Friday, January 9, 2015

TN lawyer sent to jail for criticizing Jaya case judge

Jan 09 2015 : The Times of India (Chennai)

TN lawyer sent to jail for criticizing Jaya case judge

Bosco Dominique

Cuddalore:

A lawyer was on Wednesday awarded a sevenday jail term for pasting posters condemning the judge who convicted AIADMK leader and former Tamil Nadu chief minister J Jayalalithaa in the disproportionate assets case. The lawyer, T Thangakolanjinathan, is a member of the AIADMK advocates' wing in Cuddalore district.

District munsif-cum-judicial magistrate in Tittakudi, S Uthamaraj, found the 50year-old advocate, practising in the same court, guilty of displaying posters containing objectionable comments.

The judge also sentenced him to another seven days in jail for disfigurement of public places. The two sentences would run concurrently. Thangakolanjinathan expressed regret for his actions.

The Tittakudi police sent him to the Cuddalore central prison. Twoweeks after the verdict in the assets case, Thangako lanjinathan put up posters in public places in Tittakudi, criticizing Bengaluru special court judge John Michael Cunha for convicting and sentencing Jayalalithaa to four years of imprisonment and slapping a penalty of `100 crore on her.

Cunha had also sentenced Sasikalaa, Ilavarasi and V N Sudhakaran to four years' imprisonment and fined them `10 crore each.

The posters also carried the names of minister for commercial taxes and registration M C Sampath and MPs A Arunmozhidevan and A Navaneethakrishnan. It cre ated a flutter in the region and the Tittakudi police booked the advocate under Section 3 (penalty for disfigurement by objectionable advertisements) and Section 4 (penalty for unauthorized disfigure ment by advertisements) of the Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959, after the Tittakudi village administrative officer lodged a complaint. Police arrested Thangakolanjinathan and later released him on bail.

AIADMK leaders and workers launched a series of protests after Jayalalaithaa's conviction. The judiciary reacted sharply and pulled up the protesters. In one such action in December last year, the Madras high court directed the Vellore corporation to apologize to Cunha for passing a resolution criticizing Jayalalithaa's conviction. Chief Justice Sanjay Kishan Kaul and Justice M Sathyanarayanan asked the civic body to publish an apology in newspapers and send copies to Cunha along with a copy of the court order. DMK's senior counsel P Wilson filed a public interest litigation pointing out that the resolution passed by the corporation brought disrepute to the judiciary in general.

Samathur town panchayat near Pollachi in Coimbatore district, which too had passed a similar resolution, told the court it had recalled the resolution. The bench directed the government to issue orders to cancel the controversial resolution after Wilson pointed out that the local body had no power to withdraw resolutions and only the government could do so. The court has posted the matter to February 9 for further hearing.

சென்னையில் 38-ஆவது புத்தகக் காட்சி இன்று தொடக்கம்



தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், சென்னையில் 38-ஆவது புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மொத்தம் 13 நாள்களுக்கு இந்தப் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமை வகிக்கிறார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கண்காட்சியைத் தொடக்கி வைக்க உள்ளார். விழாவில் விருதுகளை வழங்கி காவல்துறை ஐ.ஜி க.வன்னியபெருமாள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

விருதுகள்: சிறந்த பதிப்பாளருக்கான க.கணபதி விருது பி.ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸூக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான ச.மெய்யப்பன் விருது, ஜெயம் புக் சென்டர் ஆர்.ராஜ் ஆனந்த்துக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ.வள்ளியப்பா விருது நெல்லை ஆ.கணபதிக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது ஸ்ரீகுமார் வர்மாவுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது இ.கே.தி.சிவக்குமாருக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி சு.செல்லப்பனார் விருது சிலம்பொலி செல்லப்பனுக்கும், பபாசியின் சிறந்த நூலகர் விருது புதுவை மத்திய பல்கலைக்கழக முதன்மை நூலகர் ஆர்.சம்யுக்தா ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளன.

5 லட்சம் புத்தகங்கள்: 700 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன.

இந்தப் புத்தகக் காட்சிக்காகவே பல்வேறு தலைப்புகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களைப் பதிப்பாளர்கள் பதிப்பித்து உள்ளனர்.

கலை, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு என அனைத்துப் பிரிவு புத்தகங்களும் இந்தக் காட்சியில் இடம்பெறுகின்றன.

அரசு விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் 9 மணி வரையும் காட்சி நடைபெறும்.

காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகும். 12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை.

புத்தகக் காட்சியில் ஒவ்வொரு நாள் மாலையும் பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

10 சதவீதம் கழிவு: புத்தகக் காட்சியில் வாங்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு.



நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 38-ஆவது புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில் புத்தகங்களை அடுக்கும் பணியில் ஈடுபடும் பதிப்பாளர்கள்.

வழிகாட்டும் வாசிப்புப் பழக்கம்

Dinamani

அறிவுக் கண்களைத் திறக்கும் திறவுகோல் தலைசிறந்த நூல்கள்'தாம் என்றார் ஓர் அறிஞர். ஆனால், அந்தத் திறவுகோலைப் பெறுவதற்கான வழி என்ன என்பதைப் பற்றிய தீவிர சிந்தனைக்கான நேரம் இது.

குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அவர்களுக்கு வாசிப்பதில் ஈடுபாடு ஏற்பட நாம் செய்ய வேண்டியவை என்னென்ன? என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பதுதான் மிகப்பெரிய சோகம்.

இன்றைக்கு தெருவிலோ, அடுக்குமாடிக் குடியிருப்பிலோ பிள்ளைகள் விளையாடும் ஓசை கேட்டால், கட்டாயம் மின்சாரம் போய்விட்டது என்பதைச் சொல்லாமலே பலரும் தெரிந்து கொள்வர்.

காரணம், வீட்டில் மின்சாரம் இல்லை என்றால்தான் பிள்ளைகளை வெளியே பார்க்க முடிகிறது. மின்சாரம் இருக்கும்வரை வீட்டுக்குள் கணினியிலோ, தொலைக்காட்சியிலோ, ஐபேடிலோ, செல்லிடைப் பேசியிலோதான் அவர்கள் நேரம் கரைந்துகொண்டு இருக்கிறது.

அந்த நேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் ஏற்படுத்தினால் இந்த நிலைமை ஏற்படாது.

இன்றைய சிறுவர்களிடத்தில், பள்ளிப்பாட நூல்களைப் படிப்பதைத் தவிர, மற்ற நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பழக்கம் இல்லை; அதைப் பெற்றோர் ஊக்கப்படுத்துவதும் இல்லை; அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை.

அப்படியே நேரம் கிடைத்தாலும் அதை, இன்றைய தொழில்நுட்பம் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுகிறது. இதனால், ஏற்படப்போகும் ஆபத்தையும் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை; காரணம், அவர்களும் இன்றைய "கைக்குள் உலகம்' என்னும் தொழில்நுட்பத்துக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர்.

கணினிமயம், தொழில்நுட்பம், "கைக்குள் உலகம்' என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அதன் மூலம் உபயோகமான விஷயங்களை நாம் தேடிப் பயனடைகிறோமா என்று பார்த்தால், மிகவும் குறைவாகவே இருக்கும்.

"சாட்டிங்' போன்ற வெட்டிப் பேச்சிலும், "ப்ரெüசிங்' என்கிற தேவையற்ற பொழுதுபோக்கிலும்தான் கழிக்கிறோமே தவிர, பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள மிகவும் சிலருக்குத்தான் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

கணினி, செல்லிடைப்பேசி போன்றவை வாழ்க்கையை சுலபமாக்குகின்றன என்பது உண்மை. ஆனால், புத்தகத்தைப்போல செழுமையாக்குகின்றனவா என்பதுதான் கேள்வி.

விழா என்று வந்துவிட்டால் மரியாதை செய்கிறேன் என்ற பெயரில், சால்வைகளைப் போர்த்தி மகிழ்கின்றனர்.

அப்படி மரியாதை செய்ய வேண்டும் என்றால், தலைசிறந்த அறிஞர்களின் நூல்களைப் பரிசளித்தால், வாங்கிப் படிக்க முடியாதவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சில அமைப்புகள் இப்படி புத்தகங்கள் கொடுத்துப் பாராட்டுவதை ஓரிரு இடங்களில் பார்க்க முடிகிறது. அது பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டால்தான் சிறந்த நூல்கள் வெளிவரும் - பலராலும் வாசிக்கப்படும்.

திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் புத்தகங்களைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொள்வது வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க உதவும்.

பிறந்த நாளுக்குக் குழந்தைகளுக்கு சிறந்த நூல்களைப் பரிசளித்து மகிழும் வழக்கத்தை உருவாக்கிவிட்டால், பெற்றோர் இல்லாதபோது அச்சிறந்த நூல் அப்பிள்ளைகளுக்கு நல்ல வழித்துணையாக - வழிகாட்டியாக அமையும்.

தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய பிள்ளைகளுக்கு படிக்கும் பழக்கத்தை அவர்களது மனத்தில் விதைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருடையதுதான்.

"some books should be tasted, some devoured, but only a few should be chewed and digested thoroughly'' - அதாவது "சில புத்தகங்களை ருசிக்கலாம், சில புத்தகங்களை விழுங்கலாம், ஆனால், வெகு சில புத்தகங்களை மட்டும்தான் ரசித்துப் புசித்துச் சுவைத்து முழுமையாக ஜீரணம் செய்யலாம்' என்று நூல்களை வகைப்படுத்துகிறார் ஃபிரான்சிஸ் பேகன் (ஊழ்ஹய்ஸ்ரீண்ள் ஆஹஸ்ரீர்ய்) என்ற ஆங்கிலேய அறிஞர்.

இவ்வாறு மூன்று வகையான நூல்களும், சென்னையில் தொடங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வரப்போகின்றன.

இவற்றில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? எதை நம் பிள்ளைகளுக்குப் பரிசளித்து மகிழப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

ரசித்து, ருசித்து, ஜீரணிக்கப்பட வேண்டிய நூல்களை இன்றைக்கு பல பதிப்பகங்கள் வெளிக்கொண்டு வந்தாலும், விழுங்க வேண்டிய நூல்கள்தான் புத்தகக் கண்காட்சியை பெருமளவில் அலங்கரிக்கின்றன.

அதனால், வாசகர்களே.., பெற்றோரே... ஜீரணிக்கும் நூல்களையே தேடிப்பிடியுங்கள் - அதையே படியுங்கள் - அதையே பரிசளித்து மகிழுங்கள்.

குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதுதான் பெற்றோர் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.

நல்ல புத்தகங்களை இளைய தலைமுறை வாசிக்கத் தொடங்கினால், நல்ல சமுதாயம் தானாகவே மலரும்!

ரயில்வே ஸ்டேஷன்களில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகம்



புதுடில்லி:ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து, இனி வீடுகளுக்கு வாடகை சைக்கிள்களில் செல்வதற்கான வசதி, டில்லியில் துவக்கப்பட்டுள்ளது.புகார்:தலைநகர் டில்லியில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், காற்று மாசு அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மெட்ரோ ரயில்களில் வரும் பயணி கள், அலுவலக ஊழியர்கள், இரவில், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு போதிய போக்கு வரத்து வசதியில்லை என்றும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்த இரண்டு குறைகளையும் தீர்க்கும் வகை யில், டில்லி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களில், வாடகை சைக்கிள் திட்டத்தை துவக்க, டில்லி, மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, டில்லியில் உள்ள ஒவ்வொரு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வளாகங்களிலும், வாடகைக்கு சைக்கிள் தரும் மையங்கள் அமைக்கப்படும். அதேபோல், ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து, குறிப்பிட்ட சில கி.மீ., துாரத்திற்குள் உள்ள, பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், சைக்கிள் நிறுத்துவதற்கான கூடங்கள் அமைக்கப்படும்.




அலுவலகங்களுக்கு சென்று விட்டு, ரயில் மூலமாக ஸ்டேஷனுக்கு வந்திறங்கும் அலுவலக ஊழியர்கள், அங்குள்ள வாடகை சைக்கிள் மையத்துக்கு சென்று, தங்களுக்கு தேவையான ஏதாவது ஒரு சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக, அவருக்குடோக்கன் தரப்படும்.

பின், இந்த வாடகை சைக்கிளில் தங்கள் வீட்டுக்கு செல்லும் ஊழியர்கள், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சைக் கிள் கூடங்களுக்கு சென்று, டோக்கனை கொடுத்து, சைக்கிளை விடலாம். பின், அடுத்த நாள் காலையிலும், இதே நடைமுறையை பின்பற்றலாம். இதற்காக, பொதுமக்களிடம் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும்.




விரைவில்...இந்த திட்டம், முதல் முறையாக, தெற்கு டில்லியில் உள்ள சாகெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று துவக்கப்பட்டது. இந்த ஸ்டேஷனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும், சைக்கிள்களை நிறுத்துவதற்கான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம், மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

கூடுதலாக விரும்பும் படிப்பை படிக்கும் கல்வி முறை அண்ணாபல்கலைக்கழக 4 கல்லூரிகளில் அறிமுகம்


கூடுதலாக விரும்பும் படிப்பை படிக்கும் கல்வி முறையை அண்ணாபல்கலைக்கழகம் தனது 4 கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்துகிறது.

புதிய கல்வி முறை

கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரு பாடத்தை எடுத்து படிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பாடத்துடன் மேலும் விரும்பும் பாடத்தை எடுத்து படிக்கலாம். இதை (சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம்) கூடுதலாக விரும்பும் படிப்பை படிக்கும் முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த முறை சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்தியா முழுவதும் இந்த முறை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிதாக அண்ணாபல்கலைக்கழகமும் இந்த முறையை அமல்படுத்த உள்ளது. அதாவது அண்ணாபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 600 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல் கட்டமாக அண்ணாபல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் 2015-2016 ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் விளக்கி கூறியதாவது:-

விளக்கம்

உதாரணமாக ஒரு மாணவர் பி.இ. மெக்கானிக் எடுத்து படித்தால் அவர் மெக்கானிக் சம்பந்தபட்ட பாடங்களை படித்து தான் ஆகவேண்டும். ஆனால் அவர் ஆங்கிலம் கற்கவிரும்பினால் அவர் ஆங்கிலபாடத்தை விருப்ப பாடமாக கூடுதலாக படிக்கலாம். அதுபோல அவர் புவியியல் படிக்க விரும்பினால் புவியியல் எடுத்து படிக்கலாம்.

அல்லது அவர் கம்ப்யூட்டர் பாடம் எடுத்து கூடுதலாக படிக்கலாம். ஆனால் அவர் எடுத்த மெக்கானிக்கல் மெயின் பாடத்தை மாற்ற முடியாது. அவருக்கு பட்டம் மெக்கானிக்கல் பாடத்தில்தான் வழங்கமுடியும். ஆனால் வேறு எந்த பாடத்தை படித்தாலும் அந்தபாடம் அவர் படித்ததாக சான்று அளிக்கப்படும். இதுவே கூடுதலாக படிக்கும் முறையாகும்.

படிப்படியாக அமல்படுத்தப்படும்

இந்த படிப்பு படிப்படியாக அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப பிரதமர் மோடி வேண்டுகோள் உங்களுக்காக ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன



காந்திநகர்,

‘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இங்கு காத்திருக்கிறது, எனவே அவர்கள் நாடு திரும்ப வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காந்தி இந்தியா திரும்பிய தினம்

குஜராத் மாநிலம் காந்திநகரில், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நூற்றாண்டு தினவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒரு காலத்தில் வாழ்வாதாரம் மேம்பட விருப்பத்திற்கு மாறாகவும், துணிவுடனும், புதிய ஆய்வுகளை நடத்தவும் வெளிநாடு செல்லும்படி நம் முன்னோர் கூறினார்கள். ஆனால் இப்போது இந்தியா மிக வலிமையுடன் வளர்ந்து இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக மிகப்பெரிய வாய்ப்புகள் இங்கு காத்திருக்கிறது.

உலக அளவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் நமது மிகப்பெரிய சொத்து என்பது எனது கருத்து. அவர்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். உலகளவில் நமது பங்கு இருப்பது மிகவும் வலிமையானது. இப்போது உலகம் இந்தியா மீது அன்புடன் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா மீது கவனம்

நான் எனது புதிய பொறுப்புகளை ஏற்ற பிறகு 50 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களுடன் நாம் வெளிப்படையாக பேசினோம். மிகவும் ஏழ்மையான நாடு முதல் மிகவும் பணக்கார நாடு வரை இந்தியா மீது கவனம் செலுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிது.

ஐக்கிய நாடுகள் எனது கோரிக்கையான ‘உலக யோகா தினம்’ அறிவிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டதில் இருந்து உலகம் இந்தியா மீது வைத்துள்ள அன்பை எடுத்துக்காட்டுகிறது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 177 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 40–க்கும் மேற்பட்டவை இஸ்லாமிய நாடுகள். இந்த தீர்மானம் வெறும் 100 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற தீர்மானங்கள் வழக்கமாக நிறைவேற 2 ஆண்டுகளாவது ஆகும்.

நமது பொறுப்பு

உலக நாடுகள் இந்தியா மீது அன்பு செலுத்துவதற்கு அந்நாடுகளில் உள்ள இந்தியர்களின் செழிப்பு காரணம் அல்ல. ஆனால் அவர்களது பணித்திறன் மற்றும் கலாசாரம், பாரம்பரியம் தான் காரணம். உலக சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இந்தியா நிரூபிக்க வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது.

எப்படி காந்தி தெருக்களை சுத்தம் செய்தபோதும், கதர் துணிகளை பிரபலப்படுத்துவது போன்ற மற்ற பல சேவைகளின் மூலம் விடுதலை இயக்கத்துக்கு தலைமை தாங்கி நடத்திச் சென்றாரோ அதுபோல, இப்போது இதனை நம்பிக்கையுடன் நிரூபிக்க வேண்டியது நமது பொறுப்பு.

ஏராளமான வாய்ப்புகள்

உங்கள் அன்பான இந்தியாவை விட்டு பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று அங்கு சில காலத்தை கழித்திருக்கிறீர்கள். இப்போது ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்காக இங்கு காத்திருக்கிறது என நான் உறுதியளிக்கிறேன். காலம் வேகமாக மாறிவருகிறது. இந்தியா புதிய வலிமையுடன் வளர்ந்து இருக்கிறது.

கங்கையை தூய்மைப்படுத்துவதும் உங்களுக்கு மிகவும் விருப்பமான திட்டம் என்பது எனக்கு தெரியும். இது மிகப்பெரிய மதரீதியான, சுற்றுச்சூழல் மதிப்புமிக்க திட்டம் மட்டுமின்றி, இந்தியாவின் 40 சதவீத மக்களின் பொருளாதார மேம்பாடு சம்பந்தப்பட்டது. நீங்களும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இல்லையென்றாலும், எங்கள் சொந்த மக்கள் எங்களுக்கு வலிமையை தருவார்கள், எங்கள் வலியில் பங்கெடுப்பார்கள், மகிழ்ச்சியே எங்களுக்கு சக்தியை தரும்.

இந்தியா திரும்பவேண்டும்

‘இந்திய வம்சாவளி நபர்கள்’ மற்றும் ‘வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள்’ என்ற இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது இருதரப்பினருக்கும் வாழ்நாள் விசா, போலீஸ் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு போன்ற பல பலன்களை தரக்கூடியது. எனவே நீங்கள் இந்தியா திரும்ப வேண்டும். அவர்களுக்காக டெல்லியில் ஒரு அலுவலகம் (பிரவசி பாரதீய கேந்திரா) விரைவில் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Thursday, January 8, 2015

அந்த நாள் ஞாபகம்...


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு ஊடகத் தமிழ் என்பது நான்காம் தமிழாகச் சேர்க்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். மொழியை வளர்ப்பதில் ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால், இன்று ஊடகங்களில் தமிழ் படும் பாடு சொல்லி மாளாது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று புதுமைக்கு வரவேற்பு கூறுகிறது தமிழ். பழைமையை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு வளரும் எந்தப் புதுமையும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பழைமை என்னும் வேரினைப் புறக்கணித்துவிட்டு புதுமை என்னும் விருட்சம் தழைத்தோங்குவது என்பது ஒருபோதும் சாத்தியமாகாது. பழைமையில் வேரூன்றிப் புதுமையில் தழைத்தோங்குவதே மறுமலர்ச்சி. வானொலியின் பரிணாம வளர்ச்சியே தொலைக்காட்சி என்ற போதிலும், அன்றைய வானொலி நிகழ்ச்சிகளுக்கும், இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

குழந்தைப் படம் பொறிக்கப்பட்ட மர்பி வானொலிப் பெட்டியும், பிலிப்ஸ் வானொலிப் பெட்டியும் பெரிய அளவில் வீட்டு மேசையை அடைத்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சி இன்றும் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

பெரிய செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே வானொலிப் பெட்டிகள் இருந்த காலமும் உண்டு. அந்தக் காலப் பொருளாதார நிலை அப்படி. பின்னர் சிறிய அளவு வானொலிப் பெட்டிகளும், டிரான்ஸிஸ்டர் என்னும் பேட்டரியில் இயங்கக் கூடிய சிறிய கையடக்க வானொலிப் பெட்டிகளும் வந்தபோது மக்கள் வியப்படைந்த காலமும் உண்டு. அவை விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டபோது, அனைத்து வீடுகளிலும் இடம் பிடித்துக் கொண்டது. சிறிய பெட்டிக் கடைகளிலும், தேநீர்க் கடைகளிலும், வானொலிச் செய்திகள் கேட்பதற்கும், கிரிக்கெட் நேர்முக வர்ணனைகள் கேட்பதற்கும் பெருங்கூட்டமே கூடி நின்ற காட்சிகளும் உண்டு.

புலரும் அதிகாலைப் பொழுதில் 5.45 மணிக்கு செவிக்கினிய வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கி, மங்கல இசை, சான்றோர் வாக்கு எனத் தொடரும் காலை நிகழ்ச்சிகள் முதற்கொண்டு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திரைப்படப் பாடல்கள், கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகள் என இரவு 11 மணிவரை ஒலிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தன. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி என்னும் அந்த இனிய குரலும், மாநிலச் செய்திகளை வாசிப்பவர்களின் மணியான வெங்கலக் குரலும், சிறிதும் பிசிறில்லாத தமிழ் உச்சரிப்பும் இன்றும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒலிபரப்பாகும் ஒலிச்சித்திரம், நேயர் விருப்பம், இலக்கிய நிகழ்ச்சிகள், வரலாற்று நாடகங்கள், நாள்தோறும் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும் "வயலும் வாழ்வும்' என்று அனைத்து நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் இனிய குரலில் இழையோடும் இனிய தமிழும் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று தொலைக்காட்சிகளில் அதுபோன்ற பிழையற்ற தமிழ் உச்சரிப்பைக் காண முடியவில்லை. பண்பலை வரிசையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பல தனியார் வானொலி நிலையங்களும், தமிழைக் கொல்வதில் தொலைக்காட்சிகளோடு போட்டி போடுகின்றன என்பது கசப்பான உண்மை.

முந்தைய காலங்களில் இலங்கை வானொலி வழங்கிய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் முத்தான நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் குரலில் ஒலிக்கும் ஈழத் தமிழின் இனிமையைக் கேட்க இரண்டு செவிகள் போதாது. நிகழ்ச்சியின் இறுதியில் தங்களின் பெயர்களைச் சொல்லி தொகுப்பாளர்கள் விடை பெறும் விதமும், நிகழ்ச்சியின் இடையிடையே அவர்கள் அப்போது என்ன நேரம் என்பதைச் சொல்லும் விதமும் மிகவும் அருமை. எனவேதான், இலங்கை வானொலியை அதிக அளவு மக்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழே அறியாத ஒருதலைமுறையை உருவாக்குவதிலும் தமிழைத் தொலைப்பதிலும்தான் முதலிடம் வகிக்கின்றன. ஊடகத் தமிழை ஒழுங்குபடுத்த தமிழ் அமைப்புகள் முனைப்போடு செயல்பட வேண்டியது இன்றைய அவசியமும் அவசரமுமாகும்.

NEWS TODAY 25.05.2026