Wednesday, November 1, 2017

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம்: ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு


By DIN  |   Published on : 01st November 2017 01:15 AM  
chennai high court
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 13 பேரை 4 மாத காலத்துக்குள் பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் கடந்த 2007 -ஆம் ஆண்டு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2012 -ஆம் ஆண்டு செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பாணை வெளியிட்டது.
பணி நிரந்தரம் கோரி... இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஆரோக்கியதாஸ் என்பவர் உள்பட 13 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், 'இந்த 13 பேரும் தேர்வுக் குழுவினரால் முறையாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2007 -ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வரவே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 13 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
செம்மொழி நிறுவனம் தரப்பில்... செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'மனுதாரர்களைப் பணியில் நியமிக்கும்போது இந்த பணியிடங்களுக்காக ஒப்புதல் பெறவில்லை. மேலும் அப்போது முறையான தேர்வு விதிகளும் வகுக்கப்படாததால், சட்ட அங்கீகாரமும் இல்லை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது' என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'மனுதாரர்களின் பணி நியமனம் சட்டவிரோதமானது அல்ல. அந்த 13 பேரும் முறையாகத்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக கொண்டு வந்துள்ள பணி நியமன விதிகளைக் காரணம்காட்டி அவர்களின் உரிமையைப் பறிக்க முடியாது. 
தாற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசு, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. எனவே, இந்த 13 பேரையும் பணி நிரந்தரம் செய்ய எந்தத் தடையும் இல்லை. இவர்களை 4 மாத காலத்துக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' எனக் கூறி, கடந்த 2012 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...