Monday, October 23, 2017


சென்னை - சிங்கப்பூர் விமானம்: தொழில் நுட்பக் கோளாறால் தாமதம்


By DIN  |   Published on : 23rd October 2017 04:05 AM  |
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். 
சென்னை விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூர் செல்வதற்காக 230 பயணிகள் தயாராக இருந்தனர். பல மணிநேரமாகியும் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து விமான நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர். 
மாலை 6.30 வரை பயணிகள் தங்குவதற்காக ஏர் இந்தியா நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. 
இதுகுறித்து ஏர் இந்தியா நிர்வாகத்தினர் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 250-க்கும் மேற்பட்டோர் தங்குவதற்காக விடுதிகள் ஏற்பாடு செய்வதில் சற்று சிரமம் ஏற்பட்டது. தற்போது பயணிகளுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திங்கள்கிழமை (அக். 23) காலை 9 மணிக்கு பயணிகள் சிங்கப்பூர் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 2.5.2024