Saturday, October 28, 2017

‘Two rupee doctor’ serves Chennai’s underprivileged

A Selvaraj| TNN | Updated: Oct 28, 2017, 06:11 IST


Dr Thiruvengadam Veeraraghavan, an alumnus of Stanley Medical College, has been serving residents of Vyasarpadi since 1973.

CHENNAI: By playing a 'Five Rupee Doctor' in his blockbuster 'Mersal' actor Vijay floored his audience. But, here is a 'Two Rupee Doctor' who has been quietly serving the underprivileged in North Chennai for more than four decades.

The real life hero, 67-year-old Thiruvengadam Veeraraghavan, completed his MBBS in Stanley Medical College. Since 1973, he has served residents of Vyasarpadi, accepting just Rs 2 as his fee. He later increased it to Rs 5. He became so popular that other doctors in the neighbourhood got together and protested, demanding he take at least Rs 100 as consultation fee.

Thiruvengadam retorted with a prescription of his own — he stopped accepting fee from his patients. They could pay him just about anything — small sums they could afford, eatables or nothing at all. Since he was an Associate Fellow in Industrial Health (AFIH), a corporate hospital engages him for screening job aspirants, and it gave him a steady income.

"I studied without any expenses, thanks to the policies of former chief minister K Kamaraj. It made me resolve not to charge patients," Thiruvendgadam told TOI. Though born and brought up in Vysarpadi, he had to move out after the 2015 deluge washed away his possessions. His hospital, however, stays where it has since 1973.

His dream is to construct a hospital for the slum dwellers of Vyasarpadi and serve them till his death. He attends to patients at a clinic in Erukancherry from 8pm to 10 pm and near Ashok Pillar in Vyasarpadi between 10pm and midnight and sometime even later. At Madras Medical College, he learnt how to dress leprosy patients.

Most of his batchmates are settled abroad with their families and grandchildren. His best friend since college days retired as a surgeon in the Government Royapettah Hospital (GRH) and now works in a private hospital.

His wife Saraswathi worked as a railway officer and retired from service a few years ago. His son T Deepak and daughter T Preethi studied medicine in a college in Mauritius. He now hopes to get all his family members to work with him and fulfil his dream to build the hospital in Vysarpadi and serve its residents.

Mersal anti-GST dialogue is just opinion, can't gag it: HC

Suresh Kumar| TNN | Oct 28, 2017, 05:34 IST



CHENNAI: Anti-GST dialogues in actor Vijay's blockbuster `Mersal' were a mere expression of opinion in a film and courts cannot interfere and order their deletion, the Madras high court said on Friday .Refusing to entertain a PIL filed by an advocate to revoke censor certificate for the film, a division bench of Justice M M Sundresh and Justice M Sundar said that if the petitioner had genuine concerns about public interest he should have started campaigns against social evils like untouchability , women safety, alcoholism and smoking. But he had chosen to attack a particular movie, the judges remarked.

Rebutting the contention of the PIL-petitioner that movies should not contain dialogues criticising schemes of government, particularly with incorrect facts, the bench said: "Even today media reported that the leader of the opposition (MK Stalin) has criticised demonetisation. Can we gag him?" "Even today media reported that the TN opposition leader (MK Stalin) has criticised demonetisation. Can the court pass a gag order against him from making such statements? People have right to freedom of expression, and this applies to films too." The PIL, in fact, helped the producer of the movie to gain more publicity , and that there was no compulsion on anyone to watch it.

Helped by the state BJP leaders' protests to anti-GST and anti-digital money dialogues and Congress vice president Rahul Gandhi's tweet supporting the film and rapping the BJP regime for undermining Tamil sentiments, 'Mersal' has set itself well on its way to cross the `200 crore-mark in box office collections within a week. At the peak of the the clamour, advocate A Ashvathaman approached the court saying the censor certificate should be revoked as the dialogues adversely affected the sovereignty and integrity of the nation.According to the petitioner, the film contains scenes and dialogues against the interest of the sovereignty and integrity of India. "False information about GST and digital India scheme would encourage people to evade tax," he said.

Claiming that he had made representation to the Union information and broadcasting ministry pointing out that the censor certificate was issued by CBFCin gross violation of Cinematograph Act, 1952, he said he had approached the court since the ministry failed to initiate any action.
10 documents you can use at airports to prove identity

Saurabh Sinha| TNN | Updated: Oct 28, 2017, 04:49 IST

HIGHLIGHTS

The Bureau of Civil Aviation Security has issued a list of 10 identity documents that can be used to enter airport premises

This includes passport, voter ID card, Aadhaar or m-Aadhaar, PAN card and driving licence



NEW DELHI: The Bureau of Civil Aviation Security (BCAS) has issued a list of 10 identity documents that can be used to gain entry to airport terminals and for checking in, dispelling confusion over the issue.

List of 10 identity documents issued by BCAS

1. Passport
2. Voter ID
3. Aadhaar or m-Aadhaar
4. Pan Card
5. Driving licence
6. Service ID
7. Student ID card
8. Passbook of account in a nationalised bank with photo
9. Pension card or pension documents with photo
10. Disability ID card or handicapped medical certificate

In a first, BCAS chief Kumar Rajesh Chandra has also put in place a system for flyers to establish their identity if they lose their ID cards. "In case of a passenger who for some valid reasons is not in a position to produce any of the above photo identity proofs, the identity certificate issued by a Group A gazetted officer of central/state government on his/her official letterhead with passenger's photo duly attested will be valid..." for this purpose," the BCAS said

BCAS also clarified that infants or minors accompanied by a guardian with a valid ID wouldn't need a separate proof for domestic air travel. Unaccompanied minors would .

வங்கிக் கணக்கில் பணம் எடுக்க அலைக்கழிக்கப்படும் மூதாட்டி..!


By DIN  |   Published on : 28th October 2017 03:44 AM 
காவேரிபாக்கம் அருகே தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல்  மூதாட்டி அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
காவேரிபாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (82). இவரது மனைவி இந்திரா ராணி (78). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர். இதனால் வயதான தம்பதி தனியாக வசித்து வருகின்றனர். இந்திரா ராணிக்கு காவேரிபாக்கம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தனது கணக்கில் ரூ. 21,101 உள்ளது.
இந்நிலையில், குடும்ப செலவுக்காக தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க கடந்த வாரம் வங்கிக்கு வந்தார். ஆனால் வங்கி ஊழியர்கள் மத்திய அரசின் பான் கார்டு இருந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என தெரிவித்ததால், பணம் எடுக்க முடியாமல் திரும்பிச் சென்றார்.
பான் கார்டு என்றால் என்னவென்று தெரியாமல் ஒரு வாரமாக வங்கிக்கு வந்து அலைந்துள்ளார். புதன்கிழமை இதைப் பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் அவரை விசாரித்து பான் கார்டுக்கு தேவையான ஆவணங்களை திரட்டி,  அப்பகுதியில் ஒரு கடையில் கொடுத்து அதற்கான செலவையும் அவரே கொடுத்துள்ளார்.
இந்த மூதாட்டியை கவனிக்க ஆள் இல்லாத போதும், உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் வங்கியில் பணம் எடுக்க வந்துள்ளார். ஆனால், தனது கணக்கில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
எனவே வங்கி அதிகாரிகள் இந்த மூதாட்டிக்கு கருணை உள்ளத்தோடு அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொடுத்து உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கலைக்கப்பட்டது அண்ணா பல்கலை. தேடல் குழு: மூன்றாவது தேடல் குழு எப்போது?


By DIN  |   Published on : 28th October 2017 04:09 AM 
anna university

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழு கலைப்பட்டதால், கடந்த 4 மாதங்களாக அந்தக் குழு மேற்கொண்ட பணிகள் அனைத்தும் வீணாகிப் போயுள்ளதாக பேராசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் துணைவேந்தருக்காக காத்திருந்த அண்ணா பல்கலைக்கழகம், தொடர்ந்து காத்திருக்க வேண்டியச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் 2016 மே 26 -ஆம் தேதி முடிவடைந்தது. அதன் பிறகு, பல மாதங்களுக்குப் பின்னர் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களை அப்போதைய தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நிராகரித்தார். 
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என். சுந்தரத்தேவன், கான்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர், பேராசிரியர் கே. அனந்த பத்மநாபன் ஆகியோர் அடங்கிய புதிய தேடல் குழு கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பணி இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், குழுவில் பேராசிரியர் கே.அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டது, பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிரானது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த சர்ச்சை காரணமாக, தேடல் குழு தலைமைப் பதவியை ஆர்.எம். லோதா ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை, அப்போதைய தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவுக்கு அனுப்பினார். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து , லோதாவின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்க மறுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உயர் கல்வித் துறை அதிகாரிகளிடையே எழுந்தது.
இதற்கிடையே, தமிழகத்துக்கு புதிய முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட்டார். ஆனால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில், இந்தத் தேடல் குழு கலைக்கப்பட்டதாக தற்போதுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆளுநர் அலுவலகத்திலிருந்து உயர் கல்வித் துறைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியது:
துணைவேந்தர் தேடல் குழு கலைக்கப்பட்டதாக, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தெரிவு செய்வதற்கு மீண்டும் புதிய தேடல் குழு அமைக்கப்பட வேண்டும். இதனால், ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகம் மேலும் 4 முதல் 5 மாதங்கள் இதற்காக காத்திருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, விரைவில் புதிய தேடல்குழு அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது:
அண்ணா பல்கலைக்கழக தேடல் குழு மீண்டும் கலைக்கப்பட்டிருக்கிறது. இதில், ஆளுநர் பிரதிநிதியான உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் பல்கலைக்கழக பிரதிநிதியான பேராசிரியர் கே.அனந்தபத்மநாபன் இருவர் மட்டுமே குழுவிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அரசு பிரதிநிதியான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்.சுந்தரத்தேவன் குழுவில் தொடர்கிறார். எனவே, ஆளுநர் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி ஆகிய இருவர் மட்டுமே இப்போது புதிதாக நியமிக்கப்பட வேண்டும். 
எனவே, அதிகபட்சம் 10 நாள்களில் புதிய தேடல் குழு அமைக்கப்பட்டு, விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்பட்டுவிடுவார் என்றார் அவர்.
 

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850: தமிழக அரசு உத்தரவு


By DIN  |   Published on : 28th October 2017 02:00 AM   
pension

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ.7,850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் போன்று, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு: ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமாக ரூ.7,850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு குறைவான தொகையை ஓய்வூதியமாக பெற்று வந்தால் அவர்களுக்கு ரூ.7,850 ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற ஓய்வூதியத் தொகையில் 2.57 பெருக்கல் காரணியைக் கொண்டு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி அளிக்கப்படும்.

    வலியுறுத்துதல் கூடாது!


    By ஆசிரியர்  |   Published on : 28th October 2017 01:40 AM  |
    ஆதார் எண் இருந்தால் மட்டுமே மானியங்களையும், சலுகைகளையும், சேவைகளையும் மத்திய - மாநில அரசுகள் வழங்கும் என்று ஆதார் சட்டத்தின் 7-ஆவது பிரிவு கூறுகிறது. அதே நேரத்தில் ஆதார் எண் பெறாதவர்கள் வாக்காளர் அடையாள எண், வருமானவரி எண் உள்ளிட்ட அடையாளங்களின் மூலம் ஆதார் எண்ணைப் பெறுவது வரை, மானியங்களையும் சலுகைகளையும் பெறலாம் என்றும் அந்த சட்டம் கூறுகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்டிருக்கும் வழக்கு, வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அரசியல்சாசன அமர்வுக்கு முன்னால் விசாரணைக்கு வருகிறது. 
    தேவையில்லாமல் ஆதார் எண் எல்லாவற்றுக்கும் வலியுறுத்தப்படுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. அதுமட்டுமல்லாமல், ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்துவது என்பது குடிமகன் குறித்த தனிப்பட்ட தகவல்கள் பெறப்படுவதால் அடிப்படை உரிமையையும் தனி நபர் ரகசியத்தையும் பாதிக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். 
    ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதன் மூலம் சில குறிக்கோள்களை அடைய முடியும் என்று அரசு கருதுகிறது. குறிப்பாக, அனைவரும் ஆதார் எண் பெற்றுவிட்டால் அரசின் மானியங்களையும் சலுகைகளையும் யாரும் போலியான பெயர்களில் பெறுவது தடுக்கப்படும். மானியங்கள் குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால் இடையில் கசிவதோ, மடைமாற்றுவதோ தடுக்கப்படும். 
    மாற்றுத்திறனாளிகள், மகளிர், குழந்தைகள், வறுமைக் கோட்டுக்குக்கீழே உள்ளவர்கள் தொடர்பான ஏறத்தாழ 10 திட்டங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில் இந்தப் பிரிவைச் சார்ந்த, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத, ஆதார் எண் பெறமுடியாத பலருக்கும் சலுகைகளும் மானியங்களும் மறுக்கப்படுகின்றன.
    பெற்றோர் ஏழைகளாகவும் இடம்பெயர்ந்தவர்களாகவும் இருந்து, ஆதார் எண் பெறுவதற்கான ஆவணங்களோ, முகவரியோ, அடையாளச் சான்றுகளோ இல்லாமல் இருந்தால் அந்தக் குழந்தைகளுக்கு மானியங்கள் மறுக்கப்படுகின்றன. 
    மிக அதிகமான அளவில் இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலமும், ஊர் விட்டு ஊரும், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும் பிழைப்புத் தேடி இடப்பெயர்வு நடந்துகொண்டிருக்கும் நிலையில், வறுமைக் கோட்டிற்குக் கீழே அன்றாடக் கூலி வேலையில் ஈடுபடும் பலரும், அவர்களது குழந்தைகளும் ஆதார் எண் பெற முடியாத காரணத்தால் அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து புறந்தள்ளப்படுவது சரியான நடைமுறையாக தோன்றவில்லை. அதுமட்டுமல்லாமல், ஆதார் எண்ணுக்காக பெறப்படும் தகவல்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறதா என்றால், அதுவும் கேள்விக்குறியாக இருக்கிறது. 
    3.5 கோடி ஆதார் எண்கள் குறித்த விவரங்கள் அரசின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு அது பொதுவெளியில் கசிந்திருப்பதை அரசே ஒப்புக்கொண்டு இருக்கிறது. 
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனடையும் 1.35 கோடி பேர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை கணினிப் பதிவுத் தவறால், அந்த அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஓய்வூதியக்காரரின் கணக்கு குறித்து அதன்மூலம் யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். பெங்களூருவைச் சேர்ந்த இணையதள சமூக மையம் என்கிற அமைப்பு, ஓய்வூதியம், சமூகநல திட்டம், ஊழியர் பாதுகாப்புத் திட்டம் ஆகியவை தொடர்பான ஏறத்தாழ 1.35 கோடி ஆதார் எண்களும் 10 கோடி வங்கிக் கணக்கு எண்களும் அரசு இணையதளங்களின் மூலம் பொதுவெளியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறிந்திருக்கிறது.
    ஆதார் எண் பதிவுக்காக ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்கள் என்னவெல்லாம் தகவல்களைப் பெறலாம் என்று ஆதார் சட்டமும் விதிகளும் வரைமுறை விதிக்கவில்லை. அதேபோல, அரசிடமிருந்து தகவல்களைப் பெறாத மூன்றாவது நபரோ, அமைப்போ ஆதாரை எப்படி, எதற்காக, எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆதார் சட்டத்தில் குறிப்பிடவில்லை. ஆதார் அட்டையிலுள்ள விவரங்களைப் பயன்படுத்த ஆதார் எண்தாரரின் முன் அனுமதி பெறவேண்டிய கட்டாயம் இல்லை. அப்படியே ஆதார் தகவல்கள் கசிந்தாலும் அதுகுறித்து ஆதார் அமைப்பு குடிமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால் தனது தகவல்கள் கசிந்த விவரம் எண்தாரருக்கு தெரியக்கூட வாய்ப்பில்லை.
    இந்தியாவின் உடனடித் தேவை, கடுமையான தகவல் பாதுகாப்புச் சட்டம். ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் ஆதாருக்காக நாம்பெறும் தகவல்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு அப்படி ஒரு சட்டம் மட்டுமே உத்தரவாதம் வழங்கும். 
    இதுவரை எட்டு அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள் ஆதார் தொடர்பான சேவைகளை வழங்குவதாகவும், சட்டத்துக்குப் புறம்பாக பொதுமக்களிடமிருந்து ஆதார் எண்ணையும் தகவல்களையும் சேகரிப்பதாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனும்போது ஆதார் திட்டத்தில் எந்த அளவுக்கு தகவல் பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படுகிறது.
    ஆதார் கட்டாயப்படுத்தப்படுவது சரியா - தவறா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, உச்சநீதிமன்றத்தில் அதுகுறித்த வழக்கில் முடிவு எட்டப்படாத நிலையில் வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி இணைப்பு என்று எதற்கெடுத்தாலும் ஆதாரை கட்டாயப்படுத்துவது வியப்பாக இருக்கிறது.

    கதை சொல்லும் குழந்தைகள்


    By வியாகுலன்  |   Published on : 28th October 2017 01:42 AM  
    காலங்காலமாக நம்முடனேயே உலவும் கதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கதைகளைச் சொல்லும் கதை சொல்லிகள் என்று நமது குழந்தைகளை நாம் கொண்டாட வேண்டும்.
    ஓர் இசைக் கலைஞனின் சங்கீத மனோபாவத்தையும் ஓர் ஓவியக் கலைஞனின் வர்ண மனோபாவத்தையும் ஒரு கவிஞனின் சாஹித்ய மனோபாவத்தையும் ஒன்றாகக் கலந்த கற்பனைத் திறன்களைக் கொண்டவர்கள் குழந்தைகள்.
    குழந்தைகளிடம் கதைகள் சொல்லும்போது அந்த கதைகளுக்கான முடிவுகளை சொல்லும்படி அவர்களிடமே கேளுங்கள். சாதாரணமான கற்பனைக் கதைகளுக்கு அவர்களின் கவனிப்புத் திறனும் கற்பனைத் திறனும் ஒருசேர அவர்கள் சிறந்த முடிவுகளையும் வினோதமான திருப்பங்களையும் சொல்வார்கள்.
    குடும்பத்திலுள்ள மூத்தோர், தங்களது அனுபவ அறிவையும் கற்பனைகளையும் கலந்துக் குழந்தைகளுக்குக் கதைகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
    கதை சொல்லிகள் எனும் நமது குழந்தைகளை ஒரு நெருக்கடியான வாழ்வியலுக்கு உட்படுத்துவதிலேயே நாம் தீவிரமாக இருக்கிறோம்.
    அதிகமாக பணம் வசூலிக்கும் பள்ளி தரமான பள்ளி என்ற நமது குருட்டு நம்பிக்கைக்கு குழந்தைகளைத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களின் படைப்பாற்றலுக்கு வலு சேர்க்கும் கல்வி முறையில் கவனம் செலுத்தவில்லை.
    வயிற்றுக்காகக் கற்றல், அவசியத் தேவைகளுக்காகப் படித்தல் இவை நமது கதை மரபை மரணமடையச் செய்துவிட்டன. இவற்றையெல்லாம் கடந்து நமது குழந்தைகளின் படைப்பாற்றல் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
    ஒரு கதைக்கான திருப்புமுனைகளை விளக்கிவிட்டு கதைக்கான சாவியை கடலில் தூக்கிப் போட்டாலும் தேடிக் கண்டுபிடித்து அதனைத் திறக்க ஆரம்பித்து கதை எனும் கம்பளத்தை விரித்துவிடுவார்கள் நமது குழந்தைகள். எனவே நமது குழந்தைகளுடன் உறவாட கதைச் சொல்லிகளாக நாம் மாற வேண்டும்.
    இன்றைய உங்களின் அலுவல்களை முடித்துவிட்டு வீட்டிற்குப் போனதும் உங்கள் குழந்தையிடம் ஒரு சாதாரணமான பாட்டி வடை சுட்டக் கதையைச் சொல்லி அந்த நரிக்கும் காகத்திற்கும் வேறு ஏதாவது ஒரு முடிவைச் சொல்லிச் சொல்லி கேட்டுப்பாருங்கள். கற்பனைகள் விதவிதமாக பிறக்கும். 
    இலக்கிய மேதைகள் என நாம் எண்ணங்கொண்டிருக்கும் நம் இலக்கியவாதிகளே குழந்தை இலக்கியம் குறித்து பேசியதோ பதிவு செய்ததோ இல்லாத ஓர் இலக்கிய சூழல்தான் இங்கு நிலவுகிறது. 
    எனவே நமது படைப்பாளிகளை ஒருங்கிணைத்து குழந்தைகளுக்கான இலக்கியம், இசை, ஓவியம், பாடல்கள் என்ற வகைமைகள் குறித்து கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நமது அரசு பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் நிகழ்த்த வேண்டும்.
    கதைகள் கேட்டு வளர்ந்த குழந்தைகளின் மன வலிமை வேறு மாதிரியானது. அது ஒரு பாரம்பரியம். அற்புதமான மூதாதையர்களும், பெற்றோரும் வாய்த்த பாரம்பரியம். அவர்கள் கதை சொல்கிற நேரத்தைக் குழந்தைகள் அறிந்திருந்தார்கள். அந்த நேரத்திற்காகக் காத்துக்கிடந்தார்கள். 
    அவர்களின் கதைகளில் தினந்தோறும் பாட்டி வடை சுட்டு காகம் தூக்கிப் போனாலும் பாட்டியும் காகமும் நரியுமுடனுமான இரவை குழந்தைகள் நேசித்தார்கள். கதைக்குள் இருக்கிற தந்திரங்களை அவர்கள் அறிந்தார்களில்லை. 
    பின்பு, கதைகள் என்ன உணர்த்தின குழந்தைகளுக்கு? தாயை, தகப்பனை, தாத்தாவை, பாட்டியை, சகோதரனை, சகோதரியை, நண்பனை, ஆசிரியரை, வெட்டுக்கிளியை, காகத்தை, யானையை, நரியை, பூச்சிகளை, தட்டான்களை, இரவுகளை, சூரியனை, நிலவை, பேருந்தை, புகைவண்டியை, ஆகாய விமானத்தை இப்படி ஒவ்வொன்றாய் பரவசமாக முதன் முறையாக உணர்ந்தார்கள். 
    மீண்டும் மீண்டும் கதை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் முதன் முறை போலவே உணர்ந்தார்கள்.
    குழந்தைகளே கதைகளாக மாறி உறங்கிப் போனார்கள். அந்த உறக்கம் முக்கியமானது. அதுதான் அவர்களின் மனம். அது அவர்களின் ஆழ்ந்த உறக்கத்தில் அவர்களோடு நெருக்கமாக உறவாடும். 
    உறக்கத்தில் அவர்கள் சிரிப்பார்கள். அழுவார்கள். பேசுவார்கள். பயம் கொள்வார்கள். மனம் அவர்களுள் உருவாகிறது. அவர்களாக உருமாறுகிறது. அந்த உருமாற்றமே காலம்பூராவும் அவர்களோடு வருகிறது. 
    நம் குழந்தைகளிடம் கதைகள் கேட்க வேண்டும். அவர்களின் ஓவியங்களைப் பார்க்க வேண்டும். புதிய விதமான அவர்களின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு அவர்களுக்குப் பிடித்தமான புன்சிரிப்போடு பதில்கள் தர வேண்டும். நமது நேரத்தை ஒதுக்கி அவர்களோடு ஒட்டி உறவாட ஒதுக்க வேண்டும். குழந்தைகளைக்காட்டிலும் முக்கிய வேலை எதுவுமில்லை.
    கதை, விளையாட்டு, ஓவியம், நுண்களைகள் இவற்றின் மூலம் குழந்தைகளுக்கு அறிவியல், கணிதம், சுற்றுச்சூழல், வரலாறு, புவியியல், விண்வெளி ஆய்வு போன்றவற்றை எளிதில் புரிந்துகொள்ளும் மனோபாவத்தையும் பாடத்திட்டங்களில் ஆர்வத்தையும் உருவாக்கிட முடியும்.
    இதிகாசங்கள், தொல்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், அறிவியல் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் இவற்றிலெல்லாம் ஒரு நுட்பமான ஈடுபாட்டைக் குழந்தைகள் கண்டடைய வழிவகை செய்ய வேண்டும்.
    அவர்களின் இயல்பை சிதைக்கும் பாடத்திட்டத்தின் தேவையற்ற வரலாறுகள், வயதிற்கு மீறிய பாடத் திணிப்புகள் இவற்றிலிருந்து நம் பிள்ளைகளுக்கு விடுதலை கொடுக்க வேண்டும்.
    குழந்தைகள் என்னவாக உருவாக வேண்டும். அவர்களிடம் என்ன திறமை இருக்கிறது. அவர்களின் திறமையும் ஆர்வமும் எந்தப் புத்தகத்தில் புதைந்திருக்கிறது என்பதை ஓர் ஆசிரியர் கண்டறிய வேண்டும். இல்லையெனில் கதை சொல்லிகளுக்கு வழிவிட வேண்டும்.
    மருத்துவமனை ஆவணத் துறை அடாவடி பெயரில் தவறு; திருத்துவதில் தகராறு! விண்ணப்பதாரர்களுக்கு கடும் நெருக்கடி
     மருத்துவமனை ஆவணத் துறை அடாவடி பெயரில் தவறு; திருத்துவதில் தகராறு!   விண்ணப்பதாரர்களுக்கு கடும் நெருக்கடி
    கோவை:சான்றிதழ்களில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய வருவோரை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவ ஆவண துறை ஊழியர்கள் அலைக்களிப்பதாக புகார் எழுந்துள்ளது.
    மருத்துவ உலகம் இன்று எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்து புதிய பரிணாமத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவத் துறையில் இன்று சாதிக்க முடியாத எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டாலும், தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டாலும், ஒரு சில இடங்களில் மட்டும், ஆங்கிலேயர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களே இன்று வரை பின்பற்றப்படுகின்றன.
    இதனால், நேர விரயம் ஏற்படுவதுடன், வீண் அலைச்சலே ஏற்படுகிறது. இதற்கு உதாரணமான நிகழ்வுகள், கோவை அரசு மருத்துவமனை மருத்துவ ஆவண துறையில் தினமும் அரங்கேறி வருகின்றன.பல்வேறு மாவட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பதால், கோவை அரசு மருத்துவமனையில் எப்போதும் கூட்டத்துக்கு குறைவிருக்காது. மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோர், உயிரிழப்போர், விபத்து மற்றும் இயற்கைக்கு மாறான விதத்தில் உயிரிழப்போர், பிணவறையில் நடத்தப்படும், பிரேதப்பரிசோதனை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், பாதுகாக்கும் பொருட்டு, மருத்துவமனையில் மருத்துவ ஆவண துறை (எம்.ஆர்.டி.,) செயல்பட்டு வருகிறது.
    மருத்துவமனைக்கு அவசர கதியில் வரும் விபத்தில் காயமடைந்தவர்கள், மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புக்குள்ளானவர்கள் முதலில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் அந்தந்த துறைக்கு மாற்றப்படுவர். மருத்துவமனைக்கு அவசர கதியில் வருவோர், நோயாளியின் பெயரை, சில நேரங்களில் தவறாக தெரிவித்து விடுகின்றனர். மேலும், மருத்துவமனை ஊழியர்கள் பல சமயங்களில், நோயாளியின் பெயரை எழுத்து பிழையுடன் பதிவு செய்து விடுகின்றனர்.
    இந்த பிழைகளால், சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோருக்கு எவ்வித பிரச்னையும் இருப்பதில்லை. ஆனால், உயிரிழப்பவர்களின் உறவினர்களின் நிலை தான் பரிதாபத்துக்கு உரியதாகிறது.உயிரிழந்தவரின் பெயரில் எழுத்துப்பிழை, மாற்றம் இருப்பதால், அவர் பெயரில் வழங்கப்படும் இறப்பு சான்றிதழ் மூலம் எவ்வித சலுகையையும் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. 
    குளறுபடிகளை தவிர்க்க, பெயர் திருத்தம் செய்வதற்கு அரசு வழிவகை ஏற்படுத்தியுள்ளது. பெயர் மாற்ற விரும்புவோர், 'விண்ணப்பத்துடன், அதற்கான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள மற்றும் இருப்பிட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்' என விதி உள்ளது.
    இவ்வாறு சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இருப்பிட மருத்துவ அலுவலர் கையொப்பம் பெற்ற பின்னர், தபால் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, மருத்துவ ஆவண துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு ஆவணங்களை பரிசோதித்த பின்னர் பெயரில் திருத்தம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
    அங்கு தான் பிரச்னை ஏற்படுகிறது. மருத்துவ ஆவணத்துறையினர், ஆங்கிலேயர் காலத்தில் வகுக்கப்பட்ட விதிகளின் படி, 'வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., ஆகியோரிடம் சான்றிதழ் அல்லது 'நோட்டரி' சான்றிதழ் ஆகியவற்றை பெற்று சமர்பிக்க வேண்டும்' எனச் 'சட்டம்' பேசி விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர்.
    மேலும், 'ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஆவணமாகக் கருத தங்களது சட்டத்தில் இடமில்லை' எனவும் தெரிவிக்கின்றனர். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால், சான்றிதழ்கள் பெற விண்ணப்பதாரர்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், அரசு உதவி, இன்சூரன்ஸ் போன்றவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், துறை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.
    'அரசு ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக எடுத்துக் கொள்ளலாம்' எனத் தெரிவித்துள்ளது. அது செல்லாது என, மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிற்து. இது ஒரு புறம் இருக்க தற்கொலை, கொலை உள்ளிட்ட சட்டம் சார்ந்த வழக்குகளில், நன்கு விசாரித்த பின், போலீசார் பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையில், பெயர் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவ ஆவணங்களில், பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டதற்காக ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ., சான்றிதழ் பெற சொல்வதும் எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    இத்தகைய பிரச்னைகளை தவிர்க்கவும், விண்ணப்பதாரர்களின் சிரமத்தை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சட்டத்தில் திருத்தம் வேண்டும்!உயிரிழந்தவர் விபரங்களை சரிபார்த்து சான்றிதழ் வழங்க வேண்டியது வருவாய் துறை அலுவலர்களால் மட்டுமே முடியும். எனவே அவர்களிடம் சான்றிதழ் பெற்று வர அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, பெயர், முகவரியில் இருக்கும் தவறுகளை சரிசெய்து கொள்ளலாம். இது பலருக்கும் தெரிவதில்லை. தற்போது, பிரச்னைகளை தவிர்க்க, பெயர் திருத்தத்துக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அசோகன்,டீன், கோவை அரசு மருத்துவமனை.ரூ.1,000க்கு அனைத்தும்!மருத்துவ ஆவண துறை ஊழியர்கள் பெயர் மாற்றத்துக்கான விண்ணப்பங்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு அதை நிராகரிக்கின்றனர். ஆனால், 1,000 ரூபாய் கொடுத்தால் உடனே சான்றிதழை வழங்கிவிடுகின்றனர்.
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலத்தை ஒப்படைக்கும் முன் ஒரு முறை அனைத்து தகவல்களையும் சரிபார்த்தால், இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மருத்துவமனை ஊழியர்களுக்கு இதை செய்வதில் எவ்வித பிரச்னையும் இருக்க போவதில்லை. இதை மருத்துவமனை நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
    முதியோர் ஓய்வூதிய கணக்குகளில் அபராதம் பிடிக்க வங்கிகளுக்கு தடை
    மதுரை: 'முதியோர் மற்றும் விதவையர் ஓய்வூதிய வங்கி கணக்குகளில், குறைந்தபட்ச நிலுவைத் தொகை இல்லை என்பதற்காக, அபராதம் பிடிக்க, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை ஒத்தக்கடை, வழக்கறிஞர் லுாயிஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:
    முதியோருக்கு, 1,000 ரூபாய் ஓய்வூதியம் அரசு வழங்குகிறது. அவர்களுக்கு வங்கிகளில் கணக்கு துவக்கப்பட்டு, அதில் வரவு வைக்கப்படுகிறது.
    திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' கிளை, 75 வயது மூதாட்டியின் ஓய்வூதிய கணக்கில், குறைந்தபட்ச நிலுவைத் தொகைஇல்லை என்பதற்காக, 350 ரூபாய் அபராதம் வசூலித்தது.
    குறைந்தபட்ச நிலுவை தொகை பராமரிக்கப்படவில்லை என்பதற்காக, 388.74 லட்சம் கணக்குகளில் அபராதத் தொகையாக, 235.06 கோடி ரூபாய், மூன்று மாதங்களில், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வசூலித்துள்ளது.கைவிடப்பட்ட முதியோருக்கு உதவும் வகையில், அரசு ஓய்வூதியம் வழங்குகிறது.
    இவர்களிடமும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வங்கி கணக்குகளிலும், குறைந்தபட்ச நிலுவைத் தொகை இல்லை என்பதற்காக, அபராதம் வசூலிப்பது நியாயமற்றது. இதற்கு, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
    ஓய்வூதிய கணக்குகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிக்க வேண்டும் என்பதற்கு விதிவிலக்கு அளிக்கஉத்தரவிட வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தலைமை நீதிபதி,இந்திரா பானர்ஜி, நீதிபதி, ஜெ.நிஷாபானு அமர்வு பிறப்பித்த உத்தரவு:
    முதியோர் மற்றும் விதவையரின் ஓய்வூதிய வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிக்கப்படவில்லை என்பதற்காகஅபராதத் தொகை பிடித்தம்செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
    ரிசர்வ் வங்கி தலைவர், மத்திய நிதித்துறை இணைச் செயலர், மாநில சமூக நலத்துறைசெயலருக்கு நோட்டீஸ்அனுப்பி, வழக்கு, இரண்டு வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது.
    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர், 'டிஸ்மிஸ்'


    சட்ட விரோதமாக, வெளியாட்களை பணியமர்த்தியதாக, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளரை பணி நீக்கம் செய்து, பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சார் - பதிவாளர் அலுவலகங்களில், தங்களுக்கு வேண்டிய வெளியாட்களை, தினக்கூலி அடிப்படையில் பயன்படுத்துவதை, சார் - பதிவாளர்கள் வழக்கமாக கொண்டுஉள்ளனர்.
    சட்ட விரோத வசூலுக்காக, இந்த நபர்கள் பயன்படுத்தப்படுவதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, 'அது போன்ற சார் - பதிவாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பதிவுத் துறை தலைவர், குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், கடலுார் மாவட்டம், வடலுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், வெளியாட்களை பயன்படுத்தியதாக, சார் - பதிவாளர் வெங்கட்ராமன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    இதில், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் தற்போது, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளராக உள்ளார். துறை ரீதியான விசாரணையில், வெங்கட்ராமன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அவரை பணி நீக்கம் செய்து, பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையால், வெளியாட்களை பயன்படுத்தியதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் சிக்கிய, சைதாப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர் சார் - பதிவாளர்கள் பீதி அடைந்துள்ளனர். 

    - நமது நிருபர் -

    தேக்கடியில் தட்டான் பூச்சி கணக்கெடுப்பு துவக்கம்


    தேக்கடியில் தட்டான் பூச்சி கணக்கெடுப்பு துவக்கம்
    கூடலுார்: கேரளா, தேக்கடி பெரியாறு வனவிலங்கு சரணாலயத்தில் தட்டான் 
    ( 'தும்பி') பூச்சியின வகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.
    வறண்ட காலம் மாறி வசந்த காலம் துவங்கும் போது உற்பத்தியாகும் பூச்சியினங்களில் தட்டான் வகையும் ஒன்றாகும். தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதி 777 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இப் பகுதியில் தட்டான் இன பூச்சியில் பல வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. எத்தனை வகைகள் உள்ளன என்பது குறித்த கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.
    இது தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். இதில் 70 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சரணாலயத்தை பல்வேறு பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் 4 பேர் கொண்ட குழு கணக்கெடுப்பில் ஈடுபடுவர். அதனை டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்து, அதன் வகைகள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இங்கு தட்டான் பூச்சி கணக்கெடுப்பு முதன்முறையாகும். இக்குழுவில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், போட்டோகிராபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    பாரத தரிசன சுற்றுலா ரயிலில் பயணியருக்கு, 'நியூ லக்கி டிரா'
    கோவை: ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக அதிர்ஷ்டமுள்ள, 'இ - டிக்கெட்' பயணியருக்கு கட்டணத்தை திரும்ப வழங்கும், 'நியூ லக்கி டிரா' திட்டத்தை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் செய்துள்ளது.
    ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை, 2005லிருந்து நடத்தி வருகிறது.
    இதன்மூலம், பல்வேறு சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்களில் பயணியர் சென்றுவரலாம்.
    தவிர, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் 'இ - டிக்கெட்' முன்பதிவு செய்து இதர ரயில்களிலும் பயணிக்கலாம். டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, உணவு, தலையணை உள்ளிட்ட வசதிகளை, முன்பதிவு செய்வது இதன் சிறப்பம்சம்.
    இந்த இணையதளத்தில் பயணியரிடம், ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுவருகிறது.
    மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ள, 'பிம்' என்ற பாரத் இன்டர்பேஸ் பார் மணி அல்லது யு.பி.ஐ., என்ற யூனிபைடு பேமன்ட் இன்டர்பேஸ் விண்ணப்பங்கள் மூலம், 'இ - டிக்கெட்' பயணியருக்கு, 'நியூ லக்கி டிரா' திட்டத்தை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் செய்துள்ளது.
    தேர்வாகும் அதிஷ்ட பயணியருக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.
    ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயணியர், www.irctc.co.in எனும் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணியரை ஊக்குவிக்கும் விதமாக, 'நியூ லக்கி டிரா' திட்டம் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை, இதில் டிக்கெட் பெறுபவர்கள், 'ரேண்டம்' முறையில் தேர்வு செய்யப்படுவர். மாதந்தோறும், ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு, டிக்கெட் கட்டணம் அவர்களுக்கே திரும்ப வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களை, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என்றார்.

    பொறையார் விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு மனிதாபிமான உதவி


    சென்னை: பொறையார் மற்றும் சோமனுார் கட்டட விபத்துகளில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, அரசு போக்குவரத்து ஊழியர்கள், தலா, 250 ரூபாய் கொடுத்து, உதவி செய்ய முடிவு செய்துள்ளனர்.
    நாகை மாவட்டம், பொறையார் போக்குவரத்து பணிமனையின், ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், எட்டு பேர்; கோவை மாவட்டம், சோமனுார் பேருந்து நிலையம் இடிந்து விழுந்ததில், ஒருவர் என, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஒன்பது பேர் பலியாகினர். 
    இவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு, தலா, 7.5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
    அவர்களின் குடும்பத்திற்கு, அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும், 1.40 லட்சம் பேரும், தலா, 250 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளனர். 
    இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும், 25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

    நடிகர் விக்ரம் மகளை மணக்கிறார் கருணாநிதியின் கொள்ளு பேரன்


    நடிகர் விக்ரமின் மகள், அக்ஷிதா, மு.க.முத்து பேரன், மனுரஞ்சித் ஆகியோரின் திருமணம், நவ., 1ல், சென்னை, கோபாலபுரம் வீட்டில், தி.மு.க., தலைவர், கருணாநிதி தலைமையில் நடக்கிறது. 
    இந்த திருமணத்தின் மூலம், நான்காவது தலைமுறையினரின் திருமணத்தை நடத்தி வைக்கும் பெருமை, கருணாநிதிக்கு கிடைத்துள்ளது.

    'கெவின் கேர்' குழுமத்தின் நிறுவனர், சி.கே.ரங்கநாதனின் மகன், மனுரஞ்சித். இவரது தாயார், தேன்மொழி. இவர், கருணாநிதியின் மூத்த மகன், மு.க.முத்துவின் மகள். நடிகர் விக்ரமின் மகள், அக்ஷிதாவும், மனுரஞ்சித்தும் காதலித்தனர். அதைத் தொடர்ந்து, 2016 ஜூலை, 10ல், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், இருவரின் நிச்சயதார்த்த விழா நடந்தது. அதில், கருணாநிதி பங்கேற்றார். கடந்த டிசம்பர் மாதம், கருணாநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வீட்டில் தங்கியபடி, சிகிச்சை எடுத்து வருகிறார்.
    நடிகர் விக்ரம் குடும்பத்தினர், 'கருணாநிதியின் தலைமையில் திருமணம் நடந்தால், நன்றாக இருக்கும்' என, மணமகன் வீட்டாரிடம் தெரிவித்துஉள்ளனர். ஆனால், 'கருணாநிதியை, திருமண மண்டபத்திற்கு அழைத்து வர முடியாது' என, குடும்பத்தினர் கூறி விட்டனர். அதன்பின், கோபாலபுரம் வீட்டில், காலையில், கருணாநிதி முன்னிலையில், திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அன்று மாலையில், சென்னை, மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதுவரையில், பேரன், பேத்திகளின் திருமணத்தை நடத்தி வைத்த கருணாநிதிக்கு, நான்காவது தலைமுறையான, கொள்ளு பேரனின் திருமணத்தையும் நடத்தி வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    - நமது நிருபர் -
    'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்

    டிஜி லாக்கர்,மாணவர்,சான்றிதழ்,புதிய திட்டம்,துவக்கம்
    தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. 

    இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது.

    தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம். முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, சேர்க்கை போன்ற நேரங்களில், அசல் சான்றை, மாணவர்கள் எடுத்து செல்ல தேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    - நமது நிருபர் -
    ஜெ., மரண, விசாரணை ,போயஸ் கார்டன், வீட்டில், ஆரம்பம், 30ம் தேதி!

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை, அவர் வசித்த, சென்னை, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஆரம்பமாக உள்ளது. விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப் பட்ட, நீதிபதி ஆறுமுகசாமி, நேற்று பொறுப் பு ஏற்றார். விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்ப வேண்டிய நபர்களின், பட்டியல் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில், முதல் நடவடிக்கையாக, 'ஜெ., மரணம் தொடர்பாக, வரும், 22க்குள் கமிஷனில் தகவல் தெரிவிக்கலாம்' என, பொது மக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.



    முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்; அங்கு, டிச., 5 இரவு இறந்தார்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பான புகைப்படம் எதுவும், அரசு தரப்பிலோ, மருத்துவமனை தரப்பிலோ வெளியிடப்படவில்லை. அவருடன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே
    இருந்தனர்; வேறு யாரும் அனுமதிக்கப் படவில்லை.

    சி.பி.ஐ., விசாரணை:

    அதனால், அவர் இறப்பில் சந்தேங்கள் எழுப்பப் பட்டன. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, ஓ.பன்னீர்செல்வம், 'இது பற்றி சி.பி.ஐ., விசாரணை நடத்த பட வேண்டும்' என்றார். அப்போதெல்லாம், அமைச்சர்கள் அனைவரும், சசிகலாவுக்கு ஆதரவாக பேசினர். தற்போது, அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், பன்னீர் செல்வம் கோரிக்கையை ஏற்று, 'ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, கமிஷன் அமைக்கப் படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்களும், தங்களது நிலைப்பாட்டை மாற்றினர்.

    'நாங்கள் யாரும் மருத்துவமனையில், ஜெ.,வை பார்க்கவில்லை; சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பார்த்தனர்.நாங்கள் கூறியது எல்லாமே பொய்' என்றனர்.இந்நிலையில், ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுக சாமி தலைமையில் கமிஷன் அமைத்து, செப்., 25ல், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். கமிஷன் அமைக்கப் பட்டு, ஒரு மாதம் நிறை வடைந்துள்ளது.

    கமிஷனுக்கு, சென்னை, எழிலகத்தில் உள்ள, கல்சா மஹால் முதல் தளத்தில் அறை ஒதுக்கப் பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி தன் அலுவலகத்திற்கு வந்தார்.அலுவலகத்தில்,

    நாற்காலி எதுவும் போடப் படாமல் இருந்தது.
    எனவே, பசுமை தீர்ப்பாய பதிவாளர் அறைக்கு சென்று அமர்ந்தார். உடனடியாக ஊழியர்கள், அவரது அலுவலகத் தில், ஒரு மேஜை, நாற்காலியை போட்டனர். அதன்பின், அவர் தன் அறைக்கு சென்றார். இதையடுத்து, ஜெ., மரணம் தொடர்பாக, தகவல் கூற விரும்புவோருக்கு அழைப்பு விடுத்து, முதல் அறிக்கை வெளியிட்டார்.

    தகவல் கூறலாம்:

    அதில், அவர் கூறி உள்ளதாவது:கடந்த ஆண்டு செப்., 22ல், ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற் கான சூழ்நிலைகள் மற்றும் நிலைமை குறித்தும், அவர் துரதிருஷ்ட வசமாக இறந்த நாளான, டிச., 5 வரை, அவருக்கு அளிக்கப்பட்ட, அடுக்கடுக் கான சிகிச்சைகள் குறித்தும் விசாரிப்பதற்காக, கமிஷன் அமைக்கபட்டுள்ளது.இது தொடர்பாக, தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர் களும், நேரடித் தொடர்பு உடையவர் களும், அவர்களுக்கு தெரிந்த தகவலை கூறலாம்.

    அதை, சத்தியப் பிரமாண உறுதிமொழி பத்திர வடிவில், தகுந்த ஆவணங்களுடன், இரண்டு நகல்களுடன், நவ., 22 அல்லது அதற்கு முன், நேரடியாக அல்லது தபால் வழியாக, கமிஷனுக்கு அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வரும், 30ம் தேதி முதல் நேரடி விசாரணையை, நீதிபதி துவங்க உள்ளார்.

    முதல் விசாரணையை, ஜெ., வசித்த, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து துவங்க திட்டமிட்டுஉள்ள அவர், சசிகலா குடும்பத்தினர், மருத்துவ மனை நிர்வாகிகள், மருத்துவர்கள், அமைச்சர் கள் என, பல தரப்பினருக்கும், 'சம்மன்' அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பட்டியல் தயாரிப்பு பணி, தீவிரமாக நடந்து வருவதாக தெரிகிறது.இது குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கூறுகையில், ''ஜெ., மரணம் தொடர்பான விசாரணை, வெளிப் படைத் தன்மையுடன் நடத்தப்படும். அரசு வழங்கியுள்ள காலத்திற் குள், விசாரணையை முடிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

    - நமது நிருபர் -
    வீடில்லாதோர் தங்குவதற்கு பழைய ரயில் பெட்டிகள்: மத்திய அரசு திட்டம்

    வீடில்லாதோர்,தங்குவதற்கு,பழைய,ரயில் பெட்டிகள்,மத்திய அரசு,திட்டம்
    மும்பை: பிளாட்பாரங்களில் வசிப்போர், குளிர் காலத்தில், இரவு நேரங்களில் தங்குவதற்கு, பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    நாடு முழுவதும், 10 லட்சம் பேர், தங்குவதற்கு வீடின்றி, பிளாட்பாரங்களில் வசிப்பதாக, அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதை விட, மூன்று மடங்கு அதிகம் பேர் பிளாட்பாரங்களில் வசிப்பதாக, தனியார் சமூக அமைப்புகள் கூறியுள்ளன. மழை மற்றும் குளிர் காலங்களில், தங்குவதற்கு இடமின்றி சிரமப்படுவதுடன், நுாற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
    உத்தரவு:

    கடந்த, 2010ல், பிளாட்பாரங்களில் வசிப்போருக்கு, ஒரு லட்சம் மக்கள் தொகை உடைய, 62 நகரங்களில், இரவு தங்குமிடங்களை அமைக்கும்படி, மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பழைய, பயன்படுத்தாத ரயில் பெட்டிகளில், மின் இணைப்பு, கழிப்பறை போன்ற வசதிகளை செய்து, தேவைப்படும் இடங்களில் நிறுவ, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. 
    சிக்கல்:

    இத்திட்டத்திற்கு, 10 ரயில் பெட்டிகளை வழங்க, தெலுங்கானா அரசு முன்வந்துள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில், ரயில் பெட்டிகளை நிறுத்துவதற்கான இடங்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
    என்ஜினீயரிங் பட்டதாரிகள் எத்தனை பேர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்? மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு



    எத்தனை பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்? என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அக்டோபர் 28, 2017, 03:30 AM

    சென்னை

    இந்தியா முழுவதும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் எத்தனை பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்? என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    கரூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘அண்ணா பல்கலைக்கழக இணைவிப்பு பெற்ற என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர அண்ணா பல்கலைக்கழக தொழில் கூட்டமைப்பு மையம் மாநில அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.

    இதன்கீழ் 30 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்து வளாக நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் வளாக நேர்முகத்தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

    வேலையில்லாமல் திண்டாட்டம்

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு நடந்துள்ளது. அதில், எத்தனை பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். கல்லூரிகளின் பெயர்களை பிரபலப்படுத்த இதுபோன்ற நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படுகிறதா?’ என்பது குறித்து கேள்விகள் எழுப்பி தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அதிக எண்ணிக்கையில் என்ஜினீயரிங் கல்லூரிகளை தொடங்குவதால், என்ஜினீயரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது என்று கூறினார்.

    மத்திய அரசுக்கு கேள்வி

    பின்னர், இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளரையும் எதிர் மனுதாராக சேர்த்த நீதிபதி, நாடு முழுவதும் என்ஜினீயரிங் பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க ஏதேனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டார்.

    மேலும், இந்தியாவில் எத்தனை என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன?, அவற்றில் ஆண்டுக்கு எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்?, வெற்றிகரமாக படிப்பை முடித்து வெளியேறுபவர்கள் எத்தனை பேர்?, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் எத்தனை பேர்?, எத்தனை என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்? என்பது உள்பட 12 கேள்விகளை எழுப்பி இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். பின்னர், விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

    Madras university yet to get surplus grant from centre

    Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...