Monday, October 30, 2017

பார்வை: பெண் ஏன் அழகாக இருக்க வேண்டும்?


டெங்கு மரணங்கள், கந்துவட்டி உயிர்ப்பலிகள், கருத்துச் சுதந்திரம் இவற்றைத் தாண்டி சமீபத்தில் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாகப் பெண்களின் ‘அழகு’ம் சேர்ந்துவிட்டது. சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் மட்டுமே பேசப்பட்ட விஷயத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா என்று தோன்றலாம். இதுபோன்ற விவாதங்கள் நடக்குமிடங்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அவர்களின் கருத்தைப் புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பிரதிபலிப்பாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
எது அழகு என்பதில் தொடங்கி, அழகு குறித்த புரிதலின் அடிப்படையிலேயே அழகு அமைகிறது என்பதுவரை பல்வேறு கருத்துக்களை ஆண், பெண் இருதரப்பிலும் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் இரு மாநிலப் பெண்களின் அழகை ஒப்பிட்டு விவாத நிகழ்ச்சி நடத்துவதற்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவிக்க, அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி சார்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட விவாதத்தில் பங்கேற்ற அதன் தயாரிப்பு தரப்பைச் சேர்ந்தவர்களும் (அவர்கள் ஆண்கள்) மற்றொரு ஆணும் தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்தை முன்வைத்த பெண்களை மட்டம்தட்டிப் பேசியதுடன் தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். மாற்று விவாதத்தைத் தூண்டுவதாகக் கருதப்படக்கூடிய நிகழ்ச்சியைச் சேர்ந்தவர்களே பொதுவெளியில் இதுபோன்ற கருத்துகளைப் பகிரங்கமாகச் சொன்னது, அந்த நிகழ்ச்சி தயாரிப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
என்றைக்குமே ஒரு பெண் கேள்வி கேட்பதைச் சமூகத்தால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை. அதுவும் ஆணை நோக்கிக் கேள்வி எழுப்பப் பெண்ணுக்கு எப்போதும் உரிமை மறுக்கப்படுகிறது. சமூகம் எதைச் சொன்னாலும் அதை வார்த்தை மாறாமல் ஏற்றுக்கொள்வதால்தான் பெண்மை இங்கே மகத்துவமானதாகக் கருதப்படுகிறது. ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கும்போது, பெண் தன் ‘பெருமித’த்தை இழந்துவிடுகிறாள்! அதுதான் அந்த நிகழ்ச்சி இயக்குநரின் பார்வையிலும் எதிரொலித்தது.
அழகு குறித்த அலசல்களுக்கு இடையே பெண்ணியவாதிகள் எப்படி இருக்க வேண்டும், இடதுசாரி பெண்ணியவாதிகளாக இருந்தால் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், அவர்கள் மொட்டையடித்துக்கொண்டு அழகை சப்பையாக்கிக் கொள்கிறார்களா என்பது போன்ற வலியவந்து அறிவுரை சொல்லும் போக்கையும் கருத்துகளை வாரியிறைக்கும் தன்மையையும் பார்க்க முடிகிறது.
மென்மைதான் பெண்மையா?
பெண்கள் இப்படி இருப்பதுதான் அழகு என்று சொல்லப்படும் வரையறை இன்று, நேற்று முடிவானதல்ல. வரலாறு பதிவுசெய்யப்பட்ட நாளில் இருந்தே அந்த வரையறைகளும் இலக்கணங்களும் தொடங்கிவிட்டன. வில் புருவமும் கயல் கண்களும் மெல்லிடையும் செவ்விதழ்களும் சங்குக் கழுத்தும் இன்னபிற லட்சணங்களும் பொருந்திய பெண்களே அழகு என்கிற எல்லைக்குள் கால்வைக்க முடியும். புராண காலமும் சங்க காலமும் முடிந்து அடுத்துவந்த தலைமுறையினர் தங்கள் பங்குக்கு இந்த லட்சணங்களில் சிலவற்றைக் கூட்டவோ குறைக்கவோ செய்ய, பெண்ணுக்கான அழகு விதிகள் காலம்தோறும் மாற்றியமைக்கப்பட்டும் நவீனமயப்படுத்தப்பட்டும் வருகின்றன. ஆனால் எல்லாக் காலங்களிலும் நிறமும் மென்மையும் வாளிப்பான உடலுமே பெண்மையின் முக்கிய அடையாளங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.
எப்படி எல்லாப் பெண்களாலும் எப்போதும் இந்த இலக்கணப்படி வாழ முடியும்? நிறமும் அவய அமைப்புகளும் வழிவழியாக வருபவை. அதில் நாமே விரும்பித் தேர்ந்தெடுக்கவோ மாற்றியமைக்கவோ என்ன இருக்கிறது? எதையும் அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்வதுதானே இயற்கை? ஆனால், பெண்கள் விஷயத்தில் அது நடப்பதேயில்லை. எப்போதும் ஒப்பீடு இருந்தபடியேதான் இருக்கிறது. ஆண்கள் பார்த்து ரசிக்க வேண்டிய, நுகர வேண்டிய ஒரு பண்டமாகவே பெண்கள் பெரும்பாலும் கருதப்படுவதே இதற்கு அடிப்படை.
அலங்காரச் சிறை
பெண், ஆண் யாராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்த உடல்வாகும் தோற்றமும் உண்டு. அவற்றில் இது அழகென்றும் இது அசிங்கம் என்றும் எதையும் வகைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. அதேநேரம், புறத்தோற்றத்துக்காக ஒரு ஆண் கவலைப்படும் தருணங்கள் மிகக் குறைவு. பெண்ணோ எப்போதும் தன் புறத்தோற்றம் குறித்த நினைப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறாள். சிறுவர்களின் அலங்காரம் கால்சட்டை, மேல்சட்டையோடு முடிந்துவிடுகிறது.
சிறுமிகளுக்கோ உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால்வரை நீள்கிறது. அப்படி அலங்கரித்துக்கொள்வதுதான் லட்சணம் என்று குழந்தைப் பருவம் முதலே பெண்களின் மனதில் திணிக்கப்படுகிறது. எப்போதும் தன்னைக் காட்சிப்பொருளாக்கிக்கொள்ள வேண்டும், பிறர் பார்க்கும்படி நாம் தோன்ற வேண்டும் என்பது போன்ற சிந்தனைகள் பெண்களின் மனதில் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. இந்தப் பின்னணியில் இருந்துதான் அழகு சார்ந்த அனைத்தையும் நாம் அணுக வேண்டும்.
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் தமிழாசிரியை எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் எதற்காக பூ வைத்துக்கொள்கிறீர்கள்?” என்கிற அவரது கேள்விக்கு, “வாசனைக்காக” என்று சொன்னோம். “சரி, வாசனையே இல்லாத கனகாம்பரத்தை ஏன் வைத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். நாங்கள், “அழகுக்காக” என்று சொன்னோம். “சரி, உங்கள் தலையில் இருக்கிற பூவை நீங்கள் பார்க்கப் போவதில்லை. பிறகு ஏன் அதை வைத்துக்கொள்கிறீர்கள்?” என்ற ஆசிரியரின் கேள்வி அப்போது எங்களுக்குப் புரியவேயில்லை.
அவரே, “பிறர் பார்க்கத்தானே பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள்?” என்று சிரித்தபடியே கேட்டார். அப்போதுதான் ஆண்கள் ஏன் கூந்தல் வளர்ப்பதில்லை, அதில் ஏன் பூ வைத்துக்கொள்வதில்லை என்ற கேள்வி தோன்றியது. அதுவரை ஆண்கள் முடிவெட்டிக்கொள்வதும் பெண்கள் கூந்தல் வளர்ப்பதும்தான் இயற்கை என்று அறிந்துவைத்திருந்த எங்களுக்கு, வேறொரு பாதையைக் காட்டினார் எங்கள் தமிழாசிரியை.
விமர்சனம் என்னும் வன்றை
பெண்கள் கூந்தல் வளர்ப்பதும் தங்களை அலங்கரித்துக்கொள்வதும் அவர்கள் உரிமை என்று சிலர் சண்டைக்கு வரலாம். ஆனால், அப்படி அழகுக்கு அழகு சேர்ப்பது யாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதையும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் சேர்த்தே யோசிக்க வேண்டும். காரணம் அழகு அல்லது அழகுக்காகச் செய்துகொள்ளும் செயல்பாடுகளை மையமாக வைத்துதான் பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள், மட்டம்தட்டப்படுகிறார்கள், அவமானத்துக்கு ஆளாகிறார்கள்.
தங்களைச் செயற்கை அழகுக்கு உட்படுத்த முடியாத பெண்களும் கறுப்பாக இருக்கும் பெண்களும் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள். “கறுப்பே அழகு என்று கம்பீரமாக நில்லுங்கள்” என்கிற சப்பைக்கட்டு இங்கே செல்லுபடியாவதில்லை. எத்தனை கம்பீரமாக நின்றாலும் கறுப்புக்குக் கிடைக்கும் வாய்ப்பும் வரவேற்பும் அனைவரும் அறிந்ததே.
சிவப்பாக இருக்கும் பெண்களுக்குத் திருமணத்தில் தொடங்கி வேலைவாய்ப்புவரை முன்னுரிமை கிடைப்பதால்தான் இங்கே சிவப்பழகு சாதனங்கள் கோடிகளைக் குவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிப் பாடப் புத்தகத்தில் ‘வரதட்சிணையின் நன்மைகள்’ என்று தரப்பட்டிருக்கும் குறிப்புகளில், ‘கறுப்பாகவும் அழகில்லாமலும் இருக்கும் பெண்ணுக்குத் திருமணம் ஆவதற்கு வரதட்சிணை உதவுகிறது’ என்பதும் அடக்கம். மாணவர்களுக்கு இப்படிக் கற்றுத்தருகிற நிலையில்தான், நம் சமூகப் புரிதலும் அணுகுமுறையும் இருக்கிறது.
அதனால்தான் கொள்கை சார்ந்தும் கருத்து ரீதியாகவும் விமர்சிக்க வேண்டிய பெண்களை அவர்களது புறத்தோற்றம் சார்ந்து ஆண்கள் விமர்சிக்கிறார்கள். அதற்குச் சமீபத்திய உதாரணம் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அவரது நிறத்தையும் தோற்றத்தையும் வைத்துச் சொல்லப்படுகிறவை எல்லாமே கீழ்த்தரமானவை, கண்டிக்கத்தக்கவை.
அழகு அடையாளமல்ல
பெண்களிடம் எப்போதும் புறஅழகை மட்டுமே எதிர்பார்க்கும் ஆண் மனதின் அழுக்குச் சிந்தனைகளை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆனால் எப்படியிருந்தாலும் பெண்களின் இயல்புதான் அவர்களின் அடையாளம் என்பதைப் பெண்கள் நினைத்தால் உணர்த்திவிட முடியும். வயதுக்கு ஏற்ப, உடலியல் மாற்றங்களுக்கு ஏற்ப அனைவரின் உடலமைப்பும் புறத்தோற்றமும் மாறுவதுதான் இயற்கை.
கருநிறமும், குறைவான கூந்தலும், தெற்றுப்பல்லும், பிள்ளைப்பேறால் ஏற்பட்ட தழும்பும், சரிந்த வயிறும், நாற்பதைக் கடப்பதற்கு முன்பே தென்படும் நரைமுடிகளும், கண்ணின் கீழே நிரந்தரமாகிவிடும் கருவளையமும், மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உடல் பருமனும், தோல் சுருக்கமும் இப்படி இன்னபிறவும் அசிங்கமும் அல்ல அடையாளமும் அல்ல.
அவற்றை மாற்றுவதற்கு மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்து என்ன ஆகப்போகிறது? அவை இயல்பு, இயற்கை, அதுதான் நாம் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற எண்ணம் ஆக்கப்பூர்வமான எந்த மாற்றத்தையும் நிகழ்த்தப் போவதில்லை. எக்காலத்திலும் அழியாத தெளிவான சிந்தனையையும் தீர்க்கமான செயல்பாடுகளையும்விடவா இந்தப் புறத்தோற்றம் முக்கியம்?

Hyderabad High Court allows compensation for death of pillion rider

DECCAN CHRONICLE.

PublishedOct 29, 2017, 2:54 am IST

Justice Rajani directed the insurance company to pay Rs 16.66 lakh to the claimants of the deceased family.

Hyderabad High Court

Hyderabad: The Hyderabad High Court has ruled that the insurance company is liable to pay compensation in case of death of pillion rider if the vehicle is covered by a comprehensive policy and basic premium was paid to cover the risk of a passenger on the two-wheeler, who can be no other than the pillion rider.

Justice T. Rajani was allowing a petition by Mr A.A. Sadafule and two others challenging an order of a consumer forum which had fixed a lower amount of compensation.

The judge dismissed an appeal filed by National Insurance Company Limited challenging the order of the consumer forum on the ground that liability had been fixed on the insurer spite of the deceased being a pillion rider. It appealed against the “excessive” compensation awarded by the forum.

Justice Rajani directed the insurance company to pay Rs 16.66 lakh to the claimants of the deceased family.

Tamil Nadu: Vice Chancellor points out malpractices in evaluation of PhD thesis

DECCAN CHRONICLE.

PublishedOct 29, 2017, 6:00 am IST

Duraisamy sought the senate members' support to improve the quality of research in the university.


Duraisamy has proposed changes in the university regulations for selecting the foreign examiners at the university's senate meeting held here on Saturday.

Chennai: Listing out several malpractices in the evaluation of Ph.D. theses in University of Madras, Vice-Chancellor of the university S.Duraisamy has proposed changes in the university regulations for selecting the foreign examiners at the university's senate meeting held here on Saturday.He told members that there are a number of malpractices going on in examination and evaluation of PhDs.

“We have found out one person in Ethiopia has reviewed 17 theses in seven months in a group of disciplines. In another case, one foreign examiner has sent eight evaluation reports and except for the title and name, all the reports are having the same content,” he pointed out. As per the proposed changes, the foreign examiners should have published minimum two research papers in their relevant fields within the last five years in reputed journals and the examiner also should be from an accredited university.

When some members expressed concern about completing the research on time in view of proposed changes, .Duraisamy sought the senate members' support to improve the quality of research in the university. The senate passed the resolution adopting University Grants Commission's (Minimum Standards and Procedures for Award of M.Phil.,/Ph.D., Degree) Regulation, 2016. It also approved other resolutions such as offering suitable Massive Online Open Courses in the university departments and affiliated colleges, providing five per cent reservation of seats for persons with disabilities in the meeting.

Single card to travel on Chennai buses & metro


By C Shivakumar  |  Express News Service  |   Published: 29th October 2017 02:42 AM  |  

CHENNAI: In six months, Chennaites will have a common mobility card to travel on buses and the Metro rail, according to a top official from Chennai Metro. It is learnt that a decision is being taken at the high-power committee chaired by Chief Secretary Girija Vaidyanathan to introduce the card.
Chennai Metro Rail officials said they had taken it upon themselves to introduce the facility.
Initially, the card was supposed to be inter-operable across different transport systems in the State, including the railways, and would have served as a credit or debit card as well. However, the plan now is to introduce it only for MTC and Chennai Metro Rail.
Sources said the facility would help capitalise on the MTC’s 50-lakh ridership and generate revenue for both the Metro and MTC. Back-end integration seems to be an issue, but the Chennai Metro is hopeful of resolving it soon.
Commuters with the cards would just have to swipe them to pay for their transport.
The move comes in the wake of the Union Ministry of Urban Development planning to introduce a national common mobility card modelled on London’s popular Oyster card. But before the technical details are worked out, the main stakeholder - the banks - need a business model to be worked out, sources said.

Over 10,000 government doctors in Rajasthan submit resignations to association


By PTI  |   Published: 29th October 2017 08:03 PM  |  

For representational purposes
JAIPUR: Hundreds of government doctors today gathered here to submit their resignation to the All Rajasthan In Service Doctors Association (ARISDA) in support of their 33 long-pending demands.
The demands include formation of a separate cadre for in-service doctors, Rs 10,000 grade pay benefit to doctors, rectification in salary discrepancy, housing facility and safety for all doctors, said Dr Ajay Chaudhary, president ARISDA.
They are also demanding for running government health centres in a single shift and rural allowance, he said.
There are 10,000 doctors who are protesting for the demands to be fulfilled.
He also said that if the government does not fulfill their demands, the resignations will be effective from November 6.

AirArabia flight suffers bird hit during landing in Coimbatore

PTI | Oct 29, 2017, 14:52 IST



COIMBATORE: An Air Arabia flight with 107 passengers onboard suffered a bird hit while landing at the airport here on Sunday.

The flight coming from Sharjah was about to land around 3.30 AM when it was hit by a peacock, airport sources said.

However, the pilot managed to land it safely, they said.

Owing to the incident, the departure of the return flight has been delayed and a technical team from Chennai is attending to the problem,, they added.

LATEST COMMENTGod saved allANSH

Nearly 165 passengers, including those travelling to Haj pilgrimage, who have been booked on the flight were accommodated in nearby hotels, sources said.

Meanwhile, one Hakim, hailing from Malappuram in Kerala, who is reportedly wanted in connection with a case of abetment of suicide of his wife in Kerala was detained by immigration officials on his arrival from Sharjah, they said.
60ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் தவிப்பு:மக்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக குமுறல்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே சிறுமருதுாரில் சுதந்திரம் பெற்றது முதல் 60 வருடங்களாக தங்கள் கிராமத்திற்கு பஸ் வரும் என்ற நம்பிக்கையில் அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.சிங்கம்புணரி ஒன்றியத்தில் பிரான்மலையை ஒட்டி அமைந்துள்ளது சிறுமருதுார் கிராமம். இங்கு 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 
இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை பஸ் போக்குவரத்துவசதி இல்லை.இப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு செல்ல பல கி.மீ., நடந்து சென்றுபஸ் ஏற வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்த கிராம மக்களின் கஷ்டத்தை போக்கி இப்பகுதிக்கு பஸ் விடுவதற்காக20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தும் பஸ் ஏதும் விடப்படவில்லை.
இதற்கிடையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமம் வழியாக தனியார் மினிபஸ் ஒன்று விடப்பட்டது. விடப்பட்ட சில மாதங்களிலேயேஅதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. 
இன்று வரை அப்பகுதிக்கு எந்த பஸ்சும் இயக்கப்படவில்லை.சிறுமருதுாரை சேர்ந்த ஆறுமுகம் கூறியதாவது: சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்கள் கிராமத்துக்கு பஸ் விடப்படவில்லை.இதனால் நோயாளிகள் 3 கி.மீ. துாரம் நடந்து சென்று, அங்கு பஸ்சுக்கு காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.மிகவும் சிரமமாக உள்ளது.சிங்கம்புணரியில் இருந்து எங்கள் ஊர்வழியாக பொன்னமராவதிக்கும், அங்கிருந்துசிங்கம்புணரிக்கும் ஒரு நாளைக்கு 3 முறையாவது டவுன் பஸ் இயக்க வேண்டும். 
அப்படி இயக்கினால் எங்கள் ஊர் மட்டுமல்லாமல்பக்கத்து ஊர்களும் பயன்பெறும்,என்றார்.ஆனந்தன் கூறியதாவது: பஸ் போக்குவரத்து இல்லாததால் எங்கள் ஊர் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு5 கி.மீ.துாரம் சைக்கிளில் செல்கின்றனர். இது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அற்றதாக இருப்பதால் பலர் மேற்படிப்பு படிக்கவைக்க யோசிக்கின்றனர்.எனவே பள்ளி நேரத்திற்கு தகுந்தாற்போல் டவுன் பஸ்சை அரசு இயக்கவேண்டும்,என்றார்.

இரட்டை இலை யாருக்கு?


இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த, இறுதி கட்ட விசாரணை, டில்லியில் இன்று, தேர்தல் கமிஷனில் நடக்கிறது. 'தங்களுக்கே உறுதியாக சின்னம் கிடைக்கும்' என, முதல்வர் பழனிசாமி தரப்பினர் நம்பிக்கைஉடன் உள்ளனர்.

முடக்கியது : ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட, இரு அணிகளின் சார்பிலும் சின்னம் கேட்கப்பட்டதால், உடனே முடிவெடுக்க முடியாமல், கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது.
முதல்வர் பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்த பின், 'இரட்டை இலை சின்னத்தை, தங்கள் அணிக்கு தர வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், கோரிக்கை வைக்கப்பட்டது. 
புதிய பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்குப் போட்டியாக, தினகரன் அணியினரும், தங்களுக்கே சின்னம் ஒதுக்க வேண்டும் என, மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இது தொடர்பான விசாரணை, டில்லியில் உள்ள, தேர்தல் கமிஷனில் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணை, அக்., 6; இரண்டாம் கட்ட விசாரணை, அக்., 13; மூன்றாம் கட்ட விசாரணை, அக்., 23ல் நடந்தது. 
தலைமை தேர்தல் கமிஷனர், ஏ.கே.ஜோதி தலைமையில் நடந்த மூன்று கட்ட விசாரணையின் போதும், இரு தரப்பினரும் தங்கள் வாதத்தை முன் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, இறுதி கட்ட விசாரணை, இன்று நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாலை, 3:00 மணிக்கு, விசாரணை துவங்க உள்ளது. 
இதில் பங்கேற்க, அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகியோர் நேற்று, டில்லி புறப்பட்டு சென்றனர். தினகரன் தரப்பினரும், நேற்றிரவு டில்லி சென்றனர்.
டில்லி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில், அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியே உண்மையான அ.தி.மு.க., எனவே, எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற, உறுதியான நம்பிக்கை உள்ளது. 

அழிக்க முயற்சி : எங்கள் பக்கம் அனைத்து நியாயமான வாதங்களையும், எடுத்து வைத்துள்ளோம். அதை தேர்தல் கமிஷன் பரிசீலித்து, நியாயமான முடிவை அறிவிக்கும். இன்று நடக்கும் விசாரணையே, இறுதியானதாக இருக்கும். அ.தி.மு.க.,வை அழிக்க எப்போதுமே நினைக்கும் கட்சி தி.மு.க., தான். இப்போது, தினகரனும், அ.தி.மு.க.,வை அழிக்க முயற்சிக்கிறார். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கொண்டாடவோ, அவரைப் பற்றி பேசவோ தினகரனுக்கு தகுதி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

ஆம்புலன்சில் லட்டு தட்டுகள் : திருமலையில் பக்தர்கள் அதிர்ச்சி


திருப்பதி: திருமலையில், ஆம்புலன்சில் லட்டு தட்டுகள் எடுத்து வரப்பட்டதை பார்த்த பக்தர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பதி, திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையான் தரிசனத்திற்கு அடுத்தபடி லட்டு பிரசாதத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அதனால், நீண்ட நாட்கள் கெடாத லட்டு பிரசாதத்தை தயார் செய்ய, தேவஸ்தானம் பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.
பூந்தி தயாரிக்க தனி மடப்பள்ளி, லட்டு பிடிக்க தனி மடப்பள்ளி, தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதங்களை எடுத்துச் செல்ல, மூடப்பட்ட தனி வாகனம், லட்டு தட்டுகளை சுத்தம் செய்ய, வெந்நீர் கெய்சர்கள் என, அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்நிலையில், நேற்று காலை, மடப்பள்ளி அருகே, நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சில், லட்டு தட்டுகள் வந்திறங்கின. இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர்கள் பதிலளிக்காமல் சென்றதால், சம்பந்தப்பட்ட அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். 
அதற்கு அவர், 'சுத்தம் செய்யப்பட வேண்டிய தட்டுகள் தான், ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டன' என, அலட்சியமாக பதிலளித்தார்.
இதை கேட்டு கோபமடைந்த பக்தர்கள், தேவஸ்தான உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். 
இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:
திருமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், பக்தியுடன் வாங்கி செல்லும் லட்டு பிரசாதத்தை, ஊழியர்கள் அலட்சியமாக கையாண்டு வருகின்றனர். 
நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சில், லட்டு பிரசாதத்தை வைக்கும் தட்டுகளை எடுத்துச் சென்றால், நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதை அறியாமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் தேவஸ்தான அதிகாரிகளின் செயல் வேதனை தருகிறது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழக்கு விபரங்களை அறிய புதிய, 'மொபைல் ஆப்'

சென்னை: ''நீதிமன்றங்களில் உள்ள வழக்கு விபரங்களை தெரிந்து கொள்ள, 'மொபைல் ஆப்' விரைவில் செயல்பாட்டிற்கு வரும்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் லோகூர் தெரிவித்தார்.
வழக்குகள் தொடர்பான ஆவணங்களை, 'டிஜிட்டல்' மயமாக்கும் மையத்தை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

டிஜிட்டல் மயம் : அப்போது, அவர் பேசியதாவது: ஆவணங்களை பாதுகாத்து வைப்பது, மிகவும் அவசியம். அவற்றை டிஜிட்டல் மயமாக்குவதால், இடப்பிரச்னை தீரும். ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்து பாதுகாப்பதால், அவற்றை எளிதில் அணுகலாம். நீதிமன்றங்களில் உள்ள வழக்கு விபரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக, புதிய, 'மொபைல் ஆப்' செயல்பாட்டுக்கு வர உள்ளது. எந்த நீதிமன்றத்தில், எந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை, வழக்கு தகவல் முறைப்படி தெரிந்து கொள்ளலாம்.தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பில், நான்கு உயர் நீதிமன்றங்கள், ஏற்கனவே இணைக்கப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக, மேலும், 10 உயர் நீதிமன்றங்கள் இணைக்கப்படும். நீதித்துறை மின்னணு மயமாக்கப்படுவதால், பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.வழக்குகளை, சமரச மையத்துக்கு அனுப்புவது குறித்த பயிற்சி வகுப்பையும், நீதிபதி மதன் லோகூர் துவக்கி வைத்து பேசியதாவது:
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, சமரசமாக பேசி தீர்வு காண முடியும். ௬௦ நாட்களுக்குள், சமரச தீர்வு எட்டப்பட வேண்டும். டில்லியில், ஏராளமான வழக்குகள், 30௦ நாட்களில் முடிவுக்கு வருகிறது. உயர் நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு, அனைவராலும் செல்ல முடியாது. 

சமரசம் : அருகில் உள்ள நீதிமன்றங்களிலேயே, அவர்களின் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பேசி தீர்க்கப்பட வேண்டிய வழக்குகளை, சமரசமாக முடிக்க ஏதுவாக, அதற்கான மையத்தை அணுகும்படி, வழக்கறிஞர்களை, மாவட்ட நீதிபதிகள் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி பேசினார். இந்நிகழ்ச்சிகளில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, பொதுத்தேர்வுக்கு முன், இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படும். ஆனால், 2016ல், டெண்டர் விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

அறிவிப்பு : இந்நிலையில், 2016ல், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, ஆறு மாதங்கள் தாமதமாக, தற்போது, லேப் - டாப் வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டு களைப் போல, லேப் - டாப்கள் திருட்டு போகாமல் தடுக்கவும், முறைகேடுகளை தவிர்க்கவும், புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, லேப் - டாப் பெறும் மாணவர்களின், அசல் சான்றிதழில், லேப் - டாப் வழங்கப்பட்டது என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையெழுத்திட்டு, அதன் நகலை, ஆவணமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், பல மாணவர்கள், கல்லுாரிகளில் படிப்பதால், அசல் சான்றிதழ் கல்லுாரியில் இருப்பதாக கூறி, லேப் - டாப் கேட்கின்றனர். சான்றிதழ் இன்றி, லேப்டாப் வழங்கினால், தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என, உயர் அதிகாரிகள் எச்சரித்துள்னர்.
இந்நிலையில், சான்றிதழுடன் வராத மாணவர்களுக்கு, துண்டுச்சீட்டில் எழுதி கொடுத்து, லேப் - டாப் வழங்கும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், நிலைமையை சமாளிக்க முடியாமல், தலைமை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 2வை, 2016ல், முடித்த மாணவர்கள், இலவச லேப் - டாப் பெற வசதியாக, தற்காலிகமாக, அசல் சான்றிதழை வழங்கக்கோரி, கல்லுாரி, பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பலாம். 

பிரச்னை : கல்வி நிறுவன முதல்வரிடம், மாணவர்கள், 'போனபைட்' சான்றிதழ் பெற்று வந்தால், லேப் - டாப் வழங்க, வழிவகை செய்யலாம். மாறாக, எந்த சான்றும் இல்லாமல், லேப் - டாப் வழங்கினால், தலைமை ஆசிரியர்கள், எதிர்காலத்தில் கணக்கு தாக்கல் செய்வதில் பிரச்னை ஏற்படும். எனவே, இந்தப் பிரச்னை தொடர்பாக, உயர் கல்வித் துறையுடன், பள்ளிக் கல்வித்துறை பேசி, உரிய முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

ஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்


புதுடில்லி: ஆதார் பதிவு மையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்படுவதை அடுத்து, ஆதார் பதிவுகளை, அரசு ஊழியர் ஒருவர், தன் விரல் ரேகையை பதிவு செய்து, உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம், மக்களிடம், 'பயோமெட்ரிக்' முறையில் தகவல்களை பெற்று, பதிவு செய்தல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை, தனியார் ஏஜன்சிகள் மூலம் செய்து வருகிறது. இவை, தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வருவதால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதையடுத்து, அனைத்து ஆதார் பதிவு மையங்களையும், மத்திய, மாநில அரசு கட்டடங்கள், வங்கிகளின் கட்டடங்களுக்கு மாற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மற்றொரு பாதுகாப்பு நடவடிக்கையாக, மக்களின் ஆதார் தகவல்களை பதிவு செய்யும்போது, அவற்றை, ஆதார் பதிவு மையம் அமைந்துள்ள, அரசு அலுவலகத்தை சேர்ந்த ஒரு ஊழியர், தன் விரல் ரேகையை, பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து, உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, அனைத்து வங்கிகளும், தலா, 10 கிளைகளில் ஒன்றில், ஆதார் பதிவு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்து தரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் தகவல்களில் திருத்தம் செய்யும் பணிகளை, வங்கிகள், தபால் நிலையங்கள், அரசு அலுவலக வளாகங்களில், பெரும்பாலும் மேற்கொள்ள, அரசு திட்டமிட்டுள்ளது.
கே.வி., பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு

கே.வி.,KV,பள்ளி,தரவரிசை,அரசு,அதிரடி,முடிவு
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ராணுவம், துணை ராணுவம் உட்பட, பணி இடமாற்றம் செய்யப்படும் பணியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஒரே கல்வி முறையை வழங்கும் வகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றை தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் முதல், இந்த தவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
பள்ளியின் கல்வித் தரம், கட்டமைப்பு வசதிகள், பள்ளி நிர்வாகம் உட்பட ஏழு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. மதிப்பெண்களின் அடிப்படையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நான்கு வகைகளாக தரம் பிரிக்கப்பட உள்ளன. அதனடிப்படையில், இந்தப் பள்ளிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பஞ்சாபில் இறந்தவர்களுக்கும் பென்சன்: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு


spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
இறந்த 65,000 பேருக்கு பென்ஷன்: மாபெரும் ஊழல்
சண்டிகர்: பஞ்சாபில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறந்தவர்களுக்கு பல ஆண்டுகளாக பென்சன் வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்த முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பென்சன்
பஞ்சாப் மாநிலத்தில், 19.80 லட்சம் பேர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாநில அரசு மாதந்தோறும் ரூ.500 பென்சன் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில், முதியவர்கள், விதவைகள் மற்ற்றும் மாற்று திறனாளிகளுக்கு பென்சன் வழங்க மாநில அரசு ரூ.49.51 கோடி ஒதுக்கி வருகிறது.
ஆய்வு

மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையில் ஆட்சி அமைந்ததும், பென்சன் குறித்து முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து பயனாளிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. 
இதில் பென்சன் பெறுபவர்களில் 2,45,935 பேர் பென்சன் பெற தகுதியே இல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவார்கள். சிலருக்கு லட்சகண்கான ரூபாய் அளவுக்கு சொத்துகள் உள்ளன. பென்சன் வாங்குபவர்களில் 65,743 பேர் உயிருடன் இல்லை. 

போலி முகவரி

45,128 பேர் பென்சன் பெற போலி முகவரி அளித்துள்ளனர். அந்த முகவரியில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை. 42, 437 இளைஞர்களும், 10,199 பணக்காரர்களும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பென்சன் வாங்கி வருகின்றனர். பென்சன் மறு ஆய்வுக்காக அழைப்பு விடுத்த போது, 82,428 பேர் வரவில்லை. மேலும், பென்சன் மாநிலத்தை ஆட்சி செய்த பாதல் குடும்பத்தினர் செல்வாக்கு பெற்ற மால்வா பகுதியில் அதிகம் பேருக்கு முறைகேடாக பென்சன் அளிக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
தலையங்கம்

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!



2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும்வகையில், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அக்டோபர் 30 2017, 03:00 AM

2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும்வகையில், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்ற ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் என்பது அமெரிக்காவில் உள்ள உலகப்புகழ்பெற்ற தொன்மையான ஒரு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் தோன்றி 380 ஆண்டுகள் முடிந்து, தற்போது 381–வது ஆண்டை தொடங்கியுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழிகளான சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீன மொழியான மாண்டிரின், பாரசீகம் ஆகிய மொழிகளுக்காக தனி இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எல்லோரும் வியக்கத்தக்க வகையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 38 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில்தான், ‘‘யோகா கலை இந்தியாவிலிருந்து தோன்றியது, உடல் ஆரோக்கியத்திற்கும், மனவளத்திற்கும் மிகவும் சிறந்தது’’ என்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதுபோல, செம்மொழியான தமிழ்மொழியில் சொல்லப்பட்டுள்ள அரிய பொக்கி‌ஷங்கள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டுமென்றால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அதற்கென தனி இருக்கை அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்படவேண்டும். அப்போதுதான், ‘அன்னை தமிழின் மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ள வைரங்கள் உலகம் முழுவதிலும் ஒளிவீசும்’ என்ற உன்னதமான நோக்கில் வெளிநாட்டு தமிழரான பேராசிரியர் வைதேகி ஹெர்பட் என்பவர்தான் முதலில் குரல் கொடுத்தார்.

வெளிநாட்டு இந்தியர்கள் அனைவரும் குறிப்பாக அமெரிக்கா வாழ்தமிழர்கள், அதிலும் தமிழ் மீது நீங்கா பற்றுள்ள இதயநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜானகிராமன், புற்றுநோய் சிகிச்சை நிபுணரான திருஞானசம்பந்தம், தமிழக பேராசிரியர் மு.ஆறுமுகம், அமெரிக்காவில் உள்ள தொழில்அதிபர் பால்பாண்டியன் போன்ற பலர் இதற்காக பெரும் முயற்சி எடுத்தனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்றால், 60 லட்சம் டாலர் அதாவது ஏறத்தாழ ரூ.39 கோடி அந்த பல்கலைக்கழகத்தில் ஆதாரத்தொகையாக கட்டவேண்டும். இந்த தொகையில் டாக்டர்கள் ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் ரூ.6½ கோடியை கட்டிவிட்டனர். 2018–ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மீதமுள்ள பணத்தை கட்டிமுடிக்கவேண்டும் என்றநிலையில், இப்போது தமிழக அரசு ரூ.10 கோடி கொடுக்க முன்வந்துள்ளது. டாக்டர்கள் கொடுத்த ரூ.6½ கோடியும் சேர்த்து உலக தமிழர்கள் இதுவரை ரூ.19 கோடியை சேர்த்துவிட்டனர். தமிழக அரசு கொடுத்த ரூ.10 கோடியும் சேர்த்து ரூ.29 கோடி ஆகிவிட்டது. இன்னும் ரூ.10 கோடி வேண்டும். அரசு தந்ததுபோல, அரசியல் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ் மீது பற்றுக்கொண்டவர்களும் இந்த ரூ.10 கோடியை உடனடியாக தந்தால் அடுத்த ஆண்டே ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்கப்படும். பாரதியார் சொன்னதுபோல,

‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! என்ற வகையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு

Wire transfer to Harvard University: Bank of America,100 Federal Street, Boston, MA 02110, USA
President & Fellows of Harvard College,
RSO Account # : 9429263621
ACH ABA:011000138
Wire ABA:026009593
Swift Code:BOFAUS3N
Donor:(To be provided by donor)
Purpose:Sangam professorship in Tamil

என்ற முகவரிக்கு வங்கிகள் மூலம் அனுப்பலாம், அங்கிருந்து ரசீது அனுப்பப்படும் என்று பேராசிரியர் மு.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Sunday, October 29, 2017


90% மக்களைப் பாதிக்கும் சர்க்கரை விலை உயர்வு... சாதாரணமானது தானா அமைச்சர்களே?

vikatan 
ச.ஜெ.ரவி





'சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா!' என்று கிராமத்தில் சொலவடை ஒன்று உண்டு. ஏழை, எளிய மக்களின் இந்தக் கிராமிய மொழியை உண்மையாக்க முயன்றிருக்கிறது அரசின் புதிய அறிவிப்பு. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தி, 'இனி எல்லோருக்கும் ரேஷன் பொருள்கள் கிடைக்காது' என்ற அச்சத்தை சாதாரண மக்களிடம் விதைத்த ஆளும் அரசுகள், இப்போது ரேஷனில் வினியோகிக்கப்படும் சர்க்கரை விலையைக் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தி, ஏழை, எளிய மக்கள்மீது இன்னுமொரு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே பொது விநியோகத்திட்டமான ரேஷன் விநியோகத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலங்களில் முதலிடம் தமிழகத்துக்குத்தான். தி.மு.க., அ.தி.மு.க. என ஆட்சி மாறினாலும், இந்தக் காட்சி மட்டும் மாறாமலே இருந்தது. தற்போது இந்தப் பாதையிலிருந்து தமிழகம் திசைமாறத் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்ட அறிவிப்பைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதன் மூலம், 'மாதம் 8,333 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள குடும்பத்திற்கு இனி ரேஷன் பொருள்கள் கிடைக்காது' என்ற அச்சத்தை, மக்களிடம் விதைத்த தமிழக அரசு, இப்போது சர்க்கரை விலையை இருமடங்காக உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

தமிழகத்தில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் ஏற்றால் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தவரை இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தே வந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எந்தக் கேள்வியும் இல்லாமல் அ.தி.மு.க. அரசு உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்தியது.



மறுபுறம், மற்றுமொரு தாக்குதலாக சர்க்கரைக்கு வழங்கப்படும் வரும் மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்தது மத்திய அரசு. தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தை, கடுமையாகப் பாதிக்கும் இந்த அறிவிப்புக்குத் தமிழக அரசு அழுத்தமான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இதனால் மானிய ரத்து அமலானது. 'சர்க்கரைக்கான மத்திய அரசின் மானியம் ரத்தானாலும் சர்க்கரை விலையை உயர்த்தப்போவதில்லை' என அப்போது அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால், அதை மீறி இப்போது சர்க்கரை விலையை இருமடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சர்க்கரை விலை ரூ.13.50 -ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ், அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சம் 2 கிலோ சர்க்கரையும், சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ சர்க்கரையும், கிலோ ரூ.13.50 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 37 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 10 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் சர்க்கரைக்கான மானியத்தொகையை மத்திய அரசு வழங்கி வந்தது. அதாவது ஒருகிலோ சர்க்கரைக்கு 18.50 காசுகள் வீதம், 10,800 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு ஆண்டுக்கு 240 கோடி ரூபாய் மானியமாக வழங்கி வந்தது. இந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து தற்போது சர்க்கரை விலையை ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.



இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாவர்கள். தமிழகத்தில் 1.98 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 'அந்தயோதயா அன்ன யோஜனா' திட்டத்தில் அரிசி பெறும் 18.64 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும், பழைய விலையான ரூ.13.50 விலையிலேயே தொடர்ந்து சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி., தமிழகத்தில் உள்ள 91 சதவீத ரேஷன் கார்டுதாரர்களுக்குச் சர்க்கரை விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கும் அறிவிப்பு என்பது நிச்சயம் மக்களைப் பெரிதும் பாதிக்கும்.

90 சதவீதம் பேரை பாதிக்கும் ஒரு விலை உயர்வைச் சர்வசாதாரணமாக அறிவித்து விட்டு, 'இது யாரையும் பாதிக்காது. 9 சதவீதம் பேருக்கு பழைய விலையிலேயே சர்க்கரை வழங்குகிறோம்' என்ற பெருமையாக அறிவிக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். 'சர்க்கரை விலையேற்றம் சாதாரணமானதுதான்' எனச்சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை எதிர்த்து, சர்க்கரை மானியம் ரத்தை எதிர்த்தும் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையாகப் போராடியிருக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசை எதிர்த்து எதுவும் பேசாமல், மத்திய அரசிடம் எதையும் கேட்காமல் ஏழை எளிய மக்கள்மீது போர் தொடுப்பது என்பது சரியானதல்ல. 'உணவுப்பாதுகாப்புத் திட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். சர்க்கரை மானியம் ரத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என வாக்குறுதி கொடுத்த அமைச்சர்கள், இப்போது விலையேற்றம் சாதாரணமானதுதான் எனக் கடந்து செல்வதுதான் கொடுமை.
புதுடெல்லி:   இந்தியாவை சேர்ந்த மீரா ரமேஷ் படேல் என்பவரது குடும்பத்தினர் மலேசியாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். அங்கு  பாஸ்போர்ட்டை தொலைத்ததால் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். இதையடுத்து மீரா ரமேஷ் படேல் டிவிட்டர் பதிவில்  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், `‘மலேசியா விமான நிலையத்தில் எனது குடும்பத்தினர் பாஸ்போர்ட்டை  இழந்து தவிக்கின்றனர். வார விடுமுறை தினம் என்பதால் மலேசிய தூதரகம் மூடிக்கிடக்கிறது. எனவே எங்கள் குடும்பத்தினர் இந்தியா  திரும்ப  தாங்கள் உதவி செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருந்தார்.  அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு சுஷ்மா வெளியிட்ட உத்தரவில், ‘‘மிக  அவசரமான பிரச்னை என்பதால் உடனடியாக தூதரகத்தை திறந்து மீரா ரமேஷ் படேல் குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும்’’ கூறியிருந்தார்.  இதையடுத்து அவர்களை தொடர்புக் கொண்டு அவர்களது பிரச்னையை தீர்த்து வைத்துள்ளதாக இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.இதேபோல் அமெரிக் காவில் படித்து வரும் இந்திய மாணவி  அனுஷா துலிபாலா  தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். தற்போது தேர்வு  நேரம் என்பதால் இந்தியா சென்று பாஸ்போர்ட் பெறமுடியாது நிலை உள்ளது. இதனால் தனக்கு பாஸ்போர்ட் பெற உதவி செய்யுமாறு டிவிட்டரில்  அமைச்சர் சுஷ்மாவுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட சுஷ்மா சுவராஜ்,  அனுஷாவுக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மெர்சல் பட பாணியில் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு விலை பேசிய புரோக்கர்!


கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயன்ற புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.

தீபாவளிக்கு, வெளியான மெர்சல் படம் மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்கள் குறித்து விமர்சனம் செய்திருந்தது. இந்தப் படத்தில் ஒரு காட்சி வரும், விபத்தில் சிக்கிய ஒருவரை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க விலை பேசுவார்கள். தற்போது, இதே பாணியில், கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்றுவந்த ஒருவரை, தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக பேரம் பேசிய புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சந்திரசேகர்(40). விபத்து ஒன்றில் சிக்கிய இவர் நேற்று காலை, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜான் என்ற முருகன் (47) வந்தார். அவர் சந்திரசேகரிடம், வழக்கு நடத்தி காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பணம் பெற்றுத் தருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு சந்திரசேகர் மறுத்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அங்குப் பணியில் இருந்த ரமேஷ்ராஜா என்ற மருத்துவருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக அவர் ஜானை அணுகி, 'எதற்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயற்சி செய்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். அதற்கு, தனக்குப் பின்னால் பெரிய அதிகாரிகள் இருப்பதாகவும், பகைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவரை ஜான் மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் ரமேஷ், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஜான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், வழக்கறிஞர்கள், மற்றும் காவல்துறையில் பணியாற்றும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் மது போதை நபரால் பரபரப்பு!


சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் மது போதையோடு கையில் இரண்டு பைகளும், அக்கத்தில் மடித்த ஒரு போர்வையும், 2 வயது மதிக்கதக்க ஒரு பெண் குழந்தையை இழுத்தவாறு கீழே இறங்கினார். கீழே இறங்கியதும் போதையில் தடுமாறி கீழே அமர்ந்து ரெண்டு பைகளையும் கீழே வைத்து விட்டு அக்கத்தில் இருந்த போர்வையை திறந்த போது பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத 1 1/2 கிலோ எடையுள்ள ஒரு பச்சிளம் குழந்தையை வைத்திருந்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்ததும் அதிர்ச்சி  அடைந்தார்கள்.

இதற்கிடையில் 2 வயது பெண் குழந்தை தண்ணீரை பார்த்து போதையில் இருந்த அந்த நபரின் கையை விழகி ஓட.''எங்க ஓடறன்னு'' ஓங்கி கன்னத்தில் அரை விட அந்த குழந்தை சுறுண்டு கீழே விழுந்தது.  இதனால் அங்கிருந்தவர்கள் ஆத்திரம் அடைந்து அவரை தாக்க முயற்சித்தார்கள். ஆனால் குழந்தைகள் இருப்பதால் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதையடுத்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டனர். குழந்தை தாகத்தில் தவித்ததை உணர்ந்த அஸ்தம்பட்டி எஸ்.ஐ.,ராஜசேகர் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பருகி விட்டார். பிறகு மது போதையில் இருந்த அந்த நபரிடம் விசாரித்த போது ''என் பெயர் சுரேஷ். என் மனைவி பெயர் பாரதி. நான் வாழப்பாடி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்ஃபாம்ல தங்கி இருக்கிறேன்.  சின்ன சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு ரயிலில் வந்துக் கொண்டிருந்த போது  என் மனைவி குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டு ஒவ்வொரு பெட்டியாக கூட்ட போயிட்டாள். அவள் வாழப்பாடி ஸ்டேஷனில் இறங்கி இருப்பாள். நான் தூங்கிட்டு வந்ததால் சேலத்திற்கு வந்துட்டேன். தேவைப்பட்டால் வாழப்பாடி ரயில்வே ஸ்டேஷனில் விசாரித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

அதையடுத்து காவல்துறையினர் வாழப்பாடி ரயில்வே ஸ்டேஷனில் விசாரித்த போது, '' ஆமாம் அவன் இங்கு தான் தங்கி இருக்கிறான். அவனுக்கு மொத்தம் 5 குழந்தைகள். முதல் 2 பெண் குழந்தைகள் பிறந்து கொஞ்ச நாளிலேயே இறந்து விட்டது. 3 வதாக பிறந்த ஒரு பெண் குழந்தை 3 1/2 இருக்கும் போது இவனுடைய நண்பன் முனியப்பன் என்பவன் அந்த குழந்தையிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டான். நான்காவதாக பிறந்த 2 வயது பெண் குழந்தை இருக்கு. தற்போது அவனுக்கு 10 நாட்களுக்கு முன்பு 7 மாசம் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தான் டிசார்ஜ் ஆனதாக சொன்னான்'' என்றார்கள்.

அதையடுத்து காவல்துறையினர் அவர்களை மீட்டு  அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு தாயோடு சேர்க்க போவதாக 3 பேரையும் ஜீப்பில்  அழைத்து சென்றார்கள். 

T’gana govt suspends 100 agri officers, move stirs row, AEOs cry foul

T’gana govt suspends 100 agri officers, move stirs row, AEOs cry foul Sribala.Vadlapatla@timesofindia.com 23.10.2024 Hyderabad : The agricul...