Monday, September 17, 2018

ஆசிரியப் பணியெனும் புனித வேள்வி!

By வெ. இன்சுவை | Published on : 17th September 2018 02:54 AM

இப்போதெல்லாம் காலையில் செய்தித்தாளைப் பிரித்தால், கொலை, கொள்ளை போன்ற செய்திகளுக்கு இணையாக, "ஆசிரியர் மாணவியிடம் சில்மிஷம்', "பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை' போன்ற செய்திகளைப் படிக்கும்போது மனம் வலிக்கிறது. இச்செய்திகள் நம் நெஞ்சைச் சுடுகின்றன. சமுதாயத்தை உருவாக்க வேண்டியவர்களே தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்று எண்ணும்போது நமக்குக் கோபம் வருகிறது.

சிறந்த மருத்துவர்களையும், பொறியாளர்களையும், விஞ்ஞானிகளையும் மேலாண்மை அதிகாரிகளையும், வழக்குரைஞர்களையும் உருவாக்குவது மட்டுமே கல்வி நிறுவனங்களின் பணி அல்ல. சிறந்த மனிதர்களையும், நற்பண்புகளும் மனித நேயமும் கொண்ட நல்ல குடிமக்களையும் உருவாக்க வேண்டும். பால் வைக்கும் பாத்திரம் அழுக்காக இருந்தால் அதில் இடும் பாலும் திரிந்துபோகுமல்லவா? அதேபோல் தான் மனத்துக்கண் மாசுடையவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் அவர்களால் நல்ல குடிமக்களை உருவாக்க முடியாது.

புலனடக்கம் இல்லாதவர் துறவறம் மேற்கொள்ளக்கூடாது. அதேபோல சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாதவர்கள் ஆசிரியர் பணிக்கு வரக்கூடாது. தன்னிடம் பயிலும் மாணவிகளைத் தங்கள் குழந்தைகளாகப் பார்க்க வேண்டாமா? அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது எதில் சேர்த்தி? இப்படிப்பட்ட இழி மக்களுக்குத் தங்கள் செயலின் சாதக, பாதகங்கள் தெரியாமலா இருக்கும்? தங்கள் பணியின் புனிதம் புரியாமலா இருக்கும்?

கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை "ரௌடிகள்' என்று நாம் முத்திரை குத்தி விடுகிறோம். தவறு செய்வது அவர்களின் இயல்பு என்றும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் தவறு செய்வதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. பிள்ளைகளின் அறிவுக் கண்களைத் திறந்து அவர்களுக்கு ஒழுக்கத்தையும், உயர் பண்புகளையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் தவறு செய்யலாமா? வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி? தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் தான் மட்டுமே பொறுப்பு என்று ஏன் அவர்கள் உணரவில்லை?

தற்போது ஆசிரியர்-மாணவர் இடையே புரிதல் இல்லை. காரணம் ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இயந்திரங்களாக மாறிப் போயினர். தன் மாணவர்களின் பிரச்னைகள், குடும்பச் சூழல், சிலர் கற்றலில் பின்தங்கியுள்ளதற்கு காரணங்கள் என எதைப்பற்றியும் தெரிந்து கொள்வதில்லை. ஆனால், அவர்களின் ஜாதி, இனம் பற்றி முதலில் தெரிந்து கொள்கிறார்கள். அக்கால ஆசிரியர் சமுதாயம் பணத்தைவிட சுய கௌரவத்தைப் பெரிதாக நினைத்தது. ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்குக் கூட ஊரில் தனி மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆசிரியரின் சொல்லுக்கு ஊர் கட்டுப்பட்டது.

தங்கள் வறிய நிலை குறித்து அவர்கள் வருந்தவில்லை. சட்டையின் கிழிசலை மேலே போட்டுக் கொண்டிருந்த கோட் மறைத்தது. கறாரும், கண்டிப்பும் அவர்களின் இயல்பாக இருந்த போதிலும் பிள்ளைகள் அவர்களை நேசித்தார்கள். அதற்குக் காரணம் கற்பித்தலில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடே ஆகும். தங்கள் தொழில் மீது அவர்களுக்குப் பக்தி இருந்தது. தம் மாணாக்கரின் முழு திறமையையும் வெளிக் கொணர்வது தங்களது கடமை என்று நினைத்தார்கள். "இவர்கள் என் மாணவர்கள் மட்டுமல்ல என் குழந்தைகளும் கூட. இவர்கள் வாழ்வு வளம் பெற என் அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்துவேன். கல்வியோடு நற்பண்புகளையும் ஊட்ட வேண்டியது என் கடமை' என்றே உறுதியேற்றார்கள்.

வாசிப்பு மட்டுமே அவர்களின் மூச்சாக இருந்தது. கண்டிக்கும்போது கண்டித்து, கனிவு காட்ட வேண்டிய நேரத்தில் கனிவு காட்டி பிள்ளைகளை அரவணைத்துச் சென்றனர். எனவேதான் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டித்தபோது, பெற்றோர்கள் சண்டைக்கு வரவில்லை; மாணவர்களும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆசிரியர் கண்டித்தாலோ அடித்தாலோ நியாயமான காரணம் இருக்கும் என்று நம்பினார்கள். கீழ்த்தரமான எண்ணங்களுக்குத் தங்கள் மனதில் இடம் கொடுத்தது இல்லை.

ஆரம்பப்பள்ளி ஆசிரியராகட்டும், கல்லூரிப் பேராசிரியர்களாகட்டும் குன்றி மணி அளவு கூட ஒழுக்கம் தவறி நடந்தது இல்லை. பணத்தின் முன் மண்டியிட்டதில்லை ; பதவிக்காக குறுக்கு வழியை நாடியதில்லை. தங்களின் தன்மானத்திற்கு இழுக்கு வரும்படி யாரிடமும் யாசித்தது இல்லை. "ஏழை' என்ற சொல் தங்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக் கொண்டது இல்லை. "சரஸ்வதியும், லட்சுமியும் ஒருசேர வாசம் செய்ய மாட்டார்கள்' என்று சமாதானம் கூறிக் கொண்டார்கள்.
வயதில் சிறியவர்கள் ஆனாலும் ஆசிரியர்கள் தந்தைக்கு ஒப்பாவர். "இவர் என் ஆசான். அறியாமை என்னும் இருளைப் போக்கி என் வாழ்வில் ஒளி ஏற்றுபவர்; நான் தவறு செய்யும் போது என்னைக் கண்டித்து நல்வழிப்படுத்துபவர்; இவர் வழிகாட்டலில் நான் வெற்றி பெறுவேன்' என்று மாணவர்கள் நினைத்தார்கள்.

இன்றைக்கு ஏன் எல்லாமே மாறிப்போய் விட்டன? பெரும்பாலான ஆசிரியர்கள் நல்ல முன்னுதாரணங்களாகத் திகழ்வது இல்லையே?
தனி வகுப்பு வைக்க வேண்டும் என்று மிரட்டும் ஆசிரியரை, ஒழுங்காகப் பாடம் நடத்தாத ஆசிரியரை, மாணவர்களைத் தங்கள் சொந்த வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரியரை, எதற்கெடுத்தாலும் பிரம்பு ஒடிய அடிக்கும் ஆசிரியரை, நடத்தை சரி இல்லாத ஆசிரியரை, குடித்துவிட்டுப் பள்ளிக்கு வரும் ஆசிரியரை, மாணவியரிடம் அத்துமீறும் ஆசிரியரை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?

ஆசிரியர் பணியை ஒருவர் விரும்பி ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஈடுபாட்டுடன் செய்ய முடியும். பாடங்களைக் கற்பிக்கும் போது அது அந்தரங்க சுத்தியுடன் ஒலிக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனையைச் செம்மைப்படுத்தி மெருகூட்டும் ஆசிரியர்கள், மேதா விலாசமும், நேர்மையும் சுய கட்டுப்பாடும் கொண்டு திகழ வேண்டும்.
ஒழுக்கமான இளைய சமுதாயத்தை உருவாக்குவது மிக மிக முக்கியம். இன்று பிள்ளைகளின் கவனத்தை சிதறடிக்கப் பல காரணிகள் உள்ளன. தங்களைச் சுற்றியுள்ள வக்கிரங்களில் வழுக்கி விழாமல் மாணவர்கள் இருக்க வேண்டுமானால் அதற்கு ஆசிரியர்கள் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அடித்தட்டுப் பிள்ளைகளுக்குப் பிரச்னை இருந்தால் அவர்கள் யாரிடம் போய்   தங்கள் மனக்குறையைக் கொட்ட முடியும்? குடிகாரத் தந்தை, பொறுப்பில்லாத தாய், மிரட்டும் வறுமை, கூடா நட்பு, குற்றப் பின்னணி என்ன செய்வார்கள் அவர்கள்? சரியான மேய்ப்பர் இல்லாவிட்டால் தடம்மாறிப் போய் விடுகிறார்கள்.

தாங்கள்போகும்பாதையின் விபரீதம் அறியா வயது. அவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை. வெறுமனே புரட்டிப் பார்த்து கையெழுத்துப் போட வேண்டிய கோப்புகள் அல்ல மாணவர்கள். ரத்தமும், சதையும் கொண்ட உணர்ச்சி உள்ள உயிர்கள். மோப்பக் குழையும் அனிச்சம் போன்றவர்கள். சில சமயம் நத்தையாய் கூட்டுக்குள் ஒடுங்கிப் போவார்கள். அவர்களைத் தம் குழந்தைகளாய் பாவித்து, அவர்களின் கை பிடித்து வெற்றிப் பாதையில் அவர்களைப் பயணிக்க வைப்பது ஒரு நல்லாசிரியரின் கடமை ஆகும்.

ஒழுக்கத்தின் மேன்மையை, உண்மையின் பலத்தை அவர்கள் ஒருமுறை ருசித்தால் போதும், அதற்குப் பின் தடம் மாற மாட்டார்கள். நூறு சதவீதம் தேர்ச்சி கொடுப்பவர் மட்டுமே நல்லாசிரியர் ஆகார். அதற்கான பயிற்சி அப்பிள்ளைகளுக்கு நிறைய வலியையும், மனச்கசப்பையும், உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

மதிப்பெண் மட்டுமே வாழ்கை ஆகாது. மாணவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ளச் செய்து, பள்ளிக்கு வருவதை ஒரு கொண்டாட்டமாக அவர்களை நினைக்கச் செய்து எதையும் குருட்டு மனப்பாடம் செய்யாமல் புரிந்து கொண்டு படிக்கச் செய்து, அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர ஒரு தூண்டுகோலாய் இருப்பவரே நல்லாசிரியர். ஆசிரியப் பணியை அனைத்து ஆசிரியர்களும் அகம் மகிழ்ந்து புனித வேள்வியாய் எடுத்துக் கொண்டால் சிறந்த சந்ததியினரை உருவாக்க முடியும்.

ஆசிரியர்களில் சிலர் தங்களின் தார்மிகப் பொறுப்பை உணராமல் கீழ்த்தரமாக நடந்துகொள்வதைப் பார்க்கும்போது நமக்கு வருத்தம் மேலோங்குகிறது. என்ன பிறவிகள் இவர்கள் என நினைக்கத் தோன்றுகிறது. அப்படிக் கூட மிருக இச்சை தோன்றுமா? பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பும்கூட அந்த ரணம் ஆறாமல் இருக்குமே. ஆண்கள் மேல் ஒருவித வெறுப்பும், பயமும், அருவருப்பும் தோன்றுமே.
இந்த மோசமான நிகழ்வு அந்தக் குழந்தையின் குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும்? இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? விபரம் தெரியாத, புரியாத பிஞ்சுகளிடமா தங்கள் வக்கிரத்துக்கு வடிகால் தேடுவது? சே! வெட்கக்கேடு. ஒரு சில கரும் புள்ளிகளால் நல்லவர்களும் அவமானம் அடைகிறார்கள். இனியாவது இந்த அவலம் மாற வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தொடர்ந்து உச்சம்! பெட்ரோல் ரூ.85.31.. டீசல் ரூ.78.00.
.
Added : செப் 17, 2018 06:24

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.31 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.00 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.31 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 6 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாகவும் உள்ளன
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

Added : செப் 16, 2018 22:28




தேனி: தேனி வடபுதுப்பட்டி மகாலட்சுமி கோயிலில் பக்தர்களை சாட்டையால் அடித்து, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்திய வினோத திருவிழா நடந்தது.தேனி வடபுதுப்பட்டி ஜெ.,ஜெ., காலனியில் குரும்ப கவுண்டர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி கோயில் உள்ளது. 31 ஆண்டாக சக்தி தேங்காய் திருவிழா ஓராண்டு விட்டு மறு ஆண்டு நடத்தப்படுகிறது.நேற்றுமுன்தினம் மகாலட்சுமிக்கு காலை 6:00 மணிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.2வது நாளான நேற்று கோயில் முன் நெய் தீபமிட்டு, பக்தர்களை சாட்டையால் அடித்தும், பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் சக்தி தேங்காய் பூஜை நடந்தது.விழா நிர்வாகக்குழுத் தலைவர் முருகேசன் கூறியதாவது: மக்கள் வேண்டிக்கொண்ட விஷயங்கள் நடந்து விடுவதால் அந்த நம்பிக்கையில் மறு ஆண்டே விரதம் இருந்து சக்தி தேங்காய் பூஜையில் பங்கேற்கின்றனர். சாட்டை அடி நேர்த்திக்கடனும் அவர்களின் விருப்பப்படியே நடக்கிறது,''என்றார்.
'ஆரிராரோ.. ஆராரிராரோ...' 18 ஆண்டுகளாய் காத்திருக்கும் மகள் : படுக்கையில் கிடக்கும் மகளுக்கான பாசப்போராட்டத்தில் தாய்

Updated : செப் 17, 2018 00:22 | Added : செப் 16, 2018 23:00




மதுரை: ''18 ஆண்டுகளாய் படுக்கையில் கிடக்கும் ஒரு மனுஷிக்கு இதை விட வேறு என்ன கஷ்டம் தான் வந்துவிடப் போகிறது,'' என கதறும் ஒரு தாய். ''அம்மாவின் குரலை ஒரு முறைகூட கேட்கவில்லை,'' என 18 ஆண்டுகளாக பதறும் மகள், என ஒரே குடும்பத்தில் மூன்று பெண்களின் சோக, பாசப்போராட்டம் நெஞ்சை பிழிகிறது.

வலியின் வாழ்க்கை :
 
குமரி மாவட்டம் பொன்மனை அருகே உள்ள இடைக்காட்டன்காலை கிராமத்தை சேர்ந்தவர் வனஜா,60. இவரது கணவர் சோமன். போலீஸ் ஏட்டாக பணிபுரிந்தார். இவர்களது மூத்த மகள் ஷோபா, 38. பிளஸ் 2 படித்திருந்த ஷோபாவிற்கும், அதே பகுதியில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ரமேஷ்பாபுவிற்கும் 1998ல் திருமணம் நடக்க, மகிழ்ச்சியில் நாட்கள் நகர்ந்தன.''எங்களுக்கு வாய்த்த இந்த கொடிய வாழ்க்கை உலகில் யாருக்கும் வாய்க்கக்கூடாது... இந்த வலிகளை தாங்கி தாங்கி இனி அழுவதற்கு என்னிடம் இனி கண்ணீரும் இல்லை,'' என தன் வலிகளை வார்தைகளாக்குகிறார் வனஜா...

''மகள் ஷோபாவின் பிரசவத்திற்காக எல்லோரும் சந்தோஷமாக குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் 2000 மார்ச் 3ல் கூடியிருந்தோம்.'சிசேரியன்' என்றார்கள். முடிந்ததும் அறையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. எங்களுக்கு எல்லாம் மிகுந்த மகிழ்ச்சி. சில மணி நேரம் ஆகியும் இருவரையும் எங்களிடம் காட்டவில்லை. சண்டை போட்டு அறையின் உள்ளே சென்று பார்த்தால் மகள் ஜன்னியால் துடித்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் மாறிவிடும் என்றனர். உடல் அசைவற்று கோமா நிலைக்கு சென்றுவிட்டாள். மருத்துவ சிகிச்சையில் எங்கோ தவறு நடந்து விட்டது என்பதை மட்டும் எங்களால் உணர முடிந்தது. வேறு மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல அங்கு ஆம்புலன்ஸ் இல்லை. அன்று அது நிஜமாகவே சிவராத்திரியாகவும் இருந்தது.

துரத்தும் மருத்துவம் : 

''நாகர்கோயிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் சேர்த்தோம். அவளது கோமா நிலை மாறுமா என்று எல்லோரும் ஏக்கத்தோடு காத்திருந்தோம். அவள் பெற்றெடுத்த மகளை (ஆதர்ஷா) அப்போது யாரும் கவனிக்கவில்லை. ஷோபாவுக்கு கபம் ஏறிவிட்டது. தொண்டை கழுத்து, பக்கவாட்டில் ஓட்டை போட்டு சிகிச்சை அளித்தார்கள். 40 நாட்கள் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

எங்களது மொத்த சம்பாத்தியமும் தீர்ந்தது. அங்கு இந்த சிலர் குழந்தை நன்றாக தானே இருக்கிறது. அவளை கவனியுங்கள் என சொல்ல எனது அக்கா ேஹமாவதி அங்கு பராமரித்தார். அதன் பின் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரி, நெய்யாற்றின்கரை தாலுகா மருத்துவனை என 6 மாதங்கள் மருத்துவமனை வாழ்க்கையானது.

செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. நாங்கள் நலமாக்கிக் காட்டுகிறோம் என சில டாக்டர்கள் சொல்ல அவர்களது மருத்துவமனை என இப்படி பல ஆண்டுகளை கடந்தோம். 2012 ல் அனந்தபுரி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கும் கஷ்டங்கள் தீர்ந்தபாடில்லை. பேத்தி ஆதர்ஷாவின் நிலையை பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கும். கடன் பிரச்னை, கஷ்டம் இப்படி எல்லாம் இழந்த நான் அப்பா குஞ்சன்பிள்ளை வீட்டில் அடைக்கலமானேன். அங்கு என்து அம்மா குட்டியம்மா, ஆதர்ஷாவை முழுமையாக அரவணைத்துக் கொண்டார். வீட்டில் ஷோபாவை கவனிக்கும் வகையில் சிறு வசதிகளை ஏற்படுத்தினோம்.

அதிர்ச்சிக்கு பஞ்சமில்லை : 

மகளின் இந்த நிலையை பார்த்து துவண்டுபோன எனது கணவர் சோமனும் 2003 ம் ஆண்டில் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார். மூன்றாவது நாள் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கடிதம் வந்தது. மருத்துவ சிகிச்சை தொடர்பாக தக்கலை நுகர்வோர் கோர்ட்டில் ஆதர்ஷாவின் அப்பா ரமேஷ்பாபு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நாகர்கோயிலுக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் எங்களுக்கு தெரியாமல் வேறு பெண்ணை ரமேஷ்பாபு திருமணம் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கும் பதிவானது. இந்த வழக்குகள் எல்லாம் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டன. நுகர்வோர் நீதின்றத்தில் ரமேஷ்பாபு தொடர்ந்த வழக்குகளில் அவருக்கு பதில் நான் ஆஜராக வேண்டிய நிலை வந்தது. இப்படி நீதிமன்றம், மகளின் மருத்துவம், பேத்தியின் தனிமை என மனசு முழுவதும் உடைந்து போனது.நெஞ்சம் உடைகிறது''ஷோபாவை கவனிப்பதில் உள்ள சிரமங்கள் சொல்லிமாளாது. இப்போது சாப்பிடுகிறாள். உணவு ஊட்டும் போது கையை கடித்து வைத்து கொள்வாள். அவை புண்களாகி, வடுக்களாகவும் மாறிவிட்டன. சிறு வயதில் மிகவும் அழகாக இருப்பாள்.

இப்போது பற்கள் பாதிக்கப்பட்டுவிட்டன. அவளை துாக்கி உட்கார வைக்க முடியவில்லை. எனக்கும் நெஞ்சு வலி, சுகர், பிரஷர் வந்து விட்டது. ஆதர்ஷாவின் பாசத்துக்குரிய எனது அம்மா குட்டியம்மாவும் இறந்துவிட்டார். சிலநேரம் ஷோபாவை நினைத்து கோபப்படுவேன். அதை பார்த்துவிட்டு ஆதர்ஷா 'எனது அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள்' என என்னிடம் கேட்டு அழுது கொண்டு குடியம்மா கல்லறையில் போய் உட்கார்ந்துவிடுவாள். அது என் நெஞ்சை அடித்து உடைத்தது போன்ற வலியை தரும். எனது கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. (என சொல்கையில், அருகில் இருந்து கேட்கும் நபர்களின் கண்களில் தண்ணீர் ஓடுகிறது). எனக்கு என் மகள் நலம்பெறுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என பேச்சை முடித்த போது, கல்லுாரிக்கு சென்றிருந்த ஆதர்ஷா வீட்டிற்குள் நுழைந்தார்.

மகளின் அவதாரம் :
ஆதர்ஷா தக்கலை அருகே குமாரகோவிலில் உள்ள நுாருல் இஸ்லாம் கலைக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ., ஆங்கிலம் படிக்கிறார். தனது சோகங்களை தெய்வத்திடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் இதயத்தை கொண்டிருக்கிறார். ''குழந்தையாக இருந்து இதுவரையிலும் நான் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. வலிகளில் தான் வாழ்ந்துவருகிறேன்,'' என்றார். ஆறுதலாக இருந்த குட்டியம்மாவும் போய்விட்டார். அம்மாவுடன் சேர்ந்து அடிக்கடி 'செல்பி' எடுப்பதும், காதருகே பேசுவதும், சிரிக்கவைக்க முயற்சிப்பதுமாக இருக்கும் ஆதர்ஷாவுக்கு எதிர்காலம் பெரிய கேள்விக்குரியாகவே முன்னிற்கிறது.

அதிர்ந்த ஆதர்ஷா : 

தனது நிலை பற்றி ஆதர்ஷா அரசுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். கவர்னர் இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது தான் கல்லுாரி முதல்வருக்கே ஆதர்ஷாவின் நிலை தெரிந்திருக்கிறது. தவறான சிகிச்சையால் தனது தாய் கோமா நிலையில் இருப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி சுந்தரேஷூக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 'ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி டீன், டாக்டர்கள் குழு அமைத்து பரிசோதிக்க வேண்டும். சிகிச்சையின் அடிப்படையில் குணப்படுத்த முடியுமா அல்லது கருணை கொலை செய்ய வேண்டுமா,' என செப்., 25ல் அறிக்கை தாக்கல் செய்ய செப்., 11ல் நீதிபதி உத்தரவிட்டார்.

'கருணை கொலை' வார்த்தையால் துடிதுடித்துப்போனார் ஆதர்ஷா. பள்ளி, கல்லுாரியில் பெறும் வெற்றிகளை வீட்டின் அருகில் உள்ள இசக்கி அம்மன் கோயிலில் சென்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஆதர்ஷா, அந்த கோயில் முன் அழுது புரண்டார். அவரை ஆறுதல்படுத்தி தேற்றியுள்ளனர்.

தெய்வமே துணை : 

அம்மாவின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள ஆதர்ஷா பேசுகிறார்... அம்மாவை நான் தினமும் பார்க்கிறேன். ஆனால் அவரது குரலை ஒரு நாள் கூட கேட்டது இல்லை. அம்மாவின் தாலாட்டை கேட்க சின்ன வயசில் ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு நடனம் மீது ரொம்ப ஆசை. பல நிகழ்ச்சிகளில், போட்டிகளில் ஆடியிருக்கிறேன். அப்போது என்னோடு ஆடும் பிள்ளைகளின் பெற்றோர் வந்து ஊக்கப்படுத்துவதும், முத்தம் கொடுப்பதை ஏக்கத்தோடு பார்ப்பேன்.

எனக்கு யாருமே இருக்க மாட்டார்கள். அந்த தனிமை என்னை ரொம்பவே பாதித்தது. கோ - கோ விளையாட்டிலும் நான் இதை உணர்ந்தேன். அதன் பின் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து விட்டேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பறையில் எங்கள் ஆசிரியை ஒரு பெண் கோமா நிலையில் பல ஆண்டுகள் படுத்துகிடப்பதாகவும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் எனது கதையை பற்றி ஒரு மீடியாவில் வந்ததை பார்த்து சொன்னார். அப்போது என் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஒரு மாணவி அந்த கதைக்குரிய மாணவி இவர் தான் என சொன்ன போது அந்த ஆசிரியை அழுதுவிட்டார்.

என்கதை என்னோடு என்று இருந்துவிடுவேன். யாரிடமும் என் அம்மா, அப்பா பற்றி பகிர்ந்து கொள்வது இல்லை. அம்மாவை விட்டு அப்பா போய்விட்டாலும், நான் இன்னமும் அப்பாவின் பாசத்தை எதிர்பார்க்கிறேன். இப்போது தான் எனது கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என நீதிமன்றத்திலும் கோரிக்கை வைத்தேன்.

சோகங்களை பாடல்கள் கேட்டும், அருகில் உள்ள இசக்கி அம்மன் கோயிலும், பூட்டியின் கல்லறையிலும் சொல்லி என்னை தேற்றிக்கொள்கிறேன். சில நேரங்களில் பெற்றோரே இல்லாதவர்களை நினைத்து ஆறுதலடைவேன். ஆனாலும் எனக்கு உள்ள ஒரே நம்பிக்கை, என் அம்மா எழுந்து நடப்பார்கள் என்பது தான். அனைவருக்கும் அம்மா எப்போதும் மதிப்புக்குரியவள். அவள் இல்லாத உலகம் வெறுமையானது. அம்மா ஐ லவ் யூ.

தொடர்புக்கு:
94424 72865aadharshababu@gmail.com- டபிள்யு.எட்வின்
மருத்துவ மாணவிக்கு குவியும் நிதியுதவி

Added : செப் 17, 2018 00:35

பெரம்பலுார்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, மருத்துவ மாணவிக்கு, வாசகர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர். பெரம்பலுார், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், கனிமொழி, 21. பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்த பணமின்றி, கூலி வேலைக்கு சென்றார்.இது குறித்து, நமது நாளிதழில், 12ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, 'தினமலர்' வாசகர்கள், மாணவி கனிமொழியின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கு எண்ணை பெற்று, தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.கனிமொழி கூறியதாவது:வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எனக்கு, நிதியுதவி பெற்றுத் தந்த, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. செய்தி வெளியான நாள் முதல் இன்று வரை, இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், 'தினமலர்' வாசகர்கள், எனக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
'ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது' : கவர்னருக்கு 14 பேர் குடும்பத்தினர் மனு

Added : செப் 16, 2018 23:02

சென்னை; 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது' என, ஸ்ரீபெரும்புதுாரில், அவருடன் பலியான, 14 பேர் குடும்பத்தினர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, இ - மெயில் வாயிலாக, மனு அனுப்பியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்; இவர், 1991 மே, 21ல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது, விடுதலை புலிகளின் தற்கொலை படையினரால், கொடூரமாக கொல்லப்பட்டார். அவருடன் போலீஸ் அதிகாரிகள் உட்பட, 14 பேர் பலியாகினர்.இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஏழு பேரை விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, தமிழக அரசுபரிந்துரை அனுப்பியுள்ளது.இந்நிலையில், 'ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது' என, அவருடன் பலியான, 14 பேர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.'

நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்த ஏழு பேரையும் விடுதலை செய்தால், அது, தவறான முன் உதாரணம் ஆகிவிடும். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ராஜிவுடன், எங்கள் உறவினர்கள், 14 பேரை பலி கொடுத்து உள்ளோம். அவர்கள் என்ன பாவம் செய்தனர்' என்றும், கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், 14 பேர் குடும்பத்தினரும், ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக கவர்னருக்கு, 'இ - மெயில்' வாயிலாக, மனு அனுப்பி உள்ளனர்; நேரில், மனு அளிக்கவும் முயற்சித்து வருகின்றனர்.இதுதொடர்பாக, 14 பேர் குடும்பத்தாரை ஒருங்கிணைத்து வரும், அப்பாஸ் கூறுகையில்,''ராஜிவ் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். அவருடன், ஒரு பாவமும் அறியாத, 14 பேர் பலியாகி உள்ளனர். கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்வது, குற்றத்தை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும்,'' என்றார்.

விடுதலை கிடைக்குமா : ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக 2014-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. காங்கிரசை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பலாம்' என சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது. அதனால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக இன்று முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இ - டிக்கெட்' முன்பதிவு : 5 சதவீத கட்டண சலுகை

Added : செப் 16, 2018 21:05


ரயில்களில், 'பிம்' மொபைல் போன் செயலி யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு, 5 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியர், உணவு, 'பெட்ஷீட்' உள்ளிட்டவற்றையும் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பயணியர் அலைச்சலை போக்கும் விதமாக, 'இ - டிக்கெட்' பெற, புதிய மொபைல் போன் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, 'பிம்' எனும் செயலி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, பயணியரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, 'பிம்' செயலி மூலம் டிக்கெட் பெறும் பயணியருக்கு, அடுத்தாண்டு ஜூன், 13 வரை, 5 சதவீதம் டிக்கெட் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -



Sunday, September 16, 2018

தமிழில் எழுதினால் பணத்தை வாரி வழங்கும் கூகுள்!

tamil in google adsense


தமிழ் மொழியை கூகுள் நிறுவனம் அங்கீகரித்துள்ளால் தமிழில் எழுதப்படும் பிளாக் பதிவுகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் இந்தி மற்றும் வங்காளம் ஆகியவை மட்டுமே கூகுள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மொழியும் கூகுளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூகுளின் விளம்பரப் பிரிவான Google AdSense மற்றும் Google Ads ஆகியவற்றிலும் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் பிளாக் (Blog) எழுதுபவர்கள் அதனை Google AdSense ல் பதிவுசெய்ய வேண்டும். பின், அதிக வாசகர்களை ஈர்க்கும் வார்த்தைகளைக் கொண்ட படைப்புகளை எழுதி பிளாக் பதிவுகளாக வெளியாட்டால் Google AdSense பிளாகில் விளம்பரங்களை இடம்பெறச் செய்து வருவாய் ஈட்டித்தரும்.
விஜயபாஸ்கர் குட் டாக்டர் இல்லை.. குட்கா டாக்டர்.. டிடிவி தினகரன் 

பொளேர்!

 By Hemavandhana Published: Sunday, September 16, 2018, 9:30 [
\
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அமைச்சர் GOOD டாக்டர் இல்லை குட்கா டாக்டர் என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடி உள்ளார். திருவப்பூர் அருகே அமமுக பொதுக்கூட்டம் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விஜயபாஸ்கர் மீது சாடல் விஜயபாஸ்கர் மீது சாடல் அப்போது பேசிய தினகரன், வருகிற திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அமமுகதான் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து பேசிய தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கரை கடுமையாக தாக்கி பேச தொடங்கினார்.

 காற்றில் பறக்கும் அப்பளம் காற்றில் பறக்கும் அப்பளம் விருந்து ஒன்றில் அண்ணா அவர்கள் 'நாலனா முட்டை அமைதியாக இருக்க, காலனா அப்பளம் காற்றில் பறக்கிறது' என்று பேசியதுதான் ஞாபகம் வருகிறது. அதுபோல,தற்பொழுது இந்த காலனா அமைச்சர்கள், ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் இருந்து அமைச்சராக இருக்கும் டாக்டர் ஒருவர் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார். அவர் வீட்டில் சோதனை செய்யாத துறைகளே இல்லை.

குட் டாக்டர் இல்லை குட் டாக்டர் இல்லை ஆர்.கே.நகர் தேர்தலில் என்னை வெற்றிபெற வைக்கத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வேலை செய்கிறார் என நினைத்தேன். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து தேர்தலை நிறுத்த தான் பணியாற்றினார் என பின்னர் தான் தெரிந்தது. புதுக்கோட்டை அமைச்சர் GOOD டாக்டர் இல்லை குட்கா டாக்டர் என்றே அழைப்போம். கைவிட்ட முதல்வர் கைவிட்ட முதல்வர் நான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினருடன் நடைபயிற்சி சென்றபோது, புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சராக உள்ள டாக்டர் என்னை பார்த்து வணக்கம் வைத்தார். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்தேன். அப்போது விஜயபாஸ்கர், "என்னை முதல்-அமைச்சர் கைவிட்டு விட்டார்" என்று என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/pudukottai-public-meeting-ttv-dhinakaran-talks/articlecontent-pf325633-329837.html
Celebrating their tireless work on Neonatal Nurses Day 

By Bhavani Prabhakar Published on Sep 15, 2018 02:42 PM IST


Usha Rani

Chennai: While doctors are glorified and celebrated all the time, not often do we realise the importance of nurses. Neonatal nurses, in particular, are unsung heroes who are responsible for tending to newborns, including preterm infants.

On the occasion of Neonatal Nurses Day today, Kanchi Kamakoti Childs Trust Hospital, nurse manager, Usha Rani, in a tête-à-tête with News Today, shares her experiences of working as a neonatal nurse for the past 13 years.

Usha Rani says, "As a neonatal nurse, our duty comprises establishing breathing and feeding of the infants. For preterm babies, the procedure is complicated as they breathe and are fed through tubes which must be carefully handled. To make the work easier, every nurse gets a baby allotted which must be cared by the specified nurse till the baby’s discharge from hospital. In case of any strange symptoms, the nurse can identify it as she would be familiar with the health condition of the baby."

The food habits of infants must be taken care properly. For instance, preterm newborns are fed with one or two ml of mother's milk.

"Quite a number of preterm babies are admitted to our hospital. Making them get accustom to food is a tough task. The mothers would not produce breast milk owing to complications in case of which the nurses encourage them by explaining the nutritional benefits. However, we have a milk bank to cater to the nutritional needs of the newborns," she explains.

Nonetheless, the role of a neonatal nurse is challenging as she has to ensure the neonate is not infected, well-fed and properly taken care of. In addition to such physical challenges, they also undergo emotional roller-coaster as there are infants who fail to respond to their care and treatment.

"Another major challenge that we face is handling parental emotions. Even if everything is handled with utmost care, the parents are concerned and we have to intervene and explain as to what is being performed," adds Usha Rani. 



Usha Rani at her work spot.

NEWBORN CARE

For about one week of admission, the neonates are checked for complications and congenital abnormalities and physical examination. It could be fatal if the nurses ignore these.

When a child is born, chances of it getting affected with hypothermia is more. It must be immediately covered with sterile towels and shifted to a warmer so that the temperature is maintained.

Most preterm neonates are diagnosed with respiratory distress and would be requiring additional support of oxygen which is given either through ventilator or tubes.

UNIQUE CASE

"We had an extremely complicated preterm baby recently. We were informed that the mother conceived after several years and they do not hail from a well-off family. The infant was extremely underweight and had respiratory illness. With the aid of Milaap, an online funding platform, we raised the money required for the treatment," explains Usha.

Talking about the treatment, she goes on to say, "The infant was on ventilator support for about two months; and from 680 grams, the baby weighed 4 kg when it was discharged. In addition, it did not require an external oxygen support. We extubated and intubated more than seven times which we have never experienced and it was a life-threatening condition."

TECH AND TRAINING

Mechanical ventilator with high frequency oscillator and supply of nitrous oxide to prevent pulmonary hypertension, continuous positive airway pressure (CPAP), resuscitating infant neopuff and a transport ventilator to meet the respiratory needs of the child during transit in the neonatal ambulances are the technological advancements in neonatal services.

"The nurses are trained through in-service education and continuous nursing education that is offered in our hospital. During the in-service exercise, classes are held weekly twice, mock drills are conducted and based on the feedback the nurses will be moved to the next level. In the continuous nursing education, the nurses will be strengthened in specific services with the help of doctors," adds Usha Rani.
Chennai police help American woman tourist return home 

By NT Bureau Published on Sep 15, 2018 04:54 PM IST


Kela Marine Nelson

Chennai: The city police found a woman tourist from the US losing her passport and made arrangements to help her get back home.

According to the police, Kela Marine Nelson (26), an American citizen allegedly married to Vimal, a local, was staying at Velacheri.

But, she was found by the Kanchipuram police with her passport missing on 12 September.

Sources said Vimal lost his job a couple of days ago, took Kela to Kanchipuram and 'abandoned' her. She was later found by the locals, who informed the police.

The police said Kela was not sure where Vimal's house was in Velacheri. She told the police that she was looking for a job and lived in a lodge in Kanchipuram.

She has been in India for the past two years and married a year ago.

Kela told the police that the duo was living in a multi-storeyed apartment at Velacheri and she did not know about his whereabouts for the past few days.

The police said she wanted to return to USA. "We shifted her to a shelter in Panayur, ECR. Subsequently, we contacted the US embassy and she travelled to Florida Friday," the police added.
Bike thief who learnt from YouTube held Google PlusGmailPinterestLinkedin Bellie Thomas Bellie Thomas, DH News Service, Bengaluru, Sep 16 2018, 00:28am ist updated: Sep 16 2018, 01:12am ist A 23-year-old PUC dropout, who st...

Read more at: https://www.deccanherald.com/city/thief-who-learnt-youtube-held-692875.html

HBA : அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? விரிவான விளக்கம்

முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %  
50,001 முதல் 1,50,000 வரை : 7%  
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%  
இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி. 
அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும். 
யாரெல்லாம் கடன் பெறலாம்?: 
சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். 
கடனின் பல்வேறு பிரிவுகள்: 
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 
2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 
3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும். 
4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று. 
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம். 
6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு. 
7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம். 
8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை. 
9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம். 
10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம். 
வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும். 
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் ) 
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு 
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று 
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion ) 
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று 
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம் 
மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும். 
முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும். 
இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும். 
ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும். 
ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும். 
இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும். 
வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
சிறப்பு குடும்ப நலத்திட்டம்: 
வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும். 
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும். 
வாழ்ந்து காட்டுவோம்: அறிவுரை வேண்டாம் அன்பே போதும்

Published : 09 Sep 2018 13:04 IST


எல். ரேணுகா தேவி




உலகத் தற்கொலை தடுப்பு நாள்: செப்டம்பர் 10

நாளிதழ்களில் தற்கொலைச் செய்திகள் இல்லாத நாட்களே இல்லை என்னும் அளவுக்குத் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து, போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பான விஷயமாகக் கருதப்படுகிறது. தற்கொலையைத் தடுக்கும்விதமாக 2003 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10-ம் தேதி உலகத் தற்கொலைத் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

முடி உதிர்வால் உயிரிழந்த மாணவி

உலகம் முழுவதும் வருடத்துக்கு ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் 2005 முதல் 2015 வரை 1,33,623 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015-ல் மட்டும் 8,934 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிலும் 14 முதல் 30 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. குறிப்பாக, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் முடி உதிர்தல் பிரச்சினையால் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெண்கள் என்றாலே அழகாகவும் நீளக் கூந்தலுடனும் இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் நிர்ப்பந்தம்தான் அந்த மாணவியின் தற்கொலைக்குக் காரணம். தனது கூந்தலை ஸ்ட்ரெய்ட்னிங் செய்துகொண்ட பிறகு அந்த மாணவிக்கு அதிக அளவு முடி உதிரத் தொடங்கியுள்ளது. எங்கே தனக்குத் தலை வழுக்கையாகிவிடுமோ என்ற பயத்தால் கல்லூரிக்குச் செல்லாமல் அறையிலேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்.

பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இளைஞர்கள் மனத்தளவில் எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த மாணவியின் மரணம் சாட்சியாக இருக்கிறது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற நொடிப்பொழுது மனநிலையைக் கடந்துவருவதில்தான் வாழ்க்கையின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்கிறார் மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

“இனிமேல் தன்னால் வாழவே முடியாது என நினைப்பவர்கள்தாம் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய கஷ்டத்தை யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்வார்கள். வேறு சிலர் தங்களுடைய கஷ்டத்தைக் கத்திப் பேசியோ அழுதோ வெளிப்படுத்துவார்கள்.


மனதுக்குள் இருப்பதை இப்படி ஏதாவது ஒருவகையில் நெருக்கமானவர்களிடமோ நம்பிக்கைக்குரியவர்களிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டும். யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிவைத்தால் என்றாவது ஒருநாள் அது பிரஷர் குக்கர்போல் வெடித்துவிடும். இதுபோன்ற நேரத்தில்தான் தற்கொலை எண்ணம் தலைதூக்கும். நமக்குச் சாதாரணமாகத் தோன்றும் விஷயம்கூட, மனத்தளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிய விஷயமாக இருக்கலாம்.

அதைக் கண்டறிந்து அவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல் அதிகரித்துவரும் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும். கஷ்டங்களை உடனுக்குடன் பேசிவிட்டாலே பாதிப் பிரச்சினைகள் சரியாகிவிடும்” என்கிறார் அவர்.

காதுகொடுத்துக் கேளுங்கள்

தற்கொலை முயற்சிக்கான ஆரம்ப கட்டம் மன அழுத்தம்தான். பொதுவாக, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையை நாடிச் செல்வார்கள். அந்தத் தனிமையே நாளடைவில் தற்கொலை எண்ணத்துக்கான தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. “மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெருங்கிய வட்டத்திலிருந்து விலகிச் செல்ல நினைப்பார்கள். தூக்கமின்மை, யாரிடமும் பேசாமல் இருப்பது போன்றவை அதற்கு உதாரணம்.

ஒரு சிலர் தங்களையே காயப்படுத்திக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் தென்பட்டால் அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது. அதேபோல் யாராவது தங்களுடைய கஷ்டத்தைப் பகிர்ந்துகொண்டால் உடனே

அறிவுரை வழங்காமல் கொஞ்சம் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டுப் பழக வேண்டும். ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா, எல்லாம் சரியாகிடும், இதுவும் கடந்துபோகும்’ என்பது போன்ற வார்த்தைகளை அறிவுரை என்ற பெயரில் மன அழுத்தத்தில் இருப்பவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கலாம். ‘உனக்கு எப்ப கஷ்டமாக இருந்தாலும் என்னிடம் பேசு. உனக்கு நான் உறுதுணையாக இருப்பேன்’ எனப் பேசி அவர்களுக்கு நம்பிக்கை தரலாம்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் கவுன்சலிங் வழங்கிவருகிறோம். எங்களுடைய அமைப்புக்கு 044-24640050, 044-24640060 ஆகிய எண்ணில் தொடர்புகொண்டு பேசலாம். பேசும் நபர் யார், எங்கிருந்து பேசுகிறார் போன்றவற்றை நாங்கள் கேட்கமாட்டோம். அவரது தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கான ஆலோசனையை மட்டுமே வழங்குவோம்” என்கிறார் ‘சிநேகா’ தற்கொலைத் தடுப்பு அமைப்பின் தன்னார்வலர்களில் ஒருவரான இளங்கோ. கேட்பதற்குக் காதும் சாய்ந்துகொள்ள தோளும் இருந்தாலே பல தற்கொலைகள் தடுக்கப்பட்டுவிடும்.
வானவில் பெண்கள்: இங்கே பூண்டு உரித்துத் தரப்படும்

Published : 16 Sep 2018 11:01 IST


அன்பு

 

வாணலியில் கடுகு பொரிந்துவிடுவதற்குள் அடுத்ததாகப் போடவேண்டிய பூண்டை அவசர அவசரமாகத் தரையில் நசுக்கி உரிக்கும்போதுதான் பூண்டு உரிப்பது என்பது எவ்வளவு சிரமமான வேலை என்று தெரியும். யாராவது பூண்டு உரித்துக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீ அன்னபூர்ணா மகளிர் சுயஉதவி குழுவினர்.

இந்தக் குழுவில் 27 பேர் உள்ளனர். இவர்கள் கேட்டரிங், மெஹந்தி, சமோசா விற்பனை, தேநீர் விற்பனை ஆகியவற்றுடன் தற்போது பூண்டு உரித்துக் கொடுக்கும் தொழிலையும் செய்துவருகின்றனர்.

“நான் டிப்ளோமா நர்சிங் முடித்ததும் கல்யாணமாகிவிட்டது. இப்போ பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துவிட்டார்கள். வீட்டுவேலை முடிந்த பிறகு கிடைக்கிற நேரத்தில் ஏதாவது ஒன்றைச் செய்யலாம் என்பதற்காகத்தான் மகளிர் குழுவைத் தொடங்கினேன். மற்ற குழுக்களைப் போல் அல்லாமல் குழுவினரின் முயற்சியால் சிறு நிறுவனங்களில் ஆர்டர் பிடித்து, குழு உறுப்பினர்களுக்குத் தெரிந்த கைத்தொழிலைத் தொடங்கலாம் என முடிவுசெய்தோம்.


தற்போது கோயில் நிகழ்ச்சிகள், தனியார் நிறுவன மீட்டிங், வீட்டு விசேஷங்களுக்கு மெஹந்தி போடுவது, சமையல் போன்ற சிறு ஆர்டர்கள் கிடைக்குது. அப்படித் தோன்றியதுதான் பூண்டு உரித்துக் கொடுக்கும் வேலை. இதற்காக சூப்பர் மார்க்கெட்களுக்குப் போய் ஆர்டர் பிடித்தோம். ஒவ்வொரு முறையும் கடை கடையா ஏறி இறங்க முடியாது. அப்பதான் முகநூலில் எங்கள் குழுவின் சார்பில் பூண்டு உரித்துக் கொடுக்கப்படும்னு என் தம்பி மனைவி ஃபேஸ்புக்ல எழுதினாங்க. அதைப் பலர் பார்த்ததும் இப்ப நிறைய ஆர்டர் கிடைச்சிருக்கு” என்கிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாக்யலட்சுமி.

இவர்கள் 100 கிராம் முதல் ஒரு கிலோவுக்கும் மேல் பூண்டு உரித்துத் தருகிறார்கள். இதில் குறைவான தொகையை மட்டுமே லாபமாகப் பெறுவதால் நிறைய ஆர்டர் கிடைக்கிறது. இதில் கிடைக்கும் அந்தச் சொற்ப லாபம், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று ஆர்டர் எடுத்து கொழுக்கட்டை செய்து கொடுத்திருக்கிறார்கள்.

“அரசு வங்கியில் லோன் கேட்டிருக்கிறோம். அது கிடைத்தவுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர் கப், தட்டு, சானிட்டரி நாப்கின் இப்படி நிறைய வேலைகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் பாக்யா.

பாக்யலட்சுமி

தொடர்புக்கு: sriannapoorna1982@yahoo.com
இனிப்பு தேசம் 22: மனசு இனிக்கச் சாப்பிடுவோம்…

Published : 15 Sep 2018 16:10 IST

மருத்துவர் கு. சிவராமன்





இரவு விருந்துப் பழக்கம், கடந்த இரு தலைமுறைகளில் பற்றிக்கொண்ட புதுப் பழக்கம். இந்தப் பழக்கம் நம் நலத்திலும் மனத்திலும் நிறையவே தீங்குகளை விதைத்துவிட்டது. சனிக்கிழமை இரவு தமிழகத்தின் அத்தனை நகர்ப்புறத்து உள்வட்ட சாலைகள், குறிப்பாக, உணவு விடுதிகள் உள்ள சாலைகளில் பயணிக்க வழியின்றி, ‘பார்க்’ செய்யப்பட்ட வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.

அன்று இனக்குழுக்களாகத் திரிந்தபோது, இரவில் நிலவொளியில் கள்ளருந்தி ஆடிக் களித்த வரலாறிருந்தால்கூட, அந்த வாழ்க்கையின் உடலுழைப்பையும் அப்போதிருந்த தேக வன்மையையும் இப்போதைய நம் உடலோடு கனவிலும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.

இரவு உணவு என்பது ‘இயலாதவன் உணவு போல’ நலிந்து, குறைவாக இருக்க வேண்டும் என்பது நம் மரபு சொன்ன உணவு விதி. ஆனால், ‘இரவுதான் களிப்புக்கான நேரம் உள்ள பொழுது’ என சந்தை நாகரிகம் மொத்தமாய் நம்மை மாற்றிவிட்டது. சிறு, எளிய உணவாக இருக்க வேண்டிய இரவு உணவு, பேருண்டியாய், அதிக கலோரி உணவாக மாறிப்போனது. இனிப்பு நோயின் பெருக்கத்துக்கு மிக முக்கியக் காரணம் இது.

இரவில் எதைச் சாப்பிடலாம்?

அநேகமாக, சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் படுக்கப் போகும் பழக்கமுள்ளோருக்கு இரவு உணவு முதலில் குறைந்த கலோரியைத் தருவதாக இருக்க வேண்டும். இரவு, சந்திரனுடைய ஆட்சி. உடல் பிரபஞ்சத்தின் குளிர்ச்சியிலிருந்து தன்னைப் பாதுகாக்க, சற்று வெம்மையாகத் தன்னை வைத்திருக்கும் நேரம். அப்போது நாம் சாப்பிடும் உணவு கண்டிப்பாகக் கூடுதல் வெம்மையைக் கொடுத்துவிடக் கூடாது. கூடுதல் குளிர்ச்சியையும் கொடுக்கக் கூடாது.

கொள்ளுப்பயறு, எண்ணெய்யில் பொரித்தது, கோழிக்கறி, பரோட்டா இவை கொஞ்சம் சூட்டைத் தருபவை. தர்பூசணிப்பழம், வெள்ளைப்பூசணிக் கூட்டு, நீர்க்காய்கறிகள், புளிப்பான பழங்கள் போன்றவை குளிர்ச்சியைத் தருபவை. இரண்டுமே ஆகாது. வெம்மையும் குளிர்ச்சியும் அளவாய்த்தரும் இட்லி ஆகச் சிறந்தது.

அதுவும் குறிப்பாக வெள்ளை அரிசி இட்லிக்குப் பதிலாய், சிறுதானியமான குதிரைவாலியில் செய்த இட்லி சிறந்தது. தானியங்களை அரைத்து மாவாக்கிவிட்டால் அது முழு தானிய உணவு அளவுக்குச் சிறந்தது இல்லை என்றாலும், பிற ‘ரெடி டு ஈட்’ உணவு வகைகளைக் காட்டிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

கோதுமை உணவு வகைகள், உடற்சூட்டைத் தரக்கூடியவை. குறிப்பாக மைதா சேர்ந்த உணவு வகைகள். குறைவான அளவில் முழு, பட்டை தீட்டாத கோதுமை உணவை எடுப்பதை (வாரம் ஒரு நாள் போல) ஏற்றுக்கொள்ளலாம். அதையும் கோதுமை ரவை கிச்சடி (பல காய்கறிகளுடன்) என எடுப்பது நல்லது. வேகவைத்த காய்கறிகளுடன், கொஞ்சமாய் ஞவரை அரிசிச் சோறு, மோரும் வெங்காயமும் சேர்த்த கம்பங்கூழ், முடக்கறுத்தான் தோசை, பாலக் கீரை போட்ட புல்கா சப்பாத்தி என இரவு உணவு இருப்பது சிறப்பு.

எந்தத் தானிய மாவாக இருந்தாலும், கூடவே நிறைய நார்ச்சத்துள்ள வேகவைத்த காய்கறியைச் சேர்க்கும்போது, இரவில், தானியத்தின் சர்க்கரை, ரத்தத்தில் வேகமாகக் கலக்காது.

இரவு உணவுக்குப் பின்னர்?

இரவு உணவுக்குப் பின், மெல்ல ஒரு குறு நடை (20-30 நிமிடங்கள்) நடப்பது நன்று. சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவது, ‘டெஸர்ட்’ எனச் சொல்லி, உணவுக்குப் பின்னர் பழத்துண்டுகள், இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லதல்ல. பழங்களை உணவுக்கு முன்னதாக மாலை 6-7 மணி போல சாப்பிட்டுவிடுவது நல்லது. அதிலும் மா, பலா, வாழை இரவில் கண்டிப்பாக வேண்டாம்.

சர்க்கரை வியாதியின் வலியில்லா மாரடைப்புகள் பெரும்பாலும் அதிகாலையில் ஏற்படுவதற்கு, இரவில் சாப்பிடும் மதுவும் பெருவிருந்தும் மிக முக்கியக் காரணம். விசேஷ நிகழ்வுகளில் அவசியமில்லாத, அளவற்ற இனிப்புகளுடன் கொண்டாடப்படுவது இங்கே பெருகிக்கொண்டிருக்கிறது.

இலையில் மூன்று இனிப்பைப் பரிமாறுவதும், பெருவாரியான உணவைத் தூர எறிவதும் நாம் சமூகத்துக்குச் செய்யும் பெருங்குற்றம். வளர்ந்த ஒரு நாட்டில், ஒரு நாள் தூர எறியும் உணவின் அளவு சகாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள 21 ஏழை நாடுகளின் ஒரு வருட உணவாம்!

விருந்தில் வீட்டுச் சாப்பாடு!

சர்க்கரை நோயாளிகள், ‘பஃபே’ உணவை இரவில் தவிர்ப்பது நல்லது. கொடுத்த காசுக்கு அல்லது செய்த மொய்க்கு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் என 15 வகையில் ஒவ்வொன்றிலும் ஒரு கரண்டி என எடுத்தாலும் முடிவில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நாம் சாப்பிட்டிருப்பது சுமார் 1,100 கலோரியைத் தாண்டியிருக்கும். இனிப்பு நோயர், திருமணத்துக்குப் போனால், ‘நல்லா இருங்க’ என மணமக்களிடம் கைகுலுக்கிவிட்டு, சமர்த்தாக வீட்டில் வந்து சாப்பிடுவது சாலச் சிறந்தது.

கடற்கரை வரை இருசக்கர வாகனத்தில், மனைவியுடன் காதல் நிரம்பப் பயணித்து, சற்று அலையோடு விளையாடி, காற்றோடு உறவாடி, கொஞ்சம் கடல் மணலில் ஓடி, கடைசியாக வீட்டில் சுட்ட சோளப் பணியாரத்தை, கெட்டியான காரச் சட்னியோடு தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள்… அடடா, ஏகத்துக்கு இனிக்கும். ரத்தத்தில் இல்லை, மனத்தில் மட்டும். ஆம் நண்பர்களே… விருந்தில் இனிக்க வேண்டியது நா அல்ல. மனசு!

(தொடரும்)

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

மனசு போல வாழ்க்கை 23: லயிப்பதே மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

Published : 25 Aug 2015 12:06 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 



மன வளம்தான் மண் வளத்தை தீர்மானிக்கிறது. இயற்கையை வணங்கும் மனம் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும். இயற்கையைப் பயன்படுத்த நினைக்கும் மனம் இயற்கையை விலக்கி செயற்கையான வாழ்க்கையை நாடிச்செல்லும். காடுகள் அழிந்ததும் கட்டடங்கள் பெருகியதும் மனிதரின் மன மாற்றங்களினால்தானே!

மன விகாரம்

புற உலகில் நீங்கள் காணும் மாற்றங்கள் யாவும் அக உலகில் நிகழ்ந்த மாற்றங்களினால்தான். நீங்கள் பார்க்கும் அனைத்தும் நீங்கள் உருவாக்கியவை. அல்லது பிறர் உருவாக்கும்போது நீங்கள் சம்மதம் தெரிவித்தவை. நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் பங்கு உள்ளதை உணருங்கள். அதனால் எதையும் குறை சொல்வதில் பயன் இல்லை.

“எல்லாம் மோசம்; எதுவும் சரியில்லை” என்று சொல்வதும் ஒரு மன விகாரம்தான். உலகில் அனைத்தும் உள்ளது. எதைப் பார்ப்பது, என்ன செய்வது என்பதெல்லாம் நம்மிடம்தானே உள்ளது?

மாற்றி யோசி

என் நண்பர் ஒருவர் இளையராஜாவின் தீவிர ரசிகர், என்னைப் போலவே. இளையராஜாவின் அதிகம் பிரபலமாகாத அற்புத பாடல்கள் நிறைய உள்ளன என்று ஒருநாள் பேசினோம். பின் ஒரு 20, 25 பாடல்களை பட்டியல் போட ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிடத்தில் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் முழுவதுமாக நனைந்தோம். எல்லாம் கற்பனையில் தான். எல்லா பாடல்களையும் கேட்ட திருப்தி.

அவர் ஒரு பிரச்சினை பற்றி விவாதிக்க வந்தவர் அவர் எழுந்து போகும்போதும் அந்தப் பிரச்சினை எள்ளளவும் குறைவில்லை. ஆனாலும் உற்சாகமாக கிளம்பிப்போனார் அவர். இது தான் மனதின் செயல்பாடு.

மிக மோசமான மன நிலையிலும் எண்ணத்தை திசை திருப்பி ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும். மாற்றி யோசிக்க முடியும். முயற்சிதான் முக்கியம். பிரச்சினை முடிந்த பின்தான் ஆறுதல் கிடைக்க வேண்டும் என்றால் இந்த உலகில் யார் நிம்மதியாக நடமாட முடியும்? அப்படியே ஒரு பிரச்சினை முடிந்தாலும் அடுத்தது வராமல் போய்விடுமா என்ன?

இசையும் கவிதையும் ஓவியமும் விளையாட்டும் மனிதனை எந்த நேரத்திலும் இளக வைக்க உதவுகின்றன. மனம் ஒன்றிச் செய்யும் எந்த செயலும் மனக்கவலையிலிருந்து விடுதலை அளிக்கக் கூடியவை. இதை இப்படிக் கூட புரிந்துகொள்ளலாம்: மனக் கவலையிலிருந்து விடுதலை பெற ஏதாவது ஒரு செயலை மனம் ஒன்றிச் செய்தாலே போதும்! இதைத் தான் ‘mindfulness’ என்று புத்த மதம் சொல்கிறது. மனம் லயித்துச் செய்யும் காரியம் மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

உழைப்பின் பயன்

ஒரு பிரச்சினை மனதை எதிர்மறையாகக் குவிக்கிறது. அதைச் சிதறடிக்க ஒரு சிறு நேர்மறை விஷயம் போதும். ஒரு குழந்தையின் சிரிப்போ, நகைச்சுவை துணுக்கோ, அந்நியரின் அர்த்தமற்ற செய்கையோ கூட போதும். அது பிரச்சினையிலிருந்து உங்கள் மனதை நொடிப்பொழுதில் வெளியே கொண்டு வந்து விடும்.

ஒரு கணவனும் மனைவியும் பெரிதாக சண்டை போட்டுக் கொண்டிருக்க, அழைப்பு மணி கேட்கிறது. கணவன் முகத்தை சரி செய்து கொண்டு போய் பார்க்கிறான். அடுத்த வீட்டு தம்பதி பொழுது போகாமல், அரட்டை அடிக்க இங்கு உரிமையாக கதவைத் தட்டுகிறார்கள். முகம் கழுவி வந்த மனைவி பிரமாதமாக உபசரிக்கிறாள். கணவனும் எதுவும் நடக்காதது போல மிக உற்சாகமாக நடந்து கொள்கிறான். சில நிமிடங்களில் சமூக உறவுகளுக்காக சொந்த சோகம் கிடப்பில் போடப்படுகிறது. இதுதான் நிஜம்.

இதில் இன்னொரு உண்மையும் பொதிந்துள்ளது. சமூக உறவுகள் நிறைய உள்ளவர்களுக்கு சொந்த சோகங்களை கையாள்வது எளிமையாகிறது. அதே போல உடல் உழைப்பு அதிகம் இருந்தாலும் மன உளைச்சல் அதிகம் தங்காது.

சந்தோஷமாக நடி

ஒரு இந்திப் படத்தில் வந்த உரையாடல் இது.

“நான் என் கணவனை பிரிய முடிவு செய்து பெட்டியைக் கட்டி வைத்து விட்டு அவனிடம் சொல்லிவிட்டுப் போகத் தயாராக இருந்தேன்”

“அப்புறம் என்னாயிற்று?”

“அவன் வருவதற்குள் தூங்கிப்போய்விட்டேன். மறு நாள் எழுகையில் மனம் மாறிவிட்டது!”

இப்படித்தான் பல தீவிர முடிவுகள் கூட அற்பக் காரணங்களால் கலைக்க கூடியவை. கோபத்தில், பயத்தில், அவசரத்தில் நாம் எடுக்க நினைக்கும் முடிவுகளைச் சற்று தள்ளிப் போட்டால் பக்குவமான முடிவுகள் எடுக்க முடியும்.

சரியான மன நிலையில் இல்லாத போது முடிவுகள் எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். அந்த மன நிலையிலிருந்து தற்காலிகமாக வெளியே வர எடுக்கும் முயற்சிகள் கூட நல்ல பலன் தரும்.

சந்தோஷமாக இருக்க வழி சந்தோஷமாக இருப்பது போல நடிப்பது கூடத்தான். Fake it till you Make it!

பெரும் பிரச்சினையா? அதே எண்ணமாக இருக்கிறதா? ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். செய்வதற்கு எதுவுமில்லை; என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்பது மட்டும்தான் வேலை என்றால் முதலில் மனதை திசை திருப்புங்கள்.

மனமும் நிலா போலதான்

பெரிதாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும் பிடித்ததைச் செய்யுங்கள். பழைய அலமாரியை சுத்தம் செய்யுங்கள். முடி வெட்டிக்கொள்ளுங்கள். நிறைய நேரம் நிதானமாக குளியுங்கள். வண்டி ஓட்டும் போது பாட்டு பாடிக்கொண்டே செல்லுங்கள். காமெடி சீன் பாருங்கள். நீண்ட நாட்கள் பேசாத நண்பரிடம் பேசுங்கள். யூ டியூப் அல்லது டெட் வீடியோ பாருங்கள். தனி வாகனத்தில் செல்வோர் பொது வாகனத்தில் சென்று வாருங்கள். சுடோகு போடுங்கள். இது வரை செய்யாத ஏதாவது செய்யப்பாருங்கள். மனம் மாறும்.

மதி என்றால் நிலா என்றும் பொருள். மனம் என்றும் பொருள். மனமும் நிலா போலத்தான். வளரும். தேயும். முழுதாக இருக்கும். ஒன்றுமில்லாமல் போகும். ஒரு நாள் இருப்பது போல மறு நாள் இருப்பதில்லை. இந்த நிலையில்லாத தன்மையை புரிந்து கொண்டால் விதியை மதியால் வெல்வது சாத்தியமே!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


அடங்கா மாணவர்கள்; தீர்வா தண்டனைகள்?

Published : 11 Sep 2018 12:34 IST

முகமது ஹுசைன் 




பொதுவெளியில் மாணவர்களின் அத்துமீறல்களும் வன்முறைகளும் எந்த அளவு கண்டிக்கத்தக்கதோ அதே அளவு கண்டிக்கத்தக்கது தண்டனை என்ற பெயரில் அவர்களுக்குப் பொதுவெளியில் கொடுக்கப்படும் அவமானங்களும். தண்டனையின் நோக்கம் தவறின் வீரியத்தைக் குறித்த புரிதலை உண்டாக்குவதும்தான்.

அந்தப் புரிதல் மீண்டும் அந்தத் தவறைச் செய்யாதபடி மாணவரை மேம்படுத்தும். இங்கே பெரும்பாலான தண்டனைகள் புரிதலுக்குப் பதில் அவமானத்தையும் பயத்தையும் அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. 18 வயது மாணவனைக் குற்றவாளி என்று பொதுவெளியில் அறிமுகப்படுத்துவதும் அடித்து உதைத்து அவமானப்படுத்துவதும், அதற்குப் பின்னான அவன் வாழ்வை அழித்துவிடாதா? அவனை ஒரு முழுநேர குற்றவாளி ஆக்கிவிடாதா?


‘பஸ் டே’யா ‘வன்முறை நாளா’?

பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் வன்முறைகள் சென்னை வாசிகள் அறிந்த ஒன்று. 2011-ல் நடந்த ’பஸ் டே’ சம்பவத்தின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறையின்போது, கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களைக் காவல்துறை தாக்கியது. கடந்த ஜூன் 18 அன்று கொண்டாடப்பட்ட ‘பஸ் டே’யில் சில மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு காவல்துறையால் அவமானப்படுத்தப்பட்டனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு பூங்காவில் இருந்த இளம் ஜோடிகள் எல்லாம் கைதுசெய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டனர். மாணவிகள் மட்டும் அவர்களுடைய பெற்றோர்களிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டனர். இன்று அந்த மாணவிகளின் நிலையோ அந்த ஆண்களின் நிலையோ என்ன என்பது யாருக்கும் தெரியாது.

வைரலான வீடியோ?

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 அன்று மாநகரப் பேருந்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் இரண்டடி நீளப் பட்டாக்கத்தியுடன் படிக்கட்டுகளில் பயணித்துள்ளனர். படியில் தொங்கியபடி தாங்கள் படிக்கும் கல்லூரிக்கு ‘ஜே’ என்று கோஷமிட்டபடி அவர்கள் பயணித்துள்ளனர். மேலும், சாலையில் சென்றோரை மிரட்டும் வகையில் சாலையில் பட்டாக்கத்தியைத் தீட்டியபடி தீப்பொறி பறக்கச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வின் காணொலி வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவியது.

தொடரும் அவமானங்கள்

காவல்துறை, 5 மாணவர் களைக் கைதுசெய்தது. கைதுக்குப் பின் அந்த மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்களால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உணர்வுரீதியாகவும் தாக்கப்பட்டனர். அவர்கள் அழுது அரற்றினர். அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சிக் கதறினர். இவை கேமராவின் அகன்ற விழிகளுக்கு முன்பாக அரங்கேறின.

சடுதியில் அவர்களின் கெஞ்சல் வாட்ஸ் அப்பில் பரவியது. “அவனுங்க எல்லாம் மாணவர்களே இல்லை, பொறுக்கிப்பசங்க, பஸ்ஸுல பாட்டுப் பாடறது, புட் போர்டு அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் அவங்க வேலை. படிக்கிற வயசுலேயே கத்திய தூக்குற இவனுங்களை எல்லாம் போலீஸ் சும்மா விடக் கூடாது” என்பதே அதைப் பார்த்த பலரின் கருத்தாக எதிரொலித்தது. மாணவர்களின் அத்துமீறல்களும் அதற்காகப் பொதுவெளியில் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் இன்றும் தொடர்வதை இந்த இரண்டு வீடியோக்கள் உணர்த்துகின்றன.

மாணவர்களின் பிரச்சினை என்ன?

சிறு வயது முதலே குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் தொடர்களும் திரைப்படங்களும் பலம் மிகுந்தவனையே நாயகனாகச் சித்திரிக்கின்றன. சண்டைக் காட்சி இல்லாத படம் அவர்களுக்குச் சலிப்பூட்டுவதாக இருக்கிறது. தன்னை நாயகனாக மாற்றுவதற்கு, அறிவுக்குப் பதிலாக அவன் பலத்தையே நம்புகிறான்.


பிருந்தா ஜெயராமன்

அபாயகரமான கூட்டணி

கல்லூரிப் பருவத்தில் மாணவர் களுக்குப் பெரும்பாலும், குடும்பத்தைவிட நண்பர்களே பிரதானமாகிவிடுகிறார்கள். நட்புக்காக எதையும் செய்ய அவர்கள் துணிகிறார்கள். ஒரு மாணவர் கல் எறிந்தால், மற்ற மாணவர்களும் கல் எறிகிறார்கள். ’நாயகனாக மாற வேண்டும்’ என்ற உந்துதலும் ’நட்பே பிரதானம்’ என்ற நிலைப்பாடும் ’குழு மனப்பான்மையும்’ மிகவும் அபாயகரமான கூட்டணி’ என்கிறார் மனநல மருத்துவர் பிருந்தா ஜெயராமன்.

“17, 18 வயதுகளில் இருக்கும் மாணவனுக்கு முன் பகுதி மூளை (Prefrontal Cortex) முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. இதனால் எதையும் அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் பக்குவமும் தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை. அதேநேரம் அவர்களுக்கு மூளையில் இருக்கும் Amygdala முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் உணர்ச்சிப் பிழம்பாக இருப்பார்கள். உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் எதையும் யோசிக்காமல் அவர்கள் செயல்படுவதன் காரணம் இதுதான்” என்கிறார் அவர்.

யார் தவறு இது?

சரி, தவறு என்று எதையுமே முழுமையாக முத்திரைகுத்திவிட முடியாது. நேற்று குற்றமாகக் கருதப் பட்டது இன்று சட்டரீதியாக நியாயமாக நிறுவப்படும்போது உலகம் அதைக் காலப்போக்கில் அங்கீகரிக்கும், ஏற்றுக்கொள்ளும். ஆக எது சரி, எது தவறு என்பதைச் சூழலே தீர்மானிக்கிறது.

அப்படியிருக்க, ஒரு சிறுவனை, இளைஞனைக் குற்றவாளி எனச் சொல்லிப் பொதுவெளியில் அசிங்கப்படுத்துவதும் முத்திரை குத்துவதும் எந்த வகையில் நியாயம்? இந்தச் செயல் அந்த மாணவனை நிஜக் குற்றவாளியாக்கிவிடும் ஆபத்து கொண்டது. சிறார் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பியவர்களின் இன்றைய நிலை இதைத்தான் சொல்கிறது.

நாமும் பொறுப்பு ஏற்போம்

மாணவர்களின் செயல்களுக்கு அவர்களை மட்டும் பொறுப்பாளராக்குவது முறையல்ல; பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகத்தில் இருக்கும் நாமும் அவற்றுக்குப் பொறுப்பாளர்களே. வளர்ப்பின் குறைகளும் போதிப்பின் போதாமைகளும் சமூகத்தில் நீர்த்துப்போன ஒழுக்க விதிகளும் மாணவர்களைத் தவறு செய்யத் தூண்டிவிடும் ஊக்கிகள் என்பதை நாம் மறுக்க முடியாது.

அடித்து உதைத்து அவர்களின் வாழ்வைச் சிதைப்பதற்குப் பதில், அன்புடன் அணைத்துப் பக்குவமாகப் பேசி, அவர்களின் வாழ்வை நாம் செழுமையாக்குவோம், மேன்மையாக்குவோம். நம் நாட்டின் வருங்காலத் தலைவர்களை வார்த்தெடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
வியர்வை வடிவில் வெளியேறும் ரத்தம்! - கிருஷ்ணகிரி அர்ச்சனாவுக்கு என்ன நேர்ந்தது?

ஜெ.நிவேதா

``ஐந்து நாள்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே, அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும்" குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி அர்ச்சனாவுக்கு உடலிலிருந்து வியர்வை வடிவில் ரத்தம் வெளியேறும் பிரச்னை இருப்பதாகச் சொல்லப்பட்டது. உள்ளூர் மருத்துவர்களால் ரத்தம் வெளியேறுவதற்கான காரணத்தைக் கண்டறியமுடியாததால் சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார் அர்ச்சனா.



அர்ச்சனாவின் தற்போதைய நிலை குறித்து, அவரின் தந்தை நாகராஜிடம் பேசினோம். ``ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒருதடவை அர்ச்சனாவுக்கு வியர்வை வெளியேறுறமாதிரி காது, கண், மூக்கு பகுதிகளைச் சுற்றி ரத்தம் வெளிவந்துச்சு. சில தனியார் மருத்துவமனையில காண்பிச்சோம். ஆனா, என்ன பிரச்னைன்னு கண்டுபிடிக்க முடியலை. எங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைப்படி, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில அர்ச்சனாவை புதன்கிழமை அட்மிட் பண்ணோம். அன்னைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லாதான் போச்சு. அடுத்தநாள் வியாழக்கிழமை இரவுல மட்டும், பதினேழு முறை கண், காது, மூக்கு, கைன்னு உடம்போட எல்லா பக்கமுமிருந்து ரத்தம் வந்துகிட்டே இருந்துச்சு. வெள்ளிக்கிழமை காலையிலும் சிலதடவை ரத்தம் வந்துச்சு.

`இப்படி ரத்தம் வெளிவரதுனால, பாப்பாவோட உடம்புல எந்தப் பாதிப்பும் ஏற்படலை, அதனால பயப்படாதீங்க'ன்னு டாக்டர்லாம் சொல்லியிருக்காங்க. ஒருகட்டத்துல, 'ரத்தம் வந்தா நீங்களே துடைச்சுவிட்டுக்கோங்க'னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அவளும், ரொம்ப நார்மலா இருக்கா. நல்லா விளையாடுறா, சாப்பிடறா, தூங்குறா... இன்னைக்கு (சனிக்கிழமை) காலையிலருந்து ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், மூளைக்கான பரிசோதனைகள்னு சொல்லி நிறைய பரிசோதனைகள் செஞ்சாங்க. குழந்தைக்கு மட்டுமில்லாம, எனக்கு, என் மனைவிக்கு, எங்களோட மற்ற இரண்டு மகள்களுக்கும் பரிசோதனைகள் செஞ்சாங்க. எல்லாமே நார்மல்னு சொல்லிட்டாங்க. இப்பதான், ஓரளவுக்கு திருப்தியா இருக்கு. திங்கள்கிழமையும் ஏதோவொரு பரிசோதனை இருக்காம். எல்லாம் முடிஞ்சபிறகு, ரிப்போர்ட்டை பார்த்துட்டு, `பாப்பாக்கு வந்திருக்கிறது என்ன நோய்'னு உறுதியா சொல்லறதா சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு முறை அவ உடம்புல இருந்து ரத்தம் வரும்போதும், எங்களுக்கு உயிரே போய்டுது. ஒரே ஒரு ஆறுதல் அவளுக்கு வலி, சோர்வு, ரத்த எண்ணிக்கை குறைவுன்னு எந்தப் பிரச்னையும் இல்லை. திங்கள்கிழமைக்காக காத்திருக்கோம்" என்கிறார் ஏக்கத்துடன்.

   அர்ச்சனாவின் நிலை குறித்து குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் அரசர் சீராலரிடம் பேசினோம். ``அர்ச்சனா இப்போது கண்காணிப்பில் (Observation) இருக்கிறாள். ஐந்து நாள்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே, அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும். சிலருக்கு வியர்வை வெவ்வேறு நிறத்தில் வெளிவரும். க்ரோம்ஹிட்ரோஸிஸ் (Chromhidrosis) என்ற பிரச்னையாக இது இருக்குமோ என்றும் பரிசோதிக்கிறோம். 'த்ரோபாஸ்டினியா' (Thrombasthenia) என்ற பாதிப்பாக இது இருக்கலாம் என கிருஷ்ணகிரியில் சிகிச்சை செய்த சிலர் தெரிவித்துள்ளார்கள். எனவே, அதற்கான பரிசோதனைகளையும் செய்ய இருக்கிறோம். அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு, அடுத்த வார தொடக்கத்தில் என்ன பாதிப்பு என்று உறுதிசெய்யப்படும்" என்றார்.



நம் முதல் நண்பன்... இன்னும் நம்முடன் நட்போடு இருக்கிறாரா?!

சக்தி தமிழ்ச்செல்வன்

இப்போதும் நமக்கு மனதில் ஏதாவது குழப்பங்கள் வரும் போது, நாம் முதலில் அழைப்பது நமக்கு நெருக்கமான நண்பருக்கு தானே.



தனிமை நிரம்பிய
ஆண்களின்
பிற்பகுதி வாழ்க்கையில்
நண்பர்கள் தருகிற
வெளிச்சத்தை
வேறு யாராலும் தர முடிவதில்லை!

- வண்ணதாசன்.

உங்கள் வாழ்வின் சிறுபிராயத்தில் அறிமுகமான உங்களின் முதல் நண்பனை/தோழியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எந்தக் கனவுகளும், எதிர்பார்ப்புகளும், வாழ்வு குறித்த பயமுமற்ற அந்தச் சிறுவயதில் உங்களின் எல்லா முழுமுதற் சேட்டைகளிலும் உடனிருந்த அந்த நண்பன், இப்போது உங்களுடன் தொடர்பில் இருக்கிறாரா? சிலருக்கு தொடர்பில் இருக்கலாம். பலருக்கும் அந்த நண்பனின் பெயர் சட்டென நினைவில் வராமலிருக்கலாம்.




சமூக வலைதளங்களின் சாத்தியங்கள் அதிகமாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும், அவரை உங்களால் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். அந்த நண்பரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல்கூடபோயிருக்கலாம். காலத்தின் பயணத்தில் பின்னோக்கி விரையும் மரங்களைப்போல பல உறவுகள் கணநேரத்தில் மறைந்துவிடும் துர்ப்பாக்கியமான காலமிது.

பால்யத்தில் தொடங்கிய உறவுகளின் கண்ணி, காலத்தால் அறுபடாமல் பத்திரப்படுத்திவைத்திருக்கும் வரம்பெற்ற பாக்கியவான்கள் வெகுசிலரே. சக்கரம் கட்டிக்கொண்டு காலம் விரைகையில் யதேர்சையாக `ஹேய்... நீ அவன் (அவள்)தானே?!' எனச் சிலாகித்து சில நிமிடம் உரையாடிப் பிரிந்தவுடன், அன்றைய இரவின் சாளரங்கள் முழுக்க தொலைந்த நினைவுகளின் பனிக்காற்று நிறைந்து கண்கலங்கும்தானே. மகிழ்ச்சியும் அழுகையும் ஒருசேர ஆக்கிரமிக்கும் வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்றல்லவா அது. வாழ்வில் சரிபாதிக்கும்மேலாகக் கடந்துவிட்ட நபர் ஒருவர், தன்னுடைய 5 வயதிலிருந்து 10 வயது வரை நண்பராக இருந்து பிரிந்த ஒருவரை 60 வருடம் கழித்துச் சந்தித்திருக்கிறார்.



சென்னையின் முதியோர் இல்லம் ஒன்றில் நடந்த சம்பவம் அது. பெற்றோர்களாகிவிட்ட தங்கள் பிள்ளைகளால் அனுப்பப்படும் பணத்தில் தங்களின் எஞ்சிய காலத்தை அசைபோடும் தாய்-தந்தையர்களால் அந்த இல்லம் நிறைந்திருக்கிறது. தனிமையும் கடந்து வந்த வாழ்வு பற்றிய நினைவுகளும்தான் முதியோர் இல்லவாசிகளின் சொத்து. ஏதாவதொரு பத்திரிகையை அசைபோட்டபடி தொடங்குகிறது அவர்களது நாள். பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் புதிதாக அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது பத்திரிகைகளில் தென்படும் படங்களைப் பார்த்தபடி பக்கங்களைக் கடக்கிறார்கள். அவர்களின் மூன்று வேளை உணவுகூட ஏதோ மாத்திரை விழுங்குவதற்கான முன்னேற்பாடாக மட்டுமே மாறிப்போனது. உடன் இருப்பவர்களிடம் தங்களின் சொந்தக் கதையை மாறி மாறிப் பகிர்ந்துகொள்கின்றனர். அதன்பொருட்டு ஒருவரின் கதை மற்றவருக்கும் மனப்பாடமாகிவிடுகிறது. பக்கத்து அப்பார்ட்மென்டில் எங்கேயாவது குழந்தைகள் சிரிக்கும் சத்தம் கேட்டால், விமானத்தைப் பார்க்கும் தென்கோடிக் கிராமத்து சிறுவன்போல பரவசமாகிறார்கள். அப்படி தனது வாழ்நாளைக் கழித்து வந்தவர், புதிதாக வந்த ஒரு முதியவரிடம் தன் கதையைக் கூறியிருக்கிறார். அவருடன் ஏற்பட்ட ஏதோ இனம்புரியாத ஓர் இணக்கம் அவரிடம் தொடர்ந்து கதைக்கவைத்திருக்கிறது.



இருவரும் தங்கள் கதைகளைப் பேசியதில் இருவரின் உரையாடலிலும் ஒரே கிராமத்தின் புழுதிவாசம் நிறைந்திருந்ததை உணர்ந்தனர். சிறுவயதில் உற்ற நண்பர்களாக ஊருணிகளில் மீன் பிடித்துத் திரிந்த சித்திரம் அவர்கள் கண்களில் கண்ணீராய்க் கசிந்தன. மீசை முளைக்காத வயதில் கடைசியாகச் சந்தித்த நண்பனின் நரையைப் பார்த்துக் கிண்டலும் கேலியுமாக முகச்சுருக்கங்களுக்கு மத்தியில் புன்னகை அமர்ந்துகொண்டது. அன்பு, பாசம் என எதுமின்றி மாதாமாதம் இ.எம்.ஐ கட்டுவதைப்போல் வந்து சந்தித்துவிட்டு `பிளாஸ்டிக்' புன்னகையோடு கடந்துபோகும் உறவுகள் சூழ வாழும் மனிதருக்கு அந்த நண்பனின் உள்ளங்கை கடத்திய வெப்பம் அவரின் வாழ்நாள் நிம்மதியை மீட்டுக்கொடுத்தது.



இருவரும் தங்கள் தினங்களை நிறைவாகக் கடப்பார்கள் என்ற ஆசுவாசம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. அந்த முதியோர் இல்லத்தில் பலரின் முகத்திலும் ஏதோ ஒரு நிறைவின்மை தென்பட்டது. ஒரு நாளில் நாம் சந்திக்கும் பலரின் முகங்களின் அதே போன்றதொரு நிம்மதியற்றிருப்பதைப் பார்க்க முடியும். மனதின் சுவர்களில் படிந்திருக்கும் தீரா சோகங்களின் வெளிப்பாடுதான் முகத்தில் நிம்மதியின்மையைக் கொடுக்கும். மனதுக்கு நெருக்கமான யாரிடமாவது பகிராத வரை அவை மனதை அழுத்தி வருத்திக்கொண்டேதான் இருக்கும். முதியவர்களுக்கு இந்த நிலை இன்னும் கொடுமையானதாக அமையும்.

இப்போதும் நமக்கு மனதில் ஏதாவது குழப்பங்கள் வரும்போது, நாம் முதலில் அழைப்பது நமக்கு நெருக்கமான நண்பரைத்தானே. அதுபோலவே சிறுவயதில் நம் நண்பனிடமே பகிர்ந்திருப்போம். அந்த நண்பனிடம் இப்போது நாம் பகிர சொற்கள் உண்டுதானே.

சிங்கப்பூர் - திருச்சி அன்றாட நேரடி விமானச் சேவை - வரும் ஞாயிறன்று தொடங்குகிறது IndiGo 


12/9/2018 12:03 Update: 12/9/2018 14:04


சிங்கப்பூர், திருச்சி ஆகிய நகர்களுக்கு இடையே நேரடி விமானச் சேவையை IndiGo விமான நிறுவனம் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.

அன்றாடம் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அது சேவை வழங்கும். சிங்கப்பூரிலிருந்து பிற்பகல் 2 மணி அளவில் திருச்சிக்கு Indigo விமானம் புறப்படும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.55 மணி அளவில் விமானம் அங்கு சென்றடையும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணி அளவில் திருச்சியிலிருந்து புறப்படும் விமானம், சிங்கப்பூருக்குப் பின்னிரவு 1.45 மணி அளவில் வந்து சேரும்.

மேல் விவரங்களுக்கு Indigo இணையத்தளத்தை நாடலாம்.



சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியின் இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மதுபானம் - விமானச் சேவை ரத்து 


16/9/2018 8:56

விமானியின் இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மதுபானம் இருந்ததால் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலந்திற்குச் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச்சேவை ரத்து செய்யப்பட்டது.

உள்ளூர் நேரப்படி நேற்று (செப்டம்பர் 16) காலை 7 மணிக்கு SQ247 விமானச்சேவை மெல்பர்னிலிர்ந்து (Melbourne) கிளம்பவிருந்தது.

பிற்பகல் 12.20 மணிக்கு அது வெலிங்டனைச் (Wellington) சென்றடையவிருந்தது.

ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையம், விமான ஊழியர்களிடம் திடீர் இரத்தப் பரிசோதனை நடத்துவது வழக்கம். அந்தவகையில், SQ247 விமானச்சேவையின் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது விமானியின் இரத்தத்தில் மதுபான அளவு அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானத்தின் இருவழிச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

விசாரணைகள் தொடரும் வேளையில் அந்த விமானி தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் அதிருப்தியைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். விமானச்சேவை ரத்து செய்யப்பட்டது குறித்துத் தாமதமாகத் தகவல் அளிக்கப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.



HC orders compensation of Rs. 8 lakh for accidental fall from local train 

Legal Correspondent 

 
CHENNAI, September 15, 2018 00:00 IST

Holds that the victim’s family cannot be expected to produce his ticket

The Madras High Court has directed Southern Railways to pay a compensation of Rs. 8 lakh to the family of a passenger who died after an accidental fall from an electric train between Saidapet and Mambalam railway stations in Chennai in 2013.

The court held that the family could not be expected to produce his ticket (to establish his bona fide as a passenger) and that it was up to the railways to prove that he was a ticketless traveller.

Justice M.V. Muralidaran passed the order while allowing an appeal preferred by legal heirs of the deceased Srinivasan who was travelling between Tambaram and Beach stations on the fateful day. The appeal was filed against dismissal of their claim petition by the Railway Claims Tribunal, Chennai Bench on January 6, 2015 for want of proof that he was a bona fide traveller.

The judge agreed with the appellants’ counsel R. Parthasarathy that only the deceased would be in a better position to state whether he had purchased a ticket or not and that the family could not be denied the statutory compensation just because a ticket was not found in his pocket though it contained Rs. 2,510 in cash.

Stating that a person who had so much of cash in pocket would not have travelled without purchasing a ticket that would have cost Rs. 15 to Rs. 20, the judge said the general presumption of every passenger being a bona fide traveller would have to be thwarted only by the railways by producing adequate evidence to prove that he/she had not purchased a ticket.

Facts and circumstances

“When a person dies in an accident by falling down from train, it is not possible for the legal heirs to produce the ticket or valid authority to travel in the train. Depending upon the facts and circumstances of a given case, the Tribunal and/or the Appellate Court infers about the deceased being a bona fide passenger.

“In the present case, facts and circumstances prima facie indicate that the deceased was a bona fide passenger who lost his life in the railway accident,” the judge observed. Further, he took note of the fact that the quantum of compensation for accidental deaths during train travel had been increased from Rs. 4 lakh to Rs. 8 lakh with effect from January 1, 2017.

The present appellants were entitled to the enhanced amount along with interest at the rate of 7.5% per annum from the date of claim, he ordered.
IndiGo launches daily service to Singapore 

Special Correspondent 

 
Tiruchi, September 16, 2018 00:00 IST

IndiGo, on Saturday launched non-stop daily services on the Tiruchi-Singapore-Tiruchi sector. This is the first international flight service of the private airline, which is already operating to domestic destinations from the city.

Flight (No.6E-43) will depart from Tiruchi at 6.40 p.m. and reach Singapore at 1.45 a.m.

In the return direction, flight (No.6E-44) will depart from Singapore at 2 p.m. and reach Tiruchi at 3.55 p.m. The airline would operate an Airbus A320 aircraft on the sector.

The new flights are designed to cater to business and leisure travellers who are constantly on the lookout for new and affordable flying options. Customers can plan their travel by booking tickets through our websitewww.goindigo.inThe airline also launched a service on the Kolkata-Singapore-Kolkata sector on Saturday.

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்!!!

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும்,
பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)*

*(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)*

*(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)*

*(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)*

*(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)*

*(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)*

*(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)*

*(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)*

*(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)*

*(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள்
[14/09 4:13 pm] ‪+91 94426 43238‬: அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசாணை எண் 39
அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

Posted by SSTA
Chennai: Thol Thirumavalavan to get doctorate soon

DECCAN CHRONICLE. | A ARUL PALANI

PublishedSep 15, 2018, 1:11 am IST

UpdatedSep 15, 2018, 1:11 am IST

Nearly 150 Dalit family members were converted to Islam.

Thol Thirumavalavan

Chennai: Viduthalai Chiruthaigal Katchi leader Thol Thirumavalavan is a happy man. Recently, Manonmaniam Sundaranar University, Tirunelveli conferred on him a provisional doctorate degree for his study on ‘Religious Conversion of Meenakshipuram Dalits.’ Soon we would be seeing him in an academic robe receiving the doctorate at the university convocation.

Narrating reasons for taking up the issue, he said, “during my college days, I was moved by en masse conversion of Dalits into Islam at Meenakshipuram in 1981. Nearly 150 Dalit family members were converted to Islam. With such incident having attracted nationwide attention, the then BJP leader Atal Bihari Vajpayee had visited the village, while the then Prime Minister Indira Gandhi had deputed a Central minister to the village.

Prolonged caste oppression and police atrocities were the main factors for mass conversion, the Dalit leader said. He said he was wondering why people following Dr Ambedkar had not embraced Buddhism, as done by their leader. “The question was lingering in my mind. Hence I decided to study about the conversions. Initially, I proposed to do research ‘on police atrocities’ that led to the mass conversion.

However, his guide, Dr K Chokalingam, former VC of Manonmaniam Sundaranar University, suggested that he look at the issues from the minds of the people who were converted to Islam. Based on his suggestion, the research work was done, not only as a theoretical sociological study, but also an empirical one.

Amidst his busy schedule, the leader visited Meenakshipuram on three different occasions and met the people personally. He also met local leaders and others in the village.

Before venturing into the study, he consulted large volumes of literature, including legislative assembly proceedings, official, police and media reports. He met all the family members and handed over questionnaires and their response and reports helped him to complete the work, the VCK leader noted.

In September last, Thirumavalavan made two presentations on ‘Religion and conversion’ and ‘Victimological perspective of Meenakshipuram conversion’ before faculty members and academicians in Madurai Kamaraj University.

After attending the public vivo-voce at the University on August 24, the MSU has issued the PhD provisional certificate to him for the degree of doctorate of philosophy in Criminology subject.

Thirumavalavan also pointed out that he was awarded the doctoral degree by the University for his methodical research on the religious conversions at Meenakshipuram. In his study, he concludes, “conversions in Meenakshipuram changed the livelihood of the people, both economically and socially.”

“After 37 years, their life has been changed for better. They are economically better and majority of them have concrete houses. I also found the second generation of the converted families to be treated as born Muslims,” the leader said.

Denying the role of Arab money in the conversions, he said “the families have come out of the social stigma and stratification imposed on them by the caste system”. “The converted men are called as ‘bhai’ by others, which gives a sense of equality and dignity for them,” Thirumavalavan added.
Rajiv Gandhi assassination convicts' release issue not referred to Centre: Tamil Nadu Raj Bhavan
The Governor Banwarilal Purohit said a decision on the issue would be taken in a just and fair manner in accordance with the Constitution.

Published: 15th September 2018 12:52 PM



Rajiv Gandhi assassination case convict A G Perarivalan (File Photo)

By PTI

CHENNAI: Tamil Nadu Governor Banwarilal Purohit denied Saturday reports in a section of media that he had forwarded to the Centre the state government's recommendation to release all the seven convicts in the Rajiv Gandhi assassination case.

The Governor said a decision on the issue would be taken in a "just and fair manner" in accordance with the Constitution.

"A section of media has been reporting that in the matter of the release of the convicted prisoners undergoing life imprisonment for involvement in the assassination of former Prime Minister Rajiv Gandhi, a reference has been made to the Ministry of Home Affairs, Government of India," a statement issued by the Raj Bhavan said.

Also, some television channels have been holding debates on this "assumption", it said.

"It is clarified that no reference has been made to the Ministry of Home Affairs in the matter. The case is a complex one and involves the examination of legal, administrative and constitutional issues," the statement by Joint Director-Public Relations of the Raj Bhavan said.

Noting that voluminous records on the matter were being received from the state government, the Raj Bhavan said court judgments on connected matters were handed over to it only on September 14.

"All efforts will be taken to process the papers scrupulously. Necessary consultation may be carried out, when required, in due course. The decision will be taken in a just and fair manner and in accordance with the Constitution," the Raj Bhavan said.

On September 9, the Tamil Nadu Cabinet had recommended the release of all the seven Rajiv case convicts, including Nalini and her husband Sriharan alias Murugan.

All the seven prisoners are in jail since 1991.

Rajiv Gandhi was killed in a blast at an election rally in Sriperumbudur near here on May 21, 1991.

Fourteen others, including Dhanu, the assassin, were also killed.

Tamil outfits Friday claimed that Purohit had sent the recommendation to the Centre for its advice and Tamizhaga Vazhvurimai Katchi announced a protest demonstration on September 26 in this regard.
UGC invites institutions for Unnat Bharat Abhiyan
The University Grants Commission (UGC) has invited applications from higher education institutions for participation under the second phase of Unnat Bharat Abhiyan.

Published: 15th September 2018 05:44 AM



UGC head office at New Delhi.(Photo | PTI)

By Express News Service

COIMBATORE: The University Grants Commission (UGC) has invited applications from higher education institutions for participation under the second phase of Unnat Bharat Abhiyan.

Unnat Bharat Abhiyan is a flagship programme of Ministry of Human Resource Development (MHRD) to involve higher education institutions in the indigenous development of self-sufficient and sustainable village clusters for inclusive India.

With the intention of enriching rural India, selected institutions are expected to customise the available technology and develop new technology, as per the local needs, and improve the implementation of existing government programmes.

It was aimed at getting most of the country’s higher education institutions in the inclusive development of villages, in collaboration with district authorities, through social, managerial and technological interventions through their faculty and students.

In the recent national conference of vice-chancellors and directors, it was resolved that all higher education institutions would associate themselves actively in implementing UBA, UGC said in a letter to V-Cs of universities.

Institutions can apply online at unnat.iitd.ac.in before September 20. Selection of institutions will be done on challenge mode and results will be announced on October 2. Any recognised higher education institution already involved in development activities, have at least 500 students (excluding first and final year students), and have at least two faculty members involved in development activities in rural areas, are eligible to participate in the UBA scheme. MHRD will assist in training and gap-funding for technical solutions.

In the first phase, 426 technical institutions and 262 non-technical institutions were selected for the programme.

Noble aim

Unnat Bharat Abhiyan is a flagship programme of MHRD to involve higher education institutions inindigenous development of self-sufficient and sustainable village clusters for inclusive India
Tamil Nadu governor Banwarilal Purohit assures a ‘just and fair’ decision
The decision will be taken in a just and fair manner in accordance with the Constitution,” the Raj Bhavan added.

Published: 16th September 2018 04:46 AM 



Tamil Nadu Governor Banwarilal Purohit (File | PTI)

By Express News Service

CHENNAI: A week after the Tamil Nadu Cabinet recommended release of seven convicts in the Rajiv Gandhi assassination case, the office of Governor Banwarilal Purohit on Saturday promised ‘a just and fair decision’ in this issue in accordance with the Constitution.

A Raj Bhavan communication in this regard also denied reports that a reference was made to the Union Home Ministry on the release of convicts. “The records which are voluminous, are being received from the State government, with the connected judgments having been handed over to Raj Bhavan on Friday (Sep 14) only.

The case is a complex one and involves the examination of legal, administrative and constitutional issues. All efforts will be taken to process the papers scrupulously. Necessary consultation may be carried out... in due course. The decision will be taken in a just and fair manner in accordance with the Constitution,” the Raj Bhavan added.
MPhil admissions in Tamil Nadu to drop further as universities adopt 2016 UGC norms

The regulations restrict the maximum number of students a faculty can guide --- however, the quality of research and researchers will improve significantly, say, educationalists.

Published: 15th September 2018 06:07 AM 



UGC head office at New Delhi.(Photo | PTI)

Express News Service

CHENNAI: Enrolment of total number of MPhil students in the State dropped significantly in 2017-18 and is expected to come down even further in 2018-19, as more universities have recently started adopting University Grants Commission Regulations 2016.

The regulations restrict the maximum number of students a faculty can guide. However, the quality of research and researchers will improve significantly, say, educationalists.

There was a reduction of nearly 3,500 MPhil candidates from 2016-17 to 2017-18 in State. With more universities adopting the regulations, the figure may even halve in 2018-19, said P Duraisamy, V-C of University of Madras. “So far, every MPhil guide, was in charge of about eight students,” he said.

According to the 2016 regulations, a research supervisor or co-supervisor who is a Professor, at any given point of time, cannot guide more than three M.Phil and 8 Ph.D scholars. An associate professor as research supervisor can guide up to a maximum of two M.Phil and six Ph.D scholars and an assistant professor as research supervisor can guide up to a maximum of one M.Phil and 4 Ph.D scholars.

The number of M. Phil students in Tamil Nadu rose from 12,832 in 2011-12 to 20,661 in 2016-17 and dropped to 17,179 in 2017-18, after the regulations was passed.

The low enrolment of M.Phil students in Tamil Nadu is likely to reduce the total figure at the national level. This is because the State contributes to nearly half of the enrolments.

Though Tamil Nadu Government College Teachers Association, opposed the regulations stating that it would affect the welfare of first generation graduates, many universities adopted the regulations in the recent past.

“The status of M.Phil courses have become pathetic in the recent past. After NET and SET became mandatory for teaching, MPhil became less attractive for students to pursue. When finding the right faculty becomes difficult, even lesser students will opt for it,” said R Dhamodharan, TNGCTA general secretary. He, however, said he recognised the benefit of the regulations in the long-run, he said.

The norms were designed to improve the amount of time, a guide spent on a student’s research and to prevent guides taking undue credit for students’ work. “Sought after professors often end up guiding a large number of students. But, the regulations will prevent this from happening, said M Anandakrishnan, a former V-C of Anna University.

He said that the impact of regulations may take time before it reflects on the strength of Ph.D students as the tenure is longer. According to the regulations, any regular professor with at least five research publications in refereed journals and any regular associate assistant professor with a Ph.D degree and at least two research publications in reputed journals may be recognised as research supervisor. “These stringent regulations may cause shortage of guides briefly, but will soon improve the quality of research,” he said.

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...