்பான கருத்து பரிமாற்றங்களை நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் உருவாக்கிவிட்டது.

    அக்டோபர் 23 2017, 05:00 AM

    பா.ஜ.க. தலைவர்கள் எதிர்ப்பாகவும், ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டுக்குப்பிறகு தொடர்ந்து திரையுலக தொடர்பு கொண்டவர்களே முதல்-அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பொறுத்தமட்டில், அவர் நடிக்கும்போதே தி.மு.க.வில் மிகத்தீவிரமாக இருந்தார். அவர் படங்களில் எல்லாம் தி.மு.க.வையோ, அறிஞர் அண்ணாவையோ, உதய சூரியன் சின்னத்தையோ குறிப்பிடுவதில் தவறுவதில்லை. ஜெயலலிதாவை பொறுத்தமட்டில், நடிப்பு உலகை விட்டுவிட்டு, அ.தி.மு.க.வில் சேர்ந்து டெல்லி மேல்-சபை உறுப்பினர், சத்துணவு திட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் என்பதோடு மட்டுமல்லாமல், கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராகவும் பணியாற்றி, எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு முதல்-அமைச்சரானார். அதன்பிறகு தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், இதற்கு முன்பிருந்த ஓ.பன்னீர்செல்வமும் திரையுலகு தொடர்பு கொஞ்சம்கூட இல்லாமல் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளாகவே இருப்பவர்கள்.

    எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. கட்சி தலைவர் நடிகர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் படங்களில் நடித்தவர்கள்தான். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்றும், கமல்ஹாசன் வரப்போகிறார் என்றும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

    இந்தநிலையில், ‘தளபதி’ என்று ரசிகர்களால் பெரிதும் அழைக்கப்படும் நடிகர் விஜய், அவர் படங்களில் பொதுவாகவே ‘பஞ்ச்’ டயலாக்குகளை உதிர்ப்பார். தற்போது திரையிடப்பட்டுள்ள ‘மெர்சல்’ படத்தில் அண்ணன், தம்பி, அப்பா என்று 3 வேடங்களில் நடித்திருக்கும் விஜய், 3 வேடங்களிலும் ‘பஞ்ச்’ டயலாக்குகளை உதிர்த்திருக்கிறார். ஜி.எஸ்.டி. வரி, ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, இலவச டி.வி., கிரைண்டர், மிக்ஸி, பேன், ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்ததாக தாக்குதல், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாதது ஆகியவை தொடர்பாக ‘பஞ்ச்’ டயலாக்குகளை உதிர்த்திருக்கிறார். விஜய் இதுவரையில் மிக அமைதியாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுவந்தார். 2009-ம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த கூட்டத்திலேயே அவர் சூசகமாக தனது அரசியல் ஆசையை வெளியிட்டுவிட்டார்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு சாதாரண மக்களுக்கு பெரும் இன்னல் என்பது போன்ற கருத்துகளை வெளியிட்ட அவர், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்ததே அவருடைய அரசியல் ஆசையை வெளிக்காட்டிவிட்டது. தமிழக மீனவர் பிரச்சினையின்போது நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். காவிரி பிரச்சினையில் தனது குரலை ஓங்கி ஒலித்தார்.

    ‘விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் பேசிய பேச்சுதான் பெரியஅளவில் தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றது’. ஆக, நேரடியாக அவரது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கவில்லையே தவிர, அதற்கான பணிகளை தொடங்கிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். நிச்சயமாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார்.

    அதற்கு திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஆக, இன்றைய சூழ்நிலையில் முதலில் அரசியலுக்குள் வரப்போவது ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?, விஜய்யா? என்றுதான் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. யார் என்றாலும் சரி, இப்படி திரைக்குப்பின்னால் இருந்து அதை தெரிவிப்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவெடுத்தால் உடனடியாக அதை பகிரங்கமாக வெளியிட்டுவிட்டு, அரசியலில் நுழையவேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில், விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா?, இந்த பஞ்ச் டயலாக்குகள் அதற்கு முன்னோடியா என்பதுதான் எல்லோருடைய பரபரப்பான எதிர்பார்ப்புகளாகும்.

    NEWS TODAY