Monday, September 17, 2018

மருத்துவ மாணவிக்கு குவியும் நிதியுதவி

Added : செப் 17, 2018 00:35

பெரம்பலுார்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, மருத்துவ மாணவிக்கு, வாசகர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர். பெரம்பலுார், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், கனிமொழி, 21. பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்த பணமின்றி, கூலி வேலைக்கு சென்றார்.இது குறித்து, நமது நாளிதழில், 12ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, 'தினமலர்' வாசகர்கள், மாணவி கனிமொழியின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கு எண்ணை பெற்று, தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.கனிமொழி கூறியதாவது:வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எனக்கு, நிதியுதவி பெற்றுத் தந்த, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. செய்தி வெளியான நாள் முதல் இன்று வரை, இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், 'தினமலர்' வாசகர்கள், எனக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...