Wednesday, November 1, 2017


உணவின்றி, 96 வயது தாயை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுலா சென்ற மகன்

By DIN  |   Published on : 31st October 2017 11:40 AM 
oldage


கொல்கத்தா: கொல்கத்தாவை அடுத்த அனந்தாபுர் பகுதியில் வசித்து வந்த பிகாஷ், தனது 96 வயது தாயை 4 நாட்களாக உணவின்றி, வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்தமானுக்கு சுற்றுலா சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனந்த்புர் பகுதியைச் சேர்ந்த சபிதா நாத் (96) தனது மூத்த மகன் பிகாஷுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபிதா உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவரது அறையை பூட்டிவிட்டு மகன் வெளியே சென்றுவிட்டார்.
தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேல் அவர் உணவின்றி பூட்டிய அறையில் இருந்துள்ளார். கடந்த ஞாயிறன்று சபிதாவின் மகள், தாயைக் காண வீட்டுக்கு வந்த போது வீடு வெளியே பூட்டியிருந்தது. ஆனால், வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறை உதவியோடு வீட்டுக்குள் நுழைந்தார்.
அங்கு உணவின்றி, சோர்ந்த நிலையில் இருந்த சபிதாவைப் பார்த்ததும் மகள் ஜெயஸ்ரீ கதறி அழுதார். 
அப்போதுதான், கடந்த புதன்கிழமை இரவு, தனது தாயை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, விடுமுறையைக் கழிக்க பிகாஷ் அந்தமான் - நிக்கோபார் சென்று விட்டது தெரிய வந்தது.
இது குறித்து சபிதா கூறுகையில், நான் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டுச் சென்று விட்டான். சாவியை வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். மறுநாள் வேலைக்காரி வந்து எனக்கு உணவளித்துவிட்டு மீண்டும் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டார். ஆனால் அதன் பிறகு அவள் வரவேயில்லை. இந்த சிறிய அறைக்குள் இருந்தது எனக்கு மிகவும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. 2 முறை வாந்தி எடுத்தேன். பிறகுதான் தெரிந்தது. அவன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றது" என்கிறார்.
வீட்டில் இருந்து மீட்கப்பட்ட தனது தாயை ஜெயஸ்ரீ, தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். சபிதாவுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம்: ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு


    By DIN  |   Published on : 01st November 2017 01:15 AM  
    chennai high court
    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 13 பேரை 4 மாத காலத்துக்குள் பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    சென்னையில் கடந்த 2007 -ஆம் ஆண்டு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2012 -ஆம் ஆண்டு செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பாணை வெளியிட்டது.
    பணி நிரந்தரம் கோரி... இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஆரோக்கியதாஸ் என்பவர் உள்பட 13 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், 'இந்த 13 பேரும் தேர்வுக் குழுவினரால் முறையாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2007 -ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வரவே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 13 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
    செம்மொழி நிறுவனம் தரப்பில்... செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'மனுதாரர்களைப் பணியில் நியமிக்கும்போது இந்த பணியிடங்களுக்காக ஒப்புதல் பெறவில்லை. மேலும் அப்போது முறையான தேர்வு விதிகளும் வகுக்கப்படாததால், சட்ட அங்கீகாரமும் இல்லை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது' என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'மனுதாரர்களின் பணி நியமனம் சட்டவிரோதமானது அல்ல. அந்த 13 பேரும் முறையாகத்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக கொண்டு வந்துள்ள பணி நியமன விதிகளைக் காரணம்காட்டி அவர்களின் உரிமையைப் பறிக்க முடியாது. 
    தாற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசு, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. எனவே, இந்த 13 பேரையும் பணி நிரந்தரம் செய்ய எந்தத் தடையும் இல்லை. இவர்களை 4 மாத காலத்துக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' எனக் கூறி, கடந்த 2012 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    தமிழகத்துக்கு 4 விரைவு ரயில்கள் அறிமுகம்


    By DIN  |   Published on : 01st November 2017 01:06 AM  
    தமிழகத்துக்கு 4 விரைவு ரயில்கள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. புதிய ரயில்கள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள்ளாக பயன்பாட்டுக்கு வரும்.
    புதிய விரைவு ரயில்கள்:
    பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) - தாம்பரம் வாராந்திர ஹம்சவர் விரைவு ரயில்
    ரயில் எண் 14815/15816: ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோத்தி ரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமை பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதேபோல, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பகத் கி கோத்தி ரயில் நிலையத்துக்கு சென்றடையும். 
    தாம்பரம் - திருநெல்வேலி தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்
    ரயில் எண் 16191: தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். 
    ரயில் எண் 16192: திருநெல்வேலியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
    இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
    தாம்பரம் - செங்கோட்டை தினசரி முன்பதிவில்லா ரயில் 
    ரயில் எண் 16189: தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு செங்கோட்டைக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.
    ரயில் எண் 16190: செங்கோட்டையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
    இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    சென்னை சென்ட்ரல் - மதுரை ஏசி அதிவிரைவு வாராந்திர ரயில் 
    ரயில் எண் 20601: சென்னை சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரை சென்றடையும்.
    ரயில் எண் 20602: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 7.40 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    நீட்டிக்கப்படும் விரைவு ரயில் சேவைகளின் விவரம்
    (நவ. 1 முதல் அமல்)
    சென்னை சென்ட்ரல் - பழனி விரைவு பாலக்காடு வரை நீட்டிப்பு
    ரயில் எண் 22651/22652: சென்னை சென்ட்ரல் - பழனி விரைவு ரயில் பாலக்காடு வரை பொள்ளாச்சி வழியாக செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைபுதன்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு காலை 7.15/7.20 மணிக்குச் சென்றடையும். பின்பு, பொள்ளாச்சிக்கு 9/ 9.05 மணிக்கும், பாலக்காட்டுக்கு காலை 11 மணிக்கு சென்றடையும்.
    மறுமார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு மாலை 4.25/4.30-க்கு, பழனிக்கு மாலை 5.55/ 6 மணிக்கு, பின்பு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 4.15 மணிக்கு வந்தடையும்.
    திருவனந்தபுரம் - பாலக்காடு அம்ரிதா விரைவு ரயில் மதுரை வரை நீட்டிப்பு 
    ரயில் எண் 16343/16344: திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடுக்கு காலை 7.45/7.50, பின்பு மதுரைக்கு பிற்பகல் 1.10 மணிக்கு சென்றடையும். மறுமார்கத்தில், மதுரையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடுக்கு இரவு 9.15/9.20, பின்பு திருவனந்தபுரத்துக்கு மறுநாள் காலை 6.25 மணிக்கு சென்றடையும்.
    சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் 
    அனந்தபுரி விரைவு கொல்லம் வரை நீட்டிப்பு
    ரயில் எண் 16723: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரத்துக்கு மறுநாள் காலை 11.40/11.45 மணி, பின்பு கொல்லத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும்.
    மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு மாலை 4.05/4.10 மணி, பின்பு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 8.05 மணிக்கு வந்தடையும்.
    மன்னை விரைவு ரயில் தஞ்சையில் நிற்காது
    ரயில் எண் 16179/16180: சென்னை எழும்பூரில் இருந்து தினசரி மன்னார்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் இனி தஞ்சாவூரில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீடாமங்கலத்தில் நிறுத்தப்படும். சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு நீடாமங்கலம் அதிகாலை 3.38/3.40 மணி, பின்பு மன்னார்குடி காலை 4.45 மணி. மறுமார்கத்தில், மன்னார்குடியில் இருந்து இரவு 10.25 புறப்பட்டு, நீடாமங்கலம் இரவு 10.38/10.40 மணி, பின்பு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 5.45 மணிக்கு வந்தடையும்.

    அரசு ஊழியருக்கு புதிய ஊதிய அறிவிப்பு: நவம்பர் 30 -இல்தான் அமல் 


    By DIN  |   Published on : 01st November 2017 04:45 AM  
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊதிய உயர்வானது நவம்பர் மாதத்தில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது. இதனால், உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தை நவம்பர் 30 -ஆம் தேதிதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற முடியும். மேலும், அக்டோபர் மாதத்துக்கான நிலுவைத் தொகை, 20 நாள்களில் அளிக்கப்படும் என நிதித் துறை தெரிவித்துள்ளது.
    தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளின்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் மாத ஊதியமானது உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஊதியமானது, அக்டோபர் 30 -ஆம் தேதியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தமிழக அரசின் நிதித் துறையானது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
    நவம்பர் இறுதியில் முழுமையாக... இந்த உத்தரவுப்படி, புதிய ஊதிய விகிதம், நவம்பர் மாத இறுதியில் இருந்து (நவ.30) நடைமுறைக்கு வரும். ஊதியம் வழங்குவதற்கான மின்னணு சம்பளப் பட்டியலானது, உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்துக்கு தகுந்தாற்போன்று திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்காக, தேசிய தகவலியல் மையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும், நவம்பர் 30 -இல் உயர்த்தப்பட்ட ஊதியம் அளிக்கப்படும். அக்டோபர் 30 -ஆம் தேதியன்று, பழைய ஊதியமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் மாதத்துக்கான உயர்த்தப்பட்ட ஊதியமானது நிலுவைத் தொகையாக நவம்பர் 20 -ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
     

    விபத்து பலிக்கு இழப்பீடு : சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு


    புதுடில்லி: சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கும்போது, உயிரிழந்தவரின் எதிர்கால வருமானத்தை கணக்கிடுவதில், புதிய உத்தரவை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

    சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்தாருக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, இழப்பீடு வழங்கும்போது, உயிரிழந்தவரின் எதிர்கால வருமானம் கணக்கிடுவது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், 27 வழக்குகள் தொடரப்பட்டன. தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு, இவ்வழக்குகளை விசாரித்தது. எதிர்கால வருமானம் குறித்து அமர்வு அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
    சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்கும்போது, அவருடைய குடும்பத்தாருக்கு வழங்கும் இழப்பீட்டில், அவருடைய எதிர்கால வருமானம் குறித்து கணக்கிடுவதற்கு, புதிய வழிமுறை வகுக்கப்படுகிறது. அதன்படி, தனியார் அல்லது அமைப்பு சாரா நிறுவனங்களில், நிரந்தரப் பணியாளராக இருந்து சம்பளம் வாங்கியவர், 40 வயதுக்குள் இறந்தால், அவருடைய சம்பளத்துடன், 50 சதவீதம் கூடுதல் தொகையை, எதிர்கால வருவாயாக கணக்கிட வேண்டும். 
    அதேபோல, 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு, 30 சதவீதம்; 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு, 15 சதவீதமாகவும், எதிர்கால வருவாயை கணக்கிட வேண்டும். சம்பளம் என்பது, வரிக்கு பிந்தைய தொகை. உயிரிழந்தவர், சுய தொழில் செய்பவராக அல்லது தொகுப்பூதியம் பெறுபவராக இருந்தால், 40 வயதுக்குட்பட்டவருக்கு, 40 சதவீதத்தை, எதிர்கால வருவாயாக கணக்கிட வேண்டும். 40 முதல் 50 வயதுக்கு, 25 சதவீதம்; 50 முதல் 60 வயதுக்கு, 10 சதவீதமாகவும் கணக்கிட வேண்டும். இதுதவிர, உறவை இழந்ததால் ஏற்படும் இழப்பீடு மற்றும் இறுதி சடங்குகளுக்கான தொகையை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, 10 சதவீதம் உயர்த்தி கணக்கிட வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் கைது

    தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை, கூடுதல் தொகைக்கு வாடகைக்கு விட்ட, 16 மத்திய அரசு ஊழியர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
    சென்னை, கே.கே. நகரில், மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அங்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறைந்த வாடகையில், வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. 
    அங்கு ஒதுக்கீடு பெற்ற பலர், அவற்றை, மத்திய அரசில் பணிபுரியாத பலருக்கு, அதிக வாடகைக்கு விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    இதனால், சில மாதங்களுக்கு முன், அங்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், குற்றச்சாட்டு உறுதி என, தெரிய வந்தது. இதையடுத்து, சி.பி.ஐ., வழக்கு பதிந்து, 16 ஊழியர்களையும் கைது செய்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

    - நமது நிருபர் - 
    'டெபிட் கார்டில்' மின் கட்டணம் : புதிய சேவையை அமைச்சர் துவக்கினார்
    சென்னை: ''மழை காலத்தில், பாதுகாப்பு நடவடிக்கைக்காக, வீடுகளில் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது,'' என, மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்தார்.

    மின் கட்டண மையங்களில், 'டெபிட் கார்டு' பயன்படுத்தி, 'ஸ்வைப்பிங் மெஷின்' வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் சேவையை, அமைச்சர் தங்கமணி, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று துவக்கி வைத்தார். அதில், எரிசக்தி துறை செயலர், விக்ரம் கபூர், மின் வாரிய தலைவர், சாய்குமார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின், அமைச்சர் தங்கமணி கூறியதாவது:தமிழகத்தில், தடையில்லாமல் மின் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது, மழை காலம் என்பதால், புயல் மற்றும் காற்று வேகமாக வீசும்போது, மக்களின் பாதுகாப்பிற்காக, வீடுகளில் மின் தடை செய்யப்படுகிறது. மழை நின்றதும், மீண்டும் மின் சப்ளை துவங்கும். இனி, நுகர்வோர், மின் கட்டண மையங்களில், டெபிட் கார்டு பயன்
    படுத்தி, எளிதில் கட்டணத்தை செலுத்தலாம். இந்த சேவையை, முதல் கட்டமாக, சென்னை, மயிலாப்பூரில் உள்ள, 16 கட்டண மையங்களில் பெறலாம். விரைவில், அனைத்து மையங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.எளிய வகையில், வணிக மின் திட்டத்தின் கீழ், 'ஜி.எம்.ஆர்., கிருஷ்ணகிரி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அந்நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், உதனப்பள்ளியில் அமைக்க உள்ள தொழில் பூங்காவுக்கு, தனி வழித்தடத்தில், தடையில்லா மின் சப்ளை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பிப்ரவரியில் இடமாற்றம்! : மின் வாரிய அலுவலகங்களில் பலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணி செய்வோரை இடமாற்றம் செய்ய, மின் வாரியம், செப்., மாதம் உத்தரவிட்டது. இது, அரசியல் செல்வாக்கு உள்ள, சில அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் வலியுறுத்தலால், இடமாற்ற உத்தரவுக்கு காரணமான, மின் வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பி.,யாக இருந்த மகேந்திரனை, சமீபத்தில் இடமாற்றம் செய்தனர். இந்நிலையில், அமைச்சர் தங்கமணி, 'மூன்று ஆண்டுகளுக்கு, ஒரே இடத்தில் 
    உள்ளவர்களின் இடமாற்ற உத்தரவு, வரும் பிப்., முதல் அமல்படுத்தப்படும்' என நேற்று தெரிவித்தார்.

    ரயில்களின் நேரம் மாற்றம் இன்று முதல் அமல்

    சென்னை: தெற்கு ரயில்வே கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. சென்னை, சென்ட்ரல் - பழநி எக்ஸ்பிரஸ் உட்பட, மூன்று ரயில்கள், முக்கிய நகரங்கள் இடையே நீட்டிக்கப்பட்டுள்ளன. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

    நீட்டிக்கப்பட்டுள்ள ரயில்கள்:

     சென்னை, சென்ட்ரலில் இருந்து பழநிக்கு இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில், கேரள மாநிலம், பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், சென்ட்ரலில் இருந்து, இரவு, 9:40 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் காலை, 11:00 மணிக்கு, பாலக்காடு சென்றடையும். அங்கிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு, சென்ட்ரல் வந்தடையும்
     எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இரவு, 7:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:00 மணிக்கு, கொல்லம் சென்றடையும். அங்கிருந்து மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:05 மணிக்கு, எழும்பூர் வந்தடையும்
     திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்தா எக்ஸ்பிரஸ், பொள்ளாச்சி, பழநி வழியாக, மதுரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், திருவனந்த புரத்தில், இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:10 மணிக்கு, மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து, மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:25 மணிக்கு, திருவனந்தபுரம் சென்றடையும்
     தஞ்சாவூர் - கும்பகோணம் பயணியர் ரயில், மயிலாடுதுறை வரையும், நாகூர் - திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையும், திருச்செந்துார் - பழநி பயணியர் ரயில், பாலக்காடு வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
    எழும்பூர் - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், மார்ச், 1 முதல் பாதை மாற்றி, திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி வழியாக, இயக்கப்பட உள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
    ரேஷன் கடையில் சர்க்கரை இன்று முதல் கிலோ ரூ.25

    சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கிலோ சர்க்கரை, 13.50 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், சர்க்கரை வாங்கினர். இந்நிலையில், இன்றுமுதல், சர்க்கரை விலையை, 25 ரூபாயாக உயர்த்த, தமிழக அரசு, சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல், சர்க்கரை விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
    உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    சர்க்கரை விலை உயர்வால், ரேஷன் ஊழியர் - மக்கள் இடையில், பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக, கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், புதிய விலை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    மிகவும் வறுமையில் உள்ள, 'அந்தியோதயா' ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கிலோ சர்க்கரை, 13.50; காவலர் கார்டுகளுக்கு, 12.50; மற்ற அனைத்து கார்டுதாரர்களுக்கும், 25 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த விலை உயர்வு, இன்று நடைமுறைக்கு வருகிறது.
    இவ்வாறு அவர் கூறினார்.

    அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'


    அரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, மேற்படிப்பு படிக்க, பாஸ்போர்ட் எடுக்க, வெளிநாடு செல்ல மற்றும் சொத்துகள் வாங்க, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் பாயும். இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்துள்ளனர்.படித்து முடித்த பின், பின் ஏற்பு அனுமதி தரும்படி, கல்வித் துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
    இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளை அணுகி வருகின்றனர்.

    - நமது நிருபர் -
    சென்னை புறநகரின் பல பகுதிகளில் பாதிப்பு சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிப்பு



    சென்னை புறநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 01, 2017, 04:15 AM

    ஆலந்தூர்,

    சென்னை புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், வேளச்சேரி, கீழ்க்கட்டளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டியது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.

    ஆலந்தூரில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மடிப்பாக்கம்–புழுதிவாக்கம் ராம்நகர் வடக்கு பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழியின்றி கழிவு நீருடன் தேக்கம் அடைந்துள்ளது.

    ஒரே நாளில் பெய்த மழையிலேயே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் மீண்டும் மழை பெய்தால் வீடுகளை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றி நிரந்தரமாக வடிகால்வாய்களை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

    வேளச்சேரி பாரதி நகர், உதயம் நகர் போன்ற பகுதிகளிலும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. கீழ்கட்டளை காசிவிஸ்வநாதபுரம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. கோவிலம்பாக்கம் என்ஜீனியர்ஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஓடை தூர் வாரப்படாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

    கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை வழியாக போரூர், வடபழனி போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சுரங்கப்பாதை மழைநீரினால் குளம்போல் நிரம்பியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மின்மோட்டார் மூலம் அங்கு இருக்கும் தண்ணீரை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் அகற்றப்படாததே மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.
    தலையங்கம்
    எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆச்சு?




    நவம்பர் 01 2017, 03:00 AM

    பொதுவாக மத்திய–மாநில அரசாங்கங்கள் வளர்ச்சித்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், கல்வித் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகின்றன. இதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கென நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், நிர்வாக காரணங்களினால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும், அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டும், பல திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாமலும், தொடக்கத்தையே காணாமலும் அப்படியே தேங்கிக்கிடக்கின்றன. பொதுவாக நிதி ஒதுக்கும்போது, அன்றைய மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இப்படி காலதாமதமாவதால் பொதுவான விலையேற்றத்தின் காரணமாக இந்த திட்டமதிப்பீடும் உயர்ந்துவிடுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்க, மத்திய அரசாங்கம் இப்போது புதிதாக செயல்படு!, நிதி பெறு! என்றவகையில், ‘‘சவால் திட்டம்’’ ஒன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், எந்தவொரு திட்டத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கி நிறைவேற்றும் மாநிலங்களுக்கு பரிசாக கூடுதல் நிதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ரெயில்வே, சாலை வசதி, மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை முதல்கட்டமாக இந்தத்திட்டத்தின்கீழ் எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது 20 முதல் 30 சதவீதம்வரை தனியாக வைக்கப்படுகிறது. நிலம் ஒப்படைத்தல் உள்பட பல்வேறு அனுமதிகளை வழங்கி திட்டங்களை குறித்தநேரத்தில் நிறைவேற்றும் மாநிலத்திற்கு, கூடுதலாக அந்தத்தொகையை ஒதுக்கிட இந்த புதிய திட்டம் வகை செய்கிறது. ‘‘சவால் திட்டம்’’ என்று அழைக்கப்படும் இந்தத்திட்டம் மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசாங்கத்தின் பல உள்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத்திட்டம் வரவேற்கத்தகுந்த ஒரு திட்டமாகும். மாநிலஅரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இந்த ‘‘சவால் திட்டம்’’ கொண்டு வருவது சரிதான். ஆனால், மத்திய அரசாங்கம் அறிவித்த பல திட்டங்கள் தொடங்கப்படாமல் தாமதமாகிக் கொண்டிருப்பதற்கு மத்திய அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது?. குறிப்பாக தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்த திட்டம் 2 ஆண்டுகளாக எங்கு தொடங்கப்படும்? என்று இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் இருக்கிறது.

    2014–15–ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டத்திற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பவேண்டும். அந்த 5 இடங்களில் ஒரு இடத்தை மத்திய அரசாங்கம் தேர்வுசெய்து, அதற்கான பணிகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு ஆயிரம் கோடி ரூபாய் திட்டம். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டில் தொடங்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வத்தோடு இருந்தார். உடனடியாக அனைத்து வசதிகள் குறிப்பாக சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதிகொண்ட 5 இடங்கள் செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிப்பட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 200 ஏக்கர் நிலத்தையும் அடையாளம் கண்டு மத்திய அரசாங்கத்திற்கு தமிழக சுகாதாரத்துறை அனுப்பி வைத்தது. இந்த இடத்தை தேர்வுசெய்ய மத்திய அரசாங்கத்தின் குழுவும் வந்து 5 இடங்களையும் பார்த்துவிட்டு சென்றுவிட்டது. மேலும் அனைத்து அலுவலக நடைமுறைகளும் நடந்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இது மதுரையில் அமைய வாய்ப்பு இருப்பதாக இல.கணேசன் எம்.பி. கூறுகிறார். மத்திய அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு ‘‘சவால் திட்டம்’’ கொண்டுவரும் நிலையில், அவர்கள் நிறைவேற்றவேண்டிய இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பை உடனடியாக அதிகாரபூர்வமாக வெளியிடவேண்டும். பணிகளை தொடங்கவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கையாகும்.

    Madras HC allows filing of IT returns without Aadhaar

    Sureshkumar| TNN | Oct 31, 2017, 23:12 IST


    The petitioner also pointed out similar petitions had been allowed by Kerala high court permitting such petiti... Read More

    CHENNAI: As the law mandating linking income taxreturns with Aadhaar is still to be put to litmus test by the Supreme Court, Madras high court on Tuesday allowed a petitioner to file her income tax returns without quoting Aadhaar number or Aadhaar enrolment number.

    Justice T S Sivagnanam, posting the case to December 18, passed the interim order on a plea moved by Preethi Mohan. She had moved the plea relying upon the apex court decision in Binoy Viswam Vs Union of India case, in which the court had imposed a partial stay on operation of section 139AA of the Income Tax Act, which mandates linkage of Aadhaar with IT returns.

    In his interim ruling, Justice Sivagnanam said: "I am inclined to grant a similar relief, since today being the last day for filing income tax returns. If the returns are filed belatedly and if ultimately, the matter decided by the Constitution Bench of Supreme Court against the petitioner, then she may be liable to pay interest for belated payment of tax.

    "Accordingly, there will be an interim direction to the income tax department to permit the petitioner to file her returns for the assessment year 2017-18 either manually or through appropriate e-filing facility without insisting for Aadhaar number," he said.

    It was submitted on behalf of the petitioner that the directions issued by the Supreme Court in the case made it clear that Aadhaar scheme was always meant to be voluntary. "But despite a partial stay imposed by the apex court, the income tax department was acting in a manner directly opposed to the court order and are demanding linkage of Aadhaar," counsel said.

    The petitioner also pointed out similar petitions had been allowed by Kerala high court permitting such petitioners to file returns manually without quoting Aadhaar number or enrolment number.

    Tuesday, October 31, 2017

    Morning update of Chennai rains in and around Chennai.

    கொல்கத்தாவில் நோயாளியின் வயிற்றில் இருந்து 639 ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டன


    கொல்கத்தாவில் நோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ கிராமுக்கும் கூடுதலான எடை கொண்ட 639 ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டு உள்ளன.

    அக்டோபர் 31, 2017, 12:56 PM

    கொல்கத்தா,கொல்கத்தாவின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் கோபர்டங்கா பகுதியை சேர்ந்த ஒருவர் ஸ்கைசோபிரீனியா என்ற வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் ஆணிகள் மற்றும் மண் ஆகியவற்றை பல நாட்களாக உண்டு வந்துள்ளார்.

    கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது வயிற்றில் ஆணிகள் இருந்த தகவல் எக்ஸ்-ரே பரிசோதனையில் தெரிய வந்தது.

    உடனடியாக கல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடந்த எண்டோஸ்கோபி சிகிச்சையில் அவரது வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் இருந்துள்ளன.

    இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். அவர்கள், வயிற்றில் 10 செ.மீட்டர் அளவில் அறுவை சிகிச்சை செய்து உள்ளேயிருந்த ஆணிகளை காந்தம் ஒன்றின் உதவியுடன் வெளியே எடுத்துள்ளனர். மண்ணையும் பிரித்து எடுத்துள்ளனர்.

    இந்த அறுவை சிகிச்சை 1 மணி மற்றும் 45 நிமிடங்கள் நீடித்தது. நோயாளி தற்பொழுது நலமுடன் உள்ளார். அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
    21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது -சென்னை வானிலை மையம்



    21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

    அக்டோபர் 31, 2017, 12:53 PM
    சென்னை

    சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது . தென்கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மேற்கில் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக் கூடும்.

    21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 18 செ.மீ மழை பெய்துள்ளது. விமான நிலையத்தில் 17 செ. மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ மழை, கேளம்பாக்கத்தில் 11 செ. மீ மழை பெய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழக பகுதியில் 15 செ. மீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    பிஏ வேலையே வேணாம்னு சொன்னேன்!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

    Published : 30 Oct 2017 10:05 IST
    சமஸ்


    கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். "தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்" என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்துவந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசுபவர் இல்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூலில் இடம்பெற்றுள்ள அவருடைய நீண்ட பேட்டியை நான்கு நாட்களுக்குத் தொடராக நடுப் பக்கத்தில் கொண்டுவருகிறோம்.

    திருக்கண்ணமங்கையிலிருந்து நாம் தொடங்கலாம்...

    திருவாரூர் பக்கமுள்ள சின்ன ஊரு. நிறையப் பேரு ‘பக்தவச்சலம்’னு பேரு வைக்கிறாங்களே, அது எங்க ஊரு சாமிதான். 1942-ல பொறந்தேன். அப்பா நாகஸ்வர வித்வான். வாழ்ந்து கெட்ட குடும்பம். கூடப் பொறந்தது மூணு தம்பிங்க. மூணு தங்கச்சிங்க. நான்தான் மூத்த பிள்ளை. கஷ்ட ஜீவனம். காவிரியோட கிளை ஆறான ஓடம்போக்கியைத் தாண்டித்தான் போய்ப் படிக்கணும். உள்ளூர்ல, அப்புறம் அம்மையப்பன்ல, அப்புறம் திருவாரூர் வி.எஸ்.டி. ஸ்கூல்ல படிச்சேன். ரொம்ப சிரமப்பட்டுதான் படிக்க வெச்சாங்க. இன்னும் நெனைப்பிருக்கு. ஃபீஸ் கட்ட கடைசி நாள். காலையில ‘இரு வந்திடுறேன்’னு சொல்லிட்டுப் போனார் அப்பா. ஊருணிக்கரையில போய் சாயங்காலம் வரைக்கும் உட்கார்ந்திருக்கேன். அப்பா வரலை. ராத்திரி எதையோ அடகு வெச்சுப் பணம் வாங்கிட்டு வந்தார். மறுநாள் ஸ்கூல் போனா, எங்க ஆசிரியரே பணம் கட்டிட்டார். வாழ்க்கை இப்படிப் பலரோட உதவியோடும் சேர்த்துதான் நம்மளை ஒரு இடத்துல கொண்டுவந்து உட்கார வைக்குது.
    படிப்பு முடிச்சதும் திருவாரூர் கூட்டுறவு வங்கியில வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் 50 ரூபாய் சம்பளம். எழுத்தர் வேலை. ஆனா, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வேன்கிறதால எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். கூடவே நான் டைப்ரைட்டிங் கத்துக்கிட்ட இன்ஸ்டிடியூட்லேயே பகுதிநேர வேலைக்கும் போனேன். வேலையிருந்தால் மூணு ரூபாய் கூலி. ஆனா, எல்லா நாளும் வேலை இருக்காது. காத்துக் கிடக்கணும். அந்தச் சமயத்துலேயே சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதித் தேர்வானேன். வங்கியில யாருக்கும் அனுப்ப மனசில்லை. அப்புறம் அவங்களே, ‘சிட்டி போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல வேலை கிடைச்சி ருக்கு. பெரிசா வருவே’ன்னாங்க. சென்னைக்கு வந்தேன். சென்னைக்குப் போறேன்னு தெரிஞ்சதும் என்னோட இன்ஸ்டிடியூட் வாத்தியார் எனக்கு பேன்ட் சட்டை எடுத்துத் தந்தார். சென்னை வந்து முதல் ஒரு மாசம் அந்த பேன்ட் சட்டையைத்தான் தினம் துவைச்சிப் போட்டுக்கிட்டு வேலைக்குப் போனேன். வேற நல்ல உடுப்பு என்கிட்ட கிடையாது. ராயப்பேட்டைல சொர்ணண் ணன் வீட்டுல தங்கியிருந்தேன். ஆபீஸ்க்கு தினம் நடந்துதான் போவேன். மாசம் 135 ரூபாய் சம்பளம். அதுல 75 ரூபாயை வீட்டுக்கு அனுப்பிடுவேன். மீதி 60 ரூபாய் என் செலவுக்கு. அது போதாது. வேலையோடேயே தொலைநிலைப் படிப்புல வேற சேர்ந்துட்டேன்.
    சரி, இங்கே பகுதிநேர வேலை என்ன கிடைக்கும்னு பார்த்தேன். என்விஎஸ் பட்டணம் பொடி நிறுவனத்துல வேலை கிடைச்சுது. காலையில் 5 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஓடுவேன். 8 மணி வரைக்கும் வேலை. மாசம் 50 ரூபாய் கிடைக்கும். அவர் டிக்டேட் பண்ணுவார். அதை டைப் அடிச்சுக் கொடுக்கணும். கமிஷனர் ஆபீஸ்லேயும் வேலைக்குக் குறைவிருக்காது. பல நாட்கள் அங்கேயே தங்கி வேலை பார்க்க வேண்டியிருக்கும். 1965 இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடந்தப்போ வேலைப் பளு தாங்காம ஓடிப்போன ஆட்களெல்லாம் உண்டு. தினம் ஆயிரக்கணக்கான கைதுகள் நடக்கும். எல்லாரோட விவரமும் அடிச்சு சேகரிக்கணும். முதல் நாள் காலையில ஆரம்பிச்சு மறுநாள் மதியம் வரைக்கும் ஒண்ணுக்குப் போகக்கூட எழுந்திரிக்காம வேலை பார்த்த நாளெல்லாம் உண்டு. பத்து, பதினஞ்சாயிரம் பேரைப் பட்டியல்ல அடிக்கணும்னா..! அப்படி வேலை பார்த்ததுக்காக ரிவார்டெல்லாம் வாங்கியிருக்கேன். அப்புறம் தமிழ் ஷார்ட் ஹேண்ட் பாஸ் பண்ணினேன். அதுதான் இன்னிக்கு இந்த இடத்துல உட்கார வெச்சிருக்கு.

    கருணாநிதிக்கு எப்படி அறிமுகமானீர்கள்?

    அவர் கூட்டத்தை போலீஸ் ரிப்போர்ட் பண்ணுறதுக்காக என்னை அனுப்பியிருந்தாங்க. அப்போது அவர் எதிர்க்கட்சி வரிசையில இருக்கார். பேச்சை நான் எடுத்திருந்த குறிப்பின் அடிப்படையில அவர் மேல கேஸ் விழுந்துச்சு. அப்போ அவர் பேச்சை நான் எடுத்த குறிப்போட ஒரு பிரதியை அவருக்கும் அனுப்பியிருக்காங்க. படிச்சுப்பார்த்தவர், "என் பேச்சை ஒரு மனுஷன் அப்படியே எழுதியிருக்காரே!"னு ஆச்சரியமாயிருக்கார். அப்போ அவர்கிட்ட தமிழ் ஷார்ட் ஹேண்ட் எழுத ஆள் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடனே நான் யார்னு கண்டுபிடிச்சுட்டார். "உன்னைப் பொதுப்பணித் துறை அமைச்சர் பார்க்கணும்னு சொன்னாருப்பா"னு சேதி வந்துச்சு. நான் பயந்துட்டேன். கோபாலபுரம் வீட்டில் வந்து பார்த்தேன். "எனக்கு பிஏ வேணும். வந்திடுறியாய்யா?"ன்னார். நான் மறுத்துட்டேன். ஏன்னா, அப்போ என் சம்பளம் போலீஸ்ல 240 ரூபாய் ஆயிருந்துச்சு. அவருக்குக் கீழ வந்தா அது 140 ரூபாய் ஆயிடும். "கஷ்டப்படுற குடும்பம் ஐயா’’ன்னேன். "சரி, போ’’ன்னுட்டார்.

    அப்புறம் எப்படிச் சேர்ந்தீர்கள்?

    எங்க அப்பா கோதண்டபாணி திககாரர். அவருக்குத் தலைவரைத் தெரியும். ஒருமுறை திருவாரூர் பக்கம் போனப்போ எங்கப்பாவைப் பார்த்திருக்கார். "உங்க பையனை பிஏவா வெச்சிக்கலாம்னு கூப்பிட்டா, ‘வர மாட்டேன்’னு போயிட்டான்!" என்று அவரிடம் சொல்லியிருக்கிறார் தலைவர். எங்கப்பா உடனே எனக்குக் கடிதம் போட்டார். "பணம் பெருசில்லடா தம்பி, அவரு பெரிய மனுஷன். அவருக்கு உதவியா இருக்குறது பெரிய காரியம்"னு எழுதியிருந்தார். அப்பாவுக்குப் பயந்துகிட்டு திரும்ப வும் கோபாலபுரம் வந்தேன். "என்னய்யா, அன்னிக்கு வரலைன்னு போன?"ன்னாரு தலைவர். "எங்க அப்பா கடிதம் எழுதியிருக்காருய்யா"ன்னேன். "சரி, ஏற்பாடு பண்றேன்"னார். ஆனா, அதுக்குள்ளேயே அவர் வேறு ரெண்டு பேரை வேலைக்கு எடுத்துட்டார். அதனால, "முதல்ல சட்ட மன்றத்துக்கு மாறிக்கோ. சமயம் பார்த்து எடுத்துக்குறேன்"னார். ஒரு வருஷம் அப்படிப் போச்சு. அண்ணா மறைஞ்ச சமயம் என் தங்கச்சி கல்யாணத்துக்காக லீவுல ஊருல இருக்கேன். ‘லீவ் கேன்சல். ஜாயின் சீஃப் மினிஸ்டர் ஆபீஸ் அஸ் பிஏ’னு தந்தி வந்துச்சு. உடனே, சென்னைக்கு ஓடி வந்துட்டேன். 16.2.1969 அன்னிக்குத் தலைவர்கிட்ட சேர்ந்தேன். 50 வருஷம் நெருங்குது!

    இடையிடையே ஆட்சி மாறினபோதும் எப்படி நீங்கள் அவரிடமே தொடர்ந்தீர்கள்?

    வேலைக்குச் சேர்ந்தப்போவே மூணு பிஏக்கள்ல நான்தான் ஜூனியர். குட்டி பிஏன்னு பேர் ஆயிடுச்சு. அம்மா (தயாளு), சின்னம்மா (ராசாத்தி) ரெண்டு பேருமே பிரியமா இருப்பாங்க. 1976-ல் ஆட்சி போச்சு. எல்லாரும் அவர்கிட்டேயிருந்து விலகிட்டாங்க. நான் மட்டும் தினம் வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தேன். தலைவர் கூப்பிட்டு, "நீ அரசாங்க வேலையை ரிஸைன் பண்ணிடு"ன்னார். "சரிங்கய்யா"ன்னு நானும் சொல்லிட்டேன். "பாவம் சின்ன வயசு. இவரு வயசுக்கு செகரட்ரி வரைக்கும் ஆகலாம் மாமா; வேலையை விடச் சொல்ல வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு பிஏ வெச்சிக்கலாம் மாமா. அந்த இடத்துக் குச் சண்முகநாதனைக் கேட்டு வாங்கிடுவோம்"னு மாறன் சொன்னாரு. அவருக்கு என் மேல ரொம்பப் பிரியம் உண்டு. கோபம் வரும். திட்டுவாரு. ஆனா, ரொம்பப் பிரியமா இருப்பார். எல்லாருமே வீட்டுல ஒருத்தனாத்தான் பார்ப்பாங்க. ஆனா, முதல்வரா இருந்த எம்ஜிஆர் வேற கோபத்துல ‘முடியாது’ன்னு கோளாறு கொடுத்தார். தலைவருக்குக் கோபம் வந்திருச்சி. அப்படின்னா, "எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியே வேண்டாம்"னு சொல்லிட்டார். நாஞ்சிலாருக்கு விஷயம் தெரிஞ்சு எம்ஜிஆர்கிட்ட பேசினார். "இதையெல்லாம் மறுத்தால் பெரிய கெட்ட பெயர் வந்துவிடும்"னு அவர் சொல்லவும் எம்ஜிஆர் ஏத்துக்கிட்டார்.

    எம்ஜிஆருக்கு உங்கள் மேல் என்ன கோபம்? எம்ஜிஆர் - கருணாநிதி பிளவின்போதெல்லாம் நீங்கள் பக்கத்தில் இருந்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்களேன்...

    (நாளை பேசுகிறார் சண்முகநாதன்...)

    நடிகர் விஜய் செய்தது பெரிய குற்றமா?- சத்ருகன் சின்ஹா
    Published : 30 Oct 2017 20:08 IST


    விஜய், சத்ருகன் சின்ஹா | கோப்புப் படம்.
    'மெர்சல்' படத்தில் நடிகர் விஜய் செய்தது பெரிய குற்றமா என பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்தனர். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியது.
    அதற்குப் பிறகு 'மெர்சல்' படக்குழுவினர் பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசினர். பின்னர், மெர்சல் படவிவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டதாக தமிழிசை கூறினார்.
    இந்நிலையில் நடிகர் விஜய் செய்தது பெரிய குற்றமா என்று பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
    இது தொடர்பாக சத்ருகன் சின்ஹா ஒரு பேட்டியில் கூறுகையில், ''சக்திவாய்ந்த தமிழ் நடிகர் விஜய், அவர் நாட்டு ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி தேவை என்று நமக்கெல்லாம் நினைவுபடுத்துகிறார், இது என்ன பெரிய குற்றமா?'' என்று கேட்டிருக்கிறார்.
    இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானியே பொருத்தமானவர் என்றும், மோடியை விமர்சித்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு தன் ஆதரவை வெளிப்படையாதத் தெரிவித்தவர் சத்ருகன் சின்ஹா என்பது நினைவுகூரத்தக்கது.

    No extention of parole on kin’s health grounds:  Hyderabad High Court


    By R Rajashekar Rao   |  Express News Service  |   Published: 30th October 2017 09:30 AM  |  

    HYDERABAD: Prison Rules make a prisoner ineligible for further grant of parole/emergency leave on the ground of continued illness of his/her close relative as the said ground does not fall under any of the rules for which parole can be extended. The rules mandate that the period of release on parole should not ordinarily exceed two weeks except in special circumstances. Primarily, grant of parole is within the exclusive prerogative of the government and it shall decide the period of release on parole on the merits of each case.
    In one of the cases before the Hyderabad High Court, the petitioner is a convict serving life sentence at the Cherlapally Central prison in Rangareddy district. He was initially granted parole for a period of 30 days, considering the medical reports of his mother. After some days, his parole was extended by 15 days. 
    While he was on parole, he made a representation to the government stating that his mother was aged 76 years and was suffering from serious health problems, and sought extension of parole by six months.
    When there was no response from the government to his representation for extension of parole, he filed a writ petition before the High Court with a plea for declaration of the  government’s inaction as illegal and arbitrary.Placing on record various medical reports of the petitioner’s mother, his counsel urged the court to support the case by exercising its discretionary powers.
    On the other hand, the government counsel told the court that as per sub-rules (12) and (16) of Rule 974 of the Andhra Pradesh Prison Rules, parole cannot be extended. The continued illness of a relative of the prisoner shall not be considered a reasonable ground to justify grant of extension of the period of release on parole already sanctioned.
    Justice Challa Kodanda Ram pointed out that the reason (mother’s illness) stated by the petitioner for extension of parole does not fall under any of the rules for which parole can be extended. On the contrary, sub-rule (16) prohibits illness of a relative of a prisoner for extension of parole. Therefore, non-passing of orders by the state government on the petitioner’s representation cannot be found fault with, the judge noted and dismissed the plea, saying that the petitioner’s request for extension of parole cannot be acceded to.

    Here’s why doctors of Telangana are fighting for government jobs


    By K Shiva Shanker  |  Express News Service  |   Published: 30th October 2017 09:18 AM  |  

    HYDERABAD: Shattering notions, the corporate healthcare sector is fast shedding its image of being a lucrative career option. This is based on the increasing trend of MBBS and MD graduates eyeing government jobs in TS. A whopping 5,569 doctors have applied for 286 vacancies in government hospitals across TS. This translates to about 20 doctors competing for one vacancy. The trend may continue in the recruitment for assistant professors, applications for which will end on November 15, say experts.
    The trend is not without reason. Apart from the oft-cited job security that government postings offer, policymakers have also managed to make it glamourous by providing better salary packages compared to private peers. In fact, the salary difference is drastic. A medico with an MD and 10 years of experience is on an average offered around Rs 45,000 to Rs 50,000 in the private sector, say experts. This is equal to the salary of a rookie software developer. On the other hand, the same candidate earn up to Rs 93,270 working in a government hospital.
    Doctors point out that situation is peculiar to TS, AP and Karnataka due to intense competition. They say that the average salary for an MBBS doctor in state around Rs 20,000. “In other states, people are ready to pay Rs1-2 lakh per month for post-graduate doctors,” said one doctor, who openly floated the possibility of ‘active private practice’ while holding a government job. Doctors’ associations have used the trend to claim there’s no unwillingness among them to serve in rural areas. However, critics claim it’s the lack of monitoring of attendance on daily basis that’s the perk. It allows them to pursue their interest while holding a well-paying government job.  
    The Telangana State Public Service Commission is on a massive recruitment drive to fill posts of civil assistant surgeons (CAS) and dental assistant surgeon (DAS). They are also looking to hire tutors, lecturers and assistant professors for the Telangana Vaidya Vidhana Parishad hospitals.“If one doctor is ready to perform a surgery at private hospitals for `10,000, another offers to perform it at Rs 5000. Competition is cut-throat and doctors are ready to work anywhere. While public think that we earn Rs 80,000 to `1 lakh, it takes at least five-years after post-graduation to earn that kind of money, which is around 15-years after we start MBBS course,” a doctor said. 
    However, in private sector, doctors point out that though starting salaries are low, it can increase multi-fold depending on expertise and reputation. Private hospital staff said there are liver transplantation specialists who earn up to `18 lakhs per month. 
    One of applicants to the government posts said that level of monitoring on a doctors attendance is low in Vaidya Vaidhana Parishad Hospitals. “Out of five days, doctors attend duties on two or three days. Infrastructure too is bad,” the applicant said. It is known to everybody that doctors keep their private practise active while holding government jobs. While talent flow to government sector seems to be a healthy phenomenon, it’s unlikely to benefit the poor and needy as the focus of many remains on the possiblity of private practice.

    Air Arabia flight service suspended following bird hit


    By Express News Service  |   Published: 30th October 2017 02:04 AM  |  

    COIMBATORE: AN Air Arabia flight from Sharjah was grounded at Coimbatore airport after the fight suffered a snag following a bird hit during landing here in the early hours of Sunday. A mishap was avoided when the flight landed on the runway after the bird hit. According to airport officials, the daily international flight usually landed at 4 am at Coimbatore International Airport and departed for Sharjah at 4.40 am. When the flight was preparing to land the pilot heard a sound on the left wing.
    The pilot landed the flight which had 107 passengers on board. Inspection later showed damage to the wing. Following the snag, the return service to Sharjah from Coimbatore was suspended and crew of about 163 passengers were forced to wait some hours. Then some of them were sent to Cochin, Chennai through domestic flights in order for them to reach Sharjah.
    A technical team was called to correct the snag. As of 6 pm on Sunday, the flight service was not resumed. Officials said it would be ready by Sunday night. R Mahalingam, director, Coimbatore International Airport, said, “It has been identified that a bird hit damaged the left wing when the plane was 400 ft above the outer space of the airport exactly at Chinniampalayam.”He said,  “To stop the such incidents, we have made a technical arrangement using sonar gun, which emits sound during the take off and landing of flights. We cannot prevent bird hits in space outside the airport.”

    Madras High Court questions need for 'huge' police force at Poes garden


    By PTI  |   Published: 30th October 2017 09:45 PM  |  

    The Poes Garden residence of former Chief Minister Jayalalithaa | EPS
    CHENNAI: The Madras High Court today sought to know the reason behind the stationing of a "huge" posse of police personnel at the Poes Garden residence of J Jayalalitha.
    Observing that police personnel were burdened with "unnecessary" bandobast and not even given time for spending with their families, Justice N Kirubakaran asked the Additional Advocate General: "What is the need for deploying such a huge police force at the Poes Garden now. I have seen a large number of personnel there today also." The judge made the passing reference orally when a police report with regard to action taken against tobacco sellers was submitted.
    Not satisfied with police's action, the judge wanted to know why the police department is not appointing people who are well-versed in law.
    The matter relates to a plea filed by T C Sharath for action against smokers in public places.
    When it came up for hearing today, the judge orally observed that these days the sub-inspectors are unable to file FIRs properly.
    The judge, while referring to cases and FIRs filed, asked the Additional Advocate General "what is the use of these FIRs ... every section is bailable ... there are no non-bailable sections." When the AAG responded to a question that the training period of SIs is one year, the judge suggested that it may be extended.
    Not satisfied with the report, the judge directed the AAG to file a fresh one.
    The judge observed that policemen are deployed for unnecessary political and other purposes and hence are unable to perform their official duties.
    He said police personnel be given some time to spend with their families and children

    news today 23.10.1024