Monday, September 17, 2018

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

Added : செப் 16, 2018 22:28




தேனி: தேனி வடபுதுப்பட்டி மகாலட்சுமி கோயிலில் பக்தர்களை சாட்டையால் அடித்து, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்திய வினோத திருவிழா நடந்தது.தேனி வடபுதுப்பட்டி ஜெ.,ஜெ., காலனியில் குரும்ப கவுண்டர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி கோயில் உள்ளது. 31 ஆண்டாக சக்தி தேங்காய் திருவிழா ஓராண்டு விட்டு மறு ஆண்டு நடத்தப்படுகிறது.நேற்றுமுன்தினம் மகாலட்சுமிக்கு காலை 6:00 மணிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.2வது நாளான நேற்று கோயில் முன் நெய் தீபமிட்டு, பக்தர்களை சாட்டையால் அடித்தும், பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் சக்தி தேங்காய் பூஜை நடந்தது.விழா நிர்வாகக்குழுத் தலைவர் முருகேசன் கூறியதாவது: மக்கள் வேண்டிக்கொண்ட விஷயங்கள் நடந்து விடுவதால் அந்த நம்பிக்கையில் மறு ஆண்டே விரதம் இருந்து சக்தி தேங்காய் பூஜையில் பங்கேற்கின்றனர். சாட்டை அடி நேர்த்திக்கடனும் அவர்களின் விருப்பப்படியே நடக்கிறது,''என்றார்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...